இறைவன் படைக்கும்பொழுதே எல்லாவற்றையும் சிறப்பாக, உயர்வாக, எல்லா மனிதர்களும் பேதமில்லாமல் இருக்க வேண்டும் என்று இக்கணம் எண்ணினாலும் எல்லாம் சுபமாக, சுவையாக, எதிர்பார்க்கின்ற விதமாக இருந்துவிடும். ஆனால் இறைவன் என்ன செய்தார்? மனிதர்களுக்கென்று சில சுதந்திரங்களையும், சிந்திக்கக் கூடிய அறிவையும் தந்து அவனுடைய சுய அறிவால் நன்மை, தீமைகளைப் பிரித்துப் பார்த்து வாழ்ந்து விட்டு வரட்டும் என்று தந்தால் மனிதன் நன்மையை நாடுவதை விட, நன்மைக்கு மாறான விஷயங்களை நாடுவதிலே கவனம் செலுத்தி தன்னையும் கெடுத்துக்கொண்டு தன் சந்ததியையும் கெடுத்துக் கொண்டு இந்த உலகத்தையும் கெடுத்துக் கொண்டான். ஒரு வகையில் பார்த்தால் மனிதனுக்கு கொடுக்கப்பட்ட சுதந்திரமே அவன் அழிவிற்கு காரணமாகி விட்டது என்று கூட வேடிக்கையாக கூறலாம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
