​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 March 2024

சித்தன் அருள் - 1578 - மயூரேஷ்வர் கணபதி ஆலயம்!



17/6/2023 அன்று அஷ்ட விநாயகர் திருத்தலங்களில் ஒன்றான மயூரேஷ்வர் கணபதி ஆலயத்தில் குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் .மயூரேஷ்வர் கணபதி ஆலயம். மோர்காவ் புனே  மகாராஷ்டிரா. 

ஆனை முகத்தோனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!! 

அப்பனே எண்ணற்ற திருத்தலங்கள் அப்பனே ஆனாலும் அப்பனே அவற்றிற்கெல்லாம் சக்திகள் மிகுந்தே காணப்படுகின்றது !!!!

ஆனாலும் அப்பனே அவைதன்  எதை என்று கூட.... ஆனாலும் அப்பனே புண்ணியங்கள் அதிகமாக அதிகமாக திருத்தலங்களுக்கு அப்பனே நிச்சயம் இறைவனே அழைத்துச் செல்வான் என்பது தான் மெய்!!!!!

அதேபோலத்தான் அப்பனே நிச்சயம் பின்  ஞானியர்களின் ரகசியத்தை பற்றி இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே!!!

தற்பொழுது கூட அப்பனே பின் பிள்ளையோன் பற்றி பிள்ளையோனை பற்றி என்றே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் அதாவது பின் அவ்வூரே!!!!

பிள்ளையோனை பற்றி

பிள்ளையோனை பற்றி= பிள்ளையோன் பட்டி =பிள்ளையார் பட்டி

மருவிய சொல்!

(தற்பொழுது அழைக்கப்படுவது பிள்ளையார்பட்டி என்று சிவகங்கை மாவட்டம் உண்மையில் குருநாதருடைய வாக்கின்படி பிள்ளையோனை பற்றி அதாவது பிள்ளையாரை பற்றிக் கொள்ளுதல் !!!!!

 பிள்ளையோனை பற்றி !!

என்ற பெயர் மருவி தற்பொழுது பிள்ளையார்பட்டி என்று அழைக்கப்படுகின்றது எப்படி? காக்கும் சிவன் என்ற சொல் காசி என்று அறியப்படுகின்றது!!!

இதுபோன்ற இவ்ரகசியங்கள் எல்லாம் அதாவது திருத்தலத்தின் ஊர் பெயரில் இருக்கும் ரகசியம் கூட நம் குருநாதர் வாக்குகளில் கூறுவதால் தான் தெரிய வருகின்றது ) 

அவ்வூரில் அப்பனே பின் இரட்டை குழந்தைகள் பிறந்தது அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பின் ஆனாலும் அப்பனே ஒரு ஜோதிடன் அப்பனே இவ் இரட்டை குழந்தைகள் பிறந்ததால் இவ் குடும்பத்திற்கே அழிவு என்பது பொய் கூறி விட்டான்.

பொய் கூறி அப்பனே ஆனால் அப்பனே இறைவனுக்கு தெரியும் அனைத்தும் கூட என்று கூட

அப்பனே ஆணித்தரமாக ஜோதிடன் அப்பனே பின் இரட்டை குழந்தைகள் பிறந்து விட்டால் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவ் ஜோதிடம் எதை எதையோ சொல்லிட்டு மனம் பின் குழப்பம் அடையச் செய்து விட்டான் அப்பனே

அதனால் இவ் அதாவது ஜோதிடன் சொன்னான் இவ் இரு குழந்தைகளையும் எங்கேயாவது விட்டு வந்து விடுங்கள்!!!!

இதனால் உங்கள் குடும்பமே செழிக்கும் என்பதை எல்லாம்!!!!

அதனால் நிச்சயம் அதாவது சரி பரவாயில்லை என்பதையெல்லாம் ஆராய்ந்து ஆராய்ந்து நிச்சயம் பின் அதாவது ஆனால் அவ் இல்லத்தோர்

(இரட்டைக் குழந்தைகளின் குடும்பத்தினர்) ஜோதிடனிடம் நிச்சயமாய் சிறிது அளவே நிச்சயம் இவர்கள் (குழந்தைகள்) பெரியவர்கள் ஆகட்டும் பின்பு யாங்கள் விட்டுவிடுவோம் என்று!!!

ஆனாலும் ஓர் வயது இரு வயது மூன்று வயது ஆகிவிட்டது பின்பு ஆனாலும் இவ் இரட்டையர்கள் இருந்தால் நிச்சயம் தொல்லைகளே!!! என்று உணர்ந்தனர். 

ஆனாலும் அன்றி அன்றி ஆனாலும் இவர்கள் மேன்மையானவர்கள் என்பதை எல்லாம் பின் தெரியவில்லை அவ் இல்லத்தவர்களுக்கு!!!

இதனால் பின் அதாவது இப்பொழுது பக்கத்திலே பிள்ளையோன்பட்டி எதை என்று அறிய அறிய அவர்களும் கூட தாய் தந்தையரும் கூட அடித்து குழந்தைகளே நீங்கள் வெளியே செல்லுங்கள் என்றெல்லாம்!!!!!!

ஆனாலும் அக்குழந்தைகள் அழுது விட்டன!!!! அழுது அழுது புலம்பின!!!!

அதனால் பிள்ளையோன்!!!!

நிச்சயம் நம்மிடத்தில் இருந்து கொண்டு இவ்வாறா??????

என்ன செய்வது??? என்றெல்லாம் !!!!!

என்பதையெல்லாம் ஓர் எதை என்று உபாயம்!!!

அழைத்து பிள்ளையோனே நிச்சயமாய் அறிந்து அறிந்து எதை என்றும் கூற பின் நிச்சயமாய் மானிட ரூபத்தில் அதாவது கிழவன் ரூபத்தில் நிச்சயமாய் சென்று அவர்கள் இருவரையும் யான் வளர்த்திக் கொள்கின்றேன் என்று!!!

ஆனாலும் அதாவது இவ் ஊரிலே பிள்ளையோன் பட்டி என்றே!!!! நிச்சயம் பின் இவ்வூரிலே நிச்சயம் அதாவது திருத்தலம் இருக்கின்றது விநாயகப் பெருமானின் திருத்தலம்

( பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குடைவரை கோயில்)

அங்கேயே பார்த்துக் கொள்கின்றேன் !!!( கோயிலிலே தங்க வைத்து குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றேன் என்று கிழவன் ரூபத்தில் வந்த விநாயகர்)

அங்கேயும் கூட சில சில அன்னங்கள்!!!! சில சில மனிதர்கள் எடுத்து வந்து கொடுப்பார்கள்!!!

(சில மனிதர்கள் கோயில் வாசலில் அன்னதானங்கள்)அதனையெல்லாம் இவர்களுக்கு கொடுத்து கொடுத்து யானே பார்த்துக் கொள்கின்றேன் எந்தனுக்கும் வயதாகிவிட்டது என்று விநாயக பெருமானே!!!! 

ஆனாலும் இவைதன் உணர உணர அங்கேயே நிச்சயம்!!!

ஆனாலும் வந்தது விநாயகப் பெருமான் என்பது யாருக்கும் புரியவில்லை!!!

இதனால் அங்கேயே எவை என்று அறிந்து அறிந்து பிள்ளையோன் விட்டு விட்டான்.

இதனால் பின் பிள்ளையோன் எதை என்று அறிய அறிய அவர்களுக்காக பின் இன்னும் வயது ஆக ஆக பின் முதியவன் வேடத்திலேயே இருந்து!!!

ஆனாலும் முதியவன் வேடம் அணிந்தவன் பிள்ளையோன் என்று தான் யாருக்கும் தெரியவில்லை தெரிவதுமில்லை.

பின்பு அங்கு இருக்கும் இறைவனை பிள்ளையோனை வணங்கி சென்று கொண்டிருந்தார்கள்.

ஆனாலும் பிள்ளையோன் நினைத்தான்!!!

இப்படியும் ஒரு மனிதர்களா??? இப்படியும் பிறவிகளா??

ஈசனை நினைத்து தன் தந்தையை நினைத்து எவை அறிந்து அறிந்து மீண்டும் மீண்டும் இதனால் அங்கேயே தங்கி!!!

ஆனாலும் எவை என்று அறிய அறிய பிள்ளையோனும் உட்கார்ந்து விட்டான் சரியாகவே.அப் பிள்ளைகளுக்கு ஏதாவது கொடுத்து கொடுத்து!!! 

ஆனாலும் அனைவருமே இவந்தன் பின்பு பிச்சைக்காரன் என்றெல்லாம் பின் திட்டி தீர்த்தனர். 

ஆனால் பிச்சைக்காரன் யார்??????  என்பதை கூட தெரிவதில்லை!!!!! 

விநாயக பெருமானே அமர்ந்து நிச்சயம் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான் இரு பிள்ளைகளை காக்க வேண்டுமே என்று!!!

ஏனென்றால் அறிந்து அறிந்து அப்பனே கேட்டுக் கொள்ளுங்கள் இதே போலத்தான் இறைவன் மிகப் பெரியவன் உலகத்தில் உள்ள அனைத்து பிள்ளைகளையும் கூட காத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

ஆனால் மனிதனோ எதை என்று அறிய அறிய இறைவன் காக்கவில்லை ஏன் இவ்வாறு கஷ்டங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றான்???? என்பதெல்லாம்!!!

தெரிவதே இல்லை ஏனென்றால் அப்பனே கஷ்டங்கள் எதற்கு கொடுக்கின்றான் என்றால் அப்பனே இறைவன் எதை என்றும் அறிய அறிய பிறவிகள் வேண்டாம் என்பதே தீர்ப்பு அப்பனே!!! 

பிறவிகள் பிறந்து பிறந்து கஷ்டப்படுவதை விட அப்பனே இவ் ஆன்மா இறைவனிடத்தில் சரண் அடைந்து விடும்!!

அதனால் தான் கஷ்டங்கள் அப்பனே!!!

கஷ்டங்கள் எதற்காக வருகின்றது???

இறைவன் தன் பக்கத்தில் வைத்துக் கொள்வதற்காகத்தான் அப்பனே!!!

அவ் கர்மா நீங்கினால் தான் அப்பனே இறைவன் பக்கத்தில் செல்ல முடியும் அப்பனே!!! 

இதையெல்லாம் விஞ்ஞான பூர்வமாகவே விளக்குகின்றேன் அப்பனே!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! 

நலன்கள்!!!!

ஆனாலும் அப்பனே இதற்காகவே அப்பனே பின் அதாவது மனிதனுக்கு எப்படி பக்திகள் செலுத்துவது என்பதை கூட தெரியாமல் செலுத்தி வருகின்றான் அப்பனே

ஆனால் பிள்ளையோன் இருப்பது அப்பனே கிழவன் ரூபத்தில் அப்பனே

ஆனாலும் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பிச்சை எடுத்துக் கொண்டிருந்தான்!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய ஆனாலும் ஒருவன் கேட்டான்!!!!

நீ பிச்சை எடுத்து தான் உண்ண வேண்டுமா????????

அதற்கு சாக வேண்டியதுதானே !!!!!! என்று!!!!! பிள்ளையோனை பார்த்து!!!! 

ஆனாலும் பிள்ளையோன் அமைதி காத்திருந்தான் அப்பனே!!!

இதனால் அப்பனே பிள்ளையோன் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அத் திருத்தலத்தில் இருந்து அப்பனே ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே 

ஈசனார்!!!!!!!! 

மகனே!!!!

( பிள்ளையாரை பார்த்து)

இவ்வாறே நீ சென்று கொண்டிருந்தால் எவ்வாறு???????

அதனால் நீ இருக்கும் இடத்தில் அமர்ந்தால்தான் நலம்!!!!

அதாவது யார் எங்கு இருப்பார்? எதை என்றும் அறிந்து அறிந்து எங்கு எவை என்று கூட தகுதிக்கு ஏற்ப அங்கே இருந்தால் தான் மதிப்பு!!!

அதனால் உன்னிடத்திலே நீ சென்று அமர் !!!!

(கோயிலுக்குள்ளே கருவறையில் சென்று உட்காரு என்று ஈசன் பிள்ளையாருக்கு கட்டளை)

இக் குழந்தைகள் எப்படித்தான் எதை என்று அறிய அறிய ஞானக் குழந்தைகளாக மாறிவிடுவார்கள் என்று!!!

( பிள்ளையார் ஈசனைப் பார்த்து)

இதனால் நிச்சயம் சரி தந்தையே!!!!!

பாசங்கள் நேசங்கள் இவையெல்லாம் நிச்சயம் யாருக்கும் செலுத்தலாகாது!!! இதனால் அமர்ந்தான்.

பிள்ளைகள் எல்லாம் அழுது புலம்பியது!!!!

ஏனென்றால் கிழவன் ரூபத்தில் வந்தவன் ஆனால் எங்கேயோ சென்று விட்டானே என்று கூட அழுது அழுது புலம்பியது.

ஆனால் மீண்டும் உண்ண வழி இல்லை!!!!

இதனால் நிச்சயம் ஆனாலும் ஏதோ உண்டு அறிந்தும் அறிந்தும் கூட இதனால் பெரியவர்கள் ஆனார்கள்.

ஆனால் பிள்ளையோன் ஆனாலும் இவர்கள் அறிந்தும் அறிந்தும் கூட!!!

பின் ஈசனே இவர்கள் ஞானிகள் ஆக தான் ஆக வேண்டும் பல பேர்களுக்கு நிச்சயம் நல்லதை செய்ய வேண்டும்!!!!

அதனால் கஷ்டப்பட்டுத்தான் நிச்சயம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்பதெல்லாம் தீர்ப்பு!!!!

இதனால் பின் கணபதியே விட்டு விட்டான்!!!!

இதனால் நிச்சயம் கஷ்டங்கள் பட்டு பட்டு உண்ண வழியில்லாமல் அப்படியே திரிந்து எதை என்றும் கூற பல ஆலயங்களுக்கு சென்றனர்.

பல ஆலயங்களுக்கு சென்று சென்று சென்று எங்கேயும் அறிந்தும் அறிந்தும் கூட கடைசியில் பார்த்தால் அண்ணாமலையில் உட்கார்ந்து விட்டார்கள்!!!!

""திருவண்ணாமலை!!!

அண்ணாமலையில் உட்கார்ந்து என்னதான் செய்வது ???என்று கூட இருவருமே உட்கார்ந்து அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் நிச்சயமாய் எவை என்றும் புரியாமலே!!!

ஆனாலும் அங்கு ஏதோ கொடுக்கும் பின் மனிதர்கள் எதை என்றும் அறிய அறிய இவர்கள் அவையெல்லாம் உட்கொண்டு வந்தனர்.

இதனால் அங்கும் கூட சில கூட்டங்கள் இருந்தது அறிந்தும் அறிந்தும் கூட

யாராவது பக்தர்கள் என்று சொன்னால் அடித்து நொறுக்குபவர்கள் கூட!!!

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் இங்கே பக்தர்கள் இருந்ததை கூட கற்களை வீசி பின் எதை என்றும் அறிய அறிய வெளியே துரத்தினர்!!!

அது ஒரு பெரிய மழை அப்பா சூழ்ந்ததப்பா அங்கெல்லாம் நிச்சயம் சில சில அப்பனே எவை என்றும் அறியாமல் குடிசையில் வாழ்ந்தனர் பக்தர்கள் மிகுந்த பக்தர்கள்.

ஆனாலும் அப்பனே சில அரசு சம்பந்தப்பட்டவர்களால் அப்பனே அடித்து நொறுக்க அப்பனே மீண்டும் அறிந்தும் அறிந்தும் கூட இவர்கள் அங்கு இருக்கையில் மீண்டும் உயிருக்கு எதை என்று அறிய அறிய அப்பனே உயிர் போகக் கூடியது அப்பனே அடியும் உதையும் வாங்கி அப்பனே

ஆனாலும் இங்கு தேவை இல்லை என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அங்கிருந்து திருத்தலம் அப்பனே அதாவது ஏழுமலையான் (திருப்பதி) இன்னும் பல பல ஆலயங்களுக்கு சென்று அப்பனே கடைசியில் இங்கு வந்தார்களப்பா!!!!!

(மயூரேஷ்வர் (எ)  மோரேஷ்வர் ஆலய பகுதிக்கு புனே மகாராஷ்டிரா) 

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே இங்கே கூட அமர்ந்து!!!

ஆனாலும் அப்பனே உண்ண உணவுகள் கூட இல்லை இங்கு!!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல பல வழிகளில் கூட ஏதோ ஒன்றை எதை என்றும் அறிய அறிய!!!

அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் இறைவன் அதாவது ஈசன் தேவி பார்த்தார்கள்!!!!

ஈசனை பார்த்து தேவியார்

ஈசனே உந்தனுக்கு இவ்வாறு சோதிப்பதே கடமையாகி விட்டது!!!

இதனால் இக் குழந்தைகளை கூட எவ்வளவு சோதித்தீர்கள்!!!!

ஆனாலும் இவர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை நீங்கள்!!

ஏதாவது செய்யுங்கள் என்று தேவியார்!!!

ஆனாலும் ஈசன்!!!

தேவியாரை பார்த்து!!!

தேவியே நில்லும்!!!! நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அனைத்து உயிர்களுக்கும் யான் பொறுப்பு!!!!!

இதனால் இவர்கள் மற்றவர்களுக்காக நிச்சயம் பாடுபட்டு மற்றவர்களை திருத்துவதற்காகவே பிறந்துள்ளனர்.

அதனால் இப்பிறப்பில் நிச்சயம் இவ்வாறு கஷ்டங்கள் பட்டால் தான் இவர்கள் மற்றவர்களை திருத்துவார்கள்!!!

இவ்வாறு திருத்தி இவர்களுக்கு கடைநாள் வரையிலும் கூட அதாவது கலியுகத்திலும் கூட இவர்கள் பல நபர்களுக்கு கூட ஆசிகள் வழங்குவார்கள்!!!!

பின் அப்படி என்றால் பின் அதாவது தேவி கேட்டாள்!!!! 

அப்படி என்றால் பின் நிச்சயம் இவ்வாறு கஷ்டப்படுபவர்கள் தான் மற்றவர்களுக்கு உதவியாக ஆக முடியுமா????

ஈசனார்!!!! 

தேவியே கேள்!!!!

நிச்சயம் கஷ்டங்கள் பட்டுப்பட்டு எவன் ஒருவன் எழுகின்றானோ அவந்தனுக்கு பின் அனைத்தும் யான் கொடுப்பேன்

எவன் ஒருவன் அதை தனக்காக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கு ஈகின்றானோ அவந்தனுக்கு இன்னும் அருள்கள் கூடும் இன்னும் பணங்கள் சேரும் இன்னும் எது எதுவோ சேரும்!!!!

அப்பொழுது நிச்சயம் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய தான் மட்டும் வாழ வேண்டும் தன் குடும்பம் இனம் வாழ வேண்டும் என்று யார் நினைக்கின்றானோ அவந்தனுக்கு நிச்சயம் இறைவன் கொடுக்கவே மாட்டான் அப்பனே!!! 

வாழ்ந்து விட்டு செல்லுங்கள் என்று கூறி விட்டுச் செல்வான் அப்பனே!!! 

இதை ஏற்கனவே யான் உரைத்து விட்டேன் அப்பனே...

எப்பொழுதும் மற்றவர்களை நோக்கியே நாம் கண்காணிக்க வேண்டும் அப்பனே!!!

அப்படி கண்காணித்தால் தான் அப்பனே இறைவனும் நம்மை கண்காணிப்பான் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

எவை என்று புரியாமலே இதனால் அப்பனே அவர்களுக்கு பின் ஈசன் அப்பனே திடீரென்று வந்தான் மனித ரூபத்தில்!!!!

ஆனாலும் பின் இருவரும் கூட இங்கே யாரும் இல்லையப்பா அப்பொழுது!!

(ஆலயம் தற்போது இருக்கும் இடம் அப்பொழுது காலியாக இருந்தது பொட்டல்காடாக இருந்தது)

அறிந்தும் அறிந்தும் கூட உங்களுக்கு என்ன தேவை???

இவ்வாறு நீங்கள் கஷ்டங்கள் பட்டுப்பட்டு எங்கிருந்து வந்தீர்கள்? ஏன் இந்த நிலைமை என்றெல்லாம்!!!!

ஆனால் ஈசனுக்கு அனைத்துமே தெரிந்தது

ஆனாலும் அவர்கள் சொன்னார்கள்!!!! எங்களுக்கும் யாரும் இல்லை யாங்கள் அனாதைகளே!!!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட யாங்கள் ஒன்றுமே தவறுகள் செய்யவில்லை..... ஆனாலும் கஷ்டங்கள் என்றெல்லாம்

ஆனாலும் அப்பனே இப்பொழுது கூட அவ் இருவர்கள் இங்கேதான் இருக்கின்றார்கள் அப்பனே

பிள்ளையோன் அருகிலே தான் இருக்கின்றார்கள் அப்பனே.

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்

அப்பனே அதனால் அவர்களும் இவ்வாறு சொன்னார்கள் அதனால் நிச்சயம் நீங்கள் பின் அனாதைகள் இல்லை யான் இருக்கின்றேன் என்று கூட!!!( மனித வடிவத்தில் வந்த ஈசனார்) 

ஆனாலும் நீங்கள் இருக்கின்றீர்கள் என்று கூட எவை என்றும் அறிய அறிய

ஆனால் இதே போல தான் நாங்கள் சிறுவயதில் இருந்த பொழுது ஒரு முதியவன் எங்களை காப்பாற்றினார் ஆனாலும் பாசத்திற்கு அடிமையாகி விட்டு அவர் எங்கேயோ  எங்களைப் பிரிந்து சென்று விட்டார்!!!!

அதனால் நீங்கள் வந்துள்ளீர்களா? நீங்கள் எங்கள் மீது பாசமழை பொழிய தேவையில்லை.

யாங்களே இதுவரை வாழ்ந்திட்டோம் இன்னும் சிறிது காலமே இருக்கின்றது வாழ்ந்து விட்டு செல்கின்றோம்

உங்கள் வேலையை பாருங்கள் என்று!!!!!

அப்பனே புரிகின்றதா இப்படித்தான் ஒரு ஞானியவன் பேச வேண்டுமே தவிர !!!

எதை என்று வா!!!!!  நீ!!!!  வா!!! எங்களுக்கு அனைத்தும் கொடு எங்களுக்கு அவை கொடு !!! இவை கொடு !! என்றெல்லாம் ஞானத்திற்கு செல்லலாகாது என்பேன் அப்பனே!!!!!!!

(ஞான வழியில் ஞானப் பாதையில் வருபவர்கள் அது வேண்டும் இது வேண்டும் அதை கொடு இதை கொடு என்று கேட்கக் கூடாது)

இப்படித்தான் அப்பனே மனிதர்கள் ஞானப் பாதைக்கு போக வேண்டும் போக வேண்டும் அப்பனே என்று எண்ணங்கள்!!!!

ஆனால் அப்பனே மனதில் அப்பனே ஆசைகள்.... தீராத பேராசைகளப்பா!!!!

இவ்வாறு பேராசைகளை வைத்துக்கொண்டு ஞானம் எவ்வாறு தித்திக்கும் ????? அப்பனே!!!!!

சொல்லுங்கள் அப்பனே!!!!!

எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே அவ் இருவரும் இங்கேயே தங்கி அப்பனே எதையோ ஆனாலும் சரியாகவே!!!!

ஆனாலும் ஈசன் உணர்ந்து விட்டான் இவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பதையெல்லாம். 

ஆனாலும் நிச்சயம் உண்ண வழிகளை ஏற்படுத்தினான்

அப்பனே இங்கு உள்ளவர்களை கூட அனைவருக்கும் ஆசிகள் வழங்கிக் கொண்டே வந்தார்கள்  இவ் இருவர்கள் அப்பனே!!! 

ஆனால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் இவர்களே சமைத்து உண்ணுவது அப்பனே மற்றவர்களுக்கும் கொடுப்பது... இங்கு வருபவர்களுக்கு!!!

இவையெல்லாம் அதாவது இங்கு பல விலங்குகளும் இருந்தது பல பல அப்பனே  எவை என்றும் அறிய அறிய அவைகளுக்கெல்லாம் கூட அன்பு பாசங்கள் இவர்கள் மீது அப்பனே.... எதை என்று அறிய அறிய இவர்கள் உண்ணுவார்கள் அப்பனே ஆனால் தெரிந்து கொண்டார்கள் இன்னும் பலமாக அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே பின் செய்தால் பல உயிர்களும் வந்து உட்கொள்ளும் என்று இதனால் அப்பனே பன் மடங்கு அப்பனே எதை என்று அறிய அறிய ஈசன் கொடுத்தான் அப்பனே.

பல மடங்கு அப்பனே பின் உணவை எல்லாம் சமைத்து எதை என்று அறிய அறிய மீதி பின் இருப்பதை எல்லாம் பல உயிரினங்கள் உண்டு உண்டு மகிழ்ந்தன அப்பனே இங்கேயே தங்கி விட்டன அப்பனே!!!! 

இதனால் அப்பனே புண்ணியங்கள் இன்னும் பெருகிற்று!!!! அப்பனே

இதுதான் அப்பனே புண்ணியங்கள் நிச்சயம் அப்பனே நீங்கள் தகுதிக்கு ஏற்பவே அப்பனே இறைவனே ஏற்படுத்துவான் இது சத்தியம் அப்பனே!!!!!

என்னால் புண்ணியங்கள் செய்ய முடியவில்லையே எதையும் செய்ய முடியவில்லை என்றெல்லாம் பிதற்ற கூடாது என்பேன் அப்பனே 

நீங்கள் செல்கின்ற பாதை சரியாக இருந்தால் அப்பனே புண்ணியங்கள் நிச்சயமாய் சத்தியமாய் இறைவனே எப்படி ஏற்படுத்த வேண்டும் என்பதெல்லாம் வழிகளை காட்டுவான் அப்பனே!!!!

புண்ணியங்கள் பெருகிற்று அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இவர்களுக்கு சமைப்பதே வேலையாயிற்று!!!! அப்பனே!!!

அப்பனே எதை என்று கூட அதாவது உயிர்களுக்கெல்லாம்.

(மயில்கள் அதிகம் இருக்கும் பகுதியாக இந்த இடம் இருந்தது...வடமொழியில் மயிலுக்கு மயூர்.மோர் என்று பெயர் உள்ளது....... அதனால் இந்த கோயில் மயூரேஸ்வர் கணபதி மோரேஷ்வர் எனவும் அழைக்கப்படுகிறது.

முருகனை மயூர வாகனன்.என அழைக்கப்படுவது மயில் வாகனனே என்று பொருள்.)

குருநாதர் குறிப்பிடும் உயிரினங்கள் ஞானியர் அன்னமளித்த உயிரினங்களில் மயில்களும் அதிகம் இடம் பெற்றுள்ளது)

இதனால் அப்பனே பின் ஆனாலும் விநாயகப் பெருமான் மீது ஒரு பக்தி கொண்டோன்  இங்கு அப்பனே.... விநாயகப் பெருமானுக்கும் அவந்தனும் பின் ஆராதனை செய்து கொண்டே இருந்தான்.

ஒரு நாள் பாம்பு தீண்டியது அவந்தனை!!!! 

தீண்டிற்று!!!!!  ஆனாலும் அதற்கு மருந்துகள் இல்லையப்பா இங்கு.

அறிந்தும் அறிந்தும் இதனால் அப்பனே அவன் கூட அழுது புலம்பினான்!!!

விநாயகப் பெருமானே !!!!!

உந்தனுக்கே!!!! சேவைகள் செய்து கொண்டிருந்தேனே!!!!!............

இப்படி எந்தனுக்கு ஆகிவிட்டதே!!!!!.......

என் குழந்தைகள் பின் மனைவி எவை என்று கூட பின் எதை என்றும் அறிய அறிய தாய் தந்தையர் எவ்வாறெல்லாம் அழுது புலம்புவார்கள்!!!!!

யான் தான் உன்னை நம்பி!!!! ஆனால் இங்கு வந்து உங்களுக்கு சேவைகள் செய்து செய்து ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அவர்களுக்கு யார் உணவை கொடுப்பார்கள் என்று அழுது புலம்பினான்!!!

ஆனால் இவர்கள் இருவரும் அறிந்தும் அறிந்தும் இவ்வாறு நாம் தான் அனாதைகள்!!!!

இவனாவது நன்றாக இருக்கட்டுமே என்று பின் கால்களை எதை என்றும் அறிய அறிய

( பாம்பு தீண்டிய கால்களை)

எவை என்று புரிய புரிய நிச்சயம் ஒரு கம்பை அதாவது எடுத்துக்கொண்டு ஓங்கி அடித்தான்!!!!

(இரட்டை ஞானிகளில் ஒருவர் பூசாரியின் கால்களில் அதாவது பாம்பு தீண்டிய இடத்தில் அடித்தார்)

விஷங்கள் அடித்த நொடியிலே போய்விட்டது!!!!

இதனால் நிச்சயம் அவன் பிழைத்துக் கொண்டான்.

இதனால் பின் அவ் எதை என்று அறிய அறிய பூஜைகள் செய்பவன் ஊருக்கெல்லாம் தெரிவித்தான்!!!

இங்கு ஓர் எதை என்றும் அறிய அறிய இருவர்கள் இருக்கின்றார்கள் அவர்கள்  கை பட்டாலே அடித்தாலே அனைத்தும் சரியாக விடுகின்றது என்று !!!

கர்மங்கள் போய்விடும் என்று ஓடோடி வந்தார்கள் நிச்சயம் ஓர் ஓர் அடி கொடுத்தார்கள் அறிந்தும் அறிந்தும் கூட பின் அடி கொடுத்து அடி கொடுத்து பக்குவங்கள் பட்டு பட்டு அனைத்து கர்மாவும் சென்று விட்டது அப்பனே.

அப்பனே இப்பொழுது கூட எதை என்றும் அறிய அறிய விநாயகப் பெருமானை நீங்கள் தரிசித்தீர்களே!!! 

அப்பனே இப்பொழுது கூட அனைவருக்கும் தெரியாமலே ஓர் அடி கொடுத்துக் கொண்டுதான் இருந்தார்கள் உங்களுக்கும் அடி விழுந்தது !!! (யாத்திரை சென்ற அடியவர்களுக்கும்) 

ஆனால் நீங்கள் உணரவில்லை!!! அப்பனே

ஏனென்றால் பந்த பாசங்களில் சிக்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அப்பனே இதெல்லாம் உதவாதப்பா அப்பனே தெரியாதப்பா!!!!!

அப்பனே ஆனால் பின் இறைவன் கண்ணுக்கு தெரிந்தவனாக தான் இருக்கின்றான் அப்பனே 

ஆனால் நீங்கள் தான் அப்பனே மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே

மாயையில் சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!!!! இரவில்(இருட்டில்)  சிக்கிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!!  அவ் இரவில் சிக்கிக்கொண்டு இருப்பவர்களுக்கு எப்படித்தான்??? இறைவன் தெரிவான்??? அப்பனே எவை என்றும் அறிய அறிய!!! 

அதனால் வெளிச்சத்துக்கு வாருங்கள் அப்பனே!!!

எப்பொழுது நீங்கள் வெளிச்சத்திற்கு வருவீர்களென்றால்!!!

அப்பனே எவையும் அனைத்தும் மாயை பின் எவை என்று அறிய அறிய பிள்ளைகள் பின் பாசங்கள் பந்தங்கள் இவையெல்லாம் விட்டொழித்தால் தான் அப்பனே வெளிச்சத்திற்கு வருவீர்கள்!!!

அங்கு இறைவனை கண்டு விடுவீர்கள் அப்பனே 

அப்பனே இவையெல்லாம் மனித முட்டாளுக்கு தெரியாது அப்பனே!!! அறிந்தும் அறிந்தும்.

அதனால் தான் சொல்கின்றோம் அப்பனே!!!

கேட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இனி மேலும் எங்களுடைய வாக்குகள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே புரிய வைப்போம்!!!

அப்படி புரியாவிடிலும் அடித்து புரிய வைப்போம் அப்பனே!!!!! இவ்வளவுதான் வாழ்க்கை என்பதை கூட அப்பனே....

இறைவனை சாடிக் (திட்டிக்) கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

இறைவன் என்ன செய்தான் ??? அப்பனே

பின் நன்றாகத்தான் உங்களுக்கு அனைத்தும் கொடுத்து இவ்வுலகத்திற்கு அனுப்பினான்!!!

ஆனால் நீ செய்யும் தவறினால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்தும் நிகழ்கின்றது என்பது தெரியாமல் விளையாடுகின்றான் பின்பு நீயே அனைத்து கர்மாக்களையும் சேர்த்து விட்டு இறைவன் எதை என்றும் அறிய அறிய மீண்டும் இறைவனிடத்திற்கு வந்தால் இறைவன் எவை செய்வானப்பா????

கேளுங்களப்பா!!!!

இதனால் அப்பனே இவ் ஞானியவர்கள் இன்னும் கூட அப்பனே பின் மறைமுகமாக அப்பனே எவை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே பின் தலையில் அக் கொம்பை (தடியை) எடுத்து கொட்டிக் கொண்டே இருக்கின்றார்கள்.

இதனால் அப்படியே ஒவ்வொருவரையும் கூட ஞானத்தை நோக்கியே செல்கின்றார்கள் அப்பனே!!!

ஒரு ஞானியானவன் எப்படி இருக்க வேண்டும் என்றால் அப்பனே..... இருப்பது அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய கிடைப்பதை  உண்டுவிட்டு அப்பனே அலைந்து திரிந்து பரதேசி அதாவது பிச்சைக்காரன் போல் அப்பனே சென்றடைய வேண்டும் அவன் தான் ஞானியாக முடியுமே தவிர 

மற்றவர் எல்லாம் ஞானியாக முடியாது பொய்தான் கூறிக் கொள்ள வேண்டும்!!!!

யான் ஞானி ருத்ராட்சம் அணிந்து இருக்கின்றேன் யான்  ₹திருநீறு) பட்டையை தீட்டு இருக்கின்றேன் யான் இன்னும் இன்னும் எதையெதையோ செய்திருக்கின்றேன் என்றெல்லாம் பின் விபூதியை கொடுப்பது!!!!!

இவையெல்லாம் வீணப்பா பொய்யப்பா!!!!!!

இவனால் ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!!

ஆனால் நிச்சயம் ஞானியர்கள் கூட உடம்பில்லாமல் அப்பனே வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே

அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகவே சொல்லிவிட்டேன் இங்கு

அப்பனே அதனால் தான் வரச் சொன்னேன் இவ் அமாவாசையில் எதை என்று அறிய அறிய அப்பனே 

இவ் அமாவாசையில் அப்பனே அஷ்ட எதை என்று அறிய அறிய அப்பனே அஷ்ட விநாயகர் பெருமானின் தரிசித்தால் அப்பனே சக்திகள் கூடும் அப்பனே!!!

அவை மட்டும் அல்ல அப்பனே  இவை ஆண்ட அப்பனே தற்பொழுது எதை என்று அறிய அறிய வீரசிவாஜியே ( மராட்டிய பேரரசன் சத்ரபதி சிவாஜி) என்று அப்பனே அவந்தனும் 

அலைந்து அலைந்து சுற்றினான் அப்பனே... பின் சித்திகள் பெற விநாயகப் பெருமானை எங்கெங்கெல்லாம் பின் சுற்றித்திரிந்தான் அப்பனே

காளிகா தேவி எங்கெல்லாம் இருக்கின்றாளோ அங்கெல்லாம் சுற்றித்திரிந்தான் அப்பனே

அங்கெல்லாம் சென்று அப்பனே அவந்தனக்கு சூட்சுமங்கள் கூடியது அப்பனே!!!!

இன்னும் எதை என்று அறிய அறிய இங்கு தான் பல பல வித்தைகள் தெரிந்தது அப்பனே....அவ் வித்தைகளை வைத்துக்கொண்டு நல்லதை செய்தான் அப்பனே

ஆனால் கடைசியில் அப்பனே விதி ஆனால் உலகத்தில் அப்பனே சிறிது காலமே விட்டொழிப்பான் அப்பனே இறைவன்... என்னதான் செய்கின்றான் என்று!!!!

அவ் வேலை முடிந்து விட்டால் பின் இனத்திற்கு அதாவது அவனிடத்திற்கே இறைவன் அழைத்துக் கொள்வான்... இதுதான் அப்பனே!!!!

நீங்களும் அப்பனே தேடுங்கள் மற்றவர்களுக்காக தேடுங்கள் அப்பனே!!!!

உங்களுக்காக தேடாதீர்கள் அப்பனே.

உங்களுக்காக நீங்கள் தேடுகின்றீர்கள் என்றால் அப்பனே ஒன்றும் கிட்டப் போவதில்லை அப்பனே 

நிச்சயம் கடைசியில் சாவுதான் அப்பனே

சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே!!!

இன்னும் ஆசிகள் கோடிகளப்பா !!! நலன்கள் ஆசிகள்!! அப்பனே இன்னும் அப்பனே உரைக்கின்றேன் ஆசிகள் !!ஆசிகள் !!! அப்பனே!!!

மயூரேஸ்வர் கணபதி ஆலயத்தில் அடியவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு குருநாதர் அகத்திய பெருமான் தந்த பதில்கள்!!!!

குருவே சரணம் நமஸ்காரங்கள்!!!!!! 


குருவே திரு ஞானப் புதல்வன் விநாயகப் பெருமானின் வாக்குகளும் அனைவருக்கும் கிடைக்க வேண்டும் 

அப்பனே நிச்சயம் ஒரு பெரிய திருத்தலத்தில் வரச் சொல்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே நிச்சயம் நீங்கள் என்னென்ன நினைக்கின்றாயோ அவையெல்லாம் நிச்சயம் நிச்சயம் கணபதி வந்தால் அப்பனே இன்னும் தாங்க முடியாத அளவிற்கு கூட அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே வாக்குகள் சொல்வான் என்பேன் அப்பனே நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே!!!

முதலில் அப்பனே பக்குவங்கள் படுத்தி அவன் தானாக வந்து செப்புவான் அப்பனே!!!

நீங்களும் கேட்பீர்கள் அப்பனே பொறுத்திருக!! அப்பனே !!!!

குருவை சரணம் 

இந்த உலகத்திற்கு நல்லது செய்வதற்கு சில அபூர்வ சக்திகளை நல் மனிதர்களுக்கு தந்தால் அதை வைத்துக்கொண்டு நல்லதை செய்ய முடியும் அல்லவா

அப்பனே அதை யான் செய்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே நீங்கள் என் அருகில் தான் இருக்கின்றீர்கள் அப்பனே போதுமா!!!!

அப்பனே அனைவரும் என் பிள்ளைகள் தானப்பா பிள்ளைகள் தவறு செய்தாலும் அப்பனே தந்தை திருத்தி நல்வழியில் அப்பனே எடுத்துச் செல்வார்கள் அதுபோலத்தான் நான் உங்களை அனைவரையும் எடுத்துச் செல்கின்றேன் அப்பனே!!!

நீங்கள் அனைவரும் எதை என்று அறிய அறிய என் அருகிலே இருக்கின்றீர்கள் அப்பனே எங்கள் புண்ணியம் செய்தவர்களே அப்பனே அதனால் தான் யான் வைத்துக் கொண்டிருக்கிறேன் என் அருகிலே!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய யானே உங்களுடன் இருக்கும் பொழுது கஷ்டங்கள் அப்பனே

ஆனாலும் அப்பனே இன்னும் உங்கள் நிலைமைக்கு கீழானவர்கள் அதாவது என்னை நெருங்க முடியாதவர்கள் நிலைமை எவ்வளவு கஷ்டங்கள் என்று அப்பனே சிறிது யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே 

அப்பனே அதனால் இருப்பதை சரியாக பயன்படுத்துங்கள் அப்பனே!!

யான் உங்களை கைவிட மாட்டேன் என்பேன் அப்பனே!!!

தக்க சமயத்தில் அப்பனே அகத்தியன் மாற்றி விடுவான்.

அகத்தியனை பற்றி போகப் போக தெரியும்!!!!

அப்பனே எதை என்று அறிய உரைத்துக்கொண்டே தான் வருகின்றேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எந்தனுக்கு தெரியும் என்பேன் அப்பனே அமைதி பொறுத்து இருங்கள் அப்பனே!!!!


குருவே சரணம் தாங்கள் வாக்கு தந்து கொண்டிருந்த பொழுது ஒரு வயதான தம்பதியினர் சுவடி வாசிக்கும் இடத்திற்கு அருகில் வந்து பார்த்து சிரித்து விட்டு சென்றனர் அவர்களைப் பற்றி கூறுங்கள்!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அது இப்பொழுது தேவையில்லை என்பேன். அப்பனே!!! எதை என்றும் அறிய அறிய நான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பனே கடைசியில் சொல்கிறேன் அப்பனே அவர்கள் யார் என்று இப்பொழுது சொல்லிவிட்டால் நீங்கள் பைத்தியம் ஆகிவிடுவீர்கள் திரிந்து அலைவீர்கள் என்பேன்.... அமைதிப் பொருத்திருக!!!!!

ஆசிகள்! ஆசிகள்!! அப்பனே!!

மயூரேஷ்வர் கணபதியின் முகவரி: ஸ்ரீ மயூரேஷ்வர் கணபதி கோயில், மோர்கான், தாலுகா பாராமதி, புனே மாவட்டம், மகாராஷ்டிரா 412304

யூரேஷ்வர் கணபதி கோயில் பக்த நிவாஸ்: ஸ்ரீ க்ஷேத்ரா மோர்கான் மேலாளர், ஸ்ரீ மயூரேஷ்வரா கோயில், சின்ச்வாட் தேவஸ்தான அறக்கட்டளை அலுவலகம், பி.ஓ. மோர்கான், தாலுகா பாராமதி, புனே மாவட்டம், மகாராஷ்டிரா, பின் - 412304

தொலைபேசி/மொபைல் எண். 02112279986, 09657254563

இருப்பிடம்/கிராமம்: மோர்கான்

தாலுகா: பாராமதி

மாவட்டம்: புனே

மாநிலம்: மகாராஷ்டிரா

நாடு: இந்தியா

பின் குறியீடு: 412304

அருகிலுள்ள நகரம்: புனே

மயூரேஷ்வர் மோர்கான் கோயில் நேரம்: காலை 5:00 மற்றும் இரவு 10:00 மணிக்கு மூடப்படும்

மயூரேஷ்வர் கோவில் 

ஸ்ரீ மோரேஷ்வர் கணபதி கோயில் அல்லது ஸ்ரீ மயூரேஷ்வர் கணபதி . இது புனே மாவட்டத்தில் உள்ள மோர்கானில் (மயில்களின் கிராமம்), ஜெஜூரி-மோர்கான்-பாரமதி சாலை மற்றும் சாஸ்வாட் - போப்தேவ் - புனே சாலை வழியாக சுமார் 66.3 கிமீ (1 மணிநேரம் 53 நிமிடம்) அமைந்துள்ளது. இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரத்திலிருந்து தொலைவில் உள்ளது. அஷ்டவிநாயக் யாத்ரா/சுற்றுலா என அழைக்கப்படும் எட்டு மதிப்பிற்குரிய விநாயகர் கோயில்களின் யாத்திரையின் தொடக்க மற்றும் முடிவுப் புள்ளியாக இந்தக் கோயில் உள்ளது. இக்கோயில் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஷ்டவிநாயகா, விநாயகரின் எட்டு வழிபாட்டு தலங்களில் ஒன்றாகும். கோயிலின் பதினொரு (11) படிக்கட்டுகள் கோயிலின் முன் உள்ள 'நந்தி'க்கும் முக்கியத்துவம் உண்டு.

மயூரேஷ்வர் கணபதி கோவில் மோர்கான் தினசரி பூஜை அட்டவணை

பிரக்ஷால பூஜை காலை 5:00 மணிக்கு மற்றும் நிறைவு இரவு 10:00 மணிக்கு

ஷோடஷோபச்சார் பூஜை காலை 7:00 மணிக்கு

மதியம் 12:00 மணிக்கு ஷோடசோபச்சார் பூஜை

இரவு 08:00 மணிக்கு பஞ்சோபசார பூஜை

மாலை ஆரத்தி 7:30 PM

இரவு 10:00 மணிக்கு ஷேஜ் ஆரத்தி

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 29 March 2024

சித்தன் அருள் - 1577 - இவர்!

 

மெலிந்த தேகம். காவி உடை தரித்து, தோளில் வெள்ளை துண்டுடன் நாடியின் முன் வந்தமர்ந்தார். கைகூப்பி வணக்கம் சொல்லி அமைதியானார். எதுவும் கேட்கவில்லை.

"உனக்கு என்னப்பா வேண்டும்?"என குருநாதர் நாடியில் கேட்க, மறுபடியும் கைகூப்பி வணங்கியவர் அமைதியாக அமர்ந்திருந்தார்.

"இவனுக்கு என்று எதுவும் இதுவரை கேட்டதில்லை, கேட்கவும் தெரியாது. இங்கேயே இரு என்று கூறிவிட்டு சென்ற குரு வரக்காணமே, ஒருவேளை எங்கேனும் போய் சமாதியில் அமர்ந்துவிட்டாரோ?" என்று மன உளைச்சல். இதுவரை அமர்ந்த இடத்திலேயே இருந்து, என்ன செய்து வந்தாயோ அதை தொடர்ந்து செய்!" காலம் கனியும் பொழுது உன் குருநாதர் வந்து அழைத்து செல்வார்!" என்றார்.

அவரை பார்த்த பொழுது, இவரால் என்ன நல்லது நடக்கின்றது? என தோன்றியது.

அதற்கும் குருநாதர் நாடியில் வந்து உரைத்தார்.

"இவன் பார்ப்பதற்கு, மிக எளிமையாக, என்ன நல்லது செய்து விட முடியும் என்று இருப்பான். ஆனால் இவன் செய்து வந்ததை, இறைவனே ஏற்று ஆசீர்வதித்துள்ளான். ஆம், இவன் ஒரு மரத்தடியில் அமர்ந்து 24 மணி நேரமும் இறைவன் நாமத்தை உருவேற்றி சித்தத்தில் நிலைத்து நிற்பான். இவன் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். யார் வந்து தன் குறைகளை கூறினாலும், அனைத்தையும், இறைவா, நீயே உள்ளிருந்து கேட்டு அவர்களுக்கு நல்லதை செய்துவிடு" என பிரார்த்தனையை சமர்ப்பிப்பான். சமீப காலமாக இவன் அருளை புரிந்து கொண்டவர்கள் கூட்டம் அதிகமாக, நிறைய தொந்தரவு வந்ததுதான் அதிகம். அதனால், இடத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டிருந்தான். சமீபத்தில், உள் வனத்துள் ஒரு மரத்தை கண்டு பிடித்து, அதன் மறைவில் வாழ்ந்து வருகிறான், குருவை எதிர்பார்த்து."

இங்கு தெரிவிக்க விரும்புவது ஒன்றுதான். அவரின் பிரார்த்தனை முறையை கவனியுங்கள்! நம்மில் யார் இப்படி பிரார்த்தித்து வாழ்கிறோம்?

கடைசியாக இவரை அந்த மரத்தடியில் கண்டார்கள். பின்னர் அவர் காணாமலே போய்விட்டார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 28 March 2024

சித்தன் அருள் - 1576 - இவர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இவர் என்கிற தலைப்பில், 1573/1575 தொகுப்புகளில் ஒரு சிவனடியாரை பற்றி விளக்கியிருந்தேன்.

இன்று அகத்தியப்பெருமான், அவரின் ஜீவநாடி, திரு ஜானகிராமன் ஆகியோர் பொதிகை சென்று விட்டு திரும்பி போகும் வழியில், அடியேனை பார்க்க வந்திருந்தனர்.

நலம் விசாரித்து, ஆசிகள் தந்தார்.

அடியேனுக்கு நண்பரின் எண்ணம் உதிக்கவே, அவரை வீட்டுக்கு வரச்சொன்னேன். அகத்தியப்பெருமானின் நாடியில் ஏதேனும் கேட்கலாம் என்றுரைத்தேன்.

வந்தவர் அகத்தியப் பெருமானை வணங்கிவிட்டு அமர்ந்தார். வந்தவர் யார் என யாருக்கும் தெரிவிக்கவில்லை.

"இவர் என் நண்பர். இவருக்கு ஏதேனும் வாக்கு உள்ளதா, என அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று கூறி முடிப்பதற்குள் அகத்தியப் பெருமான் நாடியில், ஒரு வரியில், அவரை பற்றி விளக்கி முடித்துக் கொண்டார்.

"இவனைப் பற்றி என்ன சொல்ல! வாழ்க்கையில், அனைத்தையும் உணர்ந்து, அனுபவித்து வந்தவன்" என்றார்.

ஏன் இந்த நிகழ்ச்சியை இங்கு தெரிவிக்கிறேன் என்றால், ஒருவன் செய்த நல்லது, எத்தனை வருடமானாலும், சித்தர்களால் போற்றப்படும். இது போல் வாழ்க்கையை வாழப் பாருங்கள். சித்தர்கள் அருள், என்றும் துணை நிற்கும்.

நேற்றுதான் இவரைப்பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிவித்தேன், இன்று அவர் அகத்தியப்பெருமானின் வாக்குகளை பெறுகிறார். கடைசியில், நாடியை வாங்கி கையில் வைத்து அகத்தியப் பெருமானை வணங்கி, கண்ணில் ஒற்றிக் கொண்டுவிட்டு சென்றார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday 27 March 2024

சித்தன் அருள் - 1575 - இவர்!


இவருக்கு முன்னரே வந்து நின்ற அனைவரையும் பொறுத்திருக்க சொல்லிவிட்டு, இவருக்கு ப்ரச்னம் பார்த்து சொல்லத் தொடங்கினார்.

"பிரார்த்தனை பண்ணி முதல் சோழியை பரப்பி பார்த்தவர், எழுந்து சாஷ்டாங்கமாக கீழே விழுந்து நமஸ்காரம்" செய்தார். பின்னர் இவரிடம் கூறாத தொடங்கினார்.

வீட்டுல சிவலிங்கத்தை வைத்து தினமும் விமர்சையாக அபிஷேக பூஜைகள் செய்வதில், சிவபெருமான் மயங்கி, உங்கள் தெருவில் இருக்கும் கோவிலை விட்டுவிட்டு, உன் பூசை அறையில் வந்து அமர்ந்துவிட்டார்.அர்த்த ஜாமத்தில், அம்பாள் இறைவனை வந்து பார்க்க, கோவில் சன்னதியில் இல்லாததை கண்டு, இறைவனை தேடி வந்துவிட்டாள். உன் வீட்டு பூசை அறையில் வந்து அமர்ந்து அர்த்த ஜாம பூசையை இறைவனுக்கு செய்து, பணிவிடைகள் செய்து பிரம்ம முகூர்த்தம் வரை இருவரும் அங்கே அமர்ந்துவிட்டு செல்கின்றனர். அர்த்த ஜாமத்தில் அம்பாள் நடந்து வரும் பொழுது கேட்கும் கொலுசு சத்தம்தான் அது. மனிதர்களால் பார்க்கவோ, கேட்கவோ முடியாது. உனக்கு அந்த பாக்கியம் கிடைத்துள்ளது" என்றார்.

"இனிமேல், நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார் இவர்.

"உனக்குப்பின் இந்த பூசையை தொடர உனக்கு குடும்பமோ, சந்ததியோ கிடையாது. லிங்கம் இருக்க பூஜை நின்று போனால், அது மிகப்பெரிய பாபத்தை உன் தலையில் இறக்கும். ஆகவே, விக்கிரகங்களை ஏதேனும் ஒரு சிவன் கோவிலுக்கு கொடுத்து விடு, அல்லது நீர் நிறைய இருக்கும் ஒரு கிணற்றுக்குள் இறக்கி விடு. அதுதான் உனக்கு நல்லது" என்றார்.

இந்த வார்த்தைகளால் கலக்கமுற்று, மேலும் இரண்டு பேரிடம் கேட்கலாம் என ஒரு ஜோதிடனிடமும், இன்னொரு ப்ரச்னம் பார்ப்பவரிடமும் கேட்கப் போக, அவர்களும் அதே போல் கூறி, குளம், நதி, கடலை கைகாட்டினார்கள்.

நடந்தவை அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த நான் "சரி! இப்ப கடைசியா என்ன ஆச்சு? எதுவும் யோசிக்காமல் என்னிடம் கொடுத்து விடுங்கள். நான் நித்ய பூஜையில் வைத்து பார்த்துக் கொள்கிறேன்" என்றேன்.

"மன்னிக்கணும். இரண்டு நாட்களுக்கு முன் கன்யாகுமரி சென்று, அங்கு கடலில் சேர்த்துவிட்டேன். எதுவும் யோசிக்கவில்லை என்றார்.

"தப்பு பண்ணிட்டீங்க. ஒரு மனுஷன் சொல்வதை கேட்டு, இறையை மறுதலிப்பது கூடாது. அவராக விரும்பி வந்தது. அவர் வழி காட்ட மாட்டாரா? ஏன் இதைப்பற்றி யோசிக்கவில்லை? ஒவ்வொருவரும் அவர் கடை கண் பார்வை கிடைக்குமா என்று அலைகிறார்கள். இங்கு இப்படி!" என்றேன்.

இதன் பின்னர், நன்றாக போய்க் கொண்டிருந்த அவர் வியாபாரம் சுருங்கிப் போனது. இன்றும், சாதாரண மனிதனாக, பெருமாள் கோயில் முன் அமர்ந்து வியாபாரம் செய்து வருகிறார்.

இங்கு கூற வருவது ஒன்றுதான். சாதாரண மனிதனாலும் இறைவனை மயக்க முடியும். நேர்மையாக இருந்தால், சித்தர்களும், தெய்வமும், இறங்கி வந்துதான் ஆக வேண்டும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1574 - அன்புடன் அகத்தியர் - அஷ்ட விநாயகர் திருத்தலங்கள்!







வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!! 

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கும் புனே மற்றும் ராய்காட் அகமது நகர் மாவட்டங்களில் அமைந்திருக்கும் அஷ்ட விநாயகர் திருத்தலங்களை பற்றி குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்.

சித்தன் அருள் 1240.

மற்றும் இந்த அஷ்ட விநாயகர் ஆலயங்களுக்கு எந்த நாளில் செல்வது அங்கு சென்றால் என்ன சிறப்பு என்பதை சிவனேரி கோட்டையில் குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்.

சித்தன் அருள். 1321.

அதாவது அஷ்ட விநாயகர் ஆலயங்கள் தரிசனம் ஒரே நாளில் அதாவது அமாவாசை திதியில் செய்வது மிகவும் சிறப்பு கணபதியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் வெற்றியும் கிடைக்கும் என்பதை பற்றி சிவனேரி கோட்டையில் வைத்து வாக்குகள் தந்திருந்தார்.

அதன்படியே அடியவர்கள் குழு அமாவாசை திதி அதாவது இரண்டு நாட்கள் வரும்படியான அமாவாசை திதியினை கணக்கிட்டு யாத்திரை செய்ய முடிவு செய்து குருநாதரை வணங்கி யாத்திரை செய்தனர்.

அஷ்ட விநாயகர் தல யாத்திரையில் குருநாதர் வாக்குகள் நல்கியிருந்தார் அதன் தொகுப்பு.

1 சிந்தாமணி விநாயகர். 
தேயூர். புனே மாவட்டம். மகாராஷ்டிரா.

ஆனைமுகன் அறுமுகன் பாதம் பணிந்தே செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே நலன்கள் அப்பனே எதை என்று எதை எதை என்று நோக்கி நோக்கி மனிதன் சென்று கொண்டே இருக்கின்றான்!!

ஆனாலும் இறைவன் தன் பால் ஈர்த்துக் கொண்டாலும் நிச்சயம் மனிதன் தன் பால் தான் செல்வேன் என்று அடம் பிடித்துக் கொண்டிருக்கின்றான்!!!!

அப்படி இருக்கையில் அப்பனே நிச்சயம் இறைவன் தண்டனை கொடுத்துத்தான் அப்பனே நன்றாக ஆக்குவான் இதை நிச்சயம் நீங்கள் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

ஒவ்வொருவரையும் கூட அப்பனே அதாவது இறைவன் படைத்தான் அப்பனே!!!

ஆனால் இறைவன் படைத்தவனுக்கு அதை எடுக்கவும் தெரியும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதை யாரும் உணர்வதே இல்லை என்பேன் அப்பனே!!!!

இறைவன் எடுத்துக் கொண்டானே பின்  இவ்வாறு இருந்தானே இவ்வாறு எல்லாம் புலம்பி அழுதும் நிச்சயம் பயனில்லை என்பேன் அப்பனே!!!

இறைவன் அதாவது இவ் உயிரையும் கொடுத்துள்ளான்!!! பின் இவ் உடம்பிற்கு அப்பனே எதை என்று அறிய அறிய அதை மீண்டும் எடுத்துக் கொள்ள இறைவனுக்கும் தெரியும் அப்பனே!!!

எப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே இவை யாருக்கும் தெரியாது என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே ஒரு ஞானி இருந்தானப்பா!!!!

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அவந்தனுக்கே இதுவும் புரியுமப்பா!!!!! 

அப்பனே யார் ஒருவன் எதை என்றும் அறிய அறிய அப்பனே யான் ஞானியாக வேண்டும் யான் எதை என்றும் அறிய அறிய இறைவன் அருகில் இருக்க வேண்டும் என்பவை எல்லாம் பல ஆசைகள்!!!!

அவை மட்டும் இல்லாமல் திருத்தலங்களை அமைக்க வேண்டும் நிச்சயம் அனைவருக்கும் எவை எவையோ செய்ய வேண்டும் என்பவையெல்லாம் அப்பனே மனிதனின் நினைப்பு அப்பனே!!!!

ஆனாலும் இறைவனின் நினைப்புதான் அப்பனே நடக்குமே தவிர நீ யார் என்பது சரியாகவே இறைவனுக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் ஓர் படி மேலாகச் சென்று அப்பனே திருத்தலம் கட்டி அப்பனே இன்னும்....இத் திருத்தலம் புகழ் பெற வேண்டும் என்றெல்லாம் அப்பனே மாந்திரீகத்தை எல்லாம் பயன்படுத்தி அப்பனே ஈசன் எதை என்று அறிய அறிய கோபித்துக் கொண்டு நிச்சயம் அங்கிருந்து சென்று விடுகின்றான் என்பேன் அப்பனே!!!!

அப்பொழுது அத் திருத்தலம் எப்படியப்பா ????அமையும்!!!! 

அப்பனே இவ்வாறு தான் உலகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே

அதனால் ஈசனுக்கு அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஈசனே நிச்சயம் அமைத்துக் கொள்வான் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே!!

ஆனால் ஈசனை காசுக்காக பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே

அப்படி இருக்க நிச்சயம் தண்டனைகள் அப்பனே அதாவது இவ் விநாயகப் பெருமானே கொடுப்பானப்பா!!!!

அப்பனே விநாயகப் பெருமான் அப்பனே அலைந்து திரிந்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே ஞானங்களை வாரி வாரி வழங்குவதற்கு!!!!

ஆனால் அப்பனே மனிதனின் நினைப்பையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!


இதனால் அப்பனே மனிதனின் நினைப்பு சுக போகங்களில் பின் ஏறி ஏறி செல்கின்றான் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து!!!

அதனால் அப்பனே அதுவாகவே மாறு அதுவாகவே மாறு என்றெல்லாம் நிச்சயம் பிள்ளையோன் வரங்கள் கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே

அதனால் அப்பனே அதுவாக மாறிவிட்டால் அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய பின் சுகங்கள் எவை என்று அறிந்தும் அறிந்தும் குதித்து குதித்து மீண்டும் இறைவன் பாதையில் வருவதற்கு சில கஷ்டங்கள் அப்பா!!!!

அதனால் ஞானத்தை கொடு கொடு என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தாலே போதுமானதப்பா அனைத்தும் நடந்து விடும் என்பேன் அப்பனே!!!

அதனால் மாய உலகத்தில் அப்பனே எதையும் கேட்டு விடாதீர்கள் என்பேன் அப்பனே!!! 

சித்தனுக்கு ஏதும் தேவையில்லை என்பேன் அப்பனே!!!

எவை என்று அறிய அறிய மனிதனுக்குத் தான் அனைத்தும் தேவை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அனைத்தும் தேவை என்று கர்மாவை சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றான் பலமாக பலமாக அப்பனே!!!


இவ்வாறு பலமாக பலமாக அப்பனே சேர்த்து வைத்து அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை அப்பா

பிரயோஜனம் இல்லை அப்பா!! எதனை என்றும் அறிந்தும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே

இவ்வாறு சேர்த்து வைத்தது அப்பனே உந்தனுக்கே அது வட்டியாக வருகின்றது அப்பனே!!!

இதுதான் உண்மையப்பா!!!

அவ் வட்டியை நீ தான் அனுபவிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே இளமையில் இறைவனை நாடு நாடு என்றெல்லாம் அப்பனே!!!

பின்  நாடிட்டால் அப்பனே அது பத்திரமாக அப்பனே அவ் பக்தி எங்கும் செல்லாதப்பா இறைவனின் அன்பும் எங்கும் செல்லாதப்பா!!!!

மீண்டும் பன்மடங்கு அப்பனே மீண்டும் கடைசியில் கடைசி காலங்களில் அப்பனே உன் பிள்ளைகள் உன் மனைவி அப்பனே உன் குடும்பத்திற்கே வட்டியும் முதலுமாக வரும் அப்பா!!!

இதுதான் அப்பனே நீ எதைச் செய்கின்றாயோ அது நிச்சயம் வட்டியாக மாறும் சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய சுகங்களை தேடி தேடி செல்கின்றாயா, அப்பனே நிச்சயம் அப்பனே கடைசி காலத்தில் அப்பனே அவ் சுகங்களே உந்தனுக்கு வினையாக போகும் என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய பிள்ளைகள் வேண்டும் வேண்டும் என்று சொல்லிட்டு எவை என்று அறிய அறிய போகின்றாயா அவைகளே உந்தனுக்கு தக்க எதிரியாக கடைநாளில் ஆகும் அப்பா!!!

அப்பனே எதை நீ விரும்புகின்றாயோ அதுவே கடைசியில் எதிரியாகுமப்பா!!!! 

அப்பனே எதை என்று அறிய அறிய உண்மை நிலைகளை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே உண்மை நிலைகளை தெரியாத அளவிற்கும் கூட அப்பனே பின் பல பல மனிதர்கள் அப்பனே அதாவது இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கின்றார்களே 

யான் அகத்தியன் பக்தன் யான் முருகன் பக்தன் என்றெல்லாம் அவன் வாயில் வந்ததை எல்லாம் பின் வாதாடிட்டு இதையும் மக்களுக்கு பரப்பி விட்டார்கள்!!!! அதனால்தான் மக்கள் அப்பனே மூடநம்பிக்கையிலே மூழ்கியுள்ளார்கள் அப்பனே

அப்பனே ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே...  பிள்ளை நன்றாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எண்ணுகின்றீர்கள் அப்பனே அது கடைசி காலத்தில் அப்பனே எதை என்றும் அறிய அறிய தீயதாக முடியும் என்பேன் அப்பனே

இதை நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

எதை என்று இன்னும் குழந்தை பாக்கியங்கள் வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுகின்றீர்கள் அப்பனே!!!

இறைவனும் கொடுக்கின்றான் அப்பனே ஆனால் அதனாலே வரும் காலத்தில் கடைசி காலத்தில் உங்களுக்கு பிரச்சனை அப்பா!!!

அவை மட்டும் இல்லாமல் உங்களுக்கு மட்டும் பிரச்சனை இல்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அவர்களுக்கும் (வாரிசுகள்) பிரச்சனையப்பா!!!

இன்னும் கணவன் வேண்டும் மனைவி வேண்டும் அப்பனே ஆசைப்படுகின்றீர்கள் அப்பனே

ஆனால் அதுவும் இறைவன் கொடுத்து விடுகின்றான் அப்பனே ஆனால் அதுவே அப்பனே எதை என்று கூட கடைநாளில் தொந்தரவாக போய்விடும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எங்கள் அருள் பெற்று விட்டால் இறைவன் ஆசிகள் பலமாக பெற்றுவிட்டால் அப்பனே நிச்சயம் அதை யாங்கள் நிச்சயம் மாற்றி விடுவோம் அப்பனே 

இதுதான் உண்மை அப்பா!!!

மற்றவை எல்லாம் பொய்களப்பா பொய்கள்!!

அப்பனே இன்னும் மனிதனுக்கு வாழ தெரியவில்லை பக்திகள் செலுத்தவே தெரியவில்லை அப்பனே

அப்படி இருக்க மனிதனுக்கு எவ்வாறு கஷ்டங்கள் நீங்கும்?? என்பேன் அப்பனே

அப்பனே மனதை பின் ஒரு நிலை படுத்த வேண்டும் அப்பனே!!!

மனதை ஒருநிலைப்படுத்தினால் அப்பனே இவ்வுலகத்தை நீ ஒரு நிலை படுத்தலாம் என்பேன். அப்பனே

ஆனால் உன் மனமே சரியில்லை என்றால் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய ஒரு நிலையும் படுத்த முடியாது தியானங்களும் செய்ய முடியாது அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே தீயதை நோக்கித்தான் மனம் சென்று கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே

இதனால் ஒன்றும் பயனில்லை அப்பனே

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து

அதனால் அப்பனே உங்களுக்கெல்லாம் அப்பனே எதை என்று அறிந்து அறிந்து ஞானப் பாதையை தான் யான் காட்டுவேன் சொல்லிவிட்டேன் அப்பனே

மீண்டும் மீண்டும் எதை கேட்டாலும் அப்பனே நிச்சயம் யான் எதை என்று அறிய அறிய என்னை வந்தும் நம்பி விட்டீர்கள் அப்பனே.....

அதனால் யான் என்ன கொடுக்கின்றேனோ அப்பனே அதைத்தான் நீங்கள் வாங்க வேண்டுமே தவிர மற்றவை எல்லாம் நிச்சயம் செல்லாது

ஏனென்றால் ஒரு தந்தைக்குத் தெரியும் தன் பிள்ளைக்கு என்ன செய்ய வேண்டும் என்று அப்பனே!!!


அடியும் கொடுப்பேன் உதையும் கொடுப்பேன் எதை என்று அறிய அறிய இவை இரண்டிற்கும் சம்பந்தம் உண்டா என்பதை கூட அனைத்தும் ஒன்று என்றே!!!

ஆனால் !!!! அடி வேறு!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட அதனால் அப்படியே நீங்கள் விரும்பியது எல்லாம் யான் நிச்சயம் கொடுத்து விட மாட்டேன் அப்பனே!!!

பின்பு நீங்கள் வேண்டுமானால் அகத்தியன் தேவையில்லை என்று ஒதுங்கிவிடலாம் அப்பனே

இதுதான் நிச்சயம் உண்மையான உண்மை அப்பனே!!!

அகத்தியன் கொடுக்கவில்லையே அகத்தியன் கொடுக்கவில்லையே

எதனால்????? கொடுக்கவில்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

உங்களுக்கு நல்லதாகத்தான் யான் செய்து கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

இது அனைவருக்குமே பொருந்தும் என் பக்தர்களுக்கு அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே

ஒரு வரியில் பல ரகசியங்களை யான் தெரிவிப்பேன் அப்பனே

இன்னும் வரும் காலங்களில் அப்பனே அழியக்கூடிய நேரங்கள் அப்பனே

ஆனால் உங்களுக்கு பணம் எதை என்று அறிய அறிய யான் கொடுப்பேன் அப்பனே கவலைகள் இல்லை

அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே ஞானம் பெறுவதற்கு இவ்வுலகத்தில் ஏதும் தேவையில்லை அப்பா!!!!

அன்பு தான் தேவை அப்பனே!!!!

எதன் மூலம் நீங்கள் எதை என்று அறிய அறிய யார் மீது அன்பு செலுத்துகின்றீர்களோ அப்பனே அதன் மூலமே ஞானம் பெறுவீர்கள் அப்பனே

பொதுவாக அப்பனே வேலையில் எதை என்று கூட ஏதோ வேலை வேண்டுமென்று அப்பனே அதன் மூலமே அன்பு செலுத்தினால் அப்பனே அதன் மூலமே அழிவு ஏற்படும் அப்பா

திருமணம் வேண்டும் அப்பனே ஆனால் எவை என்று தவறில்லை அப்பனே ஆனால் யாங்கள் தான் கொடுக்க வேண்டும்

நீங்களே எடுத்துக் கொண்டால் அப்பனே அதன் மூலமே அழிவப்பா!!!

எதை என்று அறிய அறிய இன்னும் அப்பனே மருந்துகள் எவை என்றும் அறிய அறிய எவை என்று அறியாமலே அப்பனே ஆனாலும் அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே

இயற்கையான மூலிகைகளை எடுத்துக் கொள்ளுங்கள் என்று

ஆனாலும் எவரும் கேட்பதில்லை!!!

பின் செயற்கைகளையே பின்பற்றுகின்றார்கள் அப்பனே.

அதனாலும் அழிவுகள் தானப்பா!!!

இன்னும் எதையெதையோ கேட்கின்றார்கள் அப்பனே

ஆனால் அதனால் தான் அழிவுகள் என்பதை கூட அவந்தனுக்கு தெரியாமல் கேட்டு விடுகின்றான் அப்பனே

அப்பொழுது யான் எதை கொடுக்க வேண்டும்?? எதை என்றும் அறிய அறிய அப்பனே

அதனால் பின் அப்பனே அழிவில்லாதவனை தேடு அப்பனே நிச்சயம் நீயும் அழிவில்லாதவனாக மாறுவாய் என்பேன் அப்பனே!!!!

யார் ஒருவனாவது அப்பனே எந்தனுக்கு எதுவும் தேவையில்லை இறைவன் தான் தேவை என்று சொல்கின்றானா??????? அப்பனே!!! 

இல்லை அப்பனே!!!

அப்பனே யானே பார்த்திருக்கின்றேன் அப்பனே
பூஜைகள் செய்பவனே எந்தனுக்கு அது வேண்டும் என் பிள்ளைகளுக்கு திருமணம் ஆக வேண்டும் என்று!!! 

அப்பனே தெரியாமலே கேட்கின்றேன் !!!!

படைத்தவன் இறைவன் அவந்தனக்கு எப்பொழுது எதைச் செய்ய வேண்டும் என்பது தெரியாதா????? என்ன !!!!!!


அப்பனே அப்பொழுது உன் பக்திகள் அங்கே கீழ்நோக்கிப் போய்விட்டது அப்பனே!!!!

அப்பொழுது எப்படியப்பா??!
நீ எதை என்று அறிய அறிய யான் பக்தன் என்று!!!

ஆனாலும் ருத்ராட்சம் அணிந்து கொள்வது அப்பனே இன்னும் இன்னும் எதை எதையோ செய்து கொண்டு அப்பனே யான் பக்தன் என்று அமைதியாக நின்று கொள்வது!!!

அப்பனே ஆனால் அவன் என்னென்ன செய்கின்றான் என்பது அப்பனே எந்தனுக்கே தெரியும்!!!! 

போதைக்கு அடிமையாகி இன்னும் சில மனிதர்கள் பெண்களுக்கு அடிமையாகி அப்பனே என்னென்ன அப்பனே !!!

அப்பனே இதனால் அகத்தியன் தண்டனைகள் கொடுத்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே

ஆனால் நிச்சயம் அகத்தியனை வணங்கினேனே சித்தர்களை வணங்கினேனே எந்தனுக்கு ஒன்றுமே நடக்கவில்லையே என்று!!! 

அப்பனே நிச்சயம் நடக்காது சொல்லிவிட்டேன்!!!

அப்பனே நீங்கள் சரியில்லை அப்பனே

அதனால் நிச்சயம் உங்களை அடிக்கத்தான் யாங்கள் செய்வோம் அப்பனே!!!!

சித்தர்களுக்கு கோபம் வந்தால் அப்பனே அனைத்தையும் அழித்துவிட்டு செல்வோம் அப்பனே!!!!

எங்களுக்கும் தெரியும் அப்பனே அதனால்தான் விட்டு விட்டு பார்ப்போம் அப்பனே!!!

அப்படி திருந்தாவிடில் அப்பனே நிச்சயம் எதை என்று கூட அப்பனே பின் கெட்டுத்தான் கொடுக்க வேண்டும் என்று இருந்தால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து.

இன்றளவும் கூட அப்பனே அனைவரையும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

ஒரு பெண்மணி என்னை பார்த்து அகத்தியா !!!!
எனக்கு ஒன்றுமே கொடுக்கவில்லையே என்று என் தலை மீது கொட்டினாள் அப்பனே!!!

இது நியாயமா???

அவள் செய்தது புண்ணியமா ????  தர்மமா???...

அப்பனே இன்னொருவன் என்ன கேட்கின்றான் என்னை பார்த்து!!!!!

அகத்தியனே உந்தனுக்கு பூஜைகள் செய்தேனே!!!!!

எந்தனுக்கு எதைத்தான் கொடுத்தீர்கள்????

ஏதாவது பணம் தா !!  என்று!!

அப்பனே இன்னொருவன் அப்பனே எந்தனுக்கு பெண்கள் பின் பல வகையான  பெண்கள் வேண்டுமென்று இன்னொருவன்!!

 அப்பனே யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

ஆனால் அவர்களுக்கெல்லாம் தண்டனைகளும் உண்டு என்பேன் அப்பனே!!!!


இவ்வாறெல்லாம் கேட்டு கேட்டு மனிதன் வரங்கள் பெற்றுக் கொண்டிருக்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய

அது ஈசனிடம் நடக்கலாம் ஆனால் சித்தர்கள் கையில் நடக்காதப்பா நடக்காது!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

பின் ஒருவனை சோதித்து சோதித்து தான் அப்பனே யாங்கள் அனைத்தும் கொடுப்போம் என்பேன் அப்பனே!!!

அனைவரையும் யான் சோதித்து விட்டேன் அப்பனே!!!!! இன்னும் கூட சிறிது சோதிப்பேன் அப்பனே!!!

அதில் தேர்ச்சி பெற்று விட்டால் ஞானங்கள் அள்ளித் தந்து விடுவேன் அப்பனே

எதை என்று அறிய அறிய இது அனைவருக்குமே பொருந்தும் என்பேன் அப்பனே சமமாகத்தான் சொல்கின்றேன் அப்பனே

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய என் பேச்சை கேளாதவனுக்கு அப்பனே நிச்சயம் அப்பனே தண்டனைகள் உண்டு சொல்லி விட்டேன் அப்பனே

பல பேர்களுக்கும் எதை என்று அறிய அறிய அப்பனே தண்டனைகள் கொடுத்துவிட்டேன் அப்பனே!!!


 அதனால்தான் அப்பனே தேடித்தேடி வாருங்கள் வாக்குகளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டேன் அப்பனே

ஏதோ கேட்பது...ஏதோ. எவை என்று அகத்தியன் சொல்லிவிட்டானே என்று அமைதியாக பொறுத்துக் கொள்வது அப்பனே....

 அப்படி நீ செய்யாவிட்டால் யானே தண்டனைகள் அப்பனே இதுபோல் பல பேர்கள் அப்பனே நிச்சயம் செய்துவிட்டார்கள்!!!!

( அதாவது குருநாதருடைய வாக்குகள் வேண்டும் வேண்டும் என முயற்சி எடுத்து வாக்குகள் கேட்டுவிட்டு குருநாதர் என்ன வாக்குகளில் கூறியிருக்கின்றார் என்பதை அதை பொருட்படுத்தாமல் ஏனோதானோ என்று உதாசீனம் செய்துவிட்டு இருப்பதை குருநாதர் இங்கே குறிப்பிடுகின்றார்)

 அதனால் தான் யார் ? யாருக்கு ??வாக்குகள் தேவையோ!!!!!!!!

""" யான் தான் முடிவெடுப்பேன் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

இதனால் வாக்குகள் வரவில்லையே எதை என்றும் அறிய அறிய யார் மீதும் குற்றம் சொல்லியும் இங்கு பிரயோஜனம் இல்லை அப்பா!!!!!

உன் மீது தான் குற்றம் அப்பனே...

நீ என்னென்ன தவறுகள் செய்கின்றாய் அப்பனே எதை என்று கூட உண்மை நிலைகளை சொல்லி விட்டால் கோபங்கள் வருகின்றதாம் மனிதனுக்கு

அப்பனே வரட்டும் அப்பனே அக்கோபம் ஒன்றும் செய்யாது அப்பனே எங்களை!!!!

எங்களுக்கு கோபம் வந்தால் அப்பனே யான் ஏற்கனவே உங்களை நிச்சயம் எதை என்றும் அறிந்து அறிந்து அனைவருக்குமே தெரிவித்து விட்டேன் அப்பனே!!!!!

அதனால் எதற்காகப்பா????
ஓடுகின்றீர்கள் ?? அப்பனே!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓடாதீர்கள் அப்பனே எதை என்று அறிய அறிய தேயாதீர்கள் அப்பனே எவை என்று அறிய அறிய.....

இறைவனுக்காக தேயுங்கள் அப்பனே!!!!

இறைவன் உங்களுக்காக தேய்வான் அப்பனே!!!!

அப்பொழுதுதான் உண்மை நிலைகள் புரியும் ஞானப் பாதை தெரியும் !!!

அப்பனே இறைவனும் கண்களுக்கு புலப்படுவான் அப்பனே !!!

அப்பனே இறைவன் சுற்றிக் கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!

ஆனால் இறைவனை பார்க்க முடியவில்லையே???? 

ஏன் பார்க்க முடியவில்லை????

அப்பனே ஆசைகளப்பா ஆசைகள்!!!!

அப்பனே ஆசைகள் மனம் போல் சென்று விடும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே உடம்பில் பல பாகங்கள் உள்ளது அப்பனே!!!

அதை அக்குவேராக அப்பனே யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

எங்கெல்லாம் சில கதிரியக்கங்கள் படுகின்றது என்பதை எல்லாம் யான் எடுத்துரைப்பேன் அப்பனே நிச்சயம்....அப்பொழுது நீங்கள் புரிந்து கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!! 


எண்ணற்ற புத்தகங்கள் அப்பனே யான் எழுதி இருக்கின்றேன் அப்பனே ஆனாலும் அவற்றையெல்லாம் மனிதன் எதை என்று அறிய அறிய அப்பனே மனித வாழ்க்கை இன்னும் முன்னேறக்கூடாது என்றெல்லாம் நினைத்து அழித்து விட்டான் அப்பனே

ஆனாலும் இனிமேலும் அவையெல்லாம் எப்படி எல்லாம் எடுத்துச் செல்ல வேண்டுமோ அப்படி யாங்கள் எடுத்துச் செல்வோம் அப்பனே

அதனால் சித்தர்கள் விசித்திரமானவர்கள் அப்பனே!!!! சித்தர்களைப் பற்றி யார் ஒருவன் சரியாக தெரிந்து கொண்டிருக்கிறானோ அவன் மடிந்து போவான்.

ஆனால் நிச்சயம் தெரியாதப்பா!!!

ஏமாற்றி சுற்றிக் கொண்டிருக்கின்றான் அவ்வளவுதான்!!!! அப்பனே 

( சித்தர்களைப் பற்றி யாரும் ஆராய்ந்து கொள்ள முடியாது சித்தர்களைப் பற்றி யாரும் தெரிந்து கொள்ள முடியாது என்பதை குறித்து குருநாத அகத்தியப் பெருமானும் காகபுஜண்டர் ரிஷியும்  ஏற்கனவே வாக்குகளில் கூறியிருப்பதை நினைவில் கொள்ளுங்கள் சித்தர்களைப் பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முடியாது அப்படி அறிந்து கொண்டால் அது மரணத்தில்தான் போய் முடியும்!! ஆனால் சித்தர்கள் பற்றி எனக்கு தெரியும் நான் சித்தர்கள் வழியில் வந்தவன் என்று தற்போது உள்ள போலி சாமியார்கள் ஏமாற்றி சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றார்கள்)

இப்பொழுது (ஏமாற்றி) சுற்றலாம் அப்பனே!!!! சிறிது காலமே அப்பனே!!!

அப்பனே தாகத்திற்கு தண்ணீர் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே ஆனால் குடித்து விடலாம் ஆனால் மீண்டும் தாகம் எடுக்கும் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதேபோலத்தான் அப்பனே இப்பொழுது எவை என்று அறிய அறிய தாகம் எடுக்கலாம் ஆனால் யாங்கள் கொடுப்போம்

ஆனால் மறுபடியும் நிச்சயம் அப்பனே தாகம் எடுக்கும் அப்பனே அப்பொழுது தெரிந்துவிடும் உன் லீலை அப்பனே!!!!

நீ என்னென்ன செய்கின்றாய் என்பதை எல்லாம் அப்பனே அதனால் பொறுத்தார் பூமி ஆள்வார் என்பதை எல்லாம் பல பழமொழிகளும் உண்டு என்பேன் அப்பனே

நல் எண்ணங்களை வளர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன் இக் கணபதியிடம் எதை என்று அறிய அறிய இங்கு வந்து யான் வாக்குகள் பரப்ப வேண்டும்!!???! என்றெல்லாம் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய கணபதி அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே பல பல வழிகளிலும் கூட  அஷ்ட(மா)  அப்பனே சித்துக்களை பெற்றுள்ளார்கள் என்பேன் அப்பனே!!! கணபதியை கூட வலங்கள் 
வந்து வந்து !!!

அஷ்ட கணபதியையும் சுற்றி சுற்றி வந்து தரிசனம் செய்து அஷ்டமா சித்துக்களையும் பெற்றுள்ளார்கள் இதில் சிவநேரி கோட்டையில் சத்ரபதி சிவாஜி அவர்களும் அஷ்ட விநாயகரையும் தரிசனம் செய்து சித்துக்களை பெற்றதை குருநாதர் வாக்கில் கூறியிருந்தார்)

அதனால்தான் அப்பனே முதலில் ஞானங்கள் பெற வேண்டும் என்பதே முக்கியம்!!!

 அப்பனே பணங்கள் வந்துவிடும் ஆனால் போய்விடும் அப்பனே 

இவையெல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய

ஆனாலும் அப்பனே பக்திகள் அன்புகள் ஞானங்கள் வந்துவிட்டால் அப்பனே மீண்டும் (திரும்பி) செல்லாதப்பா!!! அதன் மூலம் பொருள்கள் ஈட்டிக் கொள்ளலாம் அப்பனே!!!

இதுதான் உண்மை அப்பா அதனால் பலத்த பலத்த எதை என்று அறிய அப்பனே எதிர்கொள்ளுங்கள் அப்பனே எவ்வித கஷ்டங்களையும் கூட அப்பனே

அவ் கஷ்டங்களை எல்லாம் எதிர்கொள்ளும் பொழுது அப்பனே பின் சக்திகளும் உன்னுள் புகும் அப்பா!!!

புகுந்து புகுந்து எதை என்று அறிய அறிய ஒரு பக்குவ நிலைக்கு வந்து விடுவாய்!!!

அனைத்தும் பொய் என்று அப்பொழுது அனைத்தும் பொய் என்று எவன் ஒருவன் உணர்கின்றானோ அவன் அருகிலேயே இறைவன் வந்து விட்டான் என்பது பொருந்தும்!!!!

இறைவன் நிச்சயம் காட்சிகள் அருள்வான் என்பது புரியும் அப்பா!!!

இதனால் அப்பனே அவை செய் இவை செய் அப்பனே எவை என்று அறிய அறிய அங்கு செல் இங்கு செல் என்றெல்லாம்!!!!

நடக்காதப்பா நடக்காது!!!

ஏனென்றால் எங்கெல்லாம் அப்பனே பல சக்திகள் விழுகின்றது அப்பனே மேலிருந்து எவை என்று கூட அதாவது அப்பனே

இந்திரலோகம் சந்திரலோகம் இன்னும் என்னென்ன லோகங்களை பற்றியும் கூட யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே அறிவியல் ரீதியாகவே!!!

அப்பொழுது நீங்கள் தெரிந்து கொள்ளலாம் அப்பனே அங்கிருந்து யார் கண்ணோக்கி எவை என்று அறிய அறிய பார்க்கின்றார்கள் அது எங்கு விழுகின்றது என்பதை எல்லாம் யான் அறிந்து தான் சித்தர்கள் அறிந்து தான் திருத்தலங்களை கூட அமைத்தோம் என்பேன் அப்பனே!!!

 பல பல ஞானிகளும் கூட அமைத்தார்கள் அப்பனே!! அங்கெல்லாம் சென்றால் அப்பனே சில வினைகள் தீருமப்பா!!  சில கஷ்டங்கள் வரும் அப்பா ஆனாலும் கடைசியில் நன்றாக முடியும் அப்பா!!!!

இதுதான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே உங்கள் அனைவருக்குமே கணபதியின் அருள் கிட்டிற்று !!! அப்பனே நலம் ஆசிகள்!!!! மற்றொரு திருத்தலத்திலும் உரைக்கின்றேன் அப்பனே !!!

அஷ்டவிநாயகர் சிந்தாமணி கணபதி கோயில் தேர் தரிசனம் செய்யப்படுகிறது. இது புனே நகரத்திலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது புனே மாவட்டத்தில் உள்ள ஹவேலி தாலுகாவில் உள்ளது. தேயூர் சிந்தாமணி கணபதி கோவில் சங்கம் அல்லது முலா மற்றும் முத்தா நதிகள் மற்றும் பீமா நதியுடன் இணைந்த இடத்தில் உள்ளது.

சிந்தாமணி கணபதி கோவில் தேர் - நேரங்கள்
நேரங்கள் முதல் வரை

காலை தரிசனம் 6 AM மதியம் 1 மணி

மாலை தரிசனம் 2 PM 10 PM

அங்கார்கி சதுர்த்தி அன்று தரிசன நேரம் 4 AM 11 PM

மகா ஆரத்தி நேரம் காலை 7:30 மணி

மகா பிரசாதம் நேரம் 10 AM மதியம் 1 மணி

மத்தியான ஆரத்தி நேரம் 12 மணி

ஷேஜார்த்தி நேரம் இரவு 10 மணி.

சாலை வழியாக

சொன்னது போல், சிந்தாமணி கணபதி கோவில் தேயூர் புனேவில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ளது. புனே மற்றும் மும்பையில் இருந்து அரசுப் பேருந்துகளைப் பெறலாம். அதுமட்டுமின்றி, ஏராளமான தனியார் பேருந்துகள் மற்றும் கார்கள் உள்ளன. மக்கள் தங்கள் வாகனங்களிலும் அங்கு செல்கின்றனர். காரில் அஷ்டவிநாயகர் யாத்திரை செல்லும் போது மும்பை-கந்தாலா சாலையில் செல்ல வேண்டும் . போர் காட் பிறகு, தேூர் நகரம் அமைந்துள்ளது.

சிந்தாமணி கணபதி 
புனேவில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் தேயூர் கோயில் உள்ளது.

Monday 25 March 2024

சித்தன் அருள் - 1573 - இவர்!


இறைவனை தேடி செல்லும் பொழுதே, சித்தர்கள் அருகாமை தானே வந்துவிடும். இவர் அடியேனின் சிறந்த நண்பர்களில் ஒருவர். மிக அமைதியானவர், யாரிடமும் அதிகம் பேசமாட்டார். இளம் பருவத்திலேயே இறை தேடல் இவருள் புகுந்தது. பல புண்ணிய தலங்களுக்கு இருவரும் சென்று வருவோம். அவரிடம் இருந்த புண்ணியத்தால், எங்கு சென்றாலும் தரிசனத்துக்கு/அனுபவத்துக்கு குறைவில்லை.

ஒருமுறை, இருவரும் திருவண்ணாமலைக்கு தரிசனத்துக்கு சென்றிருந்தோம். நல்ல தரிசனம், மனம் மிக அமைதியாகிவிட்டது. மலையை நிமிர்ந்து பார்த்தவர், "வாங்க! ரமணர் வசித்த குகைக்கும், வீட்டிற்கும் போய் வருவோம்!" என அழைத்தார். இருவரும் ரமணாஸ்ரமம் வந்து தரிசனம் செய்துவிட்டு, பின்பக்க வாசல் வழியாக புகுந்து மலை ஏறினோம். 

நடந்து செல்கிற வழியில், சிறு சிறு லிங்கம், நந்தி, பிள்ளையார், அம்பாள், முருகர் என பல விக்ரகங்களை, நம் கண் முன்னே, சொன்னால் செய்து கொடுத்தார்கள். ஒரு சிறிய சிவலிங்கத்தை கையிலெடுத்தவர், நந்தியையும் சேர்த்து செய்து கொடுங்கள் என காத்திருக்கலானார். ஐந்தே நிமிடத்தில் நந்தியம்பெருமானார் உருவானார். செய்தவர் கேட்ட தொகையை கொடுத்துவிட்டு இரண்டையும் ஒரு செய்தி தாளில் மடக்கி வைத்துக் கொண்டார். இருவரும் புறப்பட்டோம்.

ஊருக்கு வந்து சேர்ந்ததும், இருவரும் அவரவர் வழியில் பிரிந்து சென்றோம். அடியேனின் வேலை பளு காரணமாக ஒரு மாதத்திற்கு ஒருவருக்கு ஒருவர் பார்த்துக் கொள்ள முடியவில்லை. இருபது நாட்களுக்கு பின் ஒரு நாள் வீட்டில் தேடி வந்தார். அன்று பார்த்து அடியேன் வீட்டிற்கு வந்த பொழுது இரவு மணி பத்து ஆகிவிட்டது. அன்றும் சந்திக்க முடியவில்லை. மறுநாள் அவரை அடியேன் தேடி சென்ற பொழுது மூன்று நாட்களும் அவரை காணவில்லை. எங்கோ சென்றுவிட்டார்.

45 நாட்களுக்கு பின் ஒருநாள் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

"நான் உங்களை தேடி வந்தேன். பார்க்க முடியவில்லை. ரொம்ப வேலை பளு காரணமாக இரவு வரும் பொழுது தாமதமாகி விடுகிறது. பார்த்து பேச வேண்டும் என்றீர்களாமே! என்ன விஷயம்?" என்றேன்.

"அண்ணாமலையில் ஒரு சிவலிங்கமும் நந்தியும் வாங்கினோமே! நினைவிருக்கிறதா?" என்றார்.

"ஆம்! நீங்கள் வாங்கினீர்கள்! நித்ய பூஜை ஆரம்பம் ஆகிவிட்டதா?" என்றேன்.

"நித்ய பூஜை உச்சிக்காலம் வரை விமர்சையாக அடுத்தநாளே தொடங்கிவிட்டேன்! அதுதான் பிரச்சினையானது."

"என்னது பிரச்சினையா? என்னய்யா சொல்றே?" என்றேன்.

நாம் இருவரும் திருச்செந்தூர் சென்ற பொழுது ஒரு குறி சொல்கிறவன் வந்து என்னை பார்த்து ஒரு விஷயத்தை கூறினான், ஞாபகம் இருக்கிறதா? அது அப்படியே நடந்து விட்டது|" என்றார்.

ஒரு நிமிடம் அதிர்ந்து போன நான், சுதாகரித்துக்கொண்டு "இவர் இறைவனையே மயக்குபவர்" என்று கூறினானே, அதுவா?" என்றேன்.

சிரித்துக் கொண்டே அமைதியாக இருந்தார்!

"சரி! சொல்லுங்க! என்ன நடந்தது?" என்றேன்.

இவர் கூற தொடங்கினார், எனக்கு வியப்பினால் வேர்த்து கொட்டத் தொடங்கியது.

இவர் வீட்டில் வயதான அம்மா, இவர், இவரது தம்பி! மொத்தம் மூன்று பேர் தான். பெண்கள் யாரும் இல்லா வீடு. இவர் வீடு இருக்கும் தெருவில், ஒரு சிவன் கோவில். லிங்கம் மட்டும் சன்னதியில் அமர்ந்திருக்கும். அம்பாள், தனியாக தெற்கு திசை நோக்கி அமர்ந்திருப்பாள். சிவபெருமான் "யாம் தனியாக அமர்ந்திருக்க, விரும்புகிறோம்" என்று கூறி வந்து அமர்ந்ததாக அங்கு வசிக்கும் முன்னோர்கள் கூறுவர்.

தினமும், வியாபாரத்துக்கு செல்லும் முன், சிவன் கோவில் முன் நின்று, "ஓம் நமச்சிவாய!" என மார்பை தொட்டு கூறிவிட்டு செல்வது இவர் வழக்கம்.

"லிங்கத்துக்கும் நந்திக்கும் பூசை செய்து தொடங்கி நாள் முதல், என் வியாபாரம் நன்றாக வளர்ந்தது. ஆதலால். ஐந்து மணி நேரம் வரை எடுத்து நிதானமாக அபிஷேக/பூசை செய்து, அவருக்கு நிவேதனமும் கொடுத்துவிட்டு, பின்னர் நான் உணவருந்தி செல்லத் தொடங்கினேன். மிக நிம்மதியாக இருந்தது.

இரு வாரங்களுக்கு முன் அர்த்தஜாமத்தில், வீட்டில் உறங்க கிடக்கும் பொழுது, கொலுசு சத்தம், மாடிப்படி ஏறி வந்து பூஜை சன்னதி முன் நின்றது. வீட்டில் பெண்கள் யாரும் இல்லாததால், உடனேயே விளக்கை போட்டு பார்க்க அங்கு யாரும் இல்லை. ஒருவேளை, தெருவில் நடந்து சென்ற பசு மாட்டின் கழுத்தில் கட்டிய சிறு மணியின் ஓசையாக இருக்கும் என தீர்மானித்து, உறங்கச் சென்றேன்.

மறுநாளும், பூசை செய்து பின் உணவருந்தும் போது அம்மாவிடம் கூறினேன். இன்று கவனிக்கலாம் என்று தீர்மானித்தோம். 

அன்று இரவு அர்த்தஜாமத்தில், ஊரே உறங்கி கிடக்கும் பொழுது, தெருவின் கொடியிலிருந்து கொலுசு சத்தம் வந்தது. வீட்டின் முன் வந்து நின்று, மாடிப்படி ஏறி பூசை அறையில் வந்து அமர்ந்தது. பின்னர் நின்று போனது. அம்மா, அவசரமாக எழுந்து விளக்கை போட்டு பார்த்தாள். யாரும் அங்கு இல்லை. மாடியிலிருந்து கீழே தெருவை எட்டி பார்க்க, எதுவுமே இல்லை.

தொடர்ந்து எல்லா நாளும் இப்படி நடந்த பொழுது, ரொம்ப டென்ஷன் ஆன அம்மா " எங்கேனும் போய் ப்ரச்னம் வைத்து பார், என்ன வென்று தெரிந்து விடும்" என்றாள்.

மதியம் வியாபாரத்துக்காக போகும் பொழுது, ப்ரச்னம் பார்ப்பவரின் வீட்டு முன் நின்று பார்த்தால், அத்தனை கூட்டம். சரி! மாலை வருவோம் என்று திரும்பி நடக்கத் தொடங்க,

"என்ன சிவா! வந்து வெளியே நின்று விட்டு செல்கிறாய்? உள்ளே வர வேண்டியது தானே என்று ஒரு குரல் கேட்டு திரும்பினான்.

ப்ரச்னம் பார்ப்பவர், அத்தனை கூட்டத்தையும் விலக்கி கொண்டு, கைகூப்பியபடி நின்றார்.

உள்ளே வா! சிவா! என்று அவரே வழி அமைத்தார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 24 March 2024

சித்தன் அருள் - 1572 - அன்புடன் அகத்தியர் - வைத்தியநாதர் ஜோதிர்லிங்கம் கோயில், தேவ்கர், ஜார்கண்ட்!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

கார்த்திகை தீபம் சமயத்தில் ஒரு அகத்தியர் அடியவர் குழு பஞ்சபூத திருத்தலங்களையும் ஆறுபடை வீடுகளையும் ஒன்றாக தரிசனம் செய்தனர்!!!

அதனைக் குறித்து குருநாதரிடம் கேட்ட பொழுது குருநாதர் மேலும் பல விஷயங்களை கூறினார்!!! அடிக்கடி இப்படி தரிசனம் செய்ய வேண்டும் இப்படி செய்துவிட்டு அடுத்து

அதாவது!!!!!

அப்பனே தற்பொழுது எதை என்று அறிய அறிய வித்தியாச முறையில் ஒரு வித்தியாச முறையில் சொல்கின்றேன்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய இப்பொழுது (திரு)செந்தூருக்கு செல்ல வேண்டும் என்றால் அதற்கு மாற்று திருத்தலத்தை யான் சொல்கின்றேன் அப்பனே!!! அங்கு சென்றால்தான் சிறப்பு!!!

அப்பனே அண்ணாமலைக்கு சென்றீர்கள் என்பேன் பின் அதற்கும் மாற்று சென்றால் தான் சிறப்பு

அப்பனே இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது காசி இராமேஸ்வரம் என்கின்றார்களே அதனை பற்றியும் கூட அப்பனே எப்பொழுது எதை என்று கூட முடிவு

அப்பனே அண்ணாமலைக்கு திருவண்ணாமலைக்கு சென்றால் அடுத்த திருத்தலத்தை நிச்சயம் நிறைவு செய்ய வேண்டும் அப்பனே

ஆனாலும் இதெல்லாம் உங்களுக்கு தெரிவதில்லை அப்பனே

காலங்கள் அதிவிரைவில் வரும் ஒவ்வொன்றைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே

எதை என்று அறிய அறிய ஒவ்வொரு திருத்தளத்திற்கும் மாற்று திருத்தலம் உண்டு என்பேன் அப்பனே

இதை எவரும் அறிந்ததில்லை என்பேன் அப்பனே எங்களுக்கு மட்டுமே தெரியும் அப்பனே

(பஞ்சபூத திருத்தலங்களுக்கு) மாற்று திருத்தலங்கள் வடக்கே உள்ளது (வட இந்தியாவில்) என்பேன் அப்பனே!!!

அப்பனே ஒன்றை மட்டும் சொல்கின்றேன் அப்பனே அண்ணாமலைக்கு சென்றால் அப்பனே பின் பைத்திய நாதனை பார்க்க வேண்டும் அதாவது வைத்தியநாதன் என்கின்றார்களே அவந்தனை காண வேண்டும்!!!!

இதற்கு இடையில்

அகத்தியர் அடியவர்கள் ஒரு கேள்வியை எழுப்பினர்!!!

 குருவே இந்தியாவில் வைத்தியநாதன் ஜோதிர்லிங்கம் குறித்து பல சர்ச்சைகள் உள்ளன!!! உண்மையான வைத்தியநாத் எங்கு உள்ளது??? மகாராஷ்டிராவில் ஒன்று உள்ளது பீகார் ஜார்கண்டில் ஒன்று உள்ளது

இதில் எது உண்மையான வைத்தியநாத் ஜோதிர்லிங்கம் நீங்கள் கூறுங்கள் குருநாதா!!!!

அப்பனே எதை என்று கூற மராட்டியத்தில் இல்லையப்பா!!!

எதை என்று அறிய அறிய எவை என்றும் கூறிய புரிய இன்னும் மேலே உள்ளான் அப்பா (ஜார்க்கண்ட் வைத்யநாதன் தான் ஜோதிர்லிங்கம்) அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே  நிச்சயமாய் அறிந்தும் கூட சில உண்மைகள் இருக்கின்றது என்பேன் அப்பனே இதில் அதாவது ஒரு உண்மையை தான் இங்கு குறிப்பிட்டுள்ளேன் அப்பனே

இன்னும் குறிப்பிடுகின்றேன் அப்பனே!!!

என்று குருநாதர் வாக்குகள் தந்திருந்தார்

அதன்படி அடியவர்கள் குழு குருநாதருடைய உத்தரவுப்படி ஜார்கண்ட் மாநிலத்தில் அமைந்திருக்கும் வைத்திய நாதனை குருநாதர் உத்தரவுப்படி தரிசனம் செய்தனர்!! குருநாதர் அங்கு நல்வாக்குகள் தந்திருந்தார்!!!!

7/3/2024  அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம்:வைத்தியநாதர் ஜோதிர்லிங்கம் கோயில், தேவ்கர், ஜார்கண்ட்.


ஆதி சிவசங்கரியின்   பொற்கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் !!!

!அப்பனே எம்முடைய ஆசிகள்  அப்பனே எப்பொழுதும் இருக்குமப்பா அப்பனே கவலைகள் இல்லை. இன்னும் இன்னும் அப்பனே ஆசிகள் தந்து தந்து அப்பனே உயர்த்தியும் வைப்பேன் அப்பனே  கவலைகள் இல்லை!!!

எதை என்றும் புரிய புரிய அப்பனே புரியாமல் இருந்தாலும் அப்பனே புரிய வைக்கிறேன். அப்பனே பலமாகவே அப்பனே வாழ்க்கையும் உண்டு. அனைவருக்குமே அப்பனே!!!

ஆனாலும் அப்பனே பின் தரித்திரங்கள் கழித்து தானாக சேருமப்பா அப்பனே எதை என்று கூற கூற  ஆனாலும் அப்பனே அவையெல்லாம் நிச்சயம் அப்பனே என் அருளால்  மாறுமப்பா!!!

அப்பனே  உலகம் அதாவது அழிவினை நோக்கி செல்கின்றது செல்கின்றது  என்றெல்லாம்  அப்பனே பின் செப்பிக் கொண்டே  வருகின்றேன் ஆனாலும் அப்பனே மனிதன்.   எதை என்றும் புரியாமலும் கூட தவித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

ஆனாலும் எதை என்றும் புரிய புரிய ஈசன் சில கஷ்டங்களை வைத்து வைத்து எவை என்றும் அறியாமல் கூட தெரியாமல் கூட அப்பனே நிச்சயம் தன் தலத்திற்கு அழைப்பான்!!!

இதை என்று அறிய அறிய இறைவன்தான் மெய் என்பதை கூட நிச்சயம் அப்பனே இறைவனே புரிய வைப்பான்!!!

எதை என்று அறிய அறிய இறைவன் அப்பனே பிறக்க வைத்தான்!!!  அப்பனே எதை என்று அறிய அறிய அவனே நிர்வகிப்பான் அப்பனே!!! எதை என்றும் புரியப் புரிய அப்பனே வரும் காலங்களில் கஷ்டங்களை கொடுத்து கொடுத்து அப்பனே!!!

எதை என்று புரிய  புரிய பல அழிவுகள் எதை என்று தெரியாமலும் எவை என்றும் உருவாகும் அப்பனே!!! கடல் கொந்தளிக்குமப்பா எதை என்றும் அறிய அறிய வரும் காலங்களில் அப்பனே!!!

அவையெல்லாம் நிச்சயம் தடுத்து நிறுத்துவோம் யாங்களே!!! எதை என்று அறிய அறிய சித்தர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே மூடநம்பிக்கைகளை ஒழிப்பதற்காகவே அப்பனே வந்து வந்து எதை என்று அறிய அறிய மக்களை சில மாற்றங்களை ஏற்படுத்தி அப்பனே!!!

ஆனாலும் அதனுள்ளே அப்பனே மனிதர்கள் எதை என்று அறிய அறிய இறைவன் இல்லை என்று நிலைக்கு வந்து விட்டு அப்பனே பொய்யான வதந்திகளை எதை என்று அறிய அறிய எவை என்றும் புரியாமலும் கூட பரப்புவார்களப்பா!!!!

ஆனாலும்  அப்பனே நிச்சயம் யாங்கள் நிச்சயம் விடுவதில்லை!!!  எவை எதன் மூலம் செயல்படுத்த வேண்டும் என்பதை எல்லாம் உணர்ந்து உணர்ந்து செயல்பட்டு அப்பனே வெற்றிகளை காணச் செய்வோம் அப்பனே எதை என்று அறிய அறிய

யாங்கள் இருக்கின்றோம் அப்பனே கவலைகள் இல்லை!!!

எதை என்று அறிய அறிய அப்பனே ஓர் ஞானி இப்பொழுதும் கூட இங்கு (வைத்யநாத் ஆலயத்தில் ) தங்கி எதை என்று புரிய புரிய அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே உயர்வுகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான். அப்பனே இங்கு வருவோருக்கெல்லாம் எதை என்று அறிய அறிய!!!

அப்பனே அண்ணாமலையில் எவை என்றும் அறிந்தும் கூட பின் தர்மம் ஏந்தி நின்றான் அப்பனே!! எதை என்று அறிய அறிய அப்பனே சிறுவயதில் இருந்தே தர்மம் ஏந்தி ஏந்தி வாழ்ந்து வந்தான் அப்பனே!!!

அறிந்தும் கூட அப்பனே இதனால் பல வழிகளிலும் கூட பல பல வழிகளிலும் (அண்ணாமலையில் )கூட பல மனிதர்கள் வரும்பொழுது இப்படி செய் அப்படி செய் என்றெல்லாம் அப்பனே அவன் சொல்லிக் கொண்டிருப்பான் அப்பனே

ஆனாலும் சில மனிதர்கள் அவந்தன் சொல்வதை ஏற்றனர்!!! ஆனாலும் சில மனிதர்கள் அதனை ஏற்காமல் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே எதை என்று கூட அவந்தனை பைத்தியக்காரன் என்று அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் அங்கு இருக்கும் எதை என்று அறிய அறிய அதாவது அண்ணாமலையில் இருக்கும் பல பல வழிகளிலும் கூட ஈசனுக்கு சேவைகள் செய்வோர் இவந்தனை பைத்தியக்காரன் என்று... இவன் இங்கேயே இருந்தால் மக்களை குழப்பி எதை என்று கூட எவை என்றும் புரிய புரிய எவை என்றும் அறியாமலும் கூட அனைவரையுமே குழப்பி எதை என்று கூட பணத்தைப் பிடுங்கி கொள்வான் என்பதை கூட எதை என்றும் கூட அப்பனே அவர்கள் நிச்சயம் திண்டாடி திண்டாடி பின் அதனால் அவர்கள் இவந்தனை எட்டியும் உதைத்து எதை என்று அறிய அறிய நீ வெளியே செல்!!! என்றெல்லாம்!!!அப்பனே!!

இவந்தன் அப்பனே அழுது எதை என்று அறிய அறிய புலம்பி ஆனாலும் ஈசனும் பார்வதியும் பின் பார்த்துக் கொண்டே இருக்க எதை என்று அறிய அறிய பார்வதி தேவியும்  எதை என்று கூட பின் அதாவது நாம் படைத்த எதை என்று அறிய பிள்ளை இப்படி எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் பக்தர்களுக்கு பக்தர்கள் இப்படி!!!!

தெரியவில்லையே எப்படி பக்தி என்பது

பக்தன் பக்தன் என்று ஆனாலும் இப்படித்தான் அப்பா கலியுகத்தில் பக்தன் பக்தன் என்று பொய் சொல்லி நடித்து எதை என்று கூட பக்தன் யார் எதை என்று அறிய அறிய மெய் பக்தன், பொய் பக்தன் யார்??? என்றெல்லாம் தெரியாமல் வலம் வந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

அவர்களை எல்லாம் நிச்சயம் ஈசனே அப்பனே பொறுத்திருந்து பொறுத்திருந்து அப்பனே பின் கஷ்டங்களை கொடுத்து அப்பனே கடைசியில் பார்த்தால் பக்தனாகவே இல்லாமல் செய்து விடுவான் அப்பனே
எதை என்றும் அறிய அறிய

பக்தி என்பதை கூட சாதாரணமில்லை சாதாரணமில்லை என்பதை எல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டு வருகிறேன் அப்பனே!! அறிந்தும் அறிந்தும் கூட

அதைதன் நிச்சயம் அப்பனே மக்கள் எதை என்றும் புரியப் புரிய அப்பனே ஏனென்றால் அப்பனே எவை என்றும் புரிய புரிய

ஆனாலும் அவ் ஞானிஅழுது புலம்பி கொண்டே எவை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்றும் புரியாமலும் பின் கண்ணனே!!!

எதை என்று அறிய அறிய அவந்தன் நாமமும் கூட!! அதாவது கண்ணா சாமி கண்ணா சாமி என்றெல்லாம் அவனை அழைத்து அழைத்து எதை என்று அறிய அறிய

ஆனாலும் பின் அவந்தனும் சொன்னான்!!!

அப்பா!!!!!! எதை என்று கூட அம்மா எதை என்று அறிய அறிய உங்களையே பின் யான் நினைத்துக் கொண்டிருக்கையில் எதை என்று அறிய அறிய இது எனக்கு வந்த சோதனையா???

யான் எங்கு செல்வது?????

உங்களை விட்டால் எந்தனுக்கு யார்?? இருக்கின்றார் என்று!!!!

ஆனாலும் பின் பார்வதி தேவி கண்ணீர் மல்க எதை என்று அறிய அறிய பின் அதாவது மனித வடிவம் எடுத்து எதை என்றும் புரிய புரிய எதை என்றும் அறியாமலும் கூட பின் பெண் வடிவமாக வந்து எதை என்று அறிய அறிய

மகனே!!!! என்ன??புலம்பல்!!! அறிந்தும் கூட ஏது?எதை என்று அறிய அறிய ஆனாலும் நீயும் சொன்னாய் எதை என்று அறிய அறிய எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் பின் நீயும் பின் சொன்னாயப்பா என்ன?எதை என்று அறிய அறிய மனதில் என்னென்ன தோன்றியது என்பதை எல்லாம் யானும் கேட்டுணர்ந்தேன்!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் உந்தனுக்கு என்ன தேவை?? என்று கூற!!!

அம்மா!!!!!!!! அறிந்தும் அறிந்தும் கூட பார்வதியையும் பின் ஈசனையும் எதை என்று அறிய அறிய பின் தாய் தந்தையாக நினைத்துக் கொண்டிருந்தேன்.

யான் சொல்லிக் கொண்டிருந்ததை அவர்கள் செவியில் கேட்கவில்லையே !!!

உன் செவியில் கேட்டால் நீ என்ன செய்வாய்??? இதை என்று அறிய அறிய பின் நீயும் அதாவது ஈசன் பிச்சை போட்டால் தான் நீயும் பிழைக்க முடியும்!!!!!

(பெண் வடிவம் எடுத்து உருமாறி வந்த பார்வதி தேவியையும் திருவண்ணாமலையில் பிச்சை ஏந்தும் பெண்மணி என்று இந்த ஞானி நினைத்துக் கொண்டு அந்தப் பெண்ணுக்கு இப்படி பதிலுரை தந்தார்)

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் பின் மாயை மறைத்து எதை என்று அறிய அறிய ஆனாலும் அவ் பக்தனுக்கு அனைத்தும் தெரியும்

வந்தது அம்மை எதை என்று அறிய அறிய பின் அதாவது மறைத்து விட்டாள்!!! எதை என்று அறிய அறிய அவந்தன் அறிவை மட்டமாக்கி!!!

(அனைத்தும் தெரிந்த அந்த ஞானிக்கு வந்தது பார்வதி தேவி யான் தான் என்பதை அந்த ஞானிக்கு மாயையை காட்டி நுண்ணறிவை மட்டுப்படுத்தி மறைத்து விட்டார் பார்வதி தேவி)

எதை என்று புரிய  புரிய இதனால் பின் குழந்தாய் கவலைகள் இல்லை அறிந்தும் அறிந்தும் யானும் பின் தவம் செய்து கொண்டே இருக்கின்றேன் பின் ஈசனையும் பார்வதி தேவியையும் காண!!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன தேவை?? 

யான் அம்மையாக இருக்கின்றேன் என்று சொல்ல!!!!!

ஆனாலும் அம்மா!!!!!! அறிந்தும் அறிந்தும் கூட இவ் அனாதையான எதை என்று அறிய அறிய ஒருவனுக்கு அம்மையாக எதை என்று அறிய நீ சொல்கின்றாயே!!!! இது போலத்தான் எதை என்று கூட மனிதர்கள் இருக்க வேண்டும் கலியுகத்தில் இப்படி இருந்தால் தான் வாழ முடியும்.

ஆனால் கலியுகத்தில் அப்படி இருக்க மாட்டார்கள் பொய் பொறாமை எதை என்று கூட பொய் கூறுதல் ஏமாற்றுதல் எதை என்று கூட எவை என்றும் அறிய அறிய ஆண், பெண் ஏமாற்றுதல் எதை என்று அறிய இப்படித்தான் கலியுகத்தில் நடந்து கொண்டிருக்கின்றது

ஆனாலும் அம்மையே அறிந்தும் அறிந்தும் கூட நீயும் இப்படியா என்பதை எல்லாம் அதுவும் கூட கலியுகத்திற்கு தொடர்பு இருக்கின்றது!!! எவை என்று கூட சில நாட்களிலே இதுவும் நடந்ததப்பா!!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!

கேட்டுக்கொண்டே!! கேட்டுக்கொண்டே அப்பனே எதை என்று புரிய புரிய இதனால் இதை நன்குணர்ந்து நன்குணர்ந்து ஆனாலும் பின் எதை என்று கூட

குழந்தாய் என்னதான் வேண்டும்?? என்று கூட!!

ஆனால் அறிவதில்லை தாயே !!! அறிந்தும் கூட பின் அறிந்தும் கூட தாய் தந்தையர் எதை என்று அறிய அறிய பார்த்ததும் இல்லை அறிந்தும் அறிந்தும் !!! ஆனால் ஈசனும் பார்வதியும் அறிந்தும் அறிந்தும் கூட எந்தனுக்கே கூட பின் எவை என்று அறிய அறிய வருவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.

ஆனால் நீயோ எதை என்றும் அறிய அறிய பின் தாயாக ஏற்றுக் கொள்கின்றாயா என்று கேட்டு விட்டாய்!!!

ஆனால் இதையும் கூட அவர்கள் (ஈசன் பார்வதி தேவி) எதை என்று கூட அறிவார்கள்!!!!

உன்னை அவர்கள் அனுப்பியது ஆகவே யான் நினைத்துக் கொள்கின்றேன் என்று எதை என்று அறிய அறிய!!!

அதனால் அம்மையே!! உந்தனுக்கு என்ன தேவை??? அறிந்தும் அறிந்தும் என்னாலும் கூட வழங்க முடியும் என்று பார்வதி தேவியை நோக்கி அவ் கண்ணன் எதை என்று அறிய அறிய கண்ணா சாமி எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய !!

ஆனாலும் அறிந்தும் கூட எதை நோக்கி எதன் அருகில் வருவதற்கு சமங்களாகவே உள்ளது என்பவை எல்லாம் தெரியாமல் தெரியாமல் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின் நலன்களை எடுத்துரைத்து எடுத்துரைத்து இதனால் எதை என்று உணராமலே அப்பனே எதை என்று கூட பின் அவந்தனும் அறிந்தும் கூட எதை என்று கூட

அம்மையே!!! எதை என்று அறிய அறிய பின் இவர்களை காணச் செய்ய வேண்டும்!!! நீயும் பின் தவங்கள் பின் ஏற்றுக்கொண்டு நிற்கின்றாய் என்றெல்லாம் தாயே ஒரு எதை என்று கூட யானும் என்னால் அறிந்தும் அறிந்தும் கூட கேட்க முடியவில்லை தாயே!!!

அனைவரும் தாயிடத்தும் தந்தையிடத்தும் கேட்பார்கள் அவை வேண்டும் இவை வேண்டும் என்று

ஆனால் யானும் கேட்டுக் கொண்டிருந்தேன் அறிந்தும் அறிந்தும் கூட பின் அதாவது தாயும் தந்தையும் ஆக ஈசனையும் பார்வதியையும் நினைத்து ஆனாலும் பின் இப்பொழுது கேட்கின்றேன் தாயாக உன்னை நினைத்து எதை என்று அறிய அறிய!!!

நீயும் கேட்டு விட்டாய் எதை என்று அறிய அறிய யான் என்ன செய்ய வேண்டும்??? இங்கே தர்மம் ஏந்தி நின்றேன் அனைவருக்கும் கொடுத்து விட்டேன் யான் இனி என்ன செய்ய???? என்றெல்லாம் நிச்சயம்.

ஆனாலும் நிச்சயம் வந்தது பார்வதி தேவி என்றே!!!

 எதை என்று அறிய அறிய இவனுக்கு தெரியும்!!! ஆனாலும் பின் பார்வதி தேவி இவன் அறிவை மயக்கி செய்துவிட்டாள்!! அறிந்து அறிந்து!!

ஆனாலும் பின் பார்வதி தேவி சொன்னாள் !!எதை என்று அறிய அறிய!!
அப்பா!!! அறிந்தும் கூட ஓரிடம் இருக்கின்றது எதை என்று அறிய அறிய அங்கு சென்று பின் எவை என்று அறிய அறிய மூட நம்பிக்கையில் ஒளிந்து இருப்பவர்கள் எல்லாம் எதை என்று அறிய அறிய அங்கு வருவார்கள்!! எதை என்று கூட பைத்தியக்காரர்களும் எதை என்று அறிய அறிய

பல வழிகளிலும் கூட பின் அதாவது கெட்டது எதை என்று அறிய அறிய தானாக வே இக்கலியுகத்தில் வந்து விடும் அதனால் நீ அங்கு செல்க!!!!

எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஈசனும் பார்வதியும் அழகாகவே அங்கு சக்திகளை கொடுப்பார்கள்.அவ் சக்தியை வைத்து கொண்டு பல நபர்களை மாற்று!!!

எதை என்று அறிய அறிய அங்கு வருபவர்களுக்கு எல்லாம் பல வழிகளில் கூட பின் எதை என்று அறிய அறிய துன்பத்தோடு வந்தாலும் பின் இன்பத்தை கொடுத்து எதை என்று அறிய அறிய சில மாறுதல்களை ஏற்படுத்தி எதை என்றும் புரியாமல் எவை என்றும் அறியாமல் இருந்தாலும் நற்செயல்கள் எதை என்று புரிய மன குழப்பங்களை நீக்கி எதை என்று அறிய அறிய பின் எவை என்றும் அறியாமல் கூட பல தரித்திரங்களை நீக்கி எவை என்று அறிய அறிய அங்கு செய்து கொண்டே வா!!!

நிச்சயம் ஈசனும் பார்வதியும் அங்கேயே காட்சியளிப்பார்கள் என்று!!

இதனால் தாயே தாயே எதை என்றும் இப்படியும் எதை என்று அறிய அறிய என் தாய் தந்தையரை பார்க்க இப்படியும் எதை என்று கூட பின் வழிகளா!!! என்றெல்லாம் பின் பார்த்து எதை என்று அறிய அறிய

ஆனால் புரிந்து கொண்டான் எதை என்று அறிய அறிய....தாயே!!!!!!!!!!!!!!!!!!!!!! என்று!!! எதை என்று அறிய அறிய தாயே தாயே என்று பின் பார்வதி தேவி அதாவது இவந்தனுக்கு நினைவில் வந்துவிட்டது எதை என்று அறிய அறிய பின் திடீரென்று மறைந்தும் விட்டாள்!!!!

தாயே தாயே என்று பின் எவை என்றும் புரிய புதிய பின் எதை என்றும் அறிய அறிய அங்கும் இங்கும் அலைந்தான் தாயே தாயே எதை என்று அறிய இத்தனை நாட்கள் காத்திருந்தேன்!!! ஆனாலும் நீ வந்திருந்தாய் எவை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் அறிந்தும் அறிந்தும் கூட இப்பொழுது வந்து விட்டாயே

ஆனாலும் பின் எதை என்று கூட... அதாவது பின் மறைத்து விட்டதே!!என் கண் எதை என்று கூட என் அறிவு!!! மங்கி விட்டதே!!! என்றெல்லாம்!!

ஆனாலும் தேடினான்!! தேடினான்!! அப்பப்பா!!!!
எதை என்று அறிய அறிய!!!

கிரிவலப் பாதையில் எதை என்று அறிய அறிய ஓடினான் ஓடினான் எதை என்று அறிய அங்கும் இங்கும் எதை என்று அறிய அறிய

இதே போலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய கிரிவலப் பாதையில் அங்கெல்லாம் ஓடி ஓடி பின் எதை என்று அறிய அறிய தேடினான் தேடினான்!!!

ஆனாலும் பாவங்கள் அங்கேயே தொலைந்து விட்டது எதை என்று அறிய அறிய!!!!

பின் எதை என்று அறிய அறிய அப்பப்பா!!! எதை என்று அறிய அறிய

"""""""""""""""அதாவது ஞானியாக இருந்தாலும் பாவங்கள் சேருமப்பா!!!!!

எவை என்று அறிய அறிய ஆனால் நீங்கள் மனிதர்களோ எதை என்று அறிய அறிய அப்பனே எப்படியப்பா??????

(ஞானிகளுக்கே பாவங்கள் சேர்கின்ற பொழுது மனிதர்களாகிய உங்களுக்கு எப்படியப்பா ??? பாவங்கள் இல்லாமல் போகும்??)

அதனால் அப்பனே ஆனாலும் எதை என்று அறிய அறிய பின் ஞானிக்கும் பாவங்கள் எதையென்று அறிய அறிய பின் கர்மம் எதை என்று அறிய அறிய அப்பனே நீங்கலாக பின் எதை என்று அறிய அறிய பின் வரங்களும் எதை என்று கூட தானாகவே வந்து விடுமப்பா!!!! எதை என்றும் புரிய புரிய!!!

இதனால் அப்பனே பின் ஓடியும் பின் ஆனாலும் தேடினான் ஆனாலும் ஞாபகத்தில் எதை என்று அறிய அறிய பார்வதி தேவி ஆனாலும்  வந்தது பார்வதி தேவி என்று நினைத்துக் கொண்டு அங்கு செல்வோம் என்றெல்லாம் அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரியாமல் கூட எதை என்று அறிய அறிய

அப்பனே  பின் அப்படியே ஓடி வந்தானப்பா எதை என்று அறிய அறிய வரும் வழியெல்லாம் அப்பனே பின் (திரு)தலங்கள்!!! எதை என்று அறிய அறிய அங்கிருந்து பார்த்தால் அவன் நடை வழியில்

(திருவண்ணாமலையிலிருந்து நேர்கோடாக வைத்தியநாத் வரை அவர் நடந்து கடந்து வந்த திருத்தலங்கள்)

எதை என்று அறிய அறிய புரிந்து அப்பனே எதை என்று அறிய அறிய ஆறுகளாக ஆறுகளாக கடந்து ஓடி வந்தான் அப்பா அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய நேராகவே ஓடி வந்தானப்பா எதை என்றும் புரிய புரிய அப்பனே!!!

அதாவது கற்களிலும் முட்களிலும் எதை என்று கூட எதை என்று அறிய அறிய ஓடி வந்தான் அப்பா எதை என்று அறிய அறிய இப்பொழுது கூட அவன் ஓடிவந்த வழி எல்லாம் கூட பின் ஸ்தல விருட்சமாகவே காணப்படுகின்றதப்பா!!!!

அங்கெல்லாம் செல்பவர்களுக்கு சில பாவங்கள் தொலையுமப்பா!!!

அப்பனே   அறிய அறிய எவை என்றும் புரிய  புரிய இதுதான் அப்பா மனிதனுக்கு புத்திகள் இல்லை அப்பனே புத்திகளை வைத்துக் கொண்டும் அப்பனே வாழ தெரியவில்லை!!!!

புத்திகளை செயல்படுத்தவே அறிந்தும் அறிந்தும் கூடயாங்கள் வழிகளை காட்டிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே இதைத்தான் எதை என்று அறிய அறிய மற்றவர்கள் நினைத்துக் கொள்ளலாம் ஆனாலும் அப்பனே பொய் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

அவந்தனும் இங்கு வந்து விட்டான் அப்பனே இங்கு வந்து அமைதியாக உட்கார்ந்தான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய ஆனாலும் தாய் தந்தை எதை என்றும் புரிய  புரிய இங்கு வரச் சொன்னார்கள் இங்கு வந்து விட்டேன்!!! இப்பொழுது இங்கு என்ன செய்வது??

எதை என்று அறிய அறிய யாரும் என்று தெரியாமலும் கூட அறிந்தும் அறிந்தும் கூட சரி பார்ப்போம் என்றெல்லாம் நிச்சயம் அதாவது எதை என்று அறிய அறிய... பின் வாசலில் அதாவது தாய் வாசலில் நின்று விட்டான்!!! அறிந்தும் அறிந்தும்!!
(பார்வதி தேவி தாயார் சன்னதியில் வாசலில்)

தாயே!!!!! அறிந்தும் நீ தான் வர சொன்னாய்!!! உன்னிடத்தில் வந்து விட்டேன்!!!

பின் இங்கு யாரையுமே தெரியவில்லை!!! யான் என்ன செய்வது!???? ஒரே காடாகவே இருக்கின்றது எதை என்று அறிய அறிய என்றெல்லாம்!!!

ஆனாலும் சரி என்றெல்லாம் பின் அமர்ந்து அம்மா அம்மா அம்மா அம்மா என்றெல்லாம் பின் எதை என்று அறிய அறிய நினைத்துக் கொண்டே பார்வதி தேவியை எதை என்று அறிய அறிய ஆனாலும் உணர்ந்து கொண்டான் அறிந்தும் அறிந்தும் கூட

பின் எதை என்று அறிய அறிய அதாவது பார்வதி தேவி எதை என்று கூட இவந்தனை மீண்டும் இவந்தன் அறிவை மங்க வைத்து மீண்டும் ஒரூ கிழவி ரூபத்தில் வந்துவிட்டாள் அறிந்தும் கூட!!!

ஏனப்பா??? இது எவை என்று அறிய அறிய எதை என்று கூட இங்கு இருந்தால் இரவெல்லாம் இங்கு நீ தங்கினால் எதை என்று புரிய புரிய பின் எதை என்று அறிய அறிய சில சில விலங்குகள் இருக்கின்றது உன்னை கொன்று விடும் என்று!!

ஆனாலும் இவந்தன் பரவாயில்லை எதை என்று கூட!!!

என் அம்மையே அங்கிருந்து எதை என்று கூட அதாவது அண்ணாமலையிலிருந்து இங்கு அறிந்தும் அறிந்தும் கூட அனுப்பி வைத்து விட்டாள்!!!!

அவ் அம்மை என்னை காப்பாற்றினால் காப்பாற்றட்டும்!!!

இல்லையேல் விலங்குகளுக்காவது பின் உணவாக யான் அறிந்து அறிந்து எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பரவாயில்லை என்றெல்லாம்!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் பார்வதி தேவியை கூட அம்மா அம்மா என்றெல்லாம் நினைத்துக் கொண்டு எதை என்று புரிய புரிய 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட நிச்சயம் அறிந்தும் கூட பின் அதாவது சிங்கம் ஒன்று அறிந்தும் கூட பின் வந்துவிட்டது இவந்தனை கொல்வதற்காக!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அறிந்தும் எதை என்று கூட இவ் ஞானி எதை என்று புரிய புரிய பின் ஆனாலும்

அவ் சிங்கத்தைப் பார்த்து!!!

வா !!!!! என்னை கொன்றுவிடு!!! பரவாயில்லை!!! எதை என்று கூட இவ் அம்மையை அதாவது நினைத்துக் கொண்டிருந்தேன் என்றெல்லாம் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய இதனால் அறிந்தும் அறிந்தும் கூட பின் ஆனாலும் அருகில் சிங்கம் வந்து விட்டது

ஆனாலும் எதை என்று கூட பார்வதி தேவியோ எழுந்து நின்றாள்!!!! விஸ்வரூபமாக எதை என்று கூட சூலத்தோடு!!!! 

எதை என்று கூட சிங்கம் பயந்து ஓடியது!!!

அப்பப்பா அறிந்தும் கூட அப்பொழுது புரிந்து கொண்டான்!!!!

தேவியே!!!! அறிந்தும் கூட அம்மா!! அறிந்தும் கூட அதாவது இவ் குழந்தைக்காக வந்தாயே எதை என்றும் புரிய புரிய புரிய என்றெல்லாம்!!

இதனால் ஒரு சக்தி ஒன்றை எதை என்று கூட அவ் ஞானியிடம் கொடுத்து எதை என்றும் அறிய அறிய இதனால் பத்திரமாக எதை என்று அறிய அறிய எதை என்று புரிய புரிய ஒரு சப்தம்!!!

மீண்டும் அங்கே சென்று விட்டாள்!!! எதை என்றும் அறிய அறிய அதாவது அறிந்தும் கூட.... இதனால் தான் அப்பனே சில பயங்கள் எதை என்று கூட மர்ம பயங்கள் எதை என்று அறிய அறிய மனிதனுக்கு தானாகவே வருவது எதை என்று அறிய அறிய குழப்பங்கள் பைத்திய நிலை வரும் காலங்களில் வரும் அப்பா கலியுகத்தில் அப்பனே!!!!

எதை என்று கூட இவ்அம்மையிடம் வந்தால் அப்பனே நிச்சயம் அவ்சக்திகளை கொடுத்துவிட்டு அப்பனே பயங்கள் நீங்குமப்பா!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே


ஓடோடி அப்பனே இறைவனை தேட வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய பல சித்தர்களும் அப்பனே சொல்லிவிட்டார்கள் அப்பனே... ஓடோடி திருமணத்திற்காகவும் ஓடோடி பெண்ணை பார்க்கின்றார்கள் அப்பனே அப்பனே தொழிலுக்காக ஓடோடி செய்கின்றார்கள் அப்பனே ஓடோடி பணத்தை சேர்க்கின்றார்கள் அப்பனே

இதே போலத்தான் அப்பனே ஓடோடி இறைவனை தேட வேண்டும் என்பதற்காகவே இறைவன் அங்கும் இங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே மலைகளிலும் காடுகளிலும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய நின்றானப்பா !!!

அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!
புரியாவிடில் அப்பனே கஷ்டங்கள் தானப்பா கஷ்டங்கள் தானப்பா!!!

அதனால் தான் அப்பனே துன்பங்கள் இறைவனை நெருங்க நெருங்க வந்து கொண்டே இருக்கும் என்றெல்லாம் மனிதன் பின் எடுத்துக் கொண்டே வருகின்றான் அப்பனே

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எதை என்று புரிய புரிய எவை என்றும் அறியாமலும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே திரிய வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே திரிந்தும் புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே இதுதான் அப்பனே எவை என்று அறிய அறிய அன்பும் அரவணைப்பும் அப்பனே இறைவனிடத்தில் அப்பனே இறைவனை தேட தேட அப்பனே நிச்சயம் புகழோங்கும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அனைத்தும் கிட்டும் எதை என்று அறிய அறிய!!! நிச்சயமாக அதேபோலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய நாடும் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய எங்கெல்லாம் பின் பணத்திற்காக அலைகின்றீர்கள் பின் பணத்திற்காக அப்பனே ஓடி ஓடி அப்பனே ஓர் இடத்தில் எதை என்று கூட பின் தொழிலும் எதை என்று அறிய அறிய நல்படியாகவே கிடைத்து பின் பல பணங்களை சம்பாதிக்கின்றீர்கள் அல்லவா

அப்பனே அதேபோலத்தான் அப்பனே இறைவனை தேடி எங்கும் எங்கும் அங்கும் இங்கும் தேடி காடும் மலைகளிலும் எதை என்றும் புரிய ப புரிய அப்பனே பின் தேடி தேடி அலைந்தால் அப்பனே நிச்சயம் பக்தி இறைவனை பின் காணலாம்!!! எதை என்று அறிய அறிய இறைவனும் கண்களுக்கு தெரிவானப்பா!!!

எதை என்று கூட அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இறை பக்திகள் கிடைத்துவிட்டால் அப்பனே இறைவன் எதை என்று கூட  கண்களுக்கு தெரிந்து விட்டால் அப்பனே உயர்ந்த லாபம் எதை என்று அறிய அறிய அனைத்தும் நடக்கும் அப்பா

 இது சத்தியமப்பா!!!

அறிந்தும் உண்மைதனை எதை என்றும் அறிய அறிய ஆனால் உணரவில்லையே!!!

அப்பனே அதனால் உணரவே அப்பனே எதை என்று புரிய புரிய உணர வைக்கவே அப்பனே மனிதர்களுக்கு உணர வைப்போம் அப்படி உணராவிடில் அப்பனே அடிப்போம் இப்பொழுதே சொல்லிவிட்டோம் அப்பனே

எதை என்று அறிய அறிய நல் முறையாகவே அப்பனே இதனால் பல சக்திகள் அவ் ஞானிக்கு கொடுக்கப்பட்டது!!!

அப்பனே இப்பொழுது கூட இங்கு இருந்து இங்கு வருபவர்களுக்கு எல்லாம் அப்பனே எதை என்று கூட நோய் நொடிகளை எல்லாம் தீர்த்து தீர்த்து அப்பனே உயர்த்திக் கொண்டே வருகின்றானப்பா!! உயர்த்திக் கொண்டே வருகின்றானப்பா!!

எதை என்று புரிய புரிய அப்பனே இதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய சில பைத்தியங்களும் சில மன குழப்பங்களும் எதை என்று அறிய அறிய தானாகவே இக்கலி யுகத்தில் வரும் அப்பா

இதனால் அப்பனே அங்கங்கு எதை என்று அறிய அறிய சக்திகள் இருக்குதப்பா!!! எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே சில மூடர்கள் எதை என்று அறிய அறிய அங்கும் இங்கும் திரிய முடியாது என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் பணத்திற்காக அங்கும் இங்கும் திரிகின்றாய் அல்லவா முட்டாள் என்பேன் மனிதனை எதை என்று கூட அறிவில்லாதவன் என்பேன் அப்பனே அறிவை வைத்து கொண்டு எதை என்று புரிய புரிய அப்பனே

இதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே சித்தர்கள் யார் என்றே தெரிவதில்லை அப்பனே

சித்தர்களோடே விளையாடுகின்றார்கள் அப்பனே!!!

எப்படியப்பா எதை என்று கூட யாங்கள் தர்மத்திற்காகவே போராடிக் கொண்டிருக்கையில் அப்பனே பின் எதை என்று கூட எங்களை வைத்து தர்மம் இல்லாமலே செய்கின்றான் அப்பனே எதை என்று கூட அப்பனே

அதனால் யாங்களே சில கஷ்டங்களை கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

திருந்திய பாடில்லை!!!
அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய இதனால்தான் அப்பனே எதை என்று அறிய அறிய இன்னும் அழிவுகள் எதை என்று அறிய அறிய இயற்கை சீற்றங்கள் எதை என்று மழைகள் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இன்னும் அடிதடிகள் எவை என்று அறிய அறிய என்றெல்லாம் நிச்சயம் ஈசனே செய்ய வைப்பான் அப்பனே!!!

மனிதன் திருந்தினால் வாழ்க்கை உண்டு!!!

இல்லாவிடில் அப்பனே எதை என்று அறிய அப்பனே பாவம் புண்ணியம் எதை என்று அறிய அறிய மனிதன் பார்ப்பதில்லையே அப்பனே

எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அதனால் இரக்கம் எங்கு சென்று விட்டது?????????? அப்பனே!!!

 அடி கொடுத்தால் தான் இரக்கம் உள்ளது!!!

அடி கொடுக்காவிடில் இரக்கமில்லையே அப்பனே!!

எதை என்றும் புரிய புரிய இதனால் அப்பனே அவ் ஞானி எதை என்று அறிய அறிய ஈசனையும் பார்வதி தேவியையும் கண்டுகொண்டு அப்பனே வருவோருக்கெல்லாம் அப்பனே மறைமுகமாக ஆசிகள் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே

அவை இவை என்றெல்லாம் அப்பனே அனைவருக்கும் வெற்றிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கின்றது அப்பனே!!!

ஆனால் ஏதோ ஒரு சிலர் அவை இவை என்றெல்லாம் அப்பனே பின் கிரகங்கள் அவை இவை பரிகாரங்கள்!!என்றெல்லாம் அப்பனே

அப்பனே எதை என்று அறிய அறிய சொல்லிவிட்டேன் அப்பனே  தேடி தேடி அலைய வேண்டும் அப்பனே இன்னும் இன்னும் வரும் காலங்களில் எங்கெல்லாம் தேடி அடைய வேண்டும் என்பதை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே

நலன்கள் ஆசிகள் அப்பனே வெற்றிகளும் உண்டு அவ் ஞானியின் அருள் பரிபூரணமாக கிடைத்தும் விட்டது அப்பனே எதை என்று அறிய அறிய அவ் ஞானி எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய எதனை எல்லாம் நீக்குகின்றான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எங்கெல்லாம் பல பரிசுத்த ஆத்மாக்கள் உயிரோடே இருக்கின்றது என்பதெல்லாம் அப்பனே விரைவில் தெரிவிக்கின்றேன் அப்பனே அனைவரும் செல்க!!! தெய்வ அருள் அப்பனே புரிந்து அப்பனே வெற்றிகள் காணலாம் இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அப்பனே நலங்களாக இன்னும் ரகசியங்கள் எல்லாம் சொல்கின்றேன் அப்பனே தெரிந்து கொண்டு வாழ்க அப்பனே வளர்க அப்பனே

எதை என்று அறிய அறிய நலன்கள் ஆசிகளப்பா!!! ஆசிகள் கோடிகளப்பா!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

கோயில் முகவரி

வைத்யநாத் பாபா பைத்யநாத் மந்திர்
சிவகங்கா முஹல்லா, தியோகர், ஜார்கண்ட் 814112

வைத்தியநாதர் கோயில், தேவ்கர் அல்லது வைத்தியநாத் கோவில் (Baidyanath Temple) என்பது இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தின் சந்தல் பர்கனா பிரிவுக்குட்பட்ட தேவ்கர் மாவட்டத்தில் உள்ள தேவ்கர் என்னும் நகரத்தில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில் ஆகும். இது சிவனுக்காக அமைக்கப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்று.


வைத்தியநாதர் கோவிலில் இருந்து 7 கிலோமீட்டர் தொலைவிலுள்ள யசிதி தொடருந்து நிலையம் கோவிலுக்கு அண்மையிலுள்ள தொடருந்து நிலையம் ஆகும். இது கவுராவிலிருந்து பட்னா செல்லும் வழியில் 311 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

சாதாரண நாட்களில் காலை 4 மணிக்குக் கோவில் நடை திறக்கப்படும். 4 மணிமுதல் 5.30 வரையான நேரத்தில் கோவில் பிரதம அர்ச்சகர் இறைவனுக்கு பதினாறு வகை உபசாரங்ககளையும் செய்வார். அதன் பின் புனித நீரால் அபிடேகம் செய்வர். பின்னர் அடியவர்களும் புனித நீரால் அபிடேகம் செய்து வில்வ இலைகளால் அர்ச்சித்து வணங்குவர். இந்தப் பூசைகள் பிற்பகல் 3.30 வரை நடைபெறும். பின்னர் நடை சாத்தப்பட்டு மீண்டும் மாலை 6 மணிக்கு நடை திறக்கப்படும். பின்னர் சிருங்கார பூசை நடைபெறும். சாதாரண நாட்களில் இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படும். எனினும் ஆவணி மாதத்தில் கோவில் அதிகநேரம் திறக்கப்படும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!