​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 19 February 2026

சித்தன் அருள் - 2124 - அன்புடன் அகத்தியர் - இராவணேஸ்வரர் ரகசியங்கள் - பகுதி 9!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. இராவணேஸ்வரர் ரகசியங்கள்  - பகுதி 9 ( நிறைவு பகுதி )

நாள் : 04/2/2026 (புதன்கிழமை ) 
நேரம் : காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகோணஸ்வரம், திருக்கோணமலை இலங்கை.

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்க வேண்டும்.

====================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
====================================

ஆதி சிவசங்கரியின் பொற் கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

=======================
# இராவணேஸ்வரர் சக்தி 
=======================

குருநாதர் :-  நிச்சயம் அப்பனே இவ்விஷயத்தை எல்லாம், அப்பனே யார் எங்கேயோ செப்பிக்கொண்டிருந்தால், இராவணன் கடும் கோபமாகிவிடுவான். அகத்தியனே பைத்தியம் போல்  இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றாயே என்று என்னையே அப்பனே. 

குருநாதர் :-  ஆனாலும் நிச்சயம் நிச்சயம் அவனுடைய பற்றி, அதாவது நிச்சயம் தன்னில் கூட. அவனுடைய பற்றி எதை என்று கூற, யாருக்குமே தெரியவில்லை அவனுடைய சக்தி. 

குருநாதர் :- அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மீண்டும் அதாவது ஞானிகள் எப்பேர்ப்பட்டவர்கள் என்றால், நிச்சயம் கலியுகம் நிச்சயம் எவை என்று கூற தர்மம் தலைகீழாக போகின்ற பொழுது, அதை நிற்பதற்கு எழுவார்கள் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "இந்த உலகத்துல தர்மம் எப்பல்லாம் தலைகீழா மாறுதோ, அப்பல்லாம் ஞானிகள் கண்டிப்பா வெளியே வந்துதான் ஆகணும். அவங்க ஏன் தங்களை வெளிக்காட்டிக்கிறாங்கன்னா, கெட்டது அதிகமாச்சுன்னா தர்மத்தை நிலைநாட்ட அவங்க வந்தே தீரணும்ங்கிறது ஒரு விதி. எந்த நேரத்துல, யார் மூலமா, எப்படித் தன்னை வெளிப்படுத்திக்கணும்னு அந்த ஞானிகளுக்கு நல்லாவே தெரியும்; அப்படி ஒரு சரியான சந்தர்ப்பம் வரும்போது அவங்க தானாவேவருவாங்க." )

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட தர்மத்தை எவை என்று அறிய நிச்சயம் பின் மேல் நோக்கி வைப்பார்கள். தலை நிமிர  வைப்பார்கள். எப்படி எல்லாம் சொல்ல வேண்டும் நிச்சயம் தன்னில் கூட அவர்கள் எப்படி எல்லாம் நிச்சயம் எழுதி வைத்துள்ளார்களே நிச்சயம். அப்படி என்றால் ஞானிகள் நிச்சயம் பொய்யானவர்களா என்ன? 


சுவடி ஓதும் மைந்தன் :-  ( "தர்மம் எப்பல்லாம் குறையுதோ, அப்ப எல்லாம் ஞானிகள் தங்களை யாரு மூலமா வெளிகாட்டணுமோ அவங்க மூலமா வந்து உண்மையைச் சொல்லுவாங்க. பழைய காலத்துல தர்மத்துக்காக வாழ்ந்தவங்க எல்லாம் மறைஞ்சுட்டதால, அவங்க எழுதி வச்சதெல்லாம் பொய்யாகிடுமோன்னு நினைக்காதீங்க. இன்னைக்கு இருக்குற நிலைமையில தர்மம் அப்படியே தலைகீழா போய்க்கிட்டு இருக்கு. இந்த நேரத்துல நாம இறைவனை கும்பிடுறதோ, தர்மம் பேசுறதோ எல்லாம் வீணாப் போயிடுமான்னு கேட்டா... கண்டிப்பா இல்ல! அந்தத் தர்மத்தை மறுபடி நிலைநாட்ட, ஏதோ ஒரு ஞானி யாராவது ஒருத்தரைத் தேர்ந்தெடுத்து, 'டேய், இப்படித்தான்டா வாழணும்'னு வழிகாட்டிட்டு கண்டிப்பா வருவாரு. அவர் மூலமா அந்தத் தர்மம் மறுபடி உயிர் பெறும்." )

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட புத்தனாயினும் சரி, இயேசுவானாயினும் நபிகளாயினும் சரி, எல்லோருக்கும் இது பொருந்தும். 

அடியவர் :- ம் 

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக கலியுகத்தில் பொய்யான பக்தியிலே இதற்கு காரணம் நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கலியுகத்தில் பொய்யான பக்தியிலே இதற்கு காரணம்,  

அடியவர் :- உண்மையான பக்தி இல்லை 

===========================================
# அகத்திய மாமுனிவர் அருளால், உயர் ஞானிகளின் சக்திகளை பெறப்போகும் அகத்திய மாமுனிவர், சித்தர்கள்  அடியவர்கள்…… 
===========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட இதனால் பின் அதர்மம் தலை தூக்கி விட்டது. நிச்சயம் தர்மத்தை காக்க ஞானிகளே ஓடோடி வருவார்கள். இவ் ஞானிகளைப் பற்றி எல்லாம் யான் சொல்வேன். 

குருநாதர் :-  நிச்சயம் தன்னை கூட இயேசுவை பற்றி சொல்லத்தான் போகின்றேன். புத்தனை பற்றியும்  சொல்லத்தான் போகின்றேன் நிச்சயம் தன்னில் கூட. எவை என்று நபிகள் நாயகம்  பற்றியும் சொல்லத்தான் போகின்றேன். 

குருநாதர் :-  இன்னும் அப்பனே பல புலவர்கள் நிச்சயம் தன்னில் கூட நல்லதையே தர்மத்தை நிலை நாட்ட, நிச்சயம் அவர்கள் வந்தார்கள். ஆனால் அவர்கள் பின் சொல்லை ,மனிதன் யாருமே நிச்சயம் ஏற்று நடப்பது இல்லை. 

குருநாதர் :-  இதனால் அழிவுகளே  காரணம். அவர்களைப் பற்றி நிச்சயம் தன்னில் கூட தெரிவிப்பேன். நல்லோர்களைப் பற்றி தெரிவிப்பேன். இன்னும் ஞானங்களை பெறச் செய்வேன். 

குருநாதர் :-  நிச்சயம் அவர்கள் ஆற்றலை கூட ஏன் எதற்காக சொல்ல வேண்டும் என்றால், நிச்சயம் அவர்களைப் பற்றி சொன்னால், பின் தெளிவை நீங்கள் பெற்றுவிட்டால், அவர்களுடைய சக்திகள் உங்களுக்கு நிச்சயம் பிறக்கும். இதைத்தான் யார் அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். 

அடியவர் :- ம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஏன் ஞானிகளை பத்தி திரும்பி நான் சொல்லணும்? ஏனென்றால் அவங்களுடைய ஆற்றல் என்ன ஆகும்? அவங்களை பத்தி நம்ம கேட்க, கேட்க, அவங்களோட சக்திகள் நம்மளுக்கு வரும்.

============================================
# மின்சாரம் அருகிலே சென்றாலே இழுத்துவிடும்
============================================

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட மின்சாரம் , ஆனால் சில இடங்களில் தொட்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, ஆனாலும் அப்பனே பின் அதிகமாக ஓடும் நிச்சயம் தன்னில் கூட, பின் மின்சாரம் அருகிலே சென்றாலே இழுத்துவிடும் என்பேன். ஞாபகம் வருகிறதா அனைவருக்கும்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ("இப்ப சாதாரணமா ஒரு 12 வோல்ட் கரண்ட்ல கை வச்சா லைட்டா ஷாக் அடிக்கும், ஆனா அதுவே ஒரு ஹை வோல்டேஜ் (High Voltage) பக்கத்துல போனா என்ன ஆகும்? அது நம்மள அப்படியே இழுத்துடும்ல! அதே மாதிரிதான் ஞானிகளும் ஒரு ஹை வோல்டேஜ் மாதிரி. அவங்களோட சக்தியைப் பத்தி நாம நினைச்சுக்கிட்டே இருந்தாலே, அந்தப் பவர் நம்மளுக்குள்ள இறங்க ஆரம்பிச்சிரும். குறிப்பா அந்த 'சுராக்கல்' சக்தியை நீங்க மனசுல உருப்போட்டுக்கிட்டே இருந்தீங்கன்னா, அந்த ஆற்றல் தானாவே உங்களை வந்து அடையும். அப்படி அந்தத் தெய்வீக ஆற்றல் வரும்போது, அந்தச் சக்திகளே உங்களை வசியமாகித் தேடி வர ஆரம்பிக்கும். இதுதான் ஞானிகளோட அந்தப் பெரிய ரகசியம்.")

===========================================
# பல தர்ம நூல்கள் என்ன ஆனது ? ஏன் இப்படி ஆனது ?
===========================================

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் கூட பல நூல்கள் தர்மத்தை பற்றி எடுத்துரைத்தன. அவ்  பின் தர்மம்  நூல்கள் நிச்சயம் பின் அனைத்தும் நிச்சயம் தன்னில் கூட, பின் எரித்தும் விட்டனர். கடலிலும் கூட. இன்னும் கூட நதிகளிலும் கூட விட்டுவிட்டனர் மனிதர்கள். இவை தனை நிச்சயம் பின் தெரிந்து கொண்டால் மனிதன் வாழ்ந்து விடுவான் என்று 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( தர்மத்தை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்கள். சுவடிகள் எல்லாம் சரியா,  நிறைய எழுதி இருக்காங்க.  ஆனால் இதையெல்லாம் வரும் காலத்துல மனிதன் தெரிஞ்சுக்கினான்னா பிழைச்சிருவாங்க. அப்படினு சொல்லி மறைச்சிட்டாங்க மறைச்சிட்டாங்க  )

அடியவர் :- யாரு இதெல்லாம்,  யார் சொல்றாங்க?  இது அவனும் மனிதன் தானே? 

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட அதனால்தான் அப்பனே, கலியுகத்தில் மனிதன் தான் அழிவு என்றெல்லாம் அப்பனே.

==============================================
# எப்படி  இவ் வாக்குகளை சொன்னால்  மதிப்பு கூடும்?
==============================================

குருநாதர் :- அப்பனே இதனால்தான் அப்பனே இன்னும் கூட அப்பனே மந்திரங்கள் கூட இன்னும் தந்திரங்கள் கூட அப்பனே நிச்சயம் பின் சித்தரிடத்தில் அப்பனே அனைத்தும் சொல்லித் தருவோம் அப்பனே. ஆனாலும்  முதலில் நிச்சயம் தன்னில் கூட எதிலிருந்து போக வேண்டுமோ அதிலிருந்து சென்றால்தான் மதிப்பு கூடுதலாக. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாத்தையும் நான் சொல்லிக் கொடுப்பேன். எங்கே இருந்து ஆரம்பிக்கணும், எங்கிருந்து ஆரம்பிக்கணும் அதெல்லாம் முதலில் தெரிஞ்சுக்கணும். 

=======================================
# அனைத்திற்கும் அடிப்படையே ஆதாரம் 
=======================================

குருநாதர் :- அப்பனே அடிப்படையே தெரியாமல் அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டால் அப்பனே என்ன லாபம்? 

========================================
# ஏன் இறைவன் சிறு சிறுதாக புண்ணியம் கொடுக்க வேண்டும்?
========================================

குருநாதர் :- அப்பனே எதை என்று கூற அப்பனே நிச்சயம் அதனாலதான் அப்பனே அடிப்படையிலிருந்து அப்பனே அனைத்தும் சொல்லிக்கொண்டு அப்பனே அனைத்தும் வென்று விடலாம் என்பேன் அப்பனே. 

குருநாதர் :- ஆனாலும் அப்பனே இதற்கும் அப்பனே பின் இறைவன் அப்பனே சிறு சிறுதாக புண்ணியம் கொடுக்க வேண்டும் என்பேன் அப்பனே. 

அடியவர் :- ( வியப்பில் ) ஓ…….

சுவடி ஓதும் மைந்தன் :-  ("இறைவனைப் பத்தியும் இந்த ஆன்மீக ரகசியங்களைப் பத்தியும் தெரிஞ்சுக்கணும்னாலே அதுக்கு ஒரு கொடுப்பினை வேணும். இந்த விஷயங்களை சும்மா எல்லாரும் பேசிட முடியாது, அப்படிப் பேசத் தெரிஞ்சுக்கிறதே ஒரு பெரிய புண்ணியம் தான். அதனாலதான் இறைவன் என்ன பண்றாருன்னா, எடுத்த உடனே எல்லாத்தையும் கொடுத்துடாம, நாம கொஞ்சம் கொஞ்சமா இந்த உண்மைகளைத் தெரிஞ்சுக்கிறதுக்காகவும், அதைப் மத்தவங்ககிட்ட பேசத் தெரிஞ்சுக்கிறதுக்காகவும் அந்தப் புண்ணியத்தை நமக்குக் கொஞ்சம் கொஞ்சமாப் பிரித்துக் கொடுக்கிறாரு. அந்தப் புண்ணியம் சேரச் சேரத்தான் நமக்குள்ள அந்தப் பெரிய உண்மைகள் எல்லாம் புரிய ஆரம்பிக்கும்." )

===================================================
# இவ் வாக்குகளை கேட்ட , கேட்க உள்ள  , இனிமேல் படிக்கும் அடியவர்களுக்கு …..
====================================================

குருநாதர் :- அப்பனே ஒரு விதத்தில் நீங்களும் தேடி அலைந்து உள்ளீர்கள். அதனால் தான் அப்பனே இப்பொழுது தெரிந்து கொள்ள முடிகின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "நிஜத்தைச் சொல்லப்போனா, நீங்க ஏதோ ஒரு விதத்துல உண்மையை அலைஞ்சு திரிஞ்சு தேடிட்டு இருக்கீங்க. 'எதுதான் நிஜம், எது பொய், இந்த உலகம் எப்படித்தான் இயங்குது?' அப்படின்னு உங்க மனசுக்குள்ள ஒரு பெரிய தேடல் ஓடிக்கிட்டே இருக்கு. அந்தத் தேடலும், நீங்க எடுத்த முயற்சியும்தான் இன்னைக்கு உங்களை இந்த இடத்துல கொண்டு வந்து நிறுத்தியிருக்கு. நீங்க இறைவனைத் தேடி அலைஞ்ச அந்தப் புண்ணியத்தாலதான், இன்னைக்கு இந்தச் சரியான இடத்துக்கு வந்து சேர்ந்திருக்கீங்கன்னு அவர் ரொம்பத் தெளிவாச் சொல்றாரு." )

=======================================
# ஏன் 50% சக்தி வேண்டும் - எந்த ஒரு ஆலயமும் செல்ல ?
=======================================

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய இதனால் பின் எவ்வாறு நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் புரிந்தும் கூட ஏன் எதற்கு பின் அதாவது ஒரு திருத்தலத்திற்கு நிச்சயம் சென்றால் அதற்கு நிச்சயம் பாதி அளவிற்காவது சக்திகள் பின் தன் உடம்பில் இருக்க வேண்டும் இல்லையென்றால் நிச்சயம் தன்னில் கூட பின் வணங்குவதும் வீணாக போய்விடும் 

சுவடி ஓதும் மைந்தன் :-  (  "ஒரு புண்ணியமான திருத்தலத்துக்குப் போகணும்னா, அங்க இருக்குற முழு சக்தியை நாம வாங்கிக்க நமக்குள்ளயும் ஒரு தகுதி வேணும். இப்ப அந்த இடத்துல 100% சக்தி இருக்குன்னா, அதுல பாதியையாவது அதாவது ஒரு 50% சக்தியையாவது நம்ம உடம்புலயும் மனசுலயும் தாங்குற அளவுக்கு நாம பக்குவப்பட்டு இருக்கணும். ஆனா வெறும் 20% சக்தியை மட்டும் வச்சுக்கிட்டு அங்க போனோம்னா, அந்தப் பயணமே வேஸ்ட்டுன்னு அவர் சொல்றாரு. ஏன்னா, நம்மகிட்ட போதுமான இருப்பு (Energy) இல்லைன்னா, அங்க இருக்குற அந்தப் பெரிய ஆற்றலை நம்மளால உள்வாங்கிக்கவே முடியாது." ) 

============================================
# ஏன் இல்லத்தில் முதலில் தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும் ?
============================================

குருநாதர் :- அதனால்தான் பின் நிச்சயம் இப்படி சக்திகள் எல்லாம் இல்லத்திலே தீபங்கள் ஏற்றி. நிச்சயம் தன்னில் கூட.  பின் பல ஞானிகளை பின் சொல்வதை கேட்டு, பல பாடல்களை பாடி, நிச்சயம் தன்னில் கூட, உங்களுக்குள்ளே சக்திகளை ஏற்றி, சென்றால், திருத்தலத்திற்கு நிச்சயம் தன்னில் கூட அருளும், அனைத்தும் கிட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( "ஒரு பெரிய கோயிலுக்குப் போய் அங்க இருக்குற சக்தியை நாம முழுசா வாங்கிக்கணும்னா, அதுக்கு முன்னாடி நம்ம வீட்லயே நிறைய நாள் , தொடர்ந்து தீபம் ஏத்தி முறைப்படி பட்டு பாடி  வணங்கணும். அப்படி வீட்ல சாமி கும்பிட்டு நமக்குள்ள ஒரு சக்தியைத் தயார் பண்ணிக்கிட்டு கோயிலுக்குப் போனாதான், அங்க இருக்குற அந்த 50% சக்தியாவது நமக்குக் கிடைக்கும். இது எதுவுமே பண்ணாம, மனசுல ஒரு பக்தியோ சக்தியோ இல்லாம வெறுமையா கோயிலுக்குப் போயிட்டு வந்தா, போன மாதிரியே வெறும் கையோடதான் திரும்பி வருவோம். )

=====================================
# இல்லத்தில் படித்தால் , பள்ளியில் ….
# இல்லத்தில் வழிபட்டால் , ஆலயத்தில் …
=====================================

குருநாதர் :- அப்பனே கல்வி சாலைக்கு செல்லுகின்றீர்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அங்கு சென்று பின் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது ஆசிரியன் என்று சொல்லுகின்றோம் என்றால், எழுது என்று, நிச்சயம் எழுது என்று. அதேபோல் நிச்சயம் பின் இல்லத்தில் பின் நன்றாக பின் படித்து வரவேண்டும் என்று சொன்னால், இல்லத்திலே நன்றாக படித்துவிட்டு, அங்கே எழுதினால், அப்பனே வெற்றி கிடைக்கும் அல்லவா?  யோசித்துக் கொள்ளுங்கள் அப்பனே. 


சுவடி ஓதும் மைந்தன் :-  (  "வீட்ல நல்லா படிச்சிட்டு போனாதான் ஸ்கூல்ல போய் எக்ஸாம் எழுத முடியும். அதே மாதிரிதான் கோயிலும் ஒரு கல்விச்சாலை மாதிரிதான். நைட்டெல்லாம் உட்கார்ந்து வீட்ல நல்லா படிச்சிட்டு போய் பரீட்சை எழுதினா எப்படி பாஸ் ஆகுவோமோ, அப்படி வீட்லயே பக்திங்கிற பாடத்தை நல்லா படிச்சு முறையாக வழிபாடு செய்து , ஆன்மீக புத்தகங்கள் (பதிகங்கள் ) எல்லாம் வாசிச்சு,  நமக்குள்ள ஒரு ஸ்ட்ரென்த்தை (Strength) ஏத்திக்கணும். எதுவுமே படிக்காம ஸ்கூலுக்கு போனா எப்படி ஃபெயில் ஆவோமோ, அதே மாதிரி வீட்ல எந்தப் பயிற்சியும் இல்லாம கோயிலுக்குப் போனா அங்க இருக்குற சக்தி நமக்குக் கிடைக்காது. ஆனா நீங்க தயாரா போனீங்கன்னா, அங்க இருக்குற அந்தத் தெய்வீக சக்தி உங்களை வந்து அடைஞ்சு, அப்படியே 'ஃபுல்ஃபில்' (Fulfill) ஆகிடும்." )

=====================================
# இவ் அடிப்படை தத்துவமே மனிதனுக்கு புரியவில்லையே….
=====================================

குருநாதர் :-  ஆனாலும்  அப்பனே இவ் அடிப்படை தத்துவமே மனிதனுக்கு புரியவில்லையே எப்படி வெற்றி காணப் போகின்றான்? 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஆற்றல் நிச்சயம் தன்னில் கூட அதாவது கை கடிகாரம் இயக்கம் கூட அப்பனே அதற்கும் ஆற்றல் தேவைப்படுகின்றது பின் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இல்லையென்றால் என்ன லாபம்? 

குருநாதர் :-  ஆனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் மனிதனின் இயக்கத்திற்கும் அப்பனே ஒரு மின்கலம் என்ன எவை என்று அறிய யோசித்துக் கொள்ளுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் இயக்குவதற்கு ஒரு இயக்குவதற்கு ஒரு பேட்டரி தேவை. 

அடியவர் :- மனிதனுக்கும் ஒரு பேட்டரி வேணும். 

குருநாதர் :- அப்பனே கலியுகத்தில் அனைவரும் அதாவது நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் மின்கலத்தில் அப்பனே பின் சேகரித்து இருப்பது 20 பின் சதவீதமே என்பேன் அப்பனே. இதை வைத்து நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறு என்பதை எல்லாம் மீண்டும் அப்பனே சில பேருக்கு அப்பனே பின் நிச்சயம் பத்து தான். மீண்டும் அப்பனே பின் ஐந்து. இவையெல்லாம் அப்பனே இன்னும் கூட அப்பனே எப்படிப்பா இவ்வாறாக இருந்தால்? 

=====================================
வாக்கு சுருக்கம்:  இந்தக் கலியுகத்தில் வாழும் பெரும்பாலான மனிதர்களிடம் இருக்க வேண்டிய ஆன்மீக ஆற்றலானது, ஒரு மின்கலத்தில் (Battery) சேமிக்கப்பட்ட மின்சாரத்தைப் போல மிகக் குறைந்த அளவிலேயே உள்ளது. ஒருவருக்கு இருக்க வேண்டிய முழுமையான சக்தியில் வெறும் இருபது சதவீதமே (20%) எஞ்சியுள்ளது; இன்னும் சிலருக்கோ அது பத்து சதவீதமாகவும், சிலருக்கு வெறும் ஐந்து சதவீதமாகவும் மிக மோசமாகக் குறைந்து காணப்படுகிறது. இவ்வளவு குறைவான ஆற்றலைத் தங்களுக்குள் வைத்துக் கொண்டு, இறைவனின் பேராற்றலை எவ்வாறு முழுமையாக உள்வாங்க முடியும்?. இத்தகைய பலவீனமான ஆன்மீக நிலையில் இருப்பவர்கள், எவ்வாறு தங்களை மேம்படுத்திக் கொள்ளப் போகிறார்கள்?
=====================================


==============================================
# உங்கள் மின்கலத்தின்  சக்தி அதிகரிக்கும் சித்த ரகசியங்கள் 
==============================================

குருநாதர் :- ஆனாலும்  அப்பனே இதனால்தான் அப்பனே பின் உயராற்றல் பெற்ற ஞானிகளை, அப்பனே உயர்ந்த எவை என்று கூற, பின் எதை என்று கூற, இப்பொழுது பின் சுராக்கல்லை பற்றி சொன்னேனே அவையெல்லாம் எடுத்து வந்தால், அதனைப் பற்றி பேசினாலே இங்கு ( மின்கலம் சக்தி ) சாதாரணமாக ஏறிவிடும் அப்பா. 

குருநாதர் :- அதனால்தான் அப்பனே எடுத்து நிச்சயம் ஞானிகளை அப்பனே பின் அவரவர் பின் ஞானிகள் பெயர் உச்சரித்தாலே அப்பனே நிச்சயம் ஆற்றல் கூடும் அப்பா. 

குருநாதர் :-  அதனால்தான் அப்பனே அங்கும் இங்குமாக  நிச்சயம் பின் அதாவது பின் பின் நால்வர் பாடிய பாடல்களில் இன்னும் கூட அப்பனே பின் பல பல நிச்சயம் ஞானிகளை பற்றி நிச்சயம் பின் பேசினாலே, நிச்சயம் அப்பனே பின் உங்களுக்குள் இருக்கும் மின்கலம் எதை என்று கூற எவை என்று கூற பின் சதவீதம் ஏறிக்கொண்டே இருக்கும் என்பேன் அப்பனே. 

==========================================
# சித்தர்களின் தலையாய வேலை என்ன ?
==========================================

குருநாதர் :-  அதனால்தான் நிச்சயம் தன்னில் கூட அழைத்து, அழைத்து, உண்மைகளை சொல்லி, சொல்லி, பின் மின்கலத்தில் பின் ஆற்றல்களை அதிகமாகிவிட்டால், அப்பனே உங்களை நீங்கள் வெல்லலாம். பின் மற்றவர்கள் வெல்ல வைக்கலாம். 

குருநாதர் :-   அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் இதுதான் அப்பனே பின் எங்களுடைய வேலை. எங்களுடைய வேலை. 

குருநாதர் :-  அப்பனே பின் அதுதான் பின் தர்மம். பின் தலை கீழாக போய்க்கொண்டிருக்கின்றது அதே பின் நிலைநாட்ட பின் எங்களுடைய வேலைக்காகத்தான் பின் வந்திருக்கின்றோம் அப்பனே. அதை நிலைநாட்டிவிட்டால் எங்களுக்கு ஏதப்பா வேலை? 

அடியவர் :- ஓ….. ரொம்ப நன்றி தாத்தா. அப்ப சித்தர்கள் என்ன பண்றாங்க…ஞானிகள்  பத்தி பேசினாதான் உங்க கூட இருக்கிற பேட்டரி சார்ஜ் ஆகும். அப்பதான் நல்ல நல்ல காரியம் நடக்கு. இதெல்லாம் பண்ணலைன்னா,  ஆமா நாங்க எதுக்கு இங்க இருக்கோம் அப்படிங்கிறாரு.

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுக்காகத்தான் நாங்க வந்திருக்கிறோம். சொல்லி சொல்லி ரீசார்ஜ் பண்ண தான் வந்திருக்கிறோம்.

அடியவர் :- ரொம்ப நன்றி தாத்தா. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ரொம்ப நன்றி சார் ஆமா அதுக்காகத்தான் வந்திருக்கிறோம் அப்ப நீங்க ரீசார்ஜ் ஆயிட்டீங்கன்னா,  எங்களுக்கு என்ன இருக்கு வேலை?  தேவையே இல்லை. நீங்க நல்லா செஞ்சீங்க என்றால் ,  நல்லா இப்படி வாழணும்னு தெரிஞ்சுக்கினீங்கன்னா எங்களுக்கு வேலையே இல்லை.  

குருநாதர் :- நிச்சயம் தன்னில் கூட இதனால் வரை நிச்சயம் பின் எவை என்று கூற  போகட்டும் போகட்டும் என்று இருந்தோம். ஆனால் நிச்சயம் வருங்காலத்தில் யார் யார் யார் மூலம் பக்திகள் செலுத்தி, பின் மற்றவர்களுக்கும் நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்து பின் வைத்திருக்கின்றோம் நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  பின் மீண்டும் பின் எதை என்று கூட அழகாக பின் சிவபுராணத்தை ஓதுக. 


இலங்கை அடியவர் :- ( "ராவணனோட உடலை ஒரு குறிப்பிட்ட இடத்துல பரம்பரை பரம்பரையா பாதுகாத்துட்டு வர்ற ஒரு முப்பது குடும்பங்கள் இருக்குறாங்க. அவங்க அந்த ரகசியம் வெளிய போயிடக்கூடாதுங்கிறதுக்காகத் தங்கள் ஊரை விட்டு வெளியில போக மாட்டாங்க, வெளியூர்ல பொண்ணு எடுக்கவோ கொடுக்கவோ மாட்டாங்க. அந்த மலைக்குக் கீழதான் ராவணனோட உடல் இருக்குதுன்னு அவங்க உறுதியா நம்புறாங்க. அதே மாதிரி ராவணேஸ்வரனோட மருத்துவ ஏடுகள் எல்லாம் இன்னொரு இடத்துல ரகசியமாப் பதிச்சு வச்சிருக்காங்க. இந்த விஷயம் தெரிஞ்ச சில பேர் அங்க போய் தவம் செஞ்சா, அவங்களுக்குத் தேவையான மருந்து ரகசியங்கள் மட்டும் வெளிப்படும், அதை மட்டும் குறிப்பு எடுத்துட்டு வருவாங்களாம். ஆனா இப்ப கவர்மெண்ட் அங்க பாறைகளை உடைக்கிறது, வேலை செய்யுறதுன்னு இருக்குறதால மலைக்கு மேல போக விடுறது இல்ல, அடிவாரம் வரைக்கும் தான் போக முடியுது. ராவணனைப் பத்தின இந்த ரெண்டு முக்கியமான இடங்களும் இன்னும் மர்மமாவே இருக்குது)

அடியவர்கள் :- ( சிவபுராணம் ஓதுதல் )

====================================================
# உண்மையில் சித்த முறை கல்வி எப்படி இருக்கும் என்ற ரகசியம் 
==================================================== 

குருநாதர் :-  அப்பனே, அறிந்தும், இன்னும் கூட, அப்பனே, ஏராளமான விஷயங்கள் அப்பனே காத்துக் கொண்டிருக்க, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அப்பனே எப்பொழுது காலத்திற்கு ஏற்றவாறு அப்பனே சொன்னால் தான் புரியும் அப்பா. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரே முறையில் அப்பனே தேர்வு எழுதி அப்பன் நிச்சயம் தேர்ச்சி பெற்றுவிட்டால், அப்பனே பின் தேர்ச்சி பெற முடியுமா என்ன அப்பனே நீ கூறு? 

குருநாதர் :-  அப்பனே, பின் ஆனாலும் பின் சிறு சிறுதாக அப்பனே பின் இப்பொழுது சொன்னேன். இன்னும் உங்களுக்கு ஆற்றல் அதிகரித்து சொன்னால் தான் புரியும் அப்பா. 

குருநாதர் :-  அப்பனே, யாங்கள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால்  அப்பனே கவலை வேண்டாம் அப்பனே. அப்பனே, இதுவே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சிறிது ஆற்றல் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் கேட்டாலே அப்பனே பெருக்கும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-   இதை இன்னும் யாராவது  கேட்டாலும் இதெல்லாம் இன்னும்…

அடியவர் :-  ஆற்றல் அதிகமாகும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆற்றல் அதிகமாகும். 

குருநாதர் :-  அப்பனே, இன்னும் அப்பனே சொல்லிக்கொண்டே இருந்தால் உங்கள் ஆற்றல் அதிகரித்து விடும் என்றால், அப்பனே உன்னுடைய ஆற்றலை அதிகரித்து விட்டால் என்ன ஆகும் தெரியுமா அப்பா?  உடைந்து விடும் உடம்பு.

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப உங்க உடம்பு எவ்வளவு தாங்குதோ  அவ்வளவுதான் நான் சொல்ல முடியும். அப்ப இன்னும் நான் வந்து சொல்லி இருந்தா உடம்பு என்ன ஆகும்?

அடியவர் :-  உடைஞ்சு போயிடும்.

சுவடி ஓதும் மைந்தன் :-   உடைஞ்சு போயிடும்ப்பா. 

===========================================
# எனக்கு ஏன் தனிப்பட்ட வாக்கு வரவில்லை ? 
# எனக்கு  எப்போது தனிப்பட்ட வாக்கு கிடைக்கும் ?
# எதனால் எனக்கு தனிப்பட்ட வாக்கு உரைக்கவில்லை ?
===========================================

குருநாதர் :-  அப்பனே, சித்தன் வாக்குகளை கேட்பதற்கும் அப்பனே நிச்சயம் ஆற்றல் வேண்டும் அப்பா. அவ் ஏற்ற அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் உங்களுக்கு தெரியாதப்பா., எங்களுக்குத்தான் தெரியும் என்பேன்  அப்பனே. அதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாருக்கு எவ்வாற்றல் இருக்கின்றது என்பதெல்லாம் அப்பனே சிறிதாகவோ அல்லது பெரிதாகவே வாக்குகள் யாங்கள் எடுத்துரைக்கின்றோம்.

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப உங்களுடைய ஆற்றல் எவ்வளவு இருக்குதுன்னு எங்களுக்கு தெரியும் உங்களுக்கு தெரியாது அதுக்கு தகுந்தார் மாதிரிதான், நாங்க வந்து சொல்லுவோம். 

குருநாதர் :-  அப்பனே, ஆற்றல் இல்லாதவர்கள் கூட வாக்கை கேட்டால் அப்பனே அதனால்தான் அப்பனே சற்று பொறுத்திரு பின் திருத்தலத்திற்கு சென்று மீண்டும் கேள் என்று சொல்லி அனுப்பி விடுகின்றோம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஏன் வாக்கு வரலைன்னா ஆற்றல் லெவல் இல்லை. அப்ப நீ திருத்தலத்திற்கு எல்லாம் போயிட்டு வா. ஆற்றலை பெற்றுக் கொண்டு வா. அப்ப நான் வந்து சொல்றேன். 

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறு தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனிதன் காலப்போக்கில் சித்தனை அப்பனே நிச்சயம் ஒரு ஜோதிடனாக ஆகிவிட்டானப்பா. 

அடியவர் :- ( சிரிப்பு )

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப காலப்போக்கில் சித்தர்களை.

அடியவர் :-  ஜோசியர்.

சுவடி ஓதும் மைந்தன் :- ஜோசியன் ஆக்கிட்டாரேப்பா.

அடியவர் :- குறி கேக்குறவர்.

சுவடி ஓதும் மைந்தன் :-  குறி கேக்குற மாதிரி ஆயிடுச்சுப்பா. 

குருநாதர் :-  அப்பனே, அனைத்துக்கும் அப்பனே யாங்கள் வருவோம். பின் அதாவது பின் இறங்கி வருவோமா என்றால் அப்பனே நிச்சயம் இல்லையப்பா. ஆற்றலுக்கு தகுந்தவாறு தான் என்பேன்  அப்பனே. பக்குவப்பட்டவனுக்கு என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப எல்லாருக்காக நாங்க இறங்கி வருவோமான்னு சொன்னா இல்லை. பக்குவப்பட்டவனுக்கு மட்டும்தான். பக்குவம்னா என்னது?

அடியவர் :-  மெச்சூரிட்டி தான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  மெச்சூரிட்டி. இறைவன் எங்க ஏது என்று  தேடுனவங்களுக்கும்,  இறைவன் இருக்கிறாரா?  நல்லா இதெல்லாம் தெரிஞ்சிருக்கு பாருங்க…அதுல ரொம்ப ஆற்றல் உள்ள அவங்களுக்கு மட்டும்தான் சொல்லணும். 


குருநாதர் :-  அப்பனே, மீறி எங்களுடைய அப்பனே நிச்சயம் தன்னில் கூட சொன்னாலும், அப்பனே எங்களுடைய ஆற்றல் அவர்களை தாக்கி, அப்பனே கீழாக போய்விடுவார்கள் என்பேன்  அப்பனே. அதனால்தான் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப அந்த ஆற்றல் தாங்கக்கூடிய வலிமை வந்து உங்களுக்கு இருக்கணும்.

அடியவர் :-  இல்லனா காலி.

சுவடி ஓதும் மைந்தன் :-  இல்லைன்னா.

அடியவர் :- காலி.

சுவடி ஓதும் மைந்தன் :-    நாங்க சொன்னாலே என்ன ஆயிடும்?

அடியவர் :-  தாக்கிடும்.

சுவடி ஓதும் மைந்தன் :-   தாக்கிடும்ப்பா நீங்க காலி ஆயிடுவீங்கப்பா. 

குருநாதர் :-  அப்பனே, இதனால்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சித்தனுடைய அப்பனே நிச்சயம் வாழ்க்கை வரலாறு பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவனுக்கும் தெரியாதப்பா அப்படி தெரிந்து கொண்டாலும் நிச்சயம் தன்னில் கூட அவன் பைத்தியம் தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   அப்ப சித்தனுடைய வாழ்க்கை யாரும் தெரிஞ்சுக்க முடியாது. அப்ப தெரிஞ்சுக்க முற்பட்டாலும் பைத்தியக்காரன் ஆயிடுவான். 

குருநாதர் :-  அதனால்தான் அப்பனே பின் யாங்களே வந்து பின் சொல்லப் போகின்றோம் அப்பனே ஏனென்றால் தர்மம் தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது. 

குருநாதர் :-  அப்பனே, இன்னும் கூட அப்பனே பின் ஞானிகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது நாயன்மார்கள் அப்பனே பின் எத்தனை இன்னும் கூட அப்பனே பின் ( வரலாறுகள் எல்லாம் ) அழிவுற்றது.  பின் அப்பனே அவர்களைப் பற்றியும் கூட எடுத்து வருவேன் அப்பனே.


சுவடி ஓதும் மைந்தன் :- நாயன்மார்கள்  எதனை பேர் என்று சொல்றாங்க? 60 பேர்?

அடியவர் :-  63 நாயன்மார்கள் 

சுவடி ஓதும் மைந்தன் :-  63 நாயன்மார்கள்  அப்படித்தான் இன்னும் வந்து நிறைய பேர் இருக்கிறாங்க வந்து. ஆனா அவங்களெல்லாம் என்னன்னு தெரியல. தெரியல மறைஞ்சு போயிடுச்சு அதெல்லாம் நான் இன்னும் இன்னும் எடுத்து வருவேன். 

================================================
# எப்போது துன்பம் கூட உங்களை தாக்க பயப்படும்?
================================================ 

குருநாதர் :- எப்படி பக்தியை செலுத்தினார்கள். இப்படி பக்தியை செலுத்தினால் எவ்வாறு எல்லாம் சோதனைக்கு உட்பட்டார்கள் அந்த சோதனை மூலம் உடலுக்கு நல்லதை செய்தார்கள் பின் அவருடைய பின் ஆற்றலை கூட நிச்சயம் சொல்கின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட அவ் ஆற்றல் உங்களை சேர்கின்ற பொழுது நிச்சயம் தன்னில் கூட நீங்களும் நினைத்த காரியங்கள் நிச்சயம் தன்னில் கூட துன்பம் கூட உங்களை தாக்க பயப்படும் என்பேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சில ஞானிகள் எல்லாம் எடுத்து உரைச்சோம்னா உங்களுக்கு வந்து துன்பம் கூட என்ன ஆகும்?

அடியவர் :-  பயப்படும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  உங்களை பார்த்து பயப்படும். 

குருநாதர் :-  அப்பனே, ஏன் பல சூட்சமங்கள் அதாவது ரகசியங்கள் சொல்ல வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட ஞானிகளை பார்த்து துன்பமே பயப்பட்டு அப்பனே பின் கூற வேண்டும். இதனால் அப்பனே பின் நிச்சயம் அது துன்பத்தை வெல்ல வேண்டும் என்றால் கலியுகத்தில் ஞானிகளைப் பற்றி சொல்லியே ஆகவேண்டும் அப்பா. 

