​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 29 August 2021

சித்தன் அருள் - 1029 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் அருள் வாக்கில், ஐராவதீஸ்வரர் கோவில் பற்றிய தகவல் வந்தவுடன், நிறைய அன்பர்கள் கோவில் நிர்வாக தொடர்பில் யாரேனும் இருந்தால் தெரிவிக்கும்படி கேட்டிருந்தனர்.

திரு.அருண்குமார் ஜெயபாலன் என்கிற அகத்தியர் அடியவர், இக்கோவில் பற்றிய தகவல்களை புகைப்படமாக அனுப்பி  தந்துள்ளார். அவற்றை கீழே தருகிறேன். மேலும் விபரங்கள் தெரிந்தவர்கள் தந்தால், இங்கு வெளியிடப்படும்.









ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

Thursday 26 August 2021

சித்தன் அருள் - 1028 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம்!




24/8/2021 அன்று ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் பற்றிய குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு.

வாக்குரைத்த ஸ்தலம். ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஐராவதேஸ்வரர் ஆலயம் . பள்ளசூளகரை. மல்லாபுரம், ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி.

ஆதி சித்தனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்!

நல் முறையாக இவ்வாலயத்தில் பலப்பல சித்துக்கள் செய்தனர் முன் ஜென்மமதிலே முன் ஜென்மம் அதில் சித்திக்கள் செய்யும்பொழுது பின் ராஜராஜ சோழன் பின் பின் ராஜாங்கத்தை ஆள நினைக்கும் பொழுது தோல்வியுற்றான் என்பேன். ஆனாலும் அவன்தனை(ராஜ ராஜ சோழன்) கொல்ல மக்கள் பலப்பல வழிகளில் இருந்தார்கள் என்பேன். ஆனாலும் அதனைப் பின் நினைக்காமல் அங்கிருந்து இங்கு ஓடோடி வந்தான் ஆனாலும் இங்கு வந்து தவம் மேற்கொண்டான் என்பேன். 

மேற்கொள்ள மேற்கொள்ள பின் அவன்தனக்கு சக்திகளும் கிடைத்தது என்பேன்.

கிடைத்தது என்பேன் அதனால் மென்மேலும் மேலும் உயர்கின்ற அளவிற்கு எவ்வளவு உயரங்கள் உயர வேண்டுமோ பின் நல் முறைகள் ஆகவே பின் பயந்து ஒளிந்து தவத்தை மேற்கொண்டான் ராஜராஜ சோழன்.

ஆனாலும் நல் முறைகளாக இறைவனே நேரடியாக அவன்தனக்கு காட்சி தந்த இடம் இவ்விடம் .

ஆனாலும் இவை என்று யாருக்கும் தெரியாத சூட்சுமத்தை இப்பொழுது செப்புகின்றேன்.

இங்கு ராஜராஜசோழனின் பின் நல் முறைகளாகவே பின் கருவூராரும் வந்து இங்கு நல் முறைகள் ஆகவே வாழ்ந்து வந்தான் என்பேன்.

பலகோடி நூற்றாண்டுகளில் எவ்வாறு என்பதையும் மெய்சிலிர்த்து நல் முறையாக நல் முறைகள் ஆகவே பலருக்கும் தெரியாத விஷயம் இங்கே இப்பொழுதும் கூட கருவூராரும் வலம் வந்து தான்     கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் இதைப் பற்றி யாருக்கும் தெரியவில்லை என்பேன். இத்தலத்தை பற்றியும் தெரியாமல் போனது . ஆனாலும் பலப்பல யுகங்களில் வாழ்ந்த பெரிய பெரிய அரசர்களும் இங்கு வந்து வழிபட்டு சென்றிருக்கின்றனர் என்பேன்.

நல் முறைகளாக பல சித்தர்களும்   ரிஷிமார்களும் இங்கு வந்து நல் முறைகள் ஆகவே தங்கி பலபல வித்தைகளும் இப்பொழுது கூட பின் எவ்வாறு நலன்கள் ஏற்பட இப்பூமி ஒரு மலைப்பிரதேச பூமி என்பேன்.

நல் முறைகள் ஆகவே இப்பொழுதும் இதனடியில் பலப்பல உண்மைகள் தெரிவதற்கும் எவ்வாறு என்பதை உணர்ந்து பல பாம்பின் கால் பாம்பறியும் என்பது போல் பாம்புகளும் உலா வந்து கொண்டுதான் இருக்கின்றது.

இதனால் சக்தி வாய்ந்த இத்திருத்தலத்தை  யாருக்கும் தெரியாமல் போனது.

இங்கு வந்து அமர்ந்து தியானங்கள் செய்துவிட்டால் நினைத்ததை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்பேன்.

நல் முறைகள் ஆகவே இங்கு அமர்ந்து நல் முறைகள் ஆகவே தியானங்கள் செய்ய இறைவன் தோன்றி முன்னாளில் எவ்வாறு என்பதை நினைக்கும் பொழுது பின்பும் இப்பொழுது பின் தஞ்சை கோயில் திருத்தலத்தைப் பற்றி உண்மைகளாக எடுத்துரைக்க என்பதையும் கூட இங்கு வந்து சரணடைந்து கர்மாவை நீக்கி பின் ராஜராஜ சோழன் தஞ்சை திருக்கோயிலை கட்ட ஆரம்பித்தான் என்பேன்.

நல் முறைகள் ஆகவே இங்கு வந்து வழிபட்டு செல்வோர் அப்பனே சிறிது சிறிதாக கர்மத்தை போக்கிக் கொள்வார்கள் என்பேன்.

அனைத்து சித்தர்களின் ஆசிகள்  கிடைக்கும் என்பேன்.

யானும்(அகத்தியர்) இங்கு வந்த பல முறை தங்கி சென்று இருக்கின்றேன் என்பேன்.

நல் முறைகள் ஆகவே இன்றளவும் கூட பின் நல் முறைகள் ஆகவே கருவூரான் இங்கு இருக்கும் பொழுது அவன்தனக்கு பல சேவைகள் செய்தான். பின் திவ்ய முனிசாமி என்பவன். இவன் தன் நல் முறைகள் ஆகவே இவனும் கருவூராரின் பல வித்தைகளை கற்றுக் கொண்டான் என்பேன் இதனால் இவனும் ஒரு சீடன் ஆகவே மாறிவிட்டான் என்பேன். (இவரின் ஜீவசமாதி இந்த ஆலயத்தில் அமைந்துள்ளது )

நல் முறைகள் ஆகவே இவையென்றும் கூற பின் எவ்வாறு என்பதையும் கூட ஐவருக்கும் (பஞ்ச பாண்டவர்)  சாபம் நிவர்த்தி ஸ்தலம் என்பேன் இத்தலம்.

இதனால் இத்திருத்தலத்தை பின் நல் முறைகளாக அவர்களும் சிலசில  விஷயங்களில் இதனையும் ஏற்று செய்தனர் என்பேன் அதனால்தான் இத்திருத்தலத்தை ஐதீஸ்வரர் என்று அழைக்கப்பட்டது.

நல் முறையாக அவர்களின் கர்மாவும் நீங்கி சென்றுவிட்டார்கள் எவ்வாறு என்பது கூட இங்கு வந்து நல் முறைகள் ஆகவே நிச்சயமாய் இங்கு வருபவர்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பல கர்மாக்களை நிச்சயம் இங்கு விலக்கலாம் என்பேன்.

சித்தர்களின் ஆசி பெற்ற பூமி இது ஆனாலும் எவை எவை என்று உண்மைப் பொருள் எவை என்று தெரியாமலே மனிதன் சுற்றி வருகின்றான் என்பேன். அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் இனிமேலும் வரும் காலங்களில் துன்பங்கள் ஏற்படும் பொழுது, பின் அப்பனே மனிதனுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கூட தெரியாமல் போய்விடும். அப்பொழுது இத்திருத்தலத்தை நாடி வந்தால் சில சில உண்மைகள் தென்பட்டு பின் ஆசீர்வாதங்களும் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே கொடுக்கப்பட்டு அனைத்தும் நிறைவேறும் அனைத்து கர்மாக்களும் அழிக்க அழிக்க அழிந்து கொண்டே இருக்கும் என்பேன்.

நல் முறைகள் ஆகவே உயர்ந்த இடத்திற்குச் செல்லலாம். நினைத்தது நினைத்தவாறே பெற்றுக்கொள்ளலாம் என்பேன் ஆனாலும் தடை தாமதங்கள் சிறிது சிறிது நின்ற பின்தான் செய்வான், நல் முறைகள் ஆகவே இவ் ஈசன்.

எதனால் என்பதையும் கூட சிறிது சிறிதாக முதலில் கர்மத்தை நீக்குவான் என்பேன்.

நீக்கப்பட்டு நல் முறைகள் ஆகவே அனைத்தும் செய்வான் என்பேன்.

இத்திருத்தலத்தை பற்றி நல் முறைகள் ஆகவே பல யுகங்களில் எவ்வாறு என்பதையும் கூட நிர்ணயிக்கும் பொழுது அழிந்து அழிந்து வருகின்றது. கலியுகத்திலும் மீண்டு எழும் என்பேன் இத்திருத்தலம்.

நல் முறைகளாக இதற்கு யான்(அகத்தியர்) நல் முறைகள் ஆகவே முயற்சிப்பேன் என்பேன்.

நல் முறைகளாகவே இன்னும் சமநிலைக்கு இவ்வாறு வரும் திருத்தலங்களை பற்றியும் இன்னும் சொல்கின்றேன்.

அங்கு சென்று பின் வழிபட்டு வர பின் நலன்கள் ஆகும் இதுதான் அப்பனே பரிகாரமாக யான் நல் முறைகளாக மக்களுக்கு இன்னும் பல சித்தர்கள் தெரியப்படுத்துவார்கள் என்பேன்.

தெரியாத இடங்கள் பல என்பேன்.

ஆனாலும் அங்கு சென்று சென்று மக்கள் எவ்வாறு என்பதையும் கூட உண்மை நிலை தெரியாமலே வணங்கிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் பல சூட்சமங்கள் தெரிவித்து அங்கு சென்று கலியுகத்தில் நல் முறையாக கர்மங்களை நீக்கி வாழுவது எப்படி என்பதையும் கூட வருங்காலங்களில் சொல்லிக் கொண்டே வருகின்றேன்.

அப்பனே நல் முறைகளாக இதை ஏற்றுக்கொண்டு அனைவரும் நல் முறைகளாக ஒழுக்க சீலராக வாழுங்கள் என்பேன் இவ்வாறு வாழ்ந்து விட்டாலே போதுமானது. இறைவன் நம்மிடையே இருந்து கொள்வான் எப்பொழுதும் கூட நல் முறைகள் ஆகவே.

இதனால் தான் யான் நல் முறைகள் ஆகவே யானும் இம்முயற்சியை நிச்சயம் எடுத்து நல் முறைகள் ஆகவே இவ்வாலயம் எவ்வாறு அழிந்தது என்பதை கூட தெரியாமல் போய்விட்டது. ஆனாலும் கலியுகத்தில் கலியும் முற்றும் எவ்வாறு என்பதையும் கூட, பின் நல்லவைகள் எங்கெங்கு இருக்கின்றதோ அதை அதையெல்லாம் கலியவன் (கலிபுருஷன்) பின் தடுத்துக் கொண்டே இருப்பான். மக்கள் செல்ல அனுமதிக்க மாட்டான் அதனால் தான் இன்னும் சில நல் முறைகளாக திருத்தலங்கள் பற்றி அங்காங்கே யான் தெரிவிக்கின்றேன்.

ஆங்காங்கே சென்று கர்மத்தை நீக்கி  நல் முறைகள் ஆகவே நல் முறைகளாக மோட்சத்தை பெற்றுக்கொள்ளுங்கள். இதுதானப்பா உண்மை.

மனிதனுக்கு வரவர புத்திகள் வராது. அறிவுகள் அழிந்துபோகும் பின் ஞானப் பாதைக்கு செல்லமுடியாது என்பேன். ஏனென்றால் கலியுகத்தில் எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகளும் பெற்று திரும்பவும் கீழே இறங்கி விடுவான் எதனால் என்பதையும் கூட மெய்சிலிர்த்து பார்க்கும் பொழுது இன்னும் திருத்தலங்கள் அழிந்து கொண்டுதான் இருக்கின்றது அதனையே மனிதனால் பின் நல் முறைபடுத்தவில்லை. பின் எவை என்று கூற எதனை எதனையோ திரும்பவும் திரும்பவும் வந்து பின் திருத்தலங்களை(புதிய கோயில்கள்)  உருவாக்குகின்றான்.

ஏன்? உருவாக்குகின்றான்?

அதன்மூலம் வருவாய் ஈட்டி அவன் தன் பிள்ளைகளுக்கு பின் பின் எவ்வாறு என்பதை உணர்ந்து இதனையே செய்துகொண்டு இருக்க அவன் தனக்கு எவ்வாறு லாபம் லாபங்களாக புண்ணியங்கள் சேரும்???

ஆனால் சில திருத்தலத்தை பற்றியும் பலமாக உரைக்கின்றேன் வரும் காலங்களில் நல் முறைகள் ஆகவே.

பல திருத்தலங்கள் பல அதிசயங்கள். பின் பல யுகத்திலும் வாழ்ந்த கோயில்களை யான் நல் முறைகளாக எடுத்துரைக்கின்றேன் .

அதன்படி பின் நல் முறைகளாக நல் முறையாகவே அங்கு அமர்ந்து தியானங்கள் செய்யவே பல பலப்பல பிறவிகளில் செய்த கர்மாக்கள் அழியும் என்பேன்.

கர்மாக்கள் அழிந்து புண்ணிய பலன்கள் மேலோங்கி அனைத்தும் நடக்கும் என்பேன்.

இங்கு வந்து செல்பவர்கள் பின் ஒரு பொழுதும் தாழ்ந்து விடமாட்டார்கள் என்பேன்.

உயர்ந்த அளவிற்கு எவ்வளவு உயரம் உயரத்தான் செய்வான்  இங்கு இருக்கும் சிவன் என்பேன்.

நல் முறைகளாக நல் முறைகளாகவே பின் அனைத்தும் நிறைவேறும் என்பேன் நல் முறைகள் ஆகவே.

ஆனாலும் நல்முறைகள் ஆகவே ஈசன் கருணை இருக்க இன்னும் மனிதர்களை எவ்வாறு என்பதையும் கூட ஈசனே தன்னை உட்படுத்திக் கொண்டுதானே எழுவான் என்பேன் சுயம்புவாக இன்னும் பல இடங்களில் இன்னும்.

ஏனென்றால் கலியுகத்தில் அக்கிரமங்கள் அநியாயங்கள் ஓங்கி நிற்கின்றது. இதனால்தான் ஈசன் அங்காங்கே தோன்றி தோன்றி பின் அனைவரையும் திருத்துவான். பின் அழிப்பான் என்பேன் .

யாங்களும்( சித்தர்கள்)  இதற்கு சமமான உரிமைகளைப் பெற்று பின் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மக்களுக்கு நல்வழி படுத்துவோமே தவிர பின் இவ்வாறு செய்தால் அவ்வாறு நடக்கும் அவ்வாறு பரிகாரங்கள் செய்தால் இவ்வாறு நடக்கும் என்றெல்லாம் மனிதன் மனிதனை ஏமாற்றும் வேலைகளையும் அப்பனே இவை என்றும் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது அப்பனே உண்மை விஷயங்களை இன்னும் சொல்வேன் என்பேன்.

சொல்லும் திருத்தலங்களுக்கு அங்கு சென்று ஆசிர்வாதங்கள் பெற்று அப்பனே நலமுடன் வாழ்க என்பேன்.

அப்பனே பல சூட்சமங்கள் ஒளிந்திருக்கின்றது  இவ்வுலகத்தில் ஒவ்வொன்றாக எடுத்துரைக்கின்றேன்  .

உலகம் பின் ஆன்மீக பூமியாக மாறட்டும் இன்னும்.

ஆனாலும் ஆன்மீகம் ஆன்மீகம் என்று சொல்லுகிறார்களே

ஆனாலும் பின்பற்றுவதுமில்லை.

எதனை எதனையோ ஆன்மிகம் என்றால் ஆண் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது பின் எவன் ஒருவன் நல் முறைகளாக எதனை என்றும் கூறாமலே இறைவனிடத்தில் சரணடைந்து பின் பிரம்ம முகூர்த்தத்தில் நல் முறைகளாக நல் முறைகள் ஆகவே மனதில் இறைவனை நினைத்துக்கொண்டு நல் முறைகளாக பின் அனைத்தும் எவை எவை என்று அதிகாலையில் பல உயிரினங்களுக்கு உணவு அளித்து தானும் உணவு உண்டு பின் நல் முறைகளாக தன் சேவைகள் செய்ய பின் இரவில் உறங்கும் முன் பொழுதும் நல் முறைகளாக பல உயிரினங்களுக்கு சேவை செய்து தானும் உண்டு பின் உறங்கினால் அப்பனே புண்ணியம் சேர்த்து கொண்டே போகலாம் என்பேன்.

ஆனாலும் இதனை யாரும் செய்வதில்லை என்பேன். எதனால் எவை என்று இதனால் துன்பம் வருகின்றது தானுண்டு தானே எண்ணம் உண்டு என்றெல்லாம் கூட பிறக்கின்றான் இறக்கின்றான் இதன் நடுவே எவை எவையெல்லாம் செய்கின்றான் என்பதையும் கூட மனிதனால் பின் உணர முடிவதே இல்லை.

அப்பனே திருமணம் செய்கின்றான். பின் எவ்வாறு என்பதையும் கூட கஷ்டத்திற்கு குழந்தைகளும் வருகின்றது பின் அப்பனே குழந்தைகளும் நன்றாக இருப்பார்களா?? பின் மனைவி நன்றாக இருப்பாளா?? இவைதாம் கேள்விகள் மனிதனுக்கு இனிமேலும் வரும் என்பேன்.

ஆனாலும் அப்பனே நல் முறைகள் ஆகவே இறைவனை பிடித்து இறைவா நீதான் அனைத்தும் என்று செல்ல அனைத்தும் இறைவன் அருளால் நடக்கும் என்பேன்.

நடக்கும் என்பேன் இன்னும் பல அதிசயங்களும் பல திருத்தலங்களை பற்றியும் இன்னும் சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே.

அங்கு சென்று வாருங்கள் நல் முறைகள் ஆகவே மனமாற்றம் ஏற்பட்டு அதி விரைவிலேயே தேவையானது அனைத்தும் கிடைக்கும் என்பேன் நல் முறைகள் ஆகவே.

என்னுடைய ஆசிகள் அனுகிரகங்கள் எப்பொழுதும் இருக்கும் அப்பனே மீண்டும் வந்து வாக்குகள் உரைக்கின்றேன் அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..................தொடரும்!

Monday 23 August 2021

சித்தன் அருள் - 1027 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை - ஆட்சி எங்களுடையதே!


22/8/2021 ஆவணி அவிட்டம் பௌர்ணமி அன்று குருநாதர்  அகத்தியர் திருவண்ணாமலை திருத்தலத்தைப்பற்றி உரைத்த பொது வாக்கு 

உரைத்த இடம். அம்மணி அம்மாள் ஜீவசமாதி. திருவண்ணாமலை.

ஆதி அண்ணாமலையை மனதில் துதித்து செப்புகின்றேன் அகத்தியன்!

அப்பனே நல் முறையாக, நல் முறைகள் ஆகவே இவ்விடத்தில் பலப்பல புண்ணியங்கள்.  நல்முறைகள் ஆகவே செய்தவன் தான் அண்ணாமலையை கிரிவலம் வர முடியும் நல் முறைகள் ஆகவே.

நல் முறைகள் ஆகவே அண்ணாமலை வலம் வருவது அதி சிறப்பு என்பேன் என்பேன் இதனையும் எவை எங்கு என்றும் கூறாமல் நல் முறைகளாக இறைவனை வணங்காவிடினும் நல் முறையாக வலம்வந்து வணங்கி வந்தால் பல பல சித்தர்கள் பல பல எண்ணிலடங்கா கோடி பின் ஞானிகளும் வலம் வருவார்கள் என்பேன். அப்பொழுது நல் முறைகள் ஆகவே வலம் வரும் பொழுது அவர்கள் தம் உராய்வின் போது (அருரூபமாக உரசி செல்வார்கள்) 

சில கர்மாக்களை எடுத்துச் செல்வார்கள் என்பேன் இதுதானப்பா  திருவண்ணாமலை என்கின்ற திருத்தலத்தின் சிறப்பு என்பேன்.

ஆனால் இதையோ தவிர்த்துவிட்டு மனிதர்கள் பின் நல் முறை ஆகவே சுற்றிவந்தால் பின் அதுவும் இதுவும் அனைத்தும் நடக்கும் என்றே யோசிக்கிறார்கள் ஆனாலும் அதுவே தவறு என்பேன்.

கர்மா நீங்கி நல் முறைகளாக முக்தி பெறுவதற்கு சரியான  ஸ்தலம் இதுவே என்பேன்.

நல் முறைகளாக குழப்பங்கள் எவ்வாறு என்பதையும் கூட நினைக்கும் பொழுது நிச்சயமாய் இவனை(சிவனை) அண்ணாமலையில் சரண் அடைந்து விட்டால் இவன் தன் குறைகளை வைக்க மாட்டான் என்பேன்.

ஆனாலும் மனதில் எதையும் நினைக்கக் கூடாது என்பேன். அவை வேண்டும் இவை வேண்டும் என்று.

நல் முறை களாகவே வலம் வந்தாலே போதும் கர்மாக்கள் தொலையும்.

கர்மாக்கள் தொலைந்து புண்ணியங்கள் பெருகும் புண்ணியங்கள் பெருகும் பொழுது அனைத்தும் நிறைவேறும் என்பேன்.

நிறைவேறும் என்பேன் நல் முறைகள் ஆகவே ஏன் யாங்களும் சித்தர்களும் சித்தர்களின் பரிபூரண பின் மனிதர்களும் அன்பைப் பெற்று பின் அன்பின் பின் பெற்று தொடர்வதாலே முன் செய்த கர்ம வினை ஒருவனுக்கு நீங்க வேண்டும் என்றால் அண்ணாமலையே சிறப்பு ஸ்தலம் என்பேன். மற்றவையெல்லாம் பின்னே என்பேன்.

இதனால்தான் அண்ணாமலையின் ஒரு சிறப்பு உண்டு என்பேன் உண்டு என்பேன் அவன் மலையை மலையில் இன்னும் பல கோடி சித்தர்கள் தவம் செய்துகொண்டு இருக்கின்றார்கள்.

ஆனாலும் இதன் தவத்தை இப்பொழுதும் கூட மனிதர்கள் கெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் சித்தர்களோ ஞானிகளோ நல் முறைகள் ஆகவே பொறுமை காத்து இருக்கின்றார்கள்.

ஆனாலும் இவையே என்று போகப்போக பின் இதனையே இப்படியே மனிதர்கள் செய்துகொண்டிருந்தால், செய்து கொண்டிருந்தாராயின் பின் எவை என்று கூறாமலேயே பின் கோபம்.

நல் முறைகளாக பின் கர்மத்தையும் எவ்வாறு சுமந்து நின்றாயோ எதனாலே பல புண்ணியங்கள் பெருகும் ஆனாலும் எதை எதை என்று நினைக்கும் மனது மனிதனின் கீழ்த்தரமான எண்ணங்களை கவனித்து சித்தர்கள் இனிமேலும் நிச்சயமாய் தண்டனைகள் கொடுப்பார்கள் என்பேன்.

இதனையும் நன்கு உணர குறைகள் இல்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அம்மணி, நல் முறைகள் ஆகவே இங்கும் இப்பொழுதும் கூட அமர்ந்து கொண்டு இருக்கின்றாள் என்பேன். ஆனாலும் இவள் தன் இடத்தில் விசேஷங்கள் எவை என்னவென்று அவளிடத்தில் இப்பொழுது கூட உரைத்துக் கொண்டிருக்கிறேன் நல் முறைகள் ஆகவே.

உலகத்தில் வாழும் மனிதர்கள் பல பேர்  பல எண்ணங்களில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் ஆனாலும் அந்த எண்ணங்கள் முற்று பெற்றது என்பேன்.

முற்றுப் பெற்றது என்பேன் என்பதற்கு இணங்க யோசித்து செய்தால் மனிதர்கள் மனிதர்களும் பல காரியங்கள் செய்ய பல மந்திரங்கள் உச்சரித்து பல பல விளைவுகளை ஏற்படுத்தி துன்பம் பெறப் போகிறான் என்பது உறுதி.

நல் முறையாக நல்லெண்ணத்தோடு மந்திரமும் ஜபத்தால் தான் அதன் பலன் பலம் பல மடங்கு ஆகும் என்பேன்.

அதனை தவிர்த்து பின் அவை வேண்டும் இவை வேண்டும் என்று என்றெல்லாம் மந்திரங்கள் கூறி கொண்டு இருந்தால் பின் மனிதனுக்கு அழிவுகள்.

அழிவுகள் எதனால் வருகின்றது என்பதையும் கூட மனிதன் எவ்வாறு என்பதும்கூட அனைத்தும் செய்துவிட்டு பின் கொலையும் செய்துவிட்டு பின்பு எவ்வாறு என்பதும்கூட சிறு சிறு உயிரினங்களையும் கொன்று குவித்து நல் முறைகளாக இறைவனை வணங்கினால் நியாயமா? இவையெல்லாம் செய்துவிட்டு இறைவனை வணங்கினால் போதுமா?

ஆனாலும் இறைவன் ஏற்க மாட்டான் என்பேன் இப்பொழுது புரிந்து கொள்ளுங்கள்.

புரிந்துகொள்ளுங்கள் நல்லெண்ணத்தோடு பின் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு எண்ணினாலே போதுமானது. இறைவன்   தனக்கு செய்வான் 

இறைவன் அனைத்தும் செய்வான் என்பேன்.

அப்படியிருக்க எனக்கு பணம் வேண்டும் பொருள் வேண்டும் புகழ் வேண்டும் என்றெல்லாம் நினைக்கும் பொழுது பின் அவற்றில் ஒன்றைக் கூட நிச்சயமாய் இறைவன் தரமாட்டான் என்பேன்.

ஆனாலும் இதைத்தான் கேட்கின்றார்கள் இப்பொழுதும் கூட இப்பொழுதும் கூட நல் முறைகள் ஆகவே இத்திருத்தலத்தில் கூட பல பேர்கள் இனிமேல் எவை என்று கூற ஒருவன் தன் ஒருவன் அழியவேண்டும் எவை என்று கூற என் பிள்ளைகள் நலமாக இருக்க வேண்டும் எந்தனுக்கு பொருள்கள் பல சேர வேண்டும் அனைத்தும் சுகமாக வாழ வேண்டும் என்றெல்லாம் இறைவனிடம் கேட்கின்றார்கள்.

ஆனாலும் இவையெல்லாம் இறைவன் நிச்சயம் தரமாட்டான் என்பேன் புரிந்துகொள்ளுங்கள் அப்பனே.

நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் இவ்வுலகத்திற்கும் நல்  முறையாகவே இனி வரும் காலங்களில் கூட தீங்குகள் தான் நடைபெறும் என்பேன்.

அந்த தீங்குகளை தடுக்க மனிதர்களே முயற்சிகள் செய்ய வேண்டும் என்பேன்.

ஆனாலும் மனதில் எவ்வாறு என்பதும்கூட அழுக்குகள் வைத்துக்கொண்டு மனிதன் நல்லவனாகவே திரிகின்றான் முட்டாளே.

முட்டாள் மனிதர்களே அனைவரும் திருந்துங்கள்.

அனைத்தும் எவ்வாறு என்பதையும் கூட கூறி விளக்கும் அளவிற்கு கூட இப்பொழுது சொல்கின்றேன்.

அனைத்தும் செய்துவிட்டு இறைவா! இறைவா! என்றெல்லாம் தேடினால் கிடைப்பானா?? இறைவன்???

நிச்சயமாய் கண்ணில் பட மாட்டான்.

கண் படமாட்டான், தென் படமாட்டான் இதற்கும் விரிவான சூட்சுமங்கள் உண்டு என்பேன்.

ஆனாலும் எவை எவை என்று மனிதன் மனிதனுக்கு உள்ளேயே பின்  மனது ஒரு குரங்காக கொண்டு இரு குரங்குகள் சேர்ந்து கொண்டு உலகத்தையே அழித்து வருகின்றது.

உலகத்தை அழிக்க மனிதனே ஆயுதம் என்பேன்.

எவை என்று கூற அனைத்திற்கும் மேலானது மனித பிறவி என்பார்கள் ஆனாலும் யாங்கள்(சித்தர்கள்) சொல்வோம்

அனைத்திற்கும் கீழானவை மனிதப்பிறவி என்போம்.

இவையெல்லாம் எவ்வாறு என்பதையும் கூட மனிதனின் நிலையை பார்த்தால் அதர்மம் ஓங்கி நிற்கின்றது வரும் காலங்களிலும் அதர்மங்கள் ஓங்கி நிற்கும்.

ஆனாலும் சித்தர்கள் யாங்கள் நிச்சயமாய் விடமாட்டோம்.

மனிதர்கள் நாங்கள் தான் சித்தர்கள் நாங்கள்தான் தெய்வங்கள் என்றெல்லாம் கூறி ஆனாலும் மனிதர்களை இவ்வாறு முட்டாள்கள் ஆக்குகின்றார்கள்.

ஆனால் சித்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றோம் ஒவ்வொருவரையும் பலமாக தண்டிப்போம்.

இப்பொழுதே எச்சரிக்கின்றேன் எச்சரிக்கை விடுத்து விடுத்து இதுவரை மனிதர்கள் திருந்தவில்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே அப்பனே எவை எவை என்று கூற இப்பொழுது உரைக்கின்றேன் எவ்வாறு பல மனிதர்கள் இறைவனிடத்திலே இருந்து  பின் கஷ்டங்கள் வருகின்றது என்பதையும் கூட யோசிப்பான் என்பேன் இறைவனை வணங்க வணங்க சோதனைகள் அதிகம் என்பேன் .

ஆனாலும் முட்டாள் மனிதனே நீ என்ன செய்தாய்? என்பதை உணர்ந்து பார்.

அப்பொழுது கேள் இறைவனை இறைவனிடத்தில்.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் மனதைத் தொட்டு பார்த்து மனசாட்சிக்கு எதிராக பேசாமல் நான் நல்லவன் என்று கூறிவிட்டால். இறைவனிடம் நீ சண்டை இடலாம் என்பேன்.

அண்ணாமலையிலே அண்ணாமலையிடத்திலே பின் பல பல செய்கைகளால் அப்பனே அவன்தனையும்  திட்டி தீர்க்கலாம் என்பேன். அப்பனே!

ஆனாலும் யோசித்து கொள்ளுங்கள்.

அப்பனே இவை தன் எவ்வாறு என்பதை குறைதீர்க்க தப்புக்கள் செய்து அப்பனே அனைத்தும் தீர்த்துவிடு என்றே வலம் வருகின்றார்கள் பல மனிதர்கள்.

பல மனிதர்கள் பெண்ணின் மீது மோகம் பலப்பல மனிதர்களுக்கு புகழின் மீது மோகம் பல மனிதர்களுக்கு பணத்தின் மீது மோகம் இவை என்று கூறி விடாமல் இதனையும் மோகத்திலேயே வலம் வருகின்றார்கள்.

சிலருக்கு விளையாட்டாக சிலருக்கு பொழுதுபோக்காக இவை எல்லாம் விட்டு விடுவானா?? ஈசன்??.

இதனைத்தான் ஈசனை எவ்வாறு என்பதையும் கூட சிறிது உணர்ந்தால் கூட எவரையும் அனுமதிக்க மாட்டான் பின் ஈசனே.

அப்பனே பக்தி என்கின்றான் ஆனால் வெளியில் ஏமாற்றி வருகின்றான் அப்பனே எவை எவை என்று சொல்ல இன்னும் கூட பல பல மனிதர்கள் வருவார்கள் என்பேன்.

வருவார்கள் என்பேன் பின் எதற்காக என்பேன் திருடர்களே என்பேன்.

மனிதர்களை யாங்கள் திருடர்கள் என்று தான் சொல்வோம்.

இவை என்றும் கூறி விடாமல் அப்பனே நல் முறைகள் ஆகவே மனிதன் ஒழுக்கத்தோடு வாழ்ந்தால் நன்மைகள் செய்து கொண்டே வாழ்ந்தால்  அவன் நல் முறைகள் ஆகவே இக்கடலை பிறவிக் கடலை தாண்டி விடலாம் ஆனாலும் ஒழுக்கங்கள் எங்கே??

தானங்கள் எங்கே? தர்மங்கள் எங்கே?

முட்டாள் மனிதர்களே!

பின் மாறிப்போனான் மனிதன் மாறிப்போனான் மனிதன் என்பேன்.

ஆனாலும் இறைவனும் மாறித்தான் போகப் போகிறான் அப்பொழுது தெரியும் ஆனாலும் இப்பொழுதுகூட கஷ்டங்கள் ஒவ்வொருவரையும் பின் முட்டாள்கள் என்று கூட சித்தர்கள் மனிதர்களுக்கு எவ்வாறு என்று சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனாலும் யானும் நல் முறைகள் ஆகவே இப்புவியுலகில் திரிந்து கொண்டிருக்கின்றேன்.

என்னையும் பல கோடி சித்தர்கள் அகத்தியா அகத்தியா மனிதர்களுக்கு பின் நன்மைகள் செய்து விடாதே மோசமானவர்கள் மனிதர்கள் உன்னையே வைத்து பொருள் சம்பாதித்து உன்னையே ஏமாற்றி பின் அகத்தியனே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்.

அப்பனே இன்றும் சித்தர்கள் கூட என்னிடத்தில் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஆனால் என்னால் முடியும் என்னால் முடியும் என்று கூட யான் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

ஆனாலும் மனிதனை பார்த்தால் மோசம் போய்விடுகின்றது.

நல் முறைகள் ஆகவே இவை என்று விளக்கத்திற்கு கேட்க இவை என்றும் எவை எவை என்று பொருள் சம்பாதிப்பதற்கே மனிதன் பிறக்கின்றான்.

பொருள் சம்பாதிப்பதற்காக வா??

ஆனால் நீ சம்பாதித்துவிடலாம் என்பேன் ஆனாலும் அதை அழித்துவிடும் சக்திகள் எங்கள் இடத்தில் உள்ளது என்பேன்.

பொருளுக்கு புகழுக்கு இவைகளுக்கு எல்லாம் அலைந்து திரிந்து சேர்த்துக்கொண்டால் இந்த வினாடியில் எவை என்று கூட சில நாள் கழித்து அப்பணத்தை இப்போதுதே உரைத்து விடுகின்றேன்  ஓர் நாளில் காலி செய்து விடுவோம் என்பேன்.

எச்சரிக்கையாக இருங்கள் மனிதர்களே.

எவரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டாம் என்பேன்.

அப்பனே முதலில் நீ திருந்து. 

நீ திருந்து பின் உன் இல்லத்தை திருந்த வை. இல்லத்தை திருத்து பின் ஓர் உருவாக்கு ஒரு கூட்டத்தை. அவர்களையும் திருத்து பின் உருவாக்கி. 

பின் அடி பலமாக விழுந்தால் தான் இனிமேலும் மனிதர்கள் திருந்துவான் என்பேன். பின் எவை என்று கூற அமைதியாகச் சொன்னால் திருந்தவே மாட்டான் என்பேன் மனிதன்.

எவை என்று கூற பின் பக்தி பக்தி என்று சொல்லி பின் எவ்வாறு என்பதையும் கூட  சக்திகள் எவ்வாறு என்பதையும் கூட நிச்சயமாய் சித்தர்கள் இனிமேலும் நல் முறைகள் ஆகவே இவ்வுலகத்தில் வந்து ஆட்சி செய்து பலமாக அடி கொடுத்து எவ்வாறு என்பதையும் கூட பின் கிருஷ்ணனும் சொல்லி இருக்கின்றான் தர்மம் தாழும் போது வருவேன் என்று அவனும் நிச்சயமாய் வருவான் என்பேன்.

இதனால்தான் எவ்வாறு என்பதையும் கூட மேன்மை நிலைகள் புரிய நல்லது நடக்கும் இல்லையெனில் அனைவருக்கும் கஷ்ட காலங்களே. கஷ்ட காலங்கள் என்பேன் இனிமேல் அனைவருக்கும் எதனை எதனை மூலமும் இறைவன் சோதிப்பான் என்பேன்.

முதலில் பணத்தை எடுப்பான் என்பேன்.

ஏனென்றால் அதில்தான் பல மனிதர்கள் எவ்வாறு என்பதையும் கூட .

ஆனாலும் சில பிரச்சினைகளை உருவாக்குவான் என்பேன் ஆனாலும் பின்  எங்களிடத்தில் பணம் வேண்டும் என்று மட்டும் சொல்லிவிடாதீர்கள் என்பேன்.

ஏன்? எதனால்? என்பதையும் கூட முக்கியப் புள்ளியாக ஈசனே பணத்தின் மீதுதான் அனைவருக்கும் மோகம் என்பது தெரிந்துவிட்டது. இதனால் ஒவ்வொருவரிடத்திலும் பணத்தின் நல் முறைகள் ஆகவே நல் முறைகளாக விளக்கும் அளவிற்கு கூட அவர்களிடத்தில் இருந்து பணத்தை ஈட்டுவான். (ஈசன் எடுத்துக்கொள்வார்) 

பின் கஷ்டங்கள் ஏற்படும் பின் திருடன் ஆவான் மனிதன். திருடி திருடி சேர்த்துவைத்து சேர்த்து வைப்பதே இவனுடைய வேலை மனிதனுக்கு.

நல் முறைகள் ஆகவே இதனால்தான் மனதாக வைத்து கொண்டு இறைவனை வணங்கி வணங்கினால் போதுமானது.

இறைவா பூமியில் படைத்தாய் படைத்தாய் என்பதைக்கூட இறைவனின் செயல் இறைவனின் செயல் மனிதா நீ இப்புவி உலகத்திற்கு வரும்பொழுது உன்னுடைய எண்ணங்கள் எதன்மீதும்  போகவில்லை அப்போது இறைவனே துணை இருக்கின்றான்.

ஆனாலும் நீ வளர வளர உன் மீது உள்ள நம்பிக்கையே போய்விட்டது இறைவனுக்கு என்பேன்.

ஏனென்றால் வளர வளர கெட்ட புத்திகள் கெட்ட செய்கைகள் இன்னும் கெட்ட கெட்ட இன்னும் எவ்வாறு யான் சொல்வது? இனிமேலும் நடக்கும்.

பின் ஒவ்வொருவரையும் எச்சரிக்கின்றேன் ஒவ்வொருவரும் நல்  முறைகள் ஆகவே இனிமேலும் வரும் சந்ததியினருக்கு எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் இறைவனை நல் முறையாக இளம் வயதிலேயே பிடிக்க வேண்டுமென்று.

பின் அனைவரிடத்திலும் கூற பின்பு படிப்புகள் இவ்வுலகத்தில் முக்கியமில்லை.

படிப்பிற்கு வரும் காலம் வரும் காலங்களில் பின் முக்கியத்தவம் கிடைக்காது தர மாட்டாது என்பேன்.

ஏனென்றால் படிப்பே ஒரு வியாபாரம் ஆகிவிட்டது என்பேன் படிப்பு எவ்வாறு என்பதையும் கூட பின்  கேட்கும்போது சந்தோசத்திற்காக வே படிப்பு இருக்காது என்பேன்.

அப்படி சந்தோசமாக படிப்பதற்கு சென்றால் உந்தனுக்கு வேலையும் கிட்டாது தொழிலும் கிட்டாது பின் எவ்வாறு என்பதையும் கூட சுய தொழிலும் கிட்டாது பின் நீ திரிந்து கொண்டே தான் இருக்க வேண்டும்.

ஆனால் இறைவனை மனதால் எண்ணி கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டு முன்னேறி வா இறைவன் அனைத்தும் தருவான் என்பேன்.

அப்பனே சொல்கின்றேன் சிறுவயதில் எவ்வாறு என்பதையும் கூட நல் முறையாகவே இறைவனையே தாய் தந்தையராக ஏற்றுக்கொண்டு நல் முறைகள் ஆகவே வணங்கி வந்தால் எத்துன்பமும் வராது என்பேன் .

வராது என்பேன் இதனுள் சூட்சமங்கள் இன்னும் பல உண்டு என்பேன்.

மனிதர்களுக்கு எவை என்று கூற இன்னும் பல விஷயங்களைச் சொல்லி         நல்வழிப்படுத்துவோம்.
 
ஆனாலும் திருந்தாவிட்டால் பின் நிச்சயம் நோய்கள் உருவாக்குவோம் என்பேன் நல் முறைகள் ஆகவே.

பின் இறைவனிடத்தில் பிரார்த்தனைகள் செய்யும் பொழுதும் நல் முறைகளாக செய்யுங்கள் என்பேன் போட்டி பொறாமைகள் வேண்டாம் என்பேன்.

ஆனாலும் நிச்சயமாய் யாங்கள் நடத்துவோம் ஆட்சி.

ஆட்சி எங்களுடையதே என்போம்.

பாருங்கள் இனிமேலும் அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பன் கந்தன் அடுத்த வாக்கில் உரைப்பான் நல் முறைகள் ஆகவே அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்.

BRIEF TRANSLATION OF NAADI READING:-

THIS NAADI READING WAS BLESSED BY GURU AGASTHIYA AT THIRUVANNAMALAI, TAMILNADU.

"ONLY, WHO HAS DONE A LOT OF DHANA & DHARMA, AND EARNED PUNNIYA CAN GET THE CHANCE TO DO GIRIVALAM AT THIRUVANNAMALAI.

ONE NEED NOT HVE DARSHAN OF LORD BUT A GIRIVALAM WILL SUFFICE, BECAUSE A LOT OF SIDDHAS WILL GO FOR PRADAKSHINA/GIRIVALAM AND ONE GET THE CHANCE TO BE WITH THEM. YES, WHILE DOING GIRIVALAM, SIDDHARS WILL BRUSH AND PASS HUMAN BEINGS AND TAKE AWAY THEIR KARMA. (KARMA PARIVARTHANAM). THIS IS THE MOST IMPORTANT ASPECT OF THIRUVANNAMALAI GIRIVALAM. NOT MUCH PEOPLE KNOW ABOUT THIS.

BUT NOW A DAYS, PEOPLE SEEM TO DO GIRIVALAM WITH AN OBJECTIVE OF MATERILISTIC WANTS. THAT IS A WRONG APPOACH. ONE SHOULD LOSE ALL KARMA HERE AND ATTAIN MUKTHI HERE. ANYONE SURRENDERS TO ANNAMALAI WILL BE BLESSED WITH EVERYTHING FOR MUKTHI AND THERE WILL NOT BE ANY SCARCITY IN LIFE.

DEDICATE YOURSELF TO THE GOD, CENTRALISE THE MIND AND GO FOR GIRI PRADAKSHINAM, THAT WILL SUFFICE.

THIRUVANNAMALAI IS THE BEST PLACE TO WIPE OF ALL POORVA JENMA KARMAA.

CRORES OF SIDDHAS ARE SITTING ON TAPAS IN ANNAMALAI. HUMANS ARE SPOILING THEIR TAPAS BY INTERFERING IN THIER SILENCE/LONLYNESS. SINCE SIDDHAS PRESERVE PATIENCE NOT MUCH BAD THINGS ARE HAPPENING.

IF ONLY ONE CHANT MANTRAS WITH GOOD INTENTION, IT WILL FETCH ITS FRUITS. JUST GOOD THOUGHT, GOOD CAUSE WILL MAKE THE GOOD BLESS HUMAN BEINGS WITH ABUNDANCE. TO HAVE THAT ONE HAS TO ABSTAIN FROM KILLING ANY JEEVAATMAA IN THIS WORLD.

LIVE WITH A PURIFIED MIND.

MAN IS BEHAVING IN SUCH A WAY THAT, HUMAN BIRTH IS THE LEAST JENMA IN THIS WORLD. LOOKING AT THE WAY HE IS, IT IS SURE THAT ADHARMAA WILL PREVAIL IN THIS WORLD AND HUMANS WILL BE THE CAUSE OF DESTRUCTION OF THIS WORLD, IN THE YEARS TO COME.

EVENTHOUGH, WE HAVE GIVEN A LOT OF WARNING, MAN HAS NOT CHANGED HIMSELF. IF THIS SITUATION CONTINUES, SIDDHARS WILL CERTAINLY GET DOWN AND PUNISH HUMANS.

CHECK YOUR CONSCIENCE AND IF YOU ARE GOOD, YOU CAN STOP GOD AND ARGUE/FIGHT WITH HIM. THIS IS THE TRUTH. 

I AM ALSO ROAMING AROUND THE EARTH. EVERY SIDDHA SAYS "AGASTHIYAA! PLS DON'T PROTECT THESE HUMANS. THEY WILL CHEAT YOU. THEY WILL DITCH YOU. BUT I (AGASTHIYA) USED TO TELL THAT MY KIDS/DEVOTEES WILL NEVER DO THAT AND I STILL HAVE HOPE THAT THEY WILL CHANGE".

WE ARE GOING TO RULE THIS WORLD. GOVERNANCE IS OUR ADMIN. SO CHANGE TO BE A GOOD HUMAN BEING.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

Sunday 22 August 2021

சித்தன் அருள் - 1026 - அன்புடன் அகத்தியர் - முத்தம்பட்டி அனுமார் ஆலயம்!



18/8/2021 அன்று தர்மபுரி முத்தம்பட்டி அனுமன் ஆலயத்தைப் பற்றி குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு:-

அப்பனே நல்லாசிகள் நல் முறையாக முறையாக இந்த ஆலயத்திற்கு என்று ஒரு சிறப்பு உள்ளது அப்பனே

இறைவன் ராம அவதாரத்தில் நல் முறையாக இலங்கையில் யுத்தகளத்தில் ராமனுக்கு மூலிகைகள் தேவைப்பட பின் நல் முறையாய் அனுமனை பணித்து நல் முறையாக சென்று மூலிகைகளைப் பறித்து வா என்று கட்டளை இட்டான்.... அனுமனும் நல் முறையாகவே மூலிகைகளை தேடி அலைந்து கடைசியில் சஞ்சீவி மலையை பெயர்த்து பின் நல் முறையாக ராமனிடம் கொண்டு சேர்த்தான்.

ராமனும் நல் முறையாக மூலிகைகளை பரிசோதித்து சில மூலிகைகள் கிடைக்கவில்லை மீண்டும் சென்று அந்த மூலிகைகளை பறித்து வா என்று கூறினான்.

அனுமனும் அந்த மூலிகைகளை தேடி இந்த காட்டிற்கு வந்தான் தொப்பூர் காடு என்ற பெயர் இந்த காட்டிற்கு வந்த பொழுது அந்த மூலிகைகள் கிடைத்தது அதை பறித்து செல்ல முற்படும் பொழுது நல் முறையாக அந்த மலையிலும் காட்டிலும் வாழ்ந்து வந்த தேவதைகள் ஆஞ்சநேயா இந்த மூலிகைகளை பறித்து செல்ல எங்களது அனுமதி தேவை எங்களின் அனுமதி வேண்டும் என்றால் நீ இங்கே இருக்க சம்மதம் தெரிவிக்க வேண்டும் இந்த மலையில் பல அக்கிரமங்களும் அநியாயங்களும் வருங்காலத்தில் நடந்தேறும். இவ்வாறு நடக்காமல் நீ இங்கேயே இருந்து காக்க வேண்டும் தவறான காரியங்களை செய்ய வருபவர்களை தண்டிக்க வேண்டும் அப்போதுதான் இந்த மூலிகைகளை நாங்கள் தருவோம் என்று கூறிய பின் நல் முறையாக 

பின் நல் முறையாக அனுமனும் சரி என்று சொல்லி மூலிகைகளை தாருங்கள் என்று கேட்டு மூலிகைகளை பறித்து பின் நல் முறைகள் ஆகவே புறப்பட்டான் அப்போது தேவதைகள் என்ன ஆஞ்சநேயா நீ உரைத்ததை மறந்து விட்டாயா?

நீ இங்கேயே இருக்கப் போவதாக வாக்கு தந்தாய் இப்பொழுது நீசெல்கின்றாயே இது நியாயமா?

அனுமனும் பின் நல் முறையாக தேவதைகளே நோக்கி நான் இந்த மூலிகைகளை என் இறைவன் ராமனிடத்தில் கொண்டு சேர்க்கவேண்டும் சற்று பின்னால் திரும்பிப் பாருங்கள் என்று கூறினான். அப்பொழுது அவர்கள் பின்னால் சுயம்பு வடிவாக கல்லால்  அனுமன் சிலையாக தோன்றினான். 

பின் நல் முறைகள் ஆகவே தேவதைகளே நான் இந்த காட்டில் இருக்கப் போகின்றேன். தவறான எண்ணம் கொண்டு வருபவர்கள் தவறை செய்ய வருபவர்கள் அனைவரையும் தண்டிப்பேன். இந்த காடுகளையும் மலைகளையும் நான் இங்கிருந்தே காப்பேன் என்று வாக்கு தந்தான். அந்த இடம்தான் இந்த கோயில் அப்பனே! இப்பொழுதும் இந்த இடத்திற்கு தவறான எண்ணம் கொண்டவர்கள் வரமுடியாது. தூய பக்தியுடன் நல் மனதாய் வருவோருக்கு அருள் தந்து கொண்டுதான் இருக்கின்றான், இந்த அனுமன்.

அப்பனே என்னுடைய நல்லாசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

Thursday 19 August 2021

சித்தன் அருள் - 1025 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


கருட புராணத்தில் ஒருவரின் எந்தெந்த செயல்கள் அவரின் ஆயுட்காலத்தை குறைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

நாத்திகராக வாழ்வது, கடவுளின் உயர்ந்த சக்தியை நம்பாதவர்,  தர்மம் மற்றும் கர்மாவின் பாதையை பின்பற்றாதவர்களின் ஆயுட்காலம் குறைந்து கொண்டே இருக்கும். கடவுளை நம்பாதது மனிதகுலத்தை நம்பாததற்கு சமம்.

தவறான செயல்கள், வயதில் மூத்தவர்களை தெரிந்தே அவமதிப்பது, தவறான பாதையில் அதன் விளைவுகள் என்னவென்றும் தெரிந்தே செல்வது, ஒருவரின் ஆயுள் குறைய காரணமாக இருக்கும்.

வெறுப்பு எண்ணங்கள், சுற்றி இருக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது வெறுக்கத்தக்க எண்ணங்களுடன் வெறுப்பில் வாழ்வது, ஒருவரின் ஆயுளை குறைக்கும், என்று கருட புராணம் கூறுகிறது. மனித நேயத்தை வெறுப்பவர்கள் மனிதராக வாழ தகுதியற்றவர்கள்.

கால் மேல் கால் போட்டு அமர்வது. இந்த நிலையில் உட்கார்ந்திருக்கும்போது, இடுப்பு பகுதி முன்னோக்கி உருண்டு,  முதுகெலும்பை வளைத்து, கீழ் முதுகில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி, சாய்வதற்கு உங்களைத் தூண்டுகிறது, இது பல இடைநிலை வியாதிகளுக்கு வழிவகுக்கிறது. இது ஆயுளை வெகுவாக குறைக்கும்.

கருட புராணம், குறிப்பிட்ட நாட்களில் உடலுறவு வைத்துக் கொள்ளக்கூடாது என்று எச்சரித்துள்ளது. கிருஷ்ண மற்றும் சுக்ல பக்க்ஷ சதுர்தசி, ஒவ்வொரு மாதத்தின் அஷ்டமி, அமாவாசை மற்றும் பெளர்ணமி நாட்களில் உறவு வைத்துக்கொள்வது பாவத்தின் உச்சமாகும். ஆயுளை வெகுவாக இழக்க நேரும்.

உடைந்த கண்ணாடியில் முகம் பார்ப்பது உங்கள் ஆயுளை குறைக்கும் செயலாகும். 

அதேபோல தவறான திசையில் தூங்குவதும் உங்களின் ஆயுளைக் குறைக்கும். உங்கள் தலையை வடக்கு, வடகிழக்கு, தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைத்து ஒருபோதும் தூங்கக்கூடாது.

இருட்டில் தூங்குவது. முற்றிலும் இருளாக இருக்கும் உங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து இருளிலேயே ஒருபோதும் தூங்கக்கூடாது. ஒரு சிறு விளக்கு வெளிச்ச்மேனும் வேண்டும். உடைந்த கட்டிலில் படுப்பது மரணத்திற்கான அறிகுறியாகும்.

கடன் வாங்குவது, உணவு, தங்குமிடம், உடைகள் மற்றும் காலணி போன்ற கடன் வாங்கிய பொருட்களைத் தக்க வைத்துக் கொள்வது, நீங்கள் கடன் வாங்கியவருடன் உங்கள் ஆயுட்காலத்தை பகிர்ந்து கொள்வதை குறிக்கிறது.

அழுக்கு கைகளுடன் எழுதுவது, சாப்பிட்டபின் அல்லது வீட்டை சுத்தம் செய்தபின் கைகளை சுத்தம் செய்யாமல் படிப்பது, எழுதுவது அல்லது பாடம் நடத்துவது போன்றவை உங்களின் ஆயுளை குறைக்கும்.

மற்றவர்களின் முதுகில் குத்துவது, புறம் பேசுவது அவர்களைப் பற்றிய பொய்களை கூறுவது போன்றவை ஒருவரின் விரைவான மரணத்திற்கு வழிவகுக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

Sunday 15 August 2021

சித்தன் அருள் -1024 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமானின் அருள்வாக்கு!

நாகபஞ்சமி அன்று வடிவேலன் உரைத்த பொது வாக்கு.


இடம். அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி.

உலகை ஆளும் என் அப்பன் அம்மையை பணிந்துசொல்லுகின்றேன் கந்தனவன்.(கந்தன்)

ஞானப் பிழம்பை என் தந்தை நிச்சயமாய் வழங்குவான் என்பேன்.

பின் என் தாய் அவள் ஆசிர்வாதமும் பரிபூரணமாக இருக்க அப்பனே பின் நல் முறையாக அனைத்து விஷயங்களிலும் ஜெயமாகும் என்பேன்.

இறைவன் என்றெல்லாம் திரிகின்றார்கள் மனிதர்கள் இறைவன் இறைவன் என்றெல்லாம் திரிகின்ற போது அவரவர் செய்த புண்ணிய பாவங்கள் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் அவர்களே மனதில் நினைத்து.

அப்பொழுதுதான் நல் முறையாக அப்பனே தவறு செய்துவிட்டேன் என்று திருந்தி விட்டால் நல் முறையாக ஆசிகள் என்னுடைய ஆசிகள் ஆனாலும் பின் பல புண்ணியங்கள் நல் முறைகளாய் செய்யும் பொழுது அவன் தன் கர்மத்தை அவனே விலக்கிக் கொள்கின்றான். என்பேன்.…

நல் முறையாக மாற்றம் உண்டு

தெரியாமல் செய்கின்ற தவறுக்கு எதனை என்று கூற கர்மா கிடையாது எமதர்மன் அதனை எடுத்துக்கொள்வதில்லை. ஆனாலும் தெரிந்தே செய்கின்ற தவறுக்கு நிச்சயம் கர்மாவினை உண்டு. வருகின்றது வினை.

இதனையும் எவ்வாறு என்பதைக்கூட தெரிந்தும் இதற்கும் கூட விமோசனம் உண்டு என்பேன் எதனையும் என்பதைக்கூட எவ்வாறு என்பதையும் கூட இறைவனை வகுத்துக்கொண்டு இறைவனை நினைத்துக் கொண்டால் அக் கர்மவினை பின் பின் சம அளவில் நல் முறையாக இறைவன் எடுத்துக்கொண்டு நல் முறையாகவே இவ்வுலகத்தில் வாழவைப்பான் என்பேன். அதனால் தான் இறை பலங்கள் அனைத்திற்கும் தேவை என்பதைக்கூட நான் நிச்சயமாய் சொல்வேன் என்பேன்.

ஆனாலும் இதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது மனிதனுக்கு மாய வலையே மிஞ்சும் என்பேன். மாய வலையில் சிக்கிக் கொள்வான் எவ்வளவு புத்திகள் இருந்தும்.

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன் நிச்சயமாய் பின் ஐந்து அறிவுகள் அனைத்திற்கும் இருக்கும் என்பதை கூட யான் அறிவேன் ஓர் அறிவை பின் பின் மிகவும் கடுமையாக வைத்திருக்கின்றான் எதனால் பின் என்றால் மனிதன் உண்மை நிலையை அறிந்து புண்ணியங்கள் செய்து நல் முறையாக பிறவிக் கடலை தேற்றும் என்று ஆனாலும் அவ் அறிவை  தவறாகவே பயன்படுத்திக் கொண்டிருக்கிறான் மனிதன் இப்பொழுதும் கூட இனிமேலும் கூட.

இதனைப் பயன்படுத்திக் கொண்டாலே அதன் மூலமே அழிவு ஏற்படும் என்பதை மனிதனுக்குத் தெரிவதில்லை.

நின்ற பொழுதும் இதனையும் ஆறாவது அறிவை நல் முறைகள் ஆகவே பயன் படுத்தி இதனைத்தான் பின் அனைத்தையும் கடந்து வந்தால் பின் அறுபடையினை(கந்தனின் ஆறுபடைவீடு) தரிசித்து விடலாம் என்பது கூட உண்மை என்பேன்.

என்னை காண முடியும் என்பேன் ஆனாலும் மனிதன் எவ்வாறு என்பதும்கூட முட்டாளாகவே வாழுகின்றான்.

நல் முறைகளாக மக்களுக்கு தெளிவுகள் தெளிவுகள் இனி மேலும் பிறக்காவிட்டால் அப்பனே மனிதன் அவனே அவன் தன் போக்கிலே சென்று அழித்து விடுவான் மந்திரங்கள் பல உபதேசங்கள் செய்து செய்து ஆனாலும் மனிதர்கள் எண்ணங்கள் பின் உயர்வாக இல்லாதபோது அவை எல்லாமே வீண் என்பேன்.

நல் முறைகள் ஆகவே விளக்கம் தந்து நான் ஏற்றுவேன் நல் முறைகள் ஆகவே இத்திருத்தலத்தில் (அங்காளபரமேஸ்வரி அர்த்தநாரிஸ்வரர் ஆலயம் தர்மபுரி) இதை திருத்தலம் என்றே சொல்லலாம் அவ்வளவு பக்திகள் சக்திகள் இங்கே நிறைந்திருக்கின்றது என்பேன். இதனைத்தான் முன்னோர்கள் சொல்லிவிட்டார்கள் மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது என்று.

இதனால் அன்புடன் நல் மனதாய் எதனையும் என்பதைகூட அன்பை மட்டும் செலுத்தினால் நாங்கள் வருவோம்.

இவ்வுலகம் நிலையில்லாதது என்பதை கூட மனிதன் தெரிந்து கொள்வதில்லை. ஆனாலும் அதை தெரிந்து விட்டால் நாங்கள் (மனிதர்கள் )கூட நிரந்தரம் இல்லை என்பது தெரிந்து விடும்.

இதனைத் தெரிந்து விட்டால் ஓடோடிச் சென்று இறைவனிடத்தில் சரணடைந்து விடுவான் மனிதன் ஆனால் மனிதன் எண்ணங்களோ பின் நிலையற்று நிலையற்றவையே தேடிச் செல்லுகின்றது ஆனால் அப்படி தேடி தேடி செல்ல அவன் தனக்கு மனக்குழப்பங்கள் மன வருத்தங்கள் வந்துகொண்டே இருக்கும்.

ஒன்றை மட்டும் சொல்கின்றேன் இறைவா அனைத்தும் நீயே என்று பின் அவனிடத்தில் விட்டுவிடு பின் அனைத்தும் நடக்கும் என்பேன்.

அதைவிட்டுவிட்டு நல் முறைகளை அதைச் செய்கிறேன் இது நடக்கும் இதைச் செய்கிறேன் அது நடக்கும் அவை வேண்டும் இவை வேண்டும் என்று சென்று கொண்டு இருந்தால் நிச்சயம் கிடைக்காது என்பேன்.

இறைவன் மனிதனுக்கு கஷ்டத்தை தருவதை கூட மனிதனுக்குத் தெரிவதில்லை கஷ்டத்தின் மூலம் அனுபவத்தை பெற வேண்டுமே தவிர பின் மனக்குழப்பங்கள் ஆகிவிடக் கூடாது என்பேன் அப்படி மனக்குழப்பம் ஆகிவிட்டால் அவன் வாழ்க்கை வீணாகிவிடும் இதனால் தான் கஷ்டம் வரும்பொழுது இறைவா இறைவா என்று அழைத்தாலே போதுமானது கஷ்டங்கள் பகுதியாய் குறைந்துவிடும் என்பேன்.

ஆனாலும் மனிதன் அழைப்பதில்லை.

நல் முறைகள் ஆகவே அனைத்தும் நிறைவேறும் என்பேன் இவ்வுலகத்தில் படிப்படியாக ஏற்றங்கள் அதனால்தான் அகத்தியனும் சரி முறையாக நல் முறையாக மக்களை நல்வழிப்படுத்தி கொண்டிருக்கின்றான். யானும் பக்கபலமாக என் குடும்பத்தில் ஒருவனாக இருந்தும் போராட்டத்தில் இருந்து மீட்க கடைசிவரை என் தாயவளும் என் தந்தை அவனும் துணையாக இருந்து உயர்வை நோக்கி பின் எவ்வாறு உயர்வை எவ்வாறு உலகத்தில் பெறவேண்டுமா பெறச் செய்வோம் யாங்கள். நிச்சயம் கூட. சத்தியம் கூட.

நல் முறைகள் ஆகவே மனிதன் நிலையை ஆராய்ந்து பார்த்தால் தேடி வருபவர்கள் எவ்வாறு என்பதையும் கூட மேன்மையான நல் எண்ணங்களோடு தேடி செல்ல வேண்டும்.

உண்மைகளை நினைக்கும்பொழுது நல் முறையாய் புண்ணியம் செய்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகத்தில் இனி இடமுண்டு. அதனால் தான் சொல்கின்றேன் ஒவ்வொருவரும் சிறு புண்ணியமாவது தர்மங்கள் செய்திருந்தால் மட்டுமே இறைவன் தேடி வருவான்.

நில்லாததை நில் என்று சொல்பவன் தான் மனிதன்.

மனிதன் இதற்கு தகுதி படைத்தவனா?? என்பதை நினைத்தால் பின் மேலோங்கும் என்பேன் அநியாயங்கள் அக்கிரமங்கள் இன்றளவும் கூட நடந்து கொண்டு இருக்கின்றது.

பின் பின் எவ்வாறு என்பதையும் கூட போலி வருடங்கள் போலியான வருடங்கள் செல்லச் செல்ல போலியான மனிதர்கள் இன்று என் தலத்திற்கு வருகின்றார்கள் முருகா முருகா என்று போலி பக்தியும் காட்டுகிறார்கள்.

ஆனாலும் இதனை கண்டு கொள்ள இறைவனுக்கு சிலை தானே என்று கூட சிலர் எதனையும் என்றுகூட நினைக்க தெரியாமல் ஓடிவிடுகிறார்கள் ஆனாலும் அவர்களைத் தான் நாங்கள் கவனித்துக் கொண்டு இருக்கின்றோம் என்பது மெய்.

இதனையும் கூட முன்னிறுத்தி பார்க்கும் பொழுது அப்பனே இதனையும் ஒன்றும் இல்லை உலகில் உலகில் பின் மனிதன் நினைத்து விட்டால் இறை பலத்தோடு அனைத்தும் சாதித்துவிடலாம். ஆனாலும் பின் மனிதன் பின் நின்ற பொழுதெல்லாம் மனதிற்கு தேவையானதே தான் வாழவேண்டும் என்றே கேட்கின்றான் இவ்வாறு கேட்கும்பொழுது அவன்தனுக்கு நிச்சயம் கிடைக்காது அவனுக்கு அதிர்ஷ்டங்கள் இருந்தாலும் கூட சில நேரங்களில் அவன்தனுக்கு கொடுத்து பின்பு நாங்கள் எடுத்து விடுவோம்.

மற்றவர்களுக்காக அனைவரும் நல் முறைகள் ஆகவே மற்றவர்களுக்காக உழைக்கின்றவன் எங்களுடைய அருளை எப்பொழுதும் பெறுவான் இதைத்தான் யான் செப்புகின்றேன். இதனை தெரிந்து கொள்ளுங்கள் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்பதனை கூட.

நல் முறைகள் ஆகவே இன்னும் சில உண்மைகளை தெரிவிக்கின்றேன்.

நின்று கொண்டிருக்கும் நல் முறைகளாய் யான் எப்பொழுதும் எங்கு என் வீடுகளிலும்  எப்பொழுதும் நின்று கொண்டிருப்பேன் நின்று கொண்டிருப்பேன் எதனால் என்பதைக்கூட மனிதனுக்குத் தெரிவதில்லை தெரிவதில்லை இதனையும் சூட்சுமத்தை அறிவிக்கின்றேன் இப்பொழுதே எதனை என்றும் மனிதன் என்னிடத்தில் கேட்கும்பொழுது பின் நல்  முறைகள் ஆகவே ஆசீர்வாதம் ஆசிர்வாதங்கள் கொடுத்து அனுப்புகின்றேன் ஆனாலும் அதனை பயன்படுத்தாமல் தவறான முறையில் பயன்படுத்திக் கொண்டு அனைத்தையும் இழந்து பின் நல் முறைகள் ஆகவே மீண்டும் தேடி வருகின்றான் அதனால்தான் யான் சொன்னேன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் நின்றபடி . நின்றபடியே  பார்த்துக் கொண்டேதான் இருப்பேன் எப்போதும் கூட கடைநாள் வரையிலும்கூட.

ஆனாலும் நல் முறைகள் ஆகவே என் தந்தை அமர்ந்து கொள்வான். அமர்ந்து கொள்வான் என்பதை கூட பின் பின் நல் முறைகள் ஆகவே அனைத்தும் கூறும்பொழுது, பின் உனது கர்மாக்கள் கழியட்டும் கழியட்டும் என்று கூட பின் கர்மத்தை கஷ்டங்களைக் கொடுத்து அழித்து கொண்டு இருப்பான் என் தந்தை.

ஆனாலும் பின் நல் மனதாய் என் தந்தைக்கு பிடித்துவிட்டால் ஏற்றங்கள். பின் உயர்ந்தோர். பிடித்தவாறு மனிதர்கள் எவரும் இல்லை என்பேன், என் தந்தைக்கு.

ஆனாலும் இனிமேலும் வருவார்கள் நான் சிவனின் குழந்தை! முருகனின் குழந்தை! அகத்தியன் குழந்தை! என்று. ஆனால் அவர்கள்தான் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டுமே  தவிர நாங்கள் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை.

எதை என்றும் எதனை என்றும் கூட தகுதி உள்ளவர்களுக்கு மட்டுமே நாங்கள் தரிசனம் தருவோம். செய்வோம். நிச்சயம் செய்வோம் என்பதைக்கூட இதனை திரும்பவும் உரைக்கின்றேன்.

பின் பின் எவ்வாறு என்பதையும் கூட தொழுது நிற்கும் பொழுது யானே அறிவேன்  பின் இறைவனே நீ என்னிடத்தில் வந்து விடு என்று கூறி விட்டால்  நானே நிச்சயம் வந்துவிடுவேன் என்பதுகூட உண்மை ஆனால் மனிதர்கள் இதுபோல் யாரும் அழைத்ததில்லை மகனே.

இதனை நல் முறைகள் ஆகவே பயன்படுத்தி, பயன்படுத்தி முருகன் நல் முறைகள் ஆகவே யான் என்பேன் எனது பல ரூபங்களில் இருக்கின்றது சுப்பிரமணியர் என்பதிலும் கூட இதிலும் கூட ஒரு சூட்சுமம் அடங்கி இருக்கின்றது அடங்கி உள்ளது என்பேன் சுப்பிரமணியன் என்பதைக்கூட எவ்வாறு நின்று தொழுது பார்த்தால் இதில் சூட்சுமமான விஷயம் உள்ளது. இதனை கண்டுபிடித்து விட்டால் நல் முறைகள் ஆகவே உங்களுக்கு கஷ்டம் என்பதே வராது என்பேன்.

அதனால்தான் முதலில் சு என்பதை எடுத்துக் கொண்டார்கள் என்பேன்.

இதிலும் நன்கு உணர்ந்து சொல்கின்றேன் நல் முறைகள் ஆகவே பின் பின் பின் எந்தனையும்  நல் முறைகள் ஆகவே பிடித்துக் கொண்டு பின் வருடங்களுக்காவது நல் மனதோடு நல் மனதோடு நவ முறை அறுபடை வீடுகளை தரிசனம் செய்துவிட்டு( ஒரு வருடத்தில் ஒன்பது முறை ஆறுபடைவீடு தரிசனம்) சென்று விட்டால் அவன் தனக்கு பிரம்மாவும் மனமிரங்கி பின் விதியையே மாற்றி விடுவான் என்பதையும் கூட சுப்பிரமணி என்கின்றார்கள்.

ஆனாலும் இச் சூட்சுமத்தை இதுவரை மனிதர்கள் அறிந்ததே இல்லை இன்று வரையிலும் கூட.

நல் முறைகள் ஆகவே பயன்படுத்திக் கொள்ளும் அளவிற்கு ஈசனின் சக்திகள் நல் முறைகள் ஆகவே, என் தாய் அவளும் நல் முறைகள் ஆகவே இந்த பூலோகத்தில் சுற்றி திரிவாள் என்பேன். மேன்மேலும் நல் முறையில் ஆகவே அனைத்தும் செய்வித்து எவ்வாறு என்பதை உணர்ந்து அனைத்தும் நிறைவேற்றி வைக்கும் சக்திகள் கூட, என் தாய் என் தந்தை நல் முறைகள் ஆகவே தருவார்கள் மனிதர்களுக்கு மனிதர்களுக்கு தரும் பொழுதும் அதன் பலத்தை அறியாமல் அதன் தகுதியை இழந்து விடுவார்கள் மனிதர்கள்.

இதனால் தான் சொன்னேன் கற்றவை கற்றபடியாகவே  நிற்க வேண்டுமே ஆனாலும் இதனை மனிதர்கள் கற்றதோடு மட்டும் ஓடிவிடுகிறார்கள் இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்பேன்.

நல் முறைகள் ஆகவே மனமிரங்கி யான் சொல்ல வந்தேன் இப்  புண்ணியங்கள் பெறும் பொழுது. புண்ணியங்கள் பெற்று பெற்று நல் முறையாக எங்களை வணங்குபவர்களை முதலில் யாங்கள் புண்ணியம் தேட வைப்போம் புண்ணியம் தேடி தேடி அலைந்து திரிந்தால்  யாங்கள் காட்சி அளிப்போம் இக்கலியுகத்தில்.

நான் நிச்சயமாய் காட்சியளிப்பேன்.என் பக்தர்களுக்கு ஆனாலும் எங்களுக்கு நல் முறைகள் ஆகவே எங்களுக்கு தகுந்தவாறு மனிதன் நடக்க வேண்டும் என்பேன், என்பதுதான் மெய்.

ஆனாலும் யாரும் நடப்பதில்லையே அதனால் தான் யாரும் எங்களை காணுவதும் இல்லை.

இதனை கூட யானும் சொல்லிவிட்டேன் எங்களை பார்ப்பதற்கு எவ்வாறு என்பதையும் கூட உத்தரவிட வேண்டும் என்பதைக்கூட இதனை நடத்தி கொண்டு புண்ணியம் செய்து கொண்டு இருந்தால் நிச்சயம் என் தரிசனம் கிடைக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு ரூபத்தில்.

பின் நல் முறைகள் ஆகவே என் தாயவளும் என் தந்தையவனும். சற்று நிதானத்துடன் தான் செயல்படுவார்கள். ஆனாலும் தண்டனைகள் உண்டு இதனையும் நான் சொல்லி விடுகின்றேன். இப்பொழுது முதன்முறையாக இப்பிறப்பில் செய்யும் தவறுகள் அடுத்த பிறவி எடுக்கும்பொழுது பல பாவங்கள் வினைக்கு ஏற்ப பிறவிகள் பின் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதை கூட விதியில். ஆனாலும் என் தந்தையோ கிரகங்களை அழைத்து நல் முறையாகவே பரிசளித்து விட்டான் கிரகங்களே மனிதர்களில் இந்த ஜென்மத்தில் இந்த ஜென்மத்தில் செய்யும் தவறுகளுக்கு இப்பொழுது நீங்கள் உடனடியாக தண்டனை கொடுத்து தீர்க்க வேண்டும் என்பதைக்கூட கூறிவிட்டான் இதுதான் உண்மை அதனால் தான் சொல்கின்றேன் பின் தவறுகள் செய்து விட்டு பின் என் தந்தையை வணங்கினால் நல் முறைகள் ஆகவே பின் நிச்சயமாய் இப்பிறவியில் செய்த தவறுகளால் இப் பிறப்பிலேயே அடி நிச்சயம் பலமாக உதிரும் என்பேன்.

நல் முறைகளாக சம்பந்தங்கள் பல உண்டு சம்பந்தங்கள் பெற்ற பின்புதான் யான் வாக்குகளாக சொல்கின்றேன் இன்றளவும் நல் முறையாக ஆசிகள்.

வடிவேலன் உரைத்த பொது வாக்கு முற்றிற்று.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday 12 August 2021

சித்தன் அருள் - 1023 - கருடபகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!

கருட பகவான் மேலும் வினவினார்.

"ஹே! பரமாத்மா! ஒருவன், மனத்தூய்மையோடு, தானதர்மங்களைத் தன கையாலேயே செய்வானாயின் அதனால், அவன் அடையும் பயன் என்ன? அவனுக்காக அவனுடைய மகன் முதலியோர் தான் தர்மம் செய்வார்கள் ஆனால் அதனால் உண்டாகும் பயன் என்ன? தான தர்மம் செய்யும் பொழுது முறை தவறாகச் செய்தால் ஏற்படும் பயன் என்ன? இவற்றை திருவாய் மலர்ந்து அருள வேண்டுகிறேன்!" என்றார்.

பரமாத்மா கூறலானார்.

"கலுழனே! மனத்தூய்மை இல்லாமலும், மன உறுதி இல்லாமலும் செய்யப்படும் நூறு கோதானங்களுக்கு எத்தனைப் பயன் உண்டோ, அத்தனை பயனும் சித்த சுத்தத்தோடு, சாஸ்த்திரங்களில் விதித்த வண்ணம் ஒரு பசுவை தானம் வாங்குவோரும் நல்லவராக வேண்டும். 

ஒருவன் இறந்த பிறகு அவனை குறித்து செய்யப்படும் செய்யப்படும், லட்சம் கோதானங்களுக்கு என்ன பயனோ, அத்தனை பயனும் அவன் இறக்கும் காலத்தில்  செய்யும் ஆயிரம் கோதானத்திலேயே கிட்டிவிடும். ஆகையால்தான், கலுழனே! ஒருவன் தனது மரண காலத்திற்குள்ளேயே, கோதானம் முதலிய சிறந்த தானங்களை செய்வது மிகவும் நல்லது என்பதை தெரிந்துகொள். 

தானமும் நல்லதாக இருக்க வேண்டும், தானம் வாங்குவோரும் நல்லவராக இருக்க வேண்டும்.

தானம் கொடுக்கப்படும் இடமும் நல்ல க்ஷேத்ரமாக இருக்க வேண்டும். 

தானம் கொடுப்பவனுடைய மனமும் தூயமையானதாக இருக்க வேண்டும்.

இவை அனைத்துமே, ஒன்று சேர்ந்துவிட்டால், ஒன்று ஒரு கோடி பயனைத்தரும்.

கற்றுணர்ந்த சான்றோருக்கு கொடுக்கப்படும் தானம், நாளுக்கு நாள் விருத்தி அடையும்.

தானத்தை வாங்கிக்கொள்பவர் உத்தமராக இருந்துவிட்டால், தானம் கொடுப்போனுக்கு அதிக புண்ணியம் உண்டாகும்.

விஷத்தைப் போக்கும் மந்திரம், குளிரைப் போக்கும் அக்னியும் தத்தமது சக்திகள் தத்தமது செயல்களால் இழந்து விடுவதுமில்லை. அந்த சக்திகள் குறைவதுமில்லை. அது போலவே, தானம் வாங்கும் உத்தமரும், அவருடைய நற்கர்மத்தாலும், நல்லொழுக்கத்தாலும் குற்றமற்றவராவர்.

உத்தம பயனை அடைய விரும்புவோன், கோதானம் முதலிய தானங்களை செய்யும் பொழுது வேத சாஸ்த்திரங்களை ஓதி உணர்ந்த செந்தண்மை பூண்டு, அந்தணனான உத்தமனுக்கே கொடுக்க வேண்டும்.

வேத ஸ்த்திரங்களை ஓதாமலும், ஒழுக்க வழியில் நில்லாமலும், பிராமணன் என்ற பெயரை கொண்டவனுக்கு கோதனம் கொடுத்தால், அந்த கோதானமே, கொடுத்தவனுக்கு, நரகத்தை கொடுக்கும். 

மேலும் தானம் வாங்குவதற்கே தகுதி இல்லாதவன் தானம் வாங்குவானாயின் அவன் இருபத்தொரு தலைமுறையில் உள்ளவர்களோடு நரகம் புகுவான். 

ஒரு பசுவை ஒருவனுக்கு மட்டுமே தானம் கொடுக்க வேண்டும். 

எப்போதாயினும், ஒரு பசுவை பலருக்கு தானம் ஆக கொடுக்க கூடாது. 

அப்படிக் கொடுத்து, அந்த பசுவை, தானத்தை வாங்கியவர் அதை விற்று, அந்த தொகையை பங்கு போட்டுக்கொண்டாலும், ஒருவர் ஒரு மாதம் வைத்திருப்பது, மற்றொருவர் அடுத்தமாதம் வைத்திருந்து அனுபவித்துக் கொள்வது, என்று விதித்துக்கொண்டாலும், தானம் கொடுத்தவன், தன் ஏழு தலை முறையினரோடு நெடும்காலம், நரகத்தில் வாசம் செய்வான்.

சாதுக்களிடம், நல்ல பொருட்களை, பக்தி சிரத்தையோடு தானம் கொடுப்பவன், அந்தப்பிறவியிலாவது, மறுபிறவியிலாவது அதற்குரிய நற்பயனை சந்தேகமின்றி அடைவான். அந்த பயன், பெட்டியில் வைத்து பூட்டிய பொருளாகவே நினைக்கத் தக்கது. 

அதிக தனம் உடையவன், இறந்த பிறகு அவனது பிள்ளைகள் அப்பனுக்கென்று பக்தியாகவும், சிரத்தையோடும், மனத்தூய்மையோடும் செய்யும் க்ரித்யங்களால் அவன் அடையக்கூடிய நல்லுலகை விட மேலானதாகிய உலகத்தை, புத்திரனில்லாதவன், தரித்திரனுமாகிய ஒருவன் சொற்ப அளவுடைய தர்மத்தை, தான் வாழும் காலத்தில் தானே தன் கையால் செய்வானாகின், அடைந்து விடுவான்.

கலுழனே! அயலூருக்கு பயணம் செல்பவன், கட்டுசோற்றை, கையிலே கொண்டு செல்வானாகில், வழியிலே, பசி பற்றிய கவலை இல்லாமல் எப்படி செல்வானோ, அவ்வாறே, ஒருவன் உயிரோடு இருக்கும் காலத்தில், அன்னதானம், கோ தானம் முதலிய தானங்களை தன் கையாலேயே செய்துவிடுவானாகில், மரணமடைந்து செல்லும் போது பசி தாகம் எதுவும் அடையாமல், நல்லுலகத்தை சேர்ந்து சுகிப்பான். 

கையிலே கட்டமுதை காட்டிக்கொள்ளாமல் செல்பவன், பசி தாக்கத்தால் வருந்துவதைப் போல, தான தர்மங்களை தான் வாழும் காலத்தில் தன் கையாலேயே செய்யாதவன், இறந்து செல்லும் போது, வழியில் மிகுந்த துன்பம் அடைவான்.

புனிதமான தலத்தில், புண்ணிய தலத்தில் செய்த நல்வினையாகிய நற்கர்மம், நெய் பெய்த அக்னி ஓங்கி வளர்வதை போல பயனாக வளரும்.

புண்ணிய ஷேத்ரமில்லாத எந்த இடத்திலாயினும், புண்ணிய காலமில்லாத எந்த காலமாயினும், விருஷோற்சனம் செய்து, நல்ல ஒழுக்க சீலமில்லாத அந்தணனுக்கு தானம் கொடுத்து விட்டாலும் கூட அந்த விருஷோற்சனம் என்ற புண்ணிய கர்மத்தின் மகிமையால், உத்தம ஷேத்ரத்தில், உத்தம காலத்தில், உத்தம பிராமணனுக்கு தானம் கொடுத்தால் என்ன பயன் உண்டோ, அந்த பலன் நிச்சயமாக கைகூடும்.

ஆகையால், ஒரு மனிதன் நற்கதி  அடைவதற்கு, முதற் காரணமாக அமைவது விருஷோற்சனம் ஆகும். இன்றிருப்பர், நாளை இருப்பார் என்று எண்ணுவது திடமில்லை. மனித உடல் அநித்தியமாகயால், நல்ல காரியங்களையும், நற்செயல்களையும், நாளை செய்துகொள்ளலாம் என்று நினைக்காமல், நற்கர்மங்களை நினைத்த அன்றே செய்வது நல்லது.

புத்திர பாக்கியமுடையவன், தன் கையால், எந்த ஒரு தருமத்தையும், செய்யாமல், இறப்பானாகில், நற்கதி அடையமாட்டான். 

புத்திரனே இல்லாதவன் நல் வினைகளை செய்து மரிப்பானாகில் நற்கதியை அடைவான்.

யாகம் செய்வதையும், கோதானம் முதலிய சிறந்த தானங்களை செய்வதை விட, விருஷோற்சனம் செய்வதே உத்தமமான நற்கர்மம் ஆகும்.

கார்த்திகை மாதத்து பௌர்ணமியிலாவது, மற்று எந்த  புண்ணிய தினத்திலாவது, உத்தராயண காலத்தில், சுக்ல பட்சத்திலாவது, கிருஷ்ண பட்சத்திலாவது, துவாதசியிலாவது தூய மனத்தோடு உத்தமமான திருத்தலத்தில் நல்ல திதி, யோக நட்சத்திரத்தில், நல்ல முறையில் வேத சாஸ்த்திரங்களை கற்றுணர்ந்த ஒழுக்கமுடைய அந்தணர்களை வருந்தி அழைத்து, சுபம் ஹோமம் முதலியவற்றை செய்வித்து, தன்னை தூயமையாளனாக செய்துகொண்டு, நவகிரகங்களையும் பூசித்து, மாதுர் தேவதைகளை அர்ச்சனை செய்து, பூர்ணாஹுதி கொடுத்து, மஹாவிஷ்ணுவை குறித்து ஸ்ரார்த்தம் செய்து, மந்திர நீரால் ரிஷபக்கன்று ஒன்றை நீராட்டி, ஆடை ஆபரணம் கந்த புஷ்பங்களால், நன்றாக அலங்கரித்து, மேலும், நான்கு ஆண் கன்றுகளோடு அந்த காளை கன்றானது, அக்னியை வலம் வரச்செய்து, வடதிசை நோக்கி நின்று, அந்த ரிஷபக்கன்றை நோக்கி "தர்மமே நீயே ரிஷ்பமானாய்! பிரம்மனாலே ஆதியில் படைக்கப்பட்டாய்!" என்று சொல்லி இறந்தவனுக்காக தானம் செய்தால், அவனை குறித்தும், செய்பவன், தனக்கே செய்து கொள்வானாயின், தன்னை குறித்தும், அதன் வாலில் மந்திர நீர் விட்டு, அந்த நீரை தன கரத்தால் ஏந்தி, தன சிரசின் மீது ப்ரோக்ஷித்து கொண்டு, ஆண் கன்றுகளோடு அந்த ரிஷபக்கன்றையும் விட்டு விட வேண்டும்.

கருடா, இந்த விருஷோற்சனமானது இறந்தவனைக் குறித்து செய்யப்பட்டதே ஆனால், உடனடியாக ஏகாதிஷ்ட ஸ்ரார்தத்தை செய்து விட வேண்டும். 

இறவாத்திருப்பவன், தனக்குத் தானாகவே செய்து கொள்வானாயின், தனக்கு பிரியமாக இருக்கும், நற்பொருட்களை அந்தணருக்கு தானமாக கொடுக்க வேண்டும். 

விருஷோற்சனம் செய்யாவிட்டால், பிரேத ஜென்மம் பற்றாமல் விடாது. ஆகையால் அந்த விருஷோற்சனம் செய்யாமலேயே, மற்ற நற்கர்மங்களை தனக்குத்தானே செய்து கொண்டாலும் கூட, மரித்த பிறகு புத்திரர் முதலியவர்கள் பற்பல நல் வினைகளை செய்தும் கூட, அவற்றால் எந்தவித பயனும் இல்லை என்று உணர்வாயாக. 

ஒருவன் மரித்த 11வது நாளிலாவது, ஷோடச ஸ்ரார்தத்தை, சபிண்டீகரணத்துக்கு முன்னதாகவே செய்து, ததியாராதனம் செய்து பலதானமும் கொடுக்க வேண்டும்.

பருத்தி ஆடையின் மீது, செம்பினால் வட்டில் செய்து வைத்து, அதில் சாளக்கிராமம் வைத்து, ஆடை முதலியவற்றால் அலங்கரித்து, ஆராதனை செய்து, நற்பிராமணனுக்கு அதையும் தானமாக கொடுக்க வேண்டும். 

வைதரணி என்ற நதியை தீ துன்பம் இல்லாமல், காக்கும் பொருட்டு, கரும்பினால் ஓடம்செய்து, வெண்பட்டினால் அதை சுற்றி நெய் ஊற்றிய வெண்கல பாத்திரத்தை அதனுள்ளே வைத்து, ஸ்ரீமன் நாராயணனை அர்ச்சித்து, அந்த ஓடத்தை பிராமணனுக்கு தானமாக கொடுத்தால், நலம் உண்டு.

கருடனே! எள், இரும்பு, பொன், பருத்தி, உப்பு, நவதானியங்கள் ஆகியவற்றையும் தவிர்க்காமல் தகுதி வாய்ந்த அந்தணருக்கு, தானமாக கொடுக்க வேண்டும். 

தானம் கொடுப்பவன், எளியவனாக இருந்தால், அவற்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்தாலும் போதுமானது. சக்தியை அனுசரித்து, பொருள் கொடுத்து, தில தானமும், சய்யா தானமும் செய்ய வேண்டும். இந்த இரண்டு தானங்களுக்கும் தட்சிணையை அதிகமாக கொடுத்து அந்தணரை உவப்புடன் ஏற்கச் செய்ய வேண்டும். சய்யா தானம் வாங்கும் அந்தணனை, இருக்கச் செய்து தானம் செய்வது சிறப்புடையது. புத்திரன் இல்லாமல் இறந்தவனுக்கு பௌத்திரன் முதலியவர்களில் யாராவது செய்தால், நற்கதி உண்டாகும். தன் சக்தியை அனுசரித்து, நித்திய தானம் செய்பவன் யாவனோ, அவன் தன் வாழ்வின் இறுதியில், நற்கதியை அடைவான்.

உடலானது திடமாக இருக்கும் போதே, திருவணை முதலிய ஷேத்ராடனமும், கங்கை யாத்திரையும் செய்ய வேண்டும். 

தாய், தந்தையர் இறந்த பிறகு, ஆண்டாண்டு தோறும், அவர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். 

தாய், தந்தை, குரு முதலியவர்களுக்கு தன்னால் இயன்ற புண்ணியத்தை செய்து கொடுக்க வேண்டும். 

கருடா! மரித்தவரை குறித்து கிரியைகளை செய்யும் பொழுது, அந்தணருக்கு, எவன் ஒருவன் பூரி(தக்ஷிணை) கொடுக்கிறானோ, அவன் தான் வேண்டிய நல்லவைகளை எல்லாம் அடைந்து மகிழ்வான். அவன் பிரேத ஜென்மத்தை அடைய மாட்டான். யோகிகள், சன்யாசிகள், துறவிகள் முதலியவர்கள் எந்த லோகத்தை அடைவார்களோ, அந்த புண்ணிய லோகம் அவனுக்கு கிட்டிவிடும். 

கருடா, ஒருவன் மரித்த பிறகு செய்ய வேண்டிய கிரியை பற்றி உனக்கு ஒருவாறு கூறினேன்" என்று கூறி அருளினார்.

சித்தன் அருள்................தொடரும்!

Wednesday 11 August 2021

சித்தன் அருள் - 1022 - அருணாச்சலத்தில் குருநாதர் வாக்கு!


ஆடி அமாவாசை 08/8/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு உரைத்த இடம் திருவண்ணாமலை

ஆதி சித்தனை மனதில் எண்ணி செப்புகிறேன் அகத்தியன்.

அப்பனே அருள்கள் அருள்கள் கொடுத்துக் கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றேன்.

அப்பனே நல் முறையாக மாற்றம் இவ்வுலகத்தில் சில சில தீவினைகளும் நடக்கும் என்பேன்.

ஆனாலும் எவையென்று கலியுகத்தில் நான் காப்பேன் என்பேன்.

அப்பனே நல் முறைகளாக இவ்வுலகத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றேன் நல் முறையாக என்னுடைய பக்தர்களுக்கும் ஆசிர்வாதம் தந்து கொண்டு வந்துதான் இருக்கின்றேன் அப்பனே நல் முறைகளாக குறைகள் இல்லை.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் விதியின் பாதையிலே சென்று நல் முறையாக கடந்துவிட்டால் அப்பனே பிறப்புக்கள் இல்லை.

எவை எவை என்று உணர்வதற்குள் காலம் கடந்து விடுகின்றது இவ்வுலகத்தில் நிலையானது ஏதுமில்லை அப்பனே. கஷ்டங்கள் வருகின்றது என்று கவலைப்படத் தேவையில்லை என்னால் அனைத்தும் செய்ய முடியும் என்பேன். அப்படி அனைத்தும் செய்துவிட்டால் பிரம்மாவுக்கு வேலை ஏது?. பின் நல் முறையாய்        பிறவிப்பெருங்கடலையும்  கடக்க முடியாது என்பேன். அதனால்தான் அப்பனே சொல்லுகின்றேன் சில கஷ்டங்களை அனுபவித்து தான் தீர்க்க வேண்டும். அப்பனே, கஷ்டங்கள் அனுபவங்கள் ஆகும் என்பேன்.

நல் முறைகளாக விதியின் பாதையிலே சென்று அனைத்தையும் தீர்க்க வேண்டும். அப்பனே இதைத்தான் நான் கூறிக் கொண்டே வந்து இருக்கின்றேன்.

விதியின் பாதையிலே சென்று நான் மதியால் வெல்ல வைப்பேன் என்பேன்.

இப்பூவுலகில் எதனை எதனை தேடிச் சென்று திரிந்தாலும் அதெல்லாம் அழியக்கூடியது அப்பனே.

இறைவனே மெய் என்பதை உணர்ந்து விட்டால் அப்பனே இறைவனே வந்து உதவி செய்வான் யானும் உதவிகள் செய்வேன் அப்பனே.

அப்பனே காலங்கள் செல்கின்றது காலங்கள் செல்ல செல்ல சித்தர்களும் எழுவார்கள் என்பேன்.

நல் முறையாக இவ்வுலகத்தில் இறையே பலம் என்பேன் இறை தான் உலகத்தில் பெரியது அப்பனே.
இவ்வுலகத்தில் அழிக்க முடியாதது இறைவனே என்பேன். மற்றவை எல்லாம் அழியக்கூடியது என்பேன்.

எவ்வாறு என்பதை கூட சூரியனும் ஒருநாள் மறைந்துவிடும். சந்திரனும் ஒரு நாள் மறைந்துவிடும். இவையெல்லாம் இயக்கும் தகுதி அப்பனே இறைவனிடத்தில் மட்டுமே.

இறைவனுடைய அனுகிரகம் பெற்று நல் முறையாக இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றது.

சூரியனும் மக்களை நல் முறையாக பார்க்கின்றான் இறைவனிடத்தில் சொல்கின்றான் சூரியன் எவ்வாறு என்பதையும் கூட

இறைவா மனிதர்களிடத்தில் மாயை எண்ணங்கள் தோன்றி விட்டது நான் எதைச் செய்ய வேண்டும் பலமாக வெளிச்சம் காட்ட வேண்டுமா? வெப்பத்தை அதிகப்படுத்த வேண்டுமா? நல் முறைகளாக சாந்தப்படுத்த வேண்டுமா? என்று சூரியனும் கேட்கின்றான்.

ஆனாலும் இறைவன் சூரியனே சற்று பொறு சூரியனே சூரியனே என்கின்றான்.

ஆனாலும் சூரியனுக்கும் மனிதர்களைப் பார்த்தால் கோபம் தான் சற்று அதிகம்.

நல் முறைகளாக எதனை என்றும் எவ்வாறு என்பதும்கூட மனிதர்கள் மாறினால் இயற்கையும் மாறும் என்பேன் இயற்கைதான் இறைவன் என்றும் வகுத்துக் கொள்ளலாம்.

அப்பனே காலங்கள் மாறும்.

அப்பனே காலங்கள் மாறுவதில்லை மனிதன் மாறுகின்றான் அதனால் காலமும் மாறுகின்றது.

அப்பனே இனிமேலும் மனிதர்கள் மனதில் சற்று நல் முறையாகவே அனைத்தும் செய்து வந்தால் காலம் கனிந்து வரும் .

பின் தீவினைகள் செய்துவிட்டால் காலமும் நிச்சயமாய் தீவினை தான் செய்யும்  என்பேன் அப்பனே.

அப்பனே நல் முறையாய் பின் பருவ காலங்கள் மாறி மாறி அமையும் என்பேன் ஏனென்றால் மனிதன் மனம் குரங்கு என்பேன்.

அப்பனே இறைவனை விட அடுத்து பெரிது மனம் என்பேன்.

மனதை நல் முறையாக அடக்கி விட்டால் இவ்வுலகத்தில் மனம் எவ்வாறு என்பதையும் கூட இறைவனே அந்த மனதில் இறங்கி விடுவான் அப்பனே.

இந்த உலகத்தில் பெரியது என்றால் மனதை அடக்குவது தான் என்பேன்.

அப்பனே நல் முறையாக மாயையில் மனிதர்கள் விழ விழ மனிதர்களுக்கு ஆபத்து என்பேன் ஆனாலும் நான் விடமாட்டேன் மாய வலையில் நீங்கள் சிக்கிக் கொள்வதற்கு.

அப்பனே மனிதன் நினைப்பது இறைவனுக்கு சிரிப்பாகத்தான் இருக்கிறது நல் முறைகள் ஆகவே ஆனால் பிறப்பின் ரகசியம் பிறக்கும்போது மனதில் எண்ணங்கள் இல்லை. வளரும் போது சில எண்ணங்கள். அப்பனே இவ்வெண்ணங்கள் அழிப்பதற்கு அப்பனே

மாயையில் சிக்கிக் கொண்டு கர்மங்களை பலமாக பெற்றுக் கொள்வதற்கு ஆனாலும் இதனை நான் விட்டு விடுவதில்லை. அப்பனே என்னை வணங்குபவர்களுக்கு ஒன்றை மட்டும் நன்கு கெட்டியாக சொல்கின்றேன், கர்மத்தை சேர்க்க விடமாட்டேன் அதனை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.

அப்பனே நல் முறைகள் ஆகவே அனைத்தும் நிறைவேறும் என்பேன் நல்முறையாக மெய் பொருள் என்பதை உங்களுக்கு காட்டிக் கொண்டே இருப்பேன்.

இன்றைய பொழுதும் இத்திருத்தலத்தில் இருந்து அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் மீண்டும் வந்து வாக்குரைக்கின்றேன். அதிவிரைவிலே உண்மைகளை நல் முறையாக சொல்கின்றேன். அப்பனே அனைவருக்கும் என் நல்லாசிகள்.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...................தொடரும்!

Monday 9 August 2021

சித்தன் அருள் - 1021 - சிவபெருமான் சுடலையில் கூத்தாடும் காரணம் என்ன?


சிவமகா புராணத்தில், ஸநத்குமார ஸம்ஹிதையில் சுடுகாட்டில்/சுடலையில் பெருமான் கூத்தாடும் காரணம் என்ன என்று அறிந்திட, பார்வதி தேவி சிவபெருமானை நோக்கி,

சுவாமி! உலகங்கள் அனைத்தும் உருவாக்கும் அகிலாண்டேஸ்வரர் ஆன தாங்களே ஆனந்தமாக மாளிகைகளிலும் நந்தவனங்களிலும் வாசம் செய்யாமல் அகோரமான மயானத்தில் வசிப்பது ஏன்?

அனேக ஆயிரம் பிணங்களைச் சுடுவதாகவும், எலும்பு, கொழுப்பு, இரத்தம், மாமிசம் முதலியவற்றினின்று துர்நாற்றம் வீசுவதாகவும் பூதம், பிரேதம், பைசாசங்கள் குடியிருப்பதும், காகம், கழுகு, பருந்து முதலிய பறவைகளும் செந்நாய் முதலிய மிருகங்களும் வாசம் செய்வதும், பிரேத மந்திரங்களை உச்சரிக்கும் இடமாயும் உள்ள மயானத்தில், நீர் யானைத் தோலையும் புலித்தோலையும் உடுத்தி பிரம கபாலத்தையே மாலையாகப் பூண்டு எப்போதும் அட்டகாசஞ்செய்து  மூவுலகங்களும் நடுங்கச் சிரித்துக் கூத்தாடிக் கொண்டு பித்தம் பிடித்தவரைப் போல வசிப்பது ஏன்?

வேதங்களுக்கும் எட்டாத வடிவினரான உமக்கு அந்தச் சுடுகாட்டில் பிரியம் ஏற்பட காரணம் என்ன?

உம்முடைய மயான வாசத்தைக் கருதி, என்மனம் சுழல்கிறது. 

சர்வ தேவ மயமாகவும், சர்வ தேவர்களாலும் பூஜிக்கத் தக்கவராயும் மகா தேவராயும் விளங்கும் உமக்கு இது யுத்தம் இல்லயென்று நினைக்கிறேன். இது எனக்கு ஆச்சரியமும் துக்கமும் ஊட்டுகிறது.

அவ்விஷயம் சொல்லக் கூடாத விஷயமாக, பரம ரகசியமாக இருந்தாலும் உம் பக்தையும், பிரியையுமான எனக்குத் தாங்கள் உணர்த்தியருள வேண்டும்!" என்று கேட்கவே சிவபெருமான் மலர்ந்த முகத்துடன் உலக மாதாவான பார்வதி தேவியை நோக்கிச் சொல்லத் துவங்கினார்.

"உமாதேவியே! உலகில் உள்ள உயிரினங்களுக்கெல்லாம் பிரளயமானது நான்கு வகைப்பட்டு நிகழ்கிறது. அவை நித்தியம், நைமித்திகம், பிராகிருதம், ஆத்தியந்தம் என்பனவாம்.

  • நித்தியம் என்பது தமக்கு அளவிட்ட காலங்கழிய இருத்தலாகும். 
  • நைமித்திகம் சிற்சில காரணங்களால் பலர் குழுமி இருத்தலாகும்.
  • பிராகிருதம் பிரம கற்பத்தில் ஒழிதலாகும். 
  • ஆத்தியந்தம் என்பது இவ்வாறு அழிந்தழிந்துத் தோன்றும் தேகிகள் யாவும் முக்தியடையும்படி சர்வ சங்கார காலத்தில் அண்டாண்ட பிரமாண்டங்களையும் பிரமாதி தேவர்களையும், தானவ, யக்ஷ, கருடாதி கணங்களையும் எல்லாவற்றையும் அழிக்கத் தக்கதாய் பஞ்சபூதங்களில் ஒன்றால் சங்கரித்து, யாவும் அழியும்படி ஒருவனாக நின்று சங்கார கிருத்தியஞ் செய்வேன். அப்போது நீ ஒருத்தியே என் அருகில் இருப்பதால் அச்சமயத்தில் நான் நடனஞ் செய்யவும், நீ என் நடனத்திற்கு ஏற்ப கைத்தாளம் போடவுமாக இருப்போம். அவ்வாறு அந்தப் பெருந்தேவர்களது உடல்கள் விழுந்து கிடக்கும் மயானம் முழுவதும் சுற்றி நடனம் செய்வதால் எனக்குச் சுடலையாடி என்றதொரு பெயர் வழங்கும்.

அதுவுமின்றி ஒரு காலத்தில் நான் மயானத்தில் ஆனந்தமான நடனஞ் செய்து கொண்டிருக்கையில் பற்பல பூத வேதாளங்களெல்லாம் தாளம் போட்டுக் கொண்டும் பாடிக் கொண்டுமிருந்தன. அந்தச் சமயத்தில் விஷ்ணு பல தேவர்களுடன் கூடி, அங்கு வந்து என்னைக் கண்டு மகிழ்ந்து, 'ஐயனே! இவ்வண்ணம் இங்கு நடனஞ் செய்வதும், பூதப், பிரேதப், பைசாச, டாகினி, சாகினிகள் பாடவும் தாளம் போடவும் கொக்கரிக்கவும் கூத்தாடவும் இருப்பது மிகச் சிறந்ததுதான். அவ்வாறு செய்யாவிட்டால் இக்கணங்கள் பூவுலகமெங்கும் பரவி பலரையும் துன்புறுத்தும். அவை துன்புறுத்தாதவாறு உமக்குத் தொண்டு செய்வனவாக இருப்பதே உத்தமமான செயலாகும்' என்று பலவாறு புகழ்ந்து கூறினார்கள்.

அவர்களில் விஷ்ணு என்னை நோக்கி, 'சிவ மூர்த்தியே! சகல பாவங்களையும் ஓடும்படிச் செய்வதாலும் எல்லோரையும் பயப்படுத்துகிற பூதப் பிரேத பைசாசாதிகளையும் அழச்செய்வதாலும்  "ருத்திரன்" என்றும் "சங்கரன்" என்றும் "ஹரன்" என்றும், காலரூபியாக இருந்து உலக காரியங்களையெல்லாம் நடத்துவதால் "காலன்" என்றும், பிரளய காலத்தில் சகல லோகங்களையும் வயிற்றினுள் அடக்கும் வல்லமையால் "ஸர்வன்" என்றும், உற்பத்தி காலத்தில் காமபிஜத்தைக் கொண்டே முக்குணங்களையும் லோகங்களையும் படைத்ததால் "பவன்" என்றும், உக்கிரமான யாகங்களாலும் திருப்தியடைவதால் "உக்கிரன்" என்றும் பூமி முழுவதற்கும் உற்பத்திக் கர்த்தாவும் சர்வதேவ பூஜ்யனாயும் மகத்திற்கு மகத்தாயும் விளங்குவதால் "மஹாதேவன்" என்றும் விளங்குகிற விமலரே! ஆக்கல், காத்தல், அழித்தல் என்பனவற்றை இயற்றுவிக்கும் ஆற்றலுடைய மகாதேவரே! நீர் இவ்வண்ணம் மயானத்திலேயே எப்பொழுதும் கூத்தாடிக் கொண்டிருக்க வேண்டும்' என்று பலவாறு பிரார்த்தித்தார். அவ்விஷ்ணுவும் அவருடன் வந்து தேவர்களும் செய்த வேண்டுகோளுக்கு இணங்கி, மயானத்தையே எனக்கு வசிக்கும் இடமாகக் கொண்டேன்.

மேலே சொன்ன பெயர்களில் எனக்கு விருப்பம் அதிகமாக உண்டு. அப்பெயர்களைக் கொண்டு, என்னைப் பூஜித்தவர்கள், தேவர்களால் பூஜிக்கப்பட்டு உயர் பதவியை அடைவார்கள். இப்பெயர்களை மனப்பாடம் செய்தவர்கள் உயர் பதவியை அடைவார்கள்.

நானே காலரூபி. நீயே காளராத்திரி. என் ரூபத்தை நீயே அறிவாய். உன் சொரூபத்தை நான் அறிவேன். நீயே நாராயணனாகவும் விளங்குகிறாய். ஆகையால் நீயும் நாராயணனும் சமமானவர்கள். நீயும் நானும் சமமானவர்கள். யாவும் நானேயாக விளங்குகிறேன். அநேக புண்ணிய ஸ்தலங்களைவிட எனக்கு மயானத்தில் விருப்பம் அதிகம். புண்ணிய ஸ்தல, புண்ணிய தீர்த்த பயன்களையெல்லாம்  மேற்கூறிய நாமங்களை ஸ்மரித்தவர்களுக்கு நான் தருவேன். இந்தச் சரிதத்தைப் பக்தியோடு வாசித்தவர்கள், சகல பாவங்களும் நீங்கி இஷ்ட போகங்களை அனுபவிப்பார்கள்" என சிவபெருமான் கூறினார், என்று வியாஸ முனிவருக்கு ஸநத்குமார முனிவர் எடுத்துரைத்தார்.

ஓம் நமோ பகவதே ருத்ராய!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்...............தொடரும்!

Friday 6 August 2021

சித்தன் அருள் - 1020 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!


இன்று குரு அகத்தியர் உரைத்த பொதுவாக்கு 

ஆதி ஈசன் பொற்பாதங்களை வணங்கி அகத்தியன் உரைக்கின்றேன் நல் முறையாக அனைவருக்கும் என் ஆசிகள்!

இந்த உலகம் இப்பொழுது அதர்மத்தை நோக்கித்தான் செல்லுகின்றது. அதர்மம் மிகுந்து விட்டது. அப்பனே நல்முறையாக ஈசனும் அதர்மத்தை அழித்து விட இன்னும் பல பரீட்சைகள் செய்வான் என்பேன். இனி நல்லவர்கள் மட்டுமே இந்த பூமியில் வாழ முடியும் என்பேன். தவறான பாதையில் செல்பவர்கள் அழிந்து போவார்கள் என்பேன்.

என் பக்தர்களுக்காக பிரம்மாவிடம் அதிகம் சண்டையிடுவது நான்தான். பிரம்மாவும், நல்முறையாக மனிதர்களுக்கு, அகத்தியா ஏன் இப்படி என்று கேட்க  என்னையே வணங்கி விட்டார்கள் என்ன செய்வது! பாசம் அவர்கள் என்மீது காட்டும் பக்தியையும் அன்பையும் திரும்பவும் அவர்களுக்கு நான் காட்டுகிறேன். என் பக்தர்களை நான் காப்பாற்ற வேண்டும் என்று அவனை அடிக்கடி தொந்தரவு செய்கின்றேன்.

அப்பங்களே நல் முறையாக வாழுங்கள்!

இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நான் திரும்ப திரும்ப அதையே தான் கூறிக் கொண்டு வந்திருக்கின்றேன்.

நல் முறையாக திரிபலா, திரிகடுகு சூரணம், தினமும் அவசியம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதைத் திரும்பத் திரும்ப உரைத்துக்கொண்டே வந்திருக்கின்றேன் நிச்சயம் என் பக்தர்கள் இதனை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன்.

நான் இப்பொழுதும் பூமியில்தான் வலம் வந்து கொண்டு இருக்கின்றேன். என்னுடைய பக்தர்களை ஒவ்வொருவரையும் பார்த்து நல்லது செய்து கொண்டே வந்து இருக்கின்றேன். நீங்கள் அனைவரும் புண்ணியரே! பல பிறவிகளில் புண்ணியம் செய்திருந்தால் மட்டுமே என் பெயரை உச்சரிக்க முடியும் என்னை வணங்கவும் முடியும்.

இப்பொழுது உலகமே இருளில் இருந்தாலும் நிச்சயம் நல்ல மாற்றங்கள் உண்டு என்பேன். தர்மம் செழித்து மேலோங்கும் பொழுது அனைவரும் நன்றாக வாழலாம் என்பேன். அதர்ம செயல்கள் அதிகமாக அதிகமாக இறைவனின் சோதனைகளும் அதிகமாகும் என்பேன். சில மனிதர்கள், மனிதர்களின் ஆசையைத் தீர்க்க அதைச் செய்கிறேன், இதைச் செய்து தருகிறேன் என்று சொல்லிக் கொண்டு திரிகின்றார்கள். அவர்களெல்லாம் ஏமாற்றுக்காரர்கள். என்னுடைய அருள் இல்லாமல் சித்தர்களுடைய அருள் இல்லாமல் அவர்களால் எதுவும் செய்ய இயலாது என்பேன். அவர்களை நம்பி நீங்கள் ஏமாற கூடாது என்பேன். இறைவனை நம்புங்கள், எங்களை நம்புங்கள். எங்களை நம்புபவர்களுக்கு நாளும் கோளும் எதுவும் செய்யாது என்பேன். நல்ல விதமாக வாழுங்கள் என் அப்பன்களே!  என்னுடைய நல்முறையாக ஆசிகள்! மீண்டும் வந்து வாக்கு உரைக்கின்றேன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!