​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 5 August 2023

சித்தன் அருள் - 1385 - அன்புடன் அகத்தியர் - அமர்நாத் யாத்திரை அனுபவம்!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

இந்த ஆண்டு அமர்நாத் பயணத்தில் கடந்த வருடம் யாத்திரைக்கு பெருமளவில் உதவிகள் செய்த சிவனடியாரான கணபதியின் பெயர் கொண்ட சிதம்பரத்திற்கு அருகே பூர்வீகமாக கொண்ட இந்திய பாதுகாப்பு படையான சி ஆர் பி எப் கமாண்டோவாக பணிபுரியும் அதிகாரிக்கு குருநாதர் நல்வாக்கினை தந்து ஆசீர்வாதம் செய்தார்!!

அந்த அனுபவ பதிவு மற்றும் குருநாதருடைய வாக்கு சித்தன் அருள் 1171ல் வெளிவந்துள்ளது.

இந்த ஆண்டும் அதேபோல அந்த அதிகாரி யாத்திரை சென்ற அடியவர்களுக்கு உணவு மற்றும் தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்திருந்தார்.

அவர் சி ஆர் பி எப் படைப்பிரிவில் 135 பேர் கொண்ட படை வீரர்களுக்கு கமாண்டோவாக பணிபுரிகின்றார் இந்த ஆண்டு அமர்நாத் பயணத்திற்காக அவருடைய பணி மேலும் அதிகமாக வரும் யாத்திரிகர்களுக்கு உதவிகள் செய்வதற்கு ஸ்ரீநகர் அவருடைய ரெஜிமென்ட் இருப்பிடத்திலிருந்து அதிகாலை 3 மணிக்கு சென்று யாத்திரிகர்களுக்கு பணி சேவைகள் செய்த இரவு தான் மீண்டும் அவருடைய இருப்பிடத்திற்கு திரும்புவார்.

அமர்நாத் யாத்திரை செல்வதற்கு முன்னும் பின்னும் நேரம் கிடைக்கும் பொழுது உரையாடி தேவையான வசதிகளை செய்து கொடுத்தார் அமர்நாத் யாத்திரை செய்துவிட்டு வந்தவுடன் அவரும் குருநாதரை கண்டு ஆசிர்வாதம் பெற வேண்டும் என்று விரும்பினார்!!!

அமர்நாத் யாத்திரை சென்று வந்த திரும்பிய தினம் அன்று குருநாதர்  அவருடைய ரெஜிமென்ட் இருப்பிடத்திற்கு சென்று ஆசிர்வாதம் செய்தார்!!!!

சுற்றிலும் படை வீரர்களின் குடியிருப்பு அவருடைய இருப்பிடத்திலே தாய் லோப முத்திரை சமேத குருநாதர்  புகைப்படமும் சிறிய விளக்கும் எரிந்து கொண்டு இருந்தது.

ராணுவ அலுவலக வாசல் வரை காத்திருந்து குருநாதரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார்.

உள்ளே அழைத்துச் சென்று ஜீவநாடி பெட்டகத்திற்கு ஒரு சிறிய கற்பூரத்தை ஏற்றி பயபக்தியுடன் தீபாரதனை செய்தார்.

தீபாராதனை முடித்துவிட்டு திரு ஜானகிராமன் ஐயா குருவை வணங்கி சுவடியை திறந்த பொழுது குருநாதருடைய கருணை வெள்ளம் மழை போல பெய்யத் தொடங்கியது அந்த அதிகாரியின் மேல்!!!

கை கூப்பியப்படியே தரையில் அமர்ந்து கண்கள் கலங்கி பயபக்தியுடன் குருநாதருடைய வாக்குகளை கேட்டு பரவசம் அடைந்து மெய்யுருகி போய்விட்டார்!!!!!!

ஒவ்வொரு வார்த்தையையும் கேட்க கேட்க பிரமித்து மகிழ்ந்து அப்பப்பா!!!!!! அவர் குடியிருக்கும் குடியிருப்பு பகுதிகளில் ஈசன் வந்து செல்கின்றான்!!!! யானும் உன்னை அடிக்கடி பார்த்து ஆசிகள் செய்து கொண்டே இருக்கின்றேன்!!!!

மற்றவர்களுக்காக உதவிகள் செய்யும் மனப்பான்மை கொண்டவர்களுக்கு ஈசனுடைய அனுக்கிரகம் என்றுமே இருக்கும் ஈசன் பக்கத்திலேயே இருப்பான் என்றும்!!!! 

அவருடைய கடலூர் மாவட்டம் சிதம்பரத்திற்கு அருகே இருக்கும் திருத்தல யாத்திரை சென்ற சுந்தரர் வழி தெரியாமல் திகைத்து நின்ற பொழுது முதியோர் வேடத்தில் வந்து ஈசன் வழித்துணை நாதராக வழிகாட்டிய ஒரத்தூர் கிராமத்தில் இருக்கும் ஈசனுடைய ஆலயம் மரகதவல்லி தாயார் சமேத மார்க்க சகாயேஸ்வரர் ஆலயத்தில் அவருடைய கடைசி காலத்தில் ஈசனுடைய தரிசனம் கிடைக்கும் என்று திருவாய் மலர்ந்து அருளிய வாக்கினை கேட்டு நா எழாமல் திக்பிரமை பிடித்தவர் போல்... பக்தி பரவசத்தில் குருநாதரை பணிந்து வணங்கினார்.

அடியவர்கள் அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால் அவர் ஒரு கண்டிப்பான நேர்மையான பல பாதுகாப்பு சிந்தனைகள் கொண்டுள்ள அதிகாரி அதிகம் பேசாமல் மக்களுடைய பாதுகாப்பு நகரத்தின் பாதுகாப்பு இவற்றைப் பற்றி சிந்தனைகள் மட்டுமே அவருக்கு !!!

காஷ்மீரிலும் ஸ்ரீ நகரிலும் எந்த மாதிரியான பரபரப்பான சூழ்நிலை இருக்கும் என்பதை அனைவருக்கும் தெரியும் அந்த ஒரு கமாண்டோ படை வீரனுக்குள் ஒரு குழந்தை போல சிவமும் அகத்தியமும் ஒளி வீசி சுடர் விட்டது!!

அவர் கண்கள் பனித்து அவருக்குள் இருக்கும் பக்தியும் பணிவும் சாந்தியும் வெளிப்பட்டது.

அவருக்கு மட்டும் குருநாதர் நல்லாசிகள் வழங்காமல் அவருடைய குழுவினர் மற்றும் அனைத்து படைவீரர்களுக்கும் நல்லாசிகள் தந்து ஆசீர்வாதம் செய்தார்!!!!

குருநாதர் உரைத்த வாக்கு!!!!

ஆதி அந்தம் இல்லாதவனை பணிந்து வாக்குகள் ஈகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே நலன்களாக எம்முடைய ஆசிகள் அப்பனே!!! 

பரந்து விரிந்து அப்பனே ஈசனுடைய அனுகிரகங்கள்!!!!! அப்பனே!! 

இதனால் அப்பனே குறைகள் ஒன்றும் இல்லையப்பா!!!! 

ஈசன் அனுதினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே இதனை செய்ய வேண்டும் எதனை செய்யக்கூடாது என்பதையெல்லாம் அப்பனே!!!

அதனால் பல பல பின் நல்வாழ்வு அப்பனே!!!
பிறருக்காக வாழ வேண்டும் என்பதற்காகவே பல உயிர்களைக் கூட ஈசன் பாதுகாத்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

அதனால் அப்பனே நீ இறந்தவன்!!!!!!

அதனால் அப்பனே மறுபிறவி ஈசனே கொடுத்திருக்கின்றான் அப்பனே!!!! 

அவந்தனுக்கு நன்றியை கூறு போதுமானது!!!!!! 

உன் விதியும் எப்பொழுதோ முடிந்துவிட்டது!!!

ஆனால் சேவை செய்ய வேண்டும் !!!!!   அதற்காகவே ஈசன் உன்னை விட்டு வைத்துள்ளான் அப்பனே அவ்வளவுதான் வாழ்க்கை!!

அப்பனே நலங்களாக இதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே!!!!!

இறந்தவனுக்கு அப்பனே எவை என்றும் அறிய அறிய!!!

அப்பனே இறந்தவனை எதை என்றும் அறிய அறிய அப்பனே பின் பிழைக்க வைக்க தெரிந்தவனுக்கு உன் குடும்பத்தையும் பார்க்கத் தெரியும் என்பேன் அப்பனே!!!! நல்லாசிகள் என்பேன் அப்பனே!!

அவரவர் விருப்பப்படியே நிச்சயம் ஈசன் நிச்சயம் அப்பனே அனைவருமே கூட அப்பனே பின் எதை என்று கூட பின் வீட்டை விட்டும் எதை என்று கூட அப்பனே தாய் தந்தையைக் கூட அப்பனே!!! மனைவி பிள்ளைகள் அவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பனே தனியாகவே அப்பனே எவை என்று கூற பின்....... உயிருக்கும் உத்திரவாதம் இல்லை என்பேன் அப்பனே!!!

ஆனால் ஈசன் எதையென்றும் அறிய அறிய அப்பனே அழகாகவே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே ஒவ்வொருவரின் இதயத்திலும் கூட அப்பனே எவை என்று அறிய அறிய ஏங்கிக் கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!

ஆனாலும் ஈசன் அனைவருக்குமே அருள் செய்து வருகின்றான் அப்பனே!!! 

அப்பனே இதன் முன்னே அப்பனே ஒரு வருடத்திற்கு எதை என்றும் அறிய அறிய இதன் முன்னே அப்பனே எதை என்று அறிய அறிய அதாவது இப்பொழுது கூட இவ் நகரம் அப்பனே அழித்திட வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய பின் பகைவர்கள் வந்து அப்பனே எதை என்று கூற பின் எப்படி ஆவது தாக்கிட வேண்டும் பின் அழித்திட வேண்டும் என்பவை எல்லாம்!!!

ஆனால் அதற்கு முன்பே ஈசன் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய பஞ்சத்தை வைத்திட வேண்டும் என்று பஞ்சத்தை வைத்து விட்டான் அப்பனே!!!

திருந்துங்கள் இதிலாவது!!!

நிச்சயம் சண்டைகள் வேண்டாம் என்பவை எல்லாம் அப்பனே!!

நிச்சயம் யாங்கள் இருக்கின்றோம் அப்பனே எதை என்று அறிய அறிய எவருக்கெல்லாம் எதை எதை செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் என்னுடைய ஆசிகள் உந்தனுக்கப்பா!!!!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் உன்னிடத்தில் உள்ள அனைவருக்குமே எம்முடைய ஆசிகளப்பா!!! 

அப்பனே சித்தர்கள் எதை என்றும் அறிய அறிய யான் ஏற்கனவே பல வகையிலும் கூட உரைத்துக் கொண்டுதான் வருகின்றேன் அப்பனே!!!

யார்?  ஒருவன் எதை என்றும் அறிய அப்பனே மற்றவர்களுக்கு அப்பனே உதவிகளாக இருக்கின்றானோ அவர்களுக்கு நிச்சயம் ஈசன் அப்பனே அருகிலே இருந்து அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!!

ஆனால் மனிதர்களோ எதை என்றும் அறிய அறிய தான் மட்டும் வாழ வேண்டும் என்பதற்காக இன்னும் கடன்கள் பணங்கள் எதை என்று அறிய அறிய பின் தொழில்கள் இவையெல்லாம் அப்பனே நிச்சயம் ஆகாது என்பேன் அப்பனே!!!!

ஒரு நாள் அழித்து விடும் அப்பனே!!!

ஆனால் நீங்கள் அனைவருமே எவை என்று அறிய அறிய நிச்சயம் புண்ணியம் எதை என்று அறியாமலே இதனால் அப்பனே எவை என்றும் அறிய அறிய ஏன் எதற்காக எவை என்றும் கூட இத்தொழிலை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதையெல்லாம் அப்பனே

முன்னொரு காலத்தில் அப்பனே எவை என்றும் அறிய அறிய பின் அதாவது கடவுளுக்காகவும் எதை என்றும் அறிய அறிய தேசத்திற்காகவும் நாங்கள் தொண்டு செய்ய வேண்டும் என்பதற்காகவே அப்பனே பிறப்பு எடுத்து வந்துள்ளீர்கள் அப்பனே!!!

இதனால் யாரும் தடுக்க முடியாதப்பா!!!!

விதியப்பா இது!!!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பல நபர்களை கூட உன்னிடத்தில் வேலை செய்பவர்களை கூட அப்பனே ஈசன் உயிரை எதை என்றும் அறிய அறிய அப்பனே கொடுத்திருக்கின்றான் அப்பனே!!! எவை என்று அறிய அறிய அப்பனே

இதனால் அப்பனே பல நபர்களும் கூட அப்பனே தான் உண்டு வாழ்ந்து தன் பிள்ளைகளுக்கு கூட கொடுத்து அப்பனே சுயநலமாக வாழ்ந்து ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!!!

அவர்களுக்கெல்லாம் கர்மா தான் சேர்ந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே!!!!

ஆனால் உந்தனுக்கு அப்படி இல்லையப்பா!!!!!

உன்னுடன் சேர்ந்தவர்களும் கூட அப்பனே எதை என்றும் அறிய அப்பனே நல் விதமாக ஈசனும் இங்கு வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!! 

எவர் அறிவார்????  அப்பனே!!

எவை என்று கூட அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே """""ஒருவனே தெய்வம்!!!!! எதை என்றும் அறிய அறிய!! நிச்சயம் சித்தர்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய நிரூபிப்பார்கள் என்பேன் அப்பனே!!! (எதிர்) காலத்தில்!!! அப்பனே!! 

ஆனாலும் அப்பனே மனிதனுக்கு புத்திகள் இல்லை அப்பனே எவை எவையோ நினைத்துக் கொண்டு எதை எதையோ செய்து வருகின்றான் அப்பனே நம்தனுக்காகவே அப்பனே!!!

அதனால் பிறருக்காக உழையுங்கள் அப்பனே!!!
நிச்சயம் இறைவன் அருகிலே இருப்பான் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய இறைவனை வணங்குவது அப்பனே எதையெதையோ செய்வது!!.....

ஆனாலும் அப்பனே பிறருக்காக வணங்கினால் அப்பனே இறைவன் உந்தனுக்காக வணங்குவான் அப்பனே அவ்வளவுதான்!!!!!

இது தான் வாழ்க்கையப்பா!!!!! 

மனிதப் பிறவியில் ஒன்றும் இல்லையப்பா!!!

எதை என்று கூட பிறக்கின்றான் அப்பனே பின் சாகின்றான் அப்பனே இதன் மத்தியில் தான் விளையாட்டப்பா!!!
இதில் தான்  புண்ணியம் செய்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

எதற்காக? மனிதன் பிறக்கின்றான் எதற்காக இறக்கின்றான்??? எதற்காக வாழ்கின்றான்? என்பதை தெரியாமலே  வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே தெரிந்து கொள்ள புண்ணியங்கள் வேண்டுமப்பா!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே அதனால் எம்முடைய ஆசிகள் அப்பனே!!!

இவையெல்லாம் யான் கடந்து எவை என்று அறிய அறிய இங்கே எவை என்று புரிய அப்பனே திரிந்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய உன்னை பலமுறையும் ஆசிர்வதித்து விட்டேன் அப்பனே!!

உன் உடம்பை மட்டும் சரியாக கவனித்துக் கொள் போதுமானது என்பேன் அப்பனே!!!

மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கிறேன் அப்பனே கவலைகள் இல்லை!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே உன் விதியும் முடிந்து விட்டது ஆனால் நிச்சயம் யான் சொன்னேன் அப்பனே திரும்பத் திரும்ப இதைத்தான் சொல்கின்றேன் அப்பனே இவைதான் மனிதர்களுக்கும் யான் உரைப்பேன் அப்பனே!!

நன்றாகவே மற்றவர்களுக்கு சேவைகள் செய்து கொண்டு வந்தால் எவை என்று கூற அப்பனே யானே வந்து காப்பாற்றுவேன்!!!!

""""""" போகும் உயிரையும் கூட அப்பனே காப்பாற்றுவேன் அப்பனே!!!

இல்லையென்றால் !!!! அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லையென்றால் !!!! சுலபமாக எவை என்றும் அறிய அறிய அப்பனே சுயநலத்திற்காக என்றால் நிச்சயம் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை என்பேன் அப்பனே!!

யாங்கள் காப்பாற்றியும் வீணப்பா!!!

அதனால் நிச்சயம் அப்பனே உங்களையும் காப்பாற்றுவேன் இத்தேசத்தையும் கூட யாங்கள் காப்பாற்றிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!!

பஞ்சம் பட்டினி அப்பனே எவை என்று அறிய அறிய அனைவருக்கும் ஏதாவது ஒரு ரூபத்தில் கொடுத்து கொண்டு தான் இருக்கின்றோம் அப்பனே நலமாகவே!!!

அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாமப்பா!!!!

உன் கடமையை நீ செய் அப்பனே!!! 

எவை என்று அறிய இறைவன் கடமை எதை என்று அறிய அறிய அப்பனே உன் குடும்பத்தை பார்த்துக் கொள்வான் அப்பனே அவ்வளவுதான் அப்பனே எவை என்று கூட உந்தனுக்கு மட்டுமில்லை எதை என்றும் அறிய அறிய அனைவருக்குமே இப்படித்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!

அதனால் அப்பனே!! இறைவன் தான் உங்களுக்கு துணை!!!

அப்பனே இறைவனை நம்பித்தான் நீங்கள் இங்கு வந்திருக்கிறீர்கள் நிச்சயம் எவரை நம்பியும் வந்ததில்லை என்பேன் அப்பனே!!!!

அதனால் மறைமுகமாக அனைவரையுமே இறைவன் பாதுகாத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பனே!!!

நிச்சயம்  அப்பனே வரப்போகும் அழிவும் எதை என்றும் அறிய அறிய யாங்கள் காத்துக் கொள்வோம் என்பேன் அப்பனே!!

""எங்களுடைய ராஜ்ஜியம் !!!

அப்பனே நிச்சயம்  எதை என்று கூட பின் எங்களுக்காகவே எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!

என்றும் ஈசனும் கூட அப்பனே!!  கிருபை!!!!! ! எதை என்றும் அறியாமலே அதனால் அப்பனே மக்களுக்காக சேவை செய்பவர்கள் உங்களுக்காக யாங்கள் செய்கின்றோம் இறங்கி!!!!

அதனால் கவலையை விடுங்கள் அப்பனே!!!

நலன்கள் ஆசிகளப்பா!!!! கோடிகளப்பா!!!! 

குருநாதர் உரைத்த இவ்வாக்கின கேட்டு மெய்யுருகி கைகூப்பி கண்ணீர் மல்க கேட்டுக் கொண்டிருந்த அந்த அதிகாரி. நான் என்ன புண்ணியம் செய்தேனோ என்று தெரியவில்லை என்னை தேடி வந்து குருநாதர் இவ்வளவு தூரம் ஒரு தந்தை போல என்னை உபதேசித்து வழி நடத்துகின்றார் எந்த விதம் நன்றி கடன் நான் செலுத்த முடியும் என்றே தெரியவில்லை என்று மனம் உருகி ஒரு வார்த்தை கூறினார்!!

எதிர்காலத்தில் நான் பணி ஓய்வு பெற்றபின் குருநாதரோடு இணைந்து பயணித்து சேவைகள் செய்ய வேண்டும் குருநாதர் அதற்கு அருள வேண்டும் என்று ஒரு விண்ணப்பத்தை வைத்தார்!!!

குருநாதர்

எதை என்றும் அறிய அறிய என்னிடத்தில் வருவாய் என்பேன் அப்பனே யாங்கள் துணை இருக்கின்றோம் அப்பனே இங்கேதான் யான் இருக்கின்றேன் அப்பனே நலன்களாக ஈசனும் இருக்கின்றான் அப்பனே எதைச் செய்ய வேண்டுமோ அதை யாங்களே செய்கின்றோம் அப்பனே!!

கவலையை விடு அப்பனே

சேவைகளும் செய்வாய், எதை என்றும் அறிய அறிய அப்பனே ஈசனையும் காண்பாய் என்பேன் அப்பனே எவை என்று கூற!! 

நீ இருக்கும் இடத்திலிருந்து அப்பனே எவை என்றும் அறிய சிறிது தூரத்திலே ஒரு ஈசன் ஆலயம் உள்ளது என்பேன் அப்பனே அங்கு நிச்சயம் ஈசன் உந்தனுக்கு தரிசனம் கொடுப்பான் கடைக்காலத்தில் அப்பனே!!

நன்று !! நலம் !!ஆசிகள்!!! அப்பனே!!!

என்று நல்லாசிகள் தந்து அருள் செய்தார் நம் குருநாதர் அகத்தியர் பெருமான்!!!!

இந்த புண்ணிய பூமியில் ஒவ்வொரு ஜீவராசியின் மீதும் இறைவனுடைய பார்வையும் சித்தர்களுடைய கண்காணிப்பும் இருக்கின்றது!!!!

நாம் யார் யார் எதை செய்கின்றோம் யார் யாருக்கு உதவிகள் செய்கின்றோம் யார் யாரிடம் எப்படி எல்லாம் நடந்து கொள்கின்றோம் என்பதை எல்லாம் அவர்கள் அறிவார்கள்!!!!

நல்ல உள்ளமும் பக்தியும் மற்றவர்களுக்கு உதவும் குணம் இருந்தால் அவர்களே நம்மை தேடி வருவார்கள் தேடி வந்து ஆட்கொண்டு நம்மை வழி நடத்தி நம்மை அருகிலேயே வைத்துக் கொள்வார்கள்!!!!

இச் சம்பவம் அகத்தியப் பெருமானின் கருணை மழையில் ஒரு துளி!!!! அந்தத் துளி நம் வாழ்நாள் முழுவதற்குமான பக்தி தாகத்திற்கு!!!!
தாகத்தை தணித்து மருந்தாக இருக்கும்!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment:

  1. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete