​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 15 August 2023

சித்தன் அருள் - 1400 - அன்புடன் அகத்தியர் - ஓர் அடியவரின் அனுபவம்!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

யான் இருக்கின்றேன் அப்பனே!!!!  எதை என்று கூற அகத்தியன் இருக்கின்றான்!!!!! 

குருநாதர் தன் பக்தர்களுக்கு கூறும் இந்த வாக்கு!!!!! கருணை தெய்வத்தின் குரல்!!!!

அஞ்சினோருக்கு அபயம் அளிக்கும் இந்தச் சொல்!!

இந்த சொல்லிற்கு ஈடாக ஒரு  வார்த்தையும் இல்லை !

பிறப்பு, இறப்பு இதற்கிடையே தான் மனித வாழ்க்கை இருக்கின்றது. சாதாரணமாக பிறந்து வளர்ந்து வாழ்ந்து மரணிக்கும் வாழ்க்கையில் இறைவனை புரிந்து கொண்டு இறைவழியை பின்பற்றி சித்தர்களின் நல் உரைகளை கேட்டு நடந்தால் வாழ்க்கையில் மாற்றங்களை காண முடியும். 

இந்த உலகில் மனிதர்களால் ஒன்றுகூட செய்ய இயலாது. எதுவுமே நிரந்தரம் இல்லை. 

ஆனால் சித்தர்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். 

இந்த பிரபஞ்சமே இறையின் இறைதூதர்களான சித்தர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. 

அனைத்து ஜீவராசிகளையும் அனைத்து கிரகங்களும் அவர்களுடைய நேரடி பார்வையில் தான் உள்ளது. 

ஆனால் மனிதகுலமோ தாம் தான் இவ்வுலகில் பெரிய ஜீவன்.. எங்களால் அனைத்தும் முடியும் என்று நினைத்துக்கொண்டு வாழ்ந்து வருகின்றது!!!! 

ஆனால் சித்தர்களின் பார்வையில் மனிதர்கள் வெறும் பாவம்!! எறும்புகள்!!

ஆனால் இந்த எறும்புகளுக்கும் கருணையைக் காட்டி நலமுடன் வாழ வழிகாட்டி அருள் பாலித்து கொண்டு இருக்கின்றார் நம் குருநாதர் அகத்தியர் பெருமான்.

இந்த பூமியில் பிறந்த அனைவரும் ஒரு நாள் இறக்க வேண்டும். விதியின் பயனாக நம்முடைய பிறப்பும் இறப்பும் கஷ்டங்களும் ஏற்றங்களும் நம்முடைய கர்மா பாவ புண்ணியங்களுக்கு ஏற்பவே இருக்கின்றது.

அப்படி சில கர்ம வினைகள் சூழ்ந்து இருந்தாலும் அதன் மூலம் பல்வேறு துன்பங்களை அனுபவித்தாலும் நேர்மையுடன் கூடிய பக்தி தன்னலம் இல்லாத சேவை இறைவனையே நம்பிக் கொண்டு புண்ணிய செயல்களை செய்து கொண்டிருந்தால் விதி எப்படிப்பட்டதாக இருப்பினும் அதை அப்படியே மாற்றி கருணை காட்டி குருநாதர் மேலும் விதியினை மாற்றி அருள்வார்.

அப்படி தன்னையே நம்பிக் கொண்டு தன்வழியில் வந்து கொண்டிருக்கும் ஒரு பக்தனை மரணத்திலிருந்து மீட்டெடுத்து மறுவாழ்வு தந்த ஒரு கருணை நிகழ்வை பார்ப்போம்.

வட இந்தியாவில் வசித்து வரும் அகத்தியர் அடியவர்கள் குழுவில் ஒரு சகோதரன் இருக்கின்றார்! குருநாதரை தன் தந்தையாக எண்ணிக் கொண்டு அவர் கூறும் வழிமுறைகளை கேட்டுக்கொண்டு உபதேசங்களை கேட்டுக்கொண்டு அப்படியே வாழ்ந்து வருபவர். அவருடைய முன்னோர்கள் செய்த அதாவது அவருடைய முன்னோர்கள் குடும்பத்திற்காக மாந்திரீகத்தை நாடியுள்ளனர்.அதன் பக்க விளைவுகள் அடுத்தடுத்த வாரிசுகளை பாதித்து எதிர்வினைகள் பிழையால் ஏற்பட்ட கர்மாவினால் பல பாதிப்புகள் அவர்கள் குடும்பத்திற்கு !!!!!

இந்த சகோதரனுக்கும் அடிக்கடி சில கண்டங்கள் ஏற்பட்டாலும் குருநாதர் அதை எல்லாம் முன்கூட்டியே உபதேசம் செய்து அவரை ஒவ்வொரு முறையும் காப்பாற்றி கரை சேர்த்து விடுவார்.

ஒருமுறை இப்படித்தான் குறிப்பிட்ட நாள் வரை இருசக்கர வாகனம் நீ செலுத்தக்கூடாது என்று கட்டளையிட்டு சிறுசிறு கண்டங்களில் இருந்து காப்பாற்றினார். இது போன்று பலமுறை முன்கூட்டியே இப்படி செய்ய வேண்டும் அப்படி செய்ய வேண்டும் இதையெல்லாம் நீ செய்யக்கூடாது என்றெல்லாம் முன்கூட்டியே வாக்கு தந்துவிடுவார் அந்த சகோதரனும் அதை அப்படியே கடைப்பிடித்து குருநாதர் அருளால் வாழ்க்கையை நடத்துவார்

இந்த முறையும் அமர்நாத் யாத்திரை குறித்து குருநாதர் சில உபதேசங்கள் செய்து கொண்டிருந்த பொழுது இடையில்!!!!!

எதையென்றும் அறிய அறிய ஒன்றை சொல்கின்றேன் இப்பொழுது கூட!!!! 

எவையென்றும் அறிய அறிய உங்களில் ஒருவனுக்கு எவை என்றும் அறிய அறிய உங்களுடன் இருக்கின்றானே அவ் மைந்தனுக்கே சொல்கின்றேன் இவ்வாக்கை!!! 

எவையென்றும் அறிய அறிய பிரம்மன் இரு குழந்தைகளை கொடுத்து விட்டான் .

ஆனாலும் எவை என்றும் அறிய அறிய இவந்தனை கூட பின் எவை என்று கூட எதை என்றும் அறிய அறிய எமன் வந்து இவனை அழைத்துக்கொள்ள தயாராக இருக்கின்றான். 

அதனால் நிச்சயம் ஆடி மாதத்தில் நிச்சயம் இவந்தன் அனுதினமும் ஒரு அம்பாளுக்கு தீபம் ஏற்ற சொல்!!! எதை என்றும் அறிய அறிய அதனால் எனக்கும் எதை என்றும் அறிய அறிய பிரம்மாவுக்குமே சண்டைகள்!!!!! ஏராளம். இதனால் நிச்சயம் வேண்டாம்!!! வேண்டாம் இவன் ஒருவனையாவது விட்டு விடு இவன் இல்லத்தில் என்றெல்லாம் போராடி!!!!!! இதனால் எதை என்றும் அறிய அறிய அதனால் இவந்தனை ஆடி மாதத்தில் நிச்சயம் பின் ஒரு அம்பாளுக்கு அதாவது துர்கா தேவிக்கு தீபம் ஏற்ற சொல்!! 

யான் பார்த்துக் கொள்கின்றேன்!!!!! யான் பக்க பலமாக இருக்கின்றேன்!!!! என்று உரை!!!!! 

நிச்சயம் சுவடியை வைத்து அவன் இல்லத்தில் நிச்சயம் வணங்க சொல். யான் பார்த்துக் கொள்கின்றேன். அப்பனே ஒவ்வொரு விஷயத்திலும் உங்களை யான் கவனித்துக் கொண்டு தான் இருக்கின்றேன் என்னை நம்பியும் நீங்கள் வந்து விட்டீர்கள் .ஆனால் காப்பாற்றிக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே !!!!!

என்று குருநாதர் வாக்குகள் தந்துவிட உடனடியாக  குருநாதர் உரைத்த வாக்கினை அந்த பக்தரை தொடர்பு கொண்டு குருநாதர் கூறியதை வடமொழியில் அவருக்கு சொன்னவுடன் !!!!அவர் மனம் கலங்கி என்னுடைய வாழ்க்கையையே நடத்திக் கொண்டிருப்பது அகத்தியர் அப்பாதான் !!!!!அதனால் எது நடந்தாலும் அப்பா பார்த்துக் கொள்வார்!!!

நான் உடனடியாக இந்த ஆடி மாதத்தில் தீபம் ஏற்றுகின்றேன். என்று கூறினார்!!!!! அவரும் அமர்நாத் பயணத்திற்கு வரவும் தயாராகி விட்டார்.

அவருக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் ஒரு குழந்தை நான்கு வயதில் ஒரு குழந்தை தற்பொழுது ஏழு மாதம் ஆகி உள்ள குழந்தை.உள்ளது.

இவருடன் பிறந்த ஒரு சகோதரர் விதியின் வினையால் மறைந்து விட்டார். தாய் தந்தையர் சொந்த கிராமத்தில் வசிக்க இவர் மட்டும் வேலை நிமித்தமாக மகாராஷ்டிரா புனே நகரில் வசித்து வருகின்றார். குருநாதர் கூறும் உபதேசங்களை அப்படியே கடைப்பிடித்து நல்ல முறையில் புண்ணிய செயல்களை செய்து கொண்டு பக்தியை காட்டி வருகின்றவர் இவர்.  இவர் பிறவிகள் தோறும் அகத்தியர் பக்தனாக இருந்து சுவடியுடன் இணைபிரியாது பக்தியுடன் இருந்தவர். இதனையும் குருநாதரே ஒருமுறை அவரது முற்பிறவியை பற்றியும் வாக்குரைத்த பொழுது குருநாதருக்கும் அந்த சகோதரனுக்கும் இருந்த தொடர்பை எடுத்து கூறியிருந்தார். 

அமர்நாத் யாத்திரை செல்லும் பொழுது கூட நான் அமர நாதனை காண நடந்தே வருகின்றேன் என்று சொல்லி 40 கிலோ மீட்டர் நடந்தே வந்தார். வரும் வழியில் ஒரு சிவலிங்கம் போன்ற சூட்சுமமான ஒரு கல் கிடைக்க அந்த கல்லை எடுத்துக் கொண்டு அமர்நாத் குகையில் சமர்ப்பணம் செய்தார். இதனைக் குறித்தும் குருநாதரிடம் கேட்ட பொழுது இதன் பின் பல ரகசியங்கள் உள்ளன வரும் காலங்களில் யான் விரிவாக எடுத்துரைக்கின்றேன் என்று கூறிவிட்டார்.

அமர்நாத் யாத்திரையை சுபமாக முடித்துக் கொண்டு தரிசனம் எல்லாம் செய்துவிட்டு கீர் பவானி ஆலயத்தில் வந்து தரிசனம் செய்துவிட்டு குருநாதர் மீண்டும் அந்த அடியவருக்கு வாக்குகள் கொடுத்தார்.அமர்நாத் யாத்திரையில் உடன் வந்த சகோதரர்கள் அனைவரும் கூட்டுப் பிரார்த்தனை மேற்கொண்டு சகோதரன் நலமுடன் வாழ வேண்டும் அவருடைய ஆயுளுக்கு குறைவு வந்து விடக்கூடாது என்று வழிபாடு செய்து விட்டு அமர்நாத் யாத்திரையை சுபமாக முடித்துக் கொண்டு தரிசனம் எல்லாம் செய்துவிட்டு கீர் பவானி ஆலயத்தில் வந்து தரிசனம் செய்துவிட்டு குருநாதர் மீண்டும் அந்த அடியவருக்கு வாக்குகள் கொடுத்தார்.

அப்பனே எவை என்றும் அறிய அறிய நிச்சயமாய் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அமாவாசை முன்பும் அப்பனே பின்பும் இச் சுவடியை அப்பனே அவனிடத்தில் வைத்து விடு!!! 

அப்பனே அன்றைய மூன்று தினங்கள் கடந்துவிட்டால் யான் பார்த்துக் கொள்கின்றேன். ( அமாவசை முன் ஒரு நாள், அமாவாசை பின் ஒரு நாள் என மூன்று நாட்கள்) 

எதை என்றும் அறிய அறிய அப்பனே தற்போது வரும் நிலையில் அவள்தன் எதை என்று அறிய அறிய இவந்தன் இல்லாளிடம்( மனைவி) இவந்தன் எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே எவை என்றும் புரியப் புரிய அப்பனே அன்றைய தினத்தில் இவ் மூன்று தினங்கள் யான் சொன்னேன் அப்பனே!!! இவ் மூன்று தினத்திலும் நிச்சயம் அப்பனே கோமாதாவிற்கு அப்பனே  எவையென்று அறிந்தும் அறிந்தும் கூட  நவ கோமாதாவிற்கு ஏதாவது உணவை நிச்சயம் கொடுக்க வேண்டும் இவ் மூன்று நாட்களுக்கு. அப்பனே அவை மட்டும் இல்லாமல் பின் அமாவாசை திதியில் நிச்சயம் உன் குலதெய்வத்தை பின் உன் இல்லத்தவள் நிச்சயம் வணங்கி எதை என்றும் அறிய அறிய பின் குலதெய்வத்தின் அருளால் அன்றைய தினத்தில் மற்றவர்களுக்கும் கூட பின் அதாவது இனிப்புகளை வழங்கி விட வேண்டும். அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய  எவை என்றும் அறியாத பொழுதும் கூட எவை என்று அறிந்தும் கூட இவன் ஏற்கனவே இருக்கும் இடத்தில் கூட இவந்தன் எதனை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய ஆனாலும். அப்பனே  எதை என்று அறிய அறிய இப்பொழுது இவந்தனுக்கு வழிகள் யான் காண்பிக்கின்றேன்!!!!  தேவியை (வைஷ்ணோ தேவி) பார்த்திட்டு இவந்தன் சுவடியை எடுத்து செல்லட்டும். அப்பனே! செல்லட்டும் அப்படியே ஆகட்டும் .

எதையென்று அறிய அறிய யான் இருக்கின்றேன் அப்பனே!!!  எனையும் நம்பி வந்து விட்டாய் அப்பனே !!!!ஆனாலும் யான் இருக்கின்றேன் அப்பனே கவலையை விடு!!!! 

எதையென்று அறிய அறிய விதியையும் மாற்றி எவையென்றும்  அறிய அறிய அப்பனே மாற்றியும் அமைத்தும் விட்டேன் அப்பனே !!!!!

நீங்கள் அனைவரும் ஒரே முறையில் நவசக்தி பீடங்களுக்கு செல்ல வேண்டும் ஆனாலும் அப்பனே இப்போதைய நிலைமைக்கு தேவியை தரிசனம் செய்துவிட்டு யான் கூறியதை செய்ய வேண்டும் அப்பனே!!!!

அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நல்விதமாகவே எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் இதனால் நன் முறைகளாகவே யான் இருக்கின்றேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே எவை என்று கூட உன் முன்னோர்கள் எதை என்றும் அறியாமலே அதனால் எதை என்றும் தெரியாமலே அப்பனே மாய வலையில் கூட!!!.....

இதனால் அப்பனே எதையென்று கூட அதனால் தான் அப்பனே எவை என்று கூட பாதிக்கு பாதி( குடும்பத்தில் பிறந்த வாரிசுகள் அனைவருக்கும் பாதிக்கு பாதி ஆயுட்காலங்கள்) எவை என்று கூட இதனால் வயது!!....

ஆனாலும் எவை என்று கூட அப்பனே அவையெல்லாம் யான் நீக்கி விடுகின்றேன்!!! கவலைகள் இல்லை இதனால் நிச்சயம் நீ இருக்கின்றாயே!!! அவ்விடத்தில் மூன்று நாட்கள் நிச்சயம் சுவடியை வைத்து வணங்கு போதுமானது அப்பனே!!! பூஜைகள் செய் அப்பனே நலமாகவே!!!

அப்பனே  எதை என்று அறிய அறிய இப்பொழுது இவந்தனுக்கு வழிகள் யான் காண்பிக்கின்றேன்!!!!  தேவியை (வைஷ்ணோ தேவி) பார்த்திட்டு இவந்தன் சுவடியை எடுத்து செல்லட்டும். அப்பனே! செல்லட்டும் அப்படியே ஆகட்டும் .

எதையென்று அறிய அறிய யான் இருக்கின்றேன் அப்பனே!!!  எனையும் நம்பி வந்து விட்டாய் அப்பனே !!!!ஆனாலும் யான் இருக்கின்றேன் அப்பனே கவலையை விடு!!!! 

எதையென்று அறிய அறிய விதியையும் மாற்றி எவையென்றும்  அறிய அறிய அப்பனே மாற்றியும் அமைத்தும் விட்டேன் அப்பனே !!!!!

என்று கீர் பவானி ஆலயத்தில் வாக்குகள் உரைத்திருந்தார் நம் குருநாதர் அகத்திய பெருமான்!!!! 

அதன்பிறகு அடுத்தநாள்  ஸ்ரீநகரிலிருந்து ஜம்மு வைஷ்ணோ தேவி கோயிலுக்கு செல்லும் வழியில் குருநாதர் அருளால் மார்த்தாண்ட் சூரியனார் கோயிலுக்கு செல்ல நேர்ந்தது!!! 

அங்கே குருநாதர் மீண்டும் அனைவருக்கும் உபதேசம் செய்தார்!!!!!

நீங்கள் எவை என்றும் அறிய அறிய ஓர் பிறவியில் அப்பனே சூரிய குலத்தில் பிறந்தவர்கள் அதனால்தான் அப்பனே இதை இங்கே சொல்கின்றேன்!!!! உங்களுக்கு வாக்குகள்!!!

ஒரு காலத்தில் இங்கே நீங்கள் சூரியனை வணங்கி வணங்கி அப்பனே உயர்ந்த நிலைக்கும் ஆளாகியுள்ளீர்கள் அப்பனே என்பேன் அப்பனே அனைவருக்கும் என் ஆசீர்வாதங்கள் அப்பனே ஆசீர்வாதங்கள் இல்லாமல் அப்பனே இங்கு நெருங்கவும் முடியாது அப்பனே!!!!

என்று வாக்குரைத்தார். 

இதற்கிடையில் சக்தி பீடங்கள் செல்வதற்கு வழிமுறைகள் குருநாதரிடம் கேட்கலாம் என்று நினைத்து அடியவர்கள் ஆடி மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருவதால் முதல் அமாவாசை அன்று சக்தி பீடங்களுக்கு குருநாதர் சொன்னபடி சென்று விடலாம் ஏனென்றால் காஷ்மீர் ஹிமாச்சல் பிரதேசங்களில் நவசக்தி பீடங்கள் அருகருகே இருப்பதால் அனைத்தையும் பார்த்து விட முடியும் என்ற எண்ணத்தில் இருந்தனர்.

ஆனால் குருநாதர் 17/7/2023 அன்று ஆடி மாத முதல் அமாவாசை தினத்திலேயே செய்ய வேண்டும் நான் கூறியதை என்று வலியுறுத்தினார்.

குருநாதர் கூறிய உபதேசம்

அப்பனே அனைவரையும் நான் ஒன்றைக் கேட்க வேண்டும் அப்பனே நேற்றைய பொழுது யான் என்ன சொன்னேன்???

அப்பனே எவை என்று அறிய அறிய விதியில் உள்ளதை கூட அப்பனே சொன்னாலும் ஆனாலும் மறந்து விடுகிறீர்கள் நீங்கள் இதனால் தான் அப்பனே விதியை வெல்ல எங்களால்தான் முடியும் என்று சொல்லிக் கொண்டே வருகின்றேன்!!!

அப்பனே தீர ஆராயுங்கள் அமாவாசை முன்னும் பின்னும் என்று சொன்னேன்!!!

அப்பனே எதை என்று அறிய அறிய வைஷ்ணவி தேவியை பார்த்துட்டு அனைவரும்  அத் தேவியின் பின் உருவத்தை (புகைப்படம்) அப்பனே வாங்கிட்டு அனைவரும் கூட இல்லத்தில் சென்று அப்பனே பின் பிரார்த்தியுங்கள் அப்பனே!!!!

பின் ஏனென்றால் இதைச் சொல்கின்றேன் என்றால் அப்பனே முதலில் வரும் அமாவாசையில் அப்பனே இவந்தனுக்கு அப்பனே இவன் தன் பூஜைகள் செய்ய வேண்டும் அதனாலே முதலில் பின் முக்கியத்துவம் கொடுத்துவிட்டேன் யான்!!!

அப்பனே வைஷ்ணவி தேவியின் உருவத்தை வைத்து அப்பனே பின்பு எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் இல்லத்திலே அப்பனே  வைத்துவிட்டு அப்பனே நிச்சயம் யான் சக்தி பீடங்களுக்கு சொல்கின்றேன் பின்பு அங்கு செல்க !!!!!

எவ்வாறு அப்பனே நிச்சயம் எவ்வாறு இருக்கின்றது என்று பார்ப்போம்!!!

அப்பனே எதை என்று கூட அதனுள்ளே உங்களுக்கு சக்திகள் ஏற்பாடு செய்கின்றேன்!!!

அப்பனே அதனால் யான் சொல்லியதை செய்து கொண்டுதான் வருகின்றீர்கள் சரியாகவே செய்து கொண்டு தான் வருகின்றீர்கள்!!!

ஆனாலும் அப்பனே சந்தர்ப்பம் சூழ்நிலை அப்பனே அனைவரும்  ஒன்றாக இருக்க வேண்டும் உங்களிடமே இவன் பயணித்துள்ளவன் தான் அதனால் இவந்தனுக்கு நல்லதை செய்யவே!!!! 

அதனால் அப்பனே எதையென்றும் அறிய அறிய சக்தி பீடங்கள் இன்னும் எவை என்று அறிய அறிய அனைவரும் அதாவது அப்பனே பின் அமரநாதனே எவையென்று அறிய அறிய உங்களை அனைவரையும் ஆசிர்வதித்து விட்டான் அப்பனே எதையென்றும் அறிய அறிய யானும் சொல்லியும் விட்டேன் அப்பனே இதனால் எவை என்று கூட!!!

அதனால் அப்பனே இன்னும் செல்லலாம் ஆனாலும் அப்பனே யான் சொல்லியதை நிச்சயம் கேட்க வேண்டும்!!!

அப்பனே இதனால் எதை என்று அறிய அறிய நாளையே சென்றடைக!!!! 

அப்பனே சொல்கின்றேன் யானே வைஷ்ணவி தேவி உருவத்தை எதை என்றும் அறிய அறிய அதாவது நிச்சயம் உங்கள் இல்லத்தில் நிச்சயம் வையுங்கள் அனுதினமும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே சொல்கின்றேன் மந்திரத்தை!!!!!

என்று குருநாதர் ஒரு மந்திரத்தையும் அனுதினமும் காலை மாலை 108 முறை ஓதி வர கூறினார். 

இதனை சொல்லிட்டே வாருங்கள் இதன் பயனை நீங்களே பார்த்துக் கொள்வீர்கள்!!!!!!

அப்பனே நீ இந்த மூன்று நாட்கள் தனியாக சுவடிக்கும் பூஜை செய்துவர வேண்டும் நீ எங்கு சென்றாலும்  இச் சுவடியை எடுத்துச் செல்க!!!!!

நீ இருக்கும் இடத்திலே அப்பனே விநாயகப் பெருமானும் தங்கி (மோர்யா கோஸ்வி கணபதி மந்திர்) இருக்கின்றான் அங்கும் சென்று பின் எவை என்று கூட  இவ் மூன்று நாளும் ஆனாலும் எங்கு சென்றாலும் கடைசியில் அவனிடத்தில் வைத்து பின் வணங்கிட்டு வா!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய மூன்று நாட்கள் உந்தனுக்கு சொந்தம் இது!!!!!

அப்பனே ஏன் இதனால் சொல்கின்றேன் என்றால் அப்பனே எவை என்று கூட அனைவரும் பின் கேட்கலாம் எதனால் என்பதை கூட !!!!

அப்பனே எவை என்றும் அறிய அறிய இவன் விதியும் கூட எதை என்றும் அறிய அறிய பின் எவை என்று புரிய அப்பனே எதை என்றும் கூட எமதர்மனும் கூட பாசக்கயிற்றை!!...........

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே யான் இருக்கின்றேன் எதை என்றும் அறிய அறிய அகத்தியன் இருக்கின்றான்!!!!!

அவ் மூன்று நாட்களில் தான் போராட்டம் அப்பனே !!

அதனால் தான் விட்டு விட்டேன் அவனிடத்திலே!!!!

அப்பனே அதனால் தான் சொன்னேன் அப்பனே!!!!

அப்பனே எதனால் என்பதைக்கூட அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய அதனால் ஒரு தவறு நேர்ந்தால் பின் நீங்கள் என்னை தான் எவை என்று கூட சுவடியை தான் இப்படி எல்லாம் வாக்குகள் சொல்லுகின்றீர்களே இதை ஏன் செப்பவில்லை? என்று மீண்டும் என்னை கேட்பீர்கள் அப்பனே!!!!

அதனால்தான் சொன்னேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய நிச்சயம் எதை என்றும் அறிய அறிய  இவ்மூன்று நாட்கள் அப்பனே சென்று விடட்டும் அப்பனே நலமாகவே!!!! 

இதனால் நிச்சயம் என்னையே வணங்கிக் கொண்டிருக்கின்றான் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!

அதனால் அப்பனே அன்பும் பண்பும் நிச்சயம் அப்பனே இருந்தாலே போதுமானதப்பா யானே பார்த்துக் கொள்வேன் உங்களுக்கு என்னென்ன தேவை என்று கூட!!!

குழந்தை போல் நடத்திடுவேன் யான் உங்களையும் கூட!!!!

அப்பனே அதனால் எதை என்றும் அறிய அறிய நீங்களும் எதை என்று கூட தெரிந்தும் தெரியாமலே யான் சொல்வதைக் கேட்டுக் கொண்டே தான் இருக்கின்றீர்கள் அப்பனே அதற்கு தகுந்தார் போல யாரும் எதை என்று கூற விதியில் கடுமையான போராட்டங்கள் இருந்தாலும் அப்பனே செய்கின்றேன் செய்கின்றேன் என்றெல்லாம் அப்பனே சிறு பிள்ளைகளுக்கு எப்படி அழைத்து வருகின்றார்களோ அப்படி தான் அழைத்து வருகின்றேன் உங்களையும் கூட யான்!!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய முதலிலே அப்பனே என்னை நிச்சயம் அண்ணாமலையிலே நீங்கள் பார்ப்பீர்கள் அதிவிரைவிலே!!!!

அப்படி எதை என்றும் அறிய அறிய இதனால் ஒவ்வொரு சித்தனையும் கூட யான் காட்டுகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் நீங்கள் உணர்ந்து கொள்வீர்களா?? அப்பனே மாயை மறைத்து விடும் என்பேன். அப்பனே!!

ஆனாலும் யான் இருக்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய உங்களிடமே வந்து பேசுவார்கள் அப்பனே!!!

அப்பனே யார் மூலம் வருவார்கள் என்பதை எதிர்பார்க்க முடியாது!!!!

அப்படி எதை என்றும் அறிய அறிய அதாவது இப்புவிதனில் பிறந்தாலே கர்மா தான் அப்பா அதனால் பின் எவை என்றும் அறிய அறிய அதனால் .... மீட்கவே யான் போராடிக் கொண்டிருக்கின்றேன்!!!அப்பனே!!! 

அதனால் நீங்கள் அனைவருமே அப்பனே சுவடிக்காக ஏங்கியவர்கள் தான் என்பேன் அப்பனே அதனால் எதை என்று அறிய அறிய உங்கள் இல்லங்களிலும்  வந்து தங்கும் என்பேன். கவலையை விடுங்கள்!!!

தேடி தேடி அலைந்ததால் தான் அப்பனே உங்கள் அருகிலேயே யான் வந்து விட்டேன் அப்பனே!!!!!

அதனால் அப்பனே எக் குறைகளும் கொள்ள வேண்டாம் !!!!!

என்று குருநாதர் கருணையோடு! வாக்குகள் தந்தார்!!!!

உடனடியாக அடியவர்கள் அனைவரும் வைஷ்ணவி தேவி ஆலயத்திற்கு சென்று தேவியை தரிசனம் செய்துவிட்டு தேவியின் உருவப்படத்தை வாங்கிக் கொண்டு திரு ஜானகிராமன் ஐயாவையும் அந்த பக்தரையும் உடனடியாக ஜம்முவில் இருந்து விமானத்தின் மூலம் அவருடைய புனே விற்கு அனுப்பி வைத்தனர்.

குருநாதர் கூறியபடியே அவருடைய மனைவியும் நவகோமாதாகளுக்கு உணவையும் குல தெய்வ வழிபாடும் செய்து கொண்டிருக்க இவரும் ஊருக்கு சென்று குருநாதரை வீட்டில் வைத்து வணங்கி பூஜைகள் செய்தார் எங்கு சென்றாலும் சுவடியை தன்னுடைய கைகளில் எடுத்துச் சென்று அந்த மூன்று நாட்களும் சுவடியை பிரியாமல் தன்னுடன் வைத்துக்கொண்டு குருநாதரை வணங்கிக் கொண்டே இருந்தார்.

குருநாதருடைய திருவருளால் அந்த போராட்டமான மூன்று நாட்களும் குருநாதருடைய அருளால் வெகு சாதாரணமாகவே ஆனால் பக்தியுடன் கடந்தது.

அதாவது கடந்த மாதம் 16/17/18/ இந்த மூன்று நாட்கள் குரு சிந்தனையுடன் இருந்து குருநாதருடைய அருளால் விதியும் மாற்றப்பட்டு சுவடியை எடுத்துச் சென்று மோரியா கோஸ்வி கணபதி ஆலயத்திற்கும் எடுத்துச் சென்று நல்முறையாக சுவடியை வைத்து பூஜைகள் செய்து குருநாதருடைய திருவருளால் மரண கண்டத்தில் இருந்து காப்பாற்றப்பட்டார்!!!!

ஈசன் எப்படி மார்கண்டேயரை எமன் பாசக்கயிற்றில் இருந்து காப்பாற்றி அபயம் அளித்தாரோ அதேபோல் அஞ்சேல்!! அஞ்சேல் !!!! அப்பனே!!! அகத்தியன் யான் இருக்கின்றேன் என்று நம் குருநாதர் அகத்திய பெருமான் எமனின் பாச கயிற்றியில் இருந்து இந்த அடியவரையும் மீட்டு

கால சம்ஹார மூர்த்தியாகவே குருநாதர் மாறி கருணையை காட்டினார்

போராட்டமான மூன்று நாட்கள் முடிந்த பிறகும் குருநாதர் சுப வாக்குகள் தந்தருளினார் அப்பனே யான் விதியையும் மாற்றி அமைத்து விட்டேன்!!! கவலைகள் இல்லை இனி குறைகளும் இல்லை!!!! இனி உன் வாழ்க்கையில் ஏற்றங்களும் முன்னேற்றங்களும் தான் உண்டு!!!! பதவி உயர்வும் உந்தனுக்கு கிட்டும்!!!!!

என் பின்னாலே வந்து கொண்டே இரு அப்பனே அனைத்தையும் நான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சுப மங்கள ஆசீர்வாதம் செய்து வாக்குகள் உரைத்தார்...

உண்மையான பக்தியும் ஆழ்ந்த நம்பிக்கையும் புண்ணியங்களும் இருந்தால் குருநாதர் தேடி வந்து வாக்குரைப்பார்!!!! 

இது ஒரு புறம் என்றால் அந்த போராட்டமான மூன்று நாட்களுக்கும் ஜீவநாடியை சுவடி பெட்டகத்தை கொடுத்து அவர் உடனிருந்து காப்பாற்றிய கருணை செயல் எத்தகையது????   அந்த சகோதரன் குருநாதர் மீது எவ்வளவு பக்தியும் பாசம் வைத்திருந்தால் சுவடியை நீ எடுத்துச் செல் என்று உன் உடனே வைத்துக்கொள் என்று ஆசீர்வாதம் நல்கி இருப்பார் நினைத்துப் பார்க்கும் பொழுது கண்கள் பனிகின்றது!!! மனம் நெகிழ்கின்றது!!!!!

குருநாதா !!! குருநாதா!!! அப்பா!!! அப்பா!!! அகத்தியப்பா!!! கருணை தெய்வமே!!! எங்களுக்காகவே வந்தாயா!!! அப்பனே எத்தனை கருணை எங்கள் மீது உங்களுக்கு!!!!!!!

என்ன தவம் செய்தோம் நாங்கள் உங்கள் அருள்மொழிகளை!!! கருணை காரியங்களை!!!! அனுகிரகத்தை!!! ஆசீர்வாதத்தை!!! கேட்கும்!! பெறும்!! உணரும்!!! பாக்கியத்தை இந்த தலைமுறையில் நேரடியாக அனுபவிக்கும் வரத்தை கொடுத்துள்ளாயே குருநாதா குருநாதா அப்பா !!! அப்பா!!!

உங்கள் புனிதமான அந்தப் பொற்கமல பாதங்களை பணிந்து கோடி கோடி நன்றிகளையும் நமஸ்காரங்களையும் சமர்ப்பிக்கின்றோம்!!!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் கூறும் வார்த்தை என்னை நம்பியவர்களை யான் ஒருபோதும் கைவிட்டதாக சரித்திரமில்லை!!!!அப்பனே என்ற ஒரு வார்த்தைக்கு யுகம் யுகங்களாக பல கருணை சம்பவங்கள் உண்டு அதில் இதுவும் ஒரு சம்பவம்!!!!

குருநாதர் செய்த கருணையை மெய் சிலிர்த்து அதை அனுபவித்து குருநாதருடைய கருணையை உணரும் ஒவ்வொரு அடியவருக்கும் ஒரே ஒரு வார்த்தை தான் இங்கே தெள்ளத்தெளிவாக ஆணித்தரமாக ஒவ்வொரு அடியவர்கள் உள்ளத்திலும் பதிந்திருப்பது!!!! இந்த சொல் காலத்தால் அழியாதது யுகம் யுகமாக கடந்து நிற்பது

""""யான் இருக்கின்றேன் அப்பனே எதை என்று கூட அகத்தியன் இருக்கின்றான்!!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

5 comments:

  1. கால சம்ஹார மூர்த்தியாகவே குருநாதர் மாறி கருணையை காட்டினார்! சத்தியமான வார்த்தைகள்

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Appa saranam kappathuthu Ammai Appane Porti

    ReplyDelete
  4. குருவடி சரணம்

    ReplyDelete
  5. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete