வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- உண்ணும் முன் ஒரு பிடி உணவு, குருவை நினைத்து பறவைகளுக்கு - குரு எங்கிருந்தாலும் சிறந்த குருசேவை.
- யார் குரு - குருவே சிஷ்யனாவார், சிஷ்யனே குருவாவார். அதுவே சுவாமிநாதன்.
- கர்மவினை சேர உப்பே காரணம்.
- வாரம் ஒரு நாள் உப்பு நீர் ஸ்னானம், உடலில் சேர்ந்த எதிர் வினைகளை அறுக்கும்.
- பிறப்புக்கு வாசனையே காரணம்.
- நிறைவேறா ஆசைகளே வாசனையாய் உருவெடுக்கும்.
- ஹ்ருதய கமலத்தில் லிங்க தியானம், ஆத்மலிங்க தரிசனம்.
- அனுபவமே குரு - உணர்ந்தபின் அதுவே இறை.
- உள்ளே பிராண அபான நடனம் சிவசக்தி நாட்டியம்.
- மனிதர் உண்ணும் உணவு, யாரோ போட்ட பிதுர் பிண்டம்.
- கனிந்து கொடுப்பது தோஷமற்றது, அதுவே இறைவனுக்கு பால் அபிஷேகம்.
- ஆக்ச்னா வலுப்பெற, மனம் அமைதியாகும், வார்த்தைகள் சுருங்கும்.
- சவத்தை சிவமாக்குவதே தினம் நீராடல்.
- நீர்நிலைகளில் உதிரும் இலைபோல் இறங்கி நீராட வேண்டும்.
- நீர் இல்லையேல், இவ்வுலகில் உயிர் இல்லை.
- அக்னிக்குள் நீர் உண்டு, நீருக்குள் அக்னி உண்டு.
- காற்றில் உணவுண்டு, காற்றை சுழட்டுபவன், இதை அறிவான்.
- காற்றால், உள்ளுக்குள் எட்டு போடுபவன் சித்தன்.
- பற்று அற்றவன் சித்தன், அவன் சாபம் விலகாது.
- சித்த சாபம், ஜாதகத்தில் கிட்டாது,
- குரு சாபம் விலக, சிஷ்யனாய் குருவுக்கு சேவை செய்.
- அன்னத்தை மிஞ்சிய தர்மமில்லை; சுக்குக்கு மிஞ்சிய மருந்தில்லை, சுப்ரமணியத்துக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
- இருப்பவன், இல்லாதவனுக்கு கொடுக்கிறானா எனபதற்கே, ஒரு குடும்பத்தில் இரு நிலை சந்ததிகள்.
- மோரும் பாலும் ஒரு பொழுதில் உண்பது, உடலுக்கு ஆலகாலம்.
- நலம் விளைய, உணவில் சிவப்பு மிளகாய் தவிர். பச்சை மிளகாய் குறை, மிளகும் இஞ்சியும் சேர்.
- கடுகு, கடுகளவே, நலம் செய்யும்.
- குவளை நீரும், ஒரு இலையும், ஒரு பிடி திருநீறும், சிவம் தன்னை உணர்த்தும்.
- மனம் செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டா.
- பாரதம் கர்ம பூமி, மற்றவை போக பூமி.
- தர்மத்தை பிடி, அது உன்னை கரையேற்றும்!
சித்தன் அருள்.....தொடரும்!
