​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 20 November 2023

சித்தன் அருள் - 1510 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 22!

கேள்வி கேட்ட அடியவர்:- ஐயா நான் openஆக சொல்ரேன். இந்த பணம் வாங்கி கொடுத்தேன் இல்லையா…( தனிப்பட்ட பிரச்சினையை விவரிக்க ஆரம்பித்தார் …)

குருநாதர்:- அப்பனே செலவு செய்து விட்டான். அவ்வளவுதான் அப்பனே.

அப்பனே இதே போல் நின்று அப்பனே  தியானங்கள் செய் உன்தனுக்கே தோன்ற வைப்பேன்.

நாடி அருளாளர்:- ( இதோபோல் ஒற்றைக்காலில் நின்று தியானங்கள் செய்ய குருநாதர் உள் உரைப்பார்கள் என்று விளக்கம் )

குருநாதர்:- அதனால்தான் அப்பனே ஒரு வேளை  யார் சொன்னாலும் அறிவுகள் இருக்கின்றது அல்லவா? அப்பனே யோசித்து செய்ய வேண்டும் என்பேன். யோசித்து செய்யாவிடில் அப்பனே கடைசியில் நீங்கள் தான் சிக்கிக் கொண்டு அப்பனே தவிப்பீர்கள் பின்பு இறைவா இறைவா என்று சொன்னாலும் இறைவன் எப்படியப்பா காப்பாற்றுவான்? அப்பனே  சொல்லுங்கள் அப்பனே.

அதனால் அப்பனே நிச்சயம் விளக்கங்கள் நீங்கள் தர வேண்டும் சொல்லிவிட்டேன். மூவருமே ஒவ்வொரு கருத்தையும் மக்களுக்கு புரிய வையுங்கள்.

நாடி அருளாளர்:- எதாவது மக்களுக்கு ஏதாவது சொல்லி புரிய வைங்க. நீங்க ஒரு கருத்த சொன்னா , இவரு கொஞ்சம் ,  நீங்க கொஞ்சம். முணு பேருமே சொல்லி புரிய வைக்கனும்

அடியவர் 1:- ஐயா நான் அகத்தியருடைய பெருமையை சொல்ரேன் ஐயா. குருநாதர் பெருமையை. எல்லாருக்கும் தெரிஞ்சு இருக்கும். தெரியாத விசயங்களை சொல்ரேன்.

நாடி அருளாளர்:- சொல்லுங்க ஐயா.

அடியவர் 1:- அகத்தியர் வந்து சப்த ( ஏழு ) லோகங்கள் என்று சொல்லுவாங்க.

அந்த ஏழு உலகங்கள்.ஏழு பிரபஞ்சத்தில்  நம்ம வசிக்கக்கூடிய இந்த பூமி முதன்மையான பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தில் சூரியனை இயக்குவதே அகத்தியர்தான்.  ஏழு பிரபஞ்சத்தில முதன்மையானது இந்த பூமி சூரியனால இயக்கப்படுது. அப்போ இந்த சூரியனை இயக்குவது அகத்தியர்தான். அகத்தியர் தான் உள்ள ஈசனாக நின்று பூமியை இயக்குகின்றார். இதுல இந்த பிரபஞ்சத்தை control பன்றதே அவர்தான். சூர்யனுக்குள்ள பாத்தீங்கன்னா ஈசன். ஈசனுக்கு அப்புறம் ஆதி சக்தி. ஆதி சக்தி அதுக்கு உள்ள அகத்தியர்தான் இருக்கிறார். அதுக்கு அப்புறம் தான் சூரியனுடைய புறப்பகுதி. சூரியனுடைய குழந்தைகள். வெளிப்புறத்தில் சூரியன் இருக்கின்றார். So உள்ள வந்து பாத்தீங்கன்னா ஈசனுக்கு அப்புறம்  வந்து ஆதி சக்தியோட கரைந்து உருகி இருக்கிறார். So அப்டின்றப்போ ஒவ்வொரு உயிருக்குள்ளேயும் அதாவது நம்மளுடைய உங்களுடைய சிரசுக்குள்ள இருக்கக்கூடிய மூளைதான் இறை பகுதி. இந்த இறை பகுதிக்குள்ள அகத்தியர் வசிக்கிறாரு. அதாவது மூளை என்பது இறைவன் வசிக்கக்கூடிய இடம். நம்ம சிரசில அகத்தியர் எல்லா பேருக்கு உள்ளேயும் அகத்தியர் இருக்கிறார்.

( வெளியில் ) எங்கயும் இல்ல. இறைவன் எங்கும் இருப்பது போல அகத்தியர் நமக்குள்ள இருக்குறாரு. ஆனா நம்ம தான் வந்து நம்ம வெளிய கடவுள தேடிகிட்டு இருக்கோம். நமக்குள்ள கடவுள் இருக்கின்றார். நம்ம நம்மள சுத்தப்படுத்திகிறப்போ அகத்தியர் இவ்வளவு நேரம் சொன்ன மாதிரி, தான தர்மங்கள் செய்து,  சரிங்களா. அவரு சொன்ன மாதிரி இவ்வளவு நேரம் சொன்ன மாதிரி நீதி நெறி நடந்து , பிற உயிர்களைக் கொல்லாமல் , நம்ம நல்ல வாழ்க்கை வாழ்ந்து வந்ததோம்னா உண்மையிலேயே சொல்றேன் நமக்குள்ள இருக்க கூடிய தெய்வமான அகத்திய முனி நமக்கு வெளிவந்து நமக்கு காட்சி தந்து நம்மை வழிநடத்துவார்.

குருநாதர்:- அப்ப னே இதற்காகவே அப்பனே உன் இல்லத்திற்கு ஜீவ நாடி வரும் என்பேன். ஆனால் இங்கே தான் கேள்விகள் கேட்க வேண்டும் என்பேன் அப்பனே.

( அடுத்த இரண்டாம் அடியவர் உரைக்க ஆரம்பித்தார் )

அடியவர் 2:- அய்யா அம்மா அப்பா அம்மா எப்படி  ஒரு பிள்ளை பாக்குற மாதிரி கோடான கோடி கருணையா அப்பா அகத்தீசன். ஒரு எண்ணிக்கையில அடங்காத ஒரு தாய், தந்தையும் ஆனவர் நம் குருநாதர். அவரு கிட்ட வந்து பாத்திங்கன்னா கடவுள், தாய் எல்லாத்தையும் தாண்டி ஒரு அன்பு கருணை உள்ள ஒரு ஈசன் அதனால வந்து பாத்திங்கனா நமக்கு எந்த பிரச்சனையாக ஓடி அம்மா அப்பா தான் போகும் எந்த ஒரு கஷ்ட நஷ்டமெல்லாம் அம்மா அப்பா எப்டி நம்ம ஷேர் பண்ணி ஒரு அந்த மாதிரி குருநாதருக்கு கருணைக்கடல் அந்த கருணை மழை அவர்தான் எல்லாமே அவர எப்போதுமே வந்து பாத்திங்கன்னா அவருடைய நாமத்துல நம்ம இருந்தா அப்படினா எந்த பிரச்சனையும் சூரியனைக் கண்ட பனி போல வந்து உருகி ஒடிரும் ஐயா.அதனால எப்பவுமே எல்லாருமே வந்து நம்ம நம்மளும் சரி நம்மள சார்ந்தவங்களும் சரி இந்த கருணைக் கடல்ல கொண்டு போய் நம்ம எல்லாத்தையும் வழிகாட்டுனோம் என்றால் அவங்க எல்லாரும் நல்லா இருப்பாங்க. நம்ம வந்து பிறவி என்னும் பெரும் கடல் இதை அவருடைய திருஅடிபற்றி நீந்தி அவருடைய திருவடிபாதத்துல நம்ம போய்விடலாம் ஐயா. அந்த திருவடிபாதம் நமக்கு கிடைத்தால் இந்த பிறவி நமக்கு வராது. திருப்பி திருப்பி பல யோனிகள்ல பிறந்து பிறந்து இந்த மாதிரி நம்ம கஷ்டத்த அனுபவிக்காம அவருடைய திருவடி பாதத்திலேயே எப்போதுமே சந்தோசமாக நம்ம இருந்துடலாம் ஐயா. நமக்கு தேவையானது இந்த பணம், சொத்து அதோட பெரிய கிடைப்பெரும் அரியதுன்னா மோட்சம்தான். அதை வந்து அப்பா குடுக்க தயாரா இருக்குறாரு. அதுக்கு நம்ம தகுதியா வாய்ந்தவரா நம்ம மாறிடனும். அது அவரு திருவடியை பற்றி நம்ம மாறிடனும் ஐயா.

( இதனிடையில் அங்கு சிலர் அடியவர்களுக்கு வெளியே இருந்து தேனீர் வரவழைத்து கொடுத்தனர். இதை கவணித்த கருணைக்கடல் இறங்கிவந்து பின்வருமாறு உரைத்தார்கள்..அது சுயசார்பு பொருளாதாரம் மற்றும் உணவு தயாரிப்பில் வரும் கர்மங்களை நீக்கும் வழி ஆகும். வெளியே சாப்பிடும் உணவில் கட்டாயம் கர்மா இருக்கும். இல்லத்தில் ஆத்மாரத்தமாக செய்யும் உணவு தயாரிப்பே கர்மாவை தவிர்கும். இன்றும் பல இல்லத்தரசிகள் அனைத்து உணவு இல்லத்தில் தயாரிக்கும்போது ராமர் மந்திரம், சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்பணம், சர்வம் சிவார்ப்பணம், சர்வம் விஷ்ணுவர்பணம் என்று சொல்லி சொல்லியே தன்குடும்பத்தை உணவு கர்மத்தில் விழாமல் காக்கின்றனர். அந்த தெய்வீக இல்லத்தரசிகளை போற்றுவோம். இப்போது மீண்டும் குருநாதர் வாக்கின் உள நுழைவோம்….)

குருநாதர்:- அப்பனே அனைவருமே அப்பனே தற்பொழுது தேநீர் என்று சொல்கிறார்கள் அப்பனே அருந்துகின்றார்கள். அதை யார் கொடுத்தவர்கள் அதை யார் கொடுத்தவர்கள்? அவர்கள் முன்னே ( வரட்டும்).

நாடி அருளாளர்:- அம்மா இந்த டீ எல்லாம் இங்க யார் குடுத்தாங்க. வர சொல்லுங்க அவங்களை.

அடியவர்:- ( பல உரையாடல்கள், சலசலப்பு அங்கு. வாங்கி கொடுத்தவர், கொண்டுவந்த அனைத்து அடியவர்கள் ஜீவ நாடியின் முன்னர் வந்தனர் )

குருநாதர்:- அப்பனே இதை ஏன் கொடுத்தாய்?

அடியவர:- (அங்கு உள்ள ஒரு அடியவர் ) ஐயா வாங்கிட்டு வர சொன்னாங்க.

குருநாதர்:- அப்பனே இத்தனை பேர்கள் ( இங்கு ) இருக்கிறார்களே? ஒருவருக்காவது இதை ( தேனீர் ) செய்ய தெரியாதா என்ன?

நாடி அருளாளர்:- இத்தனை பேர் இருக்காங்களே இங்க காபி டீ யாருக்கும் தயார் செய்ய தெரியாதான்னு கேட்கின்றார்.

அடியவர்:- தெரியும் ஐயா

குருநாதர்:- அப்பனே முதலில் யாருக்கு யார் இடத்தில் கொடுத்தாய்?

( பல உரையாடல்கள். ஒரு அம்மை வந்தார் )

குருநாதர்:- அம்மையே நீதான் அல்லவா?  அனைவருக்கும் நீயே உன் கையால் கொடு. அம்மையே தயாரித்து கொடு.

( இந்த அம்மை மிகவும் கொடுத்து வைத்தவர். கருணாமூரத்தியே நேரில் கொடுத்த அருள் உத்தரவு. இந்த அம்மை மட்டும் தனியே அனைவருக்கும் தயாரித்து கொடுக்க உத்தரவு இட்டார்கள்)

குருநாதர்:- அம்மையே என்று அறிய முதலில் இச்சோம்பேறியை போடச்சொல்.

( அடியவர் தேனீர் தயார் செய்ய ஆரம்பித்தார். இதனிடையில் பல உரையாடல்கள்)

குருநாதர்:- அம்மையே ஆசைகள் அனைவருக்குமே கேளுங்கள்.

(மீண்டும் கருணைக்கடல் அனைவருக்கும் கேள்வி கேட்க ஒரு வாய்ப்பு அருளினார்கள்)

(அடியவர் ஒருவர் தனது பெயரை கூறினார்)

குருநாதர்:- அப்பனே உந்தனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கிறேன். அனைவருக்கும் என்ன வேண்டும் என்று கேட்டிட்டு என்னிடத்தில் கேள் அப்பனே.

( இந்த அடியவருக்கு கருணைக்கடல் அனைவரின் கேள்விகளை கேட்டு நாடி அருளாளருடம் சொல்ல உத்தரவு இட்டார்கள்)

அடியவர்:- ஐயன் வந்து கிருமிகள் தொற்று வரப்போகுதுன்னு ஜீவ நாடியில. அதனால

ஐயன் வந்து பல பரிகாரங்கள் , தானங்கள் தருமங்கள் செய்யனும்னு சொல்லிட்டாங்க. மக்களுக்கு எடுத்து எல்லாமே சொல்லிட்டாங்க. நீங்க தர்மப்படிதான் வாழனும். நீங்க தர்ம சிந்தனையோட இருக்கனும் என்று பல இடங்களில் / வலைதளங்களில் சொல்லிட்டாங்க. ஆனா இப்ப அடியேனுடைய ஒரு எண்ணம் என்ன ஒரு கேள்வினா இப்போ அக்னிஹோத்தரம் சொல்லி இப்ப பண்ணிட்டு இருக்காங்க. அது இல்லந்தோறும் அகத்தியப்பெருமானுடைய அணியவர்களோ , மற்றவர்களோ அந்த அக்னி ஹோத்தரம் காலை மாலை தொடரந்து செய்யலாமா? அய்யன் உத்தரவு கொடுக்கனும்.

குருநாதர்:- அப்பனே 108 மூலிகைகளால் சுவாசித்தாலே அப்படியே பல நோய்கள் தீரும் அப்பா. முடிந்தது.

அடியவர்:- வாழ்க்கை நிலை தடுமாற்றம்…

குருநாதர்:- அப்பனே என்ன செய்கிறாய் என்று கேள்?

அடியவர்:- (_________)

குருநாதர்:- அப்பனே என்னை பற்றி கேள்.

(அடியவர் அடியவரிடம் கேட்டார். )

அடியவர் :- ( கருணைக்கடல் அகத்திய பிரம்ம ரிஷி குறித்து சில செய்திகள் உரைத்தார் )

குருநாதர்:- அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே. இது போல் அப்பனே பின் அதாவது 100  பேரையாவது அப்பனே உயிர்களை கொன்று அப்பனே சாப்பிட்டக் கூடாது என்று சொல்லச் சொல் அப்பனே. தானாக அனைத்தும் மாறும் என்று சொல்.

( அசைவம் சாப்பிடும் இந்த அடியவருக்கு அவர் அசைவம் உண்ணுவதை வாழ்வில் அடியோடு நிறுத்தி பின்னர் 100 பேரிடம் அசைவம் தவிர்க்க வேண்டும் என்று உரைக்க வேண்டும் என்று கருணைக்கடல் குருநாதர் ஒரு வினை தீர்க்கும் எளிய வழி சூட்சும பரிகாரத்தை அருளினார்கள் )

குருநாதர்:- அப்பனே முதலில் கூறு அவன் தனக்கு பிற உயிர்களின் மாமிசத்தை உண்ணக் கூடாது என்று. அப்பனே நீ கேள் இவன்தனை.

அடியவர்:- ( சில உரையாடல்கள் )

குருநாதர்:- அப்பனே நீ கூறு ஈசனைப் பற்றி.

அடியவர்:- ஈசன் தான் மூலப்பொருளாக இருக்கின்றார். அவரை மீறிய தெய்வங்கள் இல்ல.  அவரைய நினைச்சுகிட்டா வாழ்க்கையில எல்லாமே நடக்கும். அவர் அருளால் தான் இந்த உலகத்தில் எல்லாமே நடக்கின்றது. அவரு  இன்றி எந்த அனுவும் அசையாது.

குருநாதர்:- அப்பனே பிற உயிர்களை கொல்லாது என்று ஏன் சொல்கிறாய் என்று அவன் இடத்தில் கூறு.

அடியவர்:- நம்ம மாதிரி தான் இன்னொரு உயிரும் பிறந்திருக்கு. அதனால அந்த உயிருக்கு ஜீவ காருண்யத்தோட இருந்து அந்த உயிர காப்பாத்தனும்.

குருநாதர்:- அப்பனே இப்பொழுது அதைத்தின்றால் ( அசைவம் ) நிச்சயமாய் நோய்கள் வரும் அப்பா. இப்பொழுது நீயே கூறிவிடு சாப்பிட்டால் நோய்கள் வரும். உடம்பில் அனைத்து குறைகளும் வரும் அப்பனே என்று நீயே கூறு பலமாக அனைவருக்கும் பலமாக.

அடியவர்:- எந்த உயிரையும் கொல்லக்கூடாது.இந்த உயிரை கொன்று சாப்பிடுவதனால கன்டிப்பாக நோய் வரும் என்று அகத்தியர் சொல்ரார். அதனால ஜீவ காருண்யத்தை கடை புடிக்கனும் என்று அகத்தியர் சொல்ரார்.

அடியவர் 2:- அந்த உயிரோட கர்மாவும் நமக்கு சேரும்.

குருநாதர்:- அதனால் அப்பனே அனைவருக்கும் வள்ளல் பெருமான் சொன்னானே அதைச்சொல்.

அடியவர்:- வள்ளல் பெருமான் ஜீவகாருண்யத்தை அனைவரும் கடைபிடிக்கனும். எந்த உயிரையும் கொல்லக்கூடாது. கொல்லாமை ஐயா சொல்லி இருக்காங்க. அத வந்து எல்லாரும் பின் பற்ற வேண்டும்.

குருநாதர்:- அப்பனே பின் ( வள்ளலார் இராமலிங்க அடிகள் ) அவனை விட ஒரு ஞானியா? அப்பனே. அவன் சொல்வதை கேட்காவிடில் அப்பனே அனைவருக்குமே கஷ்டங்கள் தான் வரும். அவன் சொல்வதையே கேட்டதில்லை. அப்பொழுது உண்ணுகின்றவன் அப்பனே அறிவாளியா? சொல்கின்றவன் முட்டாளா? அப்பனே. நீ விளக்கம் அளி அனைவருக்குமே.

அடியவர்:- ( இராமலிங்க அடிகளர் , வள்ளல் பெருமான்)  அவரைவிட அறிவாளி இல்லை ( யாரும் மனிதர்களில் ).

குருநாதர்:- அப்பனே அப்போது அறிவாளி சொல்வதை கேட்க வேண்டுமா இல்லையா?

அடியவர்:- கண்டிப்பாக கேட்க வேண்டும்.

குருநாதர்:- அப்பனே அதை கேட்காதனால்தான் வருவதே பிரச்சனை என்பேன் அப்பனே.  பக்தர்களே சொல்கிறார்கள் அப்பா பின் உண்டு என்று கவலை இல்லை என்று. இது நியாயமா? அங்கேயே பக்தி பொய்யாகின்றது. ஆனாலும் அவர்கள் தான் நம்புகிறார்கள் அப்பனே எப்படி அப்பா உங்களுக்கு மோட்சம் கிடைக்கும்? உன் கஷ்டங்கள் தீரும் அப்பா ? கூறுங்கள்?

( நாடி அருளாளர் சில விளக்கங்கள் )

குருநாதர்:- அப்பனே ஈசன் யார் என்று தெரியுமா? அனைவருக்குமே.

அடியவர்:- தெரியும் ஐயா.

குருநாதர்:- அப்பனே ஈசன் தண்டனை கொடுத்தால் யாராவது பின் தாங்குவார்களா என்ன?

அடியவர்கள்:- தாங்க முடியாது.

குருநாதர்:- அப்பனே அப்படிப்பட்டவன் பிள்ளைகளை ( பிற உயிர்களை) கூட அப்பனை கொன்று தின்கின்றார்களே அப்பனே அப்பொழுது அவனுக்கு கோபம் வந்தால் உலகத்தில் அப்பனே எதை எதையோ செய்து விட்டு நோய்களாக பரப்பி கஷ்டங்களை கொடுத்து கடைசி யில் அழித்து விடுவான். அப்பனே சொல்லிவிட்டேன்.

( அனைத்து உயிர்களும் ஆதி ஈசனின் பிள்ளைகள். ஜீவ காருண்யத்தை அடுத்தவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அசைவம் சாப்பிடாமல் தடுத்தால் அதுவே மிக்பெரிய ஆதி ஈசன் மனம் மகிழும் புண்ணியம். அடியவர்கள் அனைவர்ருக்கம் எடுத்து சொல்லுங்கள். அப்படி சொல்லவில்லை என்றால்……..)

எச்சரிக்கையாக இருங்கள் அப்பனே. நீங்களும் மற்றவர்களுக்கும் உங்களால் முடிந்தவரை சொல்லுங்கள். பின் சொல்லாமல் இருந்தால் நிச்சயம் கடைசியில் நோய்கள் வந்துவிடும். அப்பனே குடும்பங்களில் சிக்கல்கள் வந்துவிடும். அப்பனே சண்டை சச்சரவுகள் வந்துவிடும் அப்பனே. அதனால் அவை எல்லாம் அதாவது இப்பொழுதே உணரச்செய்யுங்கள் அப்பனே.

ஆனால் ( நீங்கள் அசைவம் சாப்பிட வேண்டாம் என்று எடுத்துச சொல்லி அப்படி அவர்கள் கேட்காவிடில் ) அவருடைய விருப்பமே என்று நீங்கள் விட்டுவிடுங்கள். ஆனால் ( அசைவம் உட்கொண்டு ) தவறு செய்தவன் அப்பனே நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும் அப்பனே . எதை என்று அறிந்த பொழுதும் அறியாத பொழுதும் கூட அப்பனே தின்றுட்டு நின்றுட்டு் எவை என்று அறிய அறிய பிரம்மஹத்தி தோஷத்தில்  முதல் வகையான ( தோஷமாக ) வருவது தன் சுயநலத்திறக்காக தன் சுவைக்காக அப்பனே எவனொருவன் உட்கொள்கின்றானோ அதில்தான்  முதல் வகையான அடிக்கும் அடி பலமான அடியப்பா பின் குடும்பமே கெட்டு விடும் என்பேன் சொல்லிவிட்டேன் அப்பனே.

அப்பனே ஆனாலும் சிலபேர் கேட்பார்கள் அப்பனே இதையும் கூட நேற்றைய பொழுதில் சொல்லி விட்டேன் அப்பனே. உண்பவர்கள் அப்பனே நலமாக இருக்கிறார்கள் என்று. ஆனால் எத்தனை எத்தனை நோய்கள் அப்பா.

அப்பனே நீங்கள் போய் அப்படியாப்பா எதையும் புரியாமல் கூட அப்பனே கடைசியில் நோய்கள், நோய்கள் என்று எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கிறார்கள். தீபங்கள் ஏற்றிக் கொண்டிருக்கிறார்கள். இறைவனை நாடி நாடி கொண்டிருக்கிறாரகள் அப்பனே.

அதானால்தான் சொன்னேன்.  பின்பே வருவதை முன்பே சொல்லிவிட்டேன். அப்பனே பயன்படுத்தினால் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அப்படி இல்லை என்றால் யாரோ சொல்கிறான் என்று அதாவது இதை என்று அறிய பின்பற்றவில்லை என்றால் அப்பனே தண்டனைகள் உண்டு கடைசியில் அப்பனே சொல்லிவிட்டேன்.

அப்பனே அவை மட்டும் இல்லாமல் ஈசனுடைய குழந்தைகளை ( பிற ஜீவரீசிகளை ) கொன்று விட்டு அப்பனே ஈசனிடத்தில் சென்றால் அப்பனே என்ன பிரயோஜனம்? அப்பனே. அப்போது எண்ணிக் கொள்ளுங்கள் மனிதன் எவ்வளவு  கீழானவனாக ( கேவலமாக) இருக்கின்றான் என்று அப்பனே.  எப்படி அப்பா ஈசன் நல்லதே செய்வான் அப்பனே.?

அதனால் அப்படியே சொல்லிவிட்டேன். எப்பொழுதும் என் பக்தர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. மாமிசத்தை உண்டால் கஷ்டங்கள் வந்தே தீரும். அதாவது அகத்தியனை நம்பினாலும் சொல்லிவிட்டேன்.

குருநாதர்:- அறிந்தும் அறிந்தும் அதனால் அப்பனே நல்லதை செப்பிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. ஏற்றுக் கொள்ளுங்கள் அப்பனே. ஏற்றுக் கொள்ளாவிடில் அப்பனே தீயவைதான் நடக்கும் சொல்லிவிட்டேன். அதனால்தான் அப்பனே வாக்குகள் வாக்குகள் என்று கேட்கிறார்கள் அப்பனே. ஆனாலும் யான் சொன்னாலும் அப்பனே அவன்தன் பாவத்தில் இருக்கின்றான் என்பேன் அப்பனே. முதலில் அப்பனே எப்படி மனிதனாக வாழவேண்டும் என்று எண்ணி வாழவேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் நன்றாக இறைவன் எங்கு இருக்கின்றான்,  எங்கு வலம் வந்து கொண்டிருக்கிறான், அப்பனே எங்கு இருக்கிறான் அங்கு சென்றால் எப்படி நலமாகும் என்பவை எல்லாம் உங்களுக்கு என்ன தேவை? அப்பனே எப்படி என்று சொல்லி தர முடியுமே தவிர , அப்பனே பின் அழுக்குகள் உள்ளே இருந்து எவ் இறைவனை வணங்கினாலும் ஒன்றும் செய்யப்போவதில்லை என்பேன் அப்பனே. கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று கடைசியில் பின் இறைவனே இல்லை. யான் அங்கு பரிகாரம் செய்தேன், இங்கு பரிகாரம் செய்தேன், எத்தனை திருத்தலங்கள் சென்றேன் என்பதை யெல்லாம் அப்பனே ஒரு பிரயோஜனம் இல்லையப்பா தெரிந்து கொள்ளுங்கள். அதனால் தான் நீங்கள் அனைவருமே பூஜியத்திலேயே இருக்கின்றீர்கள் என்பேன் அப்பனே.  அதனால் அப்பனே தெரியவிடில் அப்பனே கேட்டு தெளிவு பெறுங்கள் அப்பனே.தெரியாது என்ன அப்பனே கூறு?

அடியவர்:- அறிவும்தான்.

குருநாதர்:- அப்பனே நீ அழைத்து வந்தாயே, அனைவரிடத்திலும் கேட்டு சொல்.

அடியவர் 1:- தெரியாதது என்ன் ஐயா? ( ஒரு அடியவர் மற்றொரு அடியவரை கேட்டார்)

அடியவர் 2:- அறிவுக்கு புலப்படாதது அது தெரியாது.

குருநாதர்:- அப்பனே அறிவுக்கு புலப்படாதது எது என்று கூறு?

அடியவர்:- ஐயா , மாயை மறைத்தால் அறிவுக்கு பலப்படாது.

குருநாதர்:- அப்பனே மாயை எப்படி மறைக்கும் என்று கூறு.

அடியவர்:- இறை அருள் இல்லை என்றால் மாயை மறைக்கும்.

குருநாதர்:- அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய அனைவரும் இறைவனின் படைப்புகள் தான். அப்பனே அப்படி இல்லாமல் அதாவது இறைவன் இல்லாமல் எப்படியப்பா போகும் கேள்?

அடியவர்:- நல்ல வழி போகாமல் குறுக்கு வழியில் போய் கர்மம் சேர்க்குறாங்க இல்லையா?

குருநாதர்:- அப்பனே இவ் வார்த்தை மட்டும் குறுக்கு வழியில் மட்டும் ஏன் சொன்னாய் அப்பனே.?

அடியவர்:- நான் தப்பு பன்னி இருக்கேன். சொல்றேன் ஐயா.

குருநாதர்:- அப்பனே இதேபோலத்தான் தவறு செய்தவன் தன் வாயில் இருந்துதான் அப்பனே எந்தனுக்கு நோய் இருக்கிறது. எந்தனுக்கு கஷ்டம் இருக்கிறது என்று வரும் அப்பா.  தெரிந்து கொண்டீர்களா அப்பனே?  இதுதான் உண்மை.  அப்பனே அதனால்  தர்மம் பின்பற்றினால்,  அப்பனே அவன் வாயிலிருந்து பின் யான் தர்மம் செய்து கொண்டிருக்கின்றேன். இன்னும் மென்மேலும் செய்ய வேண்டுமென்று வரும் அப்பனே. அதனால் நீங்கள் அனைவருமே இன்பத்தைப் பற்றித்தான் கேட்கின்றீர்கள் அப்பனே. அதனால் எதை மனது நினைக்கின்றதோ அதுவாகவே நீங்கள்  ஆகுவீர்கள் என்பேன் சொல்லிவிட்டேன்.

நாடி அருளாளர்:- ( புரிய வைத்தல் / உரையாடல்கள்)

குருநாதர்:- அப்பனே குறுக்கு வழியில் வாழ்வது எப்படி என்று அப்பனே முன்பே நிற்பவனே நீ கேள்?

 அடியவர் 1:- குறுக்குவழியில் வாழ்வது எப்படின்னு சொல்லுங்கய்யா?

அடியவர் 2:- ஒருத்தனை ஏமாத்தனும் என்றால் குறுக்கு வழியில் போகனும்.

குருநாதர்:- அப்பனே ஏன் ஏமாற்றி என்று ஒன்று வந்து இருக்கிறது என்று தெரியுமா? அவன் பல பேரை ஏமாற்றி இருக்கிறான் அப்பனே. அதனால் எதையாவது சொல்லி அவன் கர்மா சில தீரட்டும் என்று யான் உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அவன்தனக்கு. ( சில தனிப்பட்ட கடுமையான தவற்றை சுட்டும் வாக்குகள்) இதனால் ஆனாலும் சில கர்மாக்களைக்கூட் யான் அழித்திருக்கின்றேன் அவன் தனக்கும் கூட ஆனாலும் கவலையில்லை. ஏன் ஏமாற்றினாய் என்று விளக்கம் தா?

அடியவர்:- ஐயா ஏன் ஏமாத்துனீங்கய்யா?

அடியவர்:- பொருளாதார பிரச்சினை. அதனால்…

குருநாதர்:- அப்பனே இவன் மட்டும் செய்தானா அனைவரும் இப்படித்தான் செய்து கொண்டிருக்கிறார்களா என்று கேள் அவனை?

அடியவர்:- என் தவறை நான் ஒத்துக்கொள்கின்றேன்.

குருநாதர்:- அப்பனே அதனால் எதையும் அறியாமல் கூட அதனாலும் சில கர்மாக்கள் இவனுக்கு சேர்ந்து விட்டது அப்பா இப்பிறவியிலே. அதனால் நிச்சயம் யான் இருக்கின்றேன் என்று சொல் தைரியமாக.

குருநாதர்:- அப்பனே அவன் மூக்கை அப்பனே எது என்று அறிய அறிய முட்டியை தொடச்சொல்.

( அடியவர்கள் சில விளக்கங்கள் குனிந்து மூக்கினால் முட்டியை தொட …….)

அடியவர்:- டம்மி பெருசா இருக்கு தொட முடியல.

குருநாதர்:- அப்பனே  இதையே செய்ய முடியவில்லை என்பேன் அப்பனே. மற்றவர்கள் வாழ்க்கையை திருத்துகின்றானாம் அப்பனே. வேடிக்கையாக உள்ளது என்பேன் அப்பனே. அப்பனே உன்னால் முடியாது அல்லவா? மற்றவனை செய்யச் சொல் அப்பனே யாராவது தேர்ந்தெடுத்து.

( இந்த அடியவர் மூக்கால் முட்டியை தொட இயலவில்லை. கருணைக்கடல் குருநாதர் உத்தரவால் அங்கு உள்ள அடியவர்களை அவர்கள் மூக்கால் முட்டியை தொடச் சொன்னார். இங்கு பல உரையாடல்கள்…)

குருநாதர்:- அப்பனே நிச்சயம் சொல்.

அடியவர்:- மடக்காம தொடனுமா?

அடியவர்:- ஆமாம்

அடியவர்:- (முயற்சி செய்து மூக்கால் முட்டியை தொட்டு விட்டார்)

( இதனை அடுத்து கருணைக்கடல் உரைத்த பின் வரும் வாக்கு அனைவருக்கும் பொருந்தும். அந்த மகத்தான வாக்கு…)

குருநாதர்:- அப்பனே இப்படி நிச்சயம் ( மூக்கால் முட்டியை ) தொட்டால் தன் மனதை அடக்கலாம் அப்பனே. அப்பனே அவன் தொடவே இல்லை அப்பா. அப்பொழுது எப்படியப்பா மனதை அடக்க முடியும். நீயே கூறு?

( தொட முடியாத இந்த அடியவரை அனைவரும் முயற்சி செய்து அடக்க சொன்னார்கள் பயிற்சியின் மூலம். )

குருநாதர்:- அப்பனே இதனால் உன்னையே நீ அடக்கு என்பேன் அப்பனே. அனுதினமும் இப்பயிற்சி செய்து கொண்டே வந்தாலே தன்னை முதலில் அடக்க முடியும் என்பேன் அப்பனே. தன்னை முதலில் அடக்கியவனுக்கு அப்போதுதான் அனைத்தும் விளங்கும் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன்.

( அடியவர்கள் இந்த பயிற்சியை செய்து தொப்பையை குறைத்து மூக்கால் முட்டியை தொட்டு, அதே போல் உடலை என்றும் வைத்து உங்கள் மனதை அடக்கி தன்னை உணரும் உயர்நிலையை அடையுங்கள். தானாகவே அனைத்தும் விளங்கும். )


குருநாதர்:- அப்பனே இவை பெண்களுக்கும் இதற்கு மாற்று உண்டு என்பேன் அப்பனே. அதாவது அதிகாலையிலேயே நிச்சயமாய பின் 4 மணி அளவில் எழுந்து நிச்சயமாய் இல்லத்தை சுத்தம் செய்து பின் அதாவது  பசும் ( பசுமாடு ) எது என்று அறிய பின் மூலிகையை ( பசுஞ்சாணி) பின் கைகளால் பின் நிலத்தை சுத்தம் செய்து வந்தாலே நிச்சயம் அனைத்தும் மாறும். ஆனால் என்றாலும் யாரும் செய்வதில்லை. ஆனால் நிச்சயம் அதை செய்யாமல் இருந்தால் கோபங்கள் அதிகரித்துவிடும் பெண்களுக்கு சொல்லிவிட்டேன்.

அடியவர்:- சாமி பசும் சாணம் கிடைக்காது.

குருநாதர்:- அப்பனே பசு மாட்டை மேய் அப்பனே.

அடியவர்கள்:- ( உற்சாக சிரிப்பு அலை )

அடியவர்:- மேய்க ready சாமி. எவங்கிட்டேயும் இல்ல பசுஞ்சாணம்.

நாடி அருளாளர்:- ஐயா உங்களை மேய்க சொல்கின்றார். அதன் மூலம்…

அடியவர்:- ஆமாம். ஆமாம். நாங்க மேய்க ready ஆயிட்டோம்

குருநாதர்:- அப்பனே அனைத்தும் கஷ்டப்பட்டால்தான் அப்பனே முடியும் அப்பா. அப்பனே மீண்டும் மீண்டும் இங்கே சொல்கின்றேன் கேட்டுக்கொள். இதையும் பலமுறை சொல்லிவிட்டேன். அப்பனே ஒருவனுக்கு வேலை இல்லை என்றால் அப்பனே தேடி தேடி அலைந்து திரிந்து அப்பனே ஒரு வேலையில் அமர்கின்றான் அல்லவா அப்பனே எவ்ளோ கஷ்டங்கள் பட்டு அதனால் அப்பனே பசு மாட்டை மேய்த்தால் அதைவிட புண்ணியம் ஒன்றுமில்லை் அப்பா. முதலில் அதை மேய்.

அடியவர்:-  ஐயா ஒரு doubtங்க. அப்போ சொல்ரப்போ எல்லாம் தெரியும் அப்டீன்னு சொன்னீங்க. இப்போ எதும் தெரியவில்லை அப்டீன்னு ..ஒன்னும் புரியலை ஐயா.

குருநாதர்:- அப்பனே அதனால் தான் சொன்னேன் அப்பனே தெரியாதது  என்ன வென்று?

அடியவர் 1:- அதான் சொன்னேன் நீ கேக்கல அதான் உங்களுக்கு சொன்னாரு.

அடியவர்:- ஐயா உலகத்தில தெரியாத விசயம் எவ்வளவோ இருக்கு ஐயா.

குருநாதர்:- அப்பனே ஆனாலும் உந்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே. சரியாகவே அப்பனே. அப்பனே தெரியாது.

நாடி அருளாளர்:- உங்களுக்கு பல விசயம் தெரியும் ஆனாலும் தெரியாத ஒரு விசயத்தை சொல்கின்றார்.

அடியவர் 1:- ( விளக்கம் அந்த அடியவருக்கு கூறினார்) உங்களுக்கு நிறைய விசயம் தெரியும். ஆனால் தெரியாத விசயத்தை அடுத்தவங்களுக்கு நீங்க சொல்லி கொடுக்கின்றீர்கள்.

குருநாதர்:- ஆனாலும் அப்பனே ஆனாலும் அனைத்தும் பின் தெரியாத்து பொய்கள் அப்பா அவ்வளவு தான்.

அடியவர்:- பஞ்ச பட்சிங்களா ஐயா?

நாடி அருளாளர்:- என்ன என்று ( எனக்கு ) தெரியவில்லை ஐயா. ( உங்களுக்கு மட்டும் தெரியும் )

(பலத்த உரையாடல்கள் அந்த கேள்வி கேட்ட அடியவருக்கு  எது தெரியும், மற்றும் தெரியாது என்று. ஏனைனில் இந்த வாக்கு அந்த அடியவருக்கு மட்டும் புரியும் படி கருணைக்கடல் குருநாதர் உரைத்தது.)

அடியவர் 2:- இதுக்கு விளக்கம் தெரியல சாமி.

அடியவர்:- ஐயா கொஞ்சம் clearஆக சொல்லுங்க.

குருநாதர்:- அப்பனே அனைத்தும் தெரிந்தும் அப்பனே காசுகளுக்காக அப்பனே ____________ அப்பனே இதற்கு ஆசைப்பட்டு தான் அப்பனே தவறான வழியில் சென்று விட்டாய். அவ்வளவுதான் அப்படி சொல்லி விட்டேன்.

அடியவர்:- ஆமாங்க ஐயா. உண்மைதான்.

குருநாதர்:- அப்பனே இதற்கு எப்பரிகாரம் தேவையில்லை என்பேன் அப்பனே.

(இந்த வாக்கில் உள்ள பின் வரும் பொது வாக்கு அனைவருக்கும் கருணைக்கடல் உரைத்த வாக்கு)

அப்பனே பின் அனைவருக்கும் சொல்கிறேன்.  இப்பொழுது அமர்ந்தானே  இவன் அதாவது பக்கத்தில் அப்பனே இவன் மனதிலே என்னை வைத்துக்கொண்டு அப்பனே வெளியில் தேடுகிறான் அப்பா எப்படி? எப்படி அப்பா யான் சிக்குவேன். ஆனாலும் அதனால் நல்மனதில்தான் குடி கொள்வேன். சிலையாக வடிவமைத்து விட்டான். ஏன் அனைவருக்கும் சொல்கின்றேன். இவன் தன் தாய் தந்தையருக்கே சிலை அமைக்க வில்லை. எந்தனுக்கு ஏன் சிலை அமைத்தான் என்று நீங்கள் கூறுங்கள் அப்பனே?

அடியவர் 1:- ஏன் ஐயா ( அகத்தியருக்கு சிலை அமைத்தீர்கள் ) ?

அடியவர் 2 :- குரு நாதர்தான் தாயும் தந்தையாக இருக்கின்றார்.

குருநாதர்:- அப்பனே தாய் தந்தையரை மதித்தால்தான் யானே வருவேன் முட்டாளே.

அடியவர் 3:- அப்பா அம்மாதான் முதல் தெய்வம்.

குருநாதர்:- அப்பனே இவன்தனக்கு சொல் அதை.

அடியவர் 3:- ( அந்த அடியவருக்கு பின்வருமாறு எடுத்து உரைக்க ஆரம்பித்தார்) அப்பா அம்மாதான் முதல் தெய்வம். ( நாம் அனைவரும் ) இந்த உலகத்துக்கு வந்ததே அவங்களுடைய அனுக்கிரகத்தினால்தான். அவங்கதான் முதல்ல நாம வழிபட்டு, மனச திருப்தி படுத்தினால் ஈஸ்வரனும், சித்தர்களும் அருள்வாங்க.

குருநாதர்:- அப்பனே சிலை வைத்து விட்டால் யான் வந்து விடுவேனா என்ன கூறு?

அடியவர்:- இல்லங்க ஐயா

குருநாதர்:- அப்பனே சிலை யாருக்கு வைப்பார்கள் என்று கூறுங்கள்?

அடியவர்:- வா.வூ.சி அவங்கள மாதிரி உள்ளவங்களுக்கு…

குருநாதர்:- அம்மையே முட்டாளே , பைத்தியமே , இறந்தவருக்கு மட்டுமே ( சிலை வைப்பார்கள் ). அப்பனே பக்கத்தில் இருப்பவனே, வீரமாக வந்தவனே, அனைத்தும் தெரிந்தவனே நான் இறந்தவனா என்ன?

அடியவர்:- இல்லை.

அடியவர்:- அப்பொழுது எப்படி வைக்கலாம் என்னை? உன் மனதிலேயே இருக்கின்றேனே, உந்தனை பக்குவப்படுத்தி உத்தனுக்கு பல அருள்களை புகுத்தி மற்றவர்களுக்கு ( எடுத்து ) சொல்லுமாறு யான் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தேன். ஆனால் உன்னை தட்டி இருப்பேன். பிழைத்துக்கொண்டாய் நீ.

அடியவர்:- ஐயா மன்னிச்சுக்க சொல்லுங்க..

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete