​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 August 2023

சித்தன் அருள் - 1423 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

ஓதி மலையில் வைகாசி விசாக தினமன்று நம் குருநாதர் அகத்தியப் பெருமான் வாக்குகளை உரைத்தார்!!!!!! அதில் மிக முக்கியமான விஷயங்களை எச்சரிக்கையோடு உரைத்துள்ளார் அதை அனைவரும் நாம் கடைப்பிடித்து வர வேண்டும்!!!!!

சித்த மார்க்கம் என்பது எந்த ஒரு உயிர் வதைத்தலையும் பலியையும் ஏற்றுக்கொள்வதில்லை!!!!! இறைவனும் ஏற்றுக் கொள்வதில்லை சித்தர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மனிதர்கள் தங்களுடைய வசதிகளுக்கு ஏற்ப காலம் காலமாக செய்து வருகின்றோம் என்று மனிதர்களே முடிவுகள் செய்து மனிதர்களே சில சடங்குகளை செய்து வருகின்றார்கள்!!!!   

இறை!!!!!!!!! அந்தச் சடங்குகளை ஏற்றுக் கொள்வதில்லை!!!

காவல் தெய்வங்களுக்கு செய்யப்படும் பலி பூசைகளை கூட குருநாதர் அப்படி செய்யக்கூடாது எப்படி செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய வாக்குகளில் ஏற்கனவே உரைத்திருந்தார்.

முருகன் பக்தர்களாக இருந்தாலும் சரி சிலர் பாரம்பரியம் என்றும் சம்பிரதாயம் என்றும் குல வழக்கம் என்று முருகனை ஒருபுறம் வணங்கிக் கொண்டே இருந்தாலும் ஒரு புறம் உயிர் பலி தருதலையும் செய்து வருகின்றார்கள் குறிப்பாக சேவல் கோழியை பலியிடுகின்றார்கள். இது மிகவும் தவறான செயலாகும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானும் முருகனும் சித்தர்களும் இதை ஏற்றுக் கொள்வதே இல்லை!!!! இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதை குருநாதர் ஏற்கனவே கூறி இருந்தால் இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் இறைவனுக்கு சொந்தம் இறைவன் தான் அனைத்திற்கும் தந்தையானவன் அப்படிப்பட்ட இறைவன் தன்னுடைய பிள்ளைகளையே பலியாக கேட்பானா???? என்றும் காகபுஜண்டர் மகரிஷி ஒரு படி மேலே போய் உங்கள் பிள்ளைகளை இப்படி செய்வீர்களா? இறைவனுக்காக பலியிடுவீர்களா என்று கோபத்துடன் வாக்குகள் தந்திருந்தார் இதனை நினைவில் கொள்ள வேண்டும்!!!!!

அழகன் முருகன் வாகனமாக மயிலையும் கொடியாக சேவலையும் அணிந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்!!!

முருக வழிபாடுகளில் வேலும் மயிலும் சேவலும் இன்றியமையாத ஒன்று எப்படி நாம் மயிலை கண்டால் முருகனின் வாகனம் முருகா முருகா என்று முருகனுக்கு அரோகரா என்று வணங்கி துதிக்கின்றோமே அதேபோலத்தான் சேவலை கண்டாலும் முருகனுடைய கொடி ஜீவன் என்று போற்றுதலை செய்ய வேண்டும்.

முருகனையே மூச்சென வாழ்ந்து!!!!!! எப்படி ஈசனுக்கு 63 நாயன்மார்களோ அதே போல முருகனுக்கென முருகனே கதி என்று இருந்த ஞானிகளில் அருணகிரிநாதர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் முருகனிடம் எப்பொழுதும் அருகிலேயே இருக்கின்ற அருட்பேறுபெற்றவன் அருணகிரி!!!!! என்று அருணகிரிநாதர் பற்றி குறிப்பிடுவார்!!!

அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் கணபதி துதி அதாவது நெஞ்ச கன கல்லு நெகிழ்ந்து ......... பாடல் கணபதி துதி பாடல் இதை அடுத்து முதல் பாடலாக

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே!!!!!

அணி சேவல் என சேவலின் மகத்துவம் குறித்து கந்தர் அனுபூதி பாடலில் முதல் பாடலில் எழுதி இருக்கின்றார்.

சேவல் விருத்தம்

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் வேல் விருத்தம் மயில் விருத்தம் கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் இதில் சேவலுக்கு என்று தனி இடம் கொடுத்து சேவல் விருத்தம் மொத்தம் 11 பதிகங்கள் அடங்கிய விருத்தத்தை சேவல் மீது பாடியுள்ளார்!!!!!

பக்தர்கள் அனைவரும் இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்!!!!

ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் ஓதியப்பர் முன் கண்டிப்புடன் உரைத்த வாக்கு 

எதை என்று அறிய அறிய அப்பனே மறுமுறை யான் இங்கே வருவேன் அப்பனே பிற உயிர்களை கொல்லக்கூடாது என்பேன் அப்பனே!!!!

முருகனுக்கு பிடித்தமான ஒன்று எதை என்று அறிய அறிய அப்பனே """"""" சேவல்!!!!!

ஆனால் அதனையே................????? பின் எவை என்று அறிய அறிய பின் எப்படியப்பா????????? முருகன் கொடுப்பான்???????

மக்கள் அப்படித்தான் செய்கின்றார்கள்!!!!!!!

அப்பனே பிற உயிர்களை கொல்லக்கூடாது அப்பனே!!!! இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!!!!

ஒரு பக்தர் குருநாதரிடம் தன் வீடு அமைப்பதை குறித்து கேட்டபொழுது!!!!

அப்பனே எதைச் செய்ய வேண்டும்??? அப்பனே!!!

வீட்டை எடுத்து அப்பனே விற்று விடு!!!!

விற்று விடுவாயா?? என்ன??

அப்பனே வீடு இல்லாதவரும் உண்டு என்பேன் அப்பனே அவர்களெல்லாம் வாழ்கின்ற பொழுது அனைத்தும் கொடுத்திருக்கின்றான் அப்பனே வாழத் தெரியாமல் நீ வாழ்ந்து வருகின்றாய் அவ்வளவுதான் அப்பனே!!!

அப்பனே அதனால் பின் அனைவருமே வீட்டை எதை என்று அறிய அறிய அதாவது இல்லத்தை பின் இப்படிச் செய் அப்படி செய் என்று நன்றாகத்தான் எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுதெல்லாம் வாஸ்து கூட!!!

அப்பனே ஆனால் மனிதன் இறக்காமல் இருக்கின்றானா?!!! சொல்???? அப்பனே!!!

அதற்கு பதில் சொல் அப்பனே யான் சொல்கின்றேன்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஓர் வீடு அமைப்பாக அழகாக இருப்பதற்காகத்தான் மனிதன்(வாஸ்து) இதையெல்லாம் அப்பனே!!!

ஆனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய இல்லத்தில் அப்பனே இறைவன் பலம் இருக்க யாராலும் ஒன்றும் எதை என்றும் அறிய அறிய செய்வதற்கு ஆள் இல்லை!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய யான் சொல்கின்றேன் அப்பனே ஒன்றை இல்லத்தை அமைத்துக் கொண்டு அப்பனே மற்றொரு உயிரைக் கொன்று சமைத்து சாப்பிடுவான் என்பேன் அப்பனே அவ்வாறு இருக்க தரித்திரமாம்???!!!!!!!! இல்லமாம்?!?!?!!!!!!!!

அப்பனே இதை கேட்காவிடில் அப்பனே இன்னும் வீட்டை அமைப்பதில் குறியாக உள்ளான் என்பேன் அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் அப்பனே இறைவன் கொடுத்திருப்பான் ஆனாலும் எதை என்று அறிய அறிய மீண்டும் பிடுங்கி கொள்வான் என்பேன் அப்பனே!!!!

அதனால் ஒவ்வொருவரும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பிற உயிரை பின் கொல்லாமல் இருங்கள்!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் எதை என்று அறிய அறிய உங்களுக்கு வேண்டுமென்றால் இறைவனிடத்தில் முறையிடுகின்றீர்கள் அப்பனே!!!!!

அவையும் வாயில்லா அதாவது ஜீவராசிகளும் கூட அவைகளும் கூட இறைவனிடத்தில் முறையிடும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது போட்டி கொண்டு நீங்களும் பின் எவை என்று கூட ஐந்து அறிவு உள்ள ஜீவராசிகளும்!!!

ஆனால் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளின் பேச்சை தான் இறைவன் கேட்பான்!!! அவைகளுக்குத் தான் உதவி செய்வான் இறைவன்!!!!!!

அதனால் எதை என்று அறிய அறிய இப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நிச்சயம் செய்ய மாட்டான்!!!

ஆனாலும் யான் அனைத்தும் செய்தேனே!!!!! இறைவனை வணங்கினேனே!!!!! இன்னும் பட்டினி( விரதம்) கிடந்தேனே!!!! என்றெல்லாம்!!!!!

அப்பனே லாபமே இல்லை!!!!

ஒரு பக்தர் இடைமறித்து இறைவனுக்காகத்தானே பலியிடுகின்றோம் என்று கூற!!!!!

குருநாதர்!!! 

சரி அப்பனே!! இறைவன் உன்னை கேட்டனா???? அப்பனே!!!!

அப்படி வெட்டுகின்றீர்கள் ஆனால் கடைசியில் நீதான் சாப்பிடுகின்றாய் அப்பனே இது தரித்திரமாகுமா!! ஆகாதா???

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே சரி அவ்வாறாகவே நீ வைத்துக்கொள்!!! அப்பனே 

கடைசியில் கை கால் முடக்கம் அப்பனே வாய் ஊனம் நோய்கள் வந்துவிடும் அப்பனே அவ்வளவுதான் தெரிவித்துவிட்டேன் அப்பனே இதற்கு சம்மதம் என்றால் அப்பனே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! எதையென்றும் அறிய அறிய!!! 

கடைசியில் பார்த்தால் அப்பனே எவை என்று கூற உண்மை நிலையை புரிந்து கொண்டு பின் விட்டு விடுதல்!!!!!!!

எல்லாம் செய்துவிட்டு கடைசியில் உணர்வதில் என்ன பிரயோஜனம் அப்பனே?????

மனிதன் கர்மங்களை சம்பாதிக்க கூடாது புண்ணியங்களை தான் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்பனே!!!

ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் பெருமான் மேலும் அடியவர்களுக்கு நேரடியாக ஓதிய உபதேசங்கள் தொடரும் !!!......

அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்

காப்பு – கொந்தார் குழல்
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்
கொண்டேழ் இசைமருளக்
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி
குமரன் இதம் பெறுபொன்
செந்தா மரைகடம் நந்தா வனமுள
செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு
சேவல் தனைப்பாட
வந்தே சமர்பொரு மிண்டாகிய
கய மாமுகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்
மாமேருவில் எழுதிப்
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு
பணி சிவலிங்கமதைப்
பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்
பரமன் துணையாமே.

சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே


1. உலகிலநுதின

உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பரகதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள் மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடின முற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து
சிறகைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதை
குறவரிசையின மகள் அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொடு அடியுதவும் அறுமுகவன்
சேவல் திருத்துவசமே.

2. எரியனையவியன்

எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்க்
கரத்தடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடுகிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலி எனெனச் சிறிய
சரணஅழகொடு புரியும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவல் திருத்துவசமே.

3. கரிமுரட்டடிவலை

கரிமுரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை யிறுக்கியும் முறைத்துக்
கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடருமக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனும் அப் பொழுதில் நட்புடன் வரக்
குரலொலித்து அடியர் இடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற்கையனுடற் கருகும்வெப் பகையையுற்
பனமுறைத் ததமிகவுமே
அமணரைக் கழுவில் வைத்தவருமெய்ப் பொடிதரித்
தவனி மெய்த்திட அருளதார்
சிரபுரத் தவதரித்த அவமுதத் தினமணிச்
சிவிகை பெற்றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரை செய்விற் பனனிகற்
சேவல் திருத்துவசமே.

4. அச்சப்படக்குரல்

அச்சப் படக்குரல் முழக்கிப் பகட்டியல்
அறிக்கொட்டமிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுக்கடி
அறுக் குழைகளைக் கொத் தியே
பிச்சுச் சினத்து தறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்
பொய்ச் சித்திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத்தயில்விடும்
புத்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச் செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவல் திருத்துவசமே.

5. தானா யிடும்பு

தானா யிடும்பு செயு மோகினி இடாகினி
தரித்த வேதாள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினா லுதறித்
தடிந்து சந்தோடமுறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர்
குலவு சிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
கொட்டி யெட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவன் நற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனாபதித் தலைவன் வேதா வினைச்சிறைசெய்
தேவாதி கட்கரசுகள்
ஏனான மைக்கடலின் மீனானவற்கு இனியன்
சேவல் திருத்துவசமே.

6. பங்கமா கியவிட

பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்துச் சிவத் தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள்புரி
பச்சைக் கலாப மயிலைத்
துங்கமாயன் புற்றுவன் புற் றடர்ந்துவரு
துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னும்
நரசிங்கமாய் இரணியனுடல்
சிந்த உகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
சேவல் திருத்துவசமே.

7. வீறான காரிகதி

வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடு பேய்கள் ஏகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய் களைத்துரத்திப்
பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்
பேசி யுச்சாடனத்தாற்
பிடர் பிடித் துக் கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாத பித்தஞ் சிலேற் பனங்குட்ட முதலான
வல்ல பிணிகளைமாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கும் முருகன்
சிலைகள் உருவிடஅயிலை விடுகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.

8. வந்து ஆர்ப்பரிக்கும்

வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர்ப் பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட
வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவைசெம்
பவளமா கதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
பார்த்து அன்புறக் கூவுமாம்
முந்தாகமப் பலகை சங்காத மத்தர்தொழ
முன்பேறு முத்தி முருகன்
முதுகானகத்து எயினர் பண்டோடு அயிற்கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
சித்தர்க்கு இரங்கு அறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன் முடிகுற்றி
சேவல் திருத்துவசமே.

9. உருவாய் எவர்

உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட் பொருளதாய்
வரு மீசனைக் களப முகன் ஆதரித்திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
வைகு மயிலைப் புகழுமாம்
குரு மாமணித்திரள் கொழிக்கும் புனற்கடம்
குன்று தோறாடல் பழனம்
குழவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங்
குன்றிடம் திருவேரகம்
திரை ஆழிமுத்தைத் தரங்கக்கை சிந்தித்
தெறித் திடுஞ் செந்தினகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
சேவல் திருத்துவசமே.

10. மகரசல நிதி

மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடுகிடு கிடெனவே
மகுடகுட வடசிகரி முகடு படபட படென
மதகரிகள் உயிர்சிதறவே
ககன முதல் அண்டங்கள் கண்ட துண்டப் படக்
கர்ச்சித் திரைத்தலறியே
காரையாழின் நகரர் மாரைப் பிளந்து
சிறகைக் கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
துடியிடைய னகை யசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவ நிதை துணைவன் எனது இதய நிலையோன்
திகுட திகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.

11. பூவிலியன் வாசவன்

பூவிலியன் வாசவன் முராரி முநிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற
அநு போக பதினாலு உலகமும்
தாவு புகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தான தவநூல் தழையவே
தாள் வலியதான பல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரல் பயிலுமாம்
காவுகனி வாழை புளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடனக்
காரண மெய்ஞ்ஞான பரி சீரண வராசனக்
கனகமயில் வாகனன் அடல்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முகச்
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவல் திருத்துவசமே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1422 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday 30 August 2023

சித்தன் அருள் - 1421 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


நாட்கள் மெதுவாக நகர்ந்தது. அனைத்து சலனமும் நின்று போனதால், வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே, கூடுதல் நேரம் அமர்ந்து யோகா மூச்சுப்பயிற்சி செய்வது, உடலில் அதனால் வரும் மாற்றங்களை கவனித்து, பின்னர் நேரம் கிடைக்கும் பொழுது யோகா ஆச்சர்யனிடம் சந்தேகங்களை கேட்டறிவது என்று நேரத்தை கடத்தினார்.

இப்படி சென்று கொண்டிருந்த நிலையில், வெளிநாட்டில் வேலைக்கு விண்ணப்பித்தால் என்ன! என்ற எண்ணம் உதித்தது. ஆனால், அதற்கு உடலில் எந்த நோயும் இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் வேண்டும். கடைசி முறையாக மருத்துவமனை இவரை பரிசோதித்து, இனி ஒன்றும் செய்வதிற்கில்லை என்று கொடுத்த பரிசோதனை முடிவுகளும், மருத்துவ சான்றிதழ்களும் அவர் கையிலிருந்தது. அதில் முடிவுகள் இவருக்கு எதிராக 30 நாட்களுக்குத்தான் கொடுக்கப்பட்டிருந்தது. வாசித்த பொழுது உள்ளே சற்று பதட்டம் வந்தாலும், சுதாகரித்து, மிகப்பெரிய மருத்துவமனையிலேயே பரிசோதனைக்கு செல்லலாம் என தீர்மானித்து, பாரதத்தின் முதல் தர மருத்துவ மனை ஆனா எய்ம்ஸ் ஐ தேர்வு செய்து சென்றார்.

இவரது கடைசி ரிப்போர்ட்டை வாசித்த மருத்துவர்கள், அனைத்து விதமான பரிசோதனைகளையும் செய்தனர். ஒவ்வொரு பரிசோதனை முடிவும் வர வர அவர்களுக்கு வியப்பும், ஆச்சரியமும் தான் மேலோங்கியது. கடைசி ரிப்போர்ட்டில் கூறப்பட்டிருந்த எந்தவித பாதிப்பும் உடலுள் எங்கும் இல்லாமல் இருந்தது. எதற்கும் தலை முதல் கால் வரை எடுக்கும் முழு உடல் பெட் ஸ்கேன் என்கிற பரிசோதனையையும் எடுத்துவிடலாம் என இவரை கொண்டு சென்றனர்.

இவர் உடல் நிலையை கேள்விப்பட்ட மருத்துவர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு பெரிய குழு ஸ்கேன் எடுக்கும் பொழுது கூட இருந்து, அவர் உடலின் உள்ளுறுப்புகளை உன்னிப்பாக கவனித்தது. முடிவு, "உடலுள் ஒரு குறையும் இல்லை" என்று சான்றிதழ் கொடுத்தது.

முதலில் ஒரு மருத்துவர், "நீங்கள் இத்தனை நாட்களாக என்ன மருத்துவ முறையை தொடர்ந்தீர்கள்?" என்று வினவ, முன் ரிப்போர்ட்டில் சொன்ன அலோபதி மருத்துவ முறைதான் என்று கூறினார்.

அவரது ரத்தம் சம்பந்தமான முடிவை வாசித்து, "இல்லை நீங்கள் பொய் சொல்கிறீர்கள், இந்த மருந்துகளை சாப்பிட்டிருந்தால், உங்கள் தற்போதைய ரிப்போர்ட், இப்படி இருக்காது. உண்மையை சொல்லுங்கள்" என்று வற்புறுத்த அனைவரும் இவரை சூழ்ந்தனர்.

அதே பதிலை மறுபடியும் அவர்களுக்கு தெரிவிக்கவே, அனைவரும் சோர்ந்து போயினர்.

"இல்லை நண்பரே! உங்கள் தற்போதைய பரிசோதனை முடிவுகளின் படி, இந்த அளவுக்கு பாதிக்கப்பட்ட ஒருவர் இந்த நிலைக்கு மாறியிருப்பார் என்று எங்களால் நம்ப முடியவில்லை. என்னவகை மருத்துவ முறை, யாரிடம் எடுத்தீர்கள் என்று தான் கேட்க்கிறோம். ஏன் என்றால் அதே முறையை இங்கு பலருக்கும் நாங்கள் பரிந்துரைக்கலாமே, பலரும் காப்பாற்றப் படுவார்களே!" என்று கேட்டனர்.

இது ரகசியமாக இருக்க வேண்டும், இதிலுள்ள ஆபத்துக்கள் என்ன என்று முன்னரே அவருக்கு தெரிவிக்கப்பட்டிருந்ததாலும், அவர் எந்த காரணம் கொண்டும் காட்டிக் கொடுக்க கூடாது என தீர்மானித்து, "நான் தினமும் யோகா செய்து வருகிறேன்!" என்று மட்டும் கூறினார்.

யோகா என்று கேட்ட மருத்துவர்கள், விவரிக்க கேட்க, அதை பற்றி சொல்லத் தெரியாது, ஆனால், சுவாசப்பயிற்சியும், ஆசனங்களும் கற்று தினமும் செய்து வருகிறேன். அதனால் உடல் நலமாக இருக்கிறேன், என்று கூறி முடித்தார்.

எவ்வளவோ முறை, ஏதேதோ முறையில் கேட்டுப்பார்த்தும், யாரிடம் கற்றேன் என்பதை அவர் தெரிவிக்க மறுத்துவிட்டார் என்பதே உண்மை. அதன் பின்னர் வெளி நாட்டில் அவருக்கு வேலை கிடைத்து, அங்கிருந்தே கிளம்பி சென்று விட்டார். சொந்த ஊர் பக்கம் வரவே இல்லை.

இதே போல், "கார்டியோ மயோபதி" என்று ஒரு இருதயம் சம்பந்தமான நோய் உள்ளது. இதற்கு அலோபதி மருத்துவர்கள், தினமும் மாத்திரைகள் போட்டு வாருங்கள், இதற்கு தீர்வு கிடையாது. உண்டெனில் மரணம்தான் என்பர். அதாவது, நுரையீரலை சுற்றி இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு, அதனை விரிவடைய விடாமல் அழுத்தும். அப்படிப்பட்ட நிலையில் இருதயம் தன் ரத்தத்தை வெளியே தள்ளும் சக்தியை மெதுவாக இழக்கும். அதன் பின் பிற உடல் உறுப்புகளுக்கு ரத்தம் போய் சேராமல், செயலிழக்க, இருதயம் திடீர் என நின்று விடும். அப்படிப்பட்ட ஒரு நோயாளிக்கு யோகாவின் ஸ்வாசப்பயிற்சி மட்டும் எடுத்து, அவர் இன்றும் நலமாக வாழ்ந்து வருகிறார். ஸ்வாசப்பயிற்சி தொடங்கும் போது 30% இருந்த அவர் இருதய துடிப்பின் அழுத்தம், ஒரே மாதத்தில் 80%க்கு சென்றது. ஒரு மருத்துவக்குழுவே அவரை பரிசோதித்து வியந்தது.

மேலும் கொரோனா பாதிப்பு சமயத்தில் அரசாங்க உத்யோகத்தில் இருந்த பலரும், பொது மக்கள் பணிக்காக ஓய்வின்றி உழைக்க வேண்டி வந்தது. அதில் மத்திய அரசு வேலையில் இருக்கும் அதிகாரி ஒருவர் மூன்று முறை கொரோனாவால் பாதிக்கப்பட்டு வெளி வந்தார். மூன்றாவது முறை பாதிக்கப்பட்டபின் அவரால் ஆக்சிஜென் சிலிண்டரின் உதவி இன்றி சுவாசிக்கவோ, எங்கேனும் செல்லவோ முடியாத அளவுக்கு ஆகிவிட்டது. அவருக்கு கை பிடித்து நாடி பார்த்து, உடலின் ஆதார சக்ராக்கள் அனைத்தையும் திறந்து சரிபண்ணி விட, அவர் மயங்கி விழுந்து விட்டார். இவர் கைத்தாங்கலாக அவரை பிடித்து அமர செய்து மூன்றே நிமிடத்தில் நினைவு வர ஒரு எளிய மூச்சு பயிற்சியை சொல்லிக்கொடுத்து "தினமும் செய்யுங்கள்" என்று அனுப்பி வைத்தார். அந்த நொடிக்குப்பின் இன்று வரை, ஆக்சிஜென் சிலிண்டர் தேவை இல்லாமல் போயிற்று. விடை பெற்றவர்கள், மறுநாளே, பழனி, திருவண்ணாமலை, சிதம்பரம், காஞ்சிபுரம், காளஹஸ்தி, திருப்பதி என புண்ணிய தலயாத்திரையும், திருவண்ணாமலையில் கிரிவலமும் (ஆக்சிஜென் சிலிண்டர் இன்றி) செய்ததும் ஆச்சரியமாக இருந்தது.

அடியவர்களே! நம் பாரதத்தின் சித்தர்கள், ரிஷிகள், சாதுக்கள் கற்பித்த யோகா முறைகள், ஸ்வாசப்பயிற்சிகள், ஆசனங்கள் போன்றவை, எத்தனை மகத்தானது என்பது ஒரு புறம் அறிய முடிந்தாலும், அனைத்திலும் அவர்கள் கண்டுபிடித்து, உள்புகுத்தி வைத்திருப்பது அதிர்வலைகள்தான். மனித உடலுக்கு தன்னைத்தானே குணப்படுத்திக் கொள்ளும் சக்தி நிறையவே உண்டு. அப்படிப்பட்ட உடலுக்கு சரியான அதிர்வலைகளை, சரியான கால அளவு உணவாக ஊட்டிவர குறை விலகி நலமாகும்.

இத்துடன் இந்த தொகுப்பு நிறைவு பெற்றது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1420 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 29 August 2023

சித்தன் அருள் - 1419 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமானின் சித்தன் அருளிலிருந்து இன்றைய திருவோண நன்நாள் வாழ்த்துக்கள். அனைவரும் அகத்தியப்பெருமான் அருள் பெற்று நலமாக வாழ்க.

எல்லா மாதமும் பெருமாளுக்கு, திருவோண நட்சத்திரத்தில் கொடுக்கிற அர்க்யத்தை கொடுத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்! மறந்து போனவர்கள் செய்துவிடுங்கள். இனி, இன்றைய அருள்வாக்கை பார்ப்போம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday 28 August 2023

சித்தன் அருள் - 1418 - அன்புடன் அகத்தியர் - திருச்செந்தூர் வாக்கு!




22/8/2023 அன்று குருநாதர் அகத்தியப்பெருமான் உரைத்த பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : திருச்செந்தூர் செந்தில் கோட்டம்.

மூலத்தின் பரம்பொருளாக விளங்கும் ஷடாக்ஷரனை மனதில் எண்ணி செப்புகின்றேன்  அகத்தியன்!!!!

அப்பனே பல பல வழிகளில் கூட பல யுகங்கள் கூட கடந்துவிட்டது!!!!!

அப்பனே!!! ஆனாலும் மனிதனின் தன்மை அப்பனே அதாவது உண்மை நிலை மனிதன் புரிந்து கொள்ளவில்லையப்பா!!!! அவை மட்டும் இல்லாமல் அப்பனே பின் புரிந்து கொள்ளாமல் அப்பனே எதைச் செய்தாலும் அப்பனே தவறாகத்தான் போகும் என்பேன் அப்பனே!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே நிச்சயம் புரியும் வண்ணம் அப்பனே ஏன் ? எப்படி? எதனால்? நடக்கின்றது ? என்பதையெல்லாம் சிந்தித்து அப்பனே வரும் காலங்களில் செயல்பட்டால் தான் வெற்றி நிச்சயம் அப்பனே!!!!! 

மனிதனின் அப்பனே அதாவது மனிதனுக்கு அறிவுகள் அப்பனே பலவகைகள் கூட அப்பனே கொடுத்திருக்க இறைவன்!!!!........

ஆனாலும் அப்பனே அதை சரியாகவே அப்பனே பயன்படுத்துவதில்லை என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே இச் செந்தூரிலே!!!! அப்பனே ! எதை என்றும் அறியறிய அப்பனே வந்து கொண்டு இருந்தாலே!!!!! அப்பனே கடலில் நீராடி  அப்பனே பின் முருகனை தொழுது கொண்டு இருந்தாலே!!!!! அப்பனே நிச்சயம் அறிவுகள் பெருகுமப்பா!!!!!

உண்மைநிலை தெரியுமப்பா!!!!!

அப்பனே ஆனாலும் அதற்கும் அதாவது கந்தன் அப்பனே எதை என்று அறிய அறிய வழி விட வேண்டும்!!! என்பேன் அப்பனே!!!! 

அவனவன் கர்மாபடி அப்பனே அனைத்தும் நடந்தேறுகின்றது!!!!! 

ஆனாலும் அதையும் மீறி அப்பனே பாவம் என்று சில கர்மாக்களை ஒழித்து பின் இறைவனிடத்தில் சரணாகதி அடையுங்கள் என்று யான் எதை என்றும் அறிய அறிய சித்தர்கள் மறைமுகமாகவே அப்பனே பின் இயக்குகின்றோம்!!!!!!
மனிதனை!!!!

ஆனாலும் அப்பனே செல்கின்றான் அப்பனே ஆனாலும் சிறிது தூரம் சென்று அப்பனே இவ்வளவு கஷ்டங்களா!!!!!????? 

இறைவனை வணங்கியும் ஏன் ??என்று திரும்பி வந்து விடுகின்றான் அப்பனே!!!

இதனால் எதை என்று கூட ஒரு பயனும் இல்லையப்பா!!!!!

அப்பனே சோதனைகள் அப்பனே சோதனைகள்  கொடுக்க  கொடுக்க அப்பனே பக்குவங்கள்!!!  பிறந்து அப்பனே பக்குவங்கள் பிறக்க பிறக்க அப்பனே அனுபவங்கள் பிறந்து!! பிறந்து  !! இன்னும் இன்னும் ஞானங்கள் தோன்றுமப்பா!!!!!

இதுதான் உண்மைப்பா!!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!! 

இதனால் அப்பனே முக்திக்கான வழிகள் தேடிக் கொள்ளுங்கள் அப்பனே!!!!  உண்மை நிலையை தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!

அதனால் சொல்கின்றேன் அப்பனே!!!! இவ்வுலகத்தில் நடக்கப்போவது இனிமேலும் பக்தி என்பது கூட பொய்யானவையே செயல்படுத்திக் கொள்வான் அப்பனே!!!!!

காசுகளுக்காகவே அப்பனே!!!! அவை செய்தால் இவை நடக்கும்!!! இவை செய்தால் அவை நடக்கும் !!! என்பதெல்லாம் பொய்யான விஷயங்களப்பா!!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய  எவை புரியும் அளவிற்கும் கூட அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!! 

எதை என்றும் அறிய அப்பனே பின் அவை நடக்கும் இவை நடக்கும் என்று மனிதன் மனிதனை ஏமாற்றுகின்றானே!!!!..........

ஏன் ? இறைவனை நோக்கி நீங்கள் படையெடுக்கின்றீர்கள்?????? என்று கூட!!! 

யான் ஒன்றை தெரியாமலே கேட்கின்றேன். ஏன் ? செந்தூருக்கு வருகின்றீர்கள்????

உங்களால் அனைத்தும் செய்ய முடியுமே!!!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!! அதாவது இல்லத்திலே இருந்து கொண்டு பின் """"""""செந்தூரா !!!!!!!!!!!!!! வா என்று!!!!!! வரவழைத்து விட்டால் வருவானா???? என்ன????

அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள்!!!!!! அப்பனே!!

ஒவ்வொரு விஷயத்திலும் கூட அப்பனே கர்மத்தை சேர்த்துக் கொள்ளாதீர்கள் அப்பனே !!!!

பொய்யை நம்பினால் அப்பனே பின் எதை  என்று அறிய  அறிய நீ பொய்யானவனாகவே போவாய் !!!! 

பொய்யானவனாகவே போயிட்டு  பொய்யானவனாகவே!!! திரிந்து அப்பனே பின் எவை என்றும்  அறிய அறிய கடைசியில் பார்த்தால் அப்பனே பின் எதை என்று அறிய அறிய உண்மை நிலையை தெரிந்துகொண்டு உண்மை நிலையை   பின்பற்றினால் அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட உண்மையை நிச்சயம் இறைவனே உணர்த்தி வைப்பான் அப்பனே!!!!!

அப்பனே அனைவரிடத்திலும் ஒரு சக்தி எதை என்று அறியறிய அப்பனே வலம் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே சுற்றி!!! சுற்றி!!!! அப்பனே 

அவ் சக்தியை எவனொருவன் சரியாக பயன்படுத்துகின்றோனோ !?
அவந்தன் வெற்றியாளன். அப்பனே  சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அவ் சக்தியை வீணாக்குபவன் அப்பனே தோல்வியடைகின்றான்!!!

எப்படியென்றால் அப்பனே மற்றவர்களை நம்பி மனிதனை நம்பி போவதால் அப்பனே  மனிதனை குருவாக எண்ணிக்கொண்டு போவதால் அப்பனே அவ் சக்தி பலம் இழந்து போய்விடுமப்பா!!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பொழுது அவன் சொல்வதையே கேட்டுக் கொண்டுதான் இருக்க வேண்டுமே தவிர!!!!!!.......

வாழ்க்கையில் அப்பனே வெற்றி பெறுவது போல் தோன்றுமே தவிர அப்பனே கடைசியில் பார்த்தால் தோல்விகள் அப்பனே!!!!!!!

இதனால் யான் அகத்தியனை நம்பினேனே!!!!! சித்தரை நம்பினேனே!!!!!! என்றெல்லாம்  அப்பனே எதை என்று அறிய அறிய  இவையெல்லாம்  அப்பனே முற்றிலும் தவறான பேச்சுக்களப்பா!!!!!!

அப்பனே !மீண்டும்!! மீண்டும்!! சொல்கிறேன்!!!

அப்பனே !! எங்களுக்கு எதுவுமே தேவையில்லை என்பேன் அப்பனே!!!! 

நீ மனிதனாக வாழ அப்பனே கற்றுக்கொள் !!!!

அதுவே போதுமப்பா!!!!!!

ஆனால் மனிதனாக வாழத் தெரியாமல் களவு பொய் பேசுதல்  அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய இன்னும் பொறாமை குணங்கள் எவை என்று கூற எண்ணங்கள் சரியில்லாதவை  அப்பனே எதை என்று கூற காமம் குரோதம்  இன்னும் இன்னும் அப்பனே பிற உயிரை கொல்லுதல் அப்பனே இவை  இருந்தும்  அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும்.....நீ சித்தனை  வணங்கினாலும் அப்பனே பின் நீ பைத்தியகாரனாகத்தான் போவாய் என்பேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய!!! 

அதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எங்களுக்கு எதுவுமே தேவையில்லை!!!!!

சித்தர்களே!!!  நீங்கள் வழி காட்டுங்கள் என்று சொன்னால் அப்பனே ஓடோடி வருவோம் அப்பனே!!!!

ஆனால் அப்படி இல்லையப்பா!!!!!

இவ்வுலகத்தில் இன்னும் எதையெதையோ மனிதன் கற்றுக் கொடுக்கின்றான்!!... என்று போய் திரிந்து பொய்  சொல்லிக்கொண்டு அப்பனே கர்மத்தில் நுழைந்து அப்பனே மீண்டும் அதனால் ஒன்றும் நடக்கவில்லை என்றால் ?? அப்பனே மீண்டும் எதை என்று அறிய அறிய இவ்வாறு நம்பினோமே!!!!! என்று!!!......இறைவன் பொய் என்று !!!!

எவை என்று கூற கலியுகத்தில்!!!!!..... ..

அதனால் அப்பனே பக்தி பொய் என்பது கூட யார் எவை என்று அறிய அறிய மனிதன் தான் அப்பனே பொய்யாக்குவனாக இருக்கின்றான் வரும் காலத்தில் அப்பனே!!!!!

அதனால் நிச்சயம் அப்பனே பொய்யாகாதீர்கள் உண்மையை கடைபிடியுங்கள்!!!!! நேர்மை சம்பாதித்துக் கொள்ளுங்கள்!!! அப்பனே எவை என்று கூற 

இதனால் அப்பனே இவ்வாறு தெரிந்து கொண்டு இருந்தாலே இறைவன் உன்னிடத்தில் இருப்பானப்பா!!!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

அவை செய்கின்றேன்!!...  இவை செய்கின்றேன் என்று அப்பனே 
எவை என்று கூற இறைவனே சொல்வதில்லையப்பா!!!!!!!!

எதை என்று கூற ஆனால் வாய் கூசாமல் மனிதன் ! சொல்கின்றானப்பா!!!!!!

அப்பொழுது எவ்வளவு பொய்கள் என்பது தெரிந்து கொள்ளுங்களப்பா!!!!!! 

அதனால்தான் அப்பனே முதலில் உண்மை நிலையை  யான்  தெரிவித்து எப்படி பின்பற்றினால் இறைவனை காணலாம்!? என்று!!!!..... அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய!!!!!

அதனால் இவ்வுலகத்தில் உண்மை நிலை இல்லையப்பா!!!!

சித்தர்களை வைத்து அப்பனே பணம் பொருள் இன்னும் என்னென்னமோ சம்பாதிக்கின்றார்கள்!!!! அவையெல்லாம் பொய்களப்பா!!!! சொல்லிவிட்டேன் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்  அப்பனே!!!!

அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே 
பெருமிதமே!!!  தவிர!!.......

அப்பனே எதற்காக ?? எங்களுக்கு?? நீங்கள் செய்ய வேண்டும் ??

அப்பனே இதை யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்!!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

 எங்களுக்கு செய்வதை விட அப்பனே இயலாதவருக்கு செய்யுங்கள் அப்பனே!!! அதை யாங்கள் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கின்றோம் அப்பனே !!!! 

அவை மட்டும் இல்லாமல் இயலாதவருக்கு செய்யும் உதவி அப்பனே எதை என்று அறியறிய இறைவனும் ஏற்றுக்கொள்வான்!!!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் உண்மையை அப்பனே கர்மா அவனிடத்தில் இருக்கின்றதா ?? என்பதை கூட எப்படி அப்பனே கண்டு அப்பனே கழித்தல் என்பதையெல்லாம் நிச்சயம் யான் சொல்கின்றேன் அப்பனே!!!!

அப்படி கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே அறிந்தும் அறிந்தும்!!! 

அதனால் அப்பனே ஒரு பிறவி மனிதனாக எவை என்று கூட இறைவன் எதை என்று கூட பின் பிறப்பு!!!! 

ஆனால் அதில் எப்படி வாழ்வது என்பதை கூட தெரியாமல் வாழ்ந்து வருவதால் தான் அப்பனே தோல்விகளே ஏற்படுகின்றதப்பா!!!!!!

அத் தோல்விக்கு காரணம் யார் என்றால் ??? மனிதனே என்பேன் அப்பனே!!!!

இறைவன் காரணம் இல்லாதவன் அப்பனே எவை என்று கூட!!! 

இறைவன் கண்ணுக்கு தெரியாதவனாகவே ஆனாலும் அப்பனே வலம் வந்து கொண்டே இருக்கின்றான்!!!!! மனிதனை எப்படி எவை என்று கூட  எவை என்று அறிய!!!!

அப்பனே ஆனால் நீங்கள் சரியாகவே நடந்து விட்டால் அப்பனே உங்கள் எதிரிலே இறைவன் செல்வதை நீங்கள் நிச்சயம் கூர்ந்து கவனித்துக் கொள்ளலாம்!!!!

ஆனாலும் அப்பனே மனதில் அழுக்குகள் இருந்தால் அப்பனே இறைவன் பக்கத்தில் இருந்தாலும் அப்பனே நீங்கள் உணரமாட்டீர்கள்!!! அப்பனே சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அப்பனே எவை என்று அறிய அறிய எங்கு?  எதை என்று அறிய அறிய பல திருத்தலங்கள் இருக்கின்றது அப்பனே எவை என்றும் அறிய அறிய 
இவையெல்லாம் மனிதனை அப்பனே திருத்துவதற்காகவே என்பேன் அப்பனே!!!

ஆனால் கலியுகத்தில் அப்பனே மனிதன் திருந்துவதில்லை என்பேன் அப்பனே!!!!

யான் தெரியாமலே கேட்கின்றேன் அப்பனே அதைச்செய்கின்றேன்! இதைச்செய்கின்றேன்! என்று சொல்கின்றானே!! அவந்தனுக்கே பல கஷ்டங்கள் அப்பனே!!!! ஆனால் அவன் கஷ்டத்தை முதலில் போக்கச் சொல்லுங்கள் அப்பனே!!! பின்பு பார்ப்போம் என்று!!!!

அப்பனே இதில்தான் மனிதன் அதாவது அறிவை அப்பனே இழந்து விடுகின்றான்  என்பேன் அப்பனே!!!! 

அவ்வறிவு எப்பொழுது நிச்சயம் மனிதனுக்கு கிடைக்கின்றதோ அப்பொழுது நிச்சயம் ஞானங்கள் பெற்று அப்பனே வாழ வல்லான்!!!!! அப்பனே!! 

எதை என்றும் அறிய அறிய அப்பனே  இன்னும் இன்னும் பொய்களைச் சொல்லி நடித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!

நடிப்பதில் மிகச்சிறந்தவன் அப்பனே மனிதனப்பா!!!!

எதை என்று அறியறிய அப்பனே இதனால் அப்பனே அவ் நடிப்பு பல பேர்களுக்கு அப்பனே அடியும் பலமாக எதை என்றும் அறியாமல் நோய்களும் பலமாக அப்பனே!!!

ஆனாலும் உண்மை நிலைகள் அப்பனே எதை என்று யான் புரிந்து கொள்ள  அப்பனே புரிந்து கொள்ள புரிந்து கொள்ள அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை என்று அறிய  அறிய சொல்கின்றேன் அப்பனே!!!!

என்னையே வணங்கினாலும் அப்பனே நிச்சயம் யான் துன்பத்தை தான் கொடுப்பேன்!!!!அப்பனே !!!!

ஏனென்றால் அப்பனே ஒழுக்கமாகவே  வாழுவதில்லையப்பா!!!! 

எதை என்று அறிய அறிய பொய்கள் சொல்லி அகத்தியன் அதை இதை என்றெல்லாம் பொய் சொல்லி எவை என்று கூற என் பெயரையே இன்னும் கெடுப்பார்களப்பா!!!! 

இவ்வாறு கெடுத்தவர்கள் பல கோடியப்பா!!!!! 

அவர்களுக்கெல்லாம் தண்டனைகள் கொடுப்பது இறைவனப்பா!!!!! பின் அழுத்தியும் விட்டான் அப்பனே!!!!  எழுந்திருக்க முடியவில்லை அப்பனே !!!!!

நீங்களும் வரும் காலங்களில் அப்படித்தான் ஆகப்போகின்றீர்களா??????????????? அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் இறைவனை வைத்து பக்தியை அப்பனே  பக்தி என்பது அப்பனே  நீதி !! நேர்மை !!!பின் தர்மம்!!! அப்பனே எவை என்று அறிய அறிய நம்பிக்கை அவைமட்டுமில்லாமல் பொய் கூறாமை!!! பொறாமை கொள்ளாமை அப்பனே எவை என்றும் இன்னும் அறிந்தும் அறிந்தும் கூட !!!

அப்பனே எதை என்று கூட அறிவுகளை பலப்படுத்துதல் அப்பனே !!!

அறிவுகளை பலப்படுத்துவதென்றால் எப்படி என்பதை கூட அப்பனே !!!!! திருத்தலங்களாக திருத்தலங்களாக  சென்று சென்று அப்பனே அங்கு இறைவனை எப்படி காணலாம் என்பதை கூட நீங்கள் உணர்ந்துவிட்டால் அப்பனே!!! இறைவன் பரிட்சை வைப்பான் உங்களுக்கு அப்பனே!!!!

அவ் பரிட்சையில் தேர்ச்சி அடைந்து விட்டால் அப்பனே உங்களுக்கு பலத்த பலத்த அப்பனே பாதுகாப்புகள் கொடுத்து அப்பனே நீங்கள் என்ன உணர்வீர்கள் அதாவது மனதில் என்ன எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இருக்கின்றதோ அதை அப்படியே இறைவன் நிச்சயம் கொடுப்பானப்பா!!!!

அதனால் அப்பனே நீ பொய் சொல்லி ஏமாற்றுகின்றாயென்றால் அப்பனே உன்னையும் ஒருவன் அப்பனே பின் ஏமாற்றி விடுவான் அப்பனே !!

பின் சொல்லிவிட்டேன் அப்பனே !!!

எதை என்றும் அறிய அறிய அதேபோல் உண்மை சொல்லி மற்றொருவனை அப்பனே உயர்த்தி விட்டால் இன்னொருவன் உன்னை உயர்த்திப் பார்க்க தயாராக இருப்பானே தவிர!!!!!!!

அப்பனே பொய்கள் கொல்லுமப்பா!!!!!

உண்மைகள் வாழுமப்பா. இவ்வுலகத்தில்  அப்பனே!!!!

இதனால் பொய்கள் கொல்லும் என்று யான் சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அப்படித்தான் இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருக்கிறது அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே !!!

தெரியாமல் வாழத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் மனிதன் அப்பனே எதை என்று அறிய அறிய அதனால் தான் துன்பங்களப்பா!!!!
துன்பங்கள்!!!! 

அப்பனே தெரிந்து வாழ கற்றுக்கொண்டால் அப்பனே துன்பங்கள் பின் என்றுமே வராதப்பா!!!!! 

அதனால் தான் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே கூட யாங்கள் நிச்சயம் அப்பனே முதலில் நல்வழி காட்டுவோம் அப்பனே!!!!

துன்பத்தை அதாவது கர்மத்தை போக்குவோம் அப்பனே !!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும்!!! அப்பொழுதுதான் இறைவனை யான் எவை என்று கூட காட்டவும் முடியும் என்பேன் அப்பனே!!!! 

என் பக்தர்களுக்கு நிச்சயம் வரும் காலத்தில்  யான் காட்டத்தான் போகின்றேன் அப்பனே!!!! 

ஆனால் அதனுள்ளே அப்பனே தேர்வில் நீங்கள் தேர்ச்சி அடைய வேண்டும் என்பேன் அப்பனே!!!! சொல்லி விட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!! 

அப்பனே என் பக்தர்களும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய வரும் காலங்களில் உண்மை நிலைகளை புரிய எவை என்றும் அறிய அறிய ஆனாலும் என் பக்தர்களும் அப்பனே இப்படியே எவை என்று கூட  ஏமாற்றி எவை என்றும் அறிய அறிய பின் எவை என்று கூற ஏமாந்து ஏமாந்து நிற்கின்றார்கள் அப்பனே!!!! 

அதற்காகத்தான் முதலில் உண்மை நிலையை அப்பனே எதை என்று கூட அப்பனே!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒருவன் யான் தான் பக்தன் என்கின்றான் அப்பனே!! மற்றொருவன் யான் தான் உன்னை விட உயர்ந்த பக்தன் என்கின்றான்!!!  அப்பனே இன்னொருவன் யான் அகத்தியன் பக்தன் என்கின்றான் இன்னொருவன் யான் தான் உயர்ந்த அகத்தியன் பக்தன் என்று சொல்கின்றான்!!! யான் அகத்தியன் மைந்தன் என்று சொல்கின்றான் இன்னொருவன் யான் அகத்தியனின் மைந்தன் யானும் கூட !!!! யான் சித்தர்களின் மைந்தன் கூட என்றெல்லாம் பொய் சொல்கின்றானப்பா!!!!

ஆனாலும் அப்பனே எவை என்று கூட திருடனப்பா திருடன்!!!!  இவை போன்று சொல்பவர்களை கூட அப்பனே எப்போதும் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!!!!

எதை என்று அறிய அறிய  """"யான்  ஏற்றுக் கொள்ள வேண்டும் அப்பனே!!!!!

எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட எவை என்றும் புரியாமல் கூட அதனால் அப்பனே எவை என்று கூட பக்தியை வைப்பது என்று பக்தியை வைத்து எதை என்றும் அறியாமலே புரியாமலே அப்பனே இன்னும் இன்னும் இக்கலியுகத்தில் என்னென்ன ஆட்டங்கள் என்று கூட அப்பனே!!!!

இதனால் கலியுகத்தில் அப்பனே பின் எதை  என்றும் அறிய அறிய இறைவனே இல்லை என்று சொல்லும் நிலையும் வருமப்பா !!!!

இதனால்  எதை என்று அறிய அறிய யாருக்கு அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே பக்தி எதை என்று கூட இறைவன் இல்லை என்று சொல்லும் நிலை அப்பனே எவனொருவன் எதை என்று அறிய அறிய அப்பனே இதற்கு காரணங்கள் மனிதனே என்பேன் அப்பனே!!!!! 

அதனால்தான் அப்பனே இறைவனை நீ வணங்கினாலும் அப்பனே இறைவன் தண்டனை கொடுத்துக்கொண்டே வருகின்றான் அப்பனே இக்கலியுகத்தில் அப்பனே!!!

அப்பனே பின் தெரிந்து கொள்ளுங்கள் !!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே நிச்சயமாய் அப்பனே அறிந்தும் கூட அப்பனே பக்தியில் வந்து விட்டால் அப்பனே நல்விதமாகவே இறைவனை நினைத்தே அன்போடு இருங்கள் போதுமானது அப்பனே!!!!

இறைவனே அனைத்தும் கொடுப்பான் அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!!

அப்பனே நீ கேட்டுத்தான் பிறந்தாயா ???இவ்வுலகத்தில் அப்பனே???? 

கேட்டுத்தான் வளர்ந்தாயா ?? அப்பனே???

கேட்டுத்தான் அப்பனே உண்டாயா?? அப்பனே??

கேட்டுத்தான் தாயே!!! என்று எதை என்று கூற தந்தையே!!!! என்று அப்பனே எவை என்று உணர்ந்து  உணர்ந்து!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே உங்களுக்கு தெரியாமலே அனைத்தும் நடந்து கொண்டுதான் இருக்கின்றது அப்பனே!!! 

ஆனால்  உணர்ந்தீர்களா???  அப்பனே!!!! 

எப்படி நடக்கின்றது ???? என்பதை கூட !!!!

அப்பனே எவை என்றும் அறிய  அறிய இதனால் அப்பனே """""கந்தன் இருக்கின்றான்!!!!  அப்பனே!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய அப்பனே அனைவருக்குமே ஆசிகள் கொடுத்து கொண்டே தான் இருக்கின்றான் அப்பனே!!!!! 

அதில் ஒருவன் உயர்கின்றான்!!!!!! 

அதில் ஒருவன் தாழ்கின்றான்!!!!!....... ஏன்? எதற்காக? என்றெல்லாம் அப்பனே யோசித்தீர்களா????? 

இல்லையப்பா!!!!!!! 

எதை என்று கூற அதனால் தான் சொல்கின்றேன் அப்பனே !!!!

ஆறறிவுகள் சரியாக பயன் படுத்த வேண்டுமென்றால் அப்பனே அறுபடைகளுக்கும் நீங்கள் செல்ல செல்ல அப்பனே சென்று கொண்டே இருக்க  அப்பனே நன்மைகளப்பா!!!!!! 

எதை என்றும் அறிய அறிய பின் என்னால் செல்ல முடியாது என்றெல்லாம் சொல்லக்கூடாது அப்பனே!!!!!

இதிலும் கூட கிறுக்கு முறுக்காக  குறுக்கு மறுக்காக அப்பனே பைத்தியகாரனாக கேள்விகள் கேட்பவனும் உண்டு என்பேன் அப்பனே!!!! 

எதை என்று அறிய அறிய ஏன் யான் திருத்தலங்களுக்கு செல்ல வேண்டும்????????? எதை என்றும் அறிந்தறிந்து என்றெல்லாம்!!!

அப்பனே நீ ஏனப்பா உண்ண வேண்டும்???????

அப்பனே!!!  உண்ணாமல் இருந்து விட கூடாதா????? என்ன!!!!!!! 

அப்பனே நியாயமா???? 

அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய தெரியாமலே யான் கேட்கின்றேன் !!!!!!

ஏன் திருமணம் செய்து கொண்டு வாழ்கின்றாய்????????  அப்பனே!!!!! 

திருமணம் செய்யாமலே இருக்கலாமே !!!!! அப்பனே 

இன்னும் ஒரு படி மேலே சென்று அப்பனே ஏன் குழந்தைகள்??????????? அப்பனே  இதையென்றும் அறிய அறிய அப்பனே!!!!

பின் எவை என்று கூட குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமல் மற்றவர்களை அப்பனே இயலாதவர்களை எடுத்து வளர்க்கலாமே!!!!!!!!!!!  அப்பா!!!!!!!!!!!!! 

அப்பா !!!!!!!! முட்டாளே!!!!!!!!! 

எதையென்றும் அறிய அறிய அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே !!!!!!!!

""""""அன்பாகவும் பேசுவேன்!!!!!!!!

அப்பனே !!!!!.... சமயத்தில் அப்பனே கோபக்காரனாகவும்  பேசுவேன் அப்பனே!!!!! 

பின் கோபம் வந்தாலும் அவைதனை அன்பாகவே வெளிப்படுத்துவேன் யான்!!!!!!!! 

சொல்லி விட்டேன்!!!!!!! அப்பனே!!!! 

அதனால் சித்தர்கள் யார் என்பதை கூட ரகசியத்தை யாராலும் இவ்வுலகத்தில் கண்டுபிடிக்க முடியாதப்பா!!!!!!

அப்படி கண்டுபிடித்துவிட்டால் அவன் உடனடியாக இறந்து விடுவானப்பா!!!!!!

அதனால் ரகசியங்கள் அப்பனே எதை என்று கூட சித்தனை  மிஞ்சிய சக்தி இவ்வுலகத்தில் இல்லையப்பா!!!!!! 

எதை என்றும் அறிய அறிய அதனால் சித்தர்களை வைத்து விளையாடுவது மிகப்பெரும் தவறப்பா!!!!!! 

விளையாடிக்கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!! 

அவர்களுக்கு அடிகளும் பலமாக பட்டுத்தான் கொண்டிருக்கின்றது!!!!......... 

திருந்தவே இல்லை என்பேன் அப்பனே!!!! 

எவை என்றும் அறிய அறிய போட்டி பொறாமைகள் நிறைந்தவர்கள் எதை என்றும் அறிய அறிய சித்தனை பின் நெருங்குவதற்கு தகுதி இல்லாதவர்கள் அப்பனே!!!!!

மற்றவர்களை குறை சொல்லி பேசுபவர்கள் அப்பனே சித்தனை நெருங்குவதற்கு தகுதியற்றவர்கள் என்பேன் அப்பனே!!!!!!

இதனால் அப்பனே பின் கோபப்படுபவர்களும் கூட காமத்தை நோக்கி செல்பவர்களும் கூட ஆசைகளில் எதை என்றும் மிதந்து கொண்டிருப்பவர்களும் கூட அப்பனே சித்தனை அப்பனே எவை என்று கூட நம்புவது ஆகாதப்பா!!!!

சொல்லி விட்டேன் அப்பனே!! எதை என்றும்  அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே

சித்தனானவன் பெரும் கடலப்பா!!!!!! சொல்லி விட்டேன் அப்பனே!!!! 

அவ் கடலை எதை என்று கூட கடக்க எதை என்றும் புரியாமலும் கூட எவை என்றும் அறியாமல் 

விண்ணுக்கும் மண்ணுக்கும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!! 

இன்னும் இன்னும் அப்பனே ஏராளமான வாக்குகளிலும் கூட உங்களை பரிசுத்தமான வழிகளில் கூட உங்களை எடுத்துச் செல்ல யாங்கள் தயார்!!!!!!

ஆனாலும் நீங்கள் தயார் இல்லையப்பா!!!!!!

அதற்காகத்தான் அப்பனே பல கஷ்டங்களை கொடுத்து தயார் படுத்தி யான் உங்களை ஆட்கொண்டு எடுத்துச் செல்கின்றேன் அப்பனே!!!!!

அதனால் தவறாக எண்ண வேண்டாம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!! 

யான் அகத்தியனை நம்பினேனே !!!!!!  இவ்வளவு கஷ்டங்கள் ஏன் வந்தது????  என்றெல்லாம் சொல்லக்கூடாது செப்பி விட்டேன் அப்பனே!!!!! 

எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே மாயங்களப்பா!!!!!! 

அப்பனே மனிதனே மாயமானவன் அப்பனே!!! 

திடீரென்று  மறந்து விடுவான் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!! 

இதனால் அப்பனே அனைத்தும் உண்மைகளா?? என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே!!!

 பாவமப்பா மனிதன்!!!

இதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே உண்மை நிலைகளை கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய!!! 

அப்பனே யாங்கள் எவ் ரூபத்திலும் கூட உங்களுக்கு வந்து உதவிகள் செய்வோம் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய 

அதனால் அப்பனே பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

யான் சொல்லிய மூலிகைகளை எல்லாம் எடுத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!! நிச்சயம் வரும் காலங்கள் நோய்கள் காலம் என்பதையெல்லாம் சொல்லிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!!

அதுமட்டுமில்லாமல் கண்டங்கள் அப்பனே!!!!! சனீஸ்வரன் அப்பனே பின் கண்டங்கள் ஒவ்வொருவருக்கும் தயாராகவே இப்படித் தண்டனைகள்  கொடுத்தால் தான் இவன் திருந்துவான் என்றெல்லாம் கூட அப்பனே எவை என்று கூட 

இனிமேல் பொய் சொன்னால் வாய் எதை என்று அறிய அறிய பின் கடைசியில் பார்த்தால் பேச்சும் வராது!!! அப்பனே உண்ணவும் முடியாதப்பா!!! சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

கைகளால் எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே அதாவது  பின் வலது கையில் பின் தவறு செய்தால் அப்பனே எவை என்று அறிய அறிய ஊனம் ஆகிவிடும் அப்பனே!!!!

அதேபோலத்தான் இடது கையும்  பின் எவை என்றும் அறிய அறிய அப்பனே ஒன்றும் செய்ய இயலாதப்பா!!!!!

அதேபோலத்தான் அப்பனே கால்களால் எதை என்றும் அறிந்தும் கூட செய்யும் தவறுகளுக்கு கால்களும் வராதப்பா!!!!

இதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் அனைத்தும் உங்களிடத்தில் தான் இருக்கின்றது தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே. நீங்கள் எப்படி நீங்கள் எப்படி இருப்பீர்களோ? அதற்குத் தகுந்தாற்போல்தான் அப்பனே இறைவனுமே கொடுப்பான் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே காலப்போக்கில் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் இன்னும் வெற்றிகள் காண!! காண!! இன்னும் எதை என்றும் பரிபூரணமாகவே  அப்பனே மனிதனுக்கு தெரியவில்லையப்பா!!!!

அதனால்தான் மனிதன் பாவம் பாவம் என்றெல்லாம் யாங்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே 

ஏதோ இறைவனை நம்புவது சித்தர்களை நம்பினால் அனைத்தும் கிடைக்கும் என்பது கூட அப்பனே எதை என்று அறிய அறிய கிடைக்காதப்பா !!!!

நிச்சயம் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே சித்தனை எப்படி வணங்க வேண்டும் ? என்பதையெல்லாம் நிச்சயம் வருங்காலத்தில் சொல்கின்றேன் அப்பனே அனைவருக்குமே அப்பனே!!!

என்னுடைய ஆசிகளோடு அப்பனே இன்னும் இன்னும் பல மனிதர்களுக்கும் கூட அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய கேள்விகளுக்கான வினாக்களும் விடைகளும் என்னிடத்தில் இருக்கின்றது  அப்பனே!!!

மனிதன் எப்படி ??? கேட்பான் என்பதை கூட அறிந்திருக்கின்றேன் அப்பனே!!!!!

அவையெல்லாம் வருமப்பா !!!! என்ன செய்தாய் என்பதை கூட அப்பனே!!!!!

நிச்சயம் திருந்தவில்லை என்றாலும் அப்பனே சித்தர்கள் பெயரை நோக்கி குறிப்பிட்டு அப்பனே அடியும் பலமாக கொடுப்பார்கள் சொல்லிவிட்டேன் அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

(வைஷ்ணவி தேவி ஆலயத்தில் காகபுஜண்டர் ஒவ்வொரு மனிதனின் பெயரை குறிப்பிட்டு வாக்குகளும் கூறுவேன் அவர்கள் என்னென்ன செய்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்று கூறியிருந்த விஷயம்)

வாக்குகள் எதை என்று புரிய புரிய அப்பனே 

புரிந்து கொள்ளுங்கள் தெளிவு பெறுங்கள். அப்பனே அப்படி பின் புரிந்துகொண்டு தெளிவு பெறாவிடில் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இருப்பதும் அப்பனே இல்லாமல் போவதே மேல் என்பேன் அப்பனே!!!! 

அதனால்தான் அப்பனே இறைவன் இவன் இருந்தும் ஒன்றும் பயன் இல்லை என்று கூட அப்பனே இறைவன் எதை என்று கூட அவந்தனக்கு ஒன்றுமே கொடுப்பதில்லையப்பா!!!!

அப்பனே சொல்கின்றேன் அப்பனே மீண்டும் மீண்டும் அப்பனே சித்தர்கள் எவை என்று கூட மற்றவருக்கு நோக்கி அப்பனே மற்றவர்களுக்கு உதவிகரமாக எவன் ஒருவன் இருக்கின்றானோ அவர்களை தேர்ந்தெடுத்து யாங்கள் வழிநடத்தி அப்பனே உயர்வுகள் கொடுத்து பின் எதையும் சாதிக்கும் திறன் கொடுத்து அப்பனே ஒன்றும் அவனால் எதை என்றும் அறிய அறிய பின் யாரும் கூட ஒரு சக்தியை அவந்தனுக்கு அதாவது வட்ட வடிவமாக எதை என்று அறிய அறிய நெருப்பினை கொடுத்து விடுவோம் அப்பனே அவ்வளவுதான்!!!!

அவந்தன் பின் சாதனைகள் புரிவான் அப்பனே!!!

இதுதான் அப்பனே சித்தர்களின் எதை என்று கூட இன்னும் ரகசியங்கள் இருக்குதப்பா சொல்லித் தருகின்றேன் அப்பனே பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அதனால்  தெரியாமல் அப்பனே கர்மத்தில் நுழைந்து விடக்கூடாது என்பேன் அப்பனே!!!!

ஏன் எதற்காக எவை என்றும் அறிய அறிய எவை என்றும் புரிய புரிய அப்பனே இன்னும் பார்த்தால் அப்பனே கிரகங்களைப் பற்றி மனிதன் சொல்லிக் கொண்டே இருக்கின்றான்  அப்பனே 

என்ன பிரச்சனை வரும் ? என்பதை கூட தெரியாமல் சொல்லிக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

அனைத்தும் அழிந்து விடும் அப்பனே ஏன் ?  எதற்காக? ஆனாலும் அப்பனே ஏதோ ஒன்று கற்றுக் கொண்டோம்!!!!!!!

அப்பனே வேலைப்பாடு இல்லை எதனை என்றும் அறிய அறிய இதனை வைத்து பிழைத்துக் கொள்வோம் என்றெல்லாம் அப்பனே எதை என்றும் புரிய  புரிய அப்பனே

ஆனால் அது எவை என்று கூட புரியாமலே எதை என்று அறிய அறியாமலே சூரியன் என்று தெரியாமல் போய்விட்டது அப்பனே மனிதனுக்கு!!!!!

ஆனால் இப்பொழுது தெரியாது அப்பனே எதை என்று கூட  அதனால் உண்மை நிலையை புரிந்து கொள்ளுங்கள் அப்பனே 
கிரக நிலைகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!

இன்னும் இன்னும் அப்பனே மனிதன் விசித்திரமானவையெல்லாம் அப்பனே கண்டு (பிடிப்புக்கள்) எவை என்றும் அறிய  பின் அறிய மக்களுக்கு பின் போதிப்பான் அப்பனே!!!!

ஆனால் அவையெல்லாம் பொய்யே!!!  அப்பா!!!! எதை என்று கூற பின் கோடிகள் இன்னும் கோடி கோடி திருடர்களப்பா!!!!!

திருடத்தான் அப்பனே பக்தியில் வரும் காலத்தில் நுழைந்து ஏமாற்றுவார்களப்பா!!!!!!!

ஏமாற்றி அப்பனே பிழைத்துக் கொள்ளலாம் என்று!!!!

ஆனாலும் யாங்கள் விட்டுவிடுவோமா !????? என்ன அப்பனே !!!!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அப்பனே அவனுடைய வாழ்க்கை அவனுடையே  எதை என்று கூட கண்டு கொள்ளாமல் ஆனாலும் எதை என்று அறிய அறிய இன்னும் இன்னும் ஆசைகள் அப்பனே பேராசைகள் மனிதனுக்கு அப்பனே!!!

சித்தர்கள் வந்து பேசுவார்களா? என்று அப்பனே!!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே உங்களுக்கு என்ன அனைத்தும் சொல்வதற்கு யாங்கள் என்ன எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரிய புரிய அப்பனே நீ என்ன புண்ணிய .....???????

எவையென்று எதையென்றும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!!

""""""""""""""""" என் வாயால் வந்தால் அவை சாபமாக போய்விடும்!!!!!!!!!!!!!!!!!!!!!

அதனால் சொல்லவில்லை அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!!! எதை என்று கூட !!!!!

எவை என்று புரியப் புரிய அப்பனே உலகத்தை மாற்ற வந்தவர்கள் !!...........யாம்!!!!!!!

மனிதனுக்காக எதை என்றும் புரியாமல் அப்பனே எவை என்று கூட எதற்கெடுத்தாலும் வாக்குகள் சொல்லிக் கொண்டுதான் இருப்போமா என்ன?????

இங்கு சென்றால்!!! நலன்கள் கிடைக்குமா???? அங்கு சென்றால்!!! நலன்கள் கிடைக்குமா??

அப்பனே  அப்பா !!!! ஒன்றும் கிடைக்காதப்பா!!!! அப்பனே கர்மா தான் கிடைக்குமப்பா சொல்லிவிட்டேன்!!!! அப்பனே!!! 

அதனால் சொல்லிவிட்டேன் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட இருந்தாலும் கூட அறிந்து கொள்ளுங்கள் அப்பனே 

நிச்சயம் வரும் வரும் காலத்தில் அதனால் எப்படி எல்லாம் இவ்வுலகத்தை வெல்லலாம்? அப்பனே நோய்கள் வராத பின் எவை என்று கூட  பின் உடம்பை எப்படி பெற்றுக்கொள்ளலாம்? என்பதையெல்லாம் கூட நிச்சயம் யாங்கள் சித்தர்கள் ஒவ்வொருவராக தெரிவிப்போம் அப்பனே!!!!

இன்னும் எதை என்று கூட பிரம்மாண்டமாக அப்பனே பின் எவை என்று கூட  எம் பக்தர்களை யாங்கள் காத்திடுவோம் என்பேன் அப்பனே !!!!

அதனால் குறைகள் இல்லை அப்பனே!!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே!!!

பின் எதை என்று கூட அனைவரும் பின் எதை என்று கூட அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே
பாவம் அப்பா பாவம் மனிதன்!!!!

பின் எதை என்று கூட தாய் தந்தையர் இருக்கின்றார்கள் மனைவிகள் இருக்கின்றார்கள் மகன்கள் மகள்கள் இருக்கின்றார்கள் என்பதையெல்லாம் அப்பனே  அவையெல்லாம் வேண்டாமப்பா அனைவருமே அனாதைகள் தானப்பா !!!!

ஏனென்றால் பந்த ( பந்த பாசம்)  எவை என்று கூட பாச பிணைப்புகளில் அப்பனே பின் எவை என்று கூட பின் சேர்ந்திருக்கும் பொழுது அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய  ஆனாலும் அவை சிறிது சிறிதாக நீக்கப்பட வேண்டும் அப்பனே இறைவன் தான் நம்தனக்கு துணை !!! இறைவனால் தான் அனைத்தும் ஆக்க முடியும் என்பதையெல்லாம் எவை என்று அறிய அறிய அப்பனே இப்படி இந்த நிலைமைக்கு வந்து விட்டால் அப்பனே இறைவன் பார்த்துக் கொள்வான் அப்பனே !!!!

ஆக்கு!!!!!!  ஆக்கு !!!! அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே ஆக்கு இறைவன் பக்தியை!!!!! அப்பனே மற்றவர்கள் இடத்திற்கு அப்பனே!!! எடுத்துச் செல்ல நன்று!!! 

அப்பனே புரியும் பொழுது கூட புரியும்!!!!!

தெரியும் பொழுது கூட தெரியும்!!!!!!!

அப்பனே உட்காரும் பொழுது எதை என்றும் அறிய அறிய எதற்காக உட்கார்ந்திருக்கின்றீர்கள் அப்பனே ???

எழும் போதும் எதற்காக எழுந்திருக்கின்றீர்கள்???? அப்பனே!!!

நடக்கும்பொழுதும் எதற்காக நடக்கின்றீர்கள்?? அப்பனே!!!

இவையெல்லாம் சிந்தித்து பார்த்தால் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இதனால் அப்பனே இது உங்களால் முடியாதப்பா!!!!! சொல்லிவிட்டேன்!!!

இன்னும் அப்பனே என் பக்தர்களுக்கு ரகசியத்தை சொல்லித் தரப் போகின்றேன்  அவ் ரகசியத்தை சரியாக புரிந்து கொண்டால்  அப்பனே வெற்றி!!!!! 

அப்படி புரிந்து கொள்ளா விடில் தோல்வியப்பா!!!! 

மீண்டும் எந்தனை எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று கூட மீண்டும் எதை என்றும் அறியாமலே இதனால் அப்பனே அன்பு ஒன்று தான் அப்பனே பிரதானமானது இவ்வுலகத்தில் அப்பனே!!!

அவ் அன்பை விட இவ்வுலகத்தில் அப்பனே ஏதும் இல்லையப்பா!!!!

அதனால் அப்பனே முதலாக எவை என்றும் அறிய அறிய அப்பனே அன்பின் ரூபமாக எதை என்றும் புரிந்து புரிந்து நடந்து கொள்ளுங்கள் அப்பனே 

பின்பு எதை என்றும் அறிய அறிய அப்பனே இறைவனை அப்பனே நீ தூக்கினாலும் நோய்கள் உண்டு அப்பனே இறைவனுக்கே  திருத்தலத்தை கட்டினாலும் நோய்கள் உண்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியப் புரிய அப்பொழுதெல்லாம் யாங்கள் நன்மைகள் செய்யக்கூடாதா???? என்பதை எல்லாம் நீங்கள் யோசிப்பீர்கள் அப்பனே!!!!!

ஆனால் நீங்கள்  எங்களுக்கு  பின் அப்பனே ஏன் நன்மைகள் செய்ய வேண்டும்????? அப்பனே

எதை என்றும் அறிய அறிய புரிந்து கொண்டீர்களா????? அப்பனே!!!!

யாங்கள் தான் உங்களுக்கு நல்லது செய்ய வேண்டுமே  தவிர அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே எதை என்றும் அறியாமல் வாழ்ந்து வருகின்றார்கள் அப்பனே எதை என்று கூட!!!

அப்பனே அதாவது பின் நீங்கள் நல்லது செய்ய வேண்டுமென்றால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய  அப்பனே நல்லோர்களுக்கு உதவிடுங்கள் எதை என்று கூட இயலாதவர்களுக்கு உதவிடுங்கள் போதுமானது என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய எங்களுக்கு எதுவுமே தேவை இல்லையப்பா!!!!!

யாங்கள் தான் உங்களை பாவம் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!!

நீங்களோ இதை என்று இவை தன் வைத்து பிழைத்துக் கொள்ளலாம் என்று  நினைத்துக் கொண்டிருக்க!!!....... 

யாங்கள் ஐயோ பாவம் இவந்தன்.... இப்படி மூடநம்பிக்கையில் விழுந்திருக்கின்றானே என்றெல்லாம் எடுத்துரைத்து எடுத்துரைத்து அப்பனே அதனால் உண்மை நிலைகளை உணர்ந்து கொண்டால் நன்று!!!!

அப்பனே இன்னும் இன்னும் பன்மடங்கு வாக்குகள் காத்துக்கொண்டிருக்க அப்பனே இன்னும் அனைவருக்குமே வாக்குகள் தெரிவிப்பேன் அப்பனே!!!

எதை என்று கூட அதனால் எதையும் நம்பி விடாதீர்கள் அப்பனே !!!

ஏமாற்று வேலைகளப்பா!!!!

இவ் பின் செந்தூரிலிருந்தே சொல்கின்றேன் அப்பனே 

உன்னை நீ முதலில்  நம்பு !!! உன்னை நீ முதலில்  நம்பு !!!

ஆசிகள்!! ஆசிகள்!! அப்பனே!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1417 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday 27 August 2023

சித்தன் அருள் - 1416 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday 26 August 2023

சித்தன் அருள் - 1415 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Friday 25 August 2023

சித்தன் அருள் - 1414 - அன்புடன் அகத்தியர் - முருகப்பெருமான் திருச்செந்தூர் வாக்கு!





22/8/2023 ஆவணி செவ்வாய் ஷஷ்டி திதியில் அழகன் முருகன் உரைத்த வாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். திருச்செந்தூர் செந்தில் கோட்டம். 

முருகா !!!! முருகா  !! முருகா !!!! 

உலகத்தை ஒளி ரூபமாக ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் அம்மையப்பனை பணிந்து வேலனவன் பரப்புகின்றேன் செய்திகளை!!!!! 

உண்மையானவன் பக்தி உள்ளவன் மிஞ்சியது மிஞ்சியது காரணங்கள் பல உண்டு!!!

என் பக்தன் அருணகிரி!!!! அவனைப் பற்றியே சொல்லப் போகின்றேன்!!! இப்பொழுது!!!

ஓர் நாள் அதாவது ஓர் நாள் இல்லை ஒரு நாள் என்பதை கூட பல வருடங்களாக!!!.......

ஆனாலும் இங்கேயே அருணகிரி பின் கந்தா!!!! கந்தா !!! கந்தா !!!! கந்தா!!!!கதிர் வேலா என்றெல்லாம் அழைத்துக் கொண்டிருந்தான்!!!!

ஆனாலும் யானும் சோதித்தேன்!!!!! 

அருணகிரியே!!!! அருணகிரியே!!!! என்று கூப்பிட்டேன்!!! 

ஆனாலும் யாரோ ? என்னை அருணகிரி என்று கூப்பிடுகிறார்கள் என்று கூட அருணகிரி!!!!!

பின் ஏதோ ஒன்று கூட என்று கூற ஆனாலும் பின் மீண்டும் அருணகிரி என்று கூப்பிட்டேன்!!!!!

ஆனாலும் யான் அறிந்தும் கூட !!!

ஆனாலும் இதற்கு செவி சாய்க்கவில்லை!!! ஏன் ? பின் முருகா !!! முருகா!!! முருகா !!! இதுதான் அவனுடைய வார்த்தையில்!!!!

முருகா !!! முருகா !!! முருகா!!! யார் எதைச் சொன்னாலும் கூப்பிட்டாலும்!!!!........

மீண்டும் யான் அதாவது மாற்றி அதாவது மாற்று உருவமாக மயிலின் மேல் அமர்ந்து பின் அவன் தலையில் இரண்டு முறை பின்  கொட்டி!!!!  கொட்டி கொட்டி தீர்த்தேன்!!!!

அப்பொழுது கூட என்னை கண்டு கொள்ளவே இல்லை !!!!!

முருகா !! முருகா!! முருகா!!! என்பதுதான் வார்த்தை!!!!

அப்படி என்றால் இவ் அருணகிரியை சோதிக்க வேண்டும் என்று யான் எண்ணினேன்!!!!

என்னிடத்தில் இவனை எப்படியாவது நிச்சயம் பின் என் மீது உள்ள பற்று!!!!.......

ஏனென்றால் என் மீது கூட ஆசைகள் இருக்கக் கூடாது அப்பொழுதுதான் உயர்ந்த நிலையை அடையலாம்!!!!என்பதை கூட !!!!

ஆனால் இவ்வாறு அறிந்தும் இவ்வாறு ஆசைகள் வைத்திருக்கின்றானே!!!!!! உடனே பார்த்து அதாவது என்னை பார்த்து என்று!!!!

ஆனாலும் மீண்டும் பின் அதாவது  கடலில் அலைகள்!!!  பின் அங்கேதான் முருகா!!! முருகா!!! என்று அமர்ந்து கொள்வான்!!!! எப்பொழுது பார்த்தாலும்!!!!!

என்னை கூட பார்க்க வராமல் அதாவது முருகா உந்தனுக்கு சக்திகள் இன்னும் பலமாக இருந்தால் நீ என்னை பார்க்க வா !!!!! உன்னையே யான் பார்க்க வேண்டும் என்று!!!!

யான் உன்னை பற்றி தானே நினைத்துக் கொண்டிருக்கின்றேன் என்று அவந்தனுக்கு எண்ணங்கள் பல !!!!!

இதனால் யான் ஆனாலும் யான் சோதிக்க எண்ணினேன்!!!!!! சோதித்து ஆனால் கடல் அலைகளும் கூட  அனைத்தும் பின் அதிவேகத்தில் வந்து அவனை நிரப்பி விட்டேன்!!!

மீண்டும் பின் அவன் தெரியாமல் அதாவது பின்  நீரின் அடியில் நுழைந்து ஆனாலும் மீண்டும் பார்த்தால் பின் முருகா!!!! முருகா !!!! என்ற சத்தம்!!!!

ஆனாலும் என் அம்மை பார்வதி தேவியே!!!... முருகா !!! இவையெல்லாம் நல்லதில்லை!!!!

இவ்வாறு உன் மீது அன்பு கொண்டோனுக்கு இவ்வாறு ஏற்படுத்துகின்றாயே இது நியாயமா ??? என்று!!!!

அம்மையே!!!! அப்படி இல்லை என் மீது கூட ஆசை வைக்க வேண்டாம் என்று எண்ணி தான்!!!!  ஆனாலும் அப்பொழுதுதான் ஞானத்தை பெற முடியும் அதனால் தேவை இல்லை என்பதே!!!!  பின் அதனால் தான்!!!!

பார்வதி அம்மை முருகா !! பார்த்துக்கொள்!!! இவையெல்லாம் தேவையில்லாதது உன்னை ஒருவன் அன்பாக கூப்பிடுகின்றான் என்றால் நீ போய் அவந்தனுக்கு ஏதாவது செய்ய வேண்டியது தானே!!!!!.......என்று!!! 

ஆனாலும் அறிந்தும் மீண்டும் அப்படியே பின் அனைத்தும் மீண்டும் எவ்வாறு இருக்கின்றானோ அவ்வாறே செய்துவிட்டேன்.

ஆனாலும் மீண்டும் முருகா!! முருகா !!  என்று தான் சொல்லிக் கொண்டிருக்கின்றான்!!!

சொல்லி சொல்லி ஆனாலும்  எப்படியாவது அதை நிறுத்த வேண்டும் என்று!!!! 

ஆனாலும் அறிந்தும் கூட ஆனாலும் சேவலை அனுப்பினேன்!!!! 

அவனை எவை என்று அறிந்து வாயின் மேலே கொத்தச்சொன்னேன்!!!! மூக்கின் மேலே கொத்தச் சொன்னேன்!!!

ஆனாலும் வாயின் மீது பின் கொத்தினாலும் மூக்கின் மேலே கொத்தினாலும் ஆனாலும் பல வகையிலும்கூட துன்பப்படுத்தினேன்!!!!

ஆனாலும் முருகா !! முருகா!! முருகா!!! என்ற வார்த்தையில் நிச்சயம் பக்கபலமாக இருக்கின்றான்!!!!

ஆனாலும் ரத்தம் வழிந்து கொண்டே இருந்தது!!!!

ஆனாலும் அங்கே பின் திரும்பிப் பார்த்து முருகா!!!!! என்ன இது???

வேடிக்கையா ?? இல்லை பின் சோதனையா???? இன்னும் ஒன்றும் தெரியவில்லை!!!!

ஆனால் முருகா!!!! நிச்சயம் உன்னை யான்  பார்ப்பதை நிச்சயம் உன்னை பார்க்கவே வரமாட்டேன் ஆனால் யானோ ஒரு பரதேசி போல் எந்தனுக்கும் துணைகள் இல்லை!!!!

அதனால் யான் எதை இவ்வுலகத்தில் கேட்க போகின்றேன் ????????????

அதனால் உன் அன்பு மட்டுமே போதும்!!!!!

அதனால் பின் இவ் ரத்தம் வடிந்தாலும் பின்  முருகா!!!  முருகா!!!! என்று தான் யான் அழைத்துக்கொண்டே இருப்பேன் உயிருள்ள வரை என்று!!!!

ஆனால் முருகனோ உணர்ந்து விட்டான்!!!!  முருகன் என்பதை கூட யான் அறிவேன்!!!! அறிந்தும் அறியாதவாறு!!!! 

ஆனாலும் பின் உயிரை பின் எடுத்து விடு என்று ஞாபகத்தில் !!!!!

ஆனாலும் உயிரை எடுக்க யான் தயாராகி விட்டேன் ஆனால் எப்படி ? உயிரை எடுக்க வேண்டும் ? என்று!!!!

ஆனால் சரி !!!! பார்ப்போம்!!! என்று நிச்சயம் அறிந்தும் அதாவது ஒரு பின் சிறு குழந்தை வடிவில் சென்றேன்!!!!

குழந்தை வடிவில் சென்று நிச்சயமாய் அறிந்தும் குழந்தை வடிவில் சென்று ஐயா !!! ஐயா.   என்று அழைத்தேன்!!! ஆனால் முருகா சொல்லப்பா!!! என்று!!!!

ஆனாலும் யானும் பயந்துவிட்டேன். முருகனா? என்று சொல்லிவிட்டான் பின் ஒருவேளை இவன் தெரிந்து கொண்டானா??? என்று!!!!

ஆனாலும் பின் நல்லதாக போய்விட்டது!!! தெரிய போவதில்லை என்பதை!!!!

ஆனால் ஆணித்தரமாக ஒன்றை சிறு குழந்தை வடிவில் சென்று பின் ஆனாலும் உன் மடியின் மீது உறங்கலாமா ??? என்று!!!

ஆனாலும் அருணகிரியோ!!!!! தாராளமாக உறங்கிக் கொள்ளலாம் என்று!!!!

ஆனாலும் உறங்கினேன் சிறிது நேரம் !!! என்னதான்? செய்யப் போகின்றான்?? என்று!!!!

ஆனால் உறங்கியதும் தெரியவில்லை !!!! யார் வந்திருப்பது என்பதும் தெரியவில்லை!!! 

முருகா !! முருகா!! முருகா!!! மீண்டும் !! மீண்டும்!! என்று!!

ஆனாலும் யான் வேண்டுமென்றே பின் """""""பளார்  !!!!!என்று ஒரு அடி அடித்தேன்!!!!!!

ஆனாலும் முருகா!!!! என்று ஒரு பின் குரல்  மட்டும்தான்!!!!!

ஆனாலும் சரி யான் அறிந்தும் கூட மீண்டும் யானே திரும்பி சென்று விட்டேன்!!!!

திரும்பிச் சென்று விட்டேன் ஆனாலும் அதை கூட கண்டு கொள்ளவில்லை 

ஆனாலும் நாடகத்தை நடத்த வேண்டும் என்று எண்ணினேன்!!!!

ஆனாலும் ஆனால் அறிந்தும் கூட ஆனால் ஒரு பெரிய மகானாக இவனிடத்தில் சென்றேன்!!! சென்று பின் அருணகிரி!!!! என்று அழைத்தேன்!!! 

அருணகிரியா. ..!?!?!?!?  அருணகிரி என்பதை கூட அவனுக்கு தெரியாமலே!!! 

ஆனால் பெயரும் கூட வைக்கவில்லை!!!!! யானே!!!  அருணகிரி என்பதை கூட!!!!........ 

இதற்கு என்ன அர்த்தம்?? என்று கூட இன்னும் சித்தர்கள் செப்புவார்கள் பொறுத்திருந்தால்!!!!!!! 

கிரியே!!!!  என்று!!!!

கிரி எதை ?? கிரி?? அறியும் வண்ணம் !!!!!

ஆனாலும்  அறிந்தும் தெரியாமலும் கூட  போய்விட்டு பின் ஆனாலும் என்னை பார்த்தான்!!!! அருணன்!!! 

ஆனாலும் பார்த்திட்டு ஐயோ!!!!!!  முதியவனே என்று யான் கூறி விட்டேன் அவந்தனை !!!!!

யார் என்று யார் முதியவன் என்று நீ கூறிவிட்டாய்?????

அதனால் யான் உந்தனை விட மாட்டேன் என்று என்னை துரத்தினான்!!!  துரத்து துரத்து என்று கூட!!!!

ஆனாலும் பின் யான் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டேன்!!!! அமர்ந்து கொண்டு நீ முதியவன் இல்லை யான்தான் முதியவன் என்று ஒத்துக் கொண்டேன் !!!!

இதனால் நிச்சயம் வயதில் முதியவன் எல்லாம் முதியவன் இல்லை என்று கூட அர்த்தம்!!!

ஆனாலும் விரட்டினான்!!! விரட்டினான்!!! அங்கிருந்து!! 

ஆனாலும் அப்பொழுது கூட பின் ஓடி வந்தானே!!!!!...... அப்போது கூட முருகா முருகா என்று!!!! 

ஆனாலும் என் சன்னதிக்கு அப்படியே இழுத்து வந்து விடலாம் என்று எண்ணினேன்!!!!! 

ஆனால் வாசல் படியில் நின்று விட்டான்!!!!! 

யான் வரப்போவதில்லை !!! யான் வரப்போவதில்லை முருகா  முருகா என்று!!!!

ஓடிவிட்டான்!!! அருணகிரி!!! 

திரும்பவும் மீண்டும் வருவானல்லவா!!!!! அப்பொழுது பிடித்து அங்கேயே அடிப்போம் என்று பின் வாசல் படியிலேயே அமர்ந்து விட்டான் !!!அருணகிரி!!! 

ஆனாலும் வந்தேன்!!!!!! வந்தேன்!!!! ஆனாலும் என்னை உற்றுப் பார்த்தான்!!! உற்றுப்பார்த்து 

யான் கை கூப்பி வணங்கினேன் அவந்தனை!!! 

அப்பொழுது பின் முருகா!!!  என்று சொன்னான்!!!!

எந்தனுக்கும். கோபம்!!!!

ஆனாலும் ஏதாவது பொய் சொல்லியாவது இவனை மயக்க வேண்டும் என்று எண்ணி!!!

என்று எண்ணி ஆனாலும் நிச்சயம் இங்கே இருக்காதே!!!!!  யான் உனை பல வருடங்களாக பார்த்து விட்டேன். வாயிலிருந்து முருகா !! முருகா !! என்று !!!!

ஆனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்று !!!

ஆனாலும் இன்னும் அறிந்தும் பின் ஆனாலும் அருணகிரியோ நிச்சயம் முறைத்தான்!!!!

சரி நீங்கள் ஞானி போல் தோன்றுகின்றீர்கள்!!!!  அதனால் யான் சிறுவனாகி விட்டேன்!!!!

இதனால் ஏதாவது ஒன்று சொல்லுங்கள்  முருகனை காண வேண்டும் என்று!!!! அருணகிரி!!!! 

ஆனால் அறிந்தும் கூட அப்படியா!!!!!! 

யான் பன்மடங்கு உயர்வுகள் பெற்றுள்ளேன்! பல ஞானங்கள் பெற்றுள்ளேன்!!!! 

அதனால் என் ஞானத்தின் சிறு துளி!!!!  அதிலிருந்து உந்தனுக்கு ஒரு வாக்கை செப்புகின்றேன் என்று கூறி நிச்சயம் அனுப்பி விட்டேன்!!! 

அதாவது தற்பொழுது திருமலை என்னும் இடத்தில் கூட!!!!

அங்கே அறிந்தும் கூட எவை என்று கூட  அவை எவையென்று இங்கிருந்து நாராயணா!!!  நாராயணா!!!!  என்று சொல்லிக்கொண்டே !!!!!....  .

ஆனாலும் பின் அங்கு பெருமானை பார் !! என்று!!!! 

அப்போது காட்சி தருவான் எவை முருகன் என்று யானே சொல்லியிருந்தேன்!!!!!

ஆனாலும் நிச்சயம் மீண்டும் ஒரு அடி அடித்தான் பளார் என்று என்னை!!!!!!
(அருணகிரி நாதர் முருகனை) 

யான் முருகா!! முருகா!!! என்று சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது நீ யார் ???? நாராயணா என்று கூறுவது என்று!!!!

அப்பா!!! போதுமப்பா!!! என்று!!!

ஆனாலும் மீண்டும் மனம் திருந்தினான்!!!!!!! 

ஐயோ!!!!! உன்னை அடித்து விட்டேனே என்று!!!!! 

யார் பெற்ற பிள்ளையோ நீ என்று !! மன்னித்துவிடு என்று!!!

மீண்டும் சரி பார்ப்போம் இதுவும் விளையாட்டுத்தனம் தான் என்று முருகனின் விளையாட்டுத்தனம் தான் என்று எண்ணி அருணகிரி சென்றான் முருகா முருகா முருகா என்று திருமலைக்கு சென்றான்!!!!!

ஆனாலும் அங்கு முருகா!!! முருகா முருகா என்று !!!

ஆனாலும் நாராயணனே!!!!! 

பின் இவன் பைத்தியக்காரனே!!!!! முருகா !!! முருகா!!! என்று எங்கிருந்து சொல்கின்றான்  என்று கூட!!!!

ஆனாலும் இதன் அர்த்தங்கள் சித்தர்கள் பின் பல வகையிலும் கூட வாக்குரைப்பார்கள் வருங்காலங்களில்!!!!!

இதை தெரிந்து கொண்டால் நன்று!!!!

கலியுகத்தில் என்ன நடக்கப்போவது ? என்பதை கூர்மையாக கூர்மையாக சொல்வார்கள்!!!!!

இன்னும் இன்னும் ஞானத்தை படைத்த சித்தர்கள்!!!! அதனால் முடித்துக் கொள்கின்றேன் என் உரையும் கூட சிறிது !!!

இதனை அறிந்து பின்பு ஆனாலும் பின் நாராயணன் சோதிப்பதில் வல்லவன் என்பது கூட!!!

ஆனாலும் வந்தான் நாராயணன் முதியவன் வேடம் அணிந்து!!!! 

ஏனப்பா???  இங்கு நாராயணன் தான் இருக்கின்றானே அறிந்தும் கூட!!!!  ஆனால் நீயோ முருகா!! முருகா!! என்று சொல்லிக் கொண்டிருக்கின்றாய் என்பதை கூட!!!!

ஆனாலும்  பின் நாராயணனும் கூட!!!!

ஆனாலும்  ஒன்றும் லாபமில்லை !!!!

ஆனால் இருந்ததோ !!!!! அங்கே இருந்தேன்  ( செந்தூரில்) முருகா முருகா என்று!!!!

ஆனால் அறிந்தும் எவனோ ஒருவன் என்னை பின் மதி மயக்கி நாராயணா என்று!!!!.......... யானே நம்பி விட்டேனே!!!!............. என்று!!!!! கூறி மீண்டும் இங்கு வந்தான்!!!! (செந்தூருக்கு) அருணகிரி!!! 

ஆனாலும் யானும் சோதனைகள் பல கொடுத்திட்டேன்!!!!

ஆனாலும் முருகா!!! முருகா!!! என்று வார்த்தையில் அர்த்தத்தை புரிந்து கொள்ள !!!!!

ஆனாலும் பின் யானே !!!.... அறிந்து பின் வேலோடு சென்றேன்!!!!

வந்தது யார்? என்று தெரிகின்றதா ? என்று கூறினேன்!!!!

அருணகிரி  தெரியும் என்று கூறிவிட்டு !!!!

ஆனால் யார் ? என்று கூறுங்கள் பார்ப்போம் !!! என்று யான் கூற!!!!! 

ஆனாலும் யானும் ஒரு அறியாத முட்டாள்!!!!! 

நீயும் ஒரு முருகனை அறியாத முட்டாள் என்று!!!!

ஆனாலும் எந்தனுக்கு வந்தது கோபம்!!!!!

எப்படியடா ??????? இப்படியெல்லாம் மனிதன் இருக்கின்றானே  தரித்திரன் என்று யான் நினைத்துக் கொண்டேன்!!!!!!மனதிலே!!!! 

பின் மீண்டும் கூப்பிட்டேன் யார் ? வந்திருக்கின்றது என்று தெரிகின்றதா??? என்று!!!!!

நன்றாக தெரிகின்றது என்று கூறிவிட்டு!!!!!

அப்பொழுது யானும் ஆசைப்பட்டேன். ஏதாவது சொல்வானா??? என்று!!!!

ஆனாலும் நிச்சயம் நீ ஒரு பைத்தியக்காரன்!!!!  யான் ஒரு பைத்தியக்காரன்!!!! நீயும் முருகனை காண இங்கு வந்து விட்டாய் !!!! யானும் முருகனை காண தான் வந்து விட்டேன்!!! 

ஆனால் பைத்தியக்காரனாக இங்கேதான் இருக்கின்றேன் !!! என் பக்கத்தில் அமர்ந்து நீயும் முருகா!!! முருகா !! என்று பைத்தியன் ஆகி விடு என்று!!!!! 

ஆனாலும் முருகா !!!! என்று பக்திகள் இப்படித்தான் இருக்க வேண்டுமே தவிர!!!!!...... எதனையும் எதிர்பார்க்காமல் இருக்க வேண்டுமே தவிர !!!! அனைத்தும் எதிர்பார்த்து வருவதில்லை பக்தி !!! பக்தி!!!!  அறிந்தும். 

இதனால் நிச்சயம் அறிந்தும் கூட ஆனால் யான் ஒன்றை கூட ஏதாவது புரிய வைக்க வேண்டும் என்று எண்ணி அருணகிரியை முருகன் அறிந்தும் கூட!!!!!!! 

ஆனாலும் இங்கே நிச்சயம் பலமாக பின் அடித்து அதாவது காகம் !!! காகத்தின் வழியாக வந்து பின் அதாவது அறிந்தும் காகபுஜண்டன்  தலையில்  ஒரு கொட்டி மதிமயக்கி விட்டான் !!!!

இதனால் யானே சொன்னேன் !!!!!

சொல்லறிந்து   வா !!!! உள்ளே செல்லலாம் (ஆலயத்திற்குள்) என்று!!!!

யான் வரமாட்டேன்!!!! முருகனை இங்கே வரச்சொல்!!!!

நீ யார் ???? முருகனுக்கு என்ன வேலைக்காரனா???? என்று எனை பார்த்தே!!!!

ஆனாலும் யான் இல்லை !! இல்லை !! என்று அறிந்தும் கூட!!!

ஆனாலும் அறிந்தும் அறியாமலும் கூட அங்கே  (திருமலையில்) அறிந்தும் கூட இதனால் இங்கே (செந்தூரில்)  பார்த்தேன் !! 

அங்கே பார்த்தேன்!!!

கடைசியில் எங்கும் பார்க்க  முடியவில்லை!!!

ஆனாலும் நாராயணனையும் பார்க்க ஆனாலும் முடியவில்லையே என்று அருணகிரி !!!! 

அப்படியா. !!!!   முதலில் எப்படியாவது பின் நாராயணன் தானே இங்கு இருக்கின்றான் என்று யான்  எதார்த்தமாக பேசி விட்டேன்!!!!

பின் ஆனாலும்  திரும்பிப் பார்த்தான்!!! அப்பொழுதுதான் கோபத்துடன்!!...................... நாராயணன் இருக்கின்றானா ????????? 

இதுவரையில் யான் முருகன் தான் இருக்கின்றான் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்!!!!!

இது என்ன பெரிய  பொய் பித்தலாட்டமாக இருக்கின்றது என்று எண்ணி !!!.........பார்ப்போம் என்று தடியுடன் எங்கே இருக்கின்றான் ????   என்று!!!!

மீண்டும் யான் பயந்துவிட்டு இவ்வளவு பக்தியா !!!! என்று.........யான் நாராயணன் வடிவில் காட்சியளித்து விட்டேன்!!!!!

ஆனாலும் பார்த்தான்!!!!!!!அப்பப்பா!!!!!!!!!!!!!! இப்பொழுதுதான் புத்திகள் வருகின்றது!!!!

இங்கே நாராயணன் இருக்கின்றானே!!! முருகன் இல்லை என்று !!!!

ஆனாலும் மீண்டும் பின் சிறு தொலைவு வந்து கண்டான் !!!!!!

(நாராயணன் ஆகவும் முருகன் ஆகவும் தரிசனம் கண்டார் அருணகிரி) 

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அனைத்தும் ஒன்று என்பது கூட!!!!!!

இதனால் இன்னும் வாக்குகள் புலமைப்படுத்துவார்கள் சித்தர்கள்!!!

 ரகசியங்களை எடுத்தும் உரைப்பேன் யான்!!!!!!

 நல்லாசிகள் அனைவருக்குமே!!!!!!!!

இன்றளவு வந்த இங்கு அனைவரையுமே யான் பார்த்து விட்டேன் வள்ளி தெய்வானையோடு வந்து உங்களையும் பார்த்து விட்டேன்!!!!!!  ஆசிகள்!!!! இன்னும் சித்தர்கள் வாக்குகள் செப்புவார்கள் காத்திருங்கள் !!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1413 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday 24 August 2023

சித்தன் அருள் - 1412 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday 23 August 2023

சித்தன் அருள் - 1411 - அகத்தியப்பெருமானின் அருள்வாக்கு!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday 22 August 2023

சித்தன் அருள் - 1410 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு 2ம் பாகம்!




ஓதி மலையில் வைகாசி விசாக தினம் அன்று குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த வாக்கு பாகம் 2.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே ஓதிமலையில் குருநாதர் பொதுவாக்கினை உரைத்து விட்டு அங்கு இருந்த அடியவர்களுக்கும் முருக பக்தர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் குருநாதர் பொதுவாக சில விஷயங்களை கூறினார் அதன் தொகுப்பு

அப்பனே அனைவருக்குமே அதாவது இவ்வுலகத்தில் அனைவருக்குமே அச்சங்கள் உண்டு அப்பனே ஆனாலும் அப்பனே..... குறைகள் இல்லை அப்பனே

அதனால் அனைத்திற்கும் முருகன்தான் பொறுப்பு!!!

அப்பனே ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது சொல்லிவிட்டேன் அப்பனே!! அதனால் அப்பனே எதை என்று அறிய அறிய இன்ப துன்பங்களை கூட சகித்துக் கொள்ளுங்கள் அப்பனே!!! நலமாகும் என்பேன் அப்பனே எவை என்று அறிய அறிய!!!!

சில சில எவை என்றும் தெரியாமலே மனிதர்களும் வருவார்கள் அப்பனே எதை என்றும் அறியாமல் புரியாமல் ஆனாலும் அப்பனே நிச்சயம் முருகன் விடப் போவதில்லை என்பேன் அப்பனே பொறாமைக்காரர்களும் எதை என்று அறியாமலே இவ் முருகனை எதை என்றும் அறிந்து அறிந்து!!!

ஆனாலும் அவர்களே பின்னோக்கி செல்வார்கள் என்பேன் அப்பனே குறைகள் இல்லை அப்பனே இன்னும் எதையென்று அறிய அறிய ஏராளம் வரும் காலங்களில் கூட எதை என்றும் அறிய அறிய அன்னத்தையும்( ஓதி மலையில் நித்திய அன்னதான சேவை) எதை என்று புரியாமலே அனைத்தையும் முருகனே ஏற்று நடத்துவான் என்பேன் அப்பனே!!!!

அதனால் இங்கு முருகனே முதல்வன்!!!!!

இதனால் யாரும் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே எவை என்று புரிய புரிய அவரவர் கேட்ட வரங்களை கூட முருகன் கொடுத்துக்கொண்டே வருகின்றான் அப்பனே ஆனாலும் எதை என்று அறிய அறிய அதை யாரும் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பேன் அப்பனே பல மனிதர்களும் கூட தவறாக பயன்படுத்தி தான் வந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!!!

யான் தான் பெரியவன் யான் தான் பெரியவன் என்று!!! 

ஆனால் முருகன் தான் பெரியவன் இங்கு இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே

நலன்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் எக்குறைகளும் கொள்ள தேவையில்லை அப்பனே!!!

ஒரு அடியவருக்கு!!!! 

அப்பனே எதை என்று அறிய அறிய கேட்டு பெறு!!!

(அதாவது என்ன வேண்டும் என்பதை என்னிடம் கேள் என்பதை குருநாதர் அந்த அடியவரிடம் கூற)

எனக்கு ஒன்றும் வேண்டாம் குருநாதனே அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே தெரிந்து கொண்டீர்களா அப்பன்களே!!!!

எவை என்று அறிய அறிய இறைவனை வணங்கும் பொழுது இப்படித்தான் வணங்க வேண்டும்!!!

எந்தனுக்கு எதுவுமே தேவையில்லை என்று அப்பனே!!!

ஆனால் இறைவன் முன்வந்து """"""இந்தா வைத்துக்கொள்!!!! என்று கொடுப்பான் அப்பனே!!!

அதைத்தான் இவன் வாயாலே யான் வரச் சொல்லி சொல்லிவிட்டேன் அப்பனே!!!!

அப்பனே எவை என்று கூட வாழ்க்கையின் தத்துவத்தை சரியாக பயன்படுத்தினாய் அப்பனே புரிந்து கொண்டாய் அப்பனே வாழ்க்கை அப்பனே எவ்வாறு என்பதை தெரிந்து கொண்டாய் அப்பனே ராகு கேதுக்களும் சரி அப்பனே அனைத்து பக்குவங்களும் தந்து விட்டார்கள் அப்பனே அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய மனிதனாக வாழ்ந்து வருகின்றாய் அப்பனே.

அனைவரும் மனிதர்கள் தான் என்று நீ சொல்லலாம் ஆனால் பல கஷ்டங்களையும் பட்டுப்பட்டு பல துன்பங்களையும் பட்டுப்பட்டு அப்பனே எவை என்று கூற அனைத்தையும் இழந்து யார் ஒருவன் இறைவனிடத்தில் வருகின்றானோ அவன் தான் மனிதன்!!!!!

அப்பனே சோதனைகள் எதை என்று அறிய அறிய அப்பனே சோதனைகள் கொடுத்து கொடுத்து அப்பனே சோதனைகளை கொடுப்பதே இறைவனுக்கு சந்தோஷமாம் ஆனால் அப்பனே பின் சோதனைகள் கொடுத்தாலும் இறைவன் எவை என்றும் அறிய அறிய பக்கத்தில் பின் எதை என்று அறிய அறிய!!!

ஆனாலும் அப்பனே அனைவருக்கும் நல் ஆசிகள் இன்றைய அளவில் எதை என்றும் அறிய அறிய முருகன் இங்கே வந்து எதை என்று அறியாமலே தாம் தான் கேட்ட எதை என்று கூட அனைவருக்குமை ஆனாலும் அப்பனே பொறுத்தாக வேண்டும் அப்பனே நிச்சயம் எவை என்றும் தாமதமாகுமே தவிர நிச்சயம் அனைத்தும் நிறைவேறும் அப்பனே

இவ் முருகனுக்கு வல்லமை உண்டு அப்பனே நிச்சயம் கேட்டுக் கொண்டு இருந்தாலே கோபங்கள் வந்து எடுத்துச் செல் என்று கூறி விடுவான் அப்பனே!!!!!

(இந்த இடத்தில் முருகன் கோபம், குறித்து அடியவர்களுக்கு சில ஐயங்கள் எழலாம்!!! ஒருமுறை சித்தர்கள் மத்தியில் குருநாதர் முருகனைப் பற்றி பேசிக் கொண்டிருந்த பொழுது முருகனுக்கு கோபம் வந்தால் இந்த உலகத்தில் நன்மையே விளையும் ஆனால் முருகன் வருத்தப்பட்டால் என்ன நடக்கும் என்று எங்களுக்கே தெரியாது என்று ஒரு முறை முருகனின் குணத்தை வர்ணித்தார். அதை இங்கே நினைவூட்டுகின்றோம் அடிக்கடி முருகனைக் கேட்டு ஓதிமலை அப்பனே கேட்டு கேட்டு தொந்தரவு செய்தால் எடுத்துச் செல் வாங்கிக்கொள் என்று கோபத்துடன் கொடுத்து அனுப்பி விடுவார் என்று குருநாதர் இங்கே குறிப்பிடுகின்றார்)

அப்பனே நிச்சயம் நினைப்பது நடக்கும் என்பேன் அப்பனே !!! உயர்ந்த இடத்திற்கு செல்வான் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே ஆனாலும் ஞானம் வேண்டுமென்றால் கஷ்டங்கள் பட வைத்து தன்னிடத்தில் வைத்துக் கொள்வான் அப்பனே சோதனைகள் கொடுத்து!!!

இதனால் அப்பனே எதை என்று அறிய அறிய நற்பண்புகள் நிச்சயம் முருகன் துணை இருக்க கவலைகள் இல்லை!!!

முருக பக்தர்கள் அனைவரும் அனுதினமும் கந்தசஷ்டி ஓதி வந்தாலே போதுமானது என்பேன். அப்பனே அனைத்தும் எளிதில் நிறைவேறும் என்பேன் அப்பனே நல்முறையாகவே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் இருக்க அப்பனே நலமாகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே.... என்று ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே சித்தர்களின் ஆசிகள் பரிபூரணமே... அப்பனே அனைவருக்குமே!!!! 

நீங்கள் எண்ணும் எண்ணங்கள் சிறிது தாமதமாகுமே தவிர ஆனால் நிச்சயம் என்னுடைய அருளாலும் கந்தனுடைய அருளாலும் நிச்சயம் நிறைவேறும் நிறைவேறும் என்பேன் அப்பனே அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் எக் கவலைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே!!!!! ஆசிகள்!! ஆசிகள்!!!! அப்பனே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!