​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 November 2023

சித்தன் அருள் - 1522 - அன்புடன் அகத்தியர் - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 2

குருநாதர்:- அப்பனே , நீ இறக்கக்கூடியவன். இவ் (இறை) நம்பிக்கை உன்னைக் காப்பாற்றி விட்டது.

அப்பனே பின் கஷ்டத்திலும் இறைவன் இருக்கின்றான். இதற்கு பதில் அளி அனைவருக்குமே.

அடியவர் 4:- கஷ்டம் என்பதை நினைப்பவருக்குத்தான் கஷ்டம். இல்லையா? கஷ்டம் என்பது இல்லை என்பது , இறை நம்பிக்கை மட்டும் வைத்துக்கொண்டீர்கள் என்றால் கஷ்டம் என்பது உங்கள் வாழ்க்கையில் இல்லாமல் போய்விடும். எப்படி நல்லது , தெய்வீகம் , சந்தோசம் எப்படி என்றால் கஷ்டம் என்பதை பிரிக்கின்றீர்களோ அதை வைத்துத்தான். இறை நம்பிக்கை ஒன்றை மட்டும் உங்கள் மனதில் என்றும் நிலை நிறுத்துங்கள்.

( அடியவர்கள் நன்கு அடுத்து வரும் வாக்கை 3 முறை உள் வாங்கவும். இறைவன் நம்பிக்கையை அடுத்தவருக்கு  ஊட்டினாலே , சந்தோசத்தை இறைவன் உங்களுக்கு ஊட்டுவார் - உங்கள் கஷ்டங்களைப் போக்கி. இறைவன் நம்பிக்கை ஊட்டுவதே மகத்தான மாபெரும் தர்மம். இனி அடியவர்கள் இறை நம்பிக்கையை , இந்த அடியவர் ஊட்டியது போல உங்கள் சுற்றத்தாருக்கு ஊட்டுங்கள். இறை அருளால் உங்கள் கஷ்டங்கள் நீங்கி சந்தோசமாக வாழுங்கள்.)

குருநாதர்:- அப்பனே  நிச்சயம் அப்பனே உன் கஷ்டம் போய்விடும் அப்பனே. உன் கஷ்டத்தை பற்றி எடுத்துரை.

அடியவர் 4:- ( இவ்வுலகத்திற்கு ) நாம் எதையும் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு போக முடியாது. எல்லாமே மாயை தான். எதுக்காக தேவையில்லாத ஒருத்தருக்கு ஒருத்தர் இப்படி இருக்கவேண்டும்? தேவை இல்லை. எல்லாமே இறைவன். அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார். அவர் பார்த்துக் கொண்டே இருக்கின்றார். அதனால தான் நீங்கள் இங்கு வந்து உள்ளீர்கள். அதுவும் உங்களுக்கு உணர வைப்பதற்கே இந்த மாதிரி (நாடி வாக்கு வாசிப்பு நிகழ்வு ).

குருநாதர் :- அப்பனே இன்னொரு விடயத்தையும் சொல்கின்றேன் அப்பனே. சனி ( சனீஸ்வரர் தேவன் ) அவனின் அப்பனே குற்றங்கள் என்ன? அப்பனே பெருமைகள் என்ன? (என்று) அனைவருக்கும் உணர்(த்துக). 

அடியவர் 4:- நமது மனசுக்கு துரோகமாக எதைச் செய்தாலும் அது குற்றம்தான். பெருமை என்பது நீங்கள் நினைப்பது அல்ல. மற்றவர்கள் உங்களைப் பற்றி பெருமைப்படவேண்டும். நீங்கள் உங்களைப் பற்றி பெருமைப்படக்கூடாது.

குருநாதர்:- அப்பனே சனி ( சனீஸ்வரர் தேவன் ) அவன் உந்தனுக்கு என்ன என்ன தந்தான் என்று அனைவருக்கும் எடுத்துரை.

அடியவர் 4:- எல்லாமே நாம் பிறந்ததில் இருந்து இந்த நிமிடம் வரை அவர் கொடுத்ததுதான். நாம எதுவும் சம்பாதிக்கவில்லை.  எல்லாம் அவர் கொடுத்த பிச்சைதான். ( அடியவர்கள்,  இந்த அடியவர் மேல் உரைத்த வாக்கை நன்கு உள் வாங்கவும். பல பொருள் விளங்கும் உங்களுக்கு.)

குருநாதர்:- அப்பனே என்னிடத்தில் கேட்பதை தவிர நீ என்ன கேள்விகள் கேட்கிறாய் என்பதைக் கூட அனைவருக்கும் அப்படியே நின்று கேள்?

அடியவர் 4:- நீ என்ன காரணத்துக்காக வந்து இருக்கின்றீர்கள் என்று எனக்குத் தெரியாது. ஆனால் (கருணைக்கடல் குருநாதர்) ஐயாவுக்குத் தெரியும். ஆனால் நீங்க என்ன நினைக்கின்றீர்களோ அதை உங்களிடம் இருந்து முதலில் ஆரம்பியுங்கள். எது கிடைத்தால் நல்லா இருக்குமோ, எது உங்களுக்கு நல்லா இருக்கும் என்று சந்தோஷப்படுகின்றீர்களோ அதை உங்ககிட்டதான் இருந்து முதலில் ஆரம்பியுங்கள்.

குருநாதர்:- அப்பனே நீ எதைக் கேட்கவந்தாய் அப்பனே? (அதை) அனைவரிடத்திலும் கேள்?

அடியவர் 4:- நான் , இறை நம்பிக்கை மட்டும்தான் வேற எதுவும் இல்ல. அவர் ஏதாவது செய்வார் என்ற ஒரே நம்பிக்கையில்தான் இங்கு வந்திருக்கின்றேன். வந்த கொண்டு இருக்கின்றேன். இந்த ஒரு நம்பிக்கையில்தான் வந்திருக்கின்றேன்.

குருநாதர்:- அப்பனே இதை அனைவருமே உணரவேண்டும். பொருள் வேண்டும், இன்னும் சிலர் திருமணங்கள் வேண்டும். இன்னும் சிலர் எதை எதையோ.. ஆனாலும் இறைவன் எப்பொழுது எதைக் கொடுக்கிறானோ,  அதை யார் ஒருவன் சரியாக பெற்றுக் கொள்கிறானோ, அவன்தனக்கு எதை என்று அறியாமல் அதனால் முதலில் இறை அருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ் இறை அருளை எப்படிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் சொல்கின்றேன். அப்பனே இறை அருளை பெறுவது எப்படி என்று அனைவருக்கும் உணர்த்தி வை?

அடியவர் 4:- நாம் இந்த பூமியில் வந்து இருக்கின்றோம் என்பதை முதலில் யோசியுங்கள். எப்படி இருந்தார்கள், எப்படி இருந்து இருப்போம், எப்படி இருக்கப் போகின்றோம் என்பதையும் யோசியுங்கள். எது மாதிரி இருக்கக்கூடாது என்றும் யோசியுங்கள். நீங்கள் செய்த அனைத்தையும் திரும்பி பார்த்து  யோசியுங்கள்.  எல்லாமே சரியாக இருக்கும்.

குருநாதர்:- அப்பனே இதனால் இனிமேலும் நிச்சயம் ஈசனை நினைத்து அப்பனே நல்விதமாக ஏதாவது சில செய்திகளை அனைவருக்கும் கூறு?

அடியவர் 4:-  முதலில் நம்மை நாம் உணரவேண்டும். நாம் யார்?  நம் உயிர் என்ன? இந்த பூமி, பிரபஞ்சம் என்ன? என்பதை உணருங்கள். எல்லா உயிர்களிடத்தும் அன்பைச் செலுத்துங்கள். எல்லா உயிர்களிடத்தும் தெய்வ நம்பிக்கையுடன் அன்பைச் செலுத்துங்கள்.

அந்த தெய்வமே (ஈசனே) உங்கள் மூலமாக எல்லோரையும் பார்க்கலாம்.

குருநாதர் :- ( ஒரு பொது இறைவன் பெயர் சொல்லி அழைத்தார்கள்) _____ நாமத்தைக் கொண்டவன் எழுந்து நில்.

( அந்த பெயர் கொண்ட அடியவர்களும் எழுந்து நின்றார்கள் )

குருநாதர்:- அப்படியே முதலில் சிறுவனைப் பார்த்துக் கேள்.  உந்தனுக்கு என்ன தேவை என்று?

அடியவர் 5:- பரிபூரண ( குருநாதர் ) ஐயாவின் அருள்

அடியவர் 4:- (கருணைக்கடல் பதில் உரைக்கும் முன்னே இந்த அடியவர் உரைத்தது ) அது கிடைத்துவிட்டது.

குருநாதர்:- அப்பனே சொல்லிவிட்டானே!!!

அடியவர் 4:- உங்களுக்கு வேறு என்ன வேண்டும்?

அடியவர் 5:- அடுத்தது நிறைய பேருக்கு சேவை செய்ய வேண்டும்

அடியவர் 4:- ஆரம்பித்து விடுங்கள். இப்பவே.

குருநாதர்:- அப்பனே, சொல்லிவிட்டான் அப்பனே.

அடியவர் 5:- எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும்.

அடியவர் 4:- நல் வாழ்க்கை கிடைத்து உள்ளது. நல் வாழ்க்கை கிடைத்ததனால் இங்கு நாடி கேட்க வந்து உள்ளீர்கள்.

குருநாதர்:- அப்பனே இதனால்தான் அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு பக்குவங்கள் பிறந்தால் தான் அப்பனே ஒருவனால் (அடியவர் 4) இப்பொழுது இப்படி நிச்சயம் பின் செய்திகளைப் பரப்ப முடியும். அதனால் இவன் என்ன கஷ்டங்கள் பட்டு இருந்தால் இப்படிச் சொல்லுவான் என்று  நீங்களே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே.

நாடி அருளாளர் :- ( கருணைக்கடல் ஏன் இந்த அடியவரை #4 தேர்வு செய்து இங்கு பேச வைத்தார்கள் என்று அனைவருக்கும் எடுத்து உரைத்தார்கள். அதாவது கஷ்டங்கள் பட்டு பட்டு பட்டு அடிபட்டு நொந்து போய் வந்ததால், அவர் மாறி பக்குவப்பட்டு இருக்கிறார். அதனால் மட்டுமே இது போல் இங்கு வந்து சொல்ல முடியும் என்று உரைத்தார்கள்)

(ஒரு சிலர் ஒரு தெய்வத்தைத் தொடர்ந்து வழிபட்டுக் கொண்டே வருவார்கள். இறை சில சோதனை வைக்கும். அப்போது அவர்கள் வேறு சில தெய்வ வழிபாட்டிற்கு மாறி விடுவர். அனைத்து தெய்வங்களை வணங்குவது தவறில்லை. ஏனெனில் ஒருவனே தெய்வம். ஆனால் அருள் தரக்கூடிய வழிபாட்டை தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதற்கு பின்வரும் வாக்கு ஒரு  உதாரணம்.)

குருநாதர்:- அப்பனே அதனால் கேள்?

அடியவர் 5:- போன மாதம் பைரவரை சாமி கும்பிட்டு வந்தேன்.

குருநாதர்:- அப்பனே நிச்சயமாய் ஒரு வேலைக்கு செல்கிறாய் அப்பனே. மூன்று மாதங்கள் வேலை செய்கின்றாய் அப்பனே. சம்பளமும் கொடுக்கிறார்கள் அப்பனே. நின்று விடுகின்றாய் அப்பனே. என்ன கிடைக்கும்?

அடியவர் 4:- வேலை செய்யும் முறை தான். நிலையான எண்ணம் உங்களிடம் இல்லை. உழைக்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கின்றது. இதற்கு அடுத்து அடுத்து உடனே போகின்றீர்கள். முதலில் எந்த இடத்தில் இருக்கின்றீர்களோ அதில் உறுதியாக இருங்கள்.

அடியவர் 5:- சரி ஐயா.

நாடி அருளாளர்:- இந்த (பைரவர்) தீபத்தை நீங்கள் தொடர்ந்து ஏற்றிக்கொண்டே வர வேண்டும். குருநாதர் என்ன அறிவுரை கூறினார்கள்?

அடியவர் 5:- மூன்று மாதம் தொடர்ந்து பைரவர் சாமி கும்பிடச் சொன்னார்கள். இரண்டு மாதம் நிறைவு அடைந்தது.இப்போது விட்டு விட்டு இடையில் கொஞ்சம் விட்டு வேற பக்கம் பெருமாள் கோயில் போய்விட்டு வந்திருக்கின்றேன்.

நாடி அருளாளர்:- ஐயா இப்பொழுது உங்களுக்கு புரிந்ததா? அதனால் தான் சொல்கின்றார் குருநாதர்.

( மேலும் தெளிவாக எடுத்து உரைத்து விளக்கினார்கள் )

குருநாதர்:- அப்பனே இன்னும் கேள்.

அடியவர் 5:- ___________

குருநாதர்:- அப்பனே அனைத்தும் இருக்குதப்பா. நிச்சயம் தொடர்ந்து நிச்சயம் பைரவனை வணங்கிக் கொண்டே வந்தால் அப்பனே வெற்றிகள்.  அப்பனே அதனால் தான் புரியும்படி யான் சொன்னேன்.

குருநாதர்:- அப்பனே ஆனாலும் மனிதனின் மனது அப்படியே மாறிவிடும். மாறி விடாதே அப்பனே.  அவன் நாமத்தை பின் என்னவென்று நிச்சயம் கேள்?

அடியவர் 5:-உங்கள் பெயர்?

அடியவர் 4:- (தனது பெயர் உரைத்தார் - பெருமாள் நாமம் )

குருநாதர் :- அப்பனே யாரென்று தெரிகிறதா ?

அடியவர் 5:- பெருமாள்.

குருநாதர்:- அப்பனே நிச்சயம் வணங்கியதற்கும் , இவன் (பெருமாள்) நாமம் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்று கூறு?

அடியவர் 4:- நீங்க வணங்கி இருக்கின்றீர்கள் இதுவரைக்கும். நீங்க வணங்கினதற்கும் , என் பெயருக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கின்றார் குருநாதர்?

அடியவர் 5:- ( மனதில் நல் சிந்தனை ஓட்டம் )

குருநாதர்:- அப்பனே அதுபோலத்தான் அப்பனே உன் வாயால் பெருமாள் என்று சொன்னாய்  புரிகின்றதா?

அடியவர் 5:- ஆமாம்

குருநாதர்:-  ஆனாலும் அப்படியே இவனுடைய நாமம் என்ன சொன்னான்? 

அடியவர் 5:- ( அடியவரின் பெருமாள் பெயர் உரைத்தார் )

குருநாதர்:- அப்பனே வித்தியாசம் என்ன?

அடியவர் 4:- எல்லாம் ஒன்றுதான்.

அடியவர் 6:- நீங்கள் பெருமாள் ( பைரவர் கோவில் போகாமல் பெருமாள் கோவிலுக்குச் சென்று ) வணங்கினீர்கள். இங்கு பெருமாள் ( பெருமாள் நாமம் கொண்ட அடியவர் #4  ) பதில் சொல்கின்றார்.

குருநாதர்:- அப்பனே அதனால்தான் எண்ணம் போல் வாழ்க்கை என்று சொல்லிவிட்டார்கள் அப்பனே. நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகுவாய் என்று கூட ஏற்கனவே முன்னோர்கள் உரைத்து விட்டார்கள் அப்பனே.

அதனால் தான் அப்பனே ஏதாவது மயக்கத்தில் சென்றால் அது போலவே ஆகிவிடுவாய்.

அப்பனே எதாவது தொழிலுக்குச் சென்றாலும் அதன் மூலமே பல கஷ்டங்கள் பட்டு உயர்ந்து விடலாம்.

அப்பனே ஒருவன் எது ஆக நினைக்கின்றானோ அப்பனே அனைவருக்குமே ஒன்று சொல்கின்றேன்.

அப்பனே இறைவன் யார் யாருக்கு எதைத் தர வேண்டுமென்று நிச்சயம் யோசித்துக் கொண்டே இருக்கின்றான். அதனால் நீங்கள் மனதில் என்ன எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களோ அதையே கொடுக்கிறான் அப்பனே. இதில் யாருக்காவது சந்தேகம் என்றால் நிச்சயம் எழுந்து நில்.  கேளுங்கள்.

அடியவர் 4:- மனம் போல் மாங்கல்யம் என்று சொல்கின்றார்கள். உங்கள் எண்ணம்தான் செயலாக வருகின்றது என்று குருநாதர் சொல்கின்றார்கள். உங்கள் எண்ணங்களை நல்லபடியாக வைத்துக்கொண்டு நல்லது மட்டும் நினையுங்கள்.  உங்களுக்கு எல்லாமே நல்லது நடக்கும். தேவை இல்லாதது உங்கள் தலையில் ( மனதில் ) ஏன் வைத்துக் கொள்கின்றீர்கள் என்று கேட்கின்றார் குருநாதர்.

அடியவர் 7:-  நிறைய தர்ம காரியங்கள் செய்ய வேண்டும். எல்லோருக்கும் எல்லாமே நல்லது நடக்கனும்.

குருநாதர்:- அப்பனே இப்படி இருந்தால் எப்படியப்பா திருமணம் நடக்கும்?

அடியவர்கள் :- ( சிரிப்பு அலை )

அடியவர் 7:- சாமி, தர்மம் செய்தால் தான் ஒவ்வொன்றாக நல்லது நடக்கும் என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அதனால்தான் இப்படி நினைத்தேன்.

குருநாதர்:- அப்பனே இதன் முன்னே என்ன செய்தாய்?

அடியவர் 7:- சாமி, இதற்கு முன்னர் தினமும் சாப்பிடும்போது , ஆட்டுக்கு கீரை பின் காக்காய்குச் சாப்பாடு வைப்பேன்.

குருநாதர்:- பின்பு என்ன செய்தாய்?

அடியவர் 7:- நீங்க சொல்வதைச் செய்கின்றேன் சாமி.

குருநாதர்:- அப்பனே அதனால் தான் அப்பனே யான் சொல்லியதைச் செய்து கொண்டே இருக்கின்றாய். அதனால் அப்பனே சொல்,  தைரியமாக.

அடியவர் 7:- பழனிக்கு போகச்சொன்னீர்கள். போய் வந்தேன்.

குருநாதர்:- அப்பனே உந்தனை பால் அருந்து என்று யான் சொன்னால் நீ அருந்திவிடுகின்றாய். ஆனால் எதற்காக அருந்துகின்றாய் என்று உனக்குத் தெரிகிறதா இல்லையா?

அடியவர் 7:- அந்த சக்தி நீங்கதான் சாமி கொடுக்கவேண்டும்.

குருநாதர்:- அப்பனே இதற்கு நிச்சயம் பதிலளி?

அடியவர் 7:- சாமி, ( பால் குடித்தால் ) உடம்பு நல்லா இருக்கும். பழனி முருகனை வணங்கிவந்ததால் நம்மை தர்மம் செய்ய வைப்பார். ஊக்கமும் இருக்கும்.

( இதனிடையில் மயில் ஒன்று கூவியது )

குருநாதர்:- அப்பனே (முருகன்) ஆசிகள் கொடுத்து விட்டான். அப்படியே நீதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதனால் தான் அப்பனே  இப்பொழுது என்ன ஏது என்று கூற எதிர்பார்த்தாய்.

நாடி அருளாளர்:- ( மயில் கூவியதை எடுத்துக் கூறினார்கள் இந்த அடியவருக்கு. இதுவே கந்த வடிவேலன் ஆசி )

அடியவர் 7:- அதை நீங்கதான் உணர்த்தவேண்டும் சாமி…

குருநாதர்:- அப்பனே எப்படி எப்படியோ மனது செல்கின்றது அப்பா உனது. அதனால் மனதைக் கட்டுப்படுத்தி  அப்பனே தியானங்கள் செய் முதலில்.  அப்படியே அப்பொழுதுதான் அப்படியே உண்மை நிலை என்ன வென்று தெரியும் அப்பனே. ( சில தனிப்பட்ட அதி சூட்சும வாக்கு ) அப்பனே அதனால் ( அதிகாலையில் ) தியானங்கள் செய். பல உண்மைகள் புரியும் அப்பனே. நிச்சயம் பொருள்கள் சேரும்.

அடியவர் 7:- தியானம் செய்ய நீங்கள் ஆசிர்வாதம் செய்ய வேண்டும்.

குருநாதர்:- அப்பனே இப்போது தான் சொன்னேன் அப்பனே. முருகனே உனக்கு ஆசிர்வாதங்கள் கொடுத்து விட்டான்.  அப்பனே உன்னால் செய்ய முடியவில்லையே அப்பனே. 

( இனிமேல் வரும் வாக்குகள் நம் அனைவருக்கும் மகத்தான தான தர்ம பாடங்கள். இதனை வாசிக்கும் அடியவர்கள் மிகவும் கொடுத்து வைத்த புண்ணியவான்கள், பாக்கியசாலிகள். இந்த அண்டங்களின் ஒட்டு மொத்த தர்மமே குருநாதர் அகத்தீசர். அவ் தர்மமே இப்புவியில் இறங்கி தர்மத்தை நமக்காக பாடம் எடுத்து உரைத்த அதிசயம் இந்த வாக்குகள். வாருங்கள் மகத்தான வாக்கின் உள் செல்வோம்.)

குருநாதர்:- அப்பனே தர்மம் என்பது என்ன?  தானம் என்பது என்ன?

அடியவர் 7:- கேட்டுக் கொடுத்தால் தர்மம். கேட்பதற்கு முன்னால் கொடுத்தால் தானம்.

( இப்போது குருநாதர் தர்மத்தை குறித்த அனுபவம் உணரும் மிக எளிய பாடத்தை அனைவருக்கும் எடுக்க ஆரம்பித்தார்கள். இங்கு வரும் அடியவர் 7 , நீங்கள் என்று வைத்துக்கொண்டு வாக்கினை நன்கு உள் வாங்குங்கள். மகத்தான புரிதல் உண்டு.)

குருநாதர்:- அப்பனே உன் கையில் என்ன இருக்கிறது?

அடியவர் 7:- ( அடியவர் கையில் cell phone இருந்தது)

குருநாதர்:- அப்பனே அதை மற்றவனிடத்தில் கொடுத்துவிடு அப்பனே.

அடியவர் 7:- ( பக்கத்தில் உள்ளவரிடம் கொடுத்து விட்டார் )

குருநாதர்:- இப்பொழுது  அவன் தனக்கே சொந்தமாக்கி விடலாமா என்ன?

அடியவர்கள்:- ( சிரிப்பு அலை )

அடியவர் 7:- phone தானே..

குருநாதர்:- அப்பனே ஆனால் மனதில் குறு குறு என்று ( தவிக்கும் ) இருக்கும் என்பேன் அப்பனே. 

அடியவர்கள்:- ( பலத்த சிரிப்பு அலை )

குருநாதர்:- இதுதான் அப்பா,  பல பேர்கள் கொடுக்கிறார்கள் அப்பனே. ஆனால் மனதில் சரியில்லாமல் ( சந்தோசம் இல்லாமல் ) கொடுக்கிறார்கள் அப்பனே. இதனால் இப்படிச் செய்தால் அப்படியே தர்மம் ஆகாது அப்பா.

நாடி அருளாளர் :- ( அகத்தியர் மைந்தன், அருமையான முழு விளக்கம் அளித்தார்கள் அனைவருக்கும். அதாவது ஒரு பொருளை / உதவியைச் செய்துவிட்டால் மகிழ்ச்சி அடைந்து அதனை நாம் உடனே மறந்துவிடவேண்டும்.  )

குருநாதர்:- அப்பனே இப்படித்தான் பின் செய்து கொண்டிருக்கின்றார்கள் எண்ணி எண்ணி. அதனால் எப்படியப்பா தர்மக் கணக்கில் சேரும். தரித்திரங்கள் தான் மிச்சம்.

நாடி அருளாளர் :- என்ன உதவி செய்தாலும் , எதையும் எதிர் பார்க்காமல் செய்ய வேண்டும்.

குருநாதர்:- அப்பனே வாங்கிக்கொள் அப்பனே.

அடியவர் 7:- ( cell phone அதனைக் கொடுத்தவரிடம் இருந்து மீண்டும் வாங்கிக்கொண்டார் )

அடியவர்கள் :- ( பலத்த சிரிப்பு )

குருநாதர்:- அப்பனே மீண்டும் கர்மா இப்படித்தான் வரும் அப்பா.

அடியவர் 6:-  :- cell phone வந்த மாதிரி கர்மா வரும்.

நாடி அருளாளர்:-  செய்ததை நினைத்தாலே கர்மா வரும்.

( கருணைக்கடல் அடுத்து தானம் குறித்த பாடம் எடுக்க ஆரம்பித்தார்கள்)

குருநாதர்:- அப்பனே தானம் என்றால் என்ன?

அடியவர் 7:- எதையும் எதிர் பார்க்காமல் கொடுப்பது தானம்.

குருநாதர்:- இல்லை அப்பா. யாராவது ஒருத்தரை சொல்லச் சொல் அப்பனே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday 29 November 2023

சித்தன் அருள் - 1521 - அன்புடன் அகத்தியர் - மதுரை மீனாட்சி!







வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

நம் அனைவருக்கும் அன்னை மீனாட்சி யின் வரலாறு தெரிந்திருக்கும்!!!!

பாண்டிய மன்னன் மலையத்துவஜன் காஞ்சனா மாலை இருவரும் புத்திர பாக்கியம் இல்லாததனால் வேள்வி செய்து இறைவனை வழிபட்டு யாக வேள்வியில் சிறுமியாக வந்துதித்து... தடாதகை பிராட்டியார் எனும் நாமம் கொண்டு பாண்டிய நாட்டில் வளர்ந்து உலகமெங்கும் திக் விஜயம் செய்து கைலாயத்தில் எம்பெருமான் ஈசனை எதிர்கொண்டு ஈசனால் ஆட்கொள்ளப்பட்டு திருமணத்தில் இணைந்து மதுரை மா பேரரசியாக ஆட்சி புரிந்து வரும் வரலாற்றை நாம் அனைவரும் அறிவோம்!!!!

தடாதகை பிராட்டியார்  எனும் திருநாமம் உள்ள அம்மனுக்கு மரகதவல்லி !! 
அங்கையர் கண்ணி!! 
ராஜ மாதங்கி!! 
சியாமளா!! 
கோமளவல்லி!! 
பாண்டிய ராஜகுமாரி!! மாணிக்கவல்லி!! மரகதவல்லி!!
 சுந்தரவல்லி!! கஸ்தூரி திலகாயை!!
 நாத பிரியாயை!! 
ரதி பிரியாயை!! 
காமகலாயை!! சாம்பவ்யை !! 
நித்திய கல்யாண்யை !!
நித்திய புஷ்பாயை புவனேஸ்வரியை!! ஸ்யாமளாம்பிகையை!!!
மீனலோசனி!!! 
மங்கையர்க்கரசி!!
கடம்பவன ராணி!!
கூடல் மாநகர் நாச்சியார்!!
குமரித்துறைவி!!!
மரகதமேனியாள்!!

ஆலவாய் அரசி........ 

என பல பெயர்கள் இருந்தாலும் மீனாக்ஷி எனும் பெயரில் தான் அன்னை அறியப்படுகின்றாள்!!!!

இத்தனை பெயர்கள் இருந்தாலும் மீனாட்சி என பெயர் நிலைத்து நிற்பதற்கு காரணம் இந்த பெயரை அன்னைக்கு சூட்டியது வேறு யாரும் அல்ல!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் தான் அன்னைக்கு இந்த மீனாட்சி எனும் பெயரை சூட்டியவர்.

தடாதகை பிராட்டியார் பட்டாபிஷேகத்தின் போது !!!

மீன் எப்படி உறங்காமல் கண்களை திறந்து கொண்டே தன் குஞ்சுகளை காப்பாற்றுகின்றதோ அதேபோல இமைப்பொழுதும் அறம் வழுவாது தம் குடிகளை தம் மக்களை தம் குழந்தைகளை அன்னை காப்பாற்றி ஆட்சி புரிவதால் மீனாட்சி எனும் பெயரை நம் குருநாதர் அகத்தியர் பெருமான் சூட்டினார்.

இந்த மீனாட்சி அம்மன் பெயர் சூட்டும் நிகழ்வினை குறித்து குருநாதரிடம் கேட்பதற்கு முன் இதனைக் குறித்து நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

குருநாதரின் பால் பேரன்பு கொண்ட ஒரு அகத்தியர் அடியவர்!!!!! குருநாதருடைய திருவருளால் அவருடைய வீட்டிலும் வாழ்க்கையிலும் மீனாட்சி அம்மனின் அருள் பரிபூரணமாக கிடைத்துக் கொண்டு இருக்கின்றது.

இதை சுவடி மூலமாக பல முறை அந்த அடியவருக்கு குருநாதர் எடுத்து கூறி இருக்கின்றார் குருநாதர் உரைத்தபடி மீனாட்சி அம்மனின் சில சூட்சுமங்கள் அடியவருக்கு மேலும் மேலும் உணர்த்தி வைக்கப்பட மீனாட்சி அம்மனை மனதார அந்த அடியவர் வணங்கிக் கொண்டு வந்தார். குருநாதருடைய திருவருளால் அன்னையின் கோயில்களுக்கும் சென்று வழிபடும் பாக்கியமும் கிடைத்தது.

இப்படி இருக்க மீனாட்சி அம்மனை குறித்து மேலும் மேலும் அறிந்து கொள்வதற்காக அவர் அறிய முற்பட்டபோது மீனாட்சி அம்மனுக்கு மீனாட்சி என பெயர் சூட்டியது அகத்திய பெருமான். என அறிந்தார். 

உடனடியாக இந்த நிகழ்வினை குறித்து குருநாதரிடம் கேட்பதற்கு மிகுந்த ஆவலோடு இருந்தார் ஆனால் ஒரு சிறிய தயக்கம்!!!

ஏனென்றால் நம் குருநாதர் எந்த ? எந்த ? வாக்கினை எந்தெந்த ? இடத்தில் வைத்து சொன்னால் அதற்கு பலன் மற்றும் மதிப்பு என்பதை குருநாதரே கூறியிருக்கின்றார். அதனால் இந்தக் கேள்வியை சரியான இடத்தில் கேட்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்க!!!

அந்த சமயத்தில் அகத்தியர் மைந்தன் நம் குருநாதர் அகத்தியரின் ஜீவ நாடியை ஓதும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா திருச்செந்தூர் ஸ்தலயாத்திரையை குருநாதர் உத்தரவின்படி முடித்துக் கொண்டு வந்து கொண்டிருந்தார்.

ஏற்கனவே திரு பரமசிவம் ஐயா அவர்கள் திருச்செந்தூர் முருகன் தரிசனத்திற்காக சென்றிருந்த போது அங்கு குருநாதர் உத்தரவின் பேரில் அங்கு வந்திருந்த திரு ஜானகிராமன் ஐயா அவர்களை சந்தித்து குருநாதரின்  வாக்குகளையும் பெற்று...குருநாதர் இல்லத்திற்கு வர வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார்!!!!

ஒரு வாரம் கழித்து.... அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களுக்கு குருநாதர் அகத்திய பெருமான். அன்பு மகனே ராமா!!!!!!                            

நீ மதுரை செல்க!!!!! மைந்தன் பரமன் வீட்டிற்கு சுவடியை கொண்டு செல்க!!! எனும் உத்தரவு கொடுத்தார்!!!

அதன்படியே திரு ஜானகிராமன் ஐயாவும் மதுரை கிளம்பினார்!!!

மதுரை சென்று அன்னையை தரிசனம் செய்துவிட்டு திரு பரமசிவம் ஐயா வீட்டில் சுவடி பூஜையில் வைக்கப்பட!!!!

அந்த சமயத்தில் இந்த அடியவரும் திரு பரமசிவம் ஐயாவை தொடர்பு கொண்டு ஐயா இது போன்று ஒரு தெய்வீக சம்பவம் உள்ளது!!!

இதனைக் குறித்து கேட்பதற்கு சரியான இடம் மதுரை தான்!!!! அன்னை ஆட்சி புரியும் அந்த மண்ணில் இந்த கேள்வியை குருநாதரிடம் கேட்கும் பொழுது அதற்கு சரியான பதில் கூறுவார் என்று இருவரும் கலந்து பேசி குருநாதர் இடம் கேட்பதற்கு முடிவானது!!!

பரமனே !!!!  மைந்தனே!!!! என குருநாதரால் அன்போடு அழைக்கப்படும் திரு பரமசிவம் ஐயா அவர்கள் வீட்டில் வைத்து அவரும் அவருடைய துணைவியார் திருமதி மீனாட்சி பரமசிவம் மற்றும் அடியவர்கள் முன்னிலையில் குருநாதரிடம் இந்த சம்பவத்தினை குறித்து கேட்க!!!!!

அப்பொழுது குருநாதர் தன் திருவாய் மலர்ந்து  கணீர் !!!!! என அந்த சம்பவத்தை பற்றி கூறினார்!!!!

குருவே சரணம்!!!! 

தடாதகை பிராட்டியாக  இருந்த  அன்னை மதுரை அரசியாக பட்டாபிஷேகம் செய்யப்பட்ட போது

நீங்கள் தான் அகத்தியப்பெருமான் தான் மீனாட்சி அம்மன் என்று பெயர் சூட்டினார்.என்று நாங்கள் அறிந்தோம்!!! அந்த விழாவை பற்றிய சம்பவங்களை பற்றி அறிய வேண்டுகின்றோம். 

குருநாதர் அகத்திய பெருமான் : அம்மையே !!! விழா எப்பொழுது தெரியுமா?

பெண் அடியவர்: தெரியாதுங்க ஐயா.

குருநாதர் அகத்திய பெருமான் -

எதை என்றும் அறிய அறிய அம்மையே எவை என்று புரிய புரிய பின் எவை என்று கூட.......... 

எதை என்று அறிய அறிய 

அம்மையே வரும்பொழுது எதை என்று புரியாமலும் கூட  உன் அதாவது கணவனை காப்பாற்றி!!! எதை என்று அறிய அறிய கரை சேர்த்தாளே மீனாட்சி!!!!

எதை என்று அறிய அறிய  அதற்கும்!!!   எதை என்று கூட , காமாட்சி எதை என்று கூட, விசாலாட்சி என்றெல்லாம் யான் தான் பெயரே வைத்தவன்.!!!

ஆனால் நிச்சயம் பின் இவந்தனை காப்பாற்றி இப்பிறவியில் பின் வந்து இப்படி எதை என்று அறிய அறிய பின் நிச்சயம் அந்நாள் வரும். இங்கே வருவாள்.!!! (அன்னை மீனாட்சி) 

அப்பொழுது சொல்கிறேன்.அம்மையே!! அந்நாளை பற்றி பொறுத்திரு.!!!!

மீனாட்சி அம்மனுக்கு  மட்டுமல்ல காமாட்சி அம்மனுக்கும் விசாலாட்சி அம்மனுக்கும் .... பெயர் சூட்டியது யானே என்று குருநாதர் கூறியதும்

கூடியிருந்த அடியவர்கள் அனைவருக்கும் பரவசம்!!! அன்னை மீனாட்சி தாய் திருவடிகளே போற்றி!! அகத்தியப்பன் திருவடிகளே போற்றி !! என மனதிற்குள்ளே வணங்கிக் கொண்டனர்.

அன்னை மதுரை மீனாட்சிக்கு மட்டுமல்ல அன்னை காஞ்சி காமாட்சி அன்னை காசி விசாலாட்சிக்கும் பெயரை சூட்டியவர் நம் குருநாதர் அகத்தியர் பெருமான் என்பதை அவரே தன் வாயிலாக கூறும் பொழுது எப்படிப்பட்ட பரவசம் தோன்றுகின்றது.

இதில் அடியவர்களுக்கு சில சந்தேகம் எழலாம்!!!!

அதாவது உன் கணவனை காப்பாற்றி கரை சேர்த்தாளே.... மீனாட்சி என்று குருநாதர் குறிப்பிட்டார் அல்லவா!!!

மீனாட்சி அம்மனால் ஒரு பிறவியில் காப்பாற்றப்பட்டு வளர்க்கப்பட்ட அடியவர் தான் மதுரை திரு பரமசிவம் ஐயா அவர்கள்.

இவரைப் பற்றி நீங்கள் அறிந்திருக்கலாம் மதுரையில் அகத்தியர் இறையருள் மன்றத்தின் மூலமாக பல அன்ன சேவைகளை தொழு நோயாளிகள் பார்வையற்றோர் காப்பகங்கள் பல முதியோர் இல்லங்களுக்கு ஒரு குழுவாக இருந்து இணைத்துக் கொண்டு சேவைகளை செய்து வருபவர். மதுரை இடவ மலை எனப்படும் பசுமலையில் ஸ்ரீ அகஸ்தியர் லோப முத்ரா ஆலயத்திலும் அன்ன சேவையை முன் நின்று நடத்திக் கொண்டு வருபவர்.

இவருடன் குருநாதர் பேருந்தில் பயணம் செய்ததும் பெருமாள் ஏழுமலையான் வந்து இவர் கையால் உணவை வாங்கி கொண்டு சென்றதும் இன்னும் பல சித்தர்கள் ஆசிகள் கிடைத்ததையும் நமது சித்தன் அருள் வலைத்தளத்தில்

அன்புடன் அகத்தியர் 1032
அன்புடன்  அகத்தியர் 1078
அன்புடன்  அகத்தியர் 1080
அன்புடன்  அகத்தியர் 1081
அன்புடன்  அகத்தியர் 1447 

பதிவுகளில் வெளிவந்துள்ளது!!!!! 

குருநாதரிடம் கேள்வியை கேட்ட பெண் பக்தை மகனே பரமா!!!! என்று குருநாதர் அகத்திய பெருமானால் அன்போடு அழைக்கப்படும் பரமசிவம் ஐயா அவர்களின் மனைவி ஆவார்!!!! இவரின் பெயரும் மீனாட்சி.

ஒரு பிறவியில் மீனாட்சி தாயால் காப்பாற்றப்பட்ட நிகழ்வினை திருச்செந்தூர் செந்தில் கோட்டத்தில் வைத்து திரு பரமசிவம் ஐயாவிற்கு நாடி வாசித்த பொழுது ஒரு முன்னுரையாக கூறியிருந்தார் அந்த ஜீவநாடி குருநாதர் வாக்கு

அப்பனே ஒவ்வொரு இடத்திலும் கூட சித்தர்கள் உன்னை பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள் அப்பனே !!

எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே

அண்ணாமலையிலும் கூட ஒரு சித்தன் அழகாக உன்னிடத்தில் பேசிவிட்டு சென்று விட்டான் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே ஏராளம் அப்பனே !!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அதனால் அப்பனே உன் ரகசியங்கள் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே!!! 

வரக்கூடிய காலங்களில் கூட யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அதனால் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை என்பேன் அப்பனே!!! 

எதற்காக பிறந்தாய் ?? அப்பனே எவை என்றும் அறிய அறிய ஒரு ரகசியத்தை மட்டும் இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே

மதுரை தன்னில் அப்பனே எவை என்று கூட.... அப்பனே பல பிறவிகள்  எடுத்தாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து!!! 

ஆனாலும் அப்பனே பின் மாற்று வழியாக வந்து அதாவது அப்பனே உன் தாய் தந்தையர் மீனாட்சி தேவியின் அருளைப் பெற்றவர்கள்!!!

ஆனாலும் அறிந்தும் கூட பின் அவர்களுக்கும் கூட குழந்தை பாக்கியங்களே இல்லை!!! குழந்தை வரமே இல்லை!!! வரங்கள் இல்லையப்பா!!!

ஆனாலும் மீனாட்சி எவை என்றும் அறிந்தும் கூட நிச்சயம் கொடுக்க வேண்டும் என்று எண்ணி நிச்சயம் உந்தனை கொடுக்க!!!!

(மீனாட்சி அம்மன் திருவருளால் புத்திர பாக்கியம்)

ஆனாலும் அவர்கள் எதை என்றும் அறிய அறிய இதனால் பெற்றெடுத்த தாய் உடனடியாக மாண்டு விட !!!!! அவ் அதிர்ச்சியில் பின்.... உன் தந்தையும் மாண்டு விட்டான்!!!!

அதாவது தாய் தந்தையர் மாண்டு போய்விட்டனர்!!!

ஆனாலும் கடைசியில் நீ ஆனாலும் இப்படி இருக்க எதை என்றும் அறிய அறிய உந்தனுக்கும் கூட அப்பனே

( இந்த பிறவியில் பரமசிவம் ஐயா தொழு நோயாளிகளுக்கு உணவு உடை என சேவை செய்து வருவதை....... குருநாதர் குறிப்பிடுகின்றார்....... முற்பிறவியில் ஒரு தொழு நோயாளியாக இருந்து அதன் வலியை உணர்ந்ததால் தான் அன்னை மீனாட்சி அருளால் அப்பன் அகத்தியரின் திருவருளால் இப்பிறவியிலும் தொழு நோயாளிகளுக்கு சேவை செய்யும் பாக்கியம் இவருக்கு கிடைத்துள்ளது)

இப்பொழுது கூட நீ உதவிகள் செய்து கொண்டிருக்கின்றாயே தொழு நோயும் அப்பனே!!!

( அந்தப் பிறவியில் குழந்தையாக இருந்த இவருக்கு தொழுநோய்)

ஆனால் உன்னை யாருமே தொட வரவில்லையப்பா!!! 

ஆனாலும் அப்பனே சிறிது சிறிதாக அப்பனே தாழ்ந்து தரையோடு தரையாக உரசி தவழ்ந்து சென்று சென்று அப்பனே உட்கொண்டு உட்கொண்டு உணவு கூட!!!

(தொழு நோயின் கடுமையினால் நடக்க முடியாமல் படுத்துக்கொண்டே தவழ்ந்து தவழ்ந்து சென்று உணவினை கையேந்தி வாங்கி உட்கொண்டு)

இதனால் அப்பனே பின் யாருமே உன்னை சீண்டவில்லை!!!!

( யாராலும் கவனிக்கப்படாமல் ஒதுக்கப்பட்டு)

ஆனாலும் மனிதர்கள் எவை என்று கூட மீனாட்சி தேவியை பார்ப்பதற்கு உள்ளே செல்வார்கள்!!!

ஆனாலும் பின் எதை என்று கூட இப்படி ஒருவன் அதாவது கஷ்டப்பட்டு சிறு குழந்தை இவ்வாறு தவழ்ந்து கொண்டிருக்கின்றதே!!!!!!!!!.......... என்று எண்ணாமலும்!!!! மனிதர்கள்!!!!

பின் இப்படி எல்லாம் இறைவனை வணங்குவது பொய்களப்பா!!!!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் பின் மனம் கருகினாள்!!! அதாவது மீனாட்சி தேவியே!!!!

இப்படி எல்லாம் இவ்வுலகத்தில் மனிதர்கள் இருக்கின்றார்களே!!!!! சிறு குழந்தையிடம் கூட இரக்கம் இல்லாமல் இருக்கின்றார்களே!!!!

ஏதோ அவனவன் அவனவனுக்காகத்தான் சுயநலமாக வணங்கிக் கொண்டிருக்கின்றார்களே!!!  என்று பின் யோசித்து எவை என்றும் அறிந்தும் கூட உன்னை!!! எடுத்து அழுதிட்டு..இருந்த உன்னை அழுக்கில் இருந்து தூக்கி விட்டு........

நிச்சயம் இப்பொழுது எவை என்று கூட அவ் தண்ணீரில் தூக்கி எறிந்தாள்!!!! 

(தேவேந்திரனின் சாபத்தை நீக்கிய!!! நெற்றிக்கண் திறப்பினின் குற்றம் குற்றமே !!!! என்று ஈசனோடு வாதம் புரிந்த நக்கீரர் தனது வெப்பு நோய் தீர்க்க நீராடிய.... பொற்றாமரை குளத்தில் நீராடச்செய்து....‌ நோயை குணப்படுத்தினாள் தாய் மீனாட்சி) 

மீண்டும் அறிந்தும் கூட நீ நன்றாக ஆகிவிட்டாய்.

(தொழுநோய் எல்லாம் காணாமல் போய் மறைந்து விட்டது !!! சராசரி ஆரோக்கியத்தோடு நோய் நொடி இல்லாமல் மீண்டு வந்தார் அன்னையின் கருணையால்)

அதன் பின்

இதனால் மீனாட்சி தேவிக்கே சேவைகள் செய்து கொண்டிருந்தாய் அப்பனே!!!!

இதனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே இதன் ரகசியத்தை கூட யான் தொடர்கின்றேன் அப்பனே...மறு வாக்கில்!!! 

அப்பனே யான் சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே நிச்சயம் அப்பனே வாக்குகள் உண்டு என்று அப்பனே எதை என்றும் அறிய அறிய

அப்பனே என் அன்பிற்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே.... அதனால் அன்போடு அப்பனே வலம் வந்து கொண்டிருக்கின்றாய்...... அகத்தியா அகத்தியா என்று அப்பனே !!!!!

அப்பனே நலன்கள் கந்தனுடைய அனுகிரகங்கள் அப்பனே இன்றைக்கு பல கோடியப்பா!!!!!!

நலன்களாகவே அப்பனே உன் இல்லத்திற்கும் வந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் தெரிவிக்கின்றேன் அப்பனே!!!!!

உந்தனை பற்றியும் உன் மனைவியை பற்றியும்  நலமாகவே எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!

அதற்கு முன்பாக..... மீனாட்சி தேவியை உன் இல்லத்தாளை ஒரு முறை சென்று காணச் சொல்!!

(ஜீவநாடி சுவடி வீட்டிற்கு வருவதற்கு முன் மீனாட்சி அம்மன் தரிசனம் செய்ய சொல்லி குருநாதர் உத்தரவு கொடுத்தார்.

என்ன ஒரு குருநாதரின் சூட்சுமம்!!!!!!!!!

மீனாட்சி அம்மனை தரிசனம் செய்ய சொன்னதற்கும்!!!

இந்த கேள்வி அடியவர் மனதில் உதயமாகும் அதற்கு பதில் அங்கே உரைக்கப்படும்....... என்பதை முன்கூட்டியே சூசகமாக கூறியிருப்பதை கவனியுங்கள்...)

அப்பனே நலன்கள் நலன்கள் ஆசிகள்!!!!

இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அனைவருக்குமே சொல்கின்றேன் அப்பனே!!!

என மதுரை வருவதற்கு முன்பே திருச்செந்தூரில் வாக்குகள் நல்கியிருந்தார் நம் குருநாதர் அகத்திய பெருமான்.

இதனை குருநாதர் மீண்டும் மீனாட்சி அம்மன் பெயர் சூட்டும் நிகழ்வினை பற்றி கேட்ட பொழுது காப்பாற்றி கரை சேர்த்தவள் மீனாட்சி என்று குருநாதர் தன் வாக்குகளில் கூறினார்...

குருநாதருடைய ஒவ்வொரு சொல்லும் எவ்வளவு ரகசியம் எவ்வளவு மதிப்பு எவ்வளவு பொக்கிஷம் எவ்வளவு கருணை எவ்வளவு அன்பு என்பதை நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது!!!!

இவ்வுலகில் நாம் அறியாத பல தேவ ரகசியங்கள் இருக்கின்றன!!!!! சொல்லப்போனால் இதுவரை நாம் பழனி முருகன் நவபாஷாண மூர்த்தி என அறிந்த நிலையில் அது தச பாஷாணம் என சித்தர்கள் மூலம் தான் நமக்கு தெரிய வந்தது!!!!

ஆன்மாக்களை பற்றியும் தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் என்னென்ன ரகசியம் இருக்கின்றது என்பதனைப் பற்றியும் சித்தர்களும் குருநாதரும் எடுத்துச் சொல்ல எடுத்துச் சொல்லத்தான் நமக்கு ஒவ்வொன்றாக புரிய வருகின்றது!!!!!

இதெல்லாம் நம்மை பிறவி கடலிலிருந்து மீட்டெடுக்க சித்தர்கள் செய்யும் நற்கருணை முயற்சிகள். இதை மனதில் நிறுத்தி நம் குருநாதர் அகத்திய பெருமானும் சித்தர்களும் உரைக்கும் ஒவ்வொரு வாக்கினையும் கேட்டு தெளிந்து தெளிவு பெற்று அதன்படி நடந்து கொண்டால் நமது வாழ்க்கையும் மேன்மை பெற செய்வார்கள் இறைவன் தரிசனமும் சித்தர்கள் பெற்று தருவார்கள் மோட்ச கதியையும் அடையச் செய்வார்கள்!!!!

குருவருள் இல்லாமல் திருவருள் ஏது?????

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1520 - அன்புடன் அகத்தியர் - கோயம்பத்தூர் வாக்கு பகுதி 1


அடியவர்:- போன பிறவியில் எனக்கு காட்சி கொடுத்து என்ன கட்டி அணைத்துக் கொண்டதும் , இந்த பிறவியில் முருகனே வந்து என்னை அணைத்துக்கொள்வான் என்று சொன்னீர்கள் இல்லையா அகத்தீசப்பா போன முறை , அதுதான் அகத்தீசப்பா ஞாபகத்திற்கு வந்தது.

நாடி அருளாளர்:- இப்போ அந்த பக்கம் என்ன தெரியுது என்று குருநாதர் கேட்கின்றார்.

அடியவர்:- அகத்தீசப்பா, வீடு , மரங்கள், ஆகாயம் இது எல்லாம் தெரிகின்றது அகத்தீசப்பா.

குருநாதர்:- அம்மையே மனிதர்கள் தெரிகின்றார்களா? இல்லை என்பேன் அம்மையே.

அடியவர்:- ஆமாம் அகத்தீசப்பா.

குருநாதர்:- அம்மையே ஒன்றுமே இல்லை அம்மையே. மரங்கள் அது அது தன் வேலையைச் செய்கிறது அல்லவா? அதே போலத்தான் மனிதன் தன் வேலையை சரியாகச் செய்வதில்லை அம்மையே. அதனால்தான் இறைவன் கஷ்டத்தை ஏற்படுத்துகின்றான். மனிதன் எப்படி வாழ வேண்டும் என்று நினைத்து வாழ்ந்து வந்தாலே நிச்சயம் வெற்றிகள் தாயே.

அம்மையே அப்பொழுது எதை என்றும் அறியாத நிலையிலும் கூட ஏன் (திருச்) செந்தூரை நோக்கி அம்மையே நீ பார்த்தது ஒன்றும் இல்லை வாழ்க்கை கூட இதுபோலத்தான் இருக்கின்றது. அது தவறு செய்து செய்து , கர்மங்களை மனிதன் சம்பாதித்துக் கொண்டு அதனாலே மீண்டும் மீண்டும் தோல்வியில் விழுகின்றான் தாயே. 

இப்படி ஒன்றுமே இல்லாமல் இருந்தால் அனைத்தும் இறைவன் காரணம் , இறைவன் காரணம். அனைத்தும் இறைவனாக விளங்குகின்றான் அனைத்துக்கும் என்றெல்லாம் நிச்சயம் மனதில் நிறுத்திக் கொண்டாலே அம்மையே தோல்விகள் ஏது அம்மா?

அடியவர்:- (அழுது கொண்டே) சரி. அகத்தீசப்பா.

குருநாதர்:- அம்மையே ஏன் அழுதாய் என்று கூற வேண்டும்.

அடியவர்:- அப்பா முருகன் மேல் கொண்ட அன்பு அப்பா. திருச்செந்தூர்….

குருநாதர்:- அப்பொழுது யான் உந்தனுக்காக வந்து வாக்குகள் செப்புகின்றேனே , எந்தன் மீது  அன்பு இல்லையா?

அடியவர்:- அகத்தீசப்பா!!!! சிவ சிவா. அப்பா உங்களுக்கு தெரியும் இல்ல அகத்தீசப்பா..நான் தினமும் உங்களுடன் பேசுவது….

குருநாதர்:- (அம்மையே நீ எம்முடன் அன்பாக பேசுவது ) அவை தன் எந்தனுக்கு தெரியாதா என்ன?

அடியவர்:- என்னுடைய அன்பு என்ன என்று உங்களுக்கு தெரியும் என்று திருவண்ணாமலையில் நீங்க சொன்னிங்க இல்லையா?

குருநாதர்:- அம்மையே  நிச்சயம் ஒன்று இதற்கு நிச்சயம் பதிலளிக்க வேண்டும்.

அடியவர்:- அகத்தீசப்பா. உங்கள் திருவடி மட்டும் போதும்.  எனக்கு எதுவுமே வேண்டாம்.

குருநாதர்:- அம்மையே ( ஓர் அடியவரை அழைத்து )  அவனை வரச் சொல்.

அடியவர் 1:- ( முன்னே வந்தார் )

குருநாதர்:- அப்பனே அப்பனே எங்கும் இருக்கிறான் இறைவன். அப்பனே எங்கும் காட்சியளிக்கின்றான் இறைவன். அப்பனே அப்படி இருக்க நீ எதற்காக இங்கு வந்தாய் கூற வேண்டும்.?

அடியவர் 1:- ஐயா குருநாதர் வாக்கு கேட்கவேண்டும்.

குருநாதர்:- அப்பனே நீ அங்கிருந்தே கேட்டிருக்கலாமே?

அடியவர் 1:- நிச்சயம் கேட்டிருக்கலாம். இருந்தாலும் நேராக பார்க்கக்கூடிய வாய்ப்பு…குருநாதரோடு பயணம் செய்ய வாய்ப்பு

குருநாதர்:- யான் அங்கேயே இருக்கின்றேனே அப்பனே.

அடியவர் 1:- நிச்சயம்.

குருநாதர்:- அப்பனே இதனால் உன் இல்லத்தவளை வரச்சொல்.

(அடியவர் துணைவி அருகே வந்து நின்றார். அமரவில்லை.)

அடியவர் 2:- எனது ஊரில் பாம்புகள் தெரிய ஆரம்பித்தது. வீட்டின் உள்ளே எனக்கு ஐந்து தலை பாம்பே தெரிந்தது. இது எனக்கு புரியவில்லை. இது எல்லாம் எதன் அறிகுறி?

குருநாதர்:-  (அவர் கணவரைப் பார்த்து) அப்பனே கிரகங்கள் ராகு கேது அப்பனே புரிந்து கொண்டாயா?

( இந்த இடத்தில் ஒரு சூட்சும வாக்கை உரைத்து அம்மையை உடன் செய்ய வைத்தார் கருணைக்கடல். இந்த அடியவர் ஜோதிட தசா புத்தியை உரைக்க ( கர்மா ) , அதை உடன் அவர் இல்லத்தரசியை வைத்தே போக்கினார்கள் என்பதே உண்மை. கருணைக்கடல் செய்த கர்ம நீக்கம் அங்கேயே நடந்தது. )

அடியவர்கள் கவனத்திற்கு :- ஜோதிடம் சம்பந்தப்பட்ட எந்த ஒரு விசயங்களை பேசினாலும் கர்மா உண்டு. அந்தப்பக்கமே போகாமல் , தலை வைக்காமல் இருப்பதே கர்மங்களை சேர்க்காமல் இருக்க ஒரு எளிய வழி. ஜோதிடம் வேண்டவே வேண்டாம் அடியவர்களே. இறைவன் பாதத்தை சிக்கென பிடியுங்கள். குருநாதர் வழியில் நடக்க அனைத்தும் நன்மையாகும். )

( இந்த அம்மைக்கு  நடக்க இருந்த கொடும் நிகழ்வை  விவரித்தார் கருணைக்கடல்.  ) 

ஆதலால் அம்மையே ஈசன் உன்னை விட்டுவிடவில்லை.

அடியவர் 2:- ஆனால் எனக்கு அதன் சத்தம் நன்கு கேட்டது. கனவில் பலமுறை பார்த்து உள்ளேன். நேரில் ஐந்து தலை ( அரவம் ) பார்த்தேன்.

குருநாதர்:- அம்மையே  ஆனாலும் அனைத்தும் மாறிவிடும் என்பேன் அம்மையே.

அப்பனே அம்மையே யான் ஏற்கனவே சொன்னேன். இத்தனை நாட்கள் ஏன் செல்ல வில்லை நடைப்பயணம்?.

அடியவர் 2:- தெரியவில்லை ஐயா.

குருநாதர்:- அம்மையே பின் யான் கூட தெரியவில்லை என்று சொல்லி விட்டு இருந்தால் எப்படி அம்மையே?

குருநாதர்:- அம்மையே பின் யான் தெரிகின்றேனா? இல்லையா?

அடியவர் 1:- அகத்தியர் உன் கண்ணுக்குத் தெரிகின்றாரா? இல்லையா?

அடியவர் 2:- மனசு அளவுக்கு தெரிகிறது. அவர் வந்தால், போனால் தெரிகிறது.

குருநாதர்:- அம்மையே இப்பொழுது தெரிகின்றேனா இல்லையா?

அடியவர் 2:- ஆமாம்

குருநாதர்:- அம்மையே அப்போது தெரியவில்லை என்று ஏன் சொன்னாய்?

அடியவர் 2:- எனக்குப் புரியவில்லை முதலில்.

குருநாதர்:- அம்மையே அதனால் நிச்சயம் இவன்தன் வில்லன் என்றால் இவன் தனக்கு மேலே இருக்கின்றாய் நீ அம்மையே. அதனால் தான் இவன் உட்கார்ந்திருக்கிறான் நீ நின்று கொண்டிருக்கிறாய் அம்மையே இதற்கு பதில் தெளிவாக கூற வேண்டும் நீ.

( சில அடியவர்களை இல்லறத்தில் ஈடுபடுத்தி அவர்களை ஒரு நல் வாழ்வு வாழ அவர்கள் இல்லத்தரசிகளுக்கு பலம் அதிகம் கொடுத்து விடுவார் இறைவன். இந்த சூட்சும நிகழ்வு பல இல்லங்களில் நடந்து கொண்டே உள்ளது இறைவன் அருளால். அதாவது இல்லத்தில் கணவனை விட மனைவிக்கு பலம் அதிகமாக , கணவன் ஒரு திறமையாளனாக இருந்தும் - வெளியில் புலி, வீட்டில் எலி - அடங்கி வாழும் நிலை உண்டு. அதன் மகத்தான காரணத்தை குருநாதர் எடுத்து உரைத்தார்கள்)

குருநாதர்:- அம்மையே  இதற்கும் காரணம் உண்டு அம்மையே. நீ இல்லை என்றால் இவன் பைத்தியனாக ( ஞான வழியில் ) திரிந்து இருப்பான்.

உண்மையா இல்லையா என்று அவனைப் பார்த்துக் கேள்.

அடியவர் 1:- உண்மைதான்.

குருநாதர்:- அதனால்தான் அப்பனே நீ கீழே உட்கார்ந்து இருக்கிறாய் அவள் தன் மேலே இருக்கின்றாள் ( நிற்கின்றாய்). அப்பனே புரிகின்றதா? அப்பனே அவள் இல்லை என்றால் எங்கெங்கோ சென்று அப்பனே ருத்ராட்சத்தை அணிந்து பின் ஐயோ!! அது இது என்றெல்லாம் ( கூறி )  பின் பாடங்கள் , எந்தனுக்கு  ஞானம் வந்து விட்டது , அனைவரும் அதைச்செய்கின்றேன், இதைச்செய்கின்றேன் என்றெல்லாம் தெருத்தெருவாக ஓடி இருப்பாய். இதனால்தான் அப்பனே யான்  சொல்லி விட்டேன்.

அப்பனே பல பேர்களும் கூட அப்பனே அதனால் நிச்சயம் பின் தட்டிக்கேட்க அளவுக்கு ஒருவள் இருந்தால்தான் அப்பனே அனைத்தும் அடங்கும்மப்பா.

அதனால் இவள்தனுக்கு  நீ அடங்கியே ஆக வேண்டும் அப்பனே . ஊருக்கு அடங்காவிடிலும் இவள் தனக்கு அடங்கி இரு அப்பனே. அனைத்தும் புரியும் என்பேன்.

இதனால் அம்மையே அனைத்தும் கிடைக்கும் கிடைக்கும்.  நான் சொல்லியது அம்மையே நிச்சயம் நடை பயணத்தை நிச்சயம் மேற்கொள்.  அனைத்தும் மாறும்.  அதனால் எக் குறைகளும் இல்லை. நல் நேரங்கள் தான் அம்மையே. ஆனாலும் சில சில புண்ணியத்தால் அம்மையே ( கடுமையான கண்டங்களில் இருந்து ) நீ தப்பித்து விட்டாய் அம்மையே.

அம்மையே மீண்டும் சொல்கின்றேன் அம்மையே. இவன்தன் இறைவன் இறைவன் என்று பைத்தியனாகிவிடுவான். அதனால்  அடிக்கடி தலையில் கொட்டிக் கொண்டே இரு.

அதனால் நிச்சயம் எதையோ சொல்லி ஆனாலும் நீ நம்பவில்லை தாயே அதுவே போதுமானது என்பேன். அதுவும் இறைவன் செயலே.

இதனால் அம்மையே எக்குறைகளும் கொள்ளத்தேவை இல்லை. உன் பிள்ளைகளுக்கு நல்வாழ்க்கை யான் தந்துவிடுகின்றேன்.

அப்பனே கவலை இல்லை. ஒன்று என்று தெரியாமல் கூட ஒன்று என்று ஒருவளை கேட்டேன் அவளை வரச்சொல். (முதலில் வாக்கு கேட்ட அடியவரை அழைத்தார்கள் கருணைக்கடல்)

அடியவர்:- அகத்தீசப்பா. லோபா அம்மா.

குருநாதர்:- அம்மையே யான் என்ன கேட்டேன் அம்மையே. அதை நிச்சயம் ( என்னுடன்  ) வாதாடு.

அடியவர்:- அப்பா, என்னுடைய சிற்றறிவுக்கு எட்டவில்லை அகத்தீசப்பா.

குருநாதர்:- அப்பனே எது எந்த கீழிருந்து மேல் இருக்கிறாளே முதலில் உன் மனைவியைக் கேள்.

அடியவர் 1:- நீ கவனித்தாயா? ஒன்று என்று குருநாதர் உரைத்த வாக்கினை…

அடியவர் 2:- கேட்கவில்லை கடைசியில்

அடியவர் :- அகத்தீசப்பா உங்கள் திருவடி மட்டும் போதும் என்று நான் கேட்டேன் அகத்தீசப்பா. நீங்க ஒன்று மட்டும் கேட்டீர்கள்,  அகத்தீசப்பா.

அடியவர் 2:- அந்த ஒன்று மட்டும் போதுமா என்று குருநாதர் கேட்கின்றார்கள்.

அடியவர் 1:- குருநாதர் அதற்கு முன் திருச்செந்தூரில் முருகனைப் பார்த்து அழுதீர்கள் என்று சொன்னபோது, குருநாதர் என்னைப் பார்க்கவில்லையா (அன்புடன்) என்று கேட்டார் இல்லையா?

அடியவர் :- ஆமாங்கய்யா

அடியவர் 1:- அப்போதுதான் சொல்கின்றார் ஒன்று என்று. அதாவது அவர் ( திருச்செந்தூர் முருகன் ) வேறு இல்லை நான் ( அகத்தியன் ) வேறு இல்லை என்று…

குருநாதர்:- அம்மையே இறைவன் ஒருவனே. அனைவருக்கும் இதை யாங்கள் உணர்த்தினோம்.  இன்னும் உணரவைக்கப் போகிறோம்.  அப்போது நம்பி விடுவான் (மனிதன்).  அம்மையே நீ சொன்னாயே அனைவருக்கும்  பின் தான தர்மங்கள் செய்யவேண்டும் என்று (எண்ணுகின்றாயே) , உன் பக்கத்தில் இருக்கின்றாளே அவன் பின் மூதேவியாகவா இருக்கின்றாள்?. அவள் தனக்கு தேநீர் கொடு உன் கைகளால்.(அடியவரை தேநீர் கொடுக்கச்சொன்னார்கள்  கருணைக்கடல்)

குருநாதர்:- அம்மையே, அப்பனே இதனால் நல்ஙிதமாகவே இன்னும் வாக்குகள் சிறக்க பொருத்திருக.

அடியவர் 1:- குருநாதா!!!!!!!!!!

நாடி அருளாளர் :- ஐயா யாராவது விருச்சிக ராசி, மகர ராசி, கும்ப ராசி அதன்பின் மேஷம் யாரும் இருக்கின்றீர்களா?

( அங்கு உள்ள பலர் தனது ராசியை தெரியப்படுத்தினர். அவர்கள் அனைவரையும் நாடி அருளாளர் முன்னே வந்து அமரச்சொன்னார்கள். இந்த ராசியினர் வருவார்கள் என்று முன்பே நாடி அருளாளருக்குத் தெரியப்படுத்தி விடுவார் கருணைக்கடல். ) 

குருநாதர்:- அதன் முன்னே எதை என்று கூற குருவானவன், முதலில் வில் அம்பு…

நாடி அருளாளர்:- தனுசு ராசி யாரும் இங்கு வந்து உள்ளீர்களா?

( தனுசு ராசி அடியவர்கள் முன்னே அமர்ந்தனர்)

குருநாதர்:- அப்பனே இதனால்  சில பக்குவங்கள் நிச்சயம் அப்பனே அனைத்தும் இழந்தாலும் ஆனால் இருக்கின்றது அப்பனே இதற்கு பதில் அளி.

அடியவர் 4:- இறை நம்பிக்கை நம்பிக்கை மட்டும் தான்.

குருநாதர்:- அப்பனே இதை அனைவருக்குமே சொல்.  எழுந்து நில்.

அடியவர் 4:- இறை நம்பிக்கை ஒன்று மட்டும் இருந்தால் போதும் . யாரும் கவலைப்படாதீர்கள். அது ஒன்று மட்டுமே உங்கள் எல்லாரையும் காப்பாற்றும்.

குருநாதர்:- அப்பனே , நீ இறக்கக்கூடியவன். இவ் (இறை) நம்பிக்கை உன்னை காப்பாற்றி விட்டது.

அப்பனே பின் கஷ்டத்திலும் இறைவன் இருக்கின்றான். இதற்கு பதில் அளி அனைவருக்குமே!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 28 November 2023

சித்தன் அருள் - 1519 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு (யாருக்கோ?)






27/11/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் சித்தர்கள் ப்ரிய ஸ்தலம் உத்ரகாவேரி நதிக்கரை. 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் 

அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் இருப்பதால் அப்பனே நிச்சயம் எவை என்று... குறைகள் இருந்தாலும் அப்பனே வருங்காலத்தில் அதை நீக்கி விடுவேன்!!!

அப்பனே ஏன் எதற்காக குறை வருகின்றது என்று அப்பனே நீங்களே சிந்தியுங்கள்!!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் குறை வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளும் சக்தி இருந்தால் அப்பனே எதை என்று புரிய புரிய அப்படியே யான் அருகில் இருந்து அப்பனே விதியின் பாதையை அனுபவித்து அனைத்தையும் எதை என்று கூட கொடுத்து  அப்பனே இப் பிறவியே மோட்ச கதி!!!!! 

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இறைவன் தரிசனத்தையும் யான் காட்டுவேன் அப்பனே!!!!

இறைவன் எங்கு இருக்கின்றான்??? என்றும் சொல்வேன் அப்பனே!!! 

இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய காலத்தின் கட்டாயம் அப்பனே எதை என்று அறிய அறிய துன்பம் நெருங்குவதிலே!!!!!!! 

அவை மட்டுமில்லாமல் அப்பனே கலியுகத்திலே மனிதர்கள் அப்பனே கஷ்டங்கள் தான் பட வேண்டும் என்று ஏற்கனவே விதிக்கப்பட்டதப்பா!!!!

அப்படி இருக்கையில் அப்பனே எப்படியப்பா ??? மனிதனால் எதை என்றும் அறியாமல் எதை என்றும் புரிந்தும் கூட வாழ முடியும்????  சொல்லுங்கள்! நீங்களே!!!

இதனால் தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய சில வினைகள் அதாவது துன்பத்தை கொடுத்து கொடுத்து இறைவனிடத்திற்கு அனுப்பி கொண்டே இருக்கின்றோம் அப்பனே

ஏனென்றால் அப்பனே வரும் காலத்தில் துன்பங்கள் துன்பங்கள் என்று நெருங்கும்!!!

இதனால் யாங்கள் இறை பக்தியை நிச்சயம்  கொண்டு வர வேண்டும் என்பதே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே 

அனைவருக்கும் வாக்குகள் செப்பி செப்பி அப்பனே திருத்தி திருத்தி அப்பனே!!!!

அப்படி திருந்தாவிடிலும் அவந்தனுக்கு வினைகள் அதாவது நோய் நொடிகள் கொடுத்து கொடுத்து அப்பனே கடைசியில் இறைவன் தான் மெய் என்று கூட அப்பனே தெரிவித்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே

இதனால் குறைகள் இல்லையப்பா!!!

எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் அகத்தியன் யார் என்று கூட தெரியாமல் அப்பனே அகத்தியன் அகத்தியன் என்றெல்லாம் அப்பனே எதை என்று கூட சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

எதை என்றும் புரியாமல் கூட அப்பனே புரிந்தால் அப்பனே அமைதியாக இருப்பார்கள் அப்பனே!!!

புரியாவிடில் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் பின் ஏமாற்றும் ஏமாற்றும் எதை என்று அறிய அறிய சித்தர்களை வைத்து எதை என்று....... ஆனாலும் அப்பனே  அவர்களுக்கெல்லாம் அப்பனே கஷ்டத்தை பின் யாங்கள் கொடுத்து எதை என்று அறிய அறிய அப்பனே 

ஏனென்றால் அப்பனே உண்மை பொருளை உணர வேண்டும் இறைவன் எங்கு இருக்கின்றான்?? எப்படி வழிபட வேண்டும்??? எதை என்றும் அறிய அறிய

உண்மை நீதி நேர்மை எதை எவை என்று அறிய அறிய போட்டி பொறாமை  எதை என்றும் அறிய அறிய குறை கூறுதல் இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே பல விஷயங்களை நீக்கினால் தான்  அப்பனே  அனைத்தும் ஒரே எவை என்று கூட தாயின் பிள்ளைகள் என்று நினைத்தால் தான் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய எங்களாலும் கூட அப்பனே அவர்களை நல் வழி படுத்த முடியுமே தவிர............ 

மற்றவர்களுக்கெல்லாம் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் புரிந்து புரிந்தும் புரிந்தும் கூட அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் கஷ்டங்கள் தானப்பா!!!!!!! 

சொல்லி விட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய

தெரியாமல் இன்னும் இன்னும் அப்பனே அறியாமலும் கூட அப்பனே உசுப்பேத்துவார்கள் அப்பனே 

அதாவது எதை என்று அறிய அறிய வாக்குகள் கொண்டு செல்கின்றானே... அவந்தனையும் எதை என்று அறிய அறிய அப்பனே பொய்யான சில பேர் அப்பனே எதை என்று அறிய அறிய......( சித்தன் அருள் வலைத்தளம்) இதனை முடக்க வேண்டும் என்று எண்ணி அப்பனே பல வகையிலும் கூட அப்பனே தொல்லைகள் செய்வார்கள் என்பேன் அப்பனே!!!!!

அவர்களுக்கெல்லாம் ஒரு எச்சரிக்கையை விடுக்கின்றேன் அப்பனே!!!!

நிச்சயம் அப்பனே ஒரு நொடி போதும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே.... ஆனால் என்ன எதை என்றும் அறிய அறிய 

அப்பனே ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்று அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே...... 

அப்பனே இதனால் எவை என்றும் புரிய புரிய அப்பனே புரியாவிடிலும் கூட அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே சரியான நேரத்தில் அப்பனே உண்மை நிலையை அறிய அப்பனே நிச்சயம் நேரில் எதை என்று அறிய அறிய பின் இச் சுவடியை ( அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா) ஓதுபவனை அடைந்தாலே அவந்தனுக்கு புத்திகள் இன்னும் தெளிவுகள் வந்துவிடுமப்பா!!!!! 

அப்பனே எச்சரிக்கின்றேன் அப்பனே இதைப் போன்று அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய புரியாமல் இருக்கின்றீர்கள் அப்பனே

புரிந்தவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள் அப்பனே

அதனால்தான் அப்பனே உண்மையுள்ள பக்தி அப்பனே செலுத்தி விட்டாலே அப்பனே அமைதியாகி விடுவான் அப்பனே அனைத்தும் இறைவன் தான் காரணம் என்று!!!! 

ஆனால் பொய்யான  பக்திகளை செலுத்துகின்றானே இவன் தானப்பா...... மனிதனை எதை என்றும் அறிய அறிய அப்பனே கெடுத்துக்கொண்டு!!!!!

இனிவரும் காலங்களில் அப்பனே இன்னும் இன்னும் இறைவனே இல்லை என்று சொல்பவனும் உண்டப்பா!!!

இதனால் அப்பனே  அனைவரையும் கெடுத்து வருகின்றோம் எதை என்று அறிய அறிய சித்தர்களும் பொய் இறைவனும் பொய் என்றெல்லாம் அப்பனே எதை என்றும் அறியாமல் கூட அப்பனே இன்னும் அப்பனே அதாவது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே..... இயக்குகின்றானே அவந்தனுக்கு தொல்லைகள் !!

(சித்தன் அருள் வலைத்தளம்  இயக்குகின்றவருக்கு) 

எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் மீண்டும் மீண்டும் சித்தர்கள் யாங்கள் அனைவருமே எச்சரிக்கை செய்கின்றோம்!!!!! அப்பனே 

அவனவன் வேலையை அவனவன் செய்தால் போதுமானதப்பா!!!

அப்படி மீறி செய்தால் அப்பனே அங்கேயே அடித்து விடுவோம் சொல்லி விட்டோம் அப்பனே !!! 

சித்தர்கள் யாங்கள் எதற்காக அப்பனே நீ நல் வழியாக சென்று கொண்டிருந்தாலே அப்பனே ஏனப்பா???? உந்தனுக்கு அப்பனே கவலைகள் வருகின்றது??? 

நீயே கூறு அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய தடம் மாறி செல்லும் பொழுது தான் அப்பனே கவலைகள் மிஞ்சும் என்பேன் அப்பனே!!! 

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே சித்தர் தலத்தை அமைத்து அமைத்து அப்பனே யான் பெரியவன் நீ பெரியவன் அங்கு சித்தர் இல்லை இன்னும் இன்னும் அப்பனே எதை எதையோ கலியுகத்தில் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே!!! 

கடைக்காலத்தில் அப்பனே சரியாக வாழ்ந்திட்டு செல்லுங்கள் என்னுடைய அன்பும் ஆதரவும் அப்பனே நிச்சயம் இருக்குமப்பா!!! உங்களுக்கு

அப்பனே சரியான வழியில் வந்தால் அப்பனே நீதி நேர்மை அப்பனே தர்மம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே கலி யுகத்தில் அப்பனே நீதி நேர்மை தர்மம் எல்லாம் தலை குனிந்து போகுமப்பா!!!

அப்பனே அதனால் தான் அப்பனே எதை என்று புரிய புரிய யாங்கள் வந்திருக்கின்றோம் அப்பனே....அவைதன் எதையென்று அறியறிய அப்பனே..... 

என்னை அதாவது  சித்தர்களை பின்  கடைபிடிப்பவர்கள் அப்பனே நிச்சயம் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டும்!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அகத்தியன் என்றால் அப்பனே அனைவரும் ஒரு தாயின் குழந்தைகள் என்றே எண்ண வேண்டும் அப்பனே !!!!

அப்படி இதை மீறி செயல்பட்டால் அப்பனே நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

அன்றிலிருந்து உன் கணக்கு ஆரம்பமாகின்றது அப்பனே எதை என்று அறிய அறிய துன்பத்திற்கு என்று கூட அப்பனே!!!!

எவை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே எவை என்று கூட பல புத்தகத்தில் அவை இவை என்றெல்லாம் பொய் சொல்லி பொய் சொல்லி அப்பனே ஏமாற்றியும் விட்டார்கள் என்பேன் அப்பனே 

மீண்டும் மீண்டும் இதைத்தான் யான் உரைப்பேன் அப்பனே கலியுகத்தில் மனிதர்களுக்கு கஷ்டமப்பா கஷ்டம். 

அதாவது எதை என்று அறியாமலே தெரியாமலே வருமப்பா!!! அதனால்தான் யாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம் அப்பனே!!! 

இன்பம் எதை என்றும் அறிய அறிய கொடுத்துக் கொண்டே வந்தாலும் அப்பனே இறைவனையே மதிக்க மாட்டான் அப்பா

அதனால்தான் அப்பனே துன்பம் எதை என்று கூட எடுத்து வந்தான் அப்பா இறைவனே நோய் நொடிகள் கொடுத்து அப்பனே மீண்டும் அழைத்து வந்து நீ செய்த எதை என்று அறிய அறிய அப்பனே பலவகையான அப்பனே பின் சேர்த்து வைத்த பொன் பொருளையும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய மீண்டும் இறைவன் ஏதோ ரூபத்தில் வாங்கிக் கொள்வான் அவ்வளவு தான் அப்பனே

இதனை நிச்சயம் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும் அப்பனே எதை என்று கூட என் பக்தர்களுக்கே சொல்லிவிட்டேன்!!!! அப்பனே!!! 

(வாக்குகளை உடனிருந்து கேட்டுக் கொண்டிருந்த அடியவரிடம் பொது மக்களுக்கு இன்று போய் சேர வேண்டும் என்று குருநாதர் கொடுத்த உத்தரவு)

எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே நல் விதமாகவே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே....

எவை என்று அண்ணாமலையிலே !!!! அப்பனே !!!

எவை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சிறப்பை எதை என்று அறிய அறிய எங்கள் அருளால் வந்தவர்களுக்கெல்லாம் அப்பனே ஆசிகள் கொடுத்து அப்பனே இன்னும் பின் விதியையும் கூட யாங்கள் மாற்றுவோம் என்போம் அப்பனே...

சில வகையான பின் சக்திகள் உள்ள திருத்தலங்களுக்கு யாங்களே அழைத்துச் செல்வோம் என்போம் அப்பனே!!!!

எதை என்று புரிய புரிய அப்பனே அங்கெல்லாம் சென்றால் சில தரித்திரங்கள் நீங்கி அப்பனே உடனடியாக மாறுதல் ஏற்படும் என்பேன் அப்பனே.

அப்பனே மோட்சம் பெற வேண்டும் அவ்வளவுதான் எங்கள் குறிக்கோள் அப்பனே!!!!

மனிதப் பிறப்பு வேண்டாமப்பா!!!!

அப்பனே நீங்கள் எல்லாம் எல்லாம் கஷ்டங்கள் பட்டு பட்டு கொண்டிருக்கும் பொழுது எங்களுக்கும் அப்பனே எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே எவை என்று கூட மனிதன் இனிமேலும் அதாவது இவ் ஆன்மா இன்னும் பிறக்கக் கூடாது எதை என்று அறிய அறிய அப்படி பிறந்து விட்டாலும் பின் கஷ்டங்கள் மனைவியால் இன்னும் பிள்ளைகளால் பின் தொழிலால் இன்னும் எதை எதையோ அனுபவித்துவிட்டு பின் கடைசியில் ஒன்றும் இல்லாமல் மீண்டும் பிறவி எடுத்து அப்பனே

பிறவி தேவையா????

அதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய நிச்சயம் அப்பனே உண்மையைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் திருந்தவில்லை என்றால் அப்பனை யான் துன்பத்தை அதாவது சித்தர்கள் எதை என்று கூட நிச்சயம் கொடுப்போம் அப்பனே!!!!

அப்பனே கலியுகத்தில் தான் இப்படியப்பா!!!! எதை என்றும் அறிய அறிய அதனால் தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய பல நபர்களுக்கு அப்பனே பல வாக்குகளாக!!!!!!!!!

ஏனென்றால் அப்பனே அன்பே எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய பின் கூறினாலும் மனிதன் பின் இவ்வாறு தான் சித்தர்கள் கொஞ்சிக் கொண்டு இருப்பார்கள் என்றெல்லாம் அப்பனே சொல்லிவிட்டு சென்று கொண்டே இருப்பார்கள் அப்பனே.

அதனால்தான் அப்பனே சித்தர்கள் யார் என்பதை கூட அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டோம் அப்பனே எதை என்று அறிய அறிய நெருப்பு அப்பனே!!!

நெருங்கிவிட்டால் அப்பனே எதை என்று அறிய அறிய கோபமே வரக்கூடாது சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய!!!! எதை என்று புரியாமல் கூட

இதனால் அப்பனே மனிதன்  எதை என்று அறிய அறிய மனிதன் தரித்திரன் என்பவனுக்கு எதை என்று அறிய அறிய இதுவே அப்பனே சாட்சி அதாவது எதை என்று எதை என்று கூட நோயே சாட்சி!!!

அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அனைத்து உயிர்களும் அதனதன் வேலையை செய்கின்றதப்பா!!!!

எதை என்று அறிய அறிய யார் கண்டார்கள்???? அப்பனே..... 

அனைத்து உயிர்களும் கூட அப்பனே அதிகாலையிலே இறைவனை ஓர் முறையாவது நேசிக்கின்றது துதிக்கின்றது

ஆனாலும் அப்பனே மனிதன் அப்படி இல்லையப்பா!!! 

அப்பனே ஆனால் இருக்கின்றான் எதை என்று கூட நல்லோர்கள் கூட ஆனால் எவை என்றும் புரியாமல் கூட எதை என்றும் அறியாமல் அதை பின் எவை என்று அறிய!!!!  அறிய அப்பனே! 

இதே போல தான் அப்பனே இதை நடத்திக் கொண்டிருக்கும் எவை என்று கூட உலகத்திற்கு தெரியப்படுத்தும் வாக்குகளை அப்பனே இன்னும் ஏளனம் செய்வார்களப்பா....

இப்படியே விட்டு விட்டு விட்டால் உண்மை நிலைகள் தெரிந்துவிடும்!!!

ஏதாவது ஒன்று செய்வோம் என்றெல்லாம் அப்பனே உசுப்பேத்துவார்கள் அப்பனே...

கூட்டமாக கூடுவார்கள் என்று அப்பனே!!!

எதை என்று அறிய அறிய ஏன் அகத்தியன் குடில் தான் இங்கு வைத்திருக்கின்றோமே எதை என்று அறிய அறிய இன்னும் அங்கு இவ்வாறு பின் புசுண்டனின் குடில் தான் வைத்திருக்கின்றோமே இன்னும் ஞானிகளின் குடில்கள் வைத்திருக்கின்றோமே இவையெல்லாம் பொய்யா என்று!!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் அப்பனே நீங்களே தெரிந்து கொண்டு அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!!

இவந்தனுக்கு சரியாகவே வாக்குகள் போய் சேரும் என்பேன் அப்பனே

என்னுடைய பக்தனாகவே இருந்து அப்பனே எவை என்றும் புரிய புரிய ஒரு பெண்ணுடன் அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் அகத்தியன் உறவு பின் எதை என்று அறிய அறிய எவை என்று புரியாமல் கூட...... அகத்தியன் தான் உறவு வைத்துக் கொள்ள சொன்னான் என்று சொல்லிவிட்டான் அப்பனே. 

இதனையும் கூட அப்பனே அகத்தியன் தான் பின் பேசினான் என்று கூட அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வாறு தரித்திரனுக்கெல்லாம் எப்படியப்பா???? யாங்கள் ?????தண்டனைகள் கொடுக்காமல் செல்வது????????? என்பேன் அப்பனே!!!! 

பின் கேட்டால் யான் நீதி நேர்மையானவன் என்றெல்லாம் பொய் கூறிக் கொண்டு!!!!!!  அதுவும் அப்பனே ஈராண்டுகள் தான் நடந்தும்!!! 

அதாவது இரு ஆண்டு எதை என்று அறிய அறிய அப்பனே அதன் முன்னே எவை என்றும் புரிய புரிய இப்படி எல்லாம் நடந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே.

அவை மட்டும் இல்லாமல் என்னுடைய பக்தனே எவை என்று கூட ஆனாலும்  பின் அவனையும் பின் தூரே ஒதுக்கி விட்டேன் அப்பனே!!!!! எவை என்று அறிய அறிய.... 

அகத்தியன் சொல்கின்றானாம்!?!?!?!?!?!  அங்கு!!!!!!! 

அதெல்லாம் பொய்யப்பா!!!!!!!!! 

எதையென்றும் அறிய அறிய இப்படியும் பேசுகின்றார்கள் அப்பனே 

இதனால் தான் சொன்னேன்!!!!! 

அகத்தியன் என்றால் பின் எவை என்று அறிய அறிய ஓடோடி வர வேண்டும் எவையென்றும் புரிய புரிய அப்பனே........

அகத்தியனா!!!!!  என் அப்பனா என்று!!!!!! 

அப்பனே அப்படிப்பட்டவன் தான் அப்பனே உண்மையானவன் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அதை மீறி எதை என்று அறிய அறிய அப்பனே இப்படித்தான்....அவை மட்டும் இல்லாமல் அப்பனே இன்னும் அப்பனே பின் என்னை வணங்கிக் கொண்டே............. 

யானும் பார்த்திட்டேன் அப்பனே....... 

என்னையும் வைத்துக்கொண்டு அப்பனே நேரிலே மது அருந்துகிறார்கள் அப்பனே

எப்படியப்பா எதை என்று அறிய அறிய....

நியாயம் சொல்லுங்கள் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய நீங்கள் சரியாக இருந்தால் யாங்கள் பின் நல்லது செய்வதற்கு தயாராகவே இருக்கின்றோம் அப்பனே

ஆனால் நீங்கள் சரியானவராக இல்லை.

அப்பனே நீங்கள் சரியாக இருந்தால் நிச்சயம் வாருங்கள் என்னிடத்தில் அப்பனே

யான் கூறுகின்றேன் நீ என்னென்ன தவறுகள் செய்திருந்தாய் என்று அப்பனே நியாயமா இது

எவை என்று புரிய புரிய அப்பனே அனைத்தும் பின் அப்பனே பின் தவறுகள் செய்துவிட்டு........ இறைவா அனைத்திற்கும் காரணம் நீயே என்று அப்பனே எவை என்று கூற....... சிவார்ப்பணம்!!!! என்று கூறுவது கிருஷ்ணார்பணம்!! என்று கூறுவது!!!!

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே நிச்சயம் யாராவது எதை என்று அறிய அறிய அப்பனே உசுப்பேற்றினால் நிச்சயம் தண்டனை!!!

அப்பனே சொல்லிவிட்டேன் எதை என்று அறிய அறிய!!!

அகத்தியன் சாதாரணமானவன் இல்லை சாதாரணமானவன் இல்லை சொல்லிவிட்டேன் அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே

அன்பிற்கு அன்பு !!! எதை என்று அறிய பண்பிற்கு பண்பு!!!

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பாவத்திற்கு பாவம் எதை என்று அறிய அறிய

பாவத்திற்கு சம்பளம் கஷ்டம் தான் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய

அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய

அனைவருக்கும் நல்லதை செய்யத்தான் யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே எவை என்று அறிய அறிய 

அவை மட்டும் எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி மீறி பின் பொய் எதை என்று அறிய அறிய யார் ஒருவன் எதை என்று கூறுகின்றானோ அப்பனே அதை தன் நன்றாகவே அப்பனே எதை என்று அறிய அறிய தனியாகவே எவை என்றும் அறிய அறிய

அப்பனே இச் சுவடியை ஓதுகின்றவனை எதை என்று அறிய அறிய அப்பனே கண்டு கொண்டு நிச்சயம் எதை என்றும் அறிய அறிய உன்னுடைய லீலைகளை பற்றி எல்லாம் எதை என்றும் அறிய அறிய அனைத்தையும் சொல்கின்றேன் அப்பனே

அப்பனே இப்பொழுது கூட பின் இருவரின் பெயர்களைக் கூட இங்கு யான் குறிப்பிட்டிருப்பேன் அப்பனே 

ஆனாலும் நிச்சயம் குறிப்பிடுகின்றேன் அப்பனே

ஒருவன் பெயர் எதை என்று அறிய அறிய

"""" (பெயர் மறைக்கப்பட்டது)  நாமத்தை கொண்டவனே!!!! அப்பனே !!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே பாரப்பா!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய

பின்னொருவன் அப்பனே

எதை யான் சொல்வது?????!? அப்பனே 

எவை என்று அறிய அறிய எதை என்றும் புரிய புரிய 

வேண்டாமப்பா!!!!!! 

ஏனென்றால் பின் மீண்டும் பின் அவர்களுக்கு அவர்கள் சந்தேகம் ஏற்பட்டு எதை எதையோ என்று!!!

அதனால் திருந்துங்கள் அவ்வளவு தான் என்பேன் அப்பனே எதை என்றும் புரிய புரிய

எவன் ஒருவன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய

என்னுடைய ஆசிகள் அருள்கள் இல்லாமல் யாருக்கும் எவை என்று அறிய அறிய வாக்குகள் எதை என்று அறிய அறிய அப்பனே

அதனால் யான் சொல்லியதை அப்பனே எத்தனை பேர்????? கடை பிடித்தார்கள்???? எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய 

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே

எவை என்று அறிய அறிய யான் அகத்தியன் மைந்தன் எவை என்றும் அறிய அறிய அப்பனே பொய்களப்பா பொய்கள் !!!!

எதையென்று கூட கலியுகத்தில் அப்பனே பொய்கள் தான் அதிகம் ஆட்டம் என்பேன் அப்பனே

உண்மை நிலைக்கு ஆட்டம் இல்லை என்பேன் அப்பனே

அதனால் நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய யார் ஒருவன் அப்பனே பின் சந்தேகம் எதை என்றும் அறிய அப்பனே நிச்சயம் அப்பனே

ஒன்றை சொல்கின்றேன் அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

எங்களால் அனைத்தும் சொல்ல முடியும் அப்பனே

மனிதன் எப்படி எல்லாம் விதியினையும் கூட அப்பனே..... ஆனால் எதை என்று அறிய அறிய கர்மத்தில் வீழ்ந்து விடாதீர்கள் கர்மத்தில் வீழ்ந்து விடாதீர்கள் என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் அப்பனே ஒருவன் என்னை நம்பிக் கொண்டிருந்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய

யானும் பார்ப்போம் இவன் எப்படித்தான் என்று!!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் சிறு தவறு நடந்து விட்டது

ஏன் எதற்காக அப்பனே மற்றொருவனை அதாவது எதை என்று அறிய அறிய அப்பனே அப்பெண் விரும்பி விட்டாளாம் !?!?!?!?!?!

(ஒரு தலைப்பட்சமாக இந்த நபர் விரும்பிய பெண் மற்றொருவரை விரும்பி விட்டார்)

இதற்கு அகத்தியனை நம்பினேன் அவர் என்னை கைவிட்டு விட்டார் என்று மாயம் மாந்திரீகம் என இருக்கும் மனிதரிடம் போய் சரணம் அடைந்து விட்டார் இந்த அடியவர் அவருக்கு குருநாதர் தந்த எச்சரிக்கை)

அதனால் அப்பனே எதை என்று கூட அகத்தியன் பொய் என்று சொல்லிவிட்டு

மனிதனை நம்பிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

அவந்தனுக்கு என்ன தான் எதை என்று அறிய அறிய யானும் பொறுத்து பார்த்தேன் அப்பனே நல்வாழ்க்கையை ஏற்படுத்தலாம் என்று. 

அப்பனே எதை என்று அறிய அறிய ஆனால் மனிதனின் பாதையில் சென்று விட்டான் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே

யான் எப்படியப்பா ?? கொடுப்பது அப்பனே!!

அதனால் அப்பனே தேர்ச்சியில் வெற்றி பெற வேண்டும் எதை என்று அறிய அறிய அப்பனே

எவை என்றும் புரிய புரிய அப்பனே பின் எவை என்று கூட உயர் பதவிகளில் வகிப்பதற்கும் கூட அப்பனே தேர்வுகள் எழுதுகின்றார்கள் அல்லவா

அப்பனே நிச்சயம் புத்தி எதை என்று கூட அப்பனே எவை என்று கூட சரியாகவே அப்பனே எவை என்றும் உபயோகப்படுத்துங்கள் என்பேன் அப்பனே

அப் புத்தி இல்லையென்றால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

பாரப்பா!!!! எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரியப் புரிய அப்பொழுது அகத்தியன் பொய் என்று!!

 ஆனால் எப்படியப்பா

ஆனாலும் என்னாலும் கூட விதியை மாற்ற முடியும் என்று எண்ணி இருந்தேன் ஆனால் இவன் என்ன போக்கில் மாறுகின்றான் என்று பார்த்தேன் அப்பனே!!!

கடைசியில் அகத்தியன் பொய் அனைத்தும் பொய் என்று அப்பனே மனிதனை நம்பி விட்டானப்பா!!!

அப்பனே கர்மத்தில் நுழைந்து விட்டானப்பா!!!!

இனிமேல் வரும் சந்தர்ப்பங்களை அப்பனே எப்படியப்பா???

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய யான் அகத்தியனை வணங்கினேனே என்று மீண்டும் சொல்வது அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே முதலில் நீங்கள் என்னென்ன தவறுகள் செய்துள்ளீர்கள் என்பதை எல்லாம் அப்பனே யான் குறிப்பிடுகின்றேன் அப்பனே

அதே போல் பின்பு ஒருவன் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே வாக்குகள் கேட்கின்றான் அப்பனே!!!

எதை என்றும் புரியப் புரிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நன்றாக பிற உயிர்களைக் கொன்று உட்கொண்டு எந்தனுக்கு வாக்குகள் வேண்டும் என்று

அப்பனே எப்படிப்பா யாங்கள் வாக்குகள் கூறுவது?????????? 

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே உடல் நலம் சரியில்லை என்று அப்பனே ஒருவன் கூறுகின்றான்!!!! எந்தனுக்கு வாக்குகளை வரவில்லை என்று!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய நீ என்ன செய்தாய்??? என்பதை கூட அப்பனே!

சிறிது யோசி அப்பனே பைத்தியக்காரனே பைத்தியம் போல் ஆகிவிட்டு எதை என்றும் அறிய அறிய 

வாக்குகள் எப்படியப்பா ????

எதை என்றும் புரிய புரிய இன்னொருவன் அப்பனே அங்கு கேட்கின்றான் இங்கு கேட்கின்றான் இங்கு தவறானதா அங்கு சரியானதா?? என்றெல்லாம் அப்பனே சுற்றிக் கொண்டே இருக்கின்றான் அப்பனே

(பல இடங்களில் அங்கு நாடி வாசிக்கின்றார்கள் இங்கு நாடி வாசிக்கின்றார்கள் அங்கே எல்லாம் சென்று எது உண்மை அங்கு உண்மையா இங்கு உண்மையா என்று ஒரு நபர் தெரிந்து கொண்டிருக்கிறார் அவருக்கு குருநாதர் எச்சரித்து விடுகின்றார்)

எவை என்றும் அறிய அறிய அப்பனே இவையெல்லாம் ஒரு பிழைப்பு என்று அப்பனே!!!!

இவந்தனுக்கு என்ன தான் யான் கொடுப்பது???? அப்பனே 

சொல்லுங்கள் நீங்களே!!!!

எதை என்றும் புரிய புரிய அப்பனே நம்புங்கள் இறைவன் இருக்கின்றான் என்பதைக் கூட அப்பனே

அதனால்தான் அப்பனே துன்பம் கொடுத்து அப்பனே நிச்சயம் பின் அதாவது தலையில் தட்டி இறைவனிடத்திற்கு போ என்று கூட நாங்கள் நிச்சயம் அனுப்புவோம் அப்பனே

இதையும் மீறி அப்பனே எதை என்று புரிய புரிய இனிமேலும் யாங்கள் அமைதியாகவே இருந்து விட்டால்

அப்பனே எங்களையே திட்டுவார்களப்பா!!!! 

எதை என்றும் அறிய அறிய எங்களை திட்டியும் தீர்ப்பார்கள் எவை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல்

ஒருவன் முடி திருத்திக்கொண்டிருந்தான் அப்பனே

ஆனால் அவந்தன் எதை என்றும் அறிய அறிய ஆனால் அப்பனே அவந்தனுக்கு கூட கொடுக்க யாங்கள் தயாராகவே இருந்தோம்.

ஆனாலும் அப்பனே அவன் எங்களையே சோதித்து விட்டான் அப்பா!!!

எதை என்றும் புரிய புரிய அப்பனே அவன் நாமத்தையும் சொல்லிவிடுவேன் அப்பனே

ஆனால் வேண்டாம் அப்பா வேண்டாம்!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட அதனால் அவந்தனையும் ஒதுக்கி வைத்திருக்கின்றேன் அப்பனே

ஆனாலும் மீண்டும் ஏதோ பின் எதை என்று கொடுக்கலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் எதை என்றும் அறிய அறிய அப்பனே

இதனால் அப்பனே என்னதான் அப்பனே எவை என்றும் அறிய அறிய இன்னும் மனக்குழப்பங்கள் அப்பனே

சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே மனிதனால் அப்பனே கலியுகத்தில் வாழ முடியாதப்பா

சில கஷ்டங்கள் பல வகையான எதை என்று கூட எதை நோக்கி வரும் என்பதை கூட அப்பனே

அப்பனே சொல்கின்றேன் இறைவனை நம்பாதவனை எதை என்று அறிய அறிய  அப்பனே  கூட அப்பனே அவனைக் கூட திருத்தி விடலாம் என்பேன் அப்பனே

ஆனால் இறைவனை நம்பி நம்பி பொய் சொல்லுகின்றானே அவந்தனை திருத்த முடியவில்லையே அப்பனே 

அதனால்தான் அப்பனே துன்பத்தை வைத்து ஆனால் சொல்கின்றான் அப்பனே யான் இறைவனை வணங்குகின்றேனே துன்பம் வந்துவிட்டது என்று அப்பனே

எவை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் இன்னும் மனிதனை யான் சாடுவேன் சொல்லிவிட்டேன் அப்பனே

ஏன் எதற்காக அப்பனே எதை என்று கூட அப்பனே ஈசன் அடியார்கள் அப்பனே இன்னும் ஓர் எவை என்று அறிய அறிய ஒருவாய் சோறு இல்லாமல் இருக்கின்றார்களப்பா எப்படி அப்பா எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய

அதனால்

அப்பனே எவை என்றும் அறிய இருப்பவனுக்கு நோய் நொடிகள் கொடுத்து அப்பனே நிச்சயம் எதை என்று கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய எதை செய்ய வேண்டுமோ எதன் மூலம் செய்ய வேண்டுமோ அனைத்தும் சித்தர்கள் அறிந்தவர்கள் என்பேன் அப்பனே

இதை நிச்சயம் யாங்கள் செய்வோம் அப்பனே

இதனால்தான் அப்பனே ஏன் எதை என்றும் அறிய அறிய ஈசன் அடியார்கள் அப்பனே இன்னும் கீழ்தரமாகவே இருக்கின்றார்கள் அதாவது கீழ் நிலையிலேயே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே

(உண்ண உணவிற்கு கூட வழியில்லாமல் உடுக்க ஆடைக்கு கூட வழியில்லாமல் ஈசன் அடியவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்)

அதனால் அப்பனே பக்தி என்று அப்பனே பணம் வைத்துள்ளோன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஏனோ தானோ என்று உணர்ந்து விட்டு வணங்கி விட்டு எந்தனுக்கு அதை செய்யவில்லை இதை செய்யவில்லை என்று கூறி அப்பனே பின் இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும்  புரிய புரிய

இதனால்...... பல ஈசன் அடியார்களுக்கும் கூட அப்பனே சோறு இல்லை அப்பா !!!!

இதனால் அப்பனே அவனை திருத்தினால் இவன் முன்னேறி விடுவான் இங்கு

(பணம் உள்ளவரை திருத்தி தான தர்மம் செய்வித்தால் ஈசன் அடியவர்கள் நிலை சிறிது உயரும்)

அப்பனே அவ்வளவுதான் எங்களுடைய எதை என்று அறிய அறிய (சித்தர்களுடைய குறிக்கோள்)

அதனால் அப்பனே உண்மையான எதை என்று அறிய அறிய எதை என்று அறிய அறிய

கார்த்திகை தீபம் 26/11/2023

அப்பனே அண்ணாமலையில் கூட நேற்றைய பொழுதிலே யான் பார்த்து விட்டேன் அப்பனே!!!

பல பேருக்கு பல கஷ்டங்களப்பா!!!

ஓடோடி வந்து எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய 

அப்பனே அண்ணாமலையே!!!! அண்ணாமலையானே!!! எங்கள் குறை தீர்!!!!
எங்கள் குறை தீர் !!!

என்று அப்பனே !!!

எவை என்று கூறிய புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே....

அண்ணாமலையானும் கூட எதை என்று கூட பின் உண்ணாமுலை தேவியிடம் பின் பார்த்திட்டு நிச்சயம் சில பரிச்சைகளை வைத்து அனைத்தும் திருத்துவான் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே பின் சில பேருக்கும் அப்பனே பின் தரிசனம் கிடைக்கவில்லையே என்று ஆனாலும் ஈசன் அப்பனே அனைத்தும் பின் மேல் நோக்கி அனைவரின் மீதும் அப்பனே தூவினான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய வருண பகவானை தூவு என்று அனைவருக்குமே ஆசிகள் என்று அப்பனே!!!

(கார்த்திகை தீபத் திருநாளில் திருவண்ணாமலை சுற்றி 40 லட்சம் பக்தர்கள் திரண்டதால் திருவண்ணாமலை புறநகர் பகுதிகளில் சுமார் 4 வழியாக வரும் அனைத்து பாதைகளும் 10 கிலோ மீட்டருக்கு முன்பாகவே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் நகரத்திற்கு அருகில் வந்து மலையில் எரிகின்ற தீபத்தை காண முடியாமல் போய்விட்டது சிலர் தூரத்தில் இருந்து தான் பார்த்தார்கள் ஆனாலும் ஈசன் கருணை கொண்டு அனைவரும் என்னை காண வந்திருக்கின்றார்கள் என்று அனைவரின் மீது என்னுடைய ஆசீர்வாதமாக மழையினை பெய் என்று வருண பகவானுக்கு கட்டளையிட்டு தீபம் ஏற்றிய உடன் திருவண்ணாமலை சுற்றிலும் மழை பெய்து சிறிது நேரம் அனைவருக்கும் ஈசனின் ஆசிர்வாதமாக பொழிந்தது)

இப்பேர்ப்பட்ட கருணை உள்ளவன் அப்பனே..... பின் மனிதனுக்கு நல்லதை செய்ய மாட்டானா?????? அப்பனே கூறுங்கள் !!!!!!

( அண்ணாமலை உண்ணாமுலை)

கருணை மிகுந்தவர்கள் தான்!!!

ஆனால் நீங்களோ அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அதனால்தான் பிறவியிலேயே ஒரு ஈனப்பிறவி மனித பிறவியப்பா!!!!! 

மனிதன் எதை எவை என்று கூட பின் கொலை செய்யவும் தயங்க மாட்டான் கலியுகத்தில் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய இனிமேலும் அப்பனே பின் எதை என்று கூட அனைத்தும் தவறுகள் செய்துவிட்டு பின் கிருஷ்ணார்பணம் அப்பனைப் பின் சிவார்ப்பணம் என்று சொல்லிவிட்டால் அவந் தனை அப்பனே எங்கே அடிப்பேன் என்றும் அப்பனே எதை என்று அறிய அறிய இப்படியெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே அப்பனே அவந்தனக்கு நோய் வராமலா பின் சென்று இருக்கின்றது அப்பனே கூறுங்கள் என்னென்ன கஷ்டங்கள் என்று கூட அப்பனே தவறை செய்து விட்டு இவந்தன் எதை என்று கூட 

எச்சரிக்கின்றேன் அப்பனே எவை என்று அறிய அறிய இனி மேலும் இதை சொன்னால் அப்பனே  

எதை என்று அறிய அறிய அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே மற்றவர் பின் மனதையும் காயப்படுத்துவது அப்பனே அதுவும் ஒரு பாவமப்பா.... எதை என்று அறிய அறிய அப்பனே

ஆனால் சொல்வான் அப்பனே நீங்கள் மட்டும் பின் எதை என்று கூட பின் எவை என்று அறிய அறிய அதனால் அப்பனே பின் சித்தர்களை பொய் ஆக்குவார்கள் என்பேன் அப்பனே

ஏனென்றால் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பேன் அப்பனே... பொய் சொல்லி தான் நடத்த வேண்டும் என்று

ஆனாலும் கலியுகத்தில் யாங்கள் விடமாட்டோம் அப்பனே.... பார்ப்போம் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே 

அகத்தியனை தெரிந்து கொண்டவன் மௌனத்தை சாதிப்பான் அப்பனே அமைதி கொள்வான் என்பேன் அப்பனே

அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று சொல்வான் அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் அனைவருக்குமே பின் அண்ணாமலையும் உண்ணாமுலையும் முருகனும் எதை என்று கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூட பிள்ளையோனும் எதை என்று அறிய அறிய பின் அனைவருக்குமே எதை என்று அறிய அறிய எங்களால் பின் நெருங்க முடியவில்லையே என்று சொல்பவர்களுக்கும் கூட

(அண்ணாமலை நெருங்க முடியாமல் தூரத்தில் இருந்து பார்த்தவர்களுக்கும் அண்ணாமலை நோக்கி வர முடியாமல் மனதிலேயே நினைத்துக் கொண்டவர்களுக்கும்)

அப்பனே ஆசிகள் கொடுத்து விட்டார்கள் அப்பனே இது ஈசனின் கருணையால்

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய இது இன்றளவே அப்பனே பக்தர்களுக்கு போய் சேரட்டும் என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய

(கேட்டுக் கொண்டிருந்த அடியவருக்கு குருநாதர் தந்த உத்தரவு இந்த வாக்கு உடனடியாக இன்று மக்களுக்கு போய் சேர வேண்டும் என்று)

ஈசன் கருணை உள்ளவன் அப்பா

ஆனாலும் ஈசனையே மனிதன் எதை என்று அறிய அறிய அப்பனே பின் பணங்கள் கொடுத்து கொடுத்து அப்பனே மனிதனை எதை என்று கூட பின் எவை என்று யான் தான் பெரியவன் என்று சொல்லி சொல்லி பல பேரையும் பின் எவை என்று கூட கடைசியில் இறைவன் இல்லை என்று அதாவது ஈசன் இல்லை என்று பின் எவை என்று கூட அவனே சொல்லிவிட்டான்.

அதனால்தான் அப்பனே ஈசன் சோதித்து சோதித்து வரங்கள் கொடுத்துக் கொண்டே வருகின்றான் அப்பனே 

எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே வாக்குகள் உண்டு!!!

அப்பனே எதை என்று கூட வாக்குகள் வராதவர்களுக்கும் கூட அப்பனே இவ் வாக்கிலே யான் தெரிய படுத்துவேன் அப்பனே நீங்களே பின் என்னை தான் சொல்கின்றார் பின் அகத்தியன் என்று கூட நினைத்துக் கொள்ளலாம் அப்பனே

(இவ் வாக்குகள் அனைவருக்கும் ஆனது வாக்குகள் யார் யாருக்கு கிடைக்கவில்லையோ அவர்களுக்கும் இந்த வாக்கு அவர்களின் சொந்த வாக்கு அவர்களுக்கு குருநாதர் கூறிய வாக்கு என்று நினைத்துக் கொள்ள வேண்டும்)

எதை என்றும் புரிய புரிய அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பா

எவை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது பின் வலை தளத்தை இயக்குபவனை அப்பனே பின் எதற்கெடுத்தாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே என்னுடைய ஆசிகள் இருக்கும் பொழுது அவந்தனுக்கும் பல வழிகளிலும் கூட பின் எதை என்று அறிய அறிய எப்படியோ அவந்தனை எதை என்று அறிய அறிய சாகடிக்கலாம் என்றும் கூட!!!

அப்பனே தீங்கு செய்தார்கள் அப்பனே அங்கும் இங்கும் சென்று அதாவது தவறானதையெல்லாம் பயன்படுத்தி....

ஆனாலும் யான் காப்பாற்றி விட்டேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

மனிதன் எப்படிப்பட்ட எதை என்று கூட மட்ட புத்தி உள்ளவன் என்று கூட அப்பனே 

இதை உடனடியாக தெரிவித்து அப்பனே நன் முறைகளாக மீண்டும் தளத்தில் பல வழிகளிலும் கூட எதை என்று அறிய அறிய அப்பனே வாக்குகள் சொல்கின்றேன் அப்பனே

மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய எங்களுக்கு கஷ்டங்கள் வருகின்றது அப்பனே எத்தனையோ வாக்குகள் சொல்லிவிட்டேன் அப்பனே

திருத்தலங்களுக்கு செல்லுங்கள் செல்லுங்கள் என்று அப்பனே

ஆனால் எவை என்று கூட எங்களால் செல்ல முடியவில்லையே என்று அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே 

உண்மையானவன் அப்படி சொல்ல மாட்டான் அப்பா எதை என்று அறிய அறிய!!!

அகத்தியனே எப்படியாவது என்னை அழைத்துக் கொண்டு செல் எதை என்று கூட எவை என்று அறிய அறிய

இல்லையென்றாலும் எவை என்று கூட அமைதியாக மௌனம் காத்திருக்கின்றேன் எதை என்றும் புரிய புரிய என்றெல்லாம் அப்பனே நிச்சயம் 

யானே அவனை வீட்டை அதாவது பின் வந்தடைந்து அப்பனே அவந்தனுக்கு என்ன தேவையோ அதைச் செய்வேன்... எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே

எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே எதை என்று கூட அப்பனே எவ்வளவு புலவர்கள் எல்லாம் ஞானிகள் எல்லாம் இறைவனை அடைய அப்பனே முயற்சிகள் எடுத்தார்கள் கஷ்டங்கள் பட்டார்கள் என்பதை எல்லாம் இன்னும் கூறுகின்றேன் அப்பனே

63 நாயன்மார்களும் எதை என்று கூட பல கஷ்டங்கள்.

இன்னும் இருக்கின்றார்கள் அப்பனே அதையெல்லாம் மறைத்து விட்டார்கள் அப்பனே இப்படி கஷ்டத்தை பட்டால் தான் இறைவனை காண முடியும் என்றெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் பின் எவை என்றும் புரிய புரிய.... அதனால் அப்பனே இன்னும் இன்னும் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே அதனால் சரியான பாதையிலே நீங்கள் செல்வதற்காகதான் அப்பனே யாங்கள் வகுத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே 

எதை என்று கூட ஆனால் இதையும் கேட்பான் இன்னொருவன் அப்பனே எதை என்று அறிய அறிய 

எங்களுக்கு சரியான பாதையில் பின் போக தெரியாதா என்ன???? என்று!!! 

ஆனாலும் அப்பனே பின் போக தெரியாமல் தான் அப்பனே பின் கஷ்டங்கள் பட்டு மனைவியும் உன்னால் அப்பனே கஷ்டங்கள் பட்டு பட்டு பின் பிள்ளைகளும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்றும் புரிய புரிய இன்னும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்றும் அறிய அறிய!!!

அதனால் முட்டாள் மனிதனே யான் சொல்வேன் இப்பொழுது கூட

உந்தனுக்கு என்ன கேள்வியோ??? எதை என்று அறிய அறிய இச் சுவடியை ஓதுபவனை நேரடியாக அப்பனே!!!

அப்படி இல்லை என்றால் நீ என்ன செய்து இருக்கின்றாய் என்று எவை என்று கூட நாமத்துடனே குறிப்பிடுவேன் அப்பனே

எதை என்று கூட போதுமா???

அப்பனே நலன்கள் ஆசிகளப்பா!!!! 

இன்னும் வாக்குகள் சொல்கின்றேன்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!
 


Monday 27 November 2023

சித்தன் அருள் - 1518 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 29!


அடியவர் :- ( குருநாதர் என்ன வேண்டும் என்று இந்த சிறுவன் அடியவர் அதற்கு வீடு வேண்டும் என்று கேட்க , அதற்குப் பின் வருமாறு உரைத்த வாக்கு - பொது வாக்காக அடியவர்கள் ஏற்றுக் கொண்டு குழந்தைகளை வளர்க்க நலம் உண்டாகும்)

குருநாதர்:-  அப்பனே இவன் இப்படி எல்லாம் கேட்கிறானே, இதிலிருந்தே தெரிகிறது அப்பனே இவன் லட்சணத்தை அப்பனே. இவன் சரியாக அப்படியே முதலில் நன்றாக ஓத வேண்டும், இன்னும் மேற் கல்விகள் கற்க வேண்டும்,  பின் அதன் பின்பே அனைத்துக்கும் சேவை செய்ய வேண்டும் என்று கேட்க வில்லையே அப்பனே. எப்படி வளர்த்துள்ளார்கள் பார் என்பேன் அப்பனே. இப்படியெல்லாம் வளர்த்தார்கள் தான் அப்பனே பின் துன்பப்படுகின்றார்கள் பெற்றோர்கள் கூட.

அதனால் அப்பனே என்ன வேண்டும் என்று நீ கேட்க வேண்டும். யான் அப்பனே நீ இறைவனை நினைத்து , அனுதினமும் தீபம் ஏற்றி , அவன் அதாவது கந்த சஷ்டி பாடலை பாடிக்கொண்டே வா அப்பனே. நீ என்ன கேட்டிருந்தால் அப்பனே யான் இன்னும் நன்றாக ஓதுதல் வேண்டும் , இன்னும் மேற்கல்வி அறிய நல்ல அறிவு பின் இறைவா தர வேண்டும்,  அதனை பயன்படுத்து பின் தாய் தந்தையருக்கு அனைத்தும் நன்றாகச் செய்ய வேண்டும். அது மட்டுமில்லாமல் மக்களுக்கு உதவிக்கரமாக இருக்க வேண்டும் என்று தான் அப்பனே  இறைவன் இடத்தில் அப்பனே வேண்ட வேண்டும் அப்பனே. இப்படி வேண்டினால் தானாகவே உன் பெற்றோர்களுக்கு அனைத்தும் கொடுத்து விடுவார்கள் அப்பனே. தெரிந்துகொள் அப்பனே.

தெரியாது அப்பனே உன் அம்மையும் இப்படித்தான் வாழ வேண்டும், இறைவனை எப்படி வணங்க வேண்டும்? என்று எல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு அடுத்த வாக்கில் கூறுகின்றேன் அப்பனே. தெரியாமல் பின் அப்பனே அதாவது சில சில வழிகளில் கூட பிள்ளைகள்  எப்படி வளர வேண்டும் என்பதைக் கூட அப்பனே தாய் தந்தையருக்குத் தெரியாமல் வளர்த்து விடுகின்றார்கள். இதனால் தான் குறைகள் அப்பா. அதனால் அப்பனே சொல் அவள் அதாவது ( உன் ) பெற்றவள் தனக்கு இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று அப்பனே சொல்லிக்கொடு.

அடியவர் 1: அடுத்த பிறவி எடுக்ககூடாது. அதற்கு என்ன செய்ய வேண்டும்.

குருநாதர்:- அம்மையே இறைவனையே நினைத்துக் கொள். எதையும் மனதில் நினைக்க கூடாது என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன். அப்பனையும் அம்மையும் மனதில் நினைத்துக்கொள். கவலைகள் இல்லை.

அடியவர் 2:- செய்வினை கோளாறுகள் நிறைய உள்ளது ஐயா.

குருநாதர்:- அப்பனே வாராகி தேவியின் தலத்திற்கு சென்று கொண்டே வா அப்பனே.

அடியவர் 3: ( இந்த அடியவர் தனது வாழக்கை நிலை குறித்து கேட்ட கேள்வி. அதன் பதில் பொது பதிலாக அனைவருக்கும்)

குருநாதர்:- அப்பனே நேற்றைய பொழுதிலே சொல்லிவிட்டேன். இறைவன் அதாவது விதியில் எப்போது இருக்கின்றதோ அப்பொழுதுதான் நடக்கும் என்பேன் அப்பனே.  அதன் முன்பே போராடினாலும் அப்பனே சண்டைகள் போட்டாலும் அப்பனே நடக்காது அப்பா. சொல்லி விட்டேன். அதற்கு அதாவது விதியில் எப்பொழுது பின் எவ்வயதில் ,  அப்பனே பின் என் நேரத்தில் நடக்கும் என்பதை கூட ( அறிந்து கொள்வதற்கு ) சில புண்ணியங்களாவது  தேவைப்படுகிறது அப்பனே. புண்ணியங்களை செய்யச்சொல் அடுத்த வருடம் யான் சொல்லுகின்றேன். வரச்சொல்.

அடியவர் 4:- ( இதனிடையில் அங்கு ஓர் இளமங்கைக்கு அனைவர் இருக்கும் இடத்தில் வரும் பொழுது எப்படி பாரம்பரிய உடை உடுத்தவேண்டும் என்று அறிவுரை அளித்தார்கள்.)

குருநாதர்:- அம்மையே பக்குவம் இல்லாமல் எதை செய்தாலும் தோல்வியில் முடிந்து விடும். அம்மையே தினமும் அதிகாலை 5 மணிக்கு எழுந்திரிக்கச் சொல்.

அடியவர் 5:- ( சில தனிப்பட்ட கேள்வி. அதன் பதிலில் மலைக்க வைக்கும் பொது ரகசியம்.)

குருநாதர்:- ( இந்த அடியவரின் பிரச்சினைகளை எடுத்து உரைத்தார். அதில் உலகம் அறியாத அக்தீசனின் இறை வல்லமை செயல் ஒன்றை எடுத்து உரைத்தார்கள். )

ஒரு செல்லானது அம்மையே கண்களில் இருக்க வேண்டும். அது மூளையில் வந்து அமர்ந்து விட்டதம்மா. யான் மீண்டும் அமர்த்துகின்றேன். அப்பொழுதுதான் உந்தனுக்கு மனக்குழப்பங்கள் என்பதே வராது. அதை முதலில் யான் சீர்படுத்தி அனைத்தும் தருகின்றேன். ஆனால் நீ பேசக்கூடாது. வாய் திறக்கக்கூடாது. சொல்லிவிட்டேன் அம்மையே. ( அவர்கள் பெற்றோரை பாரத்து பேசாமல் இருக்க கடும் உத்தரவு ஒன்று வழங்கினார்கள் ).

( அடியவர்கள் கவனிக்கவும்:- தமது உடம்பில் பல தொல்லைகள் நமது கர்மாவினால், அணுக்களின் நகர்வுகளால் நடக்கின்றது. இதனை சரி செய்யும் இறை வல்லமை அகத்திய பிரம்ம ரிஷிக்கே உண்டு என்பதை உணர்க. இது போன்ற பல இறை வல்லமைகள் உள்ள ஆதி குருவின் வழி நடக்க, அவர் நாடி வாக்கினை படிக்கும்  நீங்கள்  புண்ணியவான்களே. இது போல குருநாதர் பலருக்கும் , பல கோடானு கோடி உயிர்களுக்கும் அருளுகின்றார் என்பதை உணர்ந்து அவர் பாதம் நன்றியுடன் பணிந்து அவர் கூறிய தர்ம வழியில் நடந்து முக்தி பெறுங்கள். )

அடியவர் 6:- ( தொழில் ஏற்ற தாழ்வு குறித்த கேள்வி. அதன் பதில் பொது பதிலாக அருளினார்கள்.)

குருநாதர்:- அப்பனே இவை எல்லாம் வரும் போகும் என்பேன் அப்பனே. இறைவன் கொடுப்பதை அவனே எடுத்துக் கொள்வான் என்பேன் அப்பனே. அனைவருக்குமே இது உண்டு அப்பனே. கல்வி கொடுத்தாலும் கடைசியில் எடுக்கத்தான் போகின்றான். தொழில் கொடுத்தாலும் கடைசியில் எடுக்கத்தான் போகின்றான். இறைவன்  எதை கொடுத்தாலும்  அது இறைவனுக்கு சொந்தம் அப்பா. இவை எல்லாம் ஏற்ற தாழ்வுகள் வரும். இவை எல்லாம் யார் ஒருவன் சரியாக சுமந்து செல்கின்றானோ அவன்தான் வெற்றியாளன் என்பேன் அப்பனே.

அனைத்திற்கும் காரணம் இறைவன் என்று யார் இருந்துவிடுகின்றானோ அவன்தான் மனிதன் அப்பனே. இதை அனைவரும் உணர்க அப்பனே.

நிச்சயம் தொழில் என்றால் பிரச்சினை வரும் என்பேன் அப்பனே. அதே போல் திருமணம் அதாவது கணவன் மனைவிமார்களுக்கும் பிரச்சினை வரும் அப்பா. பிரச்சினை இல்லாமல் யாரும் இல்லையப்பா. இவை எல்லாம் ஒரு கேள்விகளே இல்லை அப்பனே.

ஞானத்தை பற்றி கேட்கச் சொல், விதியினை சொல்லி விடுகின்றேன் அப்பனே. 3 மாதங்கள் ஈசன் தலத்திற்கு சென்று வரச்சொல் அப்பனே அனைத்தும் சொல்லி விடுகின்றேன்.

(மதுரையில் அகத்திய பிரம்ம ரிஷி அடியவர் இல்லத்தில் உரைத்த இந்த வாக்கு நிறைவு பெற்றது. இந்த தொகுப்பை தமிழில் தட்டச்சு செய்து வெளியிட உதவி புரிந்த அகத்தியர் அடியவருக்கு அகத்தியப் பெருமானின் ஆசீர்வாதங்களையும், அடியேனுடைய நன்றியையும், வாசகர்களின் வாழ்த்துக்களையும் சமர்ப்பிக்கின்றேன். வாழ்க வளமுடன்! ஓம் அம் அகத்தீசாய நமஹ!)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!