​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 26 January 2024

சித்தன் அருள் - 1564 - அகத்திய பெருமானின் திருநட்சத்திர விழா 30/12/2023!


"வணக்கம்! பூஜாரி அய்யா! இன்று யாருக்கு திருநட்சத்திர விழா?" என, அகத்தியப்பெருமான் சன்னதிக்குள் இருந்து பிரசாதம் பக்தர்களுக்காக எடுத்துக் கொண்டிருந்த பூஜாரியிடம் கேட்டேன்.

குரல் கேட்டு திரும்பி பார்த்த பூஜாரி, அடியேன் நிற்பதை கண்டு, "என்னங்க அய்யா, இப்படி கேட்டுட்டீங்க? அப்பாவுக்குத்தான்!" என்று சிரித்தபடி பதிலளித்தார்.

சன்னதிக்குள் எட்டிப்பார்த்தால் அப்படி தெரியவில்லையே. இறங்கி வெளியே வந்து இருவரையும் பாருங்கள் என்று கூறி, விலகிச் சென்றேன்.

<===>

நம் குருநாதர் அகத்தியப்பெருமானின் திரு நட்சத்திர தினம் 30/12/2023 சனிக்கிழமை அன்று, பசுமலை மாரியம்மன் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருச்சன்னதியில், அகத்தியர் அடியவர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 

மாலை 5 மணிக்கு தொடங்குவதாக இருந்த அபிஷேக பூஜைகள், அரைமணிநேரம் தாமதமாக தொடங்க வேண்டி வந்தது.

மழை பெய்யும் என்ற வானிலை மையத்தின் முன் அறிவிப்பால், சற்று முன்னரே கோவிலை வந்தடைந்தேன். பூஜாரி வந்தடைந்து, அகத்தியர் சன்னதியில், சிலையை சுத்தம் செய்து கொண்டிருந்தார். நிறைய அகத்தியர் அடியவர்கள் வந்திருந்தனர். அதில் பலரும், அம்மாவின் திரு நட்சத்திர பூஜையில் கலந்து கொண்டவர்கள். எனவே அனைவருக்கும் வணக்கம் கூறி, வரவேற்று, அபிஷேக சாமான்கள் இருக்கும் இடத்திற்கு சென்று ஏதேனும் வேலை பார்க்கலாம் என்று எட்டிப்பார்த்தால், பலர் அமர்ந்து அந்த வேலைகளை செய்து கொண்டிருந்தனர்.

ஒரு பக்கம், பல பெண்கள் அமர்ந்து, பூக்களை, துளசியை ஆய்ந்து கொண்டிருந்தனர்.

நிமிர்ந்து பார்த்தேன். மழை மேகம் இருந்தாலும், மழை பெய்யாது என்று தோன்றியது. இருந்தாலும், அகத்தியப்பெருமானே! என மனதுள் அழைத்தேன்.

கூட்டம் வந்து கொண்டே இருந்தது. பல அடியவர்களும், முன்னரே அகத்தியர் சன்னதிக்கு முன் அமர்ந்து இடம் பிடித்துக் கொண்டனர். அவர் சன்னதிக்கு முன் ஒரு 25 அடியவர்கள் அமர்ந்த உடனேயே நிறைந்து போய் மற்ற அனைவரும் வேறு பல இடங்களில் அமர வேண்டி வந்தது.

ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்ட ஒரு அடியவர் வந்து, "இம்முறை விட்டுவிட்டோம்! அடுத்த முறை, மிகப்பெரிய திரை முருகன் சன்னதிக்கு பக்கத்தில் வைத்து, கேமரா வைத்து ஒளிபரப்புவோம்! அப்படியானால் வருகிற எல்லோருக்கும் பார்க்க முடியும்!" என்றார்.

அதுவும் உண்மை தான்! இங்கு பக்கத்தில் அரை மணிநேரத்தில் அந்த ஏற்பாட்டை செய்து தருகிற ஆட்கள் இருக்கிறார் என்றால், இப்பொழுதே முயற்சிக்கலாமே என்றேன்.

அது சாத்தியமில்லை. ஆள் கிடைத்தால் கூட எல்லாம் பொருத்தி முடிய இன்னும் ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகும். அடுத்த முறை பார்த்துக்கொள்ளலாம் என்றார்.

ஒரு சுற்று திரும்பி பார்க்க, கூட்டம் கூட்டமாக அடியவர்கள் வந்து கொண்டிருந்தனர். வந்தவர்கள் ஒவ்வொருவரும் ஏதோ ஒரு உழவாரப்பணி செய்து கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் பிரசாதம் தயாரிப்பதை, "அகத்தியப்பெருமானின் இறையருள் மன்றம், மதுரை" அடியவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். அகத்தியர் மைந்தன் திரு.பரமசிவத்தை அணுகி, அய்யா! நல்ல கூட்டம் வருகிறது, அனைவருக்கும், பிரசாதம் உணவாக கொடுக்க வேண்டும்! பிரசாதம் தயாரிப்பவரை கூப்பிட்டு 500 பேருக்கு சமைக்க கூறுங்கள்" என தெரிவித்தேன். அவரும் திரும்பி ஒரு சுற்று பார்த்து அதற்கான ஏற்பாட்டை கவனித்தார்.

வந்த அகத்தியர் அடியவர்கள் அனைவரும், தங்களால் இயன்ற அபிஷேக பொருட்களை வாங்கி வந்திருந்தனர். அதுவே நிறைய இருந்தது.

நீரில் கரைக்கப்பட்ட வித விதமான அபிஷேக பொருட்கள் சன்னதிக்கு முன் வரிசையாக வாளிகளில் வைக்கப்பட்டது. ஒவ்வொரு அடியவரும் போட்டி போட்டுக் கொண்டு அகத்தியப்பெருமானின் அபிஷேகத்துக்கு பொருட்களை கொண்டு வந்து வைத்தனர். 

எட்டிப் பார்த்தால் கூட அபிஷேகத்தை முழுவதும் பார்க்க முடியாது, கடைசியில் யாரிடமாவது அனுமதி கேட்டு பார்த்துக் கொள்ளலாம் என்று விலகி நின்று விட்டேன்.

இதற்கிடையில், கோபுர விக்கிரகங்களுக்கு போடுவதற்கான பூமாலைகள் வந்து சேர்ந்தது. (அகத்தியர் & லோபாமுத்திரா தாய், திருமூலர், அருணகிரி நாதர், பிரம்மா, தக்ஷிணா மூர்த்தி, பெருமாள் ஆகியோர் அமர்ந்துள்ளனர்.) அபிஷேகம் தொடங்குகிற மனநிலையில் பூஜாரி இருந்ததால், அபிஷேகம் முடிந்து, அலங்காரத்துக்கு முன் பூமாலையை சாற்றிக்கொள்ளலாம் என்று பூஜாரி தீர்மானித்தார்.

அகத்தியர் இறையருள் மன்ற அடியவர்கள், மேலும் ஒன்றிரண்டு அடியவர்கள் ஒப்புதலுடன் அபிஷேகத்தை 5.30 மணிக்கு பூஜாரி தொடங்கினார்.

சற்று நேரம் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்தேன். ஏற்கனவே அறிமுகமான அடியவர்கள், வந்து அபிஷேகம் பார்க்க முடியவில்லை என்று கூறியவுடன், நாம் விலகி நிற்போம், முன்னே அமர்ந்திருப்பவர்கள் அபிஷேகத்தை கண்டு திருப்தி அடையட்டும், பின்னர் நாம் பார்க்கலாம், என கூறி உற்சாக மன நிலையை உருவாக்கினேன்.

மனதுள் என்னனென்னவோ எண்ணங்கள் ஓடியது. வீட்டிலிருந்து கிளம்பும் பொழுது, குருநாதரிடம், தாங்கள் வந்திருந்து உங்கள் சேய்களை வாழ்த்தி அவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுங்கள், ஆசீர்வதியுங்கள் என பிரார்த்தித்திருந்தேன்! ஆனால் இப்பொழுது, கை கூப்பி உங்கள் இருப்பையும் தெளிவு படுத்துங்கள் என பிரார்த்தித்தேன்.

இதற்கிடையில், அடியேனின் ஒரு சில நண்பர்கள் வந்து பேசத்தொடங்கினார். இன்றைய தினம் அமைதியாக பேசாமல் இருக்க முடியாது என்று உணர்ந்த அடியேன், அவர்கள் கேள்விக்கு பதிலளித்து, ஒரு சில அனுபவங்களை பதிலாக கூறினேன்.

இதற்கிடையில், ஒரு அடியவர் வந்து "அய்யா! மாரியம்மன் சன்னதி முன் விளக்கேற்ற வேண்டும்! வாருங்கள் என அழைத்தார். ஒரு சிலருடன் அங்கு சென்று ஒரு விளக்கேற்றி மற்றவர்களுக்கும் விளக்கேற்ற வாய்ப்பு கொடுத்தேன். திடீர் என நினைவுக்கு வந்ததால், அழைத்து சென்ற நண்பரிடம், "ஏற்கனவே அகத்தியப்பெருமான், நாடியில் வந்து, சும்மா விளக்கேற்றினால் மட்டும் போதாது, இதன் மகத்துவத்தை நீ அனைவருக்கும் உரைக்க வேண்டும், இல்லயேல் உனக்கு கர்மா சேர்ந்து விடும், என கூறியுள்ளார். ஆகவே அனைவருக்கும் இவ்விளக்கேற்றும் முக்கியத்துவைத்தை நீங்கள் விளக்குங்கள்!" என்றேன். அவரும் கூறத்தொடங்கினார்.

என்னவோ, விளக்க முடியாத ஒரு குளிர்ச்சியான உணர்வு எங்கும் நிறைந்தது. குருநாதர் வந்துவிட்டார் போலும் என்று நினைத்தவுடன், நல்ல சந்தன வாசனை, ஜவ்வாது வாசனையுடன் கலந்து காற்றில் மிதந்து சென்றது. இந்த இரண்டு வாசனைகளும் அகத்தியப்பெருமானுக்கு மிக பிடித்தமான வாசனைகள் என்பதால், எங்கு குருநாதரை தரிசிக்க சென்றாலும், வாசனாதி திரவியங்களில் இவைகளை வாங்கி செல்வது அடியேனின் வழக்கம். இம்முறை அவருக்கு கொடுக்க வேண்டும் என கொண்டு வந்ததை கூட பூஜாரியிடம் கொடுக்கவில்லை. தனியாக பையில் வைத்திருந்தேன். ஆகவே, யாம் வந்துவிட்டோம் என்பதை இவ்வாசனைகள் வழி உணர்த்துகிறார் என்று உணர்ந்தேன். மிக்க நன்றி! என மனதுள் கூறி ஆனந்தம் அடைந்தேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!  

Thursday 25 January 2024

சித்தன் அருள் - 1563 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு!



24/1/2024 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலன்கள் நலன்களாக!!! இன்னும் எம்முடைய ஆசிகள்!!!!

அப்பனே எவை என்று கூற யான் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!! அப்பனே மனிதன் இக்கலியுகத்தில் வாழத் தெரியாமல் வாழ்ந்து கஷ்டங்கள் பட்டு பட்டு எதற்காக பிறந்தோம் எதற்காக இக்கஷ்டங்கள் என்பதை உணராமலே அப்பனே வாழ்ந்து கொண்டிருக்கின்றான்!!!!அப்பனே

அப்பனே இவையன்றி கூட சித்தர்கள் யாங்கள் ஒவ்வொரு வாக்கியத்திலும் அப்பனே எப்படி எல்லாம் வாழ்ந்தால் இத் துன்பங்கள் நீங்கி கலியுகத்தில் வாழ முடியும் என்பதை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே வருகின்றோம் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும்!!!

ஆனால் அப்பனே மனிதன் இவை தன் உணராமல் தன் நலத்திற்காகவே வாழ்ந்து துன்பத்தில் சிக்கி தவிக்கின்றான்!!!!அப்பனே

அப்பனே யான் ஏற்கனவே உரைத்திட்டேன்!!!!! இவ் ஆன்மா என்பதே அணுக்கள் அப்பா!!!!

புரட்டாசி திங்களில் மேலிருந்து விழும் ஆத்மாக்கள் அதாவது அப்பனே எதை என்று கூற அணுக்கள் விழும் அதனை காந்தகமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் இறைவனிடத்தில் ஒட்ட வைக்க வேண்டும் அப்பனே என்பதை எல்லாம் அப்பனே அறிந்தும் அறிந்தும்!!!

அப்பனே மேலிருந்து விழும் அணுக்களானது ஐப்பசி திங்களில் நதிகளில் அதாவது புனித நதிகளில் நீராடி அப்பனே அறிந்தும் அறிந்தும் அப்பனே இவ்வாறு நீராடும் பொழுது இவ் அணுக்கள் எல்லாம் மீண்டும் மேலே செல்லுமப்பா என்பதை எல்லாம் அறிந்தும் அறிந்தும்!!!!

கார்த்திகை திங்களில் அப்பனே கந்தனவன் மீண்டும் ஆன்மாக்களை அதாவது அப்பனே முக்தி பெறாமல் எவை என்று கூற பல்வேறு ஆசைகளோடு அலையும் ஆன்மாக்களை அப்பனே செவ்வாய் கிரகத்திலிருந்து கந்தன் மேலே அனுப்பி வைப்பான் என்பதை எல்லாம் அறிந்தும் அறிந்தும் அப்பனே

எதையென்று கூட அப்பனே ஆனாலும் மார்கழி திங்களில் இவ்ஆன்மாக்களுக்கு ஒரு தீர்ப்பு வருமப்பா!!! எதையன்றி கூற அப்பனே இங்கே ஆன்மாக்களை அணுக்கள் என்றே யான் குறிப்பிடுவேன் அப்பனே!!!

இவ் ஆன்மாக்களுக்கு அப்பனே அதாவது அணுக்களுக்கு முக்தி கிடைக்குமா?? மோட்ச கதி உண்டா ??என்பதை எல்லாம் அப்பனே அவ் ஆன்மாக்கள் செய்த பாவ புண்ணியத்திற்கு ஏற்பவே தீர்ப்புகள் கிடைக்கும் என்பேன் அப்பனே!!!

அப்பனே ஆனாலும் எவ் ஆத்மாக்கள் புண்ணியம் செய்து இருக்கின்றதோ அவையெல்லாம் அப்பனே மீண்டும் மேலே காந்தகத்தில் ஒட்டிக் கொள்ளும்  அப்பா!!!!

அப்பனே எதையென்று கூற அப்பனே புண்ணியம் இல்லாத ஆத்மாக்கள் மீண்டும் கீழே வந்து அலைந்து திரியுமப்பா!!!!!

அவ் ஆன்மாக்கள் எல்லாம் அப்பனே ஐயோ !! ஐயோ !! என்றெல்லாம் அப்பனே தம்தன் உறவுகள் சொந்த பந்தங்கள் எங்கே என்றெல்லாம் அலைந்து திரியுமப்பா நிம்மதி இல்லாமல் இருக்குமப்பா!!!!

அப்பனே அதாவது ஆன்மாக்களை அப்பனே அணுக்களை ஒரு பிண்டமாகவே பிடித்து இறைவனிடத்தில் சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!

(இதை பற்றி நம் குருநாதர் அகத்திய பெருமான் மானசா தேவி ஆலய வாக்கில் தெளிவாக கூறியிருக்கின்றார்..சித்தன் அருள் 1533)

இவ் தை திங்களில்  அப்பனே இவ் அணுக்களை எல்லாம் அப்பனே அதாவது இவ் ஆன்மாக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே அவைகளை ஒன்றிணைத்து ஒரு பிண்டம் போலவே செய்து அப்பனே நல்விதமாகவே அப்பனே செய்திடல் வேண்டும் என்பேன் அப்பனே

இவ் ஆன்மாக்கள் ராமேஸ்வரம் காசி கயா அப்பனே இன்னும் இன்னும் அப்பனே நதிக்கரைகளில் எல்லாம் அப்பனே அமைதியின்றி அலைந்து திரிந்து கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கும் அப்பனே!!!!

இவ் மாதத்தில் வரும் அப்பனே தை அமாவாசை என்கின்றார்களே அப்பனே இவ் நாட்கள் வரை அப்பனே அனைவரும் இவ் இடங்களுக்கெல்லாம். சென்று அப்பனே இவையன்றி கூட அப்பனே தம் தன் முன்னோர்களை நினைத்து எள் கலந்த சோற்றினை அப்பனே பிண்டமாக வைத்து அப்பனே அவர்களை வணங்கி முன்னோர்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே!!!

அப்படி செய்தால் தான் அப்பனே ஆன்மாக்களும் மேலே சென்று முக்தியை பெறுமப்பா!!!!

இதை அனைவரும் நிச்சயம் செய்ய  வேண்டும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே அங்கு செல்ல இயலாதவர்கள் தாம் தன் வசிக்கும் அருகில் அப்பனே இருக்கும் நதிக்கரை ஓரங்களில் திருத்தலங்களில் எல்லாம் அப்பனே சென்று முன்னோர்களை நினைத்து ஆன்மாக்களை அப்பனே இறைவனிடத்தில் வேண்டிக்கொண்டு நல்விதமாக ஒரு  லட்டு  போல் அப்பனே( எள் கலந்த சோறு உருண்டை) இவ்வாறு செய்கின்ற பொழுது அப்பனே ஆன்மாக்களும் முக்தியை நோக்கி செல்லும் அப்பா!!!

இவ்வாறு செய்துகொண்டு அப்பனே முடிந்தவரை இயலாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் அன்னத்தை ஈய வேண்டும் என்பேன் அப்பனே!!! இதனை செய்து விட்டு அப்பனே அமைதியாக உட்கார்ந்து இறைவனை நினைத்துக் கொண்டு!!!! இறைவா !! எம் முன்னோர்களுக்கு நல்விதமாக முக்தியையும் மோட்சத்தையும் கொடு என்றெல்லாம் வேண்டிக்கொண்டு அப்பனே !!!! 

இவ்வாறு செய்யாவிடில் அப்பனே அவ் ஆன்மாக்கள் எல்லாம்!!!!.....??

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

மனிதனுக்கு ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்றெல்லாம் அப்பனே யோசிப்பதே இல்லை அப்பனே

இவ்வாறு ஆன்மாக்கள் அலைந்து திரிந்து கஷ்டங்கள் பட்டுப்பட்டு வருத்தத்துடன் அலைந்து திரிந்து கொண்டிருந்தால் அப்பனே அவர்களுடைய சந்ததிகளுக்கும் பெரும் கஷ்டங்கள் வரும் அப்பா!!!! இவையெல்லாம் மனிதர்களுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே இவ் கஷ்டங்களை எல்லாம் அப்பனே மனிதனுக்கு வராமல் இருக்க வேண்டுமென்றால் அப்பனே யான் கூறியவற்றை கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே.

அவ் ஆன்மாக்கள் எல்லாம் வருத்தங்களோடு அலைந்து திரிந்து கொண்டிருந்தால் மனிதர்களுக்கு குடும்பத்தில் கஷ்டம் இல்லத்தில் சண்டை சச்சரவுகள் இல்ல தாளுடன் மன வேறுபாடு பிள்ளைகளுடன் அப்பனே மனக்குழப்பங்கள் இவையெல்லாம் வந்து கொண்டே இருக்கும் அப்பா!!!!

இவ் ஆன்மாக்களுக்கு நல்முறையாக இவ் தைத்திங்களிலே இவ்வாறு வணங்கி வழிபட்டாலே அவை தன் மகிழ்ந்து வாழ்த்தி விட்டு செல்லுமப்பா இதனால் அப்பனே கஷ்டங்கள் குறையுமப்பா!!!!!

அப்பனே ஒன்றை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே அவ்ஆன்மாக்கள் வருத்தப்பட்டால் அப்பனே அப்பொழுது உங்கள்  வாழ்க்கையிலும் வருத்தங்கள் வரும் அப்பா!!!!

ஆன்மாக்களை சமநிலைப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே அவ் ஆன்மாக்கள் எல்லாம் மீண்டும் இறைவனிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

இல்லை என்றால் அப்பனே பெருமளவு கஷ்டங்கள் வரும் அப்பனே!!!!!

இதை என் பக்தர்கள் அனைவரும் வரும் நாட்களில் நிச்சயம் செய்து கொண்டு வர வேண்டும் அப்பனே!!!

யாங்கள் கூறியதை நீங்கள் கேட்டு உணர்ந்து அப்பனே செய்து கொண்டு வந்தால் தான் அப்பனே யாங்களும் உங்களுக்கு வாக்குகள் தர முடியும் அப்பனே!! உங்களை கஷ்டங்களிலிருந்து மீட்டெடுக்க முடியும் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே மீண்டும் கூறுகின்றேன் அப்பனே இதை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்பேன் அப்பனே அப்படி செய்தால் தான் என்னுடைய வாக்குகளும் கிட்டும் அப்பனே என்னால் மாற்றத்தையும் தர முடியும் என்பேன் அப்பனே!!!! அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே!!!!!

இதை அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டும் அப்பனே!!!!

அமாவாசை வரை நிச்சயம் இதை அனைவரும் செய்திட வேண்டும் அப்பனே அமாவாசைக்கு பிறகு தான் அப்பனே எந்தன் வாக்குகள் அனைவருக்கும் கிட்டும் என்பேன் அப்பனே

சித்தர்கள் யாங்கள் மனிதர்களை திருத்தி நல்வழிப்படுத்தி இக்கலியுகத்தில் கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவதற்கு அப்பனே பல வழிகளிலும் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே!!!

யாங்கள் திருத்துவோம் அப்பனே அப்படி மனிதன் கேட்காவிடில் அடித்து திருத்துவோம் அப்பனே!!!

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள் அப்பனே!!!!!

(வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதர் அகத்திய பெருமான் இன்றிலிருந்து அடியவர்கள் அனைவரும் அவரவர் முன்னோர்களை நினைத்து இந்த தை மாதத்தில் அமாவாசை வரையிலான நாட்கள் வரை... ஆற்றங்கரையில் இருக்கும் இந்த திருத்தலங்களில் அதாவது தாமிரபரணி காவேரி வைகை கங்கை நர்மதா தபதி என புனித நதிகள் ஓடும் திருத்தலங்களில்.... அதாவது காசி ராமேஸ்வரம் கூடுதுறை பவானி திருச்சி திருநெல்வேலி என அவரவர் இருக்கும் இடங்களுக்கு அருகே இருக்கும் கோயில்கள் படித்துறைகளில் சென்று முன்னோர்களுக்கு அவர்கள் ஆத்மா முக்தியை பெற பித்ரு தர்ப்பணங்கள் செய்து இறைவனை நினைத்து வேண்டிக்கொண்டு இயலாதவர்களுக்கும் வாயில்லா ஜீவராசிகளுக்கும் தொடர்ந்து அன்னதானம் இவை எல்லாம் செய்து வர வேண்டும் என்று கூறி இருக்கின்றார் அதன் பிறகு குருநாதர் அயோத்தியில் வாக்குகள் உரைப்பேன் என்று கூறி இருக்கின்றார் அதுவரை அடியவர்கள் அனைவரும் இதை கடைபிடித்து வருமாறு கேட்டுக் கொள்கின்றோம்)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 23 January 2024

சித்தன் அருள் - 1562 - அன்புடன் அகத்தியர் - அயோத்யா அருள் வாக்கு!




19/1/2024  அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு 

ஆதி பகவானின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!!!! 

அப்பனே நலன்கள் அப்பனே உலகத்தோர்க்கு !!!!!!!!!!

அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே இறைவன் நிச்சயம் அப்பனே பார்த்து பார்த்து ஆனாலும் ராமனுடைய பிறவி அப்பனே சரித்திரமானது!!!!!!!

ஏன்? எதற்கு அப்பனே எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் சொல்கின்றேன் அப்பனே!!!!

இதையென்று அறிய அறிய அப்பனே அதாவது பல வழிகளிலும் கூட அப்பனே எடுத்துரைத்து விட்டேன் அப்பனே அதாவது இறைவனே மனித ரூபத்தில் பிறந்தால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட பல கஷ்டங்கள் அப்பனே அனுபவிக்க வேண்டும் அப்பனே இதுதான் உண்மை!!!!!!!

அப்பனே இதனால் தான் அப்பனே இவை எடுத்து கூறவே அப்பனே நிச்சயம் இறைவன் அதாவது மனித ரூபத்தில் பிறந்து அப்பனே வளர்ந்து பல இன்னல்கள்!!!! 

ஆனாலும் அப்பனே பின் அறிந்தும் கூட இவ்வாறு நீதி நேர்மை தர்மம் கடைப்பிடிப்பதன் மூலம் அப்பனே இறைவன் அப்பனே அருகிலே இருந்தான்!! அப்பனே!!!

இறைவன் அனைத்தும் செய்தான் அப்பனே!!!

ஆனாலும் கஷ்டங்கள் வந்தவை ஆனாலும் அதை எதிர்த்து நிற்கும் துணிவையும் அதாவது பின் மன தைரியத்தையும் அப்படி அறிந்தும் கூட இறைவன் அருகிலே இருந்தான் அப்பனே!!! இதுதான் அப்பனே!!!

இவையெல்லாம் சூட்சுமமாகவே வரும் காலத்தில் எடுத்துரைப்பேன் அப்பனே!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் அப்பனே ஒரு பெண்மணி இப்படி வாழ்ந்தால் தான் அப்பனே நிச்சயம் அறிந்தும் கூட அப்பனே அதாவது!!!!

மழை வா!!!!!!!! என்று சொன்னால் வந்துவிடும்!!!

மழை அறிந்தும் போ என்று சொன்னால் போய்விடும் அறிந்தும் இவையெல்லாம் அப்பனே இதனால் நிச்சயம் ஒரு பெண்மணியும் கூட!!! 

ஆனாலும் அப்பனே அறிந்தும் கூட ஆனாலும் சீதா தேவியோ !!! இறைவனுடைய குழந்தை!!!

ஆனாலும் அப்பனே இறைவனின் குழந்தைக்கே இவ்வாறு நிலைமை என்றால் அப்பனே நிச்சயம் பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே!!!!

அப்பனே இதுதான் விதி!!!!

அதனால் அப்பனே இதை யாங்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே நன் முறைகளாகவே அப்பனே!!!!!

அதாவது மனிதன் அதாவது எதை என்று புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!! பின் புரிந்து வாழ கற்றுக் கொண்டால் அப்பனே எளிதில் அனைத்தும் நிறைவேறும் என்பேன் அப்பனே!!!!

இறைவனுடைய குழந்தையாக இருந்தாலும் அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் அப்பனே கவலைகள் அதாவது இப் புவிதன்னில் பிறந்து விட்டால்!!!!!!

ஆனாலும் அப்பனே நலன்கள் அப்பனே பின் நிச்சயம்......பின். அயோத்தியில் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஞானிகளும் ரிஷிகளும் அப்பனே மறைமுகமாக வந்து அப்பனே பல  பல பல வழிகளிலும் கூட அப்பனே இதை அதை என்றெல்லாம் அப்பனே யான் இங்கு பின் எதையும் குறிப்பிடவில்லை அப்பனே!!! 

இப்படி வாழ்ந்தால் அப்பனே நிச்சயம் பின் உலகத்தில் ஜெயிக்கலாம் வரலாறு பேசுமப்பா !!

அவ்வளவுதான் அப்பனே!!! 

மற்றவை எல்லாம் அவை இவை எதை என்றெல்லாம் யான் இங்கு தெரிவிக்கவில்லை!!! அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!!!

நீதி நேர்மை தர்மம் அப்பனே இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே உழைப்பு எதை என்றும் புரிய புரிய அப்பனே இவைதன் புரிந்து கொள்ளவே இறைவன் அப்பனே மனிதனாக பிறந்து பல வழிகளிலும் கூட அப்பனே இன்னல்கள் பட்டுப்பட்டு அப்பனே வரலாற்றை அறிந்தும் அறிந்தும் கூட!!!

இதனால் அப்பனே பல ரிஷிமார்களும் குருமார்களும் கூட அப்பனே நிச்சயம் அயோத்தி க்கு வருவார்களப்பா!!!!

அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இன்னும் இன்னும் அப்பனே

வளிமண்டலத்தில் பின் அப்பனே பின் நெருப்பு பிழம்பாகவே அப்பனே கிரகம்!!! அனைவருக்கும் தெரிந்ததே!!!! 

ஆனாலும் அப்பனே யாங்கள் ஏன் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது சூரியனும் கூட எப்படி என்று நீங்கள் அறிவீர்கள் அப்பனே

அதாவது அப்பனே பின் எரிந்து கொண்டே இருக்கும் அப்பனே!!! அவைதன் ஒளி அப்பனே அனைத்தும் அப்பனே அதாவது நாம் வசிக்கின்றோமே இப்பொழுது அப்பனே இங்கு படுமப்பா!!!!! 

அப்பனே எதை என்றும் கூட அதை தன் ஈர்க்கும் சக்தி அப்படியே வைத்து கொண்டால் நலன்கள் அப்பனே மிக்க மிக்க.... அவைதானப்பா தீபங்கள்!!!!!    என்பதெல்லாம் அப்பனே!!! 

(சூரியனிடம் இருந்து வரும் ஒளியின் சக்தியை வீட்டில் ஏற்றும் தீபங்கள் ஈர்த்து சக்தியை கூட்டும்)

தீபங்கள் ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே நெருப்பிற்கு அவ்வளவு சக்திகளப்பா!!!!

இதனால் தான் தீபம் அப்பனே அறிந்தும் கூட ஏற்றுங்கள் ஏற்றுங்கள் என்றெல்லாம்!!!!

ஆனாலும் அப்பனே இதன் இன்னும் தத்துவங்களை கூட யான் வரும் காலங்களில் விளக்குவேன் அப்பனே!!!!! 

ஏனென்றால் சிறிது சிறிதாக பின் விளக்கம் அளித்தால் தான் அப்பனே அனைத்தும் புரியும் என்பேன் அப்பனே!!!

அனைத்தும் ஒரே பின் அப்பனே எதை என்று கூட வரிசையில் சொல்லி விட்டால் புத்திகள் மங்கிபோகும் என்பேன் அப்பனே!!!!

இதனால் அப்பனே தீபம் ஏற்றினால் அவ் ஒளியானது அப்பனே அதாவது நெருப்பும் நெருப்பும் அப்பனே சேர்ந்தால் அப்பனே ஒரு ஒளி எதிரொலிக்குமப்பா!!!!!! 

அப்பா!!!!!! அது தான் அப்பா பின் எதை என்று அறிய அறிய ஆன்மா என்று வைத்துக் கொள்ளலாம் அப்பனே!!!

அது பின் நிச்சயம் அப்பனே அதாவது.  உள்ளம் பெரும் கோயில்.. என்கின்றார்களே அப்பனே அது உள்ளத்தில் புகுமப்பா அப்பொழுது நல் எண்ணங்கள் வரும் அப்பனே!!!! அறிந்தும் கூட

அவை மட்டும் இல்லாமல் அப்பனே ஒளி ரூபமாகவே இறைவனை தரிசிக்கலாம் என்றெல்லாம் அப்பனே இன்னும் சொல்வேன் அப்பனே

ஏனென்றால் அவ் அவ் திருத்தலங்களுக்கு சென்றால் தான் அப்பனே அங்கு செப்பினால் தான் அப்பனே பின் எதை என்று அறிய அறிய எவரையும்!!!...........(கர்மா அண்டாது) 

பின் இன்னும் புண்ணியங்கள் அப்பனே நலன்களாகவே!!!!! 

அதை படிப்பவருக்கும் அப்பனே எவை என்று கூட ஓதுபவருக்கும் அப்பனே நிச்சயம்  அவ் அவ் திருத்தலங்களில் கூட படித்தால் அப்பனே அதனால் தான் அப்பனே அவ் அவ் திருத்தலங்களுக்கு செல்ல சொல்லி அப்பனே நீங்கள் செல்லா விடிலும் எதை என்று அறிய அறிய எவை என்று கூட பின் நல்விதமாகவே  இவந்தனை அனுப்பி 

(அகத்தியர் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்களை திருத்தலங்களுக்கு அனுப்பி) 

அப்பனே அதன் மூலம் புண்ணியங்களை உங்களுக்கும் கூட சேர்த்து வைத்து கொண்டிருக்கின்றேன் அப்பனே

இதனால் அப்பனே பின் அனைத்திற்கும் மேலானது அப்பனே எவை என்று கூற அன்பு என்பதை கூட!!! 

அதனால் தான் அப்பனே அனைவருக்குமே நல்லதாகட்டும் என்பதே சித்தர்களின் தீர்ப்பு!!!! 

அதனால் தான் அப்பனே 

கை விடுவதும் இல்லை அப்பனே உங்களையும் கூட

இதனால் தான் அப்பனே இதனால் அன்றைய தினத்தில் தீபம் ஏற்றுங்கள் அப்பனே!!!! 

22/1/2024 அயோத்தி ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி பிராண பிரதிஷ்டை தினம்) 

நிச்சயம் அப்பனே அதாவது சுந்தரகாண்டத்தையும் பாராயணம் செய்யுங்கள் அப்பனே நலங்களாகவே!!!

பின் ராம ஜெபத்தையும்  கூட அப்பனே ஸ்ரீ ராம ஜெயம் என்றெல்லாம் கூட அப்பனே கூறுங்கள் அப்பனே இப்படி கூறிக் கொண்டு வந்தால் அப்பனே அனுமானுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு எதை என்றும் அறிய அறிய அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே ராமன் பிறந்து விட்டான் அப்பனே !!

ஆனாலும் சனியவன் கூட பின் அறிந்து கூட ஒரு ஜென்மத்தில் என்னவென்பது என்பதை கூட ஆனாலும் பின் பிறந்து விட்டானே அறிந்தும் கூட எவை என்று அறிய அறிய பின்னாலே சனியவனும் வந்துவிட்டான் அப்பனே!! அறிந்தும் கூட!!! 

நிச்சயம் அதாவது நீதி நேர்மை தர்மம் என்றெல்லாம்  அவ்வாறு தான் நிச்சயம் சனியவன் கூட எதை என்று நிரூபிக்க கஷ்டங்கள் கொடுக்கவே!!!! 

ஆனாலும் இறைவன் கூட அப்படியே ஆகட்டும்!!! 

நிச்சயம் உன்னால் முடிந்ததை நீ பார்!!! 

என்னால் முடிந்ததை யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று இறைவனும் கூட சரியாகவே!!! 

ஏனென்றால் பின் சனியவனும் தயங்கி!!!!!....... 

இறைவா!!!!! நீயே இது போல் சொன்னால் எப்படி???????? 

ஏனென்றால் எந்தனுக்கு இட்ட கட்டளை!!!! 

அது போல் நீதி  தர்மத்தை எதை என்று அறிய அறிய எவை என்று கூட சரியாகவே நீதிபதியாக இருந்து யான் அறிந்தும் கூட அனைத்தும்!!!!!......எந்தனுக்கு இவ்வாறு தான் விதிக்கப்பட்டுள்ளது என்றெல்லாம்!!!! 

(ஒவ்வொரு கிரகங்களுக்கும் இறைவன் இவ்வாறு தான் செயல் பட வேண்டும் என்ற கட்டளையின் படி சனி பகவானுக்கும் நீதிபதியாக இருந்து செயல் பட வேண்டும் என்ற விதி) 

சரி பார்ப்போம் என்று பின் அவதாரமாகவே அறிந்தும் கூட!!! 

இவைதன் கூட விளக்கமாக எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!! 

மூலன் சொன்னான் அப்பனே (திருமூலர்) 

அவந்தன் முட்டாள் இல்லை அப்பனே!!! 

அறிந்தும் கூட அப்பனே இறைவன் ஒன்றே என்று!!! 

அவையெல்லாம் கூட வரும் காலத்தில் நிரூபிப்பேன் அப்பனே!!! 

ஆனால் இப்பொழுது சொன்னாலும் அவை பொய் இவை பொய் என்றெல்லாம் என்று சொல்வதற்கு என் பக்தர்களே தயாராக இருக்கின்றார்களப்பா!!!! 

அதனால் தான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட!!! 

அதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே இறைவன் அருகில் இருந்தும் அப்பனே ஆனாலும் பின் ராமனும் எதை என்றும் அறிய அறிய பின் கிரகம் தான் கிரகங்கள் தான் நிச்சயம் ஜெயிக்க வேண்டும் என்று!!!! 

ஏனென்றால் மனிதனுக்கு இதை தெரிவிக்க வேண்டும் அறிந்தும் அறிந்தும் கூட!!!  எதை என்று அறிய அறிய இதனால் கிரகத்தை வெற்றி கொள்ள நிச்சயம் அறிந்தும் கூட நீதி நேர்மை தர்மம்... இவைதனை கடைபிடித்தால் தான் கிரகங்களை கூட வெற்றி கொள்ள முடியும்!!! 

அப்படி நிச்சயம் பின் செயல்படாவிடில் பின் தோல்விகளில் தான் முடியும் என்பவையெல்லாம்!! 

நிச்சயம் ஏற்றங்கள் மாற்றங்கள் என்பவையெல்லாம்!!!!  இதனால்தான் போராட்டமே நடந்தது என்பேன் அப்பனே  சனிகிரகம் எவை என்று அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாத அளவிற்கும் கூட!!! 

அதனால் அப்பனே சனியின் தாக்கம் எதை என்று அறிய அறிய எவை என்று பின் தானும் அருகிலேயே இருந்து

பல இன்னல்களையும் கூட எதை என்று அறிய அறிய 

ஆனால் இறைவன் விட வில்லை அப்பனே எதை என்று கூட!!! 

கடைசியில் அப்பனே நீங்கள் அனைத்தும் உணர்ந்ததே அப்பனே!!! 

புதுமையான விஷயங்கள் சொல்வேன் அப்பனே!!! 

பழைய விஷயங்கள் தேவையில்லை 

இதனால் அப்பனே தீபத்தின் மகிமை அப்பனே எதை என்றும் அறிய அறிய ஏன்?  அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பல ஹோமங்கள் செய்கின்றார்கள் அப்பனே!!!! 


ஆனாலும் தீபம் ஏற்றுகின்றார்களே அப்பனே ஏன் எதற்கு என்றெல்லாம் அப்பனே சிறிது யோசித்தாலே அப்பனே பலங்கள்!!!!  அறிந்தும் கூட !!!

இதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட அதே போல் அப்பனே பின் ராம நாமமே எனும் துவங்கும் பாடலை கூட நிச்சயம் பாடிக்கொண்டே இருங்கள்!! அப்பனே!!!

(ராம நாமமே நீ துதி மனமே சீதாராமனை நீ துதி மனமே ஷேமமுறவே நீ தினமே 

 வாதனைகள் பல சோதனைகள் பல யாவுமே நாதனை நினைந்திடில் நாடுமோ ரகுநாத்தை நினைந்திடில் நாடுமோ??? பிரபு நாதனை நினைந்திடில் நாடுமோ ?? பூமியை பொன்னை பூவையரையும் நீ பூஜித்து பின் புண்ணாகாமலே 

ராம நாமமே நீ துதி மனமே சீதாராமனை நீ துதி மனமே!!!)

அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் பஞ்சதீபம் அறிந்தும் கூட ஏன் எதற்கு இவையெல்லாம் ஏற்றுகின்றீர்கள் என்பதை எல்லாம் அப்பனே இப்பொழுது அனைவருமே சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே பின் இவ்வாறு ஏற்றுங்கள் அவ்வாறு ஏற்றுங்கள் என்று அப்பனே

ஆனால் உண்மையை அப்பனே விஞ்ஞானபூர்வமாகவே நிரூபிக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே இன்னும் இன்னும் பல வாக்குகளிலும் கூட.

அதனால் இன்னும் அப்பனே இவை அறிந்தும் அறிந்தும் அதன் ( கும்பாபிஷேகத்திற்கு முன்) முன்னர் இருந்தே அப்பனே தீபங்கள் பின் அறிந்தும் கூட அதனால் பின்னர் ஒரு ஐந்து நாட்கள் வரை அப்பனே நிச்சயம் அன்னத்தை அளியுங்கள் பின் அதாவது பின் இப்படி வாழ்ந்தால் தான் வெற்றி கிடைக்கும் நிச்சயம் தர்மம் நீதி அறிந்தும் பொய் சொல்லாமை இவையெல்லாம் இருந்தால்தான் அதாவது நிச்சயம் பின் வெற்றி காண முடியும் என்றெல்லாம் யோசித்து பின் நிச்சயம் சுந்தரகாண்டத்தை பின் பாராயணம் செய்து வாருங்கள்!!! 

நிச்சயம் என்றெல்லாம் எடுத்துக் கூறி அன்னத்தையும் ஈய்ந்து நிச்சயம் பல வழிகளிலும் மக்களுக்கு உண்மை நிலையை தெரிவியுங்கள் போதுமானது அப்பனே!!!!

இதில் எதையும் சம்பந்த படுத்த தேவையில்லை அப்பனே

இதனால் அப்பனே அறிந்தும் கூட இப்படி இருந்தால் தான் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே கிருஷ்ணன் இன்னும் அப்பனே பல வழிகளிலும் கூட உண்மைகள் பல வகையிலும் கூட இத்தனை தெய்வங்கள் எதற்கு என்பவை எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன் அப்பனே பொறுத்திருந்தால் அப்பனே

ஏனென்றால் இறைவன் ஒவ்வொரு எதை என்று அறிய அறிய ஒவ்வொரு ரூபமாக வந்து வந்து இப்படி இருந்தால் தான் வெற்றி!!! 

இவ்வுலகத்தில் ஜெயிக்க முடியும்  என்பதையெல்லாம் நிரூபித்தான் அப்பனே!!! 

நிச்சயம் அப்பனே இவ்வுலகத்தில் அறிந்தும் அறிந்தும் கூட இன்னும் சொல்வோம் அப்பனே நலன்களாக நலன்களாக வெற்றிகள் அப்பனே உண்டு 

அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday 22 January 2024

சித்தன் அருள் - 1561 - அயோத்தியில் ராமர் அமர்கிறார்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று மதியம் 12.20 மணி முகூர்த்தத்தில், அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை நடைபெற உள்ளது.

அந்த நேரத்தில் புகைப்படத்தில் உள்ள ஸ்லோகத்தை 108 முறை ஜெபித்து, ராமருக்கு அர்ப்பணியுங்கள்.

ஓம் ஸ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே!
சஹஸ்ர நாம தத்துல்யம் ராமநாம வரானனே!
 

 இந்துக்களின் 500 வருடத்திற்கும் மேற்பட்ட அவா இன்று நிறைவேறியது. ராமருக்காக போராடி உயிர் துறந்த அத்தனை ஆத்மாக்களும், மறுபடியும் பிறந்து, ராம ராஜ்ஜியத்தில் வாழ்ந்த பின்னர் மோக்ஷத்தை அடைய வேண்டிக்கொள்வோம்!  ஜெய் ஸ்ரீராம்!
[அடியவர் வீட்டில்]



ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 19 January 2024

சித்தன் அருள் - 1560 - அயோத்தியில் ராமர் சீதை கோவில் - அகத்தியப்பெருமான் உத்தரவு!!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அயோத்தியில், ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயருக்கு அமைகிற கோவில், 22.01.2024, திங்கட்கிழமை மதியம் பிராணாப் பிரதிஷ்டை நம் பாரத பிரதமர், ராம பக்தர்கள் முன்னிலையில் நடை பெற உள்ளது. அகத்திய பெருமானிடம் அவர் அடியவர்கள் அன்று என்ன செய்ய வேண்டும் என நாடியில் கேட்ட பொழுது, அவர் தந்த உத்தரவை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்!

  1. ராமர் மிகுந்த விருப்பத்தின் பேரில், அங்கு சென்று அமர்கிறார்.
  2. சித்தர்களின் விருப்பமும் அது தான்.
  3. நவகிரகங்களின் ஆட்டத்தை அடக்க அவர் தீர்மானித்துள்ளார். உங்களால் முடிந்ததை நீங்கள் செய்யுங்கள், மற்றவை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது அவர் எண்ணம்.
  4. ராமரின்  இந்த எண்ணத்தால் ஆஞ்சநேயருக்கு மிகுந்த சந்தோஷமாம்.
  5. முகூர்த்த வேளைக்கு முன் ஒவ்வொரு அடியவர் வீட்டினுள்ளும் பஞ்ச தீபம்/பஞ்ச முக தீபம் ஏற்றவும். நாம் ஏற்றுகிற அக்னியானது, அயோத்தியில் எழுப்பப்படும், அக்னிஹோத்திரத்தில்/ஹோமத்தில் கலந்து பாரத தேசாத்திற்கு மிகுந்த சக்தியை உருவாக்கி பாதுகாக்கும்.
  6. அந்த முகூர்த்த நேரத்தில், குறைந்தது 108 முறையேனும் ராம நாமத்தை ஜெபிக்கவும்.
  7. அன்று மாலை அஸ்தமனத்துக்கு முன் வீட்டின் வெளியே, அதே போல் ஐந்து முக/ஐந்து தீபம் ஏற்றி வைக்க வேண்டும். (கார்த்திகைக்கு விளக்கேற்றுவது போல்).
  8. அன்றைய தினம் முடிந்த வரை இயலாதவர்களுக்கு அன்னம் அளித்து, குழந்தைகளுக்கு, இனிப்பு கொடுக்க வேண்டும்.
  9. தொடர்ந்து ஐந்து தினங்களுக்கு அன்னம் அளிக்க வேண்டும்.
  10. அடியவர்கள் செய்கிற அனைத்து நல்ல விஷயங்களையும் (விளக்கேற்றுவது, அன்னம் பாலிப்பது போன்றவை) ராமர் அயோத்தியில் அமர்ந்து கொண்டு கவனித்து, அனைவரையும் ஆசீர்வதிப்பார்.
  11. தாங்கள் யார் என்று உணர்ந்தும், ராமரும் சீதையும்,  தங்கள் வாழ்வில் நடந்த விஷயங்களை அதன் படியே ஏற்றுக் கொண்டு வாழ்ந்து சென்றது, மனித குலத்துக்கே பல உயர்ந்த விஷயங்களை உணர்த்தினார்கள்.
  12. பாரத கண்டத்தில் 500 வருடங்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தை, வருத்தத்தை யாங்கள் இறையிடம் வேண்டி மாற்றச் சொல்லி, அதன் படியே அவரும் அருள, அந்த புதிய வரலாற்றில், எம் சேய்களுக்கு, இருக்கும் இடத்திலிருந்து பங்கு பெறும் வாய்ப்பை யாங்களே உருவாக்கியுள்ளோம். வாய்ப்பை கை பற்றி கொள்க.
  13. சுந்தர காண்டத்தை தினமும் ஓதி வருக!
  14. ஆசிகள்!, ஆசிகள்!, ஆசிகள்!
அனைவரும், அகத்தியப்பெருமானின் உத்தரவை உணர்ந்து, அன்றைய தினம் செயல் பட்டு, ராமபிரான், தாய் சீதையின் கனிவான ஆசீர்வாதங்களை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 18 January 2024

சித்தன் அருள் - 1559 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


இன்றும் சித்தர்களை வருத்தப்பட வைப்பது மனிதனின் அசைவம் உண்ணும் ஆசை, பிற மனிதர்கள்/பொருட்கள் மீதான பொறாமை/எண்ணம், தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற மனிதனின் மனநிலை, தன் அகம்பாவத்தால், யோசிக்க முனையாத மனத்தால், தன் வாழ்க்கையை மிக மிக சிக்கலாகிக் கொண்ட நடவடிக்கைகள். இவை அத்தனையும் மிக கொடுமையான கர்மாவை சேர்க்கும் என்று தெரிந்தும், தொடர்ந்து செய்கிறார்கள். என்று ஒருவன், தன் வலியை உணர்கிறானோ, அன்று முதல் அவன் திருந்துவதற்கு வாய்ப்பிருக்கிறது. சரியாக புரிந்து கொள், வாய்ப்பிருக்கிறது. எளிய வாழ்க்கையை போதிப்பதே சித்த மார்க்கம். அப்படி வாழத்தொடங்கிவிட்டால். இருப்பதெல்லாம் அதிகமாக தோன்றத் தொடங்கும். அப்பொழுது பிறரை பற்றிய எண்ணம் வந்தால், கர்மா நன்றாக இருந்தால், அதிகமானதை தானம் செய்ய முடியும். அங்கு, புண்ணிய கார்யம் தொடங்குகிறது. நல்ல எண்ணம் எங்கும் பரவ அவன் காரணமாகிறான். அதனால் தான் திருந்துவதும், தொடங்குவதும் ஒருவன் உள்ளிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்கிறோம். அப்படி ஆரம்பித்துவிட்டால், அவன் மனம், எண்ணங்கள், செயல்கள், உடல் எல்லாம் ஆரோக்கியமாக இருக்கும். பஞ்ச பூதங்களின் எந்த பாதிப்பும், அவன் உடல் அளவில் தாங்குவது எப்படி என்று படிக்கத் தொடங்கிவிடுவான். பின்னர் அவன் வாழ்க்கையே, இயற்கையாகிவிடும். இந்த இயற்கை தன்மையே அவனுக்கு, அவனுள் இருக்கும் இறைவனை அறிமுகப்படுத்தி வைக்கும். அதன் பின்னர் அவன் சுத்தமாகிவிடுவதால், யாருக்காக அவன் வேண்டிக்கொண்டாலும், அது உடனேயே அவர்களுக்கு கைவல்யமாகிவிடும்!

அகத்தியப்பெருமான் அருள்வாக்கு!
சித்தன் அருள்!

Wednesday 17 January 2024

சித்தன் அருள் - 1558 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் -2 !






ஓதிமலை வாக்கு பாகம் 2:- 

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்திற்கு பின் எதை என்று அறிய அறிய 

இதனையும் அப்பனே பின் பாடிவிட்டார்கள் அப்பனே

( இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே
இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகின்றார் ஞானத்தங்கமே
அவர் ஏதும் அறியாரடி ஞானத்தங்கமே )

(திருவருட்செல்வர் எனும் திரைகாவியத்தில் கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை கூட குருநாதர் தன் வாக்கில் குறிப்பிடுகின்றார்) 

யான் என்ன சொல்வது???? எதை என்று அறிய அறிய அப்பனே 

அதனால் இருக்கும் இடத்தை எதை என்று அறிய அறிய அப்பனே எத்தனையோ திருத்தலங்கள் அப்பனே எதை என்று அறிய அறிய எவை என்றும் புரிய புரிய சக்திகள் மிகுந்த அப்பனே

ஆனால் புதிது புதிதாக உருவாக்குகின்றானே புத்தி கெட்ட மனிதன்!!!!!

அப்பொழுதே நீங்கள் பார்த்துக் கொண்டீர்களா!!!!

மனிதனுக்கு புத்தி எங்கு போய்விட்டது என்று  கூட அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே 

அதனால் அப்பனே பின் இவர்கள் திருந்த மாட்டார்கள் என்று அப்பனே யாங்களே வந்து அப்பனே பழமையான திருத்தலங்கள் எல்லாம் அப்பனே பின் சக்திகளை ஊட்டி ஊட்டி அப்பனே!!! 

யார் மூலம் செய்ய வேண்டும் என்பதையெல்லாம் எண்ணி எண்ணி அப்பனே செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே !!!!

அதனால் யாங்கள் புது திருத்தலத்திற்கு எப்படி வருவோமப்பா??????

எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பொழுது யோசித்து கொள்ளுங்கள் அப்பனே

ஏனப்பா????? 

எதை என்று கூட பின் திருத்தலங்களை கட்டி விடுவீர்கள் ஆனால் அப்பனே அதனுடன் கஷ்டங்களும் கட்டி விடுகின்றீர்களே அப்பனே!!!

எதை என்றும் புரிய புரிய ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்று எவரேனும் சிந்தித்தது உண்டா??????

அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் அப்பனே பின் அப்போதெல்லாம் மனதிலேயே திருத்தலம் எழுப்புவானப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே அப்பொழுது எதை என்று அறிய அறிய பின் எதை என்றும் புரிந்தும் கூட அப்பனே பின் பல பூதங்களும் இன்னும் நல் எவை என்றும் புரிந்தும் புரிந்தும் உதவிகள் செய்து அப்படியே எதை என்று கூட அப்பனே சக்திகள் ஊட்டி ஊட்டி இன்னும் இன்னும் அப்பனே உணர்த்துகின்றேன்!!!!! பன்மடங்கு அப்பனே மனிதர்களுக்கு!!!!!

இப்பொழுது எதை என்று அறிய அறிய அப்பனே இதை புரிந்து கொண்டால் நிச்சயம் வெற்றியப்பா!!! 

பின் புரிந்து கொள்ளாவிடில் தோல்வியப்பா!!!

அப்பனே அனைத்தும் வந்துவிட வேண்டுமாம் !?!?!?!?!?!?!?

அப்பனே மனிதனுக்கு!!! இருக்கும் இடத்திலேயே இருந்து!!!!!!!!!

அப்பனே நிச்சயம் வராதப்பா!!!!

பின் எவை என்று அறிய அறிய அப்பனே!!!!! சுற்றி திரிய வேண்டும் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே வேண்டும் வேண்டும் என்று அப்பனே எதை என்று அறிய அறிய பணத்தை வேண்டுமென்றால் அப்பனே  எங்கெங்கயோ சென்று சென்று சம்பாதிக்கின்றான் என்பேன் அப்பனே!!!!!

ஆனால் இறை பலத்தைக் கூட இப்படித்தான் சம்பாதிக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

பின் அமைதியாக இருந்துவிட்டால் அப்பனே அதாவது  பின் நீயும் ஓரிடத்தில் அமைதியாக வந்து பின் தொழில் வேண்டும் பின் தொழில் வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் அப்பனே!!!!.............. 

அப்பனே எண்ணி கொண்டாயா????????? 

இப்படித்தானப்பா!!!! பல பேர்கள் அப்பனே இருக்கும் இடத்திலிருந்தே நாராயணா, நாராயணா கோவிந்தா கோவிந்தா இன்னும் நமச்சிவாயா இன்னும் முருகா கணபதியே பின் பராசக்தியே என்றெல்லாம் அப்பனே எவை என்றும் அறிய அறிய

எப்படியப்பா ????

அதனால்தான் அப்பனே மனிதனுக்கு புத்திகள் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதனுக்கு  புத்திகள் எப்படி இருக்கின்றது என்று சொன்னால் அப்பனே போட்டி பொறாமை அப்பனே அதாவது யானே பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே

என்னையும் வணங்குகின்றான் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பொய் சொல்லியும் திரிகின்றான் அப்பனே...

அப்பொழுது எண்ணிக் கொள்ளுங்கள்... அகத்தியன் இல்லை என்று நினைத்து விட்டார்கள் அப்பனே எதை என்று கூட அனைத்தும் செய்கின்றோம் அனைத்தும் அகத்தியன் அதாவது யான் என்றே சொல்லிக் கொண்டிருக்கின்றான் ஒருவன் அப்பனே!!!!

விழுகின்றது  அப்பனே (அடி) எதை என்று அறிய அறிய சொல்ல மாட்டேன் அப்பனே செய்து காண்பிக்கின்றேன் என்பேன் அப்பனே

யான் எப்பொழுதும் எதை என்று அறிய அறிய பின் பார்த்துக் கொள்கின்றேன் என்றால் அப்பனே அதற்கும் பல அர்த்தங்கள் உண்டு என்பேன் அப்பனே!!!!

அறிந்தும் கூட அப்பனே செய்து முடிப்பேன் அப்பனே

எவை என்றும் அறிய அறிய விதியினை கூட வெல்ல முடியும் அப்பனே எவை என்று கூட மனிதனால் என்பேன் அப்பனே!!!!

மனிதனுக்கு அனைத்து சக்திகளும் உள்ளது என்பேன் அப்பனே

ஆனாலும் சரியாகப் பயன்படுத்த அப்பனே பின் எவை என்றும் புரிய புரிய சரியாக பயன்படுத்தி வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை என்பேன் அப்பனே சரியாக பயன்படுத்தி பின் நிச்சயம் வாழ்ந்தோர் என்றால் ஞானியாகி விடலாம்  என்பேன் அப்பனே... 

ஆனால் புத்தி கெட்ட மனிதனுக்கு எவை என்றும் அறிய அப்பனே பின் கீழ் நோக்கி அப்பனே எவை என்று அறிய அறிய பின் எதை என்று கூட நினைவில் தான் வருகின்றது என்பேன் அப்பனே

அப்பொழுது அவந்தன் பின் கீழ் நோக்கி அதாவது கீழானவனே என்பேன் அப்பனே

எப்பொழுது எவை என்று அறிய அறிய ஒருவனுக்கு மேலான எண்ணங்கள் எழுகின்றதோ அவன் மேலானவன் என்பேன் அப்பனே அப்பொழுது பின் மேலே சென்று அதாவது மேலே சென்று எவை என்று அறிய அறிய மேலே செல்வது யான் எதை என்று அறிய அறிய அப்பனே சொர்க்கத்துக்கு இங்கு சொல்லவில்லை அப்பனே

பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே முதுகில் எதை என்றும் அறிய அறிய அப்பனே கீழிருந்து அப்பனே எதை என்று அறிய அறிய எழும்புமப்பா!!!

(குண்டலினி சக்தி) பின் அதாவது பாம்பின் போல் அப்பனே பரிசுத்தமான எவை என்று கூட ஒரு வளையம் இருக்கும் அப்பா அதைதன் மேல் நோக்கி எழும் பொழுது அனைத்து விஷயங்களும் தெரியும் அப்பா!!!

இதுதான் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே

பின்பு கீழ் நோக்கி எண்ணங்கள் இருந்தால் அப்பனே அது கீழாகவே அப்பனே அதாவது பின் எதை என்று கூட கால்களில் வந்து பின் தங்கிவிடும் அப்பா

அப்பனே முன்னேற்றங்கள் என்பதே இருக்காதப்பா!!!

எதை என்றும் அறிய அதனால்தான் அப்பனே எண்ணங்கள் எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் புரிய புரிய எண்ணம் போல வாழ்க்கை என்று கூட அப்பனே சொல்லிவிட்டார்கள் அப்பனே

ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே புதிதாக ஒன்றுமில்லை அறிந்தும் அறிந்தும் கூட

இதனால் அப்பனே பல மாற்றங்கள் அப்பனே!!!!

கந்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே இதில் கூட எதை என்றும் அறிய அறிய பின் கந்தலாக எவை என்றும் புரிய எவை என்றும் அறியாமல் இருந்தாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய யான் இருக்கின்றேன் என்பவை எல்லாம் புரிந்து புரிந்து அப்பனே கந்தன் எவை என்று அறிய அறிய அனைவருக்குமே அருள் ஆசிகள் கொடுத்து கொண்டே இருக்கின்றான்.

அதை சரியாகவே பயன்படுத்தவில்லை என்பேன். அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் கிரகங்களைப் பற்றியும் எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பனே

எப்படியப்பா ஒவ்வொரு மனிதனை கூட கிரகங்கள் வந்து தாக்குகின்றது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே 

பின் எவை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பல இடத்தில் எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே சரியாகவே அப்பனே ஒளி இங்கு மூளையில் எவை என்றும் புரிய புரிய எதை என்று கூட படுகின்ற பொழுது அப்பனே..... இதன் அர்த்தத்தையும் கூட எவை என்று புரிய புரிய அப்பனே சரியாகவே பின் நேர்கோடாக இடு!!!!! போதுமானது!!!! மற்றவை எல்லாம் தெரிந்து விடுவாய் எதை என்று அறிய அறிய அப்பனே!!!!

அறிவின் கொளுந்தாக இரு அப்பனே!!! 

அறிவின் பின் சிறிய அலையாக இருந்து விடாதே!!!!!! 

சொல்லி விட்டேன் அப்பனே எவை என்றும் அறிந்தும் கூட!!!!! 

இதனால் தான் அப்பனே பின் ஞானிகள் எங்கெல்லாம்?? சென்றால்!!
எதை என்று கூட பின் இவ் உடம்பை விட்டு விட்டு இன்னும் வாழ்ந்து இன்னும் மனிதனுக்கு நன்மைகள் செய்து கொண்டிருக்கலாம் என்றெல்லாம் யோசித்து யோசித்து செய்தார்களப்பா

அப்பனே இதை செய்யுங்கள் முதலில் அப்பனே.... நன் முறைகளாக ஆகும் கர்மத்தை அப்பனே ஒழிப்பதற்கு அதனால் அப்பனே ஒவ்வொரு மனிதனும் கூட அப்பனே கர்மத்தை முதுகில் சுமந்து கொண்டு ஓடுகின்றானப்பா ஓடுகின்றானப்பா!!!

ஆனால் தேயவில்லையே (கர்மாக்கள்) 

கால்கள் தான் தேய்ந்து தேய்ந்து எதை என்று அறிய அறிய என்ன லாபம்??????

அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே மலைகளில் இருக்கின்றார்கள் எதை என்று அறிய அறிய அப்பனே சித்தன் அப்பனே எவை என்று கூற எதை என்று அறிய அறிய

அதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே பின் அதாவது மனிதன் திரிந்து  எவை என்று அறிய அப்பனே அப்பனே பொய் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே.... சித்தர்களை வணங்கினால் ஒன்றும் நடக்கப் போவதில்லையாம்!?!?!?!?!?!?! 

அப்பனே பின் எதை என்று கூட பின் 

"""""""முருகனே  சித்தனப்பா!!!

"""""""பிள்ளையோனே சித்தனப்பா!!!!!!! 

ஏன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று கூட """""""நாராயணனே ஒரு சித்தனப்பா!!!!!!!! 

இவர்களெல்லாம் மலை மீது தான் இருக்கின்றார்கள் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே. 

ஆனால் அப்பனே ஒன்றே ஒன்று என்று இரு!!! 

எதை என்றும் புரியாமல் கூட அப்பனே புரிந்து விட்டால் அப்பனே எவை என்று கூட நன்றாகிவிடும் என்பேன் அப்பனே!!!! இதை எதை என்று அறிய அறிய விளக்கவும் இருக்கின்றேன் அப்பனே இறுதியில் அப்பனே 

இப்பொழுது யான் சொல்லிக் கொண்டே போனால் அப்பனே பின் எவை என்று அறிய அறிய நீங்களும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய பின் இப்படியா ??? அப்படியா???? என்றெல்லாம் மூளையை கசக்கி எவை உண்மை ? எவை என்று அறியாமல் திரிந்து கொண்டு!!!......

இதனால் அப்பனே பின் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே தெரியாமல் வாழ எவை என்று அறிய அறிய அப்பனே இதனால் தான் அப்பனே மனிதனுக்கு வந்ததெல்லாம் அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனைப் பற்றியும் சொல்கின்றேன் அப்பனே 

இளம் வயதில் அனைத்து தவறுகளையும் செய்து விட்டு அப்பனே பிள்ளைகளையும் பெற்றுக் கொண்டு அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய நிம்மதியாக பணத்தையும் அப்பனே பின் எவை என்று கூட சேமித்து விட்டு நோய்களைப் பெற்றுக் கொண்டு அப்பனே கடைசியில் பின் ஏதாவது பின் எழுதி விடலாமே என்று அப்பனே மனிதன் எழுதுவான் என்பேன் அப்பனே அவனுக்கு வந்ததெல்லாம் எழுதுவான் என்பேன் அப்பனே அதனால்தான் அப்பனே தவறாகிவிட்டது

எதை என்று கூட இது மனிதனுக்கு பின் எவ்வாறு என்பதையும் கூட இவ்வாறு நடந்தால் சரியாகி விடும் என்பதை கூட அப்பனே... இதனால் எழுதினானே அவன் கர்மமும் இவனை வந்தடையும் பொழுது அப்பனே இவந்தனும் அதேபோலத்தான் ஆகின்றான் என்பேன் அப்பனே!!!! 

அதனால் எவை என்றும் அறிய அறிய. அப்பனே இன்னும் அப்பனே நால்வர் எழுதியுள்ளதை படியுங்கள் அப்பனே!!!

(சைவ குரவர்கள் நான்கு பேர் அப்பர் சுந்தரர் சம்மந்தர் மாணிக்கவாசகர் தேவாரம் திருவாசகம் பன்னிரு திருமுறைகள்)

எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே பின் ஓதவில்லையே!!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே அப்பொழுது எப்படியப்பா ??? தித்திக்கும் ஞானங்கள்???? 

அப்பனே இன்னும் தேவாரம் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதையெல்லாம் கற்று உணர்ந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று புரிய புரிய யானும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே வயதான காலத்திலே பக்தி வருகின்றதப்பா எதை என்றும் அறிய அறிய அதற்குள்ளே உயிரும் பின் பிடுங்கி விடுகின்றானப்பா இறைவன்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய மீண்டும் எவை என்று அறிய அறிய பின் அதற்கு எவை என்று கூட உடம்பு தேவை பின் மீண்டும் மீண்டும் அப்பனே அதனால்தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே உண்மை நிலைகளை அப்பனே

பின் உணர்ந்து கொள்ளுங்கள் அப்பனே பின் காந்த சக்தியை எவ்வாறு ஈர்க்கலாம் என்பதை கூட வரும் வரும் வாக்குகளில் சொல்கின்றேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய ஆனாலும் இதையெல்லாம் பொய் என்று சொல்வதற்கும் சரியான ஆட்கள் இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே இவ்வுலகத்தில் எதை என்றும் அறிய அறிய 

ஆனாலும் அவர்களையெல்லாம் தட்டி விட்டு அதாவது அமைதியாக உட்கார்ந்து எதை என்று அறிய அறிய நோய்களையும் கொடுத்து விடுவேன் வருங்காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே

அகத்தியன் யார்!???? என்று அப்பொழுது புரிந்து கொள்வீர்கள்...

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அதனால் அப்பனே எவை என்று கூட சித்தர்கள் யார் என்பதை கூட அப்பனே தெரியாமல் இருக்கின்றார்கள் அப்பனே

அனைத்து விஷயங்களை கூட சாதித்தவர்கள் தான் சித்தர்கள் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே

ஆனால் மனிதனால் அப்பனே ஒரு நாளும் சித்தன் ஆக முடியாது !!!!ஆக முடியாது!!!!! 

சொல்லி விட்டேன் அப்பனே 

அதனால் இன்னொருவனும் கேள்விகள் கேட்பான்!!!

ஏன் ஆக முடியாது ?? என்று!!

எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்று அறிய அறிய சக்திகள் எங்கெல்லாம் உள்ளது என்பதை கூட பின் கண்டு தெளியுங்கள் அப்பனே முதலில்!!!!! என்பேன் அப்பனே!!!! 

பின் அவ் சக்திகள் எங்கு உள்ளது??? என்பதே தெரியாமல் அப்பனே பின் சித்தன் பின் எதை என்று அறிய அறிய பெயரின் முன்னே சித்தன் என்று வைத்துக் கொள்வது பெயருக்கு பின்னே சித்தன் என்று ஞானி என்று வைத்துக் கொள்வதும் அப்பனே !!!இவையெல்லாம் முட்டாள்தனமானதப்பா!!!!

அவன் தான் திருடனப்பா!!!!! 

எதை என்றும் அறிய அறிய மிகவும் ஏமாற்றுவான் என்பேன் அப்பனே!!!!!

எதை என்று கூட அவனிடத்தில் சென்று தான் பாருங்களேன் !!!!!!!!!!!!!!!!!

என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய... 

பார்ப்போம்!!!!!! 

அவன் தான் !?!?!?!?!?!?!?!?!?!!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே ஒரு உயிரைக் கூட எதை என்று கூட காப்பாற்ற முடியாத உந்தனுக்கு எதை என்று அறிய அறிய............

பக்தியாம் !!!!!?!?!?!?!?!

சித்தனாம்!!!!?!?!?!?!?!! 

இறைவனாம்!?!?!?!!!!! 

மந்திரமாம்!?!?!?!?!?!?!! 

தந்திரமாம்!?!?!???!!?!! 

அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் உண்மையான சித்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட எதை என்று அறிய அறிய அப்பனே !!!

திடீரென்று அப்பனே வந்திட்டு... அதாவது எதை என்று கூட சென்று விடுவான் என்பேன் அப்பனே காப்பாற்றி விட்டு!!!!!!!

அவ்வளவுதான் அப்பனே!!!! 

இங்கு தங்குவதில்லை என்பேன் அப்பனே!!!!! 

ஆனால் எவை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் விளக்கங்கள் தருகின்றேன் அப்பனே

கந்தன் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அழகாகவே இருக்கின்றான்!!!

ஏன் எதற்காக அப்பனே எப்பொழுதும் கூட கந்தன் அழகாகவே இருக்கின்றான் என்பதை கூட யாராவது யோசித்தீர்களா????????????

எதை என்றும் புரிய புரிய அப்பனே எதை என்றும் அறிய அறிய எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே

இவ் நேர் கோட்டு வழியாக அதாவது செல்கின்ற பொழுது அப்பனே பல நதிகளில் கூட நீராடி எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று கூட கர்மத்தில் சேராமல் அப்பனே அப்பொழுதே எதை என்றும் அறிய அறிய அப்படியே இளமையாக வைத்துக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!

சரியாக திட்டமிடுங்கள் என்பேன் அப்பனே!!!!! 

இன்னும் சொல்கின்றேன் அப்பனே விபரங்கள்... எவை என்றும் அறிய அறிய அதனால் எம்முடைய ஆசிகளப்பா!!!!!! நல்விதமாகவே!!!

இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அனைவரும் எதை என்று கூட தேவாதி தேவர்களும் இங்கு எப்பொழுது வருவார்கள் என்று கூட நேரடியாக வருவார்கள் என்பதை எல்லாம் கூறுகின்றேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பொழுது எவை என்று புரிய  புரிய!!!

ஆனாலும் அப்பனே இங்கு உள்ள மனிதர்கள் கூட அப்பனே எதை என்று கூட எதை என்று கூட ஒவ்வொரு சுவடியிலும் வெவ்வேறாக சொல்கின்றார்களே!!!! என்றெல்லாம் அப்பனே!!!!!

(ஓதிமலை சம்பந்தப்பட்டவர்கள் வெவ்வேறு இடங்களில் நாடி வாக்குகள் கேட்டு அங்கு அப்படி இங்கு இப்படி என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அவர்களுக்கெல்லாம் முருகனே புத்தியை கொடுப்பார்)

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அவர்களுக்கும் எதை என்று அறிய அறிய முருகனே எவை என்றும் புரிய புரிய புத்தியும் புகட்டுவான் யானும் இங்கே தான் இருக்கின்றேன் அருணகிரியும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே

எதை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய சாதாரணமில்லை என்பேன் அப்பனே இறைவனை நெருங்க நெருங்க அப்பனே துன்பங்களும் வரும் அப்பா

ஆனால் துன்பங்கள் வர வர அறிவு பெருகுமப்பா அப்பனே கர்மமும் குறையுமப்பா

அப்பனே எம்முடைய ஆசிகள்!!! இன்னும் விவரமாக விளக்குகின்றேன் அப்பனே இத்தலத்தை பற்றி எதை என்று அறிய அறிய இன்னும் இருக்கின்றதப்பா அனைத்தும் அறிந்து கொண்டால் அப்பனே இதுதான் மனிதப் பிறவியா என்று யோசித்து விடுவீர்கள் அப்பனே

முக்தியும் எதை என்று அறிய அறிய கிடைத்துவிடும் அப்பனே ஆரோக்கியமாக வாழ்ந்து விடலாம் அப்பனே நோய் நொடிகள் இல்லாமல் வாழ்ந்து விடலாம் என்பேன். அப்பனே

ஆசிகளப்பா !!! ஆசிகள்!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday 15 January 2024

சித்தன் அருள் - 1557 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு - பாகம் - 1








2/12/2023 சஷ்டி அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு!! பாகம் 1. வாக்குரைத்த ஸ்தலம் ஓதிமலை ஓதியப்பர் சன்னதி அன்னூர். 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! 
   
அப்பனே எண்ணற்ற கோடிகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே உணர்ந்து உணர்ந்து ஞானிகள் வாழ்ந்து பின் முக்திக்கும் சென்றார்களப்பா!!!!

ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதர்கள் எதை என்றும் தெரியாமலும் கூட அலைந்தும் திரிந்தும் அப்பனே கர்மத்தை அப்பனே இன்னும் இன்னும் அப்பனே முதுகில் அப்பனே சுமந்தவாறே உள்ளார்கள்.. 

எப்படியப்பா எதை என்றும் உணராத அளவிற்கும் கூட அப்பனே உணர்ந்து உணர்ந்து செயல்பட்டால் தான் அப்பனே நிச்சயம் வெற்றிகளும் உண்டு!!

அவை மட்டும் இல்லாமல் போகனின் அருள்களும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அதனால் நோய் தீர்ப்பதற்கு அப்பனே போகனின் உதவியையே பின் நாடி நாடி... ஏன் எதற்காக அப்பனே எவன் ஒருவன் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே யான் எதை என்றும் அறிய அறிய பின் பல வாக்குகளில் கூட சொல்லி விட்டேன் அப்பனே!!!!

அதாவது அதிகாலையிலே நான்கு மணி அளவில் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் இப்பொழுது எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய இங்கே அப்பனே (ஓதிமலையில்) நிச்சயம் எதை என்றும் புரியாமலும் கூட இருந்தாலும் கூட புரிந்து கொள்ளுங்கள்!!!

அப்பனே அதிகாலையிலே பின் எதை என்று அறிய அறிய அப்பனே இங்கிருந்து அதாவது முருகன் அழகாகவே எதை என்றும் அறிய அறிய!!!

இதனால் அப்பனே பின் சரியாகவே போகன் நிச்சயமாய் பின் ஓதுவான்!!!!! அப்பனே எதனை ஓதுவான் என்பதை எல்லாம் அப்பனே பின் எதை என்று அறிய அறிய சங்கு சப்தத்தையும் நிச்சயம் அறிந்தும் எதை என்றும் உணராமலும் கூட பின் நமச்சிவாயா !!!!!! முருகா!!!!!  என்று அப்பனே இப்படி பின் எதை என்று அறிய அப்பனே... ஓதி எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய

அப்பனே இவ்வாறு நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது அப்பனே புரிந்து கொண்ட பிறகு ஏன் இந்த மாற்றங்கள் என்றாயினும் இதனால் அப்பனே இவ்வாறு அப்பனே (சங்கு) ஊதுவதால் அப்பனே இதை நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய

அப்பனே அமர்நாதனிடமே செல்லும் என்பேன் அப்பனே

( ஓதி மலையில் போகர் சித்தர் எழுப்பும் சங்கின் ஒலி அமர்நாத் வரை கேட்கும்)

அங்கு எதை என்றும் அறிய பல ஞானிகளும் கூட தவம் செய்து கொண்டு இருப்பார்கள் என்பேன் அப்பனே!!!

எழுந்திடுவார்கள் என்பேன் அப்பனே!!!

இதனால் அங்கு எதை என்றும் அறிய அறிய அப்பனே கண்ணை விழிக்கும் ழுது அப்பனே நிச்சயம் அப்பனே பின் ஓர் சொட்டு ( ஞானியர்களின் கண்ணீர்) எதை என்றும் அறிய அறிய நேராகவே அப்பனே இங்கு வந்து விழுமப்பா!!!!

அப்பனே அப்படி விழும் பொழுது அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் புரியாமல் கூட அப்பனே சக்திகள் மனிதனுக்கு கிடைத்துவிடுமப்பா!!!

அப்பனே எண்ணற்ற நலன்கள் நடந்து விடும் அப்பா!!!

அப்பனே இதை அறியாமலும் புரியாமலும் அப்பனே எதை என்று அறிய அறிய சரியாகவே கணித்தாலும் அப்பனே இங்கிருந்து நேராகவே பின் அப்பனே அமர்நாதனே!! எதை என்றும் அறிந்தும் கூட

(ஓதி மலையில் இருந்து நேர்கோடாக அமர்நாத் அங்கு இருக்கின்றார்)

இதனால் அப்பனே பல ஞானிகள் கூட அப்பனே மறைமுகமாக தவங்கள் செய்து கொண்டிருக்கும் பொழுது அப்பனே அறிந்தும் அறியாமலும் கூட அப்பனே நிச்சயமாய் அங்கு இருந்து அப்பனே எவை என்றும் புரியாமலும் கூட அப்பனே பின் எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே

அதாவது எதை என்று அறிய அறிய ஒரு எவை என்றும் புரியப் புரிய அப்பனே இதனால் அங்கிருந்து அப்படியே இங்கு விழும் பொழுது அப்பனே இதை தன் அப்பனே பின் இங்கு விழுந்து அப்பனே எதை என்று அறிய அறிய ஒரு சிறிய துளி அப்பனே பழனி தன்னில் விழும் அப்பனே எதை என்று அறிய அறிய

அப்பனே இன்னும் இவை உணர்ந்து அப்பனே சிறு துளி பூம்பாறை எதை என்று அறிய அறிய அப்பனே 

(முருகன் தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட குழந்தை வேலப்பர் பூம்பாறை முருகன் கொடைக்கானல்)

எதை என்று புரிய புரிய இன்னும் அப்பனே இங்கு எதை என்று அறியாமலும் அப்பனே இன்னும் அப்பனே கீழ் நோக்கி சென்று அப்பனே..... சிங்காரவேலன் சிக்கல் அப்பா

(சிக்கல் சிங்காரவேலன் நாகப்பட்டினம்)

எதை என்றும் புரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே பின்பு அப்பனே பின் வடக்கும் அப்பனே  எதை என்று அறிய அறிய தெற்கும் நோக்கி பின் பாய்கின்ற பொழுது அப்பொழுதுதான் அப்பனே அறிந்தும் கூட அறியாததும் கூட எண்ணற்ற எதை என்றும் புரிந்தும் கூட மனிதனுக்கு வாழ தெரியாமல் கர்மாவில் புகுந்து அப்பனே அழிந்து நிற்கின்றது உலகம்.

எதை என்றும் புரிய  புரிய அதனால்தான் அப்பனே இங்கிருந்து மேல் நோக்கி அப்பனே பாருங்கள் அப்பனே!!!!

நேரடியாகவே பின் சொர்க்கத்தை அடைந்து விடலாம் அப்பனே பாருங்கள் அறிந்தும் அறிந்தும் கூட 

(இவ்வாக்கினை குருநாதர் நல்கும் பொழுது ஓதியப்பர் சன்னதியில் இருந்து கௌளி கட்டியம் கூறியது (பல்லி சப்தம் எழுப்பியது)

இப்படிப் பார்த்தால் அப்பனே எண்ணற்ற கோடிகளைப்பா

அப்பனே அறிந்தும் கூட பின் எதை என்று அறிய அறிய இறைவனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் விளக்கங்கள் புரிய வைக்கின்றேன் அப்பனே

புரிந்துகொண்டு அப்பனே வாழ்ந்தால் தான் உண்மை நிலை அப்பனே புரியுமப்பா

புரியாமல் வாழ்ந்து வந்தால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே பல ஞானிகளையும் யான் பார்த்துள்ளேன் அப்பனே 

இங்கு தங்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே நிச்சயம் உயர்நிலை ஆகியுள்ளார்கள் என்பேன் அப்பனே

ஆனால் போகன் நிச்சயம் விடமாட்டானப்பா

எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி விட்டாலும் அனைத்தையும் கெடுத்து விடுவார்களப்பா!!!

எந்தனுக்கு அவ் சக்திகள் வேண்டும்!!!!

இவ் சக்திகள் வேண்டும் என்றெல்லாம் அப்பனே பின் இரவில் தங்கி தங்கி அனைத்தும் அழித்துவிடுவார்களப்பா!!!!

அதனால்தான் அப்பனே யார் யார் மனதில் என்ன செப்ப வேண்டும்????? என்ன செப்ப கூடாது ?? என்று எண்ணி எண்ணி அப்பனே இங்கு முருகன் அனுமதிப்பதே இல்லை!!!!

அதனால் அப்பனே போகனின் எதை என்று அறியாத அளவிற்கும் கூட சரியான தீர்ப்புகள் அப்பனே!!!!

இதனால் அப்பனே ஒரு துளி பின் எதை என்று அறிய அறிய எங்கெல்லாம் பிரதிபலிக்கின்றது அப்பனே சென்று பார்த்தீர்கள் என்றால் அப்பனே ஒன்றும் இல்லாமல் எதை என்றும் அறிய அறிய அப்பனே 

அதேபோல் அப்பனே ஒரு நேர்கோட்டில் இடுங்கள் அப்பனே 

எதையென்று இங்கிருந்து அப்பனே நேரடியாகவே எங்கு செல்கின்றது என்பது நீங்களே பாருங்கள் அப்பனே!!!

அப்படி செல்கின்றபோது எல்லாம் அப்பனே இடை இடையே அப்பனே இன்னும் இன்னும் அப்பனே பின் இதனை நோக்கி அதாவது எதை என்று அறிய அறிய

இக் கோட்டினை....(கோட்டின் இடையே) அப்பனே குறுக்கு மறுக்கலாகவே நதிகள் ஓடுகின்றனப்பா!!! 

(கீழிருந்து காவிரி தொடங்கி கோதாவரி நர்மதா கங்கா மந்தாகினி பாகீரதி என பெரிய ஆறுகள் உள்ளிட்ட சிறு நதிகளும் கூட)

அப்பனே அவ் நதிகளில் மூழ்கினாலே மோட்சங்கள் தானப்பா!!!!!

பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே!!!!!!!

உங்களுக்கு ஒரு வேலையே வைத்திருக்கின்றேன் அப்பனே !!!

இதை சரியாக அப்பனே பின் எதை என்று யார் உணர்ந்து அப்பனே அதாவது கூட்டல் குறியாகவே அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே இட்டால் புரியுமப்பா !! உலகத்தைப் பற்றி அப்பனே

இதனால் அப்பனே அப்பனே எதை என்று அறிய அறிய கலியுகத்தில் அப்பனே மனிதனால் வாழ முடியாதப்பா

வாழ்ந்து எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே

பக்திக்குள் வந்து விட்டால் அனைத்தையும் தெரிந்து கொண்டு வாழ வேண்டும் என்பேன் அப்பனே அப்பொழுதுதான் அப்பனே இறைவன் ஆசிகளும் அன்பும் கிடைத்து உயர்வான இடத்திற்கு செல்வீர்கள்!!!

அப்பனே அப்படி இல்லை என்றால் அப்பனே மீண்டும் மீண்டும் தாழ்வுகள் ஏற்படுத்தி அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனை வணங்கினேனே சித்தர்களை வணங்கினேனே ஒன்றும் நடைபெறவில்லையே என்று அப்பனே எவை என்றும் அறிய அறிய 

அதனால்தான் அப்பனே நிச்சயம் அதனால் தான் நிச்சயம் அப்பனே நல்வழிப்படுத்தவே பல உரைகள் உரைத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே

அதை யார் ஒருவன் சரியாக கடைபிடிக்கின்றானோ? அவன் உயர்ந்தவன் ஆகிவிடுவான் என்பேன் அப்பனே

இன்னும் அப்பனே இவைதன் வாக்குகளாக அப்பனே இன்னும் இன்னும் வரும் சந்ததிகளுக்கு பயன்படும் என்பேன் அப்பனே!!!!

சரியாக பயன்படுத்திக் கொள்ளும் பொழுது அப்பனே உயர்ந்து விடுவார்கள் அப்பனே

அப்பனே யாங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய தெரியாமல் உரைக்கவில்லை என்பேன் அப்பனே!!!!

நிச்சயம் தெரிந்தும் கூட!!! பின் உரைத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!!

இதனால் அப்பனே இங்கு அப்பனே எதை என்று அறிய அறிய நேர்கோடு இடும்பொழுது அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய

அப்பனே """"மராத்தியம்""""""

( மகாராஷ்டிரா)

எதை என்று அறிய அறிய குறிக்கின்ற மாநிலத்தில் அப்பனே எதை என்று கூட ஒரு மலையில் எதை என்று அறிய அறிய ஈசனும் பார்வதி தேவியும் தங்கி எதை என்று அறிய அறிய இருப்பார்களப்பா!!!! அங்கு சென்று விட்டால் நிச்சயம் அப்பனே அனைத்தும் கிட்டிவிடும் அப்பனே... இவைதன் நீங்களே யோசிக்க வேண்டும் அப்பனே!!!

(குருநாதர் இந்த வாக்கில் குறிப்பிட்டுள்ள ஓதி மலையில் இருந்து செல்லும் பொழுது நேர்கோடாக செல்லும் பொழுது மகாராஷ்டிராவில் ஒரு மலை மீது அம்மையும் அப்பனும் இருப்பார்கள் என்று கூறியிருந்தார் அந்த ஆலயத்தை பற்றி தெரிந்து கொள்வதற்கு கடும் முயற்சிகள் எடுத்துக் கொண்டு இருந்து குருநாதரிடம் சில ஆலயங்களை குறிப்பிட்டு கேட்ட பொழுது

குருநாதன் அப்பனே எதை என்று அறிய அறிய  இதை உங்களுக்கு ஒரு தேர்வாகவே வைக்கின்றேன். நீங்களே கண்டுபிடிங்கள் நீங்களே கண்டுபிடித்து சென்றால்தான் மதிப்பு என்று கூறியிருந்தார்

அதன்படியே அந்த ஆலயத்தை கிட்டத்தட்ட நெருங்கி அந்த நேர்கோட்டில் இருக்கும் ஆலயங்களை எல்லாம் பட்டியலிட்டு சுருக்கி சுருக்கி வந்து ஒரு குறிப்பிட்ட ஆலயத்தின் பெயரை குருநாதரிடம் கூறிய பொழுது 

ஏனென்றால் அதன் அருகிலேயே சக்தி பீடமும் உள்ளது என்று கூறியிருந்தார் யோகேஸ்வரி எனும் சக்தி பீடத்திற்கு அருகே அமைந்திருக்கும் ஏடேஸ்வரி ஆலயத்தை குறிப்பிட்டு கூறிய பொழுது

எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய பின் நேர்கோட்டில் வரும் பொழுது அப்பனே மூன்றுமே சக்திகள் மிகுந்தவை தான் அப்பனே

இதனையும் கூட கூர்ந்து பார்த்தால் பார்வதி தேவியின் பெயர் அப்பனே

என்று மறைமுகமாக பிடி கொடுக்காமல் நீங்களே உணர வேண்டும் என்று கூறியிருந்தார்

ஜோகேஸ்வரி ஏடேஸ்வரி
கோலாப்பூர் மகாலட்சுமி

என மூன்று ஆலயங்கள் வரிசையில் இருக்கின்றன இதில் ஏடேஸ்வரி ஆலயம் பார்வதி தேவியின் பெயரோடு சம்பந்தப்பட்டுள்ளது என்று குருநாதரிடம் கூறிய பொழுது

அப்பனே எவை என்று அறிய அறிய பக்கத்தில் நெருங்கி வந்து விட்டீர்கள் அப்பனே நீங்களே எதை என்று அறிய அறிய அப்பனே

பின் அப்பனே ஏக !!! (ஏகன் !!! ) எதை என்று அறிய அறிய அப்பனே அது தான் அப்பனே ஆனால் மாறி விட்டது.

(அதாவது ஏகன் ஏகம் ஏக முகம் ஏகாம்பரம் என ஈசனுக்கு மறு பெயர் இருப்பது போல் ஏகேஸ்வரி எனும் பெயர் பார்வதி தேவிக்கு உள்ளது)

ஏகேஸ்வரி எனும் பெயர் ஏடேஸ்வரி என பெயர் மருவி விட்டது)

அப்பனே எதை என்றும் அறிய அறிய இன்னும் இன்னும் அப்பனே சந்திரன் எவை என்று அறிய அறிய அங்கு பிரகாசிக்கும் என்பேன் அப்பனே இரவில் கூட அப்பனே!!!!!!

என்று அந்த ஆலயத்தை பற்றி குருநாதர் கூறிவிட்டார்.

ஆலய விபரக்குறிப்பு 

ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவி, யெர்மலா, மகாராஷ்டிரா மகாராஷ்டிராவின் யெர்மலாவில் அமைந்துள்ளது முகவரி 9VCM+87M, Yermala, மகாராஷ்டிரா 413525, இந்தியா. இது பாங்க்ரி ரயில் நிலையத்திலிருந்து 5.56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மகாராஷ்டிராவின் யெர்மலாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவியிலிருந்து அருகிலுள்ள இரயில் நிலையம் மகாராஷ்டிராவின் யெர்மலாவில் உள்ள ஸ்ரீ க்ஷேத்ரா யேதேஸ்வரி தேவிக்கு அருகில் உள்ள ரயில் நிலையம் பாங்க்ரி ரயில் நிலையம். இது கிட்டத்தட்ட 5.56 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

பாலகட் மலையில் 500அடி உயரத்தில் மலை கோயிலாக அமைந்துள்ளது )

இன்னும் அதிலிருந்து நேர்கோடு இட்டால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே சிறிது பக்க தொலைவிலே அப்பனே எதை என்று கூட இன்னும் இன்னும் அப்பனே ஏற்கனவே வாக்குகளில் உரைத்து விட்டேன் அப்பனே நிச்சயம் சக்தி பீடங்கள் அப்பா!!!!  (ஜோகேஸ்வரி )

எதை என்றும் புரியப் புரிய அப்பனே புரிந்து கொண்டால் அப்பனே!!!

இவ்வாறு இன்னும் அப்பனே இன்னும் இன்னும் எதையென்று நோக்கினோக்கி அப்பனே என்று கூட அப்பனே சாதாரணமில்லை அப்பனே

நட்சத்திரம் எதை என்று கூட எதை என்று அறிய அறிய நட்சத்திரம் இட்டால் அப்பனே எங்கெல்லாம் எதை என்றும் அறிய அறிய அப்பனே புரிந்துவிடும் அப்பனே!!!!!!

அதற்கு மேல் தான் சூட்சமம் உள்ளது அப்பனே அங்கு சென்று அப்பனே தேடினால் அப்பனே அனைத்தும் கிட்டும் அப்பா!!

அப்பனே பின் அனைத்தும் சாதிக்கக் கூடிய வல்லமைகள் வந்து விடும் அப்பா

ஆனாலும் அப்பனே இவை புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

(இவ்விடத்தில் மீண்டும் கௌளி சத்தம்) 

புரிந்து கொண்டு நடந்தால் அப்பனே வெற்றிகள் கிட்டும் அப்பா

அப்பனே பின் உயர் நிலைக்கு அப்பனே செல்வது சாதாரணமில்லை என்பேன் அப்பனே!!!

இதனால் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இப்படி சென்று சரியாகவே அங்கு உட்கார்ந்து விட்டால் அப்பனே நிச்சயம் அப்பனே இறப்பு என்பதே கிடையாது அப்பா!!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!!

ஆனால் அறிந்தும் அறிந்தும் கூட எதை என்றும் புரியாமல் கூட அப்படியென்றால் ஒவ்வொரு ரகசியத்தையும் கூட நிச்சயம் ஒவ்வொரு தலத்தையும் தலத்திலும் யான் செப்புவேன் அப்பனே

எதை என்று அறிய அறிய பூரணமாக அப்பனே அங்கு சென்று வழிபட்டால் கர்ம வினைகள் நீங்குமப்பா!!!

இதனால் அப்பனே இறைவன் விடுவானா ?????? என்ன !!!! அப்பனே!!! 

ஆனாலும் அப்பனே முழு முயற்சியோடு அப்பனே தான தர்மங்கள் செய்து கொண்டு அப்பனே இவ்வாறு எதை என்று கூட தன் கடமையை சரியாக செய்து கொண்டு அப்பனே சென்றாலே இறைவன் அழைத்துச் செல்வான் அப்பனே

மற்றவை எல்லாம் வீணப்பா!!!! பொய்கள் தான் சொல்லிக் கொண்டிருக்க வேண்டும் யான் அட்டமா சித்திகளை பெற்று விட்டேன் அனைத்தும் பெற்று விட்டேன் என்று!!!

நிச்சயம் இல்லை அப்பா எதை என்றும் புரியப் புரிய

இதனால் அப்பனே பல வகையிலும் கூட இதனால் அப்பனே இவ்வாறு எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே சரியாகவே பின் எவை என்றும் புரிய புரிய இங்கிருந்து அப்பனே நேர்கோடாகவே அப்பனே பின் நேராகவே எதை என்று கூட சொர்க்கத்தை நோக்கி எதை என்றும் புரிய புரிய அப்பனே எவை என்றும் அறிய அறிய

அப்பனே அங்கு தான் அப்பனே வீற்றிருக்கின்றானப்பா!!!! எதை என்று கூட இறைவனும் இறைவியும் கூட!!!!

அப்பனே அவந்தன் எப்படி வருவான் என்பதையும் கூட நிச்சயம் பின் அறிவியல் வழியாகவே உரைக்கின்றேன் அப்பனே!!!

தெளிவுகள் பெற்று வாழுங்கள்!!!!

தெளிவுகள் பெறாமல் வாழ்ந்தால் அப்பனே எப்படியப்பா?????????? 

உருப்படாதப்பா!!!!! 

இதனால் அப்பனே நிச்சயம் பின் அவ்வாறு எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இதனால்தான் அப்பனே அதாவது பின் பார்வதி தேவி சரியாகவே இங்கு பின் இரண்டு கால்களையும் வைத்து அப்பனே பின் தலையும் அப்பனே அமர்நாதனிடத்தில் அப்பனே!!!! 

பார்த்தால் சரியாகவே அப்பனே நின்று கொண்டிருப்பாள் அப்பனே!!! 

புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!!

இதை அப்பனே புரிந்து கொள்வதற்கும் சக்திகள் வேண்டும் அப்பா!!!!

புரிந்து கொள்ளுங்கள் அப்பனே சிறிது பின் எவை என்று அறிய அறிய அறிவுக்கும் வேலை கொடுங்கள் அப்பனே !!! பின் எதையெதையோ பின் செய்வதற்கு அதாவது மற்றவர்கள் மீது குறைகள் சொல்வது இன்னும் போட்டி பொறாமைகள் எவை என்றும் அறியாமல் அவன் இப்படி என்றெல்லாம் பின் பயன்படுத்துவதற்கு பதிலாக... யான் சொல்லியதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே உண்மை நிலை புரியவரும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அப்பனே இதற்கு சிறப்பும் உண்டு என்பேன் அப்பனே!!!

அதனால் இதன் அடியில் எதை என்று அறிய அறிய அப்பனே சென்று விட்டால் அப்பனே மற்றொரு எதை என்று அறிய உலகமும் கூட!!!

(ஓதி மலைக்கு அடியில் மற்றொரு உலகமும் உண்டு இதே போல திருவண்ணாமலை கஞ்சமலை என குறித்தும் குருநாதர் கூறியதை இங்கு நினைவுபடுத்துகின்றோம் மனிதர்கள் நம் கண்களால் பார்க்கின்ற உலகங்கள் வேறு இறைவனுடைய அனுக்கிரகம் சித்தர்களுடைய ஆட்சி ஒவ்வொரு திருத்தலங்களுக்கு அடியிலும் நாகங்கள் தவழ்ந்து கொண்டிருப்பது சித்தர்கள் தவ யோகிகள் தவங்கள் செய்து கொண்டிருப்பது வேறொரு உலகம் நமக்கு தெரியாமல் இயங்கிக் கொண்டிருப்பது என பல்வேறு அதிசயங்கள் ரகசியங்கள் இருக்கின்றன)

அதை யான் இப்பொழுது செப்பவில்லை என்பேன். அப்பனே

பின் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து இன்னும் இன்னும் புரிந்து கொண்டால் நன்று என்பேன். அப்பனே

அதனால்தான் அப்பனே பாசத்தோடு இங்கு விளையாட வருவார்களப்பா அறிந்தும் கூட அப்பனே!!!!

(கார்த்திகை மாத கடைசி சஷ்டியின் போது விநாயகர் முருகன் ஐயப்பன் மூவரும் வந்து விளையாடிவிட்டு செல்வார்கள் என்பதை பற்றி குருநாதர் கூறியதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம்)

இங்கிருந்து நேரடியாக சென்று விட்டாலும் அப்பனே எதை என்று அறிய அறிய கைலாயத்தையும் கூட அடைந்து விடலாம் என்பேன். அப்பனே!!!

புரிகின்றதா அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே வரைபடத்தின் வழியாகவே அப்பனே பின் நேர்கோடு இங்கு இருந்து அப்பனே நேரடியாக இட்டால் அனைத்தும் தெரியவரும் அப்பனே!!!!

பின்பு நடுவில் கூட அப்பனே அதாவது கூட்டல் குறியிட்டால் அனைத்தும் தெரிய வந்துவிடும் என்பேன் அப்பனே 

பின் நடுவில் கூட எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே எதை என்றும் புரிய புரிய பிரித்தால் பொருள் தருவது என்ன??? பிரியாதது பின் பொருள் தராதது  அப்பனே எதை என்று உணர்ந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே!!!!

இதனால் பூஜ்ஜியத்தில் அடங்கியுள்ளது உலகம் அப்பனே இதை புரிந்து கொண்டால் நன்று என்பேன் அப்பனே

இதனால் அவை இவை என ஓடி ஓடி உழைத்து கடைசியில் பார்த்தால் பூஜ்ஜியமே மிஞ்சுகின்றது அப்பனே அதுதான் ஆன்மா அப்பா..... எதை என்றும் அறிய அறிய பின் எவையும் எதையும் நிச்சயம் அப்பனே பார்த்தால் ஒன்றும் இல்லை என்பேன் அப்பனே அவ்வளவுதான் சென்று விட வேண்டியது தான் அப்பனே

எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இதனால் தான் அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின் வரைபடம் இட்டு எதை என்று அறிய அறிய அப்பனே பின் இங்கிருந்து நேர்கோடு இட்டால் அப்பனே இன்னும் திருத்தலங்கள் தங்கி நிற்குமப்பா!!!!!

அங்கு சென்றால் அப்பனே பல தரித்திரங்கள் நீங்கும் அப்பா!!!!

ஆனால்  ?????? ஈசன் விட்டு விடுவானா ????? என்ன !!???

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய ஏனென்றால் கர்மா !!!!!

கர்மாவை அனுபவிக்க வேண்டும் என்று விதி இருந்தால் அப்பனே ஈசன் கூட அனுமதிக்க மாட்டான் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அதனால் அனுபவித்தே தீர வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அப்பனே ஆனாலும் பின் விதியினை மதியால் வெல்லலாம் அல்லவா அப்பனே சொல்லியிருக்கின்றார்கள் அப்பனே பின் அவ் மதியும் எதை என்று அறிய அறிய எவை என்று அறிய அறிய அதாவது அப்பனே இவ்விதியினை கூட அப்பனே நேர்கோடாக இட்டால் அப்பனே அங்கெல்லாம் சென்று வந்தால் அப்பனே மதி வென்றுவிடும் அப்பனே!!!!

இப்பொழுது புரிந்து கொண்டீர்களா அப்பனே!!!

அப்பனே சாதாரணமானவன் இல்லை முருகன் எதை என்றும் புரிய புரிய!!!

அப்பனே இவந்தனுக்கு ஏன் இவ்வளவு எதை என்று அறிய அறிய தலைகள்???

( ஆறுமுகம் ஆறு தலைகள்)

(ஓதியப்பனுக்கு ஐந்து முகம் 5 தலைகள்)

யோசித்தது உண்டா????

அப்பனே எவை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பார்த்தீர்களென்றால் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய தெரிந்து கொள்வீர்கள் அப்பனே

இதற்கும் எதை என்று அறிய அறிய அறிவை பயன்படுத்திக் கொண்டால் அப்பனே சற்று தெளிவாகும் என்பேன் அப்பனே!!!! அனைத்தும் கூட.
அப்பனே எவை என்றும் புரிந்தும் புரிந்தும் கூட

அதனால் தான் அப்பனே இன்னும் இன்னும் மானிடனாக பிறந்து பிறந்து ஏதும் தெரியாமல் வளர்ந்து வளர்ந்து அப்பனே பின் சென்று கொண்டே இருக்கையில் என்ன பிரயோஜனமப்பா?????

அதனால் எதை என்றும் அறிய அறிய அவை மட்டும் இல்லாமல் எதை என்று புரிந்தும் கூட அப்பனே பின் நிச்சயமாய் எவை என்றும் புரியப் புரிய அப்பனே சரியாகவே அப்பனே இங்கு பின் தண்ணீரை எதை என்றும் புரிய புரிய அப்பனே சரியாகவே வைத்துக் கொண்டு அப்பனே ஏன் எதற்காக என்றால் அப்பனே!!!

அங்கிருந்து யான் சொன்னேனே!!!! அமர்நாதனிடம் அப்பனே எவை என்றும் அறிய அறிய விழிக்கும் பொழுது பின் கண்ணீர் இங்கு எதை என்று கூட நீராக விழும் பொழுது அப்பனே சரியாகவே அப்பனே ஒரு துளி விழுந்து விட்டால் !!!!!!

அதை அருந்தி விட்டால் அப்பனே...பின் எவை என்றும் அறிந்தும் கூட நோய்களும் கூட பின் பரிசுத்தமாக போய்விடும் அப்பா!!!!

அப்பனே இளமையாக வாழ்ந்து விடலாம்!!!!!

(ஓதி மலையில் அதாவது பிரம்ம முகூர்த்தத்தில் நான்கு மணிக்கு போகர் மகரிஷி சங்கொலி முழங்கி அந்த சங்குநாதம் அமர்நாத் வரை சென்று அங்கு இருக்கும் ஞானியர்கள் கண்விழிக்கும் பொழுது அவர்களுடைய கண்ணீர் துளி ஓதி மலையில் விழும் பொழுது ஒரு பாத்திரத்தில் நீரை வைத்து காத்துக் கொண்டிருக்கும் பொழுது அந்த துளி அது விழுந்து அதை பருகினால் நோய்கள் எல்லாம் போய் பரிசுத்தமாகிவிடலாம்

ஆனால் அதற்கும் புண்ணியம் வேண்டும் முருகனுடைய அனுமதி வேண்டும்)

ஆனாலும் அப்பனே அதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே எதை என்று கூட சாதாரணமாக வைத்துவிட்டால் அப்பனே எதை என்று கூட சரியாக விழ வேண்டுமே !!!! அது!!!!!!!

எதை என்றும் புரியப் புரிய அப்பனே!!!!

எதை என்றும் அறியாமல் கூட அப்பனே புரிந்து கொண்டு எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே இன்னும் இன்னும் ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே!!!!!

நிச்சயம் இதையெல்லாம் எவை என்றும் அறிய கலியுகத்தில் சொல்லி வைப்பேன் அப்பனே!!!

இதை நிச்சயம் எதை என்று அறிய அறிய சந்ததிகளுக்கு அதாவது பின்வரும் சந்ததிகளுக்கு!!!!

நிச்சயம் பயன்படுத்தி அப்பனே நல் மாற்றத்தை காணத்தான் போகின்றது இவ்வுலகம் !!!!

அதனால் தான் அப்பனே எதை என்றும் புரிய புரிய அப்பனே அதனால்தான் உலகில் எதை என்று அறிய அறிய யான் கண்டுபிடிக்க எவை என்று அறிய அறிய இல்லை அப்பா எதை என்று அறிய அறிய கண்டு உணர்ந்தேன் என்பேன் அப்பனே 

அனைத்திலும் முதன்மை பெற்றேன் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய என்னால் நிச்சயம் அனைத்தும் செய்ய முடியும் என்பேன் அப்பனே

ஆனாலும் பின் செய்து எதை என்று அறிய அறிய உந்தனுக்கு கொடுத்து விட்டாலும் அதை சரியாகவே பயன்படுத்த பின் சரியாக பயன்படுத்த மாட்டாய் அப்பா நீ!!!!!

இதுவும் கலியுகத்தில் அப்பனே கெடுத்து விடுவாய் அப்பனே

அதனால்தான் அப்பனே எதை என்று அறிய  யாங்களே வந்து எதை என்றும் அறிய அறிய அங்கே அங்கே இன்னும் இன்னும் அப்பனே 

இதனால்தான் அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய சக்திகள் படுகின்றதோ அங்கெல்லாம் திருத்தலங்களை கூட யாங்களே எழுப்பினோம்!!!

ஆனால் புத்தி கெட்ட மனிதன் இப்பொழுது எங்கெல்லாம் திருத்தலங்களை எழுப்பி அப்பனே இன்னும் அவந்தனும் கர்மத்தில் நுழைந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! 

அவந்தனும் வாழ்ந்த பாடு இல்லை அப்பனே மற்றவர்களும் வாழ்ந்த பாடு இல்லை அப்பா!!!!

எப்படியப்பா?????

ஓதிமலை ரகசியங்கள் குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த வாக்குகள் பாகம் இரண்டில் தொடரும்

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!