​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 31 May 2022

சித்தன் அருள் - 1145 - அன்புடன் அகத்தியர் - பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் முருகர் வாக்கு-2 !


ஆனாலும் யான்!! தான்!! சொல்லுங்கள்!!! அகத்தியனே!!!!....என்று கூற... 

பின் பிரம்மனுக்கு அனைத்தும் தெரியும்!!! எவை, எதை, என்று, எப்பொழுது எதை படைத்த மனிதன் இவ்வுலகத்தில் விட்டால் கர்மங்களை அனுபவிக்க முடியும் புண்ணியங்களும் அனுபவிக்க முடியும்...

இதனால் இங்கு அவன்(பிரம்மா) தான் பெரியவன்!!!

ஆனாலும் எந்தனுக்கும் கோபங்கள் வந்துவிட்டது!!! அகத்தியன் மீதே!!! 

அகத்தியா!!! என்னுடன் வந்து... வாதாடுவாய்!!! என்று நினைத்தால்....நீயே!!! இவ்வாறு கூறிவிட்டாயே!!! என்று கூற... 

பின் யானும் பின் மனம் வருந்தினேன்!!

ஆனாலும் அகத்தியன் சொன்ன வார்த்தை..... """அன்பு உலகில் பெரியது!! அவ் அன்பின் மூலம் பிரம்மாவை எதிர்க்கலாம் என்று கூற...

அதனால் சில காலங்கள் எதையென்று கூறாமலே பிரம்மனிடம் யானும் சரி!!! சரி!!! எதையென்று கூட... ஆனாலும் எந்தனுக்கு ஒரு வார்த்தை சொல்லி விட்டான். அகத்தியன்.

முருகா!!!! எதைக்கேட்டாலும் சரி!!! என்றுதான் சொல்ல வேண்டும்!! கோபங்கள் வரக்கூடாது என்று கூட.

அதனால் பிரம்மாவும் அனைத்தும் கேள்விகளை பல பல வழிகளிலும் கேட்டான்!!! அவை அனைத்திற்கும் சரி!!! சரி!!!! சரி!!!  என்றுதான் சொல்லி விட்டேன்.

அப்போதிருந்து பிரம்மாவும்... முருகா!!!!இவையறிந்து கூட எதையறிந்து கூட உன்னால் நிச்சயம் முடியும்.!! நல் முறையாகவே!!!! உன் பக்தர்கள் என்னிடத்தில் வந்தார்கள்.. எதையன்றி கூற... அதனால் நீயும் மாற்றுவாய் விதியை என்று கூட.!!!

ஆனாலும் அகத்தியனோ!!! இவையன்றி கூற சரியாக அனைத்தும் செய்துவிட்டு பின் ஏதும் தெரியாமல் நின்றுவிட்டான்!!!!

இதுதான் உண்மையான பக்திக்கு காரணம்!!! இதையன்றி கூற இதனால் இத்தலத்தில் எவையெல்லாம் என்று கூறும் அளவிற்கும் கூட... ஆனாலும் மக்கள் வந்து மக்கள் வந்து  எதையென்று ஓர் ஓர் பிறவியிலும் தரிசித்து!!! தரிசித்து!! நினைத்த அளவிற்கும் கூட ஆனால் மக்கள் இவ் தேசத்தில் அகத்தியனே அனைவரையும் காப்பாற்றினான் என்பதுதான் நிச்சயமான உண்மை!!

உண்மை!!!! அதனால் பின் பல மனிதர்கள் அன்பைக் காட்டினார்... அகத்தியன் மீதே!!! அகத்தியன் மீதே!!!! 

அகத்தியா!!!!  எதையறிந்து கூட எங்கள் தேசத்திலே(கேரளா) இருந்து விடு!!!! என்று கூற...

ஆங்காங்கே இருந்து விடு என்று கூட!!!!

ஆனாலும் அகத்தியனோ!!! யான்... அங்குமிங்குமாக சென்று கொண்டே தான் இருக்கின்றேன் உலகத்திற்கு..... ஆனாலும் இவை அறிந்து கூட ஒரே இடத்தில் இருக்க முடியாது..

ஆனாலும் நிச்சயமாய் ஒரு வருடம் ஒரு வருடத்திலாவது நீங்கள் நிச்சயம் வந்திட்டுச் செல்ல வேண்டும்...என்று கூற... 

அதனால் மக்களோ!!! அழுதுகொண்டிருந்தார்கள்.இவ்வாறு என்பதையும் கூட... அனைவரையும் காத்து விட்டு இப்படி செல்கின்றானே!! அகத்தியன்....என்று கூட.. 

அதனால் யானும் முறையிட்டேன் !!!

எதை என்று....அகத்தியா!!!!

உன் மீது இவ்வளவு பாசங்கள்!!!! காட்டுகின்றார்களே!!!.... நீ எதற்காக ?அங்கும் இங்கும் அலைகின்றாய்???? அதனால் இங்கே இருந்து விடு என்று கூற.....

ஆனாலும் அகத்தியன் முருகா!!!!! நீயும் இருந்து விடலாமே!!!!!!!!என்று கூற... ஆனாலும் சரி!!!

நாம் ஒன்று சேர்ந்து இங்கு இருந்து விடலாமே என்று கூற... அகத்தியன் சொன்னதற்கேற்ப... யாரும் இங்கு உணரமுடியாது என்பேன்.

யானா!!!????  அகத்தியனா!!!??.... என்று கூட.... 

இப்பொழுது கூட நீங்கள் அகத்தியனே என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள்...

ஆனாலும் இவையன்றி கூட பின் யானும் இங்கே தான் இருக்கின்றேன்!!!!

அதனால்

"""""முருகன்!!!! அகத்தியன்"!!!
இதை யாரும் அதிக அளவில் உணரமுடியாது !!!!! தெரிந்தவருக்குத்தான்... உணர முடியும்.

ஆனாலும் சரி என்று சொல்லிவிட்டு என்றுகூட அகத்தியன் இங்கிருந்து இன்னும் 200 கிலோ மீட்டர் தொலைவிலும் கூட நிச்சயமாய் அங்கு இருக்கும் மக்களுக்கும் தரிசனம் தந்து கொண்டேதான் இருக்கிறான்...

ஆனால் மக்களோ அதை மறந்துவிட்டனர்.... இதனால்தான் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது.... ஆனாலும் அழிவுகள் வரும் என்பேன்.

ஆனாலும் அகத்தியர் நிச்சயமாய் விடமாட்டான் பார்த்துக்கொள்வான்... எவையன்றி கூற... இதை இதை என்று கூறும் அளவிற்கு சிறிது நேரத்திலே சிறிது காலத்திலே எதையன்றி கூற பின் சபரிநாதனுக்கும் (ஐயப்பன்) கோபங்கள் மிஞ்சிவிட்டது..... நிச்சயம் அழிக்கப் போகின்றேன்... நிச்சயம் இத் தேசத்தை(கேரளா) அழிக்க போகின்றேன்... என்று கூறுகையில்....அகத்தியனும் பின் மிஞ்சிய அளவிற்கு போய் சென்று....

சபரிநாதனே!!!!! உன் கோபங்கள்...எதையென்று கூற மக்களை அழிக்கப்போகும்!!! அதனால் எதை என்று உணராமலே கோபங்கள் வேண்டாம்!!!!

அன்பை காட்டு!!!

அனைவருக்கும் உன் தரிசனம் கொடு!!!!

எதையன்றி கூற உன் மக்கள்.... எதையென்று கூற பல மக்கள் உன்னை நம்பித்தான் கொண்டிருக்கின்றார்கள்... என்று கூற... எதையென்று கூற பின் நிச்சயம் அழித்திருப்பான்.... சபரிநாதன்!!.

ஆனாலும் இதற்கு காரணம் அகத்தியனே சென்று வேண்டாம்!!! ஐயனே.... இவையன்றி கூற இனிமேல் மக்களை காப்பாற்று!!!!!

கலியுகத்தில் தானாகவே மனிதன் தன் கர்மத்தில் ஈடுபட்டு அழிந்து கொண்டுதான் இருக்கிறான் அதனால் நீ ஒன்றும் செய்ய கூடாது..

ஆனால் உன் சுயரூபத்தைக் காட்டு.... உணர்ந்து கொள்வார்கள் என்று அகத்தியன் தான் சொன்னான்!!!!

அதனால் சபரி நாதனும் விட்டுவிட்டான்!!!!

ஆனால் அழியக்கூடியது இத் தேசம்!!! ஆனாலும் எதையென்று கூற அகத்தியனே எவையென்று கூற மீட்டு விட்டான்..... அதனால் இவ்வுலகத்தை நிச்சயம் அகத்தியன் காப்பான்!!! காப்பான்!!!!

எதை என்று கூறுவது??? அதனால் தான் அகத்தியனை யான் எவை என்று  கூற அகத்தியன் வருவதற்கு முன்பே யான் முந்திக் கொண்டேன்.

அகத்தியனை பற்றி சொல்வதற்கு!!!

ஏனென்றால் அகத்தியனுக்கு புகழ் என்று ஒன்று.... ஒன்றுமே...பின் எப்போதுமே அவந்தனுக்கு பிடிக்காத ஒன்று ....எதை  ஆனாலும் உணர்ந்து உணர்ந்து பல சித்தர்களும் இவர்களைப்பற்றி எவ்வாறு??? உரைப்பது என்பதைக்கூட.... விதியையும் மாற்றி வைப்பான் அகத்தியன்.

ஆனாலும் அவ் விதிக்கு சம்பந்தமான வழிகளையும் காட்டி அவன் எதையென்று கூற அகத்தியன் பிரம்மாவிடம் அகத்தியா இதையன்றி கூற எவையென்றும் இன்னும் பலப் பல அதிசயங்களை நிகழ்த்தும் இத்தலங்கள் உண்டு உண்டு.

இதனால் இங்கு வழிபட்டவர்கள் பலர்!!! பலர்!!!.பலர்!!! பலர்!!! யானும் மறைமுகமாக இங்கு வந்து வழிபட்டு செல்வேன் .

என்னையும் உணர்ந்திருப்பீர்களா??? நீங்கள்!!!! 

நிச்சயம் உணர்வீர்கள் வரும் காலங்களில்!!!!!

இங்கே யான் தங்கிச்செல்வேன்!!! 

ஆனாலும் இவையன்றி கூற....எந்தனுக்கும் உண்டு ஓர் மலை!!!!....(எருத்தாவூர் மலை) அதனைத்தான் அகத்தியனும் அங்கே வந்து என்னிடம் உரையாடி கொண்டுதான் இருக்கின்றான் இப்பொழுதும் கூட .

ஆனாலும்..அதிவிரைவில் இவை இவை என்று கூற பின் அடிக்கடி பொதிகை தன்னில்... யான் சென்று விடுகிறேன்....சென்றுவிடுகிறேன் என்றெல்லாம் சென்று விடுவான். 

ஆனாலும் மக்களைப் பார்த்து இப்படி கர்மா உலகத்தில் பிறந்து விட்டார்களே!!!! ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றதே!!! 
என்று எண்ணி.... மக்களை பாதுகாத்து தான் கொண்டிருக்கின்றான். இரவு பகலுமாக.....

ஆனால் உண்மையில் மக்கள் நிச்சயமாய் உணரமாட்டார்கள் என்பது திண்ணமான!!! திண்ணமான உண்மை!!! யானே!!! சொல்கின்றேன்.

என்னிடத்திலே வருபவர்கள் எதை எதையோ நினைத்துத்தான் வருகிறார்கள்!!!!

தன் தொழில் சிறக்குமா!??

தன் பிள்ளைகள் நலமாக இருக்குமா!???

எவையென்று கூற தான் வாழ வேண்டுமே என்று எண்ணி!!அவை எல்லாம் கேட்டு விட்டால் நிச்சயம்.... ஆகாது என்பேன்!!!!

அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அனைவரும் செல்வ செழிப்போடு இருக்க வேண்டும்.... என்று நீ நினைத்தால் நிச்சயம் உந்தனுக்கு அள்ளியும்... கொடுப்பேன்!!!

ஆனால் ஒருவர் கூட நிச்சயம் அவைதன் உணரமாட்டார்கள்!!!

அனைவரும் ஒன்றை மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும்.

நீங்கள் மற்றவருக்கு என்ன செய்தீர்களோ அவை தான் உங்களுக்கு நிச்சயமாய் வரும் என்பேன். இவைதான் கட்டளை!!!! இறைவனுடைய கட்டளை!!!!

பிரம்மாவின் கட்டளை!!!!

அதனால் பிரம்மா சரியாகவே கணித்து இங்கு அனுப்புகின்றான். அதுதான் இங்கு நடக்கப் போகின்றது... அதை மீறி ஒன்றும் நடக்கப்போவதில்லை.

ஆனால் நிச்சயம் நடக்கும் அகத்தியன் மனது வைத்தால்!!!!!!!!

விதியை மாற்றும் தகுதி அகத்தியனுக்கு மட்டுமே உண்டு!!! சொல்லிவிட்டேன்

ஆனாலும் இவையன்றி கூற அகத்தியனை வணங்க!!! வணங்க!!! சில சில கஷ்டங்கள் ஏற்படும்.

ஆனாலும் அகத்தியன் அதை பார்த்துக்கொண்டு அமைதியாக தான் இருப்பான்.

ஏனென்றால்?? கர்மா!! கழிய வேண்டும்!!!!

ஆனாலும் கைவிட மாட்டான்!!!!

அனைத்தும் கொடுப்பான்!!!!

இதனால் எவை என்று கூற சில சில வழிகளிலும் இங்கு நிச்சயமாய்... எவ்வாறு என்பதையும் கூட உணர்ந்து உணர்ந்து  வருபவர்களுக்கு... நிச்சயம் அகத்தியன் விதியை மாற்றுவான்..... இவ்வளவு தான் உண்மை.

பல பேர்களுக்கும் விதியை மாற்றி அமைத்து இருக்கின்றான்.

ஆனால் அகத்தியனை நம்பி விட்டால் எவ்வாறு உண்மை நிலை புரிந்து எங்கு அழைத்துச் செல்ல வேண்டும்???

இவந்தனை எங்கெல்லாம் திரிய வைக்க வேண்டும்??? என்பதைக் கூட சரியாக கணித்து அங்கெல்லாம் பின் செல்ல வைத்து கர்மாக்களை சுத்தமாக அழித்து விடுவான்!!!!

இதனால் அனைத்து தெய்வங்களின் பரிபூரண அருளை பெற்று விடுவான்.

இவையன்றி கூற இவ்வுலகத்தில் ஒருவனுக்கு மட்டுமே அனைத்து தெய்வங்களின் தரிசனம் கூட கிடைத்தது.

ஒன்று ஒன்றே ஒன்றை சொல்கின்றேன்.... பின் தேவர்களும் எவை??? (தேவ) ராணிகளும் பன்மடங்கு அனைத்து தெய்வங்களும் வந்து பின் இவ்வளவா??? என்று கூட............

அவைதன் """"அரிச்சந்திரனுக்கே!!! உரியது!!!!!

ஆனாலும் அரிச்சந்திரனும் அகத்தியன் பாதையைத்தான் பின்பற்றினான் என்பதைக்கூட... யாருக்கும் தெரிவதில்லை.

ஆனாலும் உண்மைகள் வரும் காலங்களில் இன்னும் தெரிய வைப்பார்கள். அகத்தியனைப் பற்றி!!!!

அகத்தியன் இவ்வுலகத்திற்கு செய்த நன்மைகள் ஏராளம்!!!! ஏராளம்!!!! என்பேன்!.

ஆனாலும் அவ் முனிவனை அனைவரும் வரும் காலங்களில் மறந்தும் விட்டனர்....எவையென்று கூற.... முனிவர்கள் என்றால் யார்?? எவர்?? எவரெவர்??? என்று கூட... பின் திட்டியும் தீர்த்துக் கொண்டு தான் இருக்கின்றார்கள்..... இவர்கள் எல்லாம் உண்மையா என்று கூட...

ஆனால் உணர வைப்பார்கள் வரும் காலங்களில்!!!! தன் மக்களுக்கு எவை என்று கூட!!!!

ஆனாலும் இரவு பகலாக உழைத்துக் கொண்டுதான் இருக்கிறான் அகத்தியன்.

தன்னை நம்பியவருக்கு கெடுதல் செய்யக்கூடாதே என்று எண்ணி!!! கர்மங்கள் எப்படி போக்கவேண்டும்??? என்று கூட...

அதனால் இத்தலம் ஓர் சிறப்பு வாய்ந்ததாகும்!!!! 

நம்பி வந்து விட்டால் யானும் செய்வேன்!!!! அகத்தியனும் செய்வான்!!!!

எவையென்று கூற.... யாங்கள் சேர்ந்து பிரம்மாவிடமே முறையிடுவோம் சொல்லிவிட்டேன்!!!!

அகத்தியன் வேறல்ல!!!! யான் வேறல்ல!!!!!!.......இங்கு!!!!! 

அதனால் யாரும் எவை என்று உணரவும் மாட்டார்கள்!!!!அதிவிரைவிலே!!!!! 

புதிதாக வருவோர் இது அகத்தியனா?????!!!!!! இல்லை முருகனா!!!???? என்று கூட..... மனதில் தோன்றும் என்பேன்.

எளிதில் இயலாது என்பேன்.

காரியங்கள் இன்னும் நடக்கவுள்ளது. பல மனிதர்களுக்கும் இவை என்று கூற கலியுகத்தில் உண்மையான பக்திகள் பின் குறைந்து கொண்டே போகும்.

அதனால் நிச்சயம் தன் பக்தர்களை  காப்பதற்கே அகத்தியன் திரிந்து கொண்டிருக்கின்றான்.

கர்மாக்கள் அழித்துக்கொண்டே எவை எதனை உணர்வின் மூலம் என்பதைக்கூட தன் மனிதனை இவ்வாறு நடத்தினால்!!! அவன் கர்மா நலமாகிவிடும்.... நலமாகிவிட்டு மோட்ச கதிக்கு அழைத்துச் செல்லலாம் என்று கூட...

அதனால் அகத்தியனை நம்பியவனுக்கு... நிச்சயம் கஷ்டங்கள் வரும்  !!

மனதை தேற்றிக் கொள்ள வேண்டும். ஆனால் கிழவி இருக்காது இதுதான் உண்மை.

ஆனால் அகத்தியன் நிச்சயம் அனைத்தும் மாற்றி விடுவான் மாற்றி விட்டாலும் பிறவிகள் தோறும்.. பின் கடந்து கடந்து செல்ல வேண்டும்.

அதனால்தான் பிறவிக் கடலைக் கடக்க பின் அகத்தியன் எளிதாக உதவுவான். மற்றவர் யாரும் உதவ மாட்டார்கள் சொல்லிவிட்டேன்.

இதனை நன்கு உணர்ந்து மக்களே திருந்தி கொள்ளுங்கள்.

ஏதாவது  உயிரினத்திற்காவது அனுதினமும் உணவு கொடுத்து வாருங்கள்.

அப்பொழுதுதான் பின் அகத்தியனும் பிரம்மாவிடம் சென்று முறையிடுவான்.

இப்படி இவன் புண்ணியங்கள் செய்திருக்கின்றான்!!!! இவன் தலைவிதியை மாற்று என்று கூட....

அதனால் சொல்கின்றேன் ஏதும் செய்யவில்லை என்றால்???... அகத்தியன் எப்படி? உங்களை பற்றி சொல்ல முடியும்???

தெரிந்து கொள்ளுங்கள்.

அதனால் புண்ணியம் செய்ய தொடங்குங்கள்!!!

நிச்சயமாய் வாழ்வில் ஒளி வீசும் என்பேன். 

நிச்சயம் அகத்தியனே பிரம்மாவிடம் சென்று... ஆனாலும் யான் ஒன்று சொன்னேன் முன்னே!!!

நிச்சயம் விதியினை மாற்ற இயலும் அகத்தியனால்!!!! ஆனாலும் எவையென்று கூற பிரம்மாவிற்கு எதிராக செயல்பட மாட்டான்.

அதனால் நிச்சயம் அனைத்தும் தெரிந்த அகத்தியனே பிரம்மாவிடம் சென்று முறையிடுவது பிரம்மாவிற்கே அதிசயம் தான்!!!! தெரிந்து கொள்ளுங்கள். 

அதனால் புண்ணியம் செய்!!!! புண்ணியம் செய்!!!!

இவையென்று கூற கஷ்ட காலங்களிலும்  அப் புண்ணியத்தை நிச்சயம் பிரம்மாவிடம் அகத்தியன் சொல்வான்!! சொல்வான்!!

இதைத்தான் மீண்டும் மீண்டும் உரைப்பேன்!!!

இன்னும் பல பல அதிசயங்கள் உண்டு அகத்தியன் எவ்வாறு செய்வது என்று கூற...

அதனால் இத்திருத்தலம் பல மனிதர்களை உருவாக்கியது!!!
பல மனிதர்களை காப்பாற்றியது!!!! தஞ்சம் அடைந்தார் எவை என்று கூற....

அதனால் இதில் நிச்சயமாகவே உயிருள்ளவன் ஆகவே இருக்கின்றான் அகத்தியன்.

அதை ஒரு சிலருக்கே உணர வைப்பான்!!! உணர வைப்பான்!!!

இன்னும் மாற்றங்கள் பல பல உண்டு இவ்வுலகத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் இன்னும் வரும் காலங்களில் சித்தர்கள் சொல்லிக்கொண்டே போவார்கள் என்பேன். போவார்கள் என்பேன். 

கவலைகள் இல்லை எம்முடைய ஆசிகள் அனைவருக்கும்!!!!!

ஆனாலும் ஒன்றை புரிந்ததா??!!!.... இன்றும் எவையன்றி கூற பூஜைகள் செய்யும் போது அகத்தியன் வந்தே!! நின்றான்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறையாகவே திருமணம் ஆகவில்லையே என்று எண்ணி ஏங்கி, இவை இதைத்தன் பின் தன் தொழில் சிறக்க வில்லையே என்று சிலர் எண்ணி!!!.... ஆனாலும் அனைத்தும் மாயையே என்று அகத்தியன் உணர்ந்து விட்டான். அதை யானும் தெரிந்துகொண்டேன்.

அதனால் அகத்தியன் நேரிலே வந்தான் என்பது மெய்!!!!

அனைவருக்கும் ஆசிகள் கொடுத்து விட்டான்... 

அருளாசிகள்!! அருளாசிகள்!!

இதனால் பக்தியை காட்டுங்கள்!!!

அன்பை செலுத்துங்கள் அன்பை செலுத்தினாலே போதுமானது மறைமுகமாகவே செய்வான் அகத்தியன் இன்னும் வாக்குகள் பல சித்தர்கள் செப்புவார்கள்!!!

நன்றே!!!! நன்மை!!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Monday 30 May 2022

சித்தன் அருள் - 1144 - அன்புடன் அகத்தியர் - பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் முருகர் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில்

காசியிலிருந்து கங்கை தீர்த்தம்
நேபாளத்திலிருந்து கண்டகி நதி தீர்த்தம்
ராமேஸ்வரத்திலிருந்து 21 ஆழி தீர்த்தம்
முக்கூடல் சங்கமத்திலிருந்து நதி தீர்த்தம்
முடிவாக
கிரௌஞ்சகிரியிலிருந்து விபூதி(பால்கட்டி)
அகத்தியர் ஜீவநாடி

போன்றவையுடன், திரு.ஜானகிராமன், அபிஷேகத்துக்காக, பாலராமபுரம் லோபாமுத்திரா சமேத அகத்தியர் கோவிலுக்கு வந்திருந்தார். அபிஷேக பூஜைகளுக்குப்பின் நாடி வாசித்தார்.

கேள்வி ஒன்றுதான், இந்த கோவிலின் புராண வரலாறு தெரிய வேண்டும். இந்த கோவிலுக்கும், எரித்தாவூர் முருகர் கோவிலுக்கும், அனந்த சயனம் பத்மநாபா சுவாமி கோவிலுக்கும் உள்ள தொடர்பை, அறிய வேண்டும் என நிர்வாகத்தினர் கேட்க, அகத்திய பெருமான் வருவார் என எதிர்பார்த்திருக்க, ஓதியப்பர் வந்து வாக்கு உரைத்தார். 

வாக்குரைத்தவர் - ஓதியப்பர்
இடம் - அகத்தியர் கோவில், பாலராமபுரம்!

என் தாயை, தந்தையை பணிந்து நாட்டுகின்றேன் வாக்குகளாக, வேலனவன். அகத்தியனை பற்றி எவ்வாறு அவன்தனே கூறுவான்? அவன்தன் புகழுக்கு எவ்வாறு அதிபதி? புகழை அவன்தன் வாயால், நிச்சயம் உரைக்க மாட்டான். அகத்தியனை பற்றி சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. இல்லை என்பதற்கிணங்க, பலப்பல மனிதர்களையும் காத்துக் கொண்டுதான் இருக்கின்றான், இரவு பகலுமாக. ஆனாலும், தாய் தந்தையரும் இவ்வாறு கூறினார்கள்.

"மகனே! அகத்தியா! எவ்வாறு, மக்களுக்கு செய்து கொண்டிருக்கின்றாயே, ஆனாலும், மக்களோ, தன தன வழிப்பாதையில் சென்று மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனாலும் அறிவதற்கு ஒன்றும் இல்லை. ஒன்றும் இல்லை, இதனைத்தான் என்னிடத்தில் கூறினான்.

முருகா! நீயும் நானும் ஒன்றா? ஒன்றாய் இருப்பதற்கு வழி கொடு என்று. ஆகவே, இது அகத்தூயனா, நானே தானா, என்று யாரும் உணர முடியாது, இத்தலத்தில். இத்தேசத்தில், ஒரு காலத்தில், மக்கள் பாடுபட கொடுமைகள் நிகழ்ந்தது. கொடுமைகள் நடந்ததால், அங்கும், இங்கும் திரிந்தனர் மக்கள். வாழத்தெரியாமல், பின் பல மலைகளிலும் ஏறி, மக்கள் தம் உயிரை காத்துக் கொண்டனர். இதனை அறிந்த அகத்தியனோ மனது வருந்தினான். இவ்வாறு மக்களும், உண்ண உணவில்லாமலும், நல்லவர்கள் கூட மறைந்து வாழ்வதை கண்டு தந்தைக்கு உத்தரவிட்டான்.

"ஈசா! அப்பா! மக்கள் எல்லோரும், நல்லவர்கள் கூட, எவ்வாறு அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்களே!" என்று.

ஆனாலும் ராசனோ "இவையன்றி, அறிவதற்கு ஒன்றும் இல்லை. தான் தான் கர்மத்தை தான் தான் அனுபவிக்க வேண்டும்" என்று இணங்க மறுத்துவிட்டான்.

அகத்தியனோ, "இல்லை, இதற்காக யாம் என்ன செய்ய வேண்டுமோ அதை யாம் செய்வோம். எந்தனுக்கும், தாய் தந்தையர், பலப்பல சக்திகளை கொடுத்து விட்டனர். அதனை பயன் படுத்திக்கொண்டு மக்களை காப்பாற்றினான். கூட்டங்களை சேர்த்தான். பின் என்னிடத்தில் அகத்தியன் வந்தான். வந்தான், எதை ஒன்றையும் கூறுவதற்கு?

"முருகா, தாய் தந்தையும் அமைதியாக இருக்கின்றனர். நீயாவது வா! என்று கூற, யானும் வந்துவிட்டேன், அகத்தியனுக்கு, உதவிகரமாக. உதவிகரமாக வந்துவிட்டு, எப்படியோ பல மக்களையும் காத்துவிட்டேன். இதற்க்கு காரணம், அகத்தியனே என்று. அதனால், பல மக்களும் உயிர் பிழைத்தனர். இத்தேசத்தில் வந்து வந்து, பல விஷயங்களையும் கணித்து, கணித்து பல மக்களையும் காத்துக் கொண்டிருக்கின்றான்.

அனுதினமும் வரும் காலம், பங்குனி, சித்திரை, வைகாசி. அனுதினமும் வருவான்.

வரும் நேரம், என்னையும் அழைத்துக் கொண்டான். "முருகா, மக்கள் இங்கு எவை என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். ஆனாலும் ஒவ்வொரு யுகத்திலும் கூட, எவை என்று கூறும் அளவுக்கு, அதிசயங்களை நிகழ்த்தினேன். ஆனாலும் கூட, மனிதர்களுக்கு யான் செப்பவில்லை. இங்கு, பங்குனி, சித்திரை, வைகாசியில் மக்களுக்கு அருள் புரிய வேண்டும் என, என்னையும் பணித்துக்கொண்டான்.

ஆனாலும் இவை அறிந்து, "அகத்தியர், கலியுகத்தில், மனிதர்கள், இவை எல்லாம் ஏற்க மாட்டார்கள். நீ சொன்னாயே, ஒரு வார்த்தைக்காக யான் வருகின்றேன். ஆனாலும், வார்த்தைக்காக அல்ல, அன்புக்காகவே வருகின்றேன். ஆனாலும், பல அதிசயங்களை, உன்னாலும் நிகழ்த்த முடியும். எம் தந்தைக்கு சமமானவன் நீயே. ஏதும் நிகழ்த்த முடியும். ஆனாலும், சாதாரண மனிதனாக அன்பை காட்டி அழைக்கின்றாயே, அதற்குத்தான், யான் பணிந்தவன். இதை மக்கள் அனைவரும் உணரட்டும். அதனால் கூறுகின்றேன், அனைவரும், இங்கு உட்கார்ந்து இருப்பவர்களும், ஒவ்வொரு, நலத்துக்காகத்தான் கேட்க அமர்ந்திருக்கிறார்கள். ஆனாலும், இறைவனைப்பற்றி யாரும் சிந்திப்பதில்லை. தனக்கே தானம் வேண்டும், தன் தொழில் சிறக்க வேண்டும். இவ்வாறு நினைத்தால், எவ்வாறு நாங்கள் செய்வோம். அதனால்தான், அன்பை காட்டு. அன்புக்குரியவன் அகத்தியனே என்பேன். அகத்தியரின் அருளை பெற வேண்டும் என்றால், நிச்சயம், அன்புதான் வழி. மற்றவை எல்லாம் செல்லாது. ஆனால் அன்பை காட்டினாள், என்ன வேண்டும் என்று கூற, அகத்தியன் நடத்திக்காட்டுவான்.

ஆனாலும், எது என்று கூறும் அளவுக்கும் கூட எந்தனுக்கும் ஓர் உதவி செய்தான், அகத்தியன்.

யான், என் பக்தர்களுக்கு கட்டங்கள் வரும்போது, பிரம்மாவிடம் சண்டையிட்டேன். சண்டையிட்டதை கண்டா பிரம்மா "முருகா உன்னால் முடிந்ததை பார், என்னால் முடிந்ததை நான் பார்த்துக்கொள்கிறேன்" என்றார்.

ஆனாலும் நான் கதி கலங்கினேன். இப்படிப்பட்ட என்னை பிரம்மாவும் இப்படி சொல்லிவிட்டானே. எதை என்று கூற? பின் "நீ பார்த்துக்கொள், யான் பார்த்துக்கொள்கிறேன்" என்று கூறி மௌனமாக சென்றேன்.

யானும் அமைதியாக உட்கார்ந்தேன். உட்கார்ந்து யோசித்தேன். பிரம்மா விதியை சரியாக எழுதுபவன். அவனிடத்தில் சண்டை இட்டேன்.

அந்த நேரத்தில் ஒரே யோசனை. அகத்தியன் மீதே.

அகத்தியனை நம் பக்கத்தில் உட்கார வைப்போம், என்ன தான் சொல்லப் போகிறேன் என்று?

ஆனாலும், பின் மனதார அகத்தியா என்றழைத்த உடன் வந்துவிட்டான்.

அதும் "அடியேன்! வந்துவிட்டேன்! முருகா" என்று கூட.

ஆனாலும் என்னை விட சக்திகள் அகத்தியனுக்குத்தான் உண்டு. பார்த்தீர்களா! இப்பொழுது கூட புரிந்து கொண்டிருப்பீர்கள். அனைத்தும் தெரிந்தவன், ஏதும் பேசமாட்டான்! இதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

அடியேனுக்கு உத்தரவு கொடு என்று.

நான் பிரம்மாவிடம் சென்றேன்.  மக்களை பல பல துன்பத்திலிருந்தும், மாற்றி அமைக்க. ஆனாலும் இதை யான் கோபமாக கூறியதும், பிரம்மாவும் கோபமாக எதை என்று கூறிவிட்டான். அகத்தியர் நீ உணர்ந்துகொள்! என்று கூட.

"அப்பனே முருகா! இவை எல்லாம் பேசக்கூடாது! விளக்கங்களுக்கு மதிப்பளிக்கவேண்டும். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மதிப்பு உண்டு. அதை நிச்சயம் நீ ஏற்கத்தான் வேண்டும்! அதனால், நீ சொல்லியது தவறே. கோபங்கள் கூடாது என்பேன். அதனால், திரும்பவும் பிரம்மாவிடம் செல்வோம்."

சென்றோம், நாங்கள் இருவரும்.

ஆனால், ப்ரம்மாவோ, என்னை கண்டுகொள்ளவே இல்லை. அகத்தியா, அகத்தியா! என்று முதலில் அகத்தியனைத்தான் அழைத்தார். என் சீடன் அகத்தியன். இப்பொழுது புரிந்து கொண்டு விட்டீர்களா. குருவை மிஞ்சிய சீடன், அகத்தியன். எனவேதான், அகத்தியனை மிஞ்சிய சீடர்களைத்தான், அகத்தியனுக்கு பிடிக்கும். சொல்லிவிட்டேன். அதனால் தான், பல ஏமாற்றக்காரர்களும் இப்படித்தான் அகத்தியனை சீடனாக எண்ணிக்கொண்டு யான்தான் குரு என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனாலும் ப்ரம்மா முதலில் சொன்னது "அகத்தியா, அகத்தியா!" என்று. யானும் மனம் கலங்கினேன். யானும் இவை போன்று பல பட்டங்களை பெற்றவன். ஆனால் அகத்தியனோ, எவை என்று கூற, அகத்தியனுக்கே பல மரியாதைகள். ஆனாலும் உணர்ந்து கொண்டேன்.

"என்ன அகத்தியன்? எம்மை காண வந்தீர்?" என்று பிரம்மா கூற,

ஆனாலும், அனைத்தையும் அறிந்த அகத்தியன் பிரம்மாவிடம்,

"ஏனப்பா! கோபங்கள்!"

ஆனாலும், பிரம்மாவும் "இவ்வாறு செய்து விட்டதற்கு இணங்க, யான் செய்தது தவறா? அவர் செய்வது தவறா? என்று நீயே கேட்டுப்பார், ஆனாலும் எமக்கும் கோபம் வந்துவிட்டது.

எவை என்று கூற, "எம்மாலும் அனைத்தும் நடத்த முடியும்" என்று யான் கூற

"எம்மாலும் முடியும் என்று பிரம்மா" கூற, வாக்கு வாதங்கள் முற்றிவிட்டது.

ஆனாலும் அகத்தியன் "நில்லுங்கள், இவ்வாறு வாக்கு வாதங்கள் ஏற்பட்டாலே, எவ்வாறு உண்மை நிலை அறிய முடியும்?" என்றார்.

இருவரும் சண்டையிட்ட பொழுது, அகத்தியன் தான் இருவரையும் நிறுத்தினான், "முருகா! முருகா! என்றழைத்து.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்! 

Sunday 29 May 2022

சித்தன் அருள் - 1143 - அந்த நாள் >> இந்த வருடம் - 28/05/2022 ஐயன் போகர் சித்தர் திருநட்சத்திரம்!


[ மரகதலிங்கத்துக்கு அபிஷேகம் ]

[ஐயன் போகர் சித்தர் சமாதி-அலங்காரத்துடன்]

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஐயன் போகர் சித்தர் திரு நட்சத்திர தினமான 28/05/2022  சனிக்கிழமை அன்று பழனி மலை மேல் உள்ள அவரது சமாதியில் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட இரு வீடியோக்களை உங்கள் பார்வைக்காக சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........... தொடரும்!

Friday 27 May 2022

சித்தன் அருள் - 1142 - அன்புடன் அகத்தியர் - மகான் ஒடுகத்தூர் ஸ்வாமிகள்!








16/5/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம் : மகான் ஒடுகத்தூர் ஸ்வாமிகள் ஜீவ சமாதி./ மடம்
அல்சூர் ஏரி சமீபம். 
ஹலசூரு கங்காதர் செட்டி சாலை, பெங்களூரு.

ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்.

அப்பனே !!

மனிதர்களுக்கு வரும் காலங்களில் பல கஷ்டங்கள் பல இன்னல்கள் வரும் என்பதை நன்கு உணர்ந்தான் இவ் ஞானி. (ஒடுகத்தூர் ஸ்வாமிகள்) இதையன்றி ஆனாலும் இவ் ஞானியவன் ஒரு ஏழை குடிலில் பிறந்தவன். ஏழை குடிலில் பிறந்து ஆனாலும் அன்னத்திற்கே கஷ்டங்கள் கஷ்டங்கள் பட்டவன்.

ஆனாலும் இவனை விரட்டியடித்தார்கள் இதையென்று சிறுவயதிலே உற்றார் உறவினர்.

ஆனாலும் இவந்தனுக்கு இறைவன் மீது இறைவன் மீது ஈசன் மீது பற்றுக்கள்.

பற்றுக்கள் ஆனாலும் இவந்தன் பின்...ஞானியாகவே ஜனிக்க(பிறக்க)... ஆனாலும் இறைவனே இவந்தனுக்கு உத்தரவுகள்.

ஆனாலும் சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்தவன். ஆனாலும் இவந்தனுக்கு  உற்றார் உறவினரால் பல தொல்லைகள் நேர்ந்தது சிறுவயதிலே.

யாரும் கவனிக்க ஆள் இல்லை. ஆனாலும் இறைவனிடத்திலே நமச்சிவாயா!! நமச்சிவாயா!! நமச்சிவாயா!! பரமேஸ்வரா!!  கோவிந்தா!!! இவையெல்லாம் வார்த்தைகளை உச்சரித்து கொண்டே இருந்தான்.

ஆனாலும் பலமுறை ஆனாலும் பல ஊர்களுக்கு சென்றவன். இதையன்றி கூற ஆனாலும் ஈசன் இவந்தனை சோதிக்க ஆரம்பித்தான். இன்னும்... இப்படிப்பட்ட மனிதன் இருக்கின்றானே!!!  இவந்தனுக்கு வழிவகைகள் செய்ய வேண்டும் என்பதை கூட ஈசன்......

பார்வதிதேவி ஆனாலும் ஈசனிடத்தில் திரும்பவும் முறையிட்டு,  இவன் உன் படைப்புகளில்!! இப்படி ஒரு படைப்பா???!!! 

சிறுவயதிலேயே தாய் தந்தையரை இழந்து உற்றார் உறவினர்களையும் இழந்து ஆனால் இவன் எப்படி சுற்றுகிறான் பார்!!

ஆனாலும் இவந்தனக்கு இவ் வயதிலே ஏதும் அனைத்தும் அனுபவிக்கின்ற வயதில் இவ்வளவு கஷ்டங்களா!!!

பாசங்கள் பந்தங்கள் இவந்தனக்கு இல்லையே!!! இவன் ஏங்குகின்றானே!!! இவன் சுற்றி சுற்றி வருகின்றானே!!! 

ஆனாலும் உன்னையும் மறக்கவில்லையே.!!!

ஆனாலும் இவந்தனுக்கு சற்று ஏதாவது கொடுங்கள்!! என்று பார்வதி தேவி ஈசனிடம் கேட்க...

ஈசனும் நிச்சயம் கொடுப்பேன் ஆனாலும் இவந்தனுக்கு சில சோதனைகள்... இருப்பினும் அதையும் தாங்கிக்கொள்ள பார்க்கின்றானா!!! பார்த்து ஆனாலும் பார்ப்போம் இவந்தனை என்று கூட...

பூலோகத்தில் இதையன்றி கூற ஈசனும் பார்வதி தேவியும் வந்து... ஆனாலும் இவந்தனும்.... அப்பொழுது கூட பல கஷ்டங்கள்...பின் உடுக்க ஆடை இல்லை!!! உணவுகளும் இல்லை!!!

ஆனாலும் """""நமசிவாய""""" எனும் மந்திரத்தை......""""" கோவிந்தா"""" எனும் மந்திரத்தை....

ஆனால்"""""" முருகா""""" எனும் மந்திரத்தை இவன் விட்டுவிடவில்லை... எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும்.

ஆனாலும் பல ஆலயங்களுக்கு சென்று சென்று அங்கே தங்கியிருந்து பின் ஏதாவது ஒரு பழத்தை உண்டு வாழ்ந்து வந்தான்.

ஆனால் இதனையும் உற்று நோக்கிகொண்டிருந்தனர்.. ஈசனும் பார்வதிதேவியும்.

ஆனாலும் இதை இதையன்றி மீண்டும் எவை என்று கூற வளர வளர வயதுகள் வளர வளர ஆனால் இவந்தனக்கு பக்திகள் மிகுந்து காணப்பட்டது.

பின் ஒன்றை மட்டும் சொன்னான்.....

ஈசனே!!!....... எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் அதை தாங்கிக் கொள்ளும் வலிமை எந்தனக்கு கொடு..

ஆனாலும் ஈசன் நிச்சயமாய் இதையும் உணர்ந்து சிறுது லேசாக ,கவனமாக அதிக கஷ்டங்கள்,.... 

ஆனாலும் உணர்ந்தான். உடுக்க ஆடையோ!! உண்ண உணவோ!! இல்லை..... ஆங்காங்கே உறங்கினான்.... 

ஆனால் பல மனிதர்கள் இவனை விரட்டினார்கள்..

இவன் பைத்தியக்காரன்!!!

இவன் தரித்திரன்!!! என்றெல்லாம் சொல்லி!!...

ஆனால்  இவந்தன் ஆனால் இறைவனின் குழந்தை என்று தெரியாமல் போய்விட்டது மனிதர்களுக்கு...என்ற நிலையில்... ஆனால் இவன் படாத கஷ்டங்களா!!! பட்டு விட்டார்கள்???!!!! வரும் நேரங்களில் மனிதர்கள்!!!

அவ்வளவு கஷ்டங்கள்!!!

இன்னும் சொல்லப்போனால் 15,, 20,, 25 ,,வயதுகளில் இவந்தனுக்கு ஏதும் இல்லை..... ஆடை இல்லாமலே சுற்றி தவித்தான்.

ஆனால் இவை என்று பார்வதி தேவி!!! பார்வதிதேவி கருணையுள்ள மணாளனே!!

இதை இவன் உடுக்க ஆடையாவது கொடு....என்று கூட.. 

ஆனாலும் பின் இவந்தன் போகும் வழியில் ஓர் ஆடையை யாராவது  சிறிய ஆடையை கொடுத்தான்....

அதை பார்த்து இவ் ஞானி கேட்டான்.... இதெல்லாம் உதவுமா??? எந்தனுக்கு...ஈசா!!!!....என்று!.. 

ஆனாலும் சரி ஏதோ ஒன்று எந்தனுக்கு கிடைத்திருக்கின்றதே!!! என்று கூட அதையும் உடுத்திக் கொண்டான்.

அதையே ஈசன் கொடுத்ததாகவே எண்ணி..!!!

ஆனால் ஈசன் தான் கொடுத்தான் என்று கூட அறியவில்லை!!!

ஈசன் கொடுத்தான் என்று கூட ஆனால் கடைசி வரையில் அதை தன் அவன் உடம்பிலே படும்படி ....(கடைசி வரை  உடுத்தியபடியே இருந்தார்) 

ஆனால் இதை உணர்த்தி உணர்த்தி உடுத்த இதையே ஆடை என்று.....

ஆனாலும் ..நிச்சயம் பார்வதிதேவி... மீண்டும் கேட்டாள் ஈசனை.... 

இவ்வாறு கொடுத்து இருக்கின்றாயே?!!!! இவ்  ஆடையை... இவந்தனுக்கு என்ன... ஆனாலும் நிச்சயமாய் யான் கொடுப்பேன் என்று கூற பெரிய ஆடையை பின்  கீழே ...இதையென்று குவித்த அளவிற்கு கீழே இட்டு விட்டாள்.பின் பார்வதி தேவி. 

ஆனால் அதனையும் நினைத்து எதுவும் இதற்கும் தகுதிகளா!!! 

மனித உடம்பு என்பது வெறும் காற்றே!!!.... ஆனாலும் இது தேவையா எந்தனுக்கு...இறைவா!!! என்று கூட மேல்நோக்கி சொன்னான்.

சரி!! ஏதோ!!! நம்தனக்கு..... என்றுகூட அதையும் எடுத்து உடுத்திக் கொண்டான்.

இவனது ஆடைகளே இதுதான்!!!!

அப்பொழுது இதை ஆனாலும் இறைவன் பக்தியாக இருந்தும் இவ்வளவு கஷ்டங்கள்.

ஆனால் பார்த்தீர்களா!!! மனிதர்களே!!!!

மனிதர்களே இதுதான் உண்மையான பக்தி.

எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளும் திறமை. ஆனாலும் 20, 25, 30 வயதுகளில் வருவது கஷ்டம் என்றால் மனிதனுக்கு தாங்க முடியாத அளவிற்கு கஷ்டம். ஆனாலும் இதையன்றி கூற...

ஆனாலும் இவந்தனுக்கு ஒரு முடிவை ஈசன்..... ஆனாலும் விடவில்லை கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று.

ஆனாலும் தன் இவந்தனுக்கே ஞானம் வந்தும் விட்டது சிறிது காலத்திலே.!!!

இவ்வாறு பிறந்து விட்டோமே!!!.... மனிதர்களுக்கு ஏன் நல்லது செய்யக் கூடாது??? என்றுகூட...

திரும்பவும் ஓர் இவை பின் நல்முறையாக அண்ணாமலைக்கு சென்றான். அங்கே நமச்சிவாயா!!! நமச்சிவாயா!!! என்று கூட  கத்திக் கொண்டே!!! கத்தி கொண்டே!!!! எதையென்று கூற..... 

மனிதர்கள்...ஏன்??  இவந்தன் இவ்வாறு கத்திக் கொண்டிருக்கின்றான்... என்று கூட பல மனிதர்கள் இவந்தனை... பைத்தியக்காரனே!!! என்று கூட அழைத்தார்கள் சில நேரங்கள்.... பைத்தியக்காரா!!! பைத்தியக்காரா!!! என்று கூட மனிதர்கள்....

ஆனாலும் இவனின் ஞான நிலை... யாருக்கும் புரியவில்லை!!!!

இப்படித்தான் இன்றளவும் மனிதர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள்..

மனிதன் பொய்யான பக்திகளுக்கு பின் அனைத்தும் சுகபோகங்களும் எவையென்று கூற... ஆன்மீகத்தில் வேடங்கள் போட்டவனுக்கு மரியாதை!!! போடாதவனுக்கு மரியாதை இல்லை!!! இப்படித்தான் நடக்கின்றது.

ஆனால் இவந்தனை எவை என்று... மனிதன் பைத்தியக்காரன்..என்று. 

ஆனால் உண்மையில் அப்படி சொன்னவர்களெல்லாம் கடைசியில் அவன்தான் பைத்தியக்காரனாக ஆகி கொண்டிருக்கின்றான் என்பது... இன்னும் இன்னும்.

ஆனாலும் இவந்தன் அங்கே ஞானம் பிறந்தது அண்ணாமலையிலே.... 

பல ஆலயங்களுக்கு சென்று ஈசனின் திருப்பணிகளை முடிப்பதற்கு சரியான நேரங்களில் இவன் மறைமுகமாகவே சென்று பல ஆலயங்களுக்கு மனிதர்கள் வரும் கலியுகத்தில் மனிதர்கள் பல கஷ்டங்கள் படுவார்கள்.

தன்னைப் போன்று யாரும் படக்கூடாது என்று எண்ணினான்.. ஆனால் இதைத்தான் மனதில் எண்ணி. ஆனால் ஈசனிடத்தில் அண்ணாமலைக்கு சென்று.....

அண்ணாமலையில் கூட இவனை விரட்டி விட்டார்கள்.

இவன் பைத்தியக்காரன் இவன் உள்ளே வரக்கூடாது எவையென்று...

ஆனாலும் நிச்சயம் நீயெல்லாம் உள்ளே வரக்கூடாது...என்று கூட அண்ணாமலையில் கூட இவந்தனுக்கு... வழிகள் விடவில்லை... தரிசனம் பார்க்க.

ஆனால் பார்வதி தேவி,ஈசனிடம்  இவை கருணையுள்ள மணாளனே!!!! இப்படி எல்லாம் மனிதர்களா!!!! நல்லோர்களை விடவில்லையே உள்ளே!!! ஆனால் இவனுடைய கோலத்தை பார்த்தா!!!!??? என்று கூட.... 

ஆனாலும் இல்லை !!!! இவந்தன் எப்பொழுது.. நம் பிள்ளையாகவே ஏற்றுக் கொள்வோம்.....இவந்தனுக்கு அனைத்தும் செய்வோம்...

ஏன் மனிதர்கள் கலியுகத்தில் பின் வேடதாரிகள்.போல் வேடம் போட்டுக்கொண்டு தன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணமே மிகுந்து காணப்படுகின்றது... அவர்கள் எல்லாம் பொய் பித்தலாட்டக்காரர்கள்  என்பதை..கூட தெரியவில்லை.

ஆனால் சொல்லி விடுகின்றேன்....!!!! இப்படி கலியுகத்தில் இப்படி செய்து கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றார்கள்.

அவனிடத்தில் அவன் கர்மா சேர்த்துக்கொண்டே இருக்கின்றான் அவன் இடத்தில் மீண்டும் மீண்டும் மனிதர்களும் போய் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். தெரிந்து கொள்ளுங்கள் மனிதர்களே!!!!

தன் பிள்ளைகளும் இருக்கின்றன!!

இன்னும் எதை என்று கூற ஆனாலும் அவர்கள் எல்லாம் இப்பொழுது கூட சில வித்தைகளால் நன்றாக.. இருக்க முடியுமே தவிர வரும் காலங்களில் அவர்கள் கஷ்டத்தை நோக்கி செல்வார்கள்.

நிச்சயமாக சொல்கின்றேன் அப்பொழுது சித்தர்களே!!!!
உன்னைத்தான் வணங்கினோமே!!!! 

உன்னைத்தான், இறைவனைத்தான் வணங்கினோமே!!! 
ஏன்?? கஷ்டம் என்று சொல்லக்கூடாது!!!! 

சொல்லிவிட்டேன்!!!!

பொய்யான பொய்யான பக்திகள் துறவிகள் என்றெல்லாம் இப்பொழுது கலியுகத்தில் வளர்ந்துவிட்டது வளர்ந்து கொண்டே தான் வருகின்றது அவற்றையெல்லாம் நாங்கள் எடுத்துக் கொண்டுதான் இருக்கின்றோம் நிச்சயம் தடுத்துக் கொண்டே தான் இருக்கிறோம்.

ஆனால் முட்டாள் மனிதன் தரித்திர மனிதன் அவர்களை பக்தி என்று சொல்லிவிட்டால் அவனை கூட நம்பி மேல் நோக்கி தூக்கி ஆனால் விடுகிறார்கள்.

ஆனால் தூக்கி விடும் மனிதர்களை யாங்கள் நிச்சயம் தண்டிப்போம் ....

அவர்கள் என் பக்தர்களே!!!! இல்லை

சொல்லிவிட்டேன்!!!!

அவர்களுக்கு நிச்சயமாய் கஷ்டங்கள் வரும்...

இதை பின் கஷ்டங்கள் வந்துகொண்டேதான் இருக்கும். எதையெதையோ வணங்கி!!... 

ஆனாலும் திரும்பவும் சொல்கின்றேன் சித்தர்களை பின் உசுப்பேத்தாதீர்கள்...இதை எவையன்றி கூற.... 

பின் சித்தனை வணங்கினோம்!!!... இறைவனை வணங்கினோம்!!... என்று மீண்டும் எங்களிடம் வந்தால் நிச்சயம் யாங்கள் வழிகள் காட்டி விடமாட்டோம்....

இப்பொழுதே புரிந்து கொள்ளுங்கள்... நீங்களும் ஞானம் பெற்றவர்கள்...எதையன்றி கூற உண்மையான துறவிக்கே மதிப்பில்லை இவ்வுலகத்தில்.... போலியான துறவிக்கு... மதிப்பு அதிகம்...

இவனை இத்துறவியை எவையென்று கூற இவ் ஞானியா (ஒடுகத்தூர் ஸ்வாமிகள்) பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்...

ஆனால் இவ் ஞானி பரதேசி போல் பல ஆலயங்களுக்கு சென்று சென்று ஈசன் அருளால் நிச்சயம் தான் பெற்ற இன்பம் எதையன்றி கூற... இன்பம் என்பது இங்கே துன்பத்தைத்தான் யான் சொல்வேன்... 

அவ் இன்பத்தையும் எவையென்று கூற துன்பத்தையும் இன்பமாக கருதியவன் இவ் ஞானி!!! 

அதனால் தான் பெற்ற இன்பம் தான் பெற்ற துன்பம்.... இதையென்று இன்பம் துன்பம்..... 

ஆனால் இவந்தன் வயதில் கடைசிவரை .........ஆகும் வரை ஓர் இன்பத்தை கூட காண முடியவில்லை .

ஆனால் கடைசியில் சொன்னான் எந்தனுக்கு துன்பமே இன்பம் என்று!!!

இதுதான் உண்மையான ஞானி!!!!

சொல்லி சொல்லி கொண்டே இருக்கின்றேன்!!!.... இதையன்றி... 

ஆனால் இவ் ஞானிக்கு பல திருத்தலங்களில் கூட  வழிகள் விடவில்லை. பல மனிதர்கள் கூட இறைவனை தரிசிப்பதில் கூட இவனை பைத்தியகாரன் இவந்தனுக்கு என்ன தெரியும் ???என்று கூட.....

ஆனால் இறைவனுக்கு தெரியும் இவனைப் பற்றி!!!!

ஆனாலும் இதையன்றி கூற. பல ஆலயங்களில் கூட அங்கே சென்று சென்று அங்கே தியானங்கள் செய்து.... இறைவா!!! இறைவா!!!..... என் நிலைமையை யாருக்கும் தராதே!!!!..... என்று கூறி பல ஆலயங்களை இறைவன் அருளாலே கட்டி முடித்தான் இவன்.

ஆனால் பின் கடைசியில் பார்த்தால்  இவனையே விரட்டி விட்டார்கள் மனிதர்கள்...

இதனால் தான் மனிதன் புத்தி மட்ட புத்தியாக சென்று கொண்டிருக்கின்றது கலியுகத்தில் இவன் அமைத்த  திருத்தலங்கள்  பல..பல பல!!!! 

வரும் காலங்களில் அதையும் யான் உரைக்கின்றேன் ...இதையன்றி. 

ஆனாலும் அப்படியே திரிந்துகொண்டு திரிந்துகொண்டு... ஆனாலும் விடவில்லை கஷ்டத்தில் கூட இறைவனுக்கு சேவைகள் செய்வது இவந்தனக்கு சாலச்சிறந்ததாகவே சென்று பல ஆலயங்களை எழுப்பினான்.

எழுந்தருளி எதையென்று ஆனால் ஈசன் அருளாலே நடந்தது.. பின் இவந்தன் சூட்சுமங்கள் இன்னும் விபரம் ஆகவே வரும் வரும் காலங்களில்....

இவந்தன் பல ஆலயங்களை எழுப்பி!!! எழுப்பி!!! நல் விதமாக அங்கே மக்கள் வந்தால் துன்பநிலையில் இருந்து விடுபட்டு கொள்ளலாம். அத் துன்பத்திலும் ஞானம் பெறலாம் என்று கூட இவன் ஆலயம் சொல்கின்றது....

இதை... ஆனாலும் ஈசன் கடைசியில் ஒன்றைச் சொல்கின்றேன்....

ஓர் மனிதன் சொல்லிவிட்டான்...எதையென்று... 

இவன் திரிந்து அலைந்து இவ்வளவு நன்மைகள் செய்யும் பொழுது.....

இவன் ஒரு ஞானியே இல்லை...என்றும்... பலப்பல பலப்பல வார்த்தைகளாலும் இவனை திட்டி தீர்த்தார்கள்.

ஆனால் இவன் ஒன்றை தான் சொன்னான்!!!! இறைவனை நோக்கி!!!!

மேலே இருக்கின்றான் அவந்தன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான்....

ஆனாலும் இதையும் இவையன்றி கூற.. அப்படி அப்படி....இவ் ஞானி.. சொன்னதும் பல மனிதர்கள் கூட்டமாக கூடி இவனை கல்லை எறிந்து அடித்தார்கள்.

ஆனாலும் நன்றாக இருக்க வேண்டும் மக்கள் என்றே இவந்தனக்கு.......

ஆனாலும் இப்பொழுது பார்த்தீர்களா ....மனிதனின் உண்மையான பக்திக்கு.. இவ்வுலகத்தில் இடம் இல்லையப்பா......

போலியான பக்திகளுக்கே இடம்...!!

போலியான மனிதர்களுக்கே... கொண்டாட்டம்.

பல மனிதர்களுக்கு சித்தர்கள் என்ற பெயரை சொல்லியும் எங்கள் பெயரை சொல்லியும் பின்  யான் அகத்தியன்... எனக்கு அனைத்தும் தெரியும் எந்தனுக்கே இவ்வுலகத்தில் மரியாதை...

ஆனால் அனைத்தும் தெரிந்தவனுக்கு.... மரியாதை இல்லையப்பா....

இதுதான் உலகம்.!!!
இது தான் கர்மா பூமி!!! 
இது தான் கலியுகம்!! 

ஆனால் சித்தர்கள் யாங்கள் வந்துவிட்டோம் நிச்சயம் பின் எங்கள் பக்தர்களாக இருந்தாலும்... பொய் சொல்லிப் பிழைத்தால்... நிச்சயம் அவர்களுக்கு தண்டனைகள் உண்டு தண்டிப்போம். சொல்லிவிட்டேன். 

அதனால் ஒழுங்காக பிழைத்துக் கொள்ளுங்கள்.

பல உரைகளிலும் யாங்கள் சொல்லிவிட்டோம்....

திருந்தவில்லை என்றால் பாருங்கள்!!!!.... எதையென்று கூற... 

கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டே  தான் இருக்கிறோம் ஆனால் மனநிலை எவ்வாறு என்பதையும் கூட... உண்மையாக இருங்கள் உண்மையாக இருங்கள் என்றெல்லாம்.

முதலில் உண்மையாக நீங்கள் இருந்தால் தான் யாங்கள் சில வாக்குகள் சொல்ல.... நல் முறையாகவே இப்படி வாழுங்கள்.... யாங்கள் நிச்சயம் விதியைக் கூட மாற்றியமைப்போம் என்பதைக்கூட சொல்லிக் கொண்டே வருகின்றோம்...

பிள்ளைகளே!!! திருந்துங்கள் நன்றாக.....

மீண்டும் ஒருமுறை சொல்கின்றேன்!!!!

பொய்களப்பா அனைத்தும் பொய்களப்பா!!!!

அவனிடத்தில் பின் இவையன்றி கூற அவன் ஞானியாக இருக்கின்றான் பொய்யானவனாக இருக்கின்றான்.

அவனைப்பற்றி.... யான் வரும் காலங்களில் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்கின்றேன் என்னென்ன??? வேலைகள் செய்கின்றான்!!!! என்று கூட நிச்சயம் தெரிவிப்பேன்.

இவை போன்றே செயல்பட்டால்....

தரித்திர மனிதன் அனைத்து சுகங்களையும் கண்டு... கடைசி வயதில் இறைவனை நாடுகின்றான்... அனைத்து சுகங்களும் பொய் என்று கூட.... அவனைப் பற்றியும் தெரிவிக்கின்றேன்....

சென்று விடாதீர்கள்..... அவன் கர்மா சேர்த்துக்கொண்டிருந்தான்... அவன் மூலமும் வரும் கர்மா..... என்பதை தெரிந்து கொள்ளாத மனிதர்களே!!! திருந்துங்கள். 

உண்மையான பக்திகளை உருவாக்குவோம் இவ்வுலகத்தில் செம்மை பெற செய்வோம்.

அனைத்தும் பொய்யான பக்திகள் காட்டி காட்டி பொய் சொல்லி மனிதர்களை திசை திருப்பி விட்டார்கள்..

ஆனாலும் இவ் ஞானி உண்மையானவன். பல தலங்களில் வந்து வந்து  கடைசியில் எவையென்று ஆனாலும்..

ஈசன்... எதையென்று.. ஈசா!!!! நமச்சிவாயா!!!! அப்பொழுது கூட இவனை பலபேர் கல்லை தூக்கி எறிந்தார்கள். அப்பொழுது கூட சிரித்தான் இவன்.!!!!

அனைத்திற்கும் காரணம் இறைவனே!!! என்று கூட.

கடைசியில் ஈசனே!!!!!! கண்ணீர் விட்டான்.......

இவந்தனுக்கு எவையென்று கூற.... இப்படி ஒரு பக்தனா!!!!!! என்று....

ஆனால் பார்வதி தேவி....

மணாளா!!!!! .....இதென்ன!!! 
நீயும் கண்ணீர் விடுவதா!!!!!! 
இவ்வுலகத்தை காக்கின்ற நீயே !!!! 

ஆம் தேவி.... ஆமாம்... இவ்வளவு பெரிய பக்திகள்.
எதையென்று இவந்தனுக்கு எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் என்னை...ஈசன் என்னை... வெறுக்கவில்லையே.... அதனால் தான்.... 

இவனை இத்தனை பேர்.... அடிக்கின்றார்களே... இவந்தன் அப்பொழுது கூட...நமச்சிவாய!!!!! நமச்சிவாயா!!!!! 
என்று சொல்கின்றானே!!!!! 

இதனால்தான் ஆனந்தக் கண்ணீர்......என்று கூட... ஈசன். 

ஆனாலும் இவந்தனுக்கு நேரில் ஈசனே!!!!  ஈசனே!!!!  எதையன்றி கூற காட்சிகள் கொடுத்தான். 

எதையென்று கூற அப்பொழுது கூட ஈசன் கேட்டான்  வந்திறங்கி....

அப்பனே!!!!  மைந்தா!!!! 

உந்தனுக்கு என்ன வரம் வேண்டும்??? கேள்!!!!.....  என்று கூட. 

ஆனால் அவன் சிரித்தான்.... எந்தனுக்கு என்ன வரங்கள் வேண்டும் .........பின் இவையென்று கூற.... இப்புவியில் தான் பிறந்து விட்டேன்.....

ஆனால் ......"""""நீ வந்து நின்றாயே!!!!""""" அதுவே   எந்தனக்கு பெரிய வரம்!!!!!!

ஆனால் யான் எதையன்றி கூற இப்பொழுதே எதையன்றி கூற யான் பட்ட பல கஷ்டங்களை இன்பமாகத்தான் எண்ணினேன்....!!!!

பின் எந்தனுக்கு....ஏது வரம் வேண்டும் என்று கேட்க!!!! 

ஈசனே!!!! நீயே!!!! என்னிடத்தில் வந்து முன்னே நின்றிருக்கின்றாய் ..... இதைவிடவா...????? எந்தனுக்கு வரம் வேண்டும்??????  என்று கூட..... 

அப்போது ஈசன் கட்டி அணைத்து கொண்டான்.... 

உன் சேவைகள் பெருக!!!!!!

பின் நீ எங்கெல்லாம் செல்கின்றாயோ!!! அங்கெல்லாம் திருத்தலம் நல்விதமாக அமைப்பாய்.

அமைத்து அங்கெல்லாம் எவ்வாறு மனிதர்கள் வருகின்றாரோ... அவர்களுக்கெல்லாம் யான் பல ஆசிகள் தந்து ஈகுவேன் பார்வதி தேவியுடன். என்று கூறி... மறைந்தான்.

இதனால் பல வழிகளிலும்   பல  திருத்தலங்களை உருவாக்கினான். 

கடைசியில் இங்கு வந்து பல மனிதர்களுக்கு எவையென்று கூற ஆனாலும் இதையென்றும் அறியாத மக்கள் பல... கொல்லிகளில் (வியாதிகளில்) உயிர் கொல்லிகள் பல பல வியாதிகளில் பற்றிக் கொண்டது ஆனால் இவந்தனக்கு விஷயம் தெரிந்து விட்டது.

இவ் மனிதர்களை காக்க கடைசியில் இங்கு வந்து கருணைநேயத்துடன் வந்து எதையன்றி கூற பல மனிதர்களை காப்பாற்றினான். பல மனிதர்களுக்கு துன்பத்திலிருந்து விலக்கம் அளித்தான்.

பலபல மனிதர்களுக்கும் சேவை செய்து பல உபதேசங்களை உபசரித்தான்....

இறைவனே மெய் என்பதை உணருங்கள்!!!! மனித வடிவில் வரும் குருக்களை பின் கடைபிடிக்காதீர்கள்.... அவர்கள் பொய்யானவர்களே...என்று கூட.. 

மனிதனின் நினைப்பை அறிந்து  இவந்தன் பெரும் சேவையை.. இவ் மானிடத்திற்கே... எதையென்று கூற செய்து... பல மனிதர்களை உருவாக்கி உள்ளான்.

ஆனால் இதையன்றி கூற கடைசியில் பின் மனிதர்களைப் பார்க்கவே இவந்தனுக்கு பிடிக்கவில்லை !!!!!....என்று கூட. 

பின் அப்படியே அமர்ந்து எதையென்று கூற பின் சமாதி அடைந்து விட்டான்... 

இன்னும் கூட இவன் வாழ்ந்து கொண்டுதான்  இருக்கின்றான்.

உண்மையான மனிதர்கள் இங்கு வருபவர்களுக்கு ஆனால் எதையன்றி கூற...இவன் திருத்தலங்களை இவந்தனே காட்டி விடுவான். 

அங்கெல்லாம் சென்று பல கஷ்டங்களை பின் நிவர்த்தி செய்து கொள்ளலாம். 

இவ் ஞானி... ஒரு பெரிய ஞானி என்பேன். 

இதனால் அப்பனே!!!!  இன்னும் பல பல வழிகளில் உண்டு ,உண்டு, உண்டு உண்டு ,ஆசிகள். என்பதை உணர்ந்து நல் விதமாக எதையென்று கூற.....

அதனால் ஒன்றை மட்டும் சொல்கின்றேன்!!!

இவனை தேடி வந்தவர்களுக்கு... நல் முறையாக ஆசிகள் தந்து இவன் அமைத்த ஆலயங்களுக்கு இவனே செல்ல வைப்பான். 

இதனால் இன்னும் பல ஆசிகள்!!!  ஈசன்!!!  பார்வதி தேவி என்று கூட... என்று கூட.... ஆசிகள் கிட்டி... நலமுடனே வாழ வைப்பான்....இக்கலியுகத்திலும்..... 

இதையென்று அறிவதற்கு பல ஆலயங்களை சுற்றி திரிந்தவன் இவன்.... எவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் 
""""நாராயணா""""!!!!! எதையன்றி கூற """""முருகா """"" என்றெல்லாம்..... ஆனாலும் இதையன்றி கூற இவையன்றி கூற இங்கே...வந்து சமாதி.... இவந்தனுக்கு பின் """முருகனும் ""!!!!!! இங்கே வந்து பின் இதை..... இவ்வளவு பெரிய ஞானியா!!!!!!!...... இதையன்றி கூற கண்ணீர் மல்க,  கண்ணீர் மல்க....... 

இதையென்று அது ஆனந்த கண்ணீரே!!!!!     

பிள்ளையோனும்..... ஆனந்த கண்ணீரே!!! 

இவ்வளவு பெரிய ஞானியா!!!!??..... என்று கூறி 
இவனை பாராட்டி... இவந்தனை நிச்சயம் வணங்குபவர்களுக்கு.... இவன் என்ன?? வரம் கொடுக்கின்றானோ!!!! 

""அது அப்படியே நடக்கும்""!!!

என்பது கூட ....இவ் ஞானி உயிரோட்டம் ஆகவே இருக்கின்றான்!!!

மனித உடம்பு இல்லை ஆனால் உயிர் இருந்து கொண்டே இருக்கின்றது!!!!

இன்னும் கூட பல மனிதர்கள் இவனை நாடி நாடி வருகின்றனர். இவன் ஆசிகள் தந்து இவன் ஆலயத்திற்கே அவன் மனம்....எதையென்று கூற விரும்பியவாறே...மாற்றி பின் அழைத்து செல்கின்றான்.

எதை என்று கூற பல கஷ்டங்கள் தீரும். தீரும் என்பது கூட உண்மை.

உண்மை நிலைகளை அறிந்து பல வழிகளிலும் பல ஞானத்தைப் பெற்று சிறப்பாகவே!! சிறப்பாகவே!! வாழவைப்பான் இவந்தன்.

அதனால் மனித ஜென்மங்களே!!!! பல வழிகளிலும் கஷ்டங்கள் வந்தாலும்.... கஷ்டங்கள் எதை என்று கூற இறைவா!!! இறைவா!!! என்று இருந்தால்....இவ் ஞானி எப்படியோ இதையன்றி கூற நிச்சயம் பின் நல் வாக்கும்... எதையன்றி கூற பல மனிதர்கள் நிச்சயம் ...இவந்தனை இக்கலியுகத்திலும் இவனை தேடி வருவார்கள்... இவன் அமைத்த தலத்திற்கு இவனே மனம் மாற்றி பின் அழைத்துச்செல்வான்.. 

நல் ஆசிகள்!!!!!  மீண்டும் ஒரு சித்தன் வந்து செப்புவான்..... நல்லாசிகள்!!!!!!  நல்லாசிகள்!!!!!!...

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ மகான் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் மடம். அல்சூர் ஏரியின் தெற்குப் பகுதியில், எண். 13, கங்காதர செட்டி சாலை, அல்சூர், பெங்களூரு, கர்நாடகா 560042
போன். 080 25581256

கோயில் நேரங்கள். 
காலை :6.00 மணிமுதல் 12:00 மணி வரை. 
மாலை. 4:30 முதல் இரவு 8:30 வரை. திறந்திருக்கும். 

இந்த உலகில் கடந்த பல நூற்றாண்டுகளில் பல்வேறு இடங்களிலும் மாபெரும் ஆன்மீக மகான்களும் தெய்வீகப் பிறவிகளும் தோன்றி மறைந்து உள்ளனர். அந்த வழியில் தோன்றி மறைந்த  அவதாரப் புருஷர்களில் ஒருவரே ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள்

அவர் செய்து காட்டி உள்ள அற்புதங்களையும், மகிமைகளையும் நேரடியாக கண்டு களித்து அனுபவித்தவர்கள் மூலம் அவருடைய பிற்கால வரலாறு தெரிய வந்துள்ளது. அந்த மகானுடைய  வரலாற்று செய்திகளை அவருடனே இருந்து, வாழ்ந்து அவர் சமாதி அடைந்தப் பின் தானும்  சமாதி அடைந்த சீடர் ஒருவர் மூலம் வெளி உலகுக்கு தெரிய வந்தது. அந்த சீடரின் சமாதியும் ஒடுக்கத்தூர் ஆலய மடத்தின் உள்ளேயே  அமைந்து  உள்ளது.

அவர் மனம் முழுதும் கடவுள் பக்தியிலேயே நிறைந்து இருந்தது. பல இடங்களுக்கும் சென்று கொண்டு ஆலய தரிசனம் செய்தவர் திருவண்ணாமலை  காளஹஸ்தி, திருச்சி, காஞ்சீபுரம், மதுரை, சிதம்பரம் போன்ற இடங்களுக்கும் சென்று ஆலய தரிசனம் செய்தார். கடைசியாக வேலூருக்கு அருகில் இருந்த அடர்ந்த காட்டின் உள்ளே சென்று அங்கிருந்த மலைக் குன்றின் மீது அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அவர் அமர்ந்து இருந்த இடமோ யாரும் எளிதில் செல்ல முடியாத இடமாக அமைந்து இருந்தது. தியானத்தில் அமர்ந்திருந்தவரின் பக்கத்தில் விலங்குகள் வந்து அமர்ந்தன. ஆனால் அவை எதுவுமே அவரை எந்த விதத்திலும் தொந்தரவு செய்யவில்லை. அந்தக் காட்டில் விறகு வெட்ட வந்தவர்கள் மற்றும் ஆட்டு இடையர்கள் அந்தக் காட்சியைப் பார்த்து வியந்தனர். அப்போது சேஷையா எனப்பட்ட ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் அங்கு சென்று தவத்தில் இருக்கும் முன்னர் அங்கு பல தபஸ்விக்கள் வந்து தவத்தில் இருந்து உள்ளார்கள். அதன் பின் அவர்கள் யாருடைய கண்களுக்கும் புலப்படாமல் அங்கிருந்து கிளம்பிச் சென்று உள்ளார்கள். அதனால் அவர்கள் சேஷையா அங்கு வந்து தவத்தில் அமர்ந்து கொண்டதற்கு முக்கியத்துவம்  கொடுக்கவில்லை.

அப்படிப்பட்ட ரிஷி முனிவர்களுக்கு மாறாக ஷேசய்யா அனைவரும் தன்னைப் பார்க்கும் வகையில் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு தவத்தில் இருந்துள்ளார். சில நேரங்களில் மட்டும் அங்கிருந்து எழுவார். அருகில் இருந்த ஓடைக்குச் சென்று தண்ணீர் பருகிய பின் திரும்பி வந்து தான் தவத்தில் இருந்த இடத்திலேயே அமர்ந்து கொள்வார். அப்படி எழுந்திருக்கும்போது ஆர்வத்தோடு தன்னையே பார்த்துக் கொண்டு இருக்கும் கிராமத்தினரையும், தன்னை பின்தொடர்ந்து வந்து கண்காணித்தவர்களையும் லட்க்ஷியம் செய்யாமல் அவர்களோடு எதுவுமே பேசாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்பதை போல தண்ணீர்  குடித்து விட்டு வருவார். அதே இடத்துக்கு மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு கண்களை மூடிக் கொண்டு தியானத்தில் அமர்ந்து விடுவார். நாட்கள் செல்லச் செல்ல அவர் தண்ணீர் அருந்தக் கூடப் போகவில்லை. ஒரே இடத்தில் ஆடாமல் அசையாமல் அமர்ந்து கிடந்தவரை சுற்றி கரையான்கள் புற்று எழுப்பின. அவர் சில நேரத்தில் சட்டையைக் கயற்றிப் போடுவது போல புற்றைத் தள்ளிவிட்டு எழுந்து சென்று தண்ணீர் பருகியபின் அதே இடத்தில் வந்து  அமர்வார். சில நாட்களில் மீண்டும் பாம்புப் புற்று அவரை மூடிக்கொள்ளும். ஆனாலும் அவர் எத்தனை முறை எழுந்து சென்றாலும், அவர் தியானம் செய்து கொண்டு இருந்த குறிப்பிட்ட இடத்தை மட்டும் மாற்றிக் கொள்ளவே இல்லை.

