​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 7 August 2023

சித்தன் அருள் - 1388 - அன்புடன் அகத்தியர் - அனந்த் நாக் மார்தண்ட் சூரியனார் கோயில். ஜம்மு காஷ்மீர்.









14/7/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு: வாக்குரைத்த ஸ்தலம் : அனந்த் நாக் மார்தண்ட் சூரியனார் கோயில். ஜம்மு காஷ்மீர். 

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

அமர்நாத் யாத்திரை கீர் பவானி தரிசனம் முடிந்த உடன் அனந்த் நாக் சிவன் ஆலயத்திற்கு செல்ல முடிவு செய்து பயணத்தை தொடங்க!!!!!

ஆனால் குருநாதரோ அனந்த் நாக் ல் உள்ள மிகப் பழமையான சூரியனார் கோயில் அந்த கோயிலுக்கு சூட்சமமாக அழைத்துச் சென்றார்.

குருநாதருடன் பயணிக்கும் பொழுது சில சில யாத்திரைகளில் நாம் யாரும் எந்த முடிவும் எடுக்க முடியாது குருநாதரே முடிவு செய்து சூட்சுமமாக அழைத்துச் செல்வார்.

அப்படி அனந்த் மார்த்தாண்ட் ஆலயத்திற்கு சென்ற பொழுது நாம் கூறிய ஆலயம் இது அல்ல!!! ஓட்டுநர் தவறாக அழைத்து வந்து விட்டார் என்று தான்  அடியவர்கள் எண்ணினார் !!

ஆனால் அங்கு சென்ற பிறகுதான் குருநாதர் வாக்குகளில் பல ரகசியங்களை கூறினார்.

ஆலயம் ஒரு காலத்தில் மிக பிரம்மாண்டமான முறையில் இருந்து சிதைந்து தற்பொழுது மத்திய அரசாங்கத்தின் தொல்லியல் கட்டுப்பாட்டு துறையில் உள்ளது.

ஆலயத்தில் கூரைகளோ மிச்சம் மீதியோ எதுவும் இல்லை ஆலயம் அங்கு இருந்ததற்கான சுவடுகள் மட்டுமே எஞ்சி நிற்கின்றன!!

வழிபாடுகளோ வணங்குதலோ அங்கு இல்லை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் ஒரு சிறிய தோட்டம் அமைத்து நடுவில் இந்த ஆலயம் சுற்றுச்சூழல் உடைந்த பிரகாரங்கள் சிதிலமடைந்த சிற்பங்கள் என காண பட்டது!!!!

இந்த ஆலயத்தில் வழிபாடுகளோ மக்கள் கூட்டமோ எதுவுமே இல்லை குருநாதர் சூட்சுமமாக இங்கே வரவைத்து இருக்கின்றார் ஏதாவது காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொண்டு குருநாதரிடம் வாக்குகள் கேட்ட பொழுது!!!!!

முதலில் குருநாதர் அடியவர்களை அங்கு வரவைத்ததற்கான காரணத்தை கூறினார் அதன் பிறகு ஆதிசங்கரர் இந்த ஆலயத்தில் இருந்து என்னென்ன செய்தார் என்பதை கூறும் பொழுது தொல்லியல் துறையில் இருக்கும் காவல் அதிகாரிகள் வந்து குருநாதர் வாக்குகளுக்கு இடையே வந்து கலகம் செய்தனர்.

அடியவர்களும் எவ்வளவோ எடுத்துக் கூறினார்கள் இது ஒரு புனிதமான இடம் இது அகத்திய பெருமானின் ஜீவநாடி வாக்குகள் அகத்தியப் பெருமான் தந்து கொண்டிருக்கிறார் நீங்கள் இடையூறு செய்ய வேண்டாம் நாங்கள் ஒரு தொந்தரவும் செய்யவில்லை அமைதியாக உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்கின்றோம் இங்கு எத்தனையோ சுற்றுலா பயணிகள் காலில் காலணிகள் அணிந்து கொண்டு இந்த இடத்தின் புனிதத்தை மதிக்காமல் எனது தானோ என்று வந்து செல்கின்றார்கள் ஆனால் நாங்கள் குருநாதர் உத்தரவுப்படி இங்கே வந்து அமைதியாக வணங்கி குருநாதருடைய உத்தரவுகளை கேட்கின்றோம் ஒரு ஐந்து நிமிடம் மட்டும் தாருங்கள் நாங்கள் குருநாதர் உடைய வாக்குகளை கேட்டு பின்பு வெளியே சென்று விடுகிறோம் என்று கூறியதற்கு அவர்கள் அனுமதி தரவில்லை !!! சிறிது நேரம் காரசாரமாகவே விவாதம் ஏற்பட்டது !!!!

குருநாதரும் வாக்கினை நிறுத்துக !!!  

வெளியே சென்று ஓதுக!!! என்று உத்தரவிட்டார்.

அந்த காவல்துறை அதிகாரி ஒரு சீக்கியர்!!!! அவரிடம் அடியவர்கள் குருநாதரை பற்றி ஜீவநாடி பற்றி எடுத்துக் கூறிய பொழுது அந்த காவல்துறை அதிகாரி மன்னிக்க வேண்டும் நான் இங்கே காவல்துறை அதிகாரி எனக்கு மேலே சில அதிகாரிகள் இருக்கின்றார்கள் அவர்கள் உத்தரவுப்படிதான் நான் நடந்து கொள்ள முடியும் ஏதேனும் தவறாக பேசியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என்று தன் தவறை உணர்ந்து மீண்டும் குருநாதர் வாசிக்கும் இடத்திற்கு வந்தார் அவரையும் குருநாதர் மன்னித்து அவருக்கும் வாக்குகள் தந்தருளினார்!!!!

ஆதிசிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் அப்பனே நலன்கள்!!!! 

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஒரு பிறவியில் நீங்கள் சூரிய குலத்தில் பிறந்தவர்கள்!!! அதனால்தான் இதை இங்கே சொல்கின்றேன்!!!!
உங்களுக்கு வாக்குகள்!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே நல்விதமாக வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே 

ஒரு காலத்தில் அப்பனே நீங்கள் இங்கே சூரியனை வணங்கி வணங்கி அப்பனே நீங்கள் உயர்ந்த நிலைக்கும் ஆளாகி உள்ளீர்கள் என்பேன் அப்பனே!!!

அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் அப்பனே ஆசிர்வாதங்கள் இல்லாமல் நெருங்கவும் முடியாது அப்பனே!!!!

அதனால் நீங்கள் எவ் எவ் தலத்திற்கெல்லாம் சென்றீர்களோ அவ் தலத்திற்கெல்லாம் நீங்கள் செல்வீர்கள் என்பேன் அப்பனே!!!!

இதுதான் விதியப்பா!!!! 

யார் சொன்னாலும் நீங்களும் விடுவதில்லை அப்பனே!!!

அப்பனே எவையென்று அறிய அறிய  ஓர் எதை என்று கூற எவையென்று அறிய அறிய எதையென்று புரியாமலே  பல  பின் எவையென்று கூட பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அப்பனே எவையென்று கூற இங்கு மறைமுகமாகவே  தியானங்கள் செய்தவர்கள் நல்விதமாகவே மாற்றங்கள் !!..............

குருநாதர் அகத்தியபெருமான் இவ் வாக்கினை உரைத்த பொழுது தான் தடங்கல் ஏற்ப்பட்டது!!!!! 

பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரி வந்து... இங்கே படிக்கவே வீடியோ எடுப்பதோ கூடாது... என்று வாக்குவாதம் செய்தார். 

அதன் பிறகு குருநாதர் உத்தரவுப்படி வெளியே வந்து தோட்டத்தில் அமர்ந்து மீண்டும் குருநாதர் வாக்குரைத்தார். 

ஆதிசிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே நலன்களாக எம்முடைய ஆசிகள் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரிய புரிய அப்பனே சங்கரன் அதாவது ஆதிசங்கரன் அப்பனே இங்கு அமர்ந்துதான் அப்பனே பல பேர்களுக்கு அப்பனே பின் எவை என்று கூட பின் மந்திரத்தை கூட அப்பனே  பலவகையான இப்படி இருந்தால் நன்றாக என்பதை எல்லாம் ஆதிசங்கரன் பின் அனைவருக்குமே அப்பனே உபதேசித்து உபயோகிக்க ஆனால் மனிதன் இப்படித்தான் (காவல் பணி அதிகாரி வந்து கலகம் செய்ததைப்போல்) அப்பனே சண்டைகள் போட்டு அப்பனே பின் சங்கரனை கூட பல வகையிலும் கூட  அப்பனே திட்டி தீர்த்தனர் மிதித்தும் கூட பின் எதை என்று கூட அப்பனே!!!!

அதனால் அப்பனே ஏற்கனவே யான் பார்த்திட்டேன்!!! அப்பனே அதனால்தான் மௌனம் காத்திருங்கள் அப்பனே!!!

(அடியவர்கள் அந்த அதிகாரியிடம் எதிர் வாதம் செய்ததற்கு) 

அவனவன் வினை அப்பனே அவனே சம்பாதித்துக் கொள்வான்!!!

அதனால் அப்பனே கவலைகள் இல்லை எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய ஈசனுடைய உலகத்தில் அப்பனே யார் சொந்தம் கொண்டாடுவது என்பதை கூட தெரியவில்லை என்பேன் அப்பனே!!!!

அப்பனே இதனால் நலன்கள் முதலில் எவை என்று அறிய அறிய  பின் ஆதிசங்கரன் மனிதனுக்கு இங்கே அப்பனே உபதேசித்தான் அப்பனே!!

முதலில் அன்னை தந்தையை மதியுங்கள்!!!!

அவர்களையே குருவாக ஏற்றுக் கொள்ளுங்கள்!!!

அவர்களையே இறைவனாக ஏற்றுக் கொள்ளுங்கள்!!

அப்படி இருந்தால் தான்!!

குருவானவன் முதலில் வருவான் என்று மக்களுக்கு இங்கே உபதேசித்தான்!!!

அப்பனே குரு எதை என்று கூட பின் வந்தால் அனைத்தும் அப்பனே சொல்லிக் கொடுப்பான் அப்பனே!!! 

பின்பு இல்லத்தவளும் வருவாள்!!!!

அப்பனே இப்படி வந்தால் அப்பனே பின் எவை என்று கூட குருவாகவும் அப்பனே  மனைவியும் அப்பனே குருவாகவே அப்பனே பின் கணவன் பின் கணவன் மனைவி அப்பனே பின் நீங்கள் தான் குரு!! நீங்கள் தான் குரு!!! ( கணவனுக்கு மனைவி குரு மனைவிக்கு கணவன் குரு என்று) 

இப்படி இருந்தால் நிச்சயம் அப்பனே பின் அனைத்தும் இவ்வுலகத்தில் நன்றாகவே நடக்கும் என்பேன். அப்பனே!!

இதுவும் ஆதிசங்கரன் உபதேசித்தது தான்!!!

அப்பனே இவை எப்பொழுது மாறி வருகின்றதோ  அப்பொழுதெல்லாம் உலகம் அழியும் அப்பனே அவ்வளவுதான் என்று இவந்தன் தான் அப்பனே சொல்லிவிட்டான்!!

அவனுடைய( ஆதிசங்கரர்) பொன்மொழிகளையே இங்கு யான் உரைக்கின்றேன்!!!!

அப்பனே பின் அதனால் பெற்ற தாயை மதிக்காத பிள்ளைகள் அதாவது எதை என்று யான் சொல்ல அப்பனே பின் மனைவியும் அதாவது கணவனையும் மதிக்காத அப்பனே பின் மனைவியை மதிக்காத கணவன்மார்கள் எதை என்று நிச்சயம் அப்பனே எதை என்று அறியாமலே குருவை வணங்கினாலும் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!!

அப்பனே அவை மட்டும் இல்லாமல் இறைவனை வணங்கினாலும் ஒன்றும் பிரயோஜனமில்லை என்பதுதான் இவனுடைய பொன்மொழிகள் தான்!!

இதுவும் இவனுடைய பொன்மொழிகளைத் தான் யான் சொல்கின்றேன்!!!!

பின் அதன்பிறகு மக்களுக்கு இதுவும் சொன்னான் அப்பனே இங்கு வந்து!!.......

அப்பனே பிற உயிர்களைக் கொல்லக் கூடாது அப்படி கொன்று நிச்சயம் உட்கொண்டால் இறைவன் ஆசிகளும் கிட்டாது எவ் மந்திரங்களும் பலிக்காது!!!

அதாவது வாயில் மண்ணை தின்பது போலவே இருக்கும் என்பது கூட இவன் இட்ட கட்டளை!!!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே பொறாமை கொண்டால் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் இருதய நோய் வரும்!!!!

இதுவும் இவன் சொன்னது தான்!!!!

அப்பனே காமம் கொண்டால் உடம்பு அழிந்து பல நோய்கள் வந்துவிடும்!!!

அப்பனே பொய் சொன்னால் அப்பனே பற்கள் இல்லாமல் போகும்!!

அது மட்டும் இல்லாமல் அப்பனே பின் அறிந்தும் அறிந்தும் தகாத அப்பனே இடத்தில் எல்லாம் நோய்கள் வரும்!!!

இதுவும் அவனுடைய பொன்மொழிகளில் ஒன்று!!!

அதனால் அப்பனே இன்னொன்றையும் உரைத்து விடுகின்றேன்!! அப்பனே!

அனைவரும் ஒன்று கேளுங்கள் !!!

அனைவருமே இவ்வுலகத்திற்கு முதலில் எதற்கு வந்தீர்கள் ?? என்று யோசியுங்கள்!!!

யோசித்தாலே நிச்சயம் வெற்றி அடைவீர்கள்!!!! அப்படி இல்லை என்றால் தோல்விகள் தான் மிச்சம் தோல்விகள் தான் நிச்சயம் கஷ்டங்கள் தான் நிச்சயம் பின் வாழ்க்கை நிச்சயம் மகிழ்ச்சியாக இருக்காது.....

சங்கரன் சொன்னது தான் இதுவும் கூட !!!!

எதை என்று கூற பின் எப்பொழுதெல்லாம் கோமாதாக்கள் அழிகின்றதோ அப்பொழுதெல்லாம் மனிதனுக்கு புற்று நோய்கள் அதிகரிக்கும் இவ்வுலகத்தில்!!!

இதுவும் இவன் சொன்னது தான்!!!!

அதனால் அப்பனே இவ் நோயை போக்க முடியாது என்பேன் அப்பனே மனிதனால்.

ஆனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே பொய் சொல்லலாம் அப்பனே( புற்று நோய்க்கு மனிதன்) மருந்துகள் இருக்கின்றது என்று!!!!!

இதனால் எதை என்றும் அறிய அறிய கலியுகத்தில் இதுதான் நடக்கப் போகின்றது அப்பொழுது கலியுகத்தில் இந்நோய் வராமல் தடுக்க நிச்சயம் கோமாதாக்களை பாதுகாக்க வேண்டும் அப்பொழுதுதான் நிச்சயம்  இந்நோய் தீருமே தவிர.......

வேறு எதை செய்தாலும் நிச்சயம் தீராது இவை கலியுகத்தில் வரும் என்று அன்றைக்கே இவந்தன் பொன்மொழிகளாக கூறிவிட்டான்!!!!

அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் எதையெதையோ என்று பல உபதேசங்களை உபதேசித்தான் இதனால் நிச்சயம் பின் இன்னொன்றையும் உபதேசித்தான் சங்கரன்!!!!

அதிகாலையிலே ஐந்து மணிக்கு எழுந்து நிச்சயம் பின் நீராடி நிச்சயம் சூரியனை வரவழைத்தால்( சூரிய உதயத்திற்கு முன்பு நீராடி சூரிய உதயத்திற்காக வணங்கி) நிச்சயம் அவந்தனுக்கு அறிவுகள் நீண்டு நிச்சயம் பல வழிகளிலும் கூட இறைவன் நாமத்தையும் செப்பி நிச்சயம் இறைவழியிலே சென்றால் நிச்சயம் லாபமாகவே இவ்வுலகத்தை கடந்து சென்றுவிடலாம்!!!! அவந்தனுக்கு நோய்கள் என்பதே வராது!!!!

எப்பொழுதும் கடமையில் தவறாதீர்கள் நிச்சயம் பின் போராட்டங்கள் மன குழப்பங்கள் வந்தாலும் அவையெல்லாம் நிச்சயம் பின் இறைவன் இருக்கின்றான் என்ற நினைப்போடு தாண்டி சென்றால் நிச்சயம் இறைவனே கையைப் பிடித்து இறைவன் தரிசனத்தை நிச்சயம் ஓரிடத்தில் காட்டுவான்!!!... என்பதும் இவனுடைய பொன்மொழிகள்!!!!!

ஆனாலும் கடைசியாக அனைவருக்கும் ஒன்றை உரைத்திட்டான்!!!!

நிச்சயம் கலியுகத்தில் கிரகங்கள் வேலை செய்யாது என்று அனைவருக்குமே!!...

அதனால் நீங்கள் சரியாக நடந்தால் கிரகங்களும் உங்களுக்கு அள்ளிக் கொடுக்கும்!!!!

அதனால் கிரகங்களும் உங்கள் பின்னே!!!! அதன் பின்னே நீங்கள் இல்லை என்பதை உணருங்கள் என்று ஆதிசங்கரனும் உரைத்திட்டான்!!!!

காலத்தை வென்று விடலாம் நிச்சயம்!!! அவ் காலத்தை வென்று விட நிச்சயம் ஈசன் நாமமே!!!....... நமச்சிவாயமே!!!!!!!!!!!!

அறிந்தும் அறிந்தும் ஆனாலும் நமோ நாராயணனே!!!!!

பிரம்மாவே!!!!!! 

இன்னும் பல தெய்வங்களே!!!

ஆனாலும் உணர்ந்தது யான் ஒன்றே!!!

நிச்சயம் பல கஷ்டங்களை பட்டு துன்பங்களை பட்டு நிச்சயம் பின் அனாதையாகும் பொழுது தான் இறைவன் ஒன்றே என்று தெரிவான்!!!

அதை நிச்சயம் யாங்களே செப்புவோம்!!!!

இதையும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட சொன்னான் சங்கரன்!!!!!

ஆனாலும் இதைச் சொன்னாலும் இப்பொழுது நம்ப போவதும் இல்லை!!!

ஆனால் எப்படி உரைக்கின்றோம் என்பதை கூட நிச்சயம் யாங்கள் பார்த்துக் கொள்வோம்!!!

அதனால்தான் பல மூட நம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்பதே சித்தர்களின் எதை என்று கூற எண்ணங்கள்!!!!!

ஆனால் மனிதனோ நிச்சயம் கர்மாவை இன்னும் சேர்த்துக் கொண்டே இருக்கின்றான்.

இன்னும் மனிதனுக்கு  எவை என்று அறிய அறிய தகுதியானவனாக நிச்சயம் எங்களிடத்தில் அதாவது நீ தகுதி உடையவனாக இருந்தால் உன்னிடத்திலே வந்து இச்சுவடியை நிச்சயம் யானே உரைக்கின்றேன்!!!!!

ஆனால் மனிதனோ தகுதியானவனாக இல்லை காமத்திலும் இன்னும் பொறாமைகளிலும் கூட இன்னும் போட்டிகளிலும் கூட!!...... . ஏன்?? என்னை வணங்கிக் கொண்டே யான் தான் பெரியவன் என்றெல்லாம் சொல்லியும் கூட!!.....

நிச்சயம் பின் எதற்காக நான் பெரியவன் என்று எப்பொழுது சொல்கின்றானோ அப்பொழுது அவந்தனுக்கு அழிவுகள்!!!

அப்பனே இங்கு ஒன்றை சொல்கின்றேன் அப்பனே நவ கிரகங்களின் கூட அப்பனே சிறிய துகள்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய மனித உடம்பில் இதயத்தில் பதிந்துள்ளது என்பேன் அப்பனே!!!! இதை எவராலும் கண்டுபிடிக்க முடியாது என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய அவற்றுக்கெல்லாம் அப்பனே பின்  செவிகள் இருக்கின்றது!!!

ஆனாலும் சிறியது!!!! அவையெல்லாம் எப்படி இயங்குகின்றது என்பதை எல்லாம் வருங்காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!

பின் எவை என்று கூட பின் அதாவது வானவெளியில் கூட அப்பனே எவை என்று கூட இவ் ரகசியமான எவை என்று கூட அப்பனே நவகிரகங்களும் கூட அப்பனே இதனால் உங்கள் இதயத்தில் உள்ளதே நீங்கள் என்னென்ன செய்கின்றீர்களோ அனைத்து கிரகங்களின் சிறிய துகள் அப்பனே அப்படியே சேமித்து வைத்திருக்கின்றது!!!

ஆனாலும் அப்பனே எவை என்று அறிய அறிய... அதனால் அப்பனே மேலே உள்ள கிரகங்கள் அப்பனே எவை என்று கூட ஓர் ஓர் முறையும் கூட அப்பனே எதை என்று கூட சக்திகள் கூடும் என்பேன் அப்பனே!!

அவ் சக்திகள் கூடும் பொழுது அப்பனே உங்கள் இதயத்தில் உள்ளது அப்பனே அங்கிருந்து இங்கே வெளிப்படும் பொழுது அப்பனே இங்கே காந்தம் போல் ஒட்டிக் கொள்ளும் என்பேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே கிரகங்களால் தொல்லைகள் வருகின்றது என்பதை கூட!!!

இதை யாராலும் அப்பனே மாற்ற முடியாது என்பேன் அப்பனே!!!

அதற்கும் அதாவது உந்தனுக்கும் அப்பனே இருக்கும் சக்தியை விளக்க வேண்டும் என்பது எதை என்று கூட யாராலும் முடியாது!!! எவ் பரிகாரத்தாலும் முடியாது அப்பனே!!!

ஆனாலும் எங்களுக்கு தெரியும் எந்தெந்த திருத்தலங்களுக்கு சென்றால் அவைகளை விலக்க முடியும் என்பதை கூட அப்பனே..... நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே நல்முறையாக ஒழுக்கத்தோடு வாருங்கள் அப்பனே சொல்கின்றேன் அப்பனே அனைவருக்குமே இது பொருந்தும்!!!! 

அதனால் அப்பனே விஞ்ஞானங்கள் உயர உயர அப்பனே மனிதனின் அழிவுகள் அப்பனே வந்து கொண்டே இருக்கின்றது!!!

ஏனென்றால் அப்பனே மனிதரிடத்தில் அப்பனே சிறு துகள்கள் கிரகங்களாகவும் மேலே உள்ள கிரகங்களாகவும் அப்பனே இதை அப்பனே சக்திகளாக!!!!!!

ஆனாலும் மனிதனின் கண்டுபிடிப்புகள் அப்பனே இவையெல்லாம் அழிந்து கொண்டிருக்கின்றது அப்பனே!!!

அதனால் அதற்கும் இதற்கும் சம்பந்தம் இல்லாமல் போய்க்கொண்டே இருக்கின்றது!!!

அதனால் தான் அப்பனே இறைவன் இல்லை!!!! என்றும் பைத்தியக்காரனாக மனக்குழப்பங்களாக போராட்டங்களாக அதை மட்டும் இல்லாமல் நோய்களாகவே வந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே!!!

இவையெல்லாம் அதிவிரைவிலே யாங்கள் மாற்றம் அடைய செய்வோம் என்பேன் அப்பனே!!!

அதனுள்ளே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது தான் உங்களுடைய கடமை எதை என்று அறிய அறிய அதனால் தான் முதலில் இவையெல்லாம் நிச்சயம் தெரிந்து கொண்டாலே நிச்சயம் பின் வாழ்வான் மனிதன்!!!!

இல்லையென்றால் சாவான்!!!!!!

அப்பனே இனி மேலும் விஞ்ஞானங்கள் யாங்கள் கண்டுபிடிப்போம் அப்பனே!!!

மனிதன் கண்டுபிடிப்பதை அப்பனே நிறுத்துவோம் அப்பனே பின் எவை என்றும் அறிய அறிய பின் வளர முடியாதாக தடுப்போம் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே மனிதன் பாவமப்பா!!!!!!!

அப்பனே வாயில்லா ஜீவராசிகளும் அப்பனே பின் இதனால் எவை என்று கூற விஞ்ஞானங்கள் வளர வளர அப்பனே வாயில்லா ஜீவராசிகள் இருக்கும் இடம் இல்லாமலே சென்றுவிடும் என்பேன் அப்பனே!!!

மனிதனை முட்டாள் என்பேன் அப்பனே அதனால்தான்!!!!

அறிவில்லாதவன் என்பேன் அப்பனே அதனால்தான் மனிதனை ஒதுக்குகின்றோம் யாங்கள்!!

அதனால்தான் அப்பனே ஈசனுக்கும் மனிதன் என்றால் இப்படியா என்று!!!!............ எவை என்று அறிய அறிய எப்படியெல்லாம்!!!.... நாம் மனிதனை எவை என்றும் பின் அறியாமலே பிறக்க வைத்து ஆசைப்பட்டு இப்படி எல்லாம் வளருவான் என்று !!......

ஆனாலும் அப்பனே பின் அறிவில்லாத செயல்களை செய்து அப்பனே அவ்வாறு அழித்துவிடுவது!!!...... அப்பனே மனிதனுக்கு!!!

அதனாலே ஈசன் கோபித்துக் கொண்டு வரும் காலங்களில் அப்பனே பலத்த மழையாலும் அப்பனே இன்னும் பூகம்பங்களாலும் அப்பனே இன்னும் நெருப்புகளாலும் அப்பனே.... இன்னும் அப்பனே சூரியனுக்கு சக்திகள் அதிகமாகவும் அப்பனே இன்னும் என்னென்னவோ அப்பனே பின் ஈசன் யோசித்து கொண்டே இருக்கின்றான் அப்பனே!!!!!!

ஆனால் மனிதன் யோசிப்பது அப்பனே யாங்கள் தடுத்துக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே!!!!

பாதி உலகம் எப்போதே அழிந்திருக்கும்!!!! ஆனால் அப்பனே பின் யாங்கள் தடுத்து விட்டோம் இதை!!!

பின் மறுபடியும் மறுபடியும் சொல்லிக் கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே இதனால் அப்பனே!!

இதனால்தான் அப்பனே """""""சித்தர்களை நெருங்க கூடாது அப்பனே!!!!!

அப்படி!!!!!! 

நெருங்கி விட்டால் உண்மையாக இருக்க வேண்டும் என்பதைக் கூட ஆணித்தரமாக சொல்லிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!!

அதனால் அப்பனே சித்தனின் விளையாட்டை தெரியாமல் அப்பனே நிச்சயம் எங்களை வைத்தே எதை எதையோ செய்கின்றான் அப்பனே!!!

சித்தனின் சாபம் அப்பனே கடைசியில் அப்பனே கஷ்டங்களாக முடியும்!!!

அப்பனே அதனால் நிச்சயம் செய்யாதீர்கள் எங்களை பற்றி எதையும் கூட!!!

யாங்கள் மனித குலத்திற்காகவே அப்பனே நல்லதை செய்ய வந்திருக்கும் பொழுது நீங்கள் எதை எதையோ செப்பி, பொய் செப்பி  மனிதனை இன்னும் கர்மாவிற்குள் நுழைத்துக் கொண்டு போனால் அக் கர்மா உன்னை சார்ந்து அப்பனே நிச்சயம் எவை என்று கூட!!!......... அப்பனே 

கர்மாவை சம்பாதிக்காதீர்கள்!!!! உங்கள் குலத்திற்கே நாசமாக போய்விடும் என்பேன் அப்பனே!!!

அதனால் வேண்டாம் எவை என்றும்  அறிய அறிய முதலில் மூடநம்பிக்கைகளை ஒழியுங்கள் !!!

பின்பு நிச்சயம் யான் உங்களுக்கு எப்பொழுதெல்லாம் எப்படி நடக்கும் என்பதை எல்லாம் உடம்பில் உள்ள பாகங்களை வைத்தே கூறுகின்றேன்!!!

இன்னும் கூறுகின்றேன் அதனால் நிச்சயம் பொறுத்தருளுங்கள்!!!

ஆசிகள்!! ஆசிகள்!! இன்னும் ஏராளமான வாக்குகளும் ஏன் எதற்காக எங்கெல்லாம் நிச்சயம் எவை என்றும் அறிய அறிய பல புண்ணியங்கள் அப்பனே எவை என்று கூட  முன்னோர்கள் பின் அங்கெல்லாம் தான் நிச்சயம் உரைக்க முடியும் இது இவ்வாக்குகளாக!!!

அப்படி பின் எங்கெங்கோ எதை என்று கூற உரைத்தாலும் அது பாவங்களாக போய்விடும்!!!

அதனால்தான் இவனை (திரு ஜானகிராமன் ஐயா அவர்களை) எங்கெங்கோ அழைத்துக் கொண்டு சென்று வாக்குகளாக ஈகின்றேன்!!!

நிச்சயம் இதையும் வாக்குகள் பின் பெரிய பெரிய மனிதர்களுக்கெல்லாம் செல்கின்றது எம்முடைய வாக்குகள்!!!  அவர்களும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் அவர்களும் கூட!!!

இதனால் நிச்சயம் அவர்களும் நிச்சயம் மாற்றுவார்கள் இவ் தேசத்தை!!!!!!

நல் முறையாக ஆசிகள்!!!! ஆசிகள் !!! கோடிகளப்பா!!!!

குருநாதர் சூரியனார் ஆலய தோட்டத்தில் இவ்வாக்குகளை தந்து கொண்டிருந்த பொழுது இடையூறு செய்த அந்த அதிகாரியும் வந்து பவ்யமாக நான் செய்தது தவறு என்று கூறிக்கொண்டு வாக்குகள் உரைத்து கொண்டு இருந்த பொழுது அருகிலேயே அமர்ந்து கொண்டார்!!!

அவரும் பனை ஓலையில் குருநாதர் அகத்தியர் பெருமான் வந்து இவ்வளவு விஷயங்கள் கூறியதை வடமொழி தெரிந்த ஒரு அடியவர் இடை இடையே விளக்கிக் கூற அவரும் புரிந்து கொண்டு குருநாதரை வணங்கி அடியேனுக்கும் ஆசீர்வாதம் நல்க வேண்டும் என்று கைகூப்பி தொழுதார்!!!!

அவரோடு வாதங்கள் செய்த அடியவர்களுக்கு குருநாதர் அகத்தியபெருமான்!!!!கட்டளையிட்டார்!!! 

அப்பன்களே இவனை ஏற்றுக் கொள்ளுங்கள்!!!! அப்பனே கவலையை விடுங்கள்!!!

நண்பனாக்கிக் கொள்ளுங்கள் அப்பனே இவனையும் கூட அனைவருமே நண்பர்கள் தான் அப்பனே!!!! எவை என்று கூட!!!

அப்பனே எதை என்று அறிய அறிய அவன் கடமையை அவன் சரியாக செய்கின்றான் அவ்வளவுதான்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய யான் சொல்கின்றேன் நீங்கள் செய்கின்றீர்கள்!!! அதேபோல் தான் இவந்தனுக்கும் மேலே ஒருவன் உள்ளான் அவ்வளவுதான்!!!!!

அதனால் அப்படி யாரைச் சொல்லியும் குறைகள் இல்லை அப்பனே தம் தன் கடமையை செய்து வருகின்றார்கள் அவ்வளவுதான் அப்பனே!!!

அப்பனே இன்று வந்து நீங்கள் சென்று விடுவீர்கள் ஆனாலும் நாளை இவந்தனை கேள்விகள் கேட்பார்கள்!!! என்பேன் அப்பனே!!!

யார் இவர்கள்? எதற்காக வந்தார்கள்? என்று!!!

அப்பனே சில சில கவலைகளும் கூட இவந்தனுக்கும் ( அந்த அதிகாரிக்கு) உண்டு.... ஆனாலும் அப்பனே ஏன் நீக்கி விடுகின்றேன்!!! கவலை இல்லாமல் இருக்கச் சொல்!!!!

அப்பனே நல்விதமாக அனுதினமும் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே பின் தியானங்கள் செய்ய வேண்டும் எங்கு சென்றாலும் அப்பனே நல மங்களங்களாகவே உந்தனுக்கும் ஆசீர்வாதங்கள் உண்டு என்பேன் அப்பனே!!

பல பல ஞானியர்கள் கூட நீ செல்லும் இடத்திற்கு கூட(குருத்வாரா) அங்கே இருக்கின்றார்கள் அங்கே சென்று பின் நொடிகள் பல நொடிகள் அமர்ந்திட்டு வா போதுமானது!!! நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி!!!!!

அப்பனே அதனால் அனைவருமே எதை என்று கூற எம்முடைய ஆசிகள் அப்பனே இங்கு உள்ள அனைவருக்குமே!!! எவையென்றும் அறிய அறிய அதனால் எக்குறைகளும் கொள்ள வேண்டாம் அப்பனே!!!!

இன்னும் ஒரு வாக்கையும் சொல்கின்றேன் அப்பனே பொறுத்திருக!!!!!

அந்த அதிகாரியும் குருநாதர் உபதேசத்தை கேட்டு தலை வணங்கி நான் கோபம் கொண்டிருந்தாலும் என் மீது கருணை கொண்டு எனக்காக வாக்குகள் தந்தது மிக்க மகிழ்ச்சி குருநாதரிடம் நான் ஒன்றை கேட்க வேண்டும் நான் இங்கே 28 வருடங்களாக பணிபுரிந்து வருகின்றேன் ஒப்பந்த பணியாளராக மட்டுமே!!!

இதனால் என்னால் உயர முடியவில்லை குடும்பமும்  கஷ்டத்தில் இருக்கின்றது நாங்கள் ஒப்பந்த பணியாளராக இத்தனை வருடங்கள் பணி புரிந்திருக்கின்றோம் எங்களை நிரந்தர பணியாளராக ஆக்க நாங்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கின்றோம் அதற்கும் சரியான முடிவுகள் வரவில்லை இதனால் நாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருக்கின்றோம் என்னைப் போன்றே இன்னும் அதிகாரிகள் இருக்கின்றார்கள் குருநாதர் இதற்கும் எங்களுக்கு ஆசிகள் வழங்கி எங்களுடைய வாழ்க்கையை மாற்றித் தர வேண்டும் என்று விண்ணப்பித்தார்!!!

அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நடந்து விடும் என்பேன் அப்பனே அனைத்தும் கூட அதனால் ஞானிகள் அங்கே இருக்கின்றார்கள் அங்கே சென்று நிச்சயம் தியானங்கள் செய்து கொண்டே வா அப்பனே நிச்சயம் அனைத்தும் அமையும் என்பேன் அப்பனே!!!!

அப்பனே இதனால் கவலைகள் இல்லை நிச்சயம் நன்றாகவே நடக்கட்டும் அப்பனே ஆசிகளோடு அனைத்தும் தருகின்றேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய கவலைகள் இல்லை!!!!

அப்பனே மற்றொரு தலத்திலும் உரைக்கின்றேன் அப்பனே நலன்கள் ஆசிகள்!!!!

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள் 

அனந்தநாக் கடல் மட்டத்திலிருந்து 5300 அடி உயரத்தில் உள்ளது. ஸ்ரீநகரிலிருந்து 53 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜம்முவிற்கு வடக்கே 204 கிமீ தொலைவிலும் உள்ளது.

அமர்நாத் கோயில் அடிவார நகரமான பகல்கம் அனந்தநாக்கிலிருந்து 39 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

மார்தாண்ட சூரியன் கோயில் (Martand Sun Temple) இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் நகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள சூரிய பகவானுக்கு அர்பணிக்கப்பட்ட இந்துக் கோயில் ஆகும்.[ இக்கோயிலின் மூலவர் சூரிய பகவான் ஆவார்.

மார்தாண்ட சூரியன் கோயிலை கார்கோடப் பேரரசின் மூன்றாம் மன்னர் லலிதாத்தியன் கி பி எட்டாம் நூற்றாண்டில் கட்டினார்.கிபி 725-756 காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.[4] மார்தாண்ட சூரியன் கோயிலின் அஸ்திவாரம் கி பி 370 – 500 கால கட்டத்தில் அமைக்கப்பட்டது. கோயில் அமைப்பு கார்கோடகப் பேரரசன் இரணாதித்தியன் காலம் முதல் துவக்கப்பட்டது

மார்த்தாண்ட சூரியன் கோயில் காந்தாரம், சீனம், கிரேக்க கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்டுள்ளது.

220 அடி நீளமும், 142 அகலமும் கொண்ட சூரிய கோயில் வளாகத்தில் 84 சிறிய சன்னதிகள் கொண்டிருந்தது. இக்கோயிலில் வேத கால தெய்வங்களான சூரியன், விஷ்ணு, கங்கை, யமுனையின் அழகிய சிற்பங்கள் உள்ளது

ஜம்மு காஷ்மீரில் உள்ள இக்கோயிலை, இந்தியத் தொல்லியல் ஆய்வகம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடமாக அறிவித்துள்ளது. இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தால் பாதுகாக்கப்பட வேண்டிய இடங்களில் ஒன்றாக இச்சூரியன் கோயிலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியத் தொல்லியற் களங்களில் அனந்தநாக் மார்தாண்ட சூரியன் கோயில் முக்கியமானது. இச்சூரியன் கோயில் கி. பி., 650-இல் காஷ்மீர கார்கோட மன்னர்களால் கட்டப்பட்டது. பின்னர் சுல்தான் சிக்கந்தர் புட்ஷிகான் என்பவர் இச்சூரியன் கோயில் முழுவதுமாக தகர்க்கப்பட்டது.

இம்மார்த்தாண்டன் சூரியன் கோயில் இடுபாடுகளுக்கிடையே தற்போதும் காட்சியளிக்கிறது. இந்திய விடுதலைக்குப்பின் பழமையான இச்சூரிய கோயிலை இந்தியத் தொல்லியல் துறை பராமரித்து வருகிறது

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

6 comments:

  1. பணிவான வணக்கம் 🙏 அடியேனது சிறிய வேண்டுகோள் இறைவன் நல்லோருக்கு எதையும் தராமல் இருப்பதையும் பிடிங்கி கொண்டு ஏன் சொல்ல இயலா வேதனையை தருகிறான்.நான் யாருக்கும் எந்த தீங்கும் செய்ததில்லை.இருப்பினும் ஏன் என் வாழ்க்கையில் கோரத்தாண்டவம் ஆடினான்.சித்தர்களும் பதில் உரைப்பதில்லை.நல்லவாக இருப்பதுதான் குற்றமா?தவறிழைத்தவர்களுக்கு அனைத்து சொகுசையும் வழங்கி உள்ளார்.நிலைமை இவ்வாறு இருக்க வெறும் உபதேசம் மட்டும் கொடுப்பதால் இன்னல் தீர்ந்து விடுமா?வேதனையுடன் கேரளாவில் இருந்து🫴

    ReplyDelete
    Replies
    1. GO AND HAVE MURUGAN DARSHAN AND GET A KARUNGAALI MAALAI AT THE TEMPLE, WEAR IT ALWAYS. ADDRESS: பாதாள செம்பு முருகன் ஆலயம், போகர் நகர், இராமலிங்கப்பட்டி, ரெட்டியார் சத்திரம் - 624622 திண்டுக்கல் மாவட்டம். 9787557011 & 9787577011

      Delete
    2. பணிவான வணக்கம் ஐயாஃ🙏 நிச்சயம் அப்பணி ஆற்றுகிறேன்.மன்னிக்கவும்.ஒரு சிறிய ஐயப்பாட்டை வினவுகிறேன்..அதன் பிறகாவது எனது வாழ்வில் இந்நிலை நீங்கி நன்னிலை உருவாகுமா ஐயா

      Delete
  2. அடியேன் அவநம்பிக்கையில் கேட்கவில்லை ஐயா இறையருளால் இதிலாவது மாற்றம் வந்திடாதா (நல் மாற்றம் வரவேண்டும்) என்ற எதிர்பார்ப்பிலேயே வினவுகிறேன் ஐயா.தர்ம சங்கடத்திற்கு மன்னிக்கவும் 🙏🏻

    ReplyDelete
    Replies
    1. அனுபவித்து தீர்க்க வேண்டிய கர்ம வினை இன்னும் இருக்கிறது போல். வாக்கு, செயல், நட்பு நன்றாக இருந்தால், ஒரு வேளை சித்தர்கள் மனம் வைத்தால் சிறக்கலாம். முதலில் உள்ளிருக்கும் கோபத்தை சித்தன் அருள் கருத்து பக்கத்தில் பெரியவரிடம் (சித்தர்) காட்டாமல், எப்படி அமைதியாக இருப்பது என்று யோசியுங்கள். கருங்காலி மாலையை வாங்கி அணியுங்கள்.

      Delete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete