​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 26 October 2022

சித்தன் அருள் - 1207 - அன்புடன் அகத்தியர் - அருணாச்சலம் அகத்தியர்!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே

இந்த உலகத்தில் அனைத்திற்கும் காரணம் இறைவன் !!!அவனின்றி அணுவும் அசைவதில்லை!!!

இறைவனுடைய படைப்பில் அண்ட சராசரங்களும் பிரம்மாண்டங்களும் கோடானகோடி நட்சத்திரங்களும் கோள்களும் அந்த கோள்களில் வாழும் பல்வேறு விதமான கோடி கோடி உயிரினங்களும் இறைவனின் படைப்பில் அடக்கம்...

ஈரெழு 14 உலகங்களையும் படைத்து காத்து அழித்து அருள் புரியும் இறைவன் தன்மீது உண்மையான பக்தியையும் காட்டி தான் வகுத்த விதிகளையும் முறையாக பின்பற்றி ஒருவன் நடந்து வந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பதை இந்த ஒரு சம்பவம் எடுத்துக்காட்டாக எடுத்துக் கொள்ளலாம்!!!

இறையருளும் குரு அருளும் முறையாகப் பின்பற்றி நடந்த ஒரு குடும்பத்திற்கு ஒளிவிளக்கு ஏற்றி அண்ணாமலையார் அகத்தியரும் நடத்திய திருவிளையாடல்களை பார்ப்போம்!!!!

இந்த சம்பவம் ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு நடந்தது!!!!!

அடிமுடி காண முடியாத அண்ணாமலையில் ஒரு ஏழைக் குடும்பம் வசித்து வருகின்றது!!! கணவன் மனைவி இரு மகன்கள் என அளவான குடும்பம் அன்பான குடும்பம்!!!

சொந்த இருப்பிடம் இல்லை!!! ஒரு சரியான வேலைவாய்ப்பு இல்லை ஆனால் அண்ணாமலையார் மீதும் அகத்தியர் மீதும் அளவு கடந்த பக்தி!!!! கணவரோ சமையல் பணி செய்பவர் அவருக்கென்று நிரந்தர வேலை ஒன்றும் இல்லை!!

அண்ணாமலையின் மீது முலைப்பால் தீர்த்தம் குகை நமசிவாயர் ஜீவசமாதி கோயில் அருகே ஒரு குடிசை வீட்டில் தான் அவர்கள் வசித்து வந்தனர்!! இப்பொழுதும் அங்குதான் வசித்து வருகின்றார்கள்!!

அன்றாடம் வாழ்க்கை நடத்துவதற்கு மிகவும் சிரமமான சூழ்நிலை இரு மகன்கள் பள்ளி படிப்பு. தினசரி தேவைகள் என மிக கஷ்டமான சூழ்நிலை கஷ்டம் என்பதை எழுத்தில் எழுதி விடலாம் ஆனால் அதை அனுபவித்தால் தான் தெரிய வரும்!!! ஒரு காலகட்டத்தில் திருவண்ணாமலையை விட்டு எங்கேயாவது பிழைப்பிற்கு சென்று விடலாமா என்று யோசித்தாலும் அண்ணாமலையான் அந்த அண்ணாமலையை விட்டு அவர்களை அகல விடவில்லை!!!

அந்தப் பெண்மணி ஈசனை தன் தந்தையாகவே எண்ணி வாழ்ந்து வருபவர் !!!

அப்பனே அண்ணாமலையானே !!! நீ எத்தனை கஷ்டங்கள் தந்தாலும் உன்னையே  நான் பிடித்துக்கொண்டு வாழுவேன் !!எத்தனை சோதனைகள் தந்தாலும் சரி நீ தான் எனக்குத் தந்தை என்று அத்தனை கஷ்டங்களையும் தாங்கிக்கொண்டு அண்ணாமலையானே!!! அண்ணாமலையானே!!! என்று வணங்கி வருபவர்.

அனுதினமும் அண்ணாமலையார் முலைப்பால் தீர்த்தம் குகை நமசிவாயர் ஜீவசமாதி என தரிசனம் செய்து வரும் பொழுது ஒரு நாள் குகை நமசிவாய ஜீவ சமாதியில் அகத்தியரின் சிலை ஒன்று உள்ளது!!! அகத்தியரை பார்த்து அந்தப் பெண்மணி வணங்கிய பொழுது ஒரு பரவசம் ஏற்பட்டது!!! அன்று முதல் அகத்தியரையும் அண்ணாமலையாரையும் தன் தாய் தந்தையர் என கருதியே வணங்கி வந்தார் இடைவிடாத கஷ்ட காலம் ஏற்பட்ட போதும் அதுவும் கொரோனா காலகட்டத்தில் அவர்கள் பட்ட சிரமம் சொல்ல முடியாத ஒன்று!! சொல்லப்போனால் அவர்கள் வாழும் குடிசை வீடு தென்னங்கீற்று கூறைகளால் ஆனது.. மலையில் வசிக்கும் அனுமன் ரூபங்கள் ஜீவராசிகள் அடிக்கடி வந்து மேலேறி குதித்து குதித்து விளையாண்டு கூரைகளில் சேதத்தை ஏற்படுத்தி விடும்!! மழைக்காலங்களில் நீர் உள்ளே புகுந்து விடும் சரியாக மின்சார வசதியோ குடிநீர் வசதியோ கிடையாது!!! இத்தனை கஷ்டத்திலும் அண்ணாமலையாரையும் அகத்தியரையும் அவர்கள் மறந்துவிடவில்லை கெட்டியாக பிடித்துக் கொண்டார்கள்!!!!

அண்ணாமலையானே !!!அகத்தியரப்பா!!! இந்த உலகத்தில் எத்தனையோ கஷ்டங்களை பார்த்து விட்டேன் உங்களையே நம்பிக் கொண்டிருக்கின்றேன் எனக்கு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி தாருங்கள் என்று நான் கேட்கவில்லை!! இந்த கஷ்டமான கடினமான சூழ்நிலையை எதிர்த்துப் போராட எனக்கு ஒரு வலிமையை தாருங்கள் என்று தான் வணங்கிக் கொண்டு வந்தார் அந்த பெண்மணி!!!

அண்ணாமலையாரும் அகத்தியரும் சதுரங்கத்தில் காய்களை நகர்த்தத் தொடங்கினர் !!!

ஆம் அண்ணாமலையார் திருக்கோயிலில் தற்காலிக ஒப்பந்த பணியாளர் பணிக்கு ஒரு வாய்ப்பு இந்த பெண்மணியை தேடி வந்தது!!! இந்தப் பெண்மணியும் அப்பனே அண்ணாமலையானே உங்களையே வணங்கி வந்தேன் இன்று நீங்கள் இருக்கும் இடத்தில் எனக்கு பணிபுரிய ஒரு வாய்ப்பை எனக்கு நல்கி விட்டீர்கள் நன்றி என கண்ணீர் மல்கி கைகூப்பி தொழுது அந்த பணியை ஏற்றுக்கொண்டு தன்னுடைய பணிகளை செய்யத் தொடங்கினார்!!

அவருடைய கணவருக்கும் சரிவர வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் வீட்டில் தான் இருந்தார் கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து கொண்டு இருந்தார் நல்ல சமையல் கலை நிபுணர்!! அவருக்கும் அண்ணாமலையாரும் அகத்தியரும் மற்றொரு விளையாட்டை நடத்தினர். 

அன்னதான சேவையை செய்ய விருப்பப்படும் அடியவர்கள் திருவண்ணாமலையில் வசித்து வரும் சாதுக்களுக்கு பக்தர்கள் அன்னதான பணியை இவரிடம் வழங்கத் தொடங்கினார்கள்!!! 

குறிப்பாக வெளியூரில், வெளி மாநிலத்தில் வெளிநாடுகளில் வசிக்கும் அடியவர்கள் திருவண்ணாமலையில் இத்தனை சாதுக்களுக்கு இந்த தேதியில் அன்னதானம் செய்ய வேண்டும் இந்த வகையான அன்னத்தை பரிமாற வேண்டும்!!! கூடவே குடிநீர் வசதி செய்து தரப்பட வேண்டும் என்று இவரிடம் சொல்லிவிட்டால் போதும் அடியவர்கள் விருப்பப்படி தயிர் சாதம் தக்காளி சாதம் சாம்பார் சாதம் கூடவே ஒரு குடிநீர் பாட்டில் வைத்து எல்லா சாதுக்களுக்கும் கொண்டு கொடுத்து சேவையை செய்யத் தொடங்கினார் இப்பொழுது வரை செய்து கொண்டே இருக்கின்றார்!!!!

தம்பதியினர் இருவரும் மிக அன்பானவர்கள் அண்ணாமலையார் கோயிலுக்கு யார் வந்தாலும் சரி அவர்களை அன்போடு அழைத்துச் சென்று ஆலயத்தில் தேவையான உதவிகள் செய்வது கிரிவலம் செய்ய உதவுவது அன்னதானம் செய்ய உதவுவது என முழு நேரமும் இறைப்பணியில் தான் இருந்து கொண்டே வருகிறார்கள் தற்போது வரை!!!!

அண்ணாமலையார் கோயிலுக்கு எத்தனையோ பேர் வந்தாலும் நம் குருநாதர் அகத்தியர் தன்னுடைய வாக்கில் உரை முதல் தரமான புண்ணியம் என்னவென்றால் மற்றவர்களுக்கு உதவுவது மற்றவர்களுக்கு வழிகாட்டி தருவது இதை இருவருமே திறன்பட செய்து வருகிறார்கள்!!!!

இப்படியே ஒரு வருடம் கடக்கின்றது!!!

தற்காலிக ஒப்பந்த பணியாளர் என்று இருந்தாலும் உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கும் தற்காலிக அரசாங்க ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியம் என்பது மாத சம்பளக்காரர்களுக்கு கிடைப்பது போல கிடைப்பதில்லை!!! சிறிது தாமதமாகி தான் கிடைக்கும்!!!! ஊதியம் தாமதமாகும் பொழுதெல்லாம் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகும் இந்த குடும்பம்!!!!

ஆனாலும் முகத்தில் புன் சிரிப்போடு உண்மையான அன்போடு பக்தர்கள் யாராவது வந்தால் அண்ணா அக்கா அம்மா அப்பா என உறவு முறை கொண்டாடி தன்னுடைய கஷ்டத்தை எல்லாம் மனதில் வைத்துக்கொண்டு வரும் பக்தர்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து ஏன் கிரிவலம் முன்பின் செய்யாதவர்கள் யாராவது வந்தாலும் கூட அவர்களுக்காக தன்னுடைய கணவரை அனுப்பி வைப்பார் இல்லை என்றால் தனது தாயை அனுப்பி வைப்பார் கிரிவலம் சென்று வருவதற்கு உதவியாக!!!!

அந்தளவுக்கு நல் மனம் படைத்த பெண்மணி இவர் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் முகத்தில் சிறிதளவும் காட்டிக் கொள்ள மாட்டார் அத்தனை கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு அண்ணாமலையான் எனக்கு எவ்வளவு கஷ்டங்கள் தந்தாலும் எத்தனை துன்பங்கள் வந்தாலும் எனக்கு அண்ணாமலையாலும் அகத்தியனும் தான் துணை!!!

தன் பிள்ளைகள் கஷ்டப்படுவதை எந்த தகப்பனாவது பார்த்து கொண்டு சும்மா இருப்பானா!!! நான் படும் கஷ்டம் என்னுடைய பூர்வ வினையாக இருக்கலாம் ஆனால் என்னை அவர் மடியிலேயே அமர்த்தி அவருடைய இடத்திலேயே பணிபுரிய வாய்ப்பு கொடுத்து என்னை வழி நடத்துகின்றார் இனியும் எத்தனை சோதனைகள் அவர்கள் கொடுத்தாலும் நான் போராட தயார் என்று சிரித்துக் கொண்டே சொல்லுவார்!!!!

குருநாதர அகத்தியர் தன்னுடைய அடுத்த கட்ட ஆட்டத்தை ஆரம்பித்தார்!!!!

அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் அகத்தியர் பக்தர்கள் மூலம் அந்தப் பெண்மணிக்கு அகத்தியர் மைந்தன் சுவடி வாசிக்கும் திரு ஜானகிராமன் ஐயாவை பற்றி தெரிய வந்தது!!! அந்த அகத்தியர் அடியவரும் ஜானகிராமன் ஐயாவிடம் இந்த பெண்மணியை அறிமுகம் செய்து வைத்தார்!!!

அந்த தம்பதியினர் இருவருக்கும் நம் குருநாதர் அகத்திய பெருமானின் ஜீவநாடி சுவடி வாக்கு கேட்க விருப்பம் !!

ஏனென்றால் பல்வேறு விதமான கஷ்டங்கள் இதிலிருந்து நாங்கள் எப்படி மீள்வது என்பதை குருநாதர் அகத்தியரிடம் வாக்கு கேட்க விருப்பப்பட்டனர்!!!

திரு ஜானகிராமன் ஐயாவிடம் நல்ல முறையில் பழகி இருந்ததால் திருவண்ணாமலையிலிருந்து திரு ஜானகிராமன் ஐயா அவர்களின் இல்லம் தேடி ஒரு நாள் இருசக்கர வாகனத்திலேயே வந்து விட்டார்கள்!!!

அன்றைய நாள் திரு ஜானகிராமன் ஐயா சுவடியை பூசையில் வைத்து விட !!!! அன்று ஜீவ நாடி வாக்கு படிக்க முடியாமல் போனது!!!

அவர்களும் சிறிது மனக்கலக்கம் அடைந்து விட்டார்கள் குருவே கடும் கஷ்டத்திலும் போராட்டமான வாழ்க்கை சூழ்நிலையிலும் உங்களை கண்டு உங்கள் ஜீவநாடி உபதேசம் கேட்க நாங்கள் வந்தோம் ஆனால் அதுவும் இன்று எங்களுக்கு கிடைக்கவில்லை!!!!

இருந்தாலும் நாங்கள் கொண்ட நம்பிக்கையை விடவில்லை!! 

இதெல்லாம் உங்கள் விளையாட்டு அப்பன் அண்ணாமலையான் விளையாட்டு சரி ,சரி, நம்பியோரை கைவிடாத கரங்கள் உங்களுடையது இன்று இல்லையெனில் என்றாவது நீங்கள் எனக்கு தருவீர்கள் என்று கூறி வணங்கி விட்டு அவர்களும் திருவண்ணாமலை சிறிது மன கஷ்டத்தோடு திரும்பினர்!!!!

அடுத்த வாரம் நடந்தது தான் அதிசயம் !!!

நம் குருநாதர் அகத்திப் பெருமான் அடுத்த வாரத்தில் சுவடி வாசிக்கும் மைந்தனை.....!!!

அன்பு மகனே!!!!.... மகனே ராமா!!!! நீ உடனடியாக ""அண்ணாமலைக்கு செல்க!!! அவ் புனித மலையிலே மூன்று நாள் தங்கி வருக!!!!

என்று கட்டளையிட்டார்!!!! ஒரு சூட்சுமமாகவே!!!!

திரு ஜானகிராமன் ஐயாவும் திருவண்ணாமலை கிளம்பி வந்தவுடன் உடனடியாக இந்த தம்பதியினரை தொடர்பு கொண்டார் அவர்களும் அன்போடு வாருங்கள் ஐயா நாங்களும் மலையின் மீது தான் குடி இருக்கின்றோம் நீங்கள் வந்து எங்கள் அருகிலேயே தங்கிக் கொள்ளலாம் என்று அன்போடு அழைத்தனர்!!!!

இங்குதான் அண்ணாமலையாரின் அகத்தியரின் லீலைகள்!!!! இவர்கள் அனைவருக்குமே புரிந்தது!!!!

திரு ஜானகிராமன் ஐயாவும் மலை மீது அந்த மூன்று நாட்களும் தங்கி குகை நமசிவாய ஜீவ சமாதி முலைப்பால் தீர்த்தத்தில் நீராடுவது!!! ரமணர் தவம் செய்த குகையில் தியானம் செய்வது என அந்த மூன்று நாட்களும் அந்த அன்பான குடும்பத்தின் உதவியுடன் அவர்கள் அருகிலேயே அனைத்தையும் செய்ய வைத்தார் குருநாதர் அகத்தியர் பெருமான்!!!

வீடு தேடி பயணம் செய்து வந்த பொழுது குருநாதர் வாக்குகள் தராமல் இவர்கள் காட்டிய பக்திக்கும் சேவைக்கும் இவர்கள் இருக்கும் இடத்தை தேடி குருநாதர் அகத்தியரும் ஓலைச்சுவடியும் வந்தது யாருமே எதிர்பார்க்காத ஒன்று!!!

ஆம் அவர்கள் வசித்து வந்த ஓலை குடிசையிலே ஜீவனாடி பெட்டகம் வைக்கப்பட்டு அவர்களால் வணங்கப்பட்டது!!!!

அது சாதாரண ஓலை குடிசை இல்லை ஈசன் விருப்பத்துடன் வந்து உறங்கிச் செல்லும் இடம் அது!!!!

அந்த மூன்று நாட்களும் ஓலைச்சுவடிக்கு பூசை செய்யும் பாக்கியமும் திரு ஜானகிராமன் ஐயாவிற்கு உணவு அளிக்கும் பாக்கியமும் அந்த குடும்பத்திற்கு குருநாதர் அகத்தியர் நல்கினார்!!!!

அவர்கள் குடும்பத்திற்கு தந்த குருநாதர் அகத்திய பெருமான் வாக்கினை இப்பொழுது பார்ப்போம்!!!!

ஆதி சிவனின் பொற் பாதத்தை வணங்கி உரைக்கின்றேன் அகத்தியன்!!!!

அம்மையே !!! நல் அருள்கள் ஈசன் அருளால் அப்பனே நல்ல அருள்களாகவே இருந்து இருந்து பின் நல் முறையாய் அப்பனே ஈசனும் ஆசீர்வதித்து ஆசீர்வதித்து சென்று கொண்டு தான் இருக்கின்றான் உங்களை இதனால் அப்பனே குறைகள் இல்லை!!!!

குறைகள் இல்லை அப்பனே இதை எதற்கும் எவ்வாறு வாழ்வது என்பதை கூட அப்பனே முன் ஜென்மம் அதை எடுத்துரைக்கின்றேன்!!!

அப்பனே நல்முறையாக நல் முறையாக முறையாக அப்பனே இங்கே நல்முறையாக பிறந்து வளர்ந்து பின் ஈசனுக்கு அடிமையாகி நல் முறையாய் அவந்தனக்கு நல் முறையாய் பூசைகள் பல பலவற்றையும் செய்து கொண்டிருந்தீர்கள் நீங்கள்

நல்முறையாக அதனால் ஈசனின் மனமிரங்கி பின் எவ்வாறு என்பதையும் உங்களை உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் மிக செல்வந்தராக உங்களை உயர்த்தி விட்டான் உயர்த்தி விட்டான்!!!

பின் நல்முறையாக பல பல உதவிகளும் செய்து வந்தீர்கள் நீங்கள்.... ஆனாலும் மனமாற்றத்தின் வாயிலாக பின் எதை என்று கூட தெரியாமலே பின் செல்வம் வந்துவிட்டதே என்று இறைவனை மறந்து விட்டீர்கள் நீங்கள்!!! சிறிது காலம்!!

ஆனால் அலைந்து திரிந்து சிறிது கஷ்ட காலம் வந்துவிட்டது! கஷ்ட காலம் வந்துவிட்டது ஆனால் இறைவனும் நல்முறையாக உங்களுக்கு உதவிகள் செய்ய முன் வரவில்லை முன் வரவே இல்லை என்பேன்!!

நீங்கள் சில சில தீய பழக்கங்களுக்கு அடிமையாகி நல்முறையாக இறைவனை மறந்து விட்டீர்கள்!!

ஆனாலும் பின் பின் எவை என்று கூறும் அளவிற்கு பல சிவ ஸ்தலங்களை அடைந்தீர்கள் நீங்கள் பின் நல்முறையாக பல ஆலயங்களுக்கு சென்று சென்று ஈசா!! ஈசா !! என்றெல்லாம் அழைத்து நீதான் துணை என்றெல்லாம் நல் முறையாக அவந்தனை பாடி பாடி துதித்து பின் நல் முறையாக பல ஆலயங்களை சுற்றி வந்தீர்கள் ஆனாலும் எங்கும் கிடைக்கவில்லை

ஆனாலும் பின்னர் வாழ்ந்தது போதும் என்று உணர்ந்து இம்மலையின் மீது ஏறி நல்முறையாக எதனை என்றும் கூறி விடாமல் ஈசனே எங்களுக்கு நல்முறையாக நீங்கள் காட்சி தரவில்லை அதனால் இம்மலையிலிருந்தே யாங்கள் குதித்து உயிரை மாய்த்துக் கொள்ளப் போகிறோம் என்று அவனிடத்தில் முறையிட உடனே அங்கு நல்முறையாக காட்சியளித்தான் ஈசன்!!! 

காட்சியளித்து நல்முறையாக நல் முறையாக எதை என்று கூறும் அளவிற்கு இங்கேதான் என்பேன்!!!

நல்முறையாக நல் முறையாக எதுவென்று தெரியாமல் பின் நீங்களும் மனம் வியந்து போனீர்கள் இறைவா என்று!!!

நல்மனதாய் அன்போடு அவனும் அரவணைத்து விட்டான்!!! எவை வேண்டும் என்று வரங்களாக கேட்க

நீங்கள் பின் நல்முறையாக நீங்கள் கேளுங்கள் என்று ஈசனும் கட்டளையிட்டான்!!!

நல்முறையாக பிறவிகள் வேண்டாம் பிறவிகள் ஏன்? பிறவிகளே வேண்டாம் பின் நல் முறையாக உங்களுடைய காலடியிலே நல் முறையாக எங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று உணர உணர!!!

இருப்பினும் சில பாவதாபங்கள் செய்து விட்டீர்கள் அதனால் பின் நல் முறையாக ஆனாலும் என்னுடைய அருள் எப்பொழுதும் இருக்கும் அடுத்த பிறவியை எடுங்கள் எடுத்து நல் முறையாய் இங்கேயே சேவை செய்து வந்தால் கர்மம் அழியும்!!!

யானும் உங்களை அடிக்கடி பார்ப்பேன் என்பது நிச்சயமாய் யான் எங்கு காட்சி அளித்தேனே இங்கேயே உங்களை தங்க வைத்து நல்முறையாக என்னுடைய ஆசிகளோடு பின் நல் முறையாக என்னிடத்திலே என்னுடைய தரிசனமும் இப்பொழுது இக்கலியுகத்திலும் கிடைக்கும்.....

பின் நல்முறையாக ஈசனுடைய தரிசனமும் இங்கே கிடைக்கும் என்பது விதி!!!!

அதனால்தான் அம்மையே பின் இதுவே கடைப்பிறப்பாகும்!!!!

நல்முறையாக வரங்களைக் கேட்க நல்முறையாய் பின் ஈசனே என்று கூறி இப்பொழுது பின். பின் அடுத்த பிறவி எடுப்போமே யாங்கள்!!...

எதை  எவ்வாறு என்பதையும் கூட எங்களுக்கு தெரியாது என்று அழுது புலம்பினீர்கள்

ஆனாலும் ஈசன் சொன்னான் பின் எவை என்றும் நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் நல் முறையாக உங்களை யான் அழைப்பேன்!!!!

நல்முறையாக நல் முறையாக எவை என்றும் பின் பின் என்னுடைய ஆசிகள் கிடைக்கப்பெற்று நல் முறையாய் ரமணனவனும் இங்கே நல்முறையாக தியானம் செய்துவிட்டு போவான்!!!

நல்முறையாக நல் முறையாக குகை நமச்சிவாயனும் நல்முறையாக அங்கே எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருப்பான் இதனால் இவர்களின் கட்டுப்பாட்டிலே நீங்கள் இருக்கின்றீர்கள்!!

நல் முறையாக அம்மையே இப் பிறப்பிலும் நல்முறையாகவே இங்கேயே ஈசனை காண்பீர்கள் நீங்கள் என்பேன்!!!!

நல்முறையாக முன் ஜென்மமதிலே நீங்களும் நல் முறையாக பின் தம்பதியரே ஆவீர்கள்!!!

நல்முறையாக அப்பனே வாக்குகள் சொல்வதற்கு ஏதுமில்லை என்பேன்!!!

அப்பனே ஈசனே இருக்க பின் அவனே பார்த்துக் கொள்வான் அனைத்தையும்!!!!

நல்முறையாக நல் முறையாக தன் தன் பிள்ளைகளையும் நல் முறையாக ஈசன் பார்த்துக் கொள்வான் என்பேன்!!!!

அம்மையே குற்றங்கள் இல்லை குறைகள் இல்லை பின் நல்முறையாக ஈசனே நல்முறையாக ஓரிடத்தை அமைத்து உங்களை பாசத்தோடு நல் முறையாக பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றான்!!!! அம்மையே!!!

அம்மையே ஒன்றை உரைக்கின்றேன் அம்மையே பொருள் நல் முறையாய் பல செல்வங்கள் தேவையில்லை ஈசனுக்கு பிடித்தது ஏழ்மையே என்பேன்!!!! அதனால்தான்!!

அதனால்தான் அம்மையே எவை என்றும் எதனை என்றும் ஆனால் நல்முறையாக விரும்பி விரும்பி நல்முறையாக உந்தன் இல்லத்திலும் ஒருநாள் உறங்கிக் கொண்டுதான் சென்றுகொண்டிருக்கின்றான்!!!!

அம்மையே நல்முறையாக எதை வேண்டுமோ அதை நிச்சயமாய் ஈசன் தெரிந்து செய்வான் என்பேன்!!!!

குறைகள் இல்லை!!!!

நல்முறையாக அம்மையே தங்கம் பின் நல் முறையாக இங்கே பல வழிகளிலும் புதைந்திருக்கின்றது என்பேன்!!! அதனையும் பற்பல வழிகளிலும் உருவாக்குவதற்கு இங்கும் பல திருடர்கள் வருவார்கள் என்பேன் இங்கு!!!

ஆனாலும் விடமாட்டான் என்பேன் ஈசன்!!!!

அம்மையே இவ்வாறு இருக்க நீங்கள் வெறும் நல்முறையாக பின் பின் எதையென்று பணம் இல்லோர் இல்லை என்பேன் !!பின் தங்கத்தின் மீது தவழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள்!!!

இவ்வாறு நல் மனதாய் அனைத்தும் கொடுத்து அனைத்தும் செய்வான் என்பேன்!!!

பொறுத்திருக !!! யானும் உதவிகள் பல செய்வேன் உங்களுக்கு!!!!!

அப்பனே நல்முறையாய் இப்பிறவியே மோட்ச கதியாகும் அப்பனே மீண்டும் பிறப்புக்கள் இல்லை!!!

அதனால்தான் ஏதும் பலிக்காது என்பேன் ஈசனிடத்திலே அனைத்தையும் ஒப்படைத்து விட்டீர்கள்.

நல் முறையாய் நல் நேரம் தீய நேரம் மற்றும் ஜாதகம் காலம் எதுவும் உங்களுக்கு பலிக்காது என்பேன்!!!!

நல் முறையாய் அப்பனே இவை என்றும் அதிவிரைவில் நல்முறையாகவே ஈசன் மனம் மகிழ்ந்து கொடுப்பான் என்பேன்!!!

பொறுத்திருக!!!

மீண்டும் மீண்டும் வாக்குகள் பலமாக யான் சொல்கின்றேன் அடுத்த வாக்கிலும் கூட!!!!!...

என்று வாக்குகள் உரைத்திருந்தார்!!!! இந்த வாக்கு ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு உரைத்த வாக்கு!!!!

ஜீவநாடி ஓரிடத்திற்கு செல்வது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல அங்கு உண்மையான பக்தியும் சேவை மனப்பான்மையும் புண்ணியங்களும் இருந்திருந்தால் மட்டுமே குருநாதர் ஓலைச்சுவடி பெட்டகத்தை கொண்டு செல்ல உத்தரவிடுவார்!!!!

குருநாதர் அகத்திய பெருமான் காலடி வைத்து தன்னுடைய சுவடியை அவர்களை கொண்டு பூசிக்க வைத்து வந்தபின் அவர்கள் வாழ்க்கையில் அடைந்த மாற்றம் அளவிட முடியாத ஒன்று!!!!

எந்த அண்ணாமலையை விட்டு அவர்கள் பிழைப்பு தேடி வேறு எங்காவது சென்று விடலாமா என்று யோசித்த அவர்களுக்கு அண்ணாமலையாரும் அகத்தியரும் நிரந்தரமாக நீ இங்கே தான் இருக்க வேண்டும் என்று அவர்கள் ஆசிர்வாதத்தால் காட்டி விட்டார்கள்!!!!

ஆம் அந்த பெண்மணிக்கு தற்காலிக ஒப்பந்த பணியாளர் என்ற நிலையை மாற்றி நிரந்தர பணியாளராக அண்ணாமலையார் திருக்கோயிலிலே பணிபுரியும் அரசாங்க வேலையை தந்து அவர்கள் வாழ்க்கை பாதையையே மாற்றி தந்து விட்டார்கள் அண்ணாமலையாரும் அகத்தியரும்!!!

தற்காலிக ஒப்பந்த பணியாளர் என்ற நிலைமையில் இருந்தாலும் அனுதினமும் அண்ணாமலையாரையும் உண்ணாமலை அம்மனையும் அகத்தியரும் நினைத்துக் கொண்டுதான் அவர் கோயிலுக்குள்ளே நுழைவார் முதலில் அவர்களை தரிசனம் செய்து விட்டு தான் தன்னுடைய இருப்பிடத்திற்கு சென்று பணியை தொடங்குவார்!!!

எத்தனை எத்தனை அறியாத பக்தர்கள் வந்தாலும் அவர்களுக்கெல்லாம் ஒவ்வொன்றாக ஆலய வரலாறு சன்னதிகள் விளக்கங்கள் என எடுத்துக் கூறி தீபங்கள் ஏற்றுவது தரிசனம் செய்விப்பது என ஆலயத்தை சுற்றி காட்டுவது என தன்னுடைய பணிநேரம் கழிந்தாலும் தன்னுடைய குடும்பத்தினர் உதவியோடு அனைவருக்கும் எல்லா சேவையும் செய்து தருவார்கள் இப்பொழுது வரையிலும் அதை செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!!

அண்ணாமலையார் கோயிலுக்கு திரு ஜானகிராமன் ஐயா அடிக்கடி செல்ல குருநாதர் அகத்திய பெருமான் உத்தரவிடுவது வழக்கம்!!! அவர் ஒவ்வொரு முறையும் உத்தரவிடும் பொழுது இவர்களை திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் தொடர்பு கொண்டு அந்தப் பெண்மணி ஒத்துழைப்போடு ஒவ்வொரு முறையும் ஜீவனாடிப் பெட்டகம் அண்ணாமலையார் மடியிலும் உண்ணாமலை தாய் மடியிலும் வைக்கப்பட்டு பூசை நடைபெறும்!!! அதுமட்டுமல்ல திரு ஜானகிராமன் ஐயா ஒவ்வொரு முறையும் திருவண்ணாமலையில் சாதுக்களுக்கு அன்னதானம் செய்யும் பொழுதும் இவருடைய கணவருடைய ஒத்துழைப்பு மிக அற்புதமாக செய்து தருவார் தற்பொழுது ஒரு சிறிய ஒரு ஆட்டோ ரிக்ஷாவை வைத்து கொண்டு அடியவர்கள் அன்னதானத்திற்கு என்ன வேண்டும் என்ன கொடுக்க வேண்டும் என்பதை கூறிவிட்டால் போதும் அதை தன் கையாலேயே சமைத்து ஆட்டோவில் வைத்து கிரிவலப் பாதையில் ஜானகிராமன் ஐயாவை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு சாதுக்களுக்கும் நேரடியாக சென்று உணவை வழங்குவார்கள்!!!! இன்றளவும் அது நடந்து கொண்டுதான் இருக்கின்றது இனியும் அது நடக்கத்தான் போகின்றது அண்ணாமலையார் திருவருளாலும் அகத்தியரின் கருணையாலும்!!!!

நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு உண்ணாமலை தாயார் ஒரு பெண்மணி ரூபத்தில் வந்து ஓலைச்சுவடி பெட்டகத்தை உண்ணாமலை சன்னதியில் வைத்து வணங்க வேண்டும் என்று அன்பு கட்டளையிட்டார் அல்லவா அந்த நிகழ்வின்போது போது அந்த பெண்மணியின் கணவரான அந்த அடியவருக்கும் உண்ணாமலை தாயாரின் மனித ரூப தரிசனமும் அவர்களுடைய உபதேசமும் கிடைத்தது அவரும் திரு ஜானகிராமன் ஐயா உடன் தான் இருந்தார்!!!!

இடைவிடாத பக்தி தன்னால் முடிந்தவரை சேவை தன்னால் முடிந்தவரை அடுத்தவருக்கு உதவுவது எத்தனை சோதனைகள் வந்தாலும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் எத்தனை துன்பங்கள் வந்தாலும் இறைவா நீயே கதி !!! என்று இருந்த ஒரு குடும்பத்திற்கு இன்று வாழ்க்கையில் ஒளி விளக்கை ஏற்றி வைத்து விட்டார்கள் அகத்தியரும் அண்ணாமலையாரும்!!! 

இன்று அந்த குடும்பமே மனமகிழ்ச்சியோடு மிகவும் பூரிப்படைந்து கண்ணீர் மல்கி கைகூப்பி வணங்கி வருகின்றது!!!

தன் வீட்டில்  கஷ்டம் என்றாலும் சாதுக்களுக்கு உணவளிக்கும் பணியை அன்போடு செய்தும் தன் மனதில் பல கஷ்டங்கள் இருந்தாலும் அண்ணாமலையார் கோயிலுக்கு வரும் அடியவர்களுக்கு நல் மனதோடு சேவையை செய்து வந்த இந்த குடும்பத்திற்கு இன்று நல்வாழ்வு வந்தது!!!!

குருநாதர் தன்னுடைய வாக்கில் ஒன்றை குறிப்பிட்டு கூறியிருந்தார்!!!

"" எதை வேண்டுமோ அதை நிச்சயமாய் ஈசன் தெரிந்து செய்வான்!!!!! குறைகள் இல்லை!!!!!

ஈசரும் அகத்தியரும் செய்து விட்டார்கள்!!!! உண்மையான பக்திக்கும் சேவை மனப்பான்மைக்கும் மனமிரங்கி வழிகாட்டி விட்டார்கள்!!!!

இடைவிடாத பக்தியும் நல்மனதாய் சேவை செய்யும் மனப்பான்மையும் இருந்தால் இறையருளும் குரு அருளும் தானாக தேடி வரும் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகி உள்ளது!!! அந்தக் குடும்பத்தினரை மனதார வாழ்த்தி அண்ணாமலையாரையும் அகத்தியரையும் போற்றி வணங்கி நன்றி சொல்லி நாமும் அவ்வழியே நடப்போம்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........தொடரும்!

Tuesday 25 October 2022

சித்தன் அருள் - 1206 - முருகனிடம் ஆசைப்படு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று முதல் முருகப்பெருமானின் அவதார நோக்கமான மஹா கந்த சஷ்டி விரதத்தின் முதல் நாள்.  இந்நன்னாளில், முருகப்பெருமானை கோவில்களில் தரிசிக்கும் பொது எதற்கு விரும்ப வேண்டும் என ஓரிரு கோவில்களில் பெற்ற அருளை உங்கள் அனைவருடன் பகிர்ந்து கொள்கிறேன். அந்த கோவில்களை சென்று தரிசிக்கும் பொழுது, அவரிடம் அந்த விருப்பங்களை தெரிவியுங்கள். அவர் அருள் உங்களுக்கு எப்படி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம்.

  1. கிரௌஞ்ச கிரி முருகரிடம் - பால் கட்டிக்கு ஆசைப்படு, அம்பாள் அருள் கிடைக்கும்.
  2. பழனி தண்டாயுதபாணியிடம் - அபிஷேக தீர்த்தமும், கௌபீனமும், சந்தனமும் ஆசைப்படு, நோய்நொடி அனைத்தும் விலகும்.
  3. ஓதிமலை முருகரிடம் எதற்கும் உத்தரவு கேளு, சரியாக வழி நடத்துவார்.
  4. திருச்செந்தூர் முருகரிடம் - இலை விபூதி கேள், வியாதியே ஓய்ந்துவிடும்.
  5. குமாரகோவிலில் முருகரை உள்வாங்கு, பின் நேரடி தரிசனம் ஆனந்தமாகும்.
  6. வேளிமலையில் முருகரிடம், மாலையில் த்யானம் செய், அவர் வர்மக்கட்டை கற்பிப்பார், சித்தர் வந்து ஆசீர்வதிப்பார்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!


Sunday 23 October 2022

சித்தன் அருள் - 1205 - தீபாவளி நல் வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த தீபாவளி தினத்தன்று நீங்களும், உங்கள் குடும்பத்தாரும், சுற்றத்தாரும் நலமாக, மகிழ்வாக வாழ சித்தன் அருள் வலைப்பூ சார்பாக அனைவரையும் வாழ்த்துகிறோம்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமான் தரிசனமும், அருளும், அருகாமையும், இனி வரும் காலங்களில் அனைவருக்கும் கிடைக்கட்டும்!

சித்தன் அருள்...........தொடரும்!

Saturday 22 October 2022

சித்தன் அருள் - 1204 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரின் பொது வாக்கு!



வணக்கம் அகத்தியர்  அடியவர்களே....

ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள யுக யுகங்களாக  அக்னி ஜுவாலையாய் தொடர்ந்து சுடர்விட்டு பிரகாசிக்கும் ஜுவாலா தேவி ஆலயத்தில் போகர் சித்தபெருமான் வந்து வாக்குகள் உரைத்த பின் குருநாதர் அகத்தியரிடம் அடியவர்கள் சிலர் கேள்விகளை எழுப்பினர்...

குருநாதர் அகத்திய பெருமான் அடியவர்களின் கேள்விகளுக்கு பதில் வாக்கும் தந்து கொண்டிருந்தார் குருநாதர் தந்த கேள்வி பதில்களும் இதற்கிடையே எதிர்பாராத விதமாக அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் சித்தர் ஒருவரின் வருகையும் தரிசனமும் கிடைத்தது!!! அதனைப் பற்றிய தொகுப்பு....

நல்முறையாக ஜுவாலா தேவியின் தரிசனம் கண்டபின் ஆலயத்தின் ஒரு புறத்தில் இருந்து ஜீவநாடியை திரு ஜானகிராமன் ஐயா வாசித்தவுடன் போகர் சித்தர் வந்து வாக்குகள் தந்தார்!!!!

அவரின் வாக்குகளுக்கு பின் குருநாதர் அகத்திய பெருமான் அடியவர் கேள்விகளுக்கு பதில் வாக்கு தந்து கொண்டிருந்த பொழுது....... திடீரென அங்கு ஒரு பெரியவர் தலையில் முண்டாசு போல கட்டி நெடுநெடுவென உயரம்!!! ஒல்லியான உடம்பு !!!நெற்றியில் செந்தூரம்!!! கண்கள் தீ கனல் போல் ஒரு பிரகாசம்... ஜீவநாடி வாசிக்கும் ஸ்தலத்திற்கு வந்தார்!!!

வந்து ஏதேதோ புரியாத வகையில் பார்த்துக்கொண்டு பேசினார்....

அந்த இடமே ஒரு நிசப்தம்!!! ஒரு தெய்வீக அமைதியும் சொல்ல முடியாத உணர்வும் !!அதிர்வும் ஏற்பட்டது...

ஜீவநாடி வாசிப்பதை பார்த்துக்கொண்டு ஏதோ முணுமுணுத்துக் கொண்டு அனைவரையும் கண்டவாறு கடந்து சென்றார்.... அவருடைய செய்கைகள் வித்தியாசமாக இருந்தது......

ஏற்கனவே ஜம்மு காஷ்மீரில் ரகுராம்ஜி ஆலயத்தில் இதே போன்று குருநாதர் அகத்தியர் மனித வடிவில் வந்து அனைவருக்கும் தரிசனம் கொடுத்து சென்றார் அது போலவே மீண்டும் ஒரு சம்பவம் அதனால் இது யாராக இருக்கக் கூடும்??? என்ற ஆவல் மிகுதியில் குருநாதரிடம் கேட்ட பொழுது..

அப்பனே எவை என்று அறிய ஆனாலும் இப்பொழுது எவை என்று பின் சொல்வதற்கு இல்லை அப்பனே சொல்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே இவை என்று அறிய யான் சொல்லிவிட்டேன் முன்பே இப்பொழுது வேண்டாம் என்று கூட அப்பனே. ஆசிர்வாதம் இட்டு செல்லட்டும் நீங்களும் வாங்கிக் கொள்ளுங்கள்!!!!

என்று குருநாதர் அந்த இடத்தில் அப்படி உரைத்திருந்தார்!!! 

அடியவர்கள் அனைவரும் அந்த பெரியவரிடம் ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு உரையாடிய பொழுது அவர் பேசிய சில வார்த்தைகள் சரிவர புரியவில்லை.

அடியவர்கள் அவர் கால்களில் விழுந்த பொழுது என் கால்களில் விழ வேண்டாம் ஈசனின் கால்களில் விழுங்கள்!! ஈசனுக்கு பூஜைகள் செய்யுங்கள்!!!! இந்த ஜ்வாலாமுகி தேவி ஆலயத்திற்கு மேலே மலையின் மீது தாராதேவி இருக்கின்றாள் அவளுடைய தரிசனத்தையும் நீங்கள் செய்ய வேண்டும் என்று இரண்டு மூன்று முறை குறிப்பிட்டு தன்னுடைய பேச்சில் சொன்னார். சில விஷயங்கள் புரிந்தன சில விஷயங்கள் புரியவில்லை... அங்கும் இங்கும் நடந்து கொண்டு போக்கு காட்டிக்கொண்டு திடீரென மறைந்து விட்டார்.!!!!!
  
ஜீவநாடி வாக்குகள் வாசித்தவுடன் அடியவர்கள் அனைவரும் தாராதேவி தரிசனத்திற்காக மலை மீது ஏறிச் சென்ற பொழுது அந்த தேவி ஆலயத்தில் யாரும் இல்லை!!! கிட்டத்தட்ட அரை மணி நேரம் ஜீவநாடிபெட்டகம் தாயாரின் மடியில் வைக்கப்பட்டிருந்தது.

அப்பொழுது எங்கிருந்தோ வந்த ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறந்து கொண்டே தாயாரின் முகத்தில் அமர்ந்தது மிகவும் பரவசமாக இருந்தது!!!!

அடுத்த வாக்கில் வேறொரு பவித்ர ஸ்தலத்தில் குருநாதர் அகத்தியபெருமான் மனித உருவில் வந்தவர் யார்? என்று உரைத்தார்... அவர் நொண்டிச்சித்தர் என்று கூறினார். 

குருவே  போற்றி நீங்கள் ஜீவநாடியில் வாக்குகள் தந்து கொண்டு இருந்த பொழுது நாங்கள் கண்ட பெரியவர் யார்???

அவந்தன் நொண்டி சித்தன் என்பேன் யான்!!!!! அதனால்தான் எப்பொழுது எதை உரைக்க வேண்டுமோ அப்பொழுதுதான் யான் உரைப்பேன் சொல்லிவிட்டேன்!!!!

இனி அடியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் உரைத்த பதில் வாக்குகளை காண்போம்!!!

குருவே போற்றி இந்த ஆலயத்தில் தேவி ஏன் தீ ஜூவாலையாக இருக்கின்றார்!!!! இதன் மகத்துவம் என்ன???? 

அப்பனே  எதையென்று அறிய அப்பனே இவையென்று அறிய  ஒரு வார்த்தையை சொல்லி விடுகின்றேன் அப்பனே பின் அது நிச்சயம் எரியாவிடில் அப்பனே  இவ்வுலகமே அழிந்து போகும் என்பேன்!!!

அப்பனே அதனால் எதை என்று அறியாத. அளவிற்கும் கூட அப்பனே நிச்சயம் உலகத்தில் உள்ள அனைவரையும் காத்து ரட்சிக்கின்றாள் தாயவள் என்பேன். அதனால் ஒரு தாய்க்கு தன் பிள்ளைகள் என்ன தவறுகள் செய்தாலும் தாய்க்கு பிள்ளையே தாயவள் நிச்சயம் ஏற்றுக் கொள்வாள் அதனால் பார்த்துக்கொண்டு அனைத்தும் எதை என்று அறியாமலே அவள்தன் அனைவரையும் தன் பிள்ளைகளாகவே எண்ணி அருள்கள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றாள்!!!
அன்பைச் செலுத்துங்கள்!!! அன்போடு பக்தி செய்யுங்கள்!!! உங்கள் இல்லத்திற்கே  இவள் வந்து விடுவாள் எவை என்று கூட!!!!
 
இன்னும் ஏராளமான சூட்சுமங்கள் ரகசியங்கள் உண்டு. எதை எவை எங்கு எப்பொழுது செப்ப வேண்டுமோ அப்பொழுதுதான் யான் செப்புவேன் அப்பனே!!!! சொல்லிவிட்டேன்

குருவே போற்றி!!!
 
திருவண்ணாமலைக்கும் இந்த ஜூவாலாதேவிக்கும் தொடர்புகள் இருக்கின்றதா????

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் எதையன்றி கூற அங்கே இறைவன் ஜோதி வடிவமாக இருக்கின்றான்!!! இங்கே இறைவி ஜோதி வடிவமாக இருக்கின்றாள்!!!

அவ்வளவுதான் வித்தியாசம் அப்பனே!!!

அங்கு இறைவனை கண்டீர்கள்!!! இறைவி  இங்கே உங்களை அழைத்துக் கொண்டாள்!!!

அங்கும் இங்கும் சென்று கொண்டே இருந்தால் அப்பனே பின் நலன்கள் மேம்பட்டு கொண்டே இருக்கும் கவலைகள் இல்லை!!!

குருவே போற்றி!!! இந்த ஆலயத்திற்கும் பஞ்சபாண்டவர்களுக்கும் தொடர்புகள் உள்ளதா???

அப்பனே இவை என்று அறிய அப்பனே நிச்சயம் பின் அவர்கள் சிறிது நேரம் எதை என்று அறியாமலே சில காலங்கள் ஒளிந்து வாழ்ந்தார்கள் அப்பனே!!! அதனால் பின் அவர்களும் இங்கு சமைத்து உண்டார்கள் பல வருடங்களாக!!..... அப்பனே தவங்களும் மேற்கொண்டார்களப்பா!!! அவர்களுக்கு தரிசனமும் கிடைத்தது அப்பனே!!!!

குருவே போற்றி!!!

வீட்டில் தீபம் ஏற்றுவதற்கு இலுப்பை எண்ணெயை பயன்படுத்தலாமா?? அதன் மகத்துவத்தை கூறுங்கள்

அப்பனே எதை என்று கூற பின் இலுப்பை எண்ணெயில் தீபம் ஏற்றினால் அதிக சக்திகள் கிடைக்கும் என்பேன் சொல்லிவிட்டேன்!!!!

குருவே  போற்றி!!! ஆலயத்தில் இலுப்ப எண்ணெய் தீபம் ஏற்றி வழிபடலாமா??

அப்பனே நிச்சயம் ஏற்றி வழிபடலாம் என்பேன். அப்பனே

குருவே போற்றி!!!

இந்த உலகம் அழிவை நோக்கி செல்கின்றது என்று அனைத்து சித்தர்களும் உரைக்கின்றீர்கள் இந்த உலகத்திற்கு என்ன தான் நடக்கப் போகின்றது???

அப்பனே எவை எவை என்று கூட அப்பனே பின் எதை என்று அறியாமலே இன்னும் இவ்வுலகத்தில் யுத்தங்கள் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே எவை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே ஏனென்றால் கர்மா காலம் என்பேன் அப்பனே இவற்றை அறிந்து!!!!

குருவே போற்றி யுத்தங்கள் நடைபெறும் என்று உரைத்தீர்கள் அதில் இந்த பாரத தேசத்தின் பங்கும் இருக்குமா???

அப்பனே எவை எவை என்று கூட ஆனாலும் எங்கு வந்தாலும் யுத்தங்கள் யாங்கள் நிச்சயம் நல் மனிதர்களை காத்து விடுவோம் அப்பனே சொல்லிவிட்டேன்.

குருவே போற்றி!!! இந்த உலகத்தை காத்து ரட்சிக்கும் அன்னை பார்வதி தேவி தன் வாக்கில் இந்த தேசத்தை ஆள ஒரு அரசி பிறப்பெடுப்பாள் என்று கூறியிருந்தார் அந்த அரசி எப்போது வருவார்கள்???

இதையென்று அறியாத அளவிற்கு கூட அப்பனே நிச்சயம் இவை அன்று அறியாது இப்பொழுது வேண்டாம் அப்பனே!! சொல்கின்றேன் இதைப் பற்றி தீவிரமாகவே ஒரு சக்தி வாய்ந்த இடத்திலே!!!!

குருவே போற்றி!!!!

பெர்முடா முக்கோணத்தின் மர்மங்களை பற்றி தெரிந்து கொள்ள விரும்புகின்றோம் குருவே!!!!

அப்பனே எதையென்று அறியாத அளவிற்கு கூட அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே அது தேவ ரகசியம்!!! இதை என்று கூட யாருக்கும் இதனை நிச்சயம் தெரிவிக்க கூடாது என்பேன் இதைப் பற்றி இப்பொழுது சொல்ல மாட்டேன் யான் நீங்கள் அனைவரும் புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளுங்கள் பின் நிச்சயம் யான் இருக்கின்றேன் அதைப்பற்றி சொல்வேன் அப்பனே!!!!

குருவே போற்றி!!!! 

தெய்வ மூர்த்தங்கள் பஞ்சலோகத்தில் இருப்பது போல மரத்திலும் வைத்து வழிபாடு செய்கின்றார்கள் குறிப்பாக கருங்காலி தேவதாரு சந்தனம் அத்தி போன்ற மரக்கட்டைகளில் வைத்து வழிபடுகின்றார்கள் அவையெல்லாம் மெருகு குலையாமல் இயற்கையாக எப்படி பராமரிப்பது????

அப்பனே இவையன்றி கூற பின் வேப்பிலை!! சிறிதளவு பின் ஆலமரத்தின் இலைகள்!!! எதை என்று கூற அரச மரத்தின் இலைகள்!!! பின் வசம்பு!! இவற்றை அரைத்து அரைத்து பின் அப்பனே நெய் சிறிதளவு இட்டு நல்விதமாகவே சேர்த்து பின் சில திரவியங்களை இட்டு பின் பூசி சுத்தமாக செய்தால் அவற்றின் தன்மையை பின் எவை என்று கூற மீண்டும் அதிகரிக்கும் என்பேன் அப்பனே.

குருவே சரணம்!!!

சிலருக்கு ஆலயங்கள் மற்றும் ஜீவசமாதி களுக்கு செல்லும்பொழுது மட்டும் தொடர்ந்து அடிக்கடி கொட்டாவி வந்து கொண்டே இருக்கின்றது !!! சில மனிதர்களுக்கு....  இதனுடைய அர்த்தம் என்ன???

இதையன்றி கூற அப்பனே இது ஒரு தரித்திரமப்பா!!!! எதை என்று கூட ஆனாலும் அப்பனே உணராமல் சோம்பேறி தனமப்பா!!! எதை என்று கூற யான் அப்பனே சில மனிதர்களுக்கும் நல்லதை செய்தால் தான் !!!!..........

அங்கேதான் எவை என்று உணராமலே அப்பனே எவை என்று தெரியாமலே நிச்சயம் அவை தன் ஒரு கர்மா கர்மா என்பேன் அப்பனே...!!!

இதனால் அவர்களை உயர்ந்த பக்தியை கடைப்பிடிக்க சொல்!!!!

அப்பனே இதன் தன்மைகளை உணர்ந்து உணர்ந்து எதை என்று உணராமலே அப்பனே அப்படி செய்தால் பக்கத்தில் உள்ள அனைவருக்கும் பின் அனைத்தும் எதை என்று கூற சில சக்திகள் இழந்து விடும் என்பேன் அப்பனே!!!!! இதில் பல மனிதர்களையும் யான் பார்த்து விட்டேன் அப்பனே அதனால் அவை வரும்பொழுது வாயில் அடித்து ஒரு அடியை அடிக்க வேண்டும் அப்பனே!!!! 

குருவே போற்றி தஞ்சை பெரிய கோயிலில் ஒரு சாபம் இருக்கின்றது என்று அனைவரும் ஏதேதோ சொல்கின்றார்களே அதன் உண்மை தன்மை என்ன????

அப்பனே இவை என்று கூட இதனால் எவ்வித சாபங்களும் நிச்சயம் செல்லாது என்பேன் அப்பனே. இறைவன் நேரடியாகவே அங்கு இருக்கின்றான் சுற்றி வந்து கொண்டே இருக்கின்றான் அப்பனே.

அதனால் தீயவர்கள் எதை என்று கூற ஏமாற்றுபவர்கள் எதை என்று கூற அங்கு சென்றால் உடனே ஈசன் கண்களுக்கு பின் புலப்பட்டு விட்டால் அங்கேயே தண்டனைகள் கொடுத்து விடுவான் எவை என்று கூட எதை என்று கூட இவன் கர்மாவை இவனே அனுபவிக்கட்டும் என்று !!!

அதனால் அதன் மூலம் அது முதலிலிருந்தே  சாபங்கள் அப்பனே.

குருவே போற்றி

சில சமயங்களில் தனிமையில் இருக்கும் பொழுது சில சமயம் யாரோ நம் பின்னே இருக்கின்றார்கள் என்று! அமானுஷ்யமாக தோன்றுகின்றது??

அப்பனே எவை என்று கூட எவை என்று உணராமலே இதெல்லாம் ஒரு அற்ப சுகம்!!!

உங்கள் முதுகையே உஙகளால் பார்க்க முடியாது என்பேன் இதையே பார்க்க முடியவில்லை பின் எப்படி தீங்குகள் வந்துவிடும்??? அப்பனே எவை எவை என்று கூற அமைதியாக கந்தர் சஷ்டி கவசம் ஓதி வா!!! போதுமானது மனம் தெளிவு பெறும்.

குருவே போற்றி

சிலர் ஆலயத்திற்கு செல்வதற்கு அழைத்தால் வர மறுக்கின்றார்கள் !!!அவர்களை எப்படி மாற்றுவது?? 

இதையென்று அறிய ஏன் எதை என்று உணராமலே எவை என்றும் ஆனாலும் இதற்கு சம்பந்தங்கள் எவை என்று கூட!!!

 ஒரு சரியான பணியை தேர்ந்தெடுக்கும் பொழுது கஷ்டங்கள் பட்டால் தான் அனைத்தும் வரும்!!!!

இதனால் நிச்சயம் பல பல திருத்தலங்களில் கூட பல அதிர்வலைகள் நிச்சயம் உள்ளது என்பேன்.

அதனால் பின் சில அதிர்வலைகள் பின் நன்றாக இருக்கும் பொழுது நிச்சயம் எவ்வளவு வந்தாலும் அவர்கள் பின் அங்கு செல்ல முடியாது என்பேன். ஏனென்றால் கர்மா.

கர்மா அங்கு தொலையும் என்பதை கூட சரியாகவே!!!.....

இதனால் கர்மா எதையென்று கூட விடாது அப்பனே!!! அதனால் முடிந்த அளவிற்கு வர முடியாதவர்களை இழுத்து  கூட்டி செல்லுங்கள் அப்பனே!!!

குருவே போற்றி அருணகிரி நாதர் திருப்புகழ் பற்றி கூறுங்கள்

அப்பனே எதையென்று உணர எதை எவை என்று கூட அப்பனே அதிகாலையில் பாடிட்டே வாருங்கள் அதன் நிலைமை புரியும் என்பேன்!!! அப்பனே யான் சொல்லிவிடுவேன் அப்பனே... நீயும் கேட்டு விட்டாய் அப்பனே சொல்லிவிட்டால் இவ்வளவுதானா என்று விட்டு விடுவாய் அதனை நீ பாடி வா!!! எதையென்று பின் மாற்றங்கள் வருவதை நீயே எண்ணி விடுவாய்!! அதன் தன்மையை புரிந்து கொள்வாய்!! அப்பனே!!!!

குருவே போற்றி இதுதான் ஞானப் பாதை என்று தெரிந்தாலும் கூட அதை சரியாக பிடித்துக் கொள்ள முடிவதில்லை அது ஏன்????

அப்பனே இதையன்றி கூட இதுதான் அப்பனே மாயை!! இச்சை !! என்பேன் அப்பனே.

மனிதனுக்கு அப்பனே!!! மனிதனாக பிறப்பெடுத்து எதை என்று கூட வந்து விட்டாலே அப்பனே மனிதனை பின் இச்சை பின் எதை என்று கூட வாழ விடுவதே இல்லை அப்பனே!!!

சில இச்சைகளில் இருந்து மீண்டு வந்தால் தான் இறைவன் சரியாகவே இருப்பான் !!!அவந்தன் கையைப் பிடித்து ஏறிக்கொள்ளலாம் அப்பனே !!!இதை ஒரு வாகனம்  போலே வைத்துக் கொள்ளலாம் அப்பனே.

குருவே! மஞ்சள் காமாலைக்கு தீர்வு தாருங்கள்!!! 

அப்பனே இயற்கை உணவுகளை உட்கொள்ள நன்றுதான் என்பேன் அப்பனே!!!
உமிழ்நீரை அதாவது வாயில் சுரக்கும் உமிழ் நீரை அடிக்கடி விழுங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.அப்பனே

நல்முறையாக  மிளகு சீரகம் இவற்றின் தன்மைகள் உணர்ந்து சிறிதளவு வேப்பிலை இவற்றையெல்லாம் பாலின் தன்மையை அறிந்து நல்விதமாக இட்டு பின் எவை என்றும் கூற பின் மூலிகைகளும் அதாவது பொன்னாங்கண்ணி பின் கரிசலாங்கண்ணி எனும் மூலிகையை விட்டு அருந்தி வந்தால் எளிதில் சரியாகிவிடும் அப்பனே எது என்று உணராமலே அப்பனே இவை எல்லாம் மனிதனுக்கு சில சில எவை எவை என்று கூட சத்துக்கள் குறைவாகவே உள்ளவையே அதற்காகத்தான் அப்பனே சரியான உணவைப் பின் மேற்கொண்டாலே பின் சரியான வழியில் எதை என்று உணராமலே பின் அனைத்தும் சரியாகிவிடும் என்பேன் அப்பனே எங்கெல்லாம் பச்சை அதாவது இயற்கை மூலிகைகள் உணவுகள் கிடைக்கின்றதோ அதை கிள்ளி அப்படியே உட்கொண்டாலும் நன்மையே தரும் அப்பனே!!! 

குருவே போற்றி சில  சமயங்களில் அசைவ உணவுகள் மீது சில சமயம் ஆசைகள் வருகின்றது

அப்பனே !!! எவை என்று கூட இப்பொழுது தான் யான் சொன்னேன் அப்பனே!!!
அப்பனே எவை என்று கூட இச்சையெல்லாம் கட்டுப்படுத்தினால் தான் மெச்சையாக முடியும்( மெச்சுதல் ஆக முடியும்) இதற்கு தகுந்தார் போல் நடந்து கொள்ளுங்கள். இதனைப் பற்றி பலமுறை யாங்கள் உரைத்து விட்டோம் எந்த ஒரு உயிரினத்திற்கும் நீங்கள் தீங்கிழைத்தால் அது திரும்பி உங்களை தாக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

குருவே போற்றி!!! சிலர் அரிசி தானம் செய்யக்கூடாது என்று கூறுகின்றார்கள் அது ஏன்???

அப்பனே!!! எதையன்றி கூட எவற்றில் இருந்து கூட அப்பனே அப்பொழுது உன் இல்லத்திற்கு எதுவும் வாங்கி தராதே!!! சொல்லிவிட்டேன்!!!!!

அப்பனே உன் இல்லத்திற்கு அரிசி வாங்கி தருவாயா? இல்லையா?

தருவேன் குருவே.

அப்பனே தான தர்மத்தை பற்றி எத்தனை முறை யாங்கள் எடுத்துரைப்பது???அப்பனே!!! பொய்யான மனிதர்களின் பேச்சைக் கேட்டு இப்படி எல்லாம் செய்தால் வீண் கர்மக்கள் தான் ஏற்படும் அப்பனே!!

குருவே போற்றி! பலரும் தீபங்களை குறித்து பேசுகிறார்கள் ஒரு முகத்திற்கும் ஒவ்வொரு பலன்கள் இருக்கின்றது என்று!! ஒரு முகம் ஏற்றினால் இந்தப் பலன் இருமுகம் ஏற்றினால் இந்த பலன் என்று இதெல்லாம் உண்மையா???

அப்பனே பல நபர்களை யான் பார்த்திட்டேன் அப்பனே!!! பல வடிவங்களாலும் தீபங்கள் ஏற்றிக்கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!

என்னதான் நடந்தது?? அப்பனே!!

தூய உள்ளத்தோடு அப்பனே ஏற்று தீபத்தை!!!! அனைத்தும் நன்றாகும்!!!

குருவே தென்னாடுடைய சிவனே போற்றி என்கின்றார்களே அதனுடைய விளக்கம்

அப்பனே எதை என்று கூற ஆனால் இவையெல்லாம் யான் எதையும் ஏற்கப் போவதில்லை அப்பனே!!!!

உலகத்திற்கு ஒருவனே !!!  அவன் ஈசனே!!!

அவ்வளவுதான்!!!!!

(அதாவது தென்நாடுடைய சிவன் இல்லை எந்நாட்டவர்க்கும் இல்லை... இந்த உலகத்திற்கே ஈசன் தான்) 

குருவே போற்றி மழை வளம் பெருக வேண்டும் உலகம் செழிக்க வேண்டும்

அப்பனே இதை எவை என்று கூட பின் மனிதனின்  அநியாயங்கள் அக்கிரமங்கள் மீறும் பொழுது இயற்கையும் மீறும் என்பேன் அப்பனே அவ்வளவுதான்.

குருவே வடமேற்கு திசையில் இருக்கும் நாட்டில் இருக்கும் புனித ஸ்தலத்தில் உள்ளே இருப்பது சிவன் என்று கூறுகிறார்களே அதனைப் பற்றி கூறுங்கள்!!!

அப்பனே இதையன்றி கூட இப்பொழுது தான் யான் சொன்னேன் அப்பனே அதையும் நீ புரிந்து கொள்ளவில்லையா????

இந்த உலகத்திற்கு மன்னன் ஈசனே!!!!!

குருவே போற்றி!!! தீட்சை என்றால் என்ன? இப்பொழுது ஒவ்வொருவரும் யான் அந்த தீட்சை தருகின்றேன் நான் இந்த தீட்சை  தருகின்றேன் என்று எங்களை குழப்புகின்றார்கள்

அப்பனே இதையன்றி கூட அதை எவையென்று கூட எங்கு பெறப்பட வேண்டும் என்பதை கூட !!....ஆனால் இப்பொழுது அவையெல்லாம் மாறிவிட்டது அப்பனே எவையென்று அனைத்தும் பணத்திற்காகவே ஆகிவிட்டது. ஆனால் அதன் மூலம் எந்த லாபமும் இல்லை அப்பனே!!! அதனால் இறைவனை வணங்கி வணங்கி பின் நல் உள்ளங்களாக இருந்தால்!!!!........

இறைவனே வந்து நிச்சயம் கொடுப்பான் அப்பனே அதுதான் தீட்சை!!!!

மனிதனால் கொடுக்கப்படுவது தீட்சை இல்லை!!!!

குருவே போற்றி!!! வாலாஜாவில் உள்ள சுமைதாங்கி மடத்தில் ராமானந்த சித்தர் அங்கு உலாவிக் கொண்டிருக்கின்றார் என்று ஐதீகம் அதைப்பற்றி!!....

அப்பனே எதை எதை என்று கூட அங்கே அவந்தன் வலம் வந்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!!

குருவே வாலஜா திருமலைச்சேரியில் தேரையர் சித்தர் அவர்களின் ஜீவசமாதி உள்ளது என்று கூறுகிறார்கள் அது உண்மையா??

அப்பனே எதையென்று கூற பல சித்தர்கள் அப்பனே பல திருத்தலங்களில் அப்பனே சமாதி அடைந்துள்ளார்கள் அப்பனே இது உண்மையே என்பேன் அப்பனே!!!!

குருவே சில ஆலயங்களுக்கு அடிக்கடி சர்ப்பங்கள் வந்து செல்கின்றது இதன் மகத்துவம் என்ன??? குறிப்பாக பாக்கம் உமா மகேஸ்வரி உடனுறை கைலாயநாதர் ஆலயத்தில் அடிக்கடி சர்ப்பம் வந்து செல்கின்றது இதன் மகத்துவம் என்னவென்று கூறுங்கள் 

அப்பனே!!! இறையின் பலம் அதிகரிக்க அதிகரிக்க அனைத்து உயிரினமும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே

குருவே போற்றி! பல இடங்களில் முனீஸ்வரன் வழிபாடு உள்ளது!! சிலருக்கு குலதெய்வமாகவும் முனீஸ்வரன் இருக்கின்றார் அவருடைய தலைமையகம் எங்கே உள்ளது

இதையென்று கூட பின் எவை என்று கூட அழகன் மலையில் இருக்கின்றானே அங்கேயே தான் இருக்கின்றான் அவன்!!!(மதுரை அழகர் மலை)!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம்

குருவே தமிழ்நாட்டில் மட்டும் எண்ணற்ற கோயில்கள் இருக்கின்றன இதன் ரகசியம் என்ன?

அப்பனே இவ்வுலகின் உச்ச பகுதியே இவ்விடம் தான் என்பேன். திருத்தலங்கள் உச்சிப் பகுதியில் தான் இருக்கும் என்பேன். ஆனால் அது பொய்யான மனிதர்கள் கீழே இருக்கும் படி அமைத்து விட்டார்கள் வரைபடத்தில்!!! இதைப் பற்றி முன்பே யான் தெரிவித்து இருக்கின்றேன்.

அப்பனே இவ்வுலகத்தின் உச்ச பகுதி அண்ணாமலையே என்பேன் இவையன்றி கூற திருவண்ணாமலை உலகின் உச்ச பகுதி அதனால் தான் நினைத்தாலே முக்தி என்று வந்தது நல் முறையாக பல சித்தர்களும் ஞானிகளும் இங்கு அடிக்கடி வந்து செல்வார்கள். அனைத்து தெய்வங்களும் இங்கேயேதான் இருக்கின்றார்கள் அதனால்தான் அப்பனே இங்கு வந்தவர்கள் அதிகளவில் முக்தியை பெறுவார்கள் அப்பனே திருத்தலங்கள் எல்லாம் நீ கீழே இருக்கக் கூடாது அப்பனே மேன்மையான இடங்களிலேயே இருக்க வேண்டும்.  இவ்மலையைச் சுற்றி உள்ள அனைத்தும் ஈசனுக்கே சொந்தம் ஆனால் முட்டாள் மனிதர்கள் எதை எதையோ நினைத்துக் கொண்டு அவர்களுக்கு சொந்தமாக்கிக் கொண்டு விட்டார்கள் இறைவனின் சொத்துக்களை எடுத்துக்கொண்டு இப்படி செய்தால் இறைவன் எப்படி? நல்லது செய்வான்? அப்பனே.

குருவே அன்றாட வாழ்க்கையில் மனிதர்களுக்கு தொடர்ந்து கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது இதில் இருந்து மீள என்ன வழி???

அப்பனே மனிதனாகப் பிறந்து விட்டாலே கஷ்டம்தானப்பா.

இறைவனும் மனித அவதாரம் எடுத்து வந்து பொழுது கஷ்டங்களை அனுபவித்தார்களப்பா.

ராமனும் கிருட்டிணனும் ஈசனும் படாத கஷ்டங்களா நீங்கள் பட்டு விட்டீர்கள்!!! அப்பனே கஷ்டங்களுக்கு யார் காரணம்?? நீங்கள் தான் காரணம்!!! நீங்கள் சரியான வழியில் செல்லும்பொழுது துன்பங்கள் குறையுமப்பா.

மனிதர்களை நல்வழிப்படுத்த

புத்தன் வந்தான்!! பின் இயேசு வந்தான்!! நபிகள் நாயகமும் வந்தான்!! ஆனால் மனிதர்கள் செய்யும் செயல்களை பார்த்துவிட்டு அலுத்து தான் சென்றார்களப்பா.

நல் முறையாக கிருஷ்ணனும் வருவான் என்பேன்.தர்மத்தை நிலைநாட்ட. அதிக காலங்கள் ஆகிவிட்டது யோசித்துக் கொண்டிருக்கின்றான்.

குருவே கிருஷ்ணன் எப்பொழுது வருவார் எங்கே வருவார்?

நல்ல முறையாக அப்பனே இன்னும் 10 ஆண்டுகளில் வருவான் என்பேன் துவாரகை என்கின்றார்களே அங்கு வருவான். ஆனால் நிச்சயம் மனிதர்களுக்கு பிறக்க மாட்டான் என்பேன்.

குருவே அவருடைய பெயர் என்னவாக இருக்கும்?

அப்பனே சொல்கின்றேன் பின்வரும் காலங்களில்.

குருவே ஒரு மனிதன் ஒரு தவறை செய்கின்றான் அதனை அவனுடைய பங்கு எவ்வளவு? கலிபுருஷன் பங்கு எவ்வளவு?

அப்பனே இதனால் ஆனாலும் நல் முறையாக சித்தர்களைப் பிடித்துக்கொண்டால் கலியவன் ஓடிவிடுவான் இதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.அப்பனே.

குருவே சராசரி மனிதர்களுக்கும் பிரபலங்களுக்கும் என்ன வேறுபாடு ?ஒரே சரிசமமாக நடத்தப்படுவது இல்லை கோயில்களில் மற்ற இடங்களில் முன்னுரிமை ஏன் அவர்களுக்கு மட்டும்?

அப்பனே பிரபலங்கள் முன் ஜென்மத்தில் செய்த பல புண்ணிய காரியங்களால் பிரபலங்களாக பிறக்கின்றார்கள்.

நல் முறையாக மக்களுக்கு உதவி செய்தல் நீர்நிலைகளை வெட்டி குடிநீர் தானம் செய்து ஏழை பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது. ஏழை குழந்தைகளுக்கு கல்வி உதவி செய்வது ஊருக்காகவே வாழ்ந்து ஏரிகள் குளம் அமைத்து அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் வழங்கி நல் முறையாக கோமாதாக்களை பராமரித்து புண்ணிய காரியங்கள் செய்பவர்கள் மட்டுமே பிரபலங்களாக பிறக்கின்றார்கள் அப்பனே.

அப்பனே நல் முறையாக ஒருவன் புண்ணியம் செய்து புண்ணியம் செய்து அவன் புண்ணியம் மிகுந்து விட்டால் இறைவனே அவனது பிறவியை அவன் இஷ்டத்திற்கு தந்துவிடுவான் என்பேன் அதனால்தான் அப்பனே புண்ணியங்கள் செய்!!! புண்ணியங்கள் செய்!!! என்று சொல்லிக் கொண்டே வந்து இருக்கின்றேன் புண்ணியங்கள் செய்யச் செய்ய நல்லவையாகவே நடக்கும் என்பேன். நல் முறையாக ஐந்தறிவு ஜீவராசிகளுக்கும் பைரவ வாகனங்களுக்கும் கோமாதாகளுக்கு பசுக்களுக்கு அப்பனே நல் முறையாக உணவளித்து பராமரித்து வந்தால் புண்ணியம் பெருகும்.

அப்பனே ஒரு சூட்சுமத்தை சொல்கின்றேன் நல் முறையாக அப்பனே காமதேனு பசு திருவண்ணாமலையில் ஒரு கிராமத்தில் இப்பிறவியில் வளர்ந்து கொண்டிருக்கின்றது.

குருவே நாங்கள் திருவண்ணாமலை சென்றால் காமதேனுவை தரிசனம் செய்ய வேண்டும் அனுமதி தாருங்கள்.

அப்பனே இப்பொழுது அநியாயங்கள் மேலோங்கி நிற்கின்றது இப்போதைக்கு தரிசனம் இல்லை என்பேன்.

குருவே தவறு செய்யும் மனிதர்கள் நன்றாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு மேலும் மேலும் நன்மைகள் தான் நடந்து கொண்டிருக்கின்றது ஏன் இப்படி???

அப்பனே இனிமேலும் மனிதர்கள் திருந்தாவிட்டால் வாழ்வது கடினம் ஒரு மனிதன் தவறு செய்துவிட்டு அவன் நன்றாக இருக்கின்றான் என்றால் அவன் செய்த புண்ணியங்கள் பேசுகின்றது என்று அர்த்தம் அந்தப் புண்ணிய கணக்கு முடிந்தவுடன் அவனுடைய பாவக் கணக்கு ஆரம்பம் ஆகும் பொழுது அப்பனே  இறைவன் ஆட்டத்தை ஆரம்பிப்பான் அப்பொழுது தெரியும். அப்பனே.

குருவே சில அந்நிய மனிதர்களால்  நாட்டில் பல ஆலயங்கள் சிதைக்கப்பட்டன இதன் காரணம் என்ன??

அப்பனே நடந்தவை எல்லாம் நாடகம் என்பேன் நடத்தியவன் ஈசன் என்பேன்.

எல்லாம் ஈசன் கட்டளைப்படியே நடந்தவை என்பேன் சில ஆலயங்கள் சிவலிங்கங்கள் சக்திகள் குறிப்பிட்ட காலத்திற்கு மேல் அதன் சக்திகள் கீழ்நோக்கி பாயும்.

அப்படி சக்திகள் கீழ் நோக்கி பாய்ந்த கோயில்களை எல்லாம் ஈசனே தேர்ந்தெடுத்து பின் அழித்து  புதியதாக உருவாக்கிக் கொண்டான் என்பேன். யாரை தேர்ந்தெடுத்து இதைச் செய்வித்தானோ... அவர்களைக் கொண்டே உருவாக்குவான் ஈசன்.

குருவே மைசூருக்கு அருகில் அமைந்திருக்கும் நஞ்சன்கோடு நஞ்சுண்டேஸ்வரர் ஆலயம் குறித்து கூறுங்கள் 

அப்பனே நல் முறையாக அங்கு சென்று வந்தால் சில சில அதிர்ஷ்டங்கள் உருவாகும் என்பேன்.

மனிதர்களின் தவறால் ராகு கேது கிரகங்களால் தண்டிக்கப்பட்டு சில தோஷங்கள் ஏற்பட்டிருந்தால் அங்கு சென்று வழிபட்டால் உடனே அனைத்தும் நீங்கும் என்பேன் . நல்முறையாய் மனதில் எண்ணி நல் முறையாய்

எவை வேண்டும் என்று எண்ணி பின் அங்கு அங்கு சென்று தீபமேற்றி வழிபட்டு வந்தால் அதி சிறப்பு தரும் என்பேன் நினைப்பதை  நிச்சயம் நடத்தும் அத்தலம் என்பேன்.

நல் முறையாய் ராகு-கேது களும் மனமகிழ்ந்து கொடுப்பார்கள் என்பேன்.
ராகு கேதுக்களுக்கு முக்கிய தலமாகும் இத்தலம்.

தீபமிட்டு வருதல் அதி சிறப்பு தரும் !!! ராகு கேது தோஷங்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அங்கு சென்று வழிபட்டு வந்தால் அத் தோஷம் நீங்கி நலமுடன் வாழலாம். அப்பனே.

குருவே சரணம் !!!குளிர் பிரதேச நாடுகளில் வாழும் பாரத தேசத்தை சேர்ந்த அடியவர்கள் கடும் குளிர் காரணமாக அவர்களுக்கு விட்டமின் பி12 சத்து குறைபாடும் அமினியா நோய்களும் ஏற்படுகின்றன இவற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் சில மருந்துகளை பரிந்துரை செய்கின்றன அந்த மருந்துகள் அசைவ உணவு விதி அடிப்படையில் அமைந்துள்ளது இதைத் தவிர்த்து விட்டு ஜீவகாருண்ய முறையை கடைப்பிடிக்கும் அகத்தியர் அடியவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருந்துகள் என்னென்ன??? 

அப்பனே இவ்வுலகத்தில் திரிபலா திரிகடுகம் எனும் மூலிகைக்கு இருக்கும் பின் எதை என்று கூற மருத்துவ குணம் வேறு எதற்கும் இல்லை அதை பயன்படுத்தி வர அனைத்தும் நலமாகும்

குருவே சரணம் கடும் குளிர் வீசும் பிரதேச நாடுகளில் வாழும் அடியவர்கள் சரியாக குளிப்பதற்கும் பூஜைகள் செய்வதற்கும் முடிவதில்லை அதாவது இங்கே உள்ள அடியவர்கள் செய்யும் விதிமுறைகளை அங்கு செய்ய முடிவதில்லை அவர்கள் நாங்கள் எப்படி பூசைகளை செய்வது என்று கேட்கின்றனர்!!!!

அப்பனே இவையன்றி கூற தீபத்தை ஏற்ற சொல்!!! நிச்சயம் உண்மையான பக்தியை காண்பிக்க சொல்!!! நிச்சயம் நிச்சயம் அங்கே யான் வருவேன் ஈசன் அதாவது எதையன்றி கூட அனைத்து தெய்வங்களும் வருவார்கள் எதை என்று அறியாமலே இதை பலமுறை பலமுறையும் யான் சொல்லிவிட்டேன் எதை எதை என்று கூட தீபத்தை ஏற்ற சொல்!!! உண்மையான பக்தியை காட்டச் சொல்!!!

குருவே சரணம்! வீட்டில் அன்றாடம் வழிபடும் தெய்வ சிலைகளில் ஒரு சிலை சிறிது பின்னம் அடைந்து உள்ளது அதை வைத்து வழிபாடு செய்யலாமா???

அப்படியே பின் பொதுவாகவே சொல்வார்கள் பின் சிதிலமடைந்தவை பின் வைக்கக் கூடாது என்பேன் அப்பனே!!!!

குருவே சரணம்!! சிலர் சூரியக் கல் எனப்படும் சன் ஸ்டோன் மாலையை அணியலாம் என்று கூறுகின்றார்கள் அந்த சூரிய கல் மாலையின் விசேஷம் என்ன???

அப்பனே நலமாகவே இதன் தன் எதை என்று அறியாமலே சக்தி மிகுந்தவையாக அவை இருக்க வேண்டும் இவ்வாறு இருக்குமென்றால் அப்பனே  தைரியம் இருக்கும் என்பேன் அப்பனே எப்பொழுதும் கூட உடம்பில் எந்த ஒரு குறையும் வராது என்பேன் அப்பனே நல்விதமாக அனைத்தும் மாறிவிடும் என்பேன் அப்பனே ஆனால் சக்தி மிகுந்து காணப்படுவது எவை என்று அறிய அரிதாகிவிட்டது அப்பனே!!!! அனைத்திலும் அப்பனே போலியான வியாபார தந்திரமே அப்பனே!!!!

குருவே அன்றாடம் பூஜைக்கு பயன்படுத்தும் பூக்களில் கேந்தி எனப்படும் பூக்களை பூசையில் பயன்படுத்தலாமா???

அப்பனே எதை என்று கூற அவரவர் இடங்களில் கிடைப்பதற்கு தகுதியாகவே அனைத்தும் பயன்படுத்துகின்றார்கள் அப்பனே!!!!

குருவே சரணம் குருசேத்திரத்தில் இடைக்காடர் சித்தர் வந்து மனிதனின் ஜாதக கட்டங்களில் இருக்கும் கிரகங்களை பற்றி கூறியிருந்தார் அதில் ஒருவருடைய ஜாதகத்தில் ஒரு கட்டத்தில் நான்கு அல்லது நான்கு க்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் அதை மனிதர்களால் கணிக்க முடியாது எங்களைப் போன்ற சித்தர்களால் தான் முடியும் என்று கூறியிருந்தார் அதனைப் பற்றி கூறுங்கள்

அப்பனே எதை என்று கூற எவை என்றும் அறியாமலே அப்பனே நீங்கள் கேட்டுக் கொண்டே இருக்கின்றீர்கள் அப்பனே இறைவன் இறைவன் அருளை!!!  இறைவன் அருள் அப்பனே ஜாதககட்டத்தில் அப்படி இருந்தால் இறைவன் அருள் பரிபூரணமாக இருக்கும் என்பேன் இறைவன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே அவ்வளவுதான்!!!!

குருவே பைரவ வாகனங்களுக்கும் சரி பறவைகளுக்கும் சரி அவற்றினுடைய உணவு முறையை மனிதர்கள் மாற்றி விட்டார்கள் அதனால் அதற்கு நாங்கள் தரும் உணவு அதற்கு அதாவது உதாரணமாக பைரவர்கள் பிஸ்கட்டுகள் சாப்பிடுகிறார்கள் பறவைகள் தற்பொழுது தானியங்களை விட மசாலா கலந்த கலவையினை இனிப்பு பூந்திகளை தின்கின்றன இதனால் அவற்றிற்கு பாதிப்பு வருகின்றது நாங்கள் என்ன செய்வது

அப்பனே  எதை என்று அறியாமல் அப்பனே உங்களுக்கே தெரியும் எதனால் பாதிப்பு என்பதை கூட அதனால் விட்டு விட்டு எது பாதிப்பு இல்லாததோ அதை கொடுங்கள்!!!

குருவே சரணம் புண்ணிய நதிகள் அனைத்தும் இறைவன் அருளால் இறை தன்மையுடன் இருக்கின்றது ஒவ்வொரு புண்ணிய நதிகளிலும் நீராட வேண்டும் என்று நீங்கள் கூறியிருக்கிறீர்கள் எல்லா மனிதர்களும் இந்த புண்ணிய நதிகளில் நீராடுகின்றார்கள் அப்பொழுது அந்த இறைத்தன்மை மனிதருக்குள் ஏன் மாற்றத்தை ஏற்படுத்துவதில்லை??  மனிதன் மட்டும் ஏன் அதை இறைத்தன்மையை உணர முடிவதில்லை???

அப்பனே எதை எதை என்று அறிய ஆனாலும் அப்பனே எவை என்று கூட எல்லா மனிதர்களுக்கும் இவ்வளவு நதிகள் ஓடுகின்றதே!!!! ஆனாலும் இதற்கெல்லாம் பின் நீராடுவதற்கு இறைவன் சம்மதிப்பதில்லை என்பேன் அப்பனே அப்பொழுது புரிந்து கொள் நீயே!!! அப்பனே ஒருவன் பின் புண்ணியம் புண்ணியவானாக திகழ்ந்தால்தான் பின் எதை என்று அறியாமலே அதாவது எதை என்று தெரியாமலே நதிகள் எதை எதை என்று உணர்த்தும் அளவிற்கு கூட இறைவன் அப்பனே நீராடுவதற்கு வாய்ப்பளிப்பான் என்பேன் அப்பனே  அதை நீ புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

குருவே போற்றி!!!!

நாங்கள் அனைவரும் பக்தி செலுத்துகின்றோம் ஆனால் இதில் ஞானம்,  ஞானிகள் குறித்த பார்வையில் குழப்பங்கள் அதாவது மனிதர்களின் பல்வேறு வகையான உபதேசங்கள் வழிகாட்டுதல் என குழப்பமடைய செய்கின்றது 

அப்பனே எவையென்று கூற ஞானி ஆவது சாதாரண விஷயம் இல்லை... 

பட்டினத்தான் வாழ்க்கையை படியுங்கள்!!! அப்பனே இவையன்றி கூற பாதி அளவாவது உங்களுக்கு தெரிய வரும் மீதியளவு எங்கே சென்று விட்டது என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்!!!

அப்பனே யான் ஒன்றை தெரிவிக்கின்றேன்....அருணகிரி நாதன் சுகங்கள் என்பதையே அனுபவிக்காதவன் எதையென்று கூற ஆனால் பித்தன் ஆகவே சென்று கொண்டிருந்தான்!! ஆனால் அவனுக்கு பித்தத்திலும் அவனுக்கு இன்பம் இல்லை!!

ஆனால் அனைவருமே இவன் பெண் பித்தன பெண் பித்தன் என்று தான் கூறிக் கொண்டிருந்தார்கள்!!! ஆனால் அதில் கூட அவனுக்கு முற்றுப்பெறாத நிலை!!!

ஆனால் கடைசியில் ஏன்?? இந்த நிலைமை என்று கூட இறக்கக்கூடிய நேரத்தில் ஞானி!!........

எதையென்று கூட பின் கண் முன்னே காட்டினான் இதுதான்!!

அவனுடைய பிறப்பில் சந்தோஷமே இல்லை மகன்களே!!!!! 

எப்பொழுது சந்தோஷம் வந்ததென்றால் அப்பனே முருகன் வந்த பின்பு தான்!!!

போதுமடா !!! என்று கூட பல பாடல்களை பாடினான்!! எதையென்று கூட அதனால் யான் எவை என்று கூட இப்பொழுது கூட

ஆடி அசைந்தும் அசையாமல் வருவது ஏதப்பா!!!!

ஏதப்பா !!நின்றும் நிலைக்காமல் போவது ஏதப்பா!!

ஏதப்பா வந்ததும் வருவதும் பின் தங்கிச் செல்வதும் ஏதப்பா!!!

ஏதப்பா இப்பிறவி உண்மை நிலை உண்மை வந்ததும் பொய் போனதும் பொய் வந்ததும் உண்மை நிலையை சரியாக புரிந்து கொள்வதும் இல்லையப்பா

அப்பனே நிலைமைகள் மாறும்

நிலைகள் மாறும் பொழுது மாற்றம் உருவாகும் போதும் மாறிய பின் உருவாவது ஏதப்பா!!!

ஏதப்பா நிலைமைகளை கண்டு கண்டு தாழ்ந்து தலை குனிந்து தலை குனிந்து தலை நிமிர்ந்து வாழ்ந்தால் வாழ்ந்து வந்தது ஏதப்பா!!! ஏது?? 

மரம் செடி கொடிகளப்பா!!!!

தாழ்ந்து இலைகள் தாழ்ந்து போகும் நின்று போகும் வீழ்ந்து போகும் மறைந்து போகும் ஆனால் மரமோ பின் மனிதர்கள் வெட்டினால் தான் உண்டு!!!

அதுதான் வாழ்க்கை அப்பன்களே !!!சிந்திக்க வேண்டும்

ஒவ்வொரு வார்த்தையையும் கூட அனுபவங்கள் பட்டுப்பட்டு அதனால்தான் ரகசியங்களாக உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கின்றேன்!!!!

இதையெல்லாம் நீங்கள் சிந்திக்க வேண்டும் சிந்தித்தால் தான் அப்பன்களே உண்மை நிலைகள் புரியும்!!!!

புரியும் என்பது புரியாவிடிலும் புரிந்து கொண்டு புரிந்து கொண்டு செயல்படுவது செயல்பட்டு அழைத்து வருவது அழைத்து நிற்பது முன் நிற்பது பின் நிற்பது நீங்கள் நடுவில் நிற்பது

ஆனால் முன் நிற்பது ஏதும் தெரியவில்லை பின் நிற்பதும் ஏதும் தெரியவில்லை நடுவில் நிற்கின்றீர்கள் பின் சுற்று முற்றும் பார்க்கின்றீர்கள் யாரும் இல்லை!!

ஏன் இந்த நிலைமை இதை நீங்கள் நிச்சயம் உணர்ந்தாக வேண்டும்!!!

ஆனால் உண்மை நிலை யாரும் இல்லாமல் இருக்கின்றோமே என்று நினைக்கின்றீர்களா!!!!

சித்தர்கள் இருக்கின்றார்கள் மகன்களே!!

 எவற்றில் இருந்து தன்மைகள்!!

பொய்த்துப் போனது உலகமா? பின் மெய்யானது உலகமா? இவற்றிற்கெல்லாம் விடைகள் சரியாக கண்டுகழிந்தால் நிச்சயம் வாழ்ந்து விடலாம்!!

வாழ்க்கை வாழ்வதற்கும் ஆனால் வீழ்வதற்கும்!!!

நிச்சயம் வாழ்க்கை என்பது அனைவரும் வாழ்வதற்கே என்று இருக்கின்றார்கள்!!!

 ஆனால் யான் சொல்வேன்!!! வீழ்வதற்கே!!! 

மனிதனின் நிலைமைகளை யான் ஒவ்வொன்றையும் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் மகன்களே!!!!

எதை என்று உணர உணர மனிதனின் செயல்கள் எல்லை மீறி கொண்டே போகின்றது.

ஆனால் மனிதன் நினைத்துக் கொண்டிருக்கின்றான்!! யாம் வாழலாம்!!! மனைவி சுற்றார் முற்றார் உற்றார் உறவினர் என்றெல்லாம்!!!

ஆனால் அது எங்களுக்கு மட்டுமே தெரியும்!!

எப்படி எல்லாம் அவனால் கஷ்டங்கள் வரும் வரும் என்பதை எல்லாம்!!!

மனிதர்கள் ஏன் இந்த நிலைமை எதை என்று உணர்வதற்குள் அப்பனே மனிதன் பின் திருடனாக மாறிவிடுகின்றான்!!

ஏன் மனிதன் திருடினால் தான் திருடனா!??????

ஆனால் இல்லை மனதில் தீய எண்ணம் இருப்பவனே திருடன் அவந்தனுக்கு தான் பின் பாவங்கள் அதிகம் சேரும் உணர்ந்து கொள்ளுங்கள் மகன்களே இது யாருக்கும் தெரியாது!!!

அப்பன்களே பின் நீங்கள் யோசிக்க வேண்டும் அருணகிரிநாதன் ஒரு பாடலை பாடினான்

எட்டுவதற்கும் எட்டாத அளவிற்கும் எட்டாத உயரத்திற்கும் சென்று விட்டால் 
சென்றிருப்பவன் விடுவானா??

விடுவது என்பதை எல்லோரும் பின் மனிதனை முயற்சி எடுப்பானா முயற்சி எடுத்து எடுத்து அவதி அதைப் பட்டு நின்று நின்று மேல் நோக்கிச் செல்லலாம் சூரியனையும் சந்திரனையும் தொட்டுவிடலாம் மனிதனின் நினைப்புதான் கெட்டது கெட்டது எதனால் வாழ்க்கையும் கெட்டது 
வருந்தாதே வருந்தி விட்டு செல்லாதே
சென்றிட்டு மீளாதே மீளாதே 
மீண்டிட்டு மீண்டிட்டு கும்பமிட்டு கும்பமிட்டு
குள்ளமிட்டு பின் பணிந்து நின்று முட்டிப்போட்டு பின் உட்கார்ந்தால் தெரியுமடா உணர்ந்தால் தெரியுமடா

ஆனால் எதனையென்று நோய் கூட எதிலிருந்து வருவது எவற்றில் இருந்து வருவது தெரியாத அறியாத மனிதன் அதைக் கூட தெரியாத மனிதனுக்கு வாழ்க்கையின் ரகசியம் தெரிந்து உள்ளதா? என்ன ??

நிச்சயம் தெரியாது

முட்டிக்கால்கள் எதை என்றும்  இட்டு அதன் படி நடந்தால் வலி தெரியும் இதுதானப்பா வாழ்க்கை! நடந்து தான் பாருங்கள் அப்பொழுது புரியும் எவ்வாறு வாழ்க்கை என்பதை கூட

இதைத்தான் மனிதன் ஒவ்வொருவனும் செய்து கொண்டால் அப்பொழுது தெரிந்துவிடும்

அப்பனே அப்பா முருகா ஈசா!! இதுதான் வாழ்க்கையா என்று கூட

நிச்சயம் அப்பனே ஒவ்வொருவனின் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ள பின் கால்களை மடக்கி பின் நடந்தால் புரியும் இதுதான் அப்பன்களே வாழ்க்கை!!!!

வாழ்க்கை என்பதை கூட சொல்வதற்கு தகுதியான வசதிகள் உள்ளதா இல்லையா??

முற்போரிட்டு இதனையென்று கூற இதனைத் தான் கந்தன் உரைத்திடுவானா என்ன!!!

நிச்சயம் உரைத்திடுவான்...எதையென்று கூட... 

ஆனாலும் பக்குவ நிலைகளை தந்தாக வேண்டும் பக்குவ நிலைகளை தந்து தந்து செயல்பட்டால் தான் வாழ்க்கையில் பின் எல்லையில்லா மாற்றங்கள் எல்லையில்லாத மாற்றங்கள் எதற்காக கூன் உடம்பு எதற்காக எதற்காக ??

பிறக்கும் போதும் கூன் உடம்பு பின்  இறக்கும் போதும் கூன் உடம்பு

ஆனால் நிமிர்ந்து வாழ்கின்றான் நடுவில் இது பொய்யானது.

எப்பொழுதெல்லாம் மனிதன் நிமிர்ந்து வாழ்கின்றானோ நிச்சயம் தாழ்ந்தாக வேண்டும். தாழ்ந்து இருக்கக்கூடியவன் நிமிர்ந்தாக வேண்டும் ஆனால் நிமிர்ந்து வாழ்வதென்றால் கடினம் அக் கடினத்திற்கு உழைப்புத்தான் இதற்கும் சம்பந்தமான ஈசன்!!!

அதனால் நிச்சயம் உழைப்பை பெற்று ஈசன் இருக்கின்ற பொழுது நிமிர்ந்து நடங்கள்!!! சித்தர்களின் ஆசிகளோடும் ஞானிகள் ஆசிகளோடும் ஒன்றோடு ஒன்று!!!

ஆனாலும் எதனை நோக்கி எவற்றை நோக்கி பயணிப்பது தெரியாமல் நடந்து கொண்டிருக்கின்றான் சென்று கொண்டிருக்கின்றான் மனிதன்.

அப்பன்களே ஒரு வாகனத்தில் ஏறும்பொழுதும் பின் இறங்கும் பொழுதும் அமைதியாக இருங்கள் ஆனால் நடுவில் நடக்கின்றது என்பதை பாருங்கள் அதுதான் அப்பன்களே சூட்சும ரகசியங்கள்!!!

ஆனால் சில மனிதர்கள் அப்படியும் இப்படியும் ஆடுவார்கள் இவ்வாட்டத்தின் முடிவில் மீண்டும் இறங்கித்தான் வரவேண்டும் அப்பனே.

யான் சொல்லிவிட்டேன் அப்பனே இதன் அர்த்தத்தை எல்லாம் நீங்கள் புரிந்து கொண்டால் உங்களுக்கு விடைகள் இதிலேயே அடங்கியுள்ளது அப்பனே!!! இவற்றில் இருந்து கூட!!!!

இதுதான் அப்பனே உண்மை நிலை!!

இதுதான் மனிதனின் நிலைமையும் கூட.... எங்கிருக்கின்றான் எங்க இருக்கின்றான் இறைவன் என்று கூட

ஆனால் உங்கள் உள்ளத்திலே இருக்கின்றான் இறைவன்!! ஆனாலும் இதனையும் என்று கூட கண்ணாமூச்சி விளையாட்டு என்கின்றார்களே அப்பன்களே

இதனை நீங்கள் விளையாட வேண்டும் அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்

கண்களை கட்டிக்கொண்டு நடங்கள் அப்பொழுது தெரியும் வாழ்க்கையின் ரகசியங்கள்.

இப்படித்தான் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே இதுதான் உண்மையான வாழ்க்கை அப்பனே அக்கண்களை மூடிட்டு அப்பன்களே சிறிது தூரம் நீங்கள் நடக்க வேண்டும் அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்...

அப்பனே  ஞானியாக விழைவதற்கும் வழிகள் இல்லையப்பா

அனைவரும் நம்பிக் கொண்டிருக்கின்றார்கள்

சித்தர்களை பின் வணங்கினால் அனைத்தும் தருவார்கள் என்று!!!

இல்லை அப்பனே யாங்கள் நிச்சயம் பிறவி பெருங்கடலை பின் நிச்சயம் அறுத்து விடுவோம். அதனால் பல இன்னல்கள் பல கஷ்டங்கள் படத்தான் வேண்டும் அப்பனே.

பிறந்து பிறந்து அப்பனே எதையெதையோ உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் அதற்காக பிறப்புகளே வேண்டாம் என்பதைக் கூட அப்பனே யான் எதையென்று!!!!

அதனால் நிச்சயம் என்னை நம்பியவர்களுக்கு சில கஷ்டங்கள் வந்தாலும் பிறப்புக்கள் இல்லையப்பா!!!

ஈசனும் பார்வதி தேவியும் ஏதோ ஒன்று யோசித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே

ஆனால் யான் ஈசன் வேறா??  பின் பார்வதி வேறா??? என்றெல்லாம் ஆனாலும் மூலனின் கூற்றுப்படி இறைவன் ஒன்றே

ஆனாலும் பல அவதாரங்கள் உங்களுக்குச் சொல்லிவிட்டாலும் மனிதர்களுக்கு புரியாது !!!

சித்தர்களின் தன்மைகள் அதனால் மனிதனுக்கு ஏற்றவாறே உரைத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பன்களே!!! 

இவை என்று கூட அறிய அறிய

முற்போக்கு பிற்போக்கு இடைப்போக்கு ஆனால் இடைப்போக்கு என்பதை கூட கண்டு தெளிந்தால் அப்பனே இதுதான் மெய்யப்பா! மெய்யானதும் பொய்யானதும் பொய்க்குப் பின் வருவதும் கடமையும் பின் ஒன்றா இல்லை இரண்டா

இதனால் நிச்சயம் நீங்கள் நீர் அருந்தினால் எதை என்று கூட மற்றவர்கள் ஏன் நீரை அருந்துகின்றீர்கள் என்பதை யாரும் கேட்பதில்லை

ஆனால் நிச்சயம் இவ்வாறு தான் உலகில் நடந்து கொண்டிருக்கின்றது அவனவன் கர்மா சுமந்து கொண்டிருக்கும் பொழுது ஏன் கர்மாவை சுமந்து கொண்டிருக்கிறாய் என்பதை யாரும் கேட்பதில்லை

ஆனால் இறைவன் நிச்சயம் கேட்பான்!!! கடைசியில் அப்பொழுதுதான் கைகள் கட்டி பதில்கள் அளிக்க வேண்டும்.

அதனால் அப்பன்களே உண்மை நிலையை புரிந்து புரிந்து செயல்பட்டு செயல்பட்டு செயலாக்கி கொண்டே இருந்தால் நன்மைகள் முற்றுப்பெற்றதாக போய்விடும் முற்றுப்பெற்றது வாழ்க்கை அப்பனே!!!

எதை என்று உணர்வதற்குள் காலங்கள் சென்று விடும் இதனை நம்புவதற்கும் வழிகளும் தெரிவதில்லை அதனால் அமைதியாக இருங்கள் நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்று இருங்கள் ஆனால் யோசித்துக் கொள்ளுங்கள்!!!

இம்மைக்கும் மறுமைக்கும் மறுமைக்கும் உகந்திருப்பது என்ன வித்தியாசம் என்றால் ஒன்றும் இல்லை இதனால் நன்மைகள் அப்பனே ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்!!!

அப்பனே கஷ்டங்கள் பட்டு விட்டீர்களா நீங்கள் நீங்கள் தான் யோசித்துக் கொண்டிருக்கிறீர்கள்

இயேசுநாதரிடம் யான் முன்பே முறையிட்டு விட்டேன் இப்படி எல்லாம் சென்றால் உந்தனுக்கு தரித்திரங்கள் ஏற்பட்டு விடும் மனிதர்கள் கொன்றுவிடுவார்கள் என்று!!!

ஆனால் இயேசு நாதனோ யான் அனைத்திற்கும் துணிந்தவன் அப்பொழுதுதான் எதை என்று கூட ஞானியாக முடியும் என்று கூறிவிட்டான் அப்பனே!!!

அதனால் அவந்தன் வாழ்க்கையில் ஒன்று கூட சுகங்களை அனுபவிக்கவில்லை மகன்களே அப்பொழுது யார் ஞானியாக ஆகின்றார்கள் என்று பார்த்துக் கொள்ளுங்கள் மகன்களே!!!

எப்படி எல்லாம் பக்குவங்கள் பட வேண்டும்....  எதையென்றும் எப்படி என்றும் உணர்ந்து கொள்ள வேண்டும்!!!!

பல நூல்களைப் படித்து உண்மை நிலைகளை தெரிந்து கொள்ள வேண்டும்!!!நல்முறையாய் பக்தியை கடைப்பிடித்து இறைவனை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். அனைத்திற்கும் காரணம் இறைவனே! யாங்களும் வந்து வழிகாட்டி அழைத்துச் செல்வோம் அப்பனே 

நலமாக நலமாக ஆசிகள் ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!

Friday 21 October 2022

சித்தன் அருள் - 1203 - குளிக்கும் முன் சொல்ல வேண்டிய ஸ்லோகங்கள்!


வணக்கம் அகிகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமான், இந்த மாதம், காவேரி, தாமிரபரணி நதிகளில், தன் சேய்கள் அனைவரும் ஒருமுறை ஸ்நானம் செய்து தம்மை தீய சக்திகளிலிருந்து காத்துக்கொள்ள வேண்டும் என (சித்தன் அருள் தொகுப்பு 1201 இல்) கூறியுள்ளார்.

அவர் எழுதிய தாமிரபரணி புராணத்தில் மேற்கண்ட இரு ஸ்லோகங்களையும் ஒருவர் குளிக்கும் முன் நீரருகில்/நீரில் நின்று கூறியபின் குளிக்க அது உடல், மன, கர்ம சுத்தத்தை கொடுக்கும் என உரைத்துள்ளார்.

ஆகவே, உங்கள் தேவைக்காக, அவர் அருளிய மந்திரங்களை, ஞாபகப்படுத்துவதற்காக இங்கே சமர்பிக்கிறோம்.

எல்லோரும், இதை மனப்பாடம் செய்து, பயன் பெறுமாறு அகத்தியர் அருளால் கேட்டுக்கொள்கிறேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்! 

Thursday 20 October 2022

சித்தன் அருள் - 1202 - பொதிகை மலை அகத்தியர் சாம்பவார் வடகரை, தென்காசி!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

தென்காசிக்கு அருகிலுள்ள சாம்பவார் வடகரை என்கிற கிராமத்தில், நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் சிலையை பிரதிஷ்டை செய்துள்ளார்கள். அது, பொதிகைமலைமேல் இருக்கும் சிலையை போலவே அமைந்துள்ளது. சில தகவல்கள்.

பொதிகை மலை அகத்தியர்

பொதிகை மலை அகத்தியரை தரிசிக்க முடியாத அன்பர்கள் வசதிக்காக பொதிகைமலை பிடிமண் எடுத்து ஸ்தாபிக்கப்பட்ட அகத்தியர் சிலை தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.    இங்குள்ள 1200 ஆண்டுகள் பழமையான அகத்தீஸ்வரர் கோவிலில் ஈசன் அருளாலும், மகா குரு பொதிகைமலை அகத்தியர் ஆசியாலும் இது சாத்தியமானது. 
      
இங்குள்ள அகத்தியர் சிலை பொதிகை மலையில் உள்ள அகத்தியர் சிலையையொத்த உருவமைப்பை பெற்றுள்ளது இதன் சிறப்பம்சமாகும்!
     
மேலும் பொதிகைமலை உச்சியில் அகத்தியர் சிலையின் கீழிருந்து பிடிமண் என்ற திருமண் எடுத்து சாம்பவர் வடகரையில் ஸ்தாபித்திருப்பது சிறப்பம்சமாகும்!
     
பொதிகைமலை தரிசன டிக்கட் கிடைக்காதவர்கள், மலைஏற முடியாத அன்பர்கள், பெண்கள் குழந்தைகள் என அனைவரும் சென்று வழிபட ஏதுவாக இந்த அகத்தீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது!
        
பொதிகைமலை அகத்தியரே இந்த கோவிலில் தங்கி இருந்து சிவபூஜை செய்துவந்ததாக இந்த கோவிலின் வரலாறு கூறுவதால் பொதிகை மலை அகத்தியர் சிலை வைக்க மிகச்சிறந்த இடமாக இந்த இடம் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது!
     
தற்போது இந்த அகத்தீஸ்வரர் கோவிலில் நாள்தோறும் மதியம் அன்னதானம் கோவில் நிர்வாகத்தினரால் சிறப்பாக செய்யப்பட்டு வருகிறது!
     
இங்கு அகத்தியர் வழிபாடு நடத்திய சிவலிங்கம் மற்றும், சாம்பவ மூர்த்தி வழிபாடு நடத்திய குகை சிவலிங்கம் ஆகிய இரண்டு அழகான சிவலிங்கங்கள் உள்ளது சிறப்பம்சமாகும்!
      
இதில் குகைக்குள் அமைந்துள்ள சிவலிங்கம் மீது இயற்கையாக நீர் சொட்டுவதை நாம் காணலாம்!
     
அதே போல ஆண்டில் பெரும்பாலான நாட்களில் இங்கு அமைந்துள்ள அகத்தியர் அருவியிலும் நீராடலாம்! இந்த குகை சிவலிங்கம் முன்பு அமர்ந்து தியானம் செய்யலாம்!
     
இவ்வளவு சிறப்புகள் மிக்க கோவிலில் தற்போது பொதிகைமலை அகத்தியரின் திருமேனியும் சேர்ந்து அருள்பாவிப்பது இறைவனின் அருளேயாகும்!
   
எனவே பொதிகைமலை போக முடியாத அன்பர்கள் தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை அகத்தீஸ்வரர் கோவில் சென்று பொதிகை மலை அகத்தியரை தரிசிக்கலாம், தியானிக்கலாம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

Wednesday 19 October 2022

சித்தன் அருள் - 1201 - அன்புடன் அகத்தியர் - அகத்தியப்பெருமானின் உத்தரவு!











வணக்கம் அகத்தியர் அடியவர்களே

19/10/2022 நவமி திதி ஆயில்ய நட்சத்திரம் அன்று குருநாதர் அகத்திய பெருமான் இட்ட உத்தரவு!!!!

இவை என்று கூற அப்பனே ஐப்பசி மாதமான இம்மாதத்தில் அனைவரும் என் நதிகளான காவிரியிலும் தாமிரபரணியிலும் நீராடுதலை கட்டாயமாக செய்ய வேண்டும் அப்பனே

இதை யான் அறிவியல் பூர்வமாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே 

இவ் ஐப்பசி மாதத்தில் துருவ் எனப்படும் நட்சத்திரம் அதைக் கோள் என்று கூட வைத்துக் கொள்ளலாம் அப்பனே அவ் நட்சத்திரமானது இவ் பூமியை நெருங்கி இம்மாதத்தில் பிரகாசிக்கும்...

சூரியனும் சந்திரனும் கீழ்நோக்கி பயணிக்கும்!!!! மேலிருந்து கிடைக்கும் நல் சக்திகளை இவ் கோளானது தடுத்துவிடும்!!! மேலிருந்து கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் மூலம் கிடைக்கின்ற நன்மை தரக்கூடிய ஒளியை இவ் கோளானது உள்வாங்கி தீயதை பிரதிபலிக்கும்!!!!

இவ் தீய ஒளியானது மனிதர்கள் உடம்பில் படும் பொழுது நோய் நொடிகள் இறைபலங்கள் கிட்டாமல் போவது போன்ற பலன்கள் ஏற்படும்.....

இவற்றில் இருந்து மனிதர்களை காக்கவே யான் காவேரி நதியை யான் உருவாக்கினேன் தாமிரபரணி நதியையும் உருவாக்கினேன்!!!! இதை யான் அறிவியல் ரீதியாகவே உருவாக்கியுள்ளேன்!!!

இவ்வுலகமானது அழிவை நோக்கியே செல்கின்றது... அநியாயங்களும் அக்கிரமங்களும் பெருகும் மனித குலம் எண்ணிலடங்கா துன்பத்திற்கு ஆளாவார்கள்..

நல்லோர்களையாவது யான் காப்பாற்ற வேண்டியே யான் வாக்குகளாக செப்புகின்றேன் !!!

அவ் தீய ஒளியில் இருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ள கட்டாயமாக காவிரியிலும் தாமிரபரணியும் நீராட வேண்டும் நவ கிரகங்களின் ஒளியும் இம்மாதத்தில் கதிர்வீச்சாக அதிகமாக இருக்கும் அதை மனிதர்களுக்கு நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளவே யான் நவ கைலாயங்களையும் நவ திருப்பதிகளையும் யானே உருவாக்கினேன்!!!!

மனிதர்கள் அந்த தீய ஒளியில் இருந்து தப்பித்துக் கொள்ள நவகிரகங்களின் நன்மைகளைப் பெற நதிகளில் நீராடிவிட்டு நவகைலாயங்களையும் நவதிருப்பதிகளையும் நல்முறையாக பக்தியோடு தரிசனம் செய்தால் நன்மைகள் பெருகும் அப்பனே!!!!!

என்னுடைய நதிகள் ஆன காவிரியிலும் தாமிரபரணியிலும் இம்மாதத்தில் ஈசனும் பெருமாளும் இவையன்றி கூற பிரம்மாவும் நல்முறையாக வந்து நீராடிச்செல்வார்கள் அப்பனே!!!!

இம் மாதத்தை இதை சனியவனும் சரியாகப் பயன்படுத்திக் கொள்வான்!!!!!! இம்மாதத்தில் சனியவன் ஆதிக்கமும் சற்று அதிகமாக இருக்கும் அவந்தனுடைய சக்திகள் மிகுந்து காணப்படும்..... சனியவன் என்பவன் நேர்மையுடனும் உண்மையான பக்தியுடன் நல் ஒழுக்கத்தோடு இருப்பவர்களுக்கு வாரி தருவான்!!!!! தீய செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இம் மாதத்தில் அவந்தன் தக்க தண்டனையும் வழங்குவான்!!!!!

வரும் காலங்கள் அழிவு காலங்கள் என்னுடைய ஒவ்வொரு வாக்கிற்கும் அறிவியல் பூர்வமாகவே யான் நிரூபித்து உருவாக்கியுள்ள பெருமாளின் நவதிருப்பதிகள் ஈசனின் நவகைலாயங்கள் நல்முறையாக நீராடி விட்டு நீராடி விட்டு சென்று சென்று கொண்டே இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம் அப்பனே

இன்னும் என்னுடைய வாக்கு ஒவ்வொன்றும் அறிவியலோடு சம்பந்தப்படுத்தி அறிவியலும் இறைவனும் எப்படி என்பதை நான் ஒவ்வொரு வாக்குகளாக எடுத்துரைப்பேன்!!!!!

என் பக்தர்கள் இதனை பயன்படுத்தி நன்றாக வாழுங்கள்

இவ்வுலகம் அழிவு நிலையை நோக்கி செல்கின்றது சித்தர்கள் யாங்கள் நல் மனிதர்களையாவது காப்பாற்ற வேண்டியே வாக்குகள் உரைத்து கொண்டிருக்கின்றோம்!!!

இவ்வுலகத்திற்கு மனிதனாலே மனிதர்களுக்கு அழிவு ஏற்படும் அக்காலம் வந்துவிட்டது!!!! சித்தர்கள் நாங்கள் ஒவ்வொரு ரூபத்திலும் சென்று ஒவ்வொரு மனிதர்களின் மனதை மாற்றி அவ் அழிவுகளை தடுத்துக் கொண்டே இருக்கின்றோம்!!!!!

என்னுடைய பக்தர்கள் வாழ வேண்டும் அப்பனே!!!!!

இன்னும் சூட்சுமமாகவே யான் என்னென்ன அறிந்திருக்கின்றனோ அவற்றையெல்லாம் இவ்வுலகத்திற்கு அறிவியல் பூர்வமாகவே தெரிவிக்கும் சமயங்கள் வந்துவிட்டது!!!!!

நல்லோர்கள் வாழட்டும் அப்பனே!!!!

அடுத்த வாக்கில் கங்கையைப் பற்றியும் கங்கை நீராடுதலை பற்றியும் அறிவியல் ரீதியாகவே எடுத்துரைக்கின்றேன். அப்பனே......

ஆசிகள் ஆசிகள் நலமாக நலமாக!!!!!

இவ்வாக்கு அகத்தியர் அடியவர் ஒருவர் சுவடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை தொடர்பு கொண்டு நாடி வாசிப்பிற்கு கேட்ட பொழுது குருநாதர் தந்த பொது வாக்கு. என் பக்தர்கள் அனைவரும் இதை கட்டாயம் மேற்கொள்ளுதல் வேண்டும் என்று கூறிவிட்டு இதன் பிறகு வாக்குகள் உரைக்கின்றேன் என்று கூறியிருக்கின்றார்!!!! அடியவர்கள் அனைவரும் துலா ஸ்நானம் எனப்படும் தாமிரபரணி நதியிலும் காவிரி நதியிலும் நீராடி விட்டு நல் முறையாக தரிசனங்கள் செய்து விட்டு குருநாதர் உரைத்த வழியில் சென்று இறையருள் பெறுவோம்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Tuesday 18 October 2022

சித்தன் அருள் - 1200 - அந்தநாள் >> இந்த வருடம் 2022 - கோடகநல்லூர்!

 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமான் நமக்கு தெரிவித்த மிகச்சிறந்த/முக்கியமான முகூர்த்த நேரங்களில் ஒன்றான "கோடகநல்லூர் நீளா பூமி சமேத ஸ்ரீ ப்ரஹன்மாதவ பெருமாளுக்கு" அபிஷேக ஆராதனைகள் செய்து அருள் பெறும் நாள் வருகிற நவம்பர் மாதம் 6ம் தேதி (ஞாயிற்று கிழமை) அன்று வருகிறது.

அதை பற்றி நாடியில் அகத்தியப்பெருமானிடம் வினவியபோது, "பெருமாள் இப்பொழுதிலிருந்தே தயாராகிக் கொண்டிருக்கிறார்."  என உரைத்தார். இது நம் குருநாதருக்கு மிகப்பெருமையான விஷயம், ஏன் என்றால் அன்று கோடகநல்லூரில் இருந்து பெருமாளுக்கான சேவைகளை செய்யப்போவதே அவர்தான்.

ப்ரஹன்மாதவ பெருமாளின் அருளாலும், நம் குருநாதரின் அருளாலும், அன்றைய அபிஷேக பூஜைக்கான விஷயங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. அகத்தியர் அடியவர்கள் அனைவரும் கோடகநல்லூர் வந்திருந்து அகத்தியப்பெருமான் நடத்தும் அபிஷேக பூஜையில் கலந்து கொள்ளும்படி "சித்தன் அருள்" சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.
  1. அபிஷேக பூஜை காலை 9.30/10 மணிக்கு தொடங்கும். அகத்தியர் அடியவர்கள் முன்னரே வந்து, தாமிரபரணியில் நீராடி பூஜையில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம்.
  2. எல்லா வருடமும் போல் உழவாரப்பணிக்கான வாய்ப்பு கிடைத்தால், அகத்தியரின் அடியவர்கள், இயன்றவரை ஏற்று செய்து, அகத்தியர்/பெருமாள் அருள் பெற்றுக் கொள்ளவும்.
  3. அந்த புண்ணிய தினம் ஞாயிற்று கிழமையில் வருவதால், அனைவருக்கும், வந்து பங்குபெறும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், முன்னரே அதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக இப்பொழுதே தெரிவிக்கப்படுகிறது.
அகத்தியப்பெருமானின் கூற்றின் படி அந்த முகூர்த்த நாள் என்பது

  • எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள்.
  • தாமிரபரணியின் பெருமையை (இந்த நதி தீர்த்தத்தில் அன்று நீராடினால், அவர்களின் 1/3 பாபத்தை தாமிரபரணி தாய் அழித்து சுத்தம் செய்துவிடுவாள்) அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள்.
  • அன்றைய தினம், அனைத்து நதிகளும், தாமிரபரணியில் நீராடி தங்களை சுத்தி செய்து கொள்கிற நாள். ஆகையால், அன்று அங்கு நீராடி, அடியவர்களும், தங்களை சுத்தி செய்து கொள்ளலாம்.
  • கருடாழ்வார், விஸ்வரூபம் எடுத்த நாள்.
  • அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
  • சித்தன் அருளை வாசிக்கும், எத்தனையோ அடியவர்களின் வேண்டுதலை/பிரார்த்தனையை நிறைவேற்றிய முகூர்த்த நாள்.
  • 06/11/2022 - ஞாயிற்றுக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.
  • பூக்கள், துளசி உதிரியாகவோ, மாலையாகவோ, சிறிது பச்சை கற்பூரம், பெருமாளுக்கு பூஜைக்கு வாங்கி கொடுத்து, பிரார்த்தனையை கொடுத்து, அவர் அருளை பெற்றுக் கொள்ளுங்கள்.
  • அன்றுகோயிலுக்கு வருகிற அகத்தியர் அடியவர்கள், முடிந்தவரை முகக்கவசம் அணிந்து வரவும். நம்மால் பிறருக்கு ஒரு ஊறு விளைந்து விடக்கூடாது,என்பதில் கவனமாக இருங்கள்.
  • நெல்லை சந்திப்பை அடைந்தவர்கள், தீவுத்திடலில் உள்ள தற்காலிக பேரூந்து நிலையத்தில், சேரன்மாதேவி செல்லும் பஸ்சில் நடுக்கல்லூரில் இறங்கி அங்கிருந்து 1 1/2 கி.மீ நடந்தோ, ஆட்டோவிலோ பயணித்து கோடகநல்லூரை அடையலாம்.

பெருமாள் இப்பொழுதே தயாராகிறார் என்கிற வாக்கு மிக சிறப்பான குருநாதர் செய்தி, என்பதிலிருந்து அனைவருக்கும் அருள் கிடைக்க வழி வகுக்கிறார் என்பது உண்மை. ஆகவே, அனைவரும் வந்திருந்து அவர் அருள் பெற்று செல்க, என சிரம் தாழ்ந்து வேண்டிக்கொள்கிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Monday 17 October 2022

சித்தன் அருள் - 1199 - அன்புடன் அகத்தியர் - வஜ்ரேஷ்வரி /பஜ்ரேஷ்வரி காங்ரா தேவி ஆலயம். நாகர்காட் காங்ரா. ஹிமாச்சல் பிரதேசம்







30/7/2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் :51 சக்திபீடங்களில் ஒன்றான ஸ்ரீ வஜ்ரேஷ்வரி/பஜ்ரேஷ்வரி காங்ரா தேவி ஆலயம். நாகர்காட, காங்ரா. ஹிமாச்சல் பிரதேசம். 

உலகை ஆளும் நமச்சிவாயனை பணிந்து வாக்குகளாக ஈகின்றேன் புசுண்டனவன்.

எண்ணற்ற கோடிகள் மனிதன் பின் பிறப்பெடுத்தாலும் இக்கலி யுகத்தில் மனிதன் நிச்சயம் திருந்தப் போவதில்லை!!!! திருந்தப் போவதில்லை!!!!

யான் எதை என்று அறிய இதனால் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் ஒவ்வொரு மனிதனின் நிலைமையும் கூட!!!!

ஆனால் மனிதனின் நிலைமை எவ்வாறு மாறுபடுகின்றது என்பதை கூட நினைக்கவில்லையே!!!! நினைக்கவில்லையே!!!

பின் நினைத்து நினைத்து உருகி உருகி வாழ்ந்து வாழ்ந்து வாழ்ந்து மடிந்து மடிந்து மீண்டும் எதனையென்று எங்கு சென்றான் என்பதையே தெரியாமல் தெரியாமல் எவை சொர்க்கமா!??? நரகமா??? இதையென்று தெரியாமல் மீண்டும் பின் பிறந்து சொர்க்கம் நரகம் இவற்றைப் பற்றி தெரியாமல் செல்கின்றானே!! மனிதன்!!

பின் மனிதனை பல மனிதர்கள் புத்தியுள்ளவர்கள் என்பார்கள்!!! ஆனால் யானோ புத்தி இல்லாத மனிதன் அறிவு கெட்ட மனிதன் என்பதை நிச்சயம் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இன்னும் ஏராளமான காலங்களில் என்னென்ன நடக்கப் போகிறது என்பதை கூட யான் உற்று பல வழிகளிலும் கூட கணித்து வைத்திருக்கின்றேன்!!!

ஆனால் நிச்சயம் வரும் காலங்களில் மனிதனின் நிலைமை பார்த்தே அவை தனை உரைத்து விடுகின்றேன்!!!

அறியாமல் அறியாமல் செய்த பாவங்கள் என்னென்ன???
மனிதா ஜென்ம ஜென்மங்களாய் செய்த பாவங்கள் என்னென்ன??? 

ஆனாலும் அவற்றுக்கெல்லாம் பதில் சொல்லவே இப்பிறப்பு படைத்திருக்கின்றான் இறைவன்!!!

ஆனாலும் இப் பிறப்பிலும் பாவங்கள் செய்கின்றாயே!!! இது நியாயமா????

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!!! எதை என்று அறியாத வரைக்கும் அறியாத வரைக்கும் குற்றங்கள் இல்லை!!!

ஆனால் அறிந்து விட்டால் அனைத்தும் பாவமாம்!!!!!

எவை ??எதனின்று வருவது?? யோசித்துக் கொள்ளுங்கள்!!!!

பாவம் எதை என்று கூட கஷ்டங்கள் கஷ்டங்கள் என்று சொல்லிக் கொண்டே தான் வருகின்றார்கள் மனிதர்கள்!!!

ஆனால் சிறிது புத்தி உள்ள மனிதனே நீ அனைத்தும் அறிந்தவன் அறிவுள்ளவன் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றாயே!!!!

எதனால் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட சொல்வாயா!!!! நீ???????

நிச்சயம் சொல்ல முடியாது!!!!

எதை எவற்றை அறிந்து அறிந்து செயல்பட்டால் பல உண்மை நிலைகள் புலப்படும்!!!

மனிதா!! புத்தி கெட்ட மனிதா!!! எதை என்று கூட ஓடுகின்றாய்!!! ஓடுகின்றாய்!! எதற்காக ஓடுகின்றாய்???
பாவத்தை சேர்க்கத்தான் ஓடுகின்றாய் மனிதா!!!!

ஆனால் புண்ணியத்தை சேர்க்க உன்னால் முடியவில்லையே!! மனிதா!!

மனிதா ஏன் எதை என்று கூட இதனால் நிச்சயம் புண்ணியம் சேர்க்க மிகுதி மிகுதி வாய்ப்புகள் கிடைத்து கிடைத்து வறுமைகள் நீங்கி நீங்கி புண்ணியம் பெருகி பெருகி சொர்க்கத்தை அடைவார்கள்!!!!

ஆனால் நிச்சயம் பின் எதை உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் புத்தியுள்ள மனிதா பிழைத்துக் கொள்ளலாம்!!!!

ஆனாலும் கலியுகத்தில் புத்தி உள்ள மனிதனுக்கு ஆனால் அறிவுகள் இல்லையாம்!!!!!!

அறிவுகள் இருந்தும் தாழ்வு நிலையாம்!!!!!! 

ஏன்??? ஏன்??  மனிதா!!! பிதற்றுகின்றாய்???

பிழைக்காத வாழ்க்கை உந்தனுக்கு வருமா????

வரும் என்பதை கூட இங்கு நிச்சயிக்கப்படவில்லை!!! ஏற்கனவே நிச்சயக்கப்பட்டது தான் இங்கு நடக்குமே தவிர.... ஆனால் நிச்சயம் பின் எதை என்று உணராத அளவிற்கும் கூட மனிதா பிறப்புகள் எடுத்து எடுத்து கஷ்டங்கள் பட்டு பட்டு மீண்டும் பிறப்பு தேவையா??

இதை பல பல வழிகளிலும் கூட பல ஞானியர்கள் கூட எடுத்துரைத்தார்கள்!!! ஆனால் மனிதா!!! நீ திருந்துவதாக தெரியவில்லை!!!

பணத்தின் மீதே!! பக்தி கொண்டாய்!!! ஆனால் அப் பணம் உன்னை பாதுகாக்குமா? என்ன!???
பார்ப்போம்!! 

ஆனால் நிச்சயம் இதை ஓதுபவனும் (இந்த வாக்கினை படிப்பவர்) நிச்சயம் பணம் பாதுகாக்கும் என்று வார்த்தை விடுவான் நிச்சயம்!!!!

ஆனால் நிச்சயம் பாதுகாக்காது!!!! நிச்சயம் பாதுகாக்காது!!!!

உண்மைதனை உணர்ந்து அதனால் இறைவன் மீது பக்தி செலுத்துங்கள்!!! கலியுகத்தில் மனிதர்களே வாழ வேண்டும் நீ வாழ வேண்டும் உற்றார் வாழ வேண்டும் எதை என்று அறியாத உன் பிள்ளைகள் வாழ வேண்டும் அதனால் நிச்சயம் நீ புண்ணியம் செய்ய வேண்டும்!!!

எவ்வாறு புண்ணியம்!!!?? எதனை???? முதலில் வருவது!! கோபத்தை நீக்குதல்!!!! கோபத்தை நீக்கிவிடு!! மனிதா!!!
மற்றவரை புறம் கூறுவதை நிறுத்திவிடு மனிதா!!!!
பொய் சொல்லுதல் நிறுத்தி விடு மனிதா!!!
எதையென்று போட்டி பொறாமை நிறுத்திவிடு மனிதா!!!

ஆனாலும் அவற்றுக்கெல்லாம் முதன்மையானவை தன்னைப்போல் பிறரை என்னும் எண்ணங்கள்!!!!
ஆனால் இவையெல்லாம் நீ நீக்கிக் கொண்டுள்ளாயா என்று நினைத்தால் தான் இறைவனிடம் சென்றாலும் உந்தனுக்கு இறைவனுடைய ஆசிகள் பரிபூரணம்!!!!

அப்படி இவையெல்லாம் இல்லாவிட்டாலும் இறைவனிடத்தில் சென்றாலும் ஒரு பயனும் இல்லை!!!!

வருத்தங்கள் தான்!!!

அதனால் மனிதர்களே வரும் காலங்களில் அனைத்தும் வைத்துக் கொண்டு தன்னிடம் குறைகள் வைத்துக்கொண்டு இறைவா !!இறைவா!! என்று !!!!நாடிட்டால் என்ன??? இறைவன் என்ன காட்சிகள் கொடுப்பானா என்ன????

நிச்சயம் கொடுக்க மாட்டான்!!!!எதனையென்றும் உணர்வதற்குள் வாழ்க்கையே போய்விடுகின்றது!!!

ஓர் பிறப்பின் பிறப்பின் போது எதை வைத்துக் கொண்டாய்????

ஒன்றும் இல்லை!!!!

குழந்தையாக பிறக்கின்றாய் ஆனால் வாழ்கின்றாய் இளவயதோடு என்னென்ன செய்கின்றாய்!!! மனிதா?

பின் சுகத்திற்காக என்னென்ன செய்கின்றாய் வயது வந்து விடுகின்றது 30 ஆம் ஆனால் 30 க்கு மேலே ஓடி ஓடி உழைக்கின்றாய் வேலை பின் பணம் சம்பாதிப்பதற்கு பின் 40 ஆம் எவை என்று அறியாத இப்படியெல்லாம் தவறுகள் செய்து விட்டோம் என்று இறைவனிடத்தில் சரணடைந்து விட்டால் ஆனால் 40 குள்ளே நீ செய்த பாவங்கள் உன்னை விட்டு விடுவதில்லை.. அனுபவங்கள் கஷ்டங்கள் 50க்கு மேல் அனைத்தும் வீண் என்று எண்ணி விட்டாயே மனிதா!!!!

இது முதலிலே 20 தன்னிலே உணர்ந்திருந்தால் நீ  மாபெரும் மனிதன் என்று கூட...... ஆனாலும் இவை உணர்ந்திருக்கவில்லை.

கல்விகள் ஏன்?? அக்காலங்களில் கல்விகள் எதற்காக என்று தெரியுமா??? மனிதா!!???

நல்வாழ்க்கை!!!  எதையென்று புண்ணியங்கள் பெருக்க எப்படி எல்லாம் புண்ணியங்கள் பெருக்குவது மற்றவர்களுக்கு தன்னிடத்தில் உள்ள எதை என்று கூட எவற்றில் இருந்து கூட பின் பலமாக இறைவழிபாடுகள் செய்து இறைவன் மூலம் பாக்கியத்தை பெற்று மற்றவருக்காகவும் உழைக்க வேண்டும் என்பதை கூட பல குரு குலங்களில் எடுத்துரைத்தார்கள்..

ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை!!!

அனைத்தும் காசுக்காகவே யார் ஒருவன் காசுக்காக ஆசைப்படுகின்றானோ அவனுடைய வாழ்க்கை தெருவில் தான் நிற்கும்!!!

சொல்லிவிட்டேன்!!!!

அதனால் யார் ஒருவன் இறைவன் மீது பக்தி செலுத்துகின்றானோ!!..... ஆனாலும் எதை என்று அறிய நீ ஏன்?? பக்தி செலுத்துகின்றாய் ??மனிதா!!.......
எதற்காக பக்தி செலுத்துகின்றாய்?? மனிதா!!???

புரிகிறதா???!!.....

அனைத்தும் சுயநலத்திற்காக தான் என்பேன்!!!!!

அதனால் நிச்சயம் சுயநலமில்லாமல் பின் எதையும் எதிர்பார்க்காமல் இறைவா!!! என்று அழை!!!!

நிச்சயம் இறைவன் உன்னிடத்தில் வந்து தங்குவான்!!!!

அப்படியின்றி சுயநலத்திற்காகவே வாழ்ந்திட்டால் நிச்சயம் பின் ஈசனும் பின் வாழட்டும் இவன் இஷ்டப்படி என்று விட்டு விடுவான்!!!!

ஆனால் உன் இஷ்டப்படி வாழ்ந்திட்டாலும் நிச்சயம் கர்மங்களை பெருக்கி கொள்வாய் மனிதா!!!

அதனால்தான் சொல்லிக் கொண்டே வருகின்றோம் சித்தர்கள் யாங்கள்!!!!

மனித குலத்தைக் காக்கவே அவதரித்தோம் சித்தர்கள்!!!

எதை என்றும் புரியாமலே சித்தர்கள் வாழ்க்கையை நிச்சயம் எவராலும் கலியுகத்தில் கணிக்க முடியாது என்பேன்!!!!

அப்படி கணித்தாலும் அவன் பைத்தியக்காரன் தான். பைத்தியக்காரன் மட்டுமல்லாமல் கடைசியில் எதை என்று கூறாமலே மாய்ந்து விடுவான்.

அதனால் நிச்சயம் எதன் மூலம் வருவது?? புண்ணியங்கள்!! பாவங்கள்!! என்று நிச்சயம் நீங்கள் தெரிந்து கொண்டால் நன்று!!!

யானும் இங்கெல்லாம் (வஜ்ரேஷ்வரி ஸ்தலத்தில்) சுற்றியவன் தான்!!!!

எப்படி என்றால் நிச்சயம் இதையென்று அறிய ஈசனும் எந்தனுக்கு ஒரு கட்டளை இட்டான்!!!!

புசுண்ட முனியே!!!!!! 

இப்படி எல்லாம் எதை என்று அறிய பல வழிகளிலும் கூட உன்னால் அனைத்தும் செய்ய முடியும்!!!!

ஆனாலும் ஒன்றை செய்!!!

நிச்சயம் இவ்வுலகத்தில் உள்ள அனைத்து திருத்தலங்களையும் உன் கால்களால் சுற்றக்கூடாது!!!
உன் தலையால் நடந்து சுற்றி வர வேண்டும் தலைகீழாக நட என்று!!!

ஆனாலும் யானும் நகைத்தேன்!!!!

ஈசா.....!!!!!!!!!!!! 

பலம் வாய்ந்தவன் நீ!!!!! உண்மையை ஒத்துக் கொள்கின்றேன்!!!
ஆனால் நீ இப்படி எல்லாம் எந்தனுக்கு பரிட்சை வைக்கின்றாயே!!!!!!
என்ன!!! ஆனாலும் பார்ப்போம் என்று கூட!!!!

அதனால் தலை கீழாகவே நடந்து அனைத்து திருத்தலங்களுக்கும் சென்று கொண்டிருந்தேன் சென்று கொண்டிருந்தேன்.

ஆனால் இங்கும் தேவி(வஜ்ரேஷ்வரி தேவி) என்னை ஆசீர்வதித்தாள்!!!! 

புசுண்ட முனியே!!!!! 

இப்படி ஈசன் உன்னை சோதனைக்கு உள்ளாக்கினானே என்பதை அறிய!!!!

ஆனால் யானும் தலைகீழாகவே நின்று பேசினேன்!!!!

ஆமாம் தாயே!!!!! 

பரவாயில்லை எதற்காகவும்!!!! ஆனால் ஈசன் எதையென்று அறிவதற்கு பின் அமைதியாக!!!...

ஆனால் சாதாரணமாக இப்படி அவந்தன் வரங்களாக கொடுக்க மாட்டான்!!! ஏதோ ஒரு விஷயத்திற்காக தான் சொல்ல வருவான்.

இதனால் அனைத்து திருத்தலங்களையும் மேலிருந்து கீழிருந்து பின் இதையறிந்து பின் வலமிருந்து இடமிருந்து மேற்கிருந்து பின் கிழக்கிருந்து எதை எதை என்று அறிய அனைத்து ஸ்தலங்களையும் யான் திரிந்தேன்!!!

ஆனாலும் இதையன்றி அறிவதற்குள் இங்கே எந்தனுக்கு நிச்சயம் """அம்பாள் ""...!!! காட்சியும் அளித்தாள்!!!! 

எதையென்று அறிய அதனால் நீங்கள் எதை என்று உணர்வதற்குள்ளே பின் அதிகாலையிலே சந்தித்த (ஜ்வாலாமுகி தேவி தரிசனம் ) அவ் தேவியும் ஆனால் இடையே நிச்சயம் எதையென்று அறியாமல் பின் ஊற்று போல் ஆறு ஓடுகின்றது!!!( ஜ்வாலாமுகி தேவி மற்றும் வஜ்ரேஷ்வரி ஆலயத்திற்கும் இடையே 35 கி. மி உள்ளது. மண்ணிற்குள்ளே சுரங்கம் போலே நதி இரு தேவியையும் இணைத்து ஓடுகின்றது)இதன் வழியே  நிச்சயமாய் பின் வருவார்களப்பா எதை என்று அறியாமலே தெய்வங்கள்!!!
தெய்வங்கள் வந்து வந்து சென்று கொண்டிருக்கின்றது!!!!

அதனால் நிச்சயம் பூலோகம் பாதாளமாக திரிந்து கொண்டிருக்கின்றது இதன் அடியில்!!!

அதனால் அனைத்தும் இணைக்கின்றது தேவியின் பல ரூபங்கள் இங்கே இருக்கின்றது!!!!

யார் உணர்வார்கள்??? ஆனால் உணர்வதில்லை!!!

மனிதா!!! ஒன்றைச் சொல்கின்றேன்!!....

பின் பணத்திற்காக திரிகின்றாய் ஊர் ஊராக திரிகின்றாய்!!! 

பிச்சை எடுக்கின்றாயே!! மனிதா!!!

பிச்சை எடுத்து எதை என்று அறிய தன் குலத்தையும் காக்கின்றாய்!!!

ஆனால் இறைவனிடம் பிச்சை கேட்க முடியவில்லையே!! மனிதா!!

இதனால்தான் வருத்தம்!!!

முதலிலே இறைவனிடத்தில் பிச்சை எடுத்தால் நிச்சயம் அனைத்தும் வந்துவிடும்!!!

கல்வியா??? எதையென்று
ஆனால் செல்வங்களா??? 
வீரங்களா??? 

எதனால் வருபவை என்று கூறினால்...... இறை பக்தியே இறை பக்தியால்!!!

அதனால் நிச்சயம் இறைபக்தியில் செலுத்தினால் மட்டுமே அனைத்திலும் வெற்றிக்கொள்ள முடியும் அதை விட்டுவிட்டு ஏதேதோ செய்து கொண்டிருந்தால் நிச்சயம் வெற்றியும் கிடைக்காது நிச்சயம் இதையன்றி பின் சொர்க்கமும் கிடைக்காது!!!

அதனால் இதையென்று அறிய சொர்க்கத்தில் எவை  எதையென்று அறிய...... இதைப் பற்றியும் வரும் வரும் காலங்களில் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் உரைப்போம்!!!

எதை என்று அறியாமலே அதனால் நிச்சயம் பல வாக்குகள் இன்னும் பல வழிகளிலும் கூட சித்தர்கள் செப்புவார்கள் உண்மை நிலையை அறிந்து கூட!!!!

அதனால் நிச்சயம் ஆனாலும் ஒருவன் எதை என்று அறிந்து இங்கே பிச்சை எடுத்துக் கொண்டு வந்தான்!!!!

ஆனாலும் அவந்தனுக்கு உற்றார் உறவினர் இவையன்றி சொந்த பந்தங்கள் யாரும் இல்லை!!!

இதனால் பின் அவந்தனுக்கு ஏதோ மனிதர்கள் வருவார்கள் பிச்சை இடுவார்கள்!!!!

ஆனால் அதை உண்டு விட்டு இங்கே அமைதியாக படுத்து உறங்குவான்!!!

ஆனாலும் பின் இவ் அம்மை( வஜ்ரேஷ்வரி) பார்த்துக்கொண்டே இருந்தாள்!!!!! 

இவன் செய்கைகள் எப்படித்தான் இருக்கின்றது என்பதை அறிய!!!!

ஆனாலும் பின் எதை என்று அறிய இவ் தேவியே சென்று அவனிடத்தில் பிச்சை இட்டாள்!!!!!! 

எதையென்று அறிய ஆனாலும் அனைவரும் பிச்சையிட்டது வேறு!!!!!

ஆனாலும் இவள்தன் பெரிய காசுகளாக( அதிக பணத்தை) இட்டாள்!!!!!

ஆனாலும் அவ் மனிதனோ!!! எதை என்று அறிய ஆனால் இவ்வளவு தொகை எந்தனுக்கு ஏது!!! இவ்வளவு தொகையை வைத்துக்கொண்டு யான் என்னதான் செய்யப் போகின்றேன்????

அதனால் நிச்சயம் எந்தனுக்கு இன்றைக்கு இன்றைய தேவைக்கு மட்டும் போதும் இதை வைத்துக்கொண்டு யான் வாழ்ந்திடுவேன்!!!!

அதனால் பின் அவ் அம்பாளுக்கு இட்டுவிடு என்று!!!!! கூறி விட்டான். 
(பிச்சையிட்டவளே தேவி என்பதை அறியாமல் இன்றைய தேவைக்கு மட்டும் எடுத்துக் கொண்டு மீதி பணத்தை ஆலய உண்டியலில் இட்டு விடு என்று அவ் மனிதன் கூறிவிட்டார்) 

மனமகிழ்ச்சி அடைந்தாள்!!! இவ் தேவி!!!

இப்படி ஒரு பிள்ளையா????

இதையறிந்து யாரும் உற்றார் உறவினர் இல்லையே????

இவ்வளவு சிறிய வயதில் இவ்வளவு பக்திகளா!!!! இவ்வளவு சிந்தனைகளா!!!!
இவ்வளவு நல்லெண்ணங்களா என்று கூட.......

என்று எண்ணி!!! பெருமூச்சு விட்டாள்!!!!!..........

ஆனாலும் இதை அறிந்து ஆனாலும் பின் மீண்டும் அவனை சோதிக்க எண்ணினாள்!!!!

மீண்டும் மறுநாள் வந்தாள்!!! 

பின் எதையென்று அறிய ஆனாலும் சிறிய காசுகளே இட்டாள். (கொஞ்சமாக) 

ஆனாலும் நிச்சயமாய் பின் போதுமா????

இச்சிறுவனும் நேற்றைய பொழுதும் நீ இட்டாய் பெரிய காசுகளாக!!!....

இன்றும் நீ இடுகின்றாயே!!!
நீ யாரம்மா???  என்று கேட்க!!!! 

யானும் இங்கு தேவியை வணங்குவதற்காக வந்து கொண்டே இருக்கின்றேன் என்று கூற!!!!

அதனால் பின் அச்சிறுவன் ஒரு வார்த்தை சொல்லி விட்டான்!!!!

அம்மையே!!!!   இவ்வளவு அன்புகள் என் மீது காட்டுகின்றாயே!!!!!

நிச்சயம் உந்தனுக்கு என்ன குறை என்று தேவியிடமே கேட்டான்!!!!

ஆனால் தேவி சொன்னாள்!!!! 

எதையுணர்ந்து தேவியே!! எதை எதை என்று அறிந்து!!! 

சிறு பிள்ளாய்!!!!!!!..... 

யான் ஒரு அனாதை!!! எந்தனுக்கு யாருமே இல்லை!!!

ஆனாலும்  இதையறிந்து கூட

ஆனால் அச்சிறுவன் கண்ணீர் குபுகுபுவென்று விட்டான்.......

இவ்வாறா????  அம்மையே உந்தன் நிலைமை!!!!! 

யானே எதையென்று அறியாத... எந்தனுக்கும் சொந்த பந்தங்கள் எல்லாம் போய்விட்டது சிறு வயதிலிருந்தே கஷ்டங்கள்.

ஆனாலும் நிச்சயம் உந்தனுக்காக எதை என்று அறிய இவ் அம்பாளிடம் வேண்டிக் கொள்கிறேன்!!!

அதனால் நீ ஒன்றும் தர வேண்டாம் இங்கேயே அமர்!!!!!

என்று கூறி வருவோர் போவோர்களிடத்தில் எல்லாம் பிச்சை ஏந்தி நிச்சயம்  அவ் அம்மையை எதை என்று அறியாமலே இந்தா !!!.. இந்தா!!!... என்றெல்லாம் அவ் அம்மைக்கு கொடுத்தான்!!!

ஆனாலும் வந்திருப்பது தேவியே என்று உணரவில்லை!!!!

ஆனாலும் எதை என்று அறிய சிந்துகின்றாள்!!! அவ் தேவி கண்ணீர்!!!!!!

எதை என்று உணராமலே அதனால் நிச்சயம் மறைமுகமாக திடீரென்று பின் அச்சிறுவனிடத்தில் தோன்றி!!!!!!

அப்பனே!!!!! இதையன்றி அறிய!! அறிய!!!

மகனே!!!! யான் தான் தேவி!!!

ஆனால் இச்சிறு வயதில் எதை என்று அறிய இப்படிப்பட்ட பக்திகள் காட்டுகின்றாயே!!!
இப்படி நல்லெண்ணம் பெற்றிருக்கின்றாயே!!!!!

உந்தனுக்கு என்ன தான் தேவை???? என்று கேட்டாள்!!

இல்லை ஆனாலும் அச்சிறுவனும்!!!! இதையன்றி தேவியே!!!!

இப்படி என்னை போல் மற்றவர்களும் கஷ்டப்படுகிறார்கள்!!!!

அதனால் எதை என்று அறியாமலே பின் அனைவருக்கும் நல்லதை செய்!!! என்று கூறி!!!......

இதனால் ஆனால் அத் தேவியும் நிச்சயம் யான் நல்லது செய்கின்றேன்!!! என்று கூறிவிட்டாள்!!!

ஆனாலும் அச்சிறுவன் விடவில்லை!!!!

சத்தியம் செய்து கொடு!!! என்று கூறி விட்டான்!!!!

நிச்சயம் தேவியும்!!!!

சத்தியம் !!!சத்தியம்!!! சத்தியம்!!!!

வருபவர்களுக்கெல்லாம் தன் குறைகளை நீக்கி யான் நல்லதையே செய்வேன் என்று அச்சிறுவனிடம் சத்தியம் செய்து விட்டாள்!!!! 

அதனால் இங்கு வந்து எதை என்று அறியாத அளவிற்கு கூட நல் மனதாய் வருபவர்களை நிச்சயம் காப்பாள் இத் தேவி!!!!

ஏனென்றால் சத்தியம் செய்து விட்டாள்!!!! 

எதையென்று அறியாமலே ஆனாலும் பல பல வழிகளிலும் கூட இத்தேசத்திற்கே தேவி பல மனிதர்களுக்கு... இங்குள்ள நிலைமை எதை என்று கூட சுற்றியுள்ள சுற்று வட்டாரத்தில் உணவுகள் இல்லாமை பின் எதையென்று உடுக்க ஆடை இல்லாமை!!! என என பல கஷ்டங்கள் பட்டுக் கொண்டிருக்கின்ற பொழுது மனித ரூபம் எடுத்து மனித ரூபங்கள் எடுத்து எடுத்து பல பல வழிகளிலும் கிராமங்களிலும் கூட பல மனிதர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றாள்.

அப்பனே இப்பொழுது தெரிகின்றதா??? ஏதும் இல்லாமல் எதையென்று அறிய!!....

எந்தனுக்கு ஏதுமில்லை!! இறைவா!!! நீயே !சரணாகதி! என்று நிச்சயம் சரணாகதி அடைந்தால் நிச்சயம் இத் தேவி வந்து அனைவருக்கும் உதவி செய்வாள்!!!! 

தேவி!! தேவி!! எதையென்று எவற்றினின்று இத் தேவியை யான் என்னவென்று குறிப்பிடுவது??????

அதனால் நிச்சயம் மற்றவர்களை தன் போல் நினையுங்கள் போதுமானது!!!!

எந்த உயிருக்கும்  எதையென்று கூட தீங்கு செய்யாதிருங்கள் போதுமானது!!!!

நிச்சயமாய் யாங்கள் பல வழிகளிலும் உங்களுக்கு வழி வகுப்போம்!!! உங்களுக்கு வழி வகுக்க யாங்கள் காத்துக் கொண்டே இருக்கின்றோம்!!!

ஆனால் நிச்சயம் சொல்கின்றேன் புத்தி கெட்ட மனிதா!!!!

மீண்டும் மீண்டும் பின் எதையென்று கூற திருடன் ஆகவே இருந்தால் நிச்சயம் ஈசன் அழித்து விடுவான்!!!!

நிச்சயம் அழிவென்று ஒன்று இருந்தால் உற்பத்தி ஆகவும் இருக்கும்!!

இதனையென்று கூட காலங்கள் ஒரே மாதிரியாக இருக்காது சொல்லிவிட்டேன்!!!

இன்பம் துன்பம் எதையென்று அறிய எவற்றிலிருந்து அறிய நன்மை தீமை இவற்றிலிருந்தும் அறிய அனைத்தும் இரு. இரு.(இரண்டிரண்டு) இதனால் மாறி மாறி வருவது வாழ்க்கை சொல்லிவிட்டேன்!!

இன்பம் எப்பொழுதும் இன்பமாக இருக்காது!!!

பல வகையிலும் சொல்லிவிட்டேன்!!!

அதனால்தான் எதை என்று கூட துன்பப் பாதையில் எதை என்று அனுபவிக்க நிச்சயம் இறைவன் ஈசன் எதையென்று அறியாமலே இங்கு பல மலைகளும்(இமாச்சல் இமய மலைகள்) கூட அவந்தனக்கு சொந்தமானது!!!!

ஈசனுக்கு எதையென்று அறிய பல மலைகளிலும் சுற்றி சுற்றி வந்து கொண்டே தான் இருக்கின்றான்!!!

வரும் வரும் காலங்களில் கூட மனிதன் நிச்சயமாய் எதை என்று எதிர் நோக்குகின்றானோ அதையும் ஈசன் தருவான்!! நிச்சயம் எதை என்று பின் எதை எதை என்று கூட மீண்டும் மீண்டும் நீதி நேர்மையற்று வாழ்ந்தால் ஈசனே அழித்து விடுவான் என்பதை கூட மெய்யாக சொல்லிவிட்டேன்!!!!

இதனால் எதை என்று உணராத அளவிற்கும் கூட ...இத் தேவி(இவ்வாலயம் ஒரு காலத்தில் நீருக்குள்ளே) இதையன்றி கூற இவையெல்லாம் நீராகவே இருந்தது!!! நீரிலே இத்தேவி மிதந்து கொண்டிருந்தாள்!!! 

ஆனால் காலப்போக்கில் நிச்சயம் மேல் நோக்கி எழுந்து விட்டாள்!!!! 

இதையென்று அறிய இதனால் இவள்தனை வணங்கி வணங்கி ஆனாலும் மனிதா!!!!

பின்!!! என்னால் வர முடியவில்லையே!!!!!!!!!!!! 
என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்களும் ஆனால்.......

எதற்காக?????

திருமணம் வேண்டுமென்றால் ஓடோடி பெண்ணை தேடுகின்றாய்!!!

பணம் வேண்டுமென்றால் ஓடோடி பணத்தை தேடுகின்றாய்!!!!

சொந்த பந்தங்கள் வேண்டுமென்றால் ஓடோடி சொந்த பந்தங்களை தேடுகின்றாய்!!!!

ஆனால் மனிதா!!!

இறைவனை!! இறைவனை தேடவில்லையே நீ!!! மறந்து விட்டாயா!!????......

அதனால் நிச்சயம் ஓடோடி இறைவனை தேடுங்கள் நிச்சயம் அனைத்தும் கிட்டும்!!!!

இதுதான் சங்கதி!!!

அவை மட்டும் இல்லாமல் எதை என்று அறிய பல ஞானிகளும் எதை என்று கூற ஈசனை பார்ப்பதற்கு பல ஆலயங்களுக்கும் சென்று சென்று தரிசித்து கடைசியில் பார்த்தால் ஈசன் தன் அருகிலே இருக்கின்றான் என்று உணர்ந்து விட்டார்கள்!!!

ஏனென்றால் இதன் சூட்சும ரகசியத்தையும் கூட பல பல வாக்குகளிலும் விரிவாகவே சித்தர்கள் செப்புவார்கள்!!!!

அப்பனே அலைந்து திரிந்து திரிந்து திரிந்து வந்து அமைதியாக உட்கார்ந்தால் ஈசன் பக்கத்திலே அமர்ந்து கொள்வான்!!!

இதுதானப்பா வாழ்க்கை!!!!

வாழ்க்கை என்பது ஏதடா???
ஒன்றுமில்லையடா!!!!!

ஒன்றுமில்லையடா பிறப்பின் போதும் இறப்பின் போதும் நடுவில் என்னென்ன?? ஆட்டம் மனிதா!!!

என்னன்ன?? ஆட்டம்!! பாட்டம்!! குத்தாட்டம்!!!
எதை என்று அறிய அவற்றிற்கெல்லாம் நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்!!!

எதை என்று கூற எதனிடத்தில்???

இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்!! 
இதுதான் உன் கர்மா!!

இதனை முன்னிறுத்தி அமைதியாக தியானங்கள் செய்து இறை பக்தியை கடைப்பிடித்தாலே இக்கலியுகத்தில் வாழ்ந்து விடலாம்!! வாழ்ந்துவிடலாம் என்பேன்!!

இன்னும் ஏராளமான சித்தர்களும் இன்னும் எதையென்று அறிய இன்னும் எப்படி வாழ்வது என்பதை கூட சொல்லிக் கொண்டே வருவார்கள்!!!

அப்படி நீங்கள் வாழ்ந்திட்டால் நீ நீடுழி வாழ்ந்திடலாம்!!!

இவ்வுலகத்தில் எதை என்று கூட பிறவியை வென்று விடலாம் மனிதா!!!!

நல்விதமாகவே எதையென்றும் இன்னும் வாக்குகளாக சித்தர்கள் எதை என்று அறியாமலே வாக்குகள் செப்புவார்கள் தலங்களிலும் கூட!!...

நன்று!!! நன்று!! ஆசிகள்!! ஆசிகள்!! மீண்டும் உரைக்கின்றேன்!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ வஜ்ரேஷ்வரி பஜ்ரேஷ்வரி காங்ரா மாதா.ஆலயம்
நாகர் காட் 176001. காங்ரா மாவட்டம். ஹிமாச்சல் பிரதேசம். 

அம்மனின் சக்திபீடங்களில் இதுவும் ஒன்று. 

இங்கு அருள்பாலிக்கும் வஜ்ரேஸ்வரி அம்மனை, வஜ்ராபாய், வஜ்ரயோகினி என்றும் அழைக்கின்றனர். அம்பாள் பார்வதி தேவியாகக் காட்சி அளிக்கிறாள். முகத்தில் தைரியம், ஒரு தீர்மானம் பிரகாசிக்கிறது. அதைப் பார்த்தவுடன், அதன் தைரியம் வஜ்ரம் போன்று காணப்படுகிறதால் வஜ்ரேஸ்வரி என்று பெயர்.

நவராத்திரி விழா, ஸ்ரீராம நவமி போன்றவை இங்கு மிகவும் விசேஷம். மற்றும் மகர சங்கராந்தி விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மஹிஷாசுரனுடன் போரிடும் போது, தேவிக்கு சிறுகாயங்கள் ஏற்பட்டன. அதற்கு வெண்ணெய் தடவி அம்பாள் இந்த நாகர்காடில் இருந்தாராம். பிறகு நலமாயிற்று. அன்று முதல் அம்பாளுக்கு மகரசங்கராந்தி அன்று வெண்ணெய் அபிஷேகம். ஒரு வாரம் இந்த விழாவினைக் கொண்டாடுகிறார்கள்.

இந்த ஆலயம் இமாச்சலப் பிரதேசத்திலுள்ள காங்கடா என்னும் இடத்திலுள்ளது. இதன் புராணப் பெயர் நகர்கோட் என்பதாகும். காங்கடா என்னும் இடத்தில் இருப்பதால் இந்த அன்னையை காங்கடா மாதா என்றும் மக்கள் அழைக்கின்றனர்.

இவ்வாலயத்தில் இருக்கும் வஜ்ரேஸ்வரியை பக்தர்கள் பிண்ட வடிவில் வழிபடுகிறார்கள். இந்துக்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள் என மூன்று மதத்தினரும் இங்கு வந்து வழிபடுகிறார்கள் என்பதே இவ்வாலயத்தின் சிறப்பு. இவ்வாலயத்தின் மேற்பகுதியில் மூன்று மதங்களைக் குறிக்கும்வண்ணம் மூன்று சின்னங்கள் உள்ளன. இந்த மூன்று மதத்தினரும் வழிபட தனித்தனியே அன்னையின் மூன்று பிண்டங்கள் உள்ளன. முதல் பிண்டம் வஜ்ரேஸ்வரி; இரண்டாவது பிண்டம் பத்ரகாளி; மூன்றாவது பிண்டம் ஏகாதசி மாதா.

இங்கு வரும் பக்தர்கள் மஞ்சள்நிற ஆடைகளை அணிந்து வருகின்றனர். தங்களது அனைத்து வேண்டுகோள்களும் உடனடியாக நிறைவேற்றப்படுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இவ்வாலயத்தில் ஐந்துமுறை ஆரத்தி நடத்தப்படுகிறது. காலையில் சுப்ரபாத ஆரத்தி நடைபெறுகிறது. நண்பகலில் பிரசாத ஆரத்தி நடத்தப்படும். அப்போது அன்னைக்குப் படைக்கப்படும் பிரசாதத்தை யாருக்கும் காட்டமாட்டார்கள். கதவை முழுமை யாக அடைத்துவிட்டுப் பூஜைசெய்வார்கள். மாலையில் சூரியன் மறைந்தபிறகு செய்யப் படும் ஆரத்தியின்போது அன்னைக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வார்கள். சிவப்புவண்ண மலர்கள், சந்தனம், ஆடை ஆகியவற்றை வைத்துப் பூஜிப்பார்கள். இந்த ஆரத்தியின்போது படைக்கப்படும் பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்படும்.

இரவில் செய்யப்படுவது மங்கள ஆரத்தி எனப்படுகிறது. பால், தயிர், நெய், தேன் ஆகியவற்றால் அன்னைக்கு அபிஷேகம் செய்வார்கள். பின்னர் சந்தனத்தால் அழகு படுத்துவார்கள். தங்க நகைகள் அணிவிப்பார் கள். கடலை, பூரி, பழம், உலர்ந்த பழங்கள் ஆகியவற்றைப் பிரசாதமாகப் படைப்பார்கள்.

ஐந்தாவது ஆரத்தி அன்னையை உறங்க வைப்பதற்காகச் செய்யப்படுகிறது.பானகங்கா, மஞ்சி என்னும் இரு நதிகளுக்கு நடுவில் அமைந்துள்ள காங்கடா, கடல்மட்டத்திலிருந்து 2,350 அடி உயரத்தில் உள்ளது. காங்டாவின் தெற்குப் பகுதியில் மிகப்பெரிய கோட்டை ஒன்றுள்ளது. வஜ்ரேஸ்வரி ஆலயம் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது.

காலை 8 மணி முதல் 12 மணி வரை. 
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!