​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 10 September 2026

சித்தன் அருள் - 2303 - அன்புடன் அகத்தியர் - 02/08/2026 திருவண்ணாமலை கூட்டு பிரார்த்தனை - பாகம் - 6



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 6

நாள், நேரம்  : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.  

இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://youtu.be/npiKG6l6z6o


===========================
#   அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
===========================

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நல்விதமாகவே ஆசிகள். 


( பகுதி 5  தொடர்ச்சியாக…… )


பகுதி 6  வாக்கின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=22686 

( இப்போது திரிசூல பூசை வாக்கு ஒன்று உரைத்தார்கள்..அதனை ஏற்கனவே பிணவரும் பதிவில் அடியவர்கள் பூசை செய்வதற்க்காக கீழே இட்டுள்ளோம் ….) 

சித்தன் அருள் - 2266 - அன்புடன் அகத்தியர் - திரிசூல பூஜை வாக்கு!
https://siththanarul.blogspot.com/2026/08/2266.html 

( அடியவர்கள் மேலே உள்ள திரிசூல வாக்கினை படித்து பின்னர் இவ் பகுதி வாக்கினை தொடர நல் புரிதல் உண்டாகும் என்று அறிய தருகின்றோம். ) 

===========================
#   ஆடி மாதத்தில் இருந்து அதிகரிக்கும் சிவப்பு கதிர்கள் , கார்த்திகை, மார்கழி மாதத்தில் 100% எட்டிவிடும். இதனால் அழிவுகள் பல… 
===========================


நேரலை :-  https://youtu.be/npiKG6l6z6o?t=22686 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் டிசம்பர்லயும், நவம்பர்லயும், ஜனவரிலயும் அதிகமா பாதிப்பு வருது? ஐயா, சொல்லுங்க ஐயா, கொஞ்சம். எனக்கு டயர்ட் ஆயிடுச்சு. 


அடியவர் :- அம்மா சொல்லுங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, சொல்லுங்க.


ஒரு அடியவர் :- ( ஆடி ) இப்போ வந்து, ஆரம்பிச்சு, மார்கழி வரும்போது 100 % வந்துரும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  வந்துரும். கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா. ( நீண்ட நேரம் வாக்குகள் படித்ததால் களைப்படைந்து விட்டார்கள் ) 


அடியவர் 2:- அதாவது இந்த சிவப்பு நிறம் வந்து, ஆடி மாசத்துல இருந்து தொடங்கி தை மாசம் வரைக்கும் வந்து அதிகமா இருக்கும். அதுல மார்கழி மாசம் வந்து 100% வந்து சிவப்பு நிறம் மட்டுமே இருக்கும். அதனால தான் வந்து இந்த தொந்தரவுகள் வந்து அதிகமா இருக்குது. மார்கழி மாசத்துல இந்த சிவப்பு நிறத்தோட தாக்கம் வந்து 100% இருக்கும், அப்படின்னு சொல்லி சொல்றாங்க. 


===========================
#   ஏன் ஆடி மாதத்தில் அம்பாளை மனம் குளிரவைக்க வேண்டும் ?
===========================
குருநாதர் :- இதனால்தான் அன்னையவள் இவ் ஆடி மாதத்தில் எதை என்று கூற, அறிய நிச்சயம் தன்னில் சூலாயுதத்தை எவை என்று கூறப்பின், அதாவது அம்மை, அம்மையவளை பரிபூரணமாக மனம் பின் குளிர வைத்தால் நிச்சயம் சூலத்தோடு நிச்சயம் பின்  எதை என்று கூறப்பின், அனைத்தையும் அழிப்பாள் என்பது ஒரு எவை என்று கூறப்பின், நிச்சயம் ஏற்படுத்தப்பட்டதே எவை என்று கூறப்பின், காலங்கள் காலங்களாக. 


அடியவர் :- ஆடி மாத ரகசியத்தை சொல்றாங்க. எதுக்காக வந்து ஆடி மாசத்துல அம்மனை வணங்குறோம். அம்மனை வந்து சந்தோஷப்படுத்தணும், குளிர வைக்கணும். குளிர வைக்கிறப்போ இந்த சிகப்பு நிற ஆற்றலை வந்து அவங்க அழிப்பாங்க, அப்படின்னு சொல்றாங்க ஐயா. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா ஐயா? 


===========================
#   அவசியம் இவ் வாக்கினை பல மக்களுக்கு தெரிவியுங்கள்.
===========================
#   உங்கள் புண்ணியங்கள் ஓங்குக…
===========================


இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=22763 


குருநாதர் :-  இதைத்தான், எவ்வாறாக, இதனால் மனிதன் தெரிந்து கொண்டதே இல்லை. 


குருநாதர் :-  நிச்சயம் தெரிந்து கொண்டு, இன்னும் பின், இன்னும் பின் பல மக்களுக்கு எவை என்று கூற, அது எதை என்று கூறப்பின், தெரிவித்தாலே உங்களுக்கும் புண்ணியம் சாரும். 


குருநாதர் :-  எவை என்று கூறப்பின், ஏது என்று கூறப்பின், அதாவது புண்ணியங்கள் எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, அதாவது மேலிருந்து இழுக்க வேண்டும். 


குருநாதர் :-  எவ்வாறு பின், அதாவது நல்லதே சொன்னால், எவை என்று கூற, இறைபலத்தில் சித்தர்கள் எடுத்துச் சொல்வதையும், எவை என்று கூறப்பின், இறை, எவை என்று பல இதிகாசங்களையும், பல பல வழிகளோடும் மனிதனுக்கு தெரிவிப்பதே, அதுவும் ஒரு புண்ணியமே. 


அடியவர் 2 :- அதாவது எவ்வளவுக்கு எவ்வளவு வந்து நல்லதை எடுத்துச் சொல்றோமோ, இறைவனைப் பற்றி எடுத்துச் சொல்றோமோ, சித்தர்கள் சொன்னதை எடுத்துச் சொல்றோமோ, இதிகாசங்களை எடுத்துச் சொல்றோமோ, நமக்கு ரொம்ப நல்லது. சோ, நல்லதை சொல்ல சொல்ல, நமக்கு நல்லது. 


சுவடி ஓதும் மைந்தன் :- ம்…..


===========================
#   ஏன் நல்லவையே நடக்கவில்லை கலியுகத்தில்?
===========================


குருநாதர் :-  அதேபோல், தீயவை சொல்ல சொல்ல, நிச்சயம் தன்னில் கூட உங்களுக்கு தீயதா தான் நடக்கும். இதனால் மனிதன் நிச்சயம் தன்னில் கூட பக்தியை கற்றுக்கொண்டு, அனைவருக்கும் தீயவையை செப்பிக்கொண்டிருக்கின்றான். இதனால்தான் தீயவையே நடந்து கொண்டிருக்கின்றது. நல்லவையே நடக்கவில்லை கலியுகத்தில். 


அடியவர் 2 :-  அதாவது கெட்டதையே பேசிட்டு இருந்தா, கெட்டது தான் அதிகமா நடக்கும். அது பக்தியில இருந்து கொண்டு, கெட்டதை அதிகமா பேசும்போது.


சுவடி ஓதும் மைந்தன் :-  கெட்டதாவே சொல்லிக்கிறான் மனுஷனுக்கு வந்து, அது இது நடக்கும், இது நடக்கும்னு சொல்லிட்டு. அதனால என்ன ஆகும் வந்து, அதனால்தான் மனுஷனுக்கு வந்து பக்தியில வந்தா.


அடியவர் 2 :- கெட்டது அதிகமா நடக்குது.


சுவடி ஓதும் மைந்தன் :-  கெட்டது அதிகமா நடக்குது. நல்லதே?


அடியவர் 2 :- நடக்கிறது இல்ல.


சுவடி ஓதும் மைந்தன் :-  நடக்கிறது இல்ல. ஏன்னா நல்லதை?


அடியவர் 2 :- அவன் பேசுறது இல்ல. அவன்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லிக் கொடுக்கிறது இல்லை. அம்மா, புரியுதுங்களா? ஐயா, புரியுதுங்களா ஐயா? 


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, கலியுகத்திலே அப்பனே, பின் ஏதோ அப்பனே தெரியாமல் வந்துவிட்டீர்கள் என்பேன்  அப்பனே. அனைத்தும் சொல்லித் தருகின்றேன் அப்பனே. 


===========================
#   அகத்திய மாமுனிவர் பக்தன் எப்படி இருக்க வேண்டும் ?
===========================


குருநாதர் :-  மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே. என் பக்தன் அப்பனே, அதாவது அகத்தியன் என்று சொல்லிவிட்டால், முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற வேண்டும். கடைசியாக இருக்கக்கூடாது என்பேன் அப்பனே. அது எனக்கே பின் எவை என்று கூறப்பின், ஏது என்று கூற , அசிங்கம் அப்பா.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அரங்கமே அதிரும் வண்ணம் பலத்த கை தட்டல்கள் )


சுவடி ஓதும் மைந்தன் :-  என்னை அகத்தியன் எண்டு சொல்லிட்டாருன்னா, முதல் வகுப்புல இருக்கணும். ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்கணும். கடைசி ரேங்க் எடுத்தா என்னைக்கு அசிங்கம்எண்றாரு அகத்தியர் வந்து. எவ்வளவு பேரு இது தெரியுங்களா? ஐயா, புரியுதுங்களா? 


குருநாதர் :-  அப்பனே, இதனால்தான் அப்பனே, இப்பொழுதெல்லாம் அப்பனே, என்னை வைத்துக்கொண்டு, எதை எதையோ செய்து, அப்பனே, கடைசியில் தான் இருக்கின்றான் மனிதன் என்பேன் அப்பனே. எப்படி அப்பா?  ஈசனிடத்தில் யான் தலை  குனிய வேண்டியதாக இருக்கின்றது.


அடியவர் :-  ஆமா. இந்த அறிவை கொடுத்த அகத்தியரே வந்து, நம்ம சரியா புரிஞ்சுக்காம, இப்படி பண்ணி, அவருக்கு தலை குனி ஏற்படுத்துறோம். ஈசன் கிட்ட தலை குனிஞ்சிட்டு இருக்கிறார் .


குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதனால், அப்பனே, எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் அதனால், நீங்கள் அப்பனே, சரியாக இருந்தால், நாங்கள் வருவோம் என்பேன் அப்பனே. எனை பின் எதை என்று கூற, அழைக்க கூட தேவையில்லை என்பேன் அப்பனே.


அடியவர் :-   நீங்கள் சரியாக, நீங்கள் சரியானா என்ன?  எண்ணங்களை சுத்தமா வைங்க. வச்சா, நீங்க தேடி போக வேண்டாம். நாங்களே உங்களை தேடி வருவோம் பண்றாங்க.


குருநாதர் :-  அப்பனே, எதை என்று கூறப்பின், அனைத்து தெய்வங்களையும், அனைத்து ஆற்றல்களையும் நாங்கள் எடுத்து, எவை என்று கூறப்பின், உங்களிடத்தில் வந்து சேர்க்கின்றோம் என்போம் அப்பனே. 


***** அதாவது எங்களுக்கு தேவை கருணை, அன்பு. அப்பனே, பின் எவை என்று கூறப்பின், நேர்மை.  ***** 


*****  அப்பனே, அவை மட்டுமில்லாமல், தர்மத்தை காக்க, காத்திட வேண்டும் என்பேன் அப்பனே. ***** 


ஏனென்றால், தர்மம் தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. தலைகீழாக போகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எவை என்று புரிய  அப்பனே, பின் மனிதன் அழிந்து கொண்டே போவான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.  பின் அநியாயங்கள், அக்கிரமங்கள் தூக்கி நிற்கும் என்பேன் அப்பனே. அதனால்தான் என்பேன் அப்பனே. சொல்லிவிட்டேன் அப்பனே. 


*****  எங்களுக்கு தேவை தர்மமே. ***** 


அடியவர் :-   தர்மத்தை எல்லாரும் கடைபிடிக்கணும். நீங்க அதை கடைபிடிச்சு, நல்லெண்ணத்தோட வாழ்ந்து வந்தீங்கன்னா, எல்லா ஆற்றல்களையும் நாங்க உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கிறோம்ப்பா. நீ எந்த ஆலயத்துக்கும் போக வேணாம், எங்கும் பண்ண வேணாம். நீங்க உங்களை சுத்தப்படுத்திக்கிட்டீங்கன்னா, நாங்களே எல்லாத்தையும் கொண்டு வரோம்ன்றாங்க.


===========================
#   எப்போது உங்கள் இல்லம் ஆலயமாக மாறும் ?
===========================


குருநாதர் :-  அப்பனே, அவை மட்டுமில்லாமல், எதை என்று கூறப்பின், அகத்தியனுக்கு ஆலயம் கட்டவேண்டும் என்று எல்லாம் சொல்கின்றீர்கள் அப்பனே. யானே உன் இல்லத்தில் ஆலயமாக இருப்பேன் என்பேன் அப்பனே.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( அரங்கமே அதிரும் வண்ணம் பலத்த கை தட்டல்கள் )


அடியவர் :- சிவாய நம. ஒன்னும் ஒரு ஆணி புடுங்க வேணாம்ன்றாங்க. நானே உங்க வீட்டுல வந்து உட்கார்ந்துறேன்ப்பான்றாங்க. ஆணி அடிச்சு உட்கார்ந்துறேன்றாரு அகத்தியர்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, நீ எதுவுமே…..


அடியவர் :-  நல்ல எண்ணங்கள்.


சுவடி ஓதும் மைந்தன் :- நல்ல எண்ணங்கள்.


அடியவர் :-  தர்மம். இதுதான் பேசுறதே. நம்மளால செய்ய முடியாதா?


===========================
# பேய் =  உள்ளத்தில் ஒன்று வைத்துக்கொண்டு, வெளியில் வேறு சொல்பவர்கள்.  
===========================


குருநாதர் :-   அப்பனே, இதனால் நிச்சயம் தன்னில் கூட. மனிதன் எவை என்று அறிய அப்பனே. இதனால்தான் அப்பனே, பேய்கள் போல் ஆகிவிட்டான் என்பேன் அப்பனே. 


குருநாதர் :-   உள்ளத்தில் ஒன்று வைத்துக்கொண்டு, வெளியில் சொல்பவன், அவன் பேய் என்பேன் அப்பனே. மனிதன் இப்பொழுது பேய்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. அவ் பேய்கள் என்னவென்று கூறுவது என்றே தெரியவில்லை.


அடியவர் :-   சிவாய நம. அதாங்க எண்ணம், சொல், செயல் மூணும் ஒருங்கிணையணும்.


சுவடி ஓதும் மைந்தன் :- மனசுக்குள்ள ஒன்னு வச்சுக்கிட்டு.


அடியவர் :-   வெளியில ஒன்னு.


சுவடி ஓதும் மைந்தன் :- வெளியில பேசுறது தான் பேயா.


அடியவர் :-   ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, இன்றைய காலகட்டத்தில் அதிகமா யார் இருக்கிறாங்க வந்து.


அடியவர் :-   நிறைய பேய் இருக்கு அந்த மாதிரி.


சுவடி ஓதும் மைந்தன் :- பேய்கள் இருக்கிறாங்களாம். 


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறு பேசுபவனிடத்தில் பேசக்கூடாது என்பேன் அப்பனே. பாவம் வந்து சேர்ந்துவிடும் என்பேன் அப்பனே.


அடியவர் :-   பாருங்க, அடுத்த உண்மை. இந்த மாதிரி வந்து உள்ளுக்குள்ள வச்சு, ஒன்னு வச்சு, வெளியில வச்சு பேசுறவனை கண்டுபிடிச்சு.


சுவடி ஓதும் மைந்தன் :-  அவன் எல்லாம் பேயா.


அடியவர் :-   அவன்கிட்ட பேசாதீங்க. பேசினா உங்க உங்களுக்கு பாவம் வந்துரும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  உள்ளத்தில் வெளியே வந்து. 


அடியவர் :-   ஒதுங்கிருங்க.


===========================
# துஷ்டனை கண்டால் தூர விலகு
===========================
# அகத்திய மாமுனிவர் பெயர் சொல்லியே நடிக்கும் பேய்கள்.
===========================


குருநாதர் :-  அப்பனே, இதனாலே பின் எவை என்று கூறப்பின், ஔவையின்  பதில் அப்பனே, யாருக்கும் புரியவில்லையா என்பேன் அப்பனே. பின் யோசித்துப் பாருங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால்தான் அவ்வை என்ன சொல்லி இருக்காரு? 


அடியவர் :-   துஷ்டனை கண்டால் தூர விலகு. 


இதனிடையில் ஒரு அடியவர் :- ( ஆடியோ தடங்கல்கள்…) 


சுவடி ஓதும் மைந்தன் :-  அது வேணும். அதுக்கே எத்தனை மார்க்? 100 மார்க் பெருசா. அதனால வந்து அப்படி பேசுறவங்க யாரு? பேய்கள். உள்ளம் ஒன்னு வைத்து வெளியே பேசுறவங்க யாருங்க?


அடியவர் 2 :-   பேய், பேய்.


சுவடி ஓதும் மைந்தன் :-  பேய்கள்.


அடியவர் :-பேய்.


குருநாதர் :-  அப்பனே, அப்பேய்களுக்கு ஒன்றும் நடக்காதப்பா. அவ்வளவுதான்.


அடியவர் :- பேய் பேயாவே இருக்கணும். ஒன்னும் ஆகாது.


குருநாதர் :- அப்பனே, எதை என்று கூறப்பேய் என்றால் கொன்றுவிடும் என்கிறார்கள் என்பேன் அப்பனே. மனம் தான் அப்பனே, பேய் என்பேன் அப்பனே.


அடியவர் :- ஆமா, ஆமா.


சுவடி ஓதும் மைந்தன் :-  உடம்புல பயப்படுறாங்க வந்து. எது பேய்?


அடியவர் :- மனசுதான் பேய்.


சுவடி ஓதும் மைந்தன் :- மனசுதான் பேய்.


அடியவர் :- அந்த தீய எண்ணம் தான் பேய். பொறாமை. ஒரு மாதிரி மாத்தி மாத்தி பேசுறான் பாருங்க. அந்த எண்ணம் தான், அந்த எண்ண பேச்சுதான் பேய்.


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அதனால் உன்னை நீ மாற்றாமல் எதுவும் நடக்காதப்பா. அதனால்தான் அப்பனே, யாங்கள் மாற்ற வந்திருக்கின்றோம் என்பேன் அப்பனே. மாறினால் மாறுங்கள். இல்லை என்றால் அப்பனே, பின் அடி விழுந்து தான், பின் நிச்சயம் தன்னில் கூட, நாங்கள் மாறுவோம் என்றால், அதற்கும் தயார். அடி விழ.


அடியவர் :-  ஆமா. நாங்க எல்லாம் சாமதான பேத தண்டம். எல்லாத்துக்கும் ரெடியாக தான் வந்திருக்கிறோம் நாங்க. மாறினா மாறிருங்க. இல்லைன்னா அடி உதை தான்.


குருநாதர் :-  அப்பனே, இதனாலே அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மனிதனிடத்தில் பல குறைகள் அடங்கியுள்ளதப்பா. அவையெல்லாம் அப்பனே, வெளிச்சத்திற்கு கொண்டு வந்து, அப்பனே, உங்களை சீர்படுத்தி, உங்கள் குடும்பத்தில் நிம்மதியாக வாழ, எவை என்று அறிய அப்பனே, நாங்கள் அருள் புரிவோம் அப்பனே.


அடியவர் :-  பாருங்க, நமக்காக தான் போராடுறாங்க. நம்ம குடும்பத்துல நிம்மதி ஏற்படுத்துறதுக்கு, நான் பண்றேன்பா, உதவி பண்றேன்பான்றாங்க.


குருநாதர் :-  அப்பனே, இதனாலே அப்பனே, ஒவ்வொன்றாக உங்களுக்கு கொடுத்து, அப்பனே, மாற்றம் அடைய செய்கின்றோம் என்போம் அப்பனே. அவையும் கூட மனிதன் தடுப்பானப்பா. எவை என்று அறிய அப்பனே ஏன், எதற்கு என்றால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மனிதன் சொல்லிவிட்டேனே, பேய் என்று.


அடியவர் :-  அதான், இந்த பொறாமைக்கார மனிதர்கள் எல்லாம் வந்து. இதெல்லாம் தப்பா பேசுவாங்கன்றாங்க. தப்பா பேசுவாங்க. சூலம் வாங்கிட்டு போனியே. என்ன? என்ன பண்ண அதை வச்சு?


சுவடி ஓதும் மைந்தன் :- அவனை பேய் என்று கூறுவேன்.


அடியவர் :-  என்ன மாறிச்சு? வேல் வாங்கிட்டு போனியே. என்ன மாறிச்சு? 


https://youtu.be/npiKG6l6z6o?t=23125 


குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூற, ஏனென்றால், பேய்க்கு எவையும் தெரியாதப்பா. அவ்வளவுதான் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  ஒன்று, பின் அவன் எவை என்று புரிய, அப்பன் நிச்சயம் நல்லதும் சொல்ல மாட்டான். அப்பன் நிச்சயம் தன்னில் கூட கெடுத்துக் கொண்டிருப்பான் என்பேன் அப்பனே. அவன்தான் பேய் என்பேன் அப்பனே.


அடியவர் :-  நல்லது அவனால ஒன்னும் செய்ய முடியாது. கெட்டதை மட்டும் செஞ்சுட்டு இருப்பான். அவன்தான் பேய்.


சுவடி ஓதும் மைந்தன் :- பேய். 


குருநாதர் :-  அப்பனே, இதனால் எதை என்று புரியப்பின்  நிச்சயம் தன்னில் கூட. இதனால் பேய்க்கு பயப்படுகின்றீர்களா? இறைவனுக்கு பயப்படுகின்றீர்களா? நீங்கள்.


அடியவர் :-  முடிவு எடுத்துக்கோங்க. பேய்க்கு நீங்க பயப்படுறீங்களா? இறைவனுக்கு பயப்படுறீங்களா?


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. 


குருநாதர் :- இதனால் அப்பனே, என்னை வணங்கியே பல பேய்கள் இருக்கின்றதப்பா. எப்பொழுது அவர்களை நிச்சயம் அடித்து நொறுக்குவேன் என்றே அப்பனே. பின் யான் நொறுக்க மாட்டேன். ஈசனே பார்த்துக் கொள்வான் அப்பனே.


கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )


அடியவர் :-  பாருங்க, பாருங்க. அகத்தியர் பெயரை சொல்லிக்கிட்டு, அவர் பக்தன்னு பெயரை சொல்லிக்கிட்டே, நிறைய பேய் சுத்துதாம். அந்த பேய் நான் ஒன்னும் செய்ய மாட்டேன். ஈசன் பார்த்துட்டு இருக்கார். போட்டு தாக்க போறாரு.


குருநாதர் :- அப்பனே, அகத்தியன் என்று என்னை சொல்வது அப்பனே. நிச்சயம் அதாவது பேயை வணங்குவது என்பேன் அப்பனே. பேய் என்பது இங்கு மனிதனை யான் சொன்னேன்.


அடியவர் :-  சிவாய நம. அகத்தியர்னு பெயரை சொல்லிக்கிட்டு, மனுஷனை மனிதனும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வணங்குறானாம். இன்னொரு பேயை வணங்குறானாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  பேய் என்றால் யாரு? 


அடியவர் :-  மனிதன் தான். 
https://youtu.be/npiKG6l6z6o?t=23183 


குருநாதர் :-அப்பனே, இதனால் பின் எவை என்று புரியப்பின்  இதனால் பின் ஒன்றும் தெரியாதவனுக்கு எவை என்று புரியப்பின்  எவ்வளவு சொன்னாலும் அப்பனே, அதாவது ஒரு பழமொழி உண்டு என்பேன் அப்பனே. தூங்குபவனுக்கு அப்பனே, பின் எவை என்று கூறு பின்  தூங்குவது போல்   பின் நடிப்பவனுக்கு என்ன சொல்லலாம்?


அடியவர் :-  அதான், அதான், அதான். தூங்குறவனை எழுப்பிடலாம். தூங்குறவன் நடிப்பனை எழுப்ப முடியுமா?


குருநாதர் :- அப்பனே, இப்படித்தான் இருக்கின்றது உலகம் என்பேன் அப்பனே.


அடியவர் :- இந்த உலகமே, மொத்த உலகமும் அப்படித்தான் இருக்குன்றாங்க.


குருநாதர் :-  அப்பனே, அப்பொழுது எப்படி நடக்கும் அப்பா? நல்லது நீங்களே சொல்லுங்கள் என்பேன் அப்பனே.


அடியவர் :-  இப்படியே எல்லாரும் மாறிட்டே வந்தீங்கன்னா, நல்லது எப்படி நடக்கும்னு கேக்குறாங்க.


குருநாதர் :- அப்பனே, அனைவரும் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவ்வளவுதான் என்பேன் அப்பனே. இறைவன் நடித்தால், நீங்கள் தாங்கப் போவதில்லை என்பேன் அப்பனே. அதை தெரிந்து கொள்ளுங்கள்.


அடியவர் :-  நிச்சயமா. எல்லாம் நடிக்கிறீங்க. இறைவன் மகா நடிகன். அவர் நடிச்சா தாங்க முடியாது.


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா. 


குருநாதர் :-  அப்பனே, இன்னும் மந்திரங்களும் சொல்லித் தருகின்றேன். வாக்குகளும் உங்களுக்கு இருக்கு அப்பனே. கவலைகள் விடு. எதை என்று புரியப்பின்  ஏது என்று புரியப்பின் 


அடியவர் :-  சிவாய நம. எல்லா பேருக்கும் மந்திரங்கள் சொல்லித் தருகின்றேன். தனிப்பட்ட வாக்குகளும் கொடுக்கின்றேன் சொல்றாங்க குருநாதர் எல்லா பேருக்கும்.


குருநாதர் :-   அப்பனே, அதற்கு நீங்கள் அப்பனே, உங்களை நீங்கள் பக்குவப்படுத்துவாக இருக்க வேண்டும் என்பேன் அப்பனே. யான் சொல்வதை புரிந்து கொள்ளும் அளவிற்கு கூட படித்திருத்தல் வேண்டும் என்பேன் அப்பனே. அப்படி இல்லை என்றால், ஒன்றும் சொல்லியும் பிரயோஜனம் இல்லை அப்பா.


அடியவர் :-  உங்களை நீங்க பக்குவப்படுத்திக்கணும். குறைந்த அளவு நான் சொல்றதை புரிஞ்சுக்க கூடிய அளவுக்கு உங்க தன்மையை வளர்த்துக்கணும்ன்றாங்க. அறிவை வளர்த்துக்கணும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- அறிவை வளர்த்துக்கணும். 
https://youtu.be/npiKG6l6z6o?t=23254 


குருநாதர் :-   அப்பனே, எது என்று புரியப்பின்  இதனால் அப்பன் நன்மைகள் செய்ய, அப்பனே, நாங்கள் பின் தயாராக இருக்கின்றோம். அப்பனே, ஆனாலும் அப்பனே, பின் அவ் நன்மையை தடுக்க, அப்பனே, நீங்கள் தயாராக இருக்கின்றார்கள். அதாவது உங்களை சொல்லவில்லை. மனிதர்களை சொல்லுகின்றேன் பொதுவாக.


அடியவர் :-  ஆமா. இப்போ அவர் குருநாதர் நல்லது செய்ய காத்துட்டு தான் இருக்கிறார். எப்பயுமே பக்கத்துல எல்லா தெய்வங்களும் நம்ம பக்கத்துல அருள் கொடுக்க காத்துட்டு தான் இருக்கிறாங்க. நம்ம தயாரா இல்ல. அதை தான் சொல்றாங்க. நம்ம தயாரா இல்ல.


===========================
# வரவுள்ள இயற்கை அனர்த்தங்கள், பேரிடர்கள்….
===========================


குருநாதர் :-  அப்பனே, அடுத்தடுத்து எவை என்று அறிய அப்பனே. நிச்சயம் மனிதனால் காக்க முடியாதெல்லாம் அப்பன் நிச்சயம் இயற்கை சீற்றங்கள் வரப்போகின்றது. வறட்சி…. பெரிய வறட்சி வரப்போகின்றது என்பேன் அப்பனே. பின் சொல் எவை என்று கூற சொல்வதை கேளுங்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட நல்முறையாக அப்பனே. மனதை, அதாவது இப் பேயை மாற்றிவிட்டால், அனைத்தும் அப்பனே, எவை என்று புரியப்பின்  சரியாக மாறிவிடும் என்பேன் அப்பனே. இப்பேய்க்கு, இப்பேய்தான் அப்பனே, அனைத்திற்கும் அப்பனே காரணம் என்பேன் அப்பனே. அழிவுக்கு.


அடியவர் :-  பாருங்க, ஒரு பெரிய வறட்சி வரப்போகுதாம். மனிதனால ஒண்ணுமே பண்ண முடியாதுப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :-  பண்ண முடியாது.


அடியவர் :- ஒண்ணுமே பண்ண முடியாது. சோ, உங்களை மாத்திக்கோங்கன்றாங்க.


===========================
# அனைவருக்கும் சோறு அளிப்பது இறைவனே
===========================


குருநாதர் :- அப்பனே, இவ்வாறாக எது என்று அறிய அப்பனே. நிச்சயம் தன்னில் கூட. பின் எவ்வாறாக அப்பனே, பின் மனிதன் அனாதையாக திரிந்து கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. அவ் அனாதைக்கு சோறு அளிப்பது இறைவனே என்பேன் அப்பனே.


அடியவர் :- நம்ம நினைச்சுக்கிறோம், நம்ம சம்பாரிச்சு சாப்பிடுறோம்னு. நம்ம எல்லாம் அனாதைகள். திரிஞ்சுக்கிட்டு இருக்கிறவன் பைத்தியம் மாதிரி. இறைவன் தான் சோறு அளிச்சிட்டு இருக்கிறான்.


குருநாதர் :-  அப்பனே, இங்கு சோறு என்பது எதனை குறிப்பிட்டேன்? யாராவது சொல்லுங்கள் பார்ப்போம். 


சுவடி ஓதும் மைந்தன் :- இங்கு சோறு என்பது யாராவது சொல்லுங்க பார்ப்போம்ன்றார்.


அடியவர் :- இறையாற்றல் தான்.


குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூறப்பின், எது எதற்கு அப்பனே. உயிர் என்பதும், அப்பனே, எதை என்று கூறப்பின், நோய் இல்லாமல் எவை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஆரோக்கியம் கூட அப்பனே.


அடியவர் :-  எல்லாமே.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே பொருந்தும்ன்றார்.


அடியவர் :-  எல்லாமே இறைவன் கொடுக்கிறது தானே. இந்த உடம்பு, உயிர், அது இயங்குறதுக்குரிய ஆற்றல், எல்லாமே கொடுக்கிறது இறைவன் தான்.


===========================
# அதிக கவனம் தேவை….
===========================
# குருநாதர் அருளால், அடியவர்களுக்கு சக்திகள் அதிகமாகும்.
===========================


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட சக்திகளை வருவருகின்ற பொழுது, அதிகமாக உங்களுக்கு அளிப்பேன். 


***** அப்பனே, அவ் சக்திகளை வைத்துக்கொண்டு மற்றவர்களுக்கு நீங்கள் நல்லது செய்ய வேண்டும். அவ்வளவுதான்.  *****


***** கெடுதல் செய்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் நீங்கள் அப்பனே, பின்னுக்கு தள்ளப்படுவீர்கள் சொல்லிவிட்டேன். *****


அடியவர் :-  நிறைய உங்களுக்கு சக்திகளை பெருக்குறதுக்கு வழிகளை சொல்லித் தரேன். நிறைய பண்றேன்.


சுவடி ஓதும் மைந்தன் :-   இவருக்கு நல்லது சொல்லிக் கொடுத்தார்னா, இவர் 100 பேருக்கு…. ஆயிரம் பேருக்கு சொல்லலாம்.


அடியவர் :-  சொல்லணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-   அவர் அப்படி சொல்லலாம். அப்படி சொல்லும் பொழுது எல்லாமே.


அடியவர் :-  எல்லாம் மாறிடுவாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே மாறிடுவாங்க. 


===========================
#  உலகத்தில் வர உள்ள அழிவுகளை, அடியவர்களை வைத்து தான் தடுக்க வேண்டும்
===========================


குருநாதர் :-  அப்பனே, இதனால் அப்பனே, நிச்சயம் உலகத்தில் உள்ள அழிவுகளை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உங்களை வைத்து தான் தடுக்க வேண்டும் என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  அதனால்தான் அப்பனே, சொல்லிவிட்டேன். அதனால்தான் அனைவரையும் அழைக்கின்றேன் என்பேன் அப்பனே. பின் ஏதாவது சித்தருக்கு வேலை இல்லையா என்பேன் அப்பனே. சொல்லுங்கள் நீங்களே என்பேன் அப்பனே.


அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள்……. )


அடியவர் :- சிவாய நம. நீங்க மாறணும். நீங்க மாற்றி உங்களை வச்சுதான்…. இந்த உலகத்துல வரக்கூடிய எல்லா பிரச்சனையும் மாத்த போறோம்பான்றாங்க.




===========================
#  மருத்துவமனைகள் இன்னும் நிரம்பி வழியும்
===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=23388 


குருநாதர் :-   அப்பனே, எதை என்று புரியப்பின்  அப்பனே ஏதோ எவை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இதனால்தான் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மனிதன் எவை என்று புரியப்பின்  இன்னும் அப்பனே, எவை என்று நுண்ணுயிர்கள் அப்பனே, மனிதனை தாக்குகின்ற பொழுது, அப்பனே, உடனடியாக இறந்து விடுவான் என்பேன் அப்பனே. 


குருநாதர் :-   இதற்கு மந்திரம் தேவை. எவை என்று புரியப்பின்  தேவைப்படாதா? எதை என்று புரிய அப்பனே.  இதனால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,  மருத்துவம். அப்பனே, மனைகள் இன்னும் நிரம்பி வழியும் அப்பா. 


குருநாதர் :-   அப்பனே, மருத்துவர்களே தவறு செய்வார்கள் என்பேன் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட சொல்லிவிட்டேன். 


குருநாதர் :-   இதனால் அப்பனே, பக்திக்குள் நிச்சயம் தன்னில் கூட. கட்டாயமாக உங்கள் ஆற்றலை பெருக்கின்ற பொழுது, உங்களுக்கே இவன் என்ன செய்கின்றான்?  திருடனா?  அல்லது நல்லவனா?  என்றெல்லாம் உங்களுக்கே தெரிந்துவிடும் என்பேன் அப்பனே. அவ்வாற்றல் உங்களுக்குள் இருக்கின்றது. ஆனால் நீங்கள் பயன்படுத்துவதில்லை. அவ்வாற்றலை எவ்வாறு பயன்படுத்த உங்களுக்கு தெரிவிக்கின்றேன் அப்பனே.


அடியவர் :- சூப்பர். அதாவது ஒருத்தன் பொய்.. உண்மை… தப்பு பேசுறவன்…. எல்லாம் நம்மளால கண்டுபிடிக்க முடியல. ஏன்னா அந்த ஆற்றல் நம்மகிட்ட இல்லை. இப்ப ஆனா உள்ளுக்குள்ள இறைவன் படைச்சிருக்கிறார். அதை நமக்கு பயன்படுத்த தெரியல. வெளிக்கொண்டு வர முடியல. அதையெல்லாம் நான் உங்களுக்கு வெளிக்கொண்டு வந்து… உங்களுக்கு நான் சொல்லித் தரேன்பா. அதை வச்சு நீங்க உங்ககிட்ட பேசுறவன் நல்லவனா கெட்டவனா, அவன் என்ன மனசுல வச்சிருக்கான், இதெல்லாம் நீங்க புரிஞ்சுக்கலாம் அப்படின்னு குருநாதர் சொல்றாங்க. எதிர்காலத்துல மருத்துவர்களே தவறு செய்வாங்க. அப்ப நீங்க இதை புரிஞ்சுப்பீங்க. ஒரு பெரிய வைரஸ் ஒன்னு வரப்போகுது. அது வந்தா மனுஷன் உடனே இறந்துருவான்ப்பா.


சுவடி ஓதும் மைந்தன் :-   எந்த டாக்டராலும் காப்பாத்த முடியாதுன்றார்.


அடியவர் :- யாராலயும் காப்பாத்த முடியாது. எந்த மருத்துவமனையும் திறக்க முடியாது. மருத்துவமனையும் நிரம்பி வழியும்ன்றாங்க. எதுவும் செய்ய முடியாதுன்றாங்க.


குருநாதர் :- அப்பனே, இதனால் நிச்சயம் தன்னில் கூட ஏது என்று புரியப்பின்  இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இவ்வாறாகவே ஆற்றல் எவ்வாறு இயலாத பொழுது, அப்பன் நிச்சயம் எவ்வளவு அப்பன் நிச்சயம் தன்னில் கூட பாதிக்கப்படுகிறீர்கள் என்பேன் அப்பனே. இவ்வாறாக ஆற்றல் அதிகமாகின்ற பொழுது, அப்பனே, யோசித்துப் பாருங்கள்.


அடியவர் :- நீங்களே யோசித்துப் பாருங்க. ஆற்றல் அதிகமாகுறப்போ எவ்வளவு பிரச்சனைகள் வரும்.


சுவடி ஓதும் மைந்தன் :- ஓகேங்களா. 


குருநாதர் :- அப்பனே, இதனால் உங்கள் ஆற்றலை மேம்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே. முதலில் அவ்வாற்றலை மேம்படுத்தினால், அப்பனே, வெற்றி கொள்ளலாம் என்பேன்  அனைத்திலும் என்பேன் அப்பனே.


அடியவர் :-  எல்லாம் உங்ககிட்ட தான் இருக்கு. நீங்க உங்களுடைய சக்தியை வந்து அதிகப்படுத்தணும். அதிகப்படுத்தினாதான் எல்லாத்துலயும் தப்பிக்க முடியும்ன்றாங்க.


குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. ஒருவனுக்கு காலில், அப்பனே, நிச்சயம் ஆற்றல் இருக்கும். 


ஒருவனுக்கு கண்களில் இருக்கும். 


ஒருவனுக்கு, அப்பனே, மூக்கில். 


ஒருவனுக்கு வாயில், அப்பனே. 


எவை என்று கூற ஒருவனுக்கு தலையில் என்பேன்  எவை என்று கூறப்பின், 


***** ஆனால் அனைத்து இடத்திலும் சக்திகள் அதிகமாக இருந்தால் மட்டுமே, அப்பனே, உன்னை நீ வெல்ல முடியும் அப்பா.  *****


அடியவர் :-  சிவாய நம….. அடுத்த உண்மை சொல்லி இருக்காங்க. ஒவ்வொருத்தருக்கும் ஆற்றல்கள் சில இடத்துல அதிகமா இருக்கும். ஒருத்தருக்கு கண்ணுல, ஒருத்தருக்கு கால்ல, ஒருத்தருக்கு விரல்ல, ஒருத்தருக்கு மூக்குல, ஒருத்தருக்கு கண்ணுல இந்த மாதிரி இருக்கும். ஆனா எல்லா இடத்துலயும், உடம்புல, எல்லா பாகத்துலயும் அந்த ஆற்றலை பெருக்குனாதான் உன்னால வந்து அந்த இதை தடுக்க முடியும்ன்றாங்க.


குருநாதர் :- அப்பனே, சொல்லிவிட்டேன் அப்பனே. சூலாயுதத்தை பற்றி.


அடியவர் :-  எதுக்காக? அதாவது இந்த ஆற்றலை பெருக்குறதுக்கு வழி சொல்லிட்டாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  எதுக்காக இது பயன்படுதுங்க ஐயா?


அடியவர் :-  உடம்புல ஆற்றலை பெருக்குறதுக்கு. அந்த சிகப்பு நிறத்தை விலக்க, விலக்க நமக்கு வந்து வெள்ளை நிறம் அதிகமாக, அதிகமாக ஆற்றல் பெருக்கும்ன்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  நெகட்டிவ் போர்ஸ் விலக்கவும்.


அடியவர் :- அதுக்கு தான் சூலாயுதம்.


சுவடி ஓதும் மைந்தன் :-   நெகட்டிவ் போர்ஸ் விலக்கவும். உங்களை நீங்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளவும். இந்த திரிசூலம் எங்க வைக்கணும்?


அடியவர் :-  வீட்டு வாசல்ல ஒரு மாடம்.


குருநாதர் :-  வீட்டு வாசல்ல.


அடியவர் :-  மாடம் வச்சு வைக்கணும்.


குருநாதர் :-  அப்பனே, எது என்று புரியப்பின்  இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே, பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, ஒரு பொருள் என்றால், அப்பன் நிச்சயம் பின் அதற்கு நிழலும் உண்டு என்பேன் அப்பனே.


அடியவர் :-  அதுக்கு நிழலும் உண்டு.


சுவடி ஓதும் மைந்தன் :-   ஒரு பொருள் என்றால், ஐயா, உங்களுக்கு நிழல் இருக்குதா இல்லையா ஐயா?


அடியவர் :-  அதுக்கு நிழல் இருக்கு. எதுக்குமே.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா. 


===========================
# உங்களை சுற்றி யார் யார் உள்ளார்கள் ?
===========================
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=23560 


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பல லட்சம். அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் நீ மட்டும் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றாய். 


குருநாதர் :-  அப்பனே, ஆனால் அப்பனே, நீ இங்கு நின்றால், அப்பனே, உன் அப்பன் பின் ஏராளமாக உன் பின்னே அல்லது முன்னே, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. 


குருநாதர் :-  பின் அதாவது ஒரு அப்பனே நிச்சயம் தன்னில் கூட. எவை என்று அறிய அப்பனே, பின் அகலத்துக்கு, அதாவது நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, மைல் தொலைவிற்கு, அப்பனே, பின் ஏது என்று கூறப்பின், ஆன்மாக்கள் உன்னை சுற்றியே இருக்கும் அப்பா அப்பனே. 


குருநாதர் :-  அதனால்தான் அப்பனே, மனிதன், அப்பனே, மனது மாறிக்கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. நிச்சயம் எவை என்று கூறப்பின். 


குருநாதர் :-  அதனால் இவர்கள் எல்லாம், அப்பனே, அடித்து நொறுக்க வேண்டும் என்பேன் அப்பனே. அப்படித்தான், அப்பனே, நீ உயர்ந்து நிற்பாய்.


அடியவர் :-   எப்படி உங்களுக்கு நிழல் போல உங்க நிழல் இருக்குதோ, அதேபோல.


சுவடி ஓதும் மைந்தன் :-   1 km, 11/2 km வரையில.


அடியவர் :-   ஒரு மைல் 11/2 km தொலைவுக்கு ஆன்மாக்கள் சூழ்ந்து நிக்குமாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  சூழ்ந்து நிக்குதாம். பின்னாடி, பின்னாடி, பின்னாடி. அதனால மனுஷனோட மனம் என்ன ஆயிருக்கும்?


அடியவர் :-   மாறிக்கிட்டே இருக்கும். நிலையானதா இருக்காது.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப மாறாம இருந்துச்சுன்னா அந்த ஆன்மாக்கள் க்ளோஸ்.


அடியவர் :-   க்ளோஸ். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதெல்லாம் என்ன பண்ணலாம்? 


அடியவர் :-   ஆற்றலை பெருக்கணும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  பெருக்கலாம். 


https://youtu.be/npiKG6l6z6o?t=23613 


குருநாதர் :- அப்பனே, எவை ஏது என்று கூற இன்னும் அப்பனே, பின் எவை என்று கூற. பின் மனிதன் எவ்வாறு எல்லாம் பேசுகின்றான்? அப்பனே, பின் எவ்வாறு எல்லாம் இயங்குகின்றான்? மனிதனுக்கு என்ன, ஏது என்றெல்லாம்?  அனைத்தும் சொல்லித் தருகின்றேன் விஞ்ஞானப்  பூர்வமாகவே என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  அனைத்து சித்தர்களும் வந்து செப்புகின்ற பொழுது, அதை பயன்படுத்துவதற்கு நன்று. வரும் உலகத்திற்கு நன்றாக இருக்கும் என்பேன் அப்பனே. உலகம் நன்றாக செயல்படுவதற்கும், அப்பனே, எங்களுடைய ஆசிகள்.

https://youtu.be/npiKG6l6z6o?t=23633 


அடியவர் :-   இயங்கணும், எல்லாத்தையும் நான் உங்களுக்கு சொல்லித் தரேன் அப்பா. எப்படி இயங்குறது எல்லாம் சொல்லித் தரேன். சித்தர்கள் வந்து நிறைய உங்களுக்கு சொல்லித் தருவாங்க, அப்படின்றாங்க. 


===========================
# எச்சரிக்கை :- சிவப்பு நிற கதிர்வீச்சுகளின் பேராபத்துகள்
===========================


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக நிச்சயம்  தன்னில் கூட இவ்வாற்றல், அதாவது நிச்சயம் சிகோப்பனின் ஆற்றல் அதிகமாகின்ற பொழுது, அப்பனே, அவை கெட்டியாக மாறும் அப்பா. 


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறாக கெட்டியாக மாறுகின்ற பொழுது, வெடிக்கும் பொழுது, அப்பனே, பின் நிச்சயம்  தன்னில் கூட, அப்பனே, பூகம்பங்கள், இன்னும், அப்பனே, மலைகள், அப்பனே, இன்னும் என்னென்னவோ நடந்து, அப்பனே, மனிதன் அழிந்து விடுகின்றான் என்பேன் அப்பனே. 


குருநாதர் :-  இதனால் கெட்டியாக ஆக கூடாது என்பேன் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அவ் நிறம். 


அடியவர் :-  அந்த நிறம் மேல, மேல, படபட, பூமி மேல படபட, அது கெட்டியா மாறிடும். கெட்டியா மாறிடுச்சுன்னா, வரட்சி, பூகம்பம், இந்த மாதிரி நிறைய பிரச்சனைகள் எல்லாம் நிறைய வரும் அப்பா. அது கெட்டியாக விடக்கூடாதுன்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-   கெட்டியாக? 


அடியவர் :-  இருகிடக்கூடாது. அந்த ஆற்றல் இருகக்கூடாது.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   இருகிச்சுன்னா என்ன பண்ணும்?
 
அடியவர் :-  ஒன்னும் பண்ண முடியாது.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   வெடிச்சிச்சுன்னா என்ன பண்ணும்?
 
அடியவர் :-  பூகம்பம் வரும். அது வரட்சி. அது வரட்சிக்கு ஒரு காரணம். 


குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது எது என்று புரிய, அப்பனே, நிச்சயம்  தன்னில் கூட கெட்டியாகி கொண்டே சென்று கொண்டிருக்கின்றது. அப்பனே, 


குருநாதர் :-  இவைதன், அப்பனே, அதாவது இவை கெட்டியாகுவதற்கு, அப்பனே, பின் நிச்சயம் பல ஆயிரம் ஆண்டுகள் ஆகின்றது என்பேன் அப்பனே. 


அடியவர் :-   சும்மா எல்லாம் அன்னைக்கு, இன்னைக்கு, நேத்துக்கு, இன்னைக்கு எல்லாம் ஆகுறது இல்ல. இந்த கழிவு ஆரம்பிச்சு, மனுஷன் சரியில்லாததுனால, இது இப்படியே கொஞ்சம் கொஞ்சமா, இந்த ஆற்றல் கெட்டியாகி, கெட்டியாகி, இப்போ அது பலன் தர ஆரம்பிச்சிருக்கு. 


https://youtu.be/npiKG6l6z6o?t=23698 


குருநாதர் :-  அப்பனே, இவ்வாறு கெட்டியாக, பின் நிச்சயம் ஆகின்ற பொழுது, மனிதன் அனைத்தும் பொய்தான் பேசுவான் என்பேன்  அப்பனே. 


அடியவர் :-  அங்க என்ன இருக்குதோ, ரிப்ளெக்ட் ஆகும். ஏன்னா, அங்கேயும் படுது, நம்ம மேலயும் படுது. அப்போ, மனிதன் பொய்தான் பேசுவான். உண்மை பேசமாட்டான். 


சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா  புரியுதுங்களா, ஐயா? 


குருநாதர் :- அப்பனே, இதனால்தான், அப்பனே, சிந்தித்து செயலாற்றுங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள் என்றெல்லாம், அப்பனே, கீதையில், அப்பனே, பின், அதாவது நிச்சயம் கிருஷ்ணன் உரைத்துக் கொண்டே இருக்கின்றான். 


அடியவர் :-  அதனாலதான் அகத்தியர் வந்து நமக்கு அறிவை கொடுத்திருக்கிறார். இந்த அறிவை பயன்படுத்துங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  சிந்தித்து செயலாற்றுங்கள். சிந்தித்து செயலாற்றுங்கள் என்று பகவத் கீதையில் யார் சொல்லி இருக்காரு?
 
அடியவர் :-  பகவான் கிருஷ்ணர் சொல்லி இருக்கிறார்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  கிருஷ்ணர்? 


அடியவர் :- சொல்லி இருக்கிறார்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  சொல்லினே இருக்கிறார்ப்பா.
 
குருநாதர் :- அப்பனே, சிந்திப்பதே இல்லை என்பேன்  அப்பனே, எப்படி செயலாற்றுவீர்கள் நீங்கள்?
 
அடியவர் :-  ஆமா, யோசிக்கிறதே இல்லையே. எவனாவது ஒருத்தன், ஒரு ஆட்டு மந்த கூட்டம் மாதிரி, பின்னாடி போய் சொல்றதை கேட்டு, எங்கேயோ போய், நம்மளும் விழுந்துடுறோம். பள்ளத்துக்குள்ள.
 
குருநாதர் :-  அப்பனே, இன்னும் எவ்வளவு, இன்னும் இதிகாசங்கள் எல்லாம் இருக்கிறது என்பேன்  அப்பனே. அதை மனிதன் மறைத்துவிட்டான். 


குருநாதர் :-  ஏனென்றால், கலியுகத்தில் பின் அழிவுகள் வரவேண்டும் என்று, மனிதனே, அப்பனே, நிச்சயம்  தன்னில் கூட, அப்பனே, இவை என்று கூற உலகத்திற்கு கெடுத்தல்  செய்துவிட்டான் அப்பா. 


அடியவர் :-  யாரும் கெடுக்தல் செய்யலப்பா. மனுஷனை, மனுஷனே, கெடுத்துக்கிட்டான்ப்பா. இன்னும் நிறைய இதிகாசங்கள் எல்லாம் இருக்கு. நிறைய புராணங்கள் எல்லாம். அதெல்லாம் மனுஷன் மறைச்சுட்டான்றாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஆமா…..


குருநாதர் :- அப்பனே, இதனால் நிச்சயம் நீங்கள் தெளிவு பெறுங்கள் என்பேன்  அப்பனே. 


முதலில் நீங்கள் தெளிவு பெற்றால், அப்பனே, பின் உங்கள் குழந்தைகள் தெளிவு பெறும். 


பின் வரும் சந்ததிகள் தெளிவு பெறும் என்பேன்  அப்பனே. 


அப்பொழுது, அப்பனே, பின் நிச்சயம்  தன்னில் கூட அனைவரும் நன்றாக வாழ்வார்கள் என்பேன்  அப்பனே. 


அடியவர் :-  மாற்றம் என்பது உங்கள்ட்ட தான் ஆரம்பிக்கணும். நீங்க மாறினா, உங்க குடும்பம் மாறும், குழந்தை மாறும், எல்லா பேரும் மாறுவாங்க. ஊர் மாறும். இல்லைன்னா, மாற்றம் இல்லாம, எதுவும் மாறாது. 


குருநாதர் :-  அப்பனே அறிந்து கூட, இதனால், அப்பனே, பின் இன்றைய நிலை போதும் அப்பா. 


குருநாதர் :-  இன்னும், அப்பனே, சொல்கின்றேன். 


குருநாதர் :-  அப்பனே, இதனால், அப்பனே, மனதை, அப்பனே, பின் ஆறுதல் படுத்த, ஒரு சிறப்பான பாடலை பாடும் என்பேன்  அப்பனே, முருகனை நோக்கி.
 
அடியவர் :- சிவாயநம !!!!! , இப்போதைக்கு போதும்பா. ஒரு பாட்டு படிக்கலாம்ன்றாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  வாங்க, ஐயா. நல்லா, ஐயா.
 
அடியவர் :-  சாப்பிடாதவங்க, உணவு சாப்பிட்டு வந்துருங்க. 
 
சுவடி ஓதும் மைந்தன் :-  சாப்பிடாதவங்க, சாப்பிட்டு வந்துருங்க. அதுக்குள்ள பாடல் எல்லாம் வந்துரும்.


 ( அடியவர்கள் பாடல் பாட ஆரம்பித்தனர் )


பாடல்:- (அறுபடை வீடு கொண்ட திருமுருகா…) 
https://youtu.be/npiKG6l6z6o?t=23911 

பாடல் - ( அம்மை அடியவரின் பாடல் ) 
https://youtu.be/npiKG6l6z6o?t=24481 

பாடல் - குழந்தை அடியவரின் பாடல் - வேலவா வேலவா வேல்முருகா வா ….
https://youtu.be/npiKG6l6z6o?t=24610

பாடல் - குழந்தை அடியவரின் பாடல் - பழனிமலை முருகருக்கு அரகரோகரா ….
https://youtu.be/npiKG6l6z6o?t=24746  

பாடல் - குழந்தை அடியவரின் பாடல் - தமிழ் மொழி காத்த தலைவன் அய்யா …..
https://youtu.be/npiKG6l6z6o?t=24875

பாடல் - குழந்தை அடியவரின் பாடல் - தமிழ் மொழி காத்த தலைவன் அய்யா …..
https://youtu.be/npiKG6l6z6o?t=24875

பாடல் - குழந்தை அடியவரின் பாடல் - முதைத்தரு பதித்திருநகை 
https://youtu.be/npiKG6l6z6o?t=25195

திருக்கைலாய வாத்தியம்:- 
https://youtu.be/npiKG6l6z6o?t=25306  

( திருக்கைலாய வாத்தியம் முடிவினில் பலத்த கரகோசங்கள்  )
https://youtu.be/npiKG6l6z6o?t=27872  

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!