​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 11 April 2011

சித்தன் அருள் - 32


அன்றைக்கு அஷ்டமி திதி.

அஷ்டமி, பரணி, கார்த்திகையில் அகத்தியர் நல்வாக்கு தரமாட்டார் என்பது பொது விதி.  இது எனக்கு கிடைத்த கட்டாய ஓய்வு என்பதால் இன்றைக்கு ஆனந்தமாக  இருக்கலாம் என்று நிதானமாக வேறு சில பணிகளில் என்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தேன்.

சட்டென்று ஒரு நார்ப்பத்தைந்து வயதுடைய ஆஜானுபாகுவான நபர் மிகுந்த பதற்றத்தோடு என் முன் வந்து நின்றார்.

முகத்தில் சோகக் களை நிரம்பியிருந்தது.  பல நாட்களாகத் தூக்கமில்லாத காரணத்தினால் அவரது கண்களில் ரத்த வரிகள் காணப்பட்டது.  அணிந்திருந்த சட்டை கூட கசங்கி மடிந்து காணப்பட்டது.  தலையை அவர் எண்ணை தடவி வாரியதாக தென்படவில்லை.  ஆனால் பெரிய மனித தோரணை அட்டகாசமாக இருந்தது.

இதையெல்லாம் பார்க்கும்போது, எதோ ஒரு பெரிய பிரச்சனையில் சரியாக மாட்டிக் கொண்டிருக்கிறார், என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது.

வந்தவர் எதைப் பற்றியும் கேட்க்காமல் இன்றைக்கு எனக்கு அகத்தியர் அருள் வாக்கு கட்டாயம் வேண்டும்.  நாடி படிக்க முடியுமா? என்று சிறிது அதிகார தோரணையில் கேட்டார்.

"நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்" என்று கூட கேட்க எனக்குத் தோன்றவில்லை.  இன்றைக்கு அஷ்டமி திதி.  நாடி படிக்க இயலாது.  இரண்டு தினங்கள் கழித்து வாருங்கள்.  அகத்தியர் உத்தரவு கொடுத்தால் படிக்கிறேன்" என்று பதில் உரைத்தேன்.

எனது பதில் அவருக்கு மிகப்பெரிய சங்கடத்தையும், அதிர்ச்சியையும் ஏற்ப்படுத்தி இருக்க வேண்டும்.  சட்டென்று அவர் குரல் தாழ்ந்தது.

மிகப் பெரிய பிரச்சினை.  அதனால் தான் ஓடிவந்தேன்.  கொஞ்சம் தயவு காட்டுங்கள் என்று கெஞ்சும் குரலில் பேசினார்.

"அஷ்டமி, நவமியில் நல்ல வாக்கு வராது" என்றேன்.

"பரவாயில்லை.  அகத்தியர் என்ன சொல்கிறாரோ சொல்லட்டும்.  பிறகு என் தலை விதி எப்படி வேண்டுமானாலும் ஆகட்டும்" என்றார்.

"சார்.  தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.  எனக்கு நாற்ப்பது ஆண்டு கால நாடி பார்க்கும் அனுபவம் உண்டு. உங்களைப் போன்று ஒரு பெரிய நபர், இப்படித்தான் அவசரப்படுத்தினார்.  அவருக்காக அகத்தியர் சொன்ன கட்டளையையும் மீறி நாடி படித்தேன்.  அதன் விளைவு வேறு விதமாக மாறிவிட்டது.  அன்றிலிருந்து இன்று வரை அஷ்டமி, நவமி பரணி, கார்த்திகையில் நான் நாடி படிப்பதில்லை.  என்னை விட்டு விடுங்கள்" என்றேன்.  "வேறு யாரிடமாவது செல்லுங்கள்" என்று அவரை கிளப்ப முயசித்தேன்.

ஆனால், அவர் நகரவே இல்லை.

"கெட்டது வந்தாலும் ஏற்கிறேன்.  நல்லது வந்தாலும் ஏற்கிறேன்.  இதை அகத்தியர் வாயால் கேட்க வேண்டும்.  அவ்வளவுதான்" என்று சொல்லி வாசலிலே அமர்ந்து விட்டார்.

டென்ஷன் இல்லாமல் பொழுதைக் கழிக்கலாமே என்றிருந்த நான், வேறு வழி இல்லை என்று அவரை உள்ளே அழைத்து அமரச் செய்து விட்டு, சாஷ்டாங்கமாக அகத்திய ஜீவநாடியை வணங்கி விட்டு அதை எடுத்து எந்தக் கெடுதலும் இவருக்கு வராமல் நல்ல அருள்வாக்கு தாருங்கள் என பிரார்த்தனை செய்து படிக்க ஆரம்பித்தேன்.

மிகப் பெரிய நிறுவனம் ஒன்றில் பணியாற்றும் இவனுக்கும் இவன் கீழ் வேலை செய்யும் தொழிலாளர்கள் சிலருக்கும் சில மாதங்களாக கசப்பு உணர்ச்சி ஏற்ப்பட்டிருக்கிறது.

கம்பனி முதலாளி வட நாட்டில் இருக்கிறார்.  தொழிலாளர்கள் விஷயத்தில் முதலாளி தலையிடுவதில்லை.எல்லாப் பொறுப்புகளையும் இவரிடம் கொடுத்திருக்கிறார். நிர்வாகம் நன்றாக நடக்க வேண்டுமே என்பதற்காக இவன் தொழிலாளர்களைக் கடுமையாக பேசியிருக்கிறார்.ஒரு சிலருக்கு முறையாகத் தண்டனையும் கொடுத்திருக்கிறார்.

மிக சாதாரண பிரச்சினையை பூதாகரமாக மாற்றிவிட்டதால், தொழிலாளர்கள் ஒன்றிரண்டு பேர்கள் மிகுந்த கோபம் கொண்டு அரிவாள், கத்தி கொண்டு இவனை மூன்று நாட்களுக்கு முன்பு தாக்க முயர்ச்சித்திருக்கிரார்கள்.  ஆனால் எப்படியோ தப்பித்துவிட்டான்.

இது முதலாளிக்கு தெரிந்து இவனை அழைத்து நிலைமையை சமாளித்து கட்டுக்குள் கொண்டு வந்து விடு.  வேர் எந்த அசம்பாவிதமும் தொழிற்சாலைக்குள் நடக்ககூடாது.  அப்படி மீறி நடந்தால் உன்னை இந்த வேலையிலிருந்து தூக்கி விடுவேன் என்று மிரட்டி எச்சரித்திருக்கிறார்.

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பது போல இவன் இருவருக்கும் நடுவில் மாட்டிக்கொண்டு முழிக்கிறான்.

சரி. கவுரவம் பார்க்காமல் தொழிலாளர்களிடம் சமரச முயற்சிக்குப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தாலும் அவர்கள் வரவில்லை.  எப்படி பிரச்சினையை சமாளிக்கலாம் என்று தெரியாமல் அகத்தியனை நோக்கி வந்திருக்கிறார்" என்று அகத்தியர் என்னிடம் விருவிருப்பகச் சொல்லி விட்டார்.

எனக்கு உள்ளுக்குள் ஓர் ஆச்சரியம், அகத்தியர் எப்படி அஷ்டமி தினத்தன்று இப்படி முகம் மலர்ந்து அருள் வாக்கு தந்தார்.  அப்படியானால், இனி எல்லோருக்கும் அஷ்டமி, நவமி, பரணி, கார்த்திகையில் நாடி படிக்கலாம், போலிருக்கிறதே" என எண்ணிக்கொண்டேன்.

நாடியில் என்னிடம் சொன்னதை என் எதிரே இருந்த அவரிடம் சொல்லவில்லை.  மாறாக அவர் வாயிலிருந்து உண்மை வெளிப்படட்டுமே, என்று கேள்விகள் கேட்டேன்.

அகத்தியர் என்னிடம் என்ன சொன்னாரோ அதைத்தான் அந்த நபரும் என்னிடம் சொன்னார்.

காலை எட்டு மணிக்கு தொழிற்சாலையில் எல்லோரும் இருக்க வேண்டும்.  சிலர் சரியாக வருவதில்லை.அவர்களை பலமுறை எச்சரித்துப் பார்த்தேன்.  யாரும் மசியவில்லை.  இதுக்கு நான் நடவடிக்கை எடுத்தேன்.  அதுதான் இப்பொழுது மிகப் பெரிய பிரச்சினையாக மாறிவிட்டது" என்ற படி அகத்தியர் என்ன சொன்னார்? என்று ஆவலுடன் கேட்டார்.

"இன்றைக்கு நீங்கள் தொழிற்சாலைக்கு செல்ல வேண்டுமா?"

"ஆமாம்.  கண்டிப்பாக கட்டாயமாக"

தவிர்க்க முடியாதா?

"தவிர்க்க முடியாது"

அப்படியென்றால் ஒன்று செய்யுங்கள்.  காலை எட்டு மணிக்குத் தொழிற்சாலைக்கு செல்வதை தவிர்த்து பதினோரு மணிக்குச் செல்லுங்கள்.

இது நீங்களாகச் சொல்கிறீர்களா?  இல்லை அகத்தியர் அருள்வாக்கா?

"இன்னமும் நீங்கள் என்னை நம்பவில்லை போலிருக்கிறது.  அகத்தியர் எனக்கு இட்ட கட்டளையை அப்படியே தங்களுக்குச் சொல்கிறேன்" என்றேன்.

"அப்படியானால் அஷ்டமியில் வாக்கு வந்திருக்கிறதே, இது உண்மையா? இல்லை நீங்களாக என்னை சமாதானப்படுத்த இப்படிச் சொல்கிறீர்களா? என்று சந்தேகம்.  அதனால் தான் கேட்டேன்" என்றவர் வேறு எதுவும் பேசாமல் புறப்பட்டு போனார்.

மனிதர்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று தான் தோன்றியது.

இந்த மனுஷன் அகத்தியர் சொன்னபடி தாமதமாகப் போனால் நல்லது.  இல்லை அஷ்டமியிலும் அகத்தியரை வாக்கு சொல்ல வைக்க முடியும் என்று சோதித்துச் சென்றார் என்றால் அது அவருக்கும், அகத்தியருக்கும் உள்ள சம்பந்தம்.  இதில் எனகென்ன பங்கு இருக்கிறது என்று அப்படியே விட்டு விட்டேன்.

"மறுநாள் காலை அனைத்துச் செய்தி தாள்களிலும் ஒரு பரபரப்பான தகவல் புகைந்தது.

சென்னையிலுள்ள ஒரு தொழிச்சாலையில் திடீர் தீ விபத்து.  தொழிலாளர்கள் ஆத்திரமடைந்து நடத்துனரையும் மற்றவர்களையும் உள்ளே வைத்து தீ வைத்து விட்டனர்.  இதில் மூன்று இளம் அதிகாரிகள் உடல் கருகி பலி.  அதிஷ்டவசமாக தாமதமாக வந்த அனைவரும் உயிர் தப்பினார் - என்பது தான் அந்தச் செய்தி.

அந்த தகவல் உள்ளூர ஒருவிதமான பதற்றத்தை ஏற்படுத்தீருந்தாலும் வந்தவர் அந்த தீ விபத்திலிருந்து தப்பியிருக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டேன்.

நேற்றைக்கு அஷ்டமி என்றாலும் அகத்தியர் அருள்வாக்கு தந்தாரே.  அந்த அதிகாரி உயிர் தப்பினாரா இல்லையா என்று மனம் பதைபதைத்தது.  ஒரு வேளை ஏடாகூடமாக நடந்தால் என்ற பயமும் ஏற்பட்டது.

இந்த மாதிரியான அனுபவங்கள் ஏற்க்கனவே பலமுறை நடைபெற்றயுப்பதால் அதை வைத்து நேற்றைக்கு அவருக்குப் படிக்காமல் தவிர்த்திருக்கலாம்.  இனி யார் வந்து கேட்டாலும் அஷ்டமியில் படிக்க கூடாது என்று முடிவெடுத்தேன்.  ஒரு பயம் தான்.

அப்போது

வாசலில் பழக்கூடயோடு சந்தோஷமாக காரிலிருந்து இறங்கினார் அன்று வந்தவர்.  கூட அவரது மனைவி, குழந்தைகள்.

அவரைப்பார்த்த சந்தோஷத்தால் வெல வெலத்துப் போனேன்.  உட்காருங்கள் என்று சொல்லக்கூட முடியாமல் என்ன நடந்தது? என்று ஆவலுடன் கேட்டேன்.

அகத்தியர் சொன்னபடி நான் என் வீட்டிருக்ப் போனேன்.  வேலைக்குத் தாமதமாகப் போக வேண்டும் என்று சொன்னதால் சுந்தரகாண்டம் படிக்க ஆரம்பித்தேன்.  அகத்தியர் சொன்னர்ப்போல் 35 , 36 - வது பகுதியை எட்டு தடவை படித்து விட்டு அலுவகத்திற்கு கிளம்பும் போது, அலுவலகம் தீப்பிடித்து எரிவதாக தகவல் வந்தது.  தொழிற்சாலையும் , அலுவகமும் ஒரே இடத்தில் இருந்தது.

பதறிப் போய் அலுவலகம் போனேன்.  என்னைக் கண்டதும் தொழிலாளர்கள் சிலர் "டேய் அவர் இங்கு இருக்கார்" என்று குரல் கொடுத்து ஓடினார்கள்.  எனக்கு அப்போது ஒன்று புரியவில்லை.

பின்னர் தான் விஷயம் தெரிந்தது.  சரியாக எட்டு மணிக்கு தினம் நான் வந்து விடுவேன்.  இது எல்லோருக்கும் தெரியும்.  நேற்று அப்படித்தான் எட்டு மணிக்கு என் உதவியாளர்கள் உள்ளே சென்றிருக்கிறார்கள்.  நான் தான் வந்திருக்கிறேன் என்று நினைத்து என்னை தீ வைத்து கொல்ல  வேண்டும் என்ற எண்ணத்தில் சிலர் ஷட்டரை மூடி பெட்ரோலை வீசி தீ வைத்து விட்டார்கள்.  இதில் என் உதவியாளர்கள் மூன்று பேர் உயிரோடு எரிந்து விட்டனர்.  எட்டு மணிக்கு நானும் சென்றிருந்தால் நானும் அந்த தீயில் கருகி பலியாயிருப்பேன்.  அகத்தியர் அருள்வாக்கினால் நான் உயிர் பிழைத்து விட்டேன், என்றார் அவர் அனந்த கண்ணீரோடு.

Thursday 7 April 2011

சித்தன் அருள் - 31

அகத்தியர் தினமும் எத்தனையோ ஆச்சரியங்களை நிகழ்த்துவதாகச் சொல்கிறார்கள்.  அப்படி என்றால் எனக்கு புத்திர பாக்கியம் கிடைக்குமா? எப்பொழுது கிடைக்கும் - என்பது முதல் கேள்வி.

டாக்டர்களிடம் போய்க் கேட்டால் வயது நாற்ப்பத்தி மூன்றகிவிட்டதால் இனிமேல் புத்திர பாக்கியம் கிடைப்பது கஷ்டம் என்று அடித்துச் சொல்கிறார்கள்.  அது உண்மையா என்பது எனது இரண்டாவது கேள்வி.

அகத்தியர் நாடி பார்த்து எனது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியுமா? என்றார் அந்த நடுத்தர வயது பெண்மணி. தேங்காய் உடைத்தார்ப்போல் நறுகென்று கேட்டு விட்டு அமைதியாகிவிட்டார்.

அருகிலிருந்த அவரது கணவரோ மெள்ளவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தர்ம சங்கடத்தில் நெளிவது என் கண்ணில் தென் பட்டது.

உண்மையில் நாற்ப்பது வயதைத் தாண்டிவிட்டால் பெண்கள் கர்ப்பம் தரிப்பது அரிது.  இன்னும் சொல்லப் போனால் நாற்ப்பத்தி மூன்றைத் தாண்டி விட்டால், கண்டிப்பாக குழந்தை பெரும் பாக்கியம் இல்லை என்பது மருத்துவர்களது கணிப்பு.  இது அனுபவப் பூர்வமான பொதுவான உண்மையும் கூட.

எல்லாவிதமான பரிகாரங்கள் ப்ர்ரர்த்தனைகளைச் செய்து இருபத்தி மூன்று வருடங்களாக அலுத்துப் போன பின்பு, கடைசியாக அகத்தியர் ஜீவநாடியை நம்பி அந்த அம்மணி வந்திருக்கிறார் என்பது தெரிந்தது.

இந்த வயதில் குழந்தை தேவையா? என்று தான் எல்லோருக்கும் எண்ணம் வரும்.  ஆனால் சென்னை அடையாறு பகுதியில் பிரம்மாண்டமான பங்களா, திருச்சி நகரில் ஏராளமான வாழைத்தோப்பு, நன்செய், புன்செய் நிலங்கள் என்று பல கோடிகளுக்கு அதிபதி.  அந்த அம்மணியின் கணவருக்கு கூடவே நல்ல படிப்பு, ஒரு தனியார் கம்பனியில் மிக உயர்ந்த உத்தியோகமும் இருந்தது.

இவர்களுக்கு வாரிசு பாக்கியம் இல்லாமல் போனால் அவர்களுடைய சொத்துக்களை நாகரீகமான முறையில் மிரட்டிக் கொள்ளையடிக்க அம்மணியின் உறவுக்காரர்களும் இருந்தனர்.  அவளது கணவரின் உடன் பிறப்புகளும் காத்திருந்தனர்.

ஆனால் தனக்கு நிச்சயம் வாரிசு உண்டு என்ற நம்பிக்கையில் அந்த அம்மணி இருந்தார்.  டாக்டர்கள் கைவிட்டு விட்டதால் இப்போது அகத்தியர் ஜீவ நாடியை நோக்கி அரைகுறை நம்பிக்கையோடு வந்திருக்கிறார்கள், என்பதை அவர்கள் சொல்வதின் மூலம் அறிந்தேன்.

கடைசி நிமிஷத்தில் வந்து இப்படி கேட்கிறார்களே; அகத்தியர் இதற்கு என்ன பதில் தரப்போகிறாரோ என்ற கவலை எனக்கு ஏற்பட்டது.  ஒரு வேளை புத்திர பாக்கியம் இல்லை என்று சொன்னால், அவர்கள் மனம் உடைந்து போகலாம்.  ஆன்மீகத்தின் மீது வெறுப்பு கொள்ளலாம்.  அகத்தியரை நம்பி வந்தது வீண் என்று கூட ஆத்திரத்தில் திட்டலாம்.

இதையும் தாண்டி, மருத்துவர்களை ஆச்சரியப்படுத்தும் விதத்தில் குழந்தை பிறந்தால் அது விஞ்ஜான  உலகத்துக்கு இன்ப அதிர்ச்சியை தரும்.  நமக்கும் சந்தோசம் வரும்.  இதற்கு அந்த தம்பதிகளுக்கும் பாக்கியம் இருக்க வேண்டும்.  என்ன சொல்கிறாரோ பார்ப்போம் என்று அகத்தியர் ஜீவ நாடியைப்  பிரித்தேன்.

"முன் ஜென்மத்தில் இதே நாள் இதே நட்சத்திரத்தில் பொதிகை மலையில் அகத்தியன் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து குளிரவைத்ததை அகத்தியன் இன்று நினைவு கூர்வேன்.  இவளே குழந்தைகள் சிலவற்றை கருவிலே கொன்ற குற்றமும் உண்டு.  அது மிகப் பெரிய பிரம்மஹத்தி தோஷமாக மாறியதால் அதற்காக இத்தனை ஆண்டு பிள்ளை வரத்திற்காக காத்து நிற்க வேண்டியதாயிற்று" என்று சொன்ன அகத்தியர் "இதுவரை செய்திட்ட பரிகாரங்களிலும். பிரார்த்தனைகளிலும் தீட்டு கலந்து இருந்ததால் அத்தனையும் பொய்த்துப் போயிற்று.  இனி செய்யும் பிரார்த்தனை ஒன்று உண்டு.  பின்னல் நாகசிலையை ஆகம விதிப்படி நார்ப்பத்தைந்து நாட்கள் பூசித்து, அதனை குல தெய்வ சன்னதிக்கு அருகே வடகிழக்குத் திசை நோக்கி நிறுவிய ஆறு அமாவாசைக்குள் இன்னவள் கர்ப்பம் தரிப்பாள், என்ற ஓர் மங்கள வார்த்தையை அகத்தியர் அருள் வாக்காக உதிர்த்தார்.

இதைப் படிக்கும் பொழுது எனக்கே சந்தோசம் ஏற்பட்டது.  அப்படியென்றால் இதைக்கேட்ட அவர்களுக்கு எவ்வளவு சந்தோசம் ஏற்பட்டு இருக்கும் என எண்ணினேன்.

ஆனால் -

அவர்கள் முகத்தில் கொஞ்சம் கூட சந்தோஷக் களையே ஏற்படவில்லை.  இது எனக்கு அதிர்ச்சியை தந்தது.

இதைப்போல் பலதடவை செய்தாயிற்று.  எந்த பலனும் இல்லை. இதைத் தவிர வேறு பிரார்த்தனை ஏதேனும் உண்டா? கேட்டுப் பாருங்கள் என்றார் அந்த அம்மணி.

அகத்தியர் என்ன காய்கறிக் கடையா நடத்துகிறார்.  இந்தக் காய் வேண்டாம்; வேற  கறிகாய் கொடுங்கள் என்பதற்கு? என்று ஆவேசமாக கேட்கத் தோன்றியது.

ஒரு சித்த புருஷரிடம் எப்படி பேசுவது என்றே பெண்மணிக்குத் தெரியவில்லையே? என்ற கோபமும் ஏற்பட்டது. இருந்தாலும் வார்த்தைகளை அடக்கிக் கொண்டேன்.

நீங்கள் பிரதிஷ்டை செய்தது ஜீவ கல்லா? என்றேன்.

யார் கண்டா? எதோ ஒரு கல்.  ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்தாயிற்று.

அது ஜல வாசம், பால் வாசம், தான்யா வாசம் செய்து வைக்கப்பட்டதா? என்றாவது தெரியுமா?

"தெரியாது" என்று அலட்சியமாக பதில் வந்தது.

வேறு எங்காவது சென்று நாடி பார்த்துக்கொள்ள வேண்டியதுதான்.  இனி பரிகாரம் வேறு எதுவும் இல்லை என்று சொல்லி நாடியை இழுத்துக் கட்டினேன்.

என் செயலை கண்டு பதறிப் போன அந்தப் பெண்ணின் கணவர் எங்களை மன்னித்துக் கொள்ளுங்கள்.  விரக்த்தியின் விளிம்பில் இருக்கிறாள், அவள்.  நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதை சொல்லுங்கள்.  உங்கள் சொற்படியே நான் செய்கிறேன் என்று கெஞ்சினார்.  சில மணி நேரம் வாய் பேசவில்லை.

மனதை இலவம் பஞ்சாக மாற்றிக் கொண்டு அகத்தியர் நாடியை மீண்டும் பிரித்துப் படித்தேன்.

"இன்னதென்று அறிகிலார்.  இவர் தம் பிழையை மன்னிப்போம்" என்று குறு நகையுடன் கூறிய அகத்தியர், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு மரித்துப்போன இந்த பெண்மணியின் தந்தை முருகவேல் மறுபிறவியாக இன்னவள் கருவில் வந்து பிறப்பான்.  பின்னரும் ஓர் பெண்மகவு இவளுக்கு உண்டு.  இந்த இருவருமே பங்குனி மூல நட்சத்திரத்தில் புதன் அன்று காலையில் ஜனிப்பார்கள்.  அந்த இரு குழந்தைகளுக்கு இடைவெளி இரண்டு ஆண்டுகள் இருக்கும்" என்ற வியத்தகு செய்தியை அருளினார் அகத்தியர்.  இந்த செய்தியை கேட்ட பிறகுதான் அந்த அம்மணி முகத்தில் லேசாக சந்தோஷம் மலர்ந்தது.

ஐந்து மாதம் கழிந்திருக்கும்.

ஒரு நாள் காலையில் அந்த தம்பதியர் இருவரும், நிறைய பழங்கள், பூ, வெற்றிலை, பாக்கு நிறைந்த தட்டுடன் என்னைத் தேடி வந்தனர்.  முகத்தில் ஏராளமான சந்தோஷம் பூத்துக் குலுங்கியது.

"அய்யா, அகத்தியப் பெருமான் சொன்னபடி மறுபடியும் முறைப்படி, தீட்டு கலக்காமல் ஜீவ கல் பின்னல் நாகத்தை பூசித்து எங்கள் குலதெய்வக் கோவிலில் நிறுவி விட்டோம்.  இப்பொழுது இறைவன் புண்ணியத்தால், அருள் வாக்கினால் கருவுற்று இருக்கிறாள்.  குழந்தை நல்லபடியாகப் பிறக்க அகத்தியர் ஆசிர்வாதம் வேண்டும்" என்று சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.

"டாக்டர்கள் என்ன சொன்னாங்க" என்று கேட்டேன்.

"இது தெய்வச் செயல் என்றார்கள்.  இருந்தாலும் குழந்தை பிறக்கும் வரை மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லி ஆச்சரியப்பட்டர்கள்" என்றவர், "ஏன் சார் குழந்தை நல்ல படியா பிறக்கும் இல்லையா?" என்று பயத்தில் ஒரு கேள்வி கேட்டார்.

