​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 22 April 2026

சித்தன் அருள் - 2188 - அன்புடன் அகத்தியர் - அன்னை கண்ணகி தேவி காவியம் - பகுதி 3



அன்புடன் அகத்திய மாமுனிவரின்  அன்னை கண்ணகி தேவி  காவியம் - பகுதி 3 

நிகழ்ச்சி :- இலங்கை சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை
நாள் :-  03.04.2026 (வெள்ளிக்கிழமை)  
நேரம் :- காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை.
இடம் :-  வேலோடு  மலை முருகன் ஆலயம், சித்தான்டி, கிழக்கு மாகாணம், இலங்கை.

கூகிள் மேப் லிங்க் (google map link) :- 
https://maps.app.goo.gl/tTU46Rq7V4Um8pf2A

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அம்மையே அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் நிச்சயம் தன்னில். 

குருநாதர் :- அப்பனே, எதற்காக சொல்கின்றேன் அப்பனே என்றால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே நேரம் கூட, அப்பனே நிச்சயம் தன்னில் கூட சரியாகவே. 

குருநாதர் :- ஏன் நேரத்தை அப்பனே சரியாக கவனித்துக் கொண்டிருக்கின்றோம் என்பவை எல்லாம் அப்பனே சரியாக, பின் நிச்சயம் தன்னில் கூட இறையருள் கூடும் நேரம் இது. இதனால் அப்பனே முருகனை பின் துதித்து , அப்பனே நல் பாடல்களை பாடுக. 

சுவடி ஓதும் மைந்தன் :- நேரம் கூட ஒரு பெரிய ஒன்னு நம்மளுக்கு மாற்றத்தை கொடுக்கும்ன்றாரு. இந்த நேரம் என்ன டைம் பாருங்க ஐயா.

அடியவர் :- 11:11 ( உச்சி வேளை நெருங்கும் நேரம் ). 

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த நேரம் பெரிய ஆற்றலை?

அடியவர் :- கொடுக்கும் நேரம்.

===========================
# 11:11 AM - உச்சி வேளை நெருங்கும் நேரம்  ரகசியங்கள் அறிய பின்வரும் 2 பதிவை படித்து தெரிந்து வெற்றிவாகை சூடுங்கள்.
சித்தன் அருள் -1757 - மதுரை வாக்கு - 19
சித்தன் அருள் - 2039 - மதுரை கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7
 ===========================

சுவடி ஓதும் மைந்தன் :- இந்த நேரம் (11:11 AM) பெரிய ஆற்றலை கொடுக்கும் நேரம். அதனால இந்த நேரத்துல.

அடியவர் :- முருகனை நினைச்சு.

சுவடி ஓதும் மைந்தன் :- முருகனை நினைச்சு பாடல் பாடுங்க. ஆற்றல் உங்களுக்கு பெருகட்டும்ன்றாரு வந்து. எல்லாரும் உடனடியா ஒரு பாடல். முருகன் பாடல் என்ன இருக்கு? கந்த சஷ்டி கவசம் படிக்கிறீங்களா இல்ல என்ன படிக்கிறீங்க?

அடியவர் :- ஏதாவது ஒன்னு.

அடியவர் 1 :- திருப்புகழ். 

சுவடி ஓதும் மைந்தன் :- திருப்புகழ். அருமை ஐயா. பாடுங்க ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஒவ்வொரு நேரத்துல கூட ஐயா, சொல்லுவார் அகத்தியர் எல்லாம். சரிங்களா? ஐயா இதெல்லாம் வந்து பெரிய கோல்டுங்க ஐயா. நீங்க கோடி ரூபாய் கொடுத்தாலும் இதெல்லாம் வந்து இதெல்லாம் யாரும் சொல்ல மாட்டாங்க. ஆமாங்க ஐயா. இது நமக்கு அகத்தியர் இட்ட பிச்சை. ஏதோ ஒன்று. நம்ம செய்த புண்ணியங்களால ஒன்னு இங்க வந்து படிச்சிட்டு இருக்கோம் வந்து. முருகப்பெருமான் இங்க கூப்பிட்டு இருக்காரு. வந்திருக்கேன். ஐயா எல்லாம் உட்கார்ந்து இருக்காரு பக்கத்துல வந்து. அதனால இந்த பிச்சையை நம்ம வந்து சரியா பயன்படுத்திக்குவோம். ஐயா படிங்க. படிங்க ஐயா. திருப்புகழ்.

அடியவர்கள் :- ( இறை அளித்த அருமையான குரல் வளத்துடன் , இனிமையாக பாடினார்கள் )

(திருப்புகழ் 567 பத்தியால் யானுனை  - இரத்னகிரி)

பத்தியால் யானுனைப் ...... பலகாலும்
     பற்றியே மாதிருப் ...... புகழ்பாடி

முத்தனா மாறெனைப் ...... பெருவாழ்வின்
     முத்தியே சேர்வதற் ...... கருள்வாயே

உத்தமா தானசற் ...... குணர்நேயா
     ஒப்பிலா மாமணிக் ...... கிரிவாசா

வித்தகா ஞானசத் ...... திநிபாதா
     வெற்றிவே லாயுதப் ...... பெருமாளே.

குருநாதர் :- அப்பனே, நல்விதமாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் பிரார்த்தியுங்கள் என்பேன் அப்பனே. பின் தொடர்ந்து பின் கந்த சஷ்டி தன்னை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கந்த சஷ்டி கவசம் பாடணும்மா. எல்லாரும் நினைச்சு எல்லாரும் நல்லா இருக்கணும். எல்லாருக்காக பாடுங்கம்மா. முருகன் நம்மளுக்கு அருள் புரிவார். 

அடியவர் :-  படிப்போம் ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :- படிங்க ஐயா. கந்த சஷ்டி கவசம்.

அடியவர்கள் :- ( இறை அளித்த அருமையான குரல் வளத்துடன் , கந்த சஷ்டி கவசம் இனிமையாக பாடினார்கள் ) 

"துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில்
பதிப்போர்க்குச் செல்வம் பலித்து - கதித்தோங்கும்
நிஷ்டையும் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை"

…….
…….
…….
…….

அடியவர்கள் :- ( பாடி முடித்தவுடன் மீண்டும் வாக்குகள் ஆரம்பமானது )

குருநாதர் :- அப்பனே, நலமாக பல வெற்றிகள் மனிதனுக்கு அப்பனே. அதாவது பல, பல, பின் ஆற்றல்கள் அழகாக இறைவன் மனிதனுக்கு கொடுப்பது—கொடுக்கத்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அழகாக கொடுத்துத்தான் அனுப்புகின்றான் அப்பனே. 

குருநாதர் :-  இதை பல உரைகளில் யான் தெரிவித்து விட்டேன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  அதை இயக்கவே அப்பனே, "யாங்கள் வந்துள்ளோம்" என்பேன் அப்பனே. இதனால் சிறிது உங்களைத் தள்ளிவிட்டாலே அப்பனே, நீங்கள் பின்பற்றிக் கொள்வீர்கள். நிச்சயம் அப்பனே, உங்களுக்கு அது சாதகமாகவே போகும்.

அடியவர் :-  அதாவது மனிதனை படைக்கும் நேரமே இறைவன் வந்து ஆற்றலை கொடுத்துதான் படைச்சிருக்கான். ஆற்றல் வந்துதான் நம்மள அனுப்பி இருக்கான். ஆனா அந்த ஆற்றலை எப்படி செயல்படுத்தனும் அப்படிங்கறது எங்களுக்கு தெரியல. அதனாலதான் சித்தர்கள் இறங்கி வந்து இந்த ஆற்றலை எப்படி பயன்படுத்தணும்னு நம்மளுக்கு வழிகாட்டுறாங்க. அவர் சொல்றாரு, "கொஞ்சம் காட்டிவிட்டாலே போதுப்பா, நீங்க புடிச்சு வந்துருவீங்க" அப்படிங்கிறாரு.

குருநாதர் :-  அப்பனே, அம்மையே, அவை மட்டும் இல்லாமல் இங்கு எதை என்று புரிய அங்கிருந்து வீசினானே, பின் வேல் ஒன்று. பின் நிச்சயம் தாங்கி எது என்று கூறிய உயிரோடவே இருக்கின்றது. இதனால் நிச்சயம் தன்னில் கூட பல கஷ்டங்களோடு பின் அலைந்தவன் இங்கு வந்து அமர்ந்தாலே நிச்சயம் தன்னில் கூட அவ்வேலானது  பின் உயிரை—அதாவது ஊக்கத்தை கொடுக்கும், ஆற்றலைப் பெருக்கும், பின் நல்வாழ்வு வாழ வைக்கும்.

அடியவர் :-  அதாவது கைலாசத்திலிருந்து வேல் இங்க வீசினது தான் முதல் நாடியில படிச்சாரு. அந்த வேல் இங்க உயிரோட்டமா அப்படியே இருக்குதாம். ஆனால் யாரு வந்து இங்க உட்கார்ந்து மனக்கவல்ல யாரு வந்து இங்க உட்கார்ந்து வழிபட்டு போனாலும், அவங்களோட கவலைகள் எல்லாம் தீர்ந்து நல்லது நடக்குமாம்.

===========================
பங்குனி உத்திரம் 31/3/2026 , செவ்வாய்க்கிழமை அன்று குருந்தார் அகத்திய மாமுனிவர் உரைத்த வாக்கின் சுருக்கம். முழு வாக்கும் பின்னர் வெளிவரும்.

சிவபெருமான் கைலாயத்தில் ஞானிகளை அழைத்தபோது உறங்கிக்கொண்டிருந்த தன்னை அழைக்காததால் கோபமடைந்த முருகப்பெருமான், தனது வேலுடன் பூலோகம் வந்து ஒரு புதிய இடத்தை அமைப்பதாகக் கூறி, கயிலையிலிருந்து திருவிளையாடலாக வீசப்பட்ட வேல் விழுந்த இடமே இந்த ஆலயம். வேல் விழுந்த இடம்:- சித்தான்டி வேலோடு மலை முருகன் ஆலயம், கிழக்கு மாகாணம், இலங்கை. கைலாயத்திலிருந்து வீசப்பட்ட வேல் பலத்த சத்தத்துடன் இந்த இடத்தில் விழுந்தது. இது கைலாயத்திற்கு நேர் திசையில் அமைந்துள்ள இடமாகும்.முருகன் அந்த வேலை அங்கேயே பூமிக்கு அடியில் ஆழமாகப் புதைத்து மறைத்து வைத்தார்.
===========================

குருநாதர் :- அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே—அதாவது ஒன்றை சொல்கின்றேன், யானைகளே அப்பனே, இங்கு வந்து அப்பனே ஆற்றலை பெருக்கித்தான் செல்கின்றது. அப்பனே, அதற்கு கூட தெரிகின்றது. பின் ஆற்றலை பெருக்கிக் கொண்டு அப்பொழுதுதான் நமக்கும் உணவு கிடைக்கும் என்று அதற்கே தெரிகின்றது என்பேன் அப்பனே.

அடியவர் :-  இந்த வனத்தில் இருக்க யானைகள் கூட இங்க வந்து அந்த வேலை வணங்கி ஆற்றலை பெருக்கிட்டு போகுதாம். யானைகளுக்கே தெரிஞ்சிருக்குதாம் , இந்த இடத்துல இப்படி சக்தி ஒன்னு இருக்குது, இங்க வந்து வணங்கி போகணும்னு யானைகளுக்கே தெரிஞ்சிருக்குதாம். அந்த யானைகளே இங்க வந்துதான் சக்தி பெறுகிறதுன்னு சொல்றாரு.

குருநாதர் :- முருகன் நிச்சயம் தன்னில் கூட நமக்கு கொடுப்பான். முருகன் இங்க இருக்கின்றான் என்று அவைகளுக்கே தெரிந்து, பின் நிச்சயம் தன்னில் கூட பின் வரங்கள் இன்னும் வாங்கிச் செல்கின்றது. நிச்சயம் தன்னில் கூட பின்—அதாவது நிச்சயம் இன்னும் அழிவு வரை போகின்றது. எங்களை பின் அழிவு வராமல் காத்திருக என்று நிச்சயம் பின் வரங்கள் பெற்று பின் செல்கின்றது. அவையே வந்து.

அடியவர் :-  யானைகளே இங்க வந்து முருகன் கிட்ட இந்த அழிவுகள் எல்லாம் வருது. அழிவுகள்ல இருந்து எங்களை காப்பாத்துங்கன்னு அதுகளே வந்து வேண்டி வரத்தை பெற்றுக்கிட்டு போகுது.

சுவடி ஓதும் மைந்தன் :-  வரத்தை பெற்று போகிறது. 

குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட எங்கு பின் யானைகள் பின் அதிகமாக இருக்கின்றதோ, அங்கு நிச்சயம் தன்னில் கூட பின் உயிருள்ள ஆற்றல்கள் பல இருக்கும்.

அடியவர் :- யானைகள் எங்க கூட்டமா இருக்கோ, அந்த இடத்துல உயிரோட்டமான ஆற்றல்கள் இருக்கும் அப்படிங்கிறாங்க. 

குருநாதர் :- ஏனென்றால் யானைகளுக்கு தெரியும், நிச்சயம் தன்னில் கூட பின் இங்கு சென்றால் உணவு பின் மற்றும் அனைத்தும் கிட்டும், நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால் இறைவனே இருக்கின்றான் அல்லவா? அனைவரும் இறைவன் தான் படைத்தான் அல்லவா? பின் நமக்கும் படி அளப்பான் என்று. 

அடியவர் :- யானைகளுக்கு தெரியுமாம். எங்க போனா உணவு இருக்கும், எங்க போனா எப்படி இருக்காது? ஏன்னா இறைவன் தான் படி அளப்பான்னு தெரிஞ்சு அந்த ஆற்றல் இருக்கிற இடத்துல தான் யானைகளும் வாழுமாம்.

===========================
# கஜமுகன்  மேல் பவனி வந்த வேலோன்.. 
===========================

குருநாதர் :- அறிந்து கூட ஒரு அறிவித்து சொல்கின்றேன், எதை என்று கூற இன்னும் கூட நிச்சயம் தன்னில் கூட பல நூறு பின் ஆண்டுகள் பின் நிச்சயம் பின் வாழ்ந்த எதை என்று கூற பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் யானைகளும் எவை என்று புரிய, அதாவது நிச்சயம் முருகனை, பின் நிச்சயம் பின் மேல் பின் அவை என்று கூற, பின் உட்கார வைத்து யான் சுற்றி வருகின்றேன் என்று சொன்ன யானையும் இன்னும் இங்குதான் இருக்கின்றது, நிச்சயம் தன்னில் கூட.

அடியவர் 1 :- ஐயா, என்னன்னா இங்க ஒரு யானை இருக்கு. மலையை சுத்தி வந்து முன்னுக்கு ஊத்த காலை கீழ வச்சு இப்படி கும்பிடுது. அதை நாங்களும் கண்டு இருக்கோம். 

அடியவர் :- ஐயா, என்ன சொல்றாருன்னா, இத்தனையோ வருஷங்களுக்கு பிறகு ஒரு யானை வந்து முருகனை இங்க பல்லாக்கு மாதிரி தூக்கிட்டு போச்சாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  தூக்கிட்டு போச்சாம்  உண்மையிலேயே, 

அடியவர் :- உண்மையிலேயே தூக்கிட்டு போச்சாம். அந்த யானை இன்னும் உயிர் வாழுது.

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் உயிரோடு இருக்குதாம் வந்து.

அடியவர் :- அது இங்க வந்துட்டு போகுதுன்னு சொல்றாரு.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா, ஐயாவை பாருங்க. இங்க இருக்கிறாரே, அவருக்கே அவர் பார்த்துக்கிறார். சொல்லுங்க எல்லாருக்கும்.

அடியவர் :-  ஐயா, நீங்க சொல்லுங்க. 

அடியவர் 1 :- காட்டுல வாழ்ற யானை, இப்படி கோயிலை சுத்தி வந்து இந்த முன்னுக்கு தன்னை காலை ஒரு காலை பதைச்சு அப்படி கும்பிட்டு போகும்.

அடியவர் 1 :- (அகத்தியர்) ஐயா சொல்றது உண்மை. உண்மை அப்படி.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த யானைக்கும் தெரிஞ்சிருக்குதாம் வந்து அந்த ஆற்றல்கள் வந்து.. யானைக்கும் தெரியும்ன்றாரு. வந்து.. 

குருநாதர் :- எதை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது எவை என்று அறிய  நிச்சயம் தன்னில் கூட பின் கோமாதாக்களுக்கும் கூட தெரியும். நிச்சயம் பின் எங்கு இருக்கின்றது ஆற்றல்கள் என்று.

அடியவர் :-  அது கோமாதா பசுக்களுக்கும் தெரியுமாம்.  

குருநாதர் :- எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட மக்களுக்குத்தான் பின் நிச்சயம் தன்னில் கூட பக்தி என்பதை கூட கலியுகத்தில் நிச்சயம் பின் பயன்படுத்த தெரியவே இல்லை.

அடியவர் :-  பாருங்க, யானைக்கும் தெரியுதாம். கோமதா பசுவுக்கும் தெரியுதாம். ஆனா மனுஷனுக்கு தான் கலியுகத்துல எங்க ஆற்றல் இருக்குது,  பக்தி செலுத்த தெரியலங்கிறாங்க.

குருநாதர் :- எதை எவை என்று புரிய. இதனால் நிச்சயம் தன்னில் கூட கண்ணகியும் நிச்சயம் தன்னில் கூட கடல் எவை என்று புரிய,நிச்சயம் தன்னில் கூட முடிந்தது. இதனால் நிச்சயம் தன்னில் கூட யானை மறித்துக் கொண்டது வந்து பின் வழியில். எங்கு செல்கின்றாய்? என்று கேட்டது.

அடியவர் :- கடல்ல இருந்து வந்து நிலத்துக்கு வந்துட்டாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  நிலத்துக்கு வந்துட்டாங்க.

அடியவர் :- நிலத்துல இருந்து வரும்பொழுது யானை ஒன்னு வந்து 

சுவடி ஓதும் மைந்தன் :-  இடை மறிக்குது. 

அடியவர் :- கண்ணகி அம்மாவை மறிக்குது. வந்து கேக்குது, எங்க போற அப்படின்னு.. அந்த யானை இடை மறித்து கண்ணகி அம்மா கிட்ட கேக்குது.

குருநாதர் :- எதை எவை என்று அறிய மக்கள் அனைவரும் சேர்ந்து என்னை ஏமாற்றி விட்டார்கள். எதை என்று புரிய மக்களை நம்பினேன். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார்கள். யான் எங்கு செல்வது என்று பின் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- அதனால் ஏதோ பின் நிச்சயம் தன்னில் கூட பின் எங்கே செல்லலாம் என்று வந்துட்டேன். ஆனாலும் பின் கடலும் வழிவிட்டு விட்டது. ஆனால் எங்கு பின் போவேன் என்று எனக்கே தெரியவில்லை என்று. 

அடியவர் :- அவங்க சொல்றாங்க. மக்கள் எல்லாம் என்னை ஏமாத்திட்டாங்க. நம்ப வச்சு ஏமாத்திட்டாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ம்…. 

அடியவர் :- எனக்கு போறதுக்கே இடம் இல்லை.

சுவடி ஓதும் மைந்தன் :-   நம்பிக்கை துரோகம் பண்ணிட்டாங்க.

அடியவர் :- கடலை தாண்டி வந்துட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ம்…. 

அடியவர் :- எங்க போறேன்னு தெரியாம வந்துட்டு இருக்கேங்குறாங்க அவங்க.

===========================
# உங்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை பின் வரும் வாக்கோடு இணைத்து புரிந்து கொள்க….உத்தமி சாபம் பொல்லாதது….
===========================

குருநாதர் :- எதை என்று புரிய அதனால் பின் கண்ணகியின் சாபம் இன்னும் கூட மக்களுக்கு நிச்சயம் தன்னில் கூட 

ஒன்றாக பழகினால் நிச்சயம் ஏமாற்றம் தான். 

நம்பிக்கை துரோகம் தான், நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய. 

இன்னும் கூட பின்னால் அவ் சாபம் தொலையவில்லையே உலகத்திற்கு.

அடியவர் :-  அதாவது ஒன்றாக இருந்து ஏமாற்றி நம்பிக்கை துரோகம் செஞ்சதுனால கண்ணகி அம்மாவுடைய சாபம் இன்னும் கூட உலகத்துல இருக்குதாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  இன்னும் கூட உலகத்துல இருக்குது. அதனால நம்பிட்டீங்கன்னா நம்பிக்கை துரோகம் பண்ணிடுவாங்க. ஏமாத்திருவாங்க. அது இன்னும் கூட?  

அடியவர் :- உலகத்துல இருக்குது. 

சுவடி ஓதும் மைந்தன் :- உலகத்துல இருக்குது. 

குருநாதர் :- எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட. அதனால் பின் ஒரு “உத்தமள்”  எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் ஒரு “உத்தமன்” , நிச்சயம் தன்னில் கூட, சாபம் விட்டுவிட்டால் பின் கடைகளும் அது பலிக்கும். அதனால்தான் பிள்ளைகளை எவை என்று கூட தாய் தந்தைகள் சாபமே எடுக்கக்கூடாது.

அடியவர் :- ஒரு உத்தமனோ, ஒரு உத்தமியோ சாபம் போட்டா அது பழிச்சிரும். அதனாலதான் சொல்றாரு பிள்ளைகளுக்கு அப்பா அம்மா எதுவும் சொல்லிராதீங்க. ஏன்னா சொல்லிட்டு அவங்க கஷ்டப்படும் பொழுது திரும்ப அப்பா அம்மாதான் கஷ்டப்படணும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க தான் கஷ்டப்படணும். நீங்க ஐயா, நீங்க என்ன சொல்றீங்களோ கடைசில என்ன ஆகும்? அது உங்களுக்கே கஷ்டமா போயிடும். அந்த சொல்லுக்கு நீங்கள் பதில் சொல்லி ஆகணும். அதனால வந்து? 

அடியவர் :-  ஒன்னும் சொல்லாதீங்க. சாபம் போடாதீங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  சாபம் போடாதீங்க. அப்பா படிங்கப்பா. நல்லா இது மாதிரி இருக்கா, இது மாதிரி இருக்குன்னு சொல்லிட்டு ஏதோ பண்ணலாம். ஆனா அது மாதிரி நீ அழிஞ்சிடவடா -  அப்படி எல்லாம் சொல்லக்கூடாது. 

குருநாதர் :- அப்பனே, இதை பல பின் நிச்சயம் தன்னில் கூட பின் பார்த்துவிட்டேன். அப்பனே, மனிதரிடையே  அப்பனே. 

குருநாதர் :- இதனால் அப்பனே (தாய் , தந்தை)  அவர்களே  சொல்லி… 

அவர்களையும் (குழந்தைகளையும்) அழ வைத்து…..

இவர்களும் அழுவார்களும் சேர்ந்து. 

அடியவர் :-  இதெல்லாம் மனுஷர்கள் நிறைய பார்த்துட்டாங்களாம். அவங்களையும் அழ வச்சு இவங்களும் சேர்ந்து அழுவாங்களாம்.

குருநாதர் :-  ஆனால் யார் மீது குற்றம் என்று நிச்சயம் தன்னில் கூட உணராமல் இறைவனை தேடி அலைவார்கள்.

அடியவர் :-  குற்றம் யார் மேல இருக்கு? மனுஷன் மேல வச்சுக்கிட்டு என்ன செய்வாங்களாம்? கடவுளை தேடி தேடி அலைஞ்சுகிட்டு இருப்பாங்களாம்.

குருநாதர் :- இதனாலதான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அடிப்படை தத்துவமே மனிதனுக்கு தெரியவில்லை என்பேன்  அப்பனே. அடிப்படை தத்துவத்தை தெரிந்து கொண்டால்தான் அதன் பிறகுதான் அனைத்தும்.

அடியவர் :- முதல் மனிதன் வந்து அடிப்படை தத்துவத்தை தெரிஞ்சுக்கணுமாம். அடிப்படை தத்துவம் தெரிஞ்சாதான் மத்தது எல்லாம் இறைவனை தேடுறதோ, சாமி கும்பிடுறதோ எல்லாமே.

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே. 

குருநாதர் :- அப்பனே, இப்பொழுதெல்லாம் இருக்கும் மனிதர்கள் அடிப்படை தத்துவத்தையே தெரிந்து கொள்ளவில்லை அப்பனே.  நிச்சயம் அடிப்படை தெரியாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் கடைசியில் அப்பனே இறைவன் ஒன்றும் செய்யவில்லை என்று மனிதன் நிச்சயம் இறைவன் மீதே பட்டம் சூட்டுவான் என்பேன் அப்பனே. 

அடியவர் :- இப்போ எல்லாம் மக்களுக்கு வந்து அடிப்படையே தெரியாததுனால கடைசியா என்ன செய்றாங்களாம்? இறைவன் மேல பழியை போட்டுறாங்களாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒன்னும் பண்ணல. இறைவன் அதை பண்ணேன், இதை பண்ணேன்னு சொல்லிட்டு அப்ப.

===========================
# உங்கள் வாழ்க்கையை உயர்த்தும்  முதல் அடிப்படை தத்துவம்.
===========================

குருநாதர் :- அப்பனே, அடிப்படை தத்துவம் எதை என்று கூற அப்பனே, முதலில் அப்பனே அடிப்படை பெண் தத்துவமாக வருவது தர்மமே என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப அடிப்படை தத்துவம் என்ன சொல்றாரு? அடிப்படை தத்துவமே தர்மம் என்றாரு.

அடியவர் :- தர்மம் தான்.

சுவடி ஓதும் மைந்தன் :-   தர்மம் தான் அடிப்படை தத்துவம் என்றாரு. 

குருநாதர் :- அப்பனே, தர்மத்தை நீ காத்துப் பார் அப்பனே. அப்பொழுது தெரியும் உன் வாழ்க்கை எங்கு உயரப் போகின்றது என்று.

அடியவர் :-  தர்மத்தை மட்டும் நீங்க காத்துட்டு வாங்க. அப்ப தெரியும் நீங்க எந்த உயரத்துக்கு போவீங்க.

குருநாதர் :- அப்பனே, இதனால்தான் பல ஞானிகள் வந்து தர்மத்தை அப்பனே காத்தனர் அழகாக. அதனால்தான் அவர்கள் பெயர்கள் இன்னும் நிலைத்து நிற்கின்றது என்பேன்  அப்பனே. 

அடியவர் :-  எத்தனையோ ஞானிகள் வந்து தர்மத்தை காத்து நின்னால்தான் இன்னைக்கு என்ன செய்யுது? அந்த தர்மத்தை காத்த ஞானிகள்  பேர் நினைச்சு நிக்குதாம். 

குருநாதர் :- அப்பனே, அதேபோல் பின் உங்கள் பெயரும் பின் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் தர்மம் பின் என்ற வார்த்தையை நீங்கள் பயன்படுத்தியே ஆகவேண்டும்.

அடியவர் :- உங்கள் பேரும் இந்த பூலோகத்தில் நினைச்சு நிக்கணும்னா என்ன செய்ய சொல்றாரு? தர்மம், தர்மம்ங்கிறதை நினைச்சு பார்க்க சொல்றாரு.

===========================
# தர்மமா  அல்லது பூசையா ?
===========================

குருநாதர் :- அப்பனே, எத்தனையோ மனிதர்களை பார்த்துவிட்டேன். அப்பனே, இறைவன் மேல் அன்பு. அப்பனே, எத்தனையோ ஏது என்று பல பூஜைகள் செய்தனர் என்பேன்  அப்பனே. ஆனால் பின் அவருடைய பின் நிச்சயம் தன்னில் கூட பின் நாமங்கள் அப்பனே ஒன்றுமே தெரியாமல் அழிந்து போகின்றது. ஏனென்றால் அப்பனே தர்மத்தை கடைபிடிக்கவில்லை. அதனால்தான். 

அடியவர் :- எத்தனையோ ஞானிகளை பார்த்துட்டாராம், அகத்தியர் அப்பா. நிறைய பூஜைகள் செஞ்சிருக்காங்களாம். நிறைய இறைவனுடைய மந்திரங்கள் படிச்சிருக்காங்களாம். ஆனா என்னது? 

சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப இப்ப, இருக்கிற மனிதர்கள் பார்த்திருக்காங்க. இப்ப இருக்கிற மனுஷங்களே பார்த்திருக்காராம். வந்து இப்பயே 

அடியவர் :- ஆமா. ஆனா அவங்களோட பேர் ஒண்ணுமே நிலைக்கலையாம். ஏன்? என்ன காரணம்னா தர்மம் இல்லையாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- தர்மத்தை 

அடியவர் 2 :- கடைபிடிக்கவில்லை 

குருநாதர் :- அப்பனே தர்மத்தை கடைபிடித்து பார்  அப்பனே. இறைவனே  வந்து அப்பனே உங்களிடத்தில் கையேந்துவானப்பா. உதவி செய் என்று.

அடியவர் :- தர்மத்தை மட்டும் கடைபிடித்தால், இறைவன் வந்து உங்ககிட்ட உதவி கேட்பாராம். 

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட கிரகங்களையே வெல்லலாம் என்பேன்  அப்பனே  நிச்சயம்,  தர்மத்தை கடைபிடித்தால். 

அடியவர் :- நீங்க வந்து தர்மத்தோடு இருந்தா, நவகிரகத்தை கூட வெற்றி பெறலாம்.

குருநாதர் :- அப்பனே, பின் ராகு கேது தோஷங்கள் என்ன? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

எவ்வாறு செவ்வாய் தோஷம்? 

அப்பனே, சனீஸ்வரன் எவ்வாறு உங்களை பின் பாடாய் படுத்துவான்? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

ஏனென்றால் பின் இவையெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உங்களை அண்டாது. தர்மத்தை கடைபிடித்தால், அப்பனே, 

அடியவர் :- எவன் ஒருவன் தர்மத்தோடு இருக்கானோ, ராகு, கேது தோஷம் வராது. சனி தோஷம் எந்தவிதமான தோஷங்களும்… கிரக தோஷமே இல்லை. அப்படிங்கிறார். 

குருநாதர் :- அப்பனே, கிரகங்கள் கூட அப்பனே , நிச்சயம் பின் நீ எவ்வாறு வாழ்ந்திட்டு செல்கின்றாயோ, அவ்வாறு வாழ்ந்திட்டு செல் என்று, அப்பனே, பின் அழகாக உங்களை வாழ்த்தி, பின் வழி அனுப்பும் அப்பா. 

அடியவர் :- தர்மத்தோடு உள்ளவங்களை கிரகங்கள் என்ன செய்யுமாம்? ஒண்ணுமே செய்யாதாம். நீ நல்லா வாழ்றப்பா, நல்லபடியா வாழ்ந்துட்டு போன்னு வாழ்த்தி வழி அனுப்பி வைக்கும். 

===========================
# ஜோதிடர்களுக்கு - எடுத்து சொல்லுங்கள்…
# ஜாதகத்தை பார்க்காமலே எப்படி நீங்கள் புண்ணியங்கள் பெறுவது?
===========================

குருநாதர் :- அப்பனே, தர்மத்தை கடைபிடிக்காதவன் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு கிரக நிலை எல்லாம் பார்த்துக் கொண்டிருப்பான் என்பேன்  அப்பனே. செப்பிவிட்டேன் என்பேன்  அப்பனே. 

குருநாதர் :- இன்றளவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்பேன்  அப்பனே. இதனால் அவனெல்லாம் தர்மத்தை பின் கடைபிடிக்காதவனே ஆவான் என்பேன்  அப்பனே. 

குருநாதர் :- முதலில் அப்பனே, பின் ஜாதகத்தை பார்த்தாலே, அப்பனே, நிச்சயம் பின் தர்மத்தை கடைபிடிப்பாயா? என்றுதான் கேட்க வேண்டும். அப்பொழுதுதான் புண்ணியம்.

அடியவர் :-  அதாவது இன்னைக்கு நிறைய பேர் ஜாதகங்கள் பின்னுகிட்டு தான் ஓடிக்கிட்டு இருக்காங்களாம். தர்மமே செய்யாம எவ்வளவு சொன்னாலும், தர்மம் இல்லாம ஜாதகம் பார்த்துட்டு இருக்கலாம். ஆனா யாராச்சும் ஜாதகம் பார்க்க போனா, முதல் கேட்கட்டும், நீ தர்மம் செஞ்சிருக்கியா? தர்மம் செஞ்சா, ஜாதகமே தேவையில்லைங்கிறார்.

குருநாதர் :- அப்பனே, பின் முதலில் அப்பனே, ஜாதகம் பார்ப்பவர்கள், அப்பனே, பின் அதாவது வந்திருப்பவனை, நீ தர்மம் பின் செய்திருக்கின்றாயா என்று கேட்டால், அவன் ஆம் என்று சொல்லிவிட்டால், அப்பனே, அவனுக்கும் புண்ணியம். அப்பனே, கேட்டானே (ஜோதிடன்), இவனுக்கும் மிகவும் புண்ணியம் கிடைக்கும் அப்பா. நீரோடி  வாழும் அப்பா, (ஜோதிடன்) குடும்பம்.  அதை கேட்பதில்லை யாரும்.

அடியவர் :- யாராவது ஒருத்தர் வந்து ஜாதகம் பார்க்க வரும் பொழுது, நீ தர்மம் சரியான்னு கேட்டுட்டா, அவன் ஆமான்னு சொல்லிட்டாருன்னு சொன்னா, கேட்டவருக்கும் பல புண்ணியமாகும். பல புண்ணியமா சொன்னவருக்கும் புண்ணியமா? ஆமா, அவருக்கும் மட்டும் அவங்க குடும்பத்துக்குமே புண்ணியம்ங்கிறார். ஆனா யாருமே கேக்குறது இல்லையாம்.

குருநாதர் :- அப்பனே, இதனால்தான் அடிப்படை தத்துவம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வாழ்க்கையை பின் மாற்றி, அப்பனே, போகும் என்பேன்  அப்பனே. இதனால் அடிப்படை தத்துவத்தில் தான் இன்னும் உங்களுக்கு எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றேன்.

அடியவர் :- இதனாலதான் அகத்தியர் அப்பா என்ன அடிப்படை தத்துவத்தை நமக்கு சொல்லிக் கொடுத்திருக்கார். அடிப்படை தத்துவம் என்ற தர்மம் சரியா இருந்தா தான் வாழ்க்கையில் அடுத்தடுத்த நிலைகளுக்கு நம்ம போகலாங்கிறார்.

குருநாதர் :- அப்பனே, மறைமுகமாக, அப்பனே, அனைத்தும் சொல்வார்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- அப்பனே, கீழே கற்களை நன்றாக கட்டினால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் மேல் எழும்பும் போது அது நன்றாக இருக்கும். ஆனாலும் கீழேயே சரியாக கட்டவில்லை. மேல் கட்டிவிடுவார்களா என்ன?......  விழுந்து விடுமப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பேஸ்மென்ட் என்ன சொல்றார் தெரியலையா?

அடியவர் :- அதாவது கீழ பேஸ்மென்ட் நல்லா இருக்கணுங்கிறாரு. அப்பதான் அவர் கட்டடம் நல்லா இருக்கும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா இன்றளவு என்ன பண்ணாரு? பேஸ்மென்ட் சரியில்ல. மேல கட்டிடும்போது, என்ன பண்ணும்போது அது என்ன ஆகுது?

அடியவர் :- உடைஞ்சு விழுந்துருது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மனுஷனோட லைஃப் சல்லுன்னு கிழே போறான். என்ன ஆயிருச்சாம்? பேஸ்மென்ட் சரியா போடாம டக்குனு போறான். மேல என்ன ஆச்சு? அது வந்து 

அடியவர் :- உடைஞ்சு விழுந்துரும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  உடைஞ்சு விழுந்துருதப்பா. 

குருநாதர் :- அப்பனே, இதைக் கண்டு கண்டு, சலிப்புற்றோம் நாங்கள்.

அடியவர் :-  இதை பார்த்து பார்த்து சித்தர்களுக்கு சலிப்பே வந்துச்சாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்னடா இது? அடிப்படை தத்துவமே புரியல. மனுஷனுக்கு.

அடியவர் :- மனுஷனுக்கு அடிப்படையே தெரியாம இருக்கானே? அப்படின்னு.

குருநாதர் :- அப்பனே, ஆனாலும் எழுதி வைத்தார்கள். அவையெல்லாம், அப்பனே, நிச்சயம் பெரிய பெரிய அரசர்கள் பயன்படுத்திக்கொண்டு, அப்பனே, அவை எரித்தும் விட்டனர் அப்பனே, சுவடியை 

அடியவர் :- நிறைய ரகசியங்கள் எழுதி வச்சிருக்காங்க. அரசர்கள் பயன்படுத்திட்டு என்ன செஞ்சாங்க? அந்த சுவடிகள் எல்லாம் எரிச்சிட்டாங்களாம். எரிச்சிட்டாங்க. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவையெல்லாம் நிச்சயம் கலியுகத்தில் யாங்கள் சொல்லப் போகின்றோம் அப்பனே. நீங்களும் தலை நிமிர்ந்து வாழுங்கள். அனைத்தும் பெறுங்கள். 

அடியவர் :- எல்லா ரகசியமும் கலியுகத்தில் வெளி வரப்போகுது. இதை தெரிஞ்சுக்கிட்டு நீங்களும் தலை நிமிர்ந்து வாழுங்க, அப்படிங்கிறாங்க சித்தர்கள். 

குருநாதர் :- அப்பனே, என்னென்ன சித்து? அப்பனே, நிச்சயம் பின் அதாவது ஒரு சித்தன், அப்பனே, என்னென்ன சித்துக்கள் செய்தான் என்பதை எல்லாம், அப்பனே, அடிப்படை தத்துவங்கள், அப்பனே, சொல்லி இன்பு யாங்கள் செப்புவோம். அப்பனே, அப்பொழுது உங்களுக்கு அனைத்தும் புரிந்துவிடும். நீங்களும் சித்துக்கள் விளையாடலாம். 

அடியவர் :- சித்தர்கள் என்ன சித்துக்கள் செஞ்சாங்களோ, அதெல்லாம் உங்களுக்கு சொல்றேன், அப்படிங்கிறாரு. இந்த அடிப்படை விஷயம் விளங்கிருச்சுன்னா, நீங்களும் ஒரு காலத்துல சித்தர்கள் மாதிரி சித்துக்கள் செய்யலாம்னு சொல்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்களும் சித்துக்கள் செய்யலாம். 

குருநாதர் :- அப்பனே, மனிதனிடத்தில் அனைத்து திறமையும் இருக்கின்றது என்பேன், அப்பனே. ஆனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட மனிதன் எதற்கும் பயன்படாமல் கடைசியில் சென்று விடுகின்றான். எரித்து விடுகிறார்கள், அப்பா.

அடியவர் :- எல்லா இருந்தும் மனுஷன் என்ன செய்றான்? ஒண்ணுமே பயன்படுத்தாம கடைசில இறந்தும் போயிட்டு அவனை எரிச்சியும் போட்டுறாங்க. அதனால பயன்படுத்திக்கோங்க, அப்படிங்கிறாரு.

===========================
# மீண்டும் அன்னை கண்ணகியின்  காவியம் 
===========================

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் மீண்டும், அப்பனே, அதாவது நிச்சயம் பின், அதாவது யானை, அப்பனே, நிச்சயம் தன்னில் அழகாக பேசியது. நிச்சயம் தன்னில். அதனால் எவை என்று புரிய. அதாவது நிச்சயம் பின் உனக்கு சொல்கின்றேன், எதை என்று புரிய. முருகன் அனைத்தும் நிச்சயம் தன்னில் கொடுப்பான். அங்கு உன்னை விட்டு விடுகின்றேன், பின் வருவாயா என்று. 


அடியவர் :- யானை பேசியது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ம் யானை ஆமா சொல்லுங்க, சொல்லுங்க. 

அடியவர் :- யானை பேசுது. அதாவது முருகன் இருக்கிற இடத்துல நான் உன்னை விட்டுருவேன். விட்டுட்டா நீ திரும்ப வருவியா? ஐயா, திரும்ப வருவியான்னு கேக்குது இல்லையா? அது 

சுவடி ஓதும் மைந்தன் :-   இல்ல இல்ல, அவங்க வந்துட்டாங்க. வந்து கண்ணுக்கு வந்து எல்லாம் தெரிஞ்ச சரி யாரும் இல்லைன்னு நீ சொல்ற. நான் முருகர் ஒரு இடத்துல இருக்குறாரு. வந்து நான் அங்க போய் கொண்டு விட்டுறேன். நீ எப்படியாவது பொழைச்சுக்கோ. யார் சொல்றாரு? 

அடியவர் :- அது யானை சொல்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   யானை சொல்லுது. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உங்களிடையே, அப்பனே, பல ஆற்றல்கள் இருந்தால், அப்பனே, நிச்சயம், அப்பனே, வாய் உள்ள ஜீவராசிகளும் தானாக பேசும் என்பேன், அப்பனே. நிச்சயம் இவையெல்லாம் உண்மை. 

அடியவர் :-  நம்மகிட்ட ஆற்றல் இருந்தா, வாயில்லாத ஜீவராசிகள் பேசுறதையும் நம்மளுக்கு புரிஞ்சுக்க முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   புரிஞ்சுக்க முடியும்.  நீங்கள் பேசுறதும் அதுக்கு புரியும். அவை பேசுறதுக்கும் உங்களுக்கு புரியும். உங்களுக்கு?

அடியவர் :-  புரியுங்கிறார். 

சுவடி ஓதும் மைந்தன் :- புரியும்ன்றார். 

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய, இதனால் நிச்சயம் கண்ணகியும் நிச்சயம் எவை என்று புரிய. அதனால் எவை என்று அறிய, எதை, எதை, எப்பொழுது, என்னவென்று. 

குருநாதர் :-  இதனால் நிச்சயம் பின், அதாவது அழைத்துச் செல் என்று நிச்சயம். 

குருநாதர் :-  அதாவது மனிதன் தான் உதவி செய்யவில்லை. நீ பின் எவை என்று கூற, பின், அதாவது உதவி செய்கின்றாயே, பின் போதும் எனக்கு என்று. 

அடியவர் :- அதாவது கண்ணகி சொல்றாங்க, மனுஷங்க தான் எனக்கு உதவி செய்யல. நீ சரி, உதவி செய்ன்னு யானைகிட்ட சொல்றாங்க. சரி, நீ முருகன் இருக்கிற இடத்துக்கு என்னை கூட்டிட்டு போ, அப்படின்னு. 

குருநாதர் :- இதனால் நிச்சயம் தன்னில் கூட தர்மமோடு வாழ்ந்தால், நிச்சயம், நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் எவை என்று புரிய பின், அதாவது வாய்  உள்ள பெண் ஜீவராசிகளும் உங்களுக்கு நிச்சயம் உதவிகள் புரியும். நிச்சயங்கள் உதவிகள் புரியும். 

அடியவர் :-  தர்மத்தோடு நம்ம வாழும் பொழுது, வாயில்லாத ஜீவராசிகளும் என்ன செய்தான்? நம்மளுக்கு உதவி செய்தான். 

குருநாதர் :- அப்பனே, பின் நாய் எவை என்று அறிய. பின், நிச்சயம் தன்னில் கூட நாய் போல், அப்பனே, திரிந்து தர்மம் செய்ய வேண்டும். அப்பனே, 

அடியவர் :-  எப்படி சொல்றான்னா, நாய் போல் திரிந்து தர்மம் செய்ய வேண்டும்ங்கிறாரு. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் அதற்கு மதிப்பு தர வேண்டும். பைரவர் என்றே சொல்ல வேண்டும். 

அடியவர் :-  அதுக்கு மதிப்பு தர சொல்றாரு. பைரவர்னே சொல்ல சொல்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   பைரவர் என்றே சொல்ல வேண்டும்ன்றார். 

குருநாதர் :- ஏனென்றால் அப்பனே, நிச்சயம் பின் எதையாவது, அப்பனே, பின் போடுவார்களா என்று காத்துக் கொண்டிருக்கும். 

குருநாதர் :-  மனிதன், அதுபோல், நிச்சயம் தன்னில் எதை என்று இறைவன் ஏதாவது, பின் எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட நல்லது ஏது என்று புரிய, நிச்சயம் பின் சொல்லித் தருவானா என்று மக்கள் ஏங்கிக் கொண்டிருக்க வேண்டும். 

அடியவர் :- அதாவது எப்படி நம்ம பைரவர் வந்து பார்த்துட்டு இருப்பாரு,யாராச்சும் போடுவாங்களான்னு….. அது மாதிரி மக்கள் என்ன செய்யணும்? ஏங்கி பார்த்துட்டு இருக்கணுமாம். இறைவன் கிட்ட… 

சுவடி ஓதும் மைந்தன் :-   ம்…. எப்போது இறைவன் நமக்கு அருள் புரிவார் என்று ஏங்கி கொண்டிருக்க வேண்டும்.

===========================
# எந்த நேரத்திலும் தர்மம் செய்ய தயாராக இருங்கள் 
===========================

குருநாதர் :- அதோடு, பின் நிச்சயம் தர்மத்தை, பின் கடைபிடித்து, அப்பனே, பின் எப்பொழுது தர்மம் செய்ய, பின் நேரம் வந்து கொண்டே இருக்கின்றது என்று.. பின் நேரம், பின் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 

அடியவர் :- நம்ம தர்மம் செஞ்சுட்டோம்னா, தர்மம் செய்ய நேரத்தை பார்த்துக்கிட்டே இருக்கணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால காத்து நிக்கணும். தர்மத்தை செய்யணும். 

அடியவர் :- அது எப்ப தர்மம் செய்ய நேரம் வரும்னு தெரியாது. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தர்மம் என்ற பாடம் மிக மிகப் பெரியது என்பேன்  அப்பனே.  அவையெல்லாம், அப்பனே, பின் நிச்சயம், பின் கூறுவேன் என்பேன்  அப்பனே.  கவலைகள் வேண்டாம் என்பேன்  அப்பனே. 

அடியவர் :- தர்மம் என்கிற பாடம்தான் மிகப்பெருசுங்கிறாரு. அதை பத்தி மேலும் மேலும் அகத்தியர் அப்பா வரும் வாக்கில் சொல்றேன், அப்படிங்கிறாரு. 

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய  இதனால் நிச்சயம் தன்னில் கூட மண்டியிட்டது யானை கூட. ஆனால் மனிதன் இன்று என்னவோ, பின் யானையை பார்த்து பயந்து ஓடிவிடுகின்றான். ஆனால் நிச்சயம் தன்னில் கூட மண்டியிட்டது கண்ணகியை பார்த்து. 

அடியவர் :-  இன்னைக்கு மனுஷன் என்ன செய்றான்? யானையை கண்டா பயந்து ஓடுறான். ஆனா யானை வந்து அன்னைக்கு என்ன செஞ்சுது?. கண்ணகியை பார்த்து அது மண்டியிட்டு உட்கார்ந்துச்சாம். 

குருநாதர் :- எதை என்று அறிய ஏனென்றால் தர்மங்கள் நல்ல எண்ணங்கள். நிச்சயம் தன்னில் கூட தர்மத்தோடு பின் வாழ்ந்தவள். இதனால்தான் பின் மண்டியிட்டது யானையும் கூட. 

அடியவர் :- அதாவது கண்ணகி அம்மா ,  நல்ல எண்ணங்களோடு தர்மத்தோடு வாழ்ந்தனாலதான் யானை என்ன செஞ்சுச்சாம்? அவள் கண்ணகி அம்மாவை கண்ட உடனே மண்டியிட்டுச்சாம். 

===========================
# பின் வரும் வாக்கை மட்டும் பல முறை மீண்டும், மீண்டும் படிக்கவும் 
===========================

குருநாதர் :- அதேபோல் சொல்கின்றேன் மறைமுகமாக. 

நீங்களும் தர்மத்தோடு, தர்ம சிந்தனையோடு வாழ்ந்தால், இறைவனும் நிச்சயம் மண்டியிடுவான். 

இப்படி ஒரு பிள்ளையா??? யாம் இவ் பூலோகத்திற்கு அனுப்பினோமே? 

இப்படியா என்ற ஒரு பிள்ளை????? என்று ஆனந்த கண்ணீர் விடுவான். 

அதைத்தான் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். 


அடியவர் :- முருகா !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

அடியவர் :-  பாருங்க, எவ்வளவு பெரிய விஷயம் சொல்றாருன்னு. 

தர்மத்தோடு நாங்க வாழ்ந்தா, இறைவனே எங்களுக்கு மண்டியிடுவாராம். இறைவன் பார்ப்பாராம்

இப்படி ஒரு பிள்ளையா ????????????

இப்படி ஒரு பிள்ளையா ????????????

சுவடி ஓதும் மைந்தன் :- இப்படி ஒரு பிள்ளையை அனுப்பிச்சுக்கிறீங்களா? அடடா, தர்மத்தை இப்படி தொண்டு செய்கின்றான் என்று , இறைவன் என்ன பண்ணுவாரு? 

அடியவர் :-  அவரே மண்டியிடுவார். அவரே மண்டியிட்டு…. 

குருநாதர் :- நிச்சயம் அனைத்தும் கொடுத்து விடுவான். நீ என்னவாகவோ பின் நினைக்கின்றாயோ, அதுவாகவே ஆகு என்று. அப்பனே, உயர்ந்து விடலாம் என்று. 

அடியவர் :-   நம்ம அந்த நேரம் என்ன கேட்டாலும் கொடுப்பாராம். நீ என்ன ஆகணும்னு நினைக்கிறியோ, அப்படி ஆகு. நீ உயர்ந்த நிலைக்கு போன்னு வரம் கொடுப்பாராம். 

சுவடி ஓதும் மைந்தன் :- வரம் கொடுப்பாராம். 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இதனால்தான், அப்பனே, நிச்சயம் இங்கு உயர்ந்தவர்கள் எவை என்று அறிய , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம் தர்மம் ஏது என்று இன்னும், அப்பனே, சொல்கின்றேன். அப்பனே, பல விஷயங்கள். 

குருநாதர் :- ஏனென்றால் சில சில விஷயங்களில் மனிதனுக்கு சந்தேகங்கள் வந்துவிடும். அப்பா, அதனால, அப்பனே, அனைத்தும் பின் அடிப்படை தத்துவங்கள் கூறிக்கொண்டால், அப்பனே, நிச்சயம் பேசவே  முடியாது. அப்பா, அவனால் 

அடியவர் :- மனுஷனுக்கு நிறைய சந்தேகம் வருமாம். அதனாலதான் முதல் அடிப்படையிலிருந்து ஆரம்பிச்சிருக்காராம். அடிப்படையை சொல்லிட்டா, மனிதனுக்கு அதுக்கு பிறகு 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேள்வியே கேட்க தெரியாது. 

அடியவர் :- கேட்க தெரியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கேள்வியை கேட்க முடியாது. 

அடியவர் :-  கேட்க முடியாது. ம் 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட கேள்விகள் ஏன் வருகின்றது என்றால், அப்பனே, பின் தெரியாமல் தவிக்கின்றான். அதனால்தான் கேள்வியே  கேட்கின்றான். 

அடியவர் :- ஒரு மனுஷன் தெரியாமல் தவிக்கும் போதுதான் கேள்விகள் வருது. அப்ப அடிப்படை தெரிஞ்சுட்டா, கேள்விகள், கேள்விகள் இருக்காது. வராது. 

குருநாதர் :- அப்பனே, இறைவனை எப்படி காணலாம்??? 

எங்கு காணலாம்?? 

என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, பின் உண்மையாக இறைபக்தி இருந்தால், அப்பனே, இறைவன் உன்னை அழைத்துச் செல்வான் அப்பா. 

நீ போகத் தேவையில்லை அப்பனே. 

அடியவர் :-  அதாவது உண்மையான பக்தி இருந்தா, நம்ம இறைவனை தேடி போறது இல்லை. இறைவனே வந்து என்ன செய்வாரு? அவர்ட்ட இடத்துக்கு வந்து அழைச்சு செல்வாங்க. 

குருநாதர் :- அப்பனே, மண்டியிட்டது யானை. அப்பனே, நிச்சயம் பின், அப்பனே, நிச்சயம் பல அப்பனே, கண்களில், அப்பனே, பின் தண்ணீர். அப்பனே, பெருக்கெடுத்து ஓடியது பின், அப்பனே, கண்ணகிக்கு, 

அடியவர் :-   அதாவது யானை மண்டியிட்டதை பார்த்து, கண்ணகிக்கு கண்ணீர் பெருக்கெடுத்து ஓடிச்சாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பூஜை பண்றாங்களா? 

அடியவர் :- ஆமா, ஐயா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  பூஜை நேரம் வந்துருச்சா? 

அடியவர் :- இன்னொரு பைவ் மினிட்ஸ்ல. 

குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற. பின், அதாவது, நிச்சயம் யானையும் கூட, நிச்சயம் தன்னில் கண்களில், பின் பல பல எவை என்று ஒரு கண்ணீர். பின் எவை என்று புரிய. பின் யானையை பார்த்து, நிச்சயம் கண்ணகியும், கண்ணகி எவை என்று, எது என்று புரிய. பின் இருவரும் பார்த்து பார்த்து அழுது கொண்டனர். 

அடியவர் :- கண்ணகியும் அழுவுறாங்களாம்.  யானையும் அழுவுதாம். ரெண்டு பேரும் மாறி மாறி அழுவுறாங்களாம். 

குருநாதர் :- அப்பனே, ஏன் இது? நீங்கள் நிச்சயம் சொல்ல வேண்டும். இங்கு, அப்பனே, நிச்சயம், அப்பனே, எவ்வாறு உங்களுக்கு புரிகின்றது? அதாவது, புரிந்திருப்பது என்பதை நான் பார்ப்பேன். இப்பொழுது, 

அடியவர் :- இப்ப நீங்க சொல்லுங்க, ஏன் ரெண்டு பேரும் மாறி மாறி அழுதுகிட்டாங்க? உங்களுக்கு என்ன புரிஞ்சுச்சுன்னு, அப்பா, கேக்குறேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க என்ன புரிஞ்சுக்கிறீங்கப்பா? இதுவரைக்கும் நான் தர்மத்தை பத்தி சொன்னேன். எப்படி நீங்க வந்து என்ன புரிஞ்சுக்கிறீங்க? சொல்லலாம். வந்து இந்தாங்க, மைக் பிடிங்க. வாங்க, மைக்ல சொல்லுங்க. 

அடியவர் 3 :- கண்ணகி வந்து தர்மத்தை கடைபிடிச்சு வாழ்ந்து வரா. அவளுக்கு வந்து ஏன் இந்த இல்லாம வந்தேன்னு சொல்லி யானை அழுகுது. இறக்கப்பட்டு, அப்ப கண்ணகி வந்து ஏன் அழுகுறாங்கன்னா, ஒரு அஞ்சறிவுல ஜீவனே வந்து எனக்காண்டி அழுகுது. இந்த மனுஷங்க வந்து இப்படி ஆறு ரூபங்கள்ல இப்படி செய்தாங்களே என்று கண்ணகி அழுகுறாங்க. 

( இவ் அடியவர் தொலைவில் இருந்து விளக்கினார்…அதனால் …)

குருநாதர் :- அப்பனே, பலமாக இங்கு அனைவருக்கும் வந்து உரைத்திடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் புரியும்படி விளக்குப்பான்றார். 

அடியவர் 3 :-  இதுல கண்ணகியை பார்த்து யானை ஏன் அழுதது என்று சொன்னா, இப்ப கண்ணகி வந்து முற்றுமுழுதாக தர்மக் கொள்கையோட வாழ்ந்த ஒரு பத்தினி. இந்த பத்தினிக்கே இப்படி ஒரு நிலைமை வந்துச்சான்னு சொல்லி யானை வந்து பார்த்து அழுகுது. இதே நேரம், இந்த கண்ணகி,  யானையை பார்த்து அழுகுறதுக்கு காரணம் என்னன்னா, இந்த ஆறறிவுள்ள மனுஷரே வந்து தன்னுக்கு வந்து இப்படி துரோகங்கள் எல்லாம் செஞ்சுட்டாங்க. ஆனா இந்த அஞ்சறிவுள்ள ஜீவன் வந்து எனக்காண்டி வந்து இவ்வளவு பரிதாபப்படுதே என்று சொல்லி கண்ணகி அழுகுறாங்க. 

குருநாதர் :- அப்பனே, எதை என்று அறிய, இவ்வளவு அறிவுகள் வந்துவிட்டது. இவனுக்கு, அப்பனே, நிச்சயம் பின். 

சுவடி ஓதும் மைந்தன் :- இவ்வளவு அறிவு உனக்கு எங்கிருந்து வந்ததுன்னு கேக்குறாங்க. 

குருநாதர் :- அப்பனே, எது என்று அப்பனே….

ஆலய அர்ச்சகர் :-  ( பூஜை ஆரம்பமானது ….ஓங்கி ஒலித்தது ஆலய மணி அங்கு முருகப்பெருமான் அருளாசியுடன் …….)

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்,  கலியுகத்தில் முதல் முறையாக,  திருத்தி எழுதப்படும்,  உலகம் அறியாத, மகிமை புகழ்,  கற்புக்கரசி,  அன்னை கண்ணகி தேவி  காவிய வாக்குகள் தொடரும் …..) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!