​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 30 November 2022

சித்தன் அருள் - 1232 - அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!


வாழ்க்கையில் இன்பம் அமைதி பெற:-

சில துன்பங்களை தவிர்க்க முடியவில்லை, சில வேதனைகளை தாங்கிக்கொள்ள முடியவில்லை, இவைகளுக்கெல்லாம் ஒரு மாற்று வழி, தீர்வு கிடைக்காதா? நிம்மதியாக இந்த உலகில் வாழ இயலாதா? என்று பலரைப்போல உனக்குள்ளும் இருக்கின்ற அகப்போராட்டம். அப்படிப்பட்ட நிலையில் நியாயமாக இருந்தாலும், ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் அவனுக்கு துன்பமாக தெரிகின்ற பிரச்சினைகள், பல நிகழ்வுகள், மற்றவர்களுக்கு துன்பமாக தெரியாது. அவனுக்கே, சில ஆண்டுகள் கழித்து, முன்பு துன்பமாக தோன்றியது, அப்பொழுது துன்பமாக தெரியாது. அப்பொழுது வேறொரு விஷயம் துன்பத்தை தரக்கூடியதாக அமையும். இன்னும் சில காலங்கள் போனால், இந்த விஷயம் போய் வேறொரு விஷயம் துன்பமாக ஆகிவிடும். ஆக, வெளியிலிருந்து வருகின்ற ஒரு நிகழ்வோ, நடக்கின்ற செயலோ, ஒரு மனிதனுக்கு ஓரளவு துன்பத்தை தருவதாக இருந்தாலும், அவனுடைய மனம், உறுதியாக உறுதிப்படும் என்றால், இந்த பிரச்சினை, பிரச்சினையாக அவனுக்கு தெரியாது. இது ஜாதகத்தில் இருக்கக்கூடிய தோஷங்களால், மனம் சாந்தமாக, உறுதியற்று இருக்கின்ற தன்மையால், சின்ன துன்பங்களை கண்டு துவண்டு போய் விடுகின்ற தருணம், பெரும்பாலான மனிதர்களுக்கு இருக்கிறது. இதை புரிந்து கொள்வது கடினம், இருந்தாலும் ஓரளவு இறைவன் அருளால் விளக்குகிறோம் அப்பா. ஒரு மனிதன் இருக்கிறான். அவன் ஏதோ ஒரு பாபங்களை செய்திருக்கிறான். அதற்காக, இறைவன், அவனை பல ஜென்மங்களாக மிருகங்களாக படைத்து அந்த மிருக உடலுக்குள், தான் யார் என்பதை (மனித உடலுக்குள்ளேயே தான் யார் என்பதை அறியாமல்தான் வாழ்கிறார்கள்) அறியாமல், மிருக உடலுக்குள் என்ன தெரியும், பசித்தால் உணவு, உறக்கம் வந்தால் உறக்கம், உடல் வேட்க்கை வந்தால், அதற்குரிய காலத்தில் தீர்த்துக் கொள்ள வேண்டும். இப்படித்தானே விலங்குகள் வாழ்கின்றன. இந்த தன்னுடைய உடல் சார்ந்த உணர்வுகளுக்கு தீர்வை மட்டும் புலன்களால் நுகர்ந்து வாழ்ந்து கொண்டு, ஒரு பிறவியை முடித்து விடுகிறது. நன்றாக கவனிக்க வேண்டும், விலங்குகளுக்கு புதிதாக பாபங்கள் சேராது. ஏன் என்றால், அது என்ன செய்தாலும், இது தவறு என்று அதற்குத் தெரியாது. இயல்பாக அதற்கு என்ன குணம் இருக்கிறதோ, அந்த குணத்தின் படிதான் அது நடந்து கொள்கிறது. உதாரணமாக ஒரு புலி, மானை கொன்று தின்றால், புலிக்கு அது பாபத்தை சேர்க்காது. அதை மனிதன் செய்தால்தான் பாபமாக மாறுகிறது. இப்படி பல பிறவிகள், மிருகங்களாக எடுத்து, சேர்த்த பாபங்களை நீக்கி கொள்கிறது. சரி! ஒரு பிறவியில் மனிதனாக பிறக்கவைப்போம், இனிமேல் இது ஒரு மனித பிறவிக்கு, எப்படி பதவியிலே, பதவி உயர்வு பெறுகிறார்களோ அதுபோல், மிருக பிறவியிலிருந்து, மனித பிறவிக்கு மாற்றி அமைக்கிறான் இறைவன். அல்லது வேறு ஒரு பிறவியிலே அவ்வாறு செய்கிறான்.

அவ்வாறு செய்யும் பொழுது, எடுத்த எடுப்பிலேயே, நல்ல குணம், இரக்கம், பொது நன்மைகளை கருதி செய்ய வேண்டிய காரியங்கள், பெருந்தன்மை இவையெல்லாம் வந்துவிடாது. அது பல ஜென்மங்கள், மிருகங்களாக இருந்ததால், அதற்குள் அந்த மிருகப் பதிவுதான் இருக்கும். தன்னுடைய தேவைகள் மட்டுமே முக்கியம், இதனால் யார் பாதிக்கப்பட்டாலும் அது என்னை ஒன்றும் பாதிக்காது என்ற நிலையில்தான் அந்த ஆத்மா அந்த மனித கூட்டுக்குள் வாழும். [இந்த தருணத்தில், ஒவ்வொருவரும் தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும், நான் எடுக்கின்ற தீர்மானம் மிருகப்பதிவினாலா இல்லை இறை அருளினாலா என்று].  ஏற்கெனவே பாபங்கள் அற்ற நிலையில் பிறப்பதால், ஓரளவுக்கு, போனால் போகட்டும் என்று சிறிதளவு செல்வத்தையும், செல்வாக்கையும் இறைவன் தந்து விடுவான். ஏற்கெனவே, மனதில் ஈவு இரக்கமோ, பெருந்தன்மையோ இல்லாத நிலையில்தான் அந்த ஆத்மா பிறவி எடுத்திருக்கிறது. இப்பேர்ப்பட்ட ஆத்மாவுக்கு, செல்வமும், செல்வாக்கும் சேர்ந்து விட்டால் என்ன நடக்கும். அதை தக்க வைத்துக் கொள்ளவும், தன்னை சுற்றி உள்ளவர்களை மீது எல்லாம் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி பாபங்களை சேர்த்துக் கொள்ளும். ஆனால், அது ஓரளவு பாபம் என்று தெரிந்தாலும் ஆணவத்தால் அப்படித்தான் நடந்து கொள்ளும் அந்த ஆத்மா. இப்படியாக பல பிறவிகளில் பாபத்தை சேர்த்துக் கொண்டே வரும்.  ஒரு பிறவியில் இந்த பாபத்தை அனுபவித்து தீர்க்க வேண்டும். எப்படி தீர்க்க வைப்பது? சுயநலமே முழுக்க முழுக்க கொண்ட பிறவிகளாக பிறந்துவிட்ட ஒரு மனிதனுக்கு, அரக்க குணம், இரக்கமே அற்ற அரக்க குணம் கொண்ட ஒரு மனநிலையை கொண்ட மனிதனுக்கும், நீ என்ன தண்டனை கொடுத்தாலும், அதை அவனால் உணர்ந்து கொள்ள முடியுமா? பிறகு, இந்த பாபங்களை எப்படித்தான் நீக்க முடியும்? யோசித்துப்பாரப்பா.

ஒரு சாத்வீகமான மனநிலையிலேயே, நல்ல எண்ணங்கள் கொண்ட ஒரு மனநிலையிலேயே, பிறர் துன்பத்தை கண்டு துடிக்கின்ற நிலையிலே, ஒரு மனிதனை பிறக்க வைக்க வேண்டும். அப்பொழுதுதான், அது, இதற்கு முன் பிறவிகளில் சேர்த்த பாபங்களை தீர்த்துக் கொள்ளும் முயற்சியிலே சிறிதளவாவது இறங்கும். அப்படி இறங்கும் பொழுது, இயல்பாக சாத்வீக குணம் இருந்தால் தானே, அது முதலில் யாருக்கும் எந்த விதத்திலும் தீங்கு செய்யக் கூடாத எண்ணத்திற்கு வரும். பிறர் படுகின்ற வேதனையை பார்த்து, துடித்து ஏதாவது செய்ய முடியாதா என்கிற முயற்சியில் ஈடுபடும். இப்படிப்பட்ட மனநிலையை கொண்ட மனிதனுக்கு இயல்பாக, பழைய ஜென்மத்தின் பாபங்களை செய்த காரணத்தால், கடினமாக நிகழ்சசிகள் வாழ்க்கையில் நடக்கும் பொழுது, தாங்கிக் கொள்ள முடியாமல் சோர்ந்து விடுகிறான். இதே துன்பம் அசுரர் மனம் கொண்ட மனிதனுக்கும் வரும். ஆனால் அவன் அதனை எடுத்து எறிந்துவிட்டு சென்று விடுவான். ஏன் என்றால், அவனது மனம், இரக்கமற்ற, அரக்க குணமாக இருப்பதினால். 

மனம் சாத்வீகமாக இருப்பதால், புண்ணியத்தை சேர்த்துக் கொள்வதென்பது ஒரு லாபம். அதே சாத்வீக மனம், எந்த ஒரு துன்பத்தையும் எதிர் கொள்ள அங்கே பயனற்றதாகிவிடுகிறது. எனவே எப்படி இருக்க வேண்டுமென்றால், தனக்கு துன்பம் ஒரு வேதனை என்று வரும்பொழுது, அந்த துன்பத்தையும், வேதனையும் எதிர் கொள்ள, தன்னுடைய மனதை நன்றாக உறுதியாக வைத்துக்கொள்ள, கைப்பிடி உள்ள பகுதியை தான் வைத்துக் கொண்டு, துன்பங்களும், வேதனைகளும் வரும்போது கூரான முனையை அந்த துன்பத்தின் மீது வைத்துக் கொள்ள வேண்டும். பிறர் துன்பத்தை தீர்கின்ற அந்த நெகிழ்ச்சியான மனம் இருக்கும் சமயம், கூரான பகுதியை தன் கையில் வைத்துக் கொண்டு கைப்பிடி உள்ள பகுதியை பிறர் மீது படுமாறு வைத்துக் கொள்ள வேண்டும். எனவே ஒரே மனம் பிறருக்கு உதவி செய்யும் பொழுது, சாத்வீகமாகவும், தனக்கு துன்பம் வரும்பொழுது மிகவும் இறுக்கமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும். இந்த முயற்சியும், பயிற்சியும் இருந்து விட்டால் ஒவ்வொரு மனித வாழ்க்கையிலும், எப்போதுமே இன்பம்தான், அமைதிதான். அந்த வழியில், நீயும் முன்னேறு, நன்றாக இருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்....... தொடரும்!

Tuesday 29 November 2022

சித்தன் அருள் - 1231 - பச்சை கற்பூரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

நமது பாலராமபுரம் ஆலயத்தில் பச்சை கற்பூரம் குறித்து சூட்சுமமான முறையில் குருநாதர் வாக்குகள் தந்திருந்தார். இதன் அடிப்படையில் பச்சைக் கற்பூரம் பற்றிய பதிவை நமது சித்தன் அருளில் வெளியிட்ட பொழுது அனைவரும் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் பச்சை கற்பூரத்தை அனுப்பி வைத்திருந்தனர்.

பச்சைக் கற்பூரம் பற்றிய பதிவுகளும் வணிக சந்தையில் கிடைப்பவை மற்றும் நடந்தவை அனைத்தும் நீங்கள் அறிந்ததே. பச்சைக் கற்பூரம் பற்றிய சந்தேகமும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு நம் குருநாதரிடம் வாக்கு கேட்பதுதான் என்று தீர்மானித்து வாக்கு கேட்ட பொழுது!!!!

அப்பனே மகாராஷ்டிராவில் ஒரு முதியவன் இருக்கின்றான் அவனிடம் உண்மையான பச்சை கற்பூரம் இருக்கின்றது அவனை நீங்களே தேடிச் செல்லுங்கள் அப்பொழுதுதான் அருமை தெரியும் என்று கூறியிருந்தார்.

அகத்தியர் கூறிய வாக்கினை சிரம் ஏற்று சிரமம் பார்க்காது அகத்தியரின் வாக்கே வேதம் என வாழ்ந்து வரும் அடியவர்கள் அந்த முதியவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்!!!

மிக ஆச்சரியமான சம்பவம் என்னவென்றால் அந்த முதியவரை தேடி அவரை பற்றி அறிந்து கொள்ள முயற்சிகள் ஒவ்வொன்றாக எடுக்கும் பொழுது குருநாதரே ஒவ்வொரு படியாக ஏற்றி விட்டார் அவரை கண்டறிய வழிகளை சுலபமாக்கி தந்தார்.

குருநாதர் அகத்தியப் பெருமானின் திருவருளால் அந்த முதியவரை சந்திக்க முடிந்தது!!!!

அந்த முதியவரின் குடும்பம் மிக எளிமையான குடும்பம்!!! குடும்பத்தினர் முழுவதும் ஈசனின் பக்தர்கள்!! அவர்கள் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வர் ஆலயத்தின் அருகே வசித்து வருகின்றார்கள். திரியம்பேஸ்வரர் ஆலயத்திற்கும் அவர்கள்தான் பச்சைக் கற்பூரம் வழங்கி வருகின்றார்கள். எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லாமல் லாப நோக்கமும் இல்லாமல் பச்சைக் கற்பூரத்தை வழங்கிக் கொண்டு வருகின்றார்கள்.

அவர்களிடம் பேசிய பொழுது நாங்கள் அகத்தியர் பக்தர்கள் குருநாதர் தங்களைப் பற்றி தன்னுடைய ஜீவனாடி வாக்கில் கூறியிருந்தார் என்று சொன்ன பொழுது அவர் மிகவும் ஆச்சரியமடைந்தார் மனம் நெகிழ்ந்து விட்டார். 

மேலும் அவர் நான் திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் 40 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கின்றேன்... ஈசனே எனக்குப் பெரும் சொத்து!!! சிவத்தொண்டே எனக்கு மிகவும் பெரியது!!! நான் நினைத்திருந்தால் எனக்கு கிடைத்த இதை ஒரு வியாபாரமாக பெரிதளவில் செய்திருக்க முடியும் எனக்கு அப்படி செய்ய மனதில்லை!!! உண்மையான பொருளை கோயில்களுக்கும் பக்தர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதுவரை என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவன் திரயம்யகேஸ்வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அதனால் எவ்வித கலப்படமும் இல்லாமல் சுத்தமானதை நான் வழங்கிக் கொண்டு வருகின்றேன்.

இந்தியாவில் பச்சைக் கற்பூரம் தயாரிப்பதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை கம்பெனிகளும் இல்லை என்னுடைய 40 வருட அனுபவத்தில் சொல்கின்றேன் இந்தியாவில் பச்சைக் கற்பூரம் தயாரிப்பதற்கு மூலப்பொருள் சைனாவில் இருந்து தான் வருகின்றது.

சைனாவிலும் ஏராளமான கம்பெனிகள் இருக்கின்றன அந்த கம்பெனிகளும் சில லாப நோக்கில் ரசாயனத்தை கலந்து விடுகின்றன ஆனால் எங்களுக்கென்று நாங்கள் லாப நோக்கம் எதுவும் இல்லாமல் சுத்தமான பச்சைக் கற்பூரம் தயாரிக்கும் கம்பெனியிடமிருந்து மூலப் பொருள்களை வாங்கி அதை நாங்கள் எங்களுடைய இல்லத்தில் ஒரு சிறிய ஒரு குடிசைத் தொழில் போல உண்மையாக சுத்தமாக இயற்கையாக உருவாக்கி நாங்கள் கொடுக்கின்றோம்.

எங்களுக்கு வியாபார நோக்கம் கிடையாது!!! கோயில்களுக்கும் பூஜைகளுக்கும் நாங்கள் வழங்கி வருகின்றோம் என்று அந்த முதியவர் கூறினார்.

அகத்தியர் அடியவர்களும் நாங்கள் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்தபடி உண்மையான பக்தர்களுக்கும் ஆலயங்களுக்கும் உண்மையான பச்சை கற்பூரம் சென்று சேர வேண்டும் அதற்காக தங்களுடைய உண்மையான பச்சை கற்பூரம் தங்களிடம் கிடைக்கும் என்ற தகவலை உங்கள் அனுமதியுடன் சித்தன் அருள் வலைத்தளத்தில் வெளியிடப் போகின்றோம் என்று கூறியதற்கு!!!!

அவர் எனக்கு வயது ஆகிவிட்டது நாங்கள் பச்சைக் கற்பூரத்தை ஒரு குடும்பமாக சேர்ந்து தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்னுடைய அண்ணன் மகன் அதர்வா ஜோஷி இவர்தான் எனக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கின்றார் அதனால் இவரிடம் என்ன தகவல் தெரிவிக்க முடியுமோ அதை தெரிவித்து விடுங்கள் .

மற்றும் சில நிபந்தனைகளையும் அந்த முதியவர் கூறினார். அதாவது வியாபார நோக்கத்திற்காக லாப நோக்கத்திற்காக நாங்கள் எதையும் செய்வதில்லை எங்களிடம் இருப்புகள் எவ்வளவு இருக்கின்றதோ அதை மட்டும் வழங்க முடியும் வியாபார நோக்கத்திற்காக சென்றால் எங்களால் சுத்தமான தரமான பச்சை கற்பூரத்தை வழங்க முடியாது ஆதலால் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் கோயில்களுக்கு அகத்தியர் பக்தர்களுக்கு தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டு பேசி பெற்றுக் கொள்ளலாம். எங்களைப் பற்றியும் எங்கள் முகவரி எங்கள் குடும்பத்தை பற்றி விளம்பரங்கள் எதுவும் வெளியே தெரிய வேண்டாம் நாங்கள் ஈசனின் பெயரில் பிராண்ட் பெயர் ஒன்று உள்ளது அந்தப் பெயரில் நாங்கள் தற்போது வழங்கிக் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் செய்வதை பார்த்து பல நாங்கள் உபயோகிக்கும் ஈஸ்வரன் பெயர் கொண்டே பல போலிகளும் மார்க்கெட்டுகளிலும் ஆலய வாசல்களிலும் விற்பனை செய்யப்பட்டு  கொண்டிருக்கின்றன. இதில் எங்களுக்கும் வருத்தம்!! உண்மையான பொருளை நாங்கள் கொடுக்கின்றோம். ஆதலால் எங்களுடைய பிராண்ட் பெயர் எங்களுடைய புகைப்படம் எங்களுடைய முகவரி இவற்றை நாங்கள் தர முடியாது எங்களுடைய தொலைபேசி எண்ணை தருகின்றோம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டு பேசி கொரியர் மூலம் போஸ்ட் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று நிபந்தனைகளை விதித்தார்.

நாங்களும் சரி என்று கூறிவிட்டு அவரிடம் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தினை பெற்றுக்கொண்டு விடைபெற்று வெளியே வந்தோம்.

இதனைக் குறித்து குருநாதரிடம் மீண்டும் வாக்குகள் கேட்ட பொழுது அவந்தனிடம் இருப்பது உண்மைதானப்பா அவந்தனக்கு அனைத்தும் தெரியும்!!! என்று வாக்குகள் தந்திருந்தார். அதன்படியே அவர்களிடமிருந்து பச்சை கற்பூரம் பெற்றுக் கொண்டு பாலாராமபுரம் அகத்தியர் லோப முத்ரா தேவி ஆலயத்தில் பச்சை கற்பூரத்தை பயன்படுத்திய போது குருநாதர் மனதார ஏற்றுக்கொண்டார் அதனுடைய உண்மையான சாநித்யம்.அறிந்து கொள்ள முடிந்தது.

தற்பொழுது அகத்தியர் அடியவர்களுக்கு ஒன்றை தெரிவிக்கின்றோம்.

இவ்வுலகத்தில் குருநாதருடைய வாக்குகளை மீறி எதுவும் உண்மை இல்லை.

குருநாதர் ஒரு வாக்கினை உரைக்கின்றார் என்றால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்லது. குருநாதருக்கு தெரியாதா?? 

அதனால் அவர் இந்த பாரத தேசத்தில் உண்மையான பச்சை கற்பூரம் இருக்கும் இடத்தை அவரே குறிப்பிட்டு அடையாளப்படுத்தி காட்டிவிட்டார்!! அடியவர்கள் உங்களுக்கு தேவை என்றால் தொடர்பு கொண்டு தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்!!!!

பீம் சேனி கர்ப்பூர்!!!! பச்சைக் கற்பூரத்தை இப்படித்தான் வட இந்தியாவில் அழைக்கின்றார்கள். அதர்வா ஜோஷி அவர்களிடம் மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவர் கிலோ 1600 முதல் 2000 வரை ஆகலாம் ஏனென்றால் மூலப் பொருள்களின் விலை அடிக்கடி ஏறிக்கொண்டே இருக்கும் அதனால் எங்களால் விலை நிர்ணயம் செய்ய முடியாது மூலப் பொருள்களின் விலையை அனுசரித்து நாங்கள் விலையை நிர்ணயம் செய்ய முடியும். அதனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கிலோ 1600 ரூபாய்க்கு கொடுக்கின்றோம். இதனை உணவு பொருள்களில் தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம். மீண்டும் மூலப்பொருள் விலை ஏறினால் நாங்கள் விலையை மாற்ற வேண்டி நேரிடும். தொடர்பு கொள்ளும் பக்தர்கள் வியாபார நோக்கத்திற்காக எங்களை அணுகாமல் கோயில்களுக்கு சொந்த உபயோகத்திற்கு என்று வாங்கினால்  மட்டும் எங்களுக்கு போதும். சில கற்பூர கம்பெனிகள் எங்களை அணுகுகின்றன எங்களிடமிருந்து உண்மையானதை பெற்றுக் கொண்டு அதனுடன் மெழுகு ரசாயனம் சேர்த்து மார்க்கெட்டில் விற்கின்றன எங்களுக்கு அது போன்று வியாபாரம் செய்ய உடன்பாடு இல்லை.

எங்களை தொடர்பு கொள்ளுபவர்கள் வியாபார நோக்கத்திற்காக இல்லாமல் தொடர்பு கொண்டால் நல்லது என்று தயக்கத்துடனே அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

பச்சைக் கற்பூரம் தேவைப்படும் அடியவர்கள் ஒரு கிலோ 1600 ரூபாய் ஆகும் அதனுடன் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதனுடன் போஸ்டல் சார்ஜ் தனியாக கொரியர் சார்ஜர் தனியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் திரிம்பகேஸ்வர் ஊரிலிருந்து மற்ற ஊர்களுக்கு கொரியரில் அனுப்பி வைக்கும் பொழுது ஊருக்கு ஊர் அதனுடைய கட்டண சேவை மாறுபடும் அதனால் அதை உணர்ந்து பச்சை கற்பூரத்தின் விலை மற்றும் போஸ்டல் சார்ஜை அவருடைய கூகுள் பே எண்ணிற்கு அனுப்பி வைத்து தங்களுடைய முகவரியும் தெரியப்படுத்தினால் அதை அடியவர்களுக்கு அனுப்பி தந்து விடுவார்.

பச்சைக் கற்பூரம் பற்றிய தேவையில்லாத சர்ச்சைகளோ கருத்து வேறுபாடுகளோ எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் குருநாதர் உரைத்த உண்மையை உணர்ந்து அடியவர்கள் நடந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம். 

அதர்வா ஜோஷி 
திரயம்பகேஷ்வரர். 
நாசிக். 

தொடர்பு எண் மற்றும் கூகள் பே எண். 

8975743784.

(பின் குறிப்பு. அகத்தியர்  அடிவர்களே அந்த முதியவரின் குடும்பம் தங்களைப் பற்றி விளம்பர ப்படுத்துவதற்கு அவர்களுக்கு விருப்பமே இல்லை இந்த பச்சைக் கற்பூரத்தை வியாபார நோக்கத்தில் லாப நோக்கத்தில் பெரும் நிறுவனமாக மாற்றி செய்வதற்கும் அவர்களுக்கு விருப்பமில்லை குருநாதர் அகத்திருடைய திருவருளால் அவரைப் பற்றி அறிய முடிந்தது அனைவருக்கும் பச்சை கற்பூரம் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அடியவர்கள் குருநாதன் மேல் பாரத்தை போட்டு அவர்களை மேலும் மேலும் வலியுறுத்தி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை பற்றி சித்தன் அருள் வலைத்தளத்தில் கூறுவதற்கும் அனுமதி வாங்கி வெளியிட்டு இருக்கின்றோம். குருநாதர் அகத்திய பெருமாள் தன் பிள்ளைகளுக்கு ஆலயங்களுக்கு உண்மையான பச்சை கற்பூரம் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நமக்கு இந்த வாக்கினை தந்திருக்கின்றார் ஆதலால் தொடர்பு கொள்ளும் அகத்தியர் அடியவர்கள் தங்களுக்கு தேவையானதை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். வியாபார நோக்கத்தில் லாப நோக்கத்தில் என்ன ஏது என்ற விசாரணை நோக்கத்தில் யாரும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான் கண்ணசைவில் தான் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......தொடரும்!

Monday 28 November 2022

சித்தன் அருள் - 1230 - குருநாதர் வாக்கு!


குருநாதரை மறவாமல் இருப்பதற்கு வழி!

எத்தனையோ ஜென்மங்களில் மனிதர்கள் சித்தர்களை நாடுகிறார்கள். நாங்களும் இறைவனின் அருள் ஆணைப்படி வழி காட்டுகிறோம். அந்த வழிமுறையை விடாமல் பின் பற்ற வேண்டும். இடையிலே சில துன்பங்கள் வரும் பொழுது, மனசோர்வு கொண்டு விரக்தி அடைந்து, மனிதர்கள் விலகிவிடுவது இயல்பாகி விடுகிறது. அப்பொழுதெல்லாம், ஏன் எங்களை மாற்றக்கூடாதா என்ற வினா எழலாம். நாங்கள், எதில் தலையிடலாம், எதில் தலையிடக் கூடாது என்று விதி இருக்கிறது. இருந்தாலும், பார்வையாளனாக இருக்கத்தான் இறைவன் எங்களுக்கு அருளாசி தந்திருக்கிறான். இறைவன் அருளாணை கொடுத்தால் ஓழிய, நாங்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் குறுக்கிட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆனால் நாங்கள் காட்டுகின்ற வழியில் அமைதியாக சென்றால், கட்டாயம், அமைதியான, நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. இந்த உறுதியை மறவாமல் இருக்க நன்றாகும்!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

சித்தன் அருள் - 1229 - அன்புடன் அகத்தியர் - சனி மகாராஜ் ஆலயம்!




10/10/2022 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு.  வாக்குரைத்த ஸ்தலம்: சனி மகாராஜ் ஆலயம்  பிம்பார்கெட், நஸ்தான்பூர், நாசிக் மாவட்டம், மகாராஷ்டிரா

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

நலமாகவே நலமாகவே எம்முடைய ஆசிகள் கடைநாள் வரையிலும் அப்பனே எதை எதை என்று கூற இவ்வுலகத்தில் இன்னும் எதை என்று உணராமலே மனிதன் வாழ்ந்து வருகின்றான் என்பதை கூட பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன்!!!

அறிந்து அறிந்து அப்பனே செயல்பட்டால் நிச்சயம் வெற்றிகள் உண்டு உண்டு!!!

அப்பனே வெற்றி என்பதையும் கூட அப்பனே சாதாரணமாக அப்பனே கிடைப்பதில்லை அப்பனே இன்னும் ஏராளமான படிகளில் ஏற வேண்டும் அப்பனே!!!

ஏறி !!ஏறி !! ஆனாலும் அப்பனே இவ்வாறு ஏறினால் அப்பனே பல வழிகளிலும் கூட துன்பங்கள் வரும் ஆனாலும் அவற்றையெல்லாம் கடந்து கடந்து இறை பக்தியை மனதில் நிறுத்தி அப்பனே நிச்சயம் முன்னேறினால் அப்பனே சித்தர்கள் யாங்கள் கையைப் பிடித்து அழைத்துச் செல்வோம்!!!! முன்னேற்றத்திற்கு அப்பனே!!!!

இதைதன் உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் மனிதர்கள் நல்விதமாகவே அப்பனே எதை என்று எதிர்பாராமலே அப்பனே நல்லவையாக நடந்தேறும் என்பேன் அப்பனே!!!! இன்னும் பல வழிகளிலும் கூட !!!.......

அப்பனே எதை எதை என்று அறிந்து அப்பனே பின் ஒரு முறை அப்பனே பல வழிகளிலும் கூட ராமனுக்கு தொந்தரவுகள் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எதை என்று அறியாமல் மனித வடிவம் எடுத்து அப்பனே அவந்தன் பட்ட கஷ்டங்கள் எண்ணிலடங்கா!!!!!

ஆனாலும் யான் பல உதவிகளை செய்துள்ளேன்!!!

ஆனாலும் அப்பனே இவந்தனுக்கு எதையென்றும் ஆனாலும் இவையெல்லாம் அப்பொழுது காடுகள் ஆனாலும் அப்பனே எதை என்று அறியாத பின் இதையென்றும் தெரியாத பின், பின்!! பின்!! வந்தோர் கெல்லாம் நன்மைகள் பல வழிகளிலும் கூட ராமன் செய்து கொண்டிருந்தான்!!!

ஆனாலும் விதியின் மாற்றம் சில நாட்கள் பின் எதை எவற்றில் இருந்து ஆனாலும் ஓர் ரிஷி அதாவது பின் ஓர் மாதம் நீ தனியாக இருந்து நிச்சயம் வர வேண்டும்  அதாவது மனிதர்களை யாரும் சந்திக்க கூடாது!!!! அப்பொழுதுதான் நிச்சயம் கிரகங்கள் உன்னை!.......

ஆனாலும் ஒரு மாதத்தில் பல இன்னல்கள் ஏற்படும்!! ஆனாலும் இதையென்று சோதனையா என்று ஆனாலும் அதற்கும் மகிழ்ந்தான் ராமன்!!!!

சரி அப்படியே ஆகட்டும்!!! நான் என்ன தவறு செய்தேன்?? பூலோகத்தில் பிறந்தது தவறா????

ஆனாலும் ரிஷி முனிவரே யான் கேட்டுக் கொண்டதற்கிணங்க யான் நிச்சயம் செல்கின்றேன் ஒரு மாதம் என்று!!!

ஆனால் அவ் ஒரு மாதம் இங்கேதான் கழித்தான்!!!

ஆனாலும் கழித்த பிறகு ஆனாலும்... யார்  என் மீது சோதனைகள் என்று அறிந்து கொண்டான் ராமன்!!! இவையெல்லாம் பின் சனீஸ்வரனே நிச்சயம் கொடுக்கின்றான் என்பதை கூட சரியாக உணர்ந்து கொண்டான் ராமன்!!!

ஆனாலும் இதையென்று அறிய அறிய ஆனாலும் பல வழிகளிலும் கூட இங்கு வந்து அமர்ந்தவனுக்கு உணவுகள் கூட கிட்டவில்லை!!!!! அதாவது ஆனாலும் இதை அறிந்து கொண்ட!! அறிந்து கொண்ட!!! பின் எதை என்று அனுமான் நிச்சயமாய் பின் எதை என்று தெரியாமலே பல வழிகளிலும் கூட ஆனாலும் ஒன்றை நினைத்தான்!!! அனுமானுக்கு சரியாக தெரிந்து விடும் ஆனாலும் எதை பின் உணர உணர பின் மனிதனையே பார்க்க கூடாது என்கின்றானே ஆனால் எதன் மூலம் நாம் செல்வது என்று கூட!!!!

ஆனாலும் இதன் மூலம் சரியாகவே பின் அதாவது உயிரெடுத்து அதாவது பின் அனுமான் அதாவது(குரங்கு) ஜீவ ராசியாக உருவெடுத்து இங்கே வந்து பல பழங்களை பின் இராமனுக்கு நிச்சயமாய் உதவி செய்தான் அனுமான்!!!

அப்பனே இதைத்தான் எதிர்நோக்கி கொண்டிருக்கின்றான் அப்பனே அனுமானும்கூட மனிதர்கள் யாராவது நல்லோர்களாக திகழ்கின்றார்களா!!!

ராமஜபத்தை ஜெபித்துக் கொண்டே இருக்கின்றார்களா என்று!!!!  என்பவை எல்லாம் நிச்சயம் பார்த்து கொண்டு  அவர்களுக்கெல்லாம் நிச்சயம் அனுமான் பல வழிகளிலும் உதவிகள் செய்வான் நல் மனிதர்களுக்கு கூட!!!

ஆனால் மனிதனின் அதாவது எதை என்று கூட அப்பனே மனிதனுக்கு அதைக் கூட ஒழுங்காகவே வாழ தெரியவில்லை வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான் அப்பனே இவையெல்லாம் எப்படி?! சாத்தியமாகும்!!! என்பது தான் எனது கருத்தும் கூட!!.....

அப்பனே இதன்முறை ஆனாலும் அப்பனே இவை இப்படியே 10 நாட்கள் கடந்து விட்டது!!! அப்பனே ஆனாலும் பின் அமர்ந்தான் உற்றார் உறவினர் அனைவரும் இருந்து இப்பொழுது எதை என்றும் தெரியாத அளவிற்கும் கூட அனைத்தும் இழந்து விட்டோமே!!!! இதுதான் மனித வாழ்க்கை என்று கூட அப்பொழுது நினைத்தான் ராமன் அப்பனே!!!

ஆனாலும் இதனை சரியாக உணர்ந்து கொண்டு ஆனாலும் நாட்களும் சென்று கொண்டே இருந்தது அப்பனே 20 நாட்கள் ஆயிற்று ஆனாலும் அமைதியாக இருந்தான் பொறுமையாக இருந்தான்!! 

ஆனாலும் பொறுக்க முடியவில்லை சனியின்  அதாவது எதையென்று சனீஸ்வரன் அப்பனே அவந்தனுக்கும் எதை என்று அறியாமலே இப்படி நாம் தான் கஷ்டம் கொடுக்கின்றோம் என்று ஏற்கனவே ரிஷி சரியாகவே கணித்துவிட்டான்!!! இவந்தனுக்கும் சொல்லிவிட்டான்!!! இவந்தனும் இங்கு எதை என்று அறியாத அளவிற்கும் கூட பின் சனியவனும் வந்து பின்!!! 

ராமரே!!!!  உன்னை வணங்குகின்றேன்!!!! 

இவ்வளவு சோதனைகள் அதாவது வேதனைகள் கொடுத்தாலும்.... எதற்கும் அசைய மாட்டாய்!!!!  அமைதியாக பொறுத்திருக்கின்றாய்!!!! 
எதையென்று அறியாமலே !!.....

ஆனாலும் உன்னை வணங்குகின்றேன்!!! என்று சனிபகவான்!!! ராமரை வணங்கிய இடம் இவ்விடமே என்பேன்!!!! 

ஆனாலும் இதை காலப்போக்கில் இவையெல்லாம் மறைந்து போயிற்று!!!! அதாவது மறந்து மறைந்து மறைந்து போயிற்று!!!!  

இங்கெல்லாம் எதனை என்று அறிந்து அறிந்து இன்னும் பின் பல வழிகளிலும் கூட ஆனாலும் இங்கேயே பல பல வழிகளில் கூட ஞானியர்கள் ஜீவசமாதிகளும் அதையென்று அறியாத அளவிற்கும் கூட இங்கேயும் சனி பகவான் சரியாகவே இருக்கின்றான்... 

ஆனால் காலப்போக்கில் எதையென்று அறியாமலே அழிந்து அழிந்து மீண்டும் மீண்டும் பின் தோன்றுகின்றான் சனி பகவான்!!!!! இவ்விடத்தில்!!! 

இதனால் பின் ராமரிடம் வணங்குகின்றேன்!!! ராமா!!!  எதை எப்படி என்று கூட..... யான் நிச்சயம் நீ!!!  உன் மனத்தில் நினைத்தவாறே!!!! நீ யாருக்கும் தீங்குகள் செய்யவில்லை!!!! 

ஆனாலும் பிறப்பு எடுத்து விட்டாய்!!!! மனிதனாக பிறப்பு எடுத்துவிட்டாய்!!!  இறைவனாக வாழ்கின்றாய்!!!! அதனால் உன்னை யான் வணங்குகின்றேன்!!!!

உந்தனுக்கு என்ன தான் தேவை??? என்று பின்!!
எந்தனுக்கு பல வழிகளிலும் கூட கொடுக்க தெரியும் !!!
அது ராமரே அதனை நீயும் அறிந்ததே!!!!! 

அதனால் நிச்சயம் பல வழிகளில் யான் கொடுத்தால் உயர்ந்த இடத்தை அடைந்து விடலாம்!!!! 

அதனால் இவ்வுலகத்தில் உந்தனுக்கு என்ன தான் வேண்டும்???? 

பல சோதனைகளையும் இட்டு விட்டேன்... ஆனாலும் கடைசியில் ஓர் மாதம் சோதிக்கலாம் என்றிருந்தேன்!! 

ஆனாலும் ரிஷியோ உந்தனுக்கு சரியாக சொல்லி இங்கே உன்னை அனுப்பி வைத்து விட்டான்!!!

ஆனாலும் இதுவும் பின் லீலை தான்!! பிரம்மாவின் லீலைகள் தான் என்று யான் உணர்ந்தேன்!!!! 

இதனால் இங்கு வந்து விட்டேன்.... அதனால் கேட்ட வரங்கள் என்னாலும் கொடுக்க முடியும்... 

ஒருவன் உயரத்திற்கு செல்ல கூடிய அளவுக்கு பின் முன்னேற்றி வைப்பவன் யான்!!!! 

ஆனாலும் பின் எதை என்று ஆனாலும் பின் தாழ்ந்த நிலைக்கும் செல்ல வைப்பவன் யான்!!!! என்னிடத்தில் அத் தகுதி இருக்கின்றது!!! 

அதனால் ராமரே!!!!  உன்னை மிஞ்சிய எதை என்று அறியாத சக்திகள் உன்னிடத்திலே இருந்து கொள்ள..... ஆனாலும் யானும் உந்தனுக்கு கொடுக்க வேண்டும் அப்பொழுது தான் எந்தனுக்கு மனம் சந்தோஷமடையும் என்று!!! 

ஆனாலும் ராமரே!!!! கேளும்!!!!  கேளும்!!!! 

என்று சனிபகவானும்!!! 

ஆனாலும் ராமரே ஆனாலும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட நிச்சயமாய் நீ கொடுத்ததெல்லாம் எந்தனுக்கு பாடங்கள் தான் சனி பகவானே!!! அதனால்  இவற்றின் மூலம் பல உண்மைகளை தெரிந்து கொண்டேன்!!!! 

யான் எவ் நிலைக்கு வந்துள்ளேன் என்று பார்!!!! 

ஆனால் நீ!!!  சோதித்தது!!! எந்தனுக்கெல்லாம் ஒரு பாடமாகவே பல பல வழிகளிலும் கூட ஆனாலும் சனி பகவானே!!!

நிச்சயம் ராமரே!!!!!

இதையென்று அறிந்து கொண்டாயே.... என்று கண்களில் நீர்  பெருக்கெடுத்தது சனிபகவானுக்கு!!!! இவ்வாறு அறிந்து கொண்டாயே என்று

நிச்சயமாய் எதை என்று ஆனால் எதை என்று உணராமலே யான் பிடித்துக் கொண்டால் நிச்சயம் பல பக்குவங்களை ஆக்கி ஆக்கி பல கஷ்டங்களுக்குள் நுழைத்து!! நுழைதது!!ஆனால் உயரிய இடத்திற்கு கொண்டு சென்று நிச்சயம் பல புண்ணியங்களை செய்ய வைத்து அதனை எதனை என்று கூட ஞானியாக ஆக்கும் தகுதி என்னிடத்தில் உள்ளது!!!

ஆனாலும் எதை என்று அறியாத ராமா!! ராமா!! கேள்!!! உந்தனுக்கு என்ன தான் தேவை? என்றுகூட

ஆனாலும் இதை அறிந்த ராமன் சரி யான் எதை மீளுகின்ற ஒரு மாதம் கழியப்போகின்றது ஆனாலும் இதையென்று அறியாத சனி பகவானே நிச்சயமாய் பல தொந்தரவுகள் மனிதர்கள் பின் படுத்தி படுத்தி எழுகின்றனர்!!!

ஆனாலும் இதை தன் எதை அறியாமலே எதை என்று உணராமலே பின் அலைந்து திரிகின்றனர் ஆனாலும் நிச்சயமாய் பின் சனி பகவானே!!! நிச்சயமாய் இவ்விடத்திற்கு வந்து எதை என்று வணங்கி சென்றாலே அவந்தனுக்கு அனைத்தும் நீ கொடுத்து விட வேண்டும் என்று பின் ராமனும்!!!

ஆனாலும் பின் சனி பகவானும் நிச்சயம் கொடுக்கின்றேன் !! ராமா!!!

ஆனாலும் அவரவர் பாவ கர்மங்களுக்கு ஏற்பவே இங்கு நிச்சயம் வர முடியும் ஆனாலும் பின் எதை என்று அறியாத அளவிற்கும் கூட..அவந்தனின் பாவ கணக்கு அதிகமாக இருந்தால் இங்கு நெருங்க முடியாது சொல்லிவிட்டேன்!!!

பாவ கணக்கு போகும் தருவாயில் நிச்சயம் இவ்விடம் வருபவர்களுக்கு என்னுடைய ஆசிகள் கிட்டி உயர்ந்த இடத்திற்கு யான் அழைத்துச் செல்வேன்!!! என்று சனிபகவான் கூறிவிட்டான்!!!

அதனால் இதனை எதை என்று கூட அதிகம் பேர் இங்கு வரவும் முடியாது சொல்லிவிட்டேன் இதனையும் அறிந்து அறிந்து அதனால் சூட்சுமங்கள் பல பல ஆனாலும் இங்கேயே எதை என்று கூற பல நாட்கள் இராமன் தங்கி இருந்தான் என்பது மெய்!!!!

அவை மட்டும் இல்லாமல் பின் ராமனுக்கு எதை என்று கூட அனுமான் ஜீவராசியாக வந்து அதாவது வாயில்லா ஜீவராசியாக வந்து பல பல பழங்களை இங்கு கொடுத்தருளினான் இதனால் நிச்சயம் உண்மையான பக்தி உள்ள பின் மனிதர்களை சனி பகவானே இங்கு வரவழைப்பான்... நிச்சயம் ஆறுதல் சொல்லி அனுப்புவான் பல வரங்களையும் கொடுத்து அனுப்புவான் இதுதான் உண்மையப்பா!!!

இன்னும் பல பல திருத்தலங்களையும் சொல்லப் போகின்றேன் அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே இன்னும் பல சித்தர்கள் பின் அகத்தியா!!!!!!! எதை என்று அறியாமலே அறிவில் சிறந்தவன் நீ எதை என்று அறியாமலே விஞ்ஞானம் மூலம் மக்களுக்கு எடுத்துக் கூறினால் மட்டுமே விடைகள் என்று கூட!!!

அதனால் சனி கிரகம் எதை என்று எவற்றில் இருந்து பின் எதை என்று உணராமலே அவ் சக்தியானது இங்கு நிச்சயம் அதிக அளவு படுகின்றது படிகின்றது படிகின்றது!!!! இதனால் நிச்சயம் எதை என்று அறியாமலே அதனால் சில சில வழிகளிலும் கூட தொல்லைகள் நிகழும் இங்கிருந்து சென்று எதனை என்றும் அறியாமலே ஆனாலும் நளன்( நளமகாராஜா) அதாவது அவ் நளனும் இங்கு வந்து சில விஷயங்களை பின் கற்றுக் கொண்டான் இதனால் எதை என்று அறியாமலே ஆனாலும் சில சில போதனைகள் அவனுக்கும் பின் அறிவுகள் எட்டியது ஆனால் பல அதாவது எதை என்று பல மாதங்களாக இங்கே உறங்கினான் நிச்சயம்!!

ஆனாலும் உறங்கிக் கிடக்கும் பொழுது சனி பகவானே தன் கனவில் வந்து எதை எவற்றில் இருந்து கூட எதை என்று கூட நளனே!!!! இதை என்று அறியாத நள்ளாறு எதை என்று கூட இப்பொழுது கூட திருநள்ளாறு என்றே அதனை அழைக்கின்றனர் பின் அங்கே சென்றிட்டு வா!! உன் கர்மங்கள் பல வழிகளில் நீங்கும் அங்கே என்று கூற!!! 

அதனால் நள மகராஜாவுக்கும் எதை என்று அறியாத அளவிற்கும் கூட பின் யார் சொன்னது?? யார் சொன்னது?? என்று கூட !!......

ஆனாலும் இங்கிருந்து நடை பயணத்தை மேற்கொண்டு அங்கே அடைந்தான்!!!! பின் சனி பகவான் வரவழைத்தான்!!! 
காகம் ரூபத்தில்!!! 

ஆனாலும் காகமும் வந்தது என்பதை கூட ஒரு சுய உருவமாகவே இருந்தது அக் காகம் இவன் பின்னால் செல்லச் செல்ல ஆனாலும் நீரைத் தட்டி விட்டது!!! முதலில் ஆனாலும் உணவை தட்டி விட்டது!!! ஆனாலும் பல வழிகளிலும் கூட ஆனால் வந்தது யார்?? என்று கூற காகம் எதை என்று ஆனாலும் காகமாக வந்திட்டு எதை எவற்றிலிருந்து அறியாமலே திடீரென்று மாயமாக போய்விட்டது அறிந்து கொண்டான்!!
 நள மகராஜா வந்தது சனியவனே என்று கூட!!!

இதனால் பல வழிகளிலும் கூட அங்கே எதை என்று அறியாமலே பின் சனி பகவானும் வரட்டும்!!!! சொப்பனத்தில் வரட்டும்!!!! அப்பொழுதுதான் முழுமை அடையும் என்பதை கூட அதனால் பல வழிகளிலும் அங்கே தங்கி பல பல எதனை என்பதையும் கூட நிமித்தம் காட்டி பின்பு அனைத்தையும் நீக்கி விட்டு சென்றான் இன்னும் எதை என்று அறியாமலே!!!

இப் பிறப்பும் அதாவது அவ் பின் நளனுக்கும் கூட அளிக்கப்பட்டு இருக்கின்றது அங்கு!!!

எங்கு வாழ்கின்றான்? என்பதை கூட அதாவது ரகசியமாகவே பின் சித்தர்கள் உரைப்பார்கள் என்பது மெய்!!!!

ஆனாலும் எதை எவற்றில் இருந்து கூட ஆனாலும் அங்கும் அதிகமாக படுகின்றது என்பேன் இதனால் தான் எதை எவற்றில் இருந்து கூட அவ் சக்தியானது அங்கே எதை எவற்றின் பின் அதிக அளவு படுகின்றது அதனால் ஒரு நாள் இரு நாள் சென்றாலெல்லாம் நிச்சயம் சரியாக ஆகாது என்பேன் நிச்சயம் வாரத்தில் எதை என்று அறியாமலே எதை என்று புரியாமலே பின் தங்கி தங்கி சென்றடைந்தால் நிச்சயம் அவ் சக்தியானது நிச்சயம்பின் நம் உடம்பில் இருக்கும் எதை என்று கூட சில தீய சக்திகளை எடுத்து விடும் அப்பனே இதைத்தான் யான் விவரித்து இருக்கின்றேன் இப்பொழுது கூட 

இதனால் அப்பனே எங்கெல்லாம் அப்பனே இப்பொழுது கூட எவை எதை என்று எதிர்பார்க்கும் அளவிற்கும் கூட அப்பனே இன்னும் அவதாரங்கள் பல பல என்பேன்!!!

அப்பனே அவ் அவதாரத்தின் வழியே இறைகள் சுற்றி வருகின்றன அப்பனே ஒவ்வொரு தலத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பேன் அப்பனே எதை எவற்றில் இருந்து கூட!!!

வசிஷ்டனும் எதை என்று அறியாமலே குருகுலத்தை இங்கேயே நடத்தினான் சில ஆண்டுகளுக்கு!!! ஆனாலும் பல வழிகளிலும் கூட அவர்களும் ஞானத்தை பெற்று இங்கே வந்து தான் சென்று கொண்டிருக்கின்றார்கள் நலமாக அவர்களைப் பார்த்தாலே பெரும் புண்ணியமப்பா!!!!

ஆனாலும் பெரிய பெரிய பின் அரசர்களாக!!! எதை என்று அறியாமலே பெரிய பெரிய மாமனிதர்களாக அவர்கள் திகழ்கின்றனர் என்பேன் அப்பனே!!!

நலமாகவே அதனால் அப்பனே ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு நிச்சயம் எதை என்று அறியாமலே அப்பனே விடிவு காலம் அப்பனே மனிதனுக்கு யான் கொடுத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

நிச்சயம் இதைப் பின்பற்றி வந்தால் நலமே மிஞ்சும்!!!

அப்பனே குறைகள் இல்லை அப்பனே சனி பகவானின் லீலைகள் இன்னும் ஏராளமாகவே நிச்சயம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே

நலமாகவே இதனால் அப்பனே இன்னும் சொல்லப்போனால் அப்பனே எதை எதை என்று நினைக்கும் அளவிற்கும் கூட அப்பனே இவ்வுலகத்தில் வருத்தங்கள் வந்து கொண்டே இருக்கின்றன அப்பனே ஆனால் இப்பிறப்பின் ரகசியம் எதை என்று அறிந்து கொண்டால் அறிந்து கொண்டால் அதுவும் சனீஸ்வரனே என்பேன் அப்பனே!!!

நலமாகவே!!!! நலமாகவே!!!! சனியவன் எதை எவை என்று கூட கெடுத்தாலும் உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வான் ஆனாலும் எதற்காக கெடுக்கின்றான்? என்பதைக் கூட ஒரு பாடமாகவே எடுத்துக்கொள்ள வேண்டும் கர்மா அதிகமாக இருந்தாலும் அப்பனே அங்கேயே எதை என்று தெரியாமலே உணர்த்திவிட்டு அப்பனே இன்னும் இன்னும் மேல் நோக்கி அழைத்துச் செல்வான் அப்பனே!!! 

நலமாகவே அப்பனே இன்னும் அதாவது இவ் தேசத்தில் சனி பகவான் வாழ்ந்த இடங்கள் கூட மறைந்து கிடக்கின்றது அங்கெல்லாம் சென்று வழிபட்டாலே அவந்தன் நிச்சயமாய் மனமகிழ்ந்து நம்தனை இவ்வளவு தேடுகின்றார்களே!!!...... என்று நினைத்து உயரிய இடத்திற்கு அழைத்துச் செல்வான் என்பது மெய்யப்பா!!!!!! 

இன்னும் வாக்குகளாக பரப்புகின்றேன்!!! என்னுடைய ஆசிகள்!!!! என்னுடைய ஆசிகள்!!! அப்பனே!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 
முகவரி
சனி மகாராஜ்  ஆலயம்
பிம்பார்கெட். 
நஸ்தான்பூர் 
நாசிக் மாவட்டம் 
மகாராஷ்டிரா .,

நந்த்கான்-சாலிஸ்கான் சாலை ரயில்வே கிராசிங் கேட் அருகில், நந்த்கான் 424109.  

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 

யோகேஷ் துவாரகாதாஸ் குல்கர்னி  841298428/ 9272007198

சாலிஸ்கான் சாலையில் நந்த்கானில் இருந்து 18 கிமீ தொலைவில் அமைந்துள்ள நஸ்தான்பூரில் உள்ள பழமையான சனி மஹாராஜ் கோயில் 
இது இந்தியாவில் உள்ள ஸ்வயம்பு சனி பீடங்களில் ஒன்றாகும். இந்த வளாகம் 12 ஏக்கர் நிலத்தில் பரந்து விரிந்துள்ளது. இது பிரதான மந்திர், சிறிய ஹனுமான்  கோயிலும் ஸ்ரீ ராமர் கோயிலும் அமைந்துள்ளது!!! 
கோவில் தினமும் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஆரத்திக்குப் பிறகு மகாபிரசாதம் உண்டு. தினமும் காலை 6 மணிக்கும், மதியம் 12 மணிக்கும், மாலை 6 மணிக்கும் ஆரத்திகள் நடைபெறும். சனிக்கிழமை மற்றும் சனி அமாவாசை மற்றும் ஷ்ராவண மாதத்தில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்த கோவிலுக்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தரும் தங்குவதற்கு பக்த நிவாஸ் விடுதி உள்ளது  மற்றும்  ஒரு அறைக்கு ரூ 500/- கிடைக்கிறது.

இது தோட்டம், உட்காரும் ஏற்பாடுகள், மரங்கள் என இயற்கை சூழலில் அற்புதமாக அமைந்திருக்கிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்......தொடரும்!

Sunday 27 November 2022

சித்தன் அருள் - 1228 - அந்தநாள்>இந்த வருடம் - கோடகநல்லூர்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த மாதம் நவம்பர் 06ம் தியதி அகத்தியப்பெருமான், பெருமாளுக்கு வருடம் தோறும் செய்து வருகிற அபிஷேக பூஜை,  மிக சிறப்பாக நடை பெற்றது. மதியம் 2 மணிக்கு முடிவடைந்த பூஜைக்குப்பின், மதியம் 2.30 மணிக்கு, திருப்பதியில் இருந்த அகத்தியப்பெருமானின் ஜீவ நாடியில், திரு ஜானகிராமன் அவர்கள் அகத்தியப் பெருமானின் வாக்கை உரைத்தார். அந்த வாக்குகளை அடுத்த நாளே சித்தன் அருள் வலைப்பூவில் வழங்கப்பட்டது. இந்த பூஜை சம்பந்தமான வாக்குகளை சுருக்கி உங்களுக்கு கீழே வழங்குகிறேன்.

பூஜைக்குப் பின் அகத்தியர் அருள் வாக்கு:-
  • அனைவருக்கும் ஆசிகள்.
  • எதை செய்ய வேண்டும் என (அகத்தியர்) எதிர்பார்க்கின்றேனோ, அப்பொழுதெல்லாம் அடியவர்களை ஏதேனும் ஒரு வழியில் தெரிவித்து, அழைத்து சென்று, அங்கெல்லாம் நல்லவிதமாக உயர்வு கொடுப்பேன்.
  • நான் அழைக்கும் இடத்திற்கெல்லாம் பெருமாள் வருவார், ஏன்  என்றால், ஒரு காலத்தில் பெருமாளுக்கு யான் உதவி புரிந்துள்ளேன். என் பக்தர்கள், உன் வரவை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். யானும் உனக்கு சேவைகள் செய்வேன் என்றிட, பெருமாள் திருப்பதியிலிருந்து கோடகநல்லூர் வந்து விட்டார்.
  • பக்தர்கள் ஒவ்வொருவரிடமும் ஏதோ ஒரு குறை இருப்பினும், பெருமாளிடம் கூறி மாற்றமடையச் செய்கிறேன்.
  • இனி வரும் காலங்களில் அங்கு யார் யார் இருக்க வேண்டும் என யானே தீர்மானிப்பேன்.
  • யானும், லோபாமுத்திரையும் வந்திருந்து பெருமாள் கொடுத்த உணவை உண்டோம்.
  • ஆண்டுகள் செல்லச்செல்ல கோடகநல்லூரை நிறைய மாற்றி அமைப்பேன். பெருமாளிடத்தில் அவற்றை உரைத்துவிட்டேன்.
  • மனவருத்தங்களோடு அங்கு எதை செய்யினும், ஆசீர்வாதங்கள் கிட்டாது. யானும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். ஒரு எல்லை வரைதான் பார்ப்பேன், அதன் பின்னர் விஷயங்கள் (ஏற்பாடுகள்), வேறு மாதிரியாக பார்க்கப்படும். இதுவே என் தீர்ப்பு.
  • என் பக்தர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை முன்னரே உரைத்துவிட்டேன். அப்படி நடந்து கொண்டால் குறைகள் வராது.
  • சுத்தமான பச்சை கற்பூரம், கிராம்பு, துளசி, இவை மூன்றும் வலது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு பெருமாளிடம் வேண்டினால், அனைத்தையும் அருளிடுவார்.
  • பெருமாளே, கொங்கணவர் சித்தரை அழைத்து, வந்திருந்த அனைவரது வேண்டுதல்களையும் உற்று நோக்கி, அருளக்கூறி, அனுப்பிவைத்தார்.
  • அனுமனும் பெருமாள் உத்தரவின் பேரில் அங்கு வந்து, சனீஸ்வரனும், எப்படி ஒவ்வொருவர் கர்மாவுக்கு ஏற்றபடி நடந்து கொள்கிறார்கள் என பார்த்து நிறைய மாற்றங்களை மனிதருள் உருவாக்கி விட்டார்.
பெருமாள் அபிஷேக பூஜை தினத்தன்று கோடகநல்லூரில் வந்திருந்தவர்கள்:-
  1. ப்ரஹன் மாதவப் பெருமாளாக திருப்பதியிலிருந்து பெருமாள்!
  2. ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்திய பெருமான்
  3. கொங்கணவ சித்தர்
  4. அனுமன்
  5. சனீஸ்வரன்
  6. தாமிரபரணித்தாய்
  7. அகத்தியர் அடியவர்கள்.
நிகழ்வுகள்:-

கோடகநல்லூர், அந்த நாள்>இந்த வருடம் அபிஷேக பூஜைகள், திருமதி.லக்ஷ்மி தேவராஜன் என்கிற அகத்தியர்ப் பெருமானின் அடியவரின் மேற்பார்வையில் நடை பெற்றது. அவரால் நேரடியாக வர முடியாத சூழ்நிலையில், அவரது நண்பர்கள் (அகத்தியர் அடியவர்கள்) முன் நின்று சிறப்பாக நடத்தினர்.

அன்றைய தினம் காலை 4 மணியிலிருந்தே அடியவர்கள் வந்து தாமிரபரணியில் நீராடி அபிஷேக பூஜைக்காக காத்திருந்தனர்.

வந்திருந்த அடியவர்களுக்கு காலை சிற்றுண்டி அளிக்கப்பட்டது.

மந்திரம் முழங்க, சங்கல்ப்பம் செய்து, தாமிரபரணி தாய்க்கு தாம்பூலம் சமர்ப்பிக்கப்பட்டது.

பெருமாளுக்கும், தாயார்களுக்கும், கருடாழ்வாருக்கும் முன்னரே வஸ்த்திரம் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பூமாலைகளும் சமர்ப்பிக்கப்பட்டது.

பெருமாளுக்கும், தாயார்களுக்கும் அபிஷேக தீர்த்தம் தாமிரபரணியிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு அபிஷேகம் நடந்தது.

பெருமாளுக்கு எண்ணைக்காப்பு போட்டபின் பிரசாதமாக எண்ணெய் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

வெட்டிவேர் தீர்த்தம், பால், தயிர், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், 108 மூலிகைப்பொடி, சந்தனம், மஞ்சள், தேன், நெய், போன்ற பலவித பொருட்களால், பெருமாளுக்கு அபிஷேகம் நடை பெற்றது.

எப்போதும் போல் பெருமாள் மிகுந்த திருப்தியுடன், ஆனந்தமயனாக அமர்ந்திருந்தது உணரப்பட்டது.

அபிஷேக நேரத்தில் அகத்தியப்பெருமானை, கண்டவர்கள், உணர்ந்த அடியவர்கள் ஏராளம்.

துளசி, தாமரை, அரளி, ரோஜா, மல்லிகை போன்ற பலவித பூக்களால், பெருமாளை மூழ்கவைத்து, அகத்தியர் அடியவர்கள், இறை அருளை பெற்றனர்.

திரு.தேவராஜன் என்கிற அகத்தியர் அடியவர், பெருமாள் மீது பாடல் இயற்றி பாடினார்.

ஒரு அகத்தியர் அடியவர் அடியேனிடம் "பூஜை நன்றாக இருந்தது. பெருமாள் ஏற்றுக்கொண்டாரா?" என வினவ நீங்களே நிமிர்ந்து பார்த்து கேளுங்கள் என்றேன்.

"என்ன பெருமாளே! பூஜையை ஏற்றுக்கொண்டீரா? திருப்திதானே?" என வானத்தைப் பார்த்து கேட்க, சற்று நேரத்தில் மழை கொட்டியது. வந்திருந்த அடியவர்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியே.

உழவாரப்பணி செய்த அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும், அடியேனின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள். மறுபடியும் நாம் அனைவரும் அகத்தியரின் அடியவர்கள் என்று நிரூபித்து விட்டீர்கள். எவ்வளவு சுத்தம் தேவையோ அதற்கும் மேலே சுத்தமாக்கி கோவிலை திருப்பி சமர்ப்பித்தது மிக சிறப்பாக அமைந்தது. பெருமாளும், தாயார்களும், அகத்தியர் லோபாமுத்திரை, சித்தர்கள் அனைவரும் மிக மகிழ்ந்து போயுள்ளனர். உங்கள் அனைவரையும் ஆசீர்வதித்தும் விட்டனர். 

பெருமாள்/அகத்தியர் சார்பாக வந்திருந்த அடியவர்களுக்கு கீழ்கண்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
  1. பெருமாளுக்கு நிவேதனம் செய்யப்பட நான்கு வகையான அன்னம்.
  2. அபிஷேக பஞ்சாமிர்தம்.
  3. பெருமாளுக்கு பாதத்தில், மார்பில் சார்த்தப்பட்ட மஞ்சள் பொடி.(இது ஒரு அருமருந்து. உள்ளுக்குள் எடுத்துக்கொள்க)
  4. முருகப்பெருமானின் கிரௌஞ்சகிரி பால் கட்டி.
  5. அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை சார்பாக அனைவருக்கும் அவர்கள் படம் பதித்த 10 ரூபாய் நாணயம். இது பெருமாள் பாதத்தில் வைத்து அளிக்கப்பட்டது.
  6. அகத்தியப்பெருமான் லோபாமுத்திரை தாயுடன் சேர்ந்து அருளும் படம் (வீட்டு பூஜை அறையில் வைக்க).
  7. அகத்தியப்பெருமான் அருளும் சிறிய படம் (பையில் வைத்துக்கொள்ள).
​அடுத்த தொகுப்பில் கோடகநல்லூர் நிகழ்ச்சி நிறைவு பெரும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......தொடரும்!​

Saturday 26 November 2022

சித்தன் அருள் - 1227 - அகத்தியப் பெருமானின் அருள்வாக்கு - உங்கள் கவனத்திற்கு!


"எம் வாக்குகளை கேட்கிறவன், படிக்கின்றவன், இந்த ஜென்மத்தில், அவைகளின் படி நடக்க கடமைப்பட்டவன். ஏதோ, பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் கூறுவதை கேட்டு, வசதிக்கு ஏற்ப மறந்து விடுவது போல், நடந்து கொள்வதும்/வேறு விதமாகவும் வாழ்ந்தால், எம் வாக்குகள் அவனுள் கடனாக மாறும். பின்னர், எத்தனையோ ஜென்மம் எடுத்து ஒன்றிலும் இறை பக்தியோ, சித்தர்களின் ஞானமோ இல்லாமல் திரிந்து, இறைவன் அனுமதி அளித்தால், ஏதேனும் ஒரு ஜென்மத்தில், மறுபடியும் முதலிலிருந்து ஞானத்தை பெறவேண்டும், எம் கடனை தீர்ப்பதற்கு. சித்த ஞானத்தை, அருளச் சொல்வதே இறைவன்தான். இதுதான் சித்த ஞானத்தின் அடிப்படை. அதனால் தான், எந்த ஒருவனது ஜாதகத்திலும், சித்தர் சாபமோ/சித்தர் கடனோ இருந்தால், எந்த ஜோதிடனாலும் கண்டுபிடிக்க முடியாதபடி இறை அமைத்து விடுகிறது. எம் சேய்கள் எப்பொழுதும் இதை மனதில் கொள்ள வேண்டும்."

அகத்தியப்பெருமான்!

சித்தன் அருள்.......... தொடரும்!

சித்தன் அருள் - 1226 - அன்புடன் அகத்தியர் - ராகு கேது சூட்ச்சும கோவில்கள்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே! 

நம் குருநாதர் அகத்தியப் பெருமான் பஞ்சவடி வாக்கில் விஞ்ஞானபூர்வமான வாக்குகளை தந்திருந்தார் அதில் ராகு கேது பற்றிய மிகப்பெரிய சூட்சுமத்தை பற்றி விளக்கி இருந்தார்

நமது சித்தன் அருள் வலைதளத்தில் 1225 அன்புடன் அகத்தியர் பதிவில் முழு வாக்குகளும் வந்துள்ளன...

அகத்திய பிரம்மரிஷி உரைத்த உலகம் அறியாத ராகு கேது ரகசியம்

""அப்பனே!!!  இதை என்று அறியாத அளவிற்கு ஒரு சூட்சமம் அதாவது தெரியாத ஒன்றை இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!

ராகு கேதுக்கள் சாதாரண!!மானவை இல்லை சாதாரணமானவை இல்லை !!!ஆனாலும் இதன் ஒளி அப்பனே அமாவாசை திதியிலும் பௌர்ணமி திதியிலும் கூட திடீரென்று திருத்தலங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!!!

இதை சரியாக வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே அனைத்தும் சார்ந்தே செல்லும் என்பதின் அப்பனே இதனை என்றும் நிமித்தம் காட்டி அப்பனே. அவ் ஒளியானது அப்பனே எங்கெங்கு செல்கின்றது??

முதலில் திருநாகேஸ்வரம் என்னும் இடத்திலே இருந்து ஆரம்பிக்கும் அப்பனே படிப்படியாக சென்று அப்பனே நேர்கோட்டிலே சென்று அப்பனே கேதார்நாத் அங்கு சென்றடையும் என்பேன் அப்பனே ...இதைதன் பௌர்ணமி எதை என்று பின் அமாவாசை திதிகளில் மட்டுமே  அவ் ஒளியானது அப்படியே அப்பனே செல்லும் என்பேன் அப்பனே அதுவும் பின் திருத்தலங்களை நோக்கி எதை என்று அதை என்று( ஆலயங்களை) கூட உராய்ந்து செல்லும் என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே எதை என்று கூட அதில் நேர்கோட்டில் செல்லுங்கள் அப்பனே!!! அவ் அந்த ஆலயங்களில் மட்டும் சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

நட்சத்திரங்கள் மேலே இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!! ஆனால் அப்பனே கீழே இருந்து அவை அவற்றின் ஒளியானது அப்பனே அனைவரையும் ஒளி வீசி அப்பனே அது மேல் இல்லை அப்பனே கீழிருந்தே ஆட்டுவிக்கின்றது!!!

அதனால் அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே ராகு கேதுக்களை அப்பனே எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பேன் அப்பனே!!!

அப்பனே இதை என்றும் அறியாத அளவிற்கும் ஆனால் இதிலும் சூட்சமம் உள்ளது அப்பனே ஆனாலும் நமச்சிவாயனை பிடித்து விட்டால் அப்பனே நிச்சயம் ராகு கேதுக்களின் ஒளி அப்பனே அதிகமாக படும் என்பேன் அப்பனே அப்பொழுது தோஷங்கள் நீங்கிவிடும் என்பேன்!!!

என்று வாக்குகள் தந்திருந்தார்!!!! குருநாதர் உடைய விஞ்ஞான வாக்கு ஒவ்வொன்றும் பல அதிசயங்களும் ஆச்சரியங்களும் பொதிந்து உள்ளது நம்மை போன்ற மனிதர்களுக்கு இதை எளிய விளக்கத்தோடு அற்புதமாக நாம் பயன்பெற வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே நம் குருநாதர் இதை வாக்குகளாக தந்திருக்கின்றார்.

குருநாதருடைய கூற்றுப்படி திருநாகேஸ்வரம் தொட்டு கேதார்நாத் வரையிலான ஒரு நேர்கோட்டு பயணத்தை பற்றி ஒரு சிறிய ஆய்வினை செய்த போது பல ஆச்சரியகரமான தகவல்கள் கிடைத்தன அதை அடியவர்களுக்கு தெரிவிக்கின்றோம்.

தமிழ்நாடு முதல் ஆந்திரா தெலுங்கானா மத்திய பிரதேசம் உத்தர பிரதேசம் என நேர்கோட்டாக செல்லும் அக்கோடுகள் கேதார்நாத் சென்றடைகின்றது இதில் சில முக்கியமான ஆலயங்களைப் பற்றி தகவல்கள் கிடைத்தன இன்னும் ஏராளமான ஆலயங்களும் இருக்கலாம் அதில் அறிந்தவற்றை அடியவர்களுக்கு தெரிவிக்கின்றோம்!!!

1. கேதார்நாத்
2. காளஹஸ்தி
3. ஏகாம்பரநாத- காஞ்சி
4. திருவண்ணாமலை
5. திருவானைக்காவல்
6. சிதம்பரம் நடராஜர்
7. ராமேஸ்வரம்
8. காலேஸ்வரம் -

இவ் ஆலயங்கள் அனைத்தும் 79° தீர்க்கரேகைகளில் அமைந்துள்ளன.ஒரே நேர்கோட்டில் குருநாதர் உரைத்தபடியே நேர்கோடாக செல்லும் பொழுது ஒளி படும் ஆலயங்களாக அறிந்து கொள்ள முடிந்தது!!! இன்னும் மற்ற மாநிலங்களிலும் அவ்வொளி செல்லும் ஆலயங்கள் இருக்கக்கூடும்!!! குருநாதரின் திருவருளால் அனைத்தும் நாம் அறிந்து கொள்ள முடியும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

Thursday 24 November 2022

சித்தன் அருள் - 1225 - அன்புடன் அகத்தியர் - பஞ்சவடி வாக்கு - 2




அப்பனே!!! நலன்கள் நலன்கள்!!! அப்பனே தித்திக்கும்!! என்பேன்!!

அப்பனே வரும் காலங்களில் நிச்சயமாய் என் பக்தர்களுக்கு வழியும் காட்டுவேன் அப்பனே!!!!

எதை என்று உணர்ந்து விட்டால் அப்பனே ஆன்மாக்கள் எத்தனை!! எத்தனை!! அலைந்து கொண்டே இருக்கின்றது!!! அப்பனே ஒவ்வொரு ஆன்மாவும் நிச்சயமாய் இன்றளவில் கூட தன் முன்னோர்களையும் யான் வரச் சொன்னேன் அப்பனே நலமாகவே!!!!

ஆனால் பல பல ஆன்மாக்களுக்கும் கூட பிறவிகள் வந்து விட்டது!!! ஆனாலும்  பிறவிகள் இல்லையே எனும் !! இவ் ஆன்மாக்களும் இங்கு வந்து எதை என்று அறியாமலே யானும் அழைத்து வந்து இவர்தான் உங்கள் சொந்த பந்தங்கள் என்று நினைத்து இவர்களுக்கும் ஆசிகள் கொடுங்கள் என்று அதிகாலையிலே சொல்லிவிட்டேன்!!!!

எதை என்று அறியாமலே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே அதாவது பின் நவதினங்கள் அதாவது நவராத்திரி என்கிறீர்கள் ஆனாலும் இதனை பயன்படுத்திக் கொண்டு அப்பனே இவ் நவராத்திரிக்கான வழிகளையும் யான் எதை என்று கூற பின் இவற்றின் தன்மைகளை உணர்ந்து அப்பனே இவ் நவராத்திரி அன்று பின் சுக்கிரனின் ஆதிக்கம் அதாவது நட்சத்திரம் எதை என்று அறிந்து அறிந்து அனைத்து நதிகளிலும் விழும் என்பேன் !!!!அப்பனே

அதனால் பின் ஒவ்வொரு எதனை என்று அறிந்து பின் இரவிலும் கூட இரவிலும் கூட நீராடி புண்ணிய நதிகளில் நீராடி அப்பனே நவராத்திரியில் வழிபட்டால் அப்பனே மேன்மைகள் தான் உண்டு என்பேன் அப்பனே!!!!

இதை(நவராத்திரி) முடிந்தவுடன் அப்பனே இங்கு தான்(பஞ்சவடி) அதிகம் அப்பனே  இப் பௌர்ணமியில் தான் அதிகம் சுக்கிரன் இங்கு அதிகம் ஆதிக்கம் !!!அதனால் தான் அப்பனே இக்கோதாவரிக்கு பெரிய ஒரு உபதேசம் உண்டு என்பேன் அப்பனே இதை சூட்சுமமாகவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

எதையென்று அறியாத அளவிற்கும் கூட அதனால் இன்றிலிருந்து (பௌர்ணமியில் இருந்து ) அப்பனே அதன் ஒளி சற்று தாமதப்படும் அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அதனால் நவராத்திரி என்கின்றார்களே.....அப்பனே எதற்காக???? அப்பனே அனைவரும் வணங்குகின்றார்கள் நவராத்திரியன்று!!!!

யாருக்குத்தான்??? நல்லது நடந்திருக்கின்றது என்று கூறுங்கள் அப்பனே!!!!!!!

இதற்கும் தெளிவாக விளக்கங்கள் அதனால் தான் அப்பனே பழைய பழைய வழிகளிலும் கூட அப்பனே பின் மறைத்து விட்டான் மனிதன்.... மனிதர்கள் வாழ்ந்து விடுவார்கள் என்று அனைத்தையும் மறைத்து விட்டார்கள்!!!

ஆனால் யான் விடப்போவதில்லை!!!!! 

எடுத்து வருவேன் இக்கலி யுகத்திலும் கூட!!!

இதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே இன்னும் உண்மைகளை நிரூபிக்க போகின்றேன் அப்பனே!!!! நல்லோர்களுக்கு அப்பனே உதவிடுவேன் அப்பனே இதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே நன்று என்பேன் அப்பனே!!!

அப்பனே நட்சத்திரங்கள் பல பல !!!எங்கெல்லாம் ஒளி விழுகின்றது!!! அப்பனே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு பெயர் இருக்கின்றது அப்பனே அவையெல்லாம் வரும் காலங்களில் நிச்சயமாய் சொல்வேன் அப்பனே!!!

இப்பொழுது சொல்லிவிட்டேன் அப்பனே சுக்கிரன் நட்சத்திரம் பற்றி!!!!

அப்பனே இதை என்று அறியாத அளவிற்கு ஒரு சூட்சமம் அதாவது தெரியாத ஒன்றை இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!

ராகு கேதுக்கள் சாதாரண!!மானவை இல்லை சாதாரணமானவை இல்லை !!!ஆனாலும் இதன் ஒளி அப்பனே அமாவாசை திதியிலும் பௌர்ணமி திதியிலும் கூட திடீரென்று திருத்தலங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!!!

இதை சரியாக வழியில் பயன்படுத்திக் கொண்டால் அப்பனே அனைத்தும் சார்ந்தே செல்லும் என்பதின் அப்பனே இதனை என்றும் நிமித்தம் காட்டி அப்பனே. அவ் ஒளியானது அப்பனே எங்கெங்கு செல்கின்றது??

முதலில் திருநாகேஸ்வரம் என்னும் இடத்திலே இருந்து ஆரம்பிக்கும் அப்பனே படிப்படியாக சென்று அப்பனே நேர்கோட்டிலே சென்று அப்பனே கேதார்நாத் அங்கு சென்றடையும் என்பேன் அப்பனே ...இதைதன் பௌர்ணமி எதை என்று பின் அமாவாசை திதிகளில் மட்டுமே  அவ் ஒளியானது அப்படியே அப்பனே செல்லும் என்பேன் அப்பனே அதுவும் பின் திருத்தலங்களை நோக்கி எதை என்று அதை என்று( ஆலயங்களை) கூட உராய்ந்து செல்லும் என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே எதை என்று கூட அதில் நேர்கோட்டில் செல்லுங்கள் அப்பனே!!! அவ் அந்த ஆலயங்களில் மட்டும் சூட்சுமம் ஒளிந்துள்ளது!!!!

நட்சத்திரங்கள் மேலே இருக்கின்றன என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்!!!! ஆனால் அப்பனே கீழே இருந்து அவை அவற்றின் ஒளியானது அப்பனே அனைவரையும் ஒளி வீசி அப்பனே
அது மேல் இல்லை அப்பனே கீழிருந்தே ஆட்டுவிக்கின்றது!!!

அதனால் அப்பனே அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே ராகு கேதுக்களை அப்பனே எவராலும் கட்டுப்படுத்த முடியாது என்பேன் அப்பனே!!!

அப்பனே இதை என்றும் அறியாத அளவிற்கும் ஆனால் இதிலும் சூட்சமம் உள்ளது அப்பனே ஆனாலும் நமச்சிவாயனை பிடித்து விட்டால் அப்பனே நிச்சயம் ராகு கேதுக்களின் ஒளி அப்பனே அதிகமாக படும் என்பேன் அப்பனே அப்பொழுது தோஷங்கள் நீங்கிவிடும் என்பேன்!!!

அப்பனே ஆனாலும் எதற்கு இவ் அர்த்தங்கள் உண்டு என்பதை என்று ஆனாலும் ஈசனுடைய பக்தர்கள் நமச்சிவாயா!!!!! நமச்சிவாயா!!!! நமச்சிவாயா !!!!என்று உச்சரித்துக் கொண்டே இருப்பார்கள் அப்பனே !!!!!அவ் உச்சரிக்கும் திறன்கள் ஆனது திறன்கள் ஆவது பின் ராகு கேதுக்களை எதை என்று கூற அப்பனே நம்மிடம் உராயும் பொழுது அப்பனே அவ் மந்திரமானது அப்பனே.... எதை என்று எதிரொளித்து அவை தன் எதிரொளித்து அவை அப்படியே சென்றுவிடும்!!!!

அப்பனே இவை என்று அறிய பெரிய பெரிய ஞானிகள் எல்லாம் அப்பனே இதை அறிந்திருந்தனர் இதனால் அப்பனே நமச்சிவாயனை நமச்சிவாயா!!! நமச்சிவாயா !!என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அவ்வொளியானது எதை படும் பொழுது ஆனாலும் எதை என்று நிமித்தம் காட்டி பின்  அவ் ஒளிக்கு அவ்வளவு சப்தம் அப்பனே நமச்சிவாயா என்பது கூட சாதாரணமான விஷயம் இல்லை அப்பனே!!!!

இதனைப் பற்றி தெளிவாக சொல்கின்றேன் ஆனால் மக்கள் எதை என்று அறியாமலே இருக்கின்றார்கள் ஒவ்வொன்றை பற்றி யான் சொல்லிவிட்டுத்தான் அதனை பற்றியும் விரிவாக சொல்வேன் அப்பனே!!!!

 நிச்சயம் சொல்வேன் அப்பனே இப்பொழுது

அப்பனே எதை எவற்றில் இருந்து கூட அப்பனே விதியைப் பற்றி சொன்னேன் அப்பனே விதியானது குறுக்கலைகளாக நெட்டலைகளாக உடம்பில் பதிந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!

ஆனால் இதை சரியான வழியில் அப்பொழுது நேர்கொண்டு வருவதற்கு ஒரே மந்திரம்""" நமச்சிவாய"" எனும் மந்திரம்!!!

ஆனாலும் அப்பனே அவ் குறுக்கலைகளை நெட்டலைகளை அப்பனே நேராக நிமிர்த்துவது கடினம் தான் அப்பனே!!!

ஆனாலும் (நமச்சிவாயா) சொல்லச் சொல்லச் சொல்ல அப்பனே இன்னும் அவை தன் அதிகமாக ஆடும் என்பேன்.... ஆனால் கடைசியில் மெதுவாக மெது மெதுவாக அப்பனே ஒன்றிணைந்து நேர்க்கோட்டாக சென்றுவிடும்!!!!

அப்பனே இதில் தான் அடங்கியுள்ளது அப்பனே அதனால் அப்பனே பல பேர்களை யான் பார்த்து விட்டேன்..... நமச்சிவாயா!! நமச்சிவாயா!!! என்று சொல்கின்றார்கள் ஆனால் கஷ்டங்கள் வருகின்றது என்று (உச்சரிப்பை ) விட்டுவிட்டார்கள் அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது நமச்சிவாயனை பணிந்து பணிந்து என்று நினைத்துக் கொண்டு விட்டு விட்டார்கள் அதனால் மனிதனின் புத்தி மட்ட புத்தி!!!!

அப்பனே எதை இதை நிமித்தம் காட்டி அதனால்தான் சொல்கின்றேன்....இவைதன் உணர உணர அப்பனே விதியின் பாதையும் இப்படித்தான் அப்பனே ஆனால் சரியாக அப்பனே மண்டை ஓடு(கபாலம்) என்கின்றார்களே அப்பனே இதில் தான் அக்குறுக்கலைகளும் நெட்டலைகளும் அப்பனே இப்பொழுதும் கூட பதிந்து கொண்டே இருக்கின்றது அதனால் தான் அவ் ஆன்மாவிற்கு அனைத்தும் புரியும்!!!!

அப்பனே உன் மண்டையிலே  அவ் ஆன்மா ஒளிந்து இருக்கின்றது!!!!

அதனால்தான் அப்பனே மனிதன் இறந்தாலும் அவ மண்டை(கபால ஓடு) நிச்சயம் நீங்காது என்பேன்!!!
ஆன்மா அதிலிருந்து தான் செல்கின்றது என்பேன் அப்பனே!!!

அப்பனே சரியாக இக்குறுக்கலைகளும் நெட்டலைகளும் சரியாக ஒரு கோடாக நிறுத்திவிட்டால் அதாவது விதியினை ஒரே கோடாக நிறுத்தி விட்டால் அப்பனே நீ உலகத்தை ஆளலாம் என்பேன் அனைத்தும் உந்தனுக்கு தெரியவரும் என்பேன்!!!

அப்பனே இன்னொரு முறையும் விளக்குகின்றேன்!!!

ஒளிக்கற்றைகள் அதாவது ஒவ்வொரு திருத்தலத்திலும் அதிகமாகவே இருக்கும் என்பேன் அப்பனே அதனால் மனிதன் அங்கு செல்லும் பொழுது அப்பனே அக்குறுக்கலைகளும் நெட்டலைகளும் கூட அப்பனே அப்படியே அதாவது பலத்த வேகத்தில் அப்பனே அதாவது எதை என்று கூற 1000 கிலோமீட்டர் அதாவது எதை என்று கூட ஆயிரம் கிலோமீட்டர் வேகத்தில் ஆடும் என்பேன் அப்பனே!!! அதனால்தான் சில திருத்தலங்களுக்கு சென்றாலும் சில நபர்களுக்கு கஷ்டங்கள் தான் ஏற்படுத்தி விடுகின்றது!!!

ஆனாலும் அதை தன் அமைதியாக்க அமைதியாக்க அப்பனே எதை எவற்றில் இருந்து கூட உணர்ந்து உணர்ந்து அங்கேயே பல பல ரூபங்களாகவே அதாவது பின் அமர்ந்து விட்டாலே அப்பனே அதிவிரைவிலே அது சீராகிவிடும்!!

அப்பனே இதை எவற்றில் இருந்து கூட அப்பனே இவ்வொளியானது.... அதாவது ஒரு கோடானது அப்பனே உன் மண்டையில் சரியாக இருந்து விடும் என்பேன் அப்பனே!!!

இதைத்தன் அப்பனே எதை என்று ஆனாலும் பின் மேலிருந்து விண்வெளியில் இருந்து அப்பனே பின் ஒரு ஒளி அப்பனே பின் அனுதினமும் பதிந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!

அவ் ஒளியானது அப்பனே சரியான அதாவது மண்டை ஓட்டில் அதாவது அங்கு பதிந்தால் தான் அப்பனே மனிதன் எண்ணங்கள் மாறுபட்டு இருக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனால் சரியான வழியில் அக்கோடுகள் எதை என்று கூட...

எங்கு பதியவில்லையோ அங்கு தியானங்கள் செய்தால் அனைத்தும் தித்திக்கும்!!!

அப்பனே எதற்காக?? முன்னோர்களை வணங்குங்கள் வணங்குங்கள்!!! என்று யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

அப்பனே அதாவது அப்பனே உன் உடம்பில் சரியாகவே அப்பனே இருகண்களும் அதாவது அப்பனே இரு கண்கள் பின் ஓரத்தில் எதை என்று ஓர் அணு இருக்கும் அப்பனே அதை எதை என்று கூட அதனால் அப்பனே அவ் அணுவானது அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் அவ் அணுவானது பின் எவ்வளவு  இவ் உடம்பு அதாவது எவ்வளவு பிறப்புகள் எடுத்திருக்கின்றீர்கள் என்பதை கூட அவ் அணுவானதற்கு சரியாக தெரிந்து விடும் என்பேன் அப்பனே!!!

ஆனால் அவ் அணுவானது அப்பனே பின் உடம்பு மறைந்துவிடும் ஆனால் அவ் அணுவானது மறைய அதாவது பின் மறையாது என்பேன் அப்பனே!!!

அதனால் எதை எவற்றிலிருந்தும் தெரியாத அளவிற்கும் கூட அப்பனே அவ் அணுவானது எதை என்றும் ஆனால் பின் இப்பொழுது புதிய அணுவானது உருவாகிவிட்டது ஆனால் பழைய அணுவானது அப்பனே நீ என்னென்ன செய்கின்றாய் என்பதை கூட அப்பனே எதிர்நோக்கி எதிர்நோக்கி அவ் புதிய அணு உதிரும் பொழுது அவ் அணுவானது இவ் புதிய அணுவை வந்து தாக்கும் என்பேன் அப்பனே!!!

அதனால் அப்பனே பல பல வழிகளிலும் கூட அதாவது எதை என்று அறியாமலே நீரிலே எதை என்று தெரியாமலே அமாவாசை திதிகளிலும் பௌர்ணமி திதிகளிலும் எவை என்று முன்னோர்களை வணங்குவதால் அவ் அணுவானதின் தாக்கம் சிறிதளவு குறைந்து விடும் அதனால் தான் அப்பனே சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே சொல்லிவிட்டேன்!!!! இப்பொழுதும் கூட!!.....

அப்பனே இன்னும் அதனால்தான் மனிதனுக்கு பிறவிகள் வந்து கொண்டே இருக்கின்றது அவ் அணுவானது அப்பனே ஆனால்  அவ் அணுவானவற்றை ஒழிக்கப்பட வேண்டும்...

ஆனாலும் எதனையென்று என்னை நம்பிக் கொண்டிருப்பவர்களை அவ் அணுவானதை எப்படி ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் கூட வரும் காலங்களில் கற்றுக் கொடுப்பேன் அன்பு மகன்களே!!!!.......

இதைத் தன் அப்பனே பல ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது ஆனாலும் இப்பொழுதும் பெருமையாக சொல்வேன் என்னுடைய ஆராய்ச்சிகளின் படி யாரும் இவ்வுலகத்தில் கண்டுபிடிக்க முடியாது ஆனால் மக்களுக்கு ஏன் உரைத்துக் கொண்டே இருப்பேன்!!!! 

அப்பனே எதனை என்று கூட அப்பனே இன்னொன்றையும் சொல்கின்றேன் அப்பனே!!! பௌர்ணமி அமாவாசை திதிகளில் அப்பனே ஏன்? அப்பனே திருத்தலங்களில் தங்கி இருக்கச் சொன்னார்கள் முன்னோர்கள் என்பதை அப்பனே பின் ஒளிக்கற்றையானது அன்றைய தினத்தில் அதிக அளவு படும் பொழுது அப்பனே இவ்அணுவானது அப்பனே பின் எதை என்று அறியாமலே பின் அங்குமிங்கும் அதாவது பின் அலைந்து எங்கேயாவது சென்று விடலாமா? அதாவது எதை என்று கூற  இவ் அணுவானது பின் அவ் ஒளிக்கற்றையை தாங்க இயலாது!!!.... அதனால் எங்கேயாவது எதை என்று கூட  அவ்ஒளிக்கற்றை அதிவேகமாகப்படும் பொழுது பின் எதை என்று தெரியாமலே  அவ்அணுவானது சென்று விடும்.... அதனால் அப்பனே உயிரும் பிரிந்து விடும்!!!

அதனால்தான் அப்பனே உயிர் பிரியக்கூடாது என்பதற்காகத்தான் திருத்தலங்களில் தங்கச் சொன்னேன் அப்பனே பல மனிதர்களை!!!!!

அவ் அணுவானது அப்பனே வளரும் திறமை கொண்டது ஆனால் வளர்ந்து கொண்டே இருந்தால் அப்பனே ஆனாலும் பின் விபத்துக்கள் ஏன் நடக்கின்றது என்பதை யான் சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் சில சில மனிதர்களுக்கு இவ் அணுவானது சிறிது சிறிதாக வளரும் ஆனாலும் அப்பனே ஒளிக்கற்றையானது அப்பனே ஓர் ஓர் முறையில் கூட அதிகமாக ஓர் இடத்தில் திடீரென்று படும் என்பேன் அப்பனே அப்பொழுது இவ் அணுவானது அதாவது ஒளி ஆனது தாக்கும் பொழுது தான் உடனடியாக அவ் அணுவால் நிச்சயம் சக்தி எதிர்கொள்ள முடியாத அளவிற்கும் கூட அங்கேயே மாய்ந்து விடுகின்றான்.. மனிதன்!!!

அப்பனே இதைத்தான் எதிர்க்கும் திறன் அவ் அணுவை வளர்க்கக்கூடாது வளர்க்கக்கூடாது என்பேன் அப்பனே!!!

அதனால்தான் திருத்தலங்களுக்கு சென்று கொண்டே இருந்தால் அங்கு அதாவது ஒளிக்கற்றையானது சிறிது சிறிதாக படும்பொழுது அவ் அணுவானதின் திறனும்  குறைந்து கொண்டே வரும்!!!

அப்பனே இதனால் பல மனிதர்களுக்கு பல வழிகளிலும் கூட எடுத்துரைத்து விட்டேன் அப்பனே நலமாகவே!!! அதனால் அறிவியல் வழியாகவும் அப்பனே இறைவன் வழியாகவும் ஒன்றே என்று காட்டப் போகின்றேன் இவ்வுலகத்திற்கு புதுமுறையாகவே!!!!!

அப்பனே பின் உடம்பை சரியாக எப்படி ?இளமையாக வைத்துக் கொள்ளலாம் என்பதையும் கூட நிச்சயம் வரும் காலங்களில் என் பக்தர்களுக்கு யான் சொல்வேன்!!! நோய் நொடிகள் இல்லாத வாழ்க்கையையும் எப்படி வாழலாம் என்பதை கூட யான் சொல்வேன் அப்பனே கவலைகள் இல்லை!!!!

அப்பனே இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா!!!!! அப்பனே குறைகள் நம்மிடையே வைத்துக் கொண்டு இறைவனை சாடுவது அப்பனே தவறு என்பேன்!!!!

அப்பனே இன்னொன்றையும் யான் சொல்கின்றேன்... அப்பனே """யுரேனியம் !!! எனும் தாது உடம்பில் ஒளிந்து கொண்டிருக்கின்றது அப்பனே.....

ஆனால் அது வளர வளர கஷ்டங்களே வந்து கொண்டிருக்கும் என்பேன் அப்பனே!! அதை கட்டுப்படுத்த சரியான வழிகள் அப்பனே வரும் காலங்களில் சொல்வேன்!!!

ஒவ்வொன்றாக சொன்னால் தான் மனிதனுக்கு புரியும் என்பேன்!!!!

அப்பனே இவ் யுரேனியம் தாதுவானது எப்படி விரிவடையும் என்பதை கூட அப்பனே அப்பனே நம் உடம்பில் சாதாரணமாகவே அப்பனே எதை என்று அறிய ஆனாலும் மற்றவர்களை ஏன் அதாவது உயிர்களை கொன்று சாப்பிடக்கூடாது என்பதை கூட பெரியோர்கள் சொன்னார்கள் என்பேன் அப்பனே மற்ற உயிர்களை அதாவது கறியின் அதாவது மற்ற கறிகளை அதாவது அப்பனே தம் மனிதனிடத்தில் அப்பனே பின் வேறுபடுத்தி அதாவது ஒன்றிணைத்தால் அப்பனே தாங்காது என்பேன்( மனித மாமிச திசுக்களோடு மற்ற உயிரின் திசுக்கள் ஒன்று சேர்ந்தால் உடலால் தாங்க முடியாது) பின் சரீரம்!!!! அதனால்தான் அப்பனே அவ் யுரேனியம் மீண்டும் மீண்டும் வளர்கின்றது அதனால் தான் அப்பனே பின் எதை என்று கூட ஒரு உயிரை கூட அழிக்கக்கூடாது அழிக்கக்கூடாது என்றெல்லாம் முன்னோர்கள் வாக்கு!!!

அப்பனே நலமாகவே!! நலமாகவே!!! அதனால் அப்பனே அழிவுக்கு யார்? காரணம் என்று தெரிந்து கொண்டீர்களா!???? அப்பனே அழிவிற்கு காரணம் மனிதனே என்பேன்!!!!!

அப்பனே  எதை எதை என்று கூட வரும் காலங்களில் இன்னும் பல மூலிகைகளைப் பற்றி உரைக்கப் போகின்றேன் அப்பனே!!!! 

நிச்சயம் என் பக்தர்கள் நீண்டு வாழ்வார்கள் என்பேன் அப்பனே!!!!

அப்பனே எதை எதை என்று கூட அப்பனே எதை என்று அறியாத அளவிற்கும் கூட அப்பனே இன்னும் அவ் அணுவானது அப்பனே பின் வளர்ந்து செல்ல வளர்ந்து செல்ல அப்பனே மனிதன் வயதும் அதிகமாகின்றது அப்பனே மனிதனின் உருவமும் தோற்றமும் அதாவது தோற்றம் எதை என்று கூட பின் பிறந்து பின் எதை என்று அறியாமலே வளர்ந்து வளர்ந்து அவ் அணுவானது அப்பனே இவ்வாறு வளர்ந்து சென்றால் பின் மனிதன் முதியவன் போலவே தோன்றுகின்றான் ஆனால் அவ் அணுவானது வளர கூடாது என்பேன் அப்பனே!! வளரக்கூடாது என்றால் அப்பனே இறைவனின் நாமத்தை அதாவது நமச்சிவாயனின் நாமத்தையும் கூட அப்பனே இதுவும் அறிவியல் சம்பந்தப்பட்டதே!!!!! 

இதில் கூட அர்த்தமுள்ளது என்பேன் அப்பனே!!!!

பல ஆலயங்களுக்கு அப்பனே எதை என்று கூட அவ் அணுவானதை வளர்க்க விடாமல் தடுத்துவிடும் எதை என்று ஒளிக்கற்றையானது... ஒவ்வொரு ஆலயத்தின் மீது படியும்பொழுது எதை என்று அறியாமலே அவ் அணுவானது நிச்சயம் வளராது என்பேன்!!! இளமையாகவே இருக்கலாம் என்பேன் அப்பனே!!!! இன்னும் உரைக்கப் போகின்றேன் அப்பனே!!!!

அப்பனே இதில் கூட அப்பனே கடைசி பிறப்பு இடைப்பிறப்பு ஏன் பல மனிதர்களுக்கு நம்தனக்கு சம்பந்தங்கள் உண்டு என்று கூட.... அப்பனே அணுவானது அப்பனே பின் அழியாது என்பதை கூட யான் சொல்லிவிட்டேன் அப்பனே...

அவ் அணுவானது அங்கங்கே தேங்கி நிற்கும் என்பேன் அப்பனே அதனால் அப்பனே அவ் அணுவானது இவ்வாறு சொந்தங்கள் என்று கூட அப்பனே இரு அணு அவ் அணுவானது  இருக்கின்றதே அப்பனே எதை என்று அறியாமலே பின் அழிந்து விடும் என்பேன்!!!

ஆனால் புதிது புதிதாக பிறக்கின்ற பொழுது அவ் அணுவானது தேடி வந்து விடும் என்பேன் அப்பனே

அப்பனே அதனால் தான் சொன்னேன் அப்பனே பிறப்பு இறப்பு திருமணம் அப்பனே அதாவது மனைவி இதை அணுவானது தான் தீர்மானிக்க வேண்டும்!!!

அவ் அணு தான் இறைவன்!!!

அப்பனே அதனால்தான் இறைவன் அணுவாக இருக்கின்றான் என்று கூட பல அறிஞர்கள் கண்டுபிடித்தார்கள் ஆனால் அதை எடுத்துரைக்கவில்லை!!!

நிச்சயம் இவ்வுலகத்தில் யான் எடுத்துரைக்கப் போகின்றேன்!!!

அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இறைவனை பிடி!! இறைவனை பிடி!!! என்று சொல்லிக் கொண்டு இருந்தாலே மனிதனுக்கு அதாவது கலியுகத்தில் பைத்தியனாக போய்விடுவான் அதனால் எதை என்று கூட அறிவியல் ரீதியாகவே இறைவனை காண்பிக்க போகின்றேன் அப்பனே காண்பிக்கப் போகின்றேன்!!!!

அப்பனே இக்கலி யுகத்தில் இறைவன் என்றால் பொய் என்று சொல்லிவிடுவார்கள் மனிதர்கள் என்பதை கூட யாங்கள் ஏற்கனவே யூகித்து விட்டோம் அப்பனே!!!

அதனால் அப்பனே பின்  அறிவியல் ரீதியாக சொன்னால்தான் ஒவ்வொருவருக்கும் அடி விழும் என்பேன். அப்பனே!! அதனால்தான் சொல்வேன்!!

அப்பனே இதனை புரிந்து கொண்டால் ஓடோடி வருவான் பின் திருத்தலத்திற்கு என்று கூட யாங்கள் அறிவோம்!!!!

அப்பனே நலமாகவே நலமாகவே இன்னும் விளக்கங்கள் இருக்கின்றது அப்பனே அப்பனே அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே!!!

என்னிடத்தில் நீங்கள் இருப்பதால் அப்பனே எதை என்று கூற பின் இவ் அணுவானது எங்கெல்லாம்? வளரக்கூடாது என்பதையெல்லாம் அப்பனே யான் எதை என்று தெரியாமலே சிறிது சிறிதாக அப்பனே பின் குறைத்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

ஆனால் அப்பனே அதிகமாகி விட்டது குறைகள் இருக்கும் ஆனால் யான் குறைத்துக் கொண்டே வருகின்றேன் நீங்கள் கவலைப்பட தேவையில்லை!!!!

அப்பனே இவைதன் உணர என் பக்தர்களுக்கும் அப்படித்தான் இனிமேலும் செய்வேன் அப்பனே!!!

அப்பனே அதனால் தான் அப்பனே எதை என்று கூற அதனால் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே மனிதன் ஏதும் இல்லாமல் பிறக்கின்றான் ஏதும் இல்லாமல் அழிகின்றான் ஆனால் நடுவில் வருவது தான் ஆட்டம் என்பேன் அப்பனே!!

ஆனால் மனிதனால் ஒன்றும் செய்ய முடியாது ஏன் என்று கூட நீங்கள் எதை என்று அறியாமலே அனைத்திற்கும் காரணம் இறைவனே என்பேன்!!!!

அப்பனே அதனால் இறைவனை நேசித்து நேசித்து பழக அதாவது வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே இறைவனே அனைத்தும் செய்வான் அப்பனே!!!

அப்பனே இதை என்று அறிய ஒவ்வொரு மந்திரத்திற்கும் ஒவ்வொரு ஒளியின் தன்மை அப்பனே பதிந்திருக்கின்றது என்பேன் அப்பனே!!!!
அவ் அணுவானது அழிக்கும் திறன் ஒவ்வொரு மந்திரத்திற்கும் உள்ளது என்பேன் அப்பனே அதை வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன்!!!

அப்பனே இதையன்றி கூற அப்பனே.... ஒருவனுக்கு திடீரென்று அப்பனே பின் அணுவானது அப்பனே பின் பெரிதாகும் என்பேன் அப்பனே!!! அதனால் கஷ்டங்கள் சூழ்ந்து கொள்ளும் என்பேன் அப்பனே!!!

ஆனால் அப்பனே சில மந்திரங்களை அப்பனே உச்சரித்துக் கொண்டு இருந்தாலே அப்பனே அவ் அணுவானதை சிறிது படுத்தி விடலாம் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே பல ஹோமங்கள் செய்து அவ் அணுவை சிறிதாக்குகின்றார்கள் அப்பனே!!!! இதுவும் யாரும் அறிந்திருக்கவில்லை மகன்களே!!!!!

அப்பனே ஆனால் ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அனைத்து கிரகங்களும் அவ் அணுவில் தான் ஒளிந்துள்ளது!!!

அப்பனே அவை மட்டுமில்லாமல் அவ் மந்திரங்கள் எங்கு கூற வேண்டும் என்பதை அதாவது எங்கு? ஒளிக்கற்றை படியவில்லையோ அங்கு கூறினால் தான் சிறப்பு என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே முன்னோர்கள் சரியாக ஞானிகள் அதாவது ரிஷிமார்கள் இவ்விடத்தில் செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை தீர்மானித்து விட்டார்கள் ஆனால் இன்றளவில் எங்கெங்கோ செய்கின்றார்கள் ஒன்றும் பலிப்பதில்லை!!!!

அப்பனே நலமாகவே நலமாகவே உண்டு உண்டு ஏற்றங்கள் அப்பனே கவலைகள் இல்லை அப்பனே உங்களை யான் இன்னும் இழுத்துச் செல்வேன் அப்பனே... நலமாகவே!!!

அதனால் கவலைகள் கொள்ள தேவையில்லை அப்பனே நாளைய பொழுதிலும் உரைக்கின்றேன் அப்பனே ஆசிகள் ஆசிகள்!!!!

பஞ்சவடி குருநாதரின்   விஞ்ஞான வாக்கு முற்றிற்று!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

Tuesday 22 November 2022

சித்தன் அருள் - 1224 - அன்புடன் அகத்தியர் - சபரிநாதன் - 3




அய்யப்பனும் அகத்தியரும் அடியவரும் பாகம் 3

இவையென்று நலமாக நலமாக ஆனாலும் ஆனாலும் வயது முதிர்ந்தடைந்து விட்டது அடைந்து விட்டது இவ்வாறு என்பதையும் கூட ஒரு முதியவன் எந்தனுக்கு மனதில் நுழைந்தவாறு இவ்வாறு என்பதைக் கூட பல

பின் மனதில் நினைத்துக் கொண்டாய்!!! பின் ஓர் முதியவன் இவ்வாறு என்பதை கூட பல இவ்வாறு நன்று உள்ளதாய் நல்லதை செய்வேன் என்று சொன்னான்!!!

ஆனாலும் அதை கேட்டிட்டு யானும்...வந்திட்டேன்!!! 

எந்தனுக்கு நன்மைகளை செய்யவில்லை என்று கூட!!! 

யார் அந்த முதியவன் என்று கூட.....

உடனே வந்தேனப்பா!!!!( அகத்தியர்) யான் தான் இங்கு!!!

இவையன்றி கூற அப்பனே இதையென்று அறியாத அளவிற்கு  அறியாத அளவிற்கு உண்மை நிலை மலர்ந்தது!!! இவை என்று கூட!!! 

நீதான் எந்தனுக்கு யான் உதவிகள் செய்கின்றேன் என்று கூறி விட்டாய்!!!

ஆனாலும் உதவிகள் செய்யவில்லை என்று கூற!!

ஆனாலும் எந்தனுக்கும் மிகுந்த கோபங்கள் இவ்வாறு என்பதையும் கூட!!

இவை என்பதை கூட ஆனால்!! நீ எவ்வாறு என்பதையும் கூட .....நண்பா!!!!!! என்று அழைத்தாயா???? என்று யான்(அகத்தியர்) கேட்டேன்!!

யான் அழைக்கவில்லையே!! என்று நீ கூறிவிட்டாய்!!!

ஆனாலும் சரி !!!இவ்வாறு என்பதையும் கூட நீ எப்பொழுது அழைக்கின்றாயோ!!! அப்பொழுது நிச்சயம் வருவான் என்பதை கூட!!

ஆனாலும் இவையன்றி கூற நீயும் கூறிவிட்டாய்!!சரி!!! நீயும் நல்லோருக்கு உதவிகள் செய்வோம் யானும் எவ்வாறு என்பதையும் கூட இனி மேலும் வயதான காலத்தில் ஏதாவது செய்கின்றேன் எவை என்று கூற நீ ஏன் இங்கேயே இருக்கக் கூடாது??? என்று கூறி விட்டாய்!!!! நீயும் என்னுடன் இருந்து விடு !!இருவரும் நல்லது செய்வோம் என்று நீ கூறிவிட்டாய்!!!!

இவையன்றி கூற ஆனாலும் சிறிது யானே யோசித்தேன்!!! இவையன்றி கூற ஆனாலும் இதனையென்றும் கூற... சரி!!!! இருக்கின்றேன் என்று கூறிவிட்டேன்!!!!

இவையன்றி கூற இப்பொழுது எவை என்று கூற புரிகின்றதா??? அப்பனே!!!!!

உன் சொப்பனத்திலும் இனி மேலும் காட்டுவேன்!!!

இவையன்றி கூற ஆனாலும் இவையன்றி கூறும் பொழுது கூட ஆனாலும் பின் கடைசியில் ஓர் முறை பார்ப்போமே என்று கூட!!!  """ நண்பா!!!!! என்று கூறிவிட்டாய்!!!!

ஆனாலும் வந்து விட்டான் சபரிநாதன்!!!!!

இவையன்றி கூற ஆனாலும் பின் உன்னை காணாமல் எவ்வாறு என்பதையும் கூட... பின் கண்ணீர் மல்கியது....இவையன்றி கூட சபரியை கட்டி அணைத்து கொண்டாய்!!! 

ஆனாலும் யானும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் உண்மை நிலையை உந்தனுக்கு சொல்லிவிட்டேன் இவையென்று கூட!!!!!

இவந்தானப்பா!!! ....எவையன்றி கூற...... """"""" கலியுக வரதன்!!!!! ஐயப்பன் என்று""""......!!!!!!! கூறிவிட்டேன்!!!!

இவன்தான் அப்பனே அலைந்து கொண்டிருப்பதை கூட!!! 

ஆனாலும் நீ கூறிவிட்டாய் அழுதாய்!! அழுது புலம்பினாய்!!! பக்கத்திலே இருக்க எவ்வாறு என்பதை கூட நலன்கள் நலன்கள் இவ்வாறு என்பதையும் கூட என்னால் காணவில்லையே என்று கூட நீயும் கட்டி பிடித்துக் கொண்டு அழுது புலம்பினாய்!!! ( ஐயப்பன் அருகில் இருந்ததை கூட உணர முடியாமல் உணர்ந்து பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று)

ஐயனே ஐயப்பா!!!!! எவ்வாறு என்பதையும் கூட.  நீ என் கூடவே.... இருந்து விடு என்று கூட!!!

ஆனாலும் சபரிநாதனும் இல்லை!!! இவையென்று கூற ஆனாலும் என்னிடத்திற்கே யான் செல்கின்றேன்!!!! ஆனாலும் நீயோ இங்கேயே இரு!!! நல் எவை என்று கூற அகத்தியனும் கடை நாள் வரையிலும் இங்கேயே தங்கி பல வழிகளையும் உந்தனுக்கு காட்டுவான்.. என்று கூற!!!

ஆனாலும் இவையன்றி கூட அடம் பிடித்தாய் நீ!!!

எவ்வாறு என்பதையும் கூட ஆனாலும் இவையன்றி கூட யான் எனது எதனை என்றும் கூட ஒரு பிறப்பை இவ்வாறு என்பதையும் கூட உந்தனுக்கு முக்தியே ஆகட்டும் என்று கூட..பின் இவையென்றும் நல்விதமாகவே அய்யனும் சொல்லிவிட்டான்!!!!

ஆனாலும் இவையன்றி கூற எந்தனுக்கு முக்திகள் வேண்டாம்....பின் எவையென்று கூட எதனையென்றும் அறியாமல் உணர்வதற்குள் எல்லை இல்லா எந்தனுக்கு முக்திகள் கிட்டி விட்டால்... உந்தனை நேரடியாக காண முடியாது!!!

அதனால் எந்தனுக்கு மறுபிறவி வேண்டும் என்பதை கூட பின் சபரிநாதனிடமே நீயே கேட்டுக் கொண்டாய்!!!

பின் வேண்டாமப்பா பிறவிகள்!!!! பிறவிகள் எடுத்து பின் இக்கலியுகத்தில் பல கஷ்டங்கள் பட வேண்டியதற்கு... வேண்டாம் என்னிடத்திலே இருந்து கொள்!!! என்று கூட

இல்லை!!!  இல்லை!! எந்தனுக்கு மனித ஜென்மம் வேண்டும்!!! வேண்டும் இச்ஜென்மத்தில் கூட நண்பர்களாக வாழவில்லை!!! அடுத்த ஜென்மத்தில் ஆவது நண்பர்களாக வாழ வேண்டும் என்று கூறிவிட்டாய்!!!!

எவையென்று இதனையுமென்று நீ கூற!!!! அவந்தனும் சரியப்பா!!!!

எவையென்று கூற அடுத்த ஜென்மம் எடுத்து என்னிடத்திலே இருந்து கொள்வாய்!!! எவையென்று கூற உன் நண்பனாகவே இருக்கின்றேன்!!!! நீயும் என்னை நண்பனாகவே அழைத்து வரலாம் என்று!!!! 

அதனால் அப்பனே எவை என்று கூட நீ போகாவிடிலும் (சபரிமலை) அப்பனே அவனே உன்னை அழைத்துச் செல்வான் என்பேன்!!!!!

அப்பனே இவையன்றி கூட அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே போகாவிடிலும் அவன் உன்னை தேடி வருவான் என்பேன்!!!!

அப்பனே இவை போன்று அப்பனே நல்விதமாக அதனால் தான் இக்காட்சிகள்( சம்பவங்கள்) அனைத்தும் இங்கே தான் நடைபெற்றது என்பேன்!!!( தீர்த்தமலை அடிவாரத்தில் இருக்கும் அகத்தியர் ஆசிரமம்)

அப்பனே இவையன்றி கூட அப்பனே போதாததற்கு அப்பனே ஆனாலும் நன்விதமாக புரிந்து கொண்டாய் அப்பனே!!!

இவை என்று கூடஅப்பனே யானும் சொன்னேன் உந்தனுக்கு இன்னும் இருப்புகள் எவ்வாறு என்பதையும் கூட பின் அடுத்த பிறவி என்று கூறி விட்டான் இவை என்று கூற!!!

ஆனாலும் நீ தான் இருக்கின்றாய் நான் உன்னை எப்படி பார்ப்பது என்று கூட!!!!

ஆனாலும் யானும்( அகத்தியர்) சொன்னேன் இங்கே( தீர்த்தமலை அகத்தியர் ஆசிரமம்) என்னை பார்ப்பாய் என்று!!!! அடுத்த பிறவியை எடுத்தாலும் கூட!!

அப்பனே இவையன்றி கூற அப்பனே!! ஆனாலும் போனது எவ்வாறு என்பதையும் கூட மலைகள் ஆனாலும் அவ் சபரிநாதனும் இங்கேயே காட்சி அளிப்பான் என்பது மெய்யப்பா!!!! 

அப்பனே நல்விதமாக காலங்கள் எவை என்று கூட சென்று கொண்டே இருக்கும் பொழுது அப்பனே இவை என்று கூட நீயும் என்னிடத்தில் கூறி விட்டாய்!!!

எந்தனுக்கு இன்னும் ஆயுட்காலம் குறைவே!!! அதனால் பல ஆலயங்களுக்கு ஏறி பல பல உண்மைகளை மனிதர்களுக்கு சொல்லி பல பாடல்களையும் பாடிட்டு வர வேண்டும் கடைசியில் இங்கேதான் என் உயிர் பிரிய வேண்டும் பின் மறுபிறவியும் இங்கே என்று கூட!!!!

எதனையென்று அதனால் பின் கடைசி காலங்களில் பின் பரதேசி போல் பல இடங்களுக்கு சென்று பல பாடல்களை நீ பாடினாய் என்பேன்!!!!

இவையன்றி கூற அப்பனே இவையென்றும் நல்விதமாக ஆனாலும் இதனையென்றும் குறிப்பிடாமல் கடைசியிலும் இங்கே தான் வந்து விட்டாய் அப்பனே!!!! உன் உடம்பும் இங்கே தான் மாண்டது என்பேன்!!!!!( முற்பிறவியில்) 

{ தற்சமயம் தீர்த்தமலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் அகத்தியர் ஆசிரமம் முற்பிறவியில் இந்த அடியவர் சமாதி அடைந்த இடம்!!! ஐயப்பனையும் குருநாதர் அகத்தியரையும் சந்தித்த இடம்!!!! இந்த ஜென்மத்தில் அந்த அடியவருக்கு இந்த அதிசயங்கள் நடந்த இடம் தானமாக கிடைக்கப்பெற்று அந்த நிலத்தில் அகத்தியர் ஆசிரமம் அமைத்திருக்கின்றார்}

ஆனாலும் இவையன்றி கூட திரும்பவும் இங்கே தான்(இப்பிறவியில்) வந்துவிட்டாய் நீ!!!!

அப்பனே எவையென்று கூற அதனால் இவையன்றி கூற அப்பனே நல் விதமாக யானும் உன்னை ஆசிர்வதித்து விட்டேன்!!! எவையன்றி கூற பின் அடுத்த பிறப்பிலும் நல்ல விதமாக உண்டு என்பது உண்டு என்பது பின் அனைத்தும் பின் திருமணம் பிள்ளைகள் பெற்று இவன் விருப்பப்படியே வாழ்ந்து பின் எவை அன்றி கூட என்னையும் பார்த்து அனைத்து தெய்வங்களையும் பார்த்து தரிசனமும் உண்டு என்பேன்!!!!

அப்பனே எவை என்று கூட பிறவியின் ரகசியத்தை சொல்லி விட்டேன்!!! அப்பனே

இன்னும் பிற பிறவிகளில் இன்னும் ரகசியங்கள் உண்டு.  (தற்போது ஒரு பிறவியின் ரகசியத்தை மட்டும் இப்பொழுது உரைத்திருந்தார்) அப்பனே ஒவ்வொன்றாக சொல்கின்றேன் அப்பனே!!!

அதனால் அப்பனே உன் நிலைமைகள் எந்தனுக்கு தெரிந்து விட்டது அப்பனே எவை என்று கூட நிச்சயமாய் எதைச் செய்ய வேண்டும் என்பதை கூட உன் பிள்ளைகளை தன் பிள்ளைகள் போல் எண்ணி சபரிநாதனே பார்த்துக் கொள்வான்........ விட்டுடு!!!! தன் நண்பனின் பிள்ளைகளை அவந்தனே பார்த்துக் கொள்வான் கவலைகள் இல்லை!!!!

அப்பனே நலமாக நலமாக உண்டு என்பேன் அப்பனே நல்விதமாக யானும் பலமுறை இங்கு வந்து தங்கி செல்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே இவை என்று கூற அப்பனே இது என்னுடைய மலையப்பா!!!!! (தீர்த்தமலை) 

அப்பனே இவையன்றி கூற இங்கே அப்பனே பல அதிசயங்கள் நடந்தேறும் என்பேன் அப்பனே கண்ணுக்கு புலப்படாத வகையிலும் பல சித்தர்களும் வருவார்களப்பா!!!! 

அப்பனே புதைந்துள்ளது என்பேன் அப்பனே மலை முழுவதும் ரகசியங்கள் !!!!! அப்பனே இவ்வாறு என்பதை கூட இவ்வாறு இருந்து அப்பனே நல்விதமாக முன்னேற்றங்கள் எவ்வாறு என்பதையும் கூட யானும் அப்பனே வருவேனப்பா!!!!!

இன்னும் எவ்வாறு என்பதையும் கூட பல பல ரூபங்களில் அப்பனே!!!!

எவை என்பதை கூட என் நிலையானதில் அப்பனே இங்கு பல முறை கூட வந்து தங்கினேன் என்பேன் அப்பனே!!!!

இவையன்றி கூற அப்பனே  நல் விதமாக   இன்னும் அப்பனே இங்கேதான் நான் தங்கப் போகின்றேன் போதுமா?!! உந்தனுக்கு!!!

இன்னும் வருங்காலங்களில் அப்பனே சிறப்புக்கள் மிகும் என்பேன் அப்பனே!!!!!

அப்பனே இவையன்றி கூட அப்பனே தானாக வரவில்லை அப்பனே!!!!!! எவை என்று கூட  """ யானாகவே வந்தேன்"""!!!!!! அப்பனே!!!!!

அப்பனே பார்!!!!! அப்பனே எவை என்று கூட என்னை பார்த்துக் கொண்டே இரு!!!( ஆஸ்ரமத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள அகத்திய பெருமான் திருவுருவச் சிலை) 

திடீரென்று!!! உண்மை ரூபமாக காட்சி அளித்து விடுவேன் யான்!!!!!!!

அப்பனே இவ் மலைக்கு பல சித்தர்களும் வருவார்கள் அப்பனே வந்து திரிவார்களப்பா!!!!

முருகன்!! / கந்தன்!!! இவையன்றி கூற..... இவர்களுக்கும் வித்தியாசம் உண்டு என்னவென்று நீ கூறு!!

(அடியவர் தந்த பதில் முருகன் என்பது மகா சித்தன் என்று அடியேன் நினைக்கின்றேன் கந்தன் என்பது முருகன் என்பதும் பல்வேறு ரூபங்கள் என்று நினைக்கின்றேன் )

அப்பனே இவையன்றி கூற(குருநாதர் நகைப்புடன்) சரியான பதில் இதுவா???

ஆனாலும் ஒருவனே!!!!!( கந்தனும் முருகனும்) 

அப்பனே நலமாக கூறிவிட்டேன் இவையன்றி கூற நீ என்ன கேட்கப் போகின்றாய்? என்பதை கூட யான் அறிவேன்!!!!

திரும்பவும் கேட்கின்றேன் என்ன வேண்டும்???? என்பதை நீயே கூறு!!!

குருநாதா அடியேன் நான் தங்களுடைய குழந்தை இந்த குழந்தை இடம் வந்து என்னுடன் நீங்கள் உரையாடியது பெரும் பாக்கியம் எந்தனுக்கு!!! என்னைப் பற்றி உங்களுக்கு தெரியும்!!! இந்த ஆசிரமத்தை கூட நான் உலக நன்மைக்காக பொதுமக்கள் இங்கு வந்து பயன் பெற வேண்டும் பக்தி மயமாக வேண்டும் அதற்காக உங்களுடைய அனுக்கிரகம் வேண்டும்!!!என்னை நீங்கள் பார்த்துக் கொள்கின்றீர்கள்!!! என்னுடைய நண்பன் ஐயப்பன் பார்த்துக் கொள்வார் என்று எனக்கு சத்தியமாக தெரியும்!!

இந்த உலகம் ஷேமமாக இருக்க வேண்டும் இந்த ஊரும் இந்த ஊரை சுற்றியுள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் இந்த ஆசிரமத்திற்காக பாடுபட்டு கொண்டிருக்கக் கூடிய இங்குள்ள அனைவரும் அனைவருடைய குடும்பமும் இங்கு பணி செய்து கொண்டிருக்கும் குழந்தைகளுக்கும் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அவர்களுக்கு நல்வாழ்க்கை கிடைக்க வேண்டும்!!!

எனக்கென்று சொந்தமாக நீங்கள் தான் இருக்கின்றீர்களே என்னையும் என் குடும்பத்தையும் பார்த்துக் கொள்வதற்கு நீங்களும் ஐயப்பனும் பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் நான் எனக்கென்று தனியாக என்ன கேட்க வேண்டும்??

அப்பனே நலமாக உண்டு என்பேன் அப்பனே!!!!  இவையென்று கூற யான் நலமாகவே அனைத்தையும் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே!!! சில இயற்கையான உணவுகளை உட்கொண்டுவா நீ போதுமானது!!! அப்பனே நல்விதமாக மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன்.... அப்பனே நல்விதமாக சித்தர்களும் வருவார்களப்பா!!!!

அப்பனே ஒவ்வொரு சித்தர்களும் நல்விதமாகவே வந்திட்டு தங்கிட்டுத்தான் செல்வார்கள் என்பேன் அப்பனே கவலைகள் இல்லை!!!! இவர்கள் சித்தர்கள் வரும்பொழுது அப்பனே இன்னும் பரிசுத்தமான அப்பனே சில சில கர்ம வினைகள் இங்கு வந்தால் அப்பனே அகலும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் கர்மா உள்ளவன் இங்கு வர முடியாதப்பா!!!! இதுதான் உண்மை என்பேன்!!!!ஆனாலும் நல் விதமாக பின் வந்துவிட்டால் அவந்தன் கர்மா அழிந்து விட்டு!!! சித்தர்களின் ஆசிகளும் தொடர்புகளும் கிடைக்கும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே வரும் காலத்தில் அப்பனே எவை என்று கூட சித்தர்களின் தரிசனங்கள் எவை என்று கூட சித்தர்களை உணராதவர்கள் பலர் வந்து கொண்டிருப்பார்கள் அதனால் அவர்களுக்கு துன்பங்கள் எவ்வகையில் செல்வது என்பேன்!!!

எவை என்றும் இதனையென்றும் அறியாத அளவிற்கும் மனிதர்களைக் கூட அழைத்துக் கொண்டே இருக்கின்றோம் யாங்கள் வாருங்கள் வாருங்கள் என்றும் கூட!!!

ஆனாலும் அவந்தன் கர்மா நிலைகள் அப்படி இருக்கின்றது அப்பனே!!! 
எது எவையென்று கூற ஆனாலும் அப்படியும் மீறி வந்து விட்டது வந்துவிட்டது போல வந்து விட்டால் அப்பனே கர்மாக்கள் எவை என்று கூற பின் அதனையும் பின் எவ்வாறு தொலைப்பது என்பதையும் கூட யாங்கள் வழி காண்பிப்போம்!!!

ஆனாலும் கஷ்டங்கள் நிச்சயம் விரைந்து ஓடும் என்பேன் அப்பனே பின் பிறவி தோறும் அப்பனே மக்கள் எவை என்று கூட தெரியாமல் பிறந்து பிறந்து கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து செல்கின்ற பொழுது யாங்களும் கூட மனதில் சில கஷ்டங்கள் ஏற்படுத்திக் கொள்கின்றோம் எங்களுக்கு மனது கஷ்டமாகிவிடுகின்றது இவந்தனுக்கு இவ்வாறா!!! என்பதை கூட!!!!

ஆனாலும் அப்பனே என்னை அடைந்து விட்டால் அப்பனே நிச்சயம் அவந்தன் நல்விதமாக மாறுவான்!!

செல்வாக்கு அடைவான் !!!அப்பனே இவை என்று கூறாத அளவிற்கும் கூட கர்மத்தை நீக்குவேன் அதனால் அப்பனே இவை என்று கூட கர்மத்தை நீக்கும் பொழுது சில கஷ்டங்கள் வரலாம் அப்பனே அப்பொழுது கூட அகத்தியன்!! அகத்தியன்!! என்று சொல்லிவிட்டால் அப்பனே அவன் நிலைமைகள் மாறும்!!!

அப்பனே இதனால்தான் அப்பனே இவை என்று கூட சித்தர்கள் ஆசிகள் இல்லாமல் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் இறைவனை நேரடியாக காண முடியாது என்பேன்!!!

ஆனாலும் மனிதர்களோ முட்டாள் மனிதர்களோ எவை என்று கூட எதனை என்றும் சிந்திக்க கூட தெரியாமல் அப்பனே நேரடியாக இறைவனை காண்பது என்பது அவ்வளவு சுலபமில்லை என்பேன் அப்பனே!!!

அதனால் இறைவனை காண காண எவ்வாறு என்பதையும் கூட துன்பங்களே வருகின்றது என்பது தான் மனிதனின் நினைப்பு என்பதை கூட யான் தெரிந்து கொண்டேன்!! அதனால் தான் அப்பனே பின் எவ்வாறு என்பதையும் கூட எங்களைப் போன்ற சித்தர்களை அணுகினால் மட்டுமே இறைவன் தரிசனம் யாங்கள் காண்பிப்போம் அப்பனே!!

தெரிந்து கொள்!!! அப்பனே இதனால் வந்து விட்டாய் என்னை நோக்கி!!! அப்பனே இவையன்றி கூற நல்விதமாக இன்னும் பல தரிசனங்கள் உங்களுக்கு காண்பிப்பேன் என்பேன் அப்பனே குறைகள் இல்லை!!!!!

குருவிடம் அடியவர் ஒரு வேண்டுகோளை வைக்கின்றார்!!!

குருநாதா நாங்கள் அனைவரும் உங்களுடைய குழந்தைகள் நாங்கள் அனைவரும் எந்த விதமான வேதங்களையும் படிக்கவில்லை எங்களுக்கு எதுவும் தெரியாது எங்களுக்கு என்ன தெரிகின்றதோ அதை மட்டும் உபச்சாரமாக செய்கின்றோம்!!!

குருநாதர் குறுக்கிட்டு... அப்பனே இவை என்று கூற ஏதும் தெரியாது என்று நினைத்து விடாதே அப்பனே உந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்பேன் அப்பனே!!! அப்பனே ஒன்றைச் சொல்லி விடுகின்றேன் அப்பனே இவையன்றி கூற ஒரு பாடலை பாடு!!!! யானும் கேட்கின்றேன்!!!

குருநாதர் அடியவரிடம் ஒரு பாடலை பாடு என்று கேட்க அடியவரும் பாடலை பாடத் தொடங்குகின்றார்!!!!!

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி!!!!!

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி!!!!!

சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்
சின்னஞ்சிறு பெண் போலே!!!!!!!!!!!!!!!!!!!

பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது. 

 சின்னஞ்சிறு பெண் போலே !!!  சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்!!!

மின்னலை போல் மேனி அன்னை சிவகாமி
இன்பமெல்லாம் தருவாள் எண்ணமெல்லாம் நிறைவாள்
பின்னல் சடை போட்டு பிச்சிப்பூ சூடிடுவாள்
பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்

பித்தனுக்கு இணையாக நர்த்தனமும் ஆடிடுவாள்!!!

சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீ துர்கை சிரித்திருப்பாள்!!!.
அம்ம்ம்ம்மா!!!!!!!!!!!!!!!!!! 

பாடி முடித்ததும் அடியவர் குருநாதரிடம் வேண்டுகிறார் 

குருநாதா!!!! அடியேன் செய்யும் உபச்சாரங்களில் ஏதாவது அபச்சாரமோ குற்றங்களோ குறைகளோ இருந்தால் இந்த குழந்தைகளை செமிக்கனும் மன்னிக்க வேண்டும் குருநாதா!!!

அப்பனே எவை என்று கூற அப்பனே நல்லவை என்பேன் அப்பனே!!!! இது இப்பொழுதும் மட்டும் கூட நீ பாடவில்லை என்பேன் அப்பனே முன் ஜென்மத்திலிருந்தே நீ பாடி கொண்டிருந்ததை யான் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே நல்மனதாக!!!!

எவை என்று கூட ஆனாலும் ஒரு உத்தரவை உந்தனுக்கு சொல்கின்றேன் உன்னால் முடியும் பொழுது அங்கு செல் அப்பனே இவையன்றி கூற அபிராமி திருக்கடையூர் சென்று ஒரு முறை பார் அன்னையை!!!!!

இவையன்றி கூற அப்பனே எவை என்றும் பின்னாளில் அப்பனே ஒரு முறை மலையனூர் சென்று வா( மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி)

அப்பனே எவை என்று கூற எதனால் என்பதை கூட அன்னை என்று நீ கூறி விட்டாய் அவர்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றார்கள்!!! அவர்களை சென்று பார்த்திட்டு வா!!!!

அப்பனே நலமாக நலமாக அப்பனே இத்தனை சொந்த பந்தங்களை வைத்துக் கொண்டு அப்பனே நீ ஒரு அப்பனே பின் நீயே யோசித்துக் கொள்!!!!!!!

அப்பனே நலமாக நலமாக எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலை புரிவதற்கும் அப்பனே இவ் பந்தங்கள் அப்பனே... எதை என்றும் இதை ஓதுபவனும்( ஜானகிராமன் ஐயா) ஓர் விதத்தில்.. பந்தம் அவைதனும் உந்தனுக்கு சொல்கின்றேன் வரும் காலங்களில்!!!! உந்தனுக்கே உணர்த்துவேன் என்பேன்!!

அடியவரின் மனைவிக்கு 

இவையென்று அம்மையே!!! சொல்கின்றேன் பின் நவராத்திரி எனும் நாள் வருகின்றது நவ தினங்கள் எவை என்றும் கூட அவ் நவதினங்களிலும் நிச்சயமாய் உன் இல்லத்தில் நவராத்திரி தினத்தில் பின் ஒவ்வொரு தேவியையும் வணங்கி வா நிச்சயம் ஒரு தேவி உன் இல்லத்திற்கு வருவாள் என்பேன்!!

அப்பனே எவை என்று கூட ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே இந்த உலகத்தில் நிலையானது ஏதுமில்லை என்று அப்பனே எதுவும் மாறி மாறி தான் வரும் என்பேன் அப்பனே!!!

சூரியன் எப்பொழுதுமே இருந்து விட்டால் என்ன பயன் அதற்கு?? சந்திரன் கூட எப்பொழுது எவை என்று கூட இருந்து விட்டால் என்ன பயன் அதற்கு??

துன்பம் கூட இருந்து விட்டால் என்ன பயன்?? அப்பனே இவை என்று கூட அப்பனே வாழ்க்கை இன்பமாகவே இருந்து விட்டால் என்ன பயன்?? அப்பனே கூறு!!! அப்பனே மாறி மாறி தான் வரும் என்பேன் கவலைகள் இல்லை!!

யானே இருக்கின்ற பொழுது... என்ன உந்தனுக்கு?? அதனால் தான் சொன்னேன் அப்பனே உந்தனுக்கு!!!

அப்பனே நலமாக நலமாக எவை என்று கூட அப்பனே நல்விதமாகவே உண்டு என்பேன் அப்பனே யான் இவைதன் உணர உணர அப்பனே அடிக்கடி நல்விதமாக நெல்லிக்கனியை எடுத்துக்கொண்டு வா!!

அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே மாதத்திற்கு இருமுறையாவது கடுக்காயை உபயோகித்துக்கொள்!!! 

அப்பனே இவை என்று கூட அப்பனே நல்விதமாக உன்னால் முடிந்தவரை பின் அப்பனே தேவ கனியான ஒரு எலுமிச்சையை நல் விதமாக ஒரு அம்மன் சன்னதியில் எவ்வாறு என்பதையும் கூட வைத்து அதனையும் பில் ஓர் பத்து மணி நேரங்கள் கடக்க அதனையும் அச்சாற்றுடன் கலந்து நீ உட்கொள்ள நன்று என்பேன்!!!

அப்பனே நலமாக நலமாக அப்பனே வாரத்திற்கு இருமுறையாவது நல்விதமாக துளசி இலைகளை பறித்து பருகி வா( துளசி தீர்த்தம்)

அப்பனே இவையன்றி கூற அப்பனே மாதத்திற்கு இவை என்று கூற இரு நாட்கள் அப்பனே துத்தி இலை எனும் மூலிகையையும் உட்கொண்டு வா!!!

அப்பனே இவையென்றும் உணராமல் பின் அப்பனே நல் விதமாக பின் அறிந்த அளவிற்கும் கூட நல்விதமாக கீரை வகைகளை உட்கொள்ள நன்று என்பேன்!!!

இதனையும் என்று அறிவதற்குள் அப்பனே ஆனை நெருஞ்சில் எனும் மூலிகையும் உண்டு அதனையும் எடுத்துக் கொள்!!!!

அப்பனே இவை என்று கூட இதனை சிறிது இலைகளைப் பறித்து மாதத்திற்கு ஒரு முறை உண்டுவா போதுமானது!!!

அப்பனே இவையன்று கூட இன்னும் ஆவாரம்பூ எனும் மூலிகைகளையும் நல் விதமாக சாற்றை எவ்வாறு என்பதையும் கூட அதனையும் சூடேற்றி அப்பனே அதையும் உண்டு வா!!!!

அப்பனே நலமாக நலமாக அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் கூறிய அளவிற்கும் கூட முற்பிறவியையும் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே இன்னும் வாக்குகள் உண்டு என்பேன் அப்பனே கவலைகள் இல்லை நல்முறையாக அப்பனே எவை என்றும் எதனை என்றும் கூற அப்பனே இதனையும் என்று அறியாமல் எந்தனுக்கு நல்விதமாக அப்பனே பின் யான் பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன்!!!!

அன்பு மட்டும் பிரதானமானது!!! என்பேன் அப்பனே!!! அவை செய்தாலே போதும் அன்பை மட்டும் காட்டினால் போதும் அப்பனே எவை என்று கூற நல் மனதாக இருந்து பின் எதை செய்தாலும் யான் ஏற்றுக்கொள்வேன் அப்பனே!!!

அடியவர் இடையில் பொதுவாக கேட்ட கேள்விக்கு குருநாதர் உரைத்த பதில்கள்!!!!

குருவே தோல் வியாதிக்கு சிகிச்சை என்ன செய்ய வேண்டும்???

அப்பனே நல்முறையாக எலுமிச்சைச் சாறு போதும் என்பேன். களிமண் போதும் என்பேன் உபயோகத்துக் கொள்ளச் சொல்!!!

அப்பனே இவை அறிந்து கூட அப்பனே தோல் நோய் எவ்வாறு என்பதையும் கூட இதற்கு தகுந்தவாறு அப்பனே புற்று மண் என்பேன் அப்பனே!!!

இவைதான் பல பல ரூபங்களில் எவ்வாறு என்பதையும் கூட பல வருடங்களில் வாழ்ந்த முன்னோர்கள் இதைத்தான் செய்வார்கள் என்பேன்.!!!

அப்பனே நலமாக சொல்லிவிட்டேன் எவை என்று கூட அப்பனே நலமாக உண்டு ஆசிர்வாதங்கள் என்பேன் அப்பனே குறைகள் இல்லை அப்பனே 

குருவே இந்த கொரோனா காலகட்டத்தில் என்னால் இந்த ஆசிரமத்தை சரியாக கவனிக்க முடியவில்லை அதனால் தங்களிடம் மன்னிப்பு கூறுகின்றேன் தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள்

அப்பனே யான் அவையெல்லாம் நேசிப்பதில்லை அப்பனே சித்தர்களே இவை போன்று தான் எதையும் எதிர்பார்க்காதவர்கள் என்பேன்!!!! அப்பனே நல்விதமாகவே 

அன்பை மட்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று குறிக்கோளோடு வாழ்ந்து விட்டால் போதுமானது என்பேன் அப்பனே!!!

யாங்கள் எதுவும் விரும்புவதில்லை யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் பல வாக்குகளிலும் !!

அப்பனே அன்பு தான்!!! அன்பு தான்!!! பிரதானமானது!!!!

அப்பனே நலமாக நலமாக இவை என்று கூற அப்பனே நல்லவை எவை என்று கூற முன் ஜென்மத்திலே அழைத்து விட்டாய் யாமும் சேர்ந்து நல்லதை செய்து விடுவோம் என்று கூட அதனால் தான் அப்பனே யானும் இங்கேயே இருக்கின்றேன் அப்பனே வரும் என்பேன் அடிக்கடி இச் சுவடியும் இங்கு!!!!

ஆசிரமத்தில் பணிபுரியும் அடியவருக்கு குருநாதர் உரைத்த ஆசீர்வாதம்!!!

அப்பனே ஆசிர்வாதங்கள் அப்பனே எவை என்றும் கூட மனிதர்கள் இவ்வுலகத்தில் நிலையில்லாததை கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் ஆனாலும் அப்பனே எப்படியாவது இவ்வுலகத்தில் வாழ வேண்டும் என்று கூட மனதில்!!

ஆனாலும் அப்பனே இறையருள்கள் பெற்றுக் கொண்டே வந்திருந்தால் அப்பனே அவையெல்லாம் நலமே ஆகும் என்பேன் அப்பனே!!!

எந்தனுக்கு சேவை எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நலமாகவே உண்டு என்பேன் அப்பனே யான் கூட அப்பனே சில தினங்களுக்கு முன்பு இங்கே கூட உணவருந்தினேன் அப்பனே!!! அப்படி இருக்க யான் என்ன? விட்டு விடுவேனா என்ன??? அப்பனே!!!!

அப்பனே நலமாகவே நலமாகவே கூறிவிட்டேன் அப்பனே இதை என்றும் கூற அப்பனே நலமாகவே உண்டு என்பேன் அப்பனே ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன்!!! அனைவருக்கும் கூட அப்பனே!!!!

மனிதன் என்றால் அப்பனே!! துன்பம் வரும்!! இவையன்றி கூற யானும் பல பல காலங்களில் பார்த்து விட்டேன் அப்பனே 

இறைவனே இப்புவியில் பிறந்தாலும் கஷ்டமே!!! என்று பல மனிதர்களுக்கும் சொல்லிவிட்டேன் அப்பனே!!! 

ராமனை எடுத்துக்கொள்!! அப்பனே!!! கிருஷ்ணனை எடுத்துக்கொள்!! அப்பனே 

ஏன் ஈசனையே எடுத்துக்கொள் அப்பனே!! கந்தனை எடுத்துக்கொள்!!! ஆனாலும் மனித பிறப்புக்கள் அப்பனே கடந்தாக வேண்டும் ஆனாலும் அப்பனே சித்தர்களை நோக்கி வந்து விட்டால் அப்பனே யாங்கள் பார்த்துக் கொள்வோம் அப்பனே இவையன்றி கூற 

அதனால் தான் அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே 

நலமாகவே இல்லை பிறவிகள்!! அப்பனே இல்லை பிறவிகள் அனைவருக்கும் கூட யான்
சொல்லி விட்டேன்!!! 

எவையென்றும் கூற இன்னும் பல ரூபங்களில் யான் இங்கு சுற்றி வருவேன் அப்பனே கவலைகள் இல்லை அனைவரின் வாழ்க்கையையும் யான் பார்த்துக் கொள்வேனென்றால் நிச்சயம் பார்த்து கொள்வேன் அப்பனே!!! எவையென்று கூட...பல கர்மாக்களும் அப்பனே யானும் நீக்க வேண்டும் அவை என்று கூட பலவிதிகளிலும் பல துன்பங்கள் இருக்கின்ற பொழுதிலும் அதையும் பிரம்மாவிடம் எடுத்து கூறி நீக்கிவிட வேண்டும் என்பதை கூட அப்பனே அதனால்தான் அப்பனே யான் பொறுத்திரு!! சிறிது காலம் பொறுத்திரு!!! என்றெல்லாம் யான் கூறிக் கொண்டே வருகின்றேன் மக்களுக்கு!!!

ஆனாலும் அதைக் கூட தெரியாத மனிதர்கள் கூட அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பின் அதை நோக்கி போய்க்கொண்டு பின் அவை மூலம்தான் அழிவுகள் என்பதை தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றார்கள்!!!

பொறுத்திரு!!! என்று சொன்னால் அப்பனே யானே அனைத்தும் செய்து விடுவேன் என்று தான் அர்த்தம்!!! அப்பனே!!!

இவை என்றும் கூற நல்முறையான ஆசிகள் ஆசிகள் உண்டு என்பேன் அப்பனே இன்னும் பல முனிவர்களும் இங்கு வந்து வாக்குகள் செப்புவார்கள் என்பேன் அப்பனே குறைகள் இல்லை நலமாக நலமாக உண்டு உண்டு ஆசிர்வாதங்கள் அப்பனே!!!

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!!

ஐயப்பனும் ஏழுமலையானும் அண்ணாமலையாரும் அகத்தியரும் திருவிளையாடல் புரிந்து நல்லாசிகள் பெற்று முற்பிறவிலும் சரி இப்பிறவிலும் சரி இறை அருள்களை பலமாக பெற்று வாழ்ந்து வரும் அந்த அடியவர்!!!

அரூர் தீர்த்தமலை அடிவாரத்தில் அகத்தியர் ஆசிரமத்தை அமைத்து வணங்கி வழிபட்டுக் கொண்டு வருகின்றார்!!!

ஸ்ரீ குருமண்டலம் அகத்தியர் ஆசிரமம் தீர்த்தமலை. அரூர் திருவண்ணாமலை செல்லும் சாலை தமிழ்நாடு.

முற்பிறவிலும் பாடி துதித்து வணங்கி வந்த அவர் இப்பிறவியிலும் இறை அருளால் இறை பக்தி பாடல்களை பாடும் பிரபல பாடகர்!!!!

இவர் பாடிய பக்தி பாடல்கள் ஏராளம் ஐயப்பன் , அண்ணாமலையார்,  ஏழுமலையான், தேவி, என அனைத்து தெய்வங்கள் பக்தி பாடல்களை பாடி பக்தர்களை பக்தி மார்க்கத்தில் தன்னுடைய சங்கீத திறமையாலும் பாடல்களாலும் நல்வழிப்படுத்தி சென்று கொண்டிருக்கின்றார்!!!

நம் குருநாதர் அகத்திய பெருமான் மீதும் பல பக்தி பாடல்களை மனம் உருகி பாடி வெளியிட்டு இருக்கின்றார்!!!!

ஓம் அகஸ்திய நாதனே!!! 

அகத்தியர் ஆரத்தி பாடல் சித்தர் நாயகன்... என அகத்தியர் மேல் அன்பு கொண்டு இவர் பாடிய பாடல்கள் அகத்தியர் பக்தர்களை பரவச ப்படுத்தும்!!!!

அவர் இன்னும் நம் குருநாதர் அகத்தியரின் திருவருளால் வாழ்வாங்கு வாழ்ந்து பல பக்தி பாடல்களை பாடி மென்மேலும் பக்தர்களை பக்தி வழிக்கு அழைத்துச்சென்ற செல்ல குருநாதரின் அன்பினை பெற்று வழியொற்றி  நடந்து வரும் அந்த அடியவருக்கு வாழ்த்துக்களை கூறி வணங்குகின்றோம்!!!!

அந்த அடியவர் பெயர் 

குரு மண்டலம் திரு வீரமணிதாசன்!!!!!

அவர் நம் குருநாதர் மேல் அன்பு கொண்டு பாடிய பாடல்களின் இணைப்பை சில பாடல்களில் தொகுப்பை இணைத்துள்ளோம் பாடல்களை கேட்டு அகத்தியரின் அருள்களைப் பெறுங்கள்.

https://youtu.be/OgV3D2wGrg8
https://youtu.be/_mAFRvZ1gBc

ஐயப்பனும் அகத்தியரும் அடியவரும் பாகம் முற்றிற்று!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!