"கொஞ்சம் பொறுங்கள் அகத்தியரிடமே இதைப்பற்றி நேரிடையாக கேட்டு விடலாமே" என்று நாடியைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

நம்பிக்கையோடு செய்கின்ற காரியங்கள் அத்தனையும் வெற்றி பெரும்.  தீட்டு கலந்த பக்தி, தெய்வ நம்பிக்கை இல்லாத பக்தி; முழுமையான மனதோடு அன்னதானம் செய்யாமை; நடந்ததற்கும், நடந்து கொண்டிருப்பதற்கும், இனி நடக்கப்போவதற்கும் எல்லாமே இறைவன் என்ற எண்ணம் இல்லாமல் பேசுவது, செயல்படுவது போன்ற எண்ணங்களை, செயல்பாடுகளை எவனொருவன் விட்டு விடுகிறானோ அன்று முதல் அவன் அதிஷ்டசாலியாகிறான்.

இதுவரை உன் மனைவி இப்படிப்பட்ட எண்ணத்தோடு செயல் பட்டாள்.  பலன் கிட்டவில்லை.  அகத்தியன் சொற்படி நடந்தால்.  இதன் காரணமாக அவள் தலைவிதியும் மாறியது.  மருத்துவ உலகமே வியக்கும் வண்ணம், இந்த வயதிலும் இரு குழந்தைக்கு தாயாவாள்.  இருப்பினும் அவ்வப்போது சிறு தடங்கலும் உண்டு.  அந்தத் தடையை மீற இன்று முதல் நீங்கள் இருவரும் ஒரு யாகம் செய்து காப்பிட்டுக் கொள்ள வேண்டும்" என்று கூறி, ஒரு ரகசியமான யாகத்தை விடியற்காலை பிரம்மா முஹுர்த்தத்தில் செய்ய உத்தரவிட்டார், அகத்தியர்.

சாதாரணமாக இதைச் சொன்னால், எதற்கு? ஏன்? என்று கேள்வி கேட்க்கும் அந்தப் பெண்மணி, அகத்தியர் சொன்னபடி அந்த யாகத்தையும் செய்தாள்.  அதோடு மட்டுமின்றி, பிள்ளை பெரும் வரை தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்ற அகத்தியர் இட்ட உத்தரவையும் ஏற்று, யாருக்கும் தெரியாமல் மறைவான ஓர் இடத்தில் தங்கவும் செய்தாள்.

அகத்தியர் சொன்ன படி அவர்களுக்கு இந்த நாற்பத்தி நான்கு வயதில் யாருக்கும் தெரியாமல் மறைவான இடத்தில் ஏன் பிரசவம் வைத்து கொள்ளச் சொன்னார் என்ற கேள்விக்கு அகத்தியர் விடை சொல்லவில்லை.

குழந்தை நல்லபடியாகப் பிறந்தால் சரி என்று நானும் விட்டு விட்டேன்.  அவர்களுக்கும் அப்போது இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.  பின்னர் அதற்கான விடையை அகத்தியரே சொன்னார்.

சொத்து ஆசையில் அவர்களுடைய உறவினர்களில் சிலர், அந்த அம்மணிக்கு கர்பத்தைக் கலைக்க, பிறக்கின்ற குழந்தையைக் கொல்ல பல்வேறு வகையில் திட்டமிட்டிருந்தனர்.  உணவில், மருந்தில் இதையும் தாண்டி குழந்தை பிறந்தால் மருத்துவமனையில் அந்த வாரிசைக் கொன்று விட்டால் தங்களுக்கு அவர்களின் சொத்து கிடைக்கும் என்று திட்டமிட்டிருந்தனர்.  இதை தடுக்கவே அகத்தியர் அந்த தம்பதிகளை வெளி நகரத்திற்கு அனுப்பி காப்பாற்ற வழி சொல்கிறார் என்று தெரிந்தது.

இதை செய்துவிட்டால், இனி உங்கள் வாரிசுக்கு எந்தவித ஆபத்தும் இல்லை என்று அருள்வாக்கு தந்தார் அகத்தியர்.  அதன்படியே செய்தனர்.  அவர்களுக்கு குழந்தையும் பிறந்தது.

இதற்கு பின்புதான் அந்த தம்பதிகளுக்கு மூச்சு வந்தது.