வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
சித்தன் அருள் தொகுப்பு - 799 வழியாக, கல்யாண தீர்த்தத்தில் ஸ்ரீ லோபாமுத்திரை தாயின் சிலாஸ்தாபனம் நடந்ததையும், அவர் மறுபடியும், அகத்தியர் அருளால் அங்கே குருநாதரை வந்தடைந்து விட்டார் என்கிற நல்ல செய்தியையும் கூறியிருந்தேன்.
அந்த சிலை ப்ரதிஷ்ட்டையின் பொழுது அகத்தியப் பெருமான் மற்ற சித்தர்களுடன் அங்கிருந்து, அனைத்து தெய்வங்களும் மனம் மகிழ அது நடக்கும் என்று நாடியில் வந்து உரைத்திருந்தாலும், அந்த சந்தோஷ செய்தியை கூறும் பொழுது, அவர் நாடியில் கூறிய வேறொரு வாக்கை மறைத்திருந்தேன்.
அந்த சிலை ஸ்தாபித்தத்தில் ஈடுபட்டவர்கள் நாடியை நாடிய பொழுது, "எதற்கு இந்த சிலை ஸ்தாபிதம்? இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய வெள்ளம் வந்து, பாறைகள் உருண்டு, இந்த கல்யாண தீர்த்தத்தில் இனி யாரும் வர முடியாத அளவுக்கு ஒரு நிகழ்வு நடக்கும். அதில், எங்கள் இருவரின் சிலைகளும் நீரினால் எடுத்துச் செல்லப்பட்டுவிடும். இப்பொழுது தேவையா?" என்றார்.
அன்று அங்கிருந்த அடியவர்களின் நிர்பந்தத்தால், சிலை வடித்து, நிறுவ அனுமதி கொடுத்தார்.
இன்று, அவர் கூறியபடியே நடந்து விட்டது.
சமீபத்தில் பெய்த மழையின் காரணமாக, மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, கல்யாண சுந்தரேஸ்வரர் கோவில் படியின் அடிப்பாகம் அந்தரத்தில் தொங்கிக்கொண்டிருக்கிறது. இனி யாருக்கும் கோவிலுக்கு செல்ல முடியாது.
அகத்தியப் பெருமான் , லோபாமுத்திரை தாயாரின் சிலைகள் நீர் கொண்டு போய்விட்டது, அவர்கள் நின்ற மேடை காணவே இல்லை.
அவர்கள் நின்ற மேடைக்கும் கோவில் மண்டபத்துக்கும் இடையில் அபிஷேக தீர்த்தம் எடுக்க இறங்கும் படிகள் போய்விட்டது.
கீழே உள்ள படத்தில் அனைத்தும் தெளிவாகும்!
அகத்தியப் பெருமான் சொன்னால் செய்துவிடுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம்!
சித்தன் அருள்.......... தொடரும்!