​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 29 June 2022

சித்தன் அருள் - 1155 - அன்புடன் அகத்தியர் - காசியில் பொது கேள்வி/பதில் வாக்கு!










வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

நம் குருநாதர் புண்ணிய பூமியான காசியில் கேதார்காட்  ல் உள்ள திருப்பனந்தாள் குமாரசுவாமி மடத்தின் நிர்வாகத்தில் கீழுள்ள தெய்வப் புலவன் அய்யன் திருவள்ளுவர் சன்னதியில் சில அகத்திய அடியவர்கள் எழுப்பிய பொதுவான கேள்விகளுக்கு பதில் வாக்குகள் தந்தார் அவற்றைப் பற்றிய தொகுப்பு..

குருவே சரணம்!!! குரு பாதம் சரணம்!!! அகத்திய மாமுனியே உங்கள் பாதாரவிந்தங்கள் போற்றி!!! போற்றி !!!

குருவே!! காசி விசுவநாதர் ஞானவாபி சிவலிங்கம் குறித்து சில சர்ச்சைகள் சந்தேகங்கள் உள்ளன நீங்கள் எங்களுக்கு அதனைப்பற்றி வாக்கு உரைக்க வேண்டும்!!!

அப்பனே இதையன்றி கூற அப்பனே இன்னும் ஏராளம் அப்பனே அங்கே அடங்கி உள்ளது என்பேன் அப்பனே.... அதை வணங்கி வணங்கி அனைத்தும் அப்பனே அப்பனே இவையென்றும் பல கர்மாக்கள் விலகி ஓடியது... அதனை வைத்து எதை என்று கூற அதை தொட்டாலே அனைத்தும் வெற்றிதான் என்று இருந்தது... ஆனாலும் மாய மனிதர்கள் இதை அறிந்து நிச்சயமாய் மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டாம் என்று எண்ணி அதனை அப்படியே மறைத்து விட்டனர் அப்பனே.

ஆனால் யான் சொன்னேன் முன்னே. அப்பனே இன்னும் ஏராளமான அப்பனே ஈசனே எழுப்புவான் என்பேன் அப்பனே. அவனுடைய தரிசனங்களை நிச்சயம் அப்பனே மிரளத்தக்க இருக்கும் என்பேன் வரும் காலங்களில் சொல்லிவிட்டேன். 

குருவே!! சிறிது நாட்களுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சில ஆய்வு  முடிவுகளைஅதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அதில் பறக்கும் தட்டை ஒன்றை கண்டுபிடித்ததாக அறிவித்திருந்தது.... வேற்று கிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றார்களா??? நீங்கள் எங்களுக்கு தெளிவைத் தாருங்கள்

அப்பனே இன்னும் அப்பனே இவை போன்றே அப்பனே மறு உலகமும் உண்டு என்பேன். குட்டி குட்டி மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே அதனையும் வரும் காலங்களில் எளிதாக உரைத்து விடுவேன்..யான். 

குருவே!!! அவர்கள் இந்த பூமிக்கு வந்து செல்கின்றார்களா???? 

அப்பனே இவையன்றி கூற நிச்சயம் வந்து தான் செல்கின்றார்கள் அப்பனே.

குருவே !!! அந்த மறு உலகத்தில் வாழும் மனிதர்கள் எப்படி நல்லவர்களா? பக்திமான்களா?? அவர்களுடைய குணாதிசயம் என்ன??

அப்பனே இவையென்று உணர அப்பனே.. அவர்கள் நல் மனிதர்கள் என்று தான் யான் சொல்வேன். அப்பனே.

குருவே மக்களனைவரும் முருங்கை கீரையை அடிக்கடி உண்ணவேண்டும் என்று கூறியிருந்தீர்கள் அதை பச்சையாக அரைத்து அருந்துவதா? அல்லது வேகவைத்து உணவில் சேர்த்துக்கொள்வது  நல்லதா??

அப்பனே பச்சையாக உண்ணுவது அதைவிட அப்பனே நீரில் இட்டு காய்ச்சி (சூப் போல) குடிப்பது சக்தி வாய்ந்தவை.

குருவே இந்த உலகத்தில் அனைத்து உணவுகளும் குடிநீர் உட்பட மாத்திரை மருந்துகள் உட்பட அனைத்தும் பிளாஸ்டிக் இல் தான் கிடைக்கின்றது தற்போதைய உலகத்தில் அதை தவிர்க்க முடியாத அளவிற்கு போய்விட்டது. இந்த காரணத்தினால் மனித உடலிலும் பிளாஸ்டிக் பொருள் சேர்ந்து விடுகின்றது ரசாயன பொருள்கள் கலந்த நச்சு பிளாஸ்டிக் உடலில் கலந்த நச்சு கழிவுகளை எப்படி வெளியேற்றுவது??? நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன கூறுங்கள்!!!

அப்பனே இதையன்றி கூற பல வாக்குகளிலும் யான் தெரிவித்துவிட்டு விட்டேன். கோரைக்கிழங்கு என்னும் மூலிகையை உட்கொள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

அவைமட்டுமில்லாமல் அப்பனே நீ இப்போது கேட்டாயே.......!!!!! முருங்கைக்கீரை அதன் சாற்றை அனுதினமும் அப்பனே வெறும் வயிற்றில் அருந்தி வந்தாலே போதுமானது அனைத்தும் வெளியில் வந்துவிடும்.

குருவே சிறு சிறு பெண் குழந்தைகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை  உபயோகப்படுத்துவதால் பிளாஸ்டிக் ரசாயன நச்சுப் பொருட்கள் உடலில் சேர்வதால் அவர்களுக்கு ஹார்மோன் கோளாறு ஏற்பட்டு சிறுவயதிலேயே சீக்கிரம் பருவத்தை அடைந்து விடுகின்றார்கள்... தேவையான வளர்ச்சி பெறுவதற்கு முன்னரே வயதிற்கு வந்து விடுகின்றார்கள் இதிலிருந்து பிரத்தியோகமாக பெண்குழந்தைகள் ஹார்மோன் கோளாறுகளிலிருந்து குணமாகி இயற்கையான முறையில் அவர்கள் வளர்ச்சி பெற வழிகாட்டுங்கள்!!

அப்பனே இதையன்றி அப்பனே நல்முறையாக.... மண் பானையில் இருக்கும் நீரை குடித்தாலே அப்பனே  நல்முறையாகவே மாறும்..

அப்பனே அதுமட்டுமல்லாமல் சிறிது நல் விதமாகவே புற்று மண்ணை நல் விதமாகவே அவ் பானையில் இட்டு... தண்ணீரை அருந்தி வந்தாலே அப்பனே போதுமானது என்பேன் அப்பனே!!! அப்பனே அனைத்து வியாதிகளிலிருந்தும் விடுதலை!!!

குருவே முன்பெல்லாம் ஆற்று நீர் குளத்து நீர் ஏரிநீர் என்று குடிநீரை குடித்து வந்தனர் ஆனால் இன்று நவீன காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தி நீரின் உண்மையான தன்மையையே மாற்றி ரசாயனங்கள் கலந்த கலவைதான் நீரென்று குடித்து வருகின்றோம்..

ரசாயனங்கள் சேர்க்காமல் நீரை அதன் தன்மையை மாற்றாமல் இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி??

அப்பனே இன்னும் ஏராளம் ஏராளம் அப்பனே உண்டு அப்பனே!! மண் பானை நீரில் வேப்பிலையும் அப்பனே ஆலமரத்தின் இலைகளும் அப்பனே அரச மரத்தின் இலைகளும் அப்பனே பின் இன்னும் அப்பனே ஏராளம் அப்பனே புல் (அருகம்புல் நன்னாரி வேர் விலாமிச்சை வேர் வெட்டிவேர்) பூண்டுகளையும் இன்னும் ஏராளம் இயற்கையில் முளைக்கின்ற அப்பனே பின் இலைகளை (துளசி, வில்வம், அத்தி) அதில் இட்டாலே அப்பனே அனைத்தும் மாறிவிடும்.

குருவே உங்களுடைய திருவுருவ சிலையை கருங்காலி மரத்தில் செய்தால்... அந்த சிலைக்கு அபிஷேகம் செய்ய முடியுமா?? உலோகத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது ஒன்றும் ஆகாது ஆனால் மரத்தால் செய்யப்பட்ட சிலைக்கு அபிஷேகம் செய்யலாமா???

அப்பனே பின் இதையன்றி கூற அறிய!!!  அப்பனே பின் ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்??? 

குருவே சிலையென்று ஒன்றிருந்தால் அபிஷேகம் செய்யவேண்டுமல்லவா அதனால் தான் குருவே!! 

அப்பனே இதைத்தான் பல முறை சொல்லி விட்டேன். அப்பனே!!!! 

அன்பு காட்டு!!! என்று அப்பனே .

குருவே அன்பாலே உங்களையே வணங்கி வருகின்றோம்.... ஆனால் நீங்கள் இதற்கு தெளிவாக எங்களுக்கு கூறுங்கள். 

அடியவர்கள் உயிருக்கு உயிராக நினைத்து வரும் ஒரு வார்த்தை ""அகத்தியன்"" இந்த வார்த்தை நிஜமானது யுகம் கடந்தது!!! நிரந்தரமானது!!!

அமர தத்துவ பொருளான அகத்தியன் என்ற ஒரு வார்த்தையில் இருக்கும் உண்மை தங்களுடைய திருஉருவப்படங்களில் அகத்தியர் இப்படித்தான் இருப்பார் என்ற கற்பனையில் வரைந்த  அச்சிடப்பட்ட உங்களுடைய உருவங்கள் சிலைகளில் உண்மை தன்மை இருக்கின்றதா என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். 

உங்கள் பெயரையே உயிருக்கு உயிராக நேசித்து வரும் அடியவர்கள் உங்களைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள மனம் உருகி தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எடுத்துக்காட்டாக அகத்தியன் என்ற பெயரில் உள்ள படங்களை இப்பொழுது உங்கள் முன்னே காட்டுகின்றோம் இதில் எந்த புகைப்படம் உங்களை ஓரளவாவது உண்மை தன்மையை காட்டுகின்றது தயவுகூர்ந்து அருளுங்கள் குருநாதா!!!

ஏனென்றால் அடியவர்கள் அனைவருக்கும் உங்களுடைய உண்மையான ரூபத்தை காண வேண்டும்.. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்!! 

(அகத்தியர் அடியவர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் இருக்கும் மூன்று விதமாக இருக்கும் அகத்தியர் படத்தை ஜீவநாடி முன்பாக காட்டினார்) 

அப்பனே இதில் எவை வேஷமில்லாததை தேர்ந்தெடுத்துக்கொள்!!!

குருவே உங்கள் சிரசில் உள்ள கீரிடம் எப்படி இருக்கும்... பெரியதாகவா? சிறியதாகவா? 

அப்பனே நீ என்ன நினைக்கிறாயோ அதன்படியே செய்து கொள் அப்பனே யான் என்னவென்று கூறுவது அப்பனே!!!!

குருவே இக்கேள்வி உங்களை எப்படி எப்படியோ காட்டி அதையே பின்பற்றி வரும் உண்மையான அகத்தியர் அடியவர்களுக்கு உண்மையானதை விளக்க விரும்புகின்றோம்

அப்பனே எதையென்று.... ஆனாலும் தெரிவித்து விடுகின்றேன்.

அழகாக கீரீடம் என் மேல் இடு!!! அப்பனே அழகாக அப்பனே ஈசனின் நாமத்தை இடு!! அப்பனே அவைமட்டுமில்லாமல் அப்பனே என் நெற்றியில் அழகாக சந்தனத்தை இடு... அப்பனே அப்படியெல்லாம் யான் உரைப்பேனா என்று நீ எதிர் நோக்குகின்றாய்... ஆனால் அப்பனே சொல்லியும் விட்டேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே இதற்கெல்லாம் மேல் அன்பு ஒன்றே!!! எந்தனுக்கு பிரதானமானது!!! 

குருவே நீங்கள் இப்படி தான் கூறுவீர்கள் ஆனால் உங்களுடைய அன்பை நாங்கள் அறிவோம் இருந்தாலும் நீங்கள் கூறுங்கள்

அப்பனே இன்னும் ஏராளமாகச் சொல்கின்றேன் அப்பனே எதை எதை என்று கூற அப்பனே அப்பனே பின் யான் காலத்திற்கேற்ப என்னை மாற்றிக் கொண்டே இருப்பேன்!!! அப்படிப்பட்டவனுக்கு எவ்விதம் அப்பனே !!! யான் குறிப்பிட???

நீண்ட தாடியும் வயதான தோற்றமும் அப்பனே பெருவயிறும் அப்பனே 
அவையெல்லாம் பொய்யே என்பேன் அப்பனே!!

யான் முற்றும் துறந்த ஞானி!! ஆனால் பானை வயிறை போல் இருப்பேனா ??என்ன!!

குருவே.இன்னும் ஒரு சந்தேகம் உங்கள் உருவத்தில்.... படம் வரைவதற்கு ஏதுவாக.... சினம் கொள்ள வேண்டாம் குருவே....உங்களை ஓவியமாக வரையும் பொழுது உங்கள் திருவதனத்தில் பொன்னுதடுகள் சிறிதாக இருக்குமா?  பெரியதாக இருக்குமா?? 

அப்பனே இப்பொழுதுதான் யான் சொன்னேன் அப்பனே... அனைத்தும் தெரிந்தவனுக்கு அப்பனே எப்படி இருக்கும் அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே.....அழகானவன்!!! அவ்வளவு தான்!! 

மிக்க நன்றி குருவே ஏனென்றால் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து  இருக்கின்றீர்கள் உங்களைப் பற்றிய படங்கள் உருவங்கள் மட்டும் நூறு விதமாக உள்ளது இதில் சிறிதளவாவது உண்மையாக தெரிந்து கொண்டு உங்களைப் பற்றிய படங்களை ஓவியமாக வரைய விருப்பப்படுகின்றோம்

அப்பனே. இவைமட்டுமல்ல இன்னும் பல சந்தேகங்களை நீ எழுப்புவாய் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற( ஓவியம்) நீ செய்வாய் அப்பனே. அது தான் உண்மை. யானே முன் நின்று வழி நடத்துவேன் அப்பனே.

குருவே மக்கள் அனைவரும் கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பைதான் அனைவரும் உணவில் சேர்த்துக் கொண்டு வருகின்றார்கள் தற்போது மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்பட்டு பிரபலமடைந்து வரும்  தற்போது பாறை உப்புக்கள்( ராக் சால்ட், இந்துப்பு) இதில் எந்த உப்பு நல்லது???

அப்பனே இரண்டுமே தீமையைத் தான் ஏற்படுத்தும் அப்பனே!!! இச்சைகளை தூண்டும் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே சிறிது அப்பனே சிறிதளவாவது அப்பனே ருசிக்காகவே இட்டுக் கொள்ளவது நல்லது என்பேன்.

குருவே மனிதர்களாகிய நாங்கள் எங்களுடைய இச்சைகளை கட்டுப்படுத்துவது எப்படி 

அப்பனே சொல்கின்றேன் உப்பு புளி காரம்  இனிப்பு, மாமிச உணவுகள் இவற்றை படிப்படியாக குறைத்து வந்தாலே இச்சைகளும் கட்டுப்படும் என்பேன் அப்பனே.

குருவே - சுவடிகள் குறித்து பலவிதமான சந்தேகங்கள் மக்களிடையே உள்ளது அவற்றைப் பற்றி விளக்கம் தாருங்கள்!!! 

அப்பனே இவையன்றி கூற ஜீவநாடி என்பது ஈசன் பின் பிரம்மா பின் விஷ்ணு அப்பனே இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அனுமதிக்க வேண்டும். அப்பனே சித்தர்களின் அருளாசிகளோடு தேர்ந்தெடுக்கப்படும் அப்பனே.

உண்மையான சுவடிகள் பல ஆலயத்திற்கும் செல்லும் அப்பனே ஏன் ஈசனே வரவழைப்பான் அப்பனே!!! மாந்திரீக மாய சுவடிகள்... ஈசனுடைய ஆலயத்திற்கு வர முடியாது. ஏன் இவ் காசிக்கும் வரமுடியாது. அப்பனே.... அப்படியே வந்தாலும் அவையெல்லாம் செயலிழந்து போகும் அப்பனே.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்று கூற அப்பனே எவனாவது பின் அப்பனே சுலபமாக நிச்சயமாய் இறைவனிடத்தில் காசுக்காக படிக்காமல் பின் நல் மனதாக சொல்கின்றார்களா நிச்சயம் இல்லை அப்பனே அப்பனே ஏமாற்றுகாரர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்பதை கூட யான்.

அனைத்தும் காசுக்காகவே அப்பனே எதையென்று கூற அப்பனே நிச்சயம் இப்பொழுது காண்ட நாடிகள் என்று சொல்கின்றார்களே அவையெல்லாம் மனிதர்கள் எழுதியவை சொல்லிவிட்டேன் அப்பனே.
நம்பி நம்பி ஏமாந்து அப்பனே அதனால்தான் உண்மை நிலையைச் சொல்கின்றேன் அப்பனே..

காசுக்காகவே பலவற்றையும் உரைத்து அவந்தனும் கர்மாக்களை சேர்த்து விடுகின்றான் அப்பனே... இவர்களுக்கும் கர்மா சேர்ந்து விடுகின்றது அப்பனே

அப்பனே எங்கு தர்மங்கள் இருக்கின்றது அப்பனே சொல்லுங்கள். அவை மட்டும் இல்லாமல் நியாயங்கள் இல்லையப்பா.

ஆனாலும் இதையன்று கொண்டு உணர்ந்து யாங்களும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றோம்.

ஆனாலும் அதில் கூட எங்களையே பின் நினைத்துக்கொண்டு எங்களையே வழிபட்டுக் கொண்டு நிச்சயம் நல்லோர்களும் கெட்டு பின் எதையன்று கூற பின் அவந்தனும் கெட்டு விட்டே சென்று கொண்டே இருக்கின்றான்.

எவ்வாறு நலமாகும்? அப்பனே !!!

உங்களுக்கே தெரியும் எப்படி எதையன்று கூற யார்?? யார்?? எதனை எதனை பயன்படுத்தி ஆனாலும் மர்மங்கள் பல ஒளிந்து உள்ளது இவ்நாடியில் அப்பனே. 

பல நாடிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எப்படி இயக்குகின்றார்கள் என்பதையும்கூட ஆனாலும் எதை என்று கூற மாந்திரீகம், தாந்திரீகம் இதையன்றி கூற கையில் வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் அப்பனே இறைவனிடத்திலே.

அவையெல்லாம் ஈசன் பொருத்துக்கொண்டே இருக்கின்றான்.

அப்பனே உங்களுக்கும் தெரியாத பல விஷயங்கள் உண்டு அப்பனே... 

மக்கள் பல பல சுவடிகளை நாடிச் சென்று ஆனாலும் அப்பனே மாந்திரீகத்தால் இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கூட மக்களுக்கு தெரியவில்லை பின் சுவடியில் மாந்திரீகத்தை வைத்து பார்க்கும் பொழுது காசுகளை கொடுத்தால் அவ் காசுகளையும் அவர்கள் பலத்த மாந்திரீகத்திற்கு செலவு செய்கின்றார்கள் அப்பனே அதனால் இதையன்றி கூற அப்பனே அவ் காசுகளும் அந்த வழியே செல்வதினால் பல பல வினைகள்!!!!

அவந்தனுக்கும் இவர்களுக்கும் ஏற்படுகின்றது அப்பனே அவ் மாந்திரீகத்தால் அழிவு தான் ஏற்படுமே தவிர ஒன்றும் நடக்கப்போவதில்லை பலப்பல சுவடிகளை நாடிச் சென்று அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்து அவர்கள் சொல்லுவதையெல்லாம் செய்து ..... எவ்வாறு என்பதையும் கூட அப்பனே எதையென்று கூற .....

ஆனால் நிச்சயம் அவ் மாந்திரீகத்தை பயன்படுத்துவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் கர்மங்கள் சேரும் எவையென்று கூற....

அப்பனே இவைதான் அப்பனே நடந்து கொண்டிருக்கின்றது சொல்லிவிட்டேன் அப்பனே

ஆனால் அதன் மூலம் அழிவு என்பதைக்கூட தெரியாமல் போய்விட்டது மனிதனுக்கு.அப்பனே!!! அதனால் அப்பனே அதனால் தான் நம்பி நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைமையை யான் ஏற்ப்படுத்தி உங்களிடத்திலே யான் விட்டுவிட்டேன் அப்பனே. 

நீங்கள் சரியாக எதை நினைக்கின்றீர்களோ அதைச்செய்யுங்கள். போதுமானது என்பேன் அப்பனே. அதனால் யான் சொல்லுவதற்க்கு ஒன்றும் இல்லை அப்பனே. நல்முறையாக என் பக்தர்களாக இருந்துவிட்டுச்செல்லுங்கள் அப்பனே போதுமானது.

என்னை அப்பனே நம்பியோரை யான் கைவிட்டதாக சரித்திரம் இல்லை அப்பனே..... 

யானே முன்னின்று அப்பனே அனைத்தும் நல்விதமாகவே வழிநடத்திச்செல்வேன் .அப்பனே. 

இனியும் மாற்றங்கள் உண்டு அப்பனே. அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

Monday 27 June 2022

சித்தன் அருள் - 1154 - அன்புடன் அகத்தியர் - திருப்பனந்தாள் குமாரசாமி மட ஆலயம் கேதாரேஷ்வரர் . கேதார்காட்.கங்கை கரை. காசி!









14/6/2022  வைகாசி பௌர்ணமி அன்று பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : திருப்பனந்தாள் குமாரசாமி மட ஆலயம் கேதாரேஷ்வரர் . கேதார்காட்.கங்கை கரை. காசி. 

என் உள்ளமெல்லாம் பரவி நிற்கும் என் அன்பானவனை நேசித்து வணங்கி உமையவள் பரப்புகின்றேன் வாக்குகளாக!!!!!!!! 

மனிதர்களே திருந்துங்கள்!!!

இல்லாவிடினும் இன்னும் மேற்சொன்னவாறு இன்னும் இன்னும் சித்தர்களின் வாக்குகள் ஏராளம்.... ஏராளம் வந்தபடியே!!!!
வந்தபடியே எதையேனும் நிச்சயமாய் செய்வதினால் மனிதனின் நிலைமை மாறுபடும்....

ஆனாலும் சித்தர்களின் பேச்சுக்கும் கூட  இவ்தேசத்தில் நிச்சயம் இடமில்லை... ஆனாலும் சில மனிதர்களே!!! ஆனாலும் பின் சித்தர்கள் பேச்சுக்களை கேட்கின்றனர்.

ஆனாலும் இவர்கள் நிச்சயம் மாமனிதர்களாக வாழ்வார்கள்.

மாமனிதர்கள் எவர்கள்?? என்பார்கள்!!! எப்படி மாமனிதர்கள் ஆவார்கள்??
மாமனிதர்கள் தர்மத்தை நிலைநாட்டுவதாலும் நேர்மை தவறாது இறைவன் பக்தியை செலுத்துவதாலும் .... இதனையும் உணர்ந்து உணர்ந்து என் மணாளனின் ஆசி பெற்று பெற்று சிறப்புக்கள் மாமனிதர்களாக உயர்வு வரும் காலங்களில் உண்டு.

இதனால் எத்தனை எத்தனை மனிதர்கள் சித்தர்களின் பேச்சைக்கேட்டு நடக்கின்றனர்??? என்பதில் சந்தேகமே!!!!

ஐயமே இல்லை!!! ஐயமே இல்லை என்பதினால் நிச்சயம் என் மணாளன் மனிதர்களுக்கு எப்படி செய்வான் இரங்கி????

ஆனாலும் கருணை படைத்தவன் என் மணாளன் நிச்சயம் ஐயோ!!!! என்று வந்துவிட்டால் மனமிரங்குவான் ... என் மணாளன் கொடுத்து கொடுத்து நிச்சயம் நிச்சயம் ஐயோ பாவம் ஐயோ பாவம்!!! என்று என் மணாளன் கொடுத்தால் இவ்வுலகத்தில் ஈடு இணை இல்லை எதையும்.

ஆனால் மனிதரிடத்தில் என் அன்பானவன் அன்பை மட்டுமே கேட்கின்றான். அதை நிச்சயம் கொடுத்தால் போதும்!!!

என் பிள்ளை அகத்தியனும் வலம் வந்து கொண்டே இருக்கின்றான்.... மனிதர்கள் எவரும் நல்படியாக !!நல்படியாக சிந்தனையில் இருப்பார்களா?!!! இருப்பார்களா?!!! நல்லெண்ணங்கள்!! நற்பண்புகள்!! என்றெல்லாம்!!!!

ஆனால் மனிதனோ என் பிள்ளையை வைத்து சம்பாதித்து சம்பாதித்து பல கர்மவினைகளை ஏற்படுத்தி தானே ஏற்படுத்தி கடைசியில் என் பிள்ளையை அகத்தியனை...யான் அகத்தியனை வணங்கினேனே !!என்று குறை கூறுவார்கள் இவ்வுலகத்தில்.

அப்படி குறை கூறியோர் அப்படி என் பிள்ளையை குறை கூறுபவர்கள் வாயை யான் நிச்சயம் அடைப்பேன். வாயை அடைப்பேன்.

ஆனாலும் எதை நிமித்தம் காட்டி இவ்வுலகத்தில் பிறந்தாய்??? எதுவும் உன்னை பாதுகாக்காது மனிதா!!! 

மனிதா!!!! நிச்சயம் சொல்கின்றேன்... ஆனால் பாதுகாக்காததை தேடித்தேடி ஓடி !!ஓடி!! உழைத்து உழைத்து கடைசியில் அதுதான் பாதுகாக்குமென்றால் நிச்சயம் இறைவனை ஏன் நீங்கள் வணங்க வேண்டும்???

இறைவன் ஏதோ!!! மாய பொருள் என்றே நினைக்கின்றார்கள் மனிதர்கள்.

ஆனால் அது பொய்!!! 

இன்னும் ஏனைய சித்தர்கள் இன்னும் பல சித்தர்கள் நிச்சயம் இவ்வுலகத்தை மாற்றுவார்கள்.... இதில் ஐயமே இல்லை!!! 
ஐயமே இல்லை!! 

என்றென்றும் யானும் என் மணாளன் கோபத்தோடு.... ஆனால் கோபம் தான் அதிகமே தவிர.... அன்பானவன்,!!! பண்பானவன்,!!! கருணையுள்ளவன்,!!! அடக்கமானவன் .!!!...பார்த்து கொண்டே தான் இருப்பான்..... ஆனால் கோபம் வந்து விட்டால்.... ஆனாலும் யானே பக்கத்தில் அமர்ந்து... மணாளனே!!! அன்பானவனே என்றெல்லாம் அழைத்து அழைத்து பின் மக்களை காக்க வேண்டும்... மனிதர்களின் நிலைமை சரியில்லாமல்... மனிதனின் நிலைமைகள் என்னவென்றே தெரியாமல்
கலியுகத்தில் போய்க்கொண்டு இருக்கின்றது.... இதனால் யான் என்னவென்று சொல்வது???!!!! 

ஆனால் நிச்சயம் வரும் வரும் காலங்களில் சித்தர்கள் என்ன? செப்புகின்றார்களோ அதைக் கேட்டால் நிச்சயம் தாழ்வு வராது!!!

ஆனாலும் அதற்கும் கூட என் மணாளனின் அருள் நிச்சயம் தேவைப்படுகின்றது அதனால் தான் பின் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தன் அருள் இருந்தால்தான் தன்னையே நாடி வரும் தன்னையே நாடி வரும் என்பதற்கு.....

இல்லை. !!!
இல்லை!!! இன்னும் இன்னும் பல வில்லங்கங்கள்....வில்லங்கமாக மாறி விடுமோ?! என்பதில் ஐயமில்லை.
ஐயம் இல்லாமல் வாழ்ந்து வந்தால் ஒன்றும் இல்லை.

 ஒன்றுமில்லை!! மனிதா உன் கையில்!!!! 
அதை நீ உணர்ந்திட.  அனைத்தும் தேடிவரும் மனிதா!!!

உணர்ந்து கொள்!!! உணர்ந்ததை இல்லையென்றால் இல்லை என்று போய்விடுமா??
போய்விடும் என்ற மறு பேச்சுக்கு இடமில்லை!!

இடமில்லை!!.. வந்தால் உண்டு இடம்!!

இடம் என்று கூறுவது எதற்கு?? மாமனிதனே

மாமனிதர்களுக்கு யான் உரைக்கின்றேன் நன்றி உள்ளது எது??

நன்றி உள்ளது..... உன்னைப்படைத்தானே. இறைவன் அழகாக!!.....

அழகாக படைத்து அனைத்தையும் இலவசமாக கொடுத்தானே!!!! 
கொடுத்தானே நீரையும் கொடுத்தானே!!! இடத்தையும் கொடுத்தானே!! இன்னும் பலப்பல..... காற்றையும் அழகாக கொடுத்தானே!!!
கொடுத்தானே நல் உள்ளத்தை!!!!

இதை யார் ??நன்றாக இறைவனிடத்தில் அனைத்தும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே!! இறைவா!!!!   நன்றி என்று கூறுபவனுக்கே!!! என் மணாளன் இன்னும் மிச்சமாக செய்வான்.

ஆனால் அதையும் செய்துவிட்டு குழந்தையாக பிறந்து மீண்டும் கடைசியில் குழந்தைகளாகவே இறக்கின்றனர்.....

நடுவில் என்னதான் பக்தி???

பக்தி!!!!..... மனிதா நடைமேடையில் ஒன்றினை பார்!!!!
நடைமேடை என்பது கூட நடப்பதா?? நான்கு காலில் நடக்கின்றாய் முதலில்!!
மீண்டும் நான்கு கால்களிலே கடைசியிலும் நடக்கின்றாய்!!! 
ஆனால் இதில் என்ன வித்தியாசம்?? உள்ளது?? 

கடைசியில் ஒன்றும் தெரியாமல்!!! முதலிலும் ஒன்றும் தெரியாமல்!! பின் வீணாக போகின்ற மனிதா!!....

சற்று பக்திகள் காட்டு!!!

நன்றி உள்ளவனாக இரு!!!

எதற்கு நன்றியுள்ளவனாக இரு?? மனிதன் மனிதர் இடத்திலேயே நன்றியுள்ளவனாக இல்லையே!!! இதனால் தான் இவ்வுலகம் அழிந்து அழிந்து போகும் நிலையில் உள்ளது!!!

இதனால் இன்னும் சீற்றங்கள் பலப்பல!!!

எண்ணற்ற சித்தர்கள் மனிதர்களை ஏன் இன்னும் இன்னும்....... ஆனாலும் மனிதர்கள் எதனையென்று இறைவனை தொழுது தொழுது இப்படி ஆகிவிட்டோம் என்ற நிலைமையும் கலியுகத்தில் வரும்!!!

அதனால்தான் நிச்சயம் என் மணாளனை கீழ் நோக்கி அழைத்து விடக்கூடாது என்பதை கூட நன்றாக எண்ணி நல்லோர்களுக்கு சித்தர்கள் இனியும் வழிகாட்டுவார்கள்.

நிச்சயமாய் புண்ணியங்கள் தேவை!!!! வாழ்வதற்கு!!! 
அப்புண்ணியத்தை எப்படி சேர்த்துக்கொள்வது என்பதையும் கூட பல முறைகளில் என் பிள்ளை அகத்தியன் நன்றாகவே உணர்த்திக் கொண்டுவந்து கொண்டிருக்கின்றான்.

"""அகத்தியனுக்கு ஈடு அகத்தியன் மட்டுமே!!!!!

அகத்தியன்!!! இதை உணர்வதற்கு ஆனால் என் மணாளனை.....!!!!

அப்பா!!!  அப்பா!!!! இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே!!! 

ஏதாவது செய்!!!!

அம்மையே!!! அம்மையே!!! 

என்றெல்லாம்  வந்து!! வந்து!! என்னிடத்திலும் என் மணாளனிடத்திலும்.... அகத்தியன் வந்து கேட்பான்!!

ஆனாலும் என் மணாளனோ!! 

சற்றுப் பொறுத்திரு அகத்தியா!!!!

மனிதனின் நிலைமைகள் சரியில்லையப்பா!!! 

சரியில்லையப்பா!!!! மனிதன் எப்படியெல்லாம் வாழ்ந்து வருகின்றான்!!

என்னிடத்தில் இருந்து பார்!!!

ஒருவன் பணத்திற்காக!!
ஒருவன் தன் சுகத்திற்காக!!
ஒருவன் சொத்துக்காக!!!

ஆனால் கடைசியில் அவன் எங்கு மிச்சம்??

ஆனால் எங்கு போய் சேர்கின்றான் என்பதை?......

ஆனாலும் பல பல உண்மைகள் பல பல உண்மைகளை தெரிவித்து விட்டான் என் மணாளனே!!! 

அகத்தியா!!! மனிதர்களை நீ காக்க போகின்றாயா??!!!

ஆனாலும் மனிதரிடத்திலே சிறிது எச்சரிக்கை!!! தேவை.

பணம் பொருள் சம்பாதிப்பதற்கே அகத்தியனை வைத்துக்கொள்வான் வரும் காலங்களில்.
வரும் காலங்களில் என்று உணர்ந்து.

என் மணாளனிடம் யானும் சொன்னேன்!!!

ஆமாம் மணாளனே!!!! 

நீங்கள் சொல்வது எதையென்று கூற..

அகத்தியனுக்கு யாங்கள் ஆலயம் கட்டுகின்றோம்!!
அகத்தியன் அருளால் அன்னதானம் செய்கின்றோம்!!!
அகத்தியன் அருளால் என்னென்னவோ செய்கின்றோம் என்றெல்லாம் பொய் சொல்லி பொய் சொல்லி அகத்தியனை பொய் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்ற மனிதா!!!! 

உன் நிலைமைகள் என்ன ஆகப்போகின்றது?? என்பதை நீ அறிந்தாயா?????

அறிந்தாயா?? மனிதா!!! 
நீ மட்டும் என்ன ஆகப் போகின்றாய் என்பதைக்கூட...
உன் பிள்ளைகளையும் நீ யோசித்தாயா?!! 

ஆனால் கடைசியில் அனைத்தும் மனிதா நீ செய்வது!!! பழியை சித்தர்களின் மீது போடுவதா????????????

இனிமேல் இதையாவது எதையாவது சித்தர்கள் மேல் பழி போட்டால் நிச்சயம் சிறிது காலத்திலேயே அவந்தனுக்கு அழிவுகள் நிச்சயம்.யான் நிச்சயம்......

சித்தர்கள் அனைத்தும் உணர்ந்தவர்கள் மனிதர்களுக்காக போராடுபவர்கள்!!!

ஆனால் எதையும் தாக்காமல் பல மலைகளில் இருந்தே பல பள்ளத்தாக்குகளில் இருந்தே.... எப்படியெல்லாம் மனிதர்களை காப்பது?? என்றெல்லாம் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மனித இனத்திற்காக!!! 

ஆனால் மனித ஜென்மங்களோ!!! மனித பேய்களே!!!!  மனித பேய்களே!! 

சித்தர்கள் எல்லோரும் எவையென்று கூற அமைதியாக காட்டுக்கு சென்று விட்டார்கள் என்றெல்லாம் பொய் மனிதனிடத்தில்.

ஆனால் சித்தர்கள் எதற்காக?? காட்டுக்கு சென்றார்கள்... என்றெல்லாம் மனிதா !!!உங்களுக்காகவே!!!!
மனிதன் நலமடைய வேண்டும் என்பதை கூட..

சித்தர்கள் வேறா?? இறைவன்கள் வேறா?? 
ரிஷிகள் வேறா?? 
முனிவர்கள் வேறா?? 

வேறு!! வேறு !! எவை?? வேறு?? வேறு?? 

நீதான் வேறு மனிதா!.... 

என்னவென்று சிந்தித்துக் கொள்!!!

இன்னும் கலியுகத்தில் மனிதா!!! நீ நிலையானதாகவே இருக்கின்றாயா என்று நீ நினைக்கின்றாயா மனிதா சிறிது யோசித்துக் கொள்!!!!
யோசித்துக் கொள்!!!

ஆனாலும் வாக்குகள் கேட்கவில்லையென்றால் பரிதாபத்திற்குரியது தான் மனிதனின் நிலைமைகள்.

பல நோய்கள் மனிதனை ஆட்கொள்ளும் வரும் காலங்களில்!!!

இன்னும் சொல்லப்போனால் பல பல பல ரூபங்களில் வரும் வியாதிகள் இயற்கை சீற்றங்களால் அழிந்து போகும் பல பல இன்னும் வரப்போகின்றது.....

மழை தன்னில்!!! 
தண்ணீரில் இன்னும் மிதந்து  கொண்டிருக்கும் மனிதா!!! புயல் சீற்றங்கள்
ஆங்காங்கே பூகம்பங்கள் இவையெல்லாம் நிச்சயம் ரத்த வெள்ளமாக போகின்றது!!!.....

இவற்றையெல்லாம் உணர்ந்து கூட இன்னும் சித்தர்களின் பேச்சை ஆனாலும்.... பிச்சை கேட்கும் மனிதா!!! முதலில் என் மணாளனிடம்... எதனைப் பிச்சை கேட்கின்றாய்?? என்பதைக்கூட....

பின் இவ் ஆன்மா ஐயோ!!!!!  யான் மனிதனாக பிறக்க மாட்டேன்!! பிறக்க மாட்டேன்!! என்றெல்லாம் கூறிகின்றது என் மணாளனிடமே!!!! 

இதையும் பிரம்மன் சற்று நோக்கினான்!!!

ஆனால் பிறந்தவுடன் ஐயோ !!ஐயோ!! என்றெல்லாம் பின் குழந்தைக்கு....விதமாக குழந்தை ஆனாலும் வளர வளர யான் தான் மனிதன் யான்தான் மனிதன் என்று கூட...

ஆனால் மனசாட்சி என்று ஒன்று இருக்கின்றதே...!! அது சொல்கின்றதே!! ஆனால் அதையும்  மீறி செய்கின்றாயே!!!! மனிதா!!

உன் மனசாட்சியை தொட்டு சொல்!!!

நீ உண்மையான பக்தியை காட்டுகின்றாயா??? தொட்டுச் சொல்!!!

உண்மையானவனாக இருக்கின்றாயா???

எதற்காக என் மணாளனை வணங்குகின்றாய்??? 

யோசித்துக் கொள்!!

அனைத்தும் இழந்தால்தான் என் மணாளனை தேடி வருகின்றாய்... இதுதான் சத்தியம்.

ஆனாலும் உண்மையான மந்திரங்கள் எவை? எவை? சொல்லுங்கள் மனிதர்களே!!!
பேய் மனிதர்களே!!!

மந்திரத்தால் அனைத்தும் நடந்து விடுமா என்ன???

ஆனால் நிச்சயம் நடக்காது!!!

தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்!!
தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்!!
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்!! பல உயிர்களுக்கு தானங்கள் செய்ய வேண்டும்!!
தன்னைப் போல் பிறரை என்னும் குணம் வேண்டும்.

அவ் குணத்திலே தான் இறைவன் வருவான்!!

இதையும் சொல்லிக்கொண்டு சொல்லிக்கொண்டு வருகின்றார்கள் சித்தர்கள். 

பல உயிர்களை பேணிக்காக்க வேண்டும்.

இன்னும் அப்படி எல்லாம் செய்தால் தான் நீ மனிதன்!!

அப்படி இல்லை என்றால் நீ மனிதனே இல்லை!!!

பேய்!!!  பேய்!!  பேய்!! 

எதற்கு எவை பேய்கள் வருகின்றது என்று கூறினான் ஒருவன்!!! ஒருவன் மனதை எப்படி எல்லாம் வசியம் செய்கின்றான் என்று எண்ணினான் ஒருவன்!! ஆனாலும் உன் மனது தான் அனைத்திற்கும் காரணம்!!

ஆனால் அதை இழந்து விட்டாய்!! அனைத்தும் இழந்து விட்டாய்!!

அதனால் உன் மனம் குழம்பி!! குழம்பி!!.....

மனிதா!!! என்றாவது நீ உன்னைப்பற்றி யோசித்திருக்கின்றாயா என்ன?? நிச்சயம் இல்லை!

அப்படி யோசித்தால் நீ மாமனிதன்!!! தன்னைத் தானே யார் உணர்ந்தானோ அவன் மாமனிதன்!!!

மற்றவர் பேச்சை கேட்டு கேட்டு வாழ்கின்றானோ அவன் கீழான மனிதன்!!!
கீழுக்கும் கீழ்!!!
அப்பொழுது நீ எங்கே இருக்கின்றாய் பார்!!!
மற்றவர்கள் சொல்லி நீ நடக்கின்றாயே மற்றவர்கள் என்பதைக்கூட மனிதர்களைத்தான் யான் இங்கே சொல்கின்றேன்.
மனிதனை சொல்லி குற்றமில்லை!!! மனிதன் மனிதன் பேய் மனிதன் என்றும் கூட!!!

மனிதன் யார்?? என்றால் இவ்வாறு செய்!! அவ்வாறு செய்!! இவ்வாறெல்லாம் செய்தால் அவ்வாறெல்லாம் நடக்கும்!!
மனிதன்.

ஆனால் அதை கேட்கின்றானே அவன்தான் பேய் மனிதன்!!!

ஏனென்றால் மனிதன் சரியாக ஏமாற்றுகின்றான்..
அதை பேய் மனிதன் சரியாக ஏமாறுகின்றான்!!

ஏமாற்றி கடைசியில் தன்னை சுற்றியுள்ள சொந்த பந்தங்களையும் பேய்களாக மாற்றி கடைசியில் உன் உடம்பு எங்கே செல்கின்றது என்று பார்த்தால்?? ஒன்றுக்கும் உதவாக்கரையாகவே செல்கின்றது!!!!

இவ்வாறு மனிதா!!! 
நினைத்துப் பார்!!!
எதற்காக வந்தாய்?? என்று கூட....

மனிதா!! வந்தாய்... பின் ஐயையோ!!! பிறவிகளே வேண்டாம் என்று கூட... என் மணாளனிடத்திலும் கேட்டாய்.... ஆனால் பின் எடு!!(பிறவியை) யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று.. பல நபர்களிடம் சொல்லி அனுப்பினான்.

ஆனால் எடுத்து விட்டாய்!! ஆனால் இங்கே சுகங்கள் கேட்கின்றதா?? உங்களுக்கு!!....

எதை??!  ஆனால் நீயே சுகங்களுக்காக அனைத்தும் தேடிவிட்டு மனிதா!!!

அச் சுகங்களுக்கே உன்னை திரும்பவும் மாயவலையில் துன்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது!!

இதனால் திரும்பவும் இறைவனிடத்தில் கஷ்டம் என்று சொன்னால்.... மனிதா அனைத்தும் நீயேதான் ஏற்படுத்திக்கொள்வது!!!

இறைவன் மீது தவறில்லை நிச்சயமாய்!!!

இறைவன் ஏற்படுத்தினால் நிச்சயம் இறைவன் சந்தோஷமாகத்தான் கொடுப்பான்!!! அதனால் தான் பெரியோர்கள்...

 இளமையில் கல்!!!! இளமையில் கல்!!!

என்றெல்லாம் சொல்கின்றார்கள்!!
ஆனால் தற்போது இளமையில் கல் என்றால் எதை எதையோ??? கற்கின்றான்....!!! எதையெதையோ கற்று!! கற்று !!மாய வலையில் விழுந்து திரும்பவும் திரும்பவும் திரும்பவும் இறைவனை நோக்கி வந்தால்..... இறைவன் என்ன செய்வான்???

அமைதியாகத்தான் பொறுத்திருப்பான்.

அதனால் நிச்சயமாய் இன்னும் சித்தர்கள் வருவார்கள் ஏராளமாக வருவார்கள்!!! வாக்கினை பலவழிகளிலும் எடுத்துச் சொல்வார்கள் நல்லோர்களுக்கு.... நல்லோர்களுக்கு எடுத்துச்சென்று....என் மணாளனின் அருள் பெற்றவர்கள் இதனை பரப்புவார்கள் நிச்சயம். 

இதனால் பல மனிதர்கள் திருந்துவார்கள்!!!!

உண்மையானவராக ஆவார்கள்!!!!

இவ்வுலகம் செழித்தோங்கும்!!! செழித்தோங்கும்!!!

நல்லவர்களை இனிமேலும் என் மணாளன் தேர்ந்தெடுப்பான்!!!

ஆனாலும் என் மணாளனோ!!! இப்படிப்பட்ட உலகத்தை படைத்தோமா என்று எண்ணி வருந்தி கொண்டிருக்கின்றான்!!!

அதனால் மீண்டும் மீண்டும் நீங்கள் குற்றங்கள் செய்தால் மீண்டும் மீண்டும் அழிவுக்கு சமம்!!

மனிதா!!! அழிவின் உச்சகட்டம் மனிதனே!! உச்சகட்டம் ஆனால்?.....

தர்மத்தை செய்!!!
தர்மத்தை கடை பிடித்தால் 
மந்திரம் வேண்டாம்!!! தந்திரம் வேண்டாம்!!

அனைத்தும் நடக்கும்!!!

அதைமீறி..... ஆனால் ஒன்றைச் சொல்கின்றேன்!! என் ஈசன் அனுமதியில்லாமல் மந்திரம் ஜெபித்தாலும் ஒன்றும் ஆகாது!!! திருத்தலங்களுக்கு சென்றாலும் ஒன்றும் ஆகாது!!!
ஆகப்போவதுமில்லை!!!

அதனால் என் மணாளனை நன்றியோடு!! உரிமையோடு!! தான தர்மத்தோடு அழையுங்கள்!!

 நிச்சயமாய் வருவான்!!!

ஆனாலும் இதில் ஓர் ஓர் இல்லத்திற்கும்... என் மணாளன் சென்று கொண்டுதான் இருக்கின்றான்...

ஏனென்றால் விதியின் பாதை அவ்வளவு!!!.....

மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான்!! இன்னும்
ஏராளம் !!ஏராளம்!!

மனிதனே இன்னும் எவை என்று கூறுவதற்கு இடங்கள் இல்லை!!! அதனால் என் மணாளனின் சக்திகள்... பலப்பல திருத்தலங்களில் நீண்டு இருக்கின்றது!!! அங்கெல்லாம் நிச்சயம் வரும் காலங்களில் சித்தர்கள் உரைப்பார்கள்!! நிச்சயம் நிச்சயம் சென்று பின் பாவ வினைகளை கழியுங்கள்!!!!!

கழித்து!! கழித்து!!! மீண்டும் மீண்டும் பிறவியை வேண்டாம் என்பதே கருத்தாகவும் தோன்றுகின்றது !!!

ஏனென்றால் மனிதா... பிறவி எடுத்து எடுத்து எப்படி எல்லாம் இப்பொழுது கஷ்டபடுகின்றாயோ.... அவையெல்லாம் தேவையா????? யோசித்துக் கொள்!!!

உன்னை அறி!!! முதலில்!! 

இதனைத்தான் யாங்கள் அனைவருமே சொல்லிக் கொண்டிருக்கின்றோம்!! இன்னும் .!!!!

வருவான்!! மாணிக்கவாசகப் பெருமானும்... நிச்சயமாய் தோன்றுவான் என்பதில் தோன்றி கொண்டே இருக்கின்றான் என்பதில் ஐயமில்லை!!!!

மாணிக்கவாசகப் பெருமானே!!!! என் ஈசனிடத்திலே வந்து....
நிச்சயம் ஈசா!!!!! எந்தனுக்கு பிறவிகள் வேண்டும்!! வேண்டும்!!!
இதை இப்பொழுது கேட்கவில்லை!!! முன்பிருந்தே கேட்டுக் கொண்டிருக்கின்றான்!! 

நிச்சயம் திருவாசகத்தை பல வழிகளிலும் யான் எடுத்து செல்ல வேண்டும் இவ்வுலகத்தில் இருக்கும் வரை நிச்சயம் பிறவி கொடு!!! மனிதனை மாற்றுவதற்கு!!! என்றெல்லாம்.....

சரி!!! அப்படியே ஆகட்டும் என்றெல்லாம் மாணிக்கவாசகப் பெருமானுக்கு என் ஈசன் பரிபூரணமாக அருளி விட்டான்!!!

அதனால் மாணிக்கவாசகப் பெருமானோ!!! நல்லோர்கள் மனதில் நுழைந்து இன்னும் திருவாசகத்தை எழுப்பச் செய்வான்!!! 

திருவாசகத்தை நிச்சயமாய்  எவனொருவன் எவனொருவன் பின்பற்றுகின்றானோ!!! அவந்தனுக்கு கஷ்டங்கள் நிச்சயம்... வராது!!!!

என் இறைவன் ஈசன் அவந்தனை சுலபமாக தன்னிடத்தில் ஈர்த்துக் கொள்வான்..... ஒன்றும் செய்ய இயலாது!! 

இன்னும்!! இன்னும்!! என் மகன் ""அகத்தியனை பார்த்தால்..!!! பெருமையாக இருக்கின்றது!!!

பெருமையாக இருக்கின்றது என் மகன் அகத்தியனை பற்றி பேசுவதற்கு!!!!!

ஏனென்றால் எவ்வளவு மனிதன் கஷ்டங்கள் பட்டு பட்டு பின் பொய்யே கூறினாலும் திருடனே ஆனாலும் அகத்தியன் வந்து மனிதர்களுக்கு உரைத்துக் கொண்டுதான் இருக்கிறான்!!!

பின் ஆனாலும் என் ஈசன்!! 
ஏன் இதையன்றி கூற பிரம்மாவும் கேட்டு விட்டான்!!

அகத்தியனை பார்த்து!!! அகத்தியா!!! யான் கஷ்டங்களை மனிதனுக்கு அளித்து அளித்து அனுப்புகின்றேனே!!!!  ஆனால் நீயோ  கருணை உள்ளத்தோடு மீண்டும் மீண்டும் வந்து வந்து எந்தனிடத்தில்... மனிதர்களுக்காக மாற்றிவிடு!! மாற்றிவிடு!!(விதியை) என்றெல்லாம் கெஞ்சுகின்றாயே!! அகத்தியா!!! இது சரிதானா!!!??
மனிதன் மாய வலையில் விழுந்து விட்டான்!!
கஷ்டங்களை பட்டு விட்டு மீண்டு வரட்டும் என்று கூட...

ஆனால் அகத்தியன் அதற்கு!!!!!
திருடனோ!!!!!!!!!!!!!
பொய் சொல்லுபவனோ!!!!!!!
ஏமாற்றுபவனோ!!!!!!!! 
அவந்தனுக்கும்... நல்லது செய்வோம்!!!!! 
அவன் திருந்தினால் ஒரு வாய்ப்பும் அவந்தனுக்கு கொடுப்போம்...என்று கூட... 

கருணை!!! கருணையின் கருணை அகத்தியன்!!!!!!

இதனால்தான் பிரம்மனும் அகத்தியன் கேட்டால்... ஐயோ!!!!  பாவம்......என்று கொடுத்து விடுகின்றான் விதியையும் மாற்றி விடுகின்றான்!!!!

அதனால் மனிதர்களே!!!!

நிச்சயம் அகத்தியன் பல மனிதர்களுக்கு விதியை மாற்றிக் கொண்டு தான் இருக்கின்றான்!!!!
மனிதர்களுக்காக போராடிக் கொண்டு தான் இருக்கின்றான்!!!!

ஆனால் மனிதனோ!!! அகத்தியனை வைத்து பிழைப்பு நடத்துகின்றானே.... அதுதான் பெரும் குற்றம்!!!!

ஆனால் இவையெல்லாம் இப்பொழுது தெரியாது என்பேன்!!!!

என்பேன்!!! எதை?? வரும் வரும் காலங்களில் போகப்போக தெரியும் என்பேன்!!!

ஆனாலும் என் மகன் அகத்தியன்!!! என் பிள்ளையை யாராவது சீண்டினால் யான் விட்டுவிடுவேனா!!!! என்ன??

நிச்சயம் இதை எதை? என்று இன்னும் மந்திரத்தால் ஆவது!! அவை! இவை! என்றெல்லாம்...... நிச்சயம் சித்தர்கள் பல புத்தகத்தில் பல பல வழிகளில் எழுதி வைத்துள்ளனர்.

ஆனால் நிச்சயம் சித்தர்கள் அருள் இல்லாமல் ஏதும் பலிக்காது சொல்லிவிட்டேன்!!!

அதனால் வெறும் வாயை தான் நீங்கள் மென்றாக(மெல்ல வேண்டும்) வேண்டும்!!!! உண்மையே மனிதா!!! தெரிந்து கொள்!!!

பின்.... நடக்க வேண்டுமா!!!?? அதற்கு மந்திரம் தெரியுமா? உந்தனுக்கு!!

பறக்க வேண்டுமா!??? அதற்கு மந்திரம் தெரியுமா?? உந்தனுக்கு!!

இறைவனை உன்னிடத்தில் வரவழைக்க முடியுமா???
அதற்கு மந்திரம் தெரியுமா?? உந்தனுக்கு????

உலகத்தை தன் கையில் வைத்துக்கொள்ள மந்திரங்கள் தெரியுமா?? மனிதா!!

ஏன்????!!!!!!! ஒரு புழு பூச்சியை கூட உன்னால் பிழைக்க வைக்க முடியாது!!!!!

அப்படிப்பட்ட மனிதா!!!! நீ பேய் மனிதன்!!!!

பேய் என்றால் என்னவென்று கூட யான் சொல்லியும்..... இனியும் சொல்லவில்லை மனிதனுக்கு புத்திமதிகள்.

மனிதன் என்றால் ஒன்றுமில்லை!!!

இதனால் பொய் சொல்லி ஏமாற்றுவதில் வல்லவனுக்கோ!! வல்லவன் மனிதன்!!!

ஆனால் அவன் வல்லமையெல்லாம் வல்லவனுக்கு வல்லவனெல்லாம் இறைவனிடத்தில் செல்லுபடியாகாது!

நிச்சயம் வருத்தங்கள் தான்!!

காகபுசுண்டன் ஒரு வாக்கில் இன்னும் மனிதர்களை..... சரி!! திருத்துவோம் என்றே வந்தான்!!!!! ஆனால் புசுண்ட முனியின் வாக்குகளையும் கேட்பதற்கு..........

மனிதர்களே!!! பொய் மனிதர்களே என்று அவந்தனும் வெறுத்து விட்டான்!!!  

நிச்சயமாய் கஷ்டங்கள் வரப்போகின்றது என்பதைகூட... புசுண்டமுனியும் நிச்சயம்  எதையென்று கூற... பல.. பலப்பல வழிகளிலும் பல பல வழிகளிலும் இன்னும் மர்மமாகவே திரிகின்றான்!!

நிச்சயம் மனிதருக்கு!!!....

ஈசா!!!  யான் கோபத்துடனே வந்திருக்கின்றேன்!!! மனிதனுக்கு  யான் நிச்சயம் கஷ்டங்கள் இட்டே தீருவேன். மனிதன் திருந்தப்போவதே இல்லை!!!

அதனால் காகபுஜண்ட முனிவன்!!! கஷ்டங்களை தான் அள்ளித் தருவான் சொல்லிவிட்டேன்!!! சொல்லி விட்டேன்!!

ஏமாற்றுக்காரர்களே!! திருந்திக்கொள்ளுங்கள்!!!

ஏன்!?? இறைவனை வைத்து இப்படியெல்லாம் செல்கின்றீர்கள்?????

அனைத்தும் ஒருவனே!! அனைத்தும் ஒருவனே!! என்று இருங்கள்!!!

சண்டைகள் இன்னும்!!!........

யான்... எதை?? என் இறைவன் பெரியவன் !!!உன் இறைவன் பெரியவன்!!! என்றெல்லாம் சண்டைகள் வரும்..... அவையெல்லாம் ஏன்? மனிதா!!! இவையெல்லாம்??? பிழைப்பா???? !! 

அழகாக பிழைப்பை கொடுத்து இருக்கின்றானே இறைவன்!!!

அதை வைத்து பிழைத்துக்கொள்ள தெரியாதா??? 

இறைவனை வைத்துத்தான் பிழைப்பை நடத்த முடியுமா?? வேண்டுமா???? 

நிச்சயம் அழிவுகள் வரும்!!

ஆனாலும் நீங்கள் நல்லவையே.... என்று நினைத்து இப்படியே(மத சண்டைகள்)  செய்து கொண்டிருந்தால் அதை நிச்சயம் சித்தர்கள் தடுப்பார்கள்!!!!
தடுப்பார்கள்!!!

இன்னும் ஏராளமான வாக்குகள் காத்துக் கொண்டே இருக்கின்றன!!!

மாற்றுவார்கள் சித்தர்கள் இன்னும் சில மனிதர்களுக்கு அவை செப்பி.... இவையென்று போதாமலே..... நடந்து வந்தாலே வாழ்க்கையில் வெற்றி கிடைத்து!!! நல் விதமாகவே மாறும்!!!

மீண்டும் வாக்குகள் என் மணாளனோடு செப்புகின்றேன்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Friday 24 June 2022

சித்தன் அருள் - 1153 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு, கேதார்காட். கங்கைக்கரை காசி!




12/6/2022  வைகாசி விசாக திருநாள் அன்று கந்தன் உரைத்த பொதுவாக்குரைத்த ஸ்தலம் கேதார்காட். கங்கைகரை காசி.


அழகாக உலகை இயக்கிக்கொண்டிருக்கின்ற என் தந்தையையும் தாயையும் பணிந்து வேலனவன் செப்புகின்றேன் வாக்குகளாக!!!.....

இன்னும் பிறவிகள் மனிதன் எடுத்தாலும் புத்திகள் வரப்போவதில்லை!!!!

வரப்போவதில்லை என்றாலும் இன்னும் பின் சித்தர்கள் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!!!

ஆனாலும் மனிதன் திருந்துவதாக சரித்திரம் இல்லை!!
சரித்திரம் இல்லை!!

ஆசிகள்!!! என்னுடைய ஆசிகள்!! பல மனிதர்களையும் உயர்த்தி வைத்துக் கொண்டேதான் இருக்கின்றது

ஆனாலும் எப்படி? செய்ய வேண்டும்?? என்பதை கூட உணராமல் தவறு மேல் தவறுகள் மனிதன் செய்து கொண்டே இருக்கின்றான்.

இதனால் நிலைமைகள் நிச்சயம் பின் சரியத்தான் போகின்றது !! போகின்றது!!

ஏன்?? சித்தர்கள் சொன்னதை மனிதர்கள் நிச்சயமாய் வரும் காலங்களில் ஏற்பதும் இல்லை.... அவை மட்டுமல்ல....

இறைவன் எதனை நினைத்து வருந்துகிறான் என்பதையும்கூட.... மனிதன் நினைப்பதுண்டு!!! நினைப்பதுண்டு!!!

நினைப்பதில்லையே!! நினைப்பதில்லையே!!! இறைவனை நிச்சயமாய் கலியுகத்தில்......

தான் சுகத்திற்காகவே எண்ணி எண்ணி பின் சந்தோஷம் அடைகின்றான் சந்தோஷம் அடைந்து தான் ஏற்படுத்திய சுகங்களுக்காகவே வருத்தமும் அடைகின்றான் இதுதான் மனிதப்பிறவி!!!!

மனிதப்பிறவி என்பது அற்பம்!!!!!

என்பதை பல சித்தர்கள் ரகசியங்களாக சொல்லிவிட்டார்கள்....

அதனால் உண்மையான பக்திகள் நீங்கள் செலுத்தினால் மட்டுமே இவ்புவியுலகில் நிலையாகவே பெறமுடியும் அனைத்தையும் கூட.....

அப்படி இல்லையென்றால் ஆனாலும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.... மனிதன் வாழும் காலங்களில் எதையும் செய்யாமல் கடைசியில் பின் நோய்கள் பற்றிக் கொள்கின்றது இதனால் கடைசியில் என்னிடம் வந்தே... எந்தனுக்கு பின் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் அதை கொடுக்கின்றேன் இதை கொடுக்கின்றேன் அனைத்தும் தருகின்றேன் என்றெல்லாம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறான் மனிதன்!!!....

இவையெல்லாம் உண்மையா????!!!!!

உண்மையான பக்திகளா??!!!!!

இல்லை!!!!!!

அனைத்தையும் அனுபவித்து விட்டு கடைசியில் இறைவனிடம் வந்து ஐயோ!!!!! இறைவா!!!!

என்று இறைவனைப் பிடித்துக் கொண்டால்.... என்ன?!!  இறைவன் நல்லது செய்வானா???!!!!

நிச்சயம் செய்ய மாட்டான்!!!

ஆனால் செய்வான்!!.... புண்ணிய பிறவிக்கு!!!!!

புண்ணியமதை செய்து கொண்டே வர வேண்டும்!!!

இதனைத்தான் யான் மறுபடியும் சொல்லுகின்றேன்!!! மறுபடியும் ,மறுபடியும் சொல்லுகின்றேன்!!

புண்ணியங்கள் செய்ய!!! தர்மங்கள் காக்க!!!

லட்சியமாய் பின் வயதிற்கும் மேலாகவே... தற்போது ஆயுள்காலம் முடிவாயினும்... நிச்சயம் நீண்டு வைப்பான்

யானே நீண்டு வைப்பேன்...பிரம்மாவிடம் போராடியும்... ஆனால் மனிதனிடம் புத்திகள் இல்லையே!!!

வரும் காலங்களில் தாழ்ந்த புத்திகள் தாழ்ந்த புத்திகள் இன்னும் இன்னும். ஏராளம். மனிதன் உண்மையானவன் இல்லை... மனிதன் யாம் தான் வாழ வேண்டும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன??? என்றெல்லாம் மனதில் சிந்திப்பான்.... ஆனால்!!!! அவையெல்லாம் வீணானவற்றையே சேர்க்கும் என்பேன்.

ஆனால் இறைவன் யோசிப்பான்!!!!

நீ அப்படி நினைக்கிறாயா?!!!

யான் இப்படி நினைக்கின்றேன் சரி என்று கூட .....

இன்னும்... கலியுகத்தில் என்னென்ன?? மாயங்கள் நிகழப் போகின்றது??? என்பதை கூட சித்தர்கள் வரும் காலங்களில் தொடர்கதையாகவே சொல்வார்கள்.

மனிதனின் கதைகள் தொடர்கதைகள்!!!

ஆனாலும் மனிதனுக்கு வாயில் தான் பொய்யே!!!! பொய்யே!!!!

யானே பல தலங்களில் அழகாக இருக்கின்றேன்.

ஆனாலும் என் முன்னே காசுக்காக காசுக்காகவே பிழைப்பு நடத்திக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களையும் யான் தண்டித்துக் கொண்டேதான் வருகின்றேன்.

அதனால் யான் இறைவனை வணங்கியும் பின் இப்படி ஏன்? வருகின்றது?? என்பதைக்கூட பின் வந்து வந்து நிற்பார்கள் இனிமேலும்!!!

இனிமேலும் பல சித்தர்களும் இங்கே தவம் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அகத்தியனோ மாபெரும்....!!! அகத்தியனுக்கு கூட இவைதன் பிடிக்கும் ஸ்தலம் (காசி).... அதனால்தான் என்னவோ!!!! பின் அவனுடைய சுவடியை (ஜீவநாடி) இங்கே அடிக்கடி வரவழைத்து கொண்டே இருக்கின்றான்.

இன்னும் ஏனைய சித்தர்களும் வருவார்கள்..!!! எவையென்று கூற இன்னும் பல ரிஷிகளும் இங்கே தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

அதனால் சாதாரணமாக வர முடியாது....

என் தந்தையின் அருள் இருந்தால் தான் இங்கே வரவும் முடியும்!!! காலடியும் வைக்கமுடியும்!!!

ஆனால் ஒரு வாக்கில் புசுண்டனவன் (காக புஜண்டர்) அழகாக உரைத்துவிட்டான்.....

காசிக்குச் செல்லுங்கள் என்று!!!!!!

[16/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி சித்ரா பவுர்ணமி அன்று திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் வாக்கில்..

 """"வைகாசி என்று சொல்கின்றீர்களே... அதுவே காசி...

அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...

மேற்க்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி. !!....என்று உரைத்திருந்தார்.
சித்தன் அருள் 1116 ல் வெளிவந்துள்ளது]

ஆனால் எத்தனை??? மனிதர்களுக்கு அவ் பாக்கியம்!!! கிடைத்ததென்றால்!!!! நிச்சயம் இல்லை...சில மனிதர்களுக்கே!!!!!

ஆனால் காகபுஜண்டன் அனைத்தும் உணர்ந்தவன்... அவன் பேச்சுக்கு இடமில்லையென்றால் அப்பொழுது பார்த்துக் கொள்ளுங்கள்!!! மனிதன் என்ன கர்மத்தில் இருக்கின்றான் என்று!!!!!

நிச்சயம் மனிதர்களைச் சொல்கின்றேன் நீங்கள் கர்மாவை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறீர்கள்!!

இதனால் எவை நிச்சயம் தன் தன் கேட்காமலே நிச்சயம் அனைத்தும் வரும் என்பேன்.

மனக் குழப்பங்கள் வரும்!!! நோய்கள் வரும்!!!

ஆனால் எதையும் ஆசைப்படாமல் இறைவனே நீயே !!கதி!!! என்று நீ தான் காக்க வேண்டும்! என்று இருந்தால் நிச்சயம் எதிரே வந்து நிற்பான் என் தந்தை ஈசன்!!!!!
என் அம்மை பார்வதி!!! என் அன்பான குருவானவன்.

பின் அதை உணர்த்துவதற்கு குருநாதன் பின் அனைவரும் சொல்வார்கள்!!!!

அகத்தியனுக்கு பின் அகத்தியனுக்கு குருநாதன் முருகன் என்று!!!!

ஆனால் யானும் சொல்வேன்... எந்தனுக்கு குருநாதன் அகத்தியனே என்று!!!!!

யார் அறிவார்கள்!!!!???

மனிதன் பல பொய்களைச் சொல்லி நடித்துக் கொண்டே இருக்கின்றான்!!! பின் எப்படி?மனமிரங்கி சித்தர்களும் காப்பாற்றுவார்கள்???

எண்ணிப் பாருங்கள்!!!

மாயாஜாலத்தை நம்புவது இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதைக்கூட இன்னும் பல மனிதர்கள் ...
தான் அனைத்தும் வசியம் செய்து கொள்ள வேண்டும் !!
தான் நினைப்பது அனைத்தும் நடக்க வேண்டும்!!!! இவையெல்லாம் பொய்!!

நிச்சயம் எங்கள் அருள் இல்லாமல் எதை !??அதைவிட... என் அப்பன் ஈசன் அருள் இல்லாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை!!!!

ஆனால்  மனிதா!!! இவையெல்லாம் செய்துகொண்டே இருந்தால் கடைசியில் மடிந்து போவாய்!!!

நீ மட்டும் மடிந்து போக மாட்டாய், உன் பிள்ளைகள் இதை குறிப்பிட்ட அளவில் என்ன சொல்வது ???யான்!!!

அதனால் திருந்திக் கொள்ளுங்கள்!!!!

மனிதனே!!! மனிதர்களே!!!

நீங்கள் திருந்திக் கொண்டால் நிச்சயம் சித்தர்கள் அவரவர் இல்லத்திற்கே வந்து நிச்சயம் வாக்குகள் செப்பி செல்வார்கள்.... இதுதான் முடிவுகள்!!!

அதை மீறியும் கூட ஆனால் இன்னும் இன்னும் பல ஆண்டுகளில்.... பல ஆண்டுகள் அல்ல!!!! சில ஆண்டுகளில் வருகிறது இன்னும் பல நோய்கள்!!!

அதனால் நீங்கள் உங்களை காத்துக் கொண்டால் நல்லவை!!!

அதனை விட்டுவிட்டு அனைத்தையும் செய்துவிட்டு பக்தனாக நடித்துக்கொண்டிருந்தால்
என்ன லாபம்???

என்ன லாபம்??? யான் ஈசனுக்கு பிரியன்!!! யான் ஈசனுக்கு பிள்ளை!! என்றுதான் சொல்லி நீங்கள் அலைந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் என் தந்தை எதை விரும்புவானென்றால்!!!!!

அன்பை!!!!... அன்பை விரும்புவான் என் தந்தை.
என் தந்தைக்கு  அவ் அன்பை காட்டினாலே போதுமானது என் தந்தைக்கு!!!!!

இதை பல சித்தர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

ஆனாலும் உண்மை பொருளை யார்?? நம்புவது?? இவ்வுலகத்தில்!!

ஏதோ சொல்கின்றார்கள்!! ஏதோ செய்கின்றார்கள்!!ஆனால் நம் தனக்கும் பிழைப்பா கடைசியில் வந்து வந்து எதை என்று கூற பின் மாண்டிருக்கும்பொழுது பின் பிணத்தை பார்த்து மனிதன் அழுகின்றான்!!!

நியாயமா????

முதலிலே பின் சாகும் நேரம் என்பதுகூட அழகாக குறித்து வைக்கப்பட்டுள்ளது ஆனால் அதன் முன்னே என்னென்ன?? செய்ய வேண்டும் என்பதைக்கூட மனிதன் மறந்து விடுகின்றான்... கடைசியில் மாண்டு போய் விடுகின்றான்.

இதனால் அனைவரும் எதை என்று?? யாங்கள் சொல்ல!!!!!

ஆனாலும் திரும்பவும் திரும்பவும் வந்து பிறக்கின்றானே!!!! அதுதான் வேதனைக்குரியதும் கூட....

ஆனாலும் இதனை நிறுத்தலாம்!!

எப்படி நிறுத்தலாமென்றால்? பின் சுகங்களுக்கு ஆசைப்படாமல் இறைவனை மனதில் வைத்து மனதில் இறைவனை நேசித்துக் கொண்டே வந்தால்... நிச்சயம் உலகம் சிறப்படையும்!!!

சிறப்படையும் என்பது திண்ணமான வாக்கு!!!

வாக்கு இன்னும் பல சித்தர்கள் சொல்லிக்கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றார்கள்!!

ஆனாலும் இப்படி செய்க!!! இப்படி செய்க!!!
ஆனாலும் பின் அப்படி செய்வதுமில்லை!!!

எதனால் வாக்குகள் உரைப்பது என்பதைக்கூட இனிமேலும் சித்தர்கள் கடுமையானவை பின் சோதித்து மனிதர்களை பின் வந்து இழுப்பார்கள்.

இதை நிச்சயம் யான் மனமுவந்து தெரிவித்து விடுகின்றேன்!!!

ஆனால் நம்பினால் நம்புங்கள்!!! இல்லையென்றால் நடுவில் தான் நிற்க போகின்றீர்கள்.... ஆனால் நடுவில் நிற்பது எவ்வளவு கடினம் என்றால் பின் மனிதன் ஆராய்ந்து விடுவான்!!

