​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 14 August 2026

சித்தன் அருள் - 2276 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

திருப்பதி திருமலையில் 

திருப்பதி ஏழுமலையான்  தரிசன ரகசியம் மற்றும் உபதேசங்கள்  அடியவர்களுக்கு குருநாதர் கூறிய வாக்கு பாகம்1

அப்பனே எதை என்று கூற நிச்சயம் தன்னில் கூட எப்படி ஏது என்று அனைவருமே நாங்கள் நாராயணன் தரிசனம் செய்ய வேண்டும் என்றே செல்கின்றார்கள் என்பேன் அப்பனே 

ஆனாலும் அப்பனே ஒருவர் கூட நாராயணன் என்னை பார்ப்பானா என்று வருவதில்லை என்பேன் அப்பனே

 ஏன்??

அப்பனே இதனால்தான் மூடநம்பிக்கை என்று யான்  குறிப்பிடுவேன் இங்கு.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

அனைவரும் திருப்பதி சென்று பெருமாளை பார்க்க போகின்றோம் திருமலை பார்க்க போகின்றோம் என்று சொல்கின்றார்கள் செல்கின்றார்கள் 

ஆனால் பெருமாள் நம்மை பார்ப்பாரா என்று யாரும் நினைப்பதில்லை என்று குருநாதர் கேட்கிறார்.


குருநாதர் வாக்கு


அப்பனே, எங்கு? ஏது? என்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எங்கு அமர்வான்????, என்பேன்,

 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அவன் நலமாகவே, அப்பனே, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஏகாதாசி அன்று முழுவதும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, இப்பொழுது குளித்தீர்களே,(புஷ்கரணியில் அடியவர்கள் குளித்தார்கள்)



 அங்குதான் ஒரு நாள் முழுவதும் அங்கு அமர்வானப்பா.
நிச்சயம் தன்னில் கூட, !!

அப்பொழுது நீங்கள் உள்ளே சென்றாலும், அப்பனே, எவரை பார்ப்பீர்கள்,????  சொல்வீர்களாக,

 சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

ஏகாதசி அன்று ஒரு நாள் முழுவதும் பெருமாள் , புஷ்கரணியில்  மட்டும் தான் இருப்பாராம்.



அடியவர் 1

இன்னைக்கு ஏகாதாசி.


குருநாதரின் வாக்கு.

அப்பனே, ஒவ்வொரு நாளும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு இடத்திலும் இருப்பானப்பா.


 அப்பொழுது உள்ளே இருப்பவன் யார்?


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்.


பெருமாள் 
 ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு இடத்திலும் இருப்பாரு.


குருநாதரின் வாக்கு.


 ஆனால் மனிதனோ, நிச்சயம் தன்னில் கூட, எதை என்று கூறுகிறேன்.

 அதனால்தான், அப்பனே, அடிப்படை விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

 அதனால்தான், அப்பனே, பின் அறிவியல், அதாவது, விஞ்ஞானம் மூலமாக யான் எடுத்துரைக்கப் போகின்றேன், இவையெல்லாம், அப்பனே, பொறுத்திருந்தால். அப்பனே.



 அப்பனே , நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூற, பின் அழகாக, அப்பனே, மரத்தடியில் உறங்குவான், என்பேன், அப்பனே.



 நிச்சயம் இது யாருக்கு தெரியும்? 


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

குருநாதர் இந்த வாக்கில் குறிப்பிடும் பெருமாள் உறங்கி செல்லும் மரம் ஆனது ... திருப்பதி திருமலையில் 4 மாட வீதி வடக்கு பாகத்தில் புஷ்கரணி குளத்திற்கு பின்புறம் அதாவது ஆதி வராக பெருமாள் கோயிலின் பின்புறம் ஒரு பெரிய அரசமரம் உள்ளது... தரிசனம் முடித்து லட்டு பெற்றுக்கொள்ள வரும் பொழுது லட்டு கவுண்டர் காம்ப்ளக்ஸ் வாசல் வழியாகவும் இந்த மரத்தை அடைய முடியும்.. தற்போது இந்த மரத்தடியில் சிவலிங்கமும் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடுகள் நடந்து வருகின்றது. 
இந்த மரத்தின் மகிமையைப் பற்றி ஏற்கனவே குருநாதர்..17/10/2023 பத்ரிநாத் வாக்கில் கூறியுள்ளார் சித்தன் அருள் பதிவு எண் 1516... மீண்டும் இந்த வாக்கினைப் படித்து உணர்ந்து கொள்ளவும்


தற்போது
புஷ்கரணியில் குளிப்பவர்கள் இந்த மரத்தின் மகிமை தெரியாமல் அவர்கள் அங்கு துணிகளை காய போடுவது ஓய்வு எடுப்பதும் என்று செயல்கள் செய்து கொண்டிருக்கின்றார்கள்.




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பெருமாள் ஏகாதசி அன்று புஷ்கரணியில் குளத்தில் இருந்திட்டு, கொஞ்ச நேரம் ஒரு மரத்தடியில், அங்கதான் உறங்குவார். 



குருநாதரின் வாக்கு

அப்பனே, இப்படி இருக்க, அப்பனே, உள்ளே சென்று எவரை பார்ப்பீர்கள்????
, நீங்கள் சொல்லுங்கள்.


 அடியவர் 1


ஐயா, நாராயணன் ஒரு சில ரூபத்துல.....



குருநாதரின் வாக்குகள்.

அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. அதாவது, ஒன்றை சொல்கின்றேன்,
 அப்பனே. நீ கூட, அப்பனே, பின் சாதாரண மனிதன் தானப்பா. 

ஆனாலும், அப்பனே, ஒரு நாளைக்கு, அப்பனே, ஒரு இடத்தில் இருக்கின்றாயா???? என்ன!?!?!


, எவை என்று புரிய, அப்பனே. இறைவன், அப்பனே, அவன் எப்படி, அப்பா, நீயே கூறு.




அடியவர் 1


உண்மைதான், தந்தையே.


குருநாதரின் வாக்குகள்.


அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று புரிய, அப்பனே. எப்பொழுது???? எங்கு இருப்பான்???? என்பவை எல்லாம், அப்பனே, சித்தர்களுக்கே உரித்ததாகும், என்பேன், அப்பனே.



சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்


பெருமாள் எந்த நேரத்தில் எங்கு இருப்பார்??? இறைவன் எப்பொழுது என்று எப்படி என்பதெல்லாம்
 சித்தருக்கு மட்டும்தான் தெரியுமாம். 




அடியவர் 1
தந்தையே மனிதர்கள் இதை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.


குருநாதரின் வாக்கு 


அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, எதை என்று புரிய, அப்பனே. பாவம் இருந்தால், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே. பாவம் எவை என்று புரிய, அப்பனே. ஒரு கல்லை, அப்பனே, குறிப்பது போல், என்பேன், அப்பனே.


 நிச்சயம் உன், அப்பனே, பின் தலையில், பின் ஒரு பாறாங்கல்லை வைத்தால், அப்பனே, பின் எதனைப் பற்றி நீ நினைப்பாய்?????


, சொல், அப்பனே.




அடியவர் 1

அதன் எடை அதிகமாக இருக்கின்றது என்று நினைப்பேன்.  தந்தையே 




குருநாதரின் வாக்கு. 

அப்பனே, எதை என்று கூற, அப்பனே, பாறாங்கல்லின் எடையை வலி என்று தான் நீ நினைப்பாய், என்பேன், அப்பனே.

 இறைவனை மறந்தே விடுவாய், என்பேன், அப்பனே. இதுதான் பாவம், என்பேன்,


 அப்பனே. புண்ணியம், அப்பனே. அதனால்தான், எவ்வாறெல்லாம் புண்ணியம், பின் பெருக்க வேண்டும்??? என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன், அப்பனே.

அதை நீ பெருக்கினால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எங்கு எவை என்று கூற, அப்பனே, பின் எதை என்று அறிய அப்பனே, பின் அதை நீ உணர மாட்டாய், என்பேன், அப்பனே. 


அதனால், நேரடியாக அங்கே சென்று விடுவாய், என்பேன், அப்பனே. எங்கு இருக்கின்றான்?, அங்கே. 



   அப்பனே, எதை என்று கூற, அப்பனே, ஏன், அப்பனே, நாராயணனை பார்க்கின்றீர்கள்???,


 அப்பனே, பார்த்தேன், அப்பனே,

 நிச்சயம் தன்னில் கூட, அனைவரையும் நீ கேள்வி கேட்பாய், என்பேன், அப்பனே. யான் உன்னை பார்த்திருக்கின்றேன்.

 அதனால்தான் உன்னை கேட்கின்றேன், அப்பனே.


 அடியாரை பார்த்து குருநாதர் கேள்விகளை கேட்க அதற்கு அடியவர் தந்த பதில் 


பூலோகத்தில் நன்முறையாக வாழ வேண்டும் என்று பொருளாதாரத்திலும் தடங்கல் இல்லாமல் வாழ்வதற்கே நாராயணனை பார்க்க வருகின்றார்கள் தந்தையே!!!


குருநாதரின் வாக்கு

அப்பனே, இது ஒதுக்கப்பட்ட இடம், அப்பா
. இதை, அப்பனே, சொல்லிவிட்டேன், அப்பனே. 




சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

பூலோகம் என்பது என்னது??? ஐயா?


அடியவர்கள் ஒன்று சேர பதிலுரைத்தனர்


ஒதுக்கப்பட்ட இடம்.

ஒதுக்கப்பட்ட இடம்.

சிறைச்சாலை.

 பூலோகம் என்பது ஒதுக்கப்பட்ட இடம்




குருநாதரின் வாக்கு

அப்பனே, ஒதுக்கப்பட்ட இடத்தில், அப்பனே, எப்படி, அப்பா,????? மனக்குழப்பங்கள் இல்லாமல், அப்பனே, நன்றாக மனிதன் வாழ்வான் என்று நீ சொல்.




அடியவர் 1
தந்தையே, இதற்கு தீர்வு காண வேண்டும் 


குருநாதரின் வாக்கு


அப்பனே, அதனால்தான், அப்பனே, நிச்சயம் விஞ்ஞான முறையில் எடுத்து வந்தால், ஏனென்றால் வருங்காலத்தில், அப்பனே, பின் என்ன சொன்னாலும், மனிதன் எதை என்று கூற, அப்பனே, பொய் என்று!!! எண்ணிக்கொள்வான் 


 எவை என்று கூற, அப்பனே, உண்மையை ஏற்றுக்கொள்ள மாட்டான்.


 ஏனென்றால் இறைவனை பொய் ஆக்க, எவை என்று கூற, அதாவது இறைவன் பொய்யாக வேண்டும் என்பதுதான் கலியுகத்தின் கட்டாயம் கூட.


 அதனால் யாங்கள் விடப்போவதில்லை.



  அப்பனே, ஏன், எதை என்று புரிய, அப்பனே, எதற்காக, பின் நாராயணனை, பின் நிச்சயம் தன்னில் கூட, காண வந்தீர்கள்?????

நிச்சயம் தன்னில் கூட . அவனை  ஏன்????, நிச்சயம் தன்னில்  கூட, பின் எவை என்று ஏன் காண வேண்டும்??????.
 
அப்பனே, எவை என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் அறிவியல் வரியாக விவரிக்கின்ற பொழுது, அப்பொழுது  சொல்கின்றேன்.

திருப்பதி திருமலையில் குருநாதர் அலி அவர்களுக்கு கூறிய உபதேசம் பாகம் இரண்டில் தொடரும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2275 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 8!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 8 

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

( பகுதி 7 அதன் தொடர்ச்சியாக ….)

அடியவர் 19 :-  அய்யா ( கேள்வி ) 

குருநாதர் :-   அப்பனே நிச்சயம் முன் ஜென்மத்தில் நீ தர்மம் ஏந்திக் கொண்டிருந்தாய் அல்லவா? அங்கு சென்று விட்டு வா. அனைத்தும் செப்புகின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- காஞ்சிபுரம். நிறைய கோயில்கள் நீங்க தர்மம் ஏந்திக்கிறீங்க. அங்க போயிட்டு வந்தீங்கன்னா, நான் சில விஷயங்கள் சொல்றேன் சொல்லிவிட்டார். நீங்க போயிட்டு வாங்க ஐயா. 

அடியவர் 10 :-   லோக ஷேமத்திற்காக ?

குருநாதர் :-   எது என்று அப்பனே கவலைகள் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- அது அகத்தியர் வந்து ( பார்த்துக் கொள்வார்கள் )  

அடியவர் 23 :- சேவைகள் சேவைகளுக்கு.. குருநாதர் சொன்ன மாதிரி.. நமக்கு சரியான வழிகாட்டுதல்… சரியான பாதையில போயிட்டு இருக்கோமா என்று ….

குருநாதர் :-   அப்பனே சரியான பாதையில் செல்லவில்லை என்றாலும், இப்பொழுது எவை என்று கூற அப்பனே பின் எழுத்துரைகின்றேன்  அல்லவா?  

சுவடி ஓதும் மைந்தன் :- சரியான பாதையில் செல்லவில்லை என்றாலும்…. நமக்கு மனசு வந்து… இதுவா இருந்தாலும்… இப்ப நான் வந்து உனக்கு தெளிவுபடுத்தி இருக்கிறேன்ப்பா. ஓகேங்களா?  புரியுதுங்களா ஐயா? 

===========================
# சித்தன் பாதையில் பயணம் - கர்மத்தை நிச்சயம் அழிக்கும்.
===========================

குருநாதர் :-   அப்பனே நிச்சயம் தனி சித்தன் பாதையில், அப்பனே எப்படியாவது அப்பனே கர்மத்தை பின் சேர்த்தாலும், அப்பனே நிச்சயம் பின் மறைந்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- தெரிஞ்சோ.. தெரியாமோ… ஏதோ ஒன்னு வந்து தப்பு பண்ணிடுறோம். ஆனா சித்தன் பாதையில… அது வந்து என்ன பண்ணுவாரு வந்து?  

அடியவர் 6 :- சரி பண்ணி விடுவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- சரி பண்ணி விட்டுருவாருப்பா. 

அடியவர் 15  :- ஐயா நமஸ்காரம். வருஷக்கணக்கா _____ . எப்பதான் சரியாகும் ? தேவையானா பரிகாரம் கொஞ்சம் வழி சொல்லணும். 

குருநாதர் :-   ( …………….. ) 

அடியவர் 15  :- ( …………….. ) 

( இவ் அடியவருக்கு உரைத்த வாக்கில் உள்ள பொது வாக்குகள் காண்போம்…தனி வாக்குகள் நீக்கம் ) 

===========================
# பல வயதான தாய் , தந்தையரை - அவர்களுக்கே தெரியாமல் கவனித்து கொள்ளும் இறைவன் , கருணைக்கடல் திருவடிகள் போற்றி போற்றி….
( இது தனி வாக்கு என்றாலும் , கருணைக்கடல் காட்டும் கருணை எல்லையில்லாதது…) 
===========================

குருநாதர் :-   தாயே எதைப் பற்றியும் கவலைப்படாதே. எம்முடைய ஆசிகள். யான் இருக்கின்றேன் உன்னை பார்த்துக் கொள்ள. கவலைகள் வேண்டாம். 

குருநாதர் :-  எதை ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அவரவர் பின் பாதையில் தான் செல்வார்கள் எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் தடுப்பதற்கு ஆளில்லை தாயே. உன்னை நன்றாக கவனித்துக் கொள்கின்றேன் யான். போதுமா? 

குருநாதர் :- அதனால் கவலைகள் இல்லை உன்னைப் பற்றி பார். உன்னைப் பற்றியும் பார்ப்பதற்கு யான் இருக்கின்றேன். 

===========================
# பல வயதான தாய் , தந்தையரை - மறந்து விடும் பிள்ளைகள் குறித்த வாக்கு…
===========================

குருநாதர் :- தாயே இதே போலத்தான் நிச்சயம் தன்னில் கூட பின் ஏது என்று கூற சிறு வயதில் நிச்சயம் தன்னில் கூட பின் பின் தாய், தாய் என்று பாசம் விடுவார்கள். ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட பின் வயது ஆக ஆக புத்தியும் மாறி விடுகின்றது எது என்று புரிய கலியுகத்தில். 

குருநாதர் :- ( ………………………. )

===========================
# உங்கள் தாய் தந்தையை எப்படி கணித்து கொள்கின்றீர்களோ, அதே போல் உங்கள் குழந்தை உங்களுக்கு செய்யும்….
===========================

( மற்றொரு அடியவருக்கு ) 

அடியவர் 16   :- அப்பா அம்மா ரொம்ப விட முடியல பார்த்துக்கிற மனநிலையும் ஆசையும் இருக்கு… அதுக்கு உண்டான சூழ்நிலை குருநாதர் வைத்து… 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் கடமை அப்பா.  அவன் கடமையை அப்பனே நிச்சயம் சரியாக செய்ய வேண்டும். சரியாக செய்யவில்லை என்றால் அப்பனே நிச்சயம் பின் உன் பிள்ளைகள் அப்பனே எவை என்று அப்பனே பின் இப்படித்தான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது எப்படி தெரியுமா சூழ்நிலை எல்லாம் காரணம் சொல்லக்கூடாது. உன் கடமை நீ செய்யணும். உன் கடமை நீ செய்யாட்டி, உங்களுக்கு உனக்கு ஒரு பொறந்து, உனக்கு ஒரு பாப்பாவோ, ஒரு தம்பியோ பொறந்து, அவன் என்ன பண்ணுவானாம் ? 

அடியவர் :- அதே மாதிரி பண்ணுவான் 

சுவடி ஓதும் மைந்தன் :- அதே மாதிரி பண்ணுவான் 

குருநாதர் :-  அப்பனே இதனாலதான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய அப்பனே நீ என்ன செய்கின்றாயோ, அது நிச்சயம் தன்னில் கூட, இன்னும் பல மடங்கு உனக்கு செய்கின்றது, என்று பெரியவர்கள் சொல்லி விட்டார்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :- நீ என்ன செய்கின்றியோ…. பல மடங்கு உனக்கு திருப்பி ?

அடியவர் :- வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- உனக்கே  வரும்பா. அய்யா புரியுதுங்களா ? ஓகேங்களா?  நீ என்ன பண்றியோ….. என்ன தம்பி புரியுதா?  நீ என்ன பண்றியோ…. அது என்ன பண்ணும்?  திரும்பி வரும். உனக்கே திரும்பி வரும். 

அடியவர் 18:- இப்ப நான் இருந்து கோவிலுக்கு எல்லாம் நான் வந்து பூஜை பண்ணிட்டேன்…. 

குருநாதர் :-  தாயே எதையும் நிச்சயம் தன்னில் கூட பின் எவன் என்று திருவாசகத்தை கையிலே வைத்துக் கொள். நிச்சயம் பார்த்துக் கொள்வோம். 

குருநாதர் :-  ஆசிகள் எது என்று புரிய பின் நிச்சயம் தன்னில் கூட பின் ஏற்கனவே ஆசிகள் அவர்களுக்கு இருக்கின்றது தாயே நிச்சயம் உடனே நீ பார்த்துக்கொள். 

சுவடி ஓதும் மைந்தன் :- அவங்கள பத்தி நினைக்காதம்மா…. அவங்கள ஆல்ரெடி ஆசிகள் எல்லாம் இருக்குது… உனை நீ பார்த்துக்கொள். 

===========================
# பலரும் அறியாத கருணைக்கடல் இறைவனின்  ரகசியங்கள்.
===========================

குருநாதர் :-  பல விஷயங்கள் எது என்று அறிய நிச்சயம் மனிதன் எதை எதையோ எது என்று புரிய செய்தாலும் அதையெல்லாம் யான் விலக்கிக் கொண்டிருக்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- பல விஷயங்கள்ல உங்களுக்கு நெகட்டிவ் அதெல்லாம் செஞ்சிருக்காங்க. உங்க பிள்ளைகளுக்கு எல்லாம் வந்து…. அதையும் நான் வந்து ?

அடியவர் 7 :-  விலக்கி இருக்கேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- விலக்கி இருக்கிறேன் 

அடியவர் 18:-  மனிதர்களால வந்த வினைன்னு சொன்னாரு.. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமாம். மனிதனால வந்த வினைதான்.  

அடியவர் 18:-  அதை விளக்கிட்டேன்னு சொல்றாரு.  (குருநாதர்) அவர் இல்லைன்னா நாங்க இல்ல……… ( நன்றி உணர்ச்சியுடன் பல உரைகள் உரைத்தார்கள் ) 

குருநாதர் :-  கவலைகள் இல்லை. எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய தாயே கவலைப்பட தேவையில்லை. நிச்சயம் தன்னில் கூட பின் உனக்கு பின் அனைத்து ஆசிகளும் வாங்கித் தருகின்றேன் இன்னும் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லா ஆசிகளும் உங்களுக்கு வாங்கித் தருகின்றேன். 

===========================
# பல தாய் , தந்தையர்கள் தனியாக இருப்பது குறித்த ஒரு இறை ரகசியம்…
===========================

குருநாதர் :-  எதை என்று கூற பின் உன் பிள்ளைகள் பின் உன்னோடு இருந்தால் நிச்சயம் தன்னில் கூட அவர்களின் பாசத்தை தான் நீ பார்ப்பாய் நிச்சயம் தன்னில் கூட. பின் இறைவன் அனுக்கிரகத்தை இழந்து விடுவாய். அதனால் தனியாக இருந்து, அனைத்தும் பெற்றுக்கொள். 

அடியவர்கள் :-  ( பலத்த கை தட்டல்கள்…. ) 

சுவடி ஓதும் மைந்தன் :-   உங்க பிள்ளையா இருந்தா நீங்க அதையே நினைச்சுட்டு இருப்பீங்க வந்து…. 

அடியவர் 18:-   ( பிள்ளைகள் …………………………………) 

சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல அப்படி இல்ல…நீங்க அதையே… ஐயோ இப்படி பண்றாங்களே இப்படி இருக்காங்களே அதையே நினைச்சுட்டு இருப்பீங்க…. நீங்க தனியா இருந்தா இறைவன் உன்னை பார்த்துக்கிட்டு எல்லா ஆசிகளையும் கொடுத்துட்டு மோட்சத்துக்கான வழிகள் உங்களுக்கு வந்து…இது பண்ணிடுவார்..

அடியவர் 18:-   ( ஒரு கோவில் கும்பாபிஷேகம் குறித்து கேட்டபோது )

குருநாதர் :-  தாயே கவலைப்பட தேவையில்லை நிச்சயம் தன்னில் கூட முருகனே வருவான். எவை என்று கூற பின் ஐயனே வருவான் பிள்ளையோனே வருவான். நடத்திக் கொடுப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  யாராவது வருவாரு?  மூணு பேரும் வருவாரு. முருகனும் வருவாரு. ஐயனும் வருவாரு. பிள்ளையார் வருவார் …

குருநாதர் :-  எது என்று அறியறியே நிச்சயம் தன்னில் கூட பின் அதனால்தான் அவரவர் காலத்தை நிச்சயம் கணிக்கின்ற பொழுது அதாவது நிச்சயம் தன்னில் கூட, அவர்கள் பின் எப்பொழுது வெளிகாட்ட வேண்டுமோ, அப்பொழுது அவர்களே வெளிக்காட்டுவார்கள்.  

குருநாதர் :-  அதுநாள் பொருத்தே ஆகவேண்டும் வாழ்க்கையில். ஆனால் பல பேர்கள் நான் அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்று. ஆனாலும் அவன் விரும்பும் எக்காலம் என்று, நிச்சயம் அக்காலம் பொருத்தே ஆகவேண்டும். 

அடியவர் 18:-   ( கும்பாபிஷேகம் குறித்து மீண்டும் கேட்ட போது )

குருநாதர் :-  தாயே எது என்று சிறப்பாக நடக்கும். எவை என்று கூற எம்முடைய ஆசிகள். 

===========================
# அனைவருக்கும் ஆற்றலை பெருக்க, நிச்சயம் வேல்மாறல் தேவைப்படுகின்றது அவசியம். 
===========================

அடியவர் 18:-   ( வேல் மாறல் பாராயணம் குறித்து கேட்டபோது )

குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். கவலைகள் வேண்டாம். 


குருநாதர் :-  எது என்று புரிய இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அனைவருக்கும் எவை என்று கூற ஆற்றலை பெருக்க நிச்சயம் பின் வேல்மாறல் தேவைப்படுகின்றது அவசியம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லோருக்கும் ஆற்றல் INCREASE பண்ணோம்னா …வேல்மாறல் தேவைப்படுகின்றது. உங்களுக்கு ஆற்றல் அதிகமா இருந்தா.. பண்ணிக்கோங்க…

===========================
( பொது :- அனைவரும் செம்பு வேல் இல்லத்தில் வைத்து, அனுதினமும், உங்கள் வாழ்நாள் முழுவதும், விடாமல்,  வேல்மாறல்  பாராயணம் செய்க )
===========================

அடியவர் 18:-   ( ……………………. )

குருநாதர் :-  எது என்று புரிய தாயே எம்முடைய ஆசிகள். கவலை வேண்டாம். எத்தனை நாட்கள் எது என்று புரிய நிச்சயம் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். ஆனாலும் இப்பொழுது சிக்கிக் கொண்டாய். என்ன வேண்டுமானாலும் கேள். உனக்கு ஆசிகள் தருகின்றேன். 

அடியவர்கள் :- ( சந்தோஷ குபீர் சிரிப்புகள்….. )

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க வந்து அகத்தியர் அகத்தியர்ன்னு சொல்லி இருந்தீங்களாம் வந்து… ஆனா இப்ப எங்களை சிக்கினார் உனக்கு என்ன வேணுமோ கேளுமான்ட்டார்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அய்யா இப்படி கேக்கணும் அகத்தியர் வந்து… ஏன்னா அதுதான் அவரே கேக்கணும்…. 

அடியவர் 7:- என்ன வேணும் ?

===========================
# குருநாதரை, இறைவனை  எப்படி வணங்க வேண்டும்? - பரம ரகசியம்….
===========================
# பின்வரும் வாக்கை கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்
===========================
# உங்கள் இல்லத்தில் பதிவு எடுத்து பூசை அறையில் ஒட்டி வையுங்கள்….
===========================
# அவசியம் பலருக்கும் இதனை சொல்லிக்கொடுங்கள் 
===========================

அடியவர் 20 :- (குருநாதர் கிட்ட) எனக்கு என்ன கேட்கணும்னு கூட தோனலைங்க… 

குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட  **** இப்படித்தான் இருக்க வேண்டும் ****. 

எது என்று புரிய **** நிச்சயம் அனைவரும் கூட**** …  

பின்  **** அகத்தியனே **** !!!!!.......

எவை என்று புரிய பின்  **** தந்தையே ****  !!!!!.......  

எது என்று புரிய அப்படியும் யான், எவை என்று கூற பின்… 

**** நீங்கள் எவ்வாறு அழைத்தாலும் அறிந்து கூட பின் ஏற்றுக் கொள்கின்றேன் **** . 

**** நிச்சயம் பின் எங்களுக்கு ஒன்றும் தெரியாது****. 

**** நீங்களே வழிகாட்டுங்கள்****  என்றுதான் சொல்ல வேண்டும். 

**** அவ் பக்குவ நிலை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்****. 

**** யாரிடமும் அவ் பக்குவம் இல்லை**** . 

**** பின் கொடுத்தாலும், இறை பலங்கள்  என்ன பிரயோஜனம்?**** 

அடியவர்கள் :-   ( ரகசியம் அறிந்த மகிழ்ச்சியில் பலத்த கைதட்டல்கள்….)

சுவடி ஓதும் மைந்தன் :- அப்படித்தான் சொல்லணுமா. அகத்தியர் அப்பா எனக்கு ஒன்னும் புரியல. எனக்கு தெரியாது என் வாழ்க்கை. ஏதாவது சொல்லுன்னு சொல்லி தான்… என்ன பண்ணுவாராம்?  

அடியவர்கள் :-  சரணாகதி 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவரே வந்து.. அதுதான் பக்குவம்… 

அடியவர்கள் :-  சரணாகதி ஆகிடனும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  சரணாகதி… அதுதான் பக்குவம்… நீங்கள் அது தெரியாம, அது வேணும், இது வேணும்னு கேட்டிருந்தால்….. அது பக்குவம் இல்லை…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த அப்ப அது இல்லாத விடத்தில் இறைவன் கொடுத்தாலும் நீங்கள் சரியாக பயன்படுத்த மாட்டார்கள். அதனாலதான் இறைவன் என்ன பண்றாரு?  அதுதான் இறைவன்.. கடைசில என்ன கேட்கணும் வந்து… அந்த பக்குவம் வரணும். எப்பா ஏதாவது கொடுப்பா உன்னையே நம்பி இருக்கிறோம்… அந்த பக்குவத்துக்கு வரணும்ன்றது… 

===========================
# காலம் சென்ற அகத்திய மாமுனிவர்  மைந்தன் திரு. ஹனுமந்தாசன் அய்யாவை நினைவு கூர்ந்த தருணம்…. 
===========================

அடியவர் 20 :- 20  வருஷத்துக்கு முன்னாடி ஹனுமந்தாசன் அய்யாவை நமஸ்காரம் பண்ணி, எல்லாம்  கேட்டபோது… நீ கவலையே படாதம்மா…. அகத்திய மகரிஷி எல்லாம் பார்த்துட்டு இருக்கார்…எல்லாம் செய்யறார்…அந்த 20…. 22 வருஷமா நடந்தது நல்லா …. 

( ஹனுமந்தாசன் அய்யா நாடி படித்து) என்னுடைய ரிட்டையர்மென்ட் அமைதியா நடக்கும்னு சொன்னாரு…. அப்படியே அவர் என்ன சொன்னாரோ அப்படியே நடந்தது. 

அப்புறம்தான் என் பையனை ( ஒரு ஆலயத்திற்கு ) அழைத்து சென்று..ஏன்னா (ஹனுமந்தாசன் அய்யா நாடி வாக்கில் ) அவர் என்ன சொல்றாரோ அப்படித்தான் பண்ணுவோம். 

(ஹனுமந்தாசன் அய்யா) அவாளோட நாடி ( வாக்கு )  இதெல்லாம்…. இது யாராவது சின்ன பொண்ணு (.....)  அவதான் எழுதுவாங்க…. எல்லாம் எழுதி கொடுப்பாங்க… எல்லாம் என்ன செய்வாரு 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால கூட அதே மாதிரிதான் சொல்றாரு… உனக்கு என்ன இது நான் பார்த்துக்கிறேன். எல்லா அருளும் நான் வாங்கி கொடுக்கிறேன்… நீங்க கவலைப்படாதம்மான்றாரு வந்து 

அடியவர் 20 :-  அது மாதிரி கூட ரெண்டு பேருமே…. அவர் என்ன… என்ன சொல்றாரோ அதை மீறி…ஒன்னும் கூட செய்ய மாட்டாங்க 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா ஆமா அவங்க என்ன சொல்றாங்களோ அதான் கேப்பாங்க 

அடியவர் 20 :-  ( சுவடி வாக்கை அப்படியே பயன்படுத்தும் பிள்ளைகள் குறித்து பெருமையாக சொன்னார்கள்….இதனை கேட்டவுடன்  )

குருநாதர் :-  அதனால தாயே எது என்று புரிய நிச்சயம் அவ் அளவிற்கு புத்தியை நிச்சயம் தன்னில் கூட இறைவன் கொடுத்திருக்கின்றான் என்றால் அவர்கள் கெடுவார்களா?  நீயே யோசி. 

அடியவர் ஒருவர் :-  அவங்கள பத்தி கேக்குறியே அந்த அளவுக்கு …(அவங்க கெட்டுப்போவாங்களா) ? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த அளவுக்கு வந்து… அவங்க கெட்டுப்போவாங்களா?  அதனாலதான்… 

குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட அதனாலதான் உன்னை நீ பார்த்துக்கொள். கவலைகள் வேண்டாம். எது என்று புரிய இதனால் இறை ஆசிகளோடு நிச்சயம் தன்னில் கூட பின் மோட்சமும் பெறுவாய். 

அடியவர்கள் :-   ( இவ் அடியவரின் மோட்ச ரகசியம் அறிந்த மகிழ்ச்சியில் பலத்த கைதட்டல்கள்….)

சுவடி ஓதும் மைந்தன் :-  இறை ஆசிகளோடு மோட்சம் பெறுவாய் 

குருநாதர் :-  இதனால் கவலைகள் வேண்டாம். எம்முடைய ஆசிகள். உனை நான் பார்த்துக் கொள்கின்றேன். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னை நான் பார்த்துக்கிறேன்ட்டாரு.

அடியவர் ஒருவர் :-  இப்பவும் அவர்தான் பார்த்துட்டு இருக்காரு… 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா 

குருநாதர் :-  எது என்று புரிய எது என்று அறிய நிச்சயம் பின் என்ன அறிந்து கொண்டீர்கள் நீங்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-   நீங்க எல்லாம் என்ன அறிந்து கொண்டீர்கள்?

அடியவர் 7:-  இதுல இருந்து என்ன புரிஞ்சுகிட்டீங்கன்னு கேட்குறார் …

குருநாதர் :-  அதனால் நிச்சயம் தன்னில் கூட பின் யான் எவை என்று புரிய பின் உங்களுக்கு தேவையானதை யான் வழங்குகின்றேன். கவலையை விடுங்கள். 

அடியவர் 21 :- ஆனா ஐயா உங்க வார்த்தையிலிருந்து ஏதாவது ஒன்னு வருமான்னு… ஒரு ஆசை தானே படுறோம்?  

குருநாதர் :-  தாயே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, இவ் ஆசை நிச்சயம் தன்னில் கூட, இதற்கு பின் மறு, எவை என்று கூற பின் அதாவது சமன்படுத்தி சொல். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆசை = தோசை 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் சும்மா சொன்னேன் தோசை என்று  நான் சொன்னேன்மா. ஆசை ஈக்குவல் டு? 

அடியவர்  :-துன்பம் 

அடியவர் 21 :- துன்பம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  துன்பம். அது கூட கேட்காதும்மான்றாரு. 

குருநாதர் :-  தாயே நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய பின் எதையும் கேட்காதே நிச்சயம் தன்னில் கூட. பின் யான் உன் அருகிலே இருக்கின்றேன் போதுமா?  

ஏனென்றால் நிச்சயம் எவை என்று புரிய அதாவது எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும்  கூட பின் அதாவது எதுவும் பின் தெரியாமல் இருந்தால் வழிகாட்டியாக யான் இருப்பேன். 

இதனால் நிச்சயம் தன்னில் கூட நீங்கள் கேட்டுத்தான் இங்கு வந்தீர்களா? அதாவது இங்கு வந்தீர்கள் என்று யான் சொல்லவில்லை பூலோகத்திற்கு?. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் கேட்டுத்தான் நான் வரணும்னு சொல்லிட்டு.. கேட்டுத்தான் இந்த பூலோகத்திற்கு வந்தீர்களா? சொல்லுங்க ஐயா? 

குருநாதர் :-  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் கேட்காமல் தான் நிச்சயம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனால் கவலைகள் விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- அனைத்துமே கேட்காமல் தான் கேட்காமல் தான் இங்க நடக்குது. 

நீங்க பூலோகத்துக்கு வரேன்னு கேட்டீங்களா? 

ஈசன் கும்பிட்டேன்னு நீங்க கேட்டுட்டீங்களா?  

இல்ல ஓலைச்சுக்கு வந்து நம்ம படிப்போம்னு நீங்க கேட்டீங்களா? 

 உங்க பிள்ளைகள் வந்து பொறப்பாங்கன்னு நீங்க வந்து?  சொல்றேன் 

இப்ப இவங்கதான் பொறப்பாங்க இவங்கதான் பொறப்பாங்க வேண்டுனீங்களா ?  

எல்லாமே கேட்காமல் தான் நடக்கின்றது.

===========================
# எப்பொழுது இறைவன் அனைத்தும் தந்துவிடுவார்?
===========================

குருநாதர் :-  அப்படி பின் எப்பொழுது நீங்கள் பின் இறைவனிடத்தில் எதையும் கேட்காமல் பின் இருக்கின்றீர்களோ, அப்பொழுது அனைத்தும் தந்துவிடுவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்பொழுது நீங்கள் இறைவனிடம்?  

அடியவர் :- கேட்காம இருக்கிறோமோ… 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேட்காம இருக்கிறோமோ? 

அடியவர்  :-  அப்ப இறைவன் கொடுப்பார். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இறைவன் கொடுப்பார். 

அடியவர்  15 :-  கேட்டாத்தானே இறைவன் கொடுப்பார்?

குருநாதர் :-  அப்பனே கேட்டுக்கொண்டே இரு.  இறைவன் கொடுப்பானா என்று பார்ப்போம். 

அடியவர்கள் :- ( சிரிப்புகள் ….) 

சுவடி ஓதும் மைந்தன் :-  இருப்பா. இறைவன் கொடுப்பாரா இல்லையா  என்று? 

அடியவர் 7:- பார்ப்போம் 

குருநாதர் :-  அப்பனே சுயநலத்திற்காக அப்பனே எதையும் கேட்கக்கூடாது 

அடியவர் 19  :- பொது நலத்திற்காக கேட்கணும்….. 

அடியவர் 9 :- ஐயா எங்க எல்லாருக்கும் (அன்னை) லோபாமுத்திரை அம்மாவுடைய ஆசீர்வாதம் வேணும் ஐயா 

குருநாதர் :-  நிச்சயம் எவை என்று ஒரு நாள் வந்து சொல்வாள். கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு நாள் வந்து சொல்வார். 

அடியவர்கள் :- ( மகிழ்ச்சி கைதட்டல்கள்…) 

===========================
# இறைவனிடம், குருநாதரிடம்  எப்படி நாம் பேசுவது ? 
===========================

குருநாதர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுது பக்குவம் எதைச் சார்ந்து? எதை என்று புரிய, அறிந்தும்  கூட இதனால் நிச்சயம் தன்னில் கூட மௌனத்தை, அதாவது நிச்சயம் இறைவனிடத்தில் காண்பிக்க வேண்டும். அவ்வளவுதான். 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணனும்? 

அடியவர் :- இறைவனிடத்தில் மௌனத்தை காண்பிக்கணும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  மௌனமா இருக்கணும்… மௌனத்தால…. 

குருநாதர் :-  எது என்று மனதிற்குள்ளே பேச வேண்டும் இறைவனிடத்தில். 

சுவடி ஓதும் மைந்தன் :-  யாரிடத்தில் பேசணும்? 

அடியவர் :-  இறைவனிடத்தில் மௌனமா  பேசணும்

குருநாதர் :-  நிச்சயம் இது போல அடுத்த வாக்கில் நீங்கள் இறைவனிடத்திலேயே பேசுங்கள். அல்லது என்னிடத்திலே மனதுக்குள்ளே பேசுங்கள். யான் வந்து சொல்கின்றேன். 

அடியவர் 12 :-  அப்படித்தான் டெய்லி பேசுறேன் அய்யா . அப்ப கேக்குறாரு அவரு?.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்றாரு வந்து?  

அடியவர் :- கேக்குறாரு 

அடியவர் 23 :- மனசுக்குள்ள பேசிட்டு இருக்கேன். ஆனா அவர் வெளிய சொல்லுன்னு சொல்றார்…

குருநாதர் :-  தாயே எவை என்று அறிய அதற்கு பதில், நிச்சயம் யான் உரைப்பேன்.

அடியவர் 23 :- வெளிய சொல்லுன்னு அப்படினு …..(சொல்றார்…) 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க என்ன பண்றாங்க?  

அடியவர் 12 :-  நாங்க என்ன பேசுறோமோ அதை அவரே சொல்லுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதை அவரே சொல்லுவாரு. நீங்க வந்து கேட்டு வந்து பெற அவசியம் இல்லை. 

===========================
# ஏகாதசிக்கு எலுமிச்சை சாதம் செய்து ஆலயத்தில் கொடுக்க முடியவில்லையே என்று தனது ஆதங்கத்தை தெரிவித்த போது ( இது பலருக்கும் பொருந்தும்…பல நேரங்களில் சில வழிபாடுகளை செய்ய முடியாமல் போகும் பொது….)  
===========================

அடியவர் 20  :-  நேத்துக்கு ( ஒரு அடியவர் ) அம்மா மூலியமா லெமன் ரைஸ் பண்ணி அன்னதானம் பண்ண சொன்னீங்க ஐயா. உடனே நான் என்ன நினைச்சேன். ஏகாதசிக்கு என்னால பண்ண முடியல. சோம்பேரியா சொல்லிக்கிறேன். சோம்பேரியா இருந்ததுனாலதான் ஐயா வந்து… 

குருநாதர் :-  தாயே எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் சொன்னால்… செய்தால் போதும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் சொன்னதை, நீ எப்ப வேணா செஞ்சுலாம் போதும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 13 August 2026

சித்தன் அருள் - 2274 - சித்தர் புலம்பல்கள் - 3 !



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
 
  1. உண்ணும் முன் ஒரு பிடி உணவு, குருவை நினைத்து பறவைகளுக்கு - குரு எங்கிருந்தாலும் சிறந்த குருசேவை.
  2. யார் குரு - குருவே சிஷ்யனாவார், சிஷ்யனே குருவாவார். அதுவே சுவாமிநாதன்.
  3. கர்மவினை சேர உப்பே காரணம்.
  4. வாரம் ஒரு நாள் உப்பு நீர் ஸ்னானம், உடலில் சேர்ந்த எதிர் வினைகளை அறுக்கும். 
  5. பிறப்புக்கு வாசனையே காரணம்.
  6. நிறைவேறா ஆசைகளே வாசனையாய் உருவெடுக்கும்.
  7. ஹ்ருதய கமலத்தில் லிங்க தியானம், ஆத்மலிங்க தரிசனம்.  
  8. அனுபவமே குரு - உணர்ந்தபின் அதுவே இறை.
  9. உள்ளே பிராண அபான நடனம் சிவசக்தி நாட்டியம்.
  10. மனிதர் உண்ணும் உணவு, யாரோ போட்ட பிதுர் பிண்டம்.
  11. கனிந்து கொடுப்பது தோஷமற்றது, அதுவே இறைவனுக்கு பால் அபிஷேகம்.
  12. ஆக்ச்னா வலுப்பெற, மனம் அமைதியாகும், வார்த்தைகள் சுருங்கும்.
  13. சவத்தை சிவமாக்குவதே தினம் நீராடல்.
  14. நீர்நிலைகளில் உதிரும் இலைபோல் இறங்கி நீராட வேண்டும்.
  15. நீர் இல்லையேல், இவ்வுலகில் உயிர் இல்லை.
  16. அக்னிக்குள் நீர் உண்டு, நீருக்குள் அக்னி உண்டு.
  17. காற்றில் உணவுண்டு, காற்றை சுழட்டுபவன், இதை அறிவான்.
  18. காற்றால், உள்ளுக்குள் எட்டு போடுபவன் சித்தன்.
  19. பற்று அற்றவன் சித்தன், அவன் சாபம் விலகாது.
  20. சித்த சாபம், ஜாதகத்தில் கிட்டாது,
  21. குரு சாபம் விலக, சிஷ்யனாய் குருவுக்கு சேவை செய்.
  22. அன்னத்தை மிஞ்சிய தர்மமில்லை; சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
  23. இருப்பவன், இல்லாதவனுக்கு கொடுக்கிறானா எனபதற்கே, ஒரு குடும்பத்தில் இரு நிலை சந்ததிகள்.
  24. மோரும் பாலும் ஒரு பொழுதில் உண்பது, உடலுக்கு ஆலகாலம்.
  25. நலம் விளைய, உணவில் சிவப்பு மிளகாய் தவிர். பச்சை மிளகாய் குறை, மிளகும் இஞ்சியும் சேர்.
  26. கடுகு, கடுகளவே, நலம் செய்யும்.
  27. குவளை நீரும், ஒரு இலையும், ஒரு பிடி திருநீறும், சிவம் தன்னை உணர்த்தும்.
  28. மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா.
  29. பாரதம் கர்ம பூமி, மற்றவை போக பூமி.
  30. தர்மத்தை பிடி, அது உன்னை கரையேற்றும்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 12 August 2026

சித்தன் அருள் - 2273 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 7!



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 7

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து? 

அடியவர் 18:- ( தனி கேள்வி ) அய்யா, தம்பி ______________ _______ _______   16 வருஷம் ஆகுது…. 

குருநாதர் :- தாயே இப்பொழுதுதான் அதைப் பற்றி எடுத்துரைத்து விட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உனக்கு சொல்லிட்டாருமா.  கொஞ்சம் பொறுமா. ஏன்னா இதுல வந்து ஒருத்தங்க அப்படி எழுப்புவார் கரெக்டா வந்து…. பாருங்க ஒரே இதுல நாலு அஞ்சு பேர் அப்படியே எழுப்பி விட்டார் எல்லாரும்…. ஒன்னு.. ரெண்டு.. மூணு.. நாலு.. அஞ்சு ..ஆறு.. ஏழு.. எட்டு… ஒன்பது பேர்… அப்படியே எழுப்பி விட்டார் வந்து. அது உங்களுக்காக வந்து தெரிவிச்சிருக்காரு. அப்ப நீங்க ஒன்னு சில சில விஷயங்கள் உங்களுக்கு நீங்கள் தான் துணை. அப்ப பொறுத்துதான் ஆகவேண்டும். எல்லா விஷயங்களையும் பொறுத்துதான் ஆகவேண்டும். 

அடியவர் 19:- ஐயா இங்க ஆலயத்துக்கு போயிட்டு வரணும்னு சொன்னாரு ஐயா. அது என்னன்னு ….? 

குருநாதர் :- அப்பனே ஏது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று புரிய அப்பனே, காஞ்சி தன்னில் கூட அப்பனே பின் அனைத்து திருத்தலங்களுக்கு செல் அப்பனே. ஏனென்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அங்கு தர்மத்தை ஏந்திக் கொண்டிருந்தாய்  ஒரு பிறவியில் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவ் ஞாபகமும் வந்திருக்கும் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே அங்கே  செல்.  ஒரு விடிவெள்ளி கிடைக்கும் அப்பா. 

அடியவர் 7:- காஞ்சிபுரம் போகணும் நீங்க….

சுவடி ஓதும் மைந்தன் :-  ( …………………. தனி விளக்கங்கள் ………………………………………) 

குருநாதர் :- அப்பனே பின்பு உரைப்பேன் 

சுவடி ஓதும் மைந்தன் :-  பின்னாடி உரைக்கிறேன் 

அடியவர் 20 :- ஐயா போன வாக்குல, எனக்கு கடனுக்கு ஒரு கோவிலுக்கும், அம்பாள் சிலை செய்ய சொல்லி வாக்கு கொடுத்திருந்தீங்க ஐயா அது?  

குருநாதர் :- தாயே நிச்சயம் தன்னில் கூட பின் எப்பொழுது எதனை பற்றி சொல்ல வேண்டுமோ அப்பொழுது நிச்சயம் யான் சொல்வேன். இப்பொழுது பொறுத்திருக்க… 

அடியவர் 21 :- அய்யா சபரி மலைக்கு ?

குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே பின் இப்பொழுதுதான் சொன்னேன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் பாடலை பாடிக்கொண்டே போ, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்பதான் சொன்னேன் எல்லாமே ஈசன் முடிவுதான்ப்பா. அவர் எடுக்குறதுதான்ப்பா எல்லாமேன்னு சொல்றாரு வந்து… 

அடியவர் 22  :- ஐயா சுழு முனைன்னா என்ன?  

குருநாதர் :- அப்பனே எது என்று கூற, பின்  நீ சென்று விட்டு வா அப்பனே. சொல்கின்றேன். 

அடியவர் 7  :- நீங்க போயிட்டு வந்தாதான் ( பதில் வாக்கு வரும் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- அதான். 

ஜோதிடர் அடியவர் 23 :- நீங்க தான் சூரியனோட ஆதிக்கம்… நீங்க இன்னொருத்தருக்கு வழிகாட்டணும்… உங்களுக்கு ஈசன் தான் வழிகாட்டணும்னு குருநாதர் சொல்லும்போது…. நம்ம வழிகாட்டுறது சரியா அப்படிங்கறது தெரியல ஜாதகத்துல… சில பலன்கள் எல்லாம் சொல்றேன்… 

===========================
# பாவங்களை தொலைக்க நீங்கள் என்னை தேடி வந்திருக்கின்றீர்கள்…
===========================

குருநாதர் :- அப்பனே எது அதனால்தான் கூட்டிட்டு வந்திருக்கின்றேன் அப்பனே பாவங்களை தொலைக்க எவை என்று கூற. நீங்கள் என்னை தேடி வந்திருக்கின்றீர்கள்… 

அடியவர்கள் :- ( கை தட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா… அதனால்தான்ப்பா… உங்களுக்கு வந்து நீங்க வழிகாட்டணும். அதனாலதான் தெரியல உங்களுக்கு வந்து அதனாலதான் நீங்க வந்து இங்க வந்து நான் அந்த பாவத்தை ? 

அடியவர்  :- எடுக்கிறார் 

சுவடி ஓதும் மைந்தன் :-  எடுக்கிறார் எடுக்கிறார் வந்து… அதனாலதான் ஓகேங்களா 

அடியவர் 7  :- நீங்க வழிகாட்டலாம்… 

ஜோதிடர் அடியவர் 23 :- ஜாதகத்துல சொல்றதுக்கு… குருநாதருடைய ஆசீர்வாதம் வேணும். ஜாதக பலன்கள் சொல்லிக் கொடுக்கணும். அதுல குருநாதருடைய ஆசீர்வாதம் வேணும். 

===========================
# ஜாதகத்தில் எட்டில் ஏதாவது கிரகம் இருந்தால் என்ன ஆகும்? 
===========================

குருநாதர் :- அப்பனே யான் கேட்கின்றேன் அப்பனே எட்டில் அப்பனே நிச்சயம் ஏதாவது கிரகம் இருந்தால் அப்பனே என்ன ஆகும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் கேட்டுக்கின்றோம்பா… எட்டில்  ஏதாவது கிரகம்… லக்னத்துக்கோ… ராசியோ எட்டில் கிரகம் இருந்தா என்ன ஆகும் சொல்லுங்க? 

ஜோதிடர் அடியவர் 23 :- சனி பகவான் இருந்தா ஆயுள் தீர்க்கம்னு சொல்றோம்… இறை அனுக்கிரகம் இருந்தா… கேது பகவான் இருந்தா ஞானம். மறை ஞானம்… மறைகளை ஞானம் கிடைக்கும் அப்படின்னு சொல்லக்கூடியது. பொதுவா எட்டுல இருந்தா கஷ்டங்கள் நிறைய இருக்கும். 

குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட எட்டில் ஒரு கிரகம் இருப்பது அப்பனே அதிர்ஷ்டத்தை தரும் என்பேன் அப்பனே.  

குருநாதர் :- அனைத்து பாவங்களை போக்கி, மோட்சத்தை தரும் என்பேன் அப்பனே. 

===========================
# ஏன் பல ஜோதிடர்களுக்கு பாவம், தோல்வி, நோய்கள்  ஏற்படுகிறது ?
===========================
# ஏன் பல ஜோதிடர்கள்  குடும்பமும் பாழாகிறது ?
===========================

குருநாதர் :- ஆனால் ஜாதகனுக்கே கூட அவை தெரியாமல் அப்பனே ஓதிக்கொண்டிருக்கும் பொழுது, பின் பார்ப்பவனுக்கே பாவம் ஏற்படுகின்றது என்பேன் அப்பனே. இதனால்தான் பல ஜாதகக்காரர்கள் அப்பனே தோல்வியில் பின் வாழ்க்கை நடத்துகின்றார்கள் அப்பனே. கடைசியில் நோய்களும் வந்து விடுகின்றது. குடும்பமும் பாழாகின்றது.

சுவடி ஓதும் மைந்தன் :- எட்டில் இருந்தால் அதிர்ஷ்டம். 

அடியவர்கள் :- அதிர்ஷ்டம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  மொத்தம் பாவங்களும் இந்த ஜென்மத்திலே போயிட்டு? 

அடியவர்கள் :- மோட்சம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மோட்சம் கிடைக்கும். ஐயா புரியுதுங்களா? 

===========================
# எட்டில் தர்மதேவன் இருந்தால் என்ன பயன் ? 
===========================

குருநாதர் :- அப்பனே சனி இருந்தால் என்ன பயன் சனி இருந்தால் என்ன பயன்?எட்டுல ?

ஜோதிடர் அடியவர் 23 :-  கர்மாக்கள் நிறைய அனுபவிக்கனும்… நோய் … 

குருநாதர் :-  அப்பனே எதை என்று புரிய, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, இவன் தன் அப்பனே ஏது என்று புரிய பல பேர்களை கொன்றிருப்பான் அப்பா, எதை  என்று கூற பின்  நிச்சயம் தன்னில் கூட இப்பிறப்பில் இவனை கொல்ல  வருவார்கள் அப்பனே. இவனுக்கு விபத்துக்கள் அனைத்தும் நடக்கும் என்பது. இதனால்தான் அப்பனே எட்டில் அமர்ந்திருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   சனி எட்டில் அமர்ந்தா என்ன ஆகுது?  ஒரு ஜென்மத்துல நிறைய பேர் கொன்னு இருக்கிறார் அவர் வந்து.. கொன்னு இருக்கிறார்… என்னது வந்து ? 

ஜோதிடர் அடியவர் 23 :-  கொலை பண்ணி இருக்கிறார் … 

சுவடி ஓதும் மைந்தன் :- கொலை பண்ணி இருக்கிறார் … அதனால எட்டுல அழகா சனி பகவான் வந்துட்டு.. என்ன பண்ணுவாரு?  இந்த ஜென்மத்துல பகையும் எல்லாம் ஏற்படுத்தி, அவனுக்கு வந்து என்ன ஏற்படுது?  என்ன பண்ணுவாரு ? 

அடியவர்கள்  :-   விபத்துக்கள் 

சுவடி ஓதும் மைந்தன் :- விபத்துக்கள் அதிகமா வரும். கண்டம் அதிகமா வரும். சொந்தக்காரர்கள்.. இது மாதிரி எல்லாம் வந்து என்ன பண்ணுவாரு வந்து ? 

குருநாதர் :-  அப்பனே இதற்கு பரிகாரம் கூறு?  

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க என்ன பரிகாரம் கூறுங்கன்றாரு.  எட்டில்… ஐயா இது வந்து உதாரணம் எக்ஸாம்பிள் ஓகேங்களா?  இப்ப எட்டுல சனி இருக்குது. இதுக்கு என்ன பரிகாரம் நீ சொல்லுவேன்னு கேக்குறாரு?  

அடியவர் :- இத சரி பண்றதுக்கு பரிகாரம் சொல்லுங்க ? 

ஜோதிடர் அடியவர் 23 :-   நிறைய உயிர்கள் காப்பாத்தணும்.  நிறைய உயிர்களுக்கு தான தர்மங்கள் செய்யணும். உயிர்களுடைய ஆசிர்வாதத்தை பெறணும் 

குருநாதர் :- அப்பனே பின் எட்டாவது இடம் அப்பனே பின் வேறு ஒருவனாக இருந்தால்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  எட்டிலே சனி இருந்து… அந்த வீடு வந்து வேற ஒரு இருந்தால் என்ன பண்ணுவ?   எட்டாம் இடம்தான்… வேற ஒருத்தரா வேற ஒருத்தர் இருந்தா என்ன பண்ணலாம்? ( எட்டாம் இடத்தின் அதிபதி வேறு இடத்தில இருந்தால் ?) 

அடியவர் 9:- ஆந்த  வீட்டுக்காரர் எங்க இருப்பாரு? 

ஜோதிடர் அடியவர் 23 :-  அந்த கிரகம் வேற இடத்துல… லக்னத்திலேயே இருந்தா…. மறுபடியும் கஷ்டங்கள் தான்…. எட்டு அப்படினாலே கஷ்டங்கள் ஞானங்கள் அது மூலமா இந்த பிறப்பு கடைசி பிறப்பு அப்படிங்கிறது 

===========================
# ஜாதகத்தில் எட்டாம் இடத்தின் ஆதி மூல பரிகாரம் - இதுவரை வெளிவராத ரகசியங்கள்….
===========================

குருநாதர் :-  அப்பனே இதற்கு அப்பனே சரியாக அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட மாதத்திற்கு ஒருமுறை அப்பனே பின் தர்மத்தை பின் நிச்சயம் பின் எவை என்று கூற திருத்தலத்தில் நிச்சயம் தன்னில் கூட ஏற்றால் அப் பாவம் பின் சரிந்து கொண்டே வரும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒவ்வொரு மாதம் என்ன பண்ணனும்?  ஒவ்வொரு திருத்தலத்தில் போயிட்டு, பிச்சைக்கார வேஷம் போட்டுக்கிட்டு, அங்கேயே படுத்துகிட்டு, தர்மம் ஏந்தினா மட்டும்தான் இத் தோஷம் போகும். 

குருநாதர் :-  அப்பனே இன்னும் விளக்கங்கள் தருகின்றேன் புதுமை புதுமையாக அப்பனே. ஆனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் ஒருவன் அப்பனே சொல்லியது, அப்படியே சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது, அப்பனே எப்படிப்பா நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப ஜாதகம் எடுத்துட்டா…. இப்ப ஒருத்தர் சொல்றாரு என்றால் … அதையே ஃபாலோ பண்ணுவாரு ஓகேங்களா?  வந்து புரியுதுங்களா ஐயா வந்து? 

அடியவர் :-  ( பொதுவாக ) ஜாதகம் பார்க்க கூடாது

ஜோதிடர் அடியவர் 23 :-   வேற வளர்த்துக்கணும் அப்படி சொல்றரர்.

சுவடி ஓதும் மைந்தன் :- வளர்த்துக்கணும்ன்றாரு வந்து… அப்ப எட்டில் வந்து யாருக்கு சனி இருந்தா என்ன பரிகாரம்  ? 

ஜோதிடர் அடியவர் 23 :- மாசம் மாசம் கோவில்ல போய் கோவில்ல போய் பிச்சை எடுக்கணும்… திருவண்ணாமலையில போய் படுத்துக்கணும்…

சுவடி ஓதும் மைந்தன் :- அதுதான்.  அப்படி வந்தாதான் சனி பகவான் என்ன பண்ணுவாரு?  

அடியவர் 7:- விலகி போவாரு. நல்லது  செய்வார்.

===========================
#  ஜாதகத்தில் நவாம்சம் என்பது என்ன? - இதுவரை வெளிவராத ரகசியங்கள்…. 
===========================

அடியவர் 13 :-  இது நவாம்சத்துல இருந்தாலும் இப்படித்தானா? 

குருநாதர் :-  தாயே எது என்று கூற பின்  எவை என்று  கூற பின்  எப்படி எது என்று புரிய , அதாவது நிச்சயம் நவாம்சம் என்பது என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :- நவாம்சம் என்பது என்ன? 

அடியவர் 7:- நவாம்சம்னு நீங்கதானே சொன்னீங்க?

அடியவர் 13 :- தெரியாது ஹாராஸ்கோப்… ஆனா ஆஃப்டர் மேரேஜ் வந்து நவாம்சத்தை பார்க்கணும்னு சொல்லுவாங்க. அதனால கேக்குறேன். எனக்கு தெரியாது.

குருநாதர் :-  தாயே எதையும் தெரியாமல் எவை என்று கூறப்பேன் எது என்று பார்ப்பது சரியா? 

சுவடி ஓதும் மைந்தன் :- எதுவுமே தெரியாமல் நவாம்சத்தை பார்ப்பது சரியான்றாரு வந்து? 

அடியவர் 13 :- அதாவது நவாம்சம் மேரேஜ்க்கு மேட்சிங்கு நவாம்சம் தான் முக்கியம்ங்கிறாங்க. ஆனா இன்னைக்கு நிறைய அஸ்ட்ராலஜர்ஸ் வந்து நவாம்சமே பாக்குறது இல்ல. ராசி கட்டத்தை மட்டும் பார்த்துட்டு தான், சொல்றாங்க. அது தப்புங்கிறாங்க.  அதனாலதான் நிறைய மேரேஜஸ் (பிரச்சினை ஆகுது)…

சுவடி ஓதும் மைந்தன் :-  நவ அம்சத்தை என்னன்றது கேக்குறாரு உங்கள? 

அடியவர் 7:-  அப்படின்னா என்ன நவாம்சம் வந்து?  

அடியவர் 13 :-  அந்த ஒரு லக்னத்தை வந்து ஒன்பதா பிரிக்கிறதுன்னு சொல்லுவாங்க. எனக்கு ரொம்ப தெரியாது. ஆனா… 

குருநாதர் :- தாயே  எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட பின் “நவ அம்சம்” எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற “அ” வில் இருந்து அறம், புண்ணியங்கள் இன்னும் பல வகை உண்டு. அதையெல்லாம் செய்தால்தான், அதுவே பலிக்கும் எது என்று புரிய. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நவ அம்சங்கள் ஒன்னு இருக்குதாம். நமக்கு வந்து… ஒன்பது அம்சம். அந்த ஒன்பது அம்சம் நீங்க பண்ணனும் வாழ்க்கையில வந்து… 

குருநாதர் :-  எதை இப்படியும் சொல்லலாம் நிச்சயம் தன்னில் கூட பின் எது என்று கூற செருப்பு தானம்.  இதுவும் பின் அதாவது செருப்பு அம்சம் என்று.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா செருப்பு. செருப்பு போடுறோம் இல்ல. 

குருநாதர் :-  எதை என்று கூட பின் ஆடை தானம். ஆடை அம்சம் என்றே சொல்லுவார்கள் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆடை தானம்.. இது ஆடை அம்சம்.. 

குருநாதர் :-  அறிந்தும் குடை அம்சம். பெண்  அம்சம் எது என்று கூற. பின் கோமாதா. இப்படியே பின் நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் வாழ்க்கையில் ஒருவன் செய்தே ஆக வேண்டும்.  இப்படி செய்தால் மட்டுமே நிச்சயம் தன்னில் கூட அவையும் சரியாகும். 

அடியவர் :- நேத்து நைட் சொன்னது..குரூப்லேயும் சொன்னேங்க அய்யா நேத்து  … 

சுவடி ஓதும் மைந்தன் :-  அமாம். ஒருத்தருக்கு… ஒன்பது வாழ்க்கையில வந்து… ஒன்பது தானம் பண்ணனும். அப்ப பண்ணுனா அது என்னது? அப்பதான் வந்து நவ அம்சம். அப்பதான் உன் கிரகங்களையே வந்து நவ 

அடியவர் 7:- நவ அம்ச கிரகம் வேலை செய்யும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்ல. நவ அம்சம் என்பதே இதுதாங்க ஐயா. ஓகே புரியுதுங்களா?  இதை பண்ணா மட்டும்தான் ஒவ்வொரு கிரகத்துவம் நீங்க பண்ணனும். அப்ப வந்து அது இது பண்ணி இது பண்ணால் மட்டும்தான்… குடை தானம் அப்புறம் என்னங்க சொன்னாங்க? 

அடியவர்கள் :- ஆடை தானம், பெண் தானம் ( கன்னிகா தானம் - வசதியில்லாதவர்களுக்கு திருமணம் செய்வித்தல் )  , 

குருநாதர் :-  எது என்று அறிய பின் எழுதுகோல் தானம் நிச்சயம் தன்னில் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  எழுதுகோல் கூட..

அடியவர் 7:- பேணா …

சுவடி ஓதும் மைந்தன் :-  பேணா கூட… பின் புக்கு இது கூட ஒரு தானம் தான்… புக்கு…  

குருநாதர் :-   எதை எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதனால தெரிஞ்சுக்கோங்க.. அறிஞ்சுக்கோங்க… 

===========================
# தர்மத்தின் வழியில் செல்ல செல்ல , கர்மத்தின் வலி குறையுமப்பா..
===========================

குருநாதர் :-   இவ்வாறாக நிச்சயம் செய்தால் மட்டுமே கிரகங்களும் வேலை செய்யும். இல்லையென்றால் நீங்கள் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். நல்ல நேரம் வரும். குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, எவை என்று கூற ராகு கேது பெயர்ச்சி, என்றெல்லாம். நிச்சயம் பின் நீங்கள் மாறாத வரையில் அதுவும் மாறாது. 

அடியவர் :- (குருநாதர் அகத்தியர்)  அய்யா வழிக்கு வந்துட்டாலே,   ஜாதகம் எடுக்குறது தேவை இல்லை…

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 11 August 2026

சித்தன் அருள் - 2272 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 6!




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 6

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 
………..
………..
………..

===========================
# கருணை கடல் - திருவாசகம் மலிவு விலை புத்தகத்தை (Rs.20)  அனைவருக்கும் எடுத்து கொடுக்க வைத்தார்கள்…. அந்த நெகிழ்ச்சியான நிகழ்வு யாத்திரை குழு அடியவர் மூலம் ஒரு குறுஞ்செய்தியாக  உங்கள் பார்வைக்கு….
===========================
யாத்திரை குழு அடியவர் தகவல் :-   எங்களிடம் திருவாசகம்  300 புத்தகங்கள் வீட்டில் கீழே வைக்கப்பட்டிருந்தன. அதை வெளியிட வேண்டும் என்ற எண்ணம் இருந்தும், காலப்போக்கில் மறந்து போனது. 
ஆனால் அதிசயமாக, குருநாதர் தாமே அந்த பதிகத்தை படிக்கச் சொல்லி, அந்த புத்தகத்தை எடுத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்தினார்.
அந்த புத்தகங்கள் அருகிலேயே இருந்ததால், உடனே எடுத்துச் சென்று குருநாதர் முன்னிலையில் படிக்க முடிந்தது. இதை யாத்திரை குழு அடியவர் அவர்கள், “குருநாதரின் அருளால் சரியான நேரத்தில் சரியான பொருள் வெளிப்பட்டது” என்ற உணர்வுடன் பகிர்கிறார்.
அவர் வாசகர்களிடம், “இந்த அனுபவத்தை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்; குருநாதரின் வழிகாட்டுதல் எப்போதும் நேரத்துக்கு நேரம் நம்மைத் தொடுகிறது”  என்று கூறுகிறார்.

மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த
திருவாசகம் (எட்டாம் திருமுறை) (திரு-சிவம், வாசகம் – பேச்சு = சிவன் பேச்சு)

திருவாசகம் 256 பக்கங்கள் கொண்ட இந்த நூலை மிகக் குறைந்த விலையில் ( ரூ.20 ) வெளியிட்டுள்ளனர் . 

நூல் வெளியீடு : கோசசிங்கணாயனார், சிவத்தொண்டு சிவசபை
448/9, திருவள்ளுவர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-81
தொலைபேசி : 9841514421. 

புத்தகம் வேண்டுவோர் தொடர்புக்கு +91-9884292841
யாத்திரை குழு அடியவர் ( திரு.ராகேஷ் அய்யா ) :- +91 79046 12352
இது வியாபார நோக்கம் அல்ல. இந்த சேவை நோக்கத்தை பல அடியவர்களுக்கு  பகிரவும். 

உங்களால் இயன்ற திருவாசகம் புத்தகங்கள் குழந்தைகளுக்கு , அடியவர்களுக்கு வழங்குங்கள்….அதுவே மிக்க புண்ணியங்கள்…..

( வாருங்கள் வாக்கின் உள் செல்வோம் ) 

( திருவாசகம் 48வது பதிகம் பாடி முடித்த பின்னர்…..) 

===========================
# திருவாசகம் 48வது பதிகம் எதை குறிக்கின்றது? 
===========================

குருநாதர் :-  தாயே எதை அறிவித்து நிச்சயம் இதற்குப் பின் அதாவது பின் சூரியனின் பின் ஆதிக்கம், எதை என்று புரிய, இவ்வாறாக எதை குறிக்கின்றது இப்பாடல்? 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எல்லாம் சூரியன் ஆதிக்கத்தோடு இருக்கிறீங்க வந்து… ஓகேங்களா?  

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப இந்த பாடல் எதை குறிக்கின்றது என்று எல்லாருக்கும் தெரிவிங்கன்றார் வந்து?  

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா அந்த சூரியன் ஆதிக்கம்….. யாராவது நீங்க என்னங்க ஐயா?.... என்ன இது வந்து குறிக்கிறது என்று…. எல்லாரும் ஒன்னு  சொல்லணும்…..

அடியவர் 9 :- இரவா பிறவா பிறப்பெடுத்தேன் ஐயா 

அடியவர் 6 :- ஈசனை சரணடையும் போது பிறவா நிலை கிடைக்கும் அப்படின்னு சொல்லி சொல்றாரு 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் ஒன்னு சொன்னாரு.. இவரு சொன்னாரு.. எல்லாம் சொல்லுங்க… 

அடியவர் 8  :-  ஈசனுடைய அருளை தேடி போகணும்னா அவரு சொல்ற சில குரு குருக்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த பாடலோட இது 

அடியவர் 7  :-  இந்த பாடலோட மீனிங் சொல்றேன் மீனிங் வந்து பண்டாய நான்மறை 

அடியவர் 10  :- பகவானோட அனுக்கிரகம்னு அவரோட வழியில போயாச்சுன்னா அதுக்கு நிகரா எதுவும் இல்லைங்கிறார் 

அடியவர் 8  :- சிவபெருமான் வந்து நம்மள வந்து ஆட்கொள்ளும் போது நம்ம அவருடைய வழியிலே பின்பற்றி போகணும் 

அடியவர் 10  :- அதுக்கு ஈக்குவலா எதுவுமே இல்லைங்கிற மாதிரி 

அடியவர் 8  :- ஆமாம். 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய இப்பொழுது நிச்சயம் உங்களை எவை என்று புரிய எதை ஏன் இதை சொன்னேன் என்றால் பின் அனைத்தும் ஈசன் தான் வழியும் காட்ட வேண்டும். எது என்று புரிய ஈசன் தான் அழைத்துச் செல்ல வேண்டும். அதனால் எதையும் நீங்கள் கேட்க தேவையில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  புரிஞ்சுதுங்களா ? 

அடியவர் 7  :-  ஈசியா முடிச்சிட்டாரு 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசியா முடிச்சிட்டாரு. உங்களுக்கும் அது என்ன பண்றது?  சேம். ( ஒவ்வொரு அடியார்களை  பார்த்து ).... 

உங்களுக்கும்… 

உங்களுக்கும்… 

உங்களுக்கும்… 

நீங்கம்மா…. 

என்னம்மா உங்களுக்கும்… 

உங்களுக்கும்… அப்பாக்கு அவர் கூட அதேதான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  எதுவும் கேட்கக்கூடாது. யாரு இப்ப எடுத்துட்டு போறது ?

அடியவர்கள் :- ஈசன் தான் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் தான்… இறைவன் தான் உங்களை அழைத்துச் செல்ல வேண்டும்.. வேற யாரும் வந்து?  

அடியவர் 7:- எதுவும் கேட்கக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எதுவும் கேட்கக்கூடாது நீங்க வந்து யாரையும் நம்பியும் இருக்கக்கூடாது போகக்கூடாது யார் வந்து இப்ப உங்களை சரியா பார்த்துட்டு இருக்குதுன்னா யாரு? 

அடியவர்கள் :- ஈசன் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் 

===========================
# அனைத்தும் ஆதி ஈசனார்  !!!!!!
===========================

குருநாதர் :- மீண்டும் அறிந்தும் ஏது என்று புரிய இவ்வாறாகவே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் அனைவரும் எது என்று புரிய எதனால் நிச்சயம் தன்னில் கூட எதனால் ஈசனே எவை என்று புரியப்பின் அனைவரையும் எது என்று புரியப்பின் நிச்சயம் தன்னில் சில வகையில் கொடுத்து நிச்சயம் அனைத்தும் ஏது என்று புரியப்பின் ஏது ஏது என்றெல்லாம் நிச்சயம் பின் அருள்களை வாங்கித் தருவான். 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் ஈசன் என்ன பண்ணுவாரு உணர்ந்து எல்லாமே செஞ்சு, உங்களுக்கெல்லாம் என்ன பண்ணி கொடுப்பாரு?  ஈசன் இன்னும்? அருள்கள்… அம்மா ஒன்னாம் தேதி…….அதெல்லாம் யார் வாங்கி கொடுப்பாரு வந்து ஈசன் தான் வாங்கிக் கொடுப்பார் ஒன்னு வந்து 

குருநாதர் :- ஏன் எதற்காக என்றால் நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறு ஒரு கட்டத்தில் நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற பின் இவ்வாறு ஒரு பாதை நிச்சயம் நோக்கிச் செல்ல வேண்டும் என்பது விதி அவரவர். அதனால்தான் ஒன்றிணைத்தேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா புரியுதுங்களா 

அடியவர் 10:- எல்லாரும் ஒன்னா அதே பாதையில போகணும்ன்றதுக்காக எல்லாரையும் ஒன்னா கூட்டிட்டு வந்திருக்கேன் இங்க 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால வந்து இவங்களுக்கு அது மாதிரி சொல்றாங்க ஒரு பாதையில வந்து நீங்க வந்து எல்லாமே என்னது டேக் ஈசன் 

குருநாதர் :- எதை ஏது என்று புரியப்பின் அனைத்து கஷ்டங்களையும் எவை என்று கூட அவன்தான் போக்க வேண்டும். அவன்தான் கொடுக்க வேண்டும். பின் எடுப்பதும் அவனே. கொடுப்பதும் அவனே. நிச்சயம் தடுப்பதும் அவனே என்று எண்ணி இருங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா உங்களுக்கு தான் இதெல்லாம் வருது… 
எடுப்பதும் அவனே 

அடியவர்கள் :- கொடுப்பதும் அவனே…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கொடுப்பதும் அவனே… தடுப்பதும் அவனே தான்…. நீங்களே இதுலவே உங்களுக்கு ஆன்சர் இருக்கும் என்னன்னு சொல்லிட்டு ஓகேங்களா?  எல்லாமே அவர் தடுப்பதும் 

சுவடி ஓதும் மைந்தன் :- இதுலவே நீங்க புரிஞ்சுக்கொள்ள வேண்டியதுதான்… அம்மா உங்களுக்கு கூட அம்மா… நீங்க இதுலயே புரிஞ்சுக்கொள்ள வேண்டியதுதான்… வேற யாரு? நீங்களும்… ஐயா நீங்களும்…. 

===========================
# அதிக புண்ணியம் - குருநாதர் அருளால் நலமாகும்….
===========================

அடியவர் 13:- நண்பர் ஒருவர் 15 வருஷமா அன்னதானம் செஞ்சுகிட்டு இருக்கிறார். குருநாதர் சொன்ன மாதிரி அவர் இன்ஜினா டிராவல் பண்ணிட்டு இருக்காரு. நான் பின்னாடி கம்பார்ட்மெண்ட்டா போயிட்டு இருக்கேன். அந்த இன்ஜினுக்கு இப்ப குவாலிட்டி ( உடம்பு சரியில்லை ) 

குருநாதர் :- அப்பனே எது என்பது அப்ப நிச்சயம் தன்னில் பழுது பார்ப்பவர்கள் யாங்கள்.  அப்பனே நிச்சயம் தன்னில் கூட பழுது பார்த்து தருகின்றேன் அப்பா . மீண்டும் பின்னாலே செல்.  

அடியவர்கள் :- ( சந்தோஷ பரவசத்தில் பலத்த கை தட்டல்கள் ) 

அடியவர் 7 :- ( வருத்தத்தில் உச்சு கொட்டினார்கள் ) 

அடியவர் :- சரி பண்ணி கொடுத்துருவாங்க…

சுவடி ஓதும் மைந்தன் :- சரி பண்ணனும். ஓகேவா? 

அடியவர்கள் :- ( சந்தோஷ பரவசத்தில் பலத்த கை தட்டல்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் சரி பண்ணி கொடுக்கிறேன் கொஞ்சம் வந்து.. 

அடியவர் 7 :- ( உங்க நண்பர் ) அவர் பின்னாடியே உங்களை போக சொல்றார்…

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் பின்னாடியே  நீ போப்பான்னுட்டார் வந்து  

அடியவர் 13:- சீரியஸா இருக்கார் அய்யா 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா?  

அடியவர்கள் :- ( அவர் நண்பர் ) சீரியஸா இருக்காராம்…

அடியவர் :- அதை சரி பண்ணி கொடுத்துருவாங்க…

சுவடி ஓதும் மைந்தன் :-   

குருநாதர் :- அப்பனே கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- கவலை விட்டுருப்பா என்று சொல்கின்றார்… கவலை விடுப்பேபா. ஓகேங்களா?  

குருநாதர் :- அப்பனே எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஏது என்று புரிய அப்பனே, பின் அதிகமாக பின் புண்ணியங்கள் செய்தாலும் இப்படித்தான். அதிகமான பாவங்கள் செய்தாலும் இப்படித்தான் அப்பா. 

அடியவர்கள் :- ( சில அமைதி சிரிப்பு….. ) 

அடியவர் 13:-  அப்பாக்கு ( உடல் நிலை குறித்து கேட்டபோது …) 

குருநாதர் :- அப்பனே கவலை விடு எது என்று ஒரு பின் முருகன் அருகிலே இருக்கின்றான். நீ என்ன பார்த்துக் கொள்வது? முருகன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே. கவலை விடு. எதையும் கேட்காதே அவனைப் பற்றி. யாம் அறிவோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- நான் அறிஞ்சுக்கணும்பா. நீயும் பார்க்க அவர் முருகரே அவர் வந்து பார்த்துட்டு இருக்காருப்பா. அதனால அவரை பற்றி விட்டுட்டு இருப்பான்றார். 

குருநாதர் :- எதை ஏது என்று புரிய கடை பிறப்பு  என்பதால் இன்னும் பின் ஆயுள் நீட்டி வைத்திருக்கின்றான் கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- இது கடை பிறப்பு என்பதால் இன்னும் வந்து ஆயுசு வந்து நீட்டி வச்சிருக்காருன்றார் வந்து 

குருநாதர் :- கவலைகள் வேண்டாம். பின் நிச்சயம் பார்த்துக் கொள்கின்றேன் 

சுவடி ஓதும் மைந்தன் :- கவலைப்படாதப்பா நான் பார்த்துக்கொள்கிறேன். 

குருநாதர் :- அப்பனே இன்னும் ஏது என்று புரிய உந்தனுக்கும் பல பின் எவை என்று இறை ஆற்றல்கள் எவை என்று புரிய அப்பனே அதை சரியாக எப்பொழுது ஏது என்று புரிய அப்பனே இன்னும் காலங்கள் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றது. சரியாக பயன்படுத்தி வெற்றிக்கொள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? 

குருநாதர் :- அப்பனே நலங்களாக பல வகைகளில் கூட உண்மைகள் நிச்சயம் உனக்கே  புரியும் வண்ணம் அப்பனே தெரிவிக்கின்றேன். 

குருநாதர் :-  எவை என்று புரிய அப்பனே நிச்சயம் எதற்காக வந்தாய் என்பவை எல்லாம் அப்பனே பின் போக போக தெரிய வைக்கின்றேன் அப்பனே. பின் பொறுத்திரு. அப்பனே எம்முடைய ஆசிகள் பரிசுத்தம். 

குருநாதர் :-  அப்பனே நல்விதமாக எதை என்று கூறப்பின் நிச்சயம் தன்னில் காஞ்சி பின் மாநகரில் அப்பனே பின் இருக்கும் ஆலயத்திற்கு சென்று வா தரிசித்து வா. அப்பனே பல ஆலயங்களுக்கு அப்பனே உண்மை நிலை தெரியும் அப்பனே. பின் வெற்றிகள் காண்பாய் அப்பனே. பின் எதற்காக பிறவி என்றும் தெரிந்து கொள்வாய். 

அடியவர் 13:- அய்யா எனக்கு சொன்னாங்களா ? 

அடியவர் 7 :- ஆமாம் அய்யா ( இந்த வாக்கு உங்களுக்குத்தான் ) 

சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா? 

===========================
# குலதெய்வம்…குறித்து ஒரு கேள்வி 
===========================

அடியவர் 14  :-  ஐயா எனக்கு குலதெய்வம்….

குருநாதர் :- அம்மையே எது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இப்படி சொன்னேனே முதலில் அதை எவை என்று புரிய.. 

சுவடி ஓதும் மைந்தன் :-  யாரு எல்லாமே ஈசன் தான் என்று சொல்லிட்டாரு உங்களுக்கு வந்து 

===========================
# சங்கு நாதம் ஏன் ஊதுகின்றீர்கள் ? 
===========================
# ஏன் அதை ஊதுபவர்கள் எளிதில் கெட்டுப் போய் விடுகிறார்கள்.?
===========================
# சங்கு நாதம் ஊதும் அனைத்து அடியார்களுக்கும்,  பின் வரும்  வாக்கினை அவசியம் நேரில் எடுத்து சொல்லுங்கள்…. 
===========================

அடியவர் 14  :- ஐயாவுக்கு சங்கு நாதம் பண்றேன் …

குருநாதர் :- தாயே எவை என்று கூற ஏன் இதை எவை என்று புரிய என்று சொல்ல வேண்டும். 

குருநாதர் :- எதை என்று புரிய பின் எதை என்று புரிய பின் மீண்டும் பின் வாயில் பின் வைத்துக்கொண்டு சிறுவர்கள் விளையாடுவார்களே….. பின் அதேபோல் விளையாடக்கூடாது. 

குருநாதர் :- ஏன் எதற்காக எவை என்று புரிய இதை ஊதுகின்றீர்கள்  என்று சொல்லித்தான் ஆகவேண்டும் கட்டாயம் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சும்மா சின்ன பிள்ளைகள் ஊத்துவாங்க பாருங்க..அந்த மாதிரி….   

அடியவர் 14  :-  எனக்கு சங்கு நத்தம் எந்த ஆலயத்துக்கு வந்தாலும் நான்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்லம்மா… இது ஏன் ஊதணும்னு சொல்லிட்டு?  

அடியவர் 14  :- அது எனக்கு தெரியாததுனால தானே 

அடியவர் 7  :- அதுதான் சொல்றாரு. விளையாட்டு பழக்கம் ஊதாத. எதுக்கு ஊதுற ? 

குருநாதர் :- ஏது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட சொல். 

சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லணும் 

அடியவர் 7  :-  நீங்க சொல்லணும்… அவங்கதான் சொல்லணும்.

அடியவர் 4   :- எதுக்காக சங்கு ஊதுற?  

அடியவர் 14  :-  ( அகத்தியர் அய்யா ) உங்களுக்கு… ஐயாவுக்கு ரொம்ப பிடிக்கும்… மேல இருந்து கீழ குனிஞ்சு யார் சங்கு நாதம் பண்றான்னு பார்ப்பாங்க…. அப்படின்னு சொல்லிட்டு…. 

அடியவர் 9  :-  சங்கு நாதம்  வாசிக்கிறவங்களுக்கு இதய நோயே வராது. ஏன்னா அவங்க தம் கட்டி வாசிக்கிறதுனால அந்த இதயத்துல ….

குருநாதர் :- தாயே எவை என்று கூற இவையெல்லாம் தெரிந்தது. தெரியாமல் சொல்… 

அடியவர் 7  :- தெரியாத சொல்லங்க. அவங்க சொல்லட்டும்… அவங்க ஏன் ஊதுறாங்கன்னு சொல்லட்டும்… 

அடியவர் 14   :- அதான் அப்பா அப்பாக்கு ரொம்ப சந்தோஷப்படுவாரு… அதனால நாதம்… 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த அம்மா ஏதோ சொல்லணும்… 

அடியவர் 14   :-  நாதம் பண்றது…. எனக்கு தெரியலையே…. எனக்கு இது தெரியவே இல்லை…. ஆனா எப்படி யாருமே சொல்லித் தரல… நான் தானாவே நாதம் பண்றேன்… 

அடியவர் 17  :- விளையாட்டாதான் பண்றீங்க 

அடியவர் 14   :-  விளையாட்டா பண்ணானாலும்… அது தினம் அக்கம் பக்கத்துல பிளாட்ல… எவ்வளவு பிரச்சனை இருக்கும்… அதையும் மீறி டெய்லி நாதம் பண்றேன்… ஏதோ ஒரு மன சந்தோஷம்… அவர் பாக்குறாரு பூஜை பண்ணும்போது… 

குருநாதர் :-  தாயே நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரிய பின் உண்மையை நிச்சயம் சொல். யோசி? 

சுவடி ஓதும் மைந்தன் :-  யோசி

அடியவர் 5   :- நல்லா யோசி. சாமி சொல்லுவாரு. 

அடியவர் 14   :- அவரு கனவுல வந்து சொன்னது அங்கேயே சிதம்பரத்திலேயே நான் வாங்குனேன்… எப்படி பண்ணனும்னு 

சுவடி ஓதும் மைந்தன் :-  எதற்காக ? 

அடியவர் 14   :- நடராஜர் உத்தரவு கொடுத்து… 

===========================
# சங்கு நாதம் ஊதும்போது - “என் மூச்சே நீதான் இறைவனே”  என்று நினைத்து இருக்க வேண்டும்….
===========================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட ஏன் என்றால் பின் மூச்சையும் கூட நீயே என்று தான் இருக்க வேண்டும். அதற்காகத்தான் எது என்று புரிய நிச்சயம் ஆனாலும் யாரும் இருப்பதில்லை. அதனால்தான் அதை ஊதுபவர்கள் எளிதில் கெட்டுப் போய் விடுகிறார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-   எப்பா என்னோட மூச்சுப்பா நீயே நீதான் என் மூச்சுன்னு சொல்லிட்டு ஊதணும் அது தெரியாம வந்து நம்ம ஊதிட்டோம்னா அது ஊதனவங்க லைஃப் ஐயா புரியுதுங்களா வந்து?  ஏன் ஊதுறோம்?  

அடியவர்கள்  :- என் மூச்சே நீதான்ப்பா…

சுவடி ஓதும் மைந்தன் :-  என் மூச்சு எடுத்துக்கோப்பா… நீயேன்னு சொல்லிட்டு தான்… அதை மாதிரி வச்சு… அதை நீ தெரியாம நான் ஏன் புரியுதுங்களா வந்து? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்பதான் எனக்கே தெரியுது… 

குருநாதர் :-  தாயே நிச்சயம் அதனால்தான் நிச்சயம் அடிப்படை தத்துவங்கள் தெரிந்து கொள்ள வேண்டும், தாயே கவலை இல்லை, இப்பொழுது தெரிந்து கொண்டாயா? நிச்சயம் ஏன் ஊதுகின்றாய் என்று? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப தெரிஞ்சுக்கிட்டியேமா? 

அடியவர் 14   :- அப்பா யாருன்றத தெரிஞ்சுக்கிட்டேன் 

அடியவர் 7    :- மூச்சு ஊதுறதுக்காக எதுக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன் என்று சொல்லுங்க…

சுவடி ஓதும் மைந்தன் :-   மூச்சும் நீதான்ப்பா… என்னுடைய மூச்சு… அதான் என் உயிரே… எப்படி சொல்றது வந்து?  என் உயிர் நீதான். அதுதான் நீ குடுத்தாதான்ப்பா. இந்த உயிருக்கு ஏதாவது பிச்சை…. அதுதான் ஊதுகின்றோம் வந்து. ஓகேங்களா அப்ப அது தெரிஞ்சு வேற தப்பு எல்லாம் பண்ணோம்னா.. லைஃப் வீணா போயிடும் வீணா போயிடும்ன்றாரு வந்து ஓகேங்களா?

===========================
# திருவாசகம் 27ஆம் பதிகம் ஓதுக…..
===========================

குருநாதர் :-  தாயே இதனால் பின் 27வது அனைவரும் படியுங்கள்.. 

அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழு அடியவர்கள் :- 
(8.027 புணர்ச்சிப்பத்து  பதிகம் பாட ஆரம்பித்தனர்….) 


சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை 
  வாளா தொழும்புகந்து
கடைபட்டேனை ஆண்டுகொண்ட 
 கருணாலயனைக் கருமால் பிரமன்
தடைபட் டின்னுஞ் சார மாட்டாத் 
  தன்னைத் தந்த என்னா ரமுதைப் 
புடைபட் டிருப்ப தென்றுகொல்லோஎன் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  1

ஆற்ற கில்லேன் அடியேன் அரசே  
  அவனி தலத்தைம் புலனாய
சேற்றி லழுந்தாச் சிந்தைசெய்து 
  சிவனெம் பெருமானென்றேத்தி
ஊற்று மணல்போல் நெக்குநெக் குள்ளே 
  உருகி ஓலமிட்டுப்
போற்றிநிற்ப தென்றுகொல்லோஎன் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  2

நீண்டமாலும் அயனும் வெருவ 
  நீண்ட நெருப்பை விருப்பிலேனை
ஆண்டுகொண்ட என் ஆரமுதை 
  அள்ளுறுள்ளத் தடியார்முன்
வேண்டுந் தனையும் வாய்விட்டலறி 
  விரையார் மலர் தூவிப்
பூண்டு கிடப்ப தென்று கொல்லோ என் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  3

அல்லிக் கமலத் தயனும் மாலும் 
  அல்லா தவரும் அமரர்கோனுஞ்
சொல்லிப் பரவும் நாமத் தானைச் 
  சொல்லும் பொருளும் இறந்த சுடரை
நெல்லிக் கனியைத் தேனைப் பாலை 
  நிறையின் அமுதை அமுதின் சுவையைப்
புல்லிப் புணர்வ தென்றுகொல்லோ என் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  4

திகழத் திகழும் அடியும் முடியுங் 
  காண்பான் கீழ்மேல் அயனும் மாலும்
அகழப் பறந்துங் காண மாட்டா 
  அம்மான் இம்மா நிலமுழுதும்
திகழப் பணிகொண்டென்னை ஆட்கொண்டு 
  ஆ ஆ என்ற நீர்மையெல்லாம்
புகழப் பெறுவ தென்று கொல்லோஎன் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  5

பரிந்து வந்து பரமானந்தம் 
  பண்டே அடியேற் கருள் செய்யப்
பிரிந்து போந்து பெருமா நிலத்தில் 
  அருமா லுற்றேன் என்றென்று
சொரிந்த கண்ணீர் சொரிய உள்நீர் 
  உரோமஞ் சிலிர்ப்ப உகந்தன்பாய்ப்
புரிந்து நிற்பதென்று கொல்லோ என் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  6

நினையப்பிறருக் கரிய நெருப்பை  
 நீரைக் காலை நிலனை விசும்பைத்
தனையொப் பாரை யில்லாத் தனியை 
  நோக்கித் தழைத்துத் தழுத்தகண்டம்
கனையக் கண்ணீர் அருவி பாயக் 
  கையுங் கூப்பிக் கடிமலராற்
புனையப் பெறுவதென்று கொல்லோஎன் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  7

நெக்குநெக்குள் உருகி உருகி 
  நின்றும் இருந்தும் கிடந்தும் எழுந்தும்
நக்கும் அழுதும் தொழுதும் வாழ்த்தி 
  நானாவிதத்தாற் கூத்தும் நவிற்றிச்
செக்கர்போலும் திருமேனி
  திகழ நோக்கிச் சிலிர்சி லிர்த்துப்
புக்கு நிற்ப தென்றுகொல்லோ என் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  8

தாதாய் மூவே ழுலகுக்குங் 
  தாயே நாயேன் தனையாண்ட
பேதாய் பிறவிப் பிணிக்கோர் மருந்தே 
  பெருந்தேன் பில்க எப்போதும்
ஏதாம் மணியே என்றென்றேத்தி 
  இரவும் பகலும் எழிலார்பாதப்
போதாய்ந் தணைவதென்று கொல்லோஎன் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  9

காப்பாய் படைப்பாய் கரப்பாய் முழுதுங் 
  கண்ணார் விசும்பின் விண்ணோர்க்கெல்லாம்
மூப்பாய் மூவா முதலாய் நின்ற 
  முதல்வா முன்னே எனையாண்ட
பார்ப்பானே எம்பரமா என்று 
  பாடிப் பாடிப் பணிந்து பாதப்
பூப்போதணைவ தென்று கொல்லோ என் 
  பொல்லா மணியைப் புணர்ந்தே.  10


===========================
# பிறந்த தேதி 1, 10, 19, 28… சிம்ம ராசி … அடியவர்கள் உணர்க 
=========================== 

குருநாதர் :-  எதை கேட்கிறீர்கள் தாயே எதை என்று புரிய.  நிச்சயம் இவ்வாறாக பின் சூரியனின் பின் ஆதிக்கத்தை எவ்வாறு என்பதை கூட இதை பின் உணருக. 

சுவடி ஓதும் மைந்தன் :-   சூரியன் ஆதிக்கம் இப்ப சொன்னார் இல்ல… வந்து… ஒன்னு இது வந்து இதெல்லாம் வந்து ( பிறந்த தேதி 1, 10, 19, 28, சிம்மராசி …)  இந்த பாடலோட உணருகன்றாரு.  என்ன உணர்ந்தீங்க?

அடியவர் 14   :-  எல்லாம் அவனே 

குருநாதர் :-  எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பின் உங்களுக்கு பின் சேவை செய்ய இறைவனே. அதுதான் ஈசன் யாராலும் மாற்ற முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   அம்மா இப்ப எல்லாம் எழுதி இருந்தீங்க பாரு இந்த ஒன்னாம் தேதி  ( பிறந்த தேதி 1, 10, 19, 28, சிம்மராசி …)  ஒன்னாம் சூரியன் எல்லாம் வந்து…. இதை வந்து யாரு வந்து மாத்தணும்னா…. தான் தன் விதிகளை என்ன வேணும்னு மாத்தணும்னா ஒன்றுதான் யாரு? 

அடியவர்கள் :- ஈசன் ….

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் மட்டும்தான். 

குருநாதர் :-  எது என்று புரிய இதனால் நிச்சயம் அவனை பிடித்துக் கொள்ளுங்கள். அவருக்கு தேவையானது அனைத்தும் பின் நிச்சயம் பின் ஈசனை ஆராய்ந்து கொடுப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால உங்களுக்கு தேவையானதெல்லாம் என்ன பண்றது வந்து?  உங்களுக்கு தேவையானது… ஈசன் தான் கொடுப்பாருமா… எல்லாருக்குமா… இந்த ஒன்னு.. இந்த சூரியன் ஆதிக்கம் நீங்க… நீங்க… ஐயா நீங்க… அம்மா நீங்க… நீங்க சேர்த்து… யாருக்கு கொடுப்பாங்க? 

அடியவர்கள் :-  ஈசன் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் 

குருநாதர் :-  ஏன் எதற்கு என்றால் நிச்சயம் தன்னில் ஏது என்று புரிய இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் சூரியனின் பாதை நிச்சயம் அவ்வாறு நோக்கிச் செல்கின்றது,  எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட எது என்று அறிய 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த சூரியனோட ஒளிக்கற்றைகள் இந்த காலத்துல வந்து… அவ்வாறு வந்து இந்த ஒளிக்கற்றைகள் இருக்குது வந்து ….அதை மாதிரி வந்து… அந்த ஒரு இதுல போகுது…. அந்த கற்றைகள். அதனால இந்த காலத்துல…. அடுத்து யாருக்கு உங்களுக்கு கொடுக்கணும் அம்மா புரியுதுங்களா வந்து?  சயின்ஸ்ல எடுத்து சொல்றாரு அவர் வந்து. அந்த ஒளிபெற்ற ஒரு பாதையில போகும் பொழுது…. அந்த இது வந்து அந்த அதுக்கு வந்து….. என்ன ஆகும் ஈசன் தான் உங்களுக்கு வந்து கொடுக்கணும். புரியுதுங்களா வந்து? 

குருநாதர் :-  ஏது இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக எதை என்று கூற பின் ஒளிக்கற்றைகள் நிச்சயம் பின் செல்கின்ற பொழுது அப்பொழுது எதை என்று சூரியன் ஒளிக்கற்றைகள் யாராலும் தாங்க முடியுமா என்றால் நிச்சயம் முடியாது. அதனால் நீங்கள் தான் அனைத்தும் தாங்கிக் கொள்ள வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த ஒரு சூரிய கற்றைகள் ஒரு சூரிய கற்றைகள் வந்து எவ்வளவு வெளிச்சம் போகும் யாராவது தாங்க முடியுமா?  யாராவது உதவி பண்ணுவாங்களா? யாரும் வரமாட்டார்கள்… அப்ப வந்து யாருக்கு உங்களுக்கே…. நீங்க தான் பார்க்கணும்.. உங்களோட லைஃப் வந்து அப்ப ஈசன் என்ன பண்ணுவாரு ஏதாவது ஏற்படுத்துவார்.. 

குருநாதர் :-  நிச்சயம் அதுவரை நீங்கள் பொறுத்தாகத்தான் வேண்டும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அது நாள் வரை பொறுத்தாகத்தான் வேண்டும் 

குருநாதர் :-  பின் எத்தனை பின் நாட்கள் என்றெல்லாம் நிச்சயம் நீங்கள் கேட்கக்கூடாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எத்தனை மாசம் எத்தனை நாட்கள் அதெல்லாம் வந்து நீங்கள் கேட்கக்கூடாது… 

குருநாதர் :-  எதை ஏது என்று புரிய இதனால் நிச்சயம் தனி இவ்வாறாக நிச்சயம் சில வருடங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சில வருடங்கள் கூட ஆகலாம் ஆகலாம் 

குருநாதர் :-  அறிந்தும் அதன் முன்மே யான் இருக்கின்றேன் உங்களுக்கு என்ன தேவையோ அதை யான் பூர்த்தி செய்து தருகின்றேன் கவலைகள் வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலே நாங்கள் வந்து 

அடியவர் 12:- ஐயா ஏற்கனவே ஒரு தடவை வாக்கு கேட்கும்போது ஒரு ஐயா மூலியமா சொல்லி பரிகாரம் பண்ண சொல்லி திருவண்ணாமலையில போயிட்டு அந்த காயின் வச்சு ₹1 காயின் வச்சு 

குருநாதர் :-  தாயே நிச்சயம் எதற்கும் லாபம் கொடுப்பவன் ஈசனே. இதனால் நிச்சயம் பின் ஈசனை வேண்டிக்கொள்ளுங்கள் எது என்று கூறி பின் நிச்சயம் தள்ளி அதனால்தான் ஈசன் முடிவெடுக்கட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா அம்மா இதுதான் இது அர்த்தம் ஆயிடுச்சு வந்து… உங்களுக்கு என்னென்ன தேவையோ இந்த நேரத்துல யார் கொடுக்கணும் உங்களுக்கு ?  

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் தான் நாலு பேருக்கு வழிகாட்டணும். ஓகேங்களா?  அந்த சூரியனோட அந்த ஆதிக்கம் இருக்குங்களா வந்து உங்களை வந்து அந்த பார்த்துக் கொள்வதற்கு வந்து யாரும் இல்ல. 

அடியவர்கள் :- ஈசன் தான் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் தான்.  அப்ப ஈசன் என்ன பண்ணனும் வந்து நீங்க?  என்ன தேவையோ அது ஈசன்ட்ட கேட்டுக்கோங்க.  

அடியவர்கள் :- நாங்க என்ன செய்யணும் ? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதான் ஈசன்… 

அடியவர் 7  :- இறைவனடி…. 

===========================
# திருவாசகத்தை ஓதிக் கொண்டே இருங்கள்…
=========================== 

குருநாதர் :-  அப்பனே கையில் வைத்துக்கொண்டு பாடலை பாடச் சொன்னேனே திருவாசகத்தை ஓதிக்கொண்டு இருங்கள்… 

சுவடி ஓதும் மைந்தன் :-   (திருவாசகத்தை) கையிலேயே வச்சிருக்கிறப்பா. அப்ப திருவாசகத்தை உங்களுக்கு ஓதிக் கொண்டே இரு. இது உங்களுக்கு பயன்படும்…..

===========================
# திருவாசகத்தை படிக்க முடியாவிடில்,  தூங்கும் போது உங்கள்  தலையணை அருகிலாவது வைத்துக் கொண்டு தூங்குங்கள்…..
=========================== 

குருநாதர் :-  நிச்சயம் அப்படி இல்லாவிடிலும் பின் நிச்சயம் படுத்து உறங்குகின்றீர்களே  நிச்சயம் தன்னில் கூட, பக்கத்திலாவது வைத்துக்கொள்ளுங்கள் தலையில் .  

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க படிக்க மாட்டீங்க… அப்படியே முடியாது. அப்ப திருவாசகம் எல்லாம் புக் என்ன பண்ணனும்?  

அடியவர் 8 :- தலையில்  பக்கத்தில வைத்துக்கொள்ளுங்கள் 

அடியவர்கள் :- இல்ல எல்லாரும் படிக்கிறோம் சொல்லுங்க…  

சுவடி ஓதும் மைந்தன் :-  இல்ல இவங்களுக்கு 

அடியவர் 11 :- இல்ல சப்போஸ் சந்தர்ப்ப சூழ்நிலை படிக்க முடியல என்றால் ….படுக்கும்போது 

சுவடி ஓதும் மைந்தன் :-  படுக்கும் போது என்ன பண்ணனும் ? 

===========================
# திருவாசகத்தை ஓதிக்கொண்டே வந்தால் தேன் போல் வாழ்க்கை அமையும்…...
=========================== 

குருநாதர் :-   தாயே எது என்று புரிய திருவாசகத்தை நிச்சயம் தன்னில் கூட பின் ஓதிக்கொண்டே வந்தால் தேன் போல் வாழ்க்கை அமையும்…. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இது எல்லாருக்கும்….. திருவாசகத்தை ஓதிக்கொண்டே வந்தால்?  

அடியவர்கள் :- தேன் போல் வாழ்க்கை அமையும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  தேன் போல் வாழ்க்கை அமையும் 

===========================
# திருவாசகத்தை இறைவன் அவ்வளவு சுலபமாக ஓத விடமாட்டார்…
=========================== 

குருநாதர் :-   ஆனால் இறைவன் அவ்வளவு சுலபமாக விடமாட்டான். 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )  

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனால் இறைவன் படிக்கிறதுக்கு? 

அடியவர் 7 :- அவ்வளவு சீக்கிரம் படிக்கிறதுக்கு விடமாட்டார் 

சுவடி ஓதும் மைந்தன் :-   விடமாட்டார்.  

அடியவர் 16:- அய்யா ( இறைவன் ) பழத்தையும் கொடுத்து , நாடகத்தையும் நடத்துகின்றார்… ( திருவிளையாடல் படத்தின் வசனம் ) 

குருநாதர் :-   எது என்று அறிய நிச்சயம் அப்படித்தான் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதே மாதிரி பழத்தையும் கொடுத்துட்டு… நாடகத்தையும் நடத்தியவர் அவர்தான்.  ஓகேங்களா?  புரியுதுங்களா அய்யா ? 

அடியவர் 17 :- ஐயா தாயாருடைய நோய்…. 

குருநாதர் :-   எதை புரிய அப்பனே கவலைகள் இல்லை. நிச்சயம் தன்னில் கூட யான் பார்த்துக் கொள்கின்றேன்.  அப்பனே விதியில் அப்பனே நிச்சயம் சில போராட்டங்கள் எல்லாம் அப்பனே உன்னிடம் சொன்னாலும் புரியாது அப்பா. ஏனென்றால் அப்பனே யான் தான் வரவேண்டும் அப்பனே, சில எவை என்று ஒரு விதியை மாற்ற. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சில சிலருக்கெல்லாம் விதியில இருந்து… அதை ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்கின்றார்.. ஓகேங்களா?  அப்படித்தான்…. இருந்துச்சுன்னா நானும் ஒண்ணுமே பண்ண முடியாதுப்பா… இருந்தாலும் நான் வந்து, ஏதாவது பண்றேன்ப்பான்றாரு…. ஏன்னா விதியில இருந்து அப்படித்தான் சொல்லுவாரு…..

சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்னா அது விதியிலேயே இருந்துச்சுன்னா யாராலும் அவ்வளவு சீக்கிரம் மாத்த முடியாது வந்து… அதனால நான் பார்த்துக்கிறேன்… ஏதாவது பண்றேன்ப்பான்றாரு.. புரியுதுங்களா?  

===========================
# உடம்பு என்ற இயந்திரத்திற்கு பல வகையான மூலிகை ஆற்றல் தேவைப்படுகின்றது. 
=========================== 


குருநாதர் :- எதை எது என்று சொல்ல இதனால்தான் நிச்சயம் பின் அதாவது எதை என்று புரிய நிச்சயம் பின் இயந்திரத்திற்கு பல வகையான நிச்சயம் தன்னில் கூட பின் ஆற்றல் தேவைப்படுகின்றது. இதனால்தான் எது என்று புரிய நிச்சயம் பின் இயற்கை மூலிகள் அவையும் எடுக்கச் சொன்னேன். நிச்சயம் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த இன்ஜின் இது உடம்பு என்பது என்ன?

அடியவர் :-  இன்ஜின் 

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்ஜின்… அந்த இன்ஜினுக்கு?  

அடியவர் :-ஆயில் ஊத்தணும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆயில் ஊத்தணும் ஆயில்னா என்னது 

அடியவர் :-இயற்கை மூலிகள் 

சுவடி ஓதும் மைந்தன் :-   இயற்கை மூலிகள் 

சுவடி ஓதும் மைந்தன் :-   அது கூட  நீங்கள் எடுக்கலைன்னா வந்து என்னப்பா பண்றது?

அடியவர் :- திரிபலா , திரிகடுகம்….

===========================
# மூலிகைகள் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் இடைவிடாமல் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்…
=========================== 

குருநாதர் :- ஆனால் நிச்சயம் பின் சொல்வார்கள் ஒரு மாதம் இரண்டு மாதம் என்று. அப்படி இல்லை. மூன்று ஆண்டுகள்… ஐந்து ஆண்டுகள்… எடுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஊரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு மாசமோ.. ஒரு ரெண்டு மாசமோ… எடுத்துக் கொண்டு… சரியாச்சு. ஒன்னும் ஆகலன்னு சொல்லிட்டு… இயற்கை மூலிகைகள் பத்தி 

அடியவர் :- சொல்லக்கூடாது 

சுவடி ஓதும் மைந்தன் :-   சொல்லக்கூடாது. மூன்று ஆண்டுகள் முதல்? 

அடியவர் :-  மூணு வருஷம் 

அடியவர் 9 :-  அஞ்சு வருஷம்

சுவடி ஓதும் மைந்தன் :-  அஞ்சு வருஷம் சாப்பிட்டே  ஆகணும்… 

===========================
# விதியின் தன்மை  - மூலிகைகள் தொடர்ந்து எடுக்க விடாது….
=========================== 
# குருநாதர், சித்தர்கள்  வழியில் உள்ள சித்த மூலிகை மருத்துவர்கள் இதனை மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள்..புரிய வையுங்கள் …. 
===========================

குருநாதர் :- ஆனாலும்  நிச்சயம் தன்னில் கூட அப்பொழுதுதான் நன்றாகும். ஆனால் ஒன்றும் பின் ஆகவில்லை என்று ஓடிவிடுவான். இதுதான் விதியின் நிச்சயம் தன்மை. 

சுவடி ஓதும் மைந்தன் :-   விதி என்று என்ன அது?  நல்ல நேரத்துல ஒரு வருஷம் ரெண்டு சாப்பிட்டு இருப்பாங்க. அதுக்குள்ளேயே அந்த நம்பிக்கை போயிடும். என்ன ஆகும் வந்து? சாப்பிட மாட்டாங்க. அப்புறம் என்ன ஆகும்?. அடா போடான்னு சொல்லிட்டு… அந்த விதி… அப்ப விதிதான் ஜெயிக்குதுன்றாரு வந்து.. அய்யா புரியுதுங்களா?  

குருநாதர் :- அப்பனே எது என்று புரிய அப்பனே விதியை மாற்ற வேண்டும். என்ன செய்ய வேண்டும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  விதியை மாற்ற வேண்டும் என்ன செய்ய வேண்டும்? 

அடியவர் 6 :- இறைவனை தான் பிடிக்கணும்.

அடியவர்  :- புண்ணியம் செய்ய வேண்டும்.

குருநாதர் :- எது என்று கூற  பின் இறைவனை வணங்க வேண்டுமா? 

அடியவர் 6 :- இறைவனை காலை தான் பிடிக்கணும் 

குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் எவை என்று கூறப்பின் இறைவனை எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் ஆண்டுகள்…. ஆண்டு கணக்கில் ஆகும்…

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவனை பிடிக்க விதியை மாற்றம் பண்ணா… ஆண்டு கணக்கில் ஆகும்ன்றார் வந்து… 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!