​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 30 June 2026

சித்தன் அருள் - 2240 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6



5

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

===========================
# இவ் 6ஆம் பகுதி வாக்கின் நேரலை:-  https://youtu.be/NqRaI13qIDU?t=20601 
===========================

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

குருநாதர் :- தாயே, நிச்சயம், அவரவர் ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யச் சொல். 

சுவடி ஓதும் மைந்தன்:- சொல்லிக்கொடுமா? எல்லாரும் ஒரு நிமிடம் தியானம் செய்யச் சொல்; எதுவும் வரக்கூடாது, இறைசன் நினைச்சு.


சிவ குழந்தை அன்னை வாக்கு :-  எல்லாரும் கண்ணை மூடி பிரார்த்தனை செய்யுங்க. உங்கள் இஷ்ட தெய்வத்தை மனசுல நினைச்சுக்கிட்டு, கண்டிப்பா வந்து— நீங்க கூப்பிட்டீங்கன்னா கண்டிப்பா வருவார். நல்லா அமைதியா எல்லாரும் தியானம் செய்யலாம்.
===========================
# உலக நன்மைக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை
===========================

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அனைவரும் கண்களை மூடி , தியானித்து , உலக நன்மைக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்தனர் )

குருநாதர் :-  தாயே, அழகாக அறிந்தும் இன்னும் என்னென்ன எடுத்து கூறுகின்றாயோ, பின் கூறு. இக்குழந்தை அழகாக பார்த்திருப்பான். 


சுவடி ஓதும் மைந்தன்:-  அம்மா, இன்னும் வந்து நீங்க— இணைஞ்சு இருக்கா, நல்லா? உடம்புல? இன்னும் அகத்தியர் வந்து— ஜூஸ் குடுங்க, ஐயா, ஜூஸ் குடுங்க, ஐயா. அழகா, அகத்தியர் வந்து— குடி, குடிங்கம்மா.


சிவ குழந்தை அன்னை :-  ( தொடர்ந்து பேசியதால் களைப்பை நீக்க , புத்துணர்ச்சி அளிக்க பழச்சாறு கொடுத்தனர் அடியவர்கள். அம்மையும் அருந்தி பின் வாக்கு கூற ஆயத்தமானார்கள் ) 
 
மதிய உணவு அறிவிப்பு:-  ஐயா, மதியம் அன்னம்பலிப்பு சாதுக்களுக்கு நிறைவடைந்தது; மற்ற அடியார்கள் வந்து சாப்பிட வரலாம். முதியவர்களுக்கு டோக்கன் கொடுத்திருப்பாங்க; அவங்க முதல்ல வாங்கம்மா. சாப்பிட, ஐயா, வாங்க. சிவாய நம. 


சிவ குழந்தை, குருநாதர்  அன்னையின் அனுபவ  விளக்கங்கள் :-   


(நேரலை -  https://youtu.be/NqRaI13qIDU?t=20818 )


நான் வந்து என்ன பண்ணேனா வீட்ல எல்லாம் தனியா இருக்கும்போது எனக்கு ஒருத்தங்க வந்து அண்ணாமலை சிவபெருமான சிவனோட சிலைய வந்து கிப்ட்டா தந்தாங்க. நான் வந்து வீட்ல ஏதாவது தனியா இருக்கும்போது பார்த்துகிட்டு மனசுக்குள்ள ஏதாவது பேசிக்கிட்டே இருப்பேன். 


என்ன கேப்பேன்னு தெரியுமா? உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா அப்படின்னு கேப்பேன். நீ எவ்வளவு அதாவது…


சித்திரா பௌர்ணமி அன்னைக்கு வெள்ளிக்கிழமை அதுவும் நாங்க அண்ணாமலைக்கு வரணும்னு நினைச்சிட்டு இருந்தோம். அப்ப பார்த்து சரியா வந்து ஒருத்தங்க வந்து எனக்கு வந்து கிப்ட் பண்ணாங்க. அண்ணாமலை சிவபெருமான் ஸ்டாச்சுவ ( சிலை )  அப்போ எனக்கு ஒரே அழுகையா வந்துச்சு. 


அப்ப என் மனசுக்குள்ள தோன்றியது,  உனக்கு என்ன அவ்வளவு பிடிக்குமா? பரவாயில்ல நீயே என்ன தேடி வந்துருக்க. 


இந்த சீதாராமன் படத்துல அதாவது…அதுல என்னன்னா அவ பாட்டு லெட்டர் போட்டுக்கிட்டே இருப்பா… அவன் மட்டும் போடுவான் இவன் போடவே மாட்டான் ஓகேவா அதே மாதிரிதான் நான் பாட்டு ஒரு சைடு நான் சொல்லிக்கிட்டே இருப்பேன். ஆனா அன்னைக்கு தான் எனக்கு ரிப்ளை வந்துச்சு. உன்ன எனக்கு அவ்வளோு பிடிக்கும் அப்படின்னு.


கேட்கும்போது எனக்கு ரொம்பவே அழுகையா வந்துச்சு. ஒரு பக்கம் ஆனந்தமா இருந்துச்சு. என்ன சொல்றேன்னே தெரியல.


எனக்கு எப்படி, எப்படா இந்த இந்த ஜென்மம், இந்த பிறவியை முடிப்போம்னு இருக்கு.


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா  இப்படி எல்லாம் எண்ணங்கள் வரணும். இந்த எண்ணங்கள் வரணுங்க ஐயா. மனிதன் பிறந்தால் சும்மா அதுக்காகவும், இதுக்காகவும் ஆசைப்பட்டு எல்லாம் இருக்கக்கூடாது. (நல்ல) எண்ணங்கள் வரணும். இறைவன் இந்த பிறவி போதும்டான்னு வரணும். இது கொடுத்தது எனக்கு இதுவரைக்கும் போதும்டான்னு சொல்லிட்டு வரணும். எல்லாம் வரணும். 


(நல்ல) எண்ணங்கள் வரணும். மேன்மையா இருக்கணும். இறைவனிடத்தில் அது வேணும், இது வேணும்னு கேட்கக்கூடாது. கேட்கக்கூடாது. எதுவுமே கேட்கக்கூடாது. 


சிறு குழந்தைகள் இறைவனை வணங்கினால் நிச்சயம் உடனடியாக கொடுப்பார்கள் இறைவன் அதனால வந்து……


===========================
# அம்மா அழகாக ஈசனை உருக பாடு. 
===========================


குருநாதர் :- அம்மா அறிந்தும், பாடலை அழகாக ஈசனை உருக பாடு.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசனை உருகி பாடுன்றார். எல்லாரும் நல்லா இருக்கணும். நாட்டுல இது மாதிரி நடக்க போகுது. அவங்கல்லாம் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, மனம் உருகி…… அப்பா!!!!!  காப்பாத்துப்பா என்று நீங்க  பாட்டு பாடுங்க.


===========================
# உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்  - திரு அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம்  - 38 
===========================


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=20964


நாள் என் செயும்? வினைதான் என் செயும்? எனை நாடி வந்த
   கோள் என் செயும்? கொடும் கூற்று என் செயும்? குமரேசர் இரு
      தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
         தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 
எனக்கு முன்னே வந்து தோன்றிடினே. 




குருநாதர்  அன்னையின் பாடல்  விளக்கங்கள் :-   


அதாவது இந்த பாடலுக்கு என்ன பொருள் அப்படின்னா, நாளென் செய்யும் வினை தான் என் செய்யும். அதாவது நாள், நாள் அப்படின்னா இப்போ ஒரு ஒரு நாள் இருக்கு இல்லையா, இன்னைக்கு வந்து நவமி, நாளைக்கு தசமி, அஷ்டமி, நவமி. 


இந்த மாதிரி நல்லது தரக்கூடிய நாள்களும் இருக்கு, கெட்டது தரக்கூடிய நாள்களும் இருக்கு. அதைத்தான், எந்த நாளாக இருந்தாலும், நான் உன்னை வழிபாடு செஞ்சேன்னா, அந்த நாள் எல்லாம் என்னை என்ன செய்யும்? அதுதான். நாளென் செய்யும். 


வினை தான் என் செய்யும்; எந்த வினையும் உன்னை நான் வழிபாடு செஞ்சா, என் பக்கத்துல கூட வராது, அப்படின்னு பாடி இருக்கார். 


நாளென் செய்யும் வினை தான் என் செய்யும்; உன்னை நாடி வந்த கோளென் செய்யும். 


அதாவது கோள்கள் இருக்கு இல்லையா, ராகு, கேதுன்னு, தீமையை விளைவிக்கக்கூடிய கோள்களும் கூட என்கிட்ட வரவே முடியாது. ஏன்னா நீ தான் என் கூடயே இருக்கே. நீ என்னை ஆட்கொண்டுட்டு இருக்கும்போது, ஏதாவது துன்பம் என்னை வந்து நெருங்குமா, அப்படின்னு அவ்வளவு அழகா இந்த பாடல்ல வந்து இயற்றி இருக்காங்க. 


அப்படி ஏதாவது எனக்கு ஒரு துன்பம் வரும் பொழுது, இந்த பாட்டுல பார்த்தீங்கன்னா, நாளென் செய்யும் வினை தான் என் செய்யும்; என்னை நாடி வந்த கோளென் செய்யும்; கொடும் கூற்றென் செய்யும்; குமரேசன் இருத்தாளும்; சிலம்பும் சதங்கையும் தண்டையும்; சண்முகமும் தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடனே. 


இந்த மாதிரி என்ன பிரச்சனை வந்தாலும், அவருடைய தண்டை, அவருடைய ஆறு முகங்கள், அவருடைய தோள்கள், தண்டை, சிலம்பும் சதங்கையும், இந்த மாதிரி நிறைய விஷயம், நீ வந்து என் முன்னாடி வந்து, இந்த மாதிரி ஒரு பிரச்சனைன்னு வந்தா, நீ கண்டிப்பா என் முன்னாடி வந்து, நீ நிப்ப. அப்படின்னு அவ்வளவு ஒரு நம்பிக்கையா பாடி இருக்காங்க. 


===========================
# குருநாதர்  அன்னையின்  “சரவணபவ” அறுகோண  நட்சத்திர   விளக்கங்கள் 
===========================


குருநாதர்  அன்னையின்  விளக்கங்கள் :-   இதுக்கு, அதாவது முருகப்பெருமானுக்கு ரெண்டு வந்து, ரெண்டு மனைவிகள் இருக்காங்க. வள்ளி, தெய்வானை இல்லையா. வலதுபுறம் இருப்பது வள்ளி, இடதுபுறம் இருப்பது தெய்வானை. 


நம்ம ஒரு வீட்ல எல்லாரும், நம்ம எல்லாரும் கோலம் போடுவோம். என்ன கோலம்? இப்படி நட்சத்திர கோலம் போடுவோம் இல்லையா, மேல ஒரு முக்கோணம் போடுவோம், கீழ பார்க்க ஒரு முக்கோணம் போடுவோம். இந்த நட்சத்திர கோலத்துக்கு என்ன அர்த்தம்னு தெரியாமலே, நாம எல்லாரும் போட்டு வரோம் இல்லையா, அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? 


முருகருடைய ரெண்டு மனைவிகள் யாரு? வள்ளி, தெய்வானை. இந்த வள்ளி யாரு அப்படின்னா, மண்ணுலக சக்தியானவள் வள்ளி, விண்ணுலக சிந்தியானவள் தெய்வானை. அதாவது மண்ணிலேயே பிறந்து, மண்ணிலேயே வளர்ந்து வந்தவள் தான் வள்ளி. 


வானத்துல, விண்ணுல பிறந்து, விண்ணிலேயே வளர்ந்து வந்தவள் தெய்வானை. இந்த ரெண்டு சக்திகளை தான் இந்த கோலம் குறிக்கிறது. 


அதாவது மேல பார்க்க போட்ட முக்கோணம், விண்ணுலக சக்தியை குறிக்குது. கீழ பார்க்க போட்ட முக்கோணம், மண்ணுலக சக்தியை குறிக்குது. இதுதான் இந்த கோலத்தோட அர்த்தம். 


இப்படி போட்டு, நம்ம சரவணபவ போட்டு, நம்ம முருகரை அவ்வளவு அழகா நம்ம வழிபடுறோம். புரியுதா, இந்த கோலத்துக்கு அர்த்தம் என்னன்னு? 


அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )


===========================
# எங்கும் இருக்கும் இறைவனை ஏன் ஆலயத்தில் சென்று வழிபட வேண்டும்?
===========================


குருநாதர்  அன்னையின்  விளக்கங்கள் :- இதே போல, இறைவன் வந்து எங்கதான் இருக்காருன்னு சொல்லவே முடியாது. அவர் தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார், என்னிலும் இருப்பார், உன்னிலும் இருப்பார், இங்கேயும் இருப்பார், அங்கேயும் இருப்பார், எங்க வேணாலும் இருப்பார். இந்த மைக்கா இருப்பாரு, இந்த மேடையா இருப்பாரு, இந்த ஸ்டாண்டா இருப்பாரு, என்ன வேணாலும் இருப்பார் இல்லையா, இறைவன். 


அப்போ நம்ம எல்லாம் ஒரு கேள்வி வரும், என்ன? அப்ப இங்க இருந்தே சாமி கும்பிடலாம்ல, எதுக்கு நம்ம கோவிலுக்கு போய் கும்பிடுறோம் அப்படின்னு இல்லையா? 


அதுக்கு என்ன அர்த்தம்னா, பசு நமக்கு பால் தருது, அதோட உடம்புல இருந்து தான் அந்த பால் எல்லாம் சுரக்குது. அதுக்காக எங்க இருந்து கரந்தாலும் பால் வருமா? வராது. காது பிடிச்சு கரந்தா பால் வருமா? வராது. அதோட மடியில் இருந்து கரந்தால் மட்டுமே பால் வரும். 


அதேபோல தான், அவர் எங்கேயும் நீக்கமற நிறைந்து இருந்தாலும், அவர் திருக்கோவிலில் வந்து, அவரை வணங்கும் பொழுது, நமக்கு அதீத பலன் கிடைக்குது. 


அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )


===========================
# ஒற்றுமைக்காக கொண்டு வரப்பட்டது தான் தேர் திருவிழா
===========================


குருநாதர்  அன்னையின்  விளக்கங்கள் :- அதனாலதான், கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் அப்படின்னு பெரியவங்க சொல்லுவாங்க இல்லையா? அதாவது இப்போ ஒரு ஊர்ல ஒரு கோயில் இருந்துச்சுன்னா, அங்க ஒற்றுமை இருக்கும், பண்பு இருக்கும் இல்லையா? 


எல்லாரும் ஒற்றுமை. இப்போ ஒரு திருவிழா நடத்துறாங்கன்னா, என்ன பண்ணனும்? தேர் திருவிழா. அதுக்கு ஒருத்தங்க மட்டும் இருந்து இழுக்க முடியுமா? முடியாது. 


எல்லாரும் ஒற்றுமையா இருந்தா மட்டும்தான் தேரை இழுக்க முடியும். அதாவது ஒற்றுமைக்காகவே கொண்டு வரப்பட்டது தான் இந்த தேர் திருவிழா. எல்லாரும் சேர்ந்து இழுத்தால் தானே தேர் நகரும். 


===========================
# கோவிலை வைத்து ஒழுக்கம் வளர்கிறது.
===========================


குருநாதர்  அன்னையின்  விளக்கங்கள் :- ஆக, கோவிலை வைத்து ஒழுக்கம் வளர்கிறது. ஒழுக்கம்னா, கோவிலுக்கு எப்படி வரணும்? நல்லா குளிச்சு, சுத்தமான ஆடையை அணிஞ்சு தான் வரும். குளிக்காதவன் கூட கோவிலுக்கு வரணும்னா, என்ன பண்ணனும்? குளிச்சு தான் வரணும். அப்படின்னுட்டு, அன்னைக்கு அதை குளிப்பான் இல்ல. ஆக, கோவிலை வைத்து, ஒழுக்கம் வளர்கிறது. கோவிலை வைத்து ஒற்றுமை வளர்கிறது. கோவில் ஒரு மனிதனுக்கு நல்ல பண்பை மறைமுகமாக தருகிறது. 


அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )


===========================
# கோவிலை வைத்து நம்ம மனம் அமைதி, ஒரு நிம்மதி அடையுதுங்க.
===========================


குருநாதர்  அன்னையின்  விளக்கங்கள் :- கோவிலுக்கு வந்தா அமைதியா இருக்கணும். கோவிலை சுத்தமா வச்சுக்கணும். நாம அமைதியா இருந்தாதானா கோவிலும் அமைதியா இருக்கும். கோவில் அமைதியா இருந்தாதான் நம்ம மனமும் அமைதியா இருக்கும். அங்க இருக்கிற இறைவன் மீது நம்ம மனம் அப்படியே லைக்கிறது. அவருடைய அலங்காரம், தீபாராதனை, வழிபாடு, மந்திரங்கள், இதெல்லாம் பார்க்கும்போது, இதெல்லாம் கேட்கும்போது, நம்ம மனம் ஒரு அமைதி, ஒரு நிம்மதி அடையுதுங்க. 


அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )


===========================
# ஆலயம் என்பதன் பொருள் என்ன?
===========================


குருநாதர்  அன்னையின்  விளக்கங்கள் :-  ஆலயம் என்பதன் பொருள் என்னன்னு யாருக்காவது தெரியுமா? அதாவது ஆன்மா, ஆன்மா லயிக்கின்ற இடம் தான் ஆலயம். அதாவது ஆன்மா, ஆ லயம், லயிக்கின்றது. அதனால, லயம். அதனாலதான் ஆலயம் அப்படின்னு பொருள் வச்சிருக்காங்க. 


ஆக, நம்ம இந்த சிவபெருமானை வணங்கி, நம்ம கண்டிப்பா அவர் மீது லயிக்கணுமா? அவருடைய அலங்காரத்தை பார்த்து,  பொன்னார் மேனின்னு எவ்வளவு அழகா இருக்காரு அப்படின்னு நினைக்கணுமாம். அப்படி அவருடைய மனம் உருக்கி நம்ம வேண்டணுமாம். அப்படி வேண்டனும்னா, என்னைக்காவது ஒரு நாள் அவர் வந்து, ச இவன் என்னடா ரொம்ப நாள் நம்மள தொல்லை பண்ணிக்கிட்டே இருக்கானே, சரி அவன் கூப்பிடுறோம், ஒரு நாள் போய்தான் பார்ப்போமே, அப்படின்னு ஒரு நாளாவது என்னன்னு கேட்பாராம். 


அதனால, கண்டிப்பா எல்லாரும் நம்ம வந்து என்னதான் வேலை வேலையா இருந்தாலும், அவரை நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். சிவா, நீ வந்து என்னை இப்படி எவ்வளவு அழகா படைச்சிருக்க பாரு, எனக்கு காது கேட்குது, எனக்கு வாய் பேச முடியுது, என்னால எவ்வளவு பார்க்க முடியுது, நீ வந்து ரொம்ப நல்லவரு அப்படின்னுட்டு, ஏதாவது அவரை நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். அப்படி நினைச்சோம்னா, கண்டிப்பா ஒரு நாள் இவன் ரொம்ப நாள் கூப்பிட்டுட்டே இருக்கான், பாவம், ஒரு நாள் போவோமே, அப்படின்னுட்டு வருவாரு. 


அனைத்து அடியவர்கள் :- ( புதிய புரிதலால் , மகிழ்ச்சி அடைந்து கை தட்டல்கள் )


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================


குருநாதர் :- அம்மையே, அப்பனே, எதை என்று புரிய, உங்களுக்கு எது தேவை? ஞானம் வேண்டுமா, எவை என்று புரிய, இப்பொழுது பார். இக்குழந்தை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் கேட்கிறார், உங்களுக்கு என்ன வேணும்னு. ஞானம் வேண்டுமா? மத்தது ஏதாவது வேண்டுமா? 


குருநாதர் :- தாயே, நிச்சயம் அறிந்தும் கூட, எவை என்று அறிய, சிறுபிள்ளை போல் யான் இருக்கின்றேன். அதனால் நீ பாடினால், சித்தர்கள் இவர்களுக்கு ஞானத்தை கொடுப்பார்கள். உலகத்திற்கும் ஞானத்தை கொடுப்பார்கள். நிச்சயம் பாடு, ஈசனை நோக்கி. 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஜீவனாடி குட்டி, ஜீவனாடில வரதும் ஒரு பெரும் புண்ணியம். அகத்தியர் வந்து நீங்க பாடுறதும் ஒரு புண்ணியம். அதனால ஒரு புண்ணியத்தை கொடுத்திருக்கார். நீங்க பாடுங்க.


===========================
# இதனிடையே உணவருந்த அழைப்பு விடுத்தார்கள் 
===========================


அடியவர் 3:- ஐயா, ஒரு நிமிஷம். சாப்பிடாத அடியவர்கள் கீழே உணவு உண்ண வரும்படி கேட்டுக்கறாங்க. அதனால உணவு அருந்தக்கூடிய தேவையுள்ள அன்பர்கள், பசி உள்ளவர்கள் கீழே வாங்க. ஓம் நமசிவாய.



சுவடி ஓதும் மைந்தன் :-  பசி, பசி. இந்த குழந்தை வார்த்தை கேட்டா பசி எல்லாம் பறந்து போயிடும். இந்த குழந்தையை வந்து பாடல் கேட்டால், பசி எல்லாம் தான் பறந்துரும். என்ன ஒரு சின்ன வயசுல ஞானம். இதெல்லாம் கேட்டோம்னா பசியே இல்லைங்க ஐயா. 


===========================
#  செவிக்கும் , வயிற்றுக்கும் உணவு ஈயப்படும் அதிசயம்.
===========================
#  அன்னையின் வார்த்தைகள் அனைத்தும் தங்கம் வைரம்…
===========================


அடியவர் 3:-  செவிக்கு உணவு இல்லாதபோது, சிறிது வயிற்றுக்கும் ஈயப்படும். இங்க செவி உணவு.


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, செவிக்கும் இங்க வந்து ஈயப்படுது. வயிற்றுக்கும் ஈயப்படுது. அப்படியாப்பட்ட ஒன்னொன்னு சொல்றத பார்த்தா, அப்படியாப்பட்ட வார்த்தைகள் கோல்டு, டைமண்ட்.


அடியவர் 3:- ( அன்னைக்கு பழ சாறு அளித்தனர் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- பாடு குட்டி. இறைவன் நல்ல சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கார். பாடு.


அடியவர் 3:- ( ஒரு பாடல் முன் மொழிந்தார் )


சுவடி ஓதும் மைந்தன் :- இதுல ஐயா, அந்த அம்மாக்கு எது வருமோ பாடட்டும். விடுங்க. அகத்தியர் கேக்குறது. இல்லனா, அகத்தியர் சொல்லுவாரு. விடுங்க ஐயா, பாடட்டும்.


குருநாதர்  அன்னை:- ( அடுத்த பாடல் பாட ஆயத்தம் ஆனார்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் ஐயா, எல்லாரும் ஒரு சின்ன குழந்தை பாடுது. நல்லா கை தட்டுங்க அய்யா. பாடு குட்டி.


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-   ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற பாடலை அருமையாக பாடினார்கள். அடியவர்கள் பின் வரும் காணொளியில் நேரலையில் அவசியம் கேட்கவும். )


பாடலின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=21589


===========================
#   "அம்மா" என்று அழைத்தேனே !!!
#  குழந்தாய் , என் அன்னை போல சொல்கின்றாயே!!!
===========================

குருநாதர் :- "அம்மா" என்று அழைத்தேனே. அதற்கு தகுந்தவாறே சொல்கின்றாயே, அதற்கு தகுந்தவாறே பாசத்தை பொழிகின்றாயே. பின் உலகத்தோர் நன்றாக இருக்க, மீண்டும் அனைவரும் சந்தோஷத்தில் ஆழ்த்து. முருகனும் சந்தோஷம் அடைவான். இவ்  பாடலை மீண்டும் பாடு.


சுவடி ஓதும் மைந்தன் :-   "முருகன் சந்தோஷம் அடைஞ்சாவே" இது நாங்க நினைச்சுக்கறது வந்து, அதை சாந்தப்படுத்துவார். அதனால, அவரும் நீ பாடுற பாட்டுல சந்தோஷம் அடைஞ்சிடுவார். பாடுங்கம்மா.


ஐயா, நல்லா வந்து மனசார நினைச்சுக்கோங்க. உலகத்து நல்லா இருக்கணும்; அடுத்து நோய் நொடிகள் வரக்கூடாது, சண்டை வரக்கூடாது, பிரச்சனை வரக்கூடாதுன்னு சொல்லிட்டு, நல்லா வேண்டிக்கிட்டு, முருகனை நினைச்சு இந்த பாப்பா பாடுது. எல்லாரும் ஒரு தை தட்டுங்க, ஐயா.


அடியவர் :- எப்படி பாற்கடலை கடைஞ்சு அமிர்தத்தை எடுத்துக் கொடுத்தாங்களோ, அதேபோல அகத்திய பெருமான் இந்த அம்மாவை கடைஞ்சு, கடைஞ்சு, ரெக்வஸ்ட் பண்ணி, ரெக்வஸ்ட் பண்ணி, எல்லாருக்கும் புண்ணியத்தை வாங்கி கொடுக்கிறார்.


சுவடி ஓதும் மைந்தன் :-   உங்களை அம்மா என்றாரு….


அடியவர் :- புண்ணியத்தை வாங்கி கொடுக்கிறாங்க, எல்லா பேருக்கும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா என்றாரு— இதே பாட்டு பாடுங்க … இப்ப (குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்). 


இரண்டாம் முறையாக உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-   ( குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் என்ற பாடலை அருமையாக பாடினார்கள். அடியவர்கள் பின் வரும் காணொளியில் நேரலையில் அவசியம் கேட்கவும். )


பாடலின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=21829 


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த சந்தோசத்துடன் , கைகள் மகிழ்வுடன் தட்டி , ரசித்து பாட ஆரம்பித்தனர். அடியவர்கள் மேல் உள்ள காணொளியில் நேரலையில் அவசியம் ரசித்து  கேட்கவும். )


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 29 June 2026

சித்தன் அருள் - 2239 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================
# இவ் 5ஆம் பகுதி வாக்கின் நேரலை https://youtu.be/NqRaI13qIDU?t=18865
===========================

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================


குருநாதர் :- "தாயே, அறிந்தும் உடைக்கேட்கின்றேன்; இன்னும், அதாவது, புண்ணியத்தை இவர்களுக்கு வாங்கித் தருகின்றாயா? யான் குழந்தையாக இங்கே இருக்கட்டுமா?" 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றார்னா, "இன்னும் இவங்களுக்கு நீ வந்து புண்ணியத்தை வாங்கித் தரியா? நான் இங்க குழந்தையா இருக்கிறேன்; இன்னும் இவங்க நல்லது சொல்லப் போறியா?" 


குருநாதர் :-  அறிந்தும் இக்குழந்தை நல்லதை பின், அதாவது, தெளிவுபடுத்தட்டுமா?" 


சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது என்ன சொல்றார் தெரியுங்களா? அகத்தியர் வந்து, "நீ எல்லாம் இன்னும் அம்மா நீயே"ன்னு சொல்றார் உன்னை. "குட்டி, உன்னை அம்மான்னு சொல்றார் அகத்தியர் வந்து; நீயே எல்லாருக்கும் நல்லது சொல்லி கொடுக்கின்றாய் என்றால் , சொல்லி குடுமா?"  இல்ல நான் சொல்லிக்கொடுக்கட்டுமா ? என்றார்; நீ என்ன சொல்லப் போற? 


சிவ குழந்தை அன்னை:- ( நான் சொல்கின்றேன் ) 


குருநாதர் :- தாயே, எதை என்று புரிய, நிச்சயம் அறிந்தும் கூட உன்னை தாயே என்று சொல்லிவிட்டேன். யானும் இங்கு கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றேன்; அதனால் உன் பேச்சை நிச்சயம் கேட்க வேண்டும் என்று எனக்கு ஆசை. அதனால் நீ பேசு. 


அடியவர் :- ( இவ் வகை கேட்ட உடன் கை எடுத்து கும்பிட்டார்கள் இவ் வேளையில்.)


அடியவர் :-  நமச்சிவாய !!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் என்ன சொல்றார் தெரியுமா? இங்கதான் எங்கயோ அகத்தியர் இருக்கார். இங்கேயே இருக்கார் வந்து. அதனால நீ தாயாம்; அதனால உன் பேச்சை நான் கேட்க வேண்டுமாம். நீ பேசுமா என்றார். பேசுங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-   பேசுமா.
( அடியவர்கள் அனைவரும் சிவ குழந்தையின் வாக்கை கேட்க தயார் ஆனார்கள் )


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:-    நான் வந்து, படிக்கும்போதே வந்து, நிறைய தடவை ஏதாவது ஒரு ஸ்லோகம்  மாதிரி எனக்கு வந்து தோணும். அதனால எழுதி வைப்பேன். அது எங்க அப்பா கூட தெரியாது. நான் வந்து, சாமி கும்பிடும்போது அதெல்லாம் கேட்பேன். 


என்னன்னா, ஒரு நாள் எனக்கு தோணிச்சு, நான் வந்து பாய்சன், அதாவது நஞ்சா இருந்தா, நான் வந்து நஞ்சா இருந்தா கூட உன்னுடைய தொண்டையிலேயே அழகா இருப்பேனே, அப்படின்னு எனக்கு வந்து தோணிச்சு. அதே மாதிரி, ஒருவேளை நான் பாவம் பண்ணி, நான் என்னை வந்து சொர்க்கத்துக்கு இல்லாம, உன்கிட்ட முக்தி அடையாம, என்னை நரகத்துல போட்டா கூட, அந்த அங்க வந்து என்னை கொடுமைப்படுத்துருவாங்க இல்ல, சித்திரவதை பண்ணுவாங்க இல்ல, அப்படி பண்ணும்போது கூட என் வாயில இருந்து சிவா, சிவான்னு தான் வரணும், அப்படின்னு கூட அவர்கிட்ட கேட்பேன்.


அடியவர்கள் :- ( சிவ குழந்தை அம்மை பேசி முடித்தவுடன் கை தட்டல்கள்) 


குருநாதர் :- அம்மா, எனக்காக நீ பேசு இன்னும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் என்ன சொல்றார் தெரியுமா? உங்களை அம்மான்னு சொல்றார். இன்னும் எனக்காக நீ பேசுமா? பேசு.


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ பேசுனேன்னா எல்லாருக்கும் புண்ணியம்மா.
புண்ணியம் வரும் என்றார் அகத்தியர்; வேற ஒன்னும் இல்லை.


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:-  நம்மளால முடிஞ்ச அளவுக்கு வந்து ஹெல்ப் பண்ணணும். அவரை வந்து நம்ம வந்து உருகி வேண்டிக்கிட்டே இருந்தோம்னா, நமக்கு அவர் வந்து கண்டிப்பா ஒரு நாள் நம்மள ஆட்கொள்வார். 

===========================
# “திருச்செந்தூர் வென்றிமாலைக் கவிராயர்” - திருச்செந்தூர் முருகன் கோயிலின் அர்ச்சகர் மரபில் (திரிசுதந்திரர்) பிறந்து, முருகனின் அருளால் தமிழ் இலக்கிய வரலாற்றில் புகழ்பெற்ற ஒரு சிவனடியார் மற்றும் பத்தர் ஆவார். முருகப் பெருமானின் கட்டளையை ஏற்று, 'திருச்செந்தூர் தலபுராணம்' என்ற பெருநூலை இயற்றியதன் மூலம் உலகோரால் அறியப்படுகிறார். அவர் குறித்து அம்மை உரைத்த வாக்குகளை இப்போது காண்போம்.
===========================

( அவசியம் அடியவர்கள் பின் வரும் நேரலையில் மழலை அன்னையின் அமுத வாக்குகளை கேட்கவும். அதுவே புண்ணியம். )


பின் வரும் வாக்கின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=19042 


சிவ குழந்தை அன்னை வாக்கு :- அதேபோல, ஒருத்தர், அதாவது வென்றிமாலைக் கவிராயர்  அப்படின்னு ஒரு பட்டர் இருந்தார். அவர் வந்து திருச்செந்தூர் கோயில்ல வந்து, அதாவது பிரசாதம் வந்து ரெடி பண்ற அடியவர். அவர் வந்து மடப்பள்ளியில வேலை செய்வார். 


ஒரு நாளைக்கு என்ன பண்ணிருக்கார்? முருகரை நினைச்சுக்கிட்டே ஒரு சின்ன தியானம் பண்ணிருக்கார். அன்னைக்கு வந்து அந்த திருச்செந்தூர் கோயில்ல ரொம்ப ஏதோ பெரிய விசேஷம். அப்படியே பண்ணி, அவர் வந்து என்ன பண்ணிட்டு இருக்கார்? தியானம் பண்ணிக்கிட்டே இருந்திருக்கார். என்ன பண்ணல? சாப்பாடு ரெடி பண்ணவே இல்லை. அதாவது பிரசாதம் செய்ய மறந்து, முருகரையே நினைச்சு தியானம் பண்ணிட்டே இருந்தார். 


அப்போ அங்க இருக்கிற திருச்செந்தூர் கோயில்ல இருக்கிறவங்க எல்லாரும் என்ன பண்ணிருக்காங்க? என்ன இன்னும் பிரசாதம் வரல? சரி, வாங்க போய் மடப்பள்ளியில போய் பார்ப்போம். அப்படின்னு வந்து திறந்து பார்த்தா, இவர் பாட்டு உட்கார்ந்து தியானம் பண்ணிட்டு இருந்திருக்கார். எல்லாத்துக்கும் டென்ஷன் ஆயிட்டு, இவங்க எல்லாம் வந்த சத்தத்தை கேட்டுட்டு, அப்பதான் அந்த வென்றிமாலை கவிராயர் வந்து கண்ணை முழிச்சு பார்க்கார். 


அப்பதான் அவருக்கு சுயநினைவே வருது. ஐயோ, முருகா, நீ வந்து இந்த மாதிரி நான் வந்து உன்னை நினைச்சுதான் தியானம் பண்ணேன். இப்படி வந்து என்ன சோதனை எனக்கு தந்திருக்க, அப்படின்னு இந்த வென்றிமாலை கவிராயர் ரொம்ப மனம் உருகி அவரை வந்து வேண்டி இருக்கார். ஆனாலும் என்ன பண்ணிருக்காங்க? அந்த கோயில்ல இருந்து வந்து அந்த வென்றிமாலை கவிராயரை தூக்கிட்டு போய், ஒரு தூண்ல கெட்டி வச்சு, அடி அடி அடின்னு போட்டு அடிச்சிருக்காங்க. அடிச்ச உடனே இவருக்கு வந்து ரொம்ப மனசு நொந்து போயிட்டாரு. நொந்து போய், இதுக்கு மேல நான் எதுக்கு வாழணும்? நீ ஏன் வந்து எனக்கு வந்து ஹெல்ப் பண்ணல? நான் எதுக்கு வந்து இதுக்கு மேல நான் உயிரோட இருக்கணும்? அப்படின்னு அந்த திருச்செந்தூர் கடல்ல விழுந்து உயிரை விட்டுறலாம். அப்படின்னு நேரா கடல்ல நோக்கி வரார். கடல்லையே விழுந்துடுறார். 


ஆனா விழுந்த அடுத்த கணமே ஒரு பெரிய…… அலை வந்து அவரை தூக்கி……. கரையில கொண்டு போட்டுருது. போட்ட அடுத்த நிமிஷம், அங்க ஆறுமுக நைனாராக முருகப்பெருமான் அவருக்கு காட்சி கொடுக்கிறார். 


அவருடைய கருணையை பார்த்தீங்களா? முருகருக்கு எவ்வளவு இரக்கமான மனசு இருந்துச்சுன்னா, இப்படி தன்னுடைய பக்தன் வந்து நம்மள வந்து இவ்வளவு வேண்டி கேட்டு, அவனுடைய உயிரையே வந்து கொடுக்குறதுக்கு தயாரா இருக்காரே, அப்படின்னு சொல்லிட்டு, அவருடைய மனம் இறங்கி வந்து ஆறுமுக நைனாரா வந்து அவருக்கு காட்சி அளிச்சிருக்கார். 


===========================
# மிக உயர்ந்த உபதேச வாக்குகள்…….
===========================


அதேபோல, நம்மளும் எவ்வளவுக்கு எவ்வளவு அவரை வந்து வணங்க முடியுமோ, அவ்வளவு நம்ம சிவபெருமானையோ இல்ல, உங்களுக்கு புடிச்ச தெய்வத்தையோ வணங்கணும். 


வணங்கணும், அப்படின்னு. அதாவது, நான் வந்து சாமி கும்பிட, அதாவது எப்படி சொல்ல? நான் வந்து அவர்கிட்ட பார்த்து கேட்க மாட்டேன். நான் முன்னாடியே சொன்னேன், அவர்கிட்ட கேட்கவே மாட்டேன். அவரை பார்த்தா, நீ எவ்வளவு அழகா இருக்க இல்ல, அப்படின்னு அவர் பார்த்துக்கிட்டே இருப்பார். 


எனக்கு எதுவுமே ஓடாது. அவர் பார்த்தா, பார்த்துக்கிட்டே இருப்பார். கோயிலுக்கு போனாலும் சரி, நம்ம இங்க அண்ணாமலைக்கு வந்தாலும் சரி, மீனாட்சி சொக்கநாதர் மீனாட்சி அங்க உண்டு இல்ல, மதுரையில அங்க போனாலும் சரி, இதோட குலசேர பட்டினத்துல வந்து ரெண்டு பேர் இருப்பாங்க இல்லையா? ஒரே சன்னிதியில சுவாமியும் இருப்பாங்க, அம்பாளும் இருப்பாங்க. குலசேர பட்டண குலசையின்னு சொல்லுவாங்க. அங்க வந்து அம்பாள் தான் ரொம்ப ஃபேமஸ். 


போனா எல்லாரும் தாயே, அப்படின்னு ரொம்ப மனமுறுகி வேண்டுவாங்க. நான் அங்க போனாலுமே சிவபெருமானை மட்டும்தான் பார்த்துக்கிட்டே இருப்பேன். நான் வேற எதுவுமே கேட்க மாட்டேங்க. 


அவர் பார்த்தாலே போதும். அதுவே எவ்வளவு, அதாவது நம்ம நினைக்கலாம், நம்ம கோவிலுக்கு போறோம், அவரை வந்து வணங்குறோம், அப்படின்னுட்டு. ஆனா அதுவே அவர் நினைச்சா மட்டும்தான் நம்மளால கோயிலுக்கே போய் அவரை பார்க்க முடியும். 


அப்ப நினைப்பேன்,  பரவாயில்லை, நான் வந்து இன்னைக்கு உன்னை வந்து பார்த்திருக்கேன், நீ நினைச்சிருக்க தானே, அப்படின்னுட்டு நான் வந்து என் மனசுக்குள்ள அப்படியே ஓடிக்கிட்டே இருக்கும். நான் வந்து எப்படி சொல்ல? அவரை பார்த்துக்கிட்டே இருப்பேன். வேற எதுவுமே கேட்க மாட்டேன். நீ நல்லா இருந்தா போதும். நீ நல்லா இருந்தா எனக்கு எல்லாமே அள்ளி தருவ, அப்படின்னு ஒரு நம்பிக்கை. அது மட்டும் இல்லாம, அவரை ரொம்ப பிடிக்கும். அவ்வளவுதான். 


===========================
# சிறுபிள்ளையாக அகத்திய மாமுனிவர் - அன்பின் வலிமை.
===========================


குருநாதர் :-  தாயே  அறிந்தும், பின் வருங்காலத்தில் உலகம் எதை என்று புரிய, அழிவு நிலைக்கு செல்லப் போகின்றது. இதனால் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எதை என்று புரிய, அதாவது உலக நன்மைக்காக நீ ஏதாவது பாடலை பாடவே தீர வேண்டும், அம்மா. அறிந்தும் கூட இப்பிள்ளை (அகத்தியன்) சிறுபிள்ளை உன்னை கேட்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியரே, நான் ஒரு சிறு பிள்ளையா உன்னை கேட்கிறேன், அம்மா. இந்த உலகத்தில் இருக்கிற எல்லாரும் நல்லா இருக்கணும்; அதற்காக நீ ஒரு பாடல் பாடியே ஆகணும் அம்மா. நான் சிறு பிள்ளை மாதிரி என்றார் அகத்தியர், இங்க வந்து. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ( மேலும் சில உரைகள் அளித்தார்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   குட்டி, பாடு குட்டி. அகத்தியர் உங்களை அம்மான்னு சொல்லிட்டு, அவர் குழந்தை ஆயிட்டாருன்னு சொல்றதுக்கு ஒன்னும் இல்லைங்க.

===========================
# சிவ குழந்தை அன்னையின் உயர் எண்ணங்கள் 
===========================


சிவ குழந்தை அன்னை வாக்கு :- அதான் நான் ஒரு முடிவு வச்சிருக்கேன். என்னன்னா, 63000மார்களுக்கு எப்படி வந்து சிவபெருமான் காட்சி அளித்தாரோ, ஒருவேளை எனக்கும் ஒரு நாள் எப்பயாவது வாய்ப்பு இருந்தா காட்சி அளித்தார் அப்படின்னா, கண்டிப்பா. அவர் காலை சிக்கன புடிச்சுக்குவேன். அவரை விடவே மாட்டேன். ஒன்னும் இல்ல, என்ன கூட்டிட்டு போ. இல்ல, நீ என் கூட இரு அப்படின்னு.


சுவடி ஓதும் மைந்தன் :-  சூப்பர் குட்டி. எப்படி பேசுறாங்க, ஐயா. ஞானம் எப்படி பேசுது பாருங்க, ஐயா. 
…………….
…………….
…………….
…………….
ஞானம் வேண்டும் முதல்ல. ஞானத்தை பெற்றுக்கொள்ளணும்மா. இந்த அறிவு. அகத்தியர் பாருங்க, உனக்கு என்ன வேணுமோ நான் தூக்கி விடுறேன்றார் அகத்தியர் வந்து. இதே மாதிரி நீங்க இருந்துட்டீங்கன்னா, உன்னை தூக்கி வச்சு அழகா பார்ப்பாரும்மா வந்து. ( அன்புடன் ) பாடு குட்டி. 

உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல் ( முத்தை திரு பத்தி திருநகை ) :- 


பாடலின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=19855 


( பாடல் பாடி முடித்த பின்னர் மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது…)


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================


குருநாதர் :- அம்மா. அறிந்தும், இத்தேசத்தில் வருங்காலத்தில் பின் எதை என்று பொறுத்து இன்னும் அடித்துக் கொள்ளப் போகின்றார்கள். சட்டத்தில் இருப்பவர்களே இன்னும் பல வகையில் கூட பின் அடித்து, அதாவது இன்னும் பொய் சொல்லி, இன்னும் ஏமாற்றி, அவரவர்களை சாகடிக்கப் போகின்றார்கள். 


ஏனென்றால் பின் இப்படியெல்லாம் நடந்தால் மனிதன் இன்னும் கீழாகப் போய்விடுவான். இதனால் தர்மத்தை நிலை நாட்ட சட்டம் கூட அறிந்தும் எது என்று புரிய, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும். 


அதாவது இன்னும் பல வழிகளில் கூட பின் குழப்பங்கள், பின் மனிதன் மனிதனிடத்திலே பெரிய பெரிய பதவிகளில் இருந்து இருந்து, இதனால் அதிலிருந்தே நிச்சயம் பின், அதாவது துப்பாக்கியால் கூட சுடப் போகின்றார்கள். 


இதனால் அவையெல்லாம் நிறுத்த வேண்டும் என்று நிச்சயம் இரண்டத்தில் மன்றாடு, அம்மா, பாடு. அனைவரும் வேண்டிக்கொள்ளச் சொல். 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன நடக்குமாம் தெரியுமா, அடுத்த அடுத்து நடக்கும்போது அகத்தியர் சொல்றார், இந்த சட்டம், இந்த அரசியல் மாற்றங்கள்ல பெரிய பெரிய சண்டை வருமாம். சண்டை வந்துட்டு நாட்டை வந்து விட்டுடுவாங்களாம், வந்து காப்பாத்துறதுக்கு நாட்டை விட்டுடுவாங்க. அப்ப அவங்க அவங்க சண்டையிட்டு கொன்னு கூட போடுவாங்களாம். அவங்க அவங்களே வந்து துப்பாக்கி எடுத்து, அவங்க அவங்களே சண்டை போட்டு, சுட்டு கூட போவாங்களாம். வந்து அந்த நிலைமைக்கு போகும்பா, அந்த நிலைமை வரக்கூடாது. எல்லாம் அண்ணாமலையாரை  நினைத்து, எல்லாரும் மனசுல நினைத்து, ஏன்னா அடுத்து வரப்போறது அது வந்து, அதனால இங்க சொல்றார் இப்ப. அதனால வந்து அதெல்லாம் நடக்கக்கூடாது. அண்ணாமலையிடத்தில முறையீடு, நீங்களும் முறையீடு, அம்மா நீயும் முறையிட்டு பாடுமான்றார். வந்து பாடுமா, பாடு.


சிவ குழந்தை அன்னை :-   பேசவா? 


சுவடி ஓதும் மைந்தன் :- பேசுங்க, அம்மா.


===========================
# இறைவன் மீது பற்று வைக்க வேண்டும் 
===========================


சிவ குழந்தை அன்னை வாக்கு :-    இப்போ நம்ம பக்கத்து வீட்டுல இருந்து ஒரு ஆண்டி, அல்லது சரி. நம்மளோட பிள்ளைன்னு வச்சுக்கலாம், ஓகேவா? நம்மளோட பிள்ளை ஐஏஎஸ் ஆனாங்க அப்படின்னா எவ்வளவு சந்தோஷப்படுவோம். அம், ஸ்வீட் கொடுக்கும்போது, ஒரு குறைஞ்சது ஒரு  மாசத்துக்கு, "என் பிள்ளை ஐஏஎஸ் ஆயிட்டான், என் பிள்ளை ஐஏஎஸ் எழுதி பாஸ் ஆயிட்டான்" அப்படின்னு எவ்வளவு சந்தோஷப்படுவோம், இல்லையா? 


அதே போல, நம்ம வீட்டுல ஏதாவது ஒரு—நம்ம வீட்டுல ஏதாவது ஒரு காரியங்கள், அப்பா தவறிட்டா, அப்பா தவறிட்டாரு, அம்மா தவறிட்டாரு அப்படின்னா எவ்வளவு நம்ம வந்து சோகப்படுவோம், எவ்வளவு அழுவோம். நம்ம வந்து அதுக்காக 16 நாட்கள் வந்து காரியம் கொண்டாடுவோம், இல்லையா? 


அது, அதற்குரிய நோக்கம் என்ன? அதாவது, "என்னுடைய பிள்ளை வந்து ஐஏஎஸ் ஆயிட்டாரு" அப்படின்னு சொல்றதும், "என்னுடைய அப்பா தவறிட்டாரு" அப்படின்னு சொல்றதும், ரெண்டுலையும் என்ன வந்து ஒண்ணு போல இருக்கு. 


என்னுடைய பிள்ளை, என்னுடைய அப்பா, என்னுடையது, என்னுடைய காரு, என்னுடைய வீடு, என்னுடைய போனு, என்னுடைய பைக், என்னோட அம்மா, என்னோட அப்பா அப்படின்னு நம்ம எல்லாத்து மேல எப்படி பற்று வச்சிருக்கோம், இல்லையா? அந்த "என்னுடையது" அப்படிங்கற பற்று, நம்ம இதுங்க மேல எல்லாம் வச்சிருக்கறது வெறும் டெம்பரரி. 


===========================
# "என்னுடைய" என்ற  பற்றை நம்ம இறைவன் மேல வச்சாலே போதுங்க, அடுத்தடுத்து எல்லாமே ஆட்டோமேட்டிக்கா வந்துரும்.
===========================


சிவ குழந்தை அன்னை வாக்கு :-  அந்த "என்னுடையது" அப்படிங்கற பற்றை யார் மேல வைக்கணுமா? இறைவன் மேல வைக்கணுமா? அவர் என்னுடைய, அவர் என்னுடைய முருகர், என்னுடைய பிள்ளையார், என்னுடைய பெருமாள், என்னுடைய சிவபெருமானே அப்படின்னு யாராவது சிவபெருமானை மட்டும், "ஆமா, அவரா சோதிப்பார்" அப்படின்னா, நம்ம சொல்லணும், "அவர் எப்படியா? அவர் என்னுடைய சிவபெருமான் இல்ல, அப்படி எல்லாம் பண்ண மாட்டார்" அப்படின்னு. நமக்கு நம்மளுடைய பொருளையோ, நம்மளுடைய இதையோ நம்ம வந்து டேமேஜ் பண்ணா, நமக்கு எவ்வளவு கோவம் வரும். இப்போ நம்ம காரை வந்து ரோட்ல நிறுத்திக்கோம்னு வச்சுக்கோங்க, யாரோ வந்து கல்லை கொண்டு எறிஞ்சு உடைச்சிட்டாங்க, எவ்வளவு கோவம் வரும். "நீ எப்படி உடைக்கலாம்?" அப்படின்னு என்னுடைய பொருளுக்காக நம்ம எவ்வளவு சண்டை போடுவோம். 


அதே மாதிரி, என்னுடைய முருகர், என்னுடைய பிள்ளையார் அப்படி, அந்த "என்னுடைய" பற்றை நம்ம இறைவன் மேல வச்சாலே போதுங்க, அடுத்தடுத்து எல்லாமே ஆட்டோமேட்டிக்கா வந்துரும்.


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:- 
https://youtu.be/NqRaI13qIDU?t=20308 


===========================
# திருவாசகத்தில் 'பிடித்த பத்து' என்று பத்து பாடல்கள் மாணிக்க வாசகர் அருளிச் செய்திருக்கிறார். அதில் இருந்து ஒரு மிக மிக இனிய பாடல்.  
===========================

பால் நினைந்து ஊட்டும் தாயினும் சாலப் பரிந்து, நீ, பாவியேனுடைய
ஊனினை உருக்கி, உள் ஒளி பெருக்கி, உலப்பு இலா ஆனந்தம் ஆய
தேனினைச் சொரிந்து, புறம் புறம் திரிந்த செல்வமே! சிவபெருமானே!
யான் உனைத் தொடர்ந்து, சிக்கெனப் பிடித்தேன்; எங்கு எழுந்தருளுவது, இனியே? 

சிவ குழந்தை அன்னை விளக்கங்கள் :-  இப்போ நான் சொன்னேன் இல்லையா, ஒரு சின்ன குழந்தையோட அம்மா வந்து என்னதான் வேலை வேலை செஞ்சுட்டு இருந்தாலும், அவளுடைய மனசு நினைப்பு எல்லாம் எங்க இருக்கும். பாப்பா தூங்கிட்டு இருக்கா, முழிச்சிருப்பாளோ அப்படின்னு எட்டி வந்து பாப்பா. அடுத்து வயிறு பசிக்கும், சரி பால் கொடுப்போமே அப்படின்னு வந்து நினைச்சு நினைச்சு வந்து கொடுப்பா இல்லையா. அதாவது குழந்தை தூங்கிட்டு தான் இருக்கும். 

ஆனா அவ மனசுக்குள்ள பாப்பாக்கு பசிக்குமே அப்படின்னு எப்படியும் மறக்காம நினைச்சு, அதான் பாழ் நினைந்து ஊட்டும் தாயினும் சால பரிந்து. அதைவிட மேலானவர் தான் யாரு? நம்ம சிவபெருமான். அப்படி நம்ம தாய் போல நம்மள வந்து பார்த்துக்குவார். அதேபோல கடைசி வரியில பார்த்தீங்களா, சிக்கன பிடித்தேன் எங்கு எழுந்தருள்வது இனியே. அதாவது சிவபெருமானே, நான் உன்னை சிக்கன பிடிச்சுக்குவேன், நீ எப்படி என்னை விட்டு போக முடியும் அப்படின்னு சொல்லி இருக்கார். அழகான பாட்டு இது பாட்டு. 


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல் நேரலை :- 
https://youtu.be/NqRaI13qIDU?t=20450


அடியவர்கள்:- ( பாடல் பாடி முடித்தபின்னர் , அடியவர்கள் கைதட்டினர் )


===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

குருநாதர் :-  தாயே, அறிந்தும், அதாவது இப்பொழுது சொன்னேனே—பின் உலகத்தில் என்ன நடக்கும் என்று அனைவரும் வேண்டிக்கச் சொல். நீயும் பின், அதாவது பிரார்த்தனை செய், இறைவனிடத்தில். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப சொன்னார் இல்ல, (அழிவுகள்)இதெல்லாம் நடக்கப் போகுது…..அது நடக்க வேணாம். நீ சொல்லுமா, உன் வாயால என்றார் வந்து. சொல்லுங்க, சொல்லுங்க. பிரார்த்தனை பண்ணி சொல்றார். நாட்டுல நல்லா இருக்கணும், எல்லாரும் நல்லா இருக்கணும், பிரார்த்தனை—நீங்க சொல்லுங்க அதை. உங்க மூலமா சொல்ல சொல்றார். சொல்லுங்க. 


சிவ குழந்தை அன்னை :-  உலகம் இந்த மாதிரி எல்லாம் நிறைய சிக்கலை வந்து சந்திக்கப் போகுதாம். அதனால, ஆளாளுக்கு எல்லாரும் அவங்க மனசுக்குள்ள இருந்து, அதாவது உள் மனசுல இருந்து வேண்டணும். என்னென்ன? இறைவா, என்னை மட்டும் இல்ல, எல்லாரையும் துன்பம் நெருங்கக் கூடாது.  எல்லாரையும் காப்பாத்தணும், அப்படின்னு கண்டிப்பா வேண்டணும்னா, என்னன்னு கண்டிப்பா வந்து சிவபெருமான் வந்து, சிவபெருமானோ இல்ல முருகரோ, உங்களுக்கு பிடிச்ச இஷ்ட தெய்வங்களை நீங்க வந்து கேட்டீங்க அப்படின்னா, கண்டிப்பா அந்த அழிவில இருந்து நம்மள காப்பாத்துவார். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 28 June 2026

சித்தன் அருள் - 2238 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================


===========================
# உடனடியாக நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும் ?
===========================


குருநாதர் :- ஏன், எதற்காக, இன்றும் எதை என்று புரிய, ஏன், எவற்றாக, பின் பிரார்த்தனை உருவாக்க வேண்டும். அதாவது அங்கங்கு நிச்சயம் தியானங்கள், தவங்கள் செய்ய வேண்டும். அழைத்து இறைவன் நாமத்தை புகுத்திட வேண்டும். அங்கங்கு எண்ணங்கள், அதாவது எதை தந்தாலும், இறைவன் தான் பின் தருவான் என்ற மனதை ஏற்படுத்த வேண்டும். அங்கங்கு பக்தி என்ற காதலை பரப்ப வேண்டும். இவ்வாறு பரப்பினால் மட்டுமே, வருங்காலத்தில் உலகத்தில் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியும். 


அடியவர் :-  அங்கங்க பிரார்த்தனைகள் பண்ணனும், அங்கங்க தவங்கள் பண்ணனும், அங்கங்க தியானங்கள் செய்யணும், அங்கங்க வந்து பக்தியை வந்து மேலும் மேலும் வளர்க்கணும். இந்த மாதிரி வந்தாதான், இந்த உலகத்தை வந்து நம்ம காப்பாத்த முடியும், அப்படின்னு சொல்றாங்க குருநாதர். 


===========================
# ஓவ்வொரு ஊரிலும் கூட்டுப்பிரார்தனைகள் நிச்சயம் நடக்க வேண்டும்.
===========================


குருநாதர் :-  அறிந்தும் எதை பொறுத்து, எவை என்று அறிய, இதனால் சிறு சிறு கூட்டங்களாக பெருக்கி, நல்விதமாகவே, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம் இறைவன் நாமத்தை அனைவரும், அதாவது பின் இறைவன் மீது காதல் செலுத்திவிட்டால், இவ்வுலகத்தில் அழிவுகள் கிடையாது. நல்லதே நடக்கும். 


அடியவர் :-  நிச்சயமா? சிவாய நம. அதாவது என்ன சொல்றாங்கன்னா, குருநாதர் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்லயும் இந்த மாதிரி சிறு சிறு கூட்டங்களை உருவாக்கி, இறைநாமத்தை வந்து நாம செபிச்சு, ஒரு பக்தி மையம் ஆக்கணும். அப்படின்னா, இந்த உலகத்துல அழிவுகள் எதுவும் வராதுப்பா, மக்கள் காப்பாற்றப்படுவாங்கன்னு சொல்றாங்க. 


===========================
# ஏன் அழிவுகள் வருகின்றது? 
===========================


குருநாதர் :-  ஏன் அழிவுகள் வருகின்றது என்பதை எல்லாம் யான் விஞ்ஞான பூர்வமாகவே கண்டு கண்டுபிடித்துள்ளேன். இதையெல்லாம் நான் உங்களுக்கு எடுத்துரைக்க போகின்றேன் இப்பொழுது. 


அடியவர் :-  குருநாதர் வந்து, இந்த அழிவுகள் சொல்றாங்கல்ல, நிறைய அழிவுகள் எல்லாம் சொல்றதெல்லாம் விஞ்ஞான பூர்வமா வந்து, குருநாதர் நிறைய கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த கண்டுபிடிப்புகளை நான் உங்களுக்கு அறிவியல் பூர்வமா சொல்றேன்றாங்க. 


===========================
# தாயே, உன்னை அம்மா என்று அழைக்கின்றேன்.
===========================


குருநாதர் :- தாயே, அறிந்து கூட உன்னை அம்மா என்று அழைக்கின்றேன். எதுவுமா, நிச்சயம் இக்குழந்தை உனக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும்? 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொல்றாரு, என்ன சொல்றாரு தெரியும்களா? அம்மா.  அம்மா, (அகத்தியர் ) நான் (உனக்கு) ஒரு குழந்தை. (என்) அம்மாக்கு என்ன வேணும்? 


அடியவர் :-  நமச்சிவாய!!!!! நமச்சிவாய!!!!!. எப்பேர்ப்பட்ட ஒரு தகவல் கொடுத்திருக்காங்க குருநாதர்! 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா இது மாதிரி நீங்க வந்து ஜீவனாடிக்கு வந்து எப்படி தெரியும்களா? எனக்கு வேணும், எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்கக்கூடாது. அகத்தியர் கேட்கிற மாதிரி நீ நடந்துக்கணுமா. 


அடியவர் :-   தகுதியை உருவாக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- தகுதி உருவாக்கணும். எண்ணங்களை உருவாக்கணும். என்ன சொல்றாரு பாருங்க. 


அடியவர் :-  தகுதி என்பது  உயர்ந்த எண்ணங்கள்.


https://youtu.be/NqRaI13qIDU?t=17263
  
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, உனக்கு என்ன வேணும்? நான் பரிசு தளிக்கின்றேன் என்றாரு. அம்மா, அகத்தியர் இங்க சின்ன குழந்தை மாதிரி ஆயிட்டாரு இங்க. வந்து, நீங்க தான் அம்மான்றாரு. அதனால என்ன கேணுமோ கேளுங்க. அகத்தியர் கேட்டதை சத்தியமா கொடுப்பார். 


அடியவர் :- பக்தி செலுத்த, செலுத்த, இறைவன் குழந்தை. 


===========================
# அகத்தியர் என் கூடவே இருக்கணும். என்னை விட்டு பிரிய கூடாது
===========================
# குழந்தை,  தாய்மையின் உயர் எண்ணத்தை அடைந்த ஆச்சரியங்கள். 
===========================


குருநாதரின் அன்னை :- (எப்பொழுதும் அகத்தியர் என் கூடவே இருக்கணும். என்னை விட்டு பிரிய கூடாது. ) 


அடியவர் :-  நமச்சிவாய!!!!!


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாங்க தெரியும்களா? என்ன சொல்றாங்க? எப்பொழுதும் அகத்தியர் என் கூடவே இருக்கணும். என்னை விட்டு பிரியக்கூடாது. 


அப்படின்னா என்ன அர்த்தம் தெரியும்களா? எப்படி அந்த அகத்தியர் என்ன சொல்றாரு? அந்த அம்மா என்ன சொல்லுது பாருங்களேன். குழந்தை, கொஞ்சம் இது யாராவது நல்லா விவரிச்சு சொல்லுங்க, ஐயா. 


அடியவர் :- ஐயா, இது வந்து, இது வந்து ஒரு கல்லை பலமாக அடிக்கிறது. ஒரு பெரிய தெய்வம் வந்து… 


சுவடி ஓதும் மைந்தன் :-  உண்மையில் , அவங்க அம்மா ஆயிட்டாங்க. அகத்தியர் இங்க உண்மையிலேயே குழந்தை ஆயிட்டாருங்க ஐயா. அகத்தியருக்கு  தெரியுது, இந்த அம்மா இப்படித்தான் பேசும். எக்ஸ்பிளைன் பண்ணுங்க  ஐயா. 


===========================
# “ஒரு குழந்தையின் தாய் ஞானம்”
===========================


அடியவர் 1 :- ( எழுந்து விளக்கங்கள் அளித்தார்கள் ) அன்பர்களுக்கு வணக்கம். பொதுவா, ஒரு தாய் வந்து தன் குழந்தை என்ன நினைப்பாங்க? தான் கூட தான் இருக்கணும்னு நினைப்பாங்க. அந்த மாதிரி இந்த குழந்தைக்கு நல்ல உயர்ந்த அறிவு பக்குவம் இருக்கு. அகஸ்தியர் தன்னை அம்மையாக அழைத்துவிட்டதுனால, தாயோட உள்ளத்திலிருந்து இந்த பொண்ணு நினைக்குது. குழந்தை நினைக்குது, என் குழந்தை என் கூட இருக்கணும்னு சொல்லி, மிகப்பெரிய ஞானம். 


===========================
#  நாடி படித்து சுயநலவாதிகளை, பார்த்து சலித்து போன சுவடி ஓதும் மைந்தன்.
===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  மிகப்பெரிய ஞானம். அம்மா, இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்கம்மா. நிறைய பேர் பார்த்துக்கிறேன். எனக்கு அது வேணும், இது வேணும். ஒன்னு எல்லாமே வந்து, ஒரு ஏதோ ஒரு விஷயத்துக்காக தான் இறைவனை வணங்குறாங்கம்மா. பக்தி இல்லம்மா. கண்ணால பார்த்து பார்த்து சலிச்சு போச்சுமா எனக்கு வந்து. 


சுவடி ஓதும் மைந்தன் :-  லட்சக்கணக்குல படிச்சிருக்கிறோமா. வந்து பொய் எல்லாமே மாயை. எல்லாம் பொய் நடிக்கிறாங்க. இறைவன் இடத்திலிருந்து நடிச்சுக்குது. என்ன பிரயோஜனம்ங்க, ஐயா? நல்லா ஆயிடுது. இறைவனா கொடுத்த அது வந்து, அகத்தியர் சொல்லி நல்லா ஆகும். எல்லாம் கொடுப்பாரு. இது வந்து எனக்கு இதா கொடுத்தாரு. வேற நாங்க உழைச்சோம். எல்லாமே நடிப்புங்க, ஐயா. 


===========================
#  தர்மத்தை நிலைநாட்டுவோம்.
===========================
# தர்மத்தை காப்பவனை , தர்மம் காக்கும் 
===========================


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன்? உலகம் அழிவு நிலைக்கு போகிறது. ஏன் மனிதன் இப்படி அழிக்க? இப்படி, இப்படித்தாங்க, ஐயா. வந்து கெட்டவங்க. அதனால வந்து தர்மத்தை நிலைநாட்டுவோம். ஐயா, எடுத்து சொல்லுங்க, ஐயா. தர்மத்தை நிலைநாட்டணும். வந்து யாரெல்லாம் ஒருவன் தர்மத்தை வந்து கட்டியா பிடிச்சுக்கிட்டு, தர்மத்தை வந்து காத்தானோ, தர்மம் உங்களை காக்கும். அதனால, தர்மத்தை தயவு செய்து சொல்லுங்க. எல்லாருக்கும் வந்து தர்மத்தை சொல்லுங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள் அளித்தார்கள் ) 


https://youtu.be/NqRaI13qIDU?t=17544


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- (  இந்தக் உரையின் சாரம் என்னவென்றால் — அகத்தியர் குழந்தையிடம் “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கும்போது, அந்த குழந்தை சொல்வது ஞானம் வேண்டும், எல்லாரும் நல்லா இருக்கணும் என்பதுதான். கடைசியில் அகத்தியர் தாயிடம் கேட்கும்போது, அந்த அம்மா சொல்வது மிகப் பெரிய பக்குவம்: “என்னை விட்டு நீ எப்போதும் பிரியக்கூடாது.” இறைவன் நம்ம பக்கத்தில் இருந்தால் நல்லதையே செய்வார், ஆனால் மனிதன் அதைப் பற்றி சிந்திக்கவே மாட்டான்; யாரும் “இறைவா, என் பக்கத்திலேயே இரு” என்று கேட்க மாட்டார்கள். மனிதனின் புத்தி எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்பத்தான் அவனுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கும். இறைவன் எப்போதும் நம்ம பக்கம் இருக்கத் தயாராக இருக்கிறார், ஆனால் நாம் கேட்கவே தெரியாமல் இருப்பதுதான் உண்மை. அகத்தியர் சொல்வது, “உன் கையில வருபவன் எல்லாம் அறிவில்லாதவன்; நீ எப்படி சமாளிக்கப் போகிறாய்?” என்பதே குருவின் மிகப் பெரிய பொறுப்பை நினைவூட்டும் கேள்வி. ) 


https://youtu.be/NqRaI13qIDU?t=17611


அடியவர் #3 உரைத்த உரையின் சுருக்கம் :- ( குருகுலத்தில் மாணவன் எதுவும் தெரியாமல் வருவது போல, கூட்டு பிரார்த்தனையில் வருபவர்களும் ஒவ்வொரு முறையும் புதிய பாடம் கற்க வருகிறார்கள். சித்தர்கள் ஒவ்வொரு முறை ஒரு படிக்கட்டாக புதிய விஷயங்களை அளிக்கிறார்கள் — நாணயம், தீர்த்தம், உபதேசம் போன்றவை. அவற்றை கடைபிடித்தால்தான் அடுத்த படி புரியும். குருநாதர் சொல்வதை ஏற்று நடைமுறைப்படுத்தினால் மட்டுமே ஆன்மீகப் பயணம் முன்னேறும். குருவின் கடமை கற்றுக்கொடுக்குவது; மாணவனின் கடமை கேட்டதை வீட்டில் செய்து, அடுத்த முறை வரும்போது அதற்கான பக்குவத்துடன் வருவது. இதனால் தான் ஒவ்வொருவரும் படிப்படியாக உயர்ந்து, இறைவனை நோக்கி செல்ல முடியும். ) 




சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள் அளித்தார்கள் ) 


குருநாதர் :- அறிந்தும் தாயே, நிச்சயம் முருகன் அறிந்தும் எதை என்று புரிய ஈசனாரும் நிச்சயம் தன்னில் கூட நீ என்ன வேண்டுதல் வைக்கின்றாயோ, அதை நிச்சயம் தன்னில் கூட இவர்களுக்கு கொடுப்பார்கள். சிறு குழந்தை அன்பாக கருணையுடன் கேட்டாலே, முருகன் இறங்கி வருவான். எதனால் இவர்களுக்காக என்ன முருகன் என்று நீ கேட்கப் போகின்றாய். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ மனசை வச்சா, முருகன் இறங்கி வருவார்மா? சின்ன குழந்தை கருணை காட்டுவார்மா? இவங்களுக்காக நீ முருகன் கையில என்ன கேட்க போற? 


அடியவர் #3:- எல்லாருக்காகவும் நீ என்ன கேட்க போற? முருகன் ஏதாவது கேட்டு வாங்கி கொடு. அவங்களுக்கு நீதான வாங்கி கொடு. வாங்கி கொடுன்றார். நீ முருகன் கையில என்ன கேக்குறீங்க? சொல்லுங்க. 


===========================
#  அனைவருக்காகவும் முக்தியை கேட்ட தெய்வ குழந்தை.
===========================


குருநாதரின் அன்னை :-  எல்லாரும் இறைவனை அடையனும், முக்தி அடையனும். அடுத்த பிறவி வேண்டாம். நானே அப்படித்தான் கேட்பேன். 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் ) 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? அந்த பாப்பா என்ன சொல்லுச்சுன்னு பார்த்தீங்களா? அந்த பாப்பா என்ன சொல்லுச்சு? வந்து பிறவியின் நோக்கம். பிறவியின் நோக்கம். ஐயா, சொல்லுங்க. ஐயா, இந்த பாப்பா என்ன சொல்லுச்சு? பிறவியின் நோக்கத்தையே கேட்டாங்க. எதுக்காக? எத்தனையோ பிறவிகள் எடுத்து, எத்தனையோ ஜென்ம ஜென்மங்களா இந்த பூமியில இந்த ஆன்மா பிறந்திருக்கோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி கொடுப்பான்னு ஒரே வார்த்தையில கேட்டாங்க. பிறவி வேண்டாம். அதாவது பிறவி வேண்டாம். 


( உங்களிடம் கேட்டிருந்தால் ) நீங்க ஏதாவது சொல்லி இருப்பீங்களா? அதுக்கு பதிலு என்ன கேட்டிருப்பீங்க? ஐயா, எனக்கு பணம் வேணுங்க. ஐயா, நான் வீடு கட்டணுங்க. ஐயா, ஐயா, மனுஷன் என்ன தெரியுங்களா? இதனாலயே அழுகுறாங்க. ஐயா, ஆமா, தேவையில்லாத எல்லாம் கேட்டு, அதனாலயே அழிஞ்சு போயிடுறாங்க. ஐயா, வந்து மனுஷன் வந்து உண்மையான மெய்ப்பொருள் என்ன? என்ன கேட்டுச்சு? இந்த குழந்தை என்ன கேட்டுச்சு? எல்லாருக்கும் முக்தி தரணும். மறுபிள்ளை மறுபிறவி  இருக்கக்கூடாது. 


===========================
#  குருநாதர் அனைத்தும் தரும் ரகசியங்கள் 
===========================


குருநாதர் :-  அடுத்து எதை எவை என்று அறிய, இப்படிப்பட்ட ஞானத்தை இருப்பவர்களுக்கு யான் தருவேனா? ஆனால் நிச்சயம் அனைத்தும் கேட்கின்றானே. அவனுக்கு யான் தரட்டுமா? நீங்களே சொல்லுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நானு இப்பேர்ப்பட்ட எண்ணங்களுடைய இந்த சிறு பிள்ளைக்கு நான் தரட்டுமா? எல்லாத்தையும் இல்லைன்னா, நீங்க கேக்குறீங்க பாருங்க. எனக்கு பணம் தா, வீடுதா, அதுதா, இதுதான்னு உங்களுக்கு கொடுக்கட்டுமா? ஐயா, சொல்லுங்க. யாராவது 


===========================
#  எப்போது இறைவனுக்கு நஷ்டம் உண்டாகும்?
===========================


குருநாதர் :-  எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட குழந்தை கேட்பதுதான் சரி. இதை இப்பொழுது எதை என்று அறிய, இதை கேட்டுவிட்டால், பின் இவன் முக்தி அடைந்துவிட்டால், நமக்குத்தான் நிச்சயம் தன்னில் நஷ்டம் என்று இறைவன் சிந்திப்பான். இதனால் இவனுக்கு அனைத்தையுமே கொடுத்து விடலாம் என்று எண்ணுவான். இதனால்தான் இறைவன் புத்தி மிகப்பெரியது. 


சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( குழந்தை “எதை வேண்டும்?” என்று இறைவனை கேட்டால், அது நேராக மோட்சம்/முக்தி நோக்கி செல்கிற கேள்வி. மனிதன் முக்தியை கேட்டுவிட்டால், அவன் உடனே விடுபட்டு விடுவான்; அப்போ அவனை வழிநடத்திக் கொண்டிருக்கும் இறைவனுக்கே “நஷ்டம்” என்று இறைவன் சிந்திப்பான். அதனால், “இவன் முக்தி கேட்டுவிட்டான்; இவனை இப்போதே விடுதலை செய்தால், எனக்கு வேலை முடியுது; அதனால் இவனுக்கு எல்லாமே கொடுத்து விடலாம்” என்று முடிவு செய்கிறான். ஆனால் சாதாரண மனிதர்கள் எல்லாவற்றையும் கேட்பதால், இறைவன் அவர்களை பூஜ்ஜியத்தில் அடைத்து வைக்கிறான் — அதாவது ஆசைகளின் வட்டத்தில் சுற்றவைக்கிறான். மோட்சத்தை கேட்டால் விடுதலை; உலக ஆசைகளை கேட்டால் பூஜ்ஜிய வட்டத்தில் அடைப்பு — இதுதான் இறைவனின் பெரிய புத்தி. ) 


குருநாதர் :- இதனால் தாயே, நிச்சயம் பின் அதை எதை என்று கூறிய பின், அதாவது இறைவனை நினைத்துக்கொண்டு, இவர்களுக்காக அழகாக ஒரு பாடலை பாடு. பாவம் தொலையட்டும். 


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல் ( சொற்றுணை வேதியன்…. )


நேரலை  https://youtu.be/NqRaI13qIDU?t=18496


கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள் :- சாதுக்களுக்கு மத்திய உணவு அழைப்பு விடுத்தனர் …..


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 27 June 2026

சித்தன் அருள் - 2237 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 3

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

===========================
# இவ் பகுதி #3 வாக்கின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=16329   
===========================

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

குருநாதர் :- அழகாக குழந்தாய் உனக்கு ஞானத்தை அள்ளி அள்ளி தருகின்றேன். இன்னும் மானிடன் எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துரை.

சுவடி ஓதும் மைந்தன் :-  உனக்கு நான் நிறைய தர்றேன், ஞானத்தை. இன்னும் இந்த மனுஷன் வந்து, "எப்படி இந்த உலகத்துல வாழணும்"ன்னு உனக்கு வந்தது சொல்லுமா என்றார். அம்மா, அகத்தியர் வாய்ப்பு கொடுக்குறார்.  சொல்லுங்க. 

குருநாதர் :- "குழந்தாய், அறிந்தும் இன்னும் சொல்; எவ்வளவு, எவ்வளவு, எதை என்று புரிய அள்ளித் தருகின்றேன்." 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் நிறைய வரங்களை அள்ளித் தர்றார் என்றார், உங்களுக்கு வந்து. அதனால இன்னும் சொல்லுமா என்றார், வந்து. அகத்திய பெருமான் சொல்றது இது வந்து. அகத்தியர் யாருன்னு தெரியும்ல? 

சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை :- ( தெரியும் அய்யா என்று தலையசைத்தார் ) 

===========================
# பக்தி என்றால்  என்ன?
===========================

நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=16374

உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


இப்போ நம்ம வீட்டுல வந்து மீன் வளர்ப்போம், நாய்க்குட்டி வளர்ப்போம், பூனைக்குட்டி வளர்ப்போம். இதுங்க மேல காட்டுறது என்னது? அன்பு. நம்ம பிள்ளைங்க மேல, அதாவது அம்மா, பிள்ளைகள், கணவன், மனைவி—இவங்க மேல எல்லாம் காட்டுவது அன்பு. 

இறைவன் மேல காட்டுவது தான் பக்தி. அதாவது, நிறைய பேர் கேட்காங்க, "இந்த பக்தினா என்ன?" 

அதாவது, பக்தி வந்து எப்படி இருக்கும்? கருப்பா இருக்குமா, சிவப்பா இருக்குமா? இல்ல கட்டையா இருக்குமா, இல்ல வளர்த்தியா இருக்குமா? குண்டா இருக்குமா, ஒள்ளியா இருக்குமா? இப்படி எல்லாம் கேட்கிறாங்க. 


ஆனா இப்படி எல்லாம் பக்தியை வகைப்படுத்த முடியாது. 


அப்ப பக்தினா என்ன? அதாவது, நம்ம என்ன சொல்லுவோம்? கோவிலுக்கு ஒரு அம்மா வருவாங்க, நல்ல பக்தியோடு சாமி கும்பிடுவாங்க, பக்தியோடு பூஜை பண்ணுவாங்க, அப்படின்னு சொல்லுவோம். பூஜை பண்ணுவாங்கன்னு சொன்னா பரவாயில்லை. அது என்ன? பக்தியோடு பூஜை பண்ணுவாங்க. 


அப்ப அந்த பக்தி ஏன் கூட கூடவே வருது? இந்த பக்தி அப்படின்னா, அதை உணர்ந்தால் மட்டும்தான் முடியும். 


அதை வந்து, "பக்தினா இப்படிதான் இருக்கும்" அப்படின்னு எல்லாம் சொல்லவே முடியாது. அதை அனுபவித்தால் மட்டும்தான் அதை உணர முடியும். 


இப்போ தீ வந்து சுடும். சுடுமா? இல்ல கைய வைக்க கூடாது அப்படின்னு சொல்லுவோம். அதே மாதிரி தேன் வந்து நல்லா திப்பா இருக்கும். இல்ல? அப்போ திப்பா இருக்கும் அப்படின்னு சொன்னா புரியுமா? புரியாது. அதை எடுத்து சுவைத்து பார்த்தா தான், அது ஓ !!! இவ்வளவு டேஸ்டா இருக்கு தேனு அப்படின்னு புரியும். அதே மாதிரிதான் தீக்குள்ள லேசா ஒரு விரலை விட்டாலும், எம்மாடி சுட்டுட்டு அப்படின்னுட்டு, அப்பதான் நம்மளால உணர முடியுது. அதுக்கு முன்னாடி சுடுது அப்படின்னா என்னன்னு நம்மளால சொல்ல முடியுமா? முடியாது. 


அதே போல தான் பக்தியும். அதை அனுபவித்து பார்த்தால் தான் நம்மளால உணர முடியும். மித்தபடி பக்தி செய்யுங்க, பக்தி செய்யுங்கன்னு சொன்னா முடியவே முடியாது. அந்த பக்தினா என்ன? 


சிவபெருமானை, அதாவது நமக்கு வந்து எத்தனையோ பிரண்ட்ஸ் இருக்காங்க இல்லையா, அது கூட அவரையும் ஒரு பிரண்டா வச்சுக்கணும். 


இல்லனா நம்மளுக்கு அப்பா அப்படின்னு நினைச்சுக்கணும். 


சிவபெருமான் என்னோட அப்பா அப்படின்னு நினைச்சுக்கணும். 


இல்லனா சிவபெருமான் எனக்கு ஒரு முதலாளி, நான் அவருக்கு தொழிலாளி. இப்படி நினைச்சு வழிபடணும். 


இல்லனா இன்னொரு ஒரு வழி இருக்கு. அது என்னன்னா, இறைவன் எனக்கு காதலன், நான் அவருக்கு காதலி. அவர் வந்து எனக்கு கணவன், நான் அவருக்கு மனைவி. இப்படி நினைத்து வழிபடுவதுதான் சன்மார்க்கம். 


===========================
நான்கு வழிகள்  மனிதன் இறைவனை அடைவதற்காகச் சைவ சமயம் மற்றும் திருமந்திரம் போன்ற ஆன்மீக நூல்கள் வகுத்துக் கொடுத்துள்ள நான்கு படிநிலைகள் (மார்க்கங்கள்) ஆகும். 
===========================


அதாவது நான்கு வழிகள் இருக்கு. என்னென்ன? 


சர்புத்திர மார்க்கம், தாச மார்க்கம், சக மார்க்கம், சன்மார்க்கம். 


(1)சர்புத்திர மார்க்கம் அப்படின்னா, நான் ஆல்ரெடி சொன்னது, இறைவன் எனக்கு அப்பா, நான் அவருக்கு குழந்தை. இப்படி நினைக்கிறது. சர்புத்திர மார்க்கம், 


(2)தாச மார்க்கம். தாச மார்க்கம்னா, சிவபெருமான் எனக்கு ஒரு முதலாளி, நான் அவருக்கு தொழிலாளி. நான் அவருக்கு ஒரு தொண்டன், நான் அவருக்கு ஒரு வேலைக்காரன். இப்படி நினைச்சு வழிபடுவது தாச மார்க்கம். 


(3)சக மார்க்கம், சிவபெருமான் எனக்கு ஒரு பிரண்டு(friend) நானும் அவருக்கு ஒரு பிரண்டு(friend). இப்படி நினைச்சு வழிபடுவது சக மார்க்கம். 


(4)நான்காவது சன்மார்க்கம். இந்த சன்மார்க்கம், சிவபெருமான் எனக்கு ஒரு காதலி, நான் அவருக்கு ஒரு காதலன். இல்லனா சிவபெருமான் எனக்கு ஒரு கணவன், நான் அவருக்கு மனைவி. இப்படி நினைச்சு வழிபடுவதுதான் சன்மார்க்கம். 


இப்படித்தான் மாணிக்கவாசக சுவாமிகளும் இறைவனை நினைச்சு வழிபாடு செஞ்சிருக்கார். 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )

===========================
# ஏன் திருவாசகம் என்பது “அழுகைத் தமிழ்”?
===========================




அன்னை உரைத்த வாக்குகள்:-  அதாவது, கணவனை விட்டு மனைவி பிரியாமல் அழுத அழுகை தமிழ்தான் திருவாசகம். அதனாலதான் நாம திருவாசகம் படிக்கும் பொழுது நமக்கும் கண்ணீர் வருது. நிறைய தடவை எங்க அம்மா எல்லாம் அழுது இருக்காங்க, திருவாசகத்தை படிக்கும் பொழுது. 


அதேபோல பேசுவது இயல் தமிழ். 


பாடினால் இசைத்தமிழ்.


நடித்தால் நாடகத் தமிழ். 


திருமுறைகள் சைவத் தமிழ். நாலாயிர திவ்ய பிரபந்தம் வைணவத் தமிழ், 


“திருவாசகம் அழுகைத் தமிழ்”....... அப்படின்னு சொல்லி இருக்காங்க. 


===========================
# நம் உடம்பில் உள்ள உத்தரகோசமங்கை ரகசியங்கள் 
===========================


சரி, இந்த மாணிக்கவாசகர் யார் தெரியுமா? மாணிக்கவாசகர் தான் நமக்கு வந்து திருவாசகத்தை எல்லாம் தந்திருக்கார். இவர் யார் தெரியுமா? அதாவது, உத்தரகோசமங்கை அப்படின்னு நம்ம உடம்புல வந்து ஒரு இடம் இருக்கும். என்னன்னா, உத்திரம்னா வடக்கு, கோசம்னா உடம்பு. உடம்புல வடக்கு பகுதிதான் நெற்றி. அதை ஏன் உத்திரகோச மங்கைன்னு சொல்றாங்க? ஏன்னா அங்கதான் திருநீறு, அடுத்த பொட்டு, சந்தனம், குங்குமம் இதெல்லாம் நம்ம வந்து.. நெற்றியில தான் வச்சுக்கிறோம். அதனால இதுக்கு பேரு உத்திரகோச மங்கை. 


===========================
# உத்தரகோசமங்கை ரகசியங்கள் 
===========================


இதே போல உத்திரகோச மங்கைன்னு ஒரு ஊர் இருக்கு. அந்த ஊருல ஆயிரம் ஞானிகள் இருந்து தவம் இருக்கிறாங்க. அப்படி இருக்கும் பொழுது அங்க சிவபெருமான் வர்றார். வந்து என்ன சொல்றார் தெரியுமா? இராவணனுடைய மனைவி மண்டோதரி இப்பதான் கல்யாணம் ஆயிருக்கா. அவ வந்து கல்யாணத்துக்கு முன்னாடி என்கிட்ட வந்து ஒரு வரம் கேட்டா. என்னன்னா, சிவபெருமானே, உன்னை விட்டு இப்படி பிரிஞ்சு போறேனே. நான் என்னைக்காவது ஒரு நாள் உன்னை வந்து நான் வந்து கூப்பிடுவேன். 


அப்படி கூப்பிடும்போது நீ வந்து என்னுடைய மடியில ஒரு கை குழந்தையா வரணும் அப்படின்னு ஒரு வரம் கொடுத்திருப்பார். அதாவது வரம் வாங்கி இருப்பா மண்டோதரி. 


அப்போ சிவபெருமான் இதெல்லாம் சொல்றார். இப்படி வரம் வாங்கிட்டா, அதை மாதிரி என்னைக்காவது ஒரு நாள் கூப்பிடுவா என்ன? அப்ப நான் அவருடைய அவளுடைய மடியில ஒரு கை குழந்தையா போவேன். 


அங்க இருக்கிற இராவணன் என்னை தொட்டான் அப்படின்னா, இந்த உத்திரகோச மங்கையிலே இந்த குலத்திலே ஒரு பெரிய நெருப்பு உருவாகும். அந்த நெருப்பில் நீங்க ஆயிரம் பேரும் வீழ்ந்து என்னை அடைஞ்சிடுங்க அப்படின்னு சொல்லிட்டு சிவபெருமான் என்ன செஞ்சார்? மறைஞ்சு போயிட்டார். 


அதேபோல ஒரு நாள் மண்டோதரிக்கு சிவபெருமானுடைய ஞாபகம் வருது. சிவபெருமான் என்ன செய்கிறார்? இதே மாதிரி வேண்டுறா. மண்டோதரி, சிவபெருமானே, எனக்கு குழந்தையா வா அப்படின்னு வேண்டுறா. வேண்டுன உடனே சிவபெருமானும் ஒரு குட்டி கைப்பிள்ளையா வந்து அவருடைய மடியில இருக்கா. 


அப்படி இருக்கும் பொழுது இராவணன் அங்க இருக்கிற இராவணன் ஆசையா வந்து யார் இந்த குழந்தை அழகா இருக்கே அப்படின்னு தொட்டு தூக்கிடுறார். 


தூக்கியதும் இந்த உத்திரகோச மங்கையில ஒரு பெரிய நெருப்பு உருவாகுது. அந்த நெருப்புல இந்த ஆயிரம் பேரும் வீழ்ந்து அடையுங்கன்னு சொல்லி இருந்தார் இல்லையா சிவபெருமான். அதேபோல இந்த ஆயிரம் ஞானிகள் அந்த நெருப்புல விழலாம் அப்படின்னு வரும் பொழுதுதான் அவங்க எல்லாருக்கும் ஒரு சந்தேகம் வருது. 


சரி, நம்ம எல்லாம் ஞானிகள் தானே? அப்ப நம்ம எல்லாம் வந்து இந்த நெருப்புக்குள்ள விழுந்துட்டோம்னா யார் இந்த ஆகமங்கள் விதிகள் எல்லாம் பார்த்துக்குவா? அதனால ஒரே ஒருத்தரை வந்து என்ன பண்றாங்க? தேர்ந்தெடுக்குறாங்க. தேர்ந்தெடுத்து நீ மட்டும் இந்த ஆகமங்கள் எல்லாம் பார்த்துக்கோ. நாங்க எல்லாம் வந்து சிவபெருமானை இந்த நெருப்புக்குள்ள விழுந்து சிவபெருமானை அடைஞ்சிடுறோம் அப்படின்னு சொல்லிட்டு மீதி உள்ள 999 பேரும் அந்த நெருப்புல விழுந்து சிவபெருமானை அடைஞ்சிடுறாங்க. 


அப்படி இருக்கும்போது அந்த ஒரே ஒரு ஞானிக்கு மட்டும் எவ்வளவு வந்து கஷ்டமா இருக்கும்? எல்லாரும் சிவபெருமானை அடைஞ்சிடுறாங்க. நான் மட்டும் இங்க இருக்கேனே அப்படின்னு எவ்வளவு வந்து அவருக்கு வருத்தமா இருக்கு. 


அந்த முனிவர், அந்த ஞானிதான் அடுத்த பிறவியில மாணிக்கவாசகரா பிறந்து இப்படி அழுது, அழுது, அழுது, அழுது, அழுது, அழுது சிவபெருமானை அடையறார். 


ஆக அவர் அழுத அழுகை தமிழ் தான் திருவாசகம். அந்த திருவாசகத்தை நம்ம படிச்சுக்கிட்டே இருந்தோம்னா நம்மளையும் ஒரு நாள் சிவபெருமான் கண்டிப்பா ஆட்கொள்வார். 


எப்படி மாணிக்கவாசகர் ஆட்கொண்டாரோ, அதேபோல நம்மளையும் கண்டிப்பா ஆட்கொள்வார். நம்ம பிறவி எடுத்ததுக்கே சிவபெருமானை வந்து வழிபட தானே ….பிறவு. நம்ம எல்லாரும் கண்டிப்பா சிவபெருமானை வழிபாடு செஞ்சு, அவர் நம்மள கண்டிப்பா ஆட்கொள்வார். நம்மளுடைய மனசு தூய்மையா இருந்ததுன்னா, கண்டிப்பா ஒரு நாள் வந்து நம்மளுடைய மனசுல உட்காருவார். 


===========================
# எப்படிப்பட்ட மனம் வேண்டும் ?
===========================

குருநாதர் :-  அழகாகவே. குழந்தைக்கு எம்முடைய ஆசிகள். இதுபோல் மனம் வரவேண்டும். இவ்வாறு மனம் வந்துவிட்டாலே, யாங்களே துணையிருந்து அழைத்துச் செல்வோம், என்ன விருப்பம் என்று. 


ஆனாலும் நீங்கள், தான் தான் விருப்பங்களை சொல்கிறீர்கள்.  ஆனாலும் அவர் விருப்பத்தை நிறைவேற்றினாலும் உங்களுக்கு குறை என்பதை உங்களுக்குத் தெரியாது. யாங்களே அறிவோம். 


===========================
# தகுதி இல்லாதவன் - “அதைத்தா, இதைத்தா, என்று கேட்பவன்”
===========================


குருநாதர் :-  இதனால்தான் நிச்சயம், அதாவது எங்களுக்கு அதைத்தா, இதைத்தா, என்று கேட்பவன் நிச்சயம் எது என்று புரியாது. அதற்கு நிச்சயம் தகுதி இல்லாதவன். தகுதி இல்லாதவன் தான் நிச்சயம் கேட்பான். 


===========================
# தகுதி உள்ளவன் சொல்வது - “எதை கொடுத்தாலும் பரவாயில்லை”
===========================


குருநாதர் :-  தகுதி உள்ளவன் இப்பொழுது இக்குழந்தை அழகாக சொன்னாளே , அறிந்தும் கூட எதை கொடுத்தாலும் பரவாயில்லை என்று நிச்சயம். இப்பொழுது கூறுங்கள், நீங்கள்?




சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றார் தெரியும்களா? அகத்தியர் இதுல வந்து, தகுதி இல்லாதவன் தான் எனக்கு அதை கொடு, இதை கொடுன்னு கேட்பாங்களாம். இறைவனிடத்தில் வந்து. எனக்கு வந்து அது வேணும், இது வேணும்னு சொல்லிட்டு, அப்ப அதை கொடுத்தாலும் நீங்க சரியா வந்து உங்க கையில நீங்க வந்து நிக்க வைக்க மாட்டீங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் தகுதி உள்ளவன் எதை கேட்பான் தெரியும்களா? இந்த குழந்தை கேட்டு சொல்லுச்சு பாருங்க, எதை கொடுத்தாலும் பரவாயில்லை. இதுதான் உண்மை. அப்ப தகுதியை வளர்த்துக்கணும். 


===========================
# உங்கள் குழந்தைகளிடம் பக்தியை வளர்த்து விடுங்கள்
===========================


குருநாதர் :- எதை, எவை என்று அறிய. இதனால்தான் குழந்தைகளிலே பக்தியை வளர வேண்டும். வளர்த்திட வேண்டும். இவ்வாறு பின், அதாவது குழந்தையின் கருணைக்கு ஈசன் இறங்கியே ஆவான். 


===========================
# நிச்சயம் பள்ளிகளில் கூட முதலில், இறை நாமத்தையே சொல்லித் தர வேண்டும்.
===========================


குருநாதர் :- இதனால் நிச்சயம் அங்கங்கு குழந்தைகளுக்கு, அவ்வவ் பின் நிச்சயம் பள்ளிகளில் கூட முதலில் இறைநாமத்தையே சொல்லித் தர வேண்டும். இப்படி சொல்லித் தந்துவிட்டால், உலகம் அடுத்த நிலைக்கு செல்லும். இல்லையென்றால் நிச்சயம் செல்லாது. 


===========================
# “தாயே!!!!!  சிறு குழந்தையாக இருந்தாலும் நீ எனக்கு தாய் தான்”
===========================


குருநாதர் :-  தாயே, அறிந்தும் கூட, இதனால் சிறு குழந்தையாக இருந்தாலும் நீ எனக்கு தாய் தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் என்ன சொல்றார் பார்த்தீங்களா? நீ சொன்ன குழந்தைமா, ஆனால் எனக்கு தாய். அகத்தியர் என்ன சொல்றார்? அகத்தியர் தெரியும்களா யாருன்னு? 


குருநாதரின் அன்னை :- ( தெரியும் என்று தலையசைத்தார்)  


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொல்றாரு, நீ குழந்தை. ஆனாலும் எனக்கு தாய். ஐயா,கொஞ்சம்  எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா 


அடியவர் :- வயதில, சிறு குழந்தையா இருந்தாலும், நீ எனக்கு தாய் போலப்பா, அப்படின்னு குருநாதர் சொல்ராங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  வயதில சிறு குழந்தை, நீ குழந்தை எல்லாருக்கும், ஆனா எனக்கு? 


அடியவர் :- நீ தாய். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீ தாய். அகத்தியர் சொல்றாரு, அப்ப எவ்வளவு பெரிய ஆளு அகத்தியர்?  அவருக்கு தெரியாதா? அதனால முதல்ல சின்ன குழந்தைகள் எல்லாம் இறைநாமத்தை சொல்லித் தரணும். எல்லா பள்ளிகளிலும் வந்து, அதெல்லாம் வந்து, எப்படியாவது அகத்தியரன் இறைவன் ஏத்துக்கல போவார். அப்படி சொன்னா மட்டும்தான், அடுத்த நிலைமை, அடுத்த நிலைமைக்கு இந்த உலகம் செல்லும். இல்லையென்றால், 


அடியவர் :- தேங்கி நிக்கும், அப்படியே செல்லாது. 


சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஸ்கூல்லவே வந்து, நிறைய? 


அடியவர் :-  இறைவன் நாமத்தை சொல்லிக் கொடுக்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இறைநாமத்தை சொல்லிக் கொடுக்கணும். அப்பதான் வந்து, அடுத்த நிலைமைக்கு, அடுத்த நிலைக்கு, உலகம் வந்து மாறிக்கிட்டே போகும். இல்லையென்றால், நிச்சயம் 


அடியவர் :-   முன்னேறாது…


===========================
# “தாயே!!!!!  உன்னைப் போன்று ஆட்கள் இத்தேசத்தை ஆள்வதற்கு நிச்சயம் வேண்டும். 
===========================


குருநாதர் :- அறிந்தும் குழந்தாய், உன்னைப் போன்று ஆட்கள் இத்தேசத்தை ஆள்வதற்கு நிச்சயம் வேண்டும். உருவாக்குவேன் வருங்காலத்தில். 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னைப் போல் ஆட்கள் தான் எங்களுக்கு தேசத்துக்கு, தேசத்துக்கு தொண்டாற்ற வேண்டும். அதனால, ஆள்வ நீ வந்து, அந்த இந்த உலக, இந்த தேசத்துக்கு நீ தொண்டாற்றுவன்றார். 


அடியவர்கள் :-  உன்னை போல ஆள்கள் தான் எங்களுக்கு வேணும். இந்த உலகத்தை ஆள்வ தேசத்துக்கும் பெரிய சூழ்நிலையை நாங்க உருவாக்குவோம், அப்படின்றார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  உருவாக்குவோம்ன்றார். இந்த தேசத்தை நீங்க வந்து தொண்டாற்றுவீங்க. 


===========================
# எப்போது இறைவன் உங்களுக்கு தொண்டாற்றுவார்?
===========================


குருநாதர் :- எதை, எதை என்று பொறுத்த, அனைவரையுமே நல்மனதாக இருக்க வேண்டும். தேசத்திற்கு தொண்டாற்ற வேண்டும். அப்படி தொண்டாற்றினால், இறைவன் உங்களுக்கு தொண்டாற்றுவான். அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா. 


அடியவர் :-  அனைவருமே வந்து, நம்ம வந்து, இந்த தேசத்துக்கு தொண்டாட்டணும். சரிங்களா? இந்த மாதிரி குருநாதர் சொல்ற மாதிரி, அப்படி தொண்டாட்டினா, இறைவன் வந்து நமக்கு தொண்டாற்றுவார்ன்றாங்க. 


குருநாதர் :- அறிந்தும் இத்தாய்க்கு இருக்கின்ற அறிவு கூட, நிச்சயம் இன்னும் பின் வளர்ந்த, அதாவது வளர்ந்த வயதைத்தான் இங்கு சொல்கின்றேன். அறிவில்லையே, எப்படி பின் இவ் தேசத்தை காப்பாற்றுவார்கள்? 


அடியவர் :-  இவங்க சின்ன குழந்தை, இவங்களுக்கு இருக்கிற அறிவு கூட, உடம்பு வளர்ந்திருக்கு. மனிதன் வளர்ந்திருக்கிறான். அந்த வளர்ந்த மனிதனுக்கு அந்த அறிவு இல்லை. அறிவில்லையே, அப்படின்னு வருத்தப்படுறாங்க. குருநாதர்.


( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday, 26 June 2026

சித்தன் அருள் - 2236 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 2

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 


முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================
# இவ் பகுதி #2 வாக்கின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=15242  
===========================

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

சுவடி ஓதும் மைந்தன் :- ( சிவ குழந்தையை பார்த்து..அம்மா… ) தண்ணி குடிங்க….


குருநாதர் :- அழகாகவே அறிந்தும் பயன் என்ன? இதனால் பல குற்றங்கள், பல பாவ வினைகள் அறிந்தும் சுமந்து தான் வந்திருக்கின்றார்கள். எதனால் மனம் இறங்கி, அறிந்தும் ஏது என்று புரிய, குழந்தாய் அழகாக முதலிலே பாடினாயே திருப்போரூரார் பற்றி. அதை பாடு, மக்கள் அதாவது முருகன் பெண் அனைவருக்கும் ஆசீர்வதிக்கட்டும். 


(திருப்போரூர் கந்தசுவாமி (முருகன்) மீது பாடப்பட்ட மிகவும் புகழ்பெற்ற பக்திப் பாடல். அதனையே மீண்டும் பாடுக என்று அருளினார்கள்)   


சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப நீங்க பாடுறீங்க, பார்த்தீங்களா? அதையே பாட சொல்றார். பாடுங்க…


சுவடி ஓதும் மைந்தன் :-  (மேலும் சில விளக்கங்கள் உரைத்தார்கள் அங்குள்ள அடியவர்களின் கர்ம வினைகள் நீங்க.)


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-  
 
(         ஏது பிழை செய்தாலும், ஏழையேனுக்கு இரங்கித்
தீது புரியாத தெய்வமே – நீதி
நீதி தழைக்கின்ற திருபோரூர் தனிமுதலே – நாயேன்
பிழைக்கின்ற வாறுநீ பேசு….. முருகா… முருகா…


நீயல்லால் தெய்வமில்லை!
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை!
முருகா நீயல்லால் தெய்வமில்லை!  )
 
நேரலை - https://youtu.be/NqRaI13qIDU?t=15337 

( பாடல் பாடி முடித்த பின்னர்..மீண்டும் குருநாதர் வாக்குகள் ஆரம்பமானது…. ) 


===========================
# ஞானத்தை கொடுத்து, அவ்  ஞானத்தின் மூலம் பின் நிச்சயம் உலகத்திற்கு உன்னை தெரியப்படுத்துவேன்
===========================


குருநாதர் :- அழகாக, குழந்தாய். சில பாடல்களுக்கு முருகனே, இறைவனே, நிச்சயம் இறங்குவான்., கவலை வேண்டாம். ஞானத்தை கொடுத்து, அவ் ஞானத்தின் மூலம் பின் நிச்சயம் உலகத்திற்கு உன்னை தெரியப்படுத்துவேன். கவலை வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  பாருங்க, ஞானத்தை நிறைய கொடுத்துருவாரு. நீங்க வந்து அந்த ஞானத்தை நிறைய கொடுத்துட்டு, இந்த உலகத்துக்கே நான் உன்னை தெரியப்படுத்துறேன் என்றார் அகத்தியர். 


குருநாதர் :- இதனால் பின் அனைவருமே அமர்ந்து கொண்டு, அதாவது இவர்களுக்கு ஏதாவது சில கருத்துக்களை கூறு, குழந்தாய். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இவங்களுக்கு ஏதாவது கூறு. நீங்க என்ன பண்றீங்க? நீங்க இவங்களுக்கு ஏதாவது சொல்ல சொல்றாரு. சொல்லுங்க, என்ன சொல்லுவீங்க? நீங்க சொல்லுங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :- ( சுவடியை எடுத்து அவ் குழந்தைக்கு காட்டினார் ) அம்மா, இது அகத்தியர். இங்க பாருங்க, பாருங்க. இது வந்து உங்களுக்கு காமிக்கிறேன். இது அகத்தியரே சொல்றது வந்து. ஓகேங்களா? அதனால வந்து நீங்க இவங்களுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்கன்றார். தைரியமா? அடுத்த லெவல்ல நீங்க வந்து அடுத்த ஸ்டெப் போயிடுவீங்க. வந்து அகத்தியர் உங்களை எடுத்துட்டு போயிடுவார். சொல்லுங்க.


===========================
# உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள் 
===========================

( அவசியம் பின்வரும் இவ் வாக்கினை நேரலையில் காண்க )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=15806 


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


நான் எப்பவுமே ஸ்கூல்ல வந்து, டீச்சர்ஸ் வந்து, கிளாஸ் ஆரம்பிக்க முன்னாடி சொல்லுவாங்க, "பிரேயர் பண்ணுங்க" அப்படின்பாங்க. 


நான் என்ன வேண்டுவேன்னா, எனக்கு அது ஒரு மிஸ் (ஆசிரியர்)  சொல்லித் தந்தது. எல்லாரும் நல்லா இருக்கணும், அப்படின்னு வேண்டணும். 


அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )


===========================
# எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இறைவா, உன்னை மறந்துடவே கூடாது. 
===========================


சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


இப்போ நீ அந்த மாதிரி வேண்டுற, அதே மாதிரி இன்னொருத்தவங்க வேண்டுனாலும் எப்படி? உன்னையும் சேர்த்து, எல்லாரையும்னா உன்னையும் சேர்த்து வரும் இல்லையா? இப்படி எல்லாரும் வேண்டணும் அப்படின்னா, கண்டிப்பா எல்லாரும் நல்லா இருப்போம் அப்படின்னு வந்து சொல்லித் தந்தாங்க. 


அதனால எப்பவுமே, 6thல இருந்து ( ஆறாம் வகுப்பில் இருந்து )  நான் வந்து, எல்லாரும் நல்லா இருக்கணும் அப்படிதான் வேண்டுவேன். முடிஞ்ச அளவுக்கு, நம்மளால ஏண்ட அளவுக்கு, கொஞ்சம் கொஞ்சம் நம்ம பிறருக்கு உதவி செய்வோம். பக்தி செய்வோம். 


எத்தனை... நான் என்னை பொறுத்தவரைக்கும், நான் இறைவனிடம் ஏதாவது கேட்கணும் அப்படின்னா, 


—---“எத்தனை ஜென்மம் எடுத்தாலும், இறைவா, உன்னை மறந்துடவே கூடாது.”-------


அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா  பாருங்க, பாருங்க. யாருக்கு இந்த இது ( மனசு ) வரும்? பார்த்தீங்களா !!!!! இதுதான் !!!!!. இது எத்தனை பேருக்கு இது (மனசு) வரும்? எனக்கு அது கொடு, இது கொடு. இறைவன் கையில வந்து, ஏதோ வேலையாளு மாதிரி நம்மளுக்கு இறைவனை வந்து— சொல்லுங்க, குட்டி, சொல்லி குட்டி. சொல்லுங்க. ரைட். சோ, பேசுங்க, பேசுங்க.


===========================
# ஏன் சிவபுராணம் பாடலில் முதல் வரி  - "நமச்சிவாய வாழ்க"  என்று உள்ளது?
===========================


மீண்டும் சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


(இறைவா)  நீ நல்லா இருக்கணும் ஃபர்ஸ்ட். நீ நல்லா இருந்தா, நானும் நல்லா இருப்பேன். அப்படித்தான் வேண்டுவேன். அதான்... அதனாலதான் சிவபுராணத்துல முதல் வார்த்தையே என்னன்னு படிச்சிருக்காங்க. "நமச்சிவாய வாழ்க" அப்படின்னு பாடி இருக்காங்க இல்லையா? 


அதாவது முதல்ல சிவபெருமான், நீ வந்து, நீ முதல்ல நல்லா இருக்கணும். நீ நல்லா இருந்தாலே, நீ வந்து என்னை நல்லாதான் வச்சிருப்ப. அந்த மாதிரி ஃபர்ஸ்ட் நான் ஒரு... இங்க வந்து, திருவண்ணாமலைக்கு நேத்து போயிருந்தேன். 


===========================
# திருவண்ணாமலையார் தரிசனம் 
===========================


அங்க போன உடனே, அந்த சிவபெருமானை பார்த்த உடனே, எனக்கு என்ன கேட்கிறேனே தெரியல. ஒரே அழுகையா வந்துச்சு. அது எனக்கும் அவருக்கும் உள்ள ஒரு பாண்டிங், அவ்வளவுதான். நான் பேசவே மாட்டேன். பார்த்துக்கிட்டே இருப்பேன். அங்க அந்த லைன் போக முடிக்கிற வரைக்கும், நான் அவரை பார்த்துக்கிட்டே இருப்பேன். எதுவுமே கேட்க மாட்டேன். அவருக்கு தெரியும், நம்ம எல்லாம் என்ன கேட்கிறது? 


என்னை என்ன படிக்க வை? எனக்கு வந்து நிறைய... 


ஞானத்தை கொடுன்னு வேணா கேட்கலாம். அது கொடு, இது கொடு, இப்படின்னு எப்படி கேட்க முடியும்? 


அது அவருக்கே தெரியும். உனக்கு என்ன கொடுக்கணுமோ, அவர் வந்து கண்டிப்பா ஒரு நாள் தருவாரு. அதுக்குள்ள பக்குவம் வந்துச்சுன்னா, அவரே ஆட்டோமேட்டிக்கா தருவாரு. நம்ம எல்லாம் போயிட்டு, எனக்கு இது தா, எனக்கு அது தான்னு கேட்கிற, அவர் என்ன ஆர்டரா பண்றோம்? அப்படி கேட்கக்கூடாது. 


அவரா வந்து நம்மளுடைய மனப்பக்குவம்... அதாவது சிவபெருமான் என்ன பண்ணுவாரு? கொஞ்சம் சோதிக்கத்தான் செய்வாரு. எதுக்கு? நம்ம மனசு வந்து பக்குவம் அடைகிறதுக்காக. சோதனை தந்து, நம்ம மனசை பக்குவப்படுத்திட்டு, அதுக்கு அடுத்து, அவன் பக்குவம் ஆயிட்டானா அப்படின்னு பார்த்துட்டு தான், நமக்கு என்ன தேவையோ, அதை கண்டிப்பா தருவாரு. 


அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் )


===========================
# உங்கள் கர்மவினை தீர - மிக சிறந்த வழிபாடு, கூட்டுப் பிரார்த்தனைக்கு  அடியவர்கள் அவசியம் தவறாமல் வருவது ஒன்றே ஆகும் !!!
===========================


குருநாதர் :-  குழந்தாய், அறிந்தும், பல வினைகள் தீர்ப்பதற்கு அனைவரும் ஓடோடி வந்துள்ளார்கள். இதனால் சிவபெருமானிடம் அறிந்தும், அதாவது நீ எதை என்று அறிய, அனைத்தும் பாடலாக பாடு. நிச்சயம் அவர்களை வேண்டி, பின் அதாவது ஈசனை அழகாக நிச்சயம் பின் மனதிலே நிறுத்தச் சொல். அப்பொழுது நீ பாடு, நிச்சயம் ஈசன் அருள் புரிவான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் நீங்களே சொல்ல சொல்றாரு. என்ன சொல்றாரு? சொல்லுங்க. எல்லாரும் ஈசனை ஒரு மனசுல நினைச்சுக்கோங்க. வந்து என்னென்ன வேணும், என்னென்ன சொல்லி நீங்களே நினைச்சுக்கோங்க. நீங்க பாடல் பாடினீங்கன்னாவே தானா ஈசன் தேவையானதெல்லாம் கொடுப்பாருன்றாரு. வந்து நீங்க திருப்பியும் பாட சொல்றாரு. சொல்லுங்கமா. 


( அவசியம் பின்வரும் இவ் வாக்கினை நேரலையில் காண்க )


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=16023 


===========================
# பக்தியின் ஒன்பது நிலைகள் 
===========================
# ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம நிவேதனம்.
===========================


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை உரைத்த வாக்குகள்:- 


எல்லாரும் உங்க மனசுக்குள்ள, ஈசன் அவர்கள் வந்து, கண்டிப்பா நினைச்சுக்கோங்க. நீங்க நினைச்சீங்கனாலே அவர் வந்து புரிஞ்சுக்குவார். 


சரி நம்மள வந்து (இவங்க) கூப்பிடுறாரு. அதாவது, சிவபெருமான் என்ன செய்வாராம்? ஒரு நாள் இல்லனா, ஒரு நாள் கண்டிப்பா அவர் வராம். 


(சிவபெருமான் ) இவர் என்ன வரவே மாட்டேங்குறாரு?  நம்ம இத்தனை நாள் கூப்பிட்டுக்கிட்டே இருக்கோம்?  அப்படின்னு நினைக்கக்கூடாதாம். 


நாம  அவரை வந்து நினைச்சுக்கிட்டே இருக்கணும். அப்புறம் நம்ம எதுக்கு பிறந்திருக்கோம்? அவரை வந்து நினைச்சுக்கிட்டே இருக்கணும். அவர் பாடிக்கிட்டே இருக்கணும். 


பாட தெரியுதா? பாடணும். ஒன்னும் இல்ல. அதாவது, பக்தியை 9 விதமா பிரிச்சிருக்காங்க: ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சக்யம், ஆத்ம நிவேதனம். இப்படி 9 வகையா பிரிச்சிருக்காங்க. 


===========================
# இறைவனை அடைவதற்கான ஒன்பது வழிகளின் எளிமையான விளக்கங்கள். இவ்  வழிகள் இதுவரை தெரியாதவர்கள் , இவ் அம்மையின் வாக்குகளை நேரலையில் கேட்டு அதன் படி இறைவனை வணங்கவும்.
===========================

(1) ஸ்ரவணம் அப்படின்னா கேட்டல் அப்படின்னு பொருள். அவரைப் பத்தி பாடல்களோ, அல்லது இந்த மாதிரி உபநியாசங்களோ, இந்த மாதிரி அவரை கேட்டுக்கிட்டே இருக்கணுமாம். இந்த மாதிரி கேட்டு வழிபடுவது தான் ஸ்ரவணம்.  (1.ஸ்ரவணம்: இறைவனின் திருவிளையாடல்கள், கதைகள் மற்றும் புகழைக் காதுகளால் கேட்டல். ) 


(2) இரண்டாவது கீர்த்தனம். கீர்த்தனம்னா தான் பாடுவது. அவருடைய நாமங்களையோ, அவருடைய பாடல்களையோ பாடி வழிபடுவது தான் கீர்த்தனம்.  (2.கீர்த்தனம்: இறைவனின் புகழைப் பாடி மகிழ்தல். ) 


(3) மூன்றாவது ஸ்மரணம். இந்த ஸ்மரணம் என்னன்னா, மனசுல நினைச்சல் அப்படின்னு பொருள். இப்போ கைக்குழந்தையின் தாய் எப்படி? குழந்தை வந்து தூங்கிட்டு தான் இருப்பா. ஆனாலும் அவளோட மனசு என்ன? எங்க இருக்கும்? குழந்தை நினைப்பாவே இருக்கும். அவ வேலை செஞ்சுகிட்டே இருப்பா. குழந்தை முழிச்சிருப்பானா? தூங்கி இருப்பானா? அப்படின்னு குழந்தை நினைப்பாவே இருக்கும் இல்லையா? அதே போல தான் நம்மளும் இருக்கணுமாம். சிவபெருமானை நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். என்னதான் வேலை வேலையா இருந்தாலும், சிவபெருமானை ஒரு பக்கம் நினைச்சுக்கிட்டே இருக்கணுமாம். இப்படி நினைச்சு வழிபடுவது தான் ஸ்மரணம்.  (3.ஸ்மரணம்: எப்போதும் இறைவனையே நினைவில் கொள்ளுதல் (அனுமன், மீரா போன்றவர்கள்). )


(4) நான்காவது பாத சேவனம். அவருடைய பாதாரவிந்தங்களையே வணங்குவது பாத சேவனம். (4.பாத சேவனம்: இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து தொண்டு செய்தல். )


(5) ஐந்தாவது அர்ச்சனம். அதாவது, நம்ம விளக்கு பூஜை எல்லாம் பண்ணுவோம் இல்லையா? 108 போற்றி, 1008 போற்றின்னு அர்ச்சனை செய்து வழிபடுவது அர்ச்சனம். (5.அர்ச்சனம்: மலர்களால் இறைவனைப் பூஜித்து வழிபடுதல். ) 


(6) வந்தனம்: இறைவனை வணங்கிப் பணிதல். 


(7) தாஸ்யம். தாஸ்யம் அப்படின்னா, கடவுள் எனக்கு எஜமான். நான் அவருக்கு ஒரு தொண்டன். இல்ல, அவருக்கு வேலைக்காரன். இப்படி நினைச்சு வழிபடணுமாம். இது வந்து தாஸ்யம். ( 8.தாஸ்யம்: இறைவனின் தாசனாக (அடிமையாக) இருந்து சேவை செய்தல் (அனுமான் , இலட்சுமணன்). ) 


(8) எட்டாவது சக்யம். சக்யம்னா, அதாவது, நான் இப்படித்தான் நினைச்சு வழிபடுறேன். நமக்கு எத்தனையோ பிரண்ட்ஸ் இருக்காங்க. அதோட சிவபெருமானையும் ஒரு பிரண்டா ( Friend / நண்பனாக )  நினைச்சுக்கணுமாம். அவர் எனக்கு ஒரு தோழன். நானும் அவருக்கு ஒரு தோழி. இப்படி நினைச்சு வழிபடுவது தான் சக்யம்.  ( சக்யம்: இறைவனோடு நட்புறவு கொள்ளுதல் (அர்ஜுனன், சுக்ரீவன்). 


( இவ்விடத்தில் அடியவர்கள் பலத்த கைதட்டல்கள் ) 


(9) ஒன்பதாவது ஆத்ம நிவேதனம். ஆத்ம நிவேதனம் அப்படின்னா, நம்மளுடைய ஆத்மாவையே இறைவனுக்கு அர்ப்பணம் செய்றது. அதாவது, சிவபெருமானே, நீ எல்லாத்தையும் பார்த்துக்கோ. நான் என்னத்துக்கு இருக்கேன்? நீ எல்லாத்தையும் பார்த்துக்கோ. அப்படின்னு நம்மளுடைய ஆத்மாவையே அர்ப்பணம் செய்றது. (9. ஆத்ம நிவேதனம்: தன்னையே முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்தல் (சரணாகதி) ) 


எங்க அம்மா இப்படித்தான். எங்க அம்மா நல்லா பாடுவாங்க. அவங்க வந்து கச்சேரில எல்லாம் பாடும்போது தொண்டை கட்டிடும். அப்போ சிவபெருமானை பத்தி சொல்லுவாங்க. 


சிவா, எனக்கு இன்னைக்கு தொண்டை கட்டிருக்கு. பரவாயில்லை. யாரு எனக்கு வந்து கெட்ட பேர் வந்தாலும், நீதான் வாங்கிக்கணும். நல்ல பேர் வந்தாலும், நீதான் வாங்கிக்கணும். அப்படின்னு சொல்லுவாங்க. அதே போல தான் நம்மளுடைய ஆத்மாவையே அவர்கிட்ட அர்ப்பணிக்கிறது தான் ஆத்ம நிவேதனம். 


இப்படி ஒன்பது வகைகள் இருக்கு பக்தியில். இப்போ இந்த தெப்பக்குளம் இருக்கு. நாலு படித்துறைகள் இருக்கு. அதுல எந்த படித்துறை வழியா இறங்கினாலும், தெப்பகுளத்து தண்ணில இறங்கிடலாம் இல்லையா? அதே போல தான், இந்த பக்தியும் ஒன்பது வகைகள் இருக்கு. அந்த ஒன்பது வகையில ஏதாவது ஒரு வகை நம்ம வந்து ஃபாலோ பண்ணாலும், கண்டிப்பா இறைவனை அடையலாம். இறைவன் நம்மளையே வந்து கூட்டி, அதாவது நம்மளையே ஆட்கொண்டுருவார் சிவபெருமான். இந்த மாதிரி ஒன்பது வகையில ஏதாவது ஒரு வகையில நீங்க ஃபாலோ பண்ணலாம். 


===========================
# அடியவர்களின் புரிதலுக்காக - இறைவனை அடைவதற்கான ஒன்பது வழிகளின் எளிமையான விளக்கங்கள்:-


1. ஸ்ரவணம்: இறைவனின் திருவிளையாடல்கள், கதைகள் மற்றும் புகழைக் காதுகளால் கேட்டல். (ஸ்ரீ ராம பக்த அனுமான்)
2. கீர்த்தனம்: பகவானின் புகழைப் பாடி மகிழ்தல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)
3. ஸ்மரணம்: எப்போதும் இறைவனையே நினைவில் கொள்ளுதல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், மீரா போன்றவர்கள்).
4. பாத சேவனம்: இறைவனின் திருவடிகளைச் சரணடைந்து தொண்டு செய்தல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)
5. அர்ச்சனம்: மலர்களால் இறைவனைப் பூஜித்து வழிபடுதல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)
6. வந்தனம்: இறைவனை வணங்கிப் பணிதல்.(ஸ்ரீ ராம பக்த அனுமான்)
7. தாஸ்யம்: இறைவனின் தாசனாக (அடிமையாக) இருந்து சேவை செய்தல் (ஸ்ரீ ராம பக்த அனுமான் , இலட்சுமணன்).
8. சக்யம்: இறைவனோடு நட்புறவு கொள்ளுதல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், அர்ஜுனன், சுக்ரீவன்).
9. ஆத்ம நிவேதனம்: தன்னையே முழுமையாக இறைவனிடம் ஒப்படைத்தல் (ஸ்ரீ ராம பக்த அனுமான், சரணாகதி). 
===========================

அதனால எல்லாரும் சிவபெருமானை மனசுல நினைச்சுக்கோங்க. ஒரு பாடல்.


உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல்:-  


நேரலை :- https://www.youtube.com/watch?v=NqRaI13qIDU&t=16257s

திருஞானசம்பந்தர் பெருமான் அருளிய பாடல்:- 


மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருஆல வாயான் திருநீறே 

……………..
……………..
……………..
……………..



( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!