​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 7 September 2026

சித்தன் அருள் - 2294 - சித்தர் புலம்பல்கள் - 5 !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
 
  1. அடுத்த தலைமுறைக்கு சேர்த்து வைப்பது மனித எண்ணம்; யாங்கள், அடுத்த பிறவிக்கு சேர்க்க சொல்கிறோம்.
  2. இளமையில் மனதை அடக்கி வாழ்ந்தால், பிற்காலத்தில் யோகநிலையில் உள்ள சந்ததி பிறக்கும்.
  3. வாழ்க்கை தோறும் தவறாகவே வாழ்ந்துவிட்டு, பிறவி தோறும் பாபங்களையே செய்துவிட்டு, குறுகிய காலம் நல்லதை செய்தால், இறை எவ்வாறு அருளும்.
  4. சித்தனை நாடினால், நன்மை உண்டு, ஆனால் எப்போது என்பது மறைபொருள்தான். மெல்ல மெல்லத்தான் நிம்மதி, சுகம், தனம், தேடி வரும்.
  5. விதியை மாற்றுவதற்கு எளிய வழி, தர்மம் ஒன்றுதான்.
  6. ஒருவனுக்கு, தர்ம சிந்தனை இருந்தால், அந்த தர்மமே அவன் எதிர்காலத்தை பார்த்துக் கொள்ளும்.
  7. ஒரு மனிதன் என்ன பிரார்த்தனை செய்தாலும், எத்தனை மந்திரங்கள் உரு ஏற்றினாலும், எத்தனை அபிஷேகங்கள், யாகங்கள் செய்தாலும் கூட, அவனிடம் உதவும் குணம் இல்லை என்றால், இறை அருளை பெற முடியாது.
  8. இறை நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், உதவும் குணமும், தர்மமும் ஒரு மனிதனிடம் இருந்தால், அவன் இறையை தேட வேண்டியதில்லை, இறையே அவனை தேடி வரும்.
  9. எவனொருவன் ஆவினங்களை காத்து, கடைவரை குறையின்றி பராமரிக்கிறானோ, அவனுக்கு இதுவே கடைப்பிறவி.
  10. ஆவினங்களை பராமரித்து கரை சேர்த்தால், அவன் பன்னிரண்டு சிவாலயங்களை கட்டி, கலச விழா செய்த பலனை அடைவான்.
  11. பாவத்தில் உச்சகட்ட பாவம், கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது. இதற்கு பரிகாரமே கிடையாது.
  12. பல பசுக்கள், முனிவர்களின் அவதாரம்.
  13. கோடீஸ்வரனும், தரித்திரனும் சிவமே!
  14. மனை அமையா தோஷம் விலக, செவ்வாய்க்கிழமை, முருகனை அடை.
  15. தீவினை மட்டுமல்ல நல்வினைகளாலும் ஒரு ஆத்மா பிறவி எடுத்துக்கொண்டே இருக்கும். வட்டத்தை விட்டு வெளி வர, முக்தி அடைய, ஒவ்வொரு நொடியும் அனைத்தையும் இறைவனுக்கு சமர்ப்பித்து விடு.
  16. புண்ணியத்தை சேர்த்துக்கொண்டே இரு; பாபங்களை அனுபவித்து கழிக்க இறை உதவும்.
  17. இறை ஆசியுடன் துக்கத்தை களைந்து, மனிதன் ஞான தூக்கத்தை அடைய வேண்டும்.
  18. வயிற்று சூடு, முகத்தில் அணை கட்டும். (சைனஸ்)
  19. நல்ல நோக்கிலே செய்தாலும் கூட வசியம் எனப்படுவது ஒரு வகையான பாவப்பதிவை ஏற்படுத்திவிடும்.
  20. அறங்களில் மிக சிறந்த அறம், கொல்லாமையே.
  21. பலகோடி புண்ணியத்தை சேர்த்துக் கொண்டாலும், உயிர்க்கொலை பாவங்கள் நீர்த்துப் போகாது.
  22. பக்தியோடு ஒருவன் தன் இல்லத்திலிருந்து வழிபட்டாலும் சித்தர்கள் அங்கே வந்து காட்சி தருவார்கள். 
  23. ஒவ்வாமை நோய் கொண்ட ஏழை நோயாளிகளுக்கு அதிக மருத்துவ உதவிகளை செய்தால் கட்டாயம் அது உண்மையான சர்ப்பசாந்தி பூஜையாகும்.
  24. அமாவாசை தோறும் அன்னை காளிக்கு பூஜை செய்திட, குழந்தைகள் தீய வழியில் செல்லாமல் இருப்பார்கள்.
  25. கால பைரவர் வழிபாடு சந்ததி வாழ்வை சீர்படுத்தும்.
  26. காசி எனும் புருவ மத்தியில் மனதை நிலைநிறுத்தி இருந்தால் முக்தி; காசியில் இறந்தால் முக்தி என்பது தவறான சொல்லாடல்.
  27. செய்கின்ற தர்மங்கள் எல்லாம் மேலும் இறைவனருளைக் கூட்டி வைக்கும், முன்ஜென்ம பாவத்தை கழித்து வைக்கும், புண்ணியத்தை பெருக்கி வைக்கும், தேவையற்றதை எல்லாம் அது வகுத்து வைக்கும்.    
  28. இது கடினம், இது கடினமல்ல. இது துன்பம், இது துன்பமல்ல. இது தேவை, இது தேவையல்ல என்ற நிலையையெல்லாம் தாண்டிய பிறகுதான் சித்தன் என்ற நிலை வாய்க்கும்
  29. ‘நான்‘ என்ற தனித்தன்மை இல்லாது ஒழிந்துபோன பிறகுதான் அங்கே சித்தன் முளைக்கிறான் 
  30. உலகத்தில் தோன்றிய முதல் மொழி, குழந்தையின் அழுகுரல்தானப்பா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!