​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 31 August 2023

சித்தன் அருள் - 1423 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!




வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!!

ஓதி மலையில் வைகாசி விசாக தினமன்று நம் குருநாதர் அகத்தியப் பெருமான் வாக்குகளை உரைத்தார்!!!!!! அதில் மிக முக்கியமான விஷயங்களை எச்சரிக்கையோடு உரைத்துள்ளார் அதை அனைவரும் நாம் கடைப்பிடித்து வர வேண்டும்!!!!!

சித்த மார்க்கம் என்பது எந்த ஒரு உயிர் வதைத்தலையும் பலியையும் ஏற்றுக்கொள்வதில்லை!!!!! இறைவனும் ஏற்றுக் கொள்வதில்லை சித்தர்களும் ஏற்றுக் கொள்வதில்லை. ஆனால் மனிதர்கள் தங்களுடைய வசதிகளுக்கு ஏற்ப காலம் காலமாக செய்து வருகின்றோம் என்று மனிதர்களே முடிவுகள் செய்து மனிதர்களே சில சடங்குகளை செய்து வருகின்றார்கள்!!!!   

இறை!!!!!!!!! அந்தச் சடங்குகளை ஏற்றுக் கொள்வதில்லை!!!

காவல் தெய்வங்களுக்கு செய்யப்படும் பலி பூசைகளை கூட குருநாதர் அப்படி செய்யக்கூடாது எப்படி செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய வாக்குகளில் ஏற்கனவே உரைத்திருந்தார்.

முருகன் பக்தர்களாக இருந்தாலும் சரி சிலர் பாரம்பரியம் என்றும் சம்பிரதாயம் என்றும் குல வழக்கம் என்று முருகனை ஒருபுறம் வணங்கிக் கொண்டே இருந்தாலும் ஒரு புறம் உயிர் பலி தருதலையும் செய்து வருகின்றார்கள் குறிப்பாக சேவல் கோழியை பலியிடுகின்றார்கள். இது மிகவும் தவறான செயலாகும் நம் குருநாதர் அகத்தியர் பெருமானும் முருகனும் சித்தர்களும் இதை ஏற்றுக் கொள்வதே இல்லை!!!! இதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இதை குருநாதர் ஏற்கனவே கூறி இருந்தால் இந்த உலகத்தில் படைக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் இறைவனுக்கு சொந்தம் இறைவன் தான் அனைத்திற்கும் தந்தையானவன் அப்படிப்பட்ட இறைவன் தன்னுடைய பிள்ளைகளையே பலியாக கேட்பானா???? என்றும் காகபுஜண்டர் மகரிஷி ஒரு படி மேலே போய் உங்கள் பிள்ளைகளை இப்படி செய்வீர்களா? இறைவனுக்காக பலியிடுவீர்களா என்று கோபத்துடன் வாக்குகள் தந்திருந்தார் இதனை நினைவில் கொள்ள வேண்டும்!!!!!

அழகன் முருகன் வாகனமாக மயிலையும் கொடியாக சேவலையும் அணிந்திருப்பதை நாம் அனைவரும் அறிவோம்!!!

முருக வழிபாடுகளில் வேலும் மயிலும் சேவலும் இன்றியமையாத ஒன்று எப்படி நாம் மயிலை கண்டால் முருகனின் வாகனம் முருகா முருகா என்று முருகனுக்கு அரோகரா என்று வணங்கி துதிக்கின்றோமே அதேபோலத்தான் சேவலை கண்டாலும் முருகனுடைய கொடி ஜீவன் என்று போற்றுதலை செய்ய வேண்டும்.

முருகனையே மூச்சென வாழ்ந்து!!!!!! எப்படி ஈசனுக்கு 63 நாயன்மார்களோ அதே போல முருகனுக்கென முருகனே கதி என்று இருந்த ஞானிகளில் அருணகிரிநாதர் மிகவும் குறிப்பிடத்தக்கவர்!!!

நம் குருநாதர் அகத்தியர் பெருமான் முருகனிடம் எப்பொழுதும் அருகிலேயே இருக்கின்ற அருட்பேறுபெற்றவன் அருணகிரி!!!!! என்று அருணகிரிநாதர் பற்றி குறிப்பிடுவார்!!!

அருணகிரிநாதர் எழுதிய கந்தர் அலங்காரத்தில் கணபதி துதி அதாவது நெஞ்ச கன கல்லு நெகிழ்ந்து ......... பாடல் கணபதி துதி பாடல் இதை அடுத்து முதல் பாடலாக

ஆடும் பரி, வேல், அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்
தேடும் கயமா முகனைச் செருவில்
சாடும் தனி யானைச் சகோதரனே!!!!!

அணி சேவல் என சேவலின் மகத்துவம் குறித்து கந்தர் அனுபூதி பாடலில் முதல் பாடலில் எழுதி இருக்கின்றார்.

சேவல் விருத்தம்

அருணகிரிநாதர் பாடிய திருப்புகழ் வேல் விருத்தம் மயில் விருத்தம் கந்தர் அனுபூதி கந்தர் அலங்காரம் இதில் சேவலுக்கு என்று தனி இடம் கொடுத்து சேவல் விருத்தம் மொத்தம் 11 பதிகங்கள் அடங்கிய விருத்தத்தை சேவல் மீது பாடியுள்ளார்!!!!!

பக்தர்கள் அனைவரும் இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும்!!!!

ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் ஓதியப்பர் முன் கண்டிப்புடன் உரைத்த வாக்கு 

எதை என்று அறிய அறிய அப்பனே மறுமுறை யான் இங்கே வருவேன் அப்பனே பிற உயிர்களை கொல்லக்கூடாது என்பேன் அப்பனே!!!!

முருகனுக்கு பிடித்தமான ஒன்று எதை என்று அறிய அறிய அப்பனே """"""" சேவல்!!!!!

ஆனால் அதனையே................????? பின் எவை என்று அறிய அறிய பின் எப்படியப்பா????????? முருகன் கொடுப்பான்???????

மக்கள் அப்படித்தான் செய்கின்றார்கள்!!!!!!!

அப்பனே பிற உயிர்களை கொல்லக்கூடாது அப்பனே!!!! இதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!!!!

ஒரு பக்தர் குருநாதரிடம் தன் வீடு அமைப்பதை குறித்து கேட்டபொழுது!!!!

அப்பனே எதைச் செய்ய வேண்டும்??? அப்பனே!!!

வீட்டை எடுத்து அப்பனே விற்று விடு!!!!

விற்று விடுவாயா?? என்ன??

அப்பனே வீடு இல்லாதவரும் உண்டு என்பேன் அப்பனே அவர்களெல்லாம் வாழ்கின்ற பொழுது அனைத்தும் கொடுத்திருக்கின்றான் அப்பனே வாழத் தெரியாமல் நீ வாழ்ந்து வருகின்றாய் அவ்வளவுதான் அப்பனே!!!

அப்பனே அதனால் பின் அனைவருமே வீட்டை எதை என்று அறிய அறிய அதாவது இல்லத்தை பின் இப்படிச் செய் அப்படி செய் என்று நன்றாகத்தான் எதை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுதெல்லாம் வாஸ்து கூட!!!

அப்பனே ஆனால் மனிதன் இறக்காமல் இருக்கின்றானா?!!! சொல்???? அப்பனே!!!

அதற்கு பதில் சொல் அப்பனே யான் சொல்கின்றேன்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஓர் வீடு அமைப்பாக அழகாக இருப்பதற்காகத்தான் மனிதன்(வாஸ்து) இதையெல்லாம் அப்பனே!!!

ஆனால் நிச்சயம் எதை என்று அறிய அறிய இல்லத்தில் அப்பனே இறைவன் பலம் இருக்க யாராலும் ஒன்றும் எதை என்றும் அறிய அறிய செய்வதற்கு ஆள் இல்லை!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய யான் சொல்கின்றேன் அப்பனே ஒன்றை இல்லத்தை அமைத்துக் கொண்டு அப்பனே மற்றொரு உயிரைக் கொன்று சமைத்து சாப்பிடுவான் என்பேன் அப்பனே அவ்வாறு இருக்க தரித்திரமாம்???!!!!!!!! இல்லமாம்?!?!?!!!!!!!!

அப்பனே இதை கேட்காவிடில் அப்பனே இன்னும் வீட்டை அமைப்பதில் குறியாக உள்ளான் என்பேன் அப்பனே கலியுகம் என்பேன் அப்பனே ஒவ்வொருவருக்கும் அப்பனே இறைவன் கொடுத்திருப்பான் ஆனாலும் எதை என்று அறிய அறிய மீண்டும் பிடுங்கி கொள்வான் என்பேன் அப்பனே!!!!

அதனால் ஒவ்வொருவரும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே பிற உயிரை பின் கொல்லாமல் இருங்கள்!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் எதை என்று அறிய அறிய உங்களுக்கு வேண்டுமென்றால் இறைவனிடத்தில் முறையிடுகின்றீர்கள் அப்பனே!!!!!

அவையும் வாயில்லா அதாவது ஜீவராசிகளும் கூட அவைகளும் கூட இறைவனிடத்தில் முறையிடும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது போட்டி கொண்டு நீங்களும் பின் எவை என்று கூட ஐந்து அறிவு உள்ள ஜீவராசிகளும்!!!

ஆனால் ஐந்தறிவுள்ள ஜீவராசிகளின் பேச்சை தான் இறைவன் கேட்பான்!!! அவைகளுக்குத் தான் உதவி செய்வான் இறைவன்!!!!!!

அதனால் எதை என்று அறிய அறிய இப்படிப்பட்டவர்களுக்கு இறைவன் நிச்சயம் செய்ய மாட்டான்!!!

ஆனாலும் யான் அனைத்தும் செய்தேனே!!!!! இறைவனை வணங்கினேனே!!!!! இன்னும் பட்டினி( விரதம்) கிடந்தேனே!!!! என்றெல்லாம்!!!!!

அப்பனே லாபமே இல்லை!!!!

ஒரு பக்தர் இடைமறித்து இறைவனுக்காகத்தானே பலியிடுகின்றோம் என்று கூற!!!!!

குருநாதர்!!! 

சரி அப்பனே!! இறைவன் உன்னை கேட்டனா???? அப்பனே!!!!

அப்படி வெட்டுகின்றீர்கள் ஆனால் கடைசியில் நீதான் சாப்பிடுகின்றாய் அப்பனே இது தரித்திரமாகுமா!! ஆகாதா???

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே சரி அவ்வாறாகவே நீ வைத்துக்கொள்!!! அப்பனே 

கடைசியில் கை கால் முடக்கம் அப்பனே வாய் ஊனம் நோய்கள் வந்துவிடும் அப்பனே அவ்வளவுதான் தெரிவித்துவிட்டேன் அப்பனே இதற்கு சம்மதம் என்றால் அப்பனே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!! எதையென்றும் அறிய அறிய!!! 

கடைசியில் பார்த்தால் அப்பனே எவை என்று கூற உண்மை நிலையை புரிந்து கொண்டு பின் விட்டு விடுதல்!!!!!!!

எல்லாம் செய்துவிட்டு கடைசியில் உணர்வதில் என்ன பிரயோஜனம் அப்பனே?????

மனிதன் கர்மங்களை சம்பாதிக்க கூடாது புண்ணியங்களை தான் சேர்த்துக்கொள்ள வேண்டும் அப்பனே!!!

ஓதிமலையில் குருநாதர் அகத்தியர் பெருமான் மேலும் அடியவர்களுக்கு நேரடியாக ஓதிய உபதேசங்கள் தொடரும் !!!......

அருணகிரிநாதரின் சேவல் விருத்தம்

காப்பு – கொந்தார் குழல்
கொந்தார் குழல்வரி வண்டோ லிடுமியல்
கொண்டேழ் இசைமருளக்
குதலை மொழிந்தருள் கவுரி சுதந்தரி
குமரன் இதம் பெறுபொன்
செந்தா மரைகடம் நந்தா வனமுள
செந்தூர் எங்குமுளான்
திலக மயிலில்வரு குமரன் வரிசைபெறு
சேவல் தனைப்பாட
வந்தே சமர்பொரு மிண்டாகிய
கய மாமுகனைக் கோறி
வன் கோடொன்றை ஒடித்துப் பாரதம்
மாமேருவில் எழுதிப்
பைந்தார் கொடு பல ராவணன் அன்பொடு
பணி சிவலிங்கமதைப்
பார்மிசை வைத்த விநாயகன் முக்கட்
பரமன் துணையாமே.

சேவற் கொடி ஆடுதே, முருகன் புகழ் பாடுதே


1. உலகிலநுதின

உலகில் அநு தினமும் வரும் அடியவர்கள் இடரகல
உரிய பரகதிதெ ரியவே
உரகமணி எனவுழலும் இருவினையும் முறைபடவும்
இருள்கள் மிடி கெட அருளியே
கலகமிடும் அலகைகுறள் மிகுபணிகள் வலிமையொடு
கடின முற வரில் அவைகளைக்
கண்ணைப் பிடுங்கியுடல் தன்னைப் பிளந்து
சிறகைக்கொட்டி நின்றா டுமாம்
மலைகள் நெறுநெறு நெறென அலைகள் சுவறிட அசுரர்
மடியஅயில் கடவு முருகன்
மகுடவட கிரியலைய மலையுமுலை வநிதை
குறவரிசையின மகள் அவளுடன்
சிலைகுலிசன் மகள்மருவு புயன்இலகு சரவணச்
சிறுவன்அயன் வெருவ விரகிற்
சிரமிசையில் வெகுசினமொடு அடியுதவும் அறுமுகவன்
சேவல் திருத்துவசமே.

2. எரியனையவியன்

எரியனைய வியனவிரம் உளகழுது பலபிரம
ராட்சதர்கள் மிண்டுகள் செயும்
ஏவற் பசாசுநனி பேயிற் பசாசுகொலை
ஈனப் பசாசு களையும்
கரி முருடு பெரியமலை பணையெனவும் முனையின்உயர்
ககனமுற நிமிரும் வெங்கட்
கடிகளையும் மடமடென மறுகி அலறிட உகிர்க்
கரத்தடர்த்துக் கொத்துமாம்
தரணிபல இடமென்வன மதகரிகள் தறிகள்பணி
சமணர் கிடுகிடென நடனம்
தண்டைகள் சிலம்புகள் கலின்கலி எனெனச் சிறிய
சரணஅழகொடு புரியும்வேள்
திரிபுரம தெரியநகை புரியும்இறை யவன்மறைகள்
தெரியும்அரன் உதவு குமரன்
திமிரதின கரமுருக சரவண பவன்குகன்
சேவல் திருத்துவசமே.

3. கரிமுரட்டடிவலை

கரிமுரட்டடி வலைக் கயிறெடுத் தெயிறு பற்
களை யிறுக்கியும் முறைத்துக்
கலகமிட்டி யமன் முற் கரமுறத் துடருமக்
காலத்தில் வேலு மயிலும்
குருபரக் குகனும் அப் பொழுதில் நட்புடன் வரக்
குரலொலித்து அடியர் இடரைக்
குலைத்தலறு மூக்கிற் சினப் பேய்களைக் கொத்தி
வட்டத்தில் முட்ட வருமாம்
அரியகொற்கையனுடற் கருகும்வெப் பகையையுற்
பனமுறைத் ததமிகவுமே
அமணரைக் கழுவில் வைத்தவருமெய்ப் பொடிதரித்
தவனி மெய்த்திட அருளதார்
சிரபுரத் தவதரித்த அவமுதத் தினமணிச்
சிவிகை பெற்றினிய தமிழைச்
சிவனயப் புறவிரித் துரை செய்விற் பனனிகற்
சேவல் திருத்துவசமே.

4. அச்சப்படக்குரல்

அச்சப் படக்குரல் முழக்கிப் பகட்டியல்
அறிக்கொட்டமிட்டம ரிடும்
அற்பக் குறப்பலிகள் வெட்டுக்கள் பட்டுக்கடி
அறுக் குழைகளைக் கொத் தியே
பிச்சுச் சினத்து தறி எட்டுத்திசைப் பலிகள்
இட்டுக் கொதித்து விறலே
பெற்றுச் சுடர்ச் சிறகு தட்டிக் குதித்தியல்
பெறக் கொக்கரித்து வருமாம்
பொய்ச் சித்திரப்பலவும் உட்கத் திரைச்சலதி
பொற்றைக் கறுத்தயில்விடும்
புத்தி ப்ரியத்தன் வெகு வித்தைக் குணக்கடல்
புகழ்ச் செட்டி சுப்ரமணியன்
செச்சைப் புயத்தன் நவரத்ன க்ரிடத்தன் மொழி
தித்திக்கு முத் தமிழினைத்
தெரியவரு பொதிகைமலை முநிவர்க் குரைத்தவன்
சேவல் திருத்துவசமே.

5. தானா யிடும்பு

தானா யிடும்பு செயு மோகினி இடாகினி
தரித்த வேதாள பூதம்
சருவ சூனியமும் அங்கிரியினா லுதறித்
தடிந்து சந்தோடமுறவே
கோனாகி மகவானும் வானாள வானாடர்
குலவு சிறை மீளஅட்ட
குலகிரிகள் அசுரர்கிளை பொடியாக வெஞ்சிறைகள்
கொட்டி யெட்டிக் கூவுமாம்
மானாகம் அக்கறுகு மானுடையன் நிர்த்தமிடு
மாதேவன் நற்குருபரன்
வானீரம் அவனியழல் காலாய் நவக்கிரகம்
வாழ்நாள் அனைத்தும் அவனாம்
சேனாபதித் தலைவன் வேதா வினைச்சிறைசெய்
தேவாதி கட்கரசுகள்
ஏனான மைக்கடலின் மீனானவற்கு இனியன்
சேவல் திருத்துவசமே.

6. பங்கமா கியவிட

பங்கமாகிய விட புயங்கமா படமது
பறித்துச் சிவத் தருந்திப்
பகிரண்ட முழுதும் பறந்து நிர்த்தங்கள்புரி
பச்சைக் கலாப மயிலைத்
துங்கமாயன் புற்றுவன் புற் றடர்ந்துவரு
துடரும் பிரேத பூதத்
தொகுதிகள் பசாசுகள் நிசாசரர் அடங்கலும்
துண்டப் படக் கொத்துமாம்
மங்கை யாமளை குமரி கங்கை மாலினி கவுரி
வஞ்சிநான் முகிவராகி
மலையரையன் உதவமலை திருமுலையில் ஒழுகுபால்
மகிழ அமுதுண்ட பாலன்
செங்கணன் மதலையிடம் இங்குளான் என்னும்
நரசிங்கமாய் இரணியனுடல்
சிந்த உகி ரிற்கொடு பிளந்தமால் மருமகன்
சேவல் திருத்துவசமே.

7. வீறான காரிகதி

வீறான காரிகதி முன்னோடி பின்னோடி
வெங்கட் குறும்புகள் தரும்
விடு பேய்கள் ஏகழுவன் கொலைசாவு கொள்ளிவாய்
வெம்பேய் களைத்துரத்திப்
பேறான .. சரவண பவா .. என்னுமந்திரம்
பேசி யுச்சாடனத்தாற்
பிடர் பிடித் துக் கொத்தி நகநுதியி னாலுறப்
பிய்ச்சுக் களித்தாடுமாம்
மாறாத முயலகன் வயிற்றுவலி குன்மம்
மகோதரம் பெருவியாதி
வாத பித்தஞ் சிலேற் பனங்குட்ட முதலான
வல்ல பிணிகளைமாற்றியே
சீறாத ஓராறு திருமுக மலர்ந்தடியர்
சித்தத் திருக்கும் முருகன்
சிலைகள் உருவிடஅயிலை விடுகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.

8. வந்து ஆர்ப்பரிக்கும்

வந்தார்ப் பரிக்குமம் மிண்டுவகை தண்டதரன்
வலிய தூதுவர்ப் பில்லி பேய்
வஞ்சினாற் பேதுற மகாபூதம் அஞ்சிட
வாயினும் காலினாலும்
பந்தாடியே மிதித்துக் கொட்டி வடவைசெம்
பவளமா கதிகாசமாப்
பசுஞ்சிறைத் தலமிசைத் தனியயிற் குமரனைப்
பார்த்து அன்புறக் கூவுமாம்
முந்தாகமப் பலகை சங்காத மத்தர்தொழ
முன்பேறு முத்தி முருகன்
முதுகானகத்து எயினர் பண்டோடு அயிற்கணை
முனிந்தே தொடுத்த சிறுவன்
சிந்தா குலத்தையடர் கந்தா எனப்பரவு
சித்தர்க்கு இரங்கு அறுமுகன்
செயவெற்றி வேள்புநிதன் நளினத்தன் முடிகுற்றி
சேவல் திருத்துவசமே.

9. உருவாய் எவர்

உருவாய் எவர்க்குநினை வரிதாய் அனைத்துலகும்
உளதாய் உயிர்க் குயிரதாய்
உணர்வாய் விரிப்பரிய உரைதேர் பரப்பிரம
ஒளியாய் அருட் பொருளதாய்
வரு மீசனைக் களப முகன் ஆதரித்திசையை
வலமாய் மதிக்க வருமுன்
வளர்முருகனைக் கொண்டு தரணிவலம் வந்தான்முன்
வைகு மயிலைப் புகழுமாம்
குரு மாமணித்திரள் கொழிக்கும் புனற்கடம்
குன்று தோறாடல் பழனம்
குழவு பழமுதிர்சோலை ஆவினன்குடி பரங்
குன்றிடம் திருவேரகம்
திரை ஆழிமுத்தைத் தரங்கக்கை சிந்தித்
தெறித் திடுஞ் செந்தினகர்வாழ்
திடமுடைய அடியர்தொழு பழையவன் குலவுற்ற
சேவல் திருத்துவசமே.

10. மகரசல நிதி

மகரசல நிதிசுவற உரகபதி முடிபதற
மலைகள் கிடுகிடு கிடெனவே
மகுடகுட வடசிகரி முகடு படபட படென
மதகரிகள் உயிர்சிதறவே
ககன முதல் அண்டங்கள் கண்ட துண்டப் படக்
கர்ச்சித் திரைத்தலறியே
காரையாழின் நகரர் மாரைப் பிளந்து
சிறகைக் கொட்டி நின்றாடுமாம்
சுகவிமலை அமலைபரை இமையவரை தருகுமரி
துடியிடைய னகை யசலையாள்
சுதன் முருகன் மதுரமொழி உழைவநிதை
இபவ நிதை துணைவன் எனது இதய நிலையோன்
திகுட திகு டதிதிகுட தகுடதித குடதிகுட
செக்கண செகக்கணஎனத்
திருநடனம் இடுமயிலில் வருகுமர குருபரன்
சேவல் திருத்துவசமே.

11. பூவிலியன் வாசவன்

பூவிலியன் வாசவன் முராரி முநிவோர் அமரர்
பூசனை செய்வோர் மகிழவே
பூதரமும் எழுகடலும் ஆட அமுதூற
அநு போக பதினாலு உலகமும்
தாவு புகழ் மீறிட நிசாசரர்கள் மாளவரு
தான தவநூல் தழையவே
தாள் வலியதான பல பேய்கள் அஞ்சச் சிறகு
கொட்டிக் குரல் பயிலுமாம்
காவுகனி வாழை புளி மாவொடுயர் தாழை கமு
காடவிகள் பரவு நடனக்
காரண மெய்ஞ்ஞான பரி சீரண வராசனக்
கனகமயில் வாகனன் அடல்
சேவகன் இராசத இலக்கண உமைக்கொரு
சிகாமணி சரோருக முகச்
சீதள குமார கிருபாகர மனோகரன்
சேவல் திருத்துவசமே.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha.
    Sie,What s the article link for the alternative methods mentioned in the below para.
    காவல் தெய்வங்களுக்கு செய்யப்படும் பலி பூசைகளை கூட குருநாதர் அப்படி செய்யக்கூடாது எப்படி செய்ய வேண்டும் என்பதை தன்னுடைய வாக்குகளில் ஏற்கனவே உரைத்திருந்தார்.

    Regards
    Chitra

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete