​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 27 April 2024

சித்தன் அருள் - 1594 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை கேள்வி-பதில்!




வணக்கம் அகத்தியர்  அடியவர்களே !!!!

22/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் ஓதி மலையில் பொதுவாக்கினை உரைத்து விட்டு அதன் பிறகு ஓதி மலையில் சேவை செய்து வரும் அடியவர்கள் குருநாதரிடம் சில கேள்விகளை எழுப்பினர் குருநாதர் அதற்கு கூறிய பதில் உரை!!!!

குருநாதர் ஏற்கனவே கடந்த ஆண்டு 2/7/2023 அன்று ஓதிமலை அடிவாரத்தில் உள்ள இரும்பொறையில் உள்ள ஈசன் ஆலயத்தில் பிரம்ம முகூர்த்தத்தில் கோ பூஜை செய்து வர வேண்டும் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அன்னதானங்கள் செய்துவர வேண்டும் என்று கட்டளை இட்டு இருந்தார்

அந்த பதிவு சித்தன் அருள் 1407 இல் வெளிவந்துள்ளது!!!!

அதன் தொடர்ச்சியாக அடியவர்களின் கேள்விகள் இருந்தது!!!

கேள்வி!!!

ஓம் அகத்தீசாய நமக குருநாதருக்கு எங்களுடைய பணிவான வணக்கங்கள்!!

நீங்கள் கூறியபடி பௌர்ணமி அமாவாசை நாட்களில் எங்களால் முழுமையாக அன்னதானங்கள் செய்ய முடியவில்லை

குருநாதர் பதில்

அப்பனே நிச்சயமாய் அதாவது ஒன்றை சொல்கின்றேன் அப்பனே இதையும் யான் செப்பி விட்டேன் அப்பனே!!! அதாவது அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே

இதன் தத்துவத்தை பார்த்தால் அனைத்தும் செய்ய முடியும் அப்பனே

அனைத்தும் யான் கொடுத்திருக்கின்றேன் அப்பனே

அதாவது முருகன் கொடுத்திருக்கின்றான் அப்பனே யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே

செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் சோம்பேறி தனம் என்பேன்!!!!

அப்பனே அறிந்தும் கூட யார் யாருக்கு எத் தகுதி இருக்கின்றதோ பின் அவரிடத்தில் இருந்தே அப்பனே ஈசனும் பெற்றுக் கொள்வான் என்பேன் அப்பனே

ஆனாலும் மனதில் ஒன்றை வைத்துக்கொண்டு அப்பனே அப்பனே வெளியில் ஒன்று பேசுகின்றார்களப்பா!!!

என்ன செய்வது?? அப்பனே கூறு!!!

ஆனால் அடி விழுந்தால் தான் அப்பனே!!!

ஆனாலும் பின் குழந்தை (ஓதிமலையப்பர்) பொறுத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே அவ்வளவுதான்!!!!

குருவே!!

தங்களுடைய வாக்கினை கேட்டுவிட்டு ஒரு அடியவர் பசுவையும் கோ பூஜைக்காக ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தார்!!! அந்த பசுவிற்கு சரியான உணவு கூட வழங்க முடியாமல் சிரமப்பட வேண்டி உள்ளது

அப்பனே அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய யான் அனைத்தையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே எதை என்றும் புரிய  புரிய அப்பனே இதனால் அப்பனே அதாவது கஷ்டங்கள் வந்தால் அப்பனே தேடி தேடி தேடு தேடி வருகின்றார்கள் இறைவனிடத்தில்..

ஆனாலும் அப்பனே ஏன் கஷ்டங்கள் வருகின்றது??

யாராவது சிந்தித்துள்ளீர்களா ?? அப்பனே...

இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே

அப்பனே எப்பொழுதும் அப்பனே பாவத்தை எதை என்று அறிய அறிய.... அதாவது பாவங்கள் மனிதனிடத்திலே இருக்கின்றதப்பா எதை என்றும் புரிய ப புரிய அப்பனே...

கவலையை விடு அப்பனே யான் இதற்கு வழி வகுக்கின்றேன் அப்பனே!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது தன் பிள்ளை இருக்கின்றது அப்பனே அதனால் அப்பனே தன் பிள்ளையை மட்டும் அப்பனே அழகாக அப்பனே பார்த்துக் கொள்வார்கள் என்பேன் அப்பனே அனைத்தும் செய்வார்கள் அப்பனே

ஆனால் மற்றொரு பொருள் அப்பனே அதுதான் இறைவனுடையது!!!!!

(அவரவர் தம்முடைய பிள்ளைகள் நம்முடைய பொருள்கள் என்று நாம் அதில் கவனத்துடனும் அக்கறையுடனும் பார்த்து பார்த்து செய்து கொள்கின்றோம் ஆனால் மற்ற விஷயங்களில் அடுத்தவருடைய காரியங்களில் கவனம் செலுத்துவது இல்லை

ஆனால் அதுதான் இறைவனுடையது என்று குருநாதர் குறிப்பிடுகின்றார்!!!

இதற்கு என்ன அர்த்தம் என்றால் நம் வீட்டில் பசுக்கள் இருந்தால் நம்முடைய பசுக்களுக்கு தீவனம் புல் என அதற்கான உணவை வழங்குவோம் ஆனால் கோயிலில் மற்ற இடங்களில் இருக்கும் பசுக்களை பற்றி நாம் கவலைப்படுவது இல்லை ஆனால் அதுதான் இறைவனுடையது என்று குருநாதர் இங்கு குறிப்பிடுகின்றார் அப்படி அர்த்தம் என்னவென்றால் மற்றவைகளுக்கு செய்யும் சேவைகள் அது இறைவனுடைய சேவையாக மாறிவிடும் ஏனென்றால் இறைவனுக்கு சொந்தமானவை அவையெல்லாம் என்று குருநாதர் மறைமுகமாக குறிப்பிடுகின்றார்)

(கோமாதாவிற்கு உணவு அளிக்கும் விஷயத்தில் இதைப் பற்றி மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்காக அதாவது அடியவர்கள் மூலம் கோமாதாவிற்கு உணவு வழங்குவதற்காக சில தகவல்களை கேட்டறிந்த பொழுது வெளியில் இருந்து யாராவது கொடுத்தால் வாங்குவதற்கு தயாராக இல்லை ஆலய நிர்வாகத்தில் சில உள் சார்ந்த பிரச்சினைகள் இருக்கின்றது அதனால் இது இப்படியே தொடர்கின்றது

ஆனால் குருநாதர் இதற்கு யானே வழி வகுக்கின்றேன் என்று கூறி இருக்கின்றார்... அதனால் நாம் அனைவரும் குருநாதரிடம் வேண்டிக் கொள்வோம்)

அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே அனைவருக்குமே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே

அப்பனே பாவம் புண்ணியம் சரிபார்க்கப்பட்டது தான் அப்பனே அறிந்தும் எதை என்று அறிய அறிய அப்பனே மனிதன்... பின் எதை என்று கூற எதை என்று அறிய அறிய அப்பனே ஆனால் பாவத்தையும் இறைவன் எதை என்று அறிய அறிய புண்ணியத்தையும் பின் இவ்வாறு செய்கின்றது இவ் ஆன்மா என்று அழகாகவே பிரம்மன் எழுதி அனுப்பி.....

இதனால் அப்பனே பின் எழுதி அனுப்பியவனே இறைவன் !!!

அதாவது எழுதி அனுப்பியவனே பின் அவ்வளவு சுலபமாக பாவத்தை தீர்த்து விடுவானா ????  என்ன!!!!

அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள்!!!!

குருவே இரும்பொறையில் இருக்கும் அந்த ஈசன் ஆலயத்திற்கு திருப்பணிகள் செய்ய வேண்டும்

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதை முருகனே செய்து கொள்வான் என்பேன் அப்பனே

பார் !!! வேடிக்கையை மட்டும் பார்!!!

குருவே அந்த ஆலயத்திற்கு சேவை செய்ய வருபவர்களுக்கு முன்னிருந்து செய்தால் நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றது ஒரு சில விபத்துகளும் ஏற்படுகின்றது என்று சந்தேகங்களும்  வதந்தியுடன் இங்கே இருப்பவர்கள் செயல்பட்டு கொண்டிருக்கின்றார்கள் அதற்கு தீர்வு என்ன???

அப்பனே அறிந்தும் கூட அப்பனே ஏன் எதற்கு என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே பல பாவங்களை செய்து விட்டு அப்பனே எதை என்றும் அறிய அப்பனே..... அப்படி பல பாவங்களை செய்திட்டு முன் நின்றால் அப்படித்தான் அப்பா

(ஆலய நிர்வாகத்தில் உள்ளவர்கள் ஆலயத்திற்கு திருப்பணி செய்பவர்கள் ஆலயத்திற்கு சேவைகள் செய்பவர்கள் ஆலய விஷயங்களில் பரிசுத்தமாக நடந்து கொள்ள வேண்டும் அனைவரும் அசைவ உணவு ஒரு உயிரைக் கொன்று தின்பது இப்படிப்பட்ட பாவங்களை செய்து விட்டு ஆலயத்திற்காக  வந்தால் இப்படித்தான் நடக்கும் )

அப்பனே ஒரு உயிரைக் கொன்று எதை என்றும் அறிய அறிய ஈசன் மீது அப்பனே ஈசன் ஆலயத்தின் மீது.... கை வைக்கலாமா????? அப்பா???

ஓதிமலையப்பனுக்கு சேவை செய்யும் அடியவர்

குருவே எனக்கு ஆசிர்வாதம் தாருங்கள்!!!

அப்பனே அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் அப்பனே உந்தனுக்கும் அப்பனே நடுவில் கூட

(ஓதிமலை பொதுவாக்கில் நடுவில் சேவை செய்யும் அடியவருக்கு ஏற்கனவே வாக்கு தந்து விட்டார்)

அப்பனே அறிந்தும் கூட உன் கடமையைச் செய் அப்பனே அவ்வளவுதான்
அவரவர் அவரவர் கடமையைச் செய்தாலே அப்பனே போதுமானதப்பா
இறைவன் வந்து எதை என்று அறிய அறிய!!.......

எதையும் நினைக்காதீர்கள் அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே அதனால் அப்பனே இதை பல மனிதர்களும் சொல்லிவிட்டார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய ஞானிகளும் சொல்லிவிட்டார்கள் அப்பனே பின் கடமையை செய் !! கடமையை செய்!!! என்று!!!

அப்பனே அறிந்தும் கூட அவரவருக்கு தனி தனி திறமைகள் உண்டப்பா அப்பனே உன் போலும் மற்றவர் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அதாவது உன்னைப் போன்று எவை என்று புரிய அவந்தனும் (மற்றவர்கள்) செய்ய மாட்டார்கள்!!! அவர்களைப் போன்று மற்றவர்களும் செய்ய மாட்டார்கள்!! அப்பனே அவனவனுக்கு ஏற்பவே இறைவன் திறமைகள் கொடுத்திருக்கின்றான் அப்பனே... எதை என்று புரிய புரிய அப்பனே

இறைவனுக்கு எப்படி?? யார் மூலம்?? எதை செய்ய வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும் அப்பா...

கவலையை விடுங்கள் அப்பனே!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே இன்பத்தை எவை என்று அறிய அறிய அப்பனே துன்பத்தை அப்பனே துன்பம் மூலமே விலக்க வேண்டும் அப்பனே

இதற்கு என்ன அர்த்தம்??? கூறுங்கள்!!!

அப்பனே அறிந்தும் கூட அப்பனே அனைவருமே துன்பப்பட்டுத்தான் உயர்ந்து உள்ளீர்கள் என்பேன் அப்பனே

சொல்லிவிட்டேன் இதன் அர்த்தம் இதுதான் அப்பா

(துன்பத்தை அனுபவித்து தான் துன்பத்தை விலக்க முடியும் நீங்கள் எல்லோரும் துன்பத்தை அனுபவித்து தான் இவ்வளவு உயரத்திற்கு வந்துள்ளீர்கள்)

அப்பனே இன்னும் விளக்கங்கள் சொல்கின்றேன் அப்பனே கவலையை விடுங்கள் அப்பனே

என்னுடைய ஆசிகளும் அப்பனே!!!

நீங்கள் குழந்தையை (ஓதியப்பனுக்கு சேவை) அழகாக பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் அல்லவா!!!

அதனால் யானும் உங்களை அழகாக பார்த்துக் கொள்வேன் அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!

குருவே.... இங்கு ஆலயத்திற்கு வரும் சில அடியவர்களுக்கு திருமணம் தடை ஏற்பட்டு கொண்டே இருக்கின்றது திருமணமாகாமல் இருக்கின்றார்கள் அதற்கு ஏதாவது வழி சொல்லுங்கள்

அப்பனே அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே அதாவது எதை என்றும் புரியாமல் கூட அப்பனே இருக்கின்றீர்கள் அப்பனே

இப்பொழுது புரிய வைத்தாலும் அப்பனே பின் விளங்காதப்பா!!!

இதனால் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே அதாவது ஏன் எதற்கு ஆனாலும் முருகனுக்கு பின் திருமணம் நடந்தது எதை என்று அறிய அறிய அனைவரும் உணர்ந்ததே

ஆனால் இக்குழந்தைக்கே நடத்த ஆனாலும் நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் எவை என்று புதிய புய நீங்கள் நடத்துவீர்கள் என்பேன் அப்பனே... அனைவரையும் சிறப்படையும் என்பேன் அப்பனே

(ஓதி மலையில் தைப்பூசம் சமயத்தில் முருகனுக்கு திருக்கல்யாணம் நடக்கும் அதில் கலந்து கொள்ள வேண்டும்)

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இன்னும் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே அவரவர் வினை எதை என்று புரிய புரிய அப்பனே

அவ் ஆன்மா வேண்டிக் கொள்வதெல்லாம் அப்பனே அதாவது ஒரு ஆன்மா எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது பின் புண்ணிய ஆன்மாக்களை எதை என்றும் அறிய அறிய பின் பிரம்மனே நெருங்குவான் அப்பா

அவ் ஆன்மாவிடத்தில் அப்பனே அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன தேவை என்று கேட்பான் அப்பா

ஆனாலும் அறிந்தும் கூட உலகத்தில் பின் எவ் சுகங்களும் தேவையில்லை அறிந்தும் கூட புரிந்தும் கூட எதை என்று அறிய அறிய இறைவன் பாதை அதாவது இறைவன் பாதமே போதும் என்றெல்லாம் அப்பனே ஆன்மாக்கள் கேட்கும் அப்பா.... இதனால் அப்பனே அப்படியே எழுதி வைத்து விடுவான் அப்பா எதை என்று அறிய பிரம்மன் அனுப்பி விடுவானப்பா அறிந்தும் கூட

ஏன் அதனைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே எங்கு எதை என்று அறிய அறிய அப்பனே அவையெல்லாம் சொல்லிவிட்டு மீண்டும் விளக்கங்கள் கூட சொல்கின்றேன் அப்பனே

அதனால் தாம் தன்  என்ன கேட்டு வந்தீர்களோ அதுதான் இங்கு நடக்கும் அப்பா

ஆனாலும் விதியையும் கூட இவனால் மாற்ற முடியும் அப்பா (ஓதிமலை அப்பர்) நிச்சயம் மாற்றுவான் அப்பா இதற்கும் சம்பந்தங்கள் உண்டப்பா!!!

(அதாவது திருமணம் இந்த பிறவியில் ஆகவில்லையே என்று நினைப்பவர்கள் கடந்த பிறவியின் முடிவில் புண்ணிய பலத்தால் பிரம்மனிடம் வரம் பெறும் பொழுது எனக்கு எதுவும் தேவையில்லை சொத்து சுகம் திருமணம் பாசம் பந்தம் எதுவும் தேவையில்லை இறைவன் காலடியில் போதும் என்று வரம் வாங்கிவிட்டு பிறவி எடுத்து வந்த பிறகு உலகத்தில் அனைவரின் வாழ்க்கையையும் பார்த்து நமக்கும் இப்படி நடக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்து சில பல மாயைகளில் சிக்கி ஒன்றும் நடக்கவில்லையே என்று வருந்தி கொண்டிருக்கின்றோம்..

இதே ஓதி மலையில் வைத்து கடந்த முறை குருநாதர் இதைப் பற்றி மேலும் கேள்வி பதில் கூறியிருந்தார் இப்படி வரம் பெற்று வந்திருக்கையில் நம்மளுடைய விதியில் என்ன இருக்கின்றது என்பதை நமக்கு தெரியாது நம்முடைய விதியில் என்ன இருக்கின்றது என்பதை உணர்ந்தவர்கள் சித்தர்கள் அப்படி சித்தர்கள் வந்து நம் விதியில் உள்ளதை உரைப்பதற்கும் நமக்கு புண்ணியங்கள் வேண்டும்.. உங்களிடம் புண்ணியங்கள் இருந்தால் உங்கள் விதியை யானே வந்து செப்புவேன் அந்த விதியையும் மாற்றி தருவேன் என்பது குருநாதர் உரைத்த வாக்கு!!!

உதாரணத்திற்கு ஒருவருக்கு சன்னியாசி யோகம் வேண்டுமென வரம் வாங்கி இருப்பார் ஆனால் இந்த உலகத்தில் பிறவி எடுத்து பிறந்தவுடன் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தையும் பார்த்து நாம் கேட்டு வாங்கி வந்த வரத்தை மறந்து நடக்கவில்லை அது வேண்டும் இது வேண்டும் என ஆசைப்பட்டு விடுகின்றோம்...

குருநாதர் சில வாக்குகளில் விதியில் இல்லாததை எல்லாம் கேட்கின்றீர்களப்பா என்று வாக்கு தருவதை இந்த இடத்தில் கவனத்தில் கொள்க!!!!

விதியில் என்ன உள்ளது என்பதை ஆராய்ந்து ஆராய்ந்து தான் பார்த்து செய்ய முடியும்.

விதியையும் மாற்றி புதிய விதியை செயல்படுத்த வேண்டும் என்றால் அது சித்தர்களால் மட்டுமே முடியும் இதற்கு சித்தர்கள் வந்து வாக்குகள் தருவதற்கு நம்மிடம் புண்ணியம் இருக்க வேண்டும்

எங்கு சுற்றினாலும் என்ன செய்தாலும் கடைசியில் புண்ணியம் மட்டுமே நம்மளுடைய வாழ்க்கையை நம்முடைய விதியை மாற்றுவதற்கான வழி என்பதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.)

ஒரு அடியவர் குருவே சரணம் என்னுடைய தொழிலை விரிவு படுத்தலாம் என்று இருக்கின்றேன் ஆசீர்வாதம் வேண்டும்

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே நீயா விரிவுபடுத்துகின்றாய் அப்பனே அவையெல்லாம் பொய்யப்பா!!!!!!

(அனைத்தையுமே முருகன் தான் செய்து கொண்டிருக்கின்றார்)

மற்றொரு அடியவர் குருவே சரணம் என்னுடைய மகனுக்கு இதுவரை திருமணம் நடக்கவில்லை

அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது எதை என்றும் புரிய புரிய அப்பனே பழனி ஆண்டவன் எதை என்றும் புரிய புரிய எதை என்றும் அறிய அப்பனே அழகாகவே நிற்கின்றான் அப்பா உன் இல்லத்திலே நிற்கின்றான் அப்பா அறிந்தும் கூட அப்பனே இதையும் கேட்கின்றாய் அப்பனே.... அப்பொழுது முருகன் மீது நம்பிக்கை இல்லையா????

மற்றொரு ஓதிமலை அப்பனுக்கு சேவை செய்யும் அடியவர் குருவே எனக்கும் வாழ்க்கைக்கு ஒரு வழி சொல்லுங்கள்

அப்பனே எதை என்றும் அறிய அறிய சொல்லி விட்டேன் அப்பனே குழந்தையை பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே உன்னையும் அவன் பார்த்துக் கொள்வான் அப்பனே கவலையை விடு!!!!

அப்பனே அறிந்தும் எதை என்றும் புரிய புரிய அப்பனே பல முறையும் எடுத்துரைத்து விட்டேன் அப்பனே நலன்கள் ஆகவே

அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இதன் ரகசியத்தையும் சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே

இதனால் அப்பனே எதை என்றும் அறிய நீயும் முருகனுக்கு அதாவது அப்பனே முருக பக்தனாக இருந்து பல சேவைகள் செய்து அப்பனே நீயும் சிறப்படைந்து அப்பனே செல்வந்தனாக இருந்து அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் சில வகையிலும் கூட அப்பனே இது கடைபிறப்பு அப்பா உந்தனுக்கு!!!

ஆனாலும் அறிந்தும் கூட முருகனிடமே பின் செந்தூரிலே அறிந்தும் கூட எதை என்றும் கூட பின் குழந்தைவடிவ  ரூபத்தில் தோன்றி அறிந்தும் கூட உந்தனுக்கு என்ன தேவை??? என்று முருகன் கூற!!!

பின் முருகா!!!! எப்பொழுதும் உந்தனுக்கு சேவைகள் செய்து கொண்டே இருக்க வேண்டும்.. அப்படியே பிறவியின் முடித்துக் கொள்ள வேண்டும் என்று நீ தான் கேட்டாய் அப்பா!!!

அப்பனே அதனால் அறிந்தும் கூட முருகன் திரும்பவும் கேட்டான் அப்பா

அப்பா கலியுகத்தில் பிறக்கப் போகின்றாய் அறிந்தும் உண்மைதனை கூட... நிச்சயம் பின் அதாவது கலியுகத்தில் எதை என்று அறிய அறிய சுற்றார் இன்னும் உற்றார் இதற்கும் கூட சம்பந்தம் சுற்றார் உற்றார் என்பதற்கெல்லாம்...

ஆனாலும் பின் அதாவது திருமணங்கள் பின் குழந்தை பாக்கியங்கள் என்றெல்லாம்!!!

ஆனால் நீ என்ன சொன்னாய் தெரியுமா??? முருகனிடத்தில்!!!

அப்பப்பா முருகா அவ எல்லாம் வேண்டாம் அப்பா அவையெல்லாம் அற்ப சுக வாழ்க்கை அப்பா என்று சொல்லிவிட்டாய் அப்பனே

விதியில் அப்படியே ஆகட்டும் என்று முருகன் கூறிவிட்டான்

ஆனால் நீ இப்பொழுது கேட்பதை பார்த்து நகைத்துக் கொண்டிருக்கின்றான் முருகன்!!!!

என்ன சொன்னோம்!!! இவ் ஆன்மா என்ன கேட்டது என்று!!!!

எதை என்று அறிய அறிய முருகனே பார்த்துக் கொள்வானப்பா விதியும் மாறும் அப்பா

அப்பனே எதை என்றும் அறிய அறிய மயில் வாகனத்தை சுமந்து வா அப்பனே தெரியுமப்பா அப்பொழுது!!!!!

(மயில் காவடி எடுத்தல்)

குருவே நான் காவடி எடுக்கின்றேன். காவடி எடுத்து வந்தால் என்னுடைய கடன் பிரச்சனையும் தீர்ந்துவிடும் அல்லவா குருநாதா!!!!

அப்பனே பிறந்த கடனையே தீர்க்க முடியவில்லை மனிதனால் அப்பனே தற்பொழுது மனிதனால் கையால் வாங்கப் போவது அப்பனே இவையெல்லாம் சுலபம் அப்பா!!!!

மற்றொரு அடியவர் சுவாமி எனக்கும் ஆசீர்வாதங்கள் வேண்டும்

அப்பனே அறிந்தும் கூட அப்பனே கவலையை விட அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே கந்த சஷ்டி கவசத்தை ஓதி வரச்சொல் அப்பனே சிறப்பாகும்

மற்றொரு அடியவர்

குருவே எந்தனுக்கும் ஆசிர்வாதங்கள் வேண்டும்

அப்பனே  முருகனுக்கு பின் அடியவனாக இருந்து விடு அப்பனே அனைத்தும் நல்குவான் அப்பனே

அப்பனே கவலைகள் இல்லை அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே நல்விதமாக அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று புரியப் புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே முதலில் அப்பனே எழுவானப்பா சித்திரகுப்தனும் இங்கு பின் அதிகாலையிலே அறிந்தும் உண்மைதனை கூட இங்கு வணங்கிட்டு அப்பனே நிச்சயம் ஏனென்றால்!!!!!!

காலத்தை வென்றவன் அல்லவா!!!!!!

(ஓதிமலை அப்பன்)

அப்பனே நிச்சயம் பின் அதிகமாகும் நீங்கள் செய்த புண்ணியங்கள் எல்லாம் அப்பனே நிச்சயம் நாளை பொழுதில் சித்திரகுப்தன் எழுதுவான் அப்பா

நிச்சயம் மாற்றங்கள் உண்டு மாற்றங்கள் உண்டு!!

அப்பனே அறிந்தும் கூட அருள்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய செய்வான் அப்பனே எதை என்றும் புரிய அப்பனே சித்தர்களின் ஆசியும் கூட அப்பனே போகனின் அன்பும் கூட இருப்பதால் அப்பனே நிச்சயம் சில மூலிகைகளை எடுத்துக் கொண்டே வாருங்கள் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் மாற்றமடையும் வாழ்க்கை என்பேன் அப்பனே கவலையை விடு அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் அப்பனே போதும் அப்பா போதும் அப்பனே எம்னுடைய ஆசிகள் இன்னும் சொல்கின்றேன் ரகசியங்களை அனைவரின் ரகசியங்களை கூட யான் சொல்லுகின்றேன் அப்பனே அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் அப்பனே

பின் ஏன் எதற்கு பிறவிகள் என்றெல்லாம் அப்பனே ஆசிர்வாதங்கள் அப்பனே அனைவரையுமே முன் ஜென்மத்தில் பின் பார்த்தவன் தானப்பா யான் நீங்கள் எல்லாம் என்னிடத்தில் வந்து ஆசிகள் பெற்றவர்கள் தான் அப்பா

அதனால்தான் இப்பிறவியிலும் கூட தேடி வந்து உங்களுக்கு வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே ஆசிகளப்பா!!! ஆசிகள்!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 25 April 2024

சித்தன் அருள் - 1593 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் உத்தரவு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே

22/4/2024 அன்று டணாநாயக்கன் கோட்டை கோயில் என்று அழைக்கப்படும் வீரபத்ர சோமேஸ்வரர் மங்களாம்பிகை திருக்கோயிலில் பவானிசாகர் சத்தியமங்கலம் ஈரோடு மாவட்டம். இந்த ஆலயத்தில் சித்திரை மாதத்தில் பக்தர்களுக்கு குருநாதர் தந்த உத்தரவு

அப்பனே அறிந்தும் கூட அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் அப்பனே!!!!

அறிந்தும் கூட அப்பனே எம்முடைய ஆசிகள் இருந்து விட்டாலே போதுமானதப்பா

அப்பனே யானே அனைத்தும் செய்வேன் அப்பனே

இதனால் நல் மனதாகவே அதாவது அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு அப்பனே உணவளித்துக் கொண்டே இருங்கள் அப்பனே

தன்னால் முடியாவிடிலும் அப்பனே நிச்சயம் அப்பனே ஏதோ ஒன்றை செய்து கொண்டே இருங்கள் அப்பனே

இச்சித்திரை திங்களில் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் சித்திரகுப்தன் அப்பனே நிச்சயம் கணக்கை எதை என்று அறிய அறிய அழகாகவே எழுதி வைப்பான் அப்பா

(நம் பாவ புண்ணிய கணக்கை)

நீங்கள் என்ன இதில் தன் (சித்திரை மாதத்தில்) செய்கின்றீர்களோ... அதுதான் அப்பா நிச்சயம் கூட புண்ணியங்கள் ஆக்கி அப்பனே வருடம் முழுவதும் கிடைக்கும் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே

(அதாவது நாம் அனைவரும் சித்திரை மாதத்தில் செய்யும் அதாவது வாயில்லா ஜீவராசிகளுக்கு இயலாதவர்களுக்கு செய்யும் சேவைகள் அவற்றின் புண்ணியங்களை எல்லாம் சித்திரகுப்தன் அவரவர் புண்ணிய கணக்கில் எழுதி வைத்து அதன் மூலம் ஏற்படும் புண்ணியங்கள் சித்திரை மாதம் முதல் தொட்டு பங்குனி மாதம் வரை இந்த ஒரு வருட காலம் முழுவதும் அந்த புண்ணியங்கள் எதிரொலிக்கும் இது வரும் வரும் எல்லா வருடங்களுக்கும் பொருந்தும் ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் நம்மளுடைய கணக்கு தொடங்கும்)

அதனால்தான் செய்யுங்கள் செய்யுங்கள் என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட

இதில் செய்தால் (சித்திரை மாதத்தில்) நிச்சயம் பின்

வைகாசி தன்னில் அப்பனே ஈசன் மனம் மகிழ்ந்து அறிந்தும் கூட அப்பனே பல பாவங்களை அகற்றுவான் (காசி)கங்கை தன்னில் கூட!!!

தன்னால் பின் வர முடியவில்லையே!!!!

(வைகாசியில் காசி பயணம்)

என்போருக்கும் நிச்சயம் அப்பனே ஈசன் அருள் புரிந்து தருவானப்பா!!!!

(அதாவது காசிக்கு செல்ல முடியாத நிலை இருந்தாலும் சித்திரை மாதத்தில் அனைத்து ஜீவராசிகளுக்கும் சேவைகள் செய்து அந்த புண்ணியம் இருந்தாலே ஈசன் மனம் மகிழ்ந்து அருள்வார்)

இதனால் அறிந்தும் கூட அப்பனே ஆனால் தம் தன் பிள்ளைகள் நன்றாக வேண்டும் பின் அதாவது உணவை உட்கொள்ளாமல் இருந்தால் பின் எவ்வளவு நீங்கள் பாடு படுகின்றீர்கள் அப்பனே!!!

(நம் குழந்தை உணவை உண்ணாமல் பட்டினி கிடந்தால் நம் மனம் எவ்வளவு பாடுப்படுகின்றது அதேபோல் இந்த உலகத்தில் எத்தனை ஜீவராசிகள் உணவில்லாமல் கிடைக்காமல் மனம் வேதனைப்பட்டுக் கொண்டிருக்கும் நம்மால் முடிந்த சேவையை அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்து கொண்டே வர வேண்டும்)

அதேபோலத்தான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது  இவ் ஆன்மா அப்பனே பின் நிச்சயம் தண்டனைக்குரியது!!!!

அதாவது பாவம் புண்ணியம் அதாவது எதை என்று புரிய புரிய இதனால் பின் இரு வருடம் பின் ஒரு மாதம் எதை என்று புரிய புரிய இன்னும் பின் மாதக்கணக்கில் நிச்சயம் பின் அறிந்தும் கூட அவ் ஆன்மா நிச்சயம் பின் இவ்வாறு உலகத்தில் வாழ வேண்டும் என்பதைக் கூட விதி விதிக்கப்பட்டது

இவ்வாறு அறிந்தும் கூட பின் ஒரு மாதம் அறிந்தும் கூடஒரு நாள் கூட அறிந்தும் கூட அவ் ஆன்மா நிச்சயம் அதாவது சொல்கின்றேன் உங்கள் சொந்த பந்தங்களுடனே இருக்கலாம்  அவ் ஆன்மா

அதனால்தான் நிச்சயம் அறிந்தும் கூட வாயில்லா ஜீவராசிகளுக்கு நிச்சயம் செய்யச் சொன்னேன்

அனைவரும் செய்யுங்கள்

தன்னால் முடியவில்லையே என்றாலும் நீரையாவது (குடிநீர்)பின் தானம் செய்யுங்கள் போதுமானது

அறிந்தும் கூட

இதை தானம் செய்யாவிடில் நிச்சயம் பின் அறிந்தும் கூட இறைவன் கூட நிச்சயம் அறிந்தும் கூட நீரை கூட நிச்சயம் நிறுத்தி விடுவான் சொல்லிவிட்டேன்!!!! 

(மழை கூட வராது ஆறு குளம் ஏறி என அனைத்தும் வற்றி விடும்)

அதனால்தான் நிச்சயம் நீர்நிலைகளை (தண்ணீர் பந்தல்கள்) ஏற்படுத்துங்கள்
நிச்சயம் அறிந்தும் கூட இவ்வுலகத்தில் உள்ள அனைவருமே பின் அனைவருக்கும் சொந்தம் எதை என்று அறிய அறிய இறைவனே

இதனால் நிச்சயம் நீங்கள் அறிந்தும் அறிந்தும் கூட இதனால் தான் இறைவனுக்கு எதை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய

தான் மட்டும் வைத்துக் கொள்கின்றான் மனிதன்

நிச்சயம் சொல்கின்றேன் இறைவன்  அதாவது ஒரு மனிதன் பிறக்கும் பொழுதும் ஏதுமில்லை இறக்கும் பொழுதும் ஏதுமில்லை

நடுவில் இறைவனே கொடுப்பான்!!!

ஆனால் அதை சரியாக உபயோகிக்கவில்லை என்றால் இறைவனே எடுத்துக் கொள்வான் என்றெல்லாம் யான் வாக்குகள் செப்பிக் கொண்டே இருக்கின்றேன்!!!

அதில் நிச்சயம் பின் அறிந்தும் கூட நடுவில் நீங்கள் சரியான வழியில் நிச்சயம் புண்ணியங்கள் பின் செய்தால் நிச்சயம் உங்கள் பரம்பரையையே அது காக்கும்

உங்கள் பிள்ளைகளையும் நிச்சயம் நல்படியாக ஆக்கும்

அதனால் நிச்சயம் இதை யான் சொல்கின்றேன்

இதை செய்திட்டாலே போதுமானது

யானே வந்து உங்களுக்கு வாக்குகள் உங்களுக்கு தருகின்றேன் நிச்சயமாக

ஆசிகள் ஆசிகள்

இன்றளவும் கூட பின் நிச்சயம் யானே அறிந்தும் கூட பின் ஆசிகள் தந்து விட்டேன்

பின் ஒவ்வொருவரின் அதாவது குறைகளையும் கூட நிச்சயம் நீக்கி தருகின்றேன் நல் முறைகள் ஆகவே

அறிந்தும் கூட

பாவம் புண்ணியம் எதை என்று புரிய புரிய எந்தனுக்கே புரியும்

இதனால் அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய

என்னிடத்தில் வந்து விட்டாலே யான் பார்த்துக் கொள்வேன்... பல விஷயங்களைக் கூட நீக்கி நீக்கி!!!

அதனால் எந்தனுக்கே தெரியும் அனைத்தும் கூட
அதனால் நீங்கள் கேட்கவே தேவையில்லை

யான் சொல்லியதை கேட்டாலே போதுமானது!!

நல்வழி !!! தீயவழி!!

அறிந்தும் கூட ஆனால் கலியுகத்தில் தீய வழிகளில் தான் மனிதன் செல்வான்.... ஆனால் தீய வழியை விட்டு விடுங்கள் நல்வழிக்கு வாருங்கள்


யான் சொல்லியதை செய்திட்டு வாருங்கள்

நிச்சயம் உங்களுக்கு மீண்டும் வாக்குகள் உண்டு

நிச்சயம் பின் அனைத்தையும் சொல்கின்றேன் அப்பொழுது புரிந்து கொள்வீர்கள் நீங்கள்

நலன்கள் எம்முடைய ஆசிகள்!!!

அனைவரின் குறையையும் நிச்சயம் யானே நீக்கித் தருகின்றேன்

நலன்கள் ஆசிகள் !!! ஆசிகள்!!!!

காகபுஜண்டர் மகரிஷி சித்ரா பௌர்ணமி நாளில் திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் ஆலயத்தில் வைத்து சித்திரை வைகாசி பற்றி வாக்குகளில் சித்தன் அருள் 1116 ல் வெளிவந்துள்ளது

அதில்

இவ் மாதத்தில் அதாவது சித்ரகுப்தனின் மாதமானது இம்மாதத்தில் யான் சொல்வதை சரியாக கவனித்துக் கொண்டு செய்தாலே!! போதுமானது.

ஆனால் யோசித்துக் கொள்ளுங்கள்!!! ஐந்தறிவு உள்ள ஜீவராசிகளுக்கும் தன் குழந்தைகளும் உள்ளது இவையன்றி கூற

அவைதன் இறைவனிடத்திலே வேண்டுவதில்லை தன் குழந்தைகள் நன்றாக இருக்க வேண்டும் என்று!!!

ஆனாலும் இவையன்றி கூற..... மனிதனே நீ வேண்டுகின்றாய்!!!! 

அவ் வேண்டுவதற்கு நீ என்ன செய்தாய்?? புண்ணியங்கள்!!!

அதனால்தான் அவ் ஜீவராசிகளுக்கு கொடுத்தால் நிச்சயம் ஈசன் மனம் மகிழ்ந்து பின் ஜீவராசிகளும் மகிழ்வித்து வாழ்க என்று மனதார வாழ்த்தும் என்பதையும் மெய்யப்பா!!!!!

இதனால் செய்க!!  

இதுதான் உண்மை அதை விட்டுவிட்டு இவ் மாதத்தில்  அது நடக்கும்!!! இவ் கிரக பெயர்ச்சிக்கள் ராகுகாலம் இவையெல்லாம் சொல்லி கொண்டே வந்தால்... நிச்சயம் அறிவிழந்து அறிவிழந்து தவித்து விடுவீர்கள்!!!!

சித்திரை மாதம் முழுவதும்) சித்ரகுப்தனின் ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றி இவையன்றி கூற...அவ் தீபத்தின் வழியே சித்திர குப்தனை பார்த்துப் பார்த்து மனதில் 
"""
சித்ரகுப்தாய நமஹ"""!!! என்று ஓதி, ஓதி , ஓதி, ஓதி ,பல அரசர்களும் மாற்றி அமைத்துக்கொண்டனர் தன் பாதையை.

இதனால் தான் இவ் மாதத்தில் சித்ரகுப்தனை பின் என்றாவது அவந்தனுக்கு சக்கரையை இட்டு அதுவும் சக்கரை எங்கு இட வேண்டும் என்றால் வெற்றிலையிலே இட்டு அவந்தனுக்கு நல் விதமாக பின் தீபமும் ஏற்றி ஏற்றி...  இவை யான்  சொன்னேன் மந்திரத்தை பின் அவ் தீபத்தின் வழியே அவனையும் பார்த்து... 

ஆனாலும் யான் முக்கியத்துவம் தருவேன்... காஞ்சியிலும்!!! அண்ணாமலையிலும்!!! 

காஞ்சியிலும் இதையன்றி கூற...அங்கே அமர்ந்து பின் தீபமேற்றி. ... தீபத்தின் வழியே உற்று நோக்கினால் நிச்சயம் மனமார ஆசீர்வதிப்பான்... 

ஆசீர்வதித்து பின் ""ஏகனையும் "" (ஏகாம்பரநாதர் காஞ்சிபுரம்) தரிசித்து....ஏகனையும் தரிசித்தல்!!!

பின்பு அண்ணாமலை அண்ணாமலையும் சென்று எதனையென்று அறிவதற்கு பின் அங்கு அனைத்து லிங்கங்களையும் (கிரிவல அஷ்டலிங்கங்கள் தரிசனம்) பின் பார்த்து உற்று நோக்கிப் பின் கடைசியில் பின் திருத்தலத்திற்குச் சென்று அங்கேயும் "நமச்சிவாயா!! "நமச்சிவாயா!!! என்று அழைத்தால் பின் சித்திரகுப்தனே!!! அவன் எதிரில் நின்று கூட யான் சொல்லி விட்டேன்....

அங்கேயும் அவனை அழைத்து கொண்டே இருந்தால்..... ஓ!!!!  இவந்தன் பின் ஈசனுடைய பக்தன் என்று மனம் இரங்கி சில உதவிகளையும் செய்வான்.

நிச்சயமாய் மனிதர்களே இதை பின்பற்றி கொள்ளுங்கள்!!!

அதனால் சொல்லி விடுகின்றேன் இனிமேலும் எதையன்றி  கூற....

""இவ் மாதத்தில் நிச்சயம் செய்ய வேண்டும்!  

செய்ய வேண்டும் அவை மட்டுமில்லாமல் இன்னும் சொல்கின்றேன் இவ் மாதத்தில் சிறிதளவு துளசியும் துளசியுமின்றி முறையாக அதில் மஞ்சளும் இட்டு சிறிதாக எலுமிச்சை சாற்றையும் இட்டு... அதனுடன் சிறிது நெல்லிக்கனியும் இட்டு... இட்டு இட்டு அதனையும் அருந்தி வர அருந்திவர சில நோய்களும் தீரும்.

(நீரில் துளசி மஞ்சள் பொடி எலுமிச்சை சாறு நெல்லிக்காய் சாறு சேர்த்து) நோய்களைத் தீர்ப்பதற்கும் வழிகள் உண்டு வழிகள் உண்டு.

இதனையும் பின் """சித்ரகுப்தா நமஹ"" என்று சொல்லி அதிலும் அவ் நீரிலும் கையில் விட்டு பின் இவற்றின் வழியாக நீயாவது இரங்கு என்று கூறிவிட்டால் நிச்சயம் மனமகிழ்ந்து சித்திரகுப்தன் செய்வான்.(பாத்திரத்தில் இவற்றை கலந்து சித்ரகுப்தனை வேண்டி கையில் இட்டு வணங்கி அருந்த வேண்டும் இம் மாதம் முழுவதும்) 

அதனால் இவையன்றி கூற அவ் மணி நேரத்தைப்(சித்திரை மாதம் முழுவதும்) பயன்படுத்திக் கொள்ளுங்கள். மானிட ஜென்மங்களே!!!  அவ் அரைமணி நேரம் தான் இச் சித்திரை திங்கள்!!!

இதையன்றி கூற இதனை பயன்படுத்தி  கொண்டு பின் அடுத்த திங்கள் காசி!!! வரும் அவ் காசியில் எதையன்றி கூற யான் சொல்கின்றேன் மனித ஜென்மங்களுக்கு!!!

வைகாசி என்று சொல்கின்றீர்களே!!! அதுவே காசி!!! 

அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...

மேற்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி!!!

இதிலும் அடங்கியுள்ளது இவையன்றி கூற ஆனாலும் பலப்பல மாதங்களும் பின் சூட்சுமங்கள் ஆக காணப்படுகின்றது.

என்று காகபுஜண்டர் மகரிஷி சித்திரை மாதத்தின் மற்றும் வைகாசி மாதத்தில் என்ன செய்ய வேண்டும் சொல்லி இருக்கின்றார். பக்தர்கள் அனைவரும் பின்பற்றி நல்வாழ்வு பெறுங்கள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday 24 April 2024

சித்தன் அருள் - 1592 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!




22/4/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் ஓதிமலை அன்னூர்.

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே!!!! சித்தன் அருள் - 1034 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலையப்பர் தரிசனம்! மதுரையில் நடந்த சத்சங்கத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் ஓதிமலை ரகசியங்களை எடுத்துரைத்த பொழுது

அப்பனே இவை என்று கூற நல் முறைகளாக ஆனாலும் இதிலும் ஒரு சூட்சுமம் ஒன்று என்பேன் அப்பனே இவ்விடத்திற்கு ம் பழனிக்கும் குழந்தை வேலப்பர் (பூம்பாறை முருகன் கொடைக்கானல்) என்கின்றார்களே அதற்கும் சம்பந்தம் உண்டு என்பேன்.

அப்பனே உங்களுக்கும் சொல்கின்றேன் இவை மூன்று திருத்தலங்களும் சரி முறையாக தரிசனம் செய்தால் ஒரு நாளைக்கு அப்பனே நல் முறையாக விதிகள் மாறும் என்பேன்.

முதலில் தரிசிக்க வேண்டியது அப்பனே ஓதியப்பன். ஓதிமலை முருகன் அன்னூர்

இரண்டாவதாக பழனி.

மூன்றாவதாக குழந்தை வேலப்பர்.பூம்பாறை கொடைக்கானல் 

நல் முறையாக யான் சொல்லிவிட்டேன் இதில் தான் சூட்சுமம் அடங்கியுள்ளது என்பேன்.

என்று வாக்குகள் உரைத்திருந்தார் அதன்படி அகத்திய மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் குருநாதர் உத்தரவுபடி இந்த சித்ரா பௌர்ணமி திருநாளில் இவ் மூன்று ஆலயங்களுக்கும் சென்று தரிசனம் செய்தார்.... சித்ரா பௌர்ணமிக்கு முந்திய இரவு ஓதி மலையில் தங்குவதற்கு குருநாதருடைய அருளால் நிறைவேறியது ஓதி மலையில் முந்திய இரவு குருநாதர் வாக்குகள் தந்திருந்தார் அவ் வாக்குகள் பின்வருமாறு!!!!

"""""'ஒன்பதாம் படை வீடு ஓதிமலை !!!!!!!!

ஆனைமுகன் அறுமுகன் போற்றியே!!! பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே அனைவருக்குமே என்னுடைய ஆசிகள்!!!

அப்பனே எவை என்று புரியாத அளவிற்கும் கூட மனிதர்கள் வரும் காலங்களில் அப்பனே அப்படி நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே இன்னும் வருவார்களப்பா

அப்பனே ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே அதாவது சொன்னோம் அப்பனே பல வழிகளில் கூட ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே

இதனால் அப்பனே எங்கெல்லாம் திருத்தலங்கள் எதன் மீது அப்பனே அதாவது நவ கிரகங்களையும் கூட அப்பனே சேர்த்து அப்பனே அறிந்தும் கூட அப்பனே இதனால் அனைத்தும் ஒன்றிணைந்து அப்பனே சரியாகவே அப்பனே அதாவது இவன் மீது விழுமப்பா!!!!

(ஓதிமலையப்பன் மீது நவகிரகங்களில் ஒட்டுமொத்த கதிர்வீச்சும் ஒன்று சேர்ந்து விழும்)

அப்பனே அதிலிருந்து அப்பனே நிச்சயம் விழுகின்ற பொழுது அப்பனே நிச்சயம் நவகிரகங்களையும் கூட வென்றிடலாம் அப்பனே

நிச்சயம் அப்பனே இதன் ரகசியத்தை வரும் காலத்தில் இன்னும் விளக்கமாகவே பின் சரியாகவே இன்னும் அப்பனே ரகசியத்தோடே உரைக்கின்றேன் அப்பனே சரியாகவே அப்பனே

இதனால் அப்பனே அறிந்தும் கூட காலத்தை வென்றிடலாம் அப்பனே எப்படி எதை என்று புரிய புரிய அப்பனே எங்கெல்லாம் அப்பனே பல சக்திகள் ஒளிந்துள்ளது என்பதை எல்லாம் யாங்களே அறிவோம் அப்பனே!!!!

இதனால் அப்பனே ஆனாலும் பின் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே

அதாவது பாவம் புண்ணியம் சரிபார்க்கப்பட்டதே பிறவி!!!!!!

(ஒவ்வொருவரின் பிறவியை பாவம் புண்ணியத்தின் மூலம் சரிபார்க்கப்பட்டு தான் நடக்கின்றது பாவம் புண்ணியத்தின் மூலம் தான் பிறவியே ஏற்படுகின்றது)

இதனால் அப்பனே புண்ணிய ஆத்மாக்களுக்கே கிடைக்குமப்பா.. அப்பனே வரத்தை அதாவது வரங்கள் தருபவன் அப்பனே ஓதிமலை அப்பனே அறிந்தும் கூட அறிந்தும் எதை என்று அறிய அறிய

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட சில சோதனைகளை கூட செய்பவன் இவனப்பா!!!! ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே

ஆனாலும் அப்பனே இதன் ரகசியத்தையும் இப்பொழுது சொல்கின்றேன் அப்பனே

அறிந்தும் கூட போகனவன் (போகர் சித்தர்) சில ஆண்டுகள் இங்கே தங்கி இருந்தான் அப்பா!!!

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பின் பக்கத்து கிராமத்தில் அப்பனே அதாவது ஒரு ஏழை வசித்து வந்தானப்பா

அவந்தனுக்கு வேலை அப்பனே ஆடு, மாடு மேய்ப்பதே!!!!!

ஆனாலும் அறிந்தும் கூட ஆடுகள் அனைத்தும் அப்பனே ஒரு நாள் அப்பனே அதாவது முருகனே சோதனைகள் செய்து அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்றும் புரியாமல் இருந்தாலும் அப்பனே (ஆடுகளை)அனைத்தையும் விரட்டி அடித்து விட்டான் அப்பனே

இதனால் அவந்தனக்கு தொழில் இல்லையப்பா தொழில் பாதித்தது!!!

இதனால் முருகன் தான் துணை என்று அப்பனே (மலைமீது) ஏறுவானப்பா!!

அப்பனே அறிந்தும் கூட பின் நல்விதமாகவே அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல உண்மைகளோடு முருகா எந்தனுக்கு இருந்த தொழில் அப்பனே பின் ஒன்றே!!!

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அதையும் கூட எங்கே????? எதை என்றும் புரிய புரிய

இதனால் வந்து கொண்டே இருந்தான்!!! இதனால் முருகன் மீது பற்று பற்று!!!

ஆனாலும் பின் ஏற ஏற அதாவது இம்மலை மீது ஏற ஏற கஷ்டங்கள் தானப்பா கஷ்டங்கள் என்று

ஆனாலும் முருகன் சோதனை மேல் சோதனை கொடுத்தான் ஆனாலும் அதாவது மழையை பெய்ய வைத்தான்!!!!! தன் இல்லத்தையும் அடியோடு வெள்ளத்தில் அடித்துச் செல்லுமாறு அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அவந்தனுக்கு இல்லங்களும் அதாவது இருந்தும் பயனில்லாமல் போய்விட்டது

இதனால் மீண்டும் ஏறினான் ஆனாலும் முருகன் பார்ப்போம் இவந்தன் என்னதான் செய்கின்றான் என்று

ஆனாலும் அறிந்தும் கூட போகனும் இங்கு தங்கி இருந்தான்!!!

ஆனாலும் போகனும் சொன்னான்!!! பின் முருகா!!!!! குழந்தாய்!!!!..... அறிந்தும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றானே இவந்தனுக்கு இப்படி ஒரு வேதனையா????

ஏதாவது செய்!!! நிச்சயம் அறிந்தும் கூட !!!

போகனே!!!! அறிந்தும் கூட நிச்சயம் செய்கின்றேன்!!! பார்!!!! என்று நிச்சயம் அப்பனே இது போல இங்கு அமர்ந்திருந்தான்... இதுதான் நம் வீடு என்று

ஆனாலும் அறிய போகனே பார்த்துக் கொண்டே இரு கலியுகத்தில் மனிதர்கள் எப்படி எல்லாம் ஆவார்கள் என்றெல்லாம்

இதனால் அறிந்தும் கூட நிச்சயம் உண்மைதனை வெளிப்படுத்த அறிந்தும் கூட ஒரு பெரிய மனிதனை அனுப்பி பின் அவந்தனுக்கு உதவி செய்யுமாறு நிச்சயம் அதாவது முருகனே அறிந்தும் கூட

இதனால் ஒரு பெரிய மனிதன் வந்தான் இங்கு.. ஆனாலும் அறிந்தும் கூட முதலில் இவந்தனை கேட்டான்!!!!

ஏனப்பா இங்கு இருக்கின்றாய்??? உந்தனுக்கு வீடு இல்லையா!!!!!! என்று எதை என்று புரிய புரிய

பின் அதாவது சொந்த பந்தங்கள் யார் என்று!!!

ஆனாலும் அவந்தனும் சொன்னான் நிச்சயம் சொந்த பந்தங்கள் பின் அனைத்தும் வீடும் இவ் முருகனே... அறிந்தும் கூட என்றெல்லாம்

அப்படியா எதை என்றும் அறிய அறிய என்னிடத்தில் வந்துவிடு நிச்சயம் உன்னை உயரத்தில் பின் கொண்டு செல்கின்றேன் என்று

ஆனாலும் அப்பனே சரி என்று அவந்தனும் அப்பனே பின் அறிந்தும் கூட உண்மைதனை அப்பனே புரிந்து அவனிடத்தில் சென்றுவிட்டான் அப்பா

இதனால் அவன் மிகவும் பெரிய செல்வந்தன் ஆகிவிட்டான் அப்பா அறிந்தும் கூட

இதனால் அப்பனே சொல்கின்றேன் அப்பனே (ஓதி மலை)வந்து சென்று கொண்டே இருந்தால் அப்பனே கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கும் ஆனாலும் இறைவன் சோதிப்பான் அப்பா ஆனாலும் யார் மூலம் எதை தர வேண்டும் என்று எண்ணி அப்பனே நிச்சயம் உயர்த்தி வைப்பானப்பா முருகன் அப்பனே!!!

(இவ்விடத்தில் குருநாதர் வாக்குகள் தரும் பொழுது கௌளி கட்டியம் கூறி ஒலித்தது)

இதனால் காலத்தை வெல்லலாம் அப்பனே

காலத்தை அதாவது எப்படி வெல்ல வேண்டும் என்றால் அப்பனே எப்படி வெல்வது??? அப்பனே நவகிரகங்களை வென்றாக வேண்டுமப்பா!!!

அப்பனே அப்பொழுது தான் காலத்தை வென்று விடலாம் அப்பனே அவ் நவகிரகத்தை வென்றவன் இவன் தானப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட பின் ஒன்பதாம் படைவீடு என்று அப்பனே கலியுகத்தில் அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிய அறிய எதிர்நோக்கி எதிர்நோக்கி இன்னும் கூட்டம் கூடும் அப்பா வரும் அப்பா

ஆனாலும் அப்பனே இதில் தன் அப்பனே அரசு எதை என்று புரியாமல் கூட தடுக்கும் அப்பா

ஆனாலும் அப்பனே முருகன் எதை என்றும் அறிய அறிய அப்பனே தன் பக்தர்களை ஈர்த்து அப்பனே பல வகையிலும் கூட அப்பனே உண்மைகளை போதித்து அப்பனே உயர்த்தியும் வைப்பானப்பா கலியுகத்தில்!!!

அதனால். அப்பனே நம்பிக்கை நம்பிக்கை அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட அப்பனே பெரியோர்கள் அப்பனே நம்பிக்கை நம்பிக்கை என்றெல்லாம் அப்பனே

இதனால் அவந்தனும் மிக்க செல்வந்தனாகவே இருக்கின்றான் அப்பா அப்பனே அறிந்தும் கூட அரசு சார்ந்தே இருக்கின்றான் அப்பா இப்பொழுதும் கூட அப்பனே பெரிய அரசு பதவியில் வகிக்கின்றான் அப்பா

அவந்தனும் அப்பனே வரும் காலத்தில் அப்பனே நிச்சயம் உதவிகள் புரிவானப்பா அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அச் ஜென்மத்திலே மிக செல்வந்தனாக ஆகிவிட்டான் அப்பா ஆனாலும் அப்பனே உயர்ந்து விட்டான் அப்பனே

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட பணங்களும் வந்துவிட்டது பல வழிகளிலும் கூட அப்பனே

ஆனாலும் மாயையில் சிக்கிக் கொண்டான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட அப்பனே அதாவது மருத்துவமனைகள் அமைப்பது என்று கூட அப்பனே அதில் கூட அப்பனே பல பல பல வழிகளிலும் கூட அப்பனே அதாவது மருந்துகளை தவறாக உபயோகித்து அப்பனே பல உயிர்களையும்........

அதேபோல் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே கல்வி சாலைகளை அமைத்து அதில் கூட அப்பனே பணத்தை சம்பாதித்தான் அப்பனே

முருகன் தான் கொடுத்தான் என்று மறந்து விட்டான் அப்பனே

ஆனாலும் முருகன் சொன்னான் அப்பனே அறிந்தும் கூட போகன் இடத்தில் அப்பனே பார்த்தாயா அறிந்தும் கூட எவை என்றும் அறிய அறிய இப்படித்தான் கலியுகத்தில் மனிதனுக்கு கொடுத்தால் இப்படித்தான் என்று

இதனால் பின் போகனும் தலை குனிந்தான்!!!

பின் குழந்தாய்!!!!! தந்தையே !!!!!அறிந்தும் கூட அனைத்தும் தெரிந்து கொண்டேன் ஆனாலும் ஏதாவது நிச்சயம் ஏற்பாடு செய்ய வேண்டும் இவந்தனுக்கு

இவந்தனை இப்படியே விட்டு விட்டால் அறிந்தும் கூட ஆனாலும் சரி நிச்சயம் இப்ப பாவத்தை அனுபவிப்பதற்காகவே அடுத்த பிறவி எடுப்பான் என்றெல்லாம் நிச்சயம் பின் முருகனும் கூட

இதனால் அப்பனே இப்பிறவியிலும் பிறந்துள்ளானப்பா!!! அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே அறிந்தும் உண்மைதனை கூட அப்பனே பல வழிகளிலும் கூட கர்மத்தை அனுபவித்து அப்பனே நிச்சயம் உயர்ந்த நிலையில் அப்பனே இன்னும் இன்னும் வருவானப்பா!!!

அப்பனே அப் பெயரைச் சொன்னாலும் அப்பனே பல வழிகளிலும் கூட தொந்தரவுகள் ஏற்படும் அப்பா

அதனால்தான் சில ரகசியங்களை கூட அப்பனே மறைக்க வேண்டியதாக உள்ளது அப்பனே

நிச்சயம் அப்பனே ஆனாலும் இன்னும் இன்னும் எவை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் சித்திரை அப்பனே அறிந்தும் எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே நிச்சயம் அனைத்து சித்தர்களும் இங்கு வருவார்களப்பா

அதனால்தான் அப்பனே அறிந்தும் கூட எவை என்று புரிய புரிய இக்குழந்தையை பார்ப்பதற்கே!!!! அப்பனே!!!

குழந்தையாகவும் காட்சியளிப்பான் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே இளைஞனாகவும் காட்சியளிப்பான்!!!! அப்பனே முதியவன் போலும் காட்சியளிப்பான்!!!! அப்பனே ஆணாகவும் காட்சியளிப்பான்!!!! அப்பனே பெண்ணாகவும் காட்சியளிப்பான்!!!!! அப்பனே அனைத்தும் இவனே அப்பனே

காலத்தை வென்றவன் அப்பனே!!!!! முருகன்!!!!

வென்றுவிடலாம் அறிந்தும் கூட அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே இன்னும் அறிவியல் வழியாகவும் எடுத்துரைப்பேன் அப்பனே

பல வழிகளில் கூட பின் சுவடிகளில் கூட பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே நிச்சயம் அப்பனே சுவடிகளில் எழுதி எழுதி அப்பனே அழகாகவே!!!!....

ஆனாலும் அவையெல்லாம் அப்பனே விற்று விற்று பல பல பொய்களையும் கூட மாற்றியமைத்து விட்டார்கள் அப்பனே

உண்மைதனை அப்பனே ஒளித்து அப்பனே அறிந்தும் கூட பல பொய்யான விஷயங்களை எல்லாம் எழுதி அப்பனே தவறான வழிகளில் அப்பனே பின் செல்வதற்கு அப்பனே வழி வகுத்து விட்டார்கள் மனிதர்களே!!!

இக்கலியுகத்தில் கூட அப்பனே நிச்சயம் பக்தி என்பது தலைகீழாகும் என்பேன் அப்பனே

இதனால்தான் அப்பனே ஒவ்வொன்றாக எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே மாற்றம் அடைய யாங்கள் இருக்கின்றோம் அப்பனே

நிச்சயம் அப்பனே உங்கள் அனைவரையுமே யான் பார்த்துள்ளேன் அப்பனே இங்கே அழகாகவே அப்பனே

இன்னும் பல சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே ஆனாலும் நவகிரகங்களுக்கும் சம்பந்தங்கள் உண்டு என்பதை போல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே நாக வடிவத்தில் அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட இன்று இருக்கின்றது அப்பா

அதற்கும் சம்பந்தங்கள் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ராகு கேது என்றெல்லாம் தோஷங்கள் அப்பனே

கழியுமா ?????

நிச்சயம் கழியாது அப்பனே!!! ஏன் எதற்கு அப்பனே ஆனாலும்!!!!!......

இங்கு இருக்கின்றதே நாக தேவதை அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே.......அவள்தன் ஒரு வைரத்தை அப்பனே வைத்துள்ளாள் அப்பனே அறிந்தும் கூட வயிற்றினில் அப்பனே

அவைதன் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது பின் மறைமுகமாகவே சிலசில ஒளிக்கற்றைகள் (வெளிப்படுத்தும்)  பின் கண்ணுக்குத் தெரியாதப்பா!!!!

அப்பனே ஆனாலும் (ஓதி மலையில் தங்கி உறங்க வேண்டும்) உறங்கினால் புரியுமப்பா !!!!நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் அவள்தனை  பார்த்து விட்டாலும்!!...

(இரவில் நாக தேவதை ஒளிக்கற்றையை வெளிப்படுத்தும் பொழுது)

பயந்து இறந்து விடுவானப்பா மனிதன்!!!

அதனால் தான் அப்பனே அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே ஏன் இரவில் தங்கக் கூடாது?? சில ஆலயங்களுக்கு செல்லக்கூடாது?? ஏன் அப்பனே சில ஆலயங்களுக்கு கூட பெண்கள் அனுமதிப்பதில் அனுப்பாமல் அப்பனே இப்படியே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அனைத்தும் காரணத்தோடு தான் செய்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இதையே அறிந்தும் கூட உண்மைதனை மறைத்து மறைத்து அப்பனே இன்னும் விளக்கங்கள்

இதனால் பயந்து ஓடிடுவார்கள் அப்பனே

ஆனால் அதையும் முருகன் காட்டுவான் அப்பனே இங்கு உள்ள அப்பனே பக்தர்களுக்கு அப்பனே அவர்களும் கூட உணர்வார்கள் அப்பனே அறிந்தும் கூட

இதனால் அப்பனே இங்கிருந்து அப்பனே அவ்வைரமானது அப்பனே நவகிரகங்களை கூட அப்பனே தாக்குமப்பா

அப்பொழுது சாதாரணமாக அதிலிருந்து அறிந்தும் கூட """அம்பாள்"""" அதாவது முருகனின் தாய் அப்பனே அழகாகவே வந்து அமர்ந்து அப்பனே ஆசிகள் தருவாளப்பா.. வைரமாகவே அப்பனே

அனைவரும் ஒளிர்ந்து விடலாம் அப்பனே

கர்மத்தையும் கூட அப்பனே அம்பாள் அமர்ந்திருக்கும் பொழுது அவ் ஒளி அப்பனே அறிந்தும் கூட அங்கும் இங்கும் பின் அலைபாயும் பொழுது அப்பனே அப்படியே அப்பனே பின் ஈர்த்து அதாவது பாவத்தை ஈர்த்து அப்பனே புண்ணியங்களை பெறச் செய்யும் அப்பா

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அனைவரிடத்திலும் புண்ணியங்கள் தேங்கி நிற்கின்றது அப்பனே

ஆனால் பாவங்கள் ஆட்டங்கள் ஆடுகின்றது அப்பனே

அப் பாவங்கள் ஆட்டம் ஆடுகின்ற பொழுது அப்பனே எப்படியப்பா???? கஷ்டங்கள் வராமல் போகும்?????

ஆனாலும் அப்பனே புண்ணியங்கள் ஆட பின் ஆடல் பாடலுடன் அப்பனே ஆட்டுவிக்க வேண்டும் அதற்கு அப்பனே என்ன ரகசியம் என்றால்?? நவகிரகத்தை வென்றாக வேண்டும்...

இதை மீண்டும் மீண்டும் ஏன் தெரிவிக்கின்றேன் என்றால் அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே பின் வென்றவன் இவன்தான் அப்பா (ஓதிமலை அப்பன்)

அப்பனே அறிந்தும் கூட அப்பனே இன்னும் எட்டாம் படைவீடு எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய அப்பனே

அதாவது ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே

ஆறுபடை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் ஆறாவது அறிவையும் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனாலும் ஏழாவது அறிவிற்கு அப்பனே பின் எட்ட முடியாது

(ஏழாவது படைவீடாக குருநாதர் அகத்திய பெருமான் மருதமலையை வாக்கில் உரைத்திருப்பதை நினைவு படுத்துகின்றோம்)

எட்டாவது முடிவுக்கு வந்துவிட்டால் அப்பனே அறிந்தும் கூட நவ எதை என்றும் அறிய அறிய அப்பனே இதை நிச்சயம் யான் குறிப்பிடுவேன் அப்பனே பின் அறிந்தும் ஏன் அப்பனே அறுபடை வீடுகளுக்கு மட்டும் தெரிந்திருக்கக் கூடியது அப்பனே புராணங்களில் கூட அப்பனே எழுதி வைத்திருக்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இன்னும் மூன்று வீடுகள் மறைக்கப்பட்டது அப்பனே

அறிந்தும் கூட ஆனாலும் சிலர் சொல்கின்றார்கள் அப்பனே ஆனாலும் நிச்சயம் பின் ஒன்பதாவது படைவீடு என்பது யான் சொல்வேன் அப்பனே இன்றிலிருந்தை அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட அப்பனே

ஏன் எதற்கு அப்பனே ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தை குறிக்கும் அப்பா

அப்பனே அறிந்தும் கூட அவ் கிரகத்தை பற்றியும் கூட அப்பனே யான் வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே

பின் அறிந்தும் அங்கெல்லாம் சென்று வந்தாலே அப்பனே நிச்சயம் முருகன் அருள் கிட்டி அப்பனே எதை என்றும் அறிய அறிய கிரகங்கள் வழி விடும்ப்பா

அதாவது அப்பனே கிரகங்கள் அப்பனே வழி விடும்பொழுது அப்பனே நீ நினைத்தது நடக்கும் அப்பனே

அனைத்தும் உன் கையில் அப்பா!!! அப்பனே நீ தான் அப்பனே மன்னன்!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே இவையெல்லாம் அப்பனே முன்னொரு காலத்திலே அப்பனே பல மன்னர்கள் பயன்படுத்திக் கொண்டார்களப்பா

ஆனாலும் அப்பனே மற்றவர்களும் நம் போல் இருக்கக் கூடாது என்றெல்லாம் அப்பனே அவர்களே யோசித்து திருத்தலம் திருத்தலமாக சென்று அதையும் அழித்துவிட்டு அப்பனே பொய்யான செய்திகளை எல்லாம் பரப்பி பரப்பி அப்பனே மனிதனும் கெட்டிட்டு அப்பனே பக்தியும் கெட்டிட்டு அப்பனே சுவடியையும் கூட அப்பனே அறிந்தும் கூட

இதனால் என்ன பயன்??? அப்பனே!!!

இதனால் அப்பனே வரும் காலத்தில் ஓங்குமப்பா!!! புகழப்பா!!!

அதாவது கலியுகத்தில் அப்பனே அறிந்தும் கூட பின் நிச்சயம் பின் தெய்வங்கள் அப்பனே அறிந்தும் கூட தன் புகழை தானே உயர்த்தி வைக்கும் அப்பா

ஏனென்றால் மனிதன் நம்ப போவதில்லை ஏன் எதற்கு என்றால் அப்பனே பொய்யானவற்றையெல்லாம் மனிதன் அதைச் செய்தால் இவை நடக்கும் எதை என்றும் அறிய அப்பனே இன்னும் இன்னும் பின் தெரியாமல் பேசுகின்றான் அப்பனே

அவை மட்டும் இல்லாமல் சுவடிகளை எடுத்துக்கொண்டு என்னிடத்தில் உண்மையான சுவடி என்னிடத்திலே உள்ளது மற்றவை எல்லாம் பொய் என்றெல்லாம் அப்பனே புறம் பேசிக் கொண்டிருப்பார்கள் அப்பனே

அதனால் சொல்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட இன்னும் இன்னும் என்னென்ன நடக்கின்றது என்பதை கூட தண்டனைகள் உண்டு அப்பனே

அறிந்தும் கூட அதனால் இறைவனிடத்தில் விளையாடுவது சாதாரணமில்லை என்பேன் அப்பனே

அப்பனே மனிதன் அறிந்தும் கூட எதற்காக பிறக்கின்றான் எதற்காக வளர்கின்றான் எதற்காக பின் சாகின்றான் மீண்டும் பிறக்கின்றான் என்பவையெல்லாம் தெரியாமல் தெரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே வீணப்பா.. பிறவியும் வீணப்பா உன்னை சார்ந்தோர்களையும் அப்பனே கர்மத்தில் நுழைத்து அப்பனே அவர்களையும் கூட வீணாக்கி மீண்டும் பிறவி எடுத்து விடுகின்றாய் அப்பனே

ஆனால் அப்பனே உண்மைதனை உணர்ந்தால் அப்பனே வெற்றியாள்!!!!

அப்பனே   பொய்தனை உணர்ந்தால் அப்பனே தோல்வியாள்!!!!!

அறிந்தும் ஏன் எதற்கு அப்பனே வெற்றியை குறிப்பவன் அப்பனே அறிந்தும் கூட அப்பனே

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே அறிந்தும் கூட

கண்களிலே சனீஸ்வரனை வைத்துள்ளானப்பா இவ் முருகன் அப்பனே அறிந்தும் கூட உண்மைதனை கூட விளக்கங்கள் அப்பனே

இதனால் அப்பனே நிச்சயம் பின் அறிந்தும் கூட அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே சனீஸ்வரனால் ஆட்டுவிக்கப்படும் மனிதர்கள் கூட அப்பனே அதனால் சனீஸ்வரன் பிடித்து விட்டால் மனிதன் தப்ப முடியாதப்பா... இங்கு வந்து விட்டால் அப்பனே சனீஸ்வரனும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய

ஓது  !!ஓது  !! என்றெல்லாம் அப்பனே முருகனைப் பார்த்து அப்பனே பின் தயங்கி அப்பனே கைகட்டி நிற்பானப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே

ஏன் எதற்கு அப்பனே நிச்சயம் அதாவது கிரகங்களை வென்றவன் என்று சொல்லிவிட்டேன் அப்பனே

ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இதனால் அப்பனே இதற்கும் சொல்கின்றேன் அப்பனே

அதாவது சிறு குழந்தையாக முருகன் இருக்கின்ற பொழுது அறிந்தும் கூட ஆனாலும் ஈசனிடம் போய் கேட்டான் அப்பனே

யார் சனீஸ்வரனே !!!

அப்பா அறிந்தும் கூட அப்பனே நீங்கள் தான் எந்தனுக்கு பட்டத்தை கொடுத்தவர்...

ஆனாலும் உங்கள் குழந்தை கந்தன் இருக்கின்றானே...அவந்தனை யான் பிடிக்கப் போகின்றேன் ஏனென்றால் இதுவும் விதி தான்

ஈசனே நீங்கள் தான் சொன்னீர்கள் அறிந்தும் கூட உன் கடமையை செய் என்று... அதனால் யான் நிச்சயம் கந்தனை பிடிக்கத்தான் போகின்றேன்.. என்று


ஆனாலும் அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய பின் ஈசனும்

சனீஸ்வரனே!!! பிடித்துக்கொள் முடிந்தால் பிடித்துக் கொள் என்று பின் நகைத்தான் அதாவது பின் எம்பெருமானே!!!! அறிந்தும் கூட

இதனால் நிச்சயம் அதாவது பின் யோசித்தான் அதாவது இப்படி இவ் வயதில் பிடிக்க வேண்டும் ஆனாலும் சிறு வயதாக முருகன் இருக்கின்றானே என்றெல்லாம் யோசித்தான் சனீஸ்வரன்

ஆனாலும் அறிந்தும் உண்மைதனை கூட பின் பார்வதி தேவியும் ஆனாலும் பின் சனீஸ்வரனே நீ நினைத்தது நீ நினைப்பது நிச்சயம் எந்தனுக்கு கேட்கின்றது

அதனால் முருகன் சிறுபிள்ளை இல்லை நீ சாதாரணமாக பிடிக்கலாம்!!!

தேவியே!!! அறிந்து கொண்டாயா!!!!

ஆனாலும் அறிந்தும் கூட நிச்சயம் எந்தனுக்கும் ஒரு மனசாட்சி உள்ளதே... அறிந்தும் கூட 

இவ் வயதில் பிடித்தால் என்ன ஆகும் ?? என்று!!! சனீஸ்வரனும் நினைத்தான்!!!!

ஆனாலும் தேவியோ!!!! நிச்சயம் பிடி!!!

அறிந்தும் கூட நீ முருகனை பிடித்தால் உந்தனுக்கு ஒரு பரிசை வழங்குகின்றேன் என்று அறிந்தும் கூட எதை என்றும் புரிய புரிய தேவியும் கூற!!!

நிச்சயம் தாயே!!!! அதாவது பரிசுக்காகவே முருகனை பிடிக்கத்தான் போகின்றேன் என்று

இதனால் அறிந்தும் கூட எதை என்றும் புரிய  புரிய அதாவது இங்கே பிடிக்க முயன்றான்!!! சனீஸ்வரன்.

ஆனாலும் முருகன் ஓடோடி அறிந்தும் கூட இங்கிருந்து பழனி மலைக்கு தாவினான் முருகா!!! என்று பின்னே ஓடினான் சனீஸ்வரன்!!!!!

அங்கிருந்து பின் முருகன் பூம்பாறை தாவினான்

(பூம்பாறை கொடைக்கானல் குழந்தை வேலப்பர் கோயில்)

அறிந்தும் கூட அங்கிருந்து செந்தூரை (திருச்செந்தூர்) அறிந்தும் கூட பல மலைகளில் ஏறி எவை என்றும் அறிய அறிய கடைசியில் இங்கு எதை என்று கூட அலைகளைப் போல் மீண்டும் குழந்தையாக ஓடோடி இங்கு வந்து விட்டான்

ஆனாலும் சனீஸ்வரனால் முடியவில்லை. எதை என்று அறிய அறிய ஆனாலும் சனீஸ்வரனாலே முடியவில்லை அறிந்தும் அறிந்தும் கூட மெதுவாக சென்றான் அறிந்தும் கூட

கடைசியில் பல ஆண்டுகள் அறிந்தும் கூட இங்கு வந்து அறிந்து எதை என்று அறிய அறிய முருகா அறிந்தும் கூட உன்னை பிடிக்க முடியவே இல்லையே அறிந்தும் கூட

ஆனாலும் அறிந்தும் கூட பார்வதி தேவியும் பார்த்துக் கொண்டே இருந்தாள் அருகில் இருந்து கூட

எதை என்று அறிய அறிய சனீஸ்வரனே!!!! அதாவது முருகனை பிடித்து விட்டாயா?? என்று

அய்யய்யோ!!!! முடியவில்லை தாயே!!!

எதை என்றும் புரியாத அளவிற்கும் கூட ஆனாலும் நிச்சயம் அறியும் வண்ணம் எதை என்று புரிய புரிய நிச்சயம் மீண்டும் சொல்கின்றேன் பின் நிச்சயம் முருகனை பிடித்தால் நிச்சயம் பரிசு என்று பார்வதி தேவி!!!

ஆனாலும் சனீஸ்வரன் அறிந்தும் கூட தாயே என்னால் முடியவில்லை !!!அவந்தன் விளையாட்டுகாரனாகவே இருக்கின்றான்....

இதனால் ஆனாலும் யான் சிறு பிள்ளை என்று நினைத்தேன்!!!! ஆனாலும் நிச்சயம் அறிந்தும் கூட என்னால் முடியவில்லை. காலங்களும் கடந்து விட்டது அறிந்தும் கூட

சுற்றி சுற்றி நிச்சயம் அலுத்து விட்டேன்!!!

யான் எங்கெங்கு செல்வது??????

ஆனாலும் சனீஸ்வரன் எதை என்றும் அறிய அறிய முருகா முருகா என்று

ஆனாலும் தேவி பரிசு இல்லை என்று கூறிவிட்டாள் அறிந்தும் கூட

முருகனை பிடித்தால் தான் பரிசு என்று யான் சொல்லிவிட்டேன் என்று பார்வதி தேவியும் அறிந்தும் அறிந்தும் உண்மைதனை கூட

இதனால் நிச்சயம் பரிசு இல்லை என்று

ஆனாலும் சனீஸ்வரனும் தாயே அப்படி எல்லாம் கூறக்கூடாது!!!

நிச்சயம் அன்பே பெரியது என்று நீங்கள் தான் கற்றுக் கொடுத்தீர்கள்!!!

அதனால் பரிசு வேண்டும் என்று!!!! சனீஸ்வரனும்!!!!

அப்படியா!!!!! முருகன் என்ன சொல்கின்றானோ அதைக் கேள்!!! பரிசு தருகின்றேன் என்று தேவியும்!!!

ஆனாலும் அறிந்தும் எதை என்றும் உணர்ந்தும் கூட அதனால் முருகனும் ஒரு வார்த்தை விட்டு விட்டான்!!!!
அறிந்தும் உண்மைதனை கூட!!!!


 அதாவது.... அறிந்தும் சனி ஈஸ்வரனே!!!!! நீ என்னிடத்திலே இருந்து விடு... அறிந்தும் அறிந்தும் கூட

எதை என்று புரிய புரிய இதனால் வரும் பக்தர்களுக்கு எல்லாம் அறிந்தும் கூட அதாவது ஒருவர் ஒருவருக்கு கூட ஒரு ஒவ்வொரு வேளையில் சில ஆண்டுகளில் நீ பிடிப்பாய் அல்லவா!!!!!(மனிதர்கள் அனைவருக்கும் அவரவர் பாவ புண்ணியத்திற்கு ஏற்ப சனி திசை அல்லது சனி தோஷம் என்று இருக்கும் அல்லவா அதை முருகன் குறிப்பிடுகின்றார்) அவர்கள் என்னிடத்தில் வந்தால் நிச்சயம் அவர்களுக்கு. அவ் (சனி)திசையிலோ நீ பிடித்துக் கொண்டாயோ அவ் நேரத்திலோ நீ அவர்களுக்கு உயர்வை கொடு!!! அப்பொழுது என்னிடத்தில் இருந்து கொள் என்றெல்லாம்.

இதனால் சனீஸ்வரன் தேவியே!!! யான் வென்று விட்டேன் வென்று விட்டேன்!!!! என்று நிச்சயம் பரிசு கொடு !!!என்று

 ஆனாலும் தேவியும் பரிசளித்து விட்டாள்!!!

அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட உண்மைதனை சொல்லிவிட்டேன் அப்பனே

இன்னும் நவகிரகங்களை பற்றி எல்லாம் சொல்வேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட ராகு கேதுகள் பற்றியும் கூட அப்பனே

ஆனாலும் அப்பனே இன்றளவில் ராகு கேது க்களை எதை என்று கூட தோஷங்களாகவே பார்க்கின்றார்கள் அப்பனே

அப்படி இல்லையப்பா

அப்பனே அறிந்தும் கூட இதன் தத்துவத்தை ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே அறிந்தும் கூட

இங்கிருந்தே செயல்படுகின்றது அப்பனே

அதாவது அப்பனே சந்திர கிரகணம் சூரிய கிரகணம் அப்பனே ஏன் எதற்கு அப்பனே

அதாவது அனைவரும் செய்யும் தவற்றை கூட அப்பனே சந்திரனும் சூரியனும் பார்த்து அப்பனே அதாவது முழுமை அடைந்து விட்டால் ராகுவும் கேதுவும் அவர்களை பிடித்து அப்பனே பின் அறிந்தும் கூட அதாவது பின் சேமிப்பு திறனை கூட இவர்கள் வாங்கிக் கொண்டு அப்பனே கஷ்டத்தை அள்ளிக் கொடுக்கின்றார்களப்பா!!!!

அதனால் தான் அப்பனே ராகு கேதுகளுக்கு எப் பரிகாரம் செய்தாலும் உதவாதப்பா உதவாது!!!

ஆனாலும் அப்பனே நன்மைகள் எதை என்று புரியும் அளவிற்கும் கூட

யான் சொன்னேனே நாக தேவதையின் அறிந்தும் எதை என்று கூட அவ் வைரமானது எதிரொலிக்கும் பொழுது அப்பனே அவ் தோஷங்களை கூட பின் உடைந்து போகும் அப்பனே எதை என்றும் அறிய அறிய

 இம் முருகனுக்கு அப்படி ஒரு சக்தியப்பா....

அப்பனே இவன் குழந்தை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் யார் யார் எதைக் கேட்கின்றார்களோ அதை உடனடியாக கொடுத்து விடுவான் அப்பா இதுதான் அப்பனே ஓதிமலையப்பன்!!! அறிந்தும் கூட

குழந்தையாகவே இருக்கின்றான் அப்பனே குழந்தையை அப்பனே நீங்கள் எப்படி பார்க்க வேண்டும்?? தெரிந்து கொண்டீர்களா அப்பனே

அப்படி பார்த்தால் வெற்றியப்பா!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய எதை வேண்டுவது என்பதை கூட ஆராய்ந்து ஆராய்ந்து நீங்கள் கேட்க வேண்டும் அப்பனே

இக் குழந்தை தருவானப்பா

அறிந்தும் உண்மைதனை கூட இன்னும் இன்னும் விளக்கங்களோடு அப்பனே ஏன் எதற்கு அப்பனே கூர்முனையாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனடியில் எதனை என்று கூட உள்ளது என்பதை கூட யாரும் அறிவதில்லை அப்பனே

இதனால் வரும் வரும் காலத்தில் இவை எல்லாம் எடுத்துரைக்கும் பொழுது நிச்சயம் புரியும் அப்பா

இதனால்தான் அப்பனே அங்கிருந்தே (ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவரின் இப்பிறவி) வருகின்றேன் அப்பனே
இதனால் அவந்தன் மிக  உயரத்திற்கு சென்று விட்டான் அப்பனே!!! அறிந்தும் கூட

அதனால் முருகனையே மறந்து விட்டான் !!!! ஆனாலும் போகனும் சொன்னான் எதை என்றும் அறிய அறிய

அதாவது அப்பா முருகா அறிந்தும் கூட இவந்தன் ஏழையாக இருந்தான் ஆனாலும் யான் கொடுக்கச் சொன்னேன் ஆனால் இப்படி ஆகிவிட்டானே என்று

ஆனாலும் காலத்தின் கட்டாயம் அப்பா ஆனாலும் அதே போல தான் அப்பனே உங்களுக்கும் அதிக அளவு அனைத்தும் கொடுத்து விட்டாலும் அப்பனே இறைவனை மறந்து விடுவீர்கள் அப்பனே

இறைவனுக்கு யாரப்பா சேவைகள் செய்வது நீங்களே எடுத்துரையுங்கள் அப்பனே

உங்களுக்கு கொடுக்க தயாராகத்தான் இருக்கின்றான் முருகன்

ஆனாலும் போகனும் முருகா உனை எவை என்று அறிய அறிய உந்தனுக்கு சேவை செய்ய வருகின்றவர்களுக்கு கொடுத்து விட்டால் இவர்கள் நிச்சயம் பின் அறிந்தும் உயர்ந்து விடுவார்கள் உன்னை பார்ப்பதற்கு அதாவது குழந்தையை பார்ப்பதற்கு யாரும் பின் வர மாட்டார்கள் என்று உங்களை எல்லாம் அப்பனே ஏதோ ஒரு கஷ்டத்தில் நுழைத்து அப்பனே வைத்துள்ளான் அப்பா

இவையெல்லாம் கஷ்டங்கள் இல்லையப்பா!! சோதனைகளப்பா!!!

இவை நிச்சயம் தெரிந்து கொண்டு ஆக வேண்டும் அறிந்தும் உண்மை நிலைகளை கூட

அப்பனே ஏன் எதற்காக இவ் நேரத்தில் வந்து சொல்கின்றேன் என்றால்

(ஓதி மலையில் குருநாதர் இரவு நேரத்தில் வந்து வாக்குகள் உரைத்தார்)

அப்பனே பல ரகசியங்கள் இவ்வுலகத்தில் நடந்து கொண்டுதான் இருக்கின்றது!!!!

அப்பனே கலியுகத்தில் அப்பனே அழியும் காலம் பின் நோய்கள் காலம் அப்பனே எவை என்று அறிய அறிய மனக்குழப்பத்தின் காலம் என்றெல்லாம் அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

அப்பனே அறிந்தும் கூட இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய குழந்தை போல் மனதை வைத்துக் கொண்டாலே போதுமானதப்பா அனைத்தையும் கொடுத்து விடுவானப்பா!!!

இதனால் குழந்தையிடம் என்ன விளையாட வேண்டுமோ எப்படி விளையாட வேண்டுமா அப்படி விளையாடி அப்பனே பெற்றுக் கொள்ளுங்கள் அருள்களை அப்பனே

இதுதான் அப்பனே எதை என்று அறிய அறிய

"""""அப்பனுக்கும் மிஞ்சியவன் அப்பனே!!!!!

(ஐந்து முக ஈஸ்வரன் சிவன் என்றால் ஆறுமுக ஈஸ்வரன் முருகன் !!! அப்பன் ஈசனுக்கும் மேலானவன் முருகன்)


அறிந்தும் கூட!!! ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் சனீஸ்வரனும் அப்பனே அறிந்தும் கூட இங்கேயே இருக்கின்றானப்பா

அப்பனே அருள்கள் கொடுத்துக் கொண்டு இருக்கின்றானப்பா!!!

இதனால் அப்பனே அறிந்தும் கூட அனைவருக்குமே அப்பனே அறிந்தும் அறிந்தும் அதாவது அப்பனே நீங்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றீர்களே!!!

(குருநாதர் அகத்தியர் பெருமான் முருகனுக்கு ஓதி மலையில் பூஜைகள் மற்றும் நித்ய சேவைகள் செய்யும் நபர்களுக்கு கூறிய வாக்கு)


 உங்கள் இல்லத்திற்கெல்லாம் அப்பனே பின் அனுக்கிரகமாகவே குழந்தை போல் வந்திருக்கின்றான் அப்பா அழகாகவே அப்பனே

ஆனாலும் அறிந்து கூட குழந்தைக்கு என்ன தெரியும் அப்பனே பின் சர்க்கரையையும் அப்பனே பின் வாயிலிட்டு சென்றுவிட்டானப்பா!!

அதுதான் கர்மா அப்பா (கர்மாவை எடுத்து சென்று விட்டார்) அறிந்தும் கூட...

இதனால் அப்பனே பாசம் தான் இவ்வுலகத்தில் பெரியது அப்பனே மற்றவை எல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே இறைவன் தான் பெரியவன் அப்பா

ஆனாலும் அப்பனே இறைவன் அழியக்கூடியவன் அல்ல

மனிதன் அழியக்கூடியவன் அப்பனே

அழியக்கூடாதவன் இடத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் அப்பனே அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள் அப்பனே உங்கள் பாவங்களும் அடியோடு அழிந்து விட்டது அப்பனே அறிந்தும் கூட


ஆனாலும் ஏன் இப்படி இருக்கின்றீர்கள் என்பதை எல்லாம் நீங்கள் கேட்கலாம் அப்பனே

ஆனாலும் அனைவருக்கும் அனைத்தும் கொடுத்து விட்டால் அப்பனே... ஏனப்பா இறைவனையும் மறந்து விடுவீர்கள் நீங்கள் அப்பனே

அதனால்தான் அப்பனே அறிந்தும் கூட எதை என்று அறிய அறிய இப்படியே வைத்துள்ளான் என்பேன் அப்பனே

அதனால் சாதாரணமில்லை அப்பனே

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால் எவருக்குமே தெரிவதில்லை அப்பனே

எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே

அதாவது ஒன்பதாம் படைவீடு அப்பனே

எதை என்று அறிய அறிய இதையும் மறைத்து விட்டார்களப்பா மனிதர்கள்!!!

 ஏனென்றால் அப்பனே இங்கு செல்ல செல்ல அப்பனே பல மனிதர்களுக்கு அப்பனே நன்மையாக ஆகிக் சென்று கொண்டே இருந்ததது அப்பனே உயர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள் என்பேன் அப்பனே

ஆனாலும் பல மனிதர்கள் எதை என்றும் அறிய அறிய அப்பொழுதெல்லாம் அப்பனே மிக்க செல்வந்தர்கள் அறிந்தும் கூட அதாவது நாம் தான் இங்கு செல்வந்தர்களாக இருக்க வேண்டும் அனைவரும் நம் பேச்சைக் கேட்டு நடந்தாக வேண்டும் என்றெல்லாம் நம் தனக்கு வேலையாட்கள் பின் இருக்க மாட்டார்கள் அனைவரும் உயர்ந்து விட்டால்... என்று அப்பனே மறைத்து விட்டார்கள் அப்பனே

ஆனால் கலியுகத்தில் அப்பனே நிச்சயம் அப்பனே யாங்கள் அனைத்தையும் வெளியே கொண்டு வருவோம் அப்பனே

அனைத்தும் உங்களுக்கும் அறிந்தும் கூட அப்பனே காட்சியும் தருவோம் அப்பனே நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட

அதனால் அப்பனே எதை என்றும் புரிந்து புரிந்து அப்பனே அதாவது எதை என்றும் தெரியாமலும் அப்பனே பின் தெரிந்தும் அப்பனே ஆனாலும் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே மனிதன்

ஏன் எதற்கு எதை என்று அறிய அறிய தெரிந்து வாழுங்கள்

தெரிந்து வாழ்வதற்கும் புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!

புண்ணியம் எதை என்றும் அறிய அறிய இவனை காண்பதற்கும் புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!

(ஓதி மலையப்பன் தரிசனத்தை காண்பதற்கும் புண்ணியங்கள் வேண்டும்)

அப்பனே நீங்கள் புண்ணிய ஆட்கள் அனைவருமே அதனால்தான் முருகனை அடியோடு அதாவது குழந்தையை மடியின் மீதே அப்பனே.... வைத்து நீங்கள் தான் பாராட்ட வேண்டுமே தவிர எதை என்றும் அறிய அறிய அக்குழந்தைக்கு எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் தெரியுமப்பா!!!

அறிந்து கூட புரிந்து கொண்டீர்களா அப்பனே

வேதனையும் வரலாம் சோதனையும் வரலாம் அப்பனே அறிந்தும் கூட அனைத்தும் பின் பாவிப்பவன் எதை என்று கூட

அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே

சூரியன் சந்திரன் அப்பனே இரவு பகல் இன்பம் துன்பம் அப்பனே ஆண் பெண் அப்பனே மாறி மாறி எதை என்றும் அறிய அறிய அதேபோலத்தான் அப்பனே

இன்பமே இருந்தாலும் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனையும் மதிக்க மாட்டாயப்பா நீ

அதனால்தான் அப்பனே துன்பம் என்று ஒன்று எதை என்று கூட கொண்டு வந்தான் எவை என்று கூட இறைவனே அப்பனே

அப்பொழுதுதான் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் புரிய கவலைப்பட தேவையில்லை அப்பனே

முருகன் பின் அனைவரின் வீட்டிற்கும் வந்து அப்பனே ஆனாலும் ஒவ்வொரு இல்லத்திலும் சில பிரச்சினைகள் தான் அப்பனே

ஆனால் நிச்சயம் தருவானப்பா அப்பனே எவை என்றும் அறிய அறிய (ஆலயத்தில் சேவை செய்யும் ஒருவருக்கு) உன் வாக்குகளும் பலிக்கும் அப்பா  அப்பனே அறிந்தும்  கூட வரும் காலத்தில் நல்லோருக்கெல்லாம் புஷ்பத்தை இடுவானப்பா!!!! அறிந்து உன் சேவையை செய்ய அப்பனே!!!

(ஓதி மலையில் ஓதியப்பர் பூவாக்கு மூலம் அதாவது அவர் சூடிய பூக்களை வலது புறம் விழ வைத்து ஆசிகள் தருவதை குருநாதர் குறிப்பிடுகின்றார்)

எவ்வளவு தொந்தரவுகள் வந்தாலும் அப்பனே அறிந்தும் கூட பல தொந்தரவுகள் வந்தும் விட்டது அப்பனே அவையெல்லாம் குழந்தையாக இருந்து அப்பனே பாதுகாத்தானப்பா!!!!

அதனால் அப்பனே எவை என்று அறிந்து அறிந்து கூட உன் முதுகின் மேலும் வந்தான் அப்பா அறிந்தும் கூட எவை என்று புரியப் புரிய அப்பனே

ஆனாலும் ஏதோ என்று எவை என்றும் அறிய அறிய அப்பனே

இதனால் அப்பனே பின் அன்பே உயர்ந்தது அப்பனே

இறைவனுக்கு ஏதும் தேவையில்லையப்பா

அன்பை செலுத்தினால் அப்பனே பன் மடங்கு அனைத்தும் உயர்வும் கொடுப்பான் அப்பா அனைத்தும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே நன்மைகளாகவே முடியும் அப்பா அதனால் அவை இவை இத் தோசங்கள் அத் தோஷங்கள் என்றெல்லாம் அப்பனே இன்றளவிலே விட்டு விடுங்கள் அப்பனே

அனைத்திற்கும் காரணம் இவனே (ஓதிமலை முருகன்)

காலத்தை வென்றவன் அப்பனே எதை என்று அறிய அறிய ஒன்பதாம் படைவீடு அறிந்தும் எதை என்றும் அறிய அறிய அப்பனே...

இதைத் தன் அப்பனே நிச்சயம் இன்னும் இன்னும் விளக்கத்தோடு இன்னும் அப்பனே அறிந்தும் கூட பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே

அதாவது தன் ஆறறிவை எவன்  பயன்படுத்துகிறானோ... ஏழாவது அறிவிற்கு வந்துவிடலாம் எட்டாவது அறிவுக்கும் வந்து விடலாம் ஆனாலும் எதை என்று அறிய அறிய இவந்தனை அப்பனே தேடுவது அவ்வளவு சுலபம் இல்லையப்பா

குழந்தை அறிந்தும் கூட

ஒன்பதாவது அறிவு அப்பனே அப்பொழுதே பிறவி முடிந்து விடும் அப்பனே அப்பொழுதே காட்சியளிப்பான் அப்பனே

இங்குதான் அப்பனே காட்சியளிப்பான் அப்பனே

எங்கெல்லாம் திரிந்து பின் அலைந்து வந்தாலும் அப்பனே குழந்தையாக முருகன் இங்கு தான் காட்சியளிக்க போகின்றான் அப்பனே

அனைத்து சித்தர்களும் அப்பனே இங்கு தான் காட்சியும் அளிக்கப் போகின்றார்கள் அப்பனே

எதை என்றும் அறிய அறிய அப்பனே மயில்மீது வந்து அப்பனே விளையாடிவிட்டு சென்று வருகின்றான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே

சபரிநாதனும் (ஐயப்பன் )அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று புரிய  புரிய இன்னும் அப்பனே விநாயகப் பெருமானும் வருவான் அப்பா அறிந்தும் கூட

அனுதினமும் இவனை பார்த்துக்கொண்டு தான் கேட்பான் அறிந்தும் கூட பின் எவை என்று கூட கந்தனே எதை என்று அறிய அறிய அனைத்தும் விளையாட்டாகவே போய்விட்டது உந்தனுக்கு என்று

ஆனாலும் இதில் கூட பல அர்த்தங்கள் உள்ளதப்பா

அப்பனே கவலைகள் இல்லை நல் ஆசிகள் இன்னும் ரகசியங்களை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே

ஒவ்வொரு வாக்கிலும் அப்பனே பின் அனைத்தும் சொல்லிவிட்டால் அப்பனே மறந்துவிடுவீர்கள் நீங்கள் அப்பனே

இதனால் பின் அடிக்கடி வந்து வாக்குகளும் செப்புவேன் அப்பனே ரகசியங்களை சொல்வேன் அப்பனே உங்களை உயர்த்தியும் விடுவேன் அப்பனே

நலன்கள் ஆசிகளப்பா!!! கோடிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday 22 April 2024

சித்தன் அருள் - 1591 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ விக்நாகர் கணபதி மந்திர்.!




17/06/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம்.  ஸ்ரீ விக்நாகர் கணபதி மந்திர். ஓஜர். புனே மாவட்டம் மகாராஷ்டிரா. 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள் கோடிகளப்பா கவலைகள் இல்லை!!!

அப்பனே கணபதியின் அருளும் நல்விதமாகவே அமைந்தது அப்பனே நல்விதமாகவே அமைந்தது என்பேன் அப்பனே

இன்னும் பல வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அப்பனே நல் முறைகளாக அங்கங்கு வந்து யான் ஆசிகள் பெற்று தந்தேன் அப்பனே நலமாகவே.

உங்கள் கூடவே வந்து ஆசிகள் பெற்று தந்தேன் அப்பனே நலன்கள் அப்பனே மற்றொரு முறையும் இங்கு வருவீர்கள் அப்பொழுது யான் வாக்கு சொல்கின்றேன் அப்பனே

அப்பனே அனைவருக்கும் கூட நன்மைகள் அப்பனே எவ் திசையில் இருந்தாலும் அப்பனே..... பக்தி தான் முக்கியம் என்பது விநாயகப் பெருமான் உணர்த்துவான்!!!

வேறு எதுவுமே தேவையில்லை நீ எங்கிருந்தாலும் உண்மையானவனாக இருந்தால் நிச்சயம் அனைத்தும் கிடைக்கும் என்பதே விசித்திரமான உண்மை. அதாவது எங்கு தேடி தேடி அலைந்து அலைந்து உயர்ந்து அதாவது நிச்சயம் எங்கேயாவதானாலும் அலைந்தும் திரிந்தும் கூட நிச்சயம் இறைவனை தேடிக்கொண்டே இருந்தால் கடைசியில் பார்த்தால் உயர்வான இடத்திற்கு நிச்சயம் சென்று விடுவீர்கள் என்பதே என்னுடைய அர்த்தம்.

அதனால் நிச்சயம் திரிந்து அலைந்து கடைசியில் பார்த்தால் மேன்மை அதாவது மேல் நோக்கி இருக்கின்றீர்கள் இதுதான் அர்த்தம்.

இன்னும் இதனைப் பற்றியும் கூட சொல்கிறேன் விவரமாகவே!!!!!!

அப்பனே கணபதியின் பராக்கிரமங்களை பற்றி அறிய அப்பனே மீண்டும் ஏறிக்கொண்டே வாருங்கள் அப்பனே சொல்கின்றேன் அப்பனே அனைத்தும் சுலபமாக அறிந்து கொள்ள முடியாது!!!!

நாளை சொல்கின்றேன் வாக்குகளை!!!

அப்பனே நல்முறையாக இன்னும் அகத்தியன் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வீர்கள் பொறுத்திருந்தால் அப்பனே நாளையும் சொல்கின்றேன் வாக்குகள் அப்பனே ஆசிகள் அப்பா ஆசிகள்!!!!!

குருவே சரணம் இந்த அஷ்ட விநாயகர் திருத்தலங்களுக்கும் நவக்கிரகங்களுக்கும் தொடர்பு உள்ளதா???!!

அப்பனே நிச்சயம் உண்டு என்பேன் அப்பனே நிச்சயம் வாக்குகள் சொல்கிறேன் அப்பனே அனைத்தும் ஒவ்வொன்றாக சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே வாக்குகள்!!!

அவசரம் வேண்டாம் அப்பனே பொறுமை காத்திருங்கள்.  அப்பனே!!!!

ஓசர் விநாயகர் கோயில் முகவரி: நாராயணன், ஓசர் சாலை, ஓசர், தாலுகா ஜுன்னார், மாவட்டம் புனே, மகாராஷ்டிரா, 410504

விக்னஹர் கணபதி கோவில் நேரம்: காலை 5:00 மணி முதல் இரவு 10:30 மணி வரை

அருகில் உள்ள நகரங்கள்: புனே, நாராயண்கான், நாசிக் (நாசிக்)

அருகிலுள்ள இடங்கள்: சிவனேரி கோட்டை, லென்யாத்ரி குகைகள், லென்யாத்ரி விநாயகர், மல்ஷேஜ் காட், நானேகாட், பீமாசங்கர்.

ஓசர் புனேவிலிருந்து 85 கிமீ தொலைவில் உள்ளது, புனே-நாசிக் நெடுஞ்சாலையிலிருந்து வடக்கே நாராயண்கானுக்கு சுமார் 9 கிமீ.புனே மாவட்டத்தின் ஜுன்னார் தாலுகாவில் உள்ளது. /குகாடி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.  அதன் மீது கட்டப்பட்ட யடகான் அணைக்கு அருகில் உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 19 April 2024

சித்தன் -அருள் -1590 - அன்புடன் அகத்தியர் - கிரிஜாத்மஜ் கணபதி மந்திர் லேன்யாத்ரி அஷ்ட விநாயகர் குகை கோயில்!


17/6/2023 அன்று இடைக்காடர் சித்தமுனி உரைத்த பொது வாக்கு!

வாக்குரைத்த ஸ்தலம் : கிரிஜாத்மஜ் கணபதி மந்திர் லேன்யாத்ரி அஷ்ட விநாயகர் குகை கோயில். ஜூன்னார். புனே மகாராஷ்டிரா. 

ஆதி அண்ணாமலையானையும் உண்ணாமுலை தேவியையும் மனதில் எழுப்பி வாக்குகளாக ஈகின்றேன் இடையனவன்!!!!

இன்னும் ஏனைய பிறவிகளிலும் கூட பிறந்தாலும் கூட மனிதனுக்கு நிச்சயம் புத்திகள் வராது!!!!!

வராது!!! அதனால்தான் குற்றங்கள் குறைகள் இன்னும் இன்னும் எதனை எதனையோ நோக்கியே மனிதன் நகர்ந்து கொண்டே இருக்கின்றான்

ஆனாலும் எவ் வளம்!!!  நல் வளம்!!!!  என்பவையெல்லாம் புரிவதில்லை மனிதனுக்கு!!

அதாவது பொன்னவன்!!!

(குரு கிரகம்) 

பொன்னவன் என்கின்றவனை பற்றி இங்கு விளக்கமாக விவரிக்கின்றேன்!!!!

பொன்னவனுக்கு முதலில் மற்ற உயிர்களை கொன்று குவித்து நிச்சயமாய் பின் உண்டால் அதை நிச்சயம் குருவானவன் ஏற்க மாட்டான்!!!!

ஏற்கவும் போவதில்லை!!!

ஆனாலும் பல மனிதர்கள் மாமிசத்தை உண்ணுகின்றார்களே!!!!

அவர்களை மட்டும் ஏன் ?? நன்றாக வைத்து உள்ளீர்கள் என்பதை கூட மனிதன் கேட்பான்!!!

இது மனிதனுடைய புத்தி தான்!!!

ஏனென்றால் மனிதனுக்கு எட்டாத அறிவாகவே உள்ளது!!!! 

ஆனாலும் மனிதன் புத்தி இதனால் நிச்சயம் ஆனால் அவர்கள் அனுபவிப்பதை எல்லாம் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.

ஏன்? எதற்கு?? என்றெல்லாம் தெரியாது இதனால் பொன்னவனின் முதல் ஆசிகள் பெற பின் அதாவது மாமிசத்தை நிச்சயமாய் விலக்க வேண்டும்!!!!

விலக்கி விட்டால் நிச்சயம் பொன்னவன் அனைத்து அருள்களையும் தருவான் இறைவனிடத்தில் சேர்ப்பான்.

ஆனால் அதை விட்டுவிட்டு அனைத்தையும் கொன்று தின்று வந்து விட்டு இறைவனை நோக்கினாலும் !?!?!?!?!!

இன்னும் சொல்வார்கள் அதாவது குரு பலம் வந்துவிட்டது!!!

அனைத்தும் ஆகுமாம் !?!?!!!?!

இவையெல்லாம் பின் போலி தான்!!!

குருபலம் வந்து கொண்டே தான் இருக்கும் !! பின் எவை என்று அறிய அறிய ஆனால் நல்லது நடக்கவில்லையே ஏன் மனிதா ????

குறை கூறி இன்னும் நினைத்து நினைத்து குறை கொண்டு தான் போகின்றாய் தாழ்ந்து தான் போகின்றாய் !!!

சரி!!!!!!  யான் பல பல யுகங்களில் கூட அறிந்தும் அறிந்தும் கூட பார்த்து பார்த்து!!!

ஆனாலும் இதைத்தான் சொல்கின்றார்கள்!!! குரு பலத்தில் பின் திருமணங்கள் செய்தால் நிச்சயம் பின் தோற்காது என்று !!!

ஆனால் தோற்றுவிடுகின்றதே ?? 

ஏன்? எதற்காக ?? என்று யாராவது சிந்தித்தீர்களா??

ஜோதிடன் சொல்லிவிடுவான் குரு பலம் வந்து விட்டால் திருமணம் செய்யுங்கள் என்று !!!

ஆனால் திருமணம் செய்தவர்களிடம் எக் குற்றங்கள் ?? இருப்பது உங்களுக்கு தெரியாது!!

இதனால் அக்குற்றங்களோடு நீ சொன்னால் உங்களுக்கு அதாவது ஜோதிடம் சொல்கின்றானே அவந்தனக்கு தான் பாவம்  பாவம்!!! 

அவை மட்டும் இல்லாமல் அவந்தன் பாவத்தை தான் சம்பாதித்துக் கொள்ள வேண்டும் அவை மட்டும் இல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவருமே பாவம் சம்பாதித்து நோய் நொடியில் சிக்குகின்றார்கள்.

ஆனால் பாவம் புண்ணியம் எதை அறிந்து செப்பினாலே நிச்சயம் தோற்காது...

மனிதனின் நிலைமைகள் நிலைமைகள் இன்னும் வீழ்ந்துதான் கொண்டிருக்கின்றது ஏன் எதற்காக என்றெல்லாம் நிச்சயம் நிச்சயம் வரும் காலங்களில் யான் எடுத்துரைக்க போகின்றேன்...

அவை மட்டும் இல்லாமல் இப்பொன்னவனின் குணம் நன்றாகவே பொய் புறம் கூறுதல் பொறாமை இன்னும் அமைதியை காத்தல் அமைதியை காத்தல் என்பது குருவானவனுக்கு மிக்க மிக்க பிடிக்கும் என்பதை கூட யான் அறிவேன்!!!

நிச்சயம் இவ்வாறெல்லாம் இருந்தால்தான் குருவானவன் கூட நிச்சயம் நல்லது செய்வான்!!!

அவை மட்டும் இல்லாமல் குரு பலம் வந்து விட்டது

1 ,  5  ,  7. ,9. 11 , இவையெல்லாம் குரு பலமாம்!?!?!?! 

( ஜாதக கட்டத்தில் ஒன்றில் ஐந்தில் ஏழில் ஒன்பதில் பதினொன்றில் குரு வந்தால் குரு பலமாம் !?!!!)

ஆனாலும் நிச்சயம் எப்பொழுது ஒருவனுக்கு பின் பிறந்த எவை என்று அறிய அறிய அதாவது ஜனனம் ஆகும் பொழுது 
3, 6 ,8, 12, இதில் குரு உள்ளதோ அவந்தனுக்கு நிச்சயம் மோட்சகதி தான்.

( ஒருவர் பிறக்கின்ற நேரத்தில் குரு அவருடைய ஜாதக கட்டத்தில் மூன்றில் ஆறில் எட்டில் பன்னிரெண்டில் இருந்தால் மோட்ச கதி யோகம்)

இதனை யாருமே அறிவதில்லை!!!!!

ஆனால் ஆறில் மறைந்து விட்டால் குருவானவன் என்னென்ன பிரச்சனைகள் என்று பொய் கூறிக் கொண்டிருக்கின்றான்

எட்டில் மறைந்தால் இன்னும் வேதனையே என்று பொய் கூறிக் கொண்டிருக்கின்றான்

12 இல் மறைந்தால் இன்னும் கஷ்டங்கள் என்று பொய்கள் கூறிக் கொண்டிருக்கின்றான்

மறைவு என்பதே கிடையாதப்பா!! கிடையாது!!

எவை அறிந்து அறிந்து நீ செய்யும் வினைகளுக்கு ஏற்பவே கிரகங்கள் உன் பின்னாலே வரும்

ஒன்றை சொல்கின்றேன் அறிந்தும் அறிந்தும் கூட

திருந்துங்கள் இனியாவது!!!

பின் ஆனால் எதன் மூலம் பணம் சம்பாதிப்பது என்பதையெல்லாம் தெரியாமல் மனிதனை ஏமாற்றி ஏமாற்றி சம்பாதித்து சம்பாதித்து கர்மத்தையும் சம்பாதித்துக் கொள்கின்றான் ஏன் எதற்காக என்று!!!!

இதனால் நிச்சயம் குருவானவன் நிச்சயம் எங்கிருந்தால் மோட்சம் என்பதை கூட யான் சொல்லி விட்டேன் நிச்சயம் அவை மட்டும் இல்லாமல் கிரகங்கள் அதாவது நீங்கள் செல்லும் பொழுது உங்கள் நிழல் உங்கள் பின்னே வரும் அதுபோலத்தான் நீங்கள் செய்யும் வினைகளுக்கு ஏற்பவே கிரகங்கள் உங்கள் பின்னாலே வந்து செய்கின்றது

ஆனால் அவை எங்களால் தடுக்க முடியும்!!! உண்மை நேர்மை சத்தியம் இறை அன்பு இவையெல்லாம் கடைபிடித்தால் யாங்கள் கிரகங்களை மாற்றி விடுவோம். பின்னாலே விடமாட்டோம் எதை என்று அறிந்து அறிந்து.

இன்னும் ஒரு படி சென்று கிரகங்கள் உச்சமாம் !?!?!?!?!?!!

அனைத்தும் நல்லது செய்யுமாம் !?!?!?!?!?!?

நிச்சயம் நல்லது செய்யாது!!!

நீ!! நீச்சனாக இருந்து பின் ஏன் கிரகங்கள் உச்சமாக இருந்தாலும் நீச்சம்தான் செய்யும்!!

நீ நீச்சம் அதாவது  நீச்ச குணம் உன்னிடத்தில் இருந்தால் கிரகங்கள் உச்சம் ஆயினும் நீச்சம்தான் நிச்சயம் நீச்சநிலைக்கு தான் நீ செல்வாய்.

புரிந்து கொள்ளுங்கள்.

இதனால் அவை மட்டும் இல்லாமல் குருவானவன் எதை என்றும் அறிந்து அறிந்து அவனுக்கு ஏற்பவே நிச்சயம் செய்தால் அவந்தன் அதிக பலம் அதாவது உச்சம் பெற்று விடுவான்.

இதனால் அனைத்து நலன்களும் கூட நடக்கும்!!

இது கண் கண்ட உண்மை.

இதை சோதிக்கலாம் நீங்களே கூட இன்றளவும் குருவானவன் இன்னும் இன்னும் ஏனைய ஜாதகத்தில் கூட நிச்சயம் பின் தாழ்ந்தாலும் அதாவது நீச்சம் ஆனாலும் பகை ஆனாலும் நன்றாக இன்னும் கை குவித்து அதாவது பக்தியோடு வணங்கிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஏனென்றால் குருவானவனுக்கு அறிந்தும் அறிந்தும் கூட எப்படி ஆயினும் நல்லது தான் செய்ய வேண்டும் என்று அவனுடைய எண்ணம்.

ஆனாலும் முதலில் மாமிசத்தை நீக்க வேண்டும் நீக்கி விட்டு நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட இவ்வாறு செய்தால்தான் குரு பகவானும் மனிதர்களுக்கு நல்லதையே செய்வான்.

அப்படி இல்லை என்றால் நிச்சயம் பின் மாறாதது.

அவை மட்டுமில்லாமல் குருவானவன் எதை என்றும் அறிய அறிய கேதுவான உடன் சேர்ந்தால் ஞானங்கள் பொழியும் ஞான பாதைக்கு அழைத்துச் செல்லும்

( குரு கேது சேர்க்கை)

அதாவது இறைவனே முன் நின்று வழி நடத்துவான்!!! ஆனால் கஷ்டங்கள் வருமே தவிர ஆனாலும் அதனையும் கூட இறைவனே நோக்கி நோக்கி அவை மட்டும் இல்லாமல் இறைவனை நேரில் சந்திக்க கூடிய பாக்கியமும் கிடைக்கும்.

ஆனால் இன்றளவில் ஆனாலும் அவையெல்லாம் எதை என்று அறிந்து அறிந்து பொய் கூறி பொய் கூறி இன்னும் இன்னும் பல பல வினைகள் சம்பாதித்து மீண்டும் பிறவிகள் எடுத்து என்ன பிரயோஜனம்???

இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது!!!!

இன்னும் எத்தனை பிறவிகளடா!! பிறப்பீர்கள் ??

பிறந்து பிறந்து வாழ்வீர்கள்???

வாழ்ந்து வாழ்ந்து ஒன்றும் தெரியாமலே போய் சென்று சென்று மீண்டும் வந்து வந்து !!!!!!......... உடனே இன்னும் திருந்தவில்லை என்றால் நிச்சயம் திருத்துவோம் என்றெல்லாம் சித்தர்கள் ஏங்கி!!!

ஆனாலும் இதை என்றும் அறிய அறிய ஆனாலும் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன்!!!

ராகு கேதுக்களுக்கு நிச்சயம் கர்மத்தை அழிக்கும் சக்தி உள்ளது

ஆனால் இவை கட்டுப்படுத்தும் அளவிற்கு இன்னும் எதை என்றும் அறிய அறிய இன்னும் விளக்கங்களோடு சொல்கின்றேன்!!!!

இதை கட்டுக்குள்(ராகு கேது) வைக்கும் பின் ஞானி!!!!!!!!!

எவ் ஞானி??!!!!! 

கணபதியே!!!!!!!! 

நிச்சயம் ராகுவும் கேதுவும் நடக்கின்ற பொழுது கணபதியை அனுதினமும் துதித்து வந்தாலே பின் விநாயகப் பெருமானின் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் பின் விநாயகர் அகவலை ஓதி வந்தாலே போதுமப்பா !!!!!!

போதுமானது நிச்சயம் ராகுவும் கேதுவும் நன்மைகளே செய்யும்.

ஆனால் ராகுவும் கேதுவும் கூட பின் மாயையில் இழுத்து செல்லும்..... ஏன் எதற்காக என்றால் பார்ப்போம் இவந்தனை ஓர் வழி.... மாயையில் நோக்கி அழைத்துச் செல்வோம்!!!

மீறினும் இறைவன் இறைவனைப் பிடித்துக் கொண்டால் விட்டு விடுவோம் என்று!!!!

இதனால் முதலில் மாயை இழுத்துச் செல்லும் பொழுதே நீங்கள் இறைவனைப் பிடித்துக் கொண்டால் ராகுவும் கேதுவும் நிச்சயம் விட்டுவிடும்

அதனால் நீயே உந்தனுக்கு மன்னனாக செயல்படலாம்.

ஆனால் உண்மைகள் இல்லையே!!!! தாழ்ந்து தாழ்ந்து செல்கின்றது. ஆனாலும் அறிந்தும் அறிந்தும்!! 

இன்னொருவன் அறிந்தும் அறிந்தும் சனியவன்!!! 

அனைத்திலும் """" வில்லன்!! 

அறிந்தும் அறிந்தும் கூட எதற்காக வில்லன் என்றால் நன்மை செய்வதற்காகவே வில்லன்...

ஆனால் பின் தவறாக பேசுகின்றார்கள் சனியவனைப் பற்றியும் கூட..... ஆனால் தண்டனைகள் உண்டு!!!

வாய் கூட பேச முடியாமல் போகும்!!! பற்கள் கூட விழுந்து விடும் சனியவனை நிச்சயம் தவறாக பேசி விட்டால்!!! 

ஜாதகத்தில் சனியவன் வந்து பிடித்து விட்டான் இன்னும் நல்லது நடக்காது என்று சொல்பவர்கள் வாயில் பின் உண்ண முடியாதப்பா!!!! வயிற்றுக்குள் எல்லாம் புண்கள் வந்து விடுமப்பா!!!

ஏனென்றால் நீதிபதியாகவும் நியாயாதிபதியாகவும் சத்தியத்தை தர்மத்தை காக்கும் தாயாகவும் சனியவன் இருக்கின்றான்.

அவனைப் பற்றி சொல்வதற்கு எவனுக்குமே தகுதி இல்லை!!!

அப்படி சொன்னாலும் அவன் வாய் இன்னும் சொல்கின்றேன் மேலாக நிச்சயம் வாயில் பின் எவை என்று கூற புற்றுநோய் வந்துவிடுமப்பா!!!!!

சொல்லிவிட்டேன்!!!

பின் இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் பல நோய்கள் வந்துவிடுமப்பா!!!!

வேண்டாமப்பா தெரிந்து கொள்ளுங்கள் !!!

நன்மையை புரிந்து புரிந்து பின் எவை என்று தெரிந்து தெரிந்து தெரிந்தால் சொல்லுங்கள்!!

தெரியாவிடில் பின் அமைதியாக இருந்து விடுங்கள் !!

ஏன் கர்மத்தை சம்பாதிக்கிறீர்கள்?????

தர்மத்தை தர்ம தேவதையை பற்றி ஏன் பின் கேவலமாக பேசுகின்றீர்கள்?????

தர்ம தேவதை!!! சனியவன் தர்ம தேவன்!!!! சனியவன் 

பின் நீங்கள் சொல்லி அனுப்பலாமே !!!!

 (ஜோதிடர்கள் ஜோதிடம் பார்க்க வருகின்ற மக்களுக்கு)

தர்ம தேவதை சனியவன் ஆனால் இவ் தர்ம தேவனுக்கு இவை எல்லாம் பிடிக்கும் என்று யார் ஒருவன் சொல்கின்றானோ அவன் தான் ஜோதிடன்.

ஆனால் சொல்வதில்லையே!!!!

சனியவன் கஷ்டத்தை கொடுக்கின்றான் அதைச் செய்கின்றான், இதைச் செய்கின்றான் ஆனால் அவன் சரியாக இருக்கின்றான் என்று நீங்கள்!!!!!! ஆனால் பணத்திற்காக எதையெதையோ சொல்கின்றீர்கள் எதையெதையோ செய்கின்றீர்கள்!!!!

இப்பொழுது எதை என்றும் அறிய அறிய பொய் சொல்லி பணத்தைப் பிடுங்கி கொள்ளலாம் நிச்சயம் சேமித்து வைத்துக் கொள்ளலாம்!!!

ஆனால் சேமிப்பு நிச்சயம் இறைவனிடத்தில்.

ஆனால் பாவ சேமிப்பு தான் நீங்கள் சேமித்து வைத்துக் கொண்டிருக்கின்றீர்கள்.

மனிதா ஒரு பொழுதும் இரவு இரவாக இருக்காது என்பதை கூட பல சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் பகலும் கூட பகலாக இருக்காது என்பதை கூட!!!
பின் மாறி மாறி தான் வரும்!!!

சொல்லிவிட்டேன்.

சில நேரம் இன்பங்கள் சில நேரம் துன்பங்கள்!!!

இதனால் உங்களிடமே வாழ்க்கை இருக்கின்றது அதை சரியாக யார் ஒருவன் பயன்படுத்துகின்றானோ  இறைவன் அருகிலே இருப்பான்!!

இறைவன் சோதித்தாலும் நிச்சயம் நல்லதாகவே செய்வான்.

இன்னும் கிரகங்கள் எதை எதை செய்யும் என்பதை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன் அவற்றை சரியாகவே பயன்படுத்திக் கொண்டால் அப்பனே நோய்களும் அண்டாது எதை என்றும் அறிய அறிய இன்னும் ஒன்றும் அண்டாது!!!

இதை மானிடனே நிச்சயம் சரியாக பயன்படுத்திக் கொண்டு அம்மையே அப்பனே என்று இருங்கள் போதுமானது.

இன்னும் இன்னும் கிரகங்களை பற்றியும் கூட யான் விளக்கமாக கூறி வருவேன்

அதனை நிச்சயம் அதாவது கிரகங்களை நீ ஜெயிக்கலாம் ஜெயித்தும் விடலாம் அப்படி ஜெயித்தால் இவ்வுலகத்தையும் ஜெயித்து விடலாம்

ஆனால் அவையெல்லாம் யான் சொல்வேன்

ஆனாலும் இவ்வாறு செயல்பட்டாலே போதுமானது ஒரு துன்பமும் வராது வராது என்பது நிச்சயம்!! யானும் கண்டுணர்ந்தேன்.

அவை மட்டும் இல்லாமல் நீங்கள் நினைத்ததை பின் நடத்தி விடலாம் என்பது தான் எனது வாக்கு!!!

அதனால் மறைமுகமாக தர்ம தேவதையை கூட அதாவது தர்ம தேவதை என்பவன் சனியவன் இவனைப் பற்றி குறை கூறுவதற்கு மனிதரிடத்தில் நிச்சயம் தகுதிகள் இல்லை

அவ்வாறு குறைகள் கூறினாலும் பின் எவை என்று அறிய அறிய அவந்தனுக்கே தண்டனைகள் உண்டு!!!

தர்மத்தை கடைபிடிக்காமல் தர்ம தேவதையை குறை குற்றம் கூறுவதா???? 

மனித ஜென்மமே காரியும் துப்பி விடுவேன்!!!! இன்னும் யானும் அடிப்பேன்!!!

எதை என்று அறிய அறிய கிரகங்கள் நல்லதை செய்ய காத்துக் கொண்டிருக்கின்றது!!

ஆனால் மனிதா நீ எவ்வாறு செய்கின்றாய் திருடுவது இன்னும் ஏனைய சில சில கெட்டவை எவை என்று அறிய அறிய பின் பெண்களைப் பற்றி நினைப்பது இன்னும் இன்னும் இன்னும் போட்டி பொறாமைகள் கோபங்கள் யான்தான் உயர்ந்தவன் என்றெல்லாம் இருந்தால் கிரகங்கள் கூட தன் வேலையை காட்டும்!!

காட்டும் அறிந்தும் அறிந்தும் கூட!!

அழிவு காலமடா அழிவு காலமடா அழிவில்லாமல் தேடுங்களடா நிச்சயம் உயர்வுகள் பெறலாம்

பெறலாம் என்பதையும் கூட

அதனால் கிரகங்கள் சமமாகவே இன்னும் இன்னும் பொருத்தங்கள் பார்க்கின்றார்களாம் !?!?!?!?!?!?!?! பொருத்தங்கள்!?!?!?!!!!

ஆனால் இவையெல்லாம் பொய்யே தான்... யானே உரைப்பேன் அறிந்தும் கூட

பொருத்தங்கள் எத்தனை பொருத்தங்கள் பார்த்து பார்த்து பின் திருமணங்கள் நடந்து தான் கொண்டிருக்கின்றது

ஆனால் பின் ஒழுங்காகவா இருக்கின்றார்கள் ????

நிம்மதியுடனா ?? வாழ்கின்றார்கள்??????

எதற்காக ஜாதகம் உண்மை அதனால் மனிதனே பொய் பொய் என்பதை கூட

(ஜோதிட சாஸ்திரத்தை) 
சிறிதளவே கற்றுக் கொள்வது...... அதாவது ஒரு துளி அளவே கற்றுக்கொண்டு அதனை பயன்படுத்தி பணங்கள் சம்பாதிப்பது

ஏன் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் நிச்சயம் நல்லது நடக்கும் என்பதை கூட ஆணித்தரமாக உண்மையாகவே உள்ளது!!

ஏன் எதற்காக இவ் அஷ்ட பின் கணபதியைக் கூட வணங்க வணங்க இன்னும் எதை என்று கூட சுற்றிவர சுற்றிவர கர்மங்கள் நீங்கும் நீங்கும் என்பதை கூட

ஆனாலும் அனைத்தும் கூட பெற்றவன் கணபதி!!!

இவ் கணபதியிடம் ஞானம் பெற்றுக் கொள்வதற்கு தகுதியாக அனைவரும் இருந்தாலே நிச்சயம் மாறும்!!!

முதலில் ஞானத்தை பின் வருந்தி வருந்தி வருந்தி அதாவது புரிந்து கொள்வது எப்படி என்பதை கூட சிந்தித்தாலே வெற்றிகள் அப்படி ஞானத்தை பின் சிந்திக்காவிடில் தோல்விகள்

தோல்விகள் வெற்றிகள் என்பது மனிதனிடத்திலே உள்ளது.

அதை சரியாக பயன்படுத்திக் கொண்டால் வெற்றி.

சரியாக பயன்படுத்தவில்லை என்றால் தோல்விகள்.

இறைவன் நடந்து கொண்டே தான் இருக்கின்றான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான் இன்னும் மனிதர்களை உயர்த்தி கொண்டே தான் இருக்கின்றான்.

ஆனால் மனிதன் நிலைமையோ கீழாகப் போய்க் கொண்டிருக்கின்றது

அழிவின் பாதைக்கு சென்று கொண்டிருக்கின்றது

ஏன்??? அழிவுப் பாதையில் சென்று கொண்டிருக்கின்றதென்றால்.... மனிதனே காரணம்!!!!

மனிதனே காரணம்

மனித திருந்திக் கொள் திருந்திக் கொள் என்பவை எல்லாம்

இதனால் வீணாகப் போய் விடாதே!!!!! 

மனிதனின் பிறப்பு ஒரு விசித்திரமானது அதில் விசித்திரமானதை செய்து உயர்ந்து நல்லோருக்கு எவை என்று அறிந்து அறிந்து உண்மையாகவே இருந்து பல உதவிகளை இயலாதவர்களுக்கு செய்யுங்கள்

ஏன் அனைவரையும் கூட பின் ஒருவன் கேட்பான் கேட்பான் எதை என்றும் அறிய அறிய

ஏன் அனைவருக்கும் எதை என்று அறிந்து அறிந்து இறைவன் பிறப்பு தானே அதாவது படைப்புதானே

ஏன் அனைவருக்கும் கொடுப்பதில்லை என்பது

இவையெல்லாம் வருங்காலங்களில் எடுத்துரைக்கின்றேன் மனிதா நீ செய்யும் வினைகளுக்கு ஏற்ப பிறப்பும் உள்ளது

அதில் கூட இன்னும் இன்னும் எதை எதையோ நினைத்து நினைத்து இன்னும் இளவயதில் காதலாம் !?!?!?!?!!

இன்னும் குடியாம் !?!?!?!?!?!!

இன்னும் எதை எதையோ ஆட்டாங்களாம் !?!?!?!? இன்னும் பாட்டங்களாம்!?!?!?!?! இதையெல்லாம் செய்துவிட்டு முப்பான் (30) வயது மேல் இறைவன் மீது இறைவா இறைவா என்று பின் இறைவனை தேடுவது!!!!

எப்படி மனிதா மானம்கெட்ட புத்தி கெட்ட மனிதா இவையெல்லாம் இறைவன் எவை என்று அறிய அறிய பின் தண்டனைகள் உண்டு

அதனால் சேமிப்புக்கள் அதாவது கலியுகத்தில் சேமிப்புக்கள் அதிகமாகவே சேமித்து வைத்திருக்கின்றனர் ஏற்கனவே சொன்னார்கள் சித்தர்கள் பின் அறிந்தும் அறிந்தும் கூட

பின் சேமித்து வைத்துக் கொண்டே இருக்கின்றான் சூரியன் கூட சந்திரன் கூட அனைத்தும் சேமித்து நிச்சயம் நீ உன் நிலைமைக்கு ஏற்பவே தண்டனைகள் வழங்கிக் கொண்டே வருகின்றார்கள்

இவையெல்லாம் உண்மையே

வரும் வரும் காலங்களில் கூட இன்னும் சூரியன் பார்ப்பான் பின் நிச்சயம் அப்படி மனிதன் திருந்தவில்லை என்றால் நிச்சயம் சூரியன் இன்னும் வெப்பமாக மாறி நிச்சயம் கொன்று விடுவான் சொல்லிவிட்டேன்

ஆனாலும் சந்திரனும் கூட பார்த்துக் கொள்வான் இன்னும் இரவில் கூட பின் எவை என்று அறிய அறிய இன்னும் சூரியன் போல பிரகாசிப்பான் பின் நீங்கள் அழிந்து விடுவீர்கள்.

வேண்டாம் வேண்டாம் வேண்டாம் மனிதா

அழிக்காதே நிச்சயம் நிலைமைகள் மாறும் இதனால் நிச்சயம் உண்மை பொருளை தேடுங்கள் பொய்யானவற்றை தேடிக்கொண்டு செல்லாதீர்கள் சுகத்திற்காக அலையாதீர்கள் அனைத்தும் இறைவனே கொடுக்கட்டும் என்று இருங்கள்

நல்லதாக மாறும் அருள்கள் இன்னும் ஞானங்களை பற்றி உரைக்கின்றேன். உரைக்கின்றேன்!!!!

ஔவையார் இயற்றிய விநாயகர் அகவல்

விநாயகர் அகவல் பாடல்
சீதக் களபச் செந்தா மரைப்பூம்
பாதச் சிலம்பு பலவிசை பாடப்
பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும்
வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்பப்
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்

வேழ முகமும் விளங்குசிந் தூரமும்
அஞ்சு கரமும் அங்குச பாசமும்
நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்

இரண்டு செவியும் இலங்குபொன் முடியும்
திரண்டமுப் புரிநூல் திகழொளி மார்பும்
சொற்பதம் கடந்த துரியமெய்ஞ் ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே!
முப்பழ நுகரும் மூஷிக வாகன!

இப்பொழு தென்னை ஆட்கொள வேண்டித்
தாயா யெனக்குத் தானெழுந் தருளி
மாயாப் பிறவி மயக்கம் அறுத்துத்
திருந்திய முதலைந் தெழுத்தும் தெளிவாய்ப்
பொருந்தவே வந்தென் உளந்தனில் புகுந்து

குருவடி வாகிக் குவலயந் தன்னில்
திருவடி வைத்துத் திறமிது பொருளென
வாடா வகைதான் மகிழ்ந்தெனக் கருளிக்
கோடா யுதத்தால் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டியென் செவியில்

தெவிட்டாத ஞானத் தெளிவையும் காட்டி
ஐம்புலன் தன்னை அடக்கும் உபாயம்
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுங்கும் கருத்தினை யறிவித்(து)
இருவினை தன்னை அறுத்திருள் கடிந்து

தலமொரு நான்கும் தந்தெனக் கருளி
மலமொரு மூன்றும் மயக்கம் அறுத்தே
ஒன்பது வாயில் ஒருமந் திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதும் காட்டி
ஆறா தாரத்(து) அங்குச நிலையும்

பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக்
கடையிற் சுழுமுனைக் கபாலமும் காட்டி
மூன்றுமண் டலத்தின் முட்டிய தூணின்
நான்றெழு பாம்பின் நாவில் உணர்த்திக்

குண்டலி யதனிற் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக்
காலால் எழுப்பும் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்

குமுத சகாயன் குணத்தையும் கூறி
இடைச்சக் கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடல்சக் கரத்தின் உறுப்பையும் காட்டிச்
சண்முக தூலமும் சதுர்முக சூக்கமும்
எண் முகமாக இனிதெனக் கருளிப்

புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரியெட்டு நிலையும் தெரிசனப் படுத்திக்
கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி யினிதெனக் கருளி
என்னை யறிவித்(து) எனக்கருள் செய்து

முன்னை வினையின் முதலைக் களைந்து
வாக்கும் மனமும் இல்லா மனோலயம்
தேக்கியே யென்றன் சிந்தை தெளிவித்(து)
இருள்வெளி யிரண்டுக்(கு) ஒன்றிடம் என்ன
அருள்தரும் ஆனந்தத்(து) அழுத்தியென் செவியில்

எல்லை யில்லா ஆனந் தம்அளித்(து)
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச்
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டிச்
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி
அணுவிற்(கு) அணுவாய் அப்பாலுக்(கு) அப்பாலாய்க்

 கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக்
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை
நெஞ்சக் கருத்தின் நிலையறி வித்துத்

தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே!

கிரிஜத்மஜ் கணபதி கோயிலின் முகவரி லென்யாத்ரி: லென்யாத்ரி கணபதி சாலை, போஸ்ட் கோலேகானில், தாலுகா ஜுன்னார், மாவட்டம் புனே, மகாராஷ்டிரா, 410502

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!