​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 14 May 2026

சித்தன் அருள் - 2212 - நந்தியார் வட்டை பூ!


நந்தியார் வட்டை பூ, எங்கும் எளிதாக கிடைப்பது,  பூக்களிலேயே மிக உன்னதமான மூலிகை சக்தி உடையது என சித்தர்கள் கூறுகிறார்கள். இது கண் பார்வை சம்பந்தமான எந்த குறையையும் (தூரப்பார்வை, கிட்டப்பார்வை, வெள்ளெழுத்து, கண் புரை, குளுகோமா) போன்றவைகளை சரி செய்யும்.

சரி எப்படி உபயோகிப்பது?

நான்கு அல்லது ஐந்து பூக்களை பறித்து, 100 அல்லது 200 மில்லி சுத்தமான தண்ணீரில் போட்டு குறைந்தது மூன்று மணி நேரம் வைத்து இருந்து, பூக்களை அகற்றி அந்த நீரை ஒரு கண்ணாடி குடுவையில் எடுத்து, தொடர்ந்து தினமும் காலை ஒரு சொட்டு இரு விழிகளிலும், மாலை ஒரு சொட்டு இரு விழிகளிலும் விட்டு வந்தால், எந்த குறை இருந்தாலும் அது விலகிவிடும். கண்ணாடியை ஒதுக்கி வைத்துவிடலாம், கண் புரை காணாமல் போய்விடும், அறுவை சிகிர்ச்சையை தவிர்க்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 12 May 2026

சித்தன் அருள் - 2211 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!





25/4/2026 அன்று குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.

ஆதி பகவானின், பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, ஆசிகள்.

 அப்பனே, ஏன்-எதற்கு? அப்பனே, ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குறை என்பதையெல்லாம் அப்பனே பல வாக்கியத்தில் செப்பியுள்ளேன்.

 ஆனாலும், அப்பனே, அக் குறைகள் அப்பனே எப்படி நீங்கும்????? என்பவையெல்லாம் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

 அப்பனே, அவை யார் இயக்குவது? அப்பனே, எதன் மூலம் செயல்படுவது???? என்பதையெல்லாம் அப்பனே தெரியாமல் நின்றாலும், அப்பனே, அதற்கு வருங்காலத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின், அதாவது பின் அறிந்தும் ஒன்றிணை புகுந்து, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இதற்கும் அப்பனே சான்றாக ஒரு தீபத்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொல்வேன், அப்பனே.

அத்  தீபம் என்ன??? தீபம் என்பவையெல்லாம். அப்பனே, !!!

அனைத்தும் ஏன் இந்த நாடகங்கள்???? என்பவையெல்லாம் அப்பனே பின் அதாவது அழகாகவே அப்பனே இறைவன் படைத்துத்தான் அனுப்புகின்றான்.

 அவ் நாடகத்தில் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட வெற்றி பெறுவதா???, தோல்வி பெறுவதா???? என்பவையெல்லாம் அப்பனே மனிதன் தீர்மானிக்கின்றான், அப்பனே. 

அதாவது இறைவன் அப்பனே நிச்சயம் நாடகத்தை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அழகாக நடக்க  அதாவது ஆரம்பமாகி, அப்பனே முடித்து வைப்பது மனிதனே.

 அதனால்தான் அப்பனே நாடகத்தில் அப்பனே சரியாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல உண்மைகள் அதாவது நாடகம் தான் கஷ்டம் என்பேன், அப்பனே.

 அவ் நாடகத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நல்முறையாக நல்மனதாக திருந்திவிட்டால், அப்பனே நாடகம் பின் முழுமை அடைந்துவிடும் என்பேன், அப்பனே.

 அப்படி இல்லை என்றால், அப்பனே மறுபடியும் ஒரு நாடகத்தை அப்பனே நிச்சயம் கொடுப்பான் என்பேன், அப்பனே.

 மக்கள் அதனால்தான் அப்பனே துன்பத்தில் ஆழ்ந்து இருக்கின்றார்கள் இக்கலியுகத்தில் என்பேன், அப்பனே.

 அதாவது ஒரு நாடகம் இறைவன் மனிதனுக்கு கொடுக்கின்றான். அவ் நாடகத்தில் அப்பனே பின் நிச்சயம் தன்னில் வெற்றி பெறுவதில்லை.

 இதனால் மறு நாடகம் மறு நாடகம் என்று போய்க்கொண்டே இருக்கின்றது என்பேன், அப்பனே.

 இதனால் அப்பனே நல்விதமாகவே முதல் நாடகத்திலே அப்பனே உண்மை நிலை தெரிந்து கொண்டு இறைவனை சரணாகதி அடைந்து, அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மெய்ஞானத்தை உணர்ந்தால், அப்பனே அடுத்த நாடகத்தில் அப்பனே நல்முறையாகவே அனைத்தும் நடக்குமப்பா.

 இதுதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட தெய்வத்தின் அனுக்கிரகம்.

 அப்பனே, ஏனென்றால் கலியுகத்தில் உண்மை நிலை தெரிந்து கொள்ள முடியாதப்பா.

 அதனால்தான் அப்பனே சித்தர்கள் பல வகையில் கூட அப்பனே  நிச்சயம் தன்னில் கூட அதாவது சொல்லியிருக்கின்றோம், அப்பனே. அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே எப்படி அலைவான்???, எங்கு நன்றாக அதாவது எங்கு நல்லது நடக்கின்றது??? என்பதையெல்லாம் அப்பனே மனிதன் அலைந்து திரிந்து கொண்டு, அப்பனே கடைசியில் பின் உறங்குவான் என்பேன், அப்பனே.

 அதாவது இவ் உறங்கு என்பது அப்பனே யான் எதை எங்கு? சொன்னேன் என்பவையெல்லாம் அப்பனே தீர்மானித்துக் கொள்ளுங்கள், அப்பனே. 

இதனால் அப்பனே ஏது என்று புரிய அப்பனே உடலில் உள்ள மனதில் உள்ள அழுக்குகள் எடுக்க அப்பனே நல்முறையாக ஆகும். நல்முறையாகும்.

 அப்பனே அவ்வாறாக பின் எடுக்கப்படவில்லை என்றால், அப்பனே இறைவனே பின் நிச்சயம் பின் எடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்தும் கூட இறைவன் எடுக்க வேண்டுமென்றால், அப்பனே பின் கஷ்டத்தை கொடுத்துத்தான் எடுப்பான் என்பேன், அப்பனே. 

அதனால் உண்மை நிலை தெரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.

 அதனால் ஒவ்வொரு மனிதனும் அப்பனே அதாவது ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவன் நல்வாழ்க்கைத்தான் தருகின்றான்.

 ஆனாலும் இடையே அப்பனே மாயையில் சிக்கிக்கொண்டு பல வகையான அப்பனே நிச்சயம் தரித்திரங்கள் பெற்றுக்கொண்டு, அப்பனே எது என்று புரிய அப்பனே.

 இதனால்தான் அப்பன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது அப்பனே கலியுகத்தில் அனைத்தும் மனிதனிடத்தில் தான் கொடுத்துள்ளான் என்பேன், அப்பனே.

 ஆட்சி பலங்கள் என்பேன், அப்பனே.

 அவை சரியாக பயன்படுத்துவதே இல்லை.

 அதனால்தான் அப்பனே சித்தர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையான பின் மனிதர்களுக்கு வந்து அப்பனே உரைத்துக் கொண்டிருக்கின்றோம்.ஞானத்தை!!!


 தெளிவு பெறவில்லை என்றால், அப்பனே அழிவுகள் தான் பலம் என்பேன், அப்பனே.


 ஏனென்றால் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம்.
 அப்பனே!!


 நிச்சயம் மனிதன் திருந்தவில்லை என்றால், அப்பனே பின் மனிதன் ஏது என்று புரிய பின் அதற்கு மீறி அப்பனே ஒருவன் பின் அதாவது மனிதனை அப்பனே அழைத்து வந்தால்தான் என்பேன், அப்பனே. நிச்சயம் திருத்தவும் முடியும் என்பேன், அப்பனே. 

அதாவது பின் மனிதன் திருடனாக இருந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட பொய் குருவனாக (போலி ஆன்மீக குரு) இருந்தால், அப்பனே இன்னும் பலவற்றை செய்து கொண்டிருந்தால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதேபோலத்தான் மனிதனை எடுத்து வந்து அப்பனே அமர வைத்து அப்பனே அனைத்தும் சரி செய்ய வேண்டும் !!

 சொல்லிவிட்டேன், அப்பனே. 


அதாவது ஒவ்வொரு மனிதனின் கூட கடமையாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நல்லொழுக்கங்கள் தேவைப்படுகின்றது என்பேன், அப்பனே.!!


 அவ் ஒழுக்கங்கள் வருங்காலத்தில் அழிந்து கொண்டே இருக்கும் என்பேன், அப்பனே. 


இதனால் அப்பனே அவ் ஒழுக்கங்கள் எப்பொழுது அழிகின்றதோ!?, அப்பொழுது தர்மங்கள் கூட அப்பனே இன்னும் கூட தாழ்வாக போகும் என்பேன், அப்பனே


 ஆனாலும் யாங்கள் விடப்போவதில்லை என்பேன், அப்பனே.


 கெட்டியாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே மீண்டும் அப்பனே தர்மத்தை அப்பனே நிலைநாட்டுகின்ற பொழுது, அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில சில சங்கடங்கள் அப்பனே பின் சில அப்பனே பின் சண்டைகள் வரலாம்.


 ஆனாலும் அப்பனே நல்விதமாகவே அனைத்தும் மாற்ற வைப்போம், அப்பனே.


 ஏது என்று புரிய அப்பனே. அதாவது இறைபலங்கள் மனிதனுக்கு தெரிவதில்லை என்பேன், அப்பனே.


 ஏனென்றால் மாயை இருக்கின்ற பொழுது இறைபலங்கள் தெரியாதப்பா.


 அப்பனே மாயைக்காகவே இறைவனை வணங்குகின்றான் மனிதன். 


இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் மாயை அப்பனே பின் எப்படி கண்ணுக்கு தெரிவதில்லையோ!?, அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் இறைவனை வணங்கினாலும், அப்பனே மாயையை வைத்துக்கொண்டு இறைவனும் கண்ணுக்குத் தெரிவதே இல்லை என்பேன், அப்பனே.


 இதனால் அப்பனே மனது ஒரு திருடன் இதை தன் புசுண்டனும்(காகபுஜண்டர்) எடுத்துரைத்துவிட்டான். 

அவ் மனதில் அப்பனே எவ்வளவு? ஏது? என்று புரிய அப்பனே எத்தனை திருடர்கள் இருக்கின்றார்கள், அப்பனே. அத்திருடர்கள் எல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அறிந்து கூட பின் வெளியேற்ற வேண்டும், அப்பனே.

 அவை வெளியேற்றுவதற்கு இறைவன் தான் அப்பனே நிச்சயம் தேவைப்படுகின்றான் என்பேன், அப்பனே.


 நிச்சயம் ஒவ்வொன்றாக பின் வெளியேற்றுவதற்கு ஒவ்வொரு அடியாக பின் அடித்து அடித்து அப்பனே வெளியேற்றுவதனால், அப்பனே நிச்சயம் உங்களுக்கும் அப்பனே தெரியாமல் கஷ்டங்கள் வருகின்றது.

 தெரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.
 அறிந்தும் கூட!!

 இதனால் அப்பனே நல்விதமாக அப்பனே எத்தனை? எத்தன விதமான அப்பனே நிச்சயம் இறைவன்  பால் அப்பனே பக்தர்கள் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறாக பின் எதை என்று புரிய அப்பனே நல்விதமாக பல வழியில் கூட அப்பனே பின் எத்தனை?? எத்தனை??? நாராயணனுக்கு பக்தர்கள் என்பேன், அப்பனே.
 உண்மையான பின் பக்தர்கள் !!

ஆனாலும் இக்கலியுகத்தில் அவையெல்லாம் மாறிவிட்டது என்பேன், அப்பனே. 


ஏதோ!?? இறைவனை பார்க்கின்றோம், இறைவன் தருவான் என்றெல்லாம் நின்று கொண்டிருக்கின்றான் என்பேன், அப்பனே. மனிதன் !!


இதனால் அப்பனே பின் அதாவது ஏழு மலையான் பின் பற்றி கூட மனிதன் ஏது என்று கூட அங்கு சென்றால் தவறாக நடந்துவிடும் என்றெல்லாம், அப்பனே. 


(சில மனிதர்கள் திருப்பதி சென்றால் தவறாகிவிடும் இந்த ராசிக்காரர்கள் திருப்பதி செல்லக்கூடாது இந்த நட்சத்திரக்காரர்கள் திருப்பதி செல்லக்கூடாது என்றெல்லாம் யூட்யூபில் அரைகுறை ஜோதிடத்தை வைத்துக்கொண்டு பேசுவதை நாம் காண முடிகின்றது.. இந்த ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் திருப்பதி சென்றால் செல்வங்கள் அனைத்தையும் பெருமாள் பிடுங்கிக் கொள்வார் என்றெல்லாம் தவறாக தகவல்கள் பரப்பப்படுகின்றது..

திருப்பதி திருமலைக்கு மட்டுமல்ல சில நவகிரக ஸ்தலங்கள் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயம் உட்பட அங்கு சென்றாலீ ஆட்சி கவிழ்ந்து விடும் பதவி பறிபோய்விடும் தோஷங்கள் ஏற்படும் என்றெல்லாம் போலியான மனிதர்கள் தங்கள் இஷ்டம் போல திருத்தலங்களைப் பற்றி தவறான தகவல்களை பரப்பிக் கொண்டு வருகின்றார்கள் இப்படிப்பட்டவர்கள் தாழ்வு நிலைக்கு சென்று விடுவார்கள்)


அதாவது இறைவன் பற்றியே அப்பனே மனிதன் குறை கூறும் அளவிற்கு கலியுகம் வளர்ந்துவிட்டது என்பேன், அப்பனே.



 அப்படி நிச்சயம் தன்னில் எப்பொழுது??? அப்படி வளர்ந்து விடுகின்றதோ, அப்பொழுதே மனிதன் பின் நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் கீழ்நோக்கி தான் செல்வான். அப்பனே!!


அப்பனே  அத் திருத்தலம் செல்லக்கூடாது, இத் திருத்தலம் செல்லக்கூடாது, அத் திருத்தலம் சென்றால் இவ்வாறு நடக்கும் என்பவையெல்லாம், அப்பனே.


இறைவன் பற்றியே மனிதன் எவ்வளவு?? கர்வங்கள் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றான். 


அப்பொழுதே அப்பனே மனிதன் அழிந்தான் என்பது அப்பனே ஏது என்று புரிய!!


 அனைத்து இடங்களிலும் கூட ஒரு சக்தி இருக்கின்றது என்பேன், அப்பனே.

 அவை எப்பொழுதுமே மனிதன் உணர்ந்ததில்லை என்பேன், அப்பனே.


 அதாவது மாயையை  அப்பனே பின் கிழித்து எறிந்தால்தான் உணரவும் முடியும்.

 அவையும் எப்படி?? கிழித்து எறிவது???? என்பதையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைத்துக் கொண்டே, எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றேன், அப்பனே. நலங்களாகவே



 அதாவது ஏது என்று புரிய, அப்பனே. இவ்வாறாக அப்பனே நல்விதமாகவே எதை என்று புரிய, அப்பனே. நிச்சயம் எங்கிருந்தோ அப்பனே ஏது என்று புரிய, அப்பனே. பின் இமயம் தன்னில் கூட(இமயமலையில் இருந்து) 

 அப்பனே எது என்று அறிய, அப்பனே. அங்கு தவம் இற்றிக் கொண்டிருந்தார்கள் என்பேன், அப்பனே. நல்விதமாக அப்பனே பின் இரு சந்நியாசிகள், அப்பனே.


 இதனால் அவர்களுக்குள்ளே அப்பனே பின் சண்டைகள் வந்தது!!


 ஏது என்று புரிய, அதாவது பின் அறிந்தும் கூட இவையும் கூட அப்பனே பின் ஈசன் திருவிளையாடலே என்பேன், அப்பனே.

 அதாவது நாராயணன் ஏது என்று புரிய, பிரம்மாவும் அப்பனே.

 அதாவது அறிந்து கூட பின் அதாவது என் நாராயணன் தான் பெரியவன்.


 இன்னொருவன் அறிந்தும் கூட பின் அதாவது பின் ஈசன் தான் பெரியவன் என்று இருவருக்கும் சண்டைகள்.



 ஆனாலும் பின் சென்று பின் பார்ப்போம் எதை என்று அறிய  என்றெல்லாம்!!

 ஒருவன் அண்ணாமலை சென்றான், 


ஒருவன் ஏழுமலையில் சென்றான்.



 அதனால்தான் ஒருவன் பெயர் பின் எது என்று புரிய, பின் அறிந்தும் கூட எதை என்று புரிய, அப்பனே.



 இவ்வாறாக அப்பனே பின் அங்கு அண்ணாமலையில் தங்கி, அப்பனே ஏது என்று புரிய, அறிந்தும் கூட தவங்கள் இயற்றிக் கொண்டு நிச்சயம் தன்னில் கூட!!

 இருவரும் பேசிக் கொண்டனர்.

 பார்ப்போம் !!....

ஏது என்பது யாருக்கு?? சீக்கிரமாகவே பின் இறைவன் தரிசனம் கொடுக்கின்றானோ??, அவர்கள் நிச்சயம் மீண்டும் பின் இமயமலையில் வந்து ஏது என்று புரிய, 
பின் இங்கே வந்து விடுவோம் என்று.

 இதனால் பின் அவர்களுக்கும் தெரியும் ஏது எங்கு சென்றால் என்பது,??


 அதாவது கீழ்நோக்கி (தக்ஷின பாரதம்) சென்றால்தான் விஷயங்கள் இருக்கின்றது என்பதை எல்லாம் பின் வந்தார்கள்!!


 அதாவது அண்ணாமலை நோக்கி தவம் புரிந்தான் ஒருவன்,



 இன்னொருவன் ஏழுமலையில் வந்து பின் தவம் புரிந்தான்.


 இருவருக்கும் ஏது என்று புரிய, 


ஆனாலும் பின் பல வழியில் கூட பின் தவம் புரிந்தார்கள்.


 ஆனாலும் பின் ஏதுவுமே கிடைக்கவில்லை. 


ஏது என்று அறிய அறிய இறைவனும் கூட எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட இதனால் எவை என்று புரியாமல் கூட தவம் செய்து கொண்டே இருந்தார்கள்.


 ஆனாலும் பின் அறிந்தும் கூட பல ஆண்டுகள் பின் எதை  என்றறிய, !!!


பின் ஒருவன் நமசிவாய,!!!!


 ஒருவன் 
நமோ நாராயணா!!!!

 என்றெல்லாம்!!!


 நிச்சயம் வா!!! வா!!! அறிந்தும் கூட!!




 பின். அதாவது  உமக்கே சேவை செய்து கொண்டிருந்தோம்,


 இன்னொருவன் இன்னொருவன் கூட உமக்கே சேவை செய்து கொண்டிருந்தோம்.

 அங்கிருந்து சண்டைகளிட்டு!!

 ஏது என்று புரியாமலும், அதனால் நீயே தான் பெரியவன் என்று !!

ஆனாலும் இவனும் அப்படி தான்.

 இருவரும் கூட அங்கே அண்ணாமலை தான் ஒருவன் பெரியவன் என்று பின் வணங்குகின்றான்.


 இங்கு ஏது என்று புரிய, பின் புரியாமல் இங்கே நாராயணன் தான் பெரியவன் என்று பின் வணங்குகின்றான்.


 ஏது என்று புரிய, அப்பனே இவை போலே ஏது என்று புரிய, ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட.

 ஆனாலும் இருவரும் சலித்துவிட்டனர். அறிந்தும் புரிந்தும் கூட


 இதனால் ஏது என்று புரிய இவ்வாறு சலித்துவிட்டனர்.


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் அவனுக்கு தெரிந்தது. பின் அதாவது அண்ணாமலையில் இருப்பவனுக்கு தெரிந்தது. 



அதனால் இறைவன் வரப்போவதில்லை. எதை என்று புரிய,


 பின் அதாவது அவன் அங்கு இருக்கின்றான் அல்லவா?(மற்றொரு ஞானி) ஏழு மலைக்கு செல்வோம் என்று அறிந்தும் கூட, 


அதாவது எவை என்று கூட இவனும் நினைத்தான். அதாவது இவ்வளவு நாட்கள் தவம் செய்து கொண்டிருந்தோம்.!!!

 ஏழு மலையானும் நிச்சயம் பின் ஏது என்று புரிய, அறிந்து கூட வரப்போவதில்லை.
 நிச்சயம் தன்னில் கூட


 பின்  அவன்  இருக்கின்றான் அல்லவா?  (அண்ணாமலையில் மற்றொரு ஞானி)


அண்ணாமலைக்கு செல்வோம் என்று!!!




 இருவரும் இங்கிருந்து அங்கு செல்ல 
அங்கிருந்து இங்கு வர
 முடிவெடுத்தார்கள்.


 அண்ணாமலையில் இருப்பவன் இங்கு வந்துவிட்டான்.


 இங்கு இருப்பவன் அண்ணாமலைக்கு சென்றுவிட்டான்.
அழகாக!!

 ஏது என்று புரிய, அறிந்தும் கூட எதை இங்கு பின் அண்ணாமலையில் இருந்து இங்கு வந்தவனுக்கு  இங்கு தரிசனம் கிட்டியது. ஈசன் போல்!!!

 எதை என்று புரிய,!!

(அண்ணாமலையிலிருந்து ஏழு மலைக்கு வந்த ஈசன் தான் பெரியவன் என்று சண்டையிட்ட சிவ பக்த ஞானிக்கு ஏழுமலையான் ஈசனைப் போன்று தரிசனம் கொடுத்தார்)


 பின் அறிந்தும் கூட இங்கிருந்து, பின் அறிந்து கூட அங்கு செல்பவனுக்கு அப்பனே அறிந்து கூட ஏது என்று புரிய. பின் அதாவது பின் ஏழு மலையான் தரிசனம் கிடைத்தது.
 எதை என்று புரிய,

(நாராயணன் தான் பெரியவன் என்று சண்டையிட்ட விஷ்ணு பக்த ஞானிக்கு அண்ணாமலையில் ஈசனார் ஏழுமலையான் பெருமாளாக தரிசனம் கொடுத்தார்)



 எவை என்று கூட இருவரும் பின் ஏது என்று கூட பின் தரிசனம் அறிந்தும் கூட. 


பின் அதாவது எவ்வாறு? எதை என்று புரிய, அதாவது இவ்வாறுதான் நினைத்தோம்,


 ஆனால் மாறி வந்துவிட்டதே என்பதை எல்லாம் அறிந்தும் கூட பின் குழப்பங்கள்.


 ஆனாலும் இவனை பார்த்தால் அங்கில்லை, அங்கில்லை, இங்கில்லை. எதை என்று புரிய,


 அதனால்தான் ஏது என்று புரியாமலும் தவித்தனர். 


ஆனாலும் நிச்சயம் அதாவது இவன் நினைத்துக் கொண்டான், அவன் இறந்துவிட்டான் என்று. 


பின் அவன் நினைத்துக் கொண்டான், இவன் இறந்துவிட்டான் என்று. 


ஆனாலும் நிச்சயம் தன்னில் மாறி மாறி எதை என்று புரிய. பின் அதாவது அண்ணாமலையில் காட்சி அளிக்கும். பின் இறைவன் பின் இங்கு ஏது என்று ஏழு மலையில் காட்சி அளித்தான். அறிந்தும் கூட 


பின் இங்கு தரிசனத்திற்காக இருந்தவன் அங்கு பின் காட்சி  அங்கு சென்றுகின்ற பொழுது அறிந்தும் கூட. பின் அதாவது பின் அண்ணாமலை எவை என்று கூட எது என்று புரிய.


 ஆனாலும் இருவரும், ஆனாலும் உயிரோடு தான் இருக்கின்றார்கள்.


 பக்திகள் தான் அதிகம் ஏது என்று புரிய. 

ஆனாலும் நினைத்துக் கொண்டனர், அறிந்தும் கூட. 

பின் ஏது என்று கூட, பின் இறந்து விட்டிருப்பான். எத்தனை?? வருடங்கள் ஆகிவிட்டது என்று இருவரும் கூட,

(அவர் இறந்து விட்டார் என்று இவரும் இவர் இறந்துவிட்டார் என்று அவரும் நினைத்துக் கொண்டார்கள் ஏனென்றால் இருவரும் பார்த்துக் கொள்ள முடியவில்லை)


 ஆனாலும் ஏது என்று புரிய. அறிந்தும் கூட, பின் இப்படி ஏன்? அதாவது பின் அண்ணாமலைக்கு வந்தோம். 

இங்கு பின் நாராயணன் தரிசனம் காட்டுகின்றான்.

 அவனும் கூட ஏழு மலையை நாடி வந்தோம். 
ஆனாலும் அண்ணாமலை தரிசனம் ஏது என்று புரிய, 

புரியாமல் இருவரும் தனித்தனியாக தவித்தனர்.


 ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட,


 ஆனாலும் பின் இருவரும் கூட அறிந்து கூட அங்கென்றே, இங்கென்றே. நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எது என்று புரியாமல் இருக்கின்றோம்.


 அதாவது புரிய வையுங்கள்!! என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட.


 அதனால் மீண்டும் இருப்பிடத்திற்கே செல்வோம் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட இருவரும் முடிவெடுத்தனர்.


 இங்கிருந்தே,(ஏழுமலையிலிருந்து) 

 அங்கிருந்தே.(அண்ணாமலையிலிருந்து) 

 ஆனாலும் பின் மீண்டும் இமயமலைக்கு சென்றனர்.


 ஆனாலும் அங்கு இருவரும் ஒன்றாக காட்சி தந்தனர். ஏது என்று புரிய,
(சிவ விஷ்ணு கோலம் சங்கரநாராயணர் தரிசனம்!! அரியும் சிவனும் ஒன்று!! ஹரிஹரன் தரிசனம்)



 அப்பொழுதுதான் புரிந்தது. 


அறிந்தும் கூட,

 ஏது என்று புரிய. ஆனாலும் பின் இருவரும் பின் அங்கேதான் பார்த்துக் கொண்டனர்.(இருவரும் இமயமலையில் மீண்டும் சந்தித்துக் கொண்டனர்)



 ஆனாலும் எவை என்று புரிய. இப்படித்தான் கலியுகத்தில், அதாவது இறைவனை அருகிலே வைத்துக்கொண்டு, எது என்று புரியாமல் அங்கு செல்கின்றேன். ஏது என்று அறிய,

 நிச்சயம் தன்னில் கூட இங்கு பக்திகள் காட்டுகின்றேன் என்றெல்லாம்!!.....


 கடைசியில் பார்த்தால், தன்னிடத்திலிருந்தே இருப்பான்.


 அதாவது ஒழுங்காக எது என்று கூட, பின் தியானம் செய்து கொண்டிருந்தார்கள். அப்பொழுது இறைவன் அறிந்தும் கூட, 


பின் அதாவது பக்கத்திலே இருந்தான். 


ஆனால் எப்பொழுது??? சண்டைகள் வந்துவிட்டதோ,!?!?!? அப்பொழுது!?!?!?!?!?!?!

(கடவுள்கள் பெயரால் என்னுடைய கடவுள் பெரியவர் உன்னுடைய கடவுள் சிறியவர்.. என்றெல்லாம் பக்திக்குள் சண்டை)



 ஆனாலும் இறைவன் அப்பொழுது தெரியவில்லை. 
ஏது என்று புரிய.


 ஆனாலும் பின் இங்கு வந்து,(ஏழுமலைக்கு) 

 பின் அங்கு வந்து!!!,(அண்ணாமலைக்கு) ஏது என்று புரிய.

 கடைசியில் பார்த்தால், நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, மீண்டும் அங்கே பலமாக தரிசனம் கிடைத்தது. அறிந்தும் கூட,


 பின் அதாவது அறிந்தும் ஏது என்று புரிய. இருவர்களும் எது என்று புரிய!!

. பின் இப்பொழுது ஏது என்று அறிய. பின் இருவரும், பின் ஒருவரை ஒருவர் முகங்களை  பார்த்துக்கொண்டு,  கண்ணீரில்!!!... கண்ணீர் எதை என்று கூட, பின் ஏது என்று புரிய.

 எவ்வளவு??? ஏது என்று புரிய.

 இங்கேயே அமர்ந்திருக்கலாமே. பின் அங்கும் இங்கும்.


 ஆனாலும் இவையும் விட திருவிளையாடலே.

ஏனென்றால் உலகம் அறிந்திருக்க வேண்டும் அல்லவா? இறைவன் யார்? உண்மைப் பொருள் யார்? என்பவை எல்லாம் !!!!



நிச்சயம் தன்னில் கூட உண்மைப் பொருள், பின் தனக்குள்ளே மறைந்து இருக்கிறது என்பது தெரியாமல் மனிதன் அலைந்து வயதைக் கடந்து விடுகின்றான்.


 அதுவும் ஒரு மாயையே என்பேன்.


 அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட இறைவன் கொடுப்பதற்கு தயாராகத்தான் இருக்கின்றான்.


 மனிதன் என்னவோ,!?? ஏது என்று புரியாமல் தவித்துக் கொண்டிருக்கின்றான். 


(ஈசனும் நாராயணனும் அவர்களை பார்த்து) 

இதனால் ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் ஒன்றே!!!!!


 உங்களுக்கு என்ன தேவை ???? 


 என்பவை எல்லாம் உணருகின்ற பொழுது, நிச்சயம் தன்னில் கூட,

(இரு ஞானிகளும் ஈசன் நாராயணனை பார்த்து)

 அதாவது அழகாக, பின் நீங்கள் எங்கு தரிசனம் கொடுத்தீர்களோ!!!!.....

, அங்கேயே யாங்கள் இருந்து கொண்டு பல மக்களுக்கு, பின் வருவோருக்கெல்லாம் நன்மையைச் சொல்லி, இதுதான் இறைவன் என்று நிச்சயம் புகுவிக்க (புகுத்த) வேண்டும் என்பது எல்லாம் எங்களது, பின் ஆசை.


 அதனால் இவ் வாய்ப்பை கொடுங்கள் என்று அதேபோல், பின் எதை என்று அறிய, அண்ணாமலை தவம் புரிந்தவனை இங்கேயும்,(ஏழுமலையில்)

 இங்கு தவம் புரிந்தவனை அங்கேயும்(அண்ணாமலையில்), நிச்சயம் நிற்க வைத்து,!!!


 அனைத்தும் ஒன்றே!!!!.....
 என்றெல்லாம்.......


பின் வருவோருக்கெல்லாம் உணர்த்திக் கொண்டே!!!!....


, ஏது என்று கூட அருளாசிகள் பெற்றுத் தந்து கொண்டே இருக்கின்றார்கள்.
 இதை கலியுகத்தில் ஏது என்று புரிய.



 இதனால் அறிந்தும் கூட, இதற்கும் கூட, பின் அதாவது வைத்திருக்கின்றேனப்பா, நல்விதமாக,


 அப்பனே, பின் அறிவியல் வழியாகவே, இதற்கும் எடுத்துரைப்பேன்.


 அப்பனே, மனிதன் புதுப்புது விஷயங்கள் எல்லாம், அப்பனே, தேடிச் செல்கின்றான். அப்பனே, 


பின் யாங்களும் எதை என்று புரிய. அப்பனே, எங்களுக்கும் தெரியும் என்பேன். அப்பனே, புதுப்புது விஷயங்களை தெரிவிப்பதற்கு, அப்பனே, பின் மனிதன் தெளிவதற்கு.


 ஏனென்றால் மனிதன் பழைய விஷயங்கள் எல்லாம் கடைபிடித்து, அவை இவை என்றெல்லாம், அப்பனே, சொல்லுகின்ற பொழுது, அப்பனே, இங்கு உண்மை நிலை மறைந்துவிடும் என்பேன். அப்பனே,

 அனைத்தும், அப்பனே, பொய்யாகத்தான் போகும் என்பேன். அப்பனே, 


இதனால் உண்மையான பொருளை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எப்படி எல்லாம் மனிதன் கண்டுபிடிக்கின்றான்??. 


அதற்கும் மேலே யாங்கள் கண்டுபிடித்து, அப்பனே, பின் மக்களுக்கும், அதாவது எப்பொழுதோ கண்டுபிடித்தோம்,


 ஆனாலும் புதுமையில், அப்பனே, பின் இப்பொழுது தெரிவித்து, அப்பனே, பின் உண்மை நிலையை தெரிவிக்கின்றோம். அப்பனே,

 அவ்வளவுதான் என்பேன். அப்பனே,


 இறைவன் யார்? இறைவன் எங்கு இருக்கின்றான்?

 அப்பனே, மனிதன் யார்? 

மனிதனின் பின் கூற்று என்ன? மனிதன் என்னென்ன? ஏது என்று குறை எங்கெல்லாம்? பின் அறிந்தும் கூட, ஏது என்று அறிய சில மாயவலைகள் இருக்கின்றது என்பதை எல்லாம் எடுத்துரைப்பேன். அப்பனே, 



இதனால் அனைத்தும் ஒன்றுதான் என்பேன்.அப்பனே!!!


, மனிதன் பிரித்து வைத்திருக்கின்றான் என்பேன். அப்பனே, கலியுகத்தில் என்பேன். அப்பனே,


 அவையெல்லாம், அப்பனே, உணர்த்தி, அப்பனே, அனைவருக்கும் தெளிவுபெற்று, அப்பனே, பின் ஞானத்தை, அப்பனே, அடைந்து விட்டால், அப்பனே, நிச்சயம் தன்னில் மோட்சமும் கிட்டும் என்பேன். அப்பனே,


 இதனால், அப்பனே, இவர்களும், அப்பனே, நிச்சயம் தன்னில் இறைவன் யார்??? என்பதை தெரிந்து கொள்வதற்காகவே வந்தவர்கள் தான் என்பேன். அப்பனே,


 இதனால், அப்பனே, பின் அதாவது வயதாகின்ற பொழுதுதான், அப்பனே, உண்மை நிலையே தெரிகின்றது என்பேன். அப்பனே,


 ஆனாலும், அப்பனே, மனிதனுக்கு இதனால்தான், பின் அவர்கள் இருவரும் முடிவெடுத்தார்கள்.


 இதனால் யாங்கள் கூட ஒரு பிறவியை அறிந்தும் கூட புரிந்தும் கூட!!!
(தவம் செய்து மீண்டும் ஒரு பிறவி எடுத்து வந்து)

 தவங்கள் இயற்றி,!!  இயற்றி!!,

 இதேபோல், நிச்சயம் தன்னில் கூட, பின் மனிதனுக்கும் உண்மைகளை தெரிவித்தால், அவர்களும் பிழைத்துக் கொள்வார்கள்.  

அதற்கிணங்க அப்பனே, அவ் ஞானிகள். அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் மலை ஞானியும், அப்பனே, அதாவது அண்ணாமலை ஞானியும், அப்பனே, பின் ஏழு, பின் மலையான், பின் ஞானியும், அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் இன்னும் கூட மக்களை காத்து பல பரிசுத்த, அப்பனே, பின் ஆன்மாக்களுக்கெல்லாம், அப்பனே, விடுதலைகள் கொடுத்து, அப்பனே நல்விதமாக ஆற்றல் எல்லாம் கொடுத்து, வருவோருக்கெல்லாம் அனைத்தும் ஒன்றே என்பதெல்லாம், அப்பனே தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள்!!!


 இதனால்தான், அப்பனே, அங்கும் இங்கும், அப்பனே, செல்ல, அப்பனே, வெற்றி நிச்சயம் என்பேன். அப்பனே, இங்கு சென்று, அங்கு செல்ல, அங்கு சென்று, இங்கு செல்ல, அப்பனே, நிச்சயம் பல வித்தியாசங்கள் உண்டு என்பேன். அப்பனே,

(திருப்பதி திருமலை தரிசனம் செய்துவிட்டு திருவண்ணாமலை தரிசனம்../அண்ணாமலை தரிசனம் செய்துவிட்டு திருப்பதி திருமலை தரிசனம் இப்படி அங்கும் இங்கும் தரிசனங்கள் செய்து கொண்டே வந்தால் பல மாற்றங்கள் உண்டு)





 இவற்றுக்கும் வரும் காலங்களில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில விதிமுறைகளோடு எடுத்துரைப்பேன். அப்பனே, 


திருப்பதி திருவண்ணாமலை இந்த யாத்திரையை குருநாதர் சொல்லும் விதிமுறையை வழிமுறையை பின்பற்றி அப்படிச் சென்றால்,(குருநாதருடைய விதிமுறைகளை பின்பற்றி) 

 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது எவை என்று அறிவியல் பாதையை பார்த்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நல்விதமாக, அப்பனே, ஏது என்று கூட ஒரு கம்பி போல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் ஒரு ரேகை செல்லுமப்பா,


(திருவண்ணாமலையிலிருந்து திருப்பதி வரை!!

திருப்பதியில் இருந்து அண்ணாமலை வரை

ஏழுமலையிலிருந்து ரிஷிகேஷ் வரை!!


 (அட்சரேகை தீர்க்க ரேகை போல கம்பி போல் ஒரு கோடு ஒரு ரேகை பாதை செல்கின்றது)


 அப்பனே, அதாவது, அதாவது, பின் இங்கிருந்து ஏழுமலையிலிருந்து இருந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் அண்ணாமலைக்கும்!!!
, அண்ணாமலையிலிருந்து, அப்பனே, ஏழுமலைக்கும், இங்கிருந்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் அறிந்தும் கூட, பின் அதாவது, ரிஷிகேஷுக்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, பின் அதாவது, ஒரு ரேகை போல் செல்லுமப்பா,


 பின் இவைதன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவ் ரேகை வழியே சென்று, அப்பனே, பின் அமர்ந்தால், அப்பனே, தியானங்கள் செய்தால், அப்பனே, உடம்பு முழுமை பெறும், அப்பனே,

 ஆன்மா முழுமை பெறும் என்பேன். அப்பனே, 


நிச்சயம் தன்னில் கூட, அவ்விடம் கூட, ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, சரியாக, அப்பனே, பின் கணித்து, ஏது என்று, ஏது என்று அறிய, அப்பனே, பின் வசிஷ்டன் குகையே என்பேன். அப்பனே,

(உத்தர் காண்ட் மாநிலம் ரிஷிகேசில் அமைந்திருக்கும் வசிஷ்டர் குகை..

வசிஷ்டர் குகையில் 1/10/2024 ஆண்டு சித்தன் அருள் பதிவு எண் 1735 ல் குருநாதர்
வாக்குகள் உரைத்துள்ளார் மீண்டும் ஒருமுறை படித்து புரிந்து கொள்ளுங்கள்)

 நல்விதமாக, இதனால்தான், அப்பனே, மூன்றின் பின் மூன்று எவை என்று, அப்பனே, 

(அண்ணாமலை 
திருப்பதி 
ரிஷிகேஷ்)




பின் முக்கோணமாக பார்த்தாலும், அப்பனே, பின் அதற்கும் பல வகை, பல வகையான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மூன்று இடத்தில் கூட, அப்பனே, தங்கியுள்ளது என்பேன். அப்பனே, சில ஒளிகள் என்பேன். அப்பனே,



 இதனால்தான், அப்பனே, அறிந்தும் ஏது என்று புரிய, அப்பனே, அங்கு (ஒளிக்கதிர்வீச்சுக்கள்)  விழுந்து, அப்பனே, நிச்சயம் இங்கு பட்டு, அப்பனே, மீண்டும் ஏது என்று, அப்பனே, நிச்சயம் அண்ணாமலையில் பட்டு, அப்பனே, பின் அது, பின் முக்கோணமாக, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, செல்கின்றது என்பேன். அப்பனே,


 இதன் வழியே சென்றுவிட்டால், அப்பனே, நிச்சயம், பின் உண்மைப் பொருளை  கண்டு உணர்ந்து தெளியலாம் என்பேன். அப்பனே,

இவையெல்லாம் ஏது என்று புரிய, அப்பனே, பின் வருங்காலத்தில், இவையெல்லாம், அப்பனே, மக்களுக்கு ஏது என்று, அப்பனே, ஒருவன் ஏது என்று அறிய, அப்பனே, பின் பல வழியில் கூட, அப்பனே, அறிஞர்கள் கண்டுபிடித்து, அப்பனே, அவற்றையெல்லாம் எடுத்துச் சென்று, அப்பனே, புதுமையான விஷயங்கள் எல்லாம், அப்பனே, நிச்சயம் கண்டுபிடித்து விடுவார்கள்.

(எதிர்காலத்தில் ஒருவர் குருநாதருடைய வாக்குகளை சரியாக புரிந்து திருவண்ணாமலை திருப்பதி ரிஷிகேஷ் இந்த மூன்று புனித தலங்களுக்கும் இடையே இருக்கும் கோடுகள் ஆராய்ந்து அதன் வலி எங்கு செல்கின்றது ஏனென்றால் அட்சரேகை தீர்க்க ரேகை போல ஒரு கம்பி போல ஒரு கோடு செல்கின்றது இதைப்பற்றி ஆராய்ச்சி செய்து அதை கண்டுபிடித்து  அறிஞர்களும் இதை ஆராய்ந்து கண்டுபிடித்து மக்களுக்கு எடுத்துச் சொல்வார்கள்)


 அப்பனே, எளிதாக,


 அப்பனே, அதனால்தான், அப்பனே, எங்கள் வாக்குகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, அப்பனே, எங்கள் வாக்குகள், அதாவது, நிச்சயம், பின் அழியாதப்பா,


 ஏது என்று புரிய, அப்பனே, அறிந்தும் கூட,


 அதனால்தான், அப்பன், நிச்சயம் தன்னில் கூட, இவையெல்லாம் வருங்காலத்தில், அப்பனே, பின் ஒரு பெரிய, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட, எங்கெங்கே சென்று, அப்பனே, பின் கலியுகத்தில், மனிதன், அப்பனே, பின் அழியக்கூடாத , அப்பனே, சக்திகளையும் கூட, அப்பனே, எங்கள் வாக்குகள் ஏற்படுத்தும் என்பேன். அப்பனே,


 இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன், அப்பனே, மிகவும், அப்பனே, பின் கலியுகத்தில், கொடூரக்காரனாகவே மாறிக்கொண்டே போய்க்கொண்டிருக்கின்றான். அப்பனே,


 அவை தடுத்தாக வேண்டும்,


 இல்லையென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனிதன் அனைத்தும், அப்பனே, பின் அழித்துவிட்டு சென்று விடுவான்.


 ஆனாலும், அப்பனே, மனிதன் ஒரு ஏது என்று புரிய, அப்பனே, சில சக்திகளாக, அப்பனே, அதாவது, தீய சக்திகளாக, அப்பனே, புகுந்து, அப்பனே, பின் அழித்துக் கொண்டே வருகின்றது.


 ஆனாலும், அப்பனே, யாங்களும் அதற்கு ஏற்றார்  போல், நல் சக்தி எல்லாம் கொடுத்து, பின் அப்படி தீய, அப்பனே, சக்தி உள்ளவரை எல்லாம் அடித்து, அப்பனே, மாற்றத்தை ஏற்படுத்துவோம். அப்பனே, அழகாக,


 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,!!

 அண்ணாமலையின் ஞானியும் கூட, பின் ஏது என்று புரிய, அப்பனே, பின் ஏழுமலை ஞானியும் கூட,!!!

 உங்களுக்கு ஆசீர்வதிக்கட்டும், அனைவருக்கும் ஆசீர்வதிக்கட்டும்,!!

 புத்திகள் தரட்டும். அப்பனே,

 ஆசிகள், ஆசிகள், இன்னும், அப்பனே, உரைக்கின்றேன், ஏழுமலையான் பற்றி, ஆசிகள்!!, ஆசிகள்!!, இப்பொழுது!!!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத கத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 11 May 2026

சித்தன் அருள் - 2210 - அகத்தியப்பெருமான் அருளிய எளிய மருந்து!

 
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சிலவேளை நடக்கிற நிகழ்ச்சிகள் ஏன் என்று புரியாது, ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு முன் நடந்திருந்தால், நன்றாக இருந்திருக்குமே என்று தோன்றும். ஆயினும் அது நடக்கும் நேரத்தில் குருநாதர் ஏதேனும் ஒரு கர்மா கழிவை ஏற்படுத்துவார். அப்படி நடந்த ஒரு விஷயத்தை பற்றியும் அதன் பலனையும் இங்கு தெரிவிக்கிறேன்.

சுமார் ஒரு ஆறு மாதங்களுக்கு முன் எங்கெல்லாமோ அலைந்துவிட்டு (ஊர் ஊராக) வீடு வந்து சேர்ந்த பொழுது அங்கெல்லாம் இலவசமாக கிடைத்த கிருமிகளையும், வியாதியையும், ஜலதோஷம், இருமல், ஜுரம் என வித விதமான மெனுவுடன் வாங்கி வந்தேன். எந்த ஆங்கில மருந்தும் குணப்படுத்தவில்லை. அதுவரை படித்திருந்த மருந்துகளை எல்லாம் வாங்கி சாப்பிட்டும், ஜுரம் நின்றது, ஜலதோஷம் குறைந்தது, ஆனால் தொடர்ந்து வரட்டு இருமல் கூட வந்தது. இது மூன்று வாரத்துக்கு மேல் தொடரவே, சரி! குருநாதரிடம், இதை சரிப்படுத்த ஏதேனும் வழி உள்ளதா என்று வினவலாம் என நினைத்து ஒரு விண்ணப்பத்தை வைத்தேன்!

ஈமெயில், குறுஞ்செய்தியை விட வேகமாக பதில் வந்தது!

"போய் அனுபவியடா!" என்றார்.

சரிதான்! இத்தனை வேகமாக பதில் வந்ததால், சமீபத்தில் இதற்கு இனி பதில் கிடைக்காது என புரிந்து கொண்டு, இனிமேல் இதைப்பற்றி குருநாதரிடம் பேசுவதில்லை! நடப்பது போல் நடக்கட்டும் என்று தீர்மானித்தேன். 

நாட்கள் சென்று கொண்டு இருந்தது. இருமல் நிற்கவே இல்லை, குறையவும் இல்லை!

ஒரு மாதம் ஆயிற்று. ஒரு ஆன்மீக குழுவில் வாரத்தில் ஒருநாள் ஆன்மிகம் பற்றி பேசவேண்டும்! அதுதான் மிக சிரமமாக இருந்தது. கூடவே, குளிர்கால பனியும் தொண்டையை வரளச்செய்தது. என்னதான் நடந்தாலும் இதை பற்றி குருநாதரிடம் கேட்பதில்லை என்று வைராக்கியம் உள்ளுக்குள்.

நான்கு வாரங்கள் சென்றபின் ஒரு நிகழ்வு நடந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், அது ஒரு வியாழக்கிழமை! தினமும் காலையில் கண்விழித்ததும் முதலில் லோபாமுத்திரா சமேத அகத்தியப்பெருமானின் திரு உருவத்தை தியானித்து, "குருநாதா! இன்றைய தினம் நல்லபடியாக இருக்கட்டும்! உங்கள் அருள் கூட நிற்கட்டும்!" என எப்பொழுதும் போல் வேண்டிக்கொண்டேன்! அதனுடன், நாம் செய்கிற செயல்களால் கர்மா சேராமல் இருக்க அம்மாவை (அம்பாள்) நினைத்து சொல்லவேண்டிய மந்திரத்தை கூறிவிட்டு, படுக்கையை விட்டு எழப்போனேன்!

"இன்று செய்தி வரும்!" என்று குருநாதர் கூறினார்.

ஒரு நிமிடம் அவர் முகத்தை பார்த்து நின்றுவிட்டு, சென்றேன்!

இரவில் மாஸ்க் போட்டு வெளியில் நடக்க சென்று வருவேன். யாரையும் முகம் பார்க்காமல், பேசுவதை கவனிக்காமல், அமைதியை கடைபிடித்து என் நண்பர் நடத்துகிற இனிப்பு பலகாரக் கடையில அரை மணி நேரம் நின்று பேசிக்கொண்டு இருப்பேன். அங்கு செல்வதே ஒருவித பயிற்சிக்காகத்தான்.

ஆம்! அவர் கடையில் குறைந்தது ஐம்பது விதமான இனிப்பு, கார வகை பொருட்கள் இருக்கும். நான் சும்மா சென்று நின்றாலே, சாப்பிடுங்கள் என்று ஏதேனும் ஒரு பொருளை தருவார். என்னிடமும் நிறைய பணமிருக்கும். எனக்கு பிடித்த இனிப்புகளும் நிறைய இருக்கும். ஆனால், எதையும் சாப்பிடக் கூடாது. மருத்துவர் விதித்த கட்டுப்பாடு. என்னால் என்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியுமா என்பதை அவர் கடைக்கு தினமும் சென்று சோதனை செய்து கொள்வேன். அதில் தினமும் வெற்றி பெற்று விடுவேன். இல்லாத சூழ்நிலையில் கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதில் அர்த்தம் இல்லை. உண்மையாகவே, அனைத்தும் இருந்தும், கட்டுப்பாட்டை உடையவன் தன் முயற்சியில் நேர்மையாக இருப்பதினால் வெற்றி பெறுவான், என்பது என் எண்ணம்.

அன்றைய தினம் முழுவதும் கவனத்துடன் இருந்தேன். வெளியே அலைச்சலில் குறைவில்லை. வியாழன் ஆனதால் இருவர் சமாதிக்கு சென்று வந்தேன். அது ஒரு நீண்ட யாத்திரை. வீட்டிற்கு வந்து இரவு உணவருந்திவிட்டு, நடந்துவிட்டு வரலாம் என்று பத்மநாபா சுவாமி கோவில் வாசல் வரை சென்றேன். திரும்பி வரும் வழியில் நண்பரின் கடைக்கு சென்று பேசலாம் என்று நடந்த பொழுது, இருட்டிலிருந்து ஒருவர் வெளிப்பட்டு, நேரடியாக விஷயத்துக்கு வந்தார். என் மனம் திறந்து அவர் கூறியதை உள்வாங்கிற்று.

"நான் சொல்வதை குறித்துக்கொள். வீட்டில் தயாரித்து ஒரு டம்பளர் குடித்தால் போதும்! இருமல் நின்றுவிடும்!" என்றார்.

1. புதினா இலை - ஒரு பிடி அளவு.
2. கொத்தமல்லி இலை  - ஒரு பிடி அளவு.
3. தோல் சீவிய இஞ்சி - ஒன்று.
4. மஞ்சள் பொடி - அரை ஸ்பூன்.
5. மிளகு பொடி - அரை ஸ்பூன்.
6. உப்பு - அரை ஸ்பூன் அல்லது தேவைக்கு ஏற்ப.
7. அரை மூடி எலுமிச்சை சாறு.

1 லிருந்து 6 வரை உள்ள பொருட்களை மிக்ஸியில் ஒரு டம்பளர் நீர்விட்டு நன்றாக அரைத்து, எடுத்து, பின் அதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறை பிழிந்து, குடித்தால் எப்படிப்பட்ட ஜலதோஷம், இருமல், தொடர் வறட்டு இருமல் காணாமல் போய்விடும்! ஒருமுறை குடித்தவுடனேயே பலன் தெரிந்துவிடும். 21 நாட்கள் தொடர்ந்து தினம் ஒருமுறை குடித்து வந்தால் அடுத்த மூன்று வருடங்களுக்கு இருமல் வராது!" என்றார்.

எதுவும் பதில் சொல்லவில்லை. கைகூப்பி, மார்பு தொட்டு வணங்கினேன், அவர் எதிர் திசையில் நடந்து சென்றார். நான் திரும்பி பார்க்காமல் நண்பரின் கடையை நோக்கி நடந்தேன்.

மறுநாள், அவர் கூறியபடி, அந்த ரசத்தை வீட்டில் உருவாக்கி பருகிட, இரண்டே நிமிடத்தில் வறட்டு இருமல் நின்றது. ஒரு மாதத்துக்கு மேல் தொடர்ந்து வாட்டிய இருமல், ஒரு கப் ரசத்தில் நின்றது.

எல்லாம் அவர் செயல்! நீங்களும் தேவை வரும் பொழுது, முயற்சி செய்து பார்க்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 9 May 2026

சித்தன் அருள் - 2209 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6







அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6

நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
நேரலை :-  https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY



===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 
===========================


தேரையர் சித்தர் :- அய்யனே, அனைவருக்குமே அறிந்தும் கூட ஆற்றல் பின் சம அளவு. அதை மீண்டும் கூட அதிகப்படுத்த இவ்வாறாக பாடல்கள் பாடி, சரியாக கைதட்டல் இன்னும் ஆற்றல் அதிகரிக்கும் அண்ணாமலையிலே. முருகன் நினைத்துப்பார், நினைத்துப்பார், ஆற்றலை அதிகரிக்கும் பின்பு யான் செப்புகின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாருன்னா, இறைவனை நினைச்சு நம்ம பாடினாவே என்ன ஆகுமா? நம்ம ஆற்றல் அதிகமாகும். அப்ப சில நேரத்துல தோல்வி அடைஞ்சிடுறாங்கப்பா. திருப்பியும் ஆற்றல் வர , நீ அடிப்பா, பாடுப்பான்றாரு. முருகன் பாட்டு பாடுங்கன்றாரு. இன்னும் எல்லாம் கைதட்டி நல்லா ஆற்றலோட பாடுங்க, இணைஞ்சு அப்பதான் உங்களுக்கு புரியும். ஏன்னா ஆற்றல் இணைஞ்சு டயர்ட் ஆயிடுச்சுன்னா என்ன ஆகும்? அங்க ஏதோ சொல்லிக்கிறாங்க அப்படின்னு நடந்துரும். அதனால உங்களுக்கு ஏத்தி ஏத்தி இணைஞ்சு ஏத்தி ஏத்தி அவர் சொல்றாரு, வேற ஒன்னும் இல்ல.


பாடகர் :- ( மருதமலை மாமணியே முருகய்யா - என்ற பாடலை அருமையாக பாடினார்கள் ) 


பாடல் நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h53m24s


கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா


மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா


அடியவர்கள் :- (  திருக்கைலாய இசை அங்கு ஓங்கி ஒலித்தது)


திருக்கைலாய இசை நேரலை :-
 https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h59m28s
 
===========================
# அன்புடன் தேரையர் சித்தர் வாக்கு 
===========================




அடியவர் :- சிறப்பாக வாசித்த கைலாய வாத்திய குழுவினருக்கு வாழ்த்துக்கள்.  


அடியவர் :- அனைவரும் அமைதியா அமருங்கள்.


அடியவர் :-  அடுத்து திருப்பி தேரையர் வருவாங்க. நிறைய தமிழ் ரகசியங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துட்டு இருக்காங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா.


அடியவர் :-  ஜாதக கட்டத்தை வச்சு தமிழ் மொழியை கற்றுக் கொடுத்துட்டு இருக்காங்க நமக்கு.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. அதான்.


அடியவர் :-  தமிழின் பெருமையை உலகிற்கு உணர்த்துறாங்க.


===========================
# மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அருளால் இருதயம் புத்துணர்ச்சி பெறும் ரகசியங்கள். 
===========================


தேரையர் சித்தர் :-  ஏது என்று அறிய அனைவருக்குமே சொல்கின்றேன். மருதம் ஏது என்று புரிய. மருதமலை பற்றியோன் ஏன் இங்கு குறிப்பிடுகிறேன் என்றால், அனைத்திற்கும் எது என்று புரிய இருதயம் சரியாகவே அறிந்தும் கூட சக்தியாக இருக்க வேண்டும். 


தேரையர் சித்தர் :- அப்பொழுதுதான் எண்ணும் எண்ணங்கள், செயல்கள் இன்னும் சக்தியை கூட்டும். அதனால்தான் மருத மலையிலே, ஏன் அவன் அங்கே உட்கார்ந்து இருக்கின்றான் என்பதையெல்லாம் அடுத்தடுத்து தெரிவிக்கின்றேன். 


தேரையர் சித்தர் :- இப்பொழுது அவனை அழைத்தாலே இன்னும் அறிந்தும் ஏது என்று புரிய, அதாவது மனம் தளருபவர்கள் இன்னும் மனம் அப்படியே உயரட்டும்.  இதைத்தான் மருதமலையும் மீண்டும் அழை.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன்னா அடிக்கடிக்கு இதை ஏன் பாட சொல்றாருன்னா, எல்லாருக்கும் இருதயம் பலவீனமா இருந்தா என்ன ஆகும்?


அடியவர் :-  சக்தி இருக்காது.


சுவடி ஓதும் மைந்தன் :- சக்தி போயிடும். என்னடா லைஃப், ஏது லைஃப்லாம் என்னன்னா ஒரு மாதிரி ஆயிடும். அதனால மருதமலையும்… ஏன் அங்க (சுப்பிரமணிய சுவாமி - மருதாசலமூர்த்தி) இருக்கிறார் வந்து சொன்னாருன்னா, அதுக்கும் ஒரு அர்த்தம் உண்டு.


அடியவர் :- சொல்றேன்னு சொல்ராங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- அது நான் சொல்றேன். அதற்காகத்தான் அடிக்கடி நான் என்ன பண்றேன்?.


அடியவர் :- மருதமலை முருகனை  அழைக்கிறார்.


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லா சித்தர்களும் அவர் அழைப்பான்றார் வந்து திருப்பியும் வந்து. 


தேரையர் சித்தர் :- ஏன், எதற்கு? பின் கை ஓசைகள் பலமாக ஏது என்று அறிய அனைத்து நரம்புகளும் பின் ஆடட்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் கைதட்டி நல்லா மீண்டும் சரியா வந்து பாடணும்ன்றார் வந்து. அப்புறம்தான் நான் சொல்லுவேன்றார் வந்து. ஏன்னா இருதயம் வந்து எல்லாருக்கும் ஒரு டென்ஷன் ஆயிடும். இது என்னடா லைஃப், இது என்னடான்னு சொல்லிட்டு என்னடா இது வந்து நம்ம வாழ்க்கை. என்னடா இறைவன் வணங்க பிரயோஜனம் இல்லையான்னு சொல்லிட்டு இதெல்லாம் வந்து யாருக்கு வந்து இதெல்லாம் வந்து அந்த மருதுமலையவன் தான் ஸ்ட்ராங் பண்ணுவார். அப்ப மருதமலையானை அழைத்தால் ஒரு புத்துணர்ச்சி மாதிரி ஆகும். எனர்ஜி கொடுக்கும்.  நம்ம வாழலாம். நம்ம சக்தி இருக்கிறது. நமக்கு ஆளுங்க இருக்காங்க ன்னு சொல்லிட்டு என்ன ஆகும்?


அடியவர் :-  ஒரு தெம்பு வரும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு தெம்பு வரும். அதனால்தான் சித்தர்கள் என்ன எல்லாரும் என்ன பண்றாங்க. மருதுமலையோனை அழை என்று சொல்ராங்க.


===========================
# மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அருளால் இருதயம் பலமாகும் பெறும் மருத மர ரகசியங்கள். 
===========================


தேரையர் சித்தர் :- அறிந்தும் இளம் ஏது என்று புரிய இருதயம் பலவீனப்பட்டவர்கள் அங்கேதான் அறிந்தும் கூட அமர்ந்து தியானம் செய்தால்,  பின் “மரத்தில் உள்ள ஓசைகள்” அறிந்தும் கூட பின் “உடம்பில் விழுந்து பின் இருதயம் பலமாகும்”. 


===========================
# சிறு குறிப்பு :- மருதமலையின் முதன்மை ஸ்தல விருட்சம் மருத மரம் (Terminalia arjuna) ஆகும்.  மருத மரங்கள் அதிக அளவில் காணப்படுவதால், இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது. நீர் மருது, கரு மருது, பிள்ளை மருது போன்ற பல்வேறு வகைகள் இங்கு காணப்படுகின்றன. மருத மரத்தின் பட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் இதய நோய் மற்றும் பல உடல் பிணிகளைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதயம் பலவீனமானவர்களை இங்கு செல்ல சொல்லுங்கள். மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அருளால் நமது இருதயம் பலமாகும். 
===========================


சுவடி ஓதும் மைந்தன் :- அங்க ஒரு ரகசியம் இருக்குது.


அடியவர் :-   பெரிய உண்மையை சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- மனசெல்லாம் விட்டுப்போச்சு. என்னடா இது வாழ்க்கை. என்னடா இதுன்னு சொல்லி இருக்கிறவங்க எல்லாம் வந்து மருதுமலையில கொஞ்சம் தியானங்கள் செஞ்சா, அதெல்லாம் அங்க நீக்குற சக்தி.. என்னங்க அது?


அடியவர் :-   இருதயத்துடைய வலிமையை வந்து அதிகப்படுத்துற சக்தி மருதுமலையில இருக்கு.


தேரையர் சித்தர் :- அனைவருமே நல்லது நடக்கத்தான் வந்திருக்கின்றீர்கள். இதனால் பின் மருதுமலையோனை பின் அழைப்பேன். அழையுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- நானும் அழைக்கிறேன். நீங்களும் சேர்ந்து?.....


அடியவர் :-  நீங்களும் சேர்ந்து அழைங்க. எல்லாரும் கைதட்டி பாடுங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, எல்லாரும் நல்லா கைதட்டுங்க. இதுலதான் நம்மளுக்கு உற்சாகமே இருக்குதுங்க ஐயா. நம்ம கவலைப்பட்டுறோம்ல. நாம நல்லா இருக்க எல்லாரும் நல்லா கைதட்டுங்க அய்யா.


===========================
# ( அடியவர்கள் மனம் சோர்வடையும் பொழுதெல்லாம் இவ் பாடலை பாடுங்கள். உங்கள் மனது / இருதயம் தெம்பு அடையும். உற்சாகம் பிறக்கும். இவ் ரகசியத்தை அனைவருக்கும் எடுத்து சொல்லுங்கள்.)
===========================


பாடகர் :- ( மருதமலை மாமணியே முருகய்யா - என்ற பாடலை அருமையாக பாடினார்கள் ) 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 7 May 2026

சித்தன் அருள் - 2208 - அன்புடன் அகத்தியர் - கங்கை கரை வாக்கு!

 


20/4/2026 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசி கங்கை கரை.மீர்காட்.


ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 


அப்பனே, நலன்கள். அப்பனே, மனிதனுக்கு அப்பனே ஏது என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றானப்பா.

 ஆனாலும் உண்மைகள், அப்பனே, பல வகையில் கூட சித்தர்கள் யாங்கள் புரிய வைப்போம் அப்பனே.

 சரியாக, அப்பனே, புரிய வைத்து, அப்பனே, நல்ல முறையாகவே அழுத்தி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதாவது, பின் யாங்கள் சொல்வதை சரியாக புரிந்து கொண்டால், அப்பனே, நலமாகும்.


 அதனால்தான், அப்பனே, முதலில் தர்மங்கள், அப்பனே, பின் பல வகையான செய்யுங்கள், செய்யுங்கள் என்பவை எல்லாம் உரைத்துக் கொண்டே இருக்கின்றோம்.


 அப்பனே, இவ்வாறாக செய்து கொண்டே வந்தால், அப்பனே, யாங்களே பல வகையில் கூட, அப்பனே, பின் என்னென்ன?, ஏது?, பின் அவந்தனக்கு, அதாவது, மனிதனுக்கு தேவைப்படுகின்றது என்பதை எல்லாம் உணர்ந்து, யாங்களே கொடுப்போம் என்போம் அப்பனே.

இதனால்தான், அப்பனே, முதலில், அப்பனே.


 அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் ஏன் யாங்கள், அதாவது,  இறைபலங்கள், அப்பன், நிச்சயம் தன்னில் இருந்தாலும்!!!!!.......


, ஏன்??? மனிதனுக்கு சில விஷயங்கள் கிட்டவில்லை என்றால்!?!?!?!?!?


, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதற்கு, அப்பனே, பின் சரியான ஆள் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இல்லை என்று கூட.



 இதனால்தான், எது என்று புரிய, அப்பனே, அனைத்தும் புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு, தெளிவு கொண்டு, அப்பனே, நடந்திட வேண்டும் என்பேன், அப்பனே.


 உயர்ந்த, அப்பனே, பின் லாபங்கள் யாங்கள் கொடுக்க, உயர்ந்த இறைபலங்கள், அப்பனே, பின் உயர்ந்த, அப்பனே, பின் ஆற்றல்கள் அனைத்தும் கொடுக்க யாங்கள் தயார்.



 ஆனாலும், அப்பனே, உங்கள் மனநிலை பொறுத்தே, அப்பனே,



 இவையெல்லாம், அப்பனே, ஏனைய வாக்குகளில் கூட, அதாவது, பல வாக்குகள் கூட செப்பிவிட்டேன், அப்பனே, நலங்களாகவே. 



அதை நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூறப்பின், அதாவது, கடைபிடிப்பவர்கள், அப்பனே, பின் ஒரு சிறு குறையும் வராதப்பா.


 அதாவது, தர்ம நெறியில் வந்து, அப்பனே, பின் வள்ளல்,(இராமலிங்க அடிகளார்) அப்பனே, பின் வள்ளலவன், அப்பனே, பின் சொன்னதை,(ஜீவகாருண்யம்) அப்பனே, பின் சரியாக, அப்பனே, பின் பின்பற்றி வந்தாலே, ஒரு சிறு குறையும் வராதப்பா, சொல்லிவிட்டேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட.



 இதனால்தான், அப்பனே, பல வழியில் கூட, அப்பனே, கலியுகத்தில், அப்பனே, பல போராட்டங்கள், பல பல எதை என்று கூட நோய்கள், அப்பனே, பின் பல வழியில் கூட, பின் இயற்கை சீற்றங்களால்.



 ஆனாலும், அப்பனே, பின் இறைவனும்  எதை என்று புரிய, அப்பனே, பின் இயற்கை என்பது இறைவனே, 


அப்பனே, பின் இயற்கை என்றான் என்பதை எல்லாம் நீங்கள் அறிந்ததே என்பேன், அப்பனே.


 இவையெல்லாம், அப்பனே, அதாவது, நீங்கள் சரியாக, அப்பனே, பின் இருந்தால் மட்டுமே, அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே, அனைத்தும் சரியாகும் என்பேன், அப்பனே.


 பின் மனிதன், அதாவது, சரியாக இல்லை என்றால், அப்பனே, நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.


 அனைத்தும், அப்பனே, நிச்சயம் மாறாக செயல்படும் என்பேன், அப்பனே.


 இதுதான், அப்பனே, இவ்வுலகத்தின், அதாவது, பின் மனிதன், அதாவது, ஏது என்று பிரபஞ்சம், அதாவது, நீங்கள் என்ன செய்கின்றீர்களோ!?!?, அதற்கு தகுந்தார் போல் இருமடங்காக கொடுக்கின்றது, அவ்வளவுதான் என்பேன், அப்பனே.
 பின் தர்மமாயினும்!!! அப்பனே


, எதை என்று புரிய, அப்பன், நிச்சயம் தன்னில். அதனால்தான், தர்மம் கடைபிடிக்க வேண்டும் என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட


, பின், அதாவது, தர்மம் ஏது என்று புரிய, அப்பனே, பின் புரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே. நலங்களாகவே,


 அப்பனே, பின் இவ்வாறாக, எவ்வாறாக பல வகையில் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் கங்கை, பின் கங்கை, கங்கை தன்னில் கூட பல வகையான, அப்பனே

பல வகையான, அப்பனே, ஞானிகள், ரிஷிகள், குருமார்கள் எதை என்று புரிய, அப்பனே, பின் அதிகாலையிலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அவை மட்டுமில்லாமல் சித்திர குள்ளர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதிகாலையிலே, அப்பனே, பின் நாட்களை பெற்று, அதாவது பல கிரகங்களை, அப்பனே, கடந்து அவர்கள் வரவேண்டும்.


 அப்படி வந்து, அப்பனே, பின் மூழ்குவதால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகையில் கூட நன்மைகள் இருக்கின்றதப்பா. 


அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் கங்கைக்கு மிகுந்த சிறப்பு !!


என்னென்ன ?? சிறப்பு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பல லட்சம், அப்பனே, பின் சிறப்பு !!


ஒவ்வொன்றும், அப்பனே, பின் ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருப்பேன், அப்பனே.


 ஏன்??, எதற்காக?? கங்கை தன்னில் நீராட வேண்டும்??? என்பதை எல்லாம், அப்பனே,


 அதாவது புதுமையான ஏது என்று அறிய , அதாவது சித்தர்கள், அப்பனே, அதாவது சித்திர குள்ளர்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அழகாகவே ஏது என்று புரிய, அப்பனே, பல, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல கிரகங்களை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல வகையான, பின் காற்று ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் பல வகையான, அப்பனே, நிச்சயம் ஆத்மாக்களையும் கூட, அப்பனே, பின் கடந்து, பின் வருதல் எதை என்று புரிய, அப்பனே. 


இதனால், அப்பனே, பின் வந்து, அப்பனே, பின் அவ் ஆற்றல்கள், நிச்சயம் எதை என்று புரிய, அப்பனே, இங்கு நீராடுகின்ற பொழுது, அவ் ஆற்றல்கள் அப்படியே இங்கு அப்படியே இங்கு பதிகின்றது என்பேன், அப்பனே.


 அதுமட்டுமில்லாமல், அப்ப, நிச்சயம் தன்னில் கூட பூமியின் மேல், பின் ஆசை உள்ளவர்கள் ஏது என்று புரிய, அப்பனே. அதாவது, நிச்சயம் தன்னில் கூட அவ் அவ்  பின் எதை என்று கூட, பின் செயல்பட்டு, அப்பனே, பின் சிதறி கிடைக்கும் அல்லவா, அப்பனே, பின் எங்கே?? எங்கோ??, பின் எதை என்று கூட வட்டமிட்டு வானத்திலோ!?? எங்கே எங்கோ எது என்று புரிய, அப்பனே. இவர்கள் அங்கெல்லாம் சீறி பாய்கின்ற பொழுது, அதை எதை என்று கூட அப்படியே பின் ஒட்டிக்கொண்டு ஏது என்று கூறியவர்கள் மீது,


 பின் இங்கு, பின் நீராடினால், பின் அதை அனைத்துமே இங்கு சிதறும் எது என்று புரிய, அப்பனே. அறிந்தும் கூட


 இதனால், அப்பனே, பின் எவை என்று கூட அதனால்தான், அப்பனே, பின் எங்கு உள்ளவர்கள் எல்லாம் நிச்சயம், பின் அதாவது பிறந்தால் ஒரு முறையாவது காசிக்கு வரவேண்டும் என்று !!!


ஏனென்றால், பின் பிரிந்த பின் உங்களிடத்தில் பிரிந்த பல வழியில் கூட, பின் ஆன்மாக்கள் ஏது என்று சிதறி கிடக்கின்றது. 

நிச்சயம் தன்னில் கூட!!


 இங்கு பின் உடம்பு ஏது என்று எடுத்து வந்து, உடம்பை எடுத்து வந்து இங்கே பின் நீராடி விட்டால், நிச்சயம் தன்னில் கூட பின் தேவையானதை பின் உங்கள் பின் நெருக்கமாக பின் உள்ளது ஏது என்று ஒரு பின் அதாவது சிறு துகள் தான் ஆன்மா என்பது பின் அவையெல்லாம் ஒட்டிக் கொண்டிருக்கையில், பின் அவ்வாற்றல்கள் மீண்டும் அதிகமாகின்ற பொழுது, அப்பனே வெற்றி கிடைக்குமப்பா.

அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் பாவம்!!

 அதாவது பாவம் செய்த பின் ஆன்மாக்கள் அலைந்து கொண்டிருக்கும் எதை என்று புரிய, !!


பின் அவையும் கூட நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது சித்த குள்ளர்கள் சித்திர குள்ளர்கள், அப்பனே, இங்கு ஏது என்று புரிய, பின் வருகின்ற பொழுது, பின் அவையும் கூட ஒட்டிக்கொள்ளும்.


 அதனால், பின் ஒரு மனிதன் வருகின்ற பொழுது, நிச்சயம் அவை பாவம் எதை என்று கூற, பின் அவ் ஆன்மாவும், பின் அவனுக்கு, பின் அதாவது நிச்சயம் தன்னில் ஒட்டிக்கொள்ளும் பொழுது சில வினைகள் நிச்சயம் அறிந்து கூட


 இதனால்தான், அப்பனே, சில மனிதர்களுக்கு கஷ்டமும் ஏற்படுகின்றது என்பேன், அப்பனே. பின் கங்கை நீராடுதல் கூட !!


இதனால், அப்பனே, தொடர்ந்து செய்தால், அப்பனே, அவை மட்டுமில்லாமல், நிச்சயம் தன்னில் கூட, பின் இவ் வினை ஏது என்று புரிய, பின் அவ்வாறே நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது நிச்சயம் ஏன்??? ராமேஸ்வரம் செல்கின்றோம்????? என்பதெல்லாம், அப்பனே, புரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.


 பின் இங்கு அங்கேயும் பல வழிகளில் கூட, பின் இங்கு பூரணம் பெற்று, அப்பனே, நல்விதமாகவே ஏது என்று புரிய, அங்கே சென்றாலும், பின் ஏது என்று அறிய, அப்பனே, பல வகையான, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அங்கு பின் சக்திகள், அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே, பின் அதாவது தீர்த்தங்கள், அப்பனே, பின் மூலிகைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சரியாகவே, அப்பனே, நிச்சயம் தன்னில் அவையும் கூட முழுமை பெற்று, அப்பனே, மீண்டும், அப்பனே, மேல்நோக்கத்திற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!!



, அப்பனே, சித்தர்கள் இப்படித்தானப்பா, நிச்சயம் தன்னில் மனிதனுக்கு புரியாதப்பா.


 அதனால்தான், அப்பனே
, ஒன்றாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு, அப்பனே, தேறி வரவேண்டும் என்பது, அப்பனே. 


ஆனாலும், அப்பனே, புரியவில்லை என்றால், அப்பனே, நீங்கள் இன்னும் தேறவில்லை என்பதுதான் அர்த்தம், அப்பனே. 


சித்தன் வாக்கு புரிந்து கொள்வதற்கும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே,  அப்பனே, பின் அதாவது புண்ணியங்கள் வேண்டுமப்பா.


 அதாவது  அருகதை ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சித்தன் வருவதற்கும், சித்தன் நாமத்தை செப்புவதற்கும், அப்பனே,

பல வழியில் கூட, அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே, புண்ணியங்கள் இருந்தால் மட்டுமே, அப்பனே, நிச்சயம் புரிந்து கொள்ள முடியும், அதை செயல்படுத்த முடியும்.


 அப்படி இல்லை என்றால், அப்பனே, யாரோ எதை என்று கூட நோக்கி செப்பிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

, ஏன்? எதற்கு கேட்க வேண்டும் என்றெல்லாம், அப்பனே, !!

(சித்தர்களின் வாக்குகளை புறம் கூறிவிட்டு புறம் தள்ளிவிட்டு போலியான மனிதர்களை நாடி)


சென்றிட்டு மீண்டும், அப்பனே, ஒரு அடி விழுந்து, அப்பனே, மீண்டும் வருவார்களப்பா.
 எங்களிடத்தில், அப்பனே, சொல்லிவிட்டேன், அப்பனே,


 இதுதான், அப்பனே, எங்கு சென்றாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உலகம், அப்பனே, எப்படி பின் சுற்றுகின்றதோ, அப்படித்தான் மனிதன், அப்பனே,


 பின் எங்கு பின் தொடங்குகின்றானோ, மீண்டும் அங்குதான் வந்து, அப்பனே, யோசிப்பான் என்பேன், அப்பனே,


 இங்குதான் சென்றோம் என்பதை எல்லாம், அப்பனே. அதனால் மீண்டும், அப்பனே, பின் எவராயினும், அப்பனே, இறைவன் இல்லை என்று சொல்பவனும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு நாள், அப்பனே, பின் இறைவனிடத்தில், பின் சரணாகதி அடைய வேண்டும் என்பது விதியப்பா.


 யாரும் தப்ப முடியாதப்பா,


 ஏனென்றால் அனைவரும் இறைவன் அனுப்பியது!!!

 ஏது என்று புரிய, அப்பனே, இறைவன், பின் உலகத்திற்கு, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அனுப்பியது, அப்பனே


, மீண்டும், அப்பனே, எதை என்று கூற, அப்பனே, பின் எவன் அனுப்பினானோ!???? அவனிடத்தில் சரணாகதி, அப்பனே, பின் நிச்சயம் அடையச் செய்வான் என்பேன்,
 அப்பனே, 

எவன் அனுப்பினானோ!!!??, அவனே என்பேன், அப்பனே,


 எதை என்று, அப்பனே, புரிந்து கொள்ளுங்கள்.


 இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இளமையில், அப்பனே, பல வகையான, அப்பனே, பின் நிலைகள் ஏது என்று புரிய, அப்பனே, இறைவனை, அப்பனே, சிந்தித்தல், அப்பனே, இவ்வாறாக இருந்தால், அப்பனே, நிச்சயம் நீங்கள் விரும்பியது உயர்ந்த, அப்பனே, 


ஆனாலும், அப்பனே, பின் அனைத்தும், பின் அனுபவித்துவிட்டு,  உயந்த இடத்தை பிடிக்கலாம் என்றெல்லாம் மனிதர் எண்ணிக் கொண்டிருக்கின்றான், அப்பனே


. எப்படியப்பா????


இதக, அப்பனே, முதலிலே, அப்பனே, இறைபலத்தை பெற்று, அப்பனே, இறைநாமங்கள் செப்பி, அப்பனே, தர்மத்தை, அப்பனே, செப்புகின்ற பொழுது


, ஆனாலும் சில, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதர்கள் சொல்லிக் கொடுக்கின்றார்கள் சிறு சிறு குழந்தைகளுக்கு.


 ஆனாலும் சில, அப்பனே, பின் மனிதர்கள் சொல்லிக் கொடுப்பதில்லை.



 ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, அவர்கள் நினைத்தும் கூட இப்படி நிச்சயம் தன்னில் இருக்கின்றான் என்று இறைவனிடத்தில் முறையிட்டுக் கொண்டே வந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய, 


அப்பனே, அதாவது பின் ஒரு ஒளியானது, அப்பனே, நிச்சயம் தன்னில் அதற்கும், அதாவது நிச்சயம் தன்னில் கூட, பின் நினைத்து, அப்பனே, பின் இருக்கின்ற பொழுது, அப்பனே, பின் அவர்களுக்கு படும் என்பேன், அப்பனே!!


இதனால், அப்பனே பின், நீங்கள் அவர்களை நினைத்து பாக்கியங்கள் செய்தாலும், அப்பனே, எது என்று புரிய, அப்பனே, சில வினைகள், அப்பனே, மாறும்ப்பா. 
அப்பனே, எதை என்று புரிய, அப்பனே.

 இதனால், அப்பனே, பல வகையான உண்மைகள், அப்பனே, இவ்வுலகத்தில் புதைந்து கிடக்கின்றது என்பேன், அப்பனே.


 ஆனாலும், அப்பனே, மனிதனுக்கு புரியவில்லை என்பேன், அப்பனே.


 ஆனால் மனிதன், அப்பனே, பின் எப்படி, ?, எப்படி?, பின் சிந்தித்துக் கொள்வான் என்றால், பின் அங்கு இப்படி சொன்னார்கள்,!!!!! இங்கு இப்படி சொன்னார்கள்,!!!! அப்படி சொன்னார்கள்?!, இப்படி சொன்னார்கள்!!? என்பதெல்லாம், அப்பனே, இவையெல்லாம் புரியாது என்பேன், அப்பனே. 


நிச்சயம் ஏன்?, எதற்கு?? சொன்னார்கள்??, சித்தர்கள் என்பவையெல்லாம், அப்பனே, முழுமையாக, அப்பனே, ஆராய்ந்து, அப்பனே, நிச்சயம் இருந்தால், அப்பனே, வெற்றிகள், நிச்சயம் என்பேன், அப்பனே.


 பின் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தெரியாமல், அப்பனே, எவையோ, பின் படித்துவிட்டு, அப்பனே, அங்கு அப்படி!!!!, இங்கு இப்படி!!!... என்று எல்லாம் சொன்னார்கள் என்றால், அப்பனே, நிச்சயம் அவர்களுக்கெல்லாம் புரியாத, பின் வாழ்க்கை தான் ஓடுகின்றது என்று அர்த்தம், அப்பனே. நலங்களாகவே,


 அப்பனே, வெற்றியின் ரகசியம், அப்பனே, வெற்றியின் ரகசியத்திற்கான வாய்ப்பாடுகள் கூட, அப்பனே, சித்தர்கள் உரைக்க தயாராக இருக்கின்றார்களப்பா.


 இதனால், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அனைத்திலும் வெற்றிக் கொள்ள வேண்டும்,


 அனைத்திலும் வெற்றிக் கொள்ள வேண்டும், அப்பனே.


 எதை என்று, அப்பனே, இறைவனை நினைத்து, எது என்று புரிய, அப்பனே


, பின் வெற்றி என்பது, அப்பனே, பின் நிச்சயம் இறைவனிடத்திலே வரும் என்பேன், அப்பனே. 


இதனால், அப்பனே, பின் அவ் வெற்றிக்கு போராடா, அப்பனே, நிச்சயம் இறைவனிடத்தில் சென்று கொண்டே இருக்க வேண்டும், அப்பனே. 


பின் நிச்சயம் இறைவன் சோதிப்பான், தோல்விகள் எதை என்று அங, அப்பனே, நிச்சயம் அனைத்தும் கொடுப்பான்.


 ஆனாலும், அப்பனே, பின் ஏறிக்கொண்டே இருக்க வேண்டும், இறைவனிடத்தில்!!!

 படிகள் ஒவ்வொன்றாக, அப்பனே, சொல்லிவிட்டேன்.


 இவ்வாறாக ஏறிக்கொண்டே வந்தால், அப்பனே, வெற்றிகள், நிச்சயம்


 அது மட்டுமில்லாமல், அப்பனே, எதை என்று கூற, பின் அதாவது, அப்பனே, பல வகையில் கூட ஐந்தாம் இடம் பற்றி, அப்ப, நிச்சயம் தன்னில் கூட, பின் ஏற்கனவே உரைத்திட்டேன்,
 அப்பனே


 ஐந்தாம் இடம், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவ்வாறாக என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் ஏது என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவ்வாறு என்பது அவை வென்று தான் ஆகவேண்டும் என்பேன், அப்பனே.

(ஜாதகத்தில் ஐந்தாம் இடத்தை பற்றி அங்க குருநாதர் ஏற்கனவே மதுரை சத்சங்க வாக்குகளில் பாகம் 17 மற்றும் 18.... சித்தன் அருள் பதிவு எண் 1756 /1757 மற்றும் திருவனந்தபுரம் வாக்கு பதிவு எண் 1958.. முன் வாக்குகளில் குருநாதர் வாக்குகள் உரைத்து இருக்கின்றார்)


(ஜாதகத்தில் 5-ம் இடம் (பூர்வ புண்ணிய ஸ்தானம்) என்பது மிக முக்கிய திரிகோண வீடாகும். இது முற்பிறவிப் புண்ணியம், புத்திர பாக்கியம் (குழந்தைகள்), நுண்ணறிவு, கல்வி, கலை ஆர்வம், காதல், மற்றும் பங்குச் சந்தை போன்ற ஊக வணிக லாபங்களைக் குறிக்கிறது. இஸ்தானம் வலுவாக இருந்தால், வாழ்வில் அதிர்ஷ்டம், பேரும் புகழும், சிறந்த அறிவாற்றல் கிடைக்கும்.)




 அவை வென்று, பின் இல்லை என்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் அனைத்தும் எவை என்று, அப்பனே, பின் வீணாக.!!!(போய்விடும்) 


 அதனால்தான், அப்பனே, ஐந்தாம் இடத்தை வெல்ல, அப்பனே, முக்கியமாக, அப்பனே, பின்
 அதாவது கயா!!, அப்பனே, அயோத்தி!!!
, அப்பனே, நிச்சயம் காசி!!!, 

அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, ராமேஸ்வரம்,!! அப்பனே, திருவண்ணாமலை,!!! அப்பனே, நிச்சயம் தன்னில் கூட!!

 இன்னும், அப்பனே, இவை, பின், அப்பனே, சென்றுட்டு வந்தாலே இன்னும் புரியுமப்பா, விளங்குமப்பா.



 இன்னும் ஏன்?, எதற்காக?, அப்பனே, நிச்சயம் தன்னில் மூன்று பரம்பரைகள், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே,


ஒரு, அப்பனே, எதை என்று, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் அவை தன், அப்பனே, ஜாதகத்திலே வரும் என்பேன், அப்பனே.


 அவை சரியாக கணக்கிட வேண்டும் என்பேன், அப்பனே.


 அதனால்தான், அப்பனே, திறமைகள் வேண்டும், அப்பனே. அதனால்தான், திறமைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும், அப்பனே. என்றெல்லாம், அப்பனே, சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அப்பனே.


 எதை என்று புரிய, அப்பனே, அறிந்தும் அறிந்து கூட, இதனால், அப்பனே, எங்கு? ஏது? என்று புரிய, அப்பனே, பல வகையான, அப்பனே, எது என்று கூற, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் யாங்கள் உரைக்க தயாராகவே எது என்று புரிய.



 ஆனாலும், மனிதன், அப்பனே, எது என்று, அப்பனே, குழப்பிக் கொள்ள வேண்டும் என்பேன், அப்பனே.

 அதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் குழப்பி ஒரு விடை வரும் என்பேன், அப்பனே. 


அப்படி, பின் இல்லாமல் இருந்தால், அதுவும், அப்பனே, பின் தவறு என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட,


 பின் சரியாக, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய, அப்பனே. இன்னும், இன்னும் விளக்கங்கள் தெரிவிக்கின்றேன், அப்பனே. 


சரியாகவே இதை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் தெரிவித்து, அப்பனே, தெளிந்து ஐந்தாம் இடத்தை வெற்றிக்கொண்டு அடுத்தடுத்து வென்றிடுக என்பேன், அப்பனே. 


பின் ஐந்தாம் இடத்தையே வெல்ல முடியவில்லை என்றால், அப்பனே, நிச்சயம் பின் வாழ்க்கையே பாழாகிப் போகும் என்பேன், அப்பனே.

 சொல்லிவிட்டேன் என்பேன், அப்பனே. நலமாக,


 பின் ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வரும் வரும் வரும் காலங்களில் கலியுகத்தில்,  எதைஅப்பனே, ஐந்தாம் இடத்திலே எது என்று புரிய, அப்பனே. பின் அதாவது, பின் நான்கிலே தங்குவான் என்பேன், அப்பனே.



(மனிதர்கள் வாழ்க்கையில் ஜாதகத்தில் நான்காம் இடத்திலேயே நின்று விடுகின்றனர் அதை தாண்டி பயணிப்பதில்லை


(ஜாதகத்தில் நான்காம் இடம் (4th House) என்பது சுக ஸ்தானம், மாத்ரு ஸ்தானம் (தாய்), மற்றும் பந்து பாவகம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரின் மகிழ்ச்சி, மன அமைதி, தாய், பூர்வீக சொத்து, வீடு, வாகன வசதி, கல்வி மற்றும் கல்வியின் தரம், பந்த பாசங்கள், மற்றும் ஆரம்பகால வாழ்க்கை ஆகியவற்றைக் குறிக்கும் மிக முக்கிய கேந்திர ஸ்தானமாகும்)



 ஐந்தாம் இடத்தை எவை என்று கூற, வெல்ல  வெல்லுகின்ற பொழுது, கலியுகத்திலும் வெல்லலாம் என்பேன், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட


, பின் ஆறாம் இடம், ஏழாம் இடம், எட்டாம் இடம், ஒன்பதாம் இடம், பத்தாம் இடம், 11 ஆம் இடம், 12 ஆம் இடம் அனைத்தும் வென்றிடலாம் கலியுகத்தில், அப்பனே!!

(ஜாதகத்தில் 6 முதல் 12-வது இடங்கள், ஒருவரின் அன்றாட வாழ்க்கை, சவால்கள், உறவுகள், மற்றும் வெற்றிகளைத் தீர்மானிக்கும் முக்கிய பாவங்கள் (Houses) ஆகும். இந்த இடங்கள் கடன், நோய், திருமண வாழ்க்கை, ஆயுள், பாக்கியம், தொழில், லாபம் மற்றும் விரயங்களை நிர்வகிக்கின்றன.6 முதல் 12-வது வீடுகள் வரையிலான முக்கிய கருத்துகள் இங்கே:6-ஆம் இடம் (சத்ரு/ரோக/ருண ஸ்தானம்): கடன், நோய், எதிரிகள், மற்றும் போட்டி. இது வேலை வாய்ப்பு மற்றும் உத்தியோகத்தையும் குறிக்கும்.7-ஆம் இடம் (களத்திர ஸ்தானம்): திருமண வாழ்க்கை, மனைவி/கணவன், மற்றும் தொழில் கூட்டாளிகள்.8-ஆம் இடம் (ஆயுள்/மறைவு ஸ்தானம்): ஆயுள் பலம், விபத்து, திடீர் மாற்றங்கள், மற்றும் மறைமுக விஷயங்கள்.9-ஆம் இடம் (பாக்கிய ஸ்தானம்): அதிர்ஷ்டம், தந்தை, உயர் கல்வி, மற்றும் ஆன்மீகம்.10-ஆம் இடம் (கர்ம/தொழில் ஸ்தானம்): தொழில், வேலை, புகழ், மற்றும் சமூக அந்தஸ்து.11-ஆம் இடம் (லாப ஸ்தானம்): வருமானம், லாபம், நண்பர்கள், மற்றும் விருப்பங்கள் நிறைவேறல்.12-ஆம் இடம் (விரய ஸ்தானம்): செலவுகள், தூக்கம், வெளிநாட்டு பயணம், மற்றும் மோட்சம்.)




ஆனாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நான்கு இருந்து ஐந்தை, அப்பனே, வெல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டேன், அப்பனே


. பின் எது என்று வெல்பவர்கள் யார்??? அப்பனே, சொல்லுங்கள், அப்பனே. 


ஆனாலும், அதனால் தான், அப்பனே, பின் திறமைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே! வந்து கொண்டே இருக்கின்றேன், அப்பனே. நலங்களாகவே!!


 இதனால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. நலமாக, அப்பனே, 


பின் ஒரு ஞானியவன், ஏது என்று புரிய, அப்பனே. பின் பல வழியில் கூட, அப்பனே. அறிந்தும் கூட இங்கு இருந்தானப்பா. நிச்சயம் தன்னில் கூட,



 அப்பனே. இவ்வாறாக, அப்பனே, ஞானியவன், அப்பனே. பல வகையான, அப்பனே. நிச்சயம் தன்னில் கூட ஏன், எதற்காக, பின் வந்தோம்???? என்று,


 அப்பனே. எங்கிருந்தோ???, ஏது என்று, அப்பனே. பின் அதாவது, பின் இமயம் (இமயமலையில் இருந்து) தன்னில் கூட இருந்து, அப்பனே. பின் அங்கு அவந்தனுக்கு ஏது என்று கூற, இறைவன் தரிசனம் கிட்டவில்லை. 


ஆனால் காசிலாவது கிட்டுமா???? என்று, பின் நினைத்து வந்தான், அப்பனே.
 நிச்சயம் தன்னில் கூட!!

 பல வருடங்கள் தவம் இருந்தான், அப்பனே.


 பின் அதாவது, பின் ஏது என்று கூற, கங்கை, கங்கை, பின் நதிக்கரையில், அப்பனே. 


பின் ஆனாலும் கிட்டவில்லை. இங்கிருந்து, அப்பனே. பின் நடைபயணம் சென்றானப்பா. 


ஏது என்று அண்ணாமலைக்கு அங்கும் கிடைக்கவில்லை.


 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே. பின் மதுரை மீனாட்சியையும் அடைந்தான், அங்கும் கிடைக்கவில்லை.


 அப்பனே, பல வகையில் சுற்றினான், அப்பனே. கடைசியில் ராமேஸ்வரத்தை அடைந்தான் என்பேன், அப்பனே.


 இதனால், அப்பனே, ஏது என்று புரிய, அப்பனே. இவ்வாறாக, அப்பனே. பின் ராமேஸ்வரத்தை அடைந்தவுடன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,


 ஈசன், அப்பனே. நிச்சயம் தன்னை அங்கு காண்பித்தானப்பா. சுயரூபத்தை, !!!!


அப்பனே, நிச்சயம், அப்பனே. இதனால், அப்பனே, புரிந்து கொண்டான், அப்பனே. 


ஆனாலும், பின் அவ் ஞானி கேட்டான், பின் ஈசனே!!!!!!, இவ்வாறாக, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, பின் வந்தது. எந்தனுக்கு இவ்வளவு வயதாகிவிட்டது, இப்பொழுது வருகின்றாய்!!,

 என்ன சாதிக்கப் போகின்றேன்???, யான் என்று.


 ஆனாலும், பல வகையான, பின் இன்னல்கள், ஏது என்று கூற, அங்கெங்கு சென்று, பல வகையான, ஏது என்று புரிய, பின் அதாவது, பின் திருத்தலங்களுக்கு  சென்று வந்தேன்.


 ஆனாலும், எதை என்று புரிய, பின் ஏது என்று அறிய, பின் அறியாமல், அங்கெல்லாம் கிடைக்கவில்லை, கிடைக்கவில்லை, கிடைக்கவில்லை. தரிசனம்!!!

 ஆனாலும், இங்கு கிடைத்ததே எப்படி?????, 

ஏது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட இறைவனிடம் கேட்டான். 


ஆனாலும், நிச்சயம் இறைவனோ, அதாவது ஈசனோ!!!!!!

, எதை என்று புரிய, பின் ஞானி, ஏது என்று அறிய, நிச்சயம், பின் அமைதி அறிந்து கூட,

அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பல வகையான, நிச்சயம் தன்னில் கூட, அங்கங்கும் திரிந்து கொண்டிருந்தாய் அல்லவா?

 எங்கெங்கு சுற்றி திரிந்து, பின் நீர்நிலைகளில் (தீர்த்தங்களில்), பின் அதாவது, அங்கங்கும், பின் சேர்ந்து, எவை நீராடினாய் அல்லவா? அவையெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, (அதனால்)ஆற்றல்கள் பெருகி, அதை மட்டுமில்லாமல், பல வகையான, பின் எது என்று புரிய, பின் அனைத்து பந்த பாசங்களில் இருந்தும் கூட, அதாவது, பின் எத்தனை?? எத்தனை???, ஏது என்று புரிய, பல வகையான ஆன்மாக்களில் இருந்து பிரிந்தவன் நீ.


 இதனால் அறிந்தும் கூட, பல வகையான, ஏது என்று புரிய, பின் அவ் ஆன்மாக்களை எல்லாம், பின் முக்தி கொடுத்துட்டு வந்து, கடைசியில் நின்றால் மட்டுமே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் என்னுடைய தரிசனம் கிட்டும் என்பதை எல்லாம்,!!!


( குருநாதர் இந்த வாக்கிலேயே மேலே கூறியிருக்கின்றார் சித்திரக்குள்ளர்களால் சித்திரக்குள்ளர்கள் கங்கையில் புண்ணிய நதிகளில் நீராடுவதற்கு மேலிருந்து வரும்பொழுது நம்மளுடைய முன்னோர்களின் ஆத்மாக்களின் அணுக்களையும் சித்திரக்குள்ளர்களின் உடம்பில் ஒட்டிக்கொண்டு இங்கே வந்து விடுகின்றது அவர்கள் நீராடும் பொழுது இங்கே பரவி விடுகின்றது

நம்மளுடைய சித்தர்களின் ஆத்மாக்களின் அனுப்புகல்கள் புண்ணியம் செய்திருந்தால் அந்த ஆற்றல்கள் நமக்கு கிடைக்கும்

நம்முடைய முன்னோர்களின் ஆத்மாக்கள் பாவம் செய்திருந்தால் நமக்கு புண்ணிய நதிகளின் நீராடும் பொழுது அந்த பாவம் நமக்கும் ஒட்டிக்கொண்டு சேர்ந்து சிறிது கஷ்டம் கர்ம வினை ஏற்படும்


இப்படியே தொடர்ந்து புண்ணிய நதிகளில் தீர்த்த குளங்களில் நீராட நீராட அந்த ஆத்மாக்களின் அணு துகள்கள் எல்லாம் நம்மை விட்டு விலகி அந்த ஆத்மாக்கள் அனைத்தும் மேலே முக்தியை நோக்கி சென்றுவிடும் இந்த ஞானி இப்படி செய்து ஆத்மாக்களின் பந்த பாசம் ஆசை இவற்றையெல்லாம் விலக்கி அவர்களையும் அவர் நீராடி நீராடி புண்ணிய தீர்த்தங்களின் நீராடி நீராடி முக்தியை நோக்கி ஆத்மாக்களை அனுப்பி வைத்துவிட்டார் அதனால் தான் இறைவன் தரிசனம் கிடைத்தது)





 இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, முதலிலே, அப்பனே, பின்  இறைபலத்தை பெற வேண்டும். 


அப்படி பெறவில்லை என்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட சுற்றித் திரிய வேண்டும். அப்பனே,


 பின் கடைசியில், அப்பனே, ஒரு இடத்தில், இறைவன், அப்பனே, கண்ணுக்குத் தெரிவானப்பா.


 ஏனென்றால், அப்பனே, அனைத்தும் கடந்திட வேண்டும், அப்பனே. 

அதாவது, நிச்சயம், பின் நீ நடுக்கடலில், அப்பனே, இருக்கின்றாய், அப்பனே,

 எதை என்று புரிய, அப்பனே. ஆனாலும், அப்பனே, அங்கிருந்து, அப்பனே, அழைத்து வருதல், அப்பனே, எப்படி???, ஏது என்று புரிய, அப்பனே, புரிந்து கொள்ளுங்கள் என்பேன், அப்பனே.


 இதனால், அப்பனே, பின் கரைக்கு, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறு தான் என்பேன், அப்பனே. சாதாரணம் இல்லை என்பேன், அப்பனே. இறைவனை பார்ப்பதற்கு என்பேன், அப்பனே.


 இதனால் அவ் ஞானி நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறெல்லாம், நிச்சயம் மனிதன், நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய, புரியாமல் நடந்து சென்று கொண்டு இருக்கின்றான்.


 இதனால் பின் ஒரு வரத்தை, இறைவனே, தா.


 பின் வருவோருகெல்லாம் நன்மைகள், பின் ஏது என்று புரிய அறிய.


 அதாவது, நிச்சயம் தன்னில் கூட, பின் வரும், பின் பூர்வ ஜென்ம புண்ணியத்தை, ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எடுத்துக்கொண்டு வரவேண்டும் என்பவை எல்லாம், நிச்சயம் தன்னில் கூட மனிதருக்கு தெரியாது. 


இதனால் நிச்சயம் அவை எடுத்திட்டு வந்திட, நிச்சயம் எந்தனுக்கு அருளை தா!!! என்று !!!


ஈசனும்!!!
அப்படியே ஆகட்டும், ஞானியே என்று.


 பின் அதாவது, பின் உன் விருப்பப்படியே ஆகட்டும் என்று ஈசன் மறைந்தான்.


 அதிலிருந்து அப்பனே, பின் ஒரு இடத்தில் அழகாக, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட, பின் அங்கேயே, நிச்சயம் மறைமுகமாக, பின் உடலை விட்டு, பின் அங்கேயே, பின் ராமேஸ்வரத்தில் திரிந்து கொண்டிருந்தான்.


 வருவோருக்கெல்லாம் பின் ஐந்தாம் இடத்தை கூட்டி, அப்பனே, நல்விதமாகவே எப்படி?, ஏது? என்று அனைத்தும் தெரிந்து கொள்ள பாடுபட்டுக் கொண்டே இருக்கின்றான், அப்பனே.


 இதனால்தான், அப்பனே, ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு என்பேன், அப்பனே.


 அதனால்தான், அப்பனே, இங்கு அங்கு செல்க!!, அங்கு இங்கு செல்க!!! என்பதெல்லாம், அப்பனே. ஏன், எதற்காக, அப்பனே, பின் எவை என்று கூற, அப்பனே, 
நிச்சயம் தன்னில் கூட. 
( நம் குருநாதர் தனிநபர் வாக்குகளிலும் பொது வாக்குகளிலும் நமக்கு அந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் அங்கு நீராட வேண்டும் இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும் என நமக்கு ஒவ்வொரு வாக்கிலும் எங்கெங்கு செல்ல வேண்டும் என்பதை எல்லாம் சொல்லி நம்மளுடைய முன்னோர்களின் ஆத்மாக்கள் நம் உடலில் ஒட்டிக்கொண்டு அவர்களுடைய ஆசையை நிறைவேற்றிக் கொள்ள பார்க்கும் பொழுது இப்படி நம்மை ஆலயங்கள் ஆலயங்கள் மற்றும் நதிகளின் நீராடச் சொல்லி முன்னோர்களுடைய ஆத்மாக்களின் துகள்களை எல்லாம் நம்மிடம் இருந்து அகற்றி நம்முடைய நன்மைக்காக நம்மை வழி நடத்திக் கொண்டிருக்கின்றார் இதற்காகத்தான் நதிகளில் புண்ணிய குளங்களில் கடலில் எல்லாம் குருநாதர் நம்மை நீராட சொல்லுவது இதற்காகத்தான் கங்கா யமுனா சரஸ்வதி சிந்து காவேரி தாமிரபரணி புஷ்கரணி கண்ட தீர்த்த குளம் குற்றாலம் அக்னி தீர்த்த கடல் திருக்கேதீஸ்வரம் தீர்த்த குளம் மற்றும் கடல்களில் எல்லாம் குருநாதர் நம்மை நீராட சொல்லுவது இதற்காகத்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்)





இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில வகையான, அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆன்மாக்கள், அப்பனே. அதாவது சில வகையான, அப்பனே, பின் ஏது என்று, பின் நிச்சயம் அறிந்து கூட, அப்பனே. அவ் ஆன்மாக்களின் துகளானது, அப்பனே  நிச்சயம் தன்னில் கூட தன் உடலை விட்டு நீங்க வேண்டும் என்பேன், அப்பனே.


 அவ்வாறு, அப்பனே, பின், அப்பனே, ஆன்மாவானது, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் உடலை, அப்பனே, ஏது என்று, அப்பனே, ஒட்டிக்கொண்டு, அப்பனே, அதன் எது என்று, அப்பனே, பின் நிச்சயம் ஆசைகள் நிறைவேற்றிக் கொள்ள பார்க்கும் என்பேன், அப்பனே.


 இதனால்தான், அப்பனே, பின் ராமேஸ்வரமும், அப்பனே, இன்னும் பல நீர்நிலைகளிலும் கூட, அப்பனே. அதாவது பல வகையான புண்ணிய நதிகளில் கூட, அப்பன் நீராடச் சொல்கின்றோம், அப்பனே. 
பின் நிச்சயம் தன்னில் கூட,


 அவ்வாறாக, அப்பனே, பின் ஆசைகள் ஏது என்று, அப்பனே, பின் அவ் ஆன்மா எது என்று கூற, அப்பனே, நிச்சயம். அதாவது, பின், பின் துகளானது, அப்பனே, பின் இவ்வாறாக, பின் தீர்த்துக்கொள்ளவில்லை என்றால், அப்பனே, மீண்டும் மீண்டும் ஏது என்று, அப்பனே, கஷ்டத்தில் மூழ்கி, மூழ்கி, அப்பனே.


 இதனால்தான், அப்பனே, பல வகையான, அப்பனே, பின் முன்னோர்கள் ஏது என்று கூட துகள்களாக திரிந்து கொண்டிருக்கின்றார்கள், அப்பனே.


 இதனால், அப்பனே, அவ் துகள்கள், அப்பனே, உடம்பில் ஒட்டிக் கொள்ளுகின்ற பொழுது, அப்பனே, பல ஆசைகள் மனிதனுக்கு ஏற்பட்டு, அப்பனே, பல துன்பங்கள் ஏற்படுகின்றது என்பேன், அப்பனே.


 இதனால், அப்பனே, பின் அவை அகற்ற வேண்டும். எப்படி அகற்ற முடியும்???? என்பேன், அப்பனே.


 நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு தெரியாதப்பா,

அவை எல்லாம் வருங்காலத்திலே, நிச்சயமாக எடுத்திருக்கின்றேன், அப்பனே. 


சரியாக, அப்பனே, கையாண்டு, அப்பனே, வெற்றி பெறுக, அப்பனே. இப்பொழுது போதும் என்பேன், அப்பனே. இதனால், அப்பனே, நலங்கள், ஆசிகள் இன்னும் வித்தியாச முறையில் எல்லாம் யாங்கள் எடுத்து வருவோம். அதனை சரியாக புரிந்து கொள்ளுங்கள், அப்பனே. 

அனைத்தும் வென்றிடலாம், அப்பனே. 

நிச்சயம் தன்னில் கூட, பின் உங்களுக்கு, பின் என்னென்ன தேவை??? என்பதை அதிலிருந்தே பெற்றுக்கொள்ளலாம். எம்முடைய ஆசிகள், ஆசிகளப்பா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2207 - அன்புடன் அகத்தியர் - 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 5 

நாள் :- 19/04/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் :- காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : உலக நன்மைக்காக 09 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
பகுதி 5  நேரலை :-  https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h25m30s


===========================
# மேஷ ராசி வகுப்பு - “அ”  வகுப்பு  நிறைவு 
===========================
# ரிஷப ராசி -  “ஆ” வகுப்பு ஆரம்பம்….
===========================




தேரையர் சித்தர் :-  அறிந்தும் அப்பனே இவையெல்லாம் ஏது என்று புரிய அறிந்து கொள்ள அப்பனே அடுத்த அகவைக்கு செல்க 


===========================
அடியவர்கள் பகுதி 5  நேரலை பதிவினை அவசியம் பார்க்கவும். 
பகுதி 5  நேரலை :-  https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h25m30s
===========================
( இப்போது 3 அன்பு அடியவர்கள் அங்கு உள்ள  எழுது பலகையில் எழுதிய “அகர வரிசை வார்த்தைகள் அதனை ஒவ்வொன்றாக  அழித்தனர். இதன் பின்னர் “ஆ” வரிசை வார்த்தைகளை எழுத ஆரம்பித்தனர். இதனிடையே சுவடி ஓதும் மைந்தன் மற்றும் அடியவர்கள் விளக்கங்கள் சில அளித்தார்கள்)   
===========================

சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்  :- 


(இதெல்லாம் முடிஞ்சுச்சுன்னா அடுத்து ஆ-க்கு போகச் சொல்றாங்க. கோடி ரூபாய் கொடுத்தாலும் இதெல்லாம் கத்துக்க முடியாது, ஏன்னா சித்தர்கள் நமக்காக வந்து இதெல்லாம் சொல்றாங்க. ஒருவேளை சாப்பாடு இல்லாம கஷ்டப்படுற எத்தனையோ பேரை நாம காப்பாத்தணும், அதுக்காகத்தான் சித்தர்கள் ஓடி ஓடி உழைக்கிறாங்க. ஒரு ஜாதகக் கட்டத்தை எப்படி பயன்படுத்தணும்னு இதுல சொல்லிக் குடுத்திருக்காங்க. முக்கியமா உயிரெழுத்துக்களுக்கும் 12 ராசிகளுக்கும் சம்பந்தம் இருக்குன்னு இதுவரைக்கும் யாருக்காவது தெரியுமா? தெரியாது, அதைச் சொல்லிக் குடுக்குறவங்கதான் சித்தர்கள். பூமிக்கு அடியில என்ன இருக்கு, உன் உடம்புல என்ன இருக்கு, எப்ப நோய் வரும், எப்ப கஷ்டம் வரும்னு எல்லாத்தையும் சித்தர்கள் சொல்லிக் குடுப்பாங்க. இதெல்லாம் நீங்க தெரிஞ்சுக்கிட்டா மட்டும்தான் இறைவனை காண முடியும். இறைவன் இங்க நடுவுல இருக்காருங்க ஐயா. ) 


( இப்போது இவ்வேளையில் பல கலந்துரையாடல்கள் நிகழ்ந்தது. கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் ஒவ்வொன்றாக  சொல்ல சொல்ல பின் வரும்  “ஆ” கர வரிசை வார்த்தைகளை அடியவர்கள் எழுதினார்கள் எழுது பலகையில்…உரையாடலில் சில சொற்கள் பலமுறை திரும்பத் திரும்ப வந்திருந்தன (உதாரணமாக: ஆனந்தம், ஆரோக்கியம், ஆதி). அவை நீக்கப்பட்டு, ஒரு முறை மட்டுமே பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.  )  


ஆசை,
ஆற்றல்,
ஆகாயம்,
அருள்,
ஆழ்வார்,
ஆளவந்தான்,
ஆனந்தம்,
ஆழ்வார்கள்
ஆண்மை,
ஆளுமை,
ஆழ்வரம்,
ஆண்டாள்
ஆணவம்,
ஆண்டவன்,
ஆதி,
ஆத்மா
ஆன்மா,
ஆரவாரம்,
ஆசி,
ஆறு
ஆசீர்வாதம்,
ஆரோக்கியம்,
ஆராதனை,
ஆதவன்,
ஆளாளம்,
ஆறறிவு,
ஆரத்தி,
ஆணை
ஆக்கம்,
ஆதிமூலம்,
ஆருயிர்,
ஆதிக்கம்
ஆரூரான்,
ஆசான்,
ஆலயம்,
ஆயிரம்
ஆஞ்சநேயர்,
ஆலமரம்,
ஆசிரியர்,
ஆதிரை
ஆர்வம்,
ஆச்சரியம்,
ஆதி நாயகன்,
ஆடை,
ஆடு,
ஆண்டு,
ஆண்,
ஆந்தை
ஆக்ரோஷம்,
ஆணி,
ஆண்டி,
ஆட்டம்
ஆயில்,
ஆத்தி,
ஆயில்யம்,
ஆழி
ஆறுமுகம்,
ஆள்மனம்,
ஆதித்யன்,
ஆன்மிகம்
ஆதீனம்,
ஆகமம்,
ஆவணி,
ஆரம்பம்
ஆய்வகம்,
ஆராய்ச்சி,
ஆடி,
ஆயுதம்
ஆயுள்,
ஆயுத எழுத்து,
ஆயக்கலைகள்,
ஆதாரம்
ஆயுத பூஜை,
ஆபரணம்,
ஆயுர்வேதம்,
ஆதரவு
ஆரண்யம்,
ஆணிரை,
ஆவணம்.

===========================
அடியவர்கள் அவசியம் நேரலை பதிவை பார்க்கவும். அப்போதுதான் முழு புரிதல்கள் உண்டாகும். 

நேரலை :- https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h34m04s
===========================

தேரையர் சித்தர் :-  அறிந்தும் இவை என்று அறிய, அப்பா, மேடத்தில் “ம்” மென்று, அதாவது முதலில் “அ” என்று,  “அம்” மென்று இடுக 


சுவடி ஓதும் மைந்தன் :-  இது “அ”  ஓகேங்களா. அடுத்து “ம்”  இங்க போட சொல்றாங்க. இது அம். ஐயா புரியுதுங்களா?


( மேஷ ராசியில் ஏற்கனவே “அ” என்ற எழுத்து இருந்தது. அதனுடன் “ம்” சேர்த்து , “அம்” என்று எழுத வேண்டும் )


===========================
# “அம்” -  பீஜ மந்திர ரகசியம் 
===========================


தேரையர் சித்தர் :- இவை அனைத்தும் தெரிந்து கொண்டால், “அம்” என்ற பின் மூல மந்திரத்திலிருந்து தொடங்கும் உங்கள் வாழ்க்கை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதெல்லாம் ஃபர்ஸ்ட்ல வந்து “அ” வரிசையில்  என்னென்ன எழுதினாங்க வந்து அதெல்லாம் தெரிஞ்சு வச்சிருந்தீங்கன்னா,  ஓம் அம்,  அம் என்றது என்னது மூல மந்திரம்.  


(முதல்ல "அ" வரிசையில என்னென்ன எழுதினாங்கன்னு தெரிஞ்சு வச்சிருக்கணும் ஐயா. அம்மா, அப்பா, அண்ணன், அன்னதானம், ஆண்டவன், அமைதி, அகத்தியர்னு இதெல்லாம் தெரிஞ்சுக்கிட்டாதான் "அம்" என்கிற மூல மந்திரம் உங்களுக்கு சித்தியாகும். இதையெல்லாம் சொல்லிக்கிட்டே வர்றப்ப, அதுல இருந்தே ஒரு மந்திரத்தையும் எடுத்து உங்களுக்குத் தெரிவிச்சு இங்கேயே மந்திரத்தைக் கொடுக்கிறாரு. அந்த "அ" வரிசை வார்த்தைகள்ல இருந்து எடுக்கப்பட்ட மந்திரம்தான் "அம்". இதெல்லாம் தெரிஞ்சாத்தான் அந்த மந்திரம் வேலை செய்யும், புரியுதுங்களா ஐயா? அப்புறம் அந்த "அம்" மந்திரத்தை அப்படியே எடுத்துட்டாருங்க ஐயா. இதுதான் விஷயம்.) 


தேரையர் சித்தர் :-  ஏது என்று புரிய இவையெல்லாம் உணர்ந்தால் அம் என்று ஏது என்று கூற  அறிந்து கூட அனைத்து கிரகங்களும் உள் செல்லும். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதையெல்லாம் வந்து நீங்க உணர்ந்துட்டீங்கன்னா “அம்” என்று சொல்லும்போது என்ன ஆகும்? அனைத்து கிரகங்களின் ஒரு சக்தி…உள்ள போகும்.


தேரையர் சித்தர் :-  அப்பா அறிந்தும் ஏது என்று அறிய,  “அ” இருக்கின்றான் இறைவன் “ஆ”விலும்  இருக்கின்றான் இறைவன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  “அ” என்ற சொல்லிலும் இருக்கின்றான் இறைவன். “ஆ” என்ற சொல்லிலும் இறைவன் இருக்கின்றான். அப்ப “ஆ”  என்னது?  


அடியவர் 2 :- எல்லாத்துலயும் முட்டை போட சொன்னார்ல இறைவன் முட்டை எல்லாம் இருக்கு… 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் சுலபமாக அறிந்தும் ஏது என்று புரிய அனைத்திலும் இதைத்தான் அறிந்து கொண்டு இறைவனை காணலாம் என்று. ஆனால் காணுவதில்லையே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம் ரைட்டு. அப்ப எல்லாத்துலயும் முட்டை இருக்குது பார்த்தீங்களா? இங்கேயும் ஒன்னு வச்சிருக்காரு. இதெல்லாம் நீ பயன்படுத்தினேன்னா, இந்த முட்டையிலேயே நீ காணலாம். இதை காண்டிட்டு என்ன பண்ணிடலாம்? இங்கேயே இறைவனை பார்க்கலாம் ஐயா புரியுதுங்களா? 


அடியவர் :- இந்த ரவுண்டு போட்டு இருக்காங்க இல்ல, சுழிச்சு விட்டுருக்காங்க இல்ல.  ஆரம்பத்துல எல்லாத்துலயுமே இருக்கு பாருங்க. அதான் 12 எழுத்துக்களிலும் இறைவன் இருக்கிறான்னு சொல்றாங்க. அது என்னன்னு கேட்டீங்கன்னா, எழுத்து ஆரம்பமும் முடிவிலையும் சுழிச்சுவிட்டு தான், நம்ம ஆரம்பிக்கிறோம். முடிக்கிறோம். அப்படின்றப்போ எல்லாத்துலயும் வட்டம் இருக்கு. இறைவன் இருக்கிறார். 


===========================
# “தமிழ் உயிர் எழுத்துக்கள்” - உலகின் அனைத்து மொழிகளிலும்…
===========================


தேரையர் சித்தர் :-  அறிந்தும் இவைத்தன் இவ்வெழுத்துக்கள் எவ்வாறாக அனைத்து மொழிகளிலும் பின் நிச்சயம் ஏது என்று அறிய பயன்படுத்தப்படுகின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளிலும் இந்த எழுத்துக்கள் எல்லாமே பயன்படுத்துறாங்க.


===========================
# குருநாதர் அகத்திய பெருமான்  வாழ்க, வாழ்க, வாழ்க !!!  
===========================


தேரையர் சித்தர் :-  இதை பெருமையாகச் சொல்வேன் என் குருநாதரே இயக்கினான் என்று. 


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- தேரையர் சித்தர் சொல்கின்றார். இதை நான் பெருமையா சொல்லுவேன்.  என் குருநாதர் இந்த எழுத்துகளிலே ,  இந்த உலகத்தை இயக்கினார். அடக்கிட்டாரு. 


அடியவர் / அடியவர்கள் :- ( ஆச்சரியங்கள் ……பலத்த கோஷங்கள் )


குருநாதர் அகத்திய பெருமான்……… வாழ்க !!!!!!!!! 


குருநாதர் அகத்திய பெருமான்……… வாழ்க !!!!!!!!! 


குருநாதர் அகத்திய பெருமான்……… வாழ்க !!!!!!!!! 




சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, அகத்தியரே இதிலேயே அ, ஆ, இ …க்கு எல்லாம் கிரகங்களை எல்லாம் சொல்லுவார் இன்னும். இதிலேயே அடக்கிட்டாருப்பா 


தேரையர் சித்தர் :-  எது என்று அறிய இதைப் பின் இவ்வெழுத்துக்களிலே உங்களை வெல்லும் சக்தியும் பின் கூட்ட. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த எழுத்துக்களிலேயே இதெல்லாம் அறிஞ்சீங்கன்னா, உங்கள்  சக்தி நீங்கள் கூட்டி, நீங்களே வெல்லலாம் இறைவனை காணலாம் 


தேரையர் சித்தர் :-  ஆனாலும் இவைத்தன் மறைக்கப்பட்டது. மனிதன் ஏதோ சொல்லி குழப்பி, மனிதன் மனிதனையே கெடுத்துவிட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால் இவையெல்லாம் மறைக்கப்பட்டது. இவையெல்லாம் மறைச்சு என்ன பண்ணிட்டாங்க? மனிதன் மனிதனையே 


அடியவர் :- கெடுத்துட்டாங்கப்பா 


சுவடி ஓதும் மைந்தன் :- கெடுத்துட்டான் 


தேரையர் சித்தர் :-  இதனாலே கலியுகத்தில் அழிவுகள் பல. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலதான் கலியுகத்துல அழிவுகள் 


அடியவர் :-  ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டதுனாலதான், அழிவுகள் இருக்குன்றாங்க.


===========================
# “ஆ” எழுத்து ரகசியங்கள்….
===========================


தேரையர் சித்தர் :-  எது என்று புரிய இதனால் மீண்டும் ஆ என்று முதலில் தொடங்குவது இவை அனைத்தும். இவையெல்லாம் பின் முதலிலே பின் இருந்தால், பின் ஆண்டவன் உங்களுக்கு காட்சி அளிப்பது உறுதி. 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல “அ” இருக்கிறதெல்லாம் தெரிஞ்சுக்கினீங்கன்னா,  அடுத்து “ஆ”.  ஆண்டவன் நிச்சயமாக உங்களுக்கு காட்சி அளிப்பார். 


சுவடி ஓதும் மைந்தன் :- அன்பு, அறம்….


அடியவர் :-  இதெல்லாம் தெரிஞ்சுகிட்டா,  அடுத்து உறுதி கொடுக்குறாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உறுதி கொடுக்கிறார். 


அடியவர் :-  ஆண்டவன் காட்சி அளிப்பார்.  உறுதி கொடுக்குறாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  உறுதி கொடுக்கிறார் 


அடியவர் :-   தரிசனம் கிடைக்கல ஆனா உறுதி கொடுக்குறாங்க உறுதி கொடுக்கிறார் . நிச்சயம் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும்ன்றாங்க


சுவடி ஓதும் மைந்தன் :-  நிச்சயம் ஆண்டவன் தரிசனம் கிடைக்கும்ன்றாங்க தரிசனம் கிடைக்கும். அன்னத்தை போடணும் .எல்லா உயிரினும் ஒரே மாதிரி எண்ணனும். அப்புறம் நிறைய எல்லா எல்லா ஜீவராசிகளும் அன்பு காட்டணும். எல்லாம் பண்ணோம்னா ஆண்டவன் 


அடியவர் :- உங்களுக்கு காட்சி கொடுப்பார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  காட்சி அளிப்பார். உறுதி… உறுதி… “ஆ” ஓகேங்களா 


தேரையர் சித்தர் :-  அப்பா அனைவரும் சுக்கிரன் அறிந்தும் கூட அதாவது உயிர்ப்பிக்கும் ஆற்றலை பின் எதை என்று ஆஅறிந்தும் பெற்றிருப்பான் என்று உணர்ந்ததே. 


சுவடி ஓதும் மைந்தன் :- சுக்கிரனுக்கு ஒரு வித்தை தெரியும். என்ன வித்தை தெரியும் ஐயா? 


அடியவர் :-  உயிர்ப்பிக்கும் ஆற்றல் உண்டு…. 


சுவடி ஓதும் மைந்தன் :- உயிர்ப்பிக்கும் ஆற்றல், சுக்கிராச்சாரியார் அவருக்கு உண்டு. 


தேரையர் சித்தர் :-  இவை அனைத்தும் நிச்சயம் தெரிந்திருந்தால், பின் உயிர் போகும் நோய்கள் வளராது மனிதனிடத்தில். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதை “ஆ” எல்லாத்தையும் கத்துக்கிட்டீங்கன்னா 


அடியவர் :-  நோய் வராது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நோய் வராது. நோயால் தானே துன்பம் வருது எல்லாம் வருது. ஏது வருது. எல்லாமே வந்து மனிதன் என்ன பண்றான்? உயிர் போகுது அதனால்தான். ஆனால் இதெல்லாம் “ஆ” இருக்கிறதெல்லாம் தெரிஞ்சு வச்சீங்கன்னா ஆண்டவனை காணலாம். சுக்கிராச்சாரி என்ன பண்ணிக்கிறார். நோய் தீர்க்கும். 


அடியவர் :-  மருத்துவம் தெரிஞ்சவர். நோய்களை வெல்லலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  வெல்லலாம். 


தேரையர் சித்தர் :-  இதனாலே அடுத்து பின் சுக்கிராச்சாரியனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனாலதான் இரண்டாவது யாரு? சுக்கிராச்சாரியனை வச்சிருக்கிறார். சுக்கிராச்சாரியன் சிறப்பு என்ன? ஆண்டவன் காட்டுவார். 


அடியவர் :- இறைவனை காண்பிப்பார். நோய்களை வெல்ல உதவி செய்வார். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே பண்ணுவார். 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் “ஆ” என்ற எழுத்திலே அனைத்தும் தோல்வியுற்றால்  அனைத்தும் அதாவது நோய்கள் வரும். எது என்று புரிய ஆண்டவனைப் பற்றியும் தெளிவு பிறக்காது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப …


அடியவர் :- இங்க தெளிவு பெறல அப்படின்னா, அங்க ஆண்டவனையும் பார்க்க முடியாது. நோய்களையும் நம்மளால ஜெயிக்க முடியாது. வாழ்க்கையை முடிச்சுக்க வேண்டியதுதான். 


தேரையர் சித்தர் :-  “ஆ” என்ற எழுத்திலே அனைத்தும் ஏது என்று புரிந்து கொள்ள, அனைத்தும் பின் நல்குவான் சுக்கிராச்சாரியனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  இதை நீங்க எல்லாம் தெரிஞ்சுக்கினீங்கன்னா நீங்க மாயப்பொருளை கேக்குறீங்க பாருங்க?  என்ன வேணும்? 


அடியவர் :- எல்லாமே கொடுப்பாராம் எல்லாமே எல்லாமே அவர் தான் வச்சிருக்கிறார். பணம் பொருள் உங்களுக்கு தேவையான வீடு சொந்தம் பந்தம் சுற்றம் சரிங்களா அந்த மகிழ்ச்சி எல்லாம் அவர் வச்சிருக்கிறார் இதையெல்லாம் கத்துக்கிட்டீங்க அப்படின்னா அதை உங்களுக்கு வாரி வழங்குவார் சுக்கிராச்சாரியர் 


சுவடி ஓதும் மைந்தன் :-  சுக்கிராச்சாரியர் வாரி வழங்குவார். அதனாலதான் வந்து இதுலவே வந்து ஆசையை பூர்த்தி செய்வார் 


அடியவர் :- ( பல “ஆ”கர வார்த்தைகளுக்கு விளக்கங்கள் அளித்தார்கள்) 


ஆசையை பூர்த்தி செய்வார் 
ஆரூரானை காட்டுவார் 
ஆற்றலை பெருக்குவார் 
ஆளவந்தானை காட்டுவார் 
ஆளுமையை கொடுப்பார் 
ஆணவத்தை அடக்குவார் 
ஆண்டவரை காட்டுவார் 
ஆறுதல் அளிப்பார் 
ஆயுர்வேதம் கற்பிப்பார் 
ஆனந்தத்தை கொடுப்பார் 
ஆடி ஆவணி இதுல வந்து ஆடியில வந்து பூஜை பண்றோம்
ஆணை பிறப்பிக்கலாம் 
ஆணையோட நம்ம வெற்றி கொள்ளலாம் 
ஆக்கம் வரும் 
ஆளையும் செல்லலாம்
ஆற்றல் ஆபரணம் கிடைக்கும்
ஆசிரியர் குருவாகலாம்
ஆசிரியர் . வந்து பாருங்க குருவும் ஆகலாம் சொல்லிக் கொடுக்கலாம் ஆபரணம் வரும்
ஆதரவு கிடைக்கும் 
ஆரோக்கியம் கிடைக்கும் 
ஆதவனை பார்க்கலாம்
ஆகாயம் மாதிரி பிரகாசிக்கலாம் 
ஆஞ்சநேயர் சிரஞ்சீவி
ஆயுள் நீட்டிக்கலாம்
ஆண்டு ஆணி ஆணி 
ஆள வந்தான் 
ஆளலாம் இந்த நாட்டை ஆளலாம் ஆளலாம்
ஆதித்தனை தரிசிக்கலாம் இறைவனை காணலாம் 
ஆல  கண்டன் யாரு? நம்ம சிவபெருமான் 
ஆக்ரோசத்தை அடக்கலாம் 
ஆதீனம்  குருமார்கள்
ஆய்வகம் ஆய்வாளர் சயின்டிஸ்ட் ஆகலாம் 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா ஐயா பார்த்தீங்களா யாருக்கு தெரியும் ஐயா யாருக்காவது தெரியுமாங்க இந்த விஷயம் நம்ம எல்லாம் விளையாட்டா நிறைய வார்த்தைகளை கொடுத்தோம். 


அடியவர் :- இந்த வார்த்தைகள் எல்லாம் அப்படியே அர்த்தத்தோட கனெக்ட் ஆகுது பாருங்க. சுக்கிராச்சாரியார் அருள் இருந்தா இது எல்லாமே நமக்கு கிடைக்கும்ன்றாங்க. 


===========================
# அடுத்த பாடம் “இ” எழுத்து ரகசியங்கள்….
# காக்கும் கடவுள் மஹாவிஷ்ணு ரகசியங்கள் ஆரம்பம்…
# “ மிதுனம் ராசி”  ரகசியங்கள்….
===========================


தேரையர் சித்தர் :-  ஏது என்று அறிய அடுத்தவன் பின் காக்கும் ஏது என்று அறிய அதாவது விஷ்ணுவை பற்றி. இதனால் அவனைப் பற்றி பாடுங்கள் பின்பு உரைப்பேன். உலக நன்மைக்காகவே வேண்டி பாடுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அதாவது ( மேஷ ராசி , ரிஷப ராசி )  இது ரெண்டும் முடிச்சிட்டார்.  பெருமாள் பத்தி வராரு. ”இ” வந்து பெருமாள் பத்தி வராரு. அப்ப இவரைப் பத்தி நீங்க பாடுங்க. எல்லாரும் உலகத்துக்காக நினைச்சுக்கோங்க. ஒருமுறை பெருமாள்  பத்தி பாடுன்றார் 


===========================
# “ஆம்” மந்திரம் உபதேசம் ( ரிஷப ராசி ) 
===========================


தேரையர் சித்தர் :-  அறிந்தும் ஏது என்று புரிய இதிலே இதிலிருந்தே ஒரு மந்திரத்தை உரைக்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :- இதிலிருந்தே ஒரு மந்திரம்… 


தேரையர் சித்தர் :-  எது என்று அறிய பின் ஆம் என்று. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஆம்.  இதிலிருந்தே ஒரு மந்திரம் எடுக்கிறேன் சொல்லிட்டாரு. ஆம் என்ற மந்திரத்தை கொடுத்திருக்காங்க இப்போ அடுத்த மந்திரம் கொடுத்திருக்காங்க 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் சந்திரன் ஈக 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க ஒரு சந்திரன்..( ரிஷப ராசி அருகின் சந்திரன் என்று எழுத வேண்டும் )  எல்லா இடத்துலயும் சந்திரன் வராங்க. மனசு எல்லாத்துக்கும் மனசு வேணும். 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் ஏது என்று புரிய ஆனாலும் ஒன்று இங்கேயும் நீ காணவில்லை என்றால் பின் ஏது என்று புரிய அனைத்தும் பின் எவை என்று கூட சுடுகாடுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  இங்கேயும் நீங்க எதுவும் உணரலைன்னா, இந்த சந்திரனும் சுக்கிரனும் சேர்ந்து என்ன பண்ணுவாரு? அழகா எடுத்துட்டு போயிட்டே என்ன பண்ணுவாரு? முடிஞ்சு போச்சு. ஆயுசு முடிஞ்சு போச்சு. இங்கேயும் என்ன பண்ணுவாரு சுக்கிரன்? வந்து மனம் தெளிவடையனும் இல்லைன்னா அவ்வளவுதான். இல்லைன்னா என்ன பண்ணுவாரு நேரா தூக்கிட்டு போயிட்டு அழகா எங்க படுக்க வைக்கணுமோ அங்க படுக்க வச்சிருவார் சந்திரன் சேர்ந்து.. 


தேரையர் சித்தர் :-  அறிந்தும் ஏது என்று புரிய அதாவது இவ்வாறாக இதற்கு அதிபதி முதலில் முருகன். இரண்டாவது சுக்கிரன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  முதலுக்கு  ( மேஷ ராசிக்கு ) அதிபதி யாரு? செவ்வாய். முருகன் முருகன். இரண்டாவது அதிபதி ( ரிஷப ராசிக்கு )   யாரு? சுக்கிரன்.  


தேரையர் சித்தர் :-  இவை இரண்டும் சேர்ந்தால் என்ன ஆகும் நீங்களே கூறுங்கள்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  செவ்வாயும் சுக்கிரனும் சேர்ந்தால் என்ன ஆகும்? யாருக்காவது தெரியுமா ஐயா?  புதன் ஐயா. புதன் அடுத்து இங்க வரார் இது ரெண்டும் சேர்ந்தது என்ன ஆகும்?  இது ரெண்டும் சேர்ந்து யாரு பெருமாள் பெருமாள். அதாவது செவ்வாயுடைய ஆற்றலும் செவ்வாயுடைய அந்த ஆளுமை தன்மையும் ஆற்றலும் சுக்கிரனுடைய செல்வமும் சேர்ந்தால் சேர்ந்தால் பெருமாள். பெருமாள் பற்றி அடுத்து சொல்றேன் அப்ப பெருமாளை இந்த உலகத்துக்காக அவரை நினைச்சு படுங்க 


பாடகர் :- ( குறையொன்றும் இல்லை என்ற பாடலை அருமையாக பாடினார்கள்) 
இவ் பாடலின் நேரலை https://www.youtube.com/watch?v=C5OQ5pL4GnY&t=4h47m30s


===========================
# ஆ வரிசையில் காணப்படும் சொற்கள் 

http://www.viruba.com/Nigandu/Letter.aspx?ID=2
===========================


(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 19.04.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …….)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!