ஏன்?  கடலின் நடுவில் நிற்பது எவ்வளவு?? கடினம் என்று தெரிந்து கொள்ளுங்கள்  மனிதர்களே!!!

மனிதர்களே நீங்கள் இப்பொழுது கடலில் நடுவில் தான் நின்று கொண்டிருக்கின்றீர்கள்... அப்படியும் போகாமல் இப்படியும் போகாமல் எப்படிப் போவது??? என்பதை கூட......

ஆனால் இன்னும் மனிதர்கள் பின் தவறான பாதையில் சென்று சென்று தன்னையே அழித்துக் கொண்டு.... தன் குடும்பத்தையும் அழித்துக்கொண்டு தன் பிள்ளைகளையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருந்துங்கள் இன்னும்... ஏராளம்!!

சித்தர்களின் ரகசியமான பேச்சுக்களை கேளுங்கள்!!
நல் விதமாக தான தர்மங்கள் செய்யுங்கள்!!!

இவையெல்லாம் செய்தால் தான் நிச்சயம் வரும் காலங்களில் பிழைத்துக் கொள்ளலாம்!!!

ஏன் ?இன்னும் ஏராளமான சூட்சுமங்களை நிச்சயமாய் பின் பல சித்தர்கள் இங்கு செல்லலாம் !!அங்கு செல்லலாம்!! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனாலும் திருத்தலங்களுக்கு சென்றாலும்....நீ... எதனை ?எதனை? பயன்படுத்துகின்றாய் என்பதைத்தான்... முக்கியம்!!

நிச்சயம் தாய் தந்தையரை வணங்காமல் என்னிடத்தில் வந்தாலும் யான் வரங்கள் கொடுக்கப் போவதில்லை!!!

யார் ஒருவன் தாய் தந்தையரை நல் முறையாக மதித்து வருகின்றானோ அப்பொழுது என் அழைப்புக்கள் பலமாக இருக்கும்....

ஏன் என் தந்தையின் அழைப்புகளும் பலமாக இருக்கும்...!!!

ஏன் சித்தர்களின் அழைப்பும் இன்னும்......

அதனால்தான் முதலில் மனிதன் எப்படி வாழ வேண்டும் ??என்பதை கூட கற்றுக் கொண்டாலே!! அப்பொழுது தான் உண்மை நிலை பின் புரிய புரிய இன்னும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

உண்மை நிலை புரிந்தால் வெற்றிகள் நிச்சயம் ஒன்று என்பேன்!!!

என்பேன் என்பதற்கிணங்க இன்னும் பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் வரத்தான் போகின்றது!!! வரத்தான் போகின்றது என்றில்லாமல் இன்னும் பல பல வினைகள் மனிதனை சூழ்ந்துகொள்ளும்!!!

ஆனாலும் ஒழுக்கமில்லையே!! பெண்டிர்களுக்கு (பெண்களுக்கு) ஒழுக்கம் இல்லையே!!! வரும் காலங்களில் சற்று  தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்கத்தினை நிச்சயமாய் சொல்லித்தாருங்கள்!!!

அதை கேளாவிடினும் அதன் கர்மம் நிச்சயம் அதை அனுபவித்தே தீர வேண்டும்..

தீர வேண்டும் என்பது இல்லை!! பொறுப்புக்கள் இல்லை!! வீண் விரயங்கள் இன்னும் பல பல வழிகளிலும் மனிதர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்!! இருக்கும் என்பதை கூட மறந்துவிட்டான்!!! இல்லாததை தேடுகின்றானே மனிதன்...

இல்லாததை பொல்லாததை என்று நினைத்து தேடுகின்றானே ஓடோடி!!!!!

எதனை தேடுகின்றாய்??? மனிதா!!!

நீ தேடினாலும் கிட்டியது என்ன???

கிட்டியது என்ன??

இன்னும் சொல்லப்போனால் யான் ஒரு பாடலை அழகாக அருணகிரி...தாளாததை கூட செப்புகின்றான் என்னிடத்தில்....

நிதானத்துடனே
இருந்தால் எதனையும்
முற் கொள்ளலாம்!!
முற் கொள்ளாதபடி
நடந்து கொள்ளலாம்!!
நடந்து கொள்ளாதபடி
முற்பிறவியின் ரகசியத்தை
எப்படியோ அப்படியே
வகுத்து அதை
நீங்கலாக்கி நீக்கி
நீங்கியபின் தரித்திரம்
தரித்திரம் இதனையும்
அன்றி அன்றி வாழ
கற்றுக்கொள்.
வாழக் கற்றுக்கொள்
நிதானத்துடன்.
நிதானத்துடன் இன்றி இன்றி இரு!!
அன்று  அன்றிரு
அன்றிரு இன்றிரு
மற்றொன்று மூலமாக
தெரிவித்திரு!!
தெரிவித்து இரு அலைபாயுது
அலைபாய்வதற்குள்
என்னவென்று
என்னவென்று இருக்குதடா
மனிதா! இதனையும்
கற்றுக்கொள்ளாதது ஏதடா
கற்றுக்கொள்ளாதது கற்றுணர்ந்து தெளிவு பெறுவது ஏதடா?
தெளிவு பெற்றபின் முற்றிலும் துறவி ஆகாதது ஏதடா?
ஏதடா ?குட்டுணர்ந்து
குன்றிய பிறகு
இறைவனை வந்து வணங்குவது ஏனடா?
வீணடா !வீணடா!
வீணாவது ஏதடா?
மனிதனின் நிலைமைகள்
பார்த்தால்
முன்னால் பின்னால்
வருங்கால் இன்னுங்கால்
இன்னும் வருங்கால்
வருங்கால் ஏதடா?
பிறவி ஏதடா
முற்பிறவியின்
ரகசியத்தை தெரிந்து
கொள்ளாதது கூனடா!
கூன் விழுந்த போது
இறைவனை நாடி
ஏதடா? !!பலன்கள்
பலன்கள் வந்ததடா
போனதடா ஆனால்
நீ ஒன்றும் திருந்தவில்லையடா!!!

என்று என்னிடத்தில் பாடியும் அசைத்தான் பின் அருணகிரி.

ஆனால் இதையும் உணர்ந்தால் இன்னும் பல பாடல்களையும் அருணகிரி அருணகிரிநாதன் அழகாக இயற்றியுள்ளான்...

ஆனால் யானே சொன்னேன்.... கலியுகத்தில் அப்பாடல்கள் மனிதனுக்கு நிச்சயம் கொண்டு சேர்க்க வேண்டும். அதனால் சில பாடல்களை நிச்சயமாய் மனிதருக்கு போய் சேரக்கூடாது என்பதை யானே தெரிவித்துவிட்டேன்.

அதனால் அருணகிரி தந்தையே!!! தந்தையே!!!

நிச்சயம் என் பாடல்கள் சில மனிதர்களுக்கு கடைசியில் கலியுகத்தில் போய் சேரும் என்று...

அதனால் நிச்சயம் அவனுடைய பாடல்கள் வரும் காலங்களில் நிச்சயம் அவந்தனே வந்து பாடுவான்.

இதனை இதுவரையில் யாரும் தெரிந்திருக்கவில்லை.

இன்னும் பல சூட்சமங்கள் ரகசியங்கள் நிச்சயமாய் நல்லோருக்கு சித்தர்கள் செப்புவார்கள்....

பிழைத்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளுங்கள்!!!

யாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றால் அப்படியேதான் இருங்கள்..

அழகாக இறைவன் அனுப்புகின்றான் அனுப்புகின்றானே!!! 

வயது ஆக ஆக ஆசைகள் மனிதனை பிடுங்குகின்றது
அவ் ஆசைகள் ஆனால் ஆசை!! ஆசை!! ஆசை!!

எதன் மீது ஆசை??

சுகத்தின் மீது ஆசை!!
 
கடைசியில் சுகமே பின் பலமான சக்திகளை ஈர்த்து அழித்து விடுகின்றது....

இப்பொழுது புரிகின்றதா?? மனிதா!!

எதை நீ சென்று தேடி போனாயோ அதன் மூலம்தான் நிச்சயம் பின் அழிவுகள் நிச்சயம் என்பது கூட பின் அனைவருக்கும் தெரிந்ததே!!!!

திரும்பவும் ஞாபகப்படுத்தி விடுகின்றேன்...

எதனை நீ நம்பி போகின்றாயோ!?? நிச்சயம் அதன் மூலம் அழிவுகள்.

ஏன்?? இந்த ஆசைகள்!!!

நடுவில் வந்தவையா!!! ??? வந்தவையா இல்லையே பின் பிறப்பின் போதே வந்தவையா??

பிறப்பின் போது ஏதும் தெரியாமல் தான் வந்து நிற்கின்றாயே!!! ஆனால் அனைத்தும் உந்தனுக்கு கிடைக்கின்றது.... ஆனால் வயது ஆக ஆகத்தான் அனைத்தையும் தெரிந்துகொண்டு மனிதா...

ஆனால்?? இறைவன் நிலையை தெரிந்து கொள்ளவில்லையே!!!!!

இறைவன் நிலையை நீ தெரிந்து கொண்டால் நிச்சயம் நீ தான் மனிதன்.

ஆனால் இப்பொழுது மனிதன் நிச்சயமாய் காட்டில் தான் வாழ போகின்றான்...

இதற்கும் அர்த்தங்கள் உண்டு!! அர்த்தங்கள் உண்டு!!!

விலங்கினங்கள் எல்லாம் வரப்போகின்றது பின் எதனையென்று நேர்மையாகவே.... நேர்மையாகவே விலங்கினங்கள் போலில்லாமல் மனிதர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள்!!!!

நடந்து கொள்ளுங்கள் ஆனால் விலங்குகளுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கின்றது!!!!

ஆனால் மனிதனுக்கு கலியுகத்தில் மனசாட்சி என்று ஒன்றுமே இருக்காது. இருக்காது.

சித்தர்கள் இல்லையென்றே!!! நினைத்து பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.

ஆனால் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாய் தண்டனைகள் உண்டு... உண்டு இன்னும் ஏராளம்!!!

என் தந்தையானவனும் நிச்சயம் மனிதர்களுக்கு எப்படியெல்லாம் பாடத்தை உணர்த்த வேண்டும் என்பதையெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கின்றான்... ஏற்கனவே உணர்த்தியும் விட்டான்!!

இக்கலியுகத்தில் உண்மையானவைகள் எல்லாம் சித்தர்கள் இனிமேலும் நிச்சயம் ஏற்படுத்துவார்கள்... உண்மையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் நன்மைகளை செய்ய வைப்பார்கள்.

ஆனால் இன்னொரு விஷயத்தை மட்டும் சொல்கின்றேன்....

பக்தன் என்று ஏமாற்றுகின்றானே!!! 

அவனை நிச்சயம் யாங்கள் தேர்ந்தெடுக்க மாட்டோம்..

எந்தனுக்கே அனைத்தும் தெரியும் என்கின்றானே!!
அவந்தனையும் யான் தேர்ந்தெடுக்க மாட்டேன்.

அமைதியாக இருக்கின்றானே ஆனால் இருக்கின்றார்கள் பலர் தூய்மையானவர்கள் ஆனால் அவர்களைப் பார்த்தால் மனிதர்கள் திருடர்கள் என்று தான் சொல்வார்கள்.... ஆனால் எங்களுக்கு அவர்கள் நல்லோர்கள்!!!

அவர்கள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. அவர்களை தேர்ந்தெடுப்போம்.

மனிதா!! நீ !! எதனையென்று கூற எங்களால்... படைக்கப்பட்டவர்களை எப்படி?? நீங்கள் திருடர்கள் என்று.....

ஆனாலும் நிச்சயமாய் இது கலியுகம் நல்லோர்களை திருடர்கள் தான் என்று.

ஆனாலும் ஒருவன் பாதையை சரியாக கணிக்க கணிக்க கணிக்க எங்களுக்கு மட்டுமே தெரியும்!!!

எப்படி நீ சொல்கின்றாய் ???ஒரு மனிதன் நல்லவன் தீயவன் என்று கூட.... உன்னால் கணித்து விட முடியுமா என்ன???

ஆனால் அவன் ஆன்மா என்னென்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை கூட எங்களுக்கு நன்றாகவே தெரியும்!!!

நன்றாகவே தெரியும்!!!

முற்றுப்பெற்ற மனிதா!!!!
முற்றுப்பெற்ற மனிதா!!!
முற்றும் இல்லாததை எதை உணர்த்தி கொண்டிருக்கின்றாய்???

உணர்த்தி கொண்டிருக்கின்றாய்???

இனிமேலும் மனிதன் வாழ்வாங்கு வாழ்வான்!!


எதையென்று நினைக்கும் அளவிற்கும் கூட... பெண் சுகங்களைத் தேடி தேடி அலைந்து போய்க்கொண்டே இருப்பான்.. கலியுகத்தில் நிச்சயமாய்!!! இதைத்தான் வரும் காலங்களில் இன்னும் பல சித்தர்கள்...

முதலில் யாங்கள் சொல்லிவிடுவோம் எதையென்று....
இப்படிச் சென்றால் இப்படி நடக்குமென்பதை கூட...

ஆனால் அதற்கும் கூட மனிதன் ஒழுங்காகவில்லேயே... ஒழுங்காகவில்லையே அதனால் தான் மனிதனை ஒரு நிலைப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் சித்தர்களின் நோக்கமாக உள்ளது.

அதனால்தான் மனிதர்களை ஒரு நோக்காக ஏற்படுத்தி பின் இப்படி நடந்தால் வெற்றிகள் கிடைக்கும் என்று சுலபமாக சொல்லிவிடுவார்கள்... அதன்படியே நிச்சயம் வெற்றி கொள்ளலாம்.

அதனால் மனிதா!!!!


அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்னால் முடியும் இதை வைத்துக்கொள்!! அனைத்தும் நடக்கும்!!


என்பதெயெல்லாம் வீணே!!! வீணே!!!

மந்திரமாவது ஏதடா!!?? தந்திரமாவது ஏதடா!!??

என்ற பாடல் வரிகளையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்!!

ஆனால் இவ்வளவு பாடல்களும் இன்னும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது!! என்பதுதான் தெரியாத மனிதனின் முட்டாள் குணங்கள்!!!

ஆனால் சித்தர்கள் விடப்போவதில்லை வரும் காலங்களில்!!!

தான் தன் பாடல்களுக்கு ஏற்ப இன்னும்.....

ஆனாலும் யானும் கூட நிச்சயம் மனிதனை எப்படி வழி நடத்துவதெல்லாம் நிச்சயம் வந்து புவிதனில் உரைத்து உரைத்து விட்டுவிட்டு செல்வேன்!!!

நம்புங்கள்!!!! நிச்சயமாய் உயர்வு பெறுவீர்கள்!!!

எதனால் என்பதையும் கூட ஆனாலும் என்னிடத்தில் வந்து எதையும் கேட்காதீர்கள்!!!!

யான் எதை? தன் பக்தனுக்கு தரவேண்டுமென்பதை கூட யான் அறிவேன்!!! அதனையே கொடுக்கின்றேன்!!!!

அனைத்தும் செய்துவிட்டு அனைத்தையும் செய்துவிட்டு.....கந்தா!!!  முருகா!!! என்று என்னை அழைத்தால்??? யான் என்ன!???  என்ன செய்ய முடியும்????

உந்தனிடத்தில் ஏதாவது!!! சிறு துளியாவது புண்ணியம் இருக்கின்றதா??

புண்ணியம் இருந்தால்தான் நிச்சயம் அனைத்தும் செய்ய இயலும்!!!

இதனால் தன்னைப்போலவே மற்றவர்களை எண்ணும் எண்ணம் இருக்க வேண்டும் என்பதை கூட பல சித்தர்கள் பல பல வாக்குகளிலும் உரைத்து விட்டார்கள்!!!

இதனால் முதலில் பிறரை பிறரை பின் பிறர்நலம் காக்க வேண்டும் என்பது உறுதியாக.....

பின் சித்தர்கள் இன்னும் வருவார்கள் மனித ரூபத்திலே!!!!!!!!

நிச்சயம் வந்து கொண்டே இருப்பார்கள்!!!

நிச்சயம் ''பழிக்குப் பழி'' என்பதைப்போல் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ..??? அப்பொழுதே தண்டனை கொடுப்பார்கள்!!!!

சித்தர்கள் நிச்சயம் மனித ரூபத்தில் திரிவார்கள்!!!
திடீரென்று அவதாரம் எடுத்து!! எடுத்து!! எடுத்து!!

ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு உடம்பின் மூலம் வந்து நிச்சயம் காப்பார்கள்!!! இதுதான் சத்தியம்!!!

இன்னும்   ஏராளமான      இக் காசி!! தன்னில் பின் பல பிறவிகள் எடுத்து எடுத்து இன்னும் என் தகப்பனிடத்தில் எந்தனுக்கு சாவுகள் வரக்கூடாது பல மனிதர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று பல ஆன்மாக்கள் வேண்டிக்கொண்டன!!!!

இதனால் பல ஆத்மாக்கள் இங்கேயெல்லாம் தியானங்கள் செய்து கொண்டேதான் இருக்கின்றது!!!

இதனால் தான் இங்கு வந்தால்... அவர்கள் கண்ணில் பட்டால் கர்மம் போகும் என்பதை கூட... வரமாக யான் சொல்லிவிட்டேன்!!!!!

ஆனால் அதைக் கூட உன்னால் நிச்சயம் ஏற்க முடியவில்லையே???!!!!! என்றுகூட புசுண்ட (காகபுஜண்டர்) முனியும் வருத்தம்!!!!!!

யான் சொல்லியதை கூட மனிதன் சிறிதுகூட காதால் கேட்கவில்லை!!!!

ஏன்???? என் பக்தனே இதைக் கேட்கவில்லை..!!!

அவந்தனுக்கு யான் எப்படி?? அருள் கொடுப்பது என்பதையெல்லாம் சற்று............!!

ஆனாலும் புசுண்ட முனியோ!!!  யான் விடப்போவதில்லை!!! மனிதனை!!! மனிதனை நிச்சயம் விடப்போவதில்லை கஷ்டங்களில் ஆழ்த்தி!! ஆழ்த்தி.... புத்திகள் வைத்தால்தான்......

 இன்னும் பிறவிகள் கடந்து போகும் ஆனால்...என்னை!! என் பெயரைச் சொல்லியும் கூட புசுண்டன் என்று கூட மக்களை ஏமாற்றுகின்றான்..

ஆனால் அவன் ஒரு முறை கூட நிச்சயம் காசி தன்னில்... ஆனால் பக்தன்!!! சித்தன்!!! ஞானி!!! என்றெல்லாம் பொய் கூறி உரைத்துக் கொண்டிருக்கின்றானே!!! என் தந்தையிடத்திற்கு (காசி) வரச் சொல்லுங்கள் பார்ப்போம்!!!!!!!!!!!

நிச்சயமாய் அப்பொழுது தெரியும்!!! உண்மையானவனா நீ???? என்று கூட.......!!!!

பயந்து பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறான்!!!

காசுகளுக்காக காசுகளால் ஏற்படுத்திக்கொண்டு எதை எதையோ செய்து செய்து ஆனால் கர்மா என்று ஒன்று இருப்பதை மறந்துவிட்டானே!!!!  மனிதன்.

நிச்சயமாய் நிச்சயமாய் கர்மா வருவது எப்படி என்று எண்ணிப் பார்த்தால் தப்பித்துக்கொள்ளலாம்!!

அதனால் கடைசியில் கர்மா விடாது மனிதனே!!!!

எதைச் சொன்னால்....பிரம்மன்!!!!

ஒன்றைச் சொல்கின்றேன் பிரம்மன் அழகாக இப்படி தான் பின் வாழ வேண்டுமென்று மனிதனை வகுத்து சரியான முறையில் அனுப்பி விடுகின்றான்.

ஆனால் அதை மனிதனால் திருத்த முடியுமா???

சிரித்தேன் யான்!!!!!!

சிரித்தேன் யான்!!!  மனிதனால் அனைத்தும் செய்ய முடியுமா??? இவையெல்லாம் வீணான பேச்சுக்கள் என்பதைக்கூட பல சித்தர்களும்........

ஆனால் ஆனால் பிரம்மா எழுதியதை நிச்சயமாய் மனிதனால் நிச்சயமாய் உரைக்க முடியாது.

சித்தர்கள் சித்தர்களால் தான் உரைக்க முடியும்!!!
அப்படிப்பட்ட சித்தர்கள் இவ்வுலகத்தில் யாரும் இல்லையப்பா!!!!!

அதனால் பொய்யானவர்களே அதிகம்.... அதை நம்பியவர்களும் பொய்யானவர்களே தான்.....

உண்மை!!!

ஒருவன் பொய்யானதை நம்பினால் அவனும் பொய்யானவனே !!!இதுதான் உண்மை!!!!

ஒரு திருடன் என்றால் அத்திருடனை நம்பினால் அவனும் திருடனே!!!

ஒரு பொய்யான துறவி என்றால் அவ் பொய்யான துறவியை ஒரு மனிதன் நம்பினால் அவனும் பொய் யானவனே!!!!

திருடன் திருடனை நம்பினால் எப்படி இருக்கும்???

திருடன் திருடன் என்று தான் மனிதனை....

இன்னும் சித்தர்கள் பல சித்தர்கள் மனிதர்களை பலப் பல ரூபங்களில் பல பலகாலங்களில் கூட காத்து நின்றனர்....!!!

ஆனால் கலியுகத்தில் சுலபம் என்பதை கூட அருமையாக புசுண்டன் புசுண்டன் நிரூபித்து விட்டான்!!!

நிச்சயம் பின் மனிதனுக்கு நோய்கள் மூலமாகத்தான் இனியும் பலமான அடிகள்!!!!

இன்னும் வரப்போகின்றது!!!

என்னென்னவென்றால்??? சொல்ல முடியாத அளவிற்கும் கூட... இன்னும் நீர்நிலைகள் இதன்மூலம் பலமாகவே மனிதன் அழியப் போகின்றான்!!!

வருகின்றது... இன்னும் மழை எவையென்று கூற!!!.... இன்னும் கற்கள் ஒளி கற்கள்(விண்கல்) திடீர் திடீரென்று மனிதன் மீது விழும் என்பேன்!! அங்கேதான் சூட்சுமங்கள் இருக்கின்றது!!

அதனால் திருந்திக் கொள்ளுங்கள் மனிதா!!!

உலகம் நிரந்தரமில்லை!!!!

அனைவருக்கும் செய்யுங்கள்!!!

பிறர் மனதை ஆராய்ந்து செய்தால்தான் தர்மம்!!!

பிறர் வாங்கிக் கொடுப்பது தர்மமே இல்லை!!!

இதனையும் உணர்த்துவதற்கு கேட்காமலே செய்கின்றார்களே!!! அதுதான் தர்மத்தில் போகும்!!!!

அதனால் மற்றவர்களை உணர்ந்து இந்த சூழ்நிலையில் இருக்கின்றாயே!!!! என்றுகூட தர்மத்தை செய்தால் அது பெரும் புண்ணியமப்பா!!!!!

இதனை உணர்த்த  உணர்த்த உணர உணர இன்னும் ஞானங்கள்!!!

என் தாய் தந்தையரும் (ஈசன் பார்வதி தேவி) மிக்க மகிழ்ச்சி ஆகவே இங்கு வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!! இதனால் பல பல பல பல சித்தர்களும் பல ஞானியர்களும் ரிஷிகளும் இங்கு வந்து அழகாகவே அதிகாலையிலே நீராடுகிறார்கள்!!!!

இதையென்று கூற பின் மேலே!!!! எதையென்று கூற இமயமலையிலிருந்து இன்னும் பல பரிசுத்தமான ஆன்மாக்கள் பின் உடம்பு தான் இல்லையே..... உயிரோடு நீராடிக் கொண்டிருக்கின்றது!!! அந் நீரானது வந்து கொண்டே தான் இருக்கின்றது!!!

நிச்சயம் பின் அதில் மூழ்கினால் கர்மங்கள் பல கர்மவினைகள் தீரும்!!!!

அதற்கும் என் தந்தையின் அருளாசிகள் பெற வேண்டும்!!!!

என் தந்தையின் அருள் ஆசிகள் பெற வேண்டும் என்பதற்கிணங்க யான் சொல்லி விடுகின்றேன்!!!!

அனுதினமும் அதிகாலையிலே என் தந்தையினை 108 முறை சுற்றியும் என் தாயவளை 108 முறை சுற்றியும்(ஈசனையும் பார்வதி தேவியையும் தனித்தனியாக 108 முறை சுற்றி வணங்க வேண்டும்) சுற்றியே மாதங்கள் வந்தால்.... பல மாதங்கள் இப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் என் தந்தையே அனுமதித்து விடுவான்  இக் காசி தன்னில் நீராட!!!!!!

மற்றவையெல்லாம் செல்லாது!!!!!  செல்லாது!!!!

சொல்லிவிட்டேன் ரகசியத்தை!!!!

இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

ஆனாலும் அனைவருக்கும் கிடைக்குமா??? என்பதை கூட.... சந்தேகமே!!!!!!

இவையென்று கூறாத அளவிற்கும் கூட..... இன்னும் இறைவனை நேரில்.........

ஆனாலும் என்னையும் பார்த்து நீ இறைவனா!??? என்று கூட பல நபர்கள் கேட்டு விட்டனர்....

ஆனால் என்னவென்று ??கூற....... பல அடிகள் பல அடிகள் !!!!

எதற்காக ??மனிதா நீ பிறந்தாய்??

உன்னுடைய வேலை என்ன!?...... அதை மட்டும் செய்து விட்டு போனாலே இறைவன் பக்கபலமாக இருப்பான்!!! அனைத்தும் செய்வான்!!!!

செய்வான்!!! இன்னும் பல சித்தர்கள் பல ரகசியங்களோடு சொல்வார்கள்.... அதைக் கேட்டுக்கொண்டே நன்குணர்ந்து பின் மீண்டு வாருங்கள்!!!! பிறவிக்கடலிலிருந்து!!!!!!

வந்தால் இன்னும் நலன்களோடு பல ரகசியங்களை செலுத்தி நீங்கள் நல்படியாக வாழலாம்!!!

முதலில் ஒழுக்கங்கள் எப்படி.... இப்படி இருந்தால் எப்படி வாழலாம் என்பதை கூட சித்தர்கள் முதலில் சொல்வார்கள்...!!! அதற்கு பிறகுதான் பல சூட்சுமமான விஷயங்கள் ரகசியங்கள் இத்திருத்தலத்திற்கு சென்றால்... அங்கே என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் சொல்வார்கள்!!! வரும் காலங்களிலப்பா!!!!

பிழைத்துக்கொள்ளுங்களப்பா!!!!!

பின் மீண்டும் எதையென்று உணராமலே.... என் தலத்திலே அற்புதமான வாக்கை ஒன்றை விளக்குகின்றேன்!!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

Tuesday 21 June 2022

சித்தன் அருள் - 1152 - அன்புடன் அகத்தியர் - மானகௌசிகேசர் ஆலயம், அகரம். ஆலங்குளம்.











27/5/2022 அன்று  குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொதுவாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம் :

ஸ்ரீ சிவகாமி அம்மன் உடனுறை மானகௌசிகேசர் ஆலயம், அகரம். ஆலங்குளம். தென்காசி  மாவட்டம். 

ஆதிமூலனை மனதில் தொழுது செப்புகின்றேன் அகத்தியன்.

அப்பனே.... வரும் காலங்களில் நிச்சயமாய் அப்பனே மாற்றங்கள் உண்டு ஆனால் எதை என்று கூற அறியாத அளவிற்கும் கூட அப்பனே அழிவுகள்.... நிச்சயம் இதை யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன் ஆனாலும் அப்பனே இவைதன் உணர உணர இதுவும் மனிதனிடத்திலே இருக்கின்றது என்பேன்.

ஏனென்றால் அப்பனே அழிவிற்கு காரணமானவன் மனிதனே !!!என்பேன்.

இதனால் அப்பனே எதை? எதை ?மனிதன் அழித்துக் கொள்கின்றானோ எதை என்று கூட தெரியாமல் அப்பனே இதனால் மனிதனின் தன்மைகள் மாறினால் நிச்சயம் ஈசனும் மாறிக் கொண்டே இருப்பான் சொல்லிவிட்டேன். 

அதனால்தான் அப்பனே சில சில உலகங்கள் எதை என்று பற்று கொள்கின்றது  எதை பற்றுக் கொள்ளாததைக்கூட இவ்வுலகத்தில் நிகழ்ந்து கொண்டுதான் வந்து கொண்டிருக்கின்றது.

இதனால் அப்பனே புத்தியுள்ள மனிதன் எவை என்று கூறுக ஒரு சமயத்தில் புத்தி இல்லாதவனாகவே செயல்படுகின்றான். இவ்வாறு இவ்வாறு செயல்பட்டால் இறைவன் வந்து எதை என்று கூற.....

ஆனாலும் அப்பனே யாங்கள் பார்த்திட்டோம்... அப்பனே யாங்கள் எதை என்று கூற... பல திருத்தலங்களையும் உருவாக்கினோம்... ஆனாலும் அப்பனே எதை என்று தெரியாமலேயே மனிதன் அழித்துவிட்டான்.

ஏனென்றால் அப்பனே மனிதனின் அப்பனே பின் தன்மைகள் மாறி.... புகழ் வேண்டும்!!! செல்வங்கள் வேண்டும்!!! நம்தனை மதிக்க வேண்டும் என்று எண்ணி எதை என்று கூற இறைவன் அனைத்தும் கொடுத்து விடுவானா??? என்று எண்ணி பல திருத்தலங்களை அடியோடு........

ஆனாலும் ஆனாலும் மனிதர்களை எதை என்று கூற ஆனாலும் மனிதர்களை ஏற்படுத்தினோம்.... ஆனாலும் இவ்வாறு செய் !!அவ்வாறு செய்!!! என்றெல்லாம்.

ஆனால் மனிதனோ தன் நிலைமையை பார்த்து பின் எதை என்று கூற திருத்தலத்தை வடிவமைக்காமலே சென்று பின் பாதாளத்தில் விழுந்து கர்மத்தை அனுபவித்து மீண்டும் மீண்டும் பிறவிகள் ஏற்படுத்திக் கொண்டு வருகின்றான்.

இதனால் எதையென்று  கூற ஆனால் இதனால்தான் பலம்மிகுந்த திருத்தலங்கள் இன்னும் ஏராளம் இருக்கின்றது இவ்வுலகத்தில் அப்பனே. அதை மீட்டெடுத்தாலே போதுமானது..அதன். திறமைகள் அதிகம் என்பேன் அப்பனே.

ஆனாலும் இதை என்று கூற மனிதனுக்கு தெரியாமல் புதிய புதிய உற்பத்தி(புதிய கோயில்கள்)  ஆனாலும் அவற்றின் மூலம் என்ன தான் நடக்கின்றது என்பதை கூட தெரியாமல் போயிற்று மனிதனுக்கு..

ஆனாலும் அப்பனே சிறப்புமிக்க தலங்கள் இன்னும் எதை என்று கூற ஞானிகள் ரிஷிகள் இவை அறிந்து அறிந்து தேவர்கள் அறிந்து இவற்றையும் அறிந்து அறிந்து திருத்தலங்களை அமைத்தார்கள்.

அமைத்தார்கள். இங்கு அமைத்தால் இப்படி இருக்கலாம் என்று கூட....

ஆனாலும் இதை மனிதன் தற்சமயத்தில் அப்பனே எதையென்று ஆனாலும் நினைக்கக்முடியாத அளவிற்கும் கூட வரும் காலங்களில் கஷ்டங்கள் தான் நிகழப் போகின்றது சொல்லிவிட்டேன்.

அதனால்தான் அப்பனே யாங்களே வந்து சிலசில திருத்தலங்களை இனிமேலும் வந்து அப்பனே எடுத்து... இதன் மூலம் செய்ய வேண்டுமோ அப்பனே அவையெல்லாம் நிச்சயம் யாங்களே செய்வோம்.... யாங்களே ஏற்படுத்திக் கொள்வோம்.

இதனால்தான் அப்பனே ஈசனும்... எதை என்று கூற மனிதனின் செய்கைகளை பார்த்தால் நிச்சயம் புத்தியில்லாத மனிதன் தரம் கெட்ட மனிதன் பின் அழிவான் என்பதை கூட பின் ஈசனே உரைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்.... 

இதையென்று கூற அழகாக படைத்திட்ட யான் எதை என்று ஆனாலும் இவற்றின் மூலம் அறிவது மனிதனின் பின் வழிகளில் பல தவறான நடத்தையில் தான் செல்வான் போட்டி பொறாமைகள் இவந்தனை அழித்துவிடும் என்பேன் இதனால்... உண்மையான பக்தனை நிச்சயம் இறைவன் காப்பான் என்பேன்.

இதனால் பக்திகள் செலுத்தினாலே போதுமானது... இறைவனே அனைத்தும் வந்து செல்வான் இக்கலியுகத்தில்... இறைவனையே காணலாம் என்பேன். அப்படிப்பட்ட இக்கலியுகத்தில் எதனை என்றும் கூற கஷ்டங்கள் எதற்கு?? வருகின்றது என்பதை கூட..... யாராவது உணர்ந்து விட்டீர்களா???? என்றால் நிச்சயம் இல்லை என்பேன்.

ஏனென்றால் தான் செய்த.....எதை என்று கூற குற்றங்கள்!!! ஒவ்வொரு மனிதனும் குற்றங்களை செய்துவிட்டு இறைவனை நாடுகின்றான்... இதுதான் உண்மை.

அவ்வாறு நாடும் பொழுது எவ்வாறு? இறைவன் நிச்சயம் எதை? என்று பின் தரித்திர மனிதா எதையென்று  கூட..... எப்படி?? செய்வான்?? இறைவன்!!

இதனால் இறைவனும் அமைதியாகத்தான் இருப்பான் அதனால் நீயும் எதை எதை என்று கேட்பதற்கு சமமாக.....

ஏன்? அப்பனே எதையன்றி கூற கூறும்பொழுது அப்பனே ஒன்றுமில்லை அப்பனே.

இறைவனிடத்தில் எந்த தகுதியோடு நீ கேட்கின்றாய்???
என்று சொல்!!!!!...

சொல்லுங்கள்!!!!! எதையன்றி கூற அதனால் தகுதிகள் படைத்திட வேண்டும் !!!

பல புண்ணிய காரியங்கள் செய்திடல் வேண்டும்!!!

தன்னைப்போலவே மற்றவரையும் எண்ண வேண்டும்!!!

பல மற்ற ஜீவராசிகளையும் எண்ண வேண்டும்!!

அவன்தான் மனிதன்!!!!

எதை என்று கூற அவன் அவந்தனுக்குத் தான் அனைத்தும் நடக்கும்!!! அனைத்தும் நிறைவேறும்!!!

அதைவிட்டுவிட்டு எதை என்று கூற.... நினைக்காமல் இறைவனிடத்தில் சென்றாலும் இறைவன் ஒன்றும் செய்யப்போவதில்லை!!!  இதனை பலவாக்குகளிலும் சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.

மனிதர்களுக்கு.... ஏனென்றால் மனிதனின் பாதை தவறான பாதையில் இக்கலியுகத்தில் சென்று கொண்டிருக்கும்.

அதனால் முதலில் மனிதனை நல் முறையாக மனிதன் ஆக்குவோம். ஆனால் மனிதன் மனிதனாகவே வாழ வாழ வாழ இன்னும் எதை என்று ஆனாலும் உண்டு திறன்கள்.

ஆனாலும் இக்கலியுகத்தில் இன்னும் மாற்றங்கள் ஏற்பட ஆனாலும் எங்களையும் நம்பி உண்மையான பக்தர்களை எல்லாம் கெடுத்துக் கெடுத்துக் கொண்டே இருக்கின்றனர் அதனால்... அவர்களையாவது மீட்டெடுத்து நல் முறையாகவே அவர்களுக்காகவாவது எதை என்று கூற அதனால் நல் முறையாகவே யாங்கள் செய்வோம் அவர்களை உயர்த்திட ...

இன்னும் பல மாற்றங்கள் உண்டு என்பேன்... உலகம் எப்படி?? உருண்டோடுகின்றது.... உலகத்தை காக்க இறைவன் ஆனாலும் இறைவன் காத்து காத்து பல பல வழிகளிலும் மனிதனை அப்படிச் செல்!!! இப்படிச் செல்!! என்றெல்லாம் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றான்.

ஆனாலும் மனிதனோ!!! யான்... எதை என்று எதை எப்பொழுது செய்ய வேண்டும் என்பதை கூட தெரியாமல் அப்பனே எதை என்று கூறும் அப்பனே பொய்கள் நிறைந்த வாழ்க்கையப்பா மனிதனுக்கு!!!

அப்பனே இப் பொய்யான உலகத்திலே ஆனால் உண்மை உலகம் இதற்கும் சம்பந்தம் உள்ளதா?? என்பதை தெரிவித்துக்கொள்கின்ற முறையான வகுத்தல்களை கூட அப்பனே வகுத்துக் கொள்ளுங்கள்.

அதனால் அப்பனே என்னுடைய வாக்குகள்... எதை என்று கூற அப்பனே இன்னும் பல தலைமுறைக்கும் எதையென்று கூற எடுத்துச்செல்லும்.... அப்பனே மனிதர்கள் திருந்துவார்கள் அப்பனே என்பதைக்கூட... அப்பனே.

ஆனாலும் ஈசனும் சரியாக சொல்லிவிட்டான் மனிதன் நிச்சயம் திருந்தவே மாட்டான் எதையென்று கூற அதனால் யான் அழிவுகள் தான் ஏற்படுத்துவேன் என்றுகூட!!....

ஆனாலும் யாங்களெல்லாம் பொறுத்திரு!! பொறுத்திரு!! ஈசனே!!!! என்று கூட அவனுக்கு....எதையென்று கூற ஊட்டி!!! ஊட்டி!!! ஞானப் பாலை ஊட்டி ஊட்டி பின் பொறுமை காத்து இருக்க வேண்டும் என்பதை கூட அவன் கோபத்தை யாங்கள் தணித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!! 

இதனால் அப்பனே நன்மையானதை செய்யுங்கள்.... அப்பனே நல்லோர்களுக்கு எதை என்று...எவையென்று கூற தர்மத்தைக் கடைப் பிடியுங்கள் அப்பனே!!!

தர்மத்தை கடைபிடித்தால் நிச்சயம் மோட்ச கதியை அடைவீர்கள்!! ஏனென்றால் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் கலியுகத்தில் வந்துகொண்டே இருக்கும் என்பதை கூட யான் சொல்லிக்கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன்.

அப்பனே பல சித்தர்களும் இவ் ரசியத்தை சொல்லிக்கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!! ஆனாலும் அதை உணராமல் அப்பனே தான் எதை என்று கூற செல்வங்கள் வர வேண்டும் தன் பிள்ளைகள் வாழ வேண்டும் அப்பனே இவற்றிற்குத் தான் முதல் மரியாதையா!???? அப்பனே இறைவனுக்கு இல்லையா?? அப்பனே!!!

இறைவனுக்கு முதல் மரியாதை!!!! கொடுங்கள் அப்பனே ஆனால் எவ்வாறு கொடுப்பது என்பதைக்கூட தெரியவில்லை அப்பனே எதை என்று கூற..

அதனால் கொடுத்திடு...எதையென்று கூற  அப்பனே எவற்றின் மூலம் கஷ்டங்கள் வருகின்றது என்பதை கூட சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே.

ஆனால் இறைவன் மூலம் அப்பனே யாருக்கும் கஷ்டங்கள் வருவதே இல்லை...... என்பதைக்கூட நல் விதமாகவே தெரிவிப்பேன்!!!!

ஆனாலும் அப்பனே இக்கலியுகத்தில் விதியின் பாதையையும் யாங்கள் மாற்றுவோம் நிச்சயம்.. எங்களை நம்பி வந்து விட்டால்.....

எதையெதை என்று கூறும் உண்மைகளையும் பல ரகசியங்களையும் சொல்லிவிடுவேன் அப்பனே ஆனாலும் அப்பனே பாண்டிய மன்னன்

(நெடுஞ்செழியன்) எதற்கெடுத்தாலும்  எதைஎன்று கூற அப்பனே ஆனாலும் அவந்தன் ஈசன் மீது... பல பக்திகள் கொண்டவன்.... அப்பனே ஈசனே கதி என்று இருந்தவன்..... ஆனாலும் அவந்தனுக்கு ஒரு சோதனை வந்தது!!! பல இன்னல்களும் வந்தது!!

ஆனாலும் இதையறிந்து ஆனாலும் பக்தியை யான் செலுத்துகின்றேனே!!! பக்தியை செலுத்த செலுத்த இவ்வாறு கஷ்டங்கள் வந்துகொண்டே இருக்கின்றதே என்று எண்ணி.... ஆனாலும் மயங்கினான் எதை என்று கூற மனதும் திகைத்து மனம் வருத்தப்பட்டான்!!

ஈசனை இவ்வாறு எவ்வாறு பல திருத்தலங்களை உருவாக்கியும் இவ்வாறு மனது எதை என்று ஆனாலும் மனம் கலங்கி இருக்கின்ற பொழுது.....

ஆனாலும் ஈசனே எதையன்றி கூற ஒரு மனித ரூபத்தில் வந்தான்!!!!

மனித ரூபத்தில் வந்து ஆனாலும் இவந்தனை எதை என்று விளக்கத்திற்கு அவ் மன்னனை பின் காண முடியவில்லை.... சில பல மனிதர்கள் தடுத்துவிட்டனர்.

ஆனாலும் ஈசன் நினைத்தால் அவர்களை அடியோடு அழித்துவிட்டு இருப்பான்!! ஆனாலும் இதையன்றி கூற நிச்சயமாய் மனிதன் மூலமே பார்க்க வேண்டும் என்று கூட ஆனாலும் யாரும் இவந்தனுக்கு இதையன்றி கூற ஈசனுக்கு வழி விடவில்லை அவந்தனை பார்க்க....

ஆனாலும் ஈசன் இவ்வாறு நினைத்தான்!!! சரி இங்கேயே உறங்குவோம்!!

என்றுகூட பல நாட்கள் பின் திண்ணையிலே உறங்கிக் கொண்டிருந்தான்.

அவன் உறங்கும் பொழுது பல பாடல்களை பாடிட்டு பாடிட்டு!! பாடிட்டு !! வந்தான்.

ஆனால் இதை மன்னன் காதில் இட்டனர்!! சில மனிதர்கள்!!

யாரோ ஒருவர் இங்கே அமர்ந்து பல நாட்களாக தங்கி பல பாடல்களை பாடிட்டு ஆனால் அர்த்தங்கள் கேட்டால் அப்பப்பா!!!!!!!!!!!!!!!!!!

அதை உணரத்தான் யாருக்கு ??தகுதி!!!!!! என்றுகூற.... 

அதனால்  வரச்சொல்!!!! என்று கூற ஆனாலும் அவ் மனிதனை வரச்சொல்!! வரச்சொல் !!என்று  உத்தரவிட்டான் பாண்டியன்.

ஆனாலும் வந்தான் அதுதான் எதற்கு காரணம் என்றுகூட  ஈசன் என்பதை ஆனாலும் அவ் பக்தியை செலுத்திய பாண்டிய மன்னனுக்கே வந்திருப்பது
ஈசன் தான் என்று தெரியாமல் போய்விட்டது.

ஆனால் எதையென்று சபைகள் கூடியது!!! கூடிட்ட பிறகு மன்னனும் கேட்டான்!!!

யாரப்பா?? நீ!!??? 

எதையென்று கூற இங்கிருக்கும் பின் திண்ணையில் கூட எதை என்று தெரியாமலேயே பல பாடல்களை நீ பாடியுள்ளாய். 

ஆனாலும் பல பல உயர் மனிதர்கள் எதை என்று கூற உயர் பெரியோர்கள் ஆனாலும் அவர்களும் கேட்டறிந்தனர் ஆனால் உன் பாடல்களிலோ பல ரகசியங்கள் உள்ளது பல ரகசியங்கள் தெரிந்து தெரிந்து தெரிந்து தெளிவு பெற்றதாக கூறுகின்றனர்!!

நீ யாரப்பா??? 

என்று கூட ஆனாலும் ஈசனோ பின் தலைகுனிந்தான்!!!
எதையென்று கூற எப்படி சொல்வது என்று கூட!..

ஆனாலும் ஈசன் நினைத்திருந்தால் அங்கே ஆட்டத்தை ஆரம்பித்திருக்கலாம்.... ஆனாலும் பின்  எதனை உணர்ந்து மெய்சிலிர்த்து... நானும் ஒரு சாதாரண மனிதனே!!! என்று கூறிவிட்டான்.

ஆனாலும் இதையன்றி கூற திரும்பவும் பாண்டிய மன்னன் கேட்டான்!!!

நீ சாதாரண மனிதனா!???

அப்படியென்றால் உன் தாய் தந்தையர் எங்கு இருக்கின்றார் என்று கேட்க

இல்லை!! என் தாய் தந்தையார் பின் எதை என்று கூற ஆனாலும் இங்கு இல்லை ஆனாலும் திரும்பவும் பாண்டிய மன்னன் கேட்டான். எதை எவற்றிலிருந்து.... 

உன் சொந்த பந்தங்கள் யாரென்று கூட...!!!

ஆனாலும் சொந்த பந்தங்கள் யாரும் இல்லை எதற்கு என்று கூட பின் ஆனாலும் இதில் ஒரு புலவன் எதையென்று கூற

இவந்தனை இப்படியே வைத்து விட்டால்... எதை என்று உணராமலே இவன் பாடி பெரும் புகழ் அடைந்து விடுவான் என்று கூட திருடன் பட்டம் சூட்டினான். பின் ஈசனுக்கே!!!! 

ஆனால் ஈசன் தான் என்று யாரும் உணரவில்லை!!!! எதை என்று கூட ஆனாலும்... அவற்றின் மூலம் வருவது என்னவென்றால் கூட ஆனாலும் பொய்யான பரப்புகளை பரப்பி எதை என்று கூற இவன் திருடன் தான் எந்தனுக்கு நன்றாக தெரியும் பலவழிகளிலும் திருடி திருடி ஒரு திண்ணையில் ஒளித்து வைத்திருக்கின்றான் என்று கூட மறைமுகமாகவே புலவன்...

ஆனாலும் எதை ஆனாலும் அதனுள்ளே புலவன் எதனை என்று தெரிவிக்க பின் ஓர் இலையை எடுத்து இதனை இவந்தனிடம் கொடுத்துவிடு......இவந்தன் எங்கெல்லாம் செல்கின்றானோ.... இவந்தனுக்கு அங்கெல்லாம்... பரதேசி போல செல்லட்டும் ஆனால் பல வேலைகளையும் பல வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டும் இவன் திருடன் என்று கூட....

ஆனாலும் இலையை கொடுத்துவிட்டு ஆனாலும் ஈசனோ!!!  எதையென்று கூற ஆனாலும் திரிந்தான்!! திரிந்தான்!! ஆனாலும் இங்கே பல வேலைகளையும் செய்தான் ஈசன்.

இது யாருக்காவது தெரியுமா?? என்றால் நிச்சயம் தெரியாது என்பேன்.

இதனால் அப்புலவன் ஈசனை திருடன்....ஈசனிடமே எதையென்று ஆனாலும் ஈசனிடம் பெற்று பெற்று வாழ்ந்தமைக்கு காரணமா என்று கூட...

ஆனாலும் ஒன்றைச் சொல்கிறேன்..... ஈசன் அப்பொழுதும் வேலை செய்தான் வீடு வீடாக சென்று!!!

ஆனாலும் எவை என்று கூற எதனால்  என்று தெரியுமா?? ஆனாலும் அனைவரும் பக்தர்கள் எதை என்று கூற.....

பக்தர்களே உயர்ந்த வழிகள் உயர்ந்த பக்திகளை குறிப்பிட்டுள்ளனர்...

ஈசனையும் பார்வதியையும்  எதையென்று கூற நினைத்து நினைத்து உருகி நின்றனர் இதனால்.... தன் பக்தர்களுக்காக வேலை செய்தவன்...ஈசனே!!!! 

இப்படிப்பட்ட கருணை உள்ளவன்.

ஆனால் இப்பொழுது என்ன!! செய்ய மாட்டானா?? என்ன???!!   

ஆனாலும் கோபம் கொண்டானே!!! எதற்காக???
என்றால்.... மனிதன் பொய்யான பக்தியைக் காண்பித்து காண்பித்து எதை எதை என்று தெரியாமலேயே உணர்ந்து கொண்டிருக்கின்றான் இவ்வுலகத்தில்...

இதுதானா??  பக்தி?? என்பதைப்போல்....

அதனால் உண்மையான பக்தியை காட்டினால் நிச்சயம் இறைவன் தன் முன்னே தோன்றுவான்.

ஆனாலும் இதையன்றி கூற அப்படியும் செய்து செய்து நல் பெயரை பெற்றான் திருடன் எதையென்று...

ஆனாலும் புலவனோ!!! மனம் கலங்கினான். இப்படிப்பட்ட நல் வேலைகளைச் செய்கின்றான் பல மனிதர்களும் எதை என்று கூற ஈசனை எதையன்றி நல் வேலைகளும் செய்தான் அனைத்தும் செய்கின்றான் இவந்தன் நல்லவன் என்று... திருட முடியாது என்று கூட உத்தரவு இட்டார்கள்...

மீண்டும் சபைகள் கூடியது!! 

எதையென்று கூற இவ் நல்லோனுக்காக போராடினார்கள் பல மனிதர்கள்.... ஆனால் அவ் நல்லவன் யார் என்று உணர்ந்து இருப்பீர்கள் நீங்கள்!!!! ஈசனே!!!

இதை எவ்வாறு தெரிவது என்பதால் அப்பனே.... நீங்கள் நல்லவராக இருந்தால் நிச்சயம் பல மனிதர்கள் உன்னை சூழ்ந்து கொள்வார்கள்.
இதுதான் உண்மை அப்பனே!!! 

அதனால்  ஈசனுக்காக தன் பக்தர்கள் வந்து போராடினார்கள்!!!

புலவன் எதை என்று கூற புலவனுக்கும் தெரிந்தது காதில் எதை என்று. 

ஆனாலும் இதையென்று மனம் வருந்தினான்!!!

இவ்வாறு நல்லவனை இவ்வாறு செய்தோமே...என்று... 

ஆனாலும் புலவன் மீது கோபப்படவில்லை ஈசன்.

ஆனாலும் இதையன்றி  கூற மீண்டும் பாண்டிய மன்னன் கேட்டறிந்தான்..

யாரப்பா நீ??!!! 

உந்தனை அனைவரும் புகழ்கின்றார்களே!!!

எதை? எப்படி!? நீ யார்??? சொந்த பந்தங்கள் என்று கூட....

ஆனாலும் ஈசன் ஒரு வார்த்தையில் சொல்லி விட்டான்!!!

என்னுடைய சொந்த பந்தங்கள் அனைவரும் எனக்காக வந்து உரையாடுகின்றார்களே!!! 

இவர்கள் தான் என்னுடைய சொந்த பந்தங்கள்!!! என்று கூட... 

ஆனாலும் எப்படி?? எதை என்று கூற திரும்பவும் பாண்டிய மன்னனுக்கு கோபம் உண்டாயிற்று!!!!

முதலில் யான் கேட்டபோது யாரும் சொந்தபந்தங்கள் இல்லை என்று சொன்னாய் !!!

ஆனால் இப்பொழுது அனைவரையும் சொந்தங்கள் என்று எதை என்று பின் ஏமாற்றி விட்டாயா என்று கூட.....

ஈசனக்கு பின் வந்தது கோபம்!!!

எதையென்று கூற அதனால் கண்கள் சிவந்தது!!! 

இருப்பினும் பின் கோபத்தை கட்டுக்குள் அடக்கினான்...

எதையென்று திரும்பவும் பாண்டிய மன்னன் ஆனால் பாண்டிய மன்னனோ பல பல பக்திகளை உடையவன் ஈசன் மீதே!!!! ஆனாலும் எதை என்று ஆனாலும் உன்னை விட்டு விடுகின்றேன் இவ்வுலகத்தில் இல்லாத ஒரு பாடலை பாடு என்று ஈசனுக்கு கட்டளையிட்டான்!!!

அது போல பாடினான்!!! பாடினான் ஈசன்!!!

எதையென்று உணராத அளவிற்கு உணர்வுகள் உண்டா??!!!

உண்டா இல்லை என்றேல் இவ்வுலமில்லை!! 
இல்லாதோருக்குண்டா!! 
உண்டென்பதைக்கூட மறந்து விட்டார்கள்!!
பொய்யானதை பின் பற்றி பொய்யான வழிகளிலே
சம்பாதித்து சம்பை எதை அழியாத உணர்வா??
உணர்வில்லாமல் மனிதனா??
உணர்ந்து விட்டானா?? மனிதன்
உணர்ந்ததை எதைச் செய்து விட்டான் மனிதன்
மனிதனா?? பரம்பரையே வந்தது வீணா??வீணிலிருந்து வந்தது

எதையடா 
எதையென்று கேட்க 
இதனையும் மறுத்து விட்டதா?? 
மறுத்துவிட்டதைப்போல் 
எது வந்தது?? எதை தேடிக்
கொண்டிருக்கின்றாய்?? 
தேடாததையும் தேடிக் கொண்டிருக்கின்றாய். 
உள்ளத்தில் உணர்ந்தது உள்ளத்திலே வைத்தாயா?? 
இல்லை வெளியில் வைத்தாயா?? 
வெளியில் உள்ளதை எதை உணர்ந்தாய்.. உணராதவர்களுக்கு எதுவுமேயில்லை.. 
சட்டென்று போய்விட்டாய் 
பின்பு எடுத்துவிட்டாய் 
எடுத்துவிட்டாய் 
பின்பும் பின்பும் 
எடுத்து விட்டு 
உணர்ந்து உணர்ந்து 
வந்து வந்து நலன்கள் 
தந்தாயா?? இல்லை இல்லையென்பதற்கிணங்க.... இல்லையா இல்லை உண்மையா இல்லை
இதனையுமறிந்து பொய்யான உடம்பை
பெற்று பொய்யான பகுதிகளே பாதி இதனையுமுணர்ந்து எவ்வாறு உணராமலே
சென்று கொண்டிருக்கின்றாயே மனிதா!!...... 

என்று கூற.... 

பார்த்தான்.... எவை எதையென்று உணர்ந்த பின் பாண்டிய மன்னன்.

இவ்வளவு ரகசியங்கள் !!!

ஆனால் நீ சாதாரண ஆள் இல்லை!!!

பின் உந்தனுக்கு யார்?? கற்றுக் கொடுத்தார்கள் என்று கூற....

ஆனாலும் இதையன்றி கூற பாண்டிய மன்னனே தலை குனிந்தான்.

நிச்சயம் இவந்தன் இறைவன் பக்தனாகதான்  இருக்க வேண்டும்.. என்று கூட...

அதனால் ஆனாலும் எதை என்று கூற சிறிது நேரத்திலேயே மறைந்து போய் விட்டான்.... ஆனாலும் தேடினார்கள் கிடைக்கவில்லை.

ஆனாலும் இதையன்றி கூற

பல நாட்கள்  எதைன்று கூற பாண்டிய மன்னனுக்கு பின் ஔஷதங்கள் (மருந்துகள்) பல எதையென்று கூற உடம்பும் ஒத்துப்போகவில்லை ஆனாலும் வருத்தம்...

ஆனாலும் வருத்தம் இவ்வளவு பெரிய மாமனிதனை எதை என்று கூற நம்பாமல் நாம்  எதை என்று கூற ஒரு புலவன் சொன்னதைக் கேட்டு நிலைகுலைந்து தவறாக அனுப்பிவிட்டோமா என்று எண்ணி எண்ணி வருந்தினான்.

எதையென்று ஆனால் அவ் மனிதனை கண்டுபிடிக்க வேண்டும் என்று எண்ணினான் அதனால் பல தவங்கள் இயற்றினான் இதனை என்று கூற ஆனாலும் யானும்(அகத்தியர்) பாண்டிய மன்னனுக்கு உதவிட்டேன் .... ஆனால் வந்தது யார் என்று எந்தனுக்கு தெரியும் நன்றாகவே... உணர்ந்து பார்த்து பார்த்து பார்த்து எதையன்றி கூற கடைசியில் பார்த்தால் பாண்டிய மன்னனும் என்னிடத்திலே வந்தான்!!

இவ்வாறு ஒரு உயர்ந்த மனிதனை யான் எதை என்று கூற... எவற்றின் மூலம் உணராமலே உணர்த்தி பொய் சொல்லி அவந்தனை எங்கோ விரட்டி விட்டேனே!!!!! அகத்தியப்பா!!!!!......

எதையென்று கூற பின் மனம் வருந்தினான்.... எதையென்று கூற ஆனாலும் யான் சொன்னேன் இல்லையப்பா 
நிச்சயம் இருக்கின்றான்!!!! 
ஆனாலும் எதை என்று எவற்றின் என்றுகூட நீ நிச்சயம் ஈசனை நோக்கி தவத்தை மேற்க்கொள்!!!  
நிச்சயம் அவ் மனிதனே அழைத்துச் செல்வான் என்று கூட.....

இதனால் ஈசனை நினைத்து நினைத்து உருகி உருகி எதை என்று கூற தவங்கள் இயற்றினான்... தவங்கள் இயற்றி இயற்றி எதையென்று ஆனாலும்... ஈசன் வரவேயில்லை!!! 

இதையறிந்து மீண்டும் என்னிடத்திலே பாண்டிய மன்னன் அகத்தியா!!! அகத்தியா!!!! அப்பனே!!! இதை என்று கூற கூற மீண்டும் வந்தான்...

இப்படி நீ தவம் இயற்ற சொன்னாயே!!!! எந்தனுக்கு ஒன்றுமே நடக்கவில்லையே!!!....எதையென்று கூற ஆனாலும் வயதாகிக் கொண்டே போகின்றதே!!! 
எப்படி யான் காண்பது?? என்று கூட

திரும்பவும் நீ தவங்கள் செய்ய வேண்டும்... தவங்கள் செய்தால் நிச்சயம் பேரருள் கிடைக்கும் என்பதை கூட...

அதனால் தவங்கள் செய்தான்!! செய்தான்!!

அதனால் ஓர் சிறுவன் வந்தான்!! அச்சிறுவன் எதையன்றி கூற அச்சிறுவனும் ஈசனே!!!! மறைமுகமாக வந்தான். 

ஆனாலும் எதையன்றி ஆனாலும் மன்னனே!! என்று கூற....
திடீரென்று கண்ணைத் திறந்தான் பாண்டிய மன்னன்.

ஆனாலும் இதனை உணர்ந்து சிறுவனே நீ யாரப்பா??? என்று கேட்க

இதனையும் உணரவில்லையா இன்னும் கூட!!! 
இன்னும்கூட உணரவில்லையா??? என்றிணங்க மன்னனே...சற்று இன்னும் ஆழ்ந்த தியானத்தில் இரு என்று கேட்க....

ஆனாலும் ஆழ்ந்த தியானத்திற்கு சென்றான் பாண்டிய மன்னன்.

இருப்பினும் தவற்றை உணர்ந்து யாரையும் புண்படுத்த கூடாது யார் மனதையும் புண்படுத்தக் கூடாது எதையும் செய்யக்கூடாது என்று கூட பின் ஆனாலும் தெரியவில்லை கடைசியில் எதை என்று கூற சிறுவனை எதை கட்டித் தழுவிக் கொண்டான்.

ஆனாலும் பாசத்தின் மீது பின் ஈசனுக்கு கண்ணீர் வடிந்தது!!!! பின் இவ்வளவு பாசமா என்று.....

ஆனாலும் இவற்றிலிருந்தெல்லாம் உணர்ந்து கொள்ள வேண்டும் நீங்கள்!!!

ஆனாலும் இவையென்று என்னிடம் வருவாயா என்ற கேள்விக்கு இதையென்று கூற ஆனாலும் அச்சிறுவன் என்னிடம் வா!!! யான் அழைத்து செல்கின்றேன் என்றுகூட சில கிலோமீட்டர் தூரத்தில் எதை என்று கூற நடைபாதையில்.... கையைப் பிடித்து இழுத்து வந்தான்..

ஆனாலும் இவற்றின் அறியாது பின்பு நடந்தே வந்தான் பாண்டிய மன்னனும்.அச்சிறுவனை.

ஆனாலும் எவை எதையென்று கூற அயராது வந்த பாண்டிய மன்னனுக்கு கால்களும் எதை என்று பின் கைகளும் ஓய்ந்தது!!!!

எதை ஆனாலும் இதையன்றி கூற சிறிது நேரம் உட்கார்ந்தான்!!!

திடீரென்று பார்த்தால் பின் ஈசன் எவை எதையென்று  கூற அச்சிறுவனும் மாயமாகி விட்டான்....

ஆனால் ஒரு குரல் கேட்டது!!!!!

பாண்டிய மன்னனே!!!!!

வந்தது யானே!!!!! 

சிறுவன் ரூபத்திலும் ஆனாலும் சாதாரண மனிதனாக வந்ததும் யானே!!! என்று கூற....

ஆனாலும் வந்தது எங்கு சொன்னது என்று தெரியுமா????

இத்திருத்தலத்திலே!!!!! 

இங்கேதான் கூறிவிட்டேன் இப்பொழுது!!!!

ஆனாலும் இவற்றை அறிந்த பாண்டிய மன்னன் இதை எவற்றை என்று கூட
ஆனால் அழுதான் அழுது புலம்பினான்..... இறைவனை பின் தன்னிடமே இருப்பதை உணராமல் எங்கெங்கோ சென்றடைந்து எதைஎதையோ பின்பற்றி கூட....

அதனால் இவற்றிலிருந்தும் இவ்வாலயத்தை இதையென்று கூற பல மக்களுக்கு தெரிவித்து நல் விதமாகவே இதனை பயன்படுத்தி எதையன்றி கூற.....

ஆனாலும் மீண்டும் ஒரு சப்தம் கேட்டது!!!  

மன்னா!!!!!

எதையன்றி கூற நீ மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கின்றாயா!!!! அதனால் யான் இங்கேயே இருக்கின்றேன்.... எந்தனுக்கு எதையன்றி கூற இங்கே பல பல உருவங்களை எப்படி என்பதை கூட உன் கனவிலே செப்புகின்றேன் அதனை இங்கே தலம் அமைத்தால் நீ எண்ணிய எண்ணங்கள்!!!! உன் மக்களும் நலமடைவார்கள் வெற்றி பெறுவார்கள் பல நோய்களும் பின் நிச்சயம் ஒழிந்துவிடும்.... எதையென்று கூற... 

இதனால் பலபல எதை என்று கூறும் அளவிற்கும் கூட கலியுகத்தில் பல பெண்கள்  எதையென்று கூற தவறான வழியிலே செல்வார்கள்!!! அவர்களெல்லாம் இங்கே வந்து நலம் பெறுவார்கள்!!!

இன்னும் பல பல வழிகளில் உண்மைகள் புரியும்!!!
பல நோய்நொடிகள் இல்லாமல்  எதையென்று கூற நேர்மையாகவே வாழ்வார்கள் என்பதைக்கூட திண்ணமாக சப்தம் கேட்டது!!!!!

அதனால்  எதையென்று கூற உணராமலே எவை என்று கூட... ஆனாலும் ஓடோடி எதனை என்று என்னிடத்தில் வந்தான் பாண்டிய மன்னன்....

ஆனாலும் பாண்டியன் எதை என்று கூற அகத்திய முனிவரே!!!!  எதையென்று எவற்றையென்று கூற உணராமலே... எதையென்று கூற ஈசனை விட்டு விட்டேனே.... இப்பொழுது என்ன செய்ய வேண்டும் !!??என்று கூட...

பின் எதையன்றி கூற நீதான் எந்தனுக்கு வழிகள் காட்ட வேண்டும் என்றுகூட என்னிடத்தில் வந்துவிட்டான்!!!

ஆனாலும் பொறு மகனே எந்தனுக்கு எதை என்று கூற அனைத்தையும் யான் சொல்லித் தருகின்றேன்!!!
அவ்வாறே தலத்தை அமை!! என்று கூற ஆனாலும் எவையன்றி கூற 

அகத்திய முனிவரே... நீங்கள் ஓரிடத்தில் இருக்கமாட்டீரே!!! அங்கங்கே சென்று விடுவீரே!!!! யான் என்ன செய்வது என்று கூட!!!!

ஆனாலும் இல்லை!! இல்லை !!! யான் இங்கே தங்கி இருக்கின்றேன் அதனால் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக செய்கின்றேன் நீயே எங்கே தங்கி  எதையென்று கூற என்று கூட யான் தான்... இத்திருத்தலத்தை அமைக்க உதவிட்டேன்!!!!

அதனால் இவையென்று கூற சரியாக கட்டி முடித்தது...எதையன்றி கூற பல மனிதர்களும் நல் முறையாகவே நல் முறையாக வந்து வழிபட்டு பல இன்னல்களையும் தீர்த்துக் கொண்டனர்.

இதனால் பேரும் சீரும் சிறப்பும் மிகுந்தது இத்திருத்தலம்.

இதனால் பல வழிகளிலும் வந்தார்கள் ஆனாலும்  எதையென்று கூற... பாண்டிய மன்னன் ஒரு யோசனை இட்டான்...

ஆனாலும் அகத்தியன் பல பல வழிகளிலும் பல உலகத்தை சுற்றி வந்து விடுவானே!!! இதனால் இங்கே நிறுத்த வேண்டும் என்று எண்ணி...

அகத்திய முனிவரே இதையன்றி கூற.... இவ்வளவு தலத்தை அமைத்தாயே!!! நீ எங்கும் போகக்கூடாது இங்கே தான் இருக்க வேண்டும் என்று கூட...

எதையன்றி கூற என் கால்களைப் பிடித்துக் கொண்டான்!! ஆனாலும் இவற்றின் என்று கூற சரி என்று கூட யான் அப்படியே நின்று விட்டேன்!!!

ஆனாலும் எதை என்று கூற என் உடம்பை எதை என்று கூற பின் வந்துவிட்டேன் ஆனாலும் என் உயிர் எதை என்றுகூட இங்கேயே நின்று விட்டது.... அதற்கும் வடிவம் கொடுத்து எதையென்று கூற சரி..... இவற்றின் வடிவில் இருந்து வந்தவையா... இல்லை... எதையென்றும் நிர்ணயிப்பது போலே..

.சரி பாண்டிய மன்னனே யான் இங்கேயே இருக்கிறேன்...எதையன்றி கூற என்று நிற்கும் அளவிற்கு கூட பாண்டிய மன்னனும் எதை என்று கூற அகத்திய முனிவரே நீ... இங்கே தான் இருக்க வேண்டும் என்று எண்ணி...

ஆனாலும் யானும் எதை என்று கூற இவ்வளவு பற்று கொண்டுள்ளானே!! மன்னன் என்று கூட இங்கேயே தங்கிவிட்டேன் பல நாட்கள்...

ஆனாலும் இப்பொழுது கூட இவையெல்லாம் எதை என்று கூற எந்தனுக்கு பல வழிகளிலும் கற்றுக் கொடுத்து தான் வந்து கொண்டிருக்கின்றது யானும் இங்கேதான் இருப்பேன்.... வருவேன் எதை என்று கூற பல மக்களையும் காப்பாற்ற....

இன்னும் பல சிறப்பான உரைகளை கூறுகின்றேன் பல வழிகளிலும் பல திருத்தலங்களும் அழிந்து கொண்டே செல்கின்றது... அதனையும் யான் நிச்சயம் எவை என்று கூற யாங்களே(சித்தர்கள்) வந்து நிச்சயம்.... 

அதைவிட !!!ஏன் ஈசனே!!!!! வந்து அமைத்து விடுவான்.
இதுதான் உண்மை!!! சொல்லி விட்டேன்.

நல் விதமாக ஆசிகள்!!! ஆசிகள்!!! அதி விரைவிலே இத்திருத்தலத்தை யாங்களே  நல் விதமாக ஏற்று நடத்துவோம்!!! நடத்துவோம்!!! 
நல் விதமாகவே!!!!

ஓய்வதில்லை!!!!!!!! திருத்தலங்கள் வந்து பெருகும் என்பேன்!!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 
ஸ்ரீ மானகௌசிகேசர் சிவகாமி அம்மன் ஆலயம். 
அகரம். சிவகாமிபுரம் 
ஆலங்குளம் தாலுகா. 
தென்காசி மாவட்டம் 

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள. 
திரு பாபு :9894672644.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

மானகௌசிகேசர் சிவகாமி அம்மன் ஆலயத்திற்கு அருகிலே நம் குருநாதர் அகத்திய பெருமான் லோபமுத்திரை தேவிக்கும் தனிக்கோயில் உள்ளது.

அருள்மிகு லோபமுத்ரா உடனுறை ஞான அகத்தீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி நடந்து கொண்டிருக்கின்றது திருப்பணி முடியும் தருவாயில் உள்ளது

திருப்பணிகள் 16/12/2021 ஆண்டு முதல் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வந்துள்ளது....

ஏற்கனவே இருந்த கோயில் கால சீற்றத்தின் காரணமாக சிதிலமடைந்து இருந்ததால் மறு புனரமைப்பு பணி தொடங்கி தற்போது நிறைவுபெறும் நிலையில்...... வரும் ஆனி மாதம் இருபத்தி ஒன்பதாம் தேதி 13/7/2022 கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகநாள் விரைந்து வருவதால் எஞ்சிய பணிகளை மேற்கொள்ள நிதியுதவியும் பொருளுதவியும் தேவைப்படுகின்றது. அடியவர்கள் உதவிட வேண்டும். 

 
சிதலமடைந்த அகத்தியர் திருப்பணி வேண்டுகோள். இந்த ஸ்தலத்து அழகான அகத்தியர் லோபமுத்ரா  பல அற்புதங்கள் நடந்தஸ்தலம். 

சித்தர்கள் அருள் பெற இங்கு ஸ்ரீ அகத்தியர் லோபமுத்ராவை பிரதிஷ்டை செய்து அருள் பெற்றதாக ஐதீகம்.

இவ்வளவு சிறப்புகளை உடைய இத்தலம் இன்று சிதிலம் அடைந்து கேட்பாரற்று உள்ளது. 

பராமரிப்பு திருப்பணிகள் கோவில் அடியார்கள் சிலரால் ஒருங்கிணைக்கப்பட்டு சில நல்ல உள்ளங்கள் உதவியால் சிறிது சிறிதாக நடைபெற்று வருகின்றன. 

இத்திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவி செய்யலாம்

தொடர்புக்கு

திரு பாபு :9894672644.
திரு.மாடசாமி 8754247900
திரு.சுந்தர் சிவம் 9150187876
திரு.செல்வம் 9789733554
ஊர் பொதுமக்கள் 
அகரம் சிவகாமிபுரம் 
ஆலங்குளம் தாலுகா 
தென்காசி மாவட்டம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..........தொடரும்!