பலமுறை கிராமவாசிகள் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் ஆற்று மணலில் புதைந்து கிடப்பதை கண்டு உள்ளார்கள். ஆற்றில் வெள்ளம் வரும்போது அவர் புதைந்து உள்ள இடத்தின் மீது தண்ணீர் பாய்ந்து அவர் அதில் முழுகிக் கிடைக்கும் இடத்தைக் காட்டும். ஒருமுறை நல்ல மழைக் காலம் வந்தபோது ஸ்வாமிகளைக் காணவில்லை. அனைத்து இடங்களிலும் தேடி அலைந்த பின் அவர் ஆற்று மண்ணில் ஒருவார காலம் புதைந்து இருப்பதைக் கண்ட கிராமத்தினர் அவரை மீட்டு வந்தார்கள். அவரை வெளியில் இழுத்து வந்தபோதும் அவர் யோக சமாதி நிலையிலேயே இருந்தாராம்.

சில காலம் அப்படிப்பட்ட நிலையில் இருந்தவர் ஒரு நாள் அந்த இடத்தை விட்டு எழுந்து எங்கோ சென்று விட்டார். ஊர் ஊராக சுற்றி அலையத் துவங்கி  பல இடங்களுக்கும் சென்று கொண்டு இருந்தவர் ஒரு முறை அகரம் செல்லும் வழியில் இருந்த ஒடுக்கத்தூரில் இருந்த பாதையின் நடுவில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஆழ்ந்து விட்டார். அந்த ஒற்றை வழிப் பாதையே இரண்டு கிராமங்களை இணைக்கும் சாலைப் பகுதியாக இருந்தது. அப்போது அந்த பக்கமாக ஒரு வண்டி வந்து கொண்டு இருந்தது. வண்டிக்காரன் அவரை தள்ளி அமர்ந்து கொள்ளுமாறு குரல் கொடுத்தான். எத்தனை கூவியும் நகராததினால் வண்டியில் இருந்து இறங்கி அவர் அருகில் வந்து அவரை தட்டி எழுப்ப முயன்றான். ஆனாலும் மனிதர் கண் திறக்கவில்லை. வண்டி ஓட்டுபவனால் இரவை அங்கேயே கழிக்க முடியாது.  வழிப்பறி திருடர்கள் அதிகம் இருந்த ஊர் அது. ஆகவே கோபத்துடன் அவரைக் கீழே தள்ளினான். வண்டியில் ஏறிக் கொண்டு அந்த வண்டியையே அவர் மீது ஏற்றி வண்டியை ஓட்டினான். அந்தோ பரிதாபம், ஒரு பாறாங்கல்லின் மீது மோதியது போல வண்டி கவிழ்ந்தது. வண்டிக்காரனும் வண்டியில் பூட்டப்பட்டு இருந்த இரண்டு மாடுகளும் மயக்கம் அடைந்து விழுந்தனர்.  மறுநாள் மயக்கம் தெளிந்து எழுந்த வண்டிக்காரன் முதல் நாள் நடந்ததை எண்ணிப் பார்த்தான். சாலையில் விழுந்திருந்த ஷேசய்யா இன்னமும் அந்த இடத்திலேயே அசையாமல்ந தியானத்தில் விழுந்து கிடந்தார். அதைக் கண்ட வண்டிக்காரன் தான் அவரை கீழே தள்ளி விட்டதினால்  அவர் இறந்து விட்டதாகக் கருதினான்.   அவர் இறந்து விட்டதாக நினைத்து  ஊருக்குள் ஓடிச் சென்று கிராமத்தினரை அழைத்து வந்தான். அவர்கள் அடிக்கடி சேஷையா அங்கு தியானத்தில்  இருப்பதை பார்த்து உள்ளார்கள். ஆகவே ஓடி வந்த கிராமத்தினர் சேஷையா அங்கு காணப்படவில்லை என்பதைக் கண்டதும் ஷேசய்யாவைத் தேடினார்கள். தேடலுக்குப் பின்னர் அவரை காட்டுப் பகுதியில்  கண்டு பிடித்து ஊருக்குள் அழைத்து வந்தனர். அவர் உடலில் சிறு கீறல் கூட காணப்படவில்லை. அவர் மாபெரும் மகானாகவே இருக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டவர்கள் அன்று முதல் அவரை ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் என அழைக்கத் துவங்கினார்கள்.

ஸ்வாமிகள் ஒடுக்கத்தூரில் தங்கி இருந்த போது நாகாபாய் என்ற பெண்மணி ஸ்வாமிகளின் பக்தையாக மாறி இருந்தார். அவரே ஸ்வாமிகளுக்க தேவையான அனைத்துப் பணி விடைகளையும் செய்து வந்தார். ஸ்வாமிகள் கல் என்றும் புல் என்றும் பேதம் பார்க்காமல் அனைத்தின் மீதும் சென்று அமருவார். அவருக்கு ஒன்றும் ஆகாது. தன்னை நாடி வந்த பக்தர்களுடைய பிரச்சனைகளுக்கு முடிவு கட்டியும் வியாதிகளை குணப்படுத்தியும் பல விதத்திலும் அற்புதங்களை செய்து வந்தார்.வந்தவர்களுடைய பிரச்சனை தீர்ந்து விடும். இப்படியாக அவரிடம் இருந்த தெய்வீகத்தை வெளிப்படுத்திக் கொண்டு இருந்தவருடைய புகழ் மேலும் மேலும் பெருகியது. இத்தனை இருந்தும் அவர் யாரிடம் இருந்தும் சல்லிக் காசைக் கூட தட்ஷணையாக பெற்றுக் கொண்டது இல்லை. அவரிடம் இருந்தது இரண்டு வேஷ்டி மற்றும் இரண்டு துவலைகள் மட்டுமே. அவருடைய முகத்தில் பெரிய தாடி மட்டும் இருந்தது. அதையும் மழிப்பதற்கு அவர் எவரையும் அனுமதித்தது இல்லை. இன்னும் ஒரு அதிசயமான நிகழ்வு என்ன என்றால் அந்த தாடியும் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வளரவே இல்லை. வாழ்க்கையில் மென்மையான ஒழுக்கத்தைக் கடைபிடித்தவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார்.

இப்படியாக அற்புதங்களை செய்து காட்டியவண்ணம் அங்கும் இங்கும் சென்று கொண்டு இருந்த ஸ்வாமிகள் ஆந்திர எல்லையில் மதனப்பள்ளியில் வாழ்ந்து வந்தார். அவரை எப்படியோ கண்டு பிடித்து விட்ட திருமதி நாகாபாய் மற்றும் முனுசாமி நாயுடு, சுப்பா நாயுடு போன்றவர்கள் கஷ்டப்பட்டு அவரை பெங்களூருக்கு அழைத்து வந்து அங்கு தங்க வைத்தனர்.

பெங்களூரில் ஸ்வாமிகள் தங்கி இருந்தபோது அங்கிருந்த அருணாசலம் பிள்ளை என்பவருக்கு வந்திருந்த பெருநோய் ஸ்வாமிகளின் ஸ்பரிசத்தினால் முற்றிலும் குணமாயிற்று. முன்னதாக அருணாச்சலம் பிள்ளையின் நோயை குணப்படுத்தவே முடியாது என மருத்துவர்கள் கைவிட்டிருந்தார்கள். அதுபோல ஸ்வாமிகளின் பக்தையான மீனாட்ஷியம்மாள் என்பவரின் மகன் கண்பார்வை ஒரு குதிரை எட்டி உதைத்ததினால் போய்விட அனைத்து மருத்துவர்களும் இனி அவனுக்குக் கண் பார்வைக் கிடைக்காது எனக் கைவிட்டு விட அவனது பெற்றோர்கள் ஸ்வாமிகளிடம் சென்று தனது மகனுக்கு கண்பார்வையை திரும்ப வரவழைக்க வேண்டும் என வேண்டிக் கொள்ள அவரும் அவர்களை மறுநாள் வருமாறு கூறி அனுப்பினார். என்ன அதிசயம் மறுநாள் அந்த சிறுவன் எழுந்தது முதல் எதுவுமே நடக்காததை போல நல்ல கண்பார்வையுடன்   தனது காரியங்களை தானே செய்து கொண்டு இருந்தான். இப்படியாக ஸ்வாமிகள் பல மகிமைகளை செய்து காட்டியவண்ணம் வாழ்ந்து கொண்டு இருந்தார். ஆனால் அவை எதுவுமே எழுதி வைக்கப்படாமல் பக்தர்களால் வாய் மொழிச் சொல்லாகவே சொல்லப்பட்டு வருகின்றது. இன்றும் அவரது மேன்மை  ஆம்பூர், குடியாத்தம், வேலூர் மற்றும் ஒடுக்கத்தூர் போன்ற இடங்களில் உள்ள பக்தர்கள் மூலம் பலருக்கும் தெரிய வந்துள்ளதாகக் கூறுகின்றார்கள்.

ஸ்வாமிகளுடைய வாழ்க்கையில் முக்கியமாக சிலவற்றைக் கடைபிடித்தார். யாரிடம் இருந்தும், முக்கியமாக பக்தர்களிடம் இருந்து ஒரு சல்லிக் காசு கூட பெற்றது இல்லை, ஆடம்பரமான பங்களாக்களில் தங்கவில்லை, சொகுசான வாழ்க்கை வேண்டும் என நினைக்கவில்லை. அவரை சுற்றி பந்தா மற்றும் படோபகாரம் இல்லை. தன்னுடைய பக்தர்கள் மூலம் போலியான புகழைப் பரப்பிக் கொள்ளவில்லை. மாபெரும் தெய்வீகப் பிறவியாக ஸ்வாமிகள் இருந்தாலும் சுகபோகம் இல்லாத எளிமையான வாழ்க்கையில், அனைவரும் தம்மை எளிதில் சந்திக்கும் வகையில் ஆலய வளாகத்துக்குள் உள்ள மரத்தடியில் அமர்ந்து இருப்பார். ஸ்வாமிகளுடைய மேன்மையே அதுதான். அதனால்தானோ என்னவோ ஸ்வாமிகளுடைய சமாதி சன்னதிக்கு முன் சென்று நிற்கும்போதே நம்மை அறியாமலேயே மனஅமைதி நிலவுவதைக் காண முடியும்.

ஸ்வாமிகளை சுற்றி சில சிஷ்யர்களே எப்போதும் இருந்து வந்தார்கள். அவர்களில் ஸ்வாமிகளுடன் இளமைக் காலத்திலிருந்தே பழகி வந்திருந்த  பழனிவேலு என்பவர்   ஒருநாள் ஸ்வாமிகள் ஒரு புதர் அருகில் தன்னை மறந்த நிலையில் இருந்த பொழுது ஒரு புகைப்படம் எடுத்தார். அதுவே ஸ்வாமிகளின் முதலும் முடிவுமான ஒரே ஒரு புகைப்படம். அவரை வேறு எவராலும் புகைப்படம் எடுக்கவே முடியவில்லை. அவர் அதை அனுமதிக்கவும் இல்லை. இது கூட அந்த மகானின் தெய்வீகத் தன்மையை வெளிப்படுத்தும் குணங்களில் ஒன்றாகும்.

இப்படியாக வாழ்ந்து வந்தவர் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி தமிழ் மாதம் சுவாதி நட்சத்திரத்தில் மகா சமாதி அடைந்தார். அவர் தங்கி இருந்த அல்சூர் ஏரிக்கரையின் அருகில் இருந்த இடத்திலேயே அவருக்கு சமாதி எழுப்பி சிவலிங்கத்தை அதன் மீது பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். அந்த இடம் ஒடுக்கத்தூர் ஸ்வாமிகள் மடம் எனப் பெயர் பெற்றது. அங்கு ஸ்வாமிகளுக்கு அடிக்கடி காட்சி தந்து கொண்டிருந்த முருகப் பெருமானுக்கும் தண்டாயுதபாணி எனும் பெயரில் அங்கேயே ஒரு சன்னதியும், சற்று தள்ளி தனி ஆலயமும் எழுப்பி உள்ளனர். அந்த ஆலயத்தில் காமாட்சி அம்மன், முருகன், வினாயகர் மற்றும் சிவபெருமானின் சன்னதிகள் தனித்தனியே உள்ளன. மேலும் அவருடைய சில சிஷ்யர்களின் சமாதிகளும் உள்ளன. அவற்றில் ஒருவர் திரு நித்யானந்தா ஸ்வாமிகள் என்பவர். அவரே மடத்திற்கான நிலத்தை தானமாக வழங்கியவர். இன்னொரு சமாதியில் உள்ளவர் திரு மௌன ஸ்வாமிகள் என்பவர் ஆவார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

Tuesday 24 May 2022

சித்தன் அருள் - 1141 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!

ஷட்குண பரிபூரணனாகிய பகவான், கருடனை நோக்கிக் கூறலானார்:

"காசிபன் மகனே!  புத்திரன் முதலியோர், தன்  தாய் தந்தையர்களைக் குறித்து ஆண்டுதோறும் சிரார்த்தம் செய்ய வேண்டும்.   தந்தை தன் மகனுக்கும், தமையன் தன் தம்பிக்கும் சிரார்த்தம் செய்யும் படி நேரிட்டால், தன் தலைமுறையில் உள்ளவரைக் குறிக்காமல், இறந்தவனைக் குறித்து மட்டுமே செய்யவேண்டும்.  ஆசௌசம், விருத்தி முதலியவை நேரிட்டால், அவை: நீங்கிய தினத்தில் சிரார்த்தம் செய்ய வேண்டும். மரித்தவனுக்குக் கிருத்தியம் செய்யும் பொழுதே, சபிண்டீகரணம் செய்யாமல் மாசிகம் மட்டுமே செய்து வரும்போது, ஆசௌசம் நேர்ந்து மாசிகம் நிறுத்தப்படுமானால், அந்த மாசிகத்தை மறு மாசிகத்தோடு சேர்த்து செய்யல் வேண்டும்.  சபிண்டீகரணம் செய்து மாசிகம் செய்யப்பட்டு வந்தால், ஆசௌசத்தால் நின்ற மாசிகத்தை , அந்த ஆசௌசம் நீக்கிய தினத்தில் செய்யலாம். பூணுல் பூணாத புத்திரன் சிரார்த்தம் செய்யும் படி நேரிட்டால் சங்கற்ப விதானத்தோடு செய்ய வேண்டும். ஒரே காலத்தில் தேசாந்திரத்தில் பலர் இறந்தார்கள் என்று கேள்வி யுற நெற்றிட்டால், யாவன் இறந்தான் என்று முன்பு கேட்டானோ  அவனுக்கு முன்னதாகவும்  மற்றவருக்குப் பிறகும் கிரியைகளை செய்ய வேண்டும்.  தினம் தெரிந்து, மாதம் தெரியாவிட்டால், ஆடி, புரட்டாசி, மார்கழி, மாசி ஆகிய இந்த மாதங்களில் கிருஷ்ணபக்ஷத்தில் அஷ்டமியிலாவது, அமாவாசையிலாவது செய்யலாம். தேசாந்தரத்தில் ஒருவன் இறந்தால், அவன் இறந்த தினமாவது மாதமாவது தெரியாவிட்டால், அவன் தேச யாத்திரைக்குப் புறப்பட்ட திதியில் செய்ய வேண்டும்.  ஒரு குடும்பத்துக்குத் தலைவனாக இருந்தவன் அவனைச் சார்ந்த சிலரோடு தேசாந்திரம் சென்ற போது அவர்களில் ஒருவன் இறந்துவிட்டால், அந்தத் தலைவன், அங்கேயே ஆசௌசம் அனுஷ்டித்து பிறகு மனைக்கு வருவானால், அந்தக் காலத்தில் அவனது புத்திரன் வேறு ஒருவனுக்கு சிரார்த்தம் செய்து கொண்டிருந்தால், வந்த தலைவன், சிரார்த்தம் செய்து முடியும் வரையில் சற்று தூரத்தில் இருந்து, பிறகே வீட்டுக்கு வருதல் வேண்டும்.   சிரார்த்தத்துக்கு வரிக்கப்பட்ட பிராமணன் மேற்குறிய செய்தியை முன்னதாக உணர்ந்தும் அதைச் சிரார்த்தம் செய்யும் புத்திரனுக்குச்  சொல்லாமல், சிரார்த்தத்தில் சாப்பிட்டால் தோஷம் அந்தப் பிராமணனையே சாரும்.  தாய் தந்தையர்கள் இறந்த திதியை மறந்து விட்டால் அஷ்டமியிலாவது, ஏகாதேசியிலாவது, அமாவாசையிலாவது, நீத்தார் கடன்களை செய்தல் வேண்டும்.   அவற்றைச் செய்யாமல் விட்டு வீடாக்கூடாது.  சிரார்த்தம் செய்யாமல் விடுபவன் எவனோ, அவனே சண்டாளன். ஒருவன் மரிக்கும் காலம் வரையில் நாள்தோறும் நித்திய சிரார்த்தம் செய்வானாகில் அவனுக்கு மிகவும் நன்மையுண்டாகும்.  இறந்தவனைக் குறித்தல்லாமல் உயிரோடு இருப்பவன் தன் க்ஷேமார்த்தமாகச் செய்யத் தாக்கதாகிய இந்த நித்திய சிரார்த்தத்துக்கு விதியொன்றுமில்லை. ஆவாஹனமும் இல்லை. பிராமணார்த்தம் சாப்பிடுகிறவனுக்கு யாதொரு நிர்ப்பந்தமான விதி முறையெதுவுமில்லை. தினந்தோறும் ஒரு பிராமணனுக்குப் போஜனம் செய்வித்தல் மட்டுமே போதுமானது", என்று திருமால் கூறியருளிவிட்டுக் கருடனை நோக்கி, "கருடா! நீ என்னைக் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் உரிய பதில்களைச் சொல்லி விட்டேன். இனி, கேட்க வேண்டியது ஏதாயினும் கேட்பாயானால் அதற்கும் பதில் சொல்கிறேன்" என்றார்.

கருடன், ஸ்ரீ வாசுதேவனைத் தொழுது, " ஸ்வாமீ ! உலகத்தில் தோன்றும் ஜீவர்களில் ஒரு சில குறிப்பிட்ட ஜீவர்களை, இந்த ஜீவன் பூர்வ ஜன்மத்தில் இன்ன பாவத்தை செய்தவன், இந்த ஜீவன் இன்ன புண்ணியம் செய்தவன் என்பதைப் பகுத்தறியும் அறிவாற்றலால் அறியலாமோ?  பாபஞ் செய்தவரைத் தண்டிப்பவன் யமனைத் தவிர வேறு ஒருவரும் இல்லையா?  இந்த விஷயத்தைப் பற்றி அடியேனுக்கு விளக்கமாகச் சொல்ல வேண்டும்!" என்று வேண்டினான்.  

அதற்குப் பரந்தாமன், பக்தனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்:

"காசிப முனிவரின் மகனே! இந்த ஜீவன் இன்ன பாவத்தைச் செய்தவன் என்பதை நன்றாக அறிந்து கொள்ள முடியும். மாணவன் ஒருவன் தவறுதல் செய்து விட்டால், அவனை அவனது ஆசாரியன் சிக்ஷிக்கிறான். அவன் துஷ்டனாக இருந்து, ஆசாரியனது ஆணைக்கு அடங்காதவனாக இருந்தால் அவனை அரசன் தண்டிப்பான். சிஷ்டனாயினும் துஷ்டனாயினும் யாரும் அறியாதவாறு பாபஞ் செய்தால் அவனை யமன் நன்றாகத் தண்டிப்பான்.  பாபஞ்செய்தவன், அந்தப் பாப நிவர்த்தியின் பொருட்டு, பிராயச்சித்தம் எதுவும் செய்து கொள்ளாமல் மரித்து விட்டான் என்றால், அவன் யமலோகத்தில் நெடுங்காலம் நரகவாசஞ் செய்து, நாய் நரி முதலிய இழிவான பிறவிகளையடைந்து, பிறகு மீண்டும் மானிடப் பிறவியை அடைந்து, முன்பு மாண்ட ஜன்மத்தில் செய்த பாபத்தை, யாவரும் அறியத்தக்க அடையாளங்களுடன் விளங்குவான்.

"வார்த்தைகள் எதையும் சொல்ல முடியாதவாறு நெஞ்சடைப்பு உடையவனைக் கண்டால், அவன் பூர்வ ஜென்மத்தில் பொய் சொல்லியதால்   நரகவாசம்   செய்தவன்  என்று அறிந்து கொள்ளலாம்.  மூங்கையானை சுரபி விஷயத்தில் இழிவான செயலைச் செய்தவன் என்றும், பிறரது வீட்டுக்குத் தீயை வைத்தவன் என்றும், குஷ்டரோகியை பிரமஹத்தி செய்தவன் என்றும், புழுக்களுடைய பற்களுடையவனை மத்தியபானஞ் செய்தவன் என்றும்,  புழுநெளியும் நரகத்தில் தொழில் செய்பவனை சுவர்ணம் திருடியவன் என்றும், விகாரமான மேனியையுடையவனைக் குரு பத்தினியைச் சம்போகம் செய்தவன் என்றும், சண்டாள ஜன்மத்தை அடைந்திருப்பவனை அவன் தன் ஜாதியை விட்டு, பரஸ்திரீயை சேர்ந்தவன் என்றும், வறிஞனைக் கண்டால் அவன் முன் ஜன்மத்தில் ஒருவனுக்கு ஒன்றையும் கொடுக்காத லோபி என்றும் அறியலாம்.

"கருடா! பதி தனக்கும் அசத்தான சூத்திரனுக்கும் புரோகிதனாக இருந்தவன் பன்றியின் பிறவியை அடைவான். ஒரு கிராமத்துக்குப் புரோகிதர்கள் பலரும் இருந்து, ஒருவன் பாபஞ் செய்வானென்றால் அந்தப் பாபம் அந்த ஒருவனையே சாராமல், அந்தக் கிராமத்திலுள்ள புரோகிதர்கள் அனைவரையுமே  சாரும்.  அவ்விதமில்லாமல், ஒரு கிராமத்துக்குப் புரோகிதன் ஒருவனே இருப்பனாகில், அந்தப் பாபம்யாவும் அவனையே சாரும்.  அவன் கழுதையின் பிறவியை அடைவான். ஸ்நானமும், சந்தியாவந்தனமும் தேவதா ஆராதனையும் செய்யாமல் புசித்தவன் காக்கையின் பிறவியை அடைவான். வீடு அல்லது பந்தல் முதலிய இடங்களில் உணவை அருந்தாமல் வெட்ட வெளியில் உணவை அருந்தியவன் மனித சஞ்சாரமேயில்லாத காட்டில் ஒரு குரங்காக ஜன்மம் எடுப்பான். எல்லோரையும் அஞ்சத்தக்க விதத்தில் அதட்டிப் பேசியவன்  பூனை ஜன்மத்தை அடைவான். செடிகளைக் கொளுத்தியவன் மின்மினிப் பூச்சியின் ஜன்மத்தையடைவான். பிராமணருக்கு, அவர்கள் அறியாதவாறு தீய பதார்த்தத்தைக் கொடுத்தவனும், கூடக்  கூடாத சூத்திரப் பெண்ணைக் கூடி மகிழ்ந்த பிராமணனும், வண்டி இழுக்கும், எருதின் ஜன்மத்தை அடைவார்கள்.  விபிரனுக்குப்  பழைய சோற்றைக் கொடுத்தவன் கருங்குரங்கு ஜன்மத்தை அடைவான்.  காரணமில்லாமல் யாரையும் விரோதித்தவன் குருடனாகவே பிறக்கிறான். புஸ்தகங்களைத் திருடியவன் உலகில் பிறந்த சிறிது காலத்திற்கெல்லாம் குருடனாகி விடுவான்.  பிராமணக் குடும்பத்தை நசிக்கச் செய்தவன், தான் பெறுகின்ற பிள்ளைகளையெல்லாம் இழப்பான். பசியோடு, சோறு கேட்டவனுக்கு அன்னங் கொடாதவன் மக்களைப் பெறாத மஹாபாபியாவான். ஆடைகளைத் திருடியவன் உடும்பு ஜன்மத்தை அடைவான். பிறரை இறக்கச் செய்ய விஷம் கொடுத்தவன், சர்ப்பமாகப் பிறப்பான். சந்நியாச ஆசிரமம் பெற்றவனுடைய மனைவியைக் கூடிக்  குலாவியவன் பைசாசப் பிறவியை அடைவான்.  மற்ற அந்நிய ஸ்தீரிகளைக் கூடியவன் சிறு வயதில் இறப்பான்.  குருவின் மனைவியை அணைய வேண்டும் என்று இச்சித்தவன், ஓணானின் ஜன்மத்தை அடைவான்.  குளம் வெட்டிக் கிணறு எடுத்து, பிறகு அவற்றைத் தூர்த்தவன் மீன் ஜன்மத்தை அடைவான். நீதிக்கு விரோதம் செய்தவன், கோட்டான் பிறவியை அடைவான். ஏகோதிஷ்டம் சாப்பிட்டவன் நாயின் ஜன்மத்தை அடைவான். தத்தாபகாரம் செய்தவன் நரிப் பிறவியை அடைவான். இராஜஸ்திரியைக் கூடியனுபவித்தவன் இழிந்த பிறவியை  அடைவான். வேதியருக்குத் தோஷம் கற்பித்தவன் ஆமையின் ஜன்மத்தை அடைவான்.  மூன்று ஆண்டுகள் வரையில் தக்ஷணை பெற்று ஆராதனை செய்தவனும் வேதம் ஓதுவித்தவனும் சண்டாள ஜன்மத்தை அடைவார்கள். கனி காய்களுடன், பூவும் பிஞ்சுமாய் இருக்கும் மரங்களை வெட்டியவன், ஒரு தகுதியும் இல்லாதவனாகிறான். வாசனைப் பொருள்களைத் திருடியவன் துர்நாற்றமுடையவனாய்ப் பிறப்பான். பிறருடைய பொருள்களில் எதையேனும் கவர்ந்தவன், புழு, கிருமி முதலிய இழிந்த பிறவியை அடைவான்.

யமபுரியிக்குச் செல்லும் வழியில், சீழாலும்  இரத்தத்தாலும் பலவகை விசித்திர மிருகங்களாலும் முதலைகளாலும் கிரீடங்களாலும் நிறைந்த வைதரணீ என்று ஒரு நதியுள்ளது என்று முன்பே சொல்லியிருக்கிறேனல்லவா?  அந்த நதியில் உருக்கிய நெய் போல ஊன் நீர் பெருகிக் கொண்டிருக்கும். மஹா பாபங்களைச் செய்தவர்களுக்கெல்லாம் அந்தத் துர்நாற்ற நதியே ஸ்நானத்திற்குரியதாக இருக்கும்.  

எவற்றாலும் எனக்கு இணையான ஒருவன் இருக்கிறானோ என்று செருக்குற்றவனும் தாய் தந்தையரையும் குருவையும் புரோகிதனையும் அவமதித்தவனும் தன்னை நேசித்தவனுக்கும் தனக்குப் பிழைப்பதற்குரிய ஜீவன் உபாயத் தொழிலைத் தந்தவனுக்கும், அந்தத் தொழிலைத் தேடிக் கொடுத்தவனுக்கும் ஸ்திரீகளுக்கும் குழந்தைகளுக்கும் கண், செவி, முதலிய உறுப்புக் குறையுள்ள அங்கஹீனர்களுக்கும் தீங்கு செய்தவனும், விவாக விஷயத்திலும் பிராமண விஷயத்திலும் தான விஷயத்திலும் விரோதம் புரிந்தவனும், பிராமணருக்கு ஏதேனும் ஒன்றைத் தருகிறேன் என்று வாக்களித்து விட்டு இன்று நாளை என்று சொல்லி அலைய வைத்தவனும், புரோகிதனின் மனைவியைக் கூடி அனுபவித்தவனும், ஸ்ரீமந் நாராயண  பாரத பாகவத புராணங்களைப் படிக்கும் இடத்திலும் சொற்பொழிவாற்றும் இடத்திலும், வீண் வார்த்தைகளைப்  பேசியவனும் திருமணஞ் செய்யும் சமயத்தில் கன்னியருக்கு குறை சொன்னவனும்,  தோஷம் கற்பித்தவனும், பசு முதலிய மிருகங்களுக்குச் சமமாகத் தண்ணீர் வார்க்காமல்  தனக்குரியவைகளுக்கு மிகுதியாயும், பிறனுக்குரியவற்றுக்குக் குறைவாகவும் கொடுத்தவனும், ஒரு பொருளை ஒருவனுக்கு கொடுத்துவிட்டு, பிறகு அதை அவனுக்குக் கொடுத்து விட்டோமே என்று துக்கிப்பவனும், பிராமணர்களுக்குரிய தர்மானுஷ்டானங்களை விட்டு, புலால் உணவை உண்ட பிராமணர்களும், பகவான் இல்லை என்று வீண் வாதம் செய்தவனும், எப்போதும் பிறரைக் கோபித்தவனும் பிறன் பழி கூறியவனும் அந்த வைதரணி நதியிலேயே மூழ்கி, மிருகங்களாலும், முதலைகளாலும், கிடங்களாலும் மிகவும் துன்பம் அடைவார்கள்.

"வைனதேயா!  தீவினை செய்யாமல் நல்வினை செய்த ஜீவன், இறுதியை அடைந்த பிறகு, சுவர்க்க வாசம் செய்து, நல்ல க்ஷேத்திரத்தில் உத்தம குலத்தில் சர்வசாஸ்திர சம்பன்னனாய் தர்ம சிந்தையுடையவனாய்ப்  பிறந்து நல்வாழ்வு வாழ்வான்.   தந்தை மரித்தபொழுது, ஆசௌசம் நீங்குவதற்குள்ளாக புத்திரனானவன், இந்தப் புராணத்தைக் கேட்பான் என்றால் அத்தந்தை நிரதிசய இன்ப வீடாகிய நமது நல்லுலகை அடைவான். தாய் மரித்தபோது இந்தப் புராணத்தைக் கேட்டால் அந்தத் தாய் புருஷ ஜன்மத்தை அடைந்து சுவர்க்கத்தை அடைவாள்.  பிதுரர்களும் நற்கதியை அடைவார்கள். சங்கராத்தியிலும் விஷுவென்னும் புண்ணிய தினத்திலும் கிரகண புண்ணிய காலத்திலும், சிரார்த்த தினத்திலும் இந்தப் புராணத்தைப் படிப்பவர்களும் கேட்பவர்களும் படிக்கச் செய்வோரும் தம் வாழ்வின் இறுதியில் நல்லுலகை அடைவார்கள்.   கோடி கன்னிகாதானம் செய்வதாலும், நூறு முறைகள் சோடச மஹாதானம் செய்வதாலும் கயாசிரார்த்தம் செய்வதாலும் வருகின்ற புண்ணியங்கள் அனைத்தும் இந்தப் புராணத்தைப் படிக்க வைத்து கேட்டாலும் படித்தாலும் உண்டாகும். ஜீவனுக்கு யமலோக பயத்தைப் போக்குவதும் மோட்ச மார்க்கத்தை தெரிவிப்பதுவும் ஆகிய இந்தப் புராணத்தை உலக நன்மையின் பொருட்டு உனக்கு நான் சொன்னேன்" என்று திருமால் திருவாய் மலர்ந்தருளினார்.

பிறகு பரமகாருண்ய, பரமகிருபா நிதியாகிய பகவானைக் கருடன் வலம்  வந்து, அவரது திருவடிகளைத் தொழுது வணங்கி, "வேதாவுக்கு வேதம் ஓதியருளிய திருநாவால், சர்வேசனாகிய தேவரீர் புராணஞ் சொல்லியருளப் பெற்றேனே! அடியேன் செய்த பாக்கியமே, பாக்கியம், இதைக் கேட்க நான் என்ன தவஞ் செய்தேனோ? என்று மகிழ்ந்தான்.

இவ்வாறு சூத புராணிகர், நைமிசாரணீய முனிவர்களுக்குச் சொல்லி விட்டு அவர்களை நோக்கி, " முனிவர்களே! புராணதச்  சிரவணம் செய்ய வேண்டும் என்று விரும்பிய உங்களுக்கு இந்தப் புராணத்தை நீங்கள் விரும்பியவாறே சொன்னேன்!"  என்று கூறிவிட்டு, ஹரி நாமங்களை, நாமணக்க வாய் மணக்க போற்றியிசைத்துக் கொண்டிருந்தார்.

அப்போது, இந்தப் புராணத்தைக் கேட்டு மகிழ்ந்த நைமிசாரணீய முனிவர்கள், ஆனந்தத்தில் மூழ்கி, மகிழ்ந்து, சூத புராணிகரை நோக்கி, "மாமுனிவரே! அடியோர்களிடத்தில்  கருணை கொண்டு, இந்தப் புராணத்தைச் சொன்னீர்கள். நாங்கள், தங்கள் வாயிலாக அநேகம் புராணங்களைக் கேட்டிருக்கிறோம்.  ஜீவனுக்கு உறுதி கற்பிக்கும் இந்த புராணம் மிகச் சிறந்தது. தங்களுக்கு எங்களால் இயன்ற கைம்மாறைப் பெரிதாகச் செய்யவேண்டும் என்ற எண்ணம் எங்களுக்குத் திண்ணமாக இருக்கிறது.  ஆனாலும் எங்கள் நிலைமை தங்களுக்குத் தெரியாததன்று என்று கூறி, கைநீர்,  அடிநீர், உண்ணீர் கொடுத்துப் போற்றினார்கள்.

அவர்களுள் ஒருவர், இத்தகைய புராணத்தை வெறுமனே கேட்டதாக இருக்கக் கூடாது என்று எண்ணியவராய், புராணிகருக்கு ஒரு கடத்தைக் கொடுத்தார்.  ஒருவர் மரவுரியைக் கொடுத்தார்.  ஒருவர் புலித்தோல் கொடுத்தார். ஒருவர் பூணூலைக் கொடுத்தார்.  ஒருவர் எதைக் கொடுப்பது என்று சிறிது ஆலோசித்து விட்டுக் கடைசியில் சூசைப்புல்லைக்  கொடுத்தார்.  ஒருவர், "சூதரைப் போலப் புராணஞ் சொல்பவர், மூவுலகிலும் இருக்கிறார்களோ" என்று வாயாரப் புகழ்ந்தார்.  ஒருவர், சூத புராணிகரைப் பலமுறை பணிந்து வணங்கினார்.  யாவரும் புராணிகரை வலம் வந்து, வணங்கித் தத்தமது ஆசிரமத்தையடைந்தார்கள்.

இத்துடன், இந்த தொடர் நிறைவு பெற்றது.

இது அகத்தியப்பெருமானின் உத்தரவால், அனைவரும் தெரிந்து கொள்வதற்காக இங்கு தொகுக்கப்பட்டது. அப்படியாயின், அகத்தியப்பெருமான் நம்மிடம் என்ன எதிர் பார்க்கிறார் என ஓரளவுக்கு அனைவராலும் புரிந்து கொள்ள முடியும். அவர் சேயாய் இருந்து, அருள் பெற்று ஆனந்தமாய் வாழ அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் அனைத்தும் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Monday 23 May 2022

சித்தன் அருள் - 1140 - குருநாதர் சுட்டிக்காட்டிய சில வழிமுறைகள் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

எத்தனையோ பிரச்சினைகளுக்கு சிறந்த வழியை காட்டி, அதை தீர்த்து வைப்பதில் நம் குருநாதருக்கு ஈடு இணை யாரும் இல்லை. நமக்கு, நம் வினைகளின் படி, இறைவன் பல கர்மாக்களை அனுபவித்தே ஆகவேண்டும் என விதிக்கும் பொழுது, பல நேரங்களில், குருநாதரிடம் வேண்டிக் கொண்ட பொழுது, மிக எளிய முறையில், பாரத்தை தாங்குகிற அளவுக்கு மாற்றிக் கொடுத்து, அதை அனுபவிக்க செய்து விடுவார். நமக்கு கர்மாவும் கழிந்து போகும், அதன் மூலம் பின் வரும் காலங்களில் அதே சூழ்நிலை வரும் பொழுது எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்ற சிறந்த ஒரு அறிவும் ஏற்படும்.

"பெயர் சொல்லா மருந்தை" வாங்கி பூசை அறையில் விளக்கில் உள்ள எண்ணெயில் முக்கி, பின் அதை தீபத்தில் காட்டி, அதிலிருந்து வெளிவரும் எண்ணையை, இரு புருவம், புருவ மத்தி, உச்சந்தலை, தலையின் பின் பக்கம் என குறைந்தது மூன்று இடங்களில் தினமும் தடவி வர, அது அனைத்து தோஷங்களுக்கும் எதிரான ஒரு நல்ல கவசமாக அமையும். அனைத்து விஷயங்களிலும் வெற்றியை தரும். ஒரு சிறிய துண்டு மருந்தை எடுத்து, காசு வைக்கும் பெட்டியில் வைத்திட, லட்சுமி கடாக்ஷத்தை எளிதாக பெற்றுவிடலாம் என்பது அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு.

வீட்டில், வடக்கு நோக்கிய வாசல் இருந்தால், அது "வைகுண்ட வாசலுக்கு" சமம். தினமும் ஸ்வர்க வாசலுக்கான மரியாதையை, குறைந்த பட்சம் தூப புகை போட்டு இறைவனிடம், "இறைவா, யார் இந்த வாசலை கடந்து வந்தாலும், சென்றாலும் அவர்கள் வாழ்வு நல்லபடியாக மாறட்டும், அவர்கள் சிரமங்கள் உடனேயே விலகட்டும்" என பிரார்த்திக்க, நம் வாழ்வும், பிறர் வாழ்வும் நல்லபடியாக மாறிவிடுவதை காணலாம், என்பது அகத்தியப்பெருமானின் அருள் வாக்கு. அப்படிப்பட்ட இடத்தில் அமர்ந்து த்யானம் செய்தாலோ, பிறருக்காக ஒரு நல்லதை பிரார்த்தனை செய்தாலோ, உடனடியாக நல்லது நடக்கும்.

சாபங்கள் பலவிதம். சில சாபங்களுக்கு நிவர்த்தியே கிடையாது. இருப்பினும், எந்த விதமான சாபத்திற்கும் ஒரு சித்தனால் பரிகாரம் கூற முடியும். இறைவனே, ஒவ்வொரு மனிதனுடைய சாப நிவர்த்திக்கும் ஒரு எளிய வழியை அளித்துள்ளார். ஆம்! ஒரு மனிதனின் மரணத்தின் பொழுது, செய்யப்படுகிற "வாய்க்கு அரிசி" நிகழ்ச்சி தான் அது. உடலை நீங்கிய ஆத்மா, உயிருடன் இருக்கும் மனிதன் எழுதி வாங்கி வந்த பல சாபங்களை/தோஷங்களை சுமந்து செல்ல விதிக்கப்படும். அந்த ஆத்மா இருந்த உடல் தீக்கிரையாகும் முன் வீட்டிலோ/மயானத்திலோ வைத்து நடத்தப்படும் "வாய்க்கரிசி" போடும் நிகழ்ச்சியில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு அவரவர் பாரத்தை இறக்கிக் கொள்ளலாம், என்பது சித்தன் வாக்கு. [இந்த ஜென்மத்தில் நேர்மையாக வாழ்ந்தால்/சித்தர் வழியில் நடந்தால், ஒருவனின் கர்மாவிலுள்ள "குரு சாபத்துக்கு" கூட இது மிக சிறந்த பரிகாரம்.]

அதேபோல், காசியிலிருந்து கங்கா தீர்த்தமும், ராமேஸ்வரத்திலிருந்து ஆழி (கிணறு) தீர்த்தமும் சேகரித்து வீட்டில் பூசை அறையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரிந்த யார் மரணமடைந்தாலும், அவர் உடலை குளிப்பாட்ட, அவர் வாயில் சிறிது இந்த தீர்த்தத்தை விடக் கொடுக்கலாம். இதை செய்வதினால், தீர்த்தத்தை கொடுப்பவர், அந்த ஆத்மாவுக்கு நல்வழியை காட்டி, தன் கர்மாவை சுத்தம் செய்து கொள்ளலாம்.

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்துவிடல்

என நல்வாக்கு கூறியும், நல்லது செய்த ஒருவனை, அந்த நல்லதை வாங்கிக் கொண்ட வேறொருவன் ஏமாற்றினால், அந்த நல்லவனுக்கு அகத்தியப்பெருமான் கூறும் அறிவுரை -

"வேறொருவன் என்றும் சந்தோஷமாக இருக்கவேண்டும் என, நல்லது செய்கிற பொழுது நீ நினைத்தாய்! சந்தோஷமாக அவனிருந்தான். இன்று உன்னை ஏமாற்றி, அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். ஆகவே, உன் மன எண்ணப்படி இரு நிலைகளிலும் சந்தோஷமே அவனில் பிரதிபலிக்கிறது. என்ன! இரண்டாவது நிலையில், அவன் தான் சேமித்த சிறிதளவு புண்ணியத்தை இவனுக்கு தாரைவார்த்துவிட்டு, இவனின் பாபத்தை அவன் சுமக்கிறான். எம் வழியில் வருகிறவர்கள், இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் அகப்படும் பொழுது, இப்படித்தான் சிந்திக்க வேண்டும். ஒரு சித்தன், ஒரு மனிதனின் கர்மா கழிவிற்காக, "கர்ம பரிபாலனத்தை" "கர்ம பரிவர்த்தனமாக" மாற்றுவதே இப்படித்தான்".

உன் எண்ணப்படி வாழ நினைப்பதை விட, இறைவன் தேடும் ஆத்மாவாக வாழ்ந்துவிடு. அவனே உன்னை தேடி வந்து அமரும் பொழுது, இவ்வுலகில் எதுவும், உனக்கு தேவை என்பதே இல்லை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............ தொடரும்


Sunday 22 May 2022

சித்தன் அருள் - 1139 - அன்புடன் அகத்தியர் - கோலாப்பூர் மஹாலக்ஷ்மி கோவில்!




29/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : கோலப்பூர் மகாலட்சுமி ஆலயம் 

உலகை ஆளும் நமச்சிவாயனை மனதில் எண்ணி வாக்குகளாக பரப்புகின்றேன் புஜண்டன்... 

இதையென்று மனிதன் எப்பொழுது?? எப்பொழுது??... உணர்ந்திடுவான்!?!!! உணர்ந்திடுவான்!?!! 

ஆன்மா எதன் கையில் இருக்கின்றது? எவற்றை என்றுகூட தெரியாமல் பிதற்றுகின்றான், பிதற்றுகின்றான் இதை என்று அறியாமலே!!!

மனிதன் வேறு !!ஆன்மா வேறு!! என்று தெரியாமல் ஆனால் ஆன்மாவோ உடம்பில் நுழைந்து ஆனாலும் எண்ணங்களுக்கு ஏற்றவாறே நடக்கின்றது.

ஆனாலும் உண்மையானவை தெளிந்து பின் தெளிந்து பின் பின் இதனையும் அறியாமல் சென்று கொண்டே இருந்தால் வீண் பலன்கள் மிஞ்சும். 

இதனைத்தான் அறிந்து சொல்கின்றேன்... இவையன்றி கூற... இதையென்றும் கூற வரும் காலங்களில் மனிதனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்.

இதனால் பின் இவ் ஆன்மா இறைவனிடத்தில் சம்பந்தமாகவே உள்ளது.

இதனால் எது நிரந்தரம் என்று தேடி கொண்டால்.. ஆனாலும் பின்  அவ் ஆன்மா பாவத்திற்கே இவையன்றி கூற தூண்டும் தூண்டும். 

பிறவிகளில் இன்னும் இன்னும் அதிகப்படுத்தும்.ஆனாலும் அவ் ஆன்மா எதையன்றி கூறுவது?? கூறுவது அவ் ஆன்மாவை இறைவன் பால் செலுத்த வேண்டும்.

செலுத்த வேண்டும் அதனால்  ஐம்புலன்களை அடக்க( மெய், வாய், கண், மூக்கு, காது,) வேண்டும்..இவ்  ஐம்புலன்களை அடக்கி விட்டால் உந்தனை நிச்சயம் யாராலும் வெல்ல முடியாது என்பேன்.

இதனை அறிவதற்கும் விளக்கங்கள் பல பல கோடி.கோடி என்பதற்கு விளங்க விளங்க பின் எதனை யாருடைய தொடர்புடையது... அதனால் நோக்கி இவ் ஆன்மா எதனை என்று கூற ஆன்மா க்கு எதை பிடிக்கும் என்று சொல்லி விடுகின்றேன்.

எதற்கிணங்கஇதையும் கூட இறைவன்பால் செலுத்த செலுத்த தரித்திரங்கள் நீங்கும். நீங்கும் என்பதைப்போல் மாற்றமாக உள்ளது சிந்தித்துக் கொள்ளுங்கள் இதனையும் தெரியாமல்.

சிந்தனைக்கு இதுவும் தூண்டவேண்டும் என்பது தான் எனது கருத்தாகவே தோன்றுகின்றது.

அதனால் இதை நிச்சயம் நீங்கள் எதை என்று கூற அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பதுதான் தீர்க்கமான தரிசனம். தரிசனம் என்பதைப்போல் ஆன்மாவும் இதை உரைக்க!! அதை உரைக்க!! ஆனாலும் பிடிக்கும் இதையன்றி கூற இறை பலத்தை.

இதனால் உன் ஐம்புலன்களை அடக்க வேண்டும் இதனையுமன்றி கூற... உடலை அடக்குவது அதனினும் பெரிது !!!!என்றால் மனதை அடக்குவது அதனினும் பெரிது!!!

பெரிது பெரிது எதுவும் இல்லாமல் பெரிதாகவே தெரிய கொண்டு தெரிய கொண்டு இருந்தால் அனைத்தும் சிறியதாகவே காணப்படும்...

காணப்படுவது ஏதடா?!! இதையென்று அறிவதற்கு பல வித்தியாசங்கள் உண்டு. உண்டு... இதனால்தான் சொல்கின்றேன்...

இவை என்று கூற இயற்கை சீற்றங்கள்!!! இதனை என்று உணர்வதற்குள் இவ் ஆன்மா தெளிவுபடுத்தி விடும். சிலருக்கு.

எதனால் என்பதைக்கூட முன்கூட்டியே அறிவதற்கு. அறிவதற்கு ஒன்றும் இல்லை ஒன்றுமில்லை இதன் பலன்கள் நிச்சயம் தாமதம். ஆனாலும் நிச்சயம் உயர்வுகள் மனிதர்களுக்கு உண்டு.

ஆனாலும் எதையன்றி  கூற பக்தி செலுத்த வேண்டும்.

யாங்கள் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். பிற உயிர் கொள்ளாமை.. என்பதை கூட.... 

எதனையும் அறிந்து அறிந்து நிச்சயம் மனிதன் தன்னை திருத்திக் கொள்ளவில்லை என்றால் நிச்சயம் அழிவுகள் தான் உண்டு என்பதை கூட பல வாக்குகளிலும் பல பல சித்தர்களும் சொல்லிவிட்டனர்.

இதனையுமென்று அறிந்து அதனை திருத்திக் கொள்ள திருத்திக் கொள்ள எதனை என்று கூட மனிதர்கள் திருந்தாத ஜென்மங்களே என்பதே எனது கணிப்பு!!!

ஆனாலும் எத்தனை? மாமனிதர்கள்!!!
எத்தனை? ஞானிகள்!!! எத்தனை? சீடர்கள்!!
எத்தனை?  குருமார்கள்!!! 

இதையன்றி கூற மனிதனை திருத்த பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் மனிதனோ  தான்  தன் பாதையில் தான் செல்வேன்... தன் பாதையில்தான் சென்று அழிவேன்!! என்பதைக் கூட ஆணித்தரமாகவே இருக்கின்றான். இதனால் என்ன பயன்??????

என்ன பயன்!?? அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் பிறவிகள் எடுத்து வருவது பின் மனிதனுக்கு இயல்பாக போய்விட்டது.

அதனால் சித்தர்கள் எதையன்றி கூற வரும் வரும்...எதையன்றி கூற பின்னாளில் வருபவர்களை நிச்சயம் யாங்கள் இனிமேலும் காத்தருள்வோம். நல் முறையாகவே!!! பிறவிப்பிணியை நீக்குவோம்.

எதையன்றி கூற பிணி என்பது வேறப்பா!!!!!! 

இதனையும் அறிவதற்கு ஒன்றப்பா..!!.ஒன்றப்பா!! இல்லையப்பா!!! இதனையென்றும் ஒன்றுமில்லை... மனிதனுக்கு நிலைகள். நிலைகள் தடுமாறும்போது உணர்கின்றான். உணர்வதற்குள் போய்விடுகின்றது உயிர் மூச்சும்.

இதையன்றி கூற உயிர் மூச்சையும் பிடித்து  ஆட கொண்டால் உண்டு..ஆயுட்காலம். அதனையும் எத்தனை முறை சுவாசிக்க!!! இதனையும் என்று அறிவதற்கு அறிவதற்கு இன்னும் கூறுவான் சித்தன்.


சித்தர்கள் எதையன்றி கூறுவதற்கு விளக்குவதற்கு ஒன்றும் இல்லாமல் ஒன்றும் இல்லாமலே எதையன்றி கூற....மனிதா!!  மனிதா!!! 

எதையன்றி கூற... எதனை!! சிந்தித்துக்கொண்டு இருக்கின்றாய்??

ஆனால் !!!அழிவதற்கே சிந்தித்து கொண்டிருக்கின்றாய்!!!.

மாயையே!! விரும்புகின்றாய்!! 

அதனால்தான் சொன்னேன் நீ ஆன்மாவை  எதையன்றி கூற இறைவனிடத்தில் பின் பணிவு வைக்கவேண்டும்.

அப் பணிவு பின் ஐம்புலன்களில் இருக்கின்றதப்பா!!! 

அவ் ஐம்புலன்களையும் அடக்கி விட்டால், அடக்கி விட்டால் ஆளலாம்.  எதையன்றி கூற...உந்தனையே ஆன்மாவையே ஆளலாம். 

ஆனால் இதையன்றி கூற எப்படி? அடக்குவது என்பதைக்கூட சிந்தித்துக் கொண்டிருக்கின்றான்.

அதனால் பொய்கள் நிறைந்த வாழ்க்கையப்பா!! பொய்கள் நிறைந்த பக்திகளப்பா!!! இதையன்றி கூற... விளக்கங்கள் அளிப்பேன் இன்னும். பல பல வழிகளிலும்.

இதனையுமென்று கூற எதனை நீ நிமித்தம் இங்கு எதனை என்று கூற எதனை நீ கொண்டு வந்தாயோ அதனைத்தான் அதன் மூலமாகத்தான் பரிபூரணமாக நடந்து கொண்டிருக்கின்றது.

அதையும் மீறி ஒன்றும் நடக்கப்போவதில்லை.

ஆனால் எதை என்று கூற பின் இவையன்றி கூற... அகத்தியனுக்கு!!! தகுதியானவைகள் அனைத்தும் உண்டு!!!

மாற்றுவான்!!!! 

இதையன்றி கூற ஆனாலும் தன் பக்தர்களுக்கோ  சில சில சோதனைகளையும் கொடுத்து ஆட்கொண்டு இனிமேலும் நிச்சயம் விதியையும் மாற்றுவான்!!என்பது மெய்!!!! 

இவையன்றி கூற பல பல பல பல யுகங்களாக தோன்றி தோன்றி மறைந்து கொண்டு இருக்கின்றேன் ஆனால்... மனிதனின் முட்டாள் செயலே மனிதனை அழித்து விடுகின்றது!!!

தீர்மானிப்பதற்காக உண்டு உண்டு......இல்லையப்பா இதனை நன்கு அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் நிலைமையை நன்கு அறிந்து கொண்டால் இன்னும் சிறப்புக்கள் உய்க்கும்.அறிவது உறுதி!!! 

உறுதி என்பதைப்போல் பல சித்தர்களும் சொல்லிவிட்டார்கள் பல ஞானியர்களும் சொல்லி விட்டார்கள்..தன் தன் நிலைமைகளை அறியவேண்டும் முதலில்.

தன் நிலைமையை அறியாவிட்டால் ஒன்றுமில்லை...

தான் தன்னிடத்தில் குறைகள் இருக்கின்றது என்பதை முதலில் சிந்தித்துக் கொள்ளுங்கள்.

அப்பொழுதுதான் உயர்வுகள் ஏற்படுமே தவிர பின் தான் எண்ணங்கள் தகுதிகள் ஆயினும், தகுதிகள் இல்லாமல் ஆயினும் நிச்சயம் உயர்வுகள் கிடைக்காது மனிதா!!! தெரிந்து கொள்!!!

மனிதனிடத்தில் புத்திகள் வரும் காலங்களில் தாழ்ந்து கொண்டுதான் போகும் என்பேன்.... இதனையும் அழிந்து தாழ்ந்த புத்திகளோடு சென்று கொண்டே இருந்தால் ஆனாலும் இவையன்றி கூற நிச்சயமாய் என்வழி எதைப் போன்று சித்தர்கள் வழியில் வருபவர்களுக்கு நிச்சயமாய் சில சோதனைகள் கொடுத்து நிச்சயம் ஆளாக்குவோம்..எவையென்று.

ஆனாலும் சரி முறையாய் அமைதியாகவே பின் புறப்படுவான் பின் நாமத்தால் இதையன்றி கூறியிணங்க கூறியிணங்குவதற்கு இன்னும் பல பரிசுத்தமான ஆன்மாக்கள் இன்னும் பிறக்க வைப்பான் ஈசன்..இதையுமென்று கூற. 

அதனால் மனிதனே ஒழுங்காக திருந்திக் கொள் என்பதுதான்... இதையன்றி கூற மனிதா எத்தனை எத்தனை கஷ்டங்கள் எதனை என்று கூற!!! எவையென்று கூற... 

இவ்வளவு கஷ்டங்கள் கொடுத்தாலும் ஏன் திருந்துவதில்லை???

ஏன் இப்படி வருகின்றது என்பதை ஒரு நாள்கூட சிந்தித்து சிந்தித்து இருக்கின்றாயா???

மனிதா!!இவையெல்லாம்  வீணான! போதனைகள்!!!

போதனைகள் இன்னும் கூட... இன்னும்கூட வீணான போதனைகள் கூட எடுத்துரைப்பார்கள் மனிதர்கள். அதனையெல்லாம் நம்பி விட்டால் ஆனாலும் கடைசியில் ஆன்மா சிறிது தயங்கும் ஏற்பதற்கு.

ஏற்றும் கொள்ளும். ஆனால் அவ் ஆன்மா திரும்பவும் அனைத்தும் இழந்துவிடும்.. எதையென்று ஆனாலும் அவ் ஆன்மா பற்றி விரிவாக வரும் காலங்களில் சித்தர்கள் உரைப்பார்கள்.

ஆன்மா எதை குறிக்கின்றது?? எவற்றிலிருந்து தோன்றுகின்றது?? எதை எதை என்று கூட தீபம் எதை இவற்றிலிருந்து கூட ஆன்மா இவற்றுக்கு வேறுபாடு உண்டு. இதனைத் தான் எங்கிருந்து செல்கின்றது பின்....

பெருமாளுக்கு நாமம்!!! இதில் கூட ஆன்மா அடங்கியுள்ளது.

ஈசனுக்கு இதையன்றி கூற அவந்தனக்கும் இட்ட திருநீறு!!!! இதிலும் அடங்கியுள்ளது ஆன்மா!!!!

இவையன்றி கூற இவைதனை புரிந்தாலே!!! மனிதா!!! நீ நிச்சயம் கர்மத்தை வென்று விடலாம்.

ஆனாலும் இதுவரை இதை புரிந்திருக்க ஆள் இல்லை!!!வருத்தம்!!! இதையன்றி கூற....

ஆனாலும் உண்டு உண்டு நிச்சயம் மெய்ஞானியர்களுக்கு, உண்மையான மனிதர்களுக்கு யாங்கள் இதை எடுத்துரைப்போம் இனிமேலும்.

தெரிந்துகொள்ளுங்கள்!!! தெளிவு கொள்ளுங்கள்!!!
தெளிவு கொண்டு விட்டாலே !!! மனிதா சிறப்பாக வாழ்ந்து கொள்ளலாம். நோய்நொடிகள் இல்லாமல் வாழ்ந்து விடலாம்.

இவ்வுலகத்தில் பரிசுத்தமாக நீந்திவிடலாம் (பிறவிப்பெருங்கடல்) கடலை!!! பிறவி ஆகவே....

எண்ணி!!!
எண்ணி !!!
பிறவி!!
பிறவி!!
எடுத்து!! 
எடுத்து!! 
வருந்தி !!
வருந்தி!!
வந்து !!
வந்து...!!
சென்று!! 
சென்று !!
மீண்டும் !!
மீண்டும்!!
கஷ்டங்கள் பட்டு பட்டு!!
இறந்து!! இறந்து பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு பிறப்பு....... வித்தியாசம் உண்டா???

இறப்பின் போது எங்கோ!! செல்கின்றாய்... பிறப்பின் போதும் எங்கே வருகின்றாய்!!?.... தெரியாமல் வாழ்ந்து வருகின்றாய். 

இவையன்றி கூற ஆனால் தெரியுமாடா!!! அனைத்தும் மனிதனால் !!!தெரிந்து கொண்டபின் ஏதுமில்லை பாவங்கள் சுமக்கின்றாய்!!! 

அதனால் தெரியாமல் இருப்பதே நல்லது!!!

இவையன்றி கூற அதனால் கண்ணிருந்தும் இவையன்றி கூற குருடன் ஆகவே இரு...பின் பெரியோர்கள் இட்ட வாக்கு..

இவையன்றி கூற... காதுகள் எவை! என்று கேட்க?? இறைவன் நாமத்தையே கேட்க வேண்டும். மற்றவை எல்லாம் இவையன்றி கூற பின் அனைத்தும் இறைவன் செயலே என்று கூட மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.எனினும் சித்தர்கள் வாக்கையும் பயன்படுத்திக்கொள்க!! எது வந்தாலும் இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று சொல்லிக்கொண்டே இருந்தால் நிச்சயம் இறைவனுக்கு அதுவும் கேட்டு விடும் .

நிச்சயம் இறைவன் இருக்கின்றான் இவையன்றி கூற...பின் நம்தனையே நம்பிக் கொண்டு இருக்கின்றானே!!! என்றுகூட மனம் இரங்குவான் இறைவன்.

அதை விட்டுவிட்டு எவையன்றி கூற இறைவன் எந்தனுக்கு இதைச் செய்யவில்லையே !!அதைச் செய்யவில்லையே!!! என்றெல்லாம் மனம் பிதற்றிக் கொண்டிருந்தால்... நிச்சயம் இவ்வாறு கடைசிகாலம் வரையிலும் கூட இவ்வாறுதான் பிழைப்பை நடத்த வேண்டும் சொல்லிவிட்டேன்.

இவ்வாலயத்தின் (கோலப்பூர் மகாலட்சுமி தேவி) சிறப்பு என்னவென்று கூறுவது???

இதனை இதனையுமன்றி பல பல அரசர்கள் இங்கு வந்து..எவையென்று கூற பல சேவைகளும் இதற்கும் வித்தியாசங்கள் கூட செய்து செய்து பல லட்சியங்களை அடைந்து பல பொருட்காசுகளைப் பெற்று...இவையன்றி கூற... இவ் தேவியை வணங்கி விட்டால்  இதையன்றி கூற இன்னும் சூட்சமங்கள்...இவையன்றி கூற.... யான் மனிதனுக்கு உரைத்திடமாட்டேன்!!!!... மனிதன் தெளிவு பெற்ற பின் அநியாயங்களில் இறங்கி விடுவான்.

அதனால் எதையன்றி கூற... இன்னும் சிறப்புக்கள் நல் மனிதர்களுக்கு எடுத்துரைப்பேன் என்பதுதான் எனது வாக்காகவே தோன்றுகின்றது.

தோன்றுகின்றது நிச்சயமாய் இனிவரும் நாடிகளில் நாடி நாடி வருவது என்பதை கூட எடுத்துரைப்பது இவையன்றி கூற

அதனால் மனதிற்கிணங்க யான் எதை என்று கூற எவை என்று கூறும் பொழுது கூட ஒன்றும் இல்லை.

இதனால் பொய் சொல்லி பிழைப்பு நடத்துகின்றவர்களுக்கு யான் ரகசியத்தை சொல்லி விட்டாலும் பின் பொய் தான் என்பேன். இதையன்றி கூற.பின் பயன்படுத்திக் கொள்வார்கள்.

இவ் ரகசியத்தை நிச்சயமாய் எப்படி? கூற வேண்டுமோ?! அப்படி கூறுவான்!!! அகத்தியன்.

இதையன்றி கூற தன் பக்தர்களுக்கே.... !!!!!

இவை மிகச் சிறந்த காலமாகவே இல்லை என்பது தான் இதை இதை அறிந்து கொண்டு அறிந்து கொண்டு வீணான மனிதர்களே எதையென்று கூற?!!  வீண் அதையே நம்பி கொண்டு இருக்கின்றீர்கள்.

எதனையென்று அருமை பெருமை இதற்கும் வித்தியாசம் உண்டா?? இல்லை.

இதையன்றி கூறும் அறிவுகளுக்கும் அறிவு படைத்த ஜீவியாக ஜொலித்துக் கொண்டிருக்கின்றாய் மனிதா !!!

ஆனால் இறைவனோ  இவன் எதையென்று கூற மனிதன் குறைவாகவே இருக்கின்றானே!! என்று கூட... 

ஆனாலும் இதையன்றி கூற மனிதனின் நல்லெண்ணங்களை பின் உயர்த்தும் அதனையும் என்று கூற இவை இவை என்று கூற பிறக்கும் பொழுதும் இதனை எதனை எதனையோ நினைத்து நினைத்து வருந்தி வருந்தி இல்லையப்பா பிறவிகள்.

ஆனால் நடுவில் தான் மனிதன் சிக்கி கொள்கின்றான்... மாயையில் ஒருவன் மாயையில் சிக்கிக் கொள்ளாத அளவிற்கு கூட அவந்தன் வார்த்தைகள் இதையன்றி கூற முப்பது வயதிற்குள் எதையன்றி கூற மாயையில் சிக்கி விடுகின்றான் அவ் முப்பது எதையென்று தொடும் அளவிற்கும் கூட...

அவந்தன் மாயையில் சிக்க வேண்டும் என்று என்றால் இறைவன் மாயையில் சிக்க வேண்டும்.!!!!

இவ்வாறு சிக்கிவிட்டால் அவன் எப்பொழுதும் அழியமாட்டான்.... உறுதியாக சொல்லி விட்டேன்.

ஆனால் யாங்கள் காப்போம்  அவந்தனை.. இதுதான் மாயையப்பா!!!!

இறைவன் மாயையில் விழுங்கள்... மற்ற மாயையில் விழுந்து விடாதீர்கள்.

எதையன்றி கூற இதனை பக்குவ படுத்துவதற்கு ஐம்புலன்களை அடக்குங்கள்.!! நிச்சயமாய் அடக்கிவிடலாம் அதை விட்டுவிட்டு ...எதையெதை என்று கூற வருத்தங்கள்!!!

வருத்தங்கள் எதற்கு வருகின்றன??? என்று தெரியுமா???...... எதையன்றி கூற நீங்கள்தான் ஏற்படுத்திக் கொண்டீர்கள். நினைத்து கொள்ளுங்கள். உந்தனுக்கு என்னென்ன எவை என்று கூற உன்னால் இறைவனை எவையன்றி கூற... இறைவனை மனதால் வைத்துக் கொண்டு வாழத் தெரியாதா???  என்ன!! ????

இதையன்றி கூற அவ்வாறு வாழ்ந்திட்டு பார்.... எவ்வாறு வாழ்கின்றாய்??? என்று... அதை விட்டுவிட்டு சுகங்களுக்காக பின் தேடிச் சென்றால் ஆனாலும் உண்மை சொல்கின்றேன். ஆன்மா  பாவக்குழியிலே பின் எதையென்று கூற அழைத்துச் சென்றே கொண்டிருக்கின்றது.. இதற்கு விதி விலக்கங்கள் இன்னும் உண்டு.

அதற்கும் சரியான பதிலை எடுத்துரைப்பான்... அகத்தியனே!!!! 

இவையன்றி கூற இவ்வுலகத்தை எதை எதை என்று கூற பின் நல்லோர்கள் வாழச் செய்வார்கள் எதையன்றி கூற....பின் நேசம் மிக்கவனும்.... எவையன்றி கூற பொய் கூறி கொண்டு இருக்கின்றான். சித்தர்களைப்பற்றி இதையன்றி  கூற...

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்..... சித்தர்களைப் பற்றி தெரிந்து கொண்டவர்கள்,தெரிந்து கொள்வோர் இவ்வுலகத்தில் யாரும் இல்லை..... அப்படி தெரிந்து கொண்டாலும் எவையன்றி கூற நிச்சயம் தெரிந்து கொள்ள முடியாது என்பேன்.

எவையன்றி கூற அப்படி எவையன்றி கூற முழுவதுமாக சித்தனை தெரிந்து கொண்டபின் உள்நுழைந்தால் அவன் கடைசியில் மாய்ப்பான் ஒன்றும் தெரியாமலே... 

யான்!!!! பலமுறை பல பல கலியுகங்கள் எதையன்றி கூற.....இக்கலியுகத்திலும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன்.... பல யுகங்களாகவும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

இறைவனைப் பற்றியும் எதையன்றி கூற சித்தனைப் பற்றியும் தேடுவதற்கு எவ்வாறு என்பதையும் கூட தேடித் தேடிச் சென்று கொண்டே இருக்கின்றார்கள்.

ஆனால் ஒன்றும் புரியாத புதிராகவே உள்ளது.

சொல்லுகின்றேன் வாக்குகளாக....

மனிதன் நல் மனிதனாக தெரிந்து கொள்...!!!

ஆனாலும் காலங்கள் சரியில்லையே.... அழிவதற்காகவே செல்கின்றதே!!! 

அவ் அழிவை நீ தான் தக்க வைக்க... எதையன்றி கூற அதனை நீக்குவதற்கு தகுதிகள் உன்னிடத்திலே உள்ளது....

காலமும் கடந்து விடலாம் சொல்லிய வார்த்தைகள்....

சித்தனை பிடித்துக் கொண்டால் என்பதை கூட.. இன்னும் பல சித்தர்கள் சொல்லிக் கொண்டே வருவார்கள்.எவை என்பதை கூட.... 

அப்பனே!!!  எதையன்றி கூற ஒன்றைச் சொல்கின்றேன் ...இவையன்றி கூற... 

அகத்தியன் கருணை மிகுந்தவன்...!!! 

இவையன்றி கூற அதனால் அப்பனே!!  அப்பனே!!! என்றெல்லாம் உரைத்து. கருணையோடு கூறுகின்றான்.

ஆனால் அதனை ஏற்கும் மனிதர் இல்லையே!!?? சக்திகள் இல்லையே!!!??

எவையன்றி கூற அகத்தியன் இவ்வளவு பாசம் வைத்திருக்கின்றான் மனிதர்களின் மீது.. மனிதர்களுக்கிடையே!!!

ஆனாலும் மனிதனோ!?  பின் அகத்தியன் மீது பற்றற்று பின் ஏமாற்றி  யான் அகத்தியன் பக்தன்...இவையன்றி கூற அகத்தியன் பக்தை!!!....இவையன்றி கூற என்று பொய் பக்தியாக பொய் அன்பாகவே காட்டுகின்றார்கள்.

எவ்வாறு என்பதை கூட நிலைமையை கூறுவது??

ஆனாலும் இவையன்றி கூற பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள் சித்தர்கள்.
எப்பொழுது எதை என்று கூட...

அதனால் வரும் காலங்களில் நிச்சயமாய் திருத்திக்கொள்ளுங்கள் !!! திருந்திக் கொள்ளுங்கள்!!! அதனால் எவையன்றி கூற நல்வழிப்படுத்தி நல்வாழ்க்கைக்காகவே யாங்கள் வித்திடுவோம்.

இவையன்றி கூற அதனால் எண்ணம் எதையன்றி கூற சீர்படுத்துக!!!!  முதலில். 

அவ்வெண்ணத்தை சரியான முறையில் சீர்படுத்தினால் இன்னும் வாக்குகளாக யான் செப்பிவிடுகின்றேன்.

எதையன்றி கூற நீங்கள் பிழைத்துக் கொள்ளலாம். இவையன்றி கூற. 

அதனால் மனிதனே!! மனிதன் எவையென்று கூற மனிதன் எல்லை மீறிய அளவிற்கு சென்று கொண்டே இருந்தால் பின் உலகம் தாழ்வடைந்து  அழிவை நோக்கி பின் செல்லும் சொல்லி விட்டேன் அதனால் நல்லெண்ணங்களை விதையுங்கள் மனதில்... பின் நல் விதமாகவே
உரைப்பார்கள் சித்தர்கள்.. நலமாகவே.

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஸ்ரீ  கர்வீர்  அம்பாபாய் மகாலக்ஷ்மி ஆலயம்.
மகாத்வர் சாலை. 
கோலப்பூர் 416012
மகாராஷ்டிரா. 
போன். 0231 2541779

ஆலயம் தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். 

கோலப்பூர் ஸ்ரீ மஹாலக்ஷ்மி

108 சக்தி பீடங்களில் ஒன்றாக கோலாப்பூர் மகாலட்சுமி கோவில் விளங்குகிறது. மஹாலட்சுமியின் வாசத்தால் இந்த நகரமே சுபிட்சபூமியாக திகழ்கிறது.

தேவி, கோலாஹாசுரன் என்ற அரக்கனைச் சிங்கவாகனத்தில் எழுந்தருளி கதையால் அழித்த தலம் இது. ஆதிசேஷன் குடைபிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருக்கிறாள்.

சகல செல்வங்களையும் தரும் இக்கோவிலுக்கு சென்று வந்தால் வாழ்வில் சுபிட்சம் ஏற்படும்  

கோலாப்பூர் அருள்மிகு மகாலட்சுமி திருக்கோயில் சிறப்புக்கள்” 

கோலாப்பூர் மகாலட்சுமி கோயில் வரலாறு

சுமார் 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோயிலாக இருக்கிறது கோலாப்பூர் மகாலட்சுமி கோயில். இக்கோயிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தேவி இருக்கிறார். பாரதத்தில் இருக்கும் தேவி வழிபாடு சக்தி பீடங்களில் ஒன்றாக இக்கோயில் திகழ்கிறது. மராட்டிய கட்டிடக்கலையின் அடிப்படையில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது.

தல புராணங்களின் படி கோலாசுரன் எனும் அரக்கனை அம்பாள் சிம்ம வாகனத்தில் வந்து வதம் புரிந்த இடமாக இந்த கோலாப்பூர் தலம் இருக்கிறது. மேலும் பிரளய காலத்தில் உலகம் அனைத்தும் நீரில் மூழ்கி விட இந்த கோலாப்பூர் பகுதியை மட்டும் தனது வீரத்தால், தன் கரத்தை கொண்டு தூக்கி பிடித்து லட்சுமி தேவி காத்ததாக தல வரலாறு கூறுகின்றது 

இந்த கோலாப்பூர் மகாலட்சுமி கோயிலை சுற்றி 50 சிறு கோயில்களும், ஊர் முழுவதும் சுமார் 3000 சிறு கோயில்களும் கட்டப்பட்டுள்ளது அதிசயம் ஆகும். மேலும் இக்கோயிலில் ஜனவரி 31 மற்றும் நவம்பர் 9 ஆம் தேதிகளில் சூரியனின் ஒளி கோயிலின் கர்ப்ப கிரக பால்கனி வழியாக லட்சுமி தாயாரின் பாதங்களில் படுகிறது. பிப்ரவரி 1 மற்றும் நவம்பர் 10 தேதிகளில் சூரியனின் கதிர்கள் தாயாரின் மார்பின் மீது படுகின்றன. பிப்ரவரி 2 மற்றும் நவம்பர் 11 தேதிகளில் தாயாரின் முழு உருவத்தின் மீதும் சூரியனின் ஒளி கதிர்கள் விழுகின்றன. லட்சுமி விக்ரகத்தின் மீது சூரியனின் ஒளி படும் போது தாயாரை வணங்குவது மிகுந்த நன்மை தரும் என கூறுகிறார்கள். மகாதுவாரம் எனப்படும் மேற்கு வாயிலில் அழகிய தீபஸ்தம்பங்ககளை காண முடியும்.

காளி, சரஸ்வதி, நவகிரகங்கள், பாண்டுரங்கன், காசி விஸ்வநாதன், சீதை, லட்சுமணன், மாருதியுடன் கூடிய ஸ்ரீராமன் ஆகியோரும் தரிசனம் தருகின்றனர்.  
      
தோஷங்கள் எதுவாக இருந்தாலும் இங்கு பிரார்த்தனை செய்தால் தோஷங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
    
இங்குள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.  
      
மகாத்வாரம் என்ற மேற்கு வாசலில் அழகிய தீபஸ்தம்பங்களைக் காணலாம். கருட மண்டபமும் கணேசர் சன்னதியும் கருவறைக்கு எதிரில் உள்ளன. அன்னை ஒரு சதுரபீடத்தில் நின்றபடி அருள்பாலிக்கிறாள். அன்னையின் சிற்பம் 1300 ஆண்டுகள் பழமையானது. மிகவும் அரிதான கரும் ரத்தினக்கல்லால் ஆனது. ஆதிசேஷன் குடைபிடிக்க அன்னை கையில் அமுதசுரபி ஏந்தி இருக்கிறாள்.  
   
தல வரலாறு:
   
பிரளய காலத்தில் கடல் பொங்கி எல்லா இடங்களையும் கொண்டுவிட, இந்த ஒரு பகுதி மட்டும் அன்னை மகாலக்ஷ்மியின் கரங்களின் வீரத்தால் உயர்த்தி நிறுத்தப்பட்டது. கரவீர்= கர- கை,வீர்-வீரம். காசியை விட்டு வெளியேறிய அகத்தியர் கயிலைநாதனிடம் வேண்ட, அவருக்காக ஈசன் கட்டிய, காசிக்குச் சமமான இத்தலம் குளபுரம் என்றும் அழைக்கப்பட்டது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!