வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக! (இதன் முன் பதிவு: சித்தன் அருள் - 2254).
- மூலாதாரமும், ஆக்ஞா சக்கரமும் தொடர்பு அறுபட்டால், அவன் பைத்தியம்.
- தச வாயுக்களால் கட்டுப்படுத்தப்படுபவன் மனிதன். அவ்வாயுக்களை கட்டுப்படுத்த தெரிந்தால் அவன் தசரதன்.
- அன்னத்தில் முதன்மையானது "அரிசி" - அதன் இயற் பெயர் "அரிசிவா".
- புண்ணிய தல யாத்திரை பல கர்மாக்களை கரைக்கும்.
- இறை தரிசனம் முடிந்தபின் செய்யும் தானத்துடன் இறையருளும் செல்லும். இதே உத்தமம்.
- கோவில்கள், மகான்களின் சமாதியில் தரிசிக்க செல்லும் பொழுது, பசி, தாகம் உணர்வு தோன்றினால், கேள்! விருப்பம் நிறைவேறும் என்ற சகுனம்!
- பசி, தாகம் ஒரு நோய்! உணவும் நீரும் இட்டு அதை அடக்குகிறோம்.
- அனைவருக்கும் வயிற்றில் கர்ம அக்னி உள்ளது. எதை உண்கிறோம் என்பதில் கவனம் தேவை.
- முதுகுத் தண்டே பழனி முருகன் கை தண்ட சூட்சுமம்.
- சுழுமுனையே காசி, குண்டலினியே தேர்.
- ஆறுபடை வீடுகள், ஆறு ஆதார சக்கரங்களை வலுவாக்கும்.
- சித்த மார்கத்துக்கு சிதம்பரமே தலைமையகம்.
- சித்த மார்க தேர்வுக்கு ஓதிமலையே தேர்வகம்.
- இறைவன் தோன்றும் முன், உன் பதிலை தேர்வு செய்.
- இழப்பவன், நீர் இறைக்கும் கிணறு போல்.
- கண் முன் மரணம் சொல்லித்தரும் பாடம் மிக உயர்வானது. கவனமும் புரிதலும் தேவை.
- இறைவனும், சித்தர்களும் தேடி வர, மிக மிக நேர்மை தேவை.
- அனுபவம் என்பது இறைவன். அதை சொல்லித்தரும் ஆசிரியன் போற்றப்படவேண்டியவன்.
- நான் அழிந்தால் நல்ல குரு கிடைப்பார்.
- குருவுக்கு பின் இறைவன் - இது இறைவனுக்கு பிடிக்கும். இறைவனுக்குப்பின் குரு - இது குருவுக்கு பிடிக்கும்.
- கிரிவலம் செல்பவன் பலமுறை கண்மூடி மலையை உள்வாங்க வேண்டும்.
- வெளியே அருணாச்சலம் அக்னி, உள்ளே அவர் குளிர்.
- தாவரங்களுக்கும் உயிர் உண்டு. உணவுக்காக உண்கையில் மன்னிக்கப்படும் குற்றமாகும்.
- மன்னிக்கப்படும் குற்றங்களை, பசுவுக்கும், பறவைகளுக்கும் உணவளித்து தீர்க்கலாம்.
- சூரிய உதயத்துக்கு பின்னும், சூரிய அஸ்தமனத்துக்கு முன்னும்தான், தாவரங்களை, ஒளஷதிகளை பறிக்கலாம்.
- மௌனமாக கடைபிடிக்க அல்லது மனதுள் ஜபம் ஓட வேண்டிய மூன்று நேரம் - குளித்தல், பூஜை, உணவு உண்ணல்.
- வெளி பூஜை போல் உள் பூஜை பழக வேண்டும்.
- நினைத்தாலே செய்தி அனுப்பிட தியானம் பழகு.
- தேடாதே தொலைந்து போவாய்.
- உண்ணும் முன் ஒரு பிடி பச்சிலை/ஒரு பிடி உணவு - பிராணிகளுக்கும் பறவைகளுக்கும் - பித்ரு தோஷ நிவர்த்தி.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
