31.அகத்தியர் திருவடிகள் சரணம் வாயில்லா ஜீவராசிகள் நலனை காக்க சித்தர்களும் இறைவனும் ஆவன செய்ய வேண்டும் குறிப்பாக ஆடுகள் மாடுகள் கோழிகள் கொல்லப்படுவதை தடுத்து சாலையிலே வேகமாக செல்லும் வாகனங்கள் அதனை அடிப்பது கண்டு மிகவும் மனம் வேதனை படுகின்றேன். தெய்வங்களின் பெயரால் பலியிடும் நிகழ்வை தடுக்க தாங்கள் ஆவன செய்யுமாறு உங்கள் பாதம் பணிந்து வேண்டுகின்றேன்!
குருநாதர்: நிச்சயம்! இவைகள் எல்லாம் நன்றாக செய்வதற்காகத்தான் எடுத்து வருகின்றோம். அதி விரைவில் மாற்றங்கள் ஏற்படுவது உறுதி.
32.மூளைக்கு செல்லும் நரம்பு பலவீனமாக இருப்பது, புரிந்துகொள்ளும் திறன் குறைவாக இருப்பது (மூளை வளர்ச்சியில் 5 அல்லது 10 வருடங்கள் பின்தங்கிய மெதுவான வளர்ச்சி, மெதுவான புரிந்துகொள்ளும் திறன் இருப்பது ) இது குழந்தைகள் மற்றும் adult age -ல் உள்ளோர்களுக்கும் இருக்கும் நிலையில் ( people with "Adult ADHD") இதனை சரிசெய்ய வழிபாடு முறையும் மற்றும் சித்த மருத்துவத்தின் மூலம் சரிசெய்ய வழி காட்டுமாறு ( மேலும் இதனை சிறுவயதிலேயே பெற்றோர்கள் எப்படி கண்டறிவது, அதனை சரிசெய்ய என்னென்ன செய்ய வேண்டும்?) குருநாதரை வேண்டுகிறேன்!
குருநாதர்: நிச்சயம் அறிந்தும் புரிந்தும் இதை அனைவருக்கும் புரிய வைக்கின்றேன் நேரில் ஒருநாள். (அடியவர்:இன்னிக்கு கேட்டால் என்றோ ஒருநாள் சொல்கிறேன் என்கிறீர்கள்! சரி போவோம்!)
33. வணிகத்தால் இயற்கையும் உயிர்களும் அழிந்து வருகிறது. பண்டமாற்று முறையும் அழிந்து விட்டது. தர்மம் தழைத்தோங்க அகத்தியர் அடியவர்கள் என்ன செய்ய வேண்டும்?
குருநாதர்: அப்பா! சொல்லிக்கொண்டே இருக்கின்றேன் அப்பா! இன்னும் சொல்வேன்! மனிதனை நம்பினோம்! ஆனால் மனிதனோ, அகத்தியன் நான் தான், என்னிடத்தில் வருகின்றது, என்றெல்லாம் பொய் சொல்லி கெடுத்து விட்டான். இதனால் தான் நல்லவற்றை எப்படி செய்வது என்று நானும் சொல்லிக் கொடுக்கவில்லை. அதாவது தர்மத்தை காக்குங்கள் என்று யாராவது சொல்கின்றானா? சித்தன் பேசுகின்றான் என்று பொய் சொல்லி பொய் சொல்லி, பொய்யை நம்பி விடுகின்றான் மனிதன். இதனால், யார் ஒருவன் தர்மத்தை பற்றி, யாரும் குறை கூறாதவாது, பின் போட்டி பொறாமைகள் நீக்கி, அனைத்தும் இறைவன் குழந்தைகளே, அனைத்தும் இறைவன் செயலே என்று சொல்கிறானோ, அவன் தான் என் பக்தன். அதை விட்டுவிட்டு, இவற்றிக்கு இவ் பரிகாரம் செய், அவ் பரிகாரம் செய், இவை நலமாகும், அவை நலமாகும் என்றெல்லாம், பைத்தியமப்பா, பைத்தியம். இவ் பைத்தியத்திற்கு எவ்வளவு சொன்னாலும் புரியாதப்பா!
34. அன்பு அகத்தியர் அப்பா லோபமுத்திரை அன்னை பொற்பாதங்களை தொட்டு வணங்கி நன்றி கூறுகிறேன். சமண மத தீர்தங்கரர்களைப் பற்றியும் முதல் தீர்தங்கரர் ஆன ஆதிநாத பகவானைப் பற்றியும் கூறுங்கள் , அப்பா!
குருநாதர்: அப்பா! ஒரு பக்தரை பற்றி புசுண்டன் காசியில் உரைத்துவிட்டான். இன்னொரு வரை பற்றி, அய்யனே எப்படி சபரிமலையில் அய்யப்பனாக பிறந்தான் என்று, ரகசியமாக கூறுகின்றேன்! இவனை ஒரு திருத்தலத்திற்கு வரச்சொல், ரகசியமாக அங்கு உரைக்கின்றேன்!
35. கோயிலுக்கு சென்றாலும், வீட்டில் புஜை செய்தாலும், சிரசில் பூச்சுகள் ஓடுவது போல் இருந்தால், என்ன அர்த்தம், என தயவு செய்து கூறுங்கள், தந்தையே.
குருநாதர்: எதை என்று கூறுவது? உடம்பு சரியில்லை, நோய் வரப்போகிறது என்று அர்த்தம்!
36. குரு அருளால் , ஜீவநாடி வாக்குகளை வாட்ஸப், youtube, Blog வழியாக பரப்ப தொடங்கியிருக்கிறேன். ஆனால் சித்தர் பெருமக்கள் வாக்குகளை எடுத்து பரப்பும் அளவுக்கு எனக்கு தகுதியிருக்கிறதா என்று சில சமயம் தோன்றுகிறது. இருந்தாலும் குருவருளால் எபபடியோ தொடங்கிவிட்டேன். அதை எந்த தடங்கலும், தவறும் இல்லாமல் தொடர தங்கள் (அகத்திய பெருமானின்) ஆசிகள் வேண்டும்.
(5வது கேள்வி பதிலை பார்க்க!)
37. ஒரு குடும்ப தலைவன் தவறு செய்தால் அதற்கான கர்மபலனில் குடும்ப தலைவிக்கு பங்கு இல்லை என்றும் ஆனால் மனைவி தவறு செய்தால் கணவனுக்கு ஐம்பது சதவிகிதம் சென்று விடும் என்று படித்து இருக்கிறேன். இந்த கர்மபலனை பற்றி விளக்கி அருள வேண்டுகிறேன்.
குருநாதர்: முற்றிலும் இவை பொய்.
அடியவர்: முற்றிலும் பொய் என்றல், தாய் தந்தை செய்த தவறுக்கு குழந்தைகள் ஏன் அனுபவிக்கிறது? தேவையே இல்லையே!
குருநாதர்: அப்பா! ஒன்றை கேட்கின்றேன், பதில் கூறு! தாய் தந்தை சேர்த்து வைத்த சொத்து வேண்டும், அப்படியென்றால் அவர்கள் பாபம் மட்டும் வேண்டாமா அப்பா?
அடியவர்: அப்படியானால், முதலில் சொன்னதிற்கும், இப்பொழுது கூறியதற்கும் முரண் இருக்கிறதே!
குருநாதர்: அப்பா! இதை பற்றி யான் என்ன சொன்னேன்! மீண்டும் கேள்!
அடியவர்: முற்றிலும் பொய் என்று கூறினீர்கள்!
குருநாதர்: அப்பா! முற்றிலும் பொய் என்பது, இங்கு எதை குறிக்கின்றது?
அடியவர்: குடும்ப தலைவன் செய்கிற பாபம் மனைவிக்கு போகாது, மனைவி செய்கிற பாபம் குடும்ப தலைவனுக்கு (புருஷன்) போகாது.
குருநாதர்: அப்பா! இவையே ஒரு மாயை என்பேன்!
அடியவர்: இந்த கேள்வியை கேட்டவர், அப்படியெல்லாம் உயர்ந்த நிலையில் இல்லை. சாதாரண மனிதனாக அறிவை இப்பொழுதுதான் பெற்று வருகிறார். இரண்டாம் வகுப்பு.
குருநாதர்: !!! (பதில் இல்லை. மௌனம்!).
39. அவரவர் கர்மா தான் அவர்கள் தங்களுடன் எடுத்து செல்கிறார்கள் என்றால் ஒரு குடும்பத்திற்கு சாபம் ஏழு தலைமுறைக்கு இருக்கும் என்றும் சொல்கிறார்கள். இதனை பற்றி விளக்கி அருளுமாறு வேண்டுகிறேன்.
குருநாதர்: அப்பா! இப்பொழுதுதான் சொன்னேன். மூதாதையர்கள் சொத்தை அனுபவிப்பார்களாம், ஆனால் அவர்கள் செய்த பாபத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று.
அடியவர்: உங்களுக்கே நேரம் சரியாக இருந்திருந்தால், நல்ல கேள்வியுடன் உங்கள் சந்தித்திருப்பார்கள். ஆகவே, நல்ல ஜோசியனை பார்த்து உங்கள் ஜாதகத்தை காட்டுங்கள் அய்யனே!
குருநாதர்: அதனால்தான் அப்பா! கலியுகத்தில் என்னையே (ஏமாற்றுகிறார்கள்).
39. அன்புத் தந்தையே, தங்களின் குழந்தைகளாகிய நாங்கள், தாங்கள் அருளிய மார்க்கத்தில் தான் சரியான முறையில் செல்கின்றோம் என்று எவ்வாறு உணர்வது?
குருநாதர்: இவனுக்கு என்னவென்று சொல்வது! தாய் தந்தை என்று கூறிவிட்டான்! நானே உணர்த்தி விடுகின்றேன்!
40. அன்புத் தந்தையே, தங்களின் திருப்பாதங்களைப் பற்றிப் பணிந்து வினவுகிறேன். பிழையிருந்தால் மன்னித்து அருளுங்கள். எனது இரு செவிகளிலும் ஓம் கார / ரீங்கார சப்தம் எந்நேரமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. இதனை தங்களின் கருணையால் கிடைத்ததாகவே உணர்கிறேன். ஆனால் மருத்துவ அறிவியலின்படி இந்தச் சப்தத்தை ஒரு குறையாகச் சொல்கிறது. தந்தையே, இதற்கு தங்களின் அறிவுரை வேண்டுகிறேன்.
குருநாதர்: நான் பார்த்துக் கொள்கின்றேன்!
41. அன்புத் தந்தையே, அன்றாட வாழ்வில் அதர்மம் சார்ந்த தகவல்கள், செய்திகள் ஆகியவற்றைப் பார்க்கும் பொழுது, எப்படிப்பட்ட மனநிலையில் அணுகுவது அல்லது அவற்றைக் கடந்து செல்லுவது என்று தங்களின் அறிவுரை வேண்டுகிறேன்.
குருநாதர்: நிச்சயம் கடந்து செல்ல முடியாது. அதனால் தான் யாங்கள் சித்தர்கள் வந்திருக்கின்றோம். அவைகள் தடுக்கப்பட வேண்டும்.
42. ஒருவனுடைய கெட்ட கர்மாவை வேறொரு உயர்ந்த ஆத்மா வாங்கிக்கொள்ள முடியுமா? அப்படியானால் அந்த உயர்ந்த ஆத்மா பிறப்பால் மனித உடல் எடுக்க வேண்டுமா? அந்த உயர்ந்த ஆத்மா எப்படி கர்மாவை எடுக்கும்?
குருநாதர்: சரியான கேள்விதான். இருந்தும், நாங்கள் கலியுகத்தில் வாக்குகள் செப்புவதே இல்லை. மனிதன் பாப மூட்டையை அவ்வளவு ஏற்றுக்கொண்டு இருக்கின்றான். இருப்பினும், ஓரளவு பாப மூட்டையை ஏற்றுக்கொண்டு, நிச்சயம் வாக்குகள் சொல்லிக் கொண்டு இருக்கின்றோம். உண்மையாக இருந்தால், இப்பிறப்பில், யாங்கள் அழித்திடுவோம் (பாபத்தை). அப்பா! ஒன்றை சொல்லுகின்றேன்! என்னிடத்தில் வருபவர்கள் எல்லாம் பாபமூட்டையை சுமந்துதான் வருகின்றார்கள். அதை எடுத்து வீசுவதே கடினம். ஆனாலும் சித்தர்கள் பற்றிய ரகசியம் என்னவென்றால், என் பெயரை உச்சரிக்கவே புண்ணியங்கள் வேண்டும். இருந்தும், பாபம் சுமக்கும் மனிதனை, உச்சரிக்க விட்டிருக்கின்றேன் யான்.
43. கர்மாவை இழந்த ஆத்மாவுக்கு அடுத்த முறை மேலும் உயர்ந்த பிறப்பு கிடைக்குமா?
குருநாதர்: இப்பிறப்பில் கர்மா அகன்று விட்டால், நீ 20 வயதாகிவிடலாம்.
44. சந்திராஷ்டம காலத்தில் பிரச்சினைகள் வராமல் இருக்க வழி கூறுங்கள் ஐயனே
குருநாதர்: நிச்சயம் பிரச்சினைகள் வராதப்பா. ஆனால் அவனே, புலம்பிக்கொண்டு இருக்கின்றான், இது என்ன பிழைப்பு என்று!
அடியவர்: பேசாமல் இருக்கச் சொன்னால் போதாதா?
45. குலதெய்வதின் அருள் கிடைக்க தாங்கள் கூறியபடி 108 மூலிகையில் பஸ்பம் செய்தேன் அதனுடன் பச்சை கற்பூரம் சந்தனம் குங்குமம் கோவில் மண் சேர்த்து மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி வீட்டில் வைத்து வழிபட சொன்னீர்கள் . ஒரு மாத காலத்தில் என் தம்பி கீழே விழுந்து எலும்பு முறிவு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கும் வழிபாடு செய்வதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? இதை தொடர்ந்து செய்யலாமா? வழி காட்டுங்கள் தந்தையே!
குருநாதர்: செய்வது உன் கடமை. தருவது என் கடமை. அத்தகைய வழிபாட்டுக்கள் இல்லை. இப்பொழுதாவது செய்கின்றார்களே, செய்யச்சொல்!
46. வணக்கம் ஐயா, ஓம் அகத்தீசாய நம. தாங்கள் இயற்றிய அகத்தியம் நூல் பற்றி சொல்லுங்கள்.
குருநாதர்: நிச்சயம் இன்னும் இருக்கின்றது. அனைத்தையும் சொல்லிவிட்டு, நிச்சயம் இதையும் சொல்லப்போகிறேன்! ஆனாலும் யான் சொல்லப்போவதில்லை, என் சீடன் புலத்தியன் சொல்வான், இதை பற்றி!
47. ஓம் அகத்தீசாய நம, தங்களுடைய அருளாசியாலும் வழிகாட்டுதலாலும் நாங்கள் அனைவரும் வினைகளை களைந்து முத்தி எனும் அருட்பெருஞ்ஜோதியை அடைய வேண்டும் அப்பா. கருணை பிச்சை தாருங்கள் அப்பா!
குருநாதர்; நிச்சயம் தன்னில் கூட, நிச்சயம் செய்வதை செய்யச்சொல். யான் பார்த்துக் கொள்கின்றேன்!
48. வணக்கம், கூட்டுப்பிரார்த்தனையில் ஏற்கனவே கூறியபடி நட்சத்திரங்களின் கதிர்வீச்சுகள் விழும் இடங்கள், அனைத்து நட்சத்திரக்காரர்களுக்கும் பயன்பெறும்படி அந்தந்த இடங்களை கூறும்படி இறைவனிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன்..
குருநாதர்: முதலில் நிச்சயம் போகர் சொல்லியிருக்கிறான், தேரையன் சொல்லியிருக்கிறான், இவை எல்லாம் பயன்படுத்தச்சொல்! பின்பு யான் சொல்லுகின்றேன்!
49. எகிப்திய பிரமிடு, அங்கோர் வாட் மற்றும் மாயன் பிரமிடுகள், ஸ்டோன்ஹெஞ்ச் போன்ற பிற பழங்கால நினைவுச்சின்னங்களின் இருப்பிடம் விண்வெளியில் ஒரு விண்மீன் கூட்டத்தைக் குறிக்கிறதா? தயவுசெய்து விளக்குங்கள்.
குருநாதர்: அப்பா! அங்கங்குதான் சொல்ல முடியும்.
50. தயவுசெய்து பொட்லூரி வீர பிரம்மேந்திர சுவாமிகளின் வாழ்க்கையையும் அவரது காலஞான தீர்க்கதரிசனங்களையும் எங்களுக்குச் சொல்லுங்கள்.
குருநாதர்: அப்பா! ஒரு வாக்கில் சொல்லுகின்றேன்! இவன் மிகப்பெரிய ஞானி! கலியுகத்தை கணித்தவன். நிச்சயம் ஒரு கூட்டு பிரார்த்தனையில் எடுத்துரைக்கின்றேன்! கலியுகத்தில் இவை எல்லாம் நடக்கப்போகிறது! இவை எல்லாம் சித்தனால்தான் திருத்த முடியும் என எழுதி வைத்துள்ளான்.
51. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள (ஜோதிர்லிங்கங்கள், பஞ்ச பூத தலங்கள், சக்தி பீடங்கள், அறுபடை வீடுகள் போன்ற) புனித தலங்களில் ஆற்றலை (மஞ்சள், பச்சை, நீலக் கதிர்கள்) எவ்வாறு அதிக அளவில் உறிஞ்சுவது என்பதை தயவுசெய்து எங்களுக்குச் சொல்லுங்கள்.
குருநாதர்: அங்கு சென்று வந்துவிட்டாலே அனைத்தும் தெரிந்து விடும். ஆனால் முடியாது. அப்பா! சில இடங்களுக்கு சென்று விட்டாலே சக்திகள் அதிகமாக போய்விடும். அனைத்தும் வெறுத்து விடுவார்கள். அதனால் தான் விடுவதில்லை, இறைவன். பாப கணக்கு முடியும் வரை அவை சாத்தியமில்லை.
52. ஸ்லோகங்கள் மற்றும் பக்தி பாடல்களில் சமஸ்கிருதம்/தமிழ்/தெலுங்கு வார்த்தைகளின் உச்சரிப்பில் தேர்ச்சி பெறுவது எப்படி என்பதை தயவுசெய்து எங்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.
குருநாதர்: நிச்சயம், முதலில் ராமாயணம், மகாபாரதம் இவை ஓதி வரச்சொல். பின்பு உரைப்பேன்!
53. சமீபத்தில் அகஸ்தியர் பெருமான் 'ஸ்ரீசக்கரராஜ சிம்ஹாசனேஸ்வரி ஸ்ரீலலிதம்பிகை...' பாடலை இயற்றியதாகத் தெரிய வந்தது. சித்தர்கள் வேறு ஏதேனும் கர்நாடக இசைப் பாடல்களைப் பாடியுள்ளார்களா?
குருநாதர்: சித்தனுக்கு, மொழி ஏது, காலம் ஏது, ஜாதி ஏது? இறைவன் ஏது? அனைத்து சித்தர்களும், உலக நன்மைக்காக எழுதி வைத்துள்ளார்கள். ஆனால் மறைத்து வைத்துள்ளார்கள்.
54. அகத்தியர் அப்பா லோப முத்திரை அன்னை பாதமே போற்றி அப்பா திருத்தணி பக்கத்தில் தணிகை போளூர் சுயம்பு லிங்கேஸ்வரர் ஆலயம் உள்ளதுங்கய்யா அதனுடைய வரலாறு யாருக்கும் தெரியவில்லை நீங்கள் சொல்லுங்கள் அப்பா
குருநாதர்: இப்பொழுதுதான் சொன்னேன், இடம் பொருள் ஏவல். அங்கங்கு வந்து செப்பினால்தான் பலம் அதிகம். ஈசனிடத்தில் முறையிட்டு, ஈசனுக்கு அப்பொழுது வரவேண்டும் என்று தோன்றுகிறதோ, அப்பொழுது அவதாரம் எடுத்து வருவான். பல மனிதர்களும், திருத்தலங்கள் கட்டுகிறேன் என்று பிரச்சினைக்கு உள்ளாவதால், ஈசனுக்கு தெரியும், எப்பொழுது வர வேண்டும் என. சொல்வோம்! கவலை வேண்டாம்!
55. For navgragh prayer for public can I do only navgrah gayatri mantra japam and prathahna ( due to some circumstances in family I can't do deep and dhanya rituals)
குருநாதர்: நிச்சயம், முடிந்ததெல்லாம் செய்யச்சொல்.
56. Shivpuranam is in Tamil we cannot read and understand Tamil please suggest something for koot prathana.
குருநாதர்: அப்பா! மொழி பெயர்த்து உள்ளார்கள். திருவாசகத்தை ஒரு கிறித்துவனே மொழி பெயர்த்துள்ளான்.
57. In many readings sidhdhars has suggested to read ithihas like Rmayan, Mahabharta and Puranam. In recent reading at Rameshwaram Mahamuni told that people has changed these texts and if one reads that will it attract karma please tell us.
குருநாதர்: அறிந்தும்! வாசிக்க கர்மா வரும் என்று தான் உண்மையை கூற யாங்கள் வந்திருக்கின்றோம்.
அடியவர்: ஒரு தமிழ் புத்தகத்தை கொண்டு தர, அது உண்மை தானா என்று எப்படி உணர்வது?
குருநாதர்: உண்மையான மனம் இருந்தால், அதை படிக்க மனம் வராது!
அடியவர்: அது சரியா, தவறா என எப்படி தெரியும்?
குருநாதர்: கீதையிலேயே சொல்லிவிட்டான், உன் கடமையை செய், மீதியை யான் கொடுக்கின்றேன் என்று!
அடியார்: அது சரி! அப்படிப்பட்டவர்களுக்கு, நீங்கள், இந்த கர்மாவை பற்றி எல்லாம் சொல்லியே இருக்க கூடாது.
குருநாதர்: சாதாரண பக்தன், உண்மையாக இருந்தால், அந்த உண்மையே அவனுக்கு காண்பித்து கொடுத்துவிடும்.
58.Please tell us how can we do online kooth prathana using internet/social media.
குருநாதர்: செய்யச்சொல்!
59.How can we find divinity into particular temple when we visit there or it will attract karma.
குருநாதர்: குவியத்தில் (Lens) இதை கண்டு உணரலாம். அதை நாங்கள் கண்டு பிடித்துள்ளோம். இதை ஒரு ஆங்கிலேயன் பத்திரமாக வைத்துக் கொண்டு இருக்கின்றான் அப்பா! வரும் காலத்தில் அதையும் தெளிவுபடுத்துவேன். அதை அடைந்து விட்டால், நிச்சயம் இவ்வுலகம், அதை வைத்திருப்பவன் வசம் சென்றுவிடும்.
அடியவர்: கோவில்களில் இருக்கும் விக்ரகம் முதல் அனைத்தையும் திருடி கொண்டு போய் வைத்துள்ளான். 80 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவற்றை திரும்பி கொண்டு வருவதற்கு இன்னும் உங்களுக்கு நேரம் கிடைக்கவில்லையோ?
குருநாதர்: அப்பா! மனிதன் எப்பொழுது அறிவுள்ளவனாக இருக்கிறானோ, அப்பொழுது எடுத்து கொண்டு வந்து விடுவோம். அதனால் தான் அறிவுகளை பலப்படுத்திக்கொண்டே இருக்கின்றோம் இன்னும் கூட.
அடியவர்: அவை வந்துவிட்டால், தனிப்பட்ட மனிதர்களுக்கு கூட பக்தியும் பரவசமும் கூடிவிடும், ஆகவே அவை வராமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்கிறீர்கள்.
குருநாதர்: வந்துவிடும் எளிதில் கூட!
அடியவர்: அப்படியா!!! சரி!
குருநாதர்: அப்பா! எங்கள் பொருளை யார் திருடி சென்றாலும், உரிய காலத்தில், எங்கள் பொருள் எங்களிடத்திலே வந்து சேரும்!
அடியவர்: வந்து சேரும் என்பது சரி! ஆனால், உங்கள் பொருளை எடுக்க எப்பொழுது ஒருவன் கையை நீட்டுகிறானோ, அப்பொழுதே அவன் கையை வெட்டிவிட வேண்டும்!
குருநாதர்: நிச்சயமாக! நல்லோர் தீயோர் என பார்க்காமல், செல்லமாக விட்டுவிட்டோம். அதன் விளைவுதான் இது.
அடியவர்: அப்படியென்றால் அவனை நீங்கள் நல்லவன் என்றோ, கெட்டவன் என்றோ கூறாதீர்கள். பொழுது இருக்கும் தலை முறை, இப்படி எல்லாம் வாழலாம் என்று உணர்கிறார்கள்.
குருநாதர்: அப்பா! என்ன செய்ய! அவனும் எங்களிடமே வந்து அழுகிறான். என்ன செய்ய. கொடுத்துவிடுகிறேன்! நல்லவனாக மாறட்டும் என்று. என்ன செய்ய! மீண்டும் அந்த புத்தி வந்து விடுகின்றது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
