​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 5 April 2024

சித்தன் அருள் - 1581 - அகத்தியர் வாக்கு!

 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

பொதிகைக்கு சென்ற அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில், அவரது ஜீவநாடியும், திரு ஜானகி ராமனும் அடியேனை பார்ப்பதற்கு வந்திருந்தனர். குருநாதரின் கருணையால், அடியேன் வீட்டில் நாடி வாசிக்கப்பட்டது. அதில் வந்த அகத்தியப்பெருமான் தனிப்பட்ட வாக்கும், பொது வாக்கும் தந்தார். அதில், வந்த வாக்குகளின் முக்கியத்துவம் உணர்ந்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். [தட்டச்சு பிழைகளை பொறுத்தருள்க]

ஆதி சிவசங்கரியின் பொற்பாதம் பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். அனைவருக்கும் ஆசிகளப்பா! ஏன், இப்படி நடக்கின்றது என்று புரிந்து கொள்கிற அளவுக்கு கூட மனிதனிடம் சக்திகள் இல்லையப்பா. சக்தியின் இருப்பிடம் அவன் புருவமத்தியில் உள்ளதப்பா. இதை உணர்ந்தவன் அமைதியாக போவான் அப்பனே. யார் ஒருவனுக்கு இது புரியவில்லையோ, அவன் அலைந்து திரிந்து, இறைவன் எங்கிருக்கிறான் என உணராமலேயே போய் சேருவான். இறந்து பின் பிறந்து வந்து மீண்டும் தேடுவான், ஒரு பிரயோசனமில்லை அப்பா!

யாங்கள் இவைகளை பிரம்மனிடம் எடுத்துக் கூறி, அவனிடத்தில் விட்டுவிடுங்கள், யாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று. இதுதான் உன் விஷயத்திலும் நடந்தது. தர்மராஜனும் பாசக்கயிற்றை கொண்டுவந்து மறைந்து நின்றானப்பா. அகத்தியன் இருக்கின்றான், அகத்தியன் இருக்கின்றான் என. உண்மை நிலை என்னவெனில், யான் இருந்தால், அவனும் பயப்படுவானப்பா!   அவந்தனுக்கும் பல நேரங்களில் கூட யான் உதவி செய்துள்ளேன். ஆனாலும் வந்துவிட்டானப்பா! உன்னை எப்படியாவது அழைத்து சென்று விட வேண்டும் என்று. அப்பனே இது போலத்தான் பல மனிதர்களுக்கும், யான் பார்த்துக்கொள்கிறேன் என்று செப்பி வந்துள்ளேன்.

நீ சுயநினைவின்றி இருந்த பொழுது, லோபாமுத்திரையும் அங்கு வந்தாள், தர்மராஜன் ஒரு ஓரமாக மறைந்து நின்றான், எப்படியாவது இவனை எடுத்துச் செல்ல வேண்டும் என்று. அப்பனே, யான் அங்கேயே இருந்தேன், அமர்ந்துவிட்டேன், என்ன நடக்கிறது என பின் பார்ப்போம் என்றெல்லாம். ஆனாலும், பார்த்த தர்மராஜன், இவை எல்லாம் அகத்தியனின் விளையாட்டு, (தலையிட்டால்) நமக்கு தீங்கைத்தான் விளைவிக்கும் என்று, சென்றுவிட்டான். 

அகத்திய மாமுனிவரே, தர்மம், நேர்மை, கடமை போன்றவற்றை எனக்கு சொல்லிக்கொடுத்ததே நீங்கள் தான். அதன்படிதான் நடந்து கொள்ள முயற்சித்தேன், உங்கள் விருப்பப்படியே நடக்கட்டும், என்னை மன்னித்துவிடுங்கள், என்று கூறி சென்றுவிட்டான். எதை என்றும் அறிய, அறிய, தன் மகனுக்கு தந்தையாய் நீ என்ன செய்ய விரும்புகிறாயோ, அதை நீயே செய்துகொள் என, கூறி சென்றான்.

கலியுகத்தில் மனிதன் அலைந்து திரிந்து, கடைசியில் நோய்கள் வந்து, கலியுகம் என்றாலே நோய்களப்பா. நோய்களின்றி யாரும் கலியுகத்தை கடக்க முடியாதப்பா. ஆகவே, அனைத்தும் இறைவன் திருவிளையாடலைப்பா. அனைத்தையும் கொடுப்பது அவனே, அனைத்தையும் எடுப்பதும் அவனே. இதை நன்கு புரிந்து கொண்டவன், இறைவனிடத்தில் இருக்கின்றான். 

அகத்தியனிடம், அதைத்தா, இதைத்தா என்று கேட்கின்றார்கள். நிச்சயம் தருவதற்கில்லை. நீங்கள் நடந்து செல்லும் பாதையில் புண்ணியங்கள் செய்தால், அந்த புண்ணியமே உங்களை காப்பாற்றுமப்பா.

மனிதனுக்கு சேவை செய்ய இறைவன் தயாராக இருக்கின்றான், ஆனால் மனிதர்கள் அப்படி இல்லை அப்பா. இப்போது மனிதரிடத்தில் உள்ள ஆசைகள், பேராசைகளப்பா. இது அழிவுக்குத்தான் கொண்டு செல்லும். 

சித்தன் என்பவன் யார், முக்தன் என்பவன் யார் என்று புரிந்து கொள்ளவே இல்லை அப்பா. சித்தன் மட்டும் யார் என்று தெரியும் அப்பா, ஆனால் முக்தன் யார் என்று தெரியவே இல்லையப்பா. சித்தன் வாக்கை புரிந்து கொள்ள தகுதிகள் வேண்டுமப்பா. 

புருவ மத்தியில் ஒரு சக்தி இருக்கின்றது. அதை இயக்கி விட்டால், யாங்கள் தெரிவோமப்பா.  உண்மையான பக்தியை செலுத்துங்கள். அதை யாரும் புரிந்து கொள்வதோ, இயக்கவில்லை அப்பா. அதனை இயக்குவதற்கும், சில மனிதர்களுக்கு தகுதி உண்டப்பா, ஆனாலும், அவர்களும் மறைந்து உள்ளார்கள் அப்பா. ஏன், அவர்களை காணவும் முடியாதப்பா.

உண்மையான பக்தன், உண்மையான ஞானி, தன்னை வெளிக்காட்ட மாட்டானப்பா. பொய்யானவன்தான் தன்னை வெளிப்படுத்தி, மக்களை ஏதேதோ சொல்லி மயக்குவானப்பா. 

புருவ மத்தியில் தான், இப்பொழுது சொல்கிறார்களே, ஆடல், பாடல் என்று, நடராசன் அமர்ந்திருப்பான். ஆனால் இதை உணர்ந்தவர் யாரும் இலர்.  நீங்கள் என்னென்ன செய்கின்றீர்களோ, அதற்கு ஏற்றவாறு ஆடுவானப்பா.  

எத்தனையோ ஜோதிடர்களை யான் பார்த்துவிட்டேன். பரிகாரமாக இதை செய் அதை செய் என்று கூறி, அவர்களும் கர்மாவை வாங்கிக் கொள்கிறார்கள். அப்பனே! உட்கார்ந்திருக்கிறாயே, நீயும் ஜாதகம் பார்த்து ஒரு சில கர்மாக்களை தெரியாமலேயே வாங்கிக்கொண்டு விட்டாய். இருந்தாலும் யான் நீக்கி விட்டேன் அப்பனே. எங்கெங்கோ வந்தாய் அப்பனே. இருந்தாலும் தாயாய் இருந்து ஒரு தட்டு தட்டி அவை எல்லாவற்றையும் நீக்கிவிட்டேன் நான். விதியின் தன்மை, இப்படித்தான் ஜாதகங்களில் அப்பா. திருடனுக்கு கூட நீ ஜாதகம் பார்த்துள்ளாயப்பா. ஆனாலும் உனக்கு தெரியாதப்பா. ஆனாலும் அக்கர்மாவும் அப்படியே உந்தனுக்கு மாறிவிட்டது. 

தன வினைக்கு தானே காரணம் என்று. இவை போகப்போக புரியுமப்பா, அவற்றை யான் புரிய வைக்கிறேன் அப்பா.

பிரம்மாவிடம் முறையிடவேண்டும். புண்ணிய கர்மாவை கூற வேண்டும், இவை எல்லாம் எங்களுக்குத்தான் தெரியும். அதனால் தான் யான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகின்றோம். அகத்தியன் சொல் வந்தது வந்தது தான்.

நடந்தவை எல்லாம் உனக்கு புரியாமல் இருந்தாலும், நிச்சயம் உந்தனுக்கு புரிய வைப்பேன். உந்தன் கடமையை செய்! யானே உன்னை வழி நடத்துவேன். 

ஒவ்வொருவருக்கும் என்னென்ன கஷ்டங்கள் என்று யான் பார்த்துக் கொண்டு தான் இருக்கின்றேன். இன்னும் பிறவிகள் தேவையா? என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். 

என் அன்பு மகன்களே, அதனால் தான் அன்பு வடிவமாக யான் வாக்குகளை எடுத்து உரைத்து கொண்டிருக்கின்றேன்.  என் பக்தர்கள் கூட, சித்தர்கள் யார் என்பதை உணரவே இல்லை. சித்தர்கள் யார் என்பதை உணர்ந்து விட்டால், முன்னர் சொன்ன முக்தன் என்ற நிலையை அடைந்துவிடலாம். சொல்லிவிட்டேன். முக்தனாய் உணர்ந்துவிட்டால், நீங்கள் விரும்பும் விஷயங்கள் அனைத்தும் நடந்தேறும், நிச்சயம். தம் தம் கையில் என்ன உள்ளது என்று பார்த்தால், பாப புண்ணியங்கள். இதற்க்கு ஏற்றாற்போல் இறைவனும் வழி நடத்துவான். 

புண்ணியம் நிறைந்த ஆத்மாக்கள் எங்களை நெருங்காது. நிச்சயம், புண்ணிய ஆத்மாக்களை யாங்கள் நெருங்குவோம்.  பாப ஆத்மாக்களின் கர்மத்தை எவ்வழிகள் என்று தெரிந்து, யாங்களே நீக்குவோம்.  

பாபம் செய்கிறவன் எம் கையில் சிக்காமல் ஓடி விடுகின்றான். வரட்டும், சிக்கட்டும் என்று காத்திருக்கின்றோம். சிக்கினால், அழித்து விடுவோம் நாங்கள். உண்மையான மனிதன் எதையுமே பேசமாட்டானப்பா.  மௌனத்தை பாலித்து, அனைத்தும் இறைவன் செயலே என்று கூறிவிடுவானப்பா. 

யார் ஒருவனுக்கு கீழான எண்ணங்கள் இருக்கிறதோ, அவன் என்றும் கீழானவன் தான். நேரான எண்ணங்கள் உடையவன் எப்பொழுதும் மேலானவன் தான் அப்பனே. அவனருகில் இறைவன் எப்பொழுதும் இருப்பான். மேலான எண்ணங்கள் இருந்தாலே, மேலான இடத்திற்கு சென்று விடுவீர்கள். இறைவனையும் அறிந்து விடுவீர்கள், அப்பனே! அப்படிப்பட்டவனுக்கு, புருவ மத்தியில் அவ் சக்தி நிறைந்து காணப்படுமப்பா. அவன் முக்தியை நோக்கி சென்று விடுவானப்பா. 

அப்பனே! வாழ்க்கை இறைவனிடத்தில் இல்லை அப்பா! உங்களிடத்தில் உள்ளது அப்பா. இதை சரியாக புரிந்து கொண்டு பயன்படுத்திக் கொள்பவன் இவ்வுலகில் வெற்றி அடைகின்றான் அப்பா. 

அனைத்தையும் பார்த்துவிட்டேன் அப்பனே. விதியை மாற்றும் சக்தி சித்தனுக்கும் உண்டு. சரியான நேரத்தில் உயிரை காப்பது, யாங்களே அறிந்துள்ளோம். 

அனைவரையும் கூட பாசத்தோடு பார்க்கின்றான் இவ் அகத்தியன். 

உயிர் சொந்தமில்லை என்று உணர்ந்துவிட்டால், மனிதன் தீய வழியில் செல்ல மாட்டான் அப்பா.

இவன் விஷயத்தில், யானே அருகில் இருந்தேனப்பா. போராட்டம் அப்பா. பிரம்மாவிடம் கூட என் பிள்ளை, என் பக்தன், ஏதாவது ஒரு விஷயத்துக்கு பயன் படுத்துவேன் என்று, சொல்லிவிட்டேன் அப்பனே. மீண்டும் சொல்லுகின்றேன், யார் ஒருவன் ஏதாவது ஒரு பயன்பாட்டிற்காக இருக்க வேண்டும் அப்பனே. அப்போதுதான் இறைவன் கொடுப்பான் என்பேன். எதற்கும் பயன்படாமல் இருந்தால், இறைவன் அப்படியே விட்டுவிட்டு சென்று விடுவான். இறைவனிடத்தில் பெயரை வாங்க வேண்டும். எப்படி பெயரை வாங்குவது? புண்ணியத்தை செய்யுங்கள். நல் எண்ணங்களோடு இருந்தாலே போதுமப்பா. புண்ணியங்களை செய்தால், இறைவனே வந்து அழைத்து செல்வானப்பா.    இவன்தனைக் கூட இழுத்து சென்றிருக்கும். பிரம்மாவிடம் சண்டையிட்டேன். இவன் கூட பின் வரும் சந்ததிகளுக்கு பயன் படுவான் என்று கூட. அப்பனே! யானே எடுத்துரைத்து, பல புண்ணியங்கள் செய்திருக்கின்றான் எனக் கூற, ஆனாலும் வினையின் தாக்கங்கள் அதிகமாக உள்ளது. அதாவது பாபகணக்கு. இவன் பாபம் செய்யவில்லை, ஆனால் பிறர் பாபத்தை இவன் சொல்லியிருக்கின்றான் அப்பா. பிரம்மாவே சொல்லிவிட்டானப்பா.

"அப்பப்பா, அகத்திய மாமுனிவரே,  இறைவன் இட்ட கட்டளை. இப்படித்தான் மனிதன் வாழ வேண்டும், இப்படித்தான் இவ் ஆன்மா பிறந்து வாழ வேண்டும் என்றெல்லாம். ஆனாலும் சில பாபங்களை நீக்கிவிட்டேன் என்று கூறினேன், ஆனாலும், சரி சமமாகவே, சில புண்ணியங்களை யானே கொடுக்கின்றேன் என்றேன். அப்பனே, அறிந்தும் கூட சில புண்ணியங்களை இவந்தனுக்கு கொடுத்தேன் அப்பா!  அப்பனே! பிரம்மாவும் தலை குனிந்து நின்றானப்பா. அப்பனே, அகத்தியன் அறிவு, எப்படியெல்லாம் மிஞ்சி இருக்கின்றது என்று உங்களுக்கெல்லாம் தெரியாதப்பா. ஆனால், நீங்களோ, அகத்தியன் பெயரை சொல்லி......... வாக்குகளில்  செப்பவில்லை,உங்களுக்கே தெரியும்! நீங்கள் அனைவரும் உண்மையாக இருந்தால், அகத்தியன் தன உயிரை கூட பணயமாக வைத்து உங்களை காப்பாற்றுவானப்பா. தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே, உண்மை நிலை தெரியாமல், இறைவனை வணங்கினாலும், பிரயோசனமில்லை அப்பா. முதலில் புண்ணியங்கள் செய்துவிட்டாலே போதுமப்பா, என்னால் இறைவனை காட்ட முடியுமப்பா.  குருவானவர், பலருக்கும் வாழ்க்கையில் பல கண்டங்கள் வருமப்பா, அப்பொழுது பிரம்மாவிடம் எடுத்துக் கூறி  காப்பாற்றுவான் அப்பனே. சித்தர்களும் அப்படித்தான். பிரம்மாவிடம் பேசும் தகுதி மனிதனுக்கு இல்லையப்பா.

புண்ணியங்கள் மிகுந்து காணப்படும் பொழுது, அப்புண்ணியங்களே காப்பாற்றுமப்பா. புண்ணியங்கள் இல்லாத பொழுது, பிரம்மாவே கேட்கின்றான் "அகத்திய மாமுனிவர், உன் நாமத்தை சொல்லி ஏமாற்றியவன் இவன். ஆனால் புண்ணியம் செய்ய வில்லையே, எப்படி காப்பாற்ற போகின்றாய் என்று. யானும் தலை குனிய வேண்டும். அதனால் தான், நல்புத்திகள் புகுந்து, இறைவன் நாமத்தை ஜெபிக்க இன்னும் நிறைய மந்திரங்கள் கூட சொல்லித்தருகின்றேன், நீங்கள் தகுதி உடையவர்களாக இருங்கள் அப்பனே. அதாவது, இறைவனே, மனிதனை நம்பி, நம்பி ஏமாந்து விட்டானப்பா. கடைசியில் பார்த்தால், இறைவனே தலைகுனிந்து ஏன் இவனுக்கு இத்தனை கொடுத்தோம் என்று, பிடுங்கிக் கொள்வானப்பா.

அப்பனே! இறைவன் அத்தனை பாசக்காரனப்பா. நீங்கள் அதற்கு தகுந்தாற்போல் இருந்தால், யாங்களே வந்திருந்து எங்கள் குழந்தைகள் போல் பார்த்துக் கொள்வோம் அப்பா.

ஆசிகள், ஆசிகள், ஆசிகள், எம் சேய்களுக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. அகத்தீசாய நம 🙇‍♂️🙇‍♂️🙇‍♂️ நன்றி அகத்தியருக்கு 🙏🙇‍♂️

    ReplyDelete
  2. Thank you Ayya for sharing the important vaaku.. அகத்தீசாய நம

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை...

    ReplyDelete
  4. குருநாதரின் அன்பு மிகவும் அற்புதம் நிறைந்தது...அவர் கூறிய வாக்கு ஆசிகள் எல்லையற்றது...மிக்க மிக்க நன்றிகள் ஐயா...தாங்கள் நலமாக இருக்க வேண்டுகிறேன்...

    ReplyDelete
  5. சகோதரரை காத்து அருளிய அகத்திய பகவானின் எல்லையற்ற கருணைக்கு மிகுந்த நன்றி. ஓம் அகத்தீசாய நம.

    ReplyDelete
  6. Vanakkam Ayya. Naan pala varudamaaga thangalin Sithan Arul padithu varugiren... pala neram padikkamalum irundu ullen.. Ayya... Guruvadi nizhalukkaga yaengugiren. Thiru Janakiram Ayya avargalin ennukku naan thagaval anuppiyum, azaithu paarthum response illamal ponadhaal,thangalidam murai idugiren. Avarin Address Kidaikkuma, alladhu veru enn edum ulladha... Vazhi kaatungal Ayya... Migunda mana vedanayil ullen... Guru nadhar thunai vendum, kai koduthu udhava Ayya avargal dayavu seidhu edhenum maargam kaattungal... Request you to kindly share Ayya Janakiraman Avargalin Address along with a valid contact number...Please... Ungal Padham Paniyum
    Agathiyrarin anbu naadum Magal

































    ReplyDelete
  7. எனக்கு ஜீவ நாடி பார்க்க வேண்டும்

    ReplyDelete
  8. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete