​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 8 July 2026

சித்தன் அருள் - 2243 - அன்புடன் அகத்தியர் - 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 9

நாள், நேரம்  : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

முழு நிகழ்வின் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=1 

இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.


===========================
# இவ் பகுதி வாக்கின் நேரலை:-  https://youtu.be/NqRaI13qIDU?t=28902  
===========================

===========================
# முருகனை எப்படி கண்டறியலாம்?
===========================


குருநாதர்:- அப்பா, அனைவருக்கும் சொல்கின்றேன், அதாவது அம்மை என்று சொல்லிவிட்டேன். இவ்- அம்மைக்காவது யான் நிச்சயம் தன்னில் கூட இறங்கி வந்து அனைவருக்குமே முருகனை எப்படி கண்டறியலாம், எங்கு ஒளிந்திருப்பான் என்பதை எல்லாம் சொல்கின்றேன் வாக்கில், அறிவியல் வழியாகவே, நம்பட்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் என்ன சொல்றாராம், "முருகர் பாட்டே பாடுறாங்க  இந்த அம்மா.  என் அம்மா, நீங்களும் வந்து, அதற்காக வந்து, உங்களுக்கும் நான் தெரிவிக்கிறேன். முருகர் எந்த வழியில் ஒளிஞ்சுண்டு வச்சிருக்கார் என்றதை நான் பார்த்து உங்களுக்கு சொல்றேன்பா இப்ப. சயின்ஸ் மூலமாவே நான் சொல்றேன் என்றார் அகத்தியர் வந்து. 


குருநாதர்:- பின், தாயே, அனைவருக்கும் ஒரு உபாசனை கூறு. 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் ஒரு உபாசனை கூறுன்னா, அறிவரை சொற்பொழிவு சொல்றார். சொல்லுங்க, சொல்லுங்க. அம்மா, அகத்தியர் சொல்ல, அது தானே வந்துரும் உங்களுக்குள்ள. சொல்லுங்க.


===========================
# சந்திரசேகர ரகசியங்கள் - சந்திர பகவானை தலையில் சூடிய எம் பெருமான் திருவிளையாடல்கள்.
===========================


அகத்திய மாமுனிவர் அன்னை சொற்பொழிவு :- 
நேரலை https://youtu.be/NqRaI13qIDU?t=28957 


சிவபெருமானுடைய தோற்றங்களை நாம வந்து நிறைய படங்கள்ல பார்த்திருப்போம். நிலா வச்சிருப்பாரு. கங்கை வச்சிருப்பாரு, புலித்தோல் எல்லாம் போட்டு இருப்பாரு. அதுக்கெல்லாம் என்ன அர்த்தம்னு தெரியுமா? அவருடைய ஜடா முடியில பிறை சந்திரனை சூடி இருக்கார்ல, அதுக்கு பொருள் என்னனு தெரியுமா? 


அதாவது, தக்ஷ பிரஜாபதி அப்படின்னு ஒருத்தர் இருந்தார். அவருடைய மகள்கள் வந்து மொத்தம் 27 பெண்கள். அதாவது 27 நட்சத்திரங்கள்னு சொல்றோம் இல்லையா? அஸ்வதி, பரணி, ரோகிணி, கார்த்திகை, ரேவதி, இந்த மாதிரி நிறைய நட்சத்திரங்கள். 27 நட்சத்திரங்கள் சொல்றோம் இல்லையா? 


இந்த 27 நட்சத்திரங்கள் தான் இவர்களுடைய மகள்கள். இந்த 27 பெண்களையும் சந்திரனுக்கு மணம் முடித்து கொடுக்கலாம் அப்படின்னு தக்ஷனுக்கு ரொம்ப ஆசை. 


உடனே சரின்னு சந்திரனுக்கு 27 பேரையும் மணம் முடித்து கொடுத்தாச்சு. அப்போ சந்திரன் இருக்கார்ல, சந்திரனுக்கு வந்து, ஆனா இந்த 27 பேர்கள்ல ரோகிணி மட்டும் தான் அவருக்கு வந்து ரொம்ப பிடிக்கும். அவர் வந்து ரோகிணியை மட்டும் தான் ஆசையா ஏற்றுக்கிட்டார். மற்ற மனைவிகள் எல்லாம் கண்டுக்கிடவே இல்ல சந்திரன். 


இதை பார்த்த உடனே இந்த மற்ற 26 மனைவிகளும் என்ன பண்றாங்க? கோபம் வந்துட்டு அவங்களுக்கு. அவங்க நேரா தன்னுடைய அப்பாவான தக்ஷன் கிட்ட போய், இந்த மாதிரி செய்றாரு அப்படின்னு தன்னுடைய அப்பாவான தக்ஷன் கிட்ட போயிட்டு சொல்றாங்க. சொன்ன உடனே அப்பாக்கு எவ்வளவு கோவம் வரும். தக்ஷ பிரஜாபதி கோபத்தோடு சந்திரனை பார்க்க வந்தார். 


வந்து ஒரு சாபம் கொடுத்தார். என்ன சாபம்னா, "சந்திரா, உனக்கு சயரோகம்" அப்படின்னு சொல்லக்கூடிய நோய் வரட்டும் அப்படின்னு சாபம் கொடுத்துட்டார். 


சயரோகம் அப்படின்னா, உன்னுடைய அழகு, கலைகள் எல்லாத்தையும் நீ கொஞ்சம் கொஞ்சமா இழந்து போவ அப்படின்னு பொருள். அந்த நோய் வரட்டும் அப்படின்னு சொல்லி கொடுத்துட்டார். என்ன சாபம் கொடுத்தார். 


உடனே இந்த சந்திரனுக்கு என்ன செய்றதுன்னு தெரியல. அதே மாதிரி கொஞ்சம் கொஞ்சமா, கொஞ்சம் கொஞ்சமா தேய ஆரம்பித்தார் சந்திரன். அப்போ முதல்ல பிரம்மாவை நோக்கி தவம் இருந்தார். பிரம்மா, நீ வந்து எப்படியாவது என்னை காப்பாத்துங்க அப்படின்னு பிரம்மாவை நோக்கி தவம் இருந்தார். ஆனா பிரம்மா கை விரிச்சிட்டார். என்னால எதுவுமே செய்ய முடியாது. நீ பேசாம சிவபெருமானை நோக்கி தவம் இரு அப்படின்னு சொன்னார். 


உடனே இந்த சந்திரனும் தேய்ந்த நிலைமையோடு சிவபெருமானை நோக்கி தவம் இருந்தார். சிவபெருமான் அவரை அழகா மூன்றாவது பிறையா தன்னுடைய ஜடாமுடியில சூடிக்கிட்டார். 


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )


அகத்திய மாமுனிவர் அன்னை :-  அதாவது சுவாமி சொன்னாங்க இல்லையா, அதாவது அந்த ஏடுல ( சுவடியில் உரைத்த வாக்கு )  வந்து ஏதோ ஒரு பெரிய நோய் வரப்போகுது அப்படின்னு சொன்னாங்க இல்லையா. அதேபோல தான் எப்படி இவருடைய அழகுகள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா இழந்தாரோ, அதேபோல நமக்கும் இந்த நோய் வராம எங்களை வந்து காப்பாற்றுங்க. உலகம் அழியக்கூடாது. மற்ற எல்லாருமே நல்லா இருக்கணும் அப்படின்னு நம்ம சிவபெருமானை நோக்கி எல்லாரும் மனம் உருகி கேட்டீங்கன்னா, கண்டிப்பா. 


அகத்திய மாமுனிவர் அன்னை :-  (சிவபெருமான் ) இங்கதான் இருக்கான்னு ( குருநாதர்) சொன்னாங்க. நீங்க இப்பவே கேளுங்க. ஓகே, எல்லாரும் வந்து நீங்க மனசுக்குள்ள இருந்து கேளுங்க. கண்டிப்பா சிவபெருமான் நம்ம எல்லாரையும் காப்பாத்துவார்.


===========================
# அம்மா, உன் தொண்டு இங்கு பெரிதாகிவிட்டது.
===========================
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=29147


குருநாதர்:-  அம்மா, அம்மா, உன் தொண்டு இங்கு பெரிதாகிவிட்டது. அதனால் என் தொண்டு சிறிதாகிவிட்டது. 


அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் என்ன சொல்றார் பாருங்க. என்ன சொல்றார் தெரியுங்களா அகத்தியர்?  உன் தொண்டு பெருசாயிடுச்சுமா. என் தொண்டு சிறுசாயிடுச்சு. 


குருநாதர்:- அம்மா, இன்னும் என்ன சொல்லப் போகின்றாய்? 


சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் கேட்கிறார். இன்னும் என்ன சொல்லப் போகின்றாய்? சொல்லுங்கம்மா?

===========================
# தாத்தா அன்பாக பேரக்குழந்தைகளிடம் கேட்கும் முத்தம் 
===========================

அகத்திய மாமுனிவர் அன்னை :- கொண்டது உன் தனே. அதாவது அந்த ஒரு பாடல் உண்டு. என்னன்னா, கொடுத்தது என்ன? அதாவது எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் மாதிரி. ஓகேவா? நீ என்ன வந்து நீ எடுத்துக்கிட்ட. நான் உன்னை வந்து நான் எடுத்துக்கிட்டேன். இதுல யாருக்க? அதாவது சங்கரா யாருக்களோ சதியரர். அதாவது யார் இதுல வந்து புத்திசாலி? 


நானோ ஒரு ஒரு கீழானவன். ரொம்பவே மதிப்பே இல்லாதவன். ஆனா நான் நீ வந்து என்ன எடுத்துக்கிட்ட. ஆனா உன்னை விலை மதிக்கவே முடியாது. அப்படி இருக்கிற உன்னை நான் வந்து எடுத்துக்கிட்டேன். 


அப்ப இதுல யார் கெட்டிக்காரி? யாரு கெட்டிக்காராங்க? நான்தான் கெட்டிக்காரன் அப்படின்னு மாணிக்கவசகர் சொல்றார். எப்படி பார்த்தீங்களா? 


அதேபோல தான் நம்ம வந்து அவரை வந்து வேண்டனும்னா கண்டிப்பா நம்மள வந்து ஆட்கொள்றார். இந்த தாத்தா பாட்டிக்குள்ள எல்லாம் பார்த்திருக்கீங்களா? எனக்கு முத்தம் தான். நான் வந்து உனக்கு சாக்லேட் தரேன். இல்லனா நான் உனக்கு வந்து பெரிய கிப்ட் தரேன் அப்படின்னு சொல்லுவாங்க. நம்மள என்ன நினைப்போம்? ஒரே ஒரு முத்தத்துக்கு இவ்வளவு பெரிய கிப்ட் தருவாங்களா? ஐயோ, தாத்தாக்கு அறிவே இல்லை அப்படின்னு நினைப்போம் இல்லையா? ஆனா அப்படி இல்ல. நம்ம முத்தத்துக்கு அவ்வளவு வேல்யூ. 


அதே மாதிரிதான் இங்க நமக்கு, அதாவது நம்மளுடைய அன்புக்கு தாங்க வேல்யூ. சிவபெருமானை நோக்கி நம்ம பக்தி செஞ்சோம்னா, அவர் அவ்வளவு பெருசா நினைப்பாராம். அவ்வளவு பெருசா நினைச்சு, அவரையே நமக்கு வந்து அர்ப்பணிப்பாராம். 


ஆக, அப்ப பக்தினா என்னன்னு புரியுதா? நம்மள அவருக்கு கொடுத்துட்டு, அவர நம்ம வாங்கிக்கணும். அவ்வளவுதான். நம்ம வந்து அப்படி ஒரு பக்தி செஞ்சோம்னா, கண்டிப்பா நம்மள வந்து அவர் ஏத்துக்குவாருங்க.


குருநாதர்:-  அம்மா, இன்னும் யான் இங்கு சிறு பிள்ளை. ஆனாலும், அனைவரும் வணங்குகின்றார்கள். வருகின்றார்கள். ஆனாலும் இவ்வளவு புத்திகள் இருக்கின்றதா என்றால் இல்லை. அவரவர்கள் எதை எதையோ ஆசைப்படுகிறார்கள். அம்மா, மீண்டும் சொல், யான் கேட்கின்றேன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் என்ன சொல்றார் தெரியுங்களா? என்னையே உங்க அம்மான்னு சொல்றாரு. அவர் சின்ன பிள்ளையா இருந்து, அம்மா, என்னையே வணங்கி, புத்தி இல்லாம நிறைய பேருக்கு வந்து அறிவே இல்லம்மா. அதனால நீங்க எடுத்து, அவங்க சொல்ற மாதிரி, புத்தி சொல்ற மாதிரி, நீ இன்னும் சொல்லுமான்றார். அகத்தியரே சொல்லுவாருங்க. சொல்லுங்க, குட்டி தெரியுதுங்களா? அகத்தியர் உங்க இங்க சின்ன குழந்தைங்கயா? இவங்கதான் அம்மான்றார். அகத்தியர் வந்து, அதனால என்னை வணங்கியே புத்தி இல்லையேப்பா. என்னை வணங்குறாங்க. அகத்தியர்னு கூப்பிடுறாங்க. அவங்களுக்கு புத்தி இல்ல. ஒரு மண்ணு இல்ல. மண்ணாங்கட்டி இல்ல. நீ சொல்லு, தாயே. அம்மா, நீ சொல்லுமா? உங்களுக்காவது புரியட்டுமா. இவ்வளவு பெரிய சின்ன வயசுல நம்மளுக்கு புத்தி இல்லைன்னு அவங்க வெட்கப்படட்டும்னு வேற ஒன்னும் இல்ல. நீ சொல்லுங்க.


===========================
# சிவபெருமானுடைய ஜடாமுடியில் உள்ள தும்பை பூ !!!!!.
===========================
# தவறாக வாய் தவறி கேட்ட வரம். அப்படியே வரம் அளித்த எம்பெருமான் கருணை !!!!!
===========================


அகத்திய மாமுனிவர் அன்னை :-  தும்பை, அதாவது சிவபெருமானுடைய ஜடாமுடியில, அவருக்கு வந்து ரொம்பவே ஃபேவரட்டான ஒரு பூ. அவருக்கு ரொம்பவே பிடிச்ச பூ. என்னன்னா, தும்பை. 


அந்த தும்பை வந்து, அவருடைய ஜடாமுடியை எப்படி அலங்கரிக்குதுன்னு தெரியுமா? அதாவது, தும்பை அப்படின்னு ஒரு தேவ கன்னி இருந்தா. இவ சாபத்தால பூலோகத்துக்கு வந்து, தேவதாசியாக வலம் வந்தாள். அப்படி வரும்பொழுது, அவ வந்து அந்த ஒரு அவ செய்யற தொழிலை ஒரு தொண்டா செஞ்சுட்டு வந்தா. அதாவது, சிவனடியார்களுக்கே முன்னுரிமை அப்படின்னு செஞ்சுட்டு வந்தா. 


அவ செய்ற என்னமோ தவறான தொழில்தான். ஆனா அதிலயும், அவ அதை சிவ தொண்டாக நினைச்சு செஞ்சுட்டு வந்தார். உடனே அந்த காலத்துல எல்லாம், அவ வீட்ல வந்து தங்கணும் அப்படின்னா, அச்சாரம் சொல்லுவாங்க. 


வெத்தலை பாக்கு எல்லாம் வச்சு, பணம் எல்லாம் வச்சு, முதல் நாளே வந்து அட்வான்ஸ் மாதிரி அச்சாரம் வந்து வைக்கணும். அப்போ சிவபெருமான் பார்த்தா, இவ்வளவு பக்தியானவளா? சரி, என் அம்மா கொஞ்சம் சோதிச்சு பார்ப்போமே அப்படின்னு நினைச்சார். 


உடனே ஒரு நாளை, ஒரு வயசான சிவனடியார் போல வந்தார். வந்து இந்த மாதிரி, இவருக்கு அச்சாரம் வச்சா. அச்சாரம் வச்சிட்டு, அச்சரம் வச்சிட்டு, அப்பதான் போயிருக்கார். போனதுக்கு அடுத்தது, அந்த நாட்டுடைய மன்னரே வந்து, இந்த தும்பை கிட்ட வந்து, அச்சரம் வைக்க வந்தார். 


அப்போ தும்பை சொல்லிட்டா, இல்ல இல்ல, அவர் உங்களுக்கு முன்னாடியே வந்து என் முன்பதிவு செஞ்சுட்டாரு. அதுவும் அவர் சிவனடியார் வேற முடியவே முடியாது. என்னதான் நீ நாட்டுடைய மன்னனா இரு, ஆனா அவர் சிவனடியாரு முடியவே முடியாது அப்படின்னு தும்பை சொல்லிடுறா. அதேபோல, அந்த வயதான முதியவர் போல வந்த சிவபெருமான் என்ன பண்றார்? அன்னைக்கு நைட்டு, தும்பையுடைய வீட்ல தங்குறார். 


அன்னைக்கு, இவரு இவளை வந்து எப்படியாவது சோதிக்கணும் அப்படின்னு நினைச்சுறா. அதனால, அந்த சிவனடியார்களுக்கு, அதாவது சிவபெருமான் வந்தார்ல, சிவனடியார் வேடத்துல வந்து என்ன பண்றார்? ஒரே வாந்தி எடுக்கிறார். வாந்தியும் வேதியுமா, அவர் வந்து எப்படியாவது சோதிக்கணும் அப்படின்னு நினைச்சுட்டு செய்றார். வாந்தியா எடுக்கிறார். 


விடிய விடிய, தும்பை ஒரு சொல் கூட மறுக்காம, அவ்வளவு அழகா அந்த சிவனடியார், அந்த சிவபெருமான் சிவனடியார் வேடத்துல வந்தார்ல, அவருக்கு அவ்வளவு அழகா பணிவிடைகள் செய்றா. 


இவ செஞ்சு செஞ்சு காலையிலேயே விடிஞ்சிடுச்சு. அப்போ, அப்பொழுதுதான் சரி, இவ்வளவு வந்து நம்ம ரொம்ப சோதிச்சுட்டோம். அருள் கொடுப்போமே, இவ்வளவு சிவபக்தியா இருக்கா அப்படின்னு சொல்லிட்டு, நம்ம சிவபெருமான் என்ன செய்றார்? அருள் கொடுக்கிறார். 


எப்படி இருப்பார்? நேர்ல எல்லாம் வந்தாருன்னா எப்படி இருக்கும்? பெருசா ஜோதி சொரூபமா வந்து அருள் கொடுக்கிறார். இதை பார்த்த உடனே, தும்பைக்கு ஒண்ணுமே ஓடலைங்க. பிறகு என்னென்ன ஓடும்? 


நான் வந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போனேன். அப்போ அங்க மதுரையில வந்து முதல்ல அம்பாளை வந்து பொது தரிசனத்துல இருந்து சாமி கும்பிட்டுட்டு வந்தாச்சு. அடுத்து நம்ம சொக்கநாதரை வந்து கும்பிடலாம் அப்படின்னு போகும்போது, ஒரு விஐபி மூலமா விஐபி தரிசன டிக்கெட் கிடைச்சிச்சு. நாங்க அப்படியே ஆனாலும் பொது தரிசனத்துல போய்க்கிட்டே இருந்தோம். அப்போ சரி, இன்னும் கொஞ்ச தூரம் போகணும் போல அப்படின்னு நினைச்சுட்டு இருக்கும்போது, திடீர்னு ஒரு கிரில் கேட்டை திறந்தாங்க. 


நீங்க மட்டும் வாங்க, வாங்க, வாங்க அப்படின்னாங்க. உடனே எங்களை மட்டும் கூட்டிட்டு போனாங்க. உடனே சரி, இருட்டா இருந்துச்சு. கொஞ்சம் சரி, இன்னும் கொஞ்ச தூரம் போகணும் அப்படின்னு நினைச்சுட்டு திரும்பி பார்த்தா, சாமி சன்னதிக்கு அடுத்த சன்னிதியில வந்து கொண்டு விட்ட மாதிரி, அவ்வளவு பக்கத்துல சிவபெருமானை பார்த்தோம். 


அப்போ எங்க அம்மா எல்லாம் வந்து சொன்னாங்க, எங்க அம்மா, எங்க எல்லாருக்குமே அவ்வளவு அதிர்ச்சி. நான் அவரை பார்த்துக்கிட்டே இருந்தோம். ஒண்ணுமே ஓடலைங்க. 


அப்புறம் வெளிய வந்ததுக்கு அப்புறம் தான் எங்க அம்மா சொன்னாங்க, ஆமா, என்னென்னலாமோ, அவர்கிட்ட வந்து கேட்கணும்னு வச்சிருந்தோமே. உள்ள போன உடனே எல்லாமே மறந்துட்டேன் அப்படின்னாங்க. 


பிறகு இருக்காதா?, அவ்வளவு பக்கத்துல, அவ்வளவு அழகா பார்த்த உடனே எல்லாமே மறந்து போயிட்டா. அவர் பார்த்துக்கிட்டே விட்டா, பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல. அவங்கதான் வாங்க, வாங்க, வெளிய போங்க, வெளிய போங்க அப்படின்னு நம்மள வந்து வெளிய வந்து போக சொல்லிட்டாங்க. 


அதனால, எங்க அம்மா வெளிய வந்துட்டு சொன்னாங்க, என்னென்னலாமோ கேட்கணும்னு வச்சிருந்தேன். அவரை பார்த்த உடனே எல்லாமே மறந்துட்டு அப்படின்னாங்க. 


அப்போ நம்ம வந்து இந்த கோயில்கள்ல இருக்கக்கூடிய மூலவரை பார்த்ததுக்கே நமக்கு இப்படி இருக்கு. நேர்ல சிவபெருமானை பார்த்தா எப்படி இருக்கும்? 


அவ வந்து கையும் ஓடல, காலும் ஓடல. ஆனா அப்படியே பார்த்தபடியே நிக்கிறாள். அப்போ சிவபெருமான் கேட்கிறார், உனக்கு என்ன வரம் வேணும் அப்படின்னு கேளு. அப்படிங்கிறார். 


உடனே இவளுக்கு வந்து ஒண்ணுமே ஓடலையா? அப்போ இவ வந்து சொல்றா, தும்பை சொல்றா, சுவாமி, உங்களுடைய திருவடி என்னுடைய தலைக்கு மேலேயே இருக்கணும் அப்படின்னு கேக்குறதுக்கு பதிலா, பதட்டத்துல, சுவாமி, என்னுடைய திருவடி உங்களுடைய தலைக்கு மேலேயே இருக்கணும் அப்படின்னு கேட்டுட்டார். 


உடனே நம்ம சிவபெருமானும் சரி அப்படின்ட்டாரு. அவர் கொஞ்சம் கூட யோசிக்கல. பார்த்தீங்களா, அவர் மேல வந்து நம்ம அவ்வளவு பக்தி செஞ்சோம். அப்படி அவ்வளவு அவரை வந்து வணங்கணும் அப்படின்னா என்ன வரம் கேட்கான்னு கூட பார்க்க மாட்டாங்க. எல்லாத்தையும் அள்ளி தருவது தான் சிவபெருமான். 


அவர் கொஞ்சம் கூட யோசிக்கலைங்க. சரின்ட்டாரு. அடுத்ததா நம்ம தும்பைக்கு வந்து, அதாவது சுயநினைவு வருது. அப்போ தும்பை வந்து, ஐயோ, சுவாமி, நான் தெரியாம கேட்டுட்டேன். உங்களுடைய திருவடி என்னுடைய தலைக்கு மேலேயே இருக்கணும்னு கேட்டேனே. 


சிவபெருமான் என்ன சொன்னார் தெரியுமா? அதெல்லாம் இல்ல, கொடுத்த வரம் கொடுத்தது தான் அப்படின்ட்டாரு. அது அதனால, தும்பையை ஒரு மலராக மாற்றி, தன்னுடைய ஜடாமுடி மேல சூடிக்கொண்டார். 


அந்த தும்பை பூவை பார்த்திருக்கீங்களா? பார்க்க ஒரு ஃபீட் மாதிரி, அது ஒரு பாதம் மாதிரியே இருக்கும் இல்லையா? அதுதான் இந்த தும்பை பூவுடைய வரலாறு. அதனாலதான் இன்ற வரைக்கும் சிவபெருமானுக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப புடிச்ச மலர்னா, இந்த தும்பை மலர்தான்.

===========================
# அகத்தியன், அகத்தியன் என்று சொல்லி அறிவில்லாதவர் இருக்கின்றார்கள் பலபேர்.
===========================

https://youtu.be/NqRaI13qIDU?t=29696 


குருநாதர்:- அம்மா, யான் இங்கு சிறு பிள்ளை. ஆனால் அகத்தியன், அகத்தியன் என்று சொல்லி அறிவில்லாதவர் இருக்கின்றார்கள். இவ்வுலகத்தில் பலபேர். அவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கட்டும்? என்ன தண்டனை கொடுத்தால் நல்லது? நீயே கூறு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு தெரியுங்களா? நான் இங்க சின்ன பையன்மா. என்ன சொன்னாங்க? நான் இன்னைக்கு இங்க சின்ன பையன் ஆனா, அகத்தியன் பெயரை சொல்லி சொல்லி, அகத்தியன் பெயரை சொல்லி சொல்லி, அறிவில்லாமல் இருக்கிறாங்கமா. அதுக்கு நான் என்ன தண்டனை கொடுக்கட்டுமான்றாரு? வந்து திருப்பியும், 


அகத்திய மாமுனிவர் அன்னை :- (என்ன பதில் சொல்வது என்ற சிந்தனை ) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, இப்ப நீங்க அம்மா, அகத்தியர் வந்து இங்க சின்ன பிள்ளை. அகத்தியர் என்ன சொல்றாருன்னா, உங்ககிட்ட என் பெயரை சொல்லி சொல்லி, அறிவில்லாதவங்க  இருக்கிறாங்கமா இந்த உலகத்துல. அவங்களுக்கு ஏதாவது நான் தண்டனை கொடுக்கட்டுமான்னு கேட்கிறார். அகத்தியர் சொல்லுங்க, அகத்தியர் சொல்லுங்க, 


அகத்திய மாமுனிவர் அன்னை :- (என்ன பதில் சொல்வது என்ற சிந்தனை ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   (மைக்) அதுல சொல்லுங்க, அதுல சொல்றோம். 


அகத்திய மாமுனிவர் அன்னை :- (தண்டனை கொடுக்க) வேண்டாம், 


சுவடி ஓதும் மைந்தன் :-   எதற்காகன்னு கேட்பாரு. எதற்காகன்னு கேட்பாரு. 


அகத்திய மாமுனிவர் அன்னை :- (வேண்டாம் என்று தலை அசைத்தார்கள்)


சுவடி ஓதும் மைந்தன் :-  அதுவும் சொல்லிடுங்க, நீங்களே வேணான்டா, பாப்பா, வேணான்னு சொல்லிட்டாங்க. எதற்காக? 


அகத்திய மாமுனிவர் அன்னை :-  வேண்டாம், தண்டனை எல்லாம் வேண்டாம்.  பாவம் இல்லை, முத்தி கொடுத்துரலாம். 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாங்க தெரியுங்களா? பாவம்னு சொல்றாங்க. பாவம்னு சொல்றாங்க வந்து. அந்த எண்ணம் வேணுங்க, ஐயா. வந்து பாருங்க, அகத்தியருக்கு வந்து அது தெரியும். யார் கையில என்ன கேள்வி கேட்டா, பதில் வரும்னு சொல்லிட்டு, அகத்தியர் நல்லா சொல்றோம். என்ன, அவன் வந்து அப்பட என்ன சொல்றாங்க? அகத்தியர் வணங்கியும், அது இல்லாதவங்களும் புத்தி இல்லாம, மன்னிச்சு விடுறாரு. மன்னிச்சாரு. என்ன, 


இதுக்கு பொருள் என்னன்னா, எவ்வளவு தவறுகள் செஞ்சாலும், அகத்தியர் என்ன பண்றாரு? திரும்ப திரும்ப மன்னிக்கிறாரு. 


குருநாதர்:-  ஆனாலும், அம்மையே, நிச்சயம் இப்படியே விட்டுக் கொண்டிருந்தால், உலகத்தை அழித்திடுவார்கள். என்ன செய்ய? 


சுவடி ஓதும் மைந்தன் :-  திருப்பி, அகத்தியர் உங்களை கேட்கிறார். நான் இப்படியே விட்டு இருந்தேன்னா, மன்னிச்சு, மன்னிச்சு, மன்னிச்சு, மன்னிச்சு, விட்டுட்டே இருந்தேன்னா, உலகத்தை அழிச்சிடுவாங்கமா. அதுக்கு என்ன பண்ண? அதுக்கு என்ன நான் பண்ணணும்னு கேட்டறிகிறார் அகத்தியர் 


அகத்திய மாமுனிவர் அன்னை :- எனக்கு தெரியல. அவங்களுக்கு  தெரியாதா? அவங்க ஏதாவது செய்யட்டும்.


===========================
# அம்மையின் பதிலை மீண்டும்  கேட்ட பிள்ளை. 
===========================


குருநாதர்:-  தாயே, அறிந்தேன் அனைத்தும். ஆனாலும், நீ சொல்ல வேண்டும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நான் எல்லாம் அறிஞ்சு வச்சிருக்கேன். நீ சொல்லுன்றார். 


அகத்திய மாமுனிவர் அன்னை :- ( சிந்தனை )


சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது எடுத்து விடுங்கம்மா. சொல்லுங்க, நல்லா யோசிச்சு சொல்லுங்க. மைக்ல சொல்லுங்க. 


அகத்திய மாமுனிவர் அன்னை :- ( எனக்கு பதில் தெரியவில்லை)


சுவடி ஓதும் மைந்தன் :-   பதில் இல்லையாம்


===========================
# அண்ணாமலையார் உணவு உட்கொள்ளும் ரகசியம்.
# முதன் முறையாக உலகம் அறிய….
===========================


குருநாதர்:-  தாயே, ஏன் இவ்வாறாக அன்னத்தை கொடுக்கச் சொன்னேன் என்றால், நிச்சயம் இங்கு அண்ணாமலையானே  பின் உட்கொள்வான் என்பதெல்லாம் பின் நிச்சயம். தன்னில் கூட ஆனாலும், இதை யான் இப்பொழுது ரகசியமாக வைத்திருக்கின்றேன். 


ஏனென்றால், வருங்காலத்தில் நிச்சயம் தன்னில் கூட அனைத்திற்காகவும் மனிதன் அலைவான். இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட ஈசனை மனமகிழோடு, நிச்சயம் நீங்கள் மனமார்ந்து, நிச்சயம் இறைவனை, அதாவது ஈசனை சேவித்தால், சேவித்து, நிச்சயம் தன்னில் கூட அருள்கள். 


இவ்வாறாக பாடல்கள், நிச்சயம் தன்னில் கூட அழகாக மனதில் எண்ண, அதாவது தூய எண்ணங்களை வைத்துக்கொண்டு, இறைவன் நிச்சயம் இறைவனை அழைத்தால், நிச்சயம் தன்னில் கூட வருவான். 


என்ன குறைகள் என்பதை எல்லாம் யான் அறிவேன். நிச்சயம் தன்னில் கூட அக்குறைகளில் அழகாக யார் மூலம் எதனை அறிந்தும் கூட நீக்க வேண்டும் என்றெல்லாம். 


இதனால் அழகாகவே அனைத்தும் எதை என்று புரிய, அழகாகவே இன்னும் இன்னும் பல வகையிலும் கூட வாக்குகள் உண்டு. பின் குழந்தாய் அழகாக ஆனாலும், மனிதனுக்கு வாழ தெரியாமல், நிச்சயம் தன்னில் கூட வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 


இதனால் வாழ தெரியாமல், பக்தியும் செலுத்திக் கொண்டிருக்கின்றான். மனிதன் இப்படி இருக்க, இறைவன் எப்படி கண்ணுக்குத் தெரிவான்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  கடைசில என்ன சொல்றாருன்னா, வாழ தெரியாமல் வாழ்ந்துட்டு இருக்கிறான். வந்து மனுஷன் ஒன்னும் தெரியாம, அது பண்றான், இது பண்றேன்னு சொல்றான். ஆனா, இறைவன் கண்ணுக்கு தெரிபவர். ஆனா, இதெல்லாம் இருந்ததுனால, கண்ணுக்கே தெரியமாட்டேன்றாரு. இறைவன் என்றாரு. அப்ப நான் என்ன செய்யணும்னு கேக்குறாரு. உங்களை, அம்மா, நான் என்ன செய்யணும்? 


அகத்திய மாமுனிவர் அன்னை :-  கண்ணனுக்கு தெரியாம உணர்த்தலாம்ல…


குருநாதர்:-  தாயே, எது என்று புரிய, நிச்சயம் அவ்வாறுதான் உணர்த்தி வைத்துக் கொண்டே இருக்கின்றேன். ஆனால், மனிதன் நம்புவதாக தெரியவில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, கண்ணுக்கு தெரியாமையே நான் உணர்த்தி வச்சிருக்கிறேன். மனுஷனுக்கு வந்து, ஆனால் அதை கூட மனுஷன் என்ன பண்றான்? நம்புறது இல்ல. நான் என்ன பண்ணிட்டோம்? 


அகத்திய மாமுனிவர் அன்னை :- ( அமைதி , சிந்தனை )
………………
………………
………………
அகத்திய மாமுனிவர் அன்னை :- ( பதில் தெரியவில்லை என்பது போல தலையசைத்தார்  )


சுவடி ஓதும் மைந்தன் :- இங்க அகத்தியர், நீங்க அம்மா, அவர் பிள்ளை, அப்படித்தான் இருக்குது. ரெண்டு பேருதான். இதுல அவர், நீங்க நேர்ல இருக்கிறீங்கன்னு தெரியுது. இங்க அவர் தெரியமாட்டார். 


அடியவர் :- ( அம்மா , பிள்ளை ) போட்டி போட்டு எங்களுக்கெல்லாம் கருணை காண்பிங்க.


சுவடி ஓதும் மைந்தன், அகத்திய மாமுனிவர் அன்னை :- ( சற்று அமைதி, சிந்தனைகள்  )


அகத்திய மாமுனிவர் அன்னை :- எனக்கு என்ன சொல்றது என்று தெரியல.


குருநாதர்:- தாயே, புத்தி இருந்தும், புத்தி இல்லாதவனாக இருக்கின்றான். அப்பொழுது, மனிதன் நடிக்கின்றான் என்று தானே அர்த்தம்? 


சுவடி ஓதும் மைந்தன் :-  புத்தி இருந்தும், புத்தி இல்லாத மாதிரி இருக்கின்றான். வந்து, அப்ப நடிக்கிறதுக்கு தானே அர்த்தம்ன்றார். ஓகேங்களா, 


===========================
# அன்ன சேவை செய்யும் அனைத்து அடியவர்களுக்கும் ….. ஒரு வாக்கு  
===========================


===========================
# அநியாயம்  - “ஒரே இடத்தில் அன்னதானம் செய்வது”
===========================


குருநாதர்:-  தாயே, இவ்வுலகத்தில் அனைவருக்கும் அன்னம் வேண்டும். ஆனால், நிச்சயம் மனிதன் ஓரிடத்தில் மட்டும் அன்னத்தை கொடுக்கின்றோம் என்று ஏற்படுத்தி, இவ்வாறு, அதாவது அநியாயம் செய்தால், பின் என்ன செய்வது? 


சுவடி ஓதும் மைந்தன் :-  உலகத்தில் இருக்கிற எல்லாமே சாப்பாட்டு வேணும். ஓகேங்களா? அப்போ, ஒரு இடத்துல மட்டும் சாப்பாட்டை நிறுவி , சாப்பாடு கொடுத்தால், அது என்ன அர்த்தம்னு கேட்கிறார்?


அனைவரும் :- ( சற்று அமைதி , சிந்தனைகள் ….) 


சுவடி ஓதும் மைந்தன் :-  உலகத்தில் இருக்கிறதுக்கு எல்லாமே சாப்பாடு வேணும், இந்த காலத்துல வந்து. ஒரு இடத்துல மட்டும் நான் வந்து சாப்பாடு அன்னதானம் கட்டி, அன்னதானம் வந்து கொடுக்கிறேன்னு சொன்னா, அதுக்கு என்ன அர்த்தம்? 


நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=30056


அகத்திய மாமுனிவர் அன்னை :- ( அமைதி , சிந்தனை )


சுவடி ஓதும் மைந்தன் :-   தெரியாதுங்களா? 


===========================
# சுயநலம் - “ஒரே இடத்தில் அன்னதானம் செய்வது”
===========================


குருநாதர்:-  அம்மா, சுயநலம். தன்னை வளர்ப்பதற்காக, தன் புகழுக்காகத்தான். இவ்வாறு செய்தால், அழிந்து விடுகிறார்கள். ஆனால், இறைவனைத் தேடி, யான் அன்னதானம் என்று, அன்னதானம் செய்தேனே என்று 


சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப என்ன சொல்றார் தெரியுங்களா? அது என்ன அர்த்தம்? சுயநலவாதி தன் புகழுக்காக செய்யறது, நாங்க எல்லாம் பார் செய்றேன்னு சொல்லிட்டு. அப்படி செய்றவங்க வந்து என்ன பண்ணிறாங்க? திருப்பி வந்து ஈசியா அழிஞ்சிடுறாங்க. 


அப்ப என்ன பண்ணனும்? உலகம் முழுவதும் கொடுக்கணும். ஒரே இடத்துல அன்னசத்திரங்களை ஏற்படுத்தக்கூடாது. அப்ப இங்க கொடுக்கிறோமா? 


சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த நாளைக்கு….


அடியவர் 4 :- ( ஒரே இடத்தில் கொடுக்காம அனைத்து இடத்திலும் கொடுக்கணும் ) 


சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லா பக்கங்களும் சாப்பிடும்படியா செய்யணும். 


===========================
# யார் சித்தர்களின் பக்தன்?
===========================

===========================
# “அனைத்து இடத்திலும்  அன்னதானம் செய்வது” - அவனே சித்தர்களின் பக்தன்.
===========================


குருநாதர்:- அதுவே சித்தர்களின் பக்தன். ஆனால், இன்றளவு இல்லை. தாயே, வணங்குகின்றேன் உன்னை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  உன்னை வணங்கிட்டு சொல்றாராம், அது மாதிரி என் பக்தர்கள் யாரும் இல்லை அம்மா.


குருநாதர்:-  ஆனாலும் என்னை அப்படியே அமர்த்தி விடுகிறார்கள். அகத்தியன் என்று அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னை படம் போட்டு, என்ன பண்ணிட்டாங்க? வந்து அப்படியே உட்கார வச்சு, அகத்தியர் அன்னதானம்னு சொல்லிட்டு என்ன பண்றாராம்? உட்கார வைக்கிறது. உட்கார வச்சிட்டு பண்றதெல்லாம் திருட்டுத்தனம்மா. 


===========================
# பிள்ளையோனுக்கு  கோபம். பிள்ளையோன் பாடல் பாட வேண்டும். 
===========================


குருநாதர்:-  அம்மா, உன்னிடத்தில் யான் ஏன் எதற்காக சொல்கின்றேன் என்றால், நிச்சயம் பின் அறிந்தும் நீ, அதாவது நீ பாடினாய் அல்லவா? பின் முருகனும், அதாவது நிச்சயம் பிள்ளையோனும் வந்து பார்த்திட்டான். ஆனாலும், ஒரு கோபம் பிள்ளையோனுக்கு அவனைப் பற்றி பாடவில்லையே என்று….. பாடி விடு. ஆசிகள் கொடுக்கட்டும் அனைவருக்கும். 


அகத்திய மாமுனிவர் அன்னை :- ( ஞான விநாயகனே சரணம் ஞான விநாயகனே சரணம் என்ற பாடலை பாடினார்கள் )
பாடல் நேரலை :-  https://youtu.be/NqRaI13qIDU?t=30174

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!