​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 31 May 2023

சித்தன் அருள் - 1345 - ஒரு அடியவரின் அனுபவம்!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் தன் அடியவர்களுக்கு, அவ்வப்பொழுது, தனிப்பட்ட முறையிலோ அல்லது பொதுவாகவோ வாக்குரைக்கும் பொழுது சில உத்தரவுகளை பிறப்பித்து உண்டு. அப்படி சமீபத்தில், அனைவருக்கும் நீர், மோர் வழங்கவும் என்ற உத்தரவை சிரம் மேற்கொண்டு நிறைவேற்றும் பொழுது, அடியவருக்கு ஏற்பட்ட இனிய அனுபவத்தை இங்கு பகிர்ந்துள்ளார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத அகஸ்திய பெருமான் திருவடிகளே சரணம்🙏🙏🙏🙏

"சித்தன் அருள்"  வலைத்தள  முன்னாள், இந்நாள்  நடத்துநர்கள் அனைவருக்கும் முதற்கண் என் வணக்கத்தையும், மனமார்ந்த நன்றிகளையும் சமர்ப்பிக்கின்றேன்.

உலகெங்கிலும் உள்ள அகத்தியர் அடியவர்கள் அகத்திய பெருமான் அருள் வாக்கினை தெரிந்து கொண்டு அவரருள் பெற்றுய்ய வழி வகுக்கும் இந்த வலைத்தளம் வழி நான் படித்த அகத்திய பெருமான் வாக்கினை செயல்படுத்தி அகத்திய பெருமான் கருணையால் நான் பெற்ற அனுபவத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

எனக்கு அகத்திய பெருமான் வாக்கினை "நாமும் செயல்படுத்த  வேண்டும் " என்ற உத்வேகத்தை கொடுத்த  ##மதுரை அகத்தியர் அடியவர்   (தொழு நோயால் பாதிக்கப்பட்ட மக்களை பராமரித்து, அகத்திய பெருமான் அவரருகில் பேருந்தில் அமர்ந்து உரையாடிய அனுபவம்)

##மேல்மலையனூரில் நீர்மோர் கைங்கர்யம் செய்து அங்காள பரமேஸ்வரியின் அருள் பெற்ற சிறுவர் அடியார்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகின்றேன்.

அகத்திய பெருமான் பொது வாக்கில் கூறிய படி நானும் என் கணவரும் எங்கள்  குழந்தையும்  28/05/23 ஞாயிறு அன்று காலை 10.30 மணியளவில் சென்னையில் உள்ள திருநீர்மலை பெருமாள் கோவில் மலைப்பாதையில் அனுமன் சன்னதி முன்னர் நின்று கொண்டு நீர் மோர் கொடுத்து கொண்டிருந்தோம். ஒரு 4-5 பக்தர்களுக்கு கொடுத்த பின் மலையின் மீது இருந்து ஒரு கிராமத்து பெரியவர் (சுமார் 70 வயது இருக்கும்), மிக மிக எளிமையான தோற்றம், வெள்ளை வேட்டி, நெற்றியில் பளிச்சென்று திருமண், கையில் ஒரு துணிப்பை தோளில் ஒரு வெள்ளை துண்டுடன் படியில் இருந்து எங்களை பார்த்து கொண்டே ஒரு அர்த்த புஷ்டியோடு புன்னகைத்தபடி இறங்கி வந்தார். இறங்கி வந்தார் என்று சொல்வதை விட மிதந்து வந்தார் என்று சொன்னால் மிகையாகாது. அவர் இறங்கி வந்தது,  எவ்வித பதற்றம் இல்லாமல் மிக தீர்க்கமாக இருந்தது. வானத்து விண்மீன்கள்  போல் அவரின் கண்கள் பிரகாசமாக மிளிர்ந்தன. மலையில் இருந்து இறங்கி வந்த களைப்போ, அந்த வயதிற்கு உரிய படபடப்போ, ஒரு துளி வியர்வையோ இல்லை. மூச்சு வாங்கவில்லை  அவருக்கு. மலை ஏறி இறங்கிய எவ்வித  சிரமமும் அவரிடம் தென்படவில்லை .அவரது முகத்தில் ஒரு ஹாஸ்யமும், மந்தஹாசமும் தெரிந்தது. ஏதோ ஒரு வித்தியாசம் என்னால் உணர முடிந்தது. உடனே நான், "அப்பா வாங்க மோர் சாப்பிடுங்க" என்று ஒரு டம்ளர் மோரை  கொடுத்தேன். அவர் உடனடியாக மோரை வாங்காமல், எங்கள் எதிரே வந்து நின்று தன் பையில் கைவிட்டு துழாவி ஒரு மஞ்சள் நிற சாமந்தி மலரை எடுத்தார். எங்களுக்கு இந்த பெரியவர் என்ன செய்ய போகிறார் என்று புரியவில்லை.அந்த சாமந்தி மலரை அவரது தலையில் லேசாக வைத்து விட்டு அவர்தம் கைகளை கூப்பி "குலந்தரும்" என்ற பாசுரத்தை முழுமையாக பாடி விட்டு அவர் தலையில் வைத்திருந்த சாமந்தி மலரை சட்டென்று எடுத்து என் கணவர் கையில் கொடுத்து அதை என்னிடம் கொடுக்குமாறு சமிக்ஞை செய்தார். அவர் சமிக்ஞை செய்த போது என் கணவரும்  அந்த பெரியவரின் கட்டுப்பாட்டில் இருப்பது போல், உடனே மலரை பெற்று என் கையில் கொடுக்க நான் வாங்கி கண்களில் ஒற்றி கொண்டு உள்ளங்கையில் வைத்து கொண்டேன். திரும்ப மோர் டம்ளரை அவரிடம் நீட்ட அதை வாங்கி குடித்து கொண்டே என்னிடம், "நீ  எந்த ஊரில் இருந்துமா வர?" என்று ஒரு குறும்பு புன்னகையுடன் கேட்டார். அவர் கேட்ட விதம், என்னை ஏற்கனவே நன்றாக தெரிந்த நபர் ஒருவர், ஒன்றுமே தெரியாதது போல்  என்னிடம் கேட்டு விளையாடியது போல தோன்றியது. நான் பதிலளித்ததும் பின்னர் மோரை குடித்து கொண்டே என்னையும் என் கணவர் மற்றும் குழந்தையும் கூர்ந்து நோக்கிவிட்டு அதே தீர்க்கமான நிதானமான நடையுடன் ஆஞ்சநேயர் சன்னதியை வலம் வந்து கீழே  இறங்கி சென்று விட்டார். இவை அனைத்தும் நடந்தது சில விநாடிகள் மட்டுமே. ஆனால் அந்த சில விநாடிகள் எங்களை தவிர சுற்றி இருந்த அனைவரும் உறைந்து/ ஸ்தம்பித்தது (freeze ஆகியது) போல் இருந்த இடத்தில் அப்படியே நின்று இருந்தனர். நடுவில் எவரும் வரவில்லை/குறுக்கிட வில்லை.

எங்களுக்கும் அந்த பெரியவருக்கும் நடுவில் இந்த நிகழ்ச்சிகள் நடந்து முடியும் வரை எப்படி அங்கிருந்தவர்கள் அமைதியாக உறைந்து போயினர். அந்த பெரியவர் நகர்ந்து செல்லவும் சுற்றி இருந்த நபர்கள் இயல்பாக பரபரப்பாக இயங்க தொடங்கினர்.  எனக்கு மட்டும் ஒரு சிறு சலனம் மனதில். அந்த பெரியவர் ஏன் மலரை தன் தலையில் சூடி மந்திரம் சொல்லி அதை எடுத்து என் கணவர் கைகளால் எனக்கு கொடுக்க செய்தார். இது வரை யாரும் இப்படி செய்ததில்லை எங்களுக்கு. அந்த பெரியவர் வந்து நின்றதும் நாங்கள் மூவரும் ஏதோ ஒரு சக்திக்கு கட்டுண்டு இயங்கியது போல் இருந்தது. எங்களின் சுய சிந்தனை செயலற்று போய் மனம் எவ்வித சலனமுமின்றி வெறுமையாக இருந்தது. அவர் நகர்ந்து போன சில நிமிடங்களில் இயல்பு நிலைக்கு வந்த பின் என் மனதில் ''அந்த பெரியவரின் கால்களில் நாங்கள் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்கரிக்க வேண்டும்'' என்ற உந்துதல் வர அவரை தேடினேன். பக்தர்கள் நீர்மோர் வாங்க சூழ்ந்து நின்று கொண்டிருந்த நிலையில் அந்த பெரியவர் மலையின் கடைசி படியில் இறங்கி மறைந்து போனார். அவர் மலையில் இருந்து இறங்கி வந்த போதும், எங்கள் எதிரே நின்ற போதும், கீழே இறங்கி செல்லும் போதும் சரி அவருடைய திருவடிகள்(பாதங்கள்) மட்டும் எந்தன் கண்களுக்கு தெரியவில்லை.

நடந்தது இறை செயலே என்று என் உள்மனம் உணர்ந்த பின்னர் நாங்கள் நெக்குருகி போய் விட்டோம். அகத்திய பெருமான் கருணை அளவிடமுடியாத கருணை!!!!!!!!!!.

அகத்தியன் உத்தரவை நிறைவேற்ற வந்தாயா? நானே வருகிறேன்! பார்ப்போம், என மலை மேல் இருந்த பெருமாளே இறங்கி வந்தது போல் உணர்வு வந்தது.

இந்த வலைத்தள தொகுப்புகளை வாசிக்கும் அனைத்து அன்பர்களுக்கும் அன்னை லோபாமுத்ரையின் அருளாலும், தந்தை அகத்திய பெருமான் அருளாலும் இப்படி ஒரு இறை அனுபவம் கிடைக்க பெற வேண்டும் என்ற பிரார்த்தனையோடு விடை பெறுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 30 May 2023

சித்தன் அருள் - 1344 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் அகத்தியபெருமான் வாக்கு!








16/3/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : கர்ணன் தகனபீடம். தபதி நதிக்கரை. சூரத். குஜராத். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நன்மைகள்!!!

நன்மைகள் செய்ய யான் காத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!! 

ஆனாலும் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே ஆனாலும் மக்கள் தன் வழியைத்தான் பின்பற்றுகிறார்கள் என்பேன் அப்பனே!!!

அப்பனே என் வழி பின்பற்றுவர்களை அப்பனே யான் நிச்சயம் அப்பனே மாற்றமடையச் செய்து என்னென்ன வினைகள் உள்ளதோ அவை எல்லாம் நீக்க செய்து அப்பனே நிச்சயம் வெற்றிகள் தருவேன் அப்பனே!!!! 

பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

எதை என்று எவை என்று அறிய அறிய ஆனால் பின் அகத்தியனை நம்பினோமே பின் ஒன்றும் நடக்கவில்லையே என்றெல்லாம் அப்பனே பிதற்றுகின்றதை யான் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய 

அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே உண்மையைச் சொல்லுங்கள் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய!!!! 

அப்பனே யான் சொல்லியதை சரி முறையாக கடைப்பிடித்துக் கொண்டாலே அப்பனே வருத்தப்பட தேவையில்லை என்பேன் அப்பனே!!!

அவரவர் செய்த கர்மாக்கள் தான் அப்பனே மீண்டும் மீண்டும் பிறவிக்கு காரணம் என்பதையும் கூட அனைத்து சித்தர்களும் கூட ஏராளமான வாக்குகளிலும் கூட சொல்லிவிட்டார்கள் என்பேன் அப்பனே!!!

அதனால் பிறவி கடலை நீந்தியாக வேண்டும் அப்பனே..... அதற்குத்தான் யாங்கள் வழிமுறைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து!!!!

அதையும் மீறி அப்பனே இன்னும் பிறவிகள் வேண்டும் வேண்டுமென்றே கேட்டு கொண்டே மனிதன் எதையெதையோ அதாவது பிறவிக்கு தேவையானதை தான் கேட்கின்றானே தவிர எவை என்றும் அறிய பிறப்புக்கு தேவையானவற்றை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய  புரிய அப்பனே என்று கேட்பதில்லை அப்பனே பின் கர்மா அதனால் அப்பனே கர்மத்தை என்னிடத்தில் கேட்கின்றார்கள் மனிதர்கள் !!!

யான் எப்படி தான்??? கொடுக்க முடியும்?? அப்பனே!!!!

எதை என்று அறிந்தறிந்து நீங்களே சொல்லுங்கள் அப்பனே!!!!

அப்பனே ஒன்றைச் சொல்லுங்கள் எவை என்று அறிந்து அறிந்து படைத்தவன் இறைவன் அப்பனே!!!!

அவனுக்கு தெரியாதா???? அப்பனே!!!!! உங்களுக்கு எதை என்று அறிந்து அறிந்து செய்ய வேண்டும் என்பதை!!!!

நீங்கள் தான் பெற்று எவை என்று அறிய அறிய வாங்கிக் கொள்ள வேண்டுமா??? என்ன!!!!

அப்பனே அப்படி வாங்கிக் கொண்டாலும் அது நிற்காதப்பா!!!!!

நிச்சயம் தானாக முன்வந்து எங்கள் சித்தர்கள் கொடுத்தோமானால்  நிச்சயம் அழிவில்லாதது அவ் சொத்து!!!!

நீங்களே கேட்டுக் கொண்டு பெற்று விட்டால் அப்பனே அது அழியக்கூடியது நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

இதைத்தான் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்!!!!! ஞானம் வேண்டும் இன்னும் எதை எதை என்று அறிய அறிய சுவடிகள் வேண்டும் அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும்!!!!

அப்பனே முதலில் தர்மத்தை கடைபிடியுங்கள் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய தர்மத்தை எவனொருவன் கடைபிடிக்கின்றானோ அவனிடத்தில் யானே வந்து அனைத்தும் சொல்லித் தருவேன் அப்பனே!!!!

அப்படி யாரும் இல்லையப்பா!!!!

பணத்திற்காகவே எதை என்று கூட பக்திகளப்பா!!!!

இவ்வாறு இருக்க இறைவன் எப்படித்தான் நல்லதை செய்வான்????? என்பதை கூட!!! நீங்கள் தீர்மானித்துக் கொண்டீர்கள்??????

அப்பனே இல்லையப்பா!!!! எதை என்று அறிந்தறிந்து அப்பனே முக்காலமும் உணர்த்தும் எதை என்று அறிய அறிய கர்ணனின் அப்பனே எதை என்று கூட!!! தாராள குணத்தையும் கூட!!!!

அப்பனே கர்ணன் எதை என்று அறிய அறிய அப்பனே பல வழிகளில் கூட யான் தர்மத்தை எவை என்று அறிய அறிய எவை என்று புரிய  புரிய!!! 

இன்னும் எதை என்று கூட அகத்தியன் எதை என்று அப்பனே!!!! யான் எதை என்று யான் சொல்கின்றேன் அப்பனே!!!

கர்ணன் ஒருமுறை என்னிடத்தில் வந்தான் எதை என்று!!!! ஆனாலும் யான் தர்மத்தை கடைப்பிடித்து எதை என்று அறிய அறிய என் உடல் அழிந்தாலும் நிச்சயமாய் உயிர் அழியக்கூடாது!!!!

அகத்திய மாமுனிவரே!!!!! நிச்சயமாய் எதை என்று அறிந்து அறிந்து இன்னும் யான் அதாவது எதையென்று அறிந்தறிந்து எவை என்று புரியாமல் எந்தனுக்கு ஞானத்தை தா என்பதற்கு!!!!   யான் ஒரு வழியை பின் அவந்தனுக்கு புகட்டினேன்!!!

ஆனால் அதை கடைப்பிடித்தான் கர்ணன் எதை என்று அறியாமலே முக்காலங்களிலும் கூட அவந்தன் வாழ்ந்து வருகின்றான்!!!!!

இப்பொழுது கூட அறிந்தறிந்து!!!!!!

இதனால் இவைதன் இப்பொழுது எதை என்று அறிய அறிய நீங்கள் பார்த்துள்ளீர்களே அடியவர்கள் பீடத்தை தரிசனம் செய்து பீடக் கோயிலில் உள்ள மூன்று இலைகள் மட்டுமே உருவாகும் அதிசய ஆலமரம் ) அது என்ன சம்பந்தம் என்று கூட இலைகளும் கூட எதையென்று அறிய அறிய!!!

முக்காலத்தையும் குறிக்கிறது!!!!!!எதை என்று அறிய அறிய எக்காலமாயினும் கடந்த காலம் நிகழ் காலம் இன்னும் வரும் காலங்களில் கூட கர்ணன் நிச்சயம் இருப்பான்!!!! அவன் புண்ணியம் இருக்கும் என்பதே இதற்கு எடுத்துக்காட்டாகவே தோன்றுகின்றது!!!!!

அதனால்தான் நிச்சயம் தர்மம் செய்யுங்கள் கர்ணனை  போல வாழ!!!!!!! வாழும் நிகழ்விற்கு யான் உதவிகள் செய்வேன்!!!! என்னிடத்தில் இருந்து கொண்டால் அப்பனே!!!!!

ஆனால் மனம் தான் மனிதனிடத்தில் பணம் தான் எதை என்று கூட மனம் என்றால் பணம்தான்!!! இதற்கும் வித்தியாசங்கள் உண்டு!!!

மனம் எதை நோக்கி செல்கின்றதென்றால் பணத்தை நோக்கியே செல்கின்றது!!!!

பணத்தை நோக்கி செல்லச் செல்ல எதை என்று ஆணவங்கள் வந்து விடும் பொறாமைகளும் வந்துவிடும் போட்டிகளும் வந்துவிடும் எதை என்று கூட கோபங்களும் வந்துவிடும்!!!! இன்னும் எதனை எதனைச் சொல்ல அனைத்தும் வந்துவிடும்!!!

இதனால்தான் எப்படி ஒருவனுக்கு எப்பொழுது தர வேண்டும்??? என்பதை எல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து தான் யான் கொடுப்பேன் அப்பனே!!!!

முதலில் புண்ணியத்திற்கான வழிகள் தான் யான் கற்பிப்பேன் அப்பனே!!!

நிச்சயமாய் அப்புண்ணியத்தை எப்படி பெற்று இருக்க வேண்டும்?

அதாவது புண்ணியம் அறிந்தறிந்து செய்வோமானால் நிச்சயம் அப்பனே பிறவி கடனை தீர்த்துவிடலாம் அப்பனே!!!

அதைத்தான் யான் கற்றுக் கொடுப்பேனே தவிர!!!மற்றவை எல்லாம் யான் கற்பிக்க மாட்டேன் அப்பனே!!!!

இன்னும் ஏராளமான நூல்கள் சித்தர்கள் எழுதி வைத்துள்ளனர் என்பேன்!! அப்பனே அவையெல்லாம் மனிதர்களிடத்தில் சென்று விட்டால் அப்பனே!!!

யான் தான் சித்தன்!!! யான் தான் ஞானி!!! யான் தான் எதை என்று அறிந்து அறிந்து ரிஷி !!! என்றெல்லாம் பொய் சொல்லி மனிதனை இன்னும் ஏமாற்றி இன்னும் மூடநம்பிக்கைகளில் விட்டு விடுவான் அப்பனே!!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே வேண்டாம் அப்பனே!!!!

இறைவனை வணங்கினாயா? எதை என்று அறிய அறிய புண்ணியங்கள் அதாவது அப்பனே உன்னால் புண்ணியங்கள் செய்ய முடியவில்லை என்றாலும் இதை என்று அறிய அறிய என்னை அழையுங்கள்!!!!!!

அப்பனே!!!!!!!!!!! அகத்தியனே!!!!!!! என்னால் ஒன்றும் முடியவில்லை!!!! எதையென்று அறிந்து அறிந்து எந்தனுக்காக பின் நீங்களே செய்யுங்கள் என்று!!!!!

நிச்சயம் உண்மையானவர்களுக்காக யான் உழைப்பேன்!!!!
உழைக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே ஆனால் நீங்கள் அப்படி இல்லையப்பா!!!!!

அனைத்தும் பொருள்களுக்காகவே!! ஆசைகளுக்காகவே!!! எதை என்று அறிய அறிய அப்பனே துன்பத்தையே கேட்கின்றீர்கள் அப்பனே!!!

ஆனால் அது உங்களுக்கு துன்பம் என்று தெரியவில்லை அப்பனே எதை என்று அறிந்தறிந்து

அப்படி இருக்க யான் எப்படியப்பா???? துன்பத்தை உங்களுக்கு தர முடியும்????

அப்பனே அனைத்தும் அறிந்தவன் யான்!!!!!

அப்பனே அனைவருக்கும் உதவிகள் செய்துள்ளேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய

அதனால் அப்பனே உணர்ந்துணர்ந்து நிச்சயம் மாற்றத்திற்கு ஏறுங்கள் அப்பனே!!!!!

புண்ணியத்தை பெருக்கிக் கொண்டால் அப்பனே அனைத்தும் உன்னிடத்தில் சேருமப்பா!!!!

அறிந்து அறிந்து அப்பனே!!!

அதனால் கர்மத்தை சேர்த்துக் கொண்டால் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் உன்னிடம் சேருமப்பா!!!

அதனால் புண்ணியம் வேண்டுமா?? கர்மம் வேண்டுமா?? எதை என்று அறிய அறிய புண்ணியத்தை ஒருவன் சேர்த்துக் கொண்டால் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து யாராலும் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே!!!!

கர்மத்தை சேர்த்துக் கொண்டால் மனிதன் மனிதனையே அழித்து விடுவான் அப்பனே!!!!

யாங்கள் எதை என்று அறிய அறிய அதனால் புண்ணியம் எவையென்று கூட அதிகரிக்க அதிகரிக்க யாங்கள் எதை என்று அறிய அறிய உங்களிடத்திலே வருவோமப்பா!!!! அனைத்தும் தருவோமப்பா!!!! உணர்ந்து உணர்ந்து!!!!

ஏனென்றால் கர்மா பூமி அப்பா!!!!! அதனால்தான் சித்தர்கள் யாங்கள் உங்களுக்காகவே காடு மேடு எவை என்று அறிந்து அறிந்து அப்பனே அலைந்து திரிந்து அப்பனே நன்மைகள் செய்ய காத்துக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!!

ஆனால் நீங்களோ சித்தன் அதைத் தருவானா???? இதைத் தருவானா??? என்றெல்லாம் யோசித்து யோசித்து வீணாக்காதீர்கள் காலங்களை!!!!!!!

அப்பனே முயற்சிகள் செய்யுங்கள் நிச்சயமாய் யான் இருக்கின்றேன் அப்பனே எதை என்று கூட தர்மத்திற்காக உழையுங்கள்!!!!!
அப்பனே நீதிக்காக உழையுங்கள்!!!!!
நியாயத்திற்காக உழையுங்கள்!!!!!

அப்பனை எதை என்று அறிந்தறிந்து அனைத்தும் யானே தருகின்றேன் அப்பனே!!!!

நிச்சயம் எதை என்றும் பின்பற்றும் அளவிற்கும் கூட இன்னும் இன்னும் வாக்குகளின் கூட யான் செப்பிக் கொண்டே தான் இருக்கின்றேன்!!! 

தாய் தந்தையருக்கு தன் பிள்ளை எவை என்று அறிந்தறிந்து உணர்ந்துணர்ந்து என்ன செய்ய வேண்டும் என்பதை கூட தந்தைக்கும் தாய்க்கும் தெரியும்!!!!! அப்பனே படைத்தவன் இறைவன் அப்பனே!!

படைத்தவனுக்கு தெரியும் நிச்சயம் உங்களுக்கு என்ன தரவேண்டுமோ அதை நிச்சயம் தருவான் அப்பனே!!!!

நீங்கள் கேட்கத்தான் தேவையில்லை அப்பனே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

நீங்கள் கேட்பதெல்லாம் அப்பனே கர்மாவை தான் கேட்கின்றீர்கள் அப்பனே

அப்படி இருக்க அப்பனே இறைவன் எப்படியப்பா?? ஆசிகள் கொடுப்பான்???

அப்பனே யாராவது ஒருவன் இறைவா!!!!! என்னருகிலே இரு என்று கேட்டுக் கொண்டால் நிச்சயம் அவந்தனுக்கு சில சோதனைகளை கொடுத்து நிச்சயம் அப்பனே இறைவன் அருகிலே இருந்து உயர்த்தி விடுவான் அப்பனே!!!!

ஆனாலும் நன்மைகள் செய்யுங்கள் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய!!!

நிச்சயம் அப்பனே கர்ணனுக்கும் பல உதவிகளை யான் செய்துள்ளேன் அப்பனே!!!!

இன்னும் மறைத்து வைத்து விட்டார்கள் அப்பனே நூல்களைக் கூட!!!!

அந் நூல்களை மறைத்து வைத்திருந்தாலும் யான் நிச்சயம் விடப் போவதில்லை அப்பனே!!!!

நிச்சயம் நல் மக்களுக்காக!! என் பக்தர்களுக்காக!!! அப்பனே நிச்சயம் வரும் காலங்களில் யான் செப்புவேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய சித்தர்கள் அழிவற்றவர்கள் அப்பனே!!!!!

மனிதர்கள் தான் எவை என்று கூட எதை என்று கூட அழிவுறுவார்கள் என்பேன் அப்பனே!!!!

அழிவுற்று அழிவுற்று மீண்டும் பிறப்புக்கள் எடுத்து எடுத்து கஷ்டங்கள் பட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

எத்தனையோ பேர்களுக்கு யான் முன் ஜென்மத்திலே சொல்லி இருக்கின்றேன் புண்ணியம் செய் என்று எதை என்று கூட!!!!!

ஆனால் என் பேச்சைக் கேட்காமல் பிறவியிலும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அவர்கள்!!!

யானும் பாவம் என்று தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்!!!! அவர்களும் எதை என்று அறிய அறிய என்னைத்தான் வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

ஏன்???  எவை என்று அறிய அறிய கஷ்டம்தான் பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் முன் ஜென்மத்திலேயே என் பேச்சைக் கேட்டு இருந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய அது போலத்தான் இப்பொழுதும் கூட அப்பனே!!!!!!

சித்தர்கள் ஏதேதோ செப்புகின்றார்கள்!!! எதை என்று அறிய அறிய என்றெல்லாம் அப்பனே போய்க் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே நரகத்திற்கு!!!!!

அப்பனே நிச்சயம் எதையென்று அறிய அறிய அப்பனே சித்தர்களை பற்றி எவராலும் புரிந்திருக்க முடியாது என்பேன் அப்பனே!!!!

அப்படி புரிந்திருக்க அவந்தன் எதை என்று அறிய அறிய அப்பனே பைத்தியக்காரன்!!!!!! அப் பைத்தியக்காரனுக்கு யாங்கள் வாழ்வை அளிப்போம் அப்பனே!!!!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே எங்களை நம்பி நிச்சயம் எதை என்று அறிய அறிய யாங்கள் அதைச் செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்றெல்லாம் அப்பனே எதை என்று கூட ஏமாற்றுவார்கள் அப்பனே!!!!

இது கலியுகமப்பா!!!!

அதனால் நிச்சயம் அப்பனே சொல்கின்றேன்!!!! நீயே எதை என்று அறிய அறிய உன் தந்தை போல் எதை என்று அறிய அறிய அப்பனே தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே!!!

அகத்தியன் சொல்கின்றான் என்கின்றாயே அப்பனே என் தந்தை சொல்கின்றான் என்று எவை என்று அறிய அறிய உன் பெயரை நீயே வைத்துக் கொண்டு நீயே சொல்வதாலே அப்பனே என் பெயரை ஏன் அங்கு சேர்க்கின்றாய்????? அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அப்படியும் சேர்த்துக் கொண்டாய் நன்றாக இருக்கின்றாயா நீ ???????என்ன?!!!!!

அப்பனே கர்மத்தைத்தான் சேர்த்துக் கொண்டிருக்கின்றாய்!!!!

வேண்டாமப்பா!!!! அக் கர்மம் தான் வேண்டாம் என்றெல்லாம் யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம்!!!!

நல்லதைத்தான் யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோமே தவிர கெட்டதை சொல்லவில்லை அப்பனே!!!!

அதனால் எதை என்று அறிய அறிய இறைவனால் எதை என்று அறிய அறிய படைக்க எவை என்று உணர்ந்து உணர்ந்து விதியின் தன்மையை கூட அப்பனே யாராலும் கணிக்க முடியாது என்பேன். அப்பனே!!!!

அப்படி கணிக்கப்பட்டால் அவந்தன் எதையென்று அறிய அறிய அப்பனே அவந்தனுக்கு அனைத்தும் எதை என்று உணராமலே அப்பனே நிச்சயம் விதியை எங்களை தவிர நிச்சயம் யாராலும் சொல்ல முடியாது என்பேன். அப்பனே!!!!

அவைதன் நடக்கும் இவைதன் நடக்கும் கிரகங்கள் பெயர்ச்சியால் இவையென்று கூற சொல்லலாமே தவிர நிச்சயம் கிரகங்கள் என்ன செய்யும் என்பதை கூட மனிதனுக்கு தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!!

அவ் கிரகங்கள் அங்கிருந்தால் இவை இவைதன் அங்கிருந்தால் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் எங்கள் அருள்களைப் பெற்றால் கிரகங்களை யாங்களே மாற்றி விடுவோம் அப்பனே!!! எங்கிருந்தால் நல்லவை என்பதை கூட யாங்களே மாற்றி அமைத்து மேற் சொன்னவைகள் கூட அப்பனே உயர்த்தியும் வைப்போம் அப்பனே!!! 

மனிதர்களுக்கு தெரிவதே இல்லை அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே கிரகங்களுக்கு என்னென்ன பிடிக்கும் என்பதை கூட வருங்காலங்களில் இடையன்(இடைக்காடர்) நிச்சயமாய் உரைப்பான் என்பேன் அப்பனே!!! அதை புரிந்து கொண்டால் நன்று என்பேன்!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே ஒரு முறை நிச்சயம் யான் எதை என்று அறிய அறிய ஆசிரமத்தை நடத்திக் கொண்டிருக்கும் பொழுது கர்ணன் என்னிடத்தில் வந்தான்!!!!!!

தந்தையே!!! எந்தனுக்கே உதவிகள் புரிய யாருமே இல்லையே ஆனாலும் கர்ணனை பற்றி இன்னும் சரியாக இவ்வுலகத்தில் தெரிந்திருக்கவில்லை அதாவது அறிந்திருக்கவில்லை!!!

கர்ணன் என்னிடத்தில் வந்து ஏன் இந்த பிறவி எதை என்று அறிந்து அறிந்து யானும் அனாதையே என்று கண்ணீர் விட்டு என்னிடத்தில் அழுக!!!!!!

மகனே!!! எதையென்று கூற...."""""""""""" சரித்திர நாயகன் நீ!!!!!!!!!!!!!!!!!!

எந்தனுக்கே தெரியும் அதனால் சரித்திரத்தை நீ படைக்க போகின்றாய்!!!! உந்தனுக்கு நிச்சயம் சாவுகள் இல்லை!!!!! உன் பெயர் இந்த உலகத்தை விட்டு நிச்சயம் செல்லாது!!!

அதனால் பின் ஆனாலும் கர்ணனும் அழுதான்!!!! 

கர்ணன் சிறந்தவை எதை என்று அறிய அறிய பாசம் மிக்கவன் தான் கருணை மிக்கவன் தான் எதை என்று அறிய அறிய நிச்சயம் எதை ஆனால் என்னிடத்தில் வந்து பின் அப்பனே எதை என்று அறிய ஏதாவது எந்தனுக்கு  கற்றுணர்ந்து இவ்வுலகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்றறிய என்பதைப் போல்!!!!

நிச்சயம் யான் சொன்னேன் """"""தர்மத்தை நாடு!!!!!!!!!!!

மற்றவர் மனம் மகிழுமாறு செய்!!!!!!

அதுமட்டுமில்லாமல் நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய உன்னை நோக்கி வருவார்கள்!!!!!

ஆனால் நீதிக்காக நீ போராடி நிச்சயம் தலை வணங்குவாய் நீதிக்கு தலை வணங்குவாய் எவை எவை என்று அறிய அறிய உன்னால் ஒரு சரித்திரமே ஆகும் நிச்சயம் வெற்றி காண்பாய் என்பதை எல்லாம் யான் அவந்தனுக்கு எடுத்துரைத்தேன்!!!!!

அதனால் நிச்சயம் இப்பொழுது கூட ஆனால் கர்ணன் மாய்ந்து விட்டதாக எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்!!!

ஆனாலும் முக்காலங்களில் நிச்சயம் அவந்தன் உணர உணர நிச்சயம் எவை என்று உணர உணர அவந்தன் இயக்கிக் கொண்டே இருக்கின்றான்!!! நிச்சயம் எவ்வாறெல்லாம் மாற்றம் அடைய ஒரு ஞானி போல் இருந்து நிச்சயம் என்னிடத்திலே எதை என்று அறிந்தும் அறிந்தும் இன்னும் கூட அவந்தன் இருக்கின்றான்!!!! அவன் மனது எதை எதை என்று அறிய அறிய நிச்சயம் செய்யுங்கள் ஏன் எதை எதை என்று அறிய அறிய அநியாயத்திற்கு வழி செல்லாதீர்கள் என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!!!

"""""அப்பனே ஓர் படி நீங்கள் எடுத்து வைத்தால் நிச்சயம் ஆயிரம் படி உங்களை நோக்கி யான் எடுத்து வைப்பேன்!!!!!!!!!! அப்பனே!! 

ஆனால் புத்திகள் இல்லையே அறிவுகள் இல்லையே அப்பனே அறிவுகள் இருந்தும் புத்திகள் இல்லையே புத்திகள் இருந்தும் அறிவுகள் இல்லையே அப்பனே!!!!

ஆனால் இதற்கு எவை என்று கூட பதில் உங்களால் இயக்க முடியுமா??? என்ன!!!!

அப்பனே நிச்சயம் முடியாதப்பா!!!! 

ஒவ்வொரு விசைக்கும் எதை என்று அறிய அறிய இன்னும் விசையும் கூட புறப்படும் என்பேன்.. அப்பனே அதனால் பாவம் செய்தால் உன் அருகிலே மற்றொரு பாவம் தொடர்ந்து வரும் என்பேன் அப்பனே!!!

புண்ணியம் செய்தாலும் அப்பனே உன் அருகே ஒரு புண்ணியம் உன்னை நோக்கி வந்து கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே!!!


எதை என்று அறிந்தறிந்து அதனால் அப்பா எதை என்று கூற அப்பனே அது எவை என்று அறிய அறிய

அப்பனே "" சூரியனே காட்டுகின்றான் அப்பனே

நீ நடக்கும் பொழுது எதை என்று கூட உன் நிழல் உன் பின்னே வருகின்றது என்பதை கூட அதைக் கூட உணராத மனிதன் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து!!!

 அதனால் சூரியனின் தாக்கங்கள் இங்கு அதிகமப்பா!!!!!! எதை என்று உணர்ந்து உணர்ந்து உறிஞ்சி !!உறிஞ்சி!!! உறித்து உறித்து!!! சூரியனின் சக்திகள் குறைவாக இருப்போர் அப்பனே நிச்சயம் எவை என்று அறிந்து அறிந்து இங்கு வந்து பெருக்கிக் கொள்ளலாம் அப்பனே!!!

( மனிதர்களுடைய ஜாதக பலத்திலும் சரி உடல் பலத்திலும் சரி சூரியனின் சக்தி குறைவாக சூரிய பலம் இல்லாதவர்கள் இந்த ஆலயத்திற்கு வந்து சூரியனின் சக்தியை அபரிதமாக பெற்றுக் கொள்ளலாம்!!!! சூரியன் முழு பலமாக அவருடைய சக்திகள் இங்கே விழுவதால் சூரிய சக்தியை பெற்று விட முடியும்)

ஆனால் எவ்வாறெல்லாம் என்று கூட  இன்னும் மறைமுகமாக பெருக்கிக் கொண்டு அப்பனே வாழ்ந்தார்களப்பா முன்னொரு காலத்திலும்.

ஆனாலும் இப்பொழுது கலியுகம் அப்பா!!!

இருக்கும் இடத்திலேயே அனைத்தும் வர வேண்டும் என்று மனிதன் எண்ணுகின்றான் அப்பனே இதுதான் உலகம் அப்பா!!!

நிச்சயம் வராது அப்பனே

தேடி தேடி அலைந்தால் தான் உண்மைகள் கிட்டும் என்பேன் அப்பனே தேடாத எவை எவை என்று அறிய அறிய அப்பனே அதனால் தேடுவதெல்லாம் எவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் இருக்கும் இடத்திலே பின் அனைத்தும் வர வேண்டும் என்றால் அப்பனே அனைத்தும் உன்னிடத்தில் இருந்து சென்றுவிடும் அப்பனே!!!!

அவ்வளவுதான் !!தெரிவித்து விட்டேன் அப்பனே!!!

இன்னும் மனிதனுக்கு கலியுகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதெல்லாம் தெரியவில்லை அப்பனே!!!

வரும் காலங்களில் நிச்சயம் யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே நலமாகவே

அப்பனே எதை என்று அனுபவிக்க அனுபவிக்க இன்னும் கால மாற்றங்கள் அப்பனே எதை என்று கூட இந்திரர்கள் தேவாதி தேவர்களும் எதை என்று அறிய அறிய அப்பனே இங்கு வந்தார்களப்பா!!!!

எதை என்று உணர்த்துவதற்கு ஏனென்றால் அப்பனே தர்மமே மிகச் சிறந்தது என்று!!!!!

தர்மத்தை ஒருவன் சரியாக கடைப்பிடித்துக் கொண்டால் இறைவனே வந்து பின் மனிதனை வணங்குவான் அப்பனே இது நிச்சயம் சத்தியம் அப்பனே!!!!!!!!

எதை என்று கூட அப்பனே அப்படி தர்மத்தை கடைப்பிடிக்காமல் போனால் அப்பனே இறைவனே அவந்தனை கண்டு கொள்ள... எவை என்று கூட நேரமில்லை அப்பா!!!!!

இதனால் அப்பனே நிச்சயம் இறைவன் உன்னிடத்தில் வர வேண்டுமா?????

அப்பனே தன்னைப் போல் பிறரை எண்ணி அப்பனே தர்மத்தை கடை பிடியுங்கள் அப்பனே!!!! இறைவனை எதை எதை என்று அறிய அறிய நிச்சயம் யான் வரவழைக்கின்றேன் அப்பனே!!!!

அது போல் யாராவது இருக்கிறீர்களா???........ என்றால் சத்தியமாக இல்லை அப்பனே எதை என்று அறிய அறிய!!!

அதனால் தான் அப்பனே நிச்சயம் இக்கலியுகத்தில் அப்பனே பிறக்க வேண்டாம் புவி தன்னில் என்றெல்லாம் யாங்கள் எதை என்று அறிந்து அறிந்து உங்களுக்கு சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!!

மீண்டும் மீண்டும் அப்பனே நம்பினோருக்கு அப்பனே எதை என்று கூட சொர்க்கத்தில் இடம் அப்பா!!!

நம்பாதவருக்கு நரகத்தில் இடம் அப்பா!!!!

இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து மீண்டும் மீண்டும் பிறவிகள் வேண்டாம் அப்பா!!!!!

எதை என்று அறிந்து அறிந்து அப்பனே நிச்சயம் ஆன்மாவிற்கு என்ன பலம் என்பதையெல்லாம் வரும் காலங்களில் என் பக்தர்களுக்கு காட்டப் போகின்றேன் அப்பனே நினைவாகவே அப்பனே

அதனால்தான் அப்பனே நிச்சயம் எதை என்று யோசித்து என்னிடத்தில் கேளுங்கள் அப்பனே!!!!

அதாவது கேட்டாலும் எதை என்று அறிந்து அறிந்து தான் யானும் தருவேன் அப்பனே.... நிச்சயம் உடனுக்குடன் யான் தரவும் தந்தும் விடமாட்டேன் அப்பனே!!!!

ஏனென்றால் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இறைவன் இருக்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய

"""" சூரியனை உன்னால் நிறுத்த முடியுமா???? என்ன!!!

 அப்பனே சந்திரனை உன்னால் நிறுத்த முடியுமா??? என்ன!!!!

நட்சத்திரங்களை உன்னால் நிறுத்த முடியுமா??? என்ன!!

அப்பனே அப்படி எவை எவை என்று அறிய அறிய ஒன்றும் அப்பனே உங்களால் செய்ய முடியாது என்பேன். அப்பனே!!!!

ஆனால் எங்களால் செய்ய முடியும் அப்பனே இப்படியே உலகம் கடந்து கொண்டே இருந்தால் அப்பனே யான் சூரியனையும் நிறுத்தி விடுவேன் !!!!

அப்பனே சந்திரனையும் நிறுத்தி விடுவேன்...... அப்பொழுது எதை எதை என்று அறிய அறிய !!!

அப்பனே உலகம் எங்கு செல்கின்றது ???அப்பனே!!!

"""" பேராபத்திற்கு சென்று கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

அதை யோசிக்காமல் யான் வாழ்கின்றேன் யான் வாழ்கின்றேன் என்று மனிதன் பொய் பித்தலாட்டக்காரனாகவே வலம் வருகின்றான் அப்பனே!!!!

கடைசியில் தெரியும் அப்பனே நீ வாழ்வதா வீழ்வதா என்று...... ஆனால் உங்களுக்கு தெரியாது அப்பனே எங்களுக்கு மட்டுமே தெரியும் அப்பனே!!!!

அதனால்தான் அப்பனே ஒவ்வொரு விதியின் தன்மையும் கூட யான் கணித்திருக்கின்றேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாக்குகள் ஏற்படுத்தி அப்பனே நிச்சயம் மாற்றமடைய செய்து அப்பனே நிச்சயம் என்னிடத்தில் வருவீர்கள் அப்பா நீங்கள் !!!!

நிச்சயம் என் பக்தர்களை யான் காப்பேனப்பா!!!!!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே வரும் காலங்கள் பேராபத்துகள் நிறைந்தவை அப்பா!!!!!

கிரகங்களாலும் ஒன்றும் எதை  என்று அறிய அறிய பொய் சொல்லி தான் எவை என்று கூட வாழ்க்கையை நடத்த வேண்டும் என்பதைக் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் வேண்டாம் அப்பா கர்மத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள் அப்பனே உண்மை நிலைகளை ஆராயுங்கள் அப்பனே

எப்படி அப்பா எதை என்று அறிய அறிய உந்தனுக்கும் அறிவுகள் பலமாக இருக்கின்றது அதை உபயோகிக்க  கூட முடியவில்லையே!!!!

அப்படி மற்றொருவர்களை சொல்லி நீ வாழ்ந்தால் அப்பனே எப்படி அப்பா இறைவன் வாழ்க்கையும் எதை என்று கூட எப்படி தரிசனம் கொடுப்பான் ????????அப்பனே

இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் வாக்குகளாக பரப்பத்தான் போகின்றேன் எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே நல்லாசிகள் அப்பனே எவை என்று கூட தர்மத்தை கடைபிடியுங்கள் தர்மத்தை கடைபிடியுங்கள் அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து இன்னும் வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே உடம்பில் எவ் எவ் பாகங்கள் எல்லாம் மனிதருக்கு நிச்சயம் பழுதடையும் என்பதை எல்லாம் எவ்வாறெல்லாம் அதை காத்தருள வேண்டும் என்பதை எல்லாம் யான் சொல்கின்றேன் அப்பனே நல்விதமாக வாக்குகள் இன்னும் காத்துக் கொண்டிருக்க!!!!!!!

நலன்கள் !!!ஆசிகள்!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குஜராத் மாநிலம் சூரத்தில் அமைந்துள்ள தபதி( குஜராத்தி மொழியில் தாபி  நதிக்கரையில் மகா புருஷர் கர்ணன் தகன பீடக் கோயில் அமைந்துள்ளது.

சூரத் நகரம் என்றாலே சூரியனின் நகரம் என்று பொருள்.

சூரிய வம்சி என்ற இனத்தவரும் இங்கேதான் வசித்து வருகின்றனர் சூரிய புத்திரன் கர்ணன் அவருடைய தங்கை தபதி நதி உடைய இடத்தில்தான் தகனம் செய்யப்பட்டார். இந்த இடத்தில் அவருக்கு கோயிலும் அதிசய மூன்று இலைகள் மட்டுமே வளரும் ஆலமரமும் அமைந்துள்ளது இதைக் குறித்து சூரத் உள்ளூர் வாசிகள் கூறும் செய்திகள்.

சூரத்தில் உள்ள மூன்று இலைகள் கொண்ட ஆலமரம் உண்மையில் மகாபாரத காலத்தைச் சேர்ந்தது

மூன்று இலை ஆலமரம் (துளசிவாடி கோவில், சூரத், குஜராத்)

புகழ்பெற்ற பழங்கால சார்தாம் கோயில், த்ரோன் பான் நு வாட், அஸ்வனிகுமார் சாலையில் உள்ள மரம், 

இந்த மரம் ஒரு தண்டு மீது 3 இலைகள் கொண்ட தனிச்சிறப்பு கொண்டதாக கூறப்படுகிறது. சுற்றுப்புறமும் சுவாரசியமானது மற்றும் ஆற்றங்கரைக்கு மிக அருகில் உள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் அருகே கர்ணனின் துளசிவாடி கோவில் உள்ளது. இந்த பழமையான கோவில் தாபி/தப்தி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. கிருஷ்ணர் யோக நெருப்பின் உதவியுடன் கர்ணனின் இறுதிச் சடங்குகளை இந்த இடத்தில் செய்ததாகக் கூறப்படுகிறது.

கிருஷ்ணரே கர்ணனின் இறுதிச் சடங்குகளைச் செய்த மிகவும் உண்மையான கோயில் மற்றும் இந்த கோயில் ஆகியவை இந்த உண்மையான கதைக்கு மிகப்பெரிய சான்றாகும்.

சூரத்தில் உள்ள டீன் பட்டி மந்திர் & சார் தாம் மந்திர் எனப் புகழ்பெற்றது.

மூன்று இலை கொண்ட ஆலமரக்கன்றுகள் காலப்போக்கில் வளராமல் இருந்ததையும், அதன் நீளம் காலங்காலமாக மாறாமல் இருப்பதையும் இந்த நிலத்திற்குச் சென்றவர்கள் அவதானித்துள்ளனர். மேலும் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், மூன்றில் ஒரு இலை செடியிலிருந்து அடிக்கடி உதிர்ந்து புதியது மீண்டும் துளிர்க்கிறது. இருப்பினும், ஒரு கொள்கலனில் செடியை அடைத்திருந்தாலும், பழைய இலை எங்கு மறைந்துவிடும் என்பது யாருக்கும் தெரியாது, ஏனெனில் இலை இரவில் மட்டுமே விழும்.

கர்ணன்  அர்ஜுனால் போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகு, கிருஷ்ணன் தனது கடைசி தேர்வில் தன்னை ஒரு பிராமணனாக வேடமிட்டு கர்ணனிடம் தானம் கேட்டான். தன் தாய் ராதாவின் மடியிலும், தன் மனைவி விருஷாலியின் மடியிலும் படுத்திருந்த கர்ணன், அவனிடம் தானம் செய்ய எதுவும் இல்லை என்று பதிலளித்தான். ஆனால் கிருஷ்ணா அதை புத்திசாலித்தனமாக விளையாடி, உனது பற்களில் கொஞ்சம் தங்கத்தை பார்க்க முடியும் என்று பதிலளித்தார் கர்ணன் தயங்காமல், உடனே தன் பற்களிலிருந்து தங்கத்தை உடைத்து பிராமணனிடம் கொடுத்தான். கிருஷ்ணன் அவனது தன்னலமற்ற செயலால் மூழ்கி, அவனுக்கு ஒரு வரம் அளித்தான். முதலில், கர்ணன் தனக்கு எதுவும் தேவையில்லை, ஆனால் கிருஷ்ணனின் வற்புறுத்தலின் பேரில், 

கிருஷ்ணா!!!!! நான் சூரியன் & கன்னி தாய் குந்தியின் (குன்வாரி மாதா) மகன், தயவு செய்து எனது இறுதிச் சடங்குகளை (சன்ஸ்கார் ) செய்யுங்கள். ஒரு கன்னி நிலம் (யாரும் காலடி எடுத்து வைக்காத)”நிலத்தில் செய்ய வேண்டும் என்று. 

கிருஷ்ணன் புன்னகையுடன் அவனது விருப்பத்தை ஏற்றுக்கொண்டு, அத்தகைய நிலத்தைத் தேடத் தொடங்கினார். கடுமையான தேடுதலுக்குப் பிறகு, இன்றைய சூரத் (குஜராத்) அருகே தப்தி ஆற்றின் கரையில் ஊசியின் நுனிக்கு சமமான நிலத்தை கண்டுபிடித்தனர், இறுதியில் கர்ணனின் இறுதி சடங்குகள் செய்யப்பட்டன.

தாய் குந்தியிடம் இருந்து கர்ணன் உண்மையில் தங்கள் மூத்த சகோதரன் என்பதை அறிந்த பாண்டவர்கள் மிகுந்த துயரத்தில் இருந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நிலம் உண்மையில் தீண்டப்படாததா என்று அவர்கள் சந்தேகித்தனர், அதற்கு கர்ணன் பதிலளித்தார், "இது உண்மையில் என் சகோதரி தப்தியின் கரையில் உள்ள ஒரு கன்னி நிலம் (தபி நதி சூரியனின் மகள், சூரியனின் மகள்) மற்றும் எனது சகோதரர்கள் அஷ்வின் & குமார் ஆகியோரும் உள்ளனர். இங்கே".

அப்போது பாண்டவர்கள் கிருஷ்ணனிடம் இது கன்னி பூமி என்பதை மக்கள் எப்படி அறிவார்கள் அல்லது நம்புவார்கள் என்று கேட்டார்கள். அதற்கு கிருஷ்ணர், இந்த மண்ணின் அடையாளமாக மூன்று இலை ஆலமரம் இருக்கும் என்றும், இந்த மரத்தை யார் மதிக்கிறார்களோ, அவர்களின் விருப்பங்கள் தானி(வள்ளல்)  கர்ணனின் அருளால் நிறைவேறும் என்றும் பதிலளித்தார்.  என்று உள்ளூர் வாசிகள் கூறுகின்றனர்.

ஆலய முகவரி.

த்ரீ லீப் பான்யன் ட்ரீ. டெம்பிள். 

தீன் பத்தா வட் ஜாட் டெம்பிள். கர்ண் மந்திர். துளசிவாடி. தரம் நகர் சூரத் குஜராத். 395003.

பின் குறிப்பு. மேற்கண்ட கர்ணனின் கற்சிலை தமிழ்நாடு திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் கர்ணனின் போர்க்கள சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளது.

கர்ணனின் போர்க்கோலச் சிற்பம்..!!

"கர்ணனின் நாகாஸ்திர பிரயோகம்" என்னும் நிகழ்வு, நெல்லையப்பர் கோவிலின் முன் மண்டபத்தில் கர்ணனின் நெடிய தூண் சிற்பமாக எழிலுற சித்தரிக்கப்பட்டுள்ளது. கர்ணன் தனது வலது கையில் அஸ்வசேனன் என்னும் பாம்பை பிடித்திருப்பது.

இடது கையில் வில்லுடன்
போர்க்கோலத்தில் நின்றிருப்பது, கோபத்தை வெளிப்படுத்தும் கண்கள், முகபாவம், செழுமையான ஆபரணங்கள், ஆடை அணிகலங்கள் என உயிரோட்டமான ஒவ்வொரு அம்சமும் பெயர் தெரியா சிற்பியின் சிற்பத்திறனை எண்ணி வியக்க வைக்கின்றது..!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday 27 May 2023

சித்தன் அருள் - 1343 - அன்புடன் அகத்தியர் - இடைக்காடர் சித்தமுனி!






17/3/2023 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்: காளிகாம்பாள் சக்தி பீடம் பாவாகட் காளிகா தேவி கோயில்  குஜராத். 

ஆதி அந்தம் இல்லாதவனை அம்மையையுமே அப்பனையுமே பணிந்து பரப்புகின்றேன் இடையன்!!!!!!! 

நிமித்தம் நிமித்தம் காட்டி. மனிதனால் எதையுமே செய்ய முடியவில்லை.... எதையுமே செய்ய முடியவில்லை!!!!

ஏன் ?என்பதால் ஆனாலும் கிரகங்களை பற்றியும் கூட அவை செய்யும் !!!!!இவை செய்யும்!!!! இன்னும் சனியவன் வந்து விட்டால் கண்டங்கள்!!! கஷ்டங்கள்!!! இன்னும் இன்னும் ஏராளம் !!!!என்று மனிதனுக்குள் பயம்தான் ஏற்படுகின்றது!!!!

ஏன்? தெரியாமலே கேட்கின்றேன்!!! 

நீதி நேர்மை தவறாமை!!! பொய் சொல்லாமை...!!! பொறாமை குணம் இல்லாமல் பிற உயிர்களை கொல்லாமை..ஆக இருந்தால் ஏன்? நீ பயப்பட வேண்டும் ???மனிதா!!!!!!

சிறிது யோசித்துக் கொள்!!!!

அனைவரும் சொல்கின்றார்கள் நிச்சயம் எதை என்று அறிய அறிய """"""ஏழரையன் !!!!!! (சனி பகவான்) வந்து விட்டான்!!!! வந்துவிட்டான் கஷ்டங்கள்!!! கஷ்டங்கள்!!! என்று!?!!

ஆனால் நீ சரியாக இருந்தால் கஷ்டங்கள் நிச்சயம் வராது மனிதா!!!!!

 புரிந்துகொள் இதனை!!!!!

நிச்சயம் எதனை என்று கூட ஆனாலும் மக்கள் எதை எதை என்று அறிந்து அறிந்து இதனை ஏற்கனவே இவை என்று ஓர் உரையில் ஒரு ஞானி தெரிவித்து விட்டான் மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்!!!!

(இடைக்காடர் சித்த முனி மனிதர்களுடைய ஜாதகத்தில் சனி பகவான் ஒன்றாம் இடம் தொட்டு பன்னிரண்டாம் இடம் வரை கோச்சாரத்தில் மாறி மாறி வருகின்ற பொழுது மனிதர்கள் அதை எப்படி புரிந்து கொள்ள வேண்டும் அப்பொழுது எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை இந்த வாக்கில் தெளிவாக குறிப்பிடுகின்றார்)

நிச்சயம் ஆனாலும் அறிந்து அறிந்து பின் ஒன்றும் அதாவது ஒன்றாம் இடமும் இரண்டாம் இடமும் சனியவனுக்கு நல்லதில்லையாம்!!!!!!!!!?!!!!!!

ஆனாலும் இதை மக்கள் பரப்புகின்றனர்!!!!!

ஆனாலும் மூன்றில் வந்து விட்டால் யோகங்களாம்!!!!!!!!?!!!!!!

எப்படி சனியவன் கொடுப்பான்??????

மூன்றில் வந்து விட்டால் யோகங்கள் எதை என்று அறிந்து அறிந்து !!!!

சனிபகவான் ஜாதகத்தில் 1வீட்டில் இருக்கும் போது 

ஒன்றில் நின்று விட்டால் ஒன்றிற்கு உரியவன் தந்தையானவனே அதாவது உன்னை ஈன்றெடுத்தானே  எதை என்று அறிய அறிய தந்தையானவனே!!!!

அத் தந்தையானவனுக்கு மதிப்புக்கள் கொடுத்தால் தான் எதை என்று அறிந்து அறிந்து அதனால் சில புண்ணியங்கள் !!!

சனிபகவான் ஜாதகத்தில் 2 ம் வீட்டில் இருக்கும் போது 

இதில் இரண்டாம் இடமும் கூட தரித்திரங்கள் உண்டாகுமாம்!!!!! மனிதர்கள் சொல்கின்றார்கள்!!!!

ஆனால் இரண்டாம் இடத்தை எதை என்று அறிந்து அறிந்து எவை என்று புரிய புரிய இரண்டும் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட இன்னும் எவை என்று புரியாமலே தாயவளை குறிக்கக் கூடியது!!!! ஆனாலும் ஈன்றெடுத்த தாயும் தந்தையுமே முதன்மையானவர்கள் !!!! இதை அறிந்து அறிந்து மனித பிறப்பில் இதை நன்குணர்ந்து அவர்களுக்கு மதிப்பு கொடுத்தால் தான் மூன்றில் எதை என்று அறிந்து அறிந்து சனீஸ்வரன் கொடுப்பானே தவிர!!!! நிச்சயம் பின் எவை என்று அறிய அறிய மூன்றில் வந்தாலும் கஷ்டங்கள் தான் ஏற்படும் என்பது உறுதி!!!!!!

அறிந்து அறிந்து நிச்சயம் ஒன்றில் எவை என்று அறிய அறிய முதல் அதாவது எவை என்று பின் முதலாம் வீடு எதை என்று அறிந்து அறிந்து சந்திரனுக்கே!!!!!! 

ஆனாலும் இவை என்று அறியாத அளவிற்கும் கூட என்னென்ன தேவைகள் பின் அதாவது நிச்சயமாய் பின் எவை என்று கூட மாமிசத்தை உட்கொள்ளக் கூடாது!!!! இப்படி ஜீவகாருண்யாத்தை கடைப்பிடித்தால் சூரியனுக்கு மிகவும் பிடிக்கும்!!!

இரண்டாவதாக வந்தால் நிச்சயம் அனைத்து உயிர்களும் கூட அம்மா என்று அழைக்கின்றது அதனையும் கூட கொன்று சாப்பிட்டார்கள் எதை என்று அறிய மானிட ஜென்மங்கள்!!!

இதனால் மூன்றினில் நிச்சயம் அதாவது சனிபகவான் ஒன்றும் செய்ய மாட்டான்!!!

ஒன்று இரண்டு இதில் என்ன செய்ய வேண்டும் என்பதை யான் தெரிவித்து விட்டேன்!!!!

( சனிபகவான் ஜாதக கட்டத்தில் ஒன்றாம் இடம் இரண்டாம் இடத்தில் வந்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிவித்து விட்டார்)

அன்னை தந்தையரை வணங்குதல் எதையென்று குருவை வணங்குதல்!!!! எதை என்று கூட பின் பழமையை கடைப்பிடித்தல்!!! பாசம் பொழிதல் இவையெல்லாம் இருந்தால் மூன்றில் வந்தால் சனியவன் நிச்சயம் நல்லதை செய்வான் அதை தவிர்த்து விட்டு ஒன்று இரண்டு நீங்கள் தவறு செய்தீர்களானால் மூன்றில் நிச்சயம் தவறுதான் நடைபெறும் !!! ஆனால் சில மனிதர்கள் மூன்றில் வந்து விட்டதே எந்தனுக்கு சனியவன் ஒன்றும் செய்யவில்லையே எதை என்று அறிய அறிய !!!!

""""""நீ செய்தால் தான் சனியவனும் சரியாக செய்வான்!!!!!!!!!

நீயே சரியில்லை!!!!

அப்படி எதை என்று அறிய அறிய ஆனாலும் கொடுப்பான்!!!!! சரி பார்ப்போம்!! என்று!!!

ஆனால் எதை என்று அறிய அறிய பின் மூன்றினில் பின் தைரியமாக எதை என்று அறிய அறிய இறைவனிடத்தில் சேருதல் இறைவனை பிரார்த்தித்தல்!!!

அதாவது ஒன்று இரண்டு மூன்று இவை தன் குரு எவை என்று அறிய அறிய இக் குருவை சரியாக பயன்படுத்திக்கொண்டு எதை என்று அறிய அறிய பின் நல் முறையாகவே வந்தால் எதை என்று அறியாது பின் ஆனாலும் இவை ஒன்றும் இரண்டும் சரியாக பயன்படுத்திவிட்டு மூன்றாவது நீ சரியாக பயன்படுத்தவில்லை என்றால் ஆனாலும் நிச்சயம் சனியவன் ஏதாவது ஒரு ஆறுமாதங்களில் அதாவது எவை என்று அறிய அறிய கொடுப்பான்!!!!!!

அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் பின் நான்கில் நுழையான்!!!!!!! எதை என்று அறிய அறிய ஆனாலும் அங்கேயும் சில சந்தர்ப்பங்கள் கொடுப்பான்  எதை என்று அறிய அறிய!!!!

அம்மைக்கு உதவி செய் அதாவது பெற்றெடுத்த தாய்க்கு உதவி செய்!!! என்று நான்காம் இடத்தில் வந்து !!!!

ஆனாலும் எதை என்று அறிந்து அறிந்து பின்பு எவை என்று அறிய பின் திட்டி தீர்ப்பான் தாயவளை கூட!!!!!!

ஆனால் ஏதும் இயலாத அதாவது கை கால் ஊனம் எதை என்று அறிய அறிய இவர்களுக்கும் உதவிகள் செய்தல்!!!!! இயலாதவருக்கு அப்பகுதியில் உதவிகள் செய்தால் நிச்சயம் நான்கிலும் கூட நன்மைகள் செய்வான்!!

அப்படி இல்லை என்றால் கண்டம் ஏற்படுத்தி விடுவான்!!!!

இதுதான் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து புரிந்து கொண்டாயா???

நான்கில் வந்துவிட்டால் எதை என்று அறிந்து அறிந்து கண்டம் கண்டம் என்று சொல்கின்றார்கள் அப்பனே அனைத்தும் உன்னிடத்தில் இருந்து கொண்டு சனியவனை குறை சொல்லக்கூடாது அப்பனே!!!

சனியவனை பற்றியும் யான் நன்கு அறிவேன்!!!!

அவை மட்டுமில்லாமல் எதை என்று அறிந்து அறிந்து இவ் நான்கிலும் கூட நீ சரியாக பயன்படுத்திக் கொண்டால் மாதா!!! பிதா!! குரு!! தெய்வம்!!!!
எதை என்று அறிய அறிய ஏற்கனவே ஞானி சொல்லி விட்டான் அனைவரும் இதை உணர்ந்ததே!!!!! 


இதை நீ சரியாக பயன்படுத்தி விட்டால் ஐந்தில் எவை என்று சனியவன் வரும்பொழுது எப்படி எல்லாம் புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதை கற்பிப்பான்!!!

எதை என்று அறிந்து அறிந்து அப்படி எல்லாம் செய்துவிட்டால் பின்பு ஆறில் நுழைவான் அனைத்தும் கொடுப்பான் எதை என்று அறிய அறிய!!!

எவை என்று புரியப் புரிய இப்படியே எதை என்று கூட ஆறில் வரும் பொழுது அனைத்தும் வாரி வழங்குவான் எதை என்று கூட அப்படி எதை என்று அறிய அறிய பின் ஐந்தில் எவை என்று கூட எதை என்று பின் நிமித்தம் காட்டி அனைத்தும் உரைத்து வந்து ஆறில் பார்ப்பான்!!!

என்னதான் செய்கின்றான்??? பின் அனைத்தும் கொடுப்போம் எதை என்று அறிந்து அறிந்து எதை என்று இவந்தனே!!!!!! வைத்துக் கொள்கின்றானா!!!!!!???

பின்பு அனைவருக்கும் மேல்நோக்கி பின் அனைத்தும் தருகின்றானா என்று எல்லாம் பார்ப்பான்!!!!( சனிபகவான் ஆறாம் இடத்திற்கு வந்து அனைத்தும் கொடுத்துவிட்டு தானம் தர்மம் செய்கின்றார்களா என்று பார்ப்பார்)

அப்படி இல்லை என்றால் பின் ஏழில் வருவான் பிரச்சனைகளை ஏற்படுத்துவான்!!!

எதை என்று அறிந்து அறிந்து பார்த்தீர்களா எதை என்று அறிய அறிய நீ என்னென்ன செய்கின்றாயோ அதனைத்தான் பின் எவை என்று அறிய அறிய பின் ஏழில் வரும் பொழுது எவை என்று அறிய அறிய நிச்சயம் மணங்களை(திருமணம்) செய்வான்!!!!

ஏனென்றால் ஆறு வீடுகளையும் கூட சரியாக கவனித்து வந்தால் நிச்சயம் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய நிச்சயம் 7ல் மணத்தை( திருமணம்) அதாவது உயர்ந்த இடத்தில் எவை என்று அறிய அறிய நிச்சயம் இறைவன் அருளால் எவை என்று அறியாமலே வரும்!!!!

அதை விட்டுவிட்டு சென்று விட்டால் நிச்சயம் மனைவியே உந்தனுக்கு எமனாக மாறிவிடுவாள்!!!!

தெரிந்து கொண்டீர்களா!?!!

எவை என்று அறிய அறிய இப்படியாகி விட்டு எதை என்று அறிய பின் எவை என்று அறிய எட்டுக்குள் வரும் பொழுது நிச்சயம் தரித்திரம் அப்பா!!!!

குருநாதர் அகத்திய பெருமான் வாக்கு!!!!!!

தரித்திரம் இவை எதை என்று அறிய அறிய பிரிவுகள் சண்டைகள்!!!! சச்சரவுகள்!!!! அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இதை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

எதை என்று கூட அகத்தியன் கூட......... உரைக்கின்றேன் எதை என்று அறிய அறிய அப்பனே இடைக்காடனும் எவை என்று அறிந்து அறிந்து சொல்லிட்டான் அப்பனே!!! யானும் எவை என்று கூட சிறிது சொல்கின்றேன் அப்பனே!!!

எவை என்று எவை என்று புரிய புரிய அப்பனே நல்விதமாகவே மாற்றங்கள் ஏற்படுவதற்கு அப்பனே எட்டு எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அஷ்ட திக்குகளிலும் கூட எவை செய்ய வேண்டும் என்பதை சரியாக ஒருவன் பயன்படுத்திவிட்டால் அப்பனே அவந்தன் எவை என்று கூட.... பின் சனியவன் நவ ஒன்பதாம் வீட்டிற்கு வந்து விடுவான் அப்பனே!!!! 

(மனிதர்கள் சனிபகவான் ஜாதகத்தில் 8ம் இடத்தில் கோச்சாரத்தில் வரும் பொழுது எட்டு திசைகளிலும் தன் தாராள குணத்துடன் தேடி தேடி நன்மைகளை உதவிகளை செய்ய வேண்டும்) 

இப்படி செய்தால் அப்பனே சனியவன் அனைத்து நலன்களையும் தந்து விடுவான் அப்பனே!!!!! இறை தரிசனத்தையும் காண வைப்பான் என்பேன் சனியவன் எவை என்று அறிய அறிய அப்பனே!!!!

 அதனால் எட்டிலும் கூட நீங்கள் தகுதிகள் இல்லை அப்பா!!!!!

 அப்படி இருக்க அப்பனே 9 இல் நுழையும் பொழுது எப்படித்தான்????? இறைவன் தரிசனம் காட்டுவான் ????அப்பனே!?!!!!!!

எவை என்று அறிய அறிய ஆனால் அப்பனே!!! ஒரு சந்தர்ப்பத்தை அளிப்பான் அப்பனே!!!!

 எதை என்று அறிய அறிய இவந்தன் ஒன்பதில் எதை என்று அறிய அறிய பின்பு பார்ப்போம்!!!! இறையாசிகள் கொடுக்கச் செய்வோம் என்று எதை என்று அறிந்து அறிந்து கொடுப்பான் அப்பனே!!!! சனியவனும் கூட!!!!!!!

ஆனால் எவை என்று கூட பத்தில் எவை என்று கூட இருக்கும் பொழுது எதை என்று தெரியாமலே அப்பனே மீண்டும் எவை என்று அறிய அறிய அப்பனே கர்ம வினைக்கு ஏற்பவே எவை என்று அறிய அறிய நீ ஒன்பதுதனில் அப்பனே நவ வீட்டில் நன்மைகளாக எதை எதை செய்கின்றாயோ அதை பிரதிபலிப்பாக நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் பத்தில் வருவான் சனியவன்!!!!

எவை என்று கூட பின் ஒன்பதில் எதுவும் செய்யவில்லை என்றால் பத்தில் கூட ஒன்றும் செய்ய மாட்டான் அப்பனே!!!!!!

 பின் ஏன்??? என்னிடத்தில் வேலை இல்லை என்று கேட்கின்றீர்கள்!!! அப்பனே பணம் இல்லையென்று கேட்கின்றீர்கள்???? அப்பனே!!!! 

(குருநாதரிடம் ஜீவநாடியில் வாக்குகள் கேட்கும் போதும் பிராத்தனை செய்யும் போதும்... வேலை வேண்டும் !!! பணங்கள் வேண்டும் என வேண்டுவதை இங்கு குறிப்பிடுகின்றார்) 

எதை என்று கூட அதாவது ஒன்பதாவது இடத்தில் அப்பனே எவை என்று அறிந்து அறிந்து நீ எதுவும் செய்யவில்லை என்பேன். அப்பனே!!!

அதனால் எதை என்று அறிய அறிய பத்தில் வரும் பொழுது அனைத்தையும் இழப்பாய்!!!! என்பேன் அப்பனே!!!!!!

இவை என்று அறிய அறிய அப்பனே நீ எவை என்று கூட நவ வீட்டில் வரும் பொழுது மற்றவர்களுக்கு பல வழிகளிலும் உதவிகள் செய்தல் அன்னம் அளித்தல் எதை என்று கூட இயலாதவர்களுக்கெல்லாம் உதவிகள் செய்தால் அப்பனே பத்தும் சரியாக இருக்கும் அப்பனே!!!!!!!

பதினொன்றில் கூட உயர்ந்த ஸ்தானத்தை எவை என்று கூட நீ  ஒன்பதில் செய்தாயோ... அதை எவை என்று கூட அனைத்தும் அப்பனே வட்டியாகவே உந்தனுக்கு எவை என்று கூட 11ல் வரும்பொழுது நிச்சயம் பின் சனியவன் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே 11-ல் சரியாக பயன்படுத்திக் கொண்டால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை எதை செய்ய வேண்டும் 11ல் இருக்கும் பொழுது போட்டி பொறாமைகள் இருக்கக் கூடாது எவை என்று அறிய அறிய பிறருக்கு உதவுதல் அப்பனே எதை என்று அறிய அறிய எதை என்று புரியாமல் அப்பனே ஆனாலும் இதன் தன்மைகளும் கூட பிற உயிர்களை கொல்லாமல் இருத்தல்!!!! அப்பனே அனைவரையும் சமமாக எண்ணுதல் இப்படி இருந்தால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து உந்தனுக்கு 12 ல் வரும் பொழுது அப்பனே எதை என்று கூட பின் எதை என்று எவை என்று அறியும் பொழுது பின் இறைவனிடத்தில் எப்படி எல்லாம் ரகசியங்கள் என்று கற்பித்து மோட்சகதியை அளித்து விடுவான் என்பேன் அப்பனே சனியவன்!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் ஆனால் மனிதனுக்கு எவை எடுத்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சொல்ல எவை என்று புரிய புரிய அப்பனே தெரியவே இல்லை என்பேன் அப்பனே!!!!!!!

எதையென்று அறிய அறிய அப்பனே இடைக்காடன் சொல்லி எதை என்று அறிய தொடங்கி விட்டான்!!!!!!

 யானும் எதை என்று அறிய அறிய முடித்தும் விட்டேன் அப்பனே நலன்கள்!!!

எதையென்று அறிய அறிய அதனால் உங்களிடத்திலே குறைகளை வைத்துக்கொண்டு அப்பனே எதை என்று கூட சனியவன் வந்து விட்டால் !?!!!!!!!""""""""""

பரிகாரங்கள் எதை என்று கூட ஒன்றும் நடக்காதப்பா!!!!!!!!!!?!!!

அப்பனே யான் சொல்லியதை எவை என்று அறிய அறிய தான் இடையன் சொல்வதை சரியாக பயன்படுத்திக் கொண்டாலே!!!!!!!! வெற்றிகள் நிச்சயம் அப்பனே!!!

இத் தேவியின் அருள் எதையென்று அறிய அறிய அப்பனே மிகப்பெரிய பல வழிகளிலும் கூட பல அரசுகளையும் உருவாக்கி உள்ளது என்பேன் அப்பனே!!!!!

இதனால் எதை என்று அறிய அறிய அப்பனே..இன்னும் பல கர்மா நிலைகள் எவை என்று உணர்ந்து உணர்ந்து மக்களிடையே பரவிக் கொண்டுதான் இருக்கின்றது  நோய் நொடிகளும் கூட!!!!!!..... 

எவை என்று அறிய அறிய இதனால் அப்பனே நல் முறைகளாகவே மாற்றங்கள் ஏற்பட அப்பனே எவை என்று கூட இவ் சக்தியை நாடுங்கள் அப்பனே நிச்சயம் மனம் தெளிவடையும் அப்பனே!!!!!!!

சித்தர்கள் ரகசியங்கள் கூட தெரிய படுத்தவும் எதை என்று கூட இவ் சக்திகள் நிச்சயம் அதாவது பின் அம்மைகள்( காளி தேவிகளின் திருத்தலங்கள்) உதவுவார்கள் என்பேன் அப்பனே!!!

இதனால் குறைகள் இல்லை நல் முறைகளாக இன்னொரு தலத்திலும் கூட மற்றொரு வாக்கும் நிச்சயம் இடையன் உரைப்பான் யானும் வந்து உரைப்பேன் அப்பனே நலன்கள்!!!! ஆசிகள் !!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே இடைக்காடர் சித்தமுனி மற்றும் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்குகளை தொடர்ந்து அடியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் பதில் வாக்கு தந்தார் அதன் தொகுப்பு

குருவே போற்றி 

குருவே மனுதேவி காளி தேவிக்கும் இந்த பாவாகட் காளிகா தேவி க்கும் சம்பந்தங்கள் குறித்து கூறுங்கள்!!!! 

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இறைவன் ஒன்றே என்று நிச்சயம் மூலன்( திருமூலர்) சொல்லிவிட்டான் அப்பனே ஆனாலும் ரகசியங்களை கூட இப்பொழுது சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே என்ன எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே சம்பந்தங்கள் உண்டு எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே மனித உடம்பில் அப்பனே பல சக்திகள் உள்ளது அப்பனே எவை என்று அறிய அறிய அவ் சக்திகளுக்கெல்லாம் எதை என்று அறிந்து அறிந்து பார்த்து( திருத்தலங்கள் தரிசனம்) சென்றால்தான் அப்பனே நிச்சயம் உயர்வுகள் ஏற்படும் அப்பனே!!! அப்படி செல்லாவிடிலும் கூட( பல திருத்தலங்களுக்கு செல்ல முடியவில்லை என்றாலும் நிச்சயம் சக்தி பீடங்களுக்கு செல்ல வேண்டும்) நிச்சயம் அவ் அவ் சக்தி பீடங்களுக்கு வந்து சென்று கொண்டே இருந்தால் அப்பனே உடம்பில் உள்ள பாகங்கள் செயல்பட்டு அப்பனே நிச்சயம் உயர்ந்த ஸ்தானத்தையும் எவை என்று அறிய அறிய அப்பனே சில நோய்களும் தீரும் என்பேன் அப்பனே சரியாகவே அப்பனே அதனால் எங்கெங்கு எதை என்று அறிய அறிய அப்பனே சென்றிட்டு வாருங்கள் எதை என்று கூட ஒவ்வொன்றாக புரிய வைக்கின்றேன்!!!! யான்!!!! 

அப்பனே  இவ் தேவி இப்பொழுது கூட எதை என்று அறிய அறிய எவை என்று உணர்ந்து உணர்ந்து பின் உங்களை பார்த்துவிட்டு சென்றுவிட்டாள் என்பேன் குழந்தை ரூபத்தில் வந்து!!!

குருவே சரணம் குரு பாதம் சரணம் !!!

மத்திய பிரதேசத்தில் ராவணனோடு சம்பந்தப்பட்ட ஒரு சனீஸ்வரர் ஆலயம் உள்ளது மொரேனா என்ற பெயரில் அந்த ஆலயத்தைப் பற்றி கூறுங்கள்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய இப்பொழுது தான் யான் சொன்னேன் அப்பனே எங்கெங்கு எதைச் சொல்ல வேண்டுமோ அங்கங்கு அதைச் சொன்னால் தான் அதன் மதிப்பு நலன்கள் மிஞ்சும் என்பேன் அப்பனே!!!!

உடல் நிலையில் வரும் மாற்றங்களுக்கு நோய் நொடிகளுக்கு என்ன செய்வது குருவே

அப்பனே ஏற்கனவே யான் பல மூலிகைகளை உரைத்து விட்டேன் அதை எடுத்துக்கொண்டு வர நன்று!!!!!

அப்பனே இவையன்றி கூற மனிதர்களுக்கு பொதுவாக சந்தேகமே வரக்கூடாது என்பேன் எப்பொழுது எதையென்று சந்தேகம் வருகின்றதோ அப்பொழுது எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே ஆனாலும் சந்தேகம் வராமல் நடந்து கொள்ள வேண்டும் அப்பனே சந்தேகமே வரக்கூடாது அப்பனே!!!!
 
குருவே சரணம் குரு பாதம் சரணம் குருவே அனைவருக்கும் நுரையீரல் சம்பந்தப்பட்ட சளி பிரச்சனை சுவாச சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நெப்லைசர்( nebulizer)Nebuliser machine or vapor inhaler machine. கருவியில் செயற்கை மருந்துகளை இட்டு சுவாசம் பிடிக்கும் பொழுது சிறிது தற்காலிக ஆசுவாசமும் கிடைக்கின்றது ஆனால் நுரையீரல் இதனால் பாதிப்படைகின்றது இந்த கருவியில் சலைன்( saline Water)  செயற்கை  திரவம் மருந்துக்கு பதிலாக இயற்கையான மருந்துகளை சுவாசத்திற்கு பயன்படுத்தலாமா அப்படி பயன்படுத்துவதற்கு என்ன இயற்கை மருந்தை பயன்படுத்துவது????

அப்பனே எவை என்று அறிய அறிய நிச்சயம் இதற்கும் பல வழிகள் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது ஹோமங்கள்( மூலிகைகள் சேர்த்து செய்யும்) செய்கின்றார்கள் அப்பனே எதை எதை என்று கூட அப் புகையைப் பிடித்தாலே போதுமானதப்பா!!!!!!  எவ்வியாதியும் வராதப்பா!!!! 

எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எதை என்று கூட இப்பொழுது கூட பின் தைல மரங்கள்( யூகலிப்டஸ் Eucalyptus tree) எதை என்று அறிய அறிய அப்பனே அவ் மரத்தின் இலைகளை கூட நன்கு எவை எவை என்று அறிய அறிய அப்பனே நீரிலிட்டு அப்பனே எவை என்று கூட அதனை சூடேற்றினால் அப்பனே அதில் தான்( சுடுநீரில் யூகலிப்டஸ் இலைகளை இட்டு ஆவி பிடித்தல்) இருக்கின்றது அப்பனே அனைத்தும் வெளிவந்து விடும்( நுரையீரல் தொற்று ஜலதோஷம்) அப்பனே!!!

குருவே கேன்சர் வியாதி மற்றும் உடல் சமநிலை ப்படுத்த சோடா உப்பு எனப்படும் பேக்கிங் சோடா மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றார்கள் அது நல்லதா????

அப்பனே நிச்சயம் ஔஷதங்களைப் பற்றி இன்னும் விவரமாக குறிப்பிடுகின்றேன் அப்பனே முதலில் எதை என்று அறிந்து அறிந்து யான் சொல்லிய ஔஷதங்களை( குருநாதர் கூறிய மருந்துகள் 32 வகையிலான மூலிகை மருந்துகள் உட்பட) எடுத்து வந்தாலே போதுமானதப்பா!!!

அப்பனே நலன்கள் நலன்கள் அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள்!!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

காளிகா மாதா கோயில் 

இந்தியாவின் குஜராத்தில் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள பாவகாத் மலையின் உச்சியில், சம்பனேர்-பாவாகத் மலைத்தொடர்களில் அமைந்துள்ள கோயில்

இது 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

கோயிலில் மூன்று பெண் தெய்வங்கள் உள்ளன:

மையத்தில் காளிகா மாதா, வலதுபுறம் காளி மற்றும் இடதுபுறத்தில் பஹுச்சரமாதா.           .வீற்றிருக்கின்றாள்

சித்ரா சட் 8 அன்று, கோவிலில் ஒரு திருவிழா நடைபெறுகிறது, இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இக்கோயில் பெரிய புனித சக்தி பீடங்களில் ஒன்றான தலமாகும்.

 ரோப்வே மூலம் கோவிலுக்கு எளிதில் செல்லலாம்.

பாவாகட் காளிகா தேவி கோயில் 
பவாக்ட் பாவா பஜார் பவகாத், பஞ்ச்மகால் மாவட்டம் குஜராத் 389360
ஆலயம் திறந்திருக்கும் நேரங்கள்

ஆலயம் வாரத்தில் எல்லா நாட்களிலும் காலை 6 மணி முதல் மாலை ஏழரை மணி வரை திறந்திருக்கும்.

பாவகாட்டின் காளிகா மாதா ஆதிவாசிகளால் வழிபடப்படுகிறார். 15 ஆம் நூற்றாண்டின் நாடகமான கங்கதாஸ் பிரதாப் விலாச நாடகத்தில் இந்த கோவில் விவரிக்கப்பட்டுள்ளது

காளி தேவியின் நினைவாகப் பெயரிடப்பட்ட இந்த கோயில் காளி மாதாவின் இருப்பிடம் மேலும் இது சக்தி பீடங்களில் ஒன்றாகும்,சதி தேவியின் அடையாளக் கால்விரல் இங்கு விழுந்த இடம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 25 May 2023

சித்தன் அருள் - 1342 - நட்டாலீஸ்வரர் கோவில் கலச விழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்திய கேள்வி/பதில் பகுதியில், நம் குருநாதரிடம் "நட்டாலேஸ்வரர்" கோவிலை பற்றி தெரிவியுங்கள் என்ற பொழுது, இரவு நேரத்தில் யான் அங்குதான் இருக்கின்றேன் என பதிலுரைத்தார்.

ஒரு அகத்தியர் அடியவர், அந்த கோவிலில் கலச விழா நடக்கப்போவதை தெரிவித்து, அழைப்பை அனுப்பித்த தந்தார். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!





இயன்றவர்கள், அங்கு சென்று அருள் பெற்று வருக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

Tuesday 16 May 2023

சித்தன் அருள் - 1341 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 7


அகத்தியப்பெருமானை நாடியில், நேரடியாக வந்து சந்தித்து கேள்வி கேட்ட அடியவர்களின் வாக்கிலிருந்து எடுக்கப்பட்ட, பொதுவான அறிவுரைகள்.

கண் பார்வை பாதிப்பை சரி செய்ய என்ன செய்ய வேண்டும்?

அப்பனே, இதை பற்றி பல சித்தர்களும் எடுத்துரைத்து விட்டார்கள். பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி என்னும் மூலிகையை எடுத்துக் கொண்டு, அவை மட்டுமல்லாமல், வாரத்துக்கு இருமுறை முருங்கை சாற்றையும் எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமல்லாமல், சிரசாசனம் தினமும் செய்ய வேண்டும்.

மேல் நிலை/உயர் நிலை படிப்பிற்கு (கல்விக்கு)!

முதலில் அதற்கான தகுதியை/பொது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். சேர்ந்த பின் பார்த்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது. காலை மூன்று மணிக்கே எழுந்து, தியானம், பிராணாயாமம், போன்றவை செய்து, உடல் மனா சுத்தியுடன், கற்று வந்தால், ஏன், நாங்களே வந்து உயர்ந்த நிலைக்கு அழைத்து செல்வோம். அபிராமி அந்தாதியை தினமும் ஓதிக்கொண்டே வந்தால், வெற்றியாளர் ஆவது உறுதி. சிறு பிராயத்திலிருந்தே விஷ்ணு சஹஸ்ரநாமத்தை யார் ஓதிக்கொண்டே வருகிறார்களோ, அவர்கள் உயர்ந்த நிலையை அடைவார் என்பது உறுதி. மற்றவை எல்லாம் தானாக வந்துவிடும். கேட்பது எளிது, சொல்வதும் எளிது, ஆயினும் சிரமங்களை அனுபவித்தால்தான் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.

நன்றி ஏன் சொல்லுகிறோம்? அதன் தாத்பர்யம் என்ன?

நாவை அடக்கி (மடக்கி), ரீங்காரத்தை, உள்மேல் கபாலத்தை நோக்கி செலுத்தினால், அது இறைவனை சென்று சேரும். அதுவே நன்றியின் உண்மையான அர்த்தம். ("நன்றி" என கூறி அந்த வார்த்தை கூறும் பொழுது, நாக்கு ரீங்காரத்தை அண்ணாக்குக்கு மேல் எப்படி ஒட்டிக்கொண்டு ரீங்காரத்தை செலுத்துகிறது என பாருங்கள்! வியந்து போவீர்கள். 99% பேருக்கும் இங்கு நன்றி சொல்லத் தெரியாதே. எவ்வளவு உணர்த்தி என்ன பிரயோசனம்).

கேட்டால், தெரியாததை, தெரியாது என்று கூறக் கூடாது. தெரிந்து கொண்டு பிறகு கூறுகிறேன் என்றுதான் கூற வேண்டும். அந்த முறையே சரி!

முதலில் ஓதவேண்டியது இறைவன் நாமத்தையே! இறைவன் நாமத்தை ஓதிவிட்டு, கல்விகள் கற்றால், செயல்கள் செய்தால், இறைவன் உன்னை கை விடமாட்டான்.

திருப்பதி சென்றால் திருப்பம் வரும் என்பதின் தாத்பர்யம் என்னவென்றால், அங்கிருக்கும் ஏழு மலைகளிலும் ஏழு கிரகங்களின் பார்வை விழுகிறது. ராகு, கேதுவின் பார்வை பெருமாளின் சன்னதியில், பெருமாள் தலையில் விழுகிறது. ஆகவே பெருமாள் தரிசனத்தை பெறுகிறவர்களுக்கு, ராகு, கேது அருளால் அனைத்திலும், கோடீஸ்வரனாகும் தன்மை அமைகிறது. இதை பற்றி, விஞ்சான பூர்வமாக, பிறகு உரைக்கின்றேன்!

புதன் கிரகம், 12 ராசியிலும். இருந்தாலும் எந்த வித பலனையும் கொடுக்காது. அதை கொடுக்க வைக்க வேண்டும் என்றால் பெருமாளை, குறிப்பாக ஏழு மலையானை நன்றாக பிடித்துக் கொள்ள வேண்டும்.

குரு சந்திர யோகம் (கஜகேசரி யோகம்) பலருக்கும் பலிக்காமல் போவதன் காரணம், அவர்கள் சுயநல காரர்களாக இருப்பதால் தான். என்று அவர்கள், தன வாழ்க்கையை பிறருக்காக சமர்ப்பித்து கடமையை செய்து வாழ்கிறார்களோ, அன்று முதல் அவர்களுக்கு இந்த யோகம் செயல்பட தொடங்கும்.

ஓதிமலையில் நாள், கோள் வேலை செய்யாது. ஏன் என்றால், முருகன் கோள்களுக்கு அப்பாற்பட்டவன். இதை உணர அங்கு (மலை மேல்) ஓர் இரவு படுத்து இருந்து பார். ஆனாலும், தவறு செய்தால், நிச்சயம் தண்டனை உண்டு. ஓதியப்பர் என்ற பெயர் எப்படி வந்தது? (சிவபெருமானுக்கு குருவாய் அமர்ந்து "பிரணவத்தின்" பொருளை உரைத்ததால்). அப்படி இருக்க அங்கே கிரகங்கள் செயல் படுமா?

இனி வரும் நாட்களில் உண்மைகளை உரைப்போம், பொய்களை அழிப்போம்!

முதலில் ஒரு மனிதன், மனிதனாக வாழ்ந்துவிட்டாலே, அவன் குல தெய்வம் அவனை தேடி வந்து விடும்.

இந்த ஜீவநாடி யார் இல்லத்துக்கு வரவேண்டும் என்பதை யாமே தீர்மானிப்போம். அவரவர் மனசாட்சிக்கே தெரியும் அவன் அவன் நல்லவனா, கெட்டவனா என்று! (அடியவர்களே! அகத்தியப்பெருமானிடம் வேண்டிக் கொள்ளுங்கள்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

Monday 15 May 2023

சித்தன் அருள் - 1340 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 6


41. எமது அப்பனுக்கு பணிவான வணக்கங்கள்!!! எனது ஐயத்திற்கு விடையளிக்க சிரம் தாழ்ந்து வேண்டுகிறேன். ஆட்டோ இம்யூன்(நோய்  எதிர்ப்பு சக்தி நமது உடலுக்கு எதிராக செயல்படும் தன்மை) நோய் எதனால் ஏற்படுகிறது ஐயனே. அதற்கு நிரந்தர தீர்வு(மருந்து) அருள வேண்டுகிறேன்.

நிச்சயம், எது என்று அறிய! அறிய! பல துகள்கள், உடம்பில் பதிந்துள்ளது. அதன் செயல்பாட்டை உடலிலிருந்து எப்படி நிறுத்துவது? முதலில் பொறாமையை நீக்குவது. நல் குணத்தை, அதாவது நாவடக்கத்தை, அதாவது வள்ளுவன் சொல்லியிருக்கிறான் எதை அறிந்து, அறிந்து. இதனைப்பற்றி இப்பொழுது தேவை இல்லை. அனைத்தும் நானே, இவ்வுலகத்துக்கு, எதை கொடு வருவது, எதை கொண்டு செல்வது ஒன்றும் தெரியாமல் வாழ்வதா? இதனால் நிச்சயம், வளி மண்டலத்தில் கூட பல துகள்கள். இதனால், இது தேகத்தில் தேய்மானம் ஆகும்பொழுது நிச்சயம் அவ் வளிமண்டலத்தில் உள்ள துகள்கள் தாக்கும் பொழுது நோய்கள் உருவாகின்றது. உடல் வலுப்பெற வேண்டும் என்றால், இளம் வயதிலேயே நல் எண்ணங்கள் வலுப்பெற வேண்டும். ஆனால், இளவயதில் யாருக்கும், நல் எண்ணங்கள் உயர்வதே இல்லை. கேட்ட புத்திகளால், கேட்டு விழுந்தான். இதனால் அவ் துகளும் கெட்டழிந்து, சீரழிந்து, மனிதனின் தேகத்தை தாக்குகின்றது. இதனால், மனிதனை, ஒழுக்கமாக இருங்கள் என்றெல்லாம் யாங்கள் எடுத்து உரைத்துக்கொண்டே இருக்கின்றோம். இன்னும் இதனை விளக்க ரகசியங்களை, திருதலங்களில் கூட யான் சொல்வேன்.

42. அகத்தியர் அய்யா தங்கள் திருவடிகள் போற்றி போற்றி..... காவிரி அன்னை ஓடும் மேட்டூர் அணை ஊரில் அருள்மிகு ஶ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஞான தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் திருப்பணி மற்றும் கும்பாபிஷேகம் நடந்தது 32 ஆண்டுகளாகிறது...... பல முயற்சிகளுக்கு பின்பு தற்போது திரும்பவும் அதற்கான செயல் பாடு ஆரம்பித்து உள்ளது...... அய்யா இப்பணி சிறப்புடன் ஆரம்பித்து நடந்தேறிட தங்களுடைய வழிகாட்டும் வாக்கு வேண்டும் அப்பா... தயவு செய்து அருள் புரியுங்கள்.....

எதை என்று அறிய! அறிய! இதற்க்கு தொடக்கமே யானே வகுத்து வடிவமைத்தேன்.  எனவே,யானே முன்னின்று இதனை நடத்திவைப்பேன். கவலையை விடுக.

43. "ஐயனே, கல்யாண தீர்த்தத்தில் வாழ்ந்து மோக்ஷம் அடைந்த சாது ஶ்ரீ கிருஷ்ணவேணி அம்மாவின் ஜன்ம மாதம் மற்றும் நக்ஷத்திரம் அடியேனுக்கு தெரிவித்து அருள வே1ண்டும்"

தேவை இல்லை, நிச்சயமாக ஞானிகளுக்கு இவைகள் எல்லாம் தேவை இல்லை. அறிந்து! அறிந்து! என் மகளாகவே, என்னிடக்த்தில் இருந்து கொண்டு இருக்கும் பொழுது நாள் ஏது? கோள் ஏது? என்னசெய்யும்? அதனால் தேவை இல்லை.

44. குருநாதா! அசைவம் சாப்பிடுகிறவர்கள் அதை நிறுத்தி சித்தர்கள் காட்டும் வழியில் வந்திட என்ன செய்வது?

ஒன்றும் செய்யத்தேவை இல்லை. முதலில் அதனை (சாப்பிடுவதை) நிறுத்துங்கள், பின்பு நாங்கள் வந்துவிடுவோம், பிறகு (நாங்களே உங்களை) பார்த்துக்கொள்வோம்.

45. அய்யனே! ஒருவன் மனைவி கருவுற்றிருந்தால், அவன் கடல், மலை போன்ற இடத்தருகில் அமைந்துள்ள கோவில்களுக்கு செல்லக்கூடாது என்பதன் தாத்பர்யத்தை விளக்குங்கள் அய்யா!

இவ்வுலகத்தில், ஒரு மனிதன் ஒரு பெண்ணின் கர்ப காலத்தில் ஓடி சென்று விடுகின்றான். அப்படி ஓடி சென்றுவிட்டால், தன பிள்ளைகளும் கூட தாய் தந்தையரை மதிக்காமல் போய்விடும். அதனால், நிச்சயம் அருகிலே இருந்து, மனைவிக்கு என்னென்ன தேவையோ, அன்பாக பார்த்துக்கொண்டால், நிச்சயம் அக்குழந்தைக்கு தெரியும். இதனால் அன்பும், அருளும், தாய் மீதும் தந்தை மீதும் வைத்து வளரும். இதெல்லாம் தெரிந்து தான், மனிதன் திருடன் ஆனதினால், இதை தெரிவித்து இருக்கின்றார்கள், எங்கும் செல்லாதீர்கள், மனைவியை பார்த்துக்கொள்ளுங்கள் என்று.  

46. அகத்தீச அப்பா, ஸ்கந்த ஷஷ்டி கவசத்தில் வரும் இந்த வரிகளுக்கு, விளக்கம் கூற, உங்கள் திருவடியில் வணங்கி, அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

செககண செககண செககண செகண

மொகமொக மொகமொக மொகமொக மொகென

நகநக நகநக நகநக நகென

டிகுகுண டிகுடிகு டிகுகுண டிகுண

ரரரர ரரரர ரரரர ரரர

ரிரிரிரி ரிரிரிரி ரிரிரிரி ரிரிரி

டுடுடுடு டுடுடுடு டுடுடுடு டுடுடு

டகுடகு டிகுடிகு டங்கு டிங்குகு.

நிச்சயம் சொல்லுகின்றேன். நிச்சயம் இரு மண்டலம், கந்த சஷ்டி கவசத்தை ஓதி என்னிடத்தில் ஒப்படைக்கச் சொல்! உடனே சொல்லிவிடுகிறேன்!

47. குருநாதப்பா, இந்த பாவப்பட்ட மனிதப்பிறவிகளுக்கு, குருநாதரின் கருணையினால் சுப்ரமணிய ஞானம் உங்கள் பிள்ளைகளுக்கும் கிடைக்க கருணை காட்டுங்கள் அப்பா.

நிச்சயம் காட்டுவேன். செந்தூருக்கு சென்று கொண்டு இருக்கச் சொல்.

இந்தக் போராட்ட வாழ்கையில்,  பெண்களுக்கே உரிய அறிவுரைகளை, அன்னை உமையாள் , லோபமுத்ரா அம்மாவின் வாக்கில் கேட்டு நடக்க, அம்மை அப்பரின் திருவடியில் வணங்கி கேட்டுக் கொள்கிறோம்.

நிச்சயம் என் இல்லத்தவளும் வாக்கை செப்புவாள், பொறுத்திருந்தால்.

48. அகத்தியப்பெருமானின் பாதங்களில் சரணம் அய்யா! எத்தனையோ குடும்பங்களில், பெரியவர்கள் பார்த்தும், அல்லது இருவருக்கும் பிடித்தும் திருமணம் செய்கின்ற வாழ்க்கையில் குறுகிய காலத்திலேயே, கணவன் மனைவியிடையே பிரிவு வருகிற நிலைக்கு வாழ்க்கை சென்று விடுகிறதே. அனைத்தும் சரியாகி, இருவரும் அமைதியாய் வாழ ஏதேனும் ஒரு உபாயம் கூறுங்களேன்.

எதை என்று அறிய அறிய! இக்கலியுகத்தில் அவர்கள் புரிந்து கொண்டு நடந்தாலே போதுமானது. தான் தான் பெரியவன்/பெரியவள், அதை மட்டும் அல்லாமல், கல்விகள். அது மட்டுமன்றி 12 கட்டத்தில் சனியவன் இரண்டரை ஆண்டுகள் இருப்பான். அதேபோல் கும்பத்திலும் இரண்டரை ஆண்டுகள். ஆக மொத்தம் அவனது வீட்டில் ஐந்து ஆண்டுகள். இப்பொழுது இருவருக்கும் வயது வித்யாசம் அதாவது ஆணுக்கும், பெண்ணுக்கும் மூன்று வருடங்கள் என்று வைத்துக் கொள்வோம், பின் இருவருக்கும் சண்டைகள்தான். ஏன் என்றால், இருவருக்கும் சனியவன், பலமாக இருக்கின்றான். இதை புரிந்து கொண்டுதான் வயதில், 5, 7, பின் 9 போன்ற வயது வித்தியாசத்தில் முன் காலங்களில் செய்தார்கள். ஆனால், இன்று இன்று அப்படியா இருக்கின்றது? பின் ஒருவருடம், பின் இஷ்டத்திற்கு, பின் பிடித்தால் திருமணம் செய்து கொள்வது. ஏன் இந்த நிலைமை. ஆனால், பிடித்துப் போனாலும், இதை மனதிலிறுத்தி, இருவர் இல்லத்திலும் சமாதானப்படுத்தி, பின் செய்து கொண்டால் நன்று. அதை விட்டுவிட்டு எதை எதையோ செய்தால், இவருதான் வரும். வரும் காலங்களில் நிச்சயம், யாங்கள், இதை திருத்துவோம். எவை என்று அறிந்து அறிந்து, அதனால், இவ்வுலகத்தில் திருமணம் என்பது கூட முக்கிய பங்கு வகிக்கிறது. ஆனால், அறிந்தறிந்து, வரும் காலங்களில் நிச்சயம், அதை முதலில் மாற்றுவோம். 

49.  ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி... அய்யனே சிலருக்கு ஜாதகம் பலிக்காது என்று ஆசான் வாக்குரைத்து உள்ளார்... அவர்களுக்கு எதன் அடிப்படையில் வாழ்க்கை இயங்கும்? அவர்கள் நவகிரங்களை வணங்க வேண்டுமா????

எதை என்று அறிய! அறிய! நிச்சயம், எங்கள் அருளாலே இயங்கும். சாதகம், பாதகமாக ஆகாவிடில் சித்தர்கள் வந்து கைக்கொண்டு வழி நடத்துவர்.

50. அய்யனே! குருவிடமோ கடவுளிடமோ சரண்  அடைந்த பிறகு நவகிரங்களை வணங்க வேண்டுமா??? அனைத்தும் அவர்கள் பாதத்தில் தானே .....

எதை என்று அறிய! அறிய! எங்களை வணங்கி விட்டால் நிச்சயம் நவகிரகங்களை கூட அவனிடம் கருணை காட்ட, தேற்றிவிடுவோம். இதனை நிச்சயம் வரும் காலங்களில் தெரிவிப்போம். 

51. குருவே, பூஜை அறையில் பூசிக்கும் தங்களின் திரு உருவ சிலை கீழே விழுந்து ஒரு பக்க கால் சற்று உடைந்துவிட்டது. அதை சரி பண்ணி பூசையில் தொடரலாமா! ஏதேனும் தோஷங்கள் உண்டா?

எதை என்றும் அறிய அறிய. எவை என்று புரிய! புரிய! நல்விதமாகவே தொழுது கொண்டு வந்தாலே போதுமானது. தவறு செய்தால், இப்படித்தான். எந்தனுக்கு கோபம் வந்தால், யானே உடைத்து விடுவேன்.

52. குருவே  பழனி தண்டபாணி தெய்வத்தின் ஆசிர்வாதம் கிடைக்க ஆசான் வழி சொல்ல வேண்டுகிறேன்...

ஒன்றும் செய்யத் தேவை இல்லை. நல்முறையாகவே வாழச்சொல்.

53.  அய்யனே! திருவண்ணாமலை திருத்தலத்தில் நடக்கும் மகேஷவர பூஜையின் ரகசியத்தையும், அதன் மேனலான பலன்கள் பற்றியும் விரிவாக எடுத்துரைக்க வேண்டுகின்றோம்.

எதை என்று அறிய! அறிய! நிச்சயம் அண்ணாமலையில் செய்யும் உதவிகள், நிச்சயம், பல ரிஷிகளும், சித்தர்களும், தேவர்களும் வந்து உட்கொள்வார்கள். அண்ணாமலையில் செய்த புண்ணியம் பின் இமயமலையில் எதிரொலிக்குமாம். இதனை பற்றி தீவிரமாக நிச்சயம் எடுத்துரைப்பேன், பொறுத்திருந்தால்.

54.குருநாதா! பல கரங்கள் உடைய சக்தியின் (தேவியின்) உருவங்களை நாம் தொழுகின்றோம். சில உருவங்கள் 4, 8, 12,16,18 என்று கரங்கள் கொண்டுள்ளன. இதன் தாத்பர்யம் என்ன ஐயா?

எதை என்று அறிய, அறிய! என்றாலும் கூட, நூறு கைகளை யான் கொண்டுள்ளேன்! இதை பற்றி ஒரு திருத்தலத்தில் வந்து சொல்லுகின்றேன்.

55. குருவே சரணம்! ஒரு செயலை ஒருவன் சுய எண்ணத்துடன் செய்கிற பொழுது, அதன் பலன் பிற/கூட இருப்பவர்களை நிறைய அளவில் பாதிக்கிற பொழுது, அந்த செயலை செய்தவன் தான் நினைத்தபடி வாழ்ந்துவிட்டு செல்கிறான். இங்கு இறைவன் அவனுக்கு அவன் விருப்பத்தை நிறைவேற்றுகிறார் என்று தானே அர்த்தம். இங்கு பாதிக்கப்பட்டவர்கள் இளிச்சவாயர்கள் என்று தானே அர்த்தம்!

நிச்சயம்! எது என்று அறிய! அறிய! முதலில் இவ்வாறு கேட்கின்றானே! ஏற்கனவே சொல்லிவிட்டேன். ஏமாற்றுபவன் அதை விட ஏமாறுபவன்தான் முதல் முட்டாள்.

56. நம்மை சுற்றி நல்லது , கெட்டது எது நடந்தாலும், அதில் ஒட்டாமல், குரு நாதர் திருவடிகளை  இருக்க பிடித்து கொள்ளும் வரம் வேண்டும்🙏

எதை என்று அறிய! அறிய! அதனால், யான் தான் பிடித்துக்கொள்ளவேண்டும். அவ்வாறு நீங்கள் நடந்து கொண்டாலே போதும். யாங்களே, உங்கள் இல்லத்துக்கு வந்து செய்து விடுவோம். 

57. குருநாதரை தவிர வேறு ஒன்று உண்டு என்கிற நிலை எப்போதும் வேண்டாம் 🙏

எதை என்றும் அறிய! அறிய! பின் அருளுகின்றேன்!

58. மனதில் இருக்கும் அனைத்து கல் மிஷங்களும் நீங்கி, மனம் பளிங்கு போல சுத்தமாக வழி சொல்ல வேண்டும்

இவன்தனை கேட்டால் திருடன் போல் முழிப்பான். இவன்தனை, மூன்று மாதங்கள் சிவராத்திரி அன்று திருவண்ணாமலைக்கு சென்று கிரிவலம் செய்து வரச்சொல், பிறகு அதுகண்டு உரைப்போம்.

59. இன்னும் ஒரு பிறவி இல்லாத நிலையை, குரு அருள வேண்டும் 🙏

நிச்சயம் அருளுகின்றேன், யான் வழிகாட்டிய பாதையில் வந்தால்.

60. குரு அருள் மற்றும் அனுபூதி அனைவருக்கும் பாகு பாடு இன்றி, கிடைக்க வேண்டும்🙏

நிச்சயம் அருளுகின்றேன், என் வழியில் வந்தால்.

61.அய்யனே! தாமிரபரணி புராணத்தை தங்கள் அனுமதியுடன், வழிநடத்துடலுடன் சித்தன் அருள் வலைப்பூ தளம் வழி தெரிவிக்கலாமா?

நிச்சயம் எது என்று அறிய! அறிய! நிச்சயம், என் நதியை பற்றி, யானே எடுத்துரைப்பேன்! எவ்வாறெல்லாம் வந்தேன் என்று!

62. குருநாதா, அறுபடை வீட்டை இந்த குரு பெயர்ச்சிக்குப்பின் அடிக்கடி சென்று தரிசித்தால் குருவின் அருள் நிறையவே கிடைக்கும் என்றீர் அய்யா. உடல் நிலையால் மலையேற முடியாதவர்களுக்கு ஏதேனும் ஒரு வழி காட்டுங்கள் அய்யா! 

எப்பொழுதெல்லாம் நம்மால் ஆகாது என்று நினைப்பு வருகின்றதோ, அப்பொழுதெல்லாம் என்னால் முடியும் என்ற நம்பிக்கை வருகின்றதோ, அவன் மனிதன். ஆகவே, இப்படியே என்னால் முடியாது, முடியாது என்று சொல்லிக் கொண்டிருந்தால், கடைசிவரை முடியாதுதான். பின் என்னால் முடியும், என் முருகனை காண முடியும் என்றால் அனைத்தும் முடியும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

[கேள்வி/பதில் பகுதி, நிறைவு பெற்றது!]

சித்தன் அருள்..... தொடரும்!

சித்தன் அருள் - 1339 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 5


31. அய்யா! இந்த மனிதர்களுக்கு, எந்த விதத்தில் சேவை செய்து உதவலாம்?

முதலில் சித்தர்களை நாடுவது எப்படி என்று புரிந்து வரச்சொல்! பிறகு உரைக்கின்றேன்!

32. அய்யனே! நாக தோஷத்துக்கான, சிறந்த பரிகாரம் எது?

நிச்சயம் இல்லை! நிச்சயம் இல்லை. இவ் தோஷமானது முப்பது வயதுக்கு மேல் போய்விடும்! இதனை, இப்பொழுது அறிவியல் ரீதியாகவும் விளக்க முடியாது. நிச்சயம் உரைக்க முடியாது! எவ் திருத்தலம், எங்கு சென்றால், பாபங்கள் சேராதோ, அங்கு உரைக்கின்றேன்.

33. அப்பா! சோழபுரம் சிவன் கோவிலில் சமாதி அடைந்த சித்தரின் பெயரை கூற முடியுமா?

எதை என்று அறிந்து. அங்கே தான் நிச்சயம் உரைப்பேன். ஏன் என்றால், பின் ஈசனே கோபித்துக் கொள்வான்.

34. அய்யனே! ஒருவன் சம்பாதிக்கும் பணத்தின் எத்தனை சதவிகிதத்தை தான தர்மங்களுக்காக உபயோகிக்க வேண்டும்?

பின் சம்பாதித்தால், பின் கொடுக்க கூட மனசு வராதப்பா!

35. அகத்திய பெருமானுக்கு எனது சிரம் தாழ்ந்த அன்பு வணக்கங்கள்.‌ அகத்திய பெருமானே மனித உடலில் உள்ள ஆரா சக்தி இயங்கும் விதம் பற்றி விளக்கங்கள் கொடுங்கள் பெருமானே!

நிச்சயம் சொல்கின்றேன்! ஆனால், பொருத்தாக வேண்டும்! எவை என்று அறிய அறிய! எப்படி சொல்ல வேண்டுமோ, அப்படி, இறைவனை நாடித்தான் சொல்வேன்.

36. குருவே  கணக்கம்பட்டி மூட்டை சித்தர் என்பவர் யார்?

நிச்சயம் தெரிவிக்கின்றேன்! பொருத்தாக வேண்டும்!

37. அகத்தியம்பெருமான் திருவடிகள் பணிந்து, ஐயா, என்னுடைய தந்தை திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் அம்பாள் ஆலயத்தை புதுப்பித்து நிர்வகித்து வந்தார், அந்த ஆலயம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அரசு அகற்றிவிட்டது. அடியேன் அம்பாளுக்கு 2 கிலோ மதிப்பில் கவச செய்து அணிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஆலயம் இல்லாத நிலையில், அம்பாள் விக்ரஹம் பாதுகாப்பு இல்லாத மற்றொரு ஆலயத்தில் உள்ளது. இதற்கிடையில் எனது தந்தை இறைவனடி சேர்ந்தார். அந்த வெள்ளி கவசம் எங்கள் வீட்டில் உள்ளது. தயவுகூர்ந்து, அந்த கவசத்தை எந்த வகையில் இறைவனிடம் சேர்க்க வேண்டும் என்று அகத்தியம்பெருமான் வழிகாட்ட பணிவுடன் வேண்டுகிறோம்.

எதை என்று அறிய! அறிய! இதை நிச்சயம் ஆனி மாதம் சொல்வேன்!

38. குருநாதா, அப்பா, மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய  மூல பவுத்திரமகுணமாக எளிய இயற்கை வைத்தியம் கூறுங்கள் ஐயா.

இவை எல்லாம் கர்மாவினால்தான் வருகின்றது. நிச்சயம் சொல்வேன். கர்மா சேராத ஒரு ஆலயத்தில் இருந்து சொன்னால்தான் நல்லது. பொறுத்திருக்க! நிச்சயம் பதில் சொல்வேன்! இங்கெல்லாம் இருந்து சொன்னால், நிச்சயம் கர்மா!

39. அகத்தியர் அப்பாவிற்கு தங்கள் திருவடி போற்றி போற்றி... லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் மனோக்காரகன் அமைய, அதுவும் ஜென்ம நட்சத்திரம் சந்திரனின் திருவோணம் மகர வீட்டிலேயே இருக்க,  புத்திக்காரகன் திசையில், ஏழரை நாட்டான் நடக்கையில் அவ்ஜாதகர்  மன அழுத்த நோய்யுக்குள் தன்னிலை மறந்து பிரமை நிலையில் சென்று விடுவாரா....... அதிலிருந்து குணமடைய வழிகள் உண்டா அய்யா....

நிச்சயம் கர்மா இவனை வந்தடைந்து கொண்டு. எதை என்றும் அறியாமலே. நிச்சயம் கர்மா காலம். ஆனால், கிரகங்கள் அனைத்துமே நல்லதை செய்யும். ஆனால், கர்மா அனைத்துமே அனுபவித்து ஆகவேண்டும் என்பது தீர்ப்பு! அதை நிச்சயம் போக்க வழிகள் சொல்வேன், பொறுத்திருந்தால்.

40. ஐயா வணக்கம் ஓம் ஸ்ரீ லோப முத்ரா அன்னை பாதம் போற்றி ஓம் ஸ்ரீ அகத்தியர் அப்பா பாதமே போற்றி  அன்னை ஓம் ஸ்ரீவராஹித்தாய் அவர்களைப் பற்றி அறியாத விஷயங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அவர்களுக்கான தனி சிறப்பை கூறவும் அப்பா ஓம் ஸ்ரீ லோப முத்ரா அன்னை பற்றியும் கூறுங்கள் அப்பா!

நிச்சயம், இதை யார் என்று அறிந்து அறிந்து, இப்பொழுதே சொல்லிவிட்டால், பைத்தியம் ஆகிவிடுவான் மனிதன். நிச்சயம் வணங்கி வரச்சொல். இதன் ரகசியத்தை சொல்வேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

Sunday 14 May 2023

சித்தன் அருள் - 1338 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 4

21. குருநாதருக்கும் அன்னைக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள். அன்னையின் அம்சமான நதி காவிரியா அல்லது தாமிரபரணியா என கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். குருவே சரணம் 

அனைத்தும் நானே!

22. அய்யனே! கால நேர பயணம் என்பது சாத்தியமானதா? இக்கலியுகத்தில் அது நடக்கிறதா?

நிச்சயம் இல்லை. கோளறு பதிகத்தை படிக்கச்சொல்~!

23. அய்யா! நல்லவர்கள் ஆட்சி  செய்த காலங்களில் அனைவரும் ஆனந்தமாக அமைதியாக வாழ்ந்தனர். இன்று, கெட்டவர்கள் ஆட்சியில் மனிதர்கள் இத்தனை சிரமப்படுகின்றனரே! இது மாற வழியிருக்கிறதா?

முதலில் தன்னை உணரச்சொல்! அதன் பின்பு இதற்கான பதிலை உரைக்கின்றேன்.

24.   அய்யா! சித்தன் அருள் வலைப்பூவை வாசிக்கும் பொழுது. ஒரு சிலருக்கு மட்டும், அகத்தியப்பெருமான், அருள்வதையும். உத்தரவு இடுவதையும், காட்சி கொடுப்பதையும்  கண்டுள்ளேன். எங்களை போன்ற அடியவர்களுக்கும் அகத்தியப்பெருமானையும், அன்னை லோபாமுத்திரை தாயையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டுமா?

அனைவருக்கும் உண்டு, எதை என்று அறிய! அறிய! ஆனால், சரியாக அதை பயன்படுத்த தெரியவில்லை. நிச்சயம்.

25.  அய்யனே! வீடும், உலகமும் நலமாக இருக்கவும் ஆத்ம பலம் பெருகவும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மரங்கள் யாவை.

எதை என்றும் அறிய! அறிய! முதலில் துளசி. நிச்சயம் இதை வைத்துக் கொண்டாலே போதுமானது. முதலில் இதை வைக்கச்சொல், பின்பு பார்ப்போம்.

26. அய்யா! மனம் மௌனத்தில் நிலைக்க வழி காட்டுங்கள் ஐயனே.

அறிந்து அறிந்து, நிச்சயம் இதை பற்றியும் உரைத்துவிட்டேன். அதிகாலையிலேயே 3 மணிக்கு உணர்ந்து எழச்சொல். அறிந்து! அறிந்து! தியானங்கள் செய்யச்சொல். பின் நீராடச்சொல். பின் மத்திய வேளையிலும் நீராடச்சொல். பின் மாலை வேளையிலும் நீராட, நீராட பக்குவங்கள். அதனால், உடம்பிலுள்ள தரித்திரங்கள் நீங்குவதோடு நிச்சயம் நாள் வழி. உடம்பிலுள்ள அழுக்குகள் தங்க தங்க, கேட்ட எண்ணங்கள் எல்லாம் வரும்.இதை நிச்சயம், எதையும் எதிர்பார்க்காமலேயே , விஞ்சானப்பூர்வாமாக எடுத்துரைப்பேன், நிச்சயம் பொறுத்திருந்தால்.

27. ஓம் அகத்தீசாய நம. வெளி நாட்டில் வாழும் எங்களை போன்றோரும் ஜீவ  வாக்கு முதலிய அகத்தியர் அப்பாவின் நேரடி வழிகாட்டுதலை பெற அகத்திய பெருமான் மனமிரங்கி அருள் செய்ய வேண்டும்.

நிச்சயம் உண்டு. எவை என்று அறிய, அறிய! எதை என்று உணர, உணர! இப்பொழுது இதோ இருக்கின்றதே! அதை எடுத்துப் போகச்சொல்!

28. அய்யனே! எல்லோரும் விரும்பும் ஒரு மனிதனாக இருக்க இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்?

எதுவும் செய்யத் தேவை இல்லை. இறைவனை வணங்கி வந்தாலே, அறிந்து அறிந்து செய்வான். அது மட்டும் இல்லாமல், மௌனத்தை, நாவடக்கத்தை, கோபத்தை, காமத்தை நிச்சயம் பொறுத்தருள நன்று. ஆனாலும் இதனை கூட, இவ்வுலகத்தில் கடமையை செய்யாமல் ஒழிந்து விடுகின்றார்கள். ஏன்! எதனால் என்றெல்லாம் நேரில் கண்டு உரைக்கின்றேன்.

29. அய்யனே! இக்கலியுகத்தில், ,முக்தி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்யத் தேவை இல்லை. யாங்கள்தான் தேர்ந்தெடுத்து முக்தியை அருள வேண்டும். நீங்கள் விரும்பியதெல்லாம் கொடுத்துவிட்டால், மனிதன் தான் தான் இறைவன் என்று சொல்லிவிடுவான். அதனால் தான், பொறுத்திரு! பொறுத்திரு என்றெல்லாம் கூறுகிறோம். அதனால் மனிதனின் ஆட்டங்கள், பின் நினைப்பு வீணாம். இறைவன் நினைப்பு, பலமாம்.

30. அப்பா! தங்கள் தரிசனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

எதுவும் செய்ய தேவை இல்லை! அன்புதான் மூல காரணம்! அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்! நிச்சயம் யானே வருவேன், தேடி!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!