​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 14 April 2024

சித்தன் அருள் - 1587 - அன்புடன் அகத்தியர் - மீர் காட், கங்கை கரை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

சித்திரை மாதம் சித்தர்களின் மாதம்!!!!

தமிழே அகத்தியர் அகத்தியரே தமிழ்!!!!

அடியவர்கள் அனைவருக்கும் சித்திரை மாதம் குரோதி தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!!!

தமிழ் புத்தாண்டில் தமிழின் பெருமையையும் தமிழ் சொற்களை உச்சரிப்பதால் ஏற்படும் நன்மைகளை குறித்து குருநாதர் அகத்திய பெருமான் காசியில் உரைத்த வாக்கு.

தமிழ் எழுத்துக்களை மனப்பாடம் செய்து குழந்தைகளுக்கும் கற்றுக் கொடுத்து தமிழில்  தமிழ் சொற்களில் மட்டும் பேசுவோம் பேசி பலனடைவோம்!!! என்று சபதம் மேற்கொண்டு நம்மை வாழவைக்கும் தெய்வம் குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கின்படி தமிழை உச்சரித்து போற்றி நல்வாழ்வு பெறுவோம்!!!!

குருநாதர் உரைத்த வாக்குகள் பின் வருமாறு!!!!!





9/3/2024  அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு வாக்குரைத்த ஸ்தலம்: காக்கும் சிவன் காசியில் மீர் காட் கங்கை கரையில்.

ஆதி மூத்தோனை வணங்கி வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலன்களாகவே வெற்றிகள்!!!!

அறிந்தும் கூட அப்பனே நலன்கள் ஆகவே இவ்வாறு நிச்சயம் அப்பனே உலகத்தில் அப்பனே வெற்றிகள் மனிதனுக்கு அப்பனே கொடுக்க கொடுக்க அப்பனே பின் வெற்றிகள் எதை என்றும் கூட அனுபவித்து அப்பனே பார்க்காமலே தோல்வி அடைந்து விடுவான் என்பேன் அப்பனே

அப்பனே இதற்கு சம்பந்தமான பல வழிகள் கூட எங்களிடத்திலே!!!

இதனால் அப்பனே எங்களை மீறி ஒன்றும் நடக்கப் போவதில்லை அப்பனே

அப்பனே மனிதனின் அப்பனே எதை என்றும் கூட பல உறுப்புக்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய நோய்களால் சுற்றி வளைக்க அப்பனே அதாவது  சுற்றி வளைத்துள்ளது அப்பனே!!!!

அப்பனே இதனால் எங்கும் பின் எதை என்றும் அறிந்தும் நோய்கள் நோய்களாகவே காணப்படும் அப்பனே

அவ் சுற்றி வளைத்ததை அப்பனே பின் மனிதனால் அப்பனே நீக்க முடியாதப்பா!!!

அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே புரிய வைத்து அப்பனே சில வழிகளிலும் கூட ஞானத்தை அப்பனே இறைவன் பால் வைத்து வைத்து அப்பனே நிச்சயமாய் அப்பனே அவ் சுற்றி வளைத்ததை நீண்டவையாக மாற்றி  விட்டால் அப்பனே நோய்கள் வராதப்பா!!!!

(வளையம் போல் உறுப்புகளை சுற்றி வளைத்ததை நீண்டு நேராக மாற்றி வைக்க வேண்டும்)

அப்பனே எதை என்றும் புரிய புரிய இதனை அனைவருமே புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே

பக்தனாயினும் ஞானி ஆயினும் அப்பனே கலியுகத்தில் அப்பனே பிறந்திட்டாலே அப்பனே நோய்கள் நொடிகள் நோய்கள் பின் நொடிகளாகவே நொடிப் பொழுதில் கூட வந்து வந்து வந்து.!!!!

அப்பனே இவற்றை உணர்ந்து அப்பனே நன்முறையாகவே பயன்படுத்தி அப்பனே நல்வாழ்க்கை அப்பனே புண்ணியத்தோடு வாழ்ந்து வந்தால் வெற்றி கிடைக்கும்.

அப்படி இல்லையெனில் அப்பனே பின் தோல்விகள் கிடைத்து அப்பனே சங்கடங்கள் அப்பனே ஏற்கத்தான் வேண்டுமப்பா!!!

இதனால்தான் அப்பனே அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் சுற்றி வளைத்ததை அப்பனே நீண்டவைகளாக அப்பனே போராட வேண்டும் என்பேன் அப்பனே

போராட்டத்தை அதாவது அப்பனே பழமொழியும் உண்டு அப்பனே

"""""""நாயின் வாலை நிமிர்த்த முடியுமா?? என்று!!!

அதேபோலத்தான் அப்பனே எதை என்று அறிய அறிய சுற்றி வளைத்ததை அப்பனே பின் மனிதனால் பின் நிமிர்த்த முடியுமா????? என்ன!!!???

முடியாதப்பா!!!!!;

அப்பனே ஆனாலும் சில மாற்றங்கள் உண்டு...... அதுவும் அப்பனே புண்ணியத்திற்கு ஏற்றவாறே!!!!

அப்பனே ஆனாலும் எப்படி செய்ய வேண்டும்???? எவை எப்பொழுது அறிந்தும் கூட உண்மைதனை அப்பனே பின் அறிந்தும் கூட அப்பனே தன்னை அறிந்து அப்பனே எப்பொழுது ஒருவன் செய்கின்றானோ அவந்தனுக்கு பெரும் புண்ணியமப்பா!!!!!

அப்படி அறியாவிடில் அப்பனே செய்தாலும் புண்ணியங்கள் இல்லையப்பா!!!

இப்படித்தான் மனிதர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே!!!!!

கடைசியில் இறைவனை வணங்கினேனே!!!!!! இறைவனை வணங்கினேனே என்றெல்லாம் அப்பனே அறிந்தும் அறிந்தும்!!!

இதனால் அப்பனே நல்வாழ்க்கை உண்டப்பா

ஆனாலும் அப்பனே மனிதர்களுக்கு அப்பனே நோய்களும் உண்டப்பா

அப்பனே நல் முறைகள் ஆகவே விளக்கங்கள்!!! இதனால் அப்பனே பின் அனுதினமும் அப்பனே மூலிகைகளை எடுத்துக் கொள்ள எடுத்துக் கொள்ள அப்பனே நிச்சயம் உறுப்புக்கள் பலமாகும் என்பேன் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே இயற்கையானது அப்பா எதை என்றும் புரிந்தும் கூட உள் நுழையும் பொழுது பின் பல பல செல்களை அழிப்பதற்கு ஓராண்டு ஈராண்டு எடுத்துக்கொள்ள அப்பனே அப்பொழுதுதான் நீங்கும் அப்பா மாறும் அப்பா!!!!

(இயற்கையான மூலிகைகள் இயற்கையான உணவுப் பொருள்கள் இவற்றை உட்கொள்ளும் பொழுது இவை உடலில் சென்று நோய் செல்களை அழித்து உடலுக்கு சக்தியையும் மாற்றத்தையும் ஏற்படுவதற்கு குறைந்த  பட்சம் ஒரு ஆண்டு முதல் 2 ஆண்டு வரை தொடர்ந்து இயற்கை உணவுகள் தொடர்ச்சியாக எடுத்துக் கொண்டு இருக்க வேண்டும் அப்பொழுதுதான் நல்ல பலன் ஏற்படும்)

ஆனாலும் அப்பனே பின் ஓரிரு மாதங்கள் எடுத்துக்கொண்டு அப்பனே பின் அகத்தியன் சொன்னானே மருந்துகளை எடுத்துக் கொள்ள!!!!

ஆனால் பின் நன்றாக ஆகவில்லையே என்று பின் மனிதனின் பின் முட்டாள் குணம் இப்படித்தானப்பா அழிவு பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கின்றது அப்பனே!!!!!

தொடர்ந்து அப்பனே முயன்று வரவேண்டும் அப்பனே!!!!!

வெற்றிகளுக்காக அப்பனே போராட வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே சாதாரணமான கல்விக்கே போராட வேண்டும் எதை என்றும் அறிய அறிய!!!!

ஆனாலும் அப்பனே சுற்றி வளைத்ததை நீண்டவைகளாக ஆக்க அப்பனே நீ போராடி தான் ஆக வேண்டும் என்பேன் அப்பனே!!!

அனைத்து விதத்திலும் போராடினால் தான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே வாழ்க்கையும் வாழ முடியும் என்பேன். அப்பனே

பின் போராட்டம் இல்லாமல் எதனையும் கூட அப்பனே அவ் போராட்டத்தின் மூலமாகவே இறைவன் உந்தனுக்கு வந்து உதவுவானப்பா!!! அப்பனே அறிந்தும் அறிந்தும்!!!

எதிர்காலங்கள் எப்படி உள்ளது??? என்பதை பார்த்தால்!!!............ அப்பனே பயங்கரமாகவே உள்ளது என்பேன் அப்பனே!!!! அறிந்தும் கூட!!!....

இதனால் அப்பனே வாழுங்கள் வாழ கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே நீந்துங்கள்!!! அப்பனே எதிலிருந்து நீந்துவதற்காக என்பதை கூட.... நீந்துவது இங்கு இறைவன் பால் அலைவதற்கு அப்பனே யான் எடுத்துரைத்து விட்டேன்!!!!

அப்பனே நலன்களாகவே இதனால் வெற்றிகளும் உண்டு அப்பனே எதை என்று அறிய அறிய அதே நேரத்தில் எவ்வளவு வெற்றிகள் உண்டோ அதற்கு பதிலாகவே அப்பனே எதை என்று கூட தோல்விகளும் உண்டப்பா

ஆனாலும் எப்பொழுதும் வெற்றிகளாகவே செயல்படுத்த வேண்டும் அப்பனே!! அது எங்களால் மட்டுமே முடியுமப்பா!!!

அப்பனே கிரகங்களும் கூட அப்பனே ஆட்டி படைக்கும் பொழுது அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எங்களால் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய ஆட்கொள்ளும் பொழுது அப்பனே கிரகங்களுக்கு என்ன வேலையப்பா?????

அறிந்தும் அறிந்தும் கூட!!

இதனால் அப்பனே பல பல வழிகளில் அப்பனே சொல்லியதை சரி முறையாகவே அப்பனே பயன்படுத்தி ரீங்காரம் ஓம்காரம் அப்பனே மனதில் பின் எதை என்று கூட நிறுத்தி அப்பனே வாயால் பின் எதை என்று கூட

""""".  ங, ஞ, ண, ந. ம, ன !!

 """"""" ய, ர, ல, வ, ழ, ள !!! 

(தமிழில் மெல்லினம் இடையினம் மெய் எழுத்துகள் மூன்று வகைப்படும். அவை,
1. வல்லினம் ( க, ச, ட, த, ப, ற என‌ ஆறு எழுத்துக்கள் )
2, மெல்லினம் ( ங, ஞ, ண, ந. ம, ன என ஆறு எழுத்துக்கள்)
3. இடையினம்  ய, ர, ல, வ, ழ, ள என ஆறு எழுத்துக்கள்)

அப்பனே பின் சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே எதை என்று அறிய அறிய சில பின் (உடல் )தசைகள் மாறுமப்பா!!!

( போகர் பெருமான் ஒரு முறை வாக்கில் சீதக்களப என தொடங்கும் அவ்வையார் எழுதிய விநாயகர் அகவலை படித்து வந்தால் மூச்சு உறுப்புகள் பலப்படும் வாசியோகம் சித்திக்கும் என்று வாக்கில் கூறியிருந்தார் இதை இங்கு நினைவு படுத்துகின்றோம் தமிழில் இருக்கும் தேவாரம் திருவாசகம் முதலிய பன்னிரு திருமுறைகள் திவ்ய பிரபந்தம் செய்யுங்கள் இலக்கண நூல்கள் இவையெல்லாம் படிக்கும் பொழுது உடலில் உள்ள தசைகள் அனைத்தும் சீரான முறையில் இயங்கும்)

இதனால்தான் அப்பனே தமிழ் மொழியில் எதை என்றும் புரிய புரிய அனைத்து சொல்லிற்கும் அப்பனே எதை என்று அறிய அறிய நோய்களை அகற்றுவதாகவே உள்ளது என்பேன் அப்பனே!!!

இதை நன்கு புரிந்து கொண்டால் நன்று!!!!

(தமிழில் 12 உயிரெழுத்துகளும் 18 மெய்யெழுத்துகளும் ஓர் ஆய்த எழுத்தும் 216 உயிர்மெய் எழுத்துகளுமாக மொத்தம் 247 எழுத்துகள், தமிழ் மொழி சொற்கள் அனைத்தும் உச்சரிப்பதால் நோய்கள் நீங்கும்!!!! )

ஆனாலும் அப்பனே பல பேர்கள் இதை மறைத்திட்டு அப்பனே திருடி சென்றார்களப்பா!!! புத்தகங்களை அப்பனே!!! அறிந்தும் கூட மேலோர்!! (மேல்நாட்டினர்) எதை என்றும் அறிய அறிய அப்பனே.... அவர்கள் கீழோரே !!!! (கீழ்த்தரமானவரே) என்பேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே மனிதனின் எதை என்றும் அறிய அதனால் அப்பனே ஒவ்வொரு இல்லத்திற்கும் கூட அப்பனே அப்படியே எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய

அ   !!! தொடங்கும் ஃ !!!!......... முடியும் 

   (. அதாவது அ வில் தொடங்கி ஃ ல் முடியும் வரை உள்ள உயிர் எழுத்துக்கள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஒள, ஃ. 

க ங  ஞ ச ட ண த ந ப ம ய ர வ ழ ள ற ன.... என மெய் எழுத்துக்கள்... இதனுடன் சேர்த்து உயிர் மெய் எழுத்துக்கள் என அனைத்தையும் மனப்பாடம் செய்ய வேண்டும் அனைத்து தமிழ் சொற்கள் பதிவுடன் புகைப்படமாக இணைக்கப்பட்டுள்ளது)

அதன் உள்ளே எதை என்று அறிய அறிய அப்பனே சரியாகவே அப்பனே மனப்பாடம் செய்து விட்டால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்படியே அனைத்தும் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அனைத்தும் தங்கிவிடுமப்பா மூளைதன்னில் அப்பனே!!!

பின்பு எதை என்று அறிய அறிய சுலபமாகவே இருக்கும் என்பேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!

பின் எவை என்று அறிய அறிய உயர்ந்துவிடலாம் என்பேன் அப்பனே அறிந்தும் கூட

இதனால்தான் அப்பனே பின் அவ்வெழுத்துக்கள் சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனால் சாதாரணமாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே

ஒவ்வொரு எழுத்திற்கும் அப்பனே அப்படிச் சென்றால் அ என்று எதை என்று அறிய அறிய முதலில் வைத்துக்கொண்டால் அறம் என்றும் கூட அன்பு என்றும் கூட அப்பனே.....

எவை என்றும் அறிய அறிய

 """""""""""""""அ.  """"""""""""""''''''

 என்பது எதை என்றும் புரிய புரிய அப்பனே 

அய்யோ!!!

 எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய 

அனைத்தும் பின் அய்யோ பாவமே!!!!

 என்று வந்துவிட்டால் அப்பனே 

அய்யம் கூட எதை என்று அறிய அறிய நோக்கி பாயும்!!!!

பின் 

"""""""""""""""""""ஆ """""""""""""""""""""

எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய.....

அப்பனே ஆ என்று பின் கத்திட்டாலும் ( ஆஆஆ என்று கத்தினாலும்) அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் பூதங்களாகவே போய் விடும்!!!! அப்பனே அகற்றி விடும்!!!

""""""""""""""" இ""""""""""""""""

என்பது அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வுலகத்தில் இயல்பாகத்தான் அனைத்தும் நடக்கும் என்பதை கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய

இறை

அப்பனே பெரும் எவை என்றும் அறிய அறிய அப்பனே பெரும் குணம் ஆக வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் அப்பனே ஔவையவள்...(ஔவையார்) எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய அப்பனே பின் அறிந்தும்
 கூட 

(அவ்வையார் பாட்டி உயிர் எழுத்துக்களை வைத்து ஆத்திசூடி

1.அறம் செய விரும்பு.

2 ஆறுவது சினம்.

3 இயல்வது கரவேல்.

4 ஈவது விலக்கேல்.

5 உடையது விளம்பேல்.

6 ஊக்கமது கைவிடேல்.

7 எண் எழுத்து இகழேல்.

8 ஏற்பது இகழ்ச்சி.

9 ஐயம் இட்டு உண்.

10 ஒப்புரவு ஒழுகு.

11 ஓதுவது ஒழியேல்.

12 ஔவியம் பேசேல்.

13 அஃகஞ் சுருக்கேல். உயிர்மெய் வருக்கம்

14 கண்டொன்று சொல்லேல்.

15 ஙப் போல் வளை.

16 சனி நீராடு.

17 ஞயம்பட உரை.

18 இடம்பட வீடு எடேல்.

19 இணக்கம் அறிந்து இணங்கு.

20 தந்தை தாய்ப் பேண்.

21 நன்றி மறவேல்.

22 பருவத்தே பயிர் செய்.

23 மண் பறித்து உண்ணேல்.

24 இயல்பு அலாதன செய்யேல்.

25 அரவம் ஆட்டேல்.

26 இலவம் பஞ்சில் துயில்.

27 வஞ்சகம் பேசேல்.

28 அழகு அலாதன செய்யேல்.

29 இளமையில் கல்.

30 அறனை மறவேல்.

31 அனந்தல் ஆடேல். ககர வருக்கம்

32 கடிவது மற.

33 காப்பது விரதம்.

34 கிழமைப்பட வாழ்.

35 கீழ்மை அகற்று.

36 குணமது கைவிடேல்.

37 கூடிப் பிரியேல்.

38 கெடுப்பது ஓழி

39 கேள்வி முயல்.

40 கைவினை கரவேல்.

41 கொள்ளை விரும்பேல்.

42 கோதாட்டு ஒழி.

43 கௌவை அகற்று. சகர வருக்கம்

44 சக்கர நெறி நில்.

45 சான்றோர் இனத்து இரு.

46 சித்திரம் பேசேல்.

47 சீர்மை மறவேல்.

48 சுளிக்கச் சொல்லேல்.

49 சூது விரும்பேல்.

50 செய்வன திருந்தச் செய்.

51 சேரிடம் அறிந்து சேர்.

52 சையெனத் திரியேல்.

53 சொற் சோர்வு படேல்.

54 சோம்பித் திரியேல். தகர வருக்கம்

55 தக்கோன் எனத் திரி.

56 தானமது விரும்பு.

57 திருமாலுக்கு அடிமை செய்.

58 தீவினை அகற்று.

59 துன்பத்திற்கு இடம் கொடேல்.

60 தூக்கி வினை செய்.

61 தெய்வம் இகழேல்.

62 தேசத்தோடு ஒட்டி வாழ்.

63 தையல் சொல் கேளேல்.

64 தொன்மை மறவேல்.

65 தோற்பன தொடரேல். நகர வருக்கம்

66 நன்மை கடைப்பிடி.

67 நாடு ஒப்பன செய்.

68 நிலையில் பிரியேல்.

69 நீர் விளையாடேல்.

70 நுண்மை நுகரேல்.

71 நூல் பல கல்.

72 நெற்பயிர் விளைவு செய்.

73 நேர்பட ஒழுகு.

74 நைவினை நணுகேல்.

75 நொய்ய உரையேல்.

76 நோய்க்கு இடம் கொடேல். பகர வருக்கம்

77 பழிப்பன பகரேல்.

78 பாம்பொடு பழகேல்.

79 பிழைபடச் சொல்லேல்.

80 பீடு பெற நில்.

81 புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.

82 பூமி திருத்தி உண்.

83 பெரியாரைத் துணைக் கொள்.

84 பேதைமை அகற்று.

85 பையலோடு இணங்கேல்.

86 பொருள்தனைப் போற்றி வாழ்.

87 போர்த் தொழில் புரியேல். மகர வருக்கம்

88 மனம் தடுமாறேல்.

89 மாற்றானுக்கு இடம் கொடேல்.

90 மிகைபடச் சொல்லேல்.

91 மீதூண் விரும்பேல்.

92 முனைமுகத்து நில்லேல்.

93 மூர்க்கரோடு இணங்கேல்.

94 மெல்லி நல்லாள் தோள்சேர்.

95 மேன்மக்கள் சொல் கேள்.

96 மைவிழியார் மனை அகல்.

97 மொழிவது அற மொழி.

98 மோகத்தை முனி. வகர வருக்கம்

99 வல்லமை பேசேல்.

100 வாது முற்கூறேல்.

101 வித்தை விரும்பு.

102 வீடு பெற நில்.

103 உ(வு)த்தமனாய் இரு.

104 ஊ(வூ)ருடன் கூடி வாழ்.

105 வெட்டெனப் பேசேல்.

106 வேண்டி வினை செயேல்.

107 வைகறைத் துயில் எழு.

108 ஒ(வொ)ன்னாரைத் தேறேல்.

109 ஓ(வோ)ரம் சொல்லேல்.)

இன்னும் கூட அப்பனே எவை என்றும் அறிய அறிய
இத் திருநாமங்களை கூட அப்பனே ஒவ்வொரு எழுத்துக்களை கூட அப்பனே ஒவ்வொரு ஞான பெயரை எதை என்றும் அறியும் பொழுது கூட

"""""""""" க """""" முதல் எதை என்றும் அறிய அறிய எவை என்று அறிய நா வரை (நாவில், நாக்கில் உச்சரிப்பு) எவை என்று அறிய அறிய அப்பனே ஒவ்வொரு எழுத்துக்களும் கூட அப்பனே நல்விதமாகவே அப்பனே ஞானிகள் பெயரை வைத்து அப்பனே ஞானிகள் வரலாற்றை படித்தால் உலகத்தை வெல்லலாம் அப்பனே சொல்லிவிட்டேன்!!!!

(உதாரணத்திற்கு 
க... கண்ணப்ப நாயனார்
கா காகபுஜண்டர்
வ  வள்ளலார்
தி திருவள்ளுவர்
அ அருணகிரிநாதர்
ந நக்கீரர்..... என ஞானிகள்)

அறிந்தும் கூட அப்பனே எதற்கு அப்பனே எவை என்று கூட எதை என்று புரிய புரிய அப்பனே இன்னும் இன்னும் மாற்றங்களோடு அப்பனே இன்னும் பல வகையானவை கூட அப்பனே நிச்சயம் என் பக்தர்களை யான் காப்பேன் அப்பனே!!!! நலமாகவே

ஆனாலும் ஏதோ சிலர் அப்பனே எதை என்று அறிய அறிய பொய்கள் பொய்கள் என்றெல்லாம் அப்பனே!!!!

இதே போலத்தான் அப்பனே எவை என்றும் அறிய அறிய பொய்கள் பொய்கள் என்றெல்லாம் அப்பனே இச் சுவடிகள் பொய் இன்னும் எதை என்று அறிய அறிய அப்பனே சித்தர்கள் பொய் என்றெல்லாம் அப்பனே தீயிலிட்டு கொளுத்தி விட்டார்கள் அப்பனே

ஆனாலும் எவை என்று அறிய அறிய ஆனாலும் இவ்வுலகத்திற்கு அப்பனே நிச்சயம் சித்தர்கள் யாங்கள் திரும்பக் கொண்டு வருவோம் அப்பனே!!!

எவர் தடுத்தாலும் அப்பனே அவனை அங்கேயே அடித்து அப்பனே அவந்தனுக்கு ஒன்றுமில்லாமல் செய்து அப்பனே வாக்குகள் கூட அப்பனே நிச்சயம் கொடுக்க மாட்டோம் அப்பனே செப்பி விட்டோம் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய பின் அடித்து அப்பனே கவலைகளில் கிடந்து அப்பனே மீண்டும் வருவான் அப்பா அப்பொழுது தெளிவுகள் பெறும் அப்பனே உண்மை எது பொய் எது என்பதை கூட அப்பனே

இப்படித்தான் சில நபர்களை கூட அப்பனே அப்படியே ஒதுக்கி வைத்து விட்டேன் அப்பனே!!!

எதை என்றும் புரியாமலும் எவை என்றும் அறியாமலும் பொய்களாக்கி பொய்களாக்கி அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வுலகத்தையே பொய்களாக்கி அப்பனே கடைசியில் பின் பக்தியையே பொய்களாக்கி எதை என்றும் புரிய

அதனால்தான் அப்பனே அடிப்பதை  விட அப்பனே எவை என்று கூற வேறொன்றும் இல்லை அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

அதனால் அப்பனே நன் முறைகளாகவே வெற்றிகள் உண்டு அப்பனே அவனவன் பாதையில் அவனவன் கர்மாவை சேமித்து வைத்துக் கொள்கின்றான் அப்பனே

இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றது அப்பனே

புண்ணியத்தை சேர்த்துக் கொள் என்றால் அப்பனே கஷ்டங்களாம்........!?!?!?!?!?!

பாவத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றால் பின் இன்பங்களாம் !?!?!?!?!?;!!?!!?!?!

அப்பனே இவ்வுலகத்தில் அப்பனே !!!

எதையப்பா கூறுவது ?????? அப்பனே !!!!;

அதனால் நிச்சயமாக அப்பனே எவை என்று அறிய அறிய அனைவருமே அப்பனே நீங்கள் கூட அப்பனே சொல்கின்றார்கள் அப்பனே சேமிப்பு கிடங்கில் பின் பணம் வைத்தால் அப்பனே பின் நன்றாக இருக்கும் என்று!!!!

அதேபோலத்தான் அப்பனே புண்ணியக்கிடங்கில் நீங்கள் நிச்சயம் அப்பனே எவை என்று கூட புண்ணியங்களை சேமித்து வைப்பது மிகச்சிறந்த வெற்றி அப்பனே மிகச்சிறந்த உங்கள் பிள்ளைகளுக்கும் கூட அப்பனே வாழ்க்கை பலமாகும் அப்பனே வாழ்க்கை!!!

அதனால் தான் அப்பனே நீங்கள் எதிர்பார்த்துள்ளபடி அப்பனே பணத்தை சேமிப்பு கிடங்கில் அப்பனே

ஒருவள் சொல்கின்றாள் அப்பனே!!!!

(குருநாதர் வாக்கில் இடையே ஒரு பெண்ணை பற்றி குறிப்பிடுகின்றார்)

சீட்டில் (வங்கி கணக்கில்) பணம் இல்லையே என்று அப்பனே இவை எல்லாம் முட்டாள் என்பேன் அப்பனே

எதை என்றும் அறிய அறிய என் சீட்டில் புண்ணியம் இருக்கின்றதா? என்று கேட்டால் அப்பனே எவை என்று அறிய அறிய பரவாயில்லை!!!!

என் பக்தன் அறிவுள்ளவனாக இருக்கின்றான் என்று யான் நினைப்பேன்!!!

ஆனாலும் அப்பனே இப்படியும் கேட்கின்றாள் எப்படியப்பா?????

அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சேமிப்பு கிடங்கில் புண்ணியத்தை சேமித்து எவை என்று அறிய அறிய!!!  அவ் புண்ணியத்தை சேர்க்காவிடில் அப்பனே பின் கஷ்டங்கள் தானப்பா!!! வருத்தங்கள் தானப்பா!!
எதை என்றும் புரியப் புரிய அப்பனே

அதனால் பின் புண்ணியக்கிடங்கில் யான் புண்ணியத்தை சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே உங்களை எவை என்றும் அறிய அறிய தட்டி பின் மாற்றி அணைத்து எவை என்று அறிய சில நேரங்களில் மனமுடைந்து அப்பனே மனமுடைந்தாலும் அப்பனே தேற்றி அப்பனே எவை என்றும் தேற்றி!!! தேற்றி !!! அப்பனே எவை என்றும் கூற!!!!

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் பின் புண்ணியக்கிடங்கில் புண்ணியங்கள் சேர்த்து வைத்து விட்டால் அப்படியே வெற்றிகள் தானாகவே வருமப்பா!!! பணங்களும் தானாக வருமப்பா!!!!

பணங்கள் வந்துவிட்டு அப்பனே புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே என்ன பயனப்பா?????? என்ன பயன்???????

எதை என்று அறிய இதை யாராலும் பின் மறுக்க முடியாதப்பா!!!!!

இதனால்தான் அப்பனே சொல்கின்றேன்!!!

அப்பனே!!!! அன்பு குழந்தைகளாய் அப்பனே எதை என்று அறிய அறிய இருந்து கொள்ளுங்கள்.

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இத் தந்தைக்குத் தெரியும்!!!!

அப்பனே எப்படி செய்வது ?? எப்படி மீட்டெடுப்பது ?? எப்படி நடப்பதெல்லாம் என்பதெல்லாம் அப்பனே போனால் போகட்டும் அப்பனே....

கர்மத்தில் விழுந்தால் மீண்டும் இக்கலி யுகத்தில் எழுந்திருக்க முடியாதப்பா!!!

அப்பனே புண்ணிய பாதையில் சென்று கொண்டே இருங்கள் அப்பனே!!!!

எவை என்றும் அறிய அறிய அப்பனே பிறருக்காக உழையுங்கள்!!!!! போதுமானது அப்பனே

நீங்கள் அனைவருமே பிறருக்காக தான் இனிமேல் உழைக்க வேண்டும் அப்பனே சொல்லிவிட்டேன்!!! அதை எப்படி செய்வது என்பதை வருங்காலங்களில் செப்புவேன் அப்பனே!!!!

இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

நலன்கள் !! ஆசிகளப்பா!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. கனிவான வாக்குகள்...மிக்க நன்றிகள் ஐயா...இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete