​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 7 December 2016

சித்தன் அருள் - 530 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதன் கண்களுக்கு, ஒன்று அசைந்தால் அதற்கு உயிர் இருக்கிறது. இல்லையென்றால், உயிரற்ற ஜடம் என்று எண்ணுகிறான். அசையாமல் அசைகின்ற எத்தனையோ உயிரினங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான், சாளக்கிராமம். அதிலே உயிரோட்டம் மட்டுமல்ல, இறையாற்றல், மின்னாற்றலும், காந்த ஆற்றலும், பிரபஞ்ச ஆற்றலும் உள்ளது. அந்த ஆற்றல்களை, முறைப்படுத்தித்தான் மனிதர்கள் பெற முடியும். சாளக்கிராமத்தை, தூய்மையான சந்தானம், இளநீர் கொண்டு அபிஷேகம் செய்வது சிறப்பு.

1 comment:

  1. [ROUGH TRANSLATION] Man [wrongly] believes that something is alive only if it moves, else it is life-less jadam. There are many life-forms which are immobile. One of these is Salagram. In it, not just life-current, but also divine shakti, electric shakti, magnetic shakti and cosmic shakti are there. Those shaktis can be absorbed by man only after due process. It is good to perform abhishek to Salagram with pure sandal-powder and coconut water.

    ReplyDelete