குருநாதர் :-  அப்பனே, உண்மை தெரிந்து கொள்ள வேண்டியதென்றால் துன்பம், துன்பம் என்று அப்பனே நீங்கள் பின் அதாவது எப்படி வருகின்றது? எப்படி ஏது என்றெல்லாம் அப்பனே அலசி ஆராய்வதற்குள் அப்பனே வயதோ 60 70 ஆகிவிடும் என்பேன்  அப்பனே. 

குருநாதர் :-   அப்பனே, இதனால் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று கூற  எதற்காக வந்திருக்கின்றீர்கள்?  என்பவை எல்லாம் அப்பனே அடுத்தடுத்த வாக்கில் நீண்ட வாக்குகளாக யான் சொல்வேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. கவலைகள் வேண்டாம். 

=======================================
# இப்பொழுது ஒரு ஆற்றலை தெரியாமலே கொடுத்திருக்கின்றேன்
=======================================

குருநாதர் :-   அப்பனே, இப்பொழுது ஒரு ஆற்றலை தெரியாமலே கொடுத்திருக்கின்றேன் அப்பனே அதை வைத்துக் கொண்டு இயங்குக. 

குருநாதர் :-   அப்பனே, மீண்டும் எதை என்று கூற அப்பனே குறைவு விரைவாக அப்ப நிச்சயம் தன்னில் கூட இன்னும் அப்பனே பின் அதாவது என்னென்ன ஏது என்றெல்லாம் அப்பனே பின் அதாவது இராவணனிடம் கேட்டே, இன்னும் அப்பனே பின் வாக்குகள் ஈகின்றேன் அப்பனே இப்பொழுது ஆசிகள் அப்பா. நிச்சயம் அனைவரும். எதை என்று அறிய  ஞானிகள் பற்றி போற்றி பின் சொல்லுக என்பேன் அப்பனே. 

=========================================
# வாக்குகள் பல சொல்வதற்கும் , இவ்வுலகத்தை காப்பதற்கும் ஆதி ஈசன் , இவ் அகத்தியனுக்கு அருள் கொடுத்துள்ளானப்பா.
=========================================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் எதை என் சொல்வதற்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்தை காப்பதற்கும் அப்பனே பின் ஈசன் அப்பனே நிச்சயம் அதாவது இவ் அகத்தியனுக்கு அப்பனே பின் அருள் கொடுத்துள்ளானப்பா. 

குருநாதர் :-  இதனால் அப்பனே உலகத்தை வெல்வோம் அப்பனே. ஆசிகள் அப்பனே மீண்டும் அப்பனே செப்புகின்றேன் வாக்குகள், ஆசிகள் ஆசிகள். 


சுவடி ஓதும் மைந்தன் :-  விஷயம் என்னன்னா, ஈசன் வந்து அகத்தியர் கிட்ட, "சரிப்பா, நீயே மேற்கொண்டு எல்லாத்தையும் பார்த்துக்கோ, உன்னோட விருப்பப்படியே செய்" அப்படின்னு முழு உரிமையையும் கொடுத்துட்டாரு. அதனால அகத்தியரும், "நான் இன்னும் எல்லாருக்கும் வாக்கைச் சொல்லிக்கிட்டே தான் இருப்பேன், அதனால யாரும் எதற்கும் கவலைப்படாதீங்கப்பா" அப்படின்னு தைரியம் சொல்றாரு. ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இப்போ அடுத்த கட்டமா, நாம இந்த ஞானிகளோட போற்றி தொகுப்பை பாடுங்க. )


குருநாதர் :-   அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே நிச்சயம் எவை என்று புரிய அப்பனே நல்ல விதமாக இன்னும் கிரகங்கள் பற்றி எல்லாம் எடுத்துரைக்க போகின்றேன். 

குருநாதர் :-   எப்படி எல்லாம் அப்பனே கிரகங்களை அப்ப நிச்சயம் பின் இராவணன் வென்றான். அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன்னைத்தானே வென்றான். அப்பனே பின் உலகத்தை அப்பனே பின் வென்றான் சரித்திர நாயகனாக வலம் வந்தான் அப்பனே என்பதை எல்லாம் இன்னும் தெரிவிக்கின்றேன் என்பேன்  அப்பனே 

========================================
# இவ் வாக்கை கேட்பவருக்கு புண்ணியம் 
========================================

குருநாதர் :-   நிச்சயம் இதை கேட்பவருக்கும் அப்பனே நிச்சயம் புண்ணியம் அப்பனே. அவனுடைய ஆற்றலும் உங்களுக்கும் கிடைத்துள்ளது என்பேன்  அப்பனே. இதை நீ நிச்சயம் நிச்சயம் தன்னில் கூட வருங்காலத்தில் பார்ப்பீர்களாக அப்பனே.  இப்படித்தான் அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில சில ஆற்றல்கள் நிச்சயம் எங்களால் அப்பனே உங்களுக்கு தர முடியும் என்பேன் அப்பனே சொல்லிவிட்டேன். 

அடியவர் :- ரொம்ப நன்றி தாத்தா.  ரொம்ப நன்றி.

சுவடி ஓதும் மைந்தன் :-   இப்படித்தான் வந்து சில சில ஆற்றல்கள் உங்களுக்கு தந்து, வெளிச்சம் காட்டி, மத்தவங்களுக்கு நீங்க சொல்லலாம். உங்களுக்கும்  நீங்க தெரிஞ்சுக்கலாம் 

குருநாதர் :-   அப்பனே நிச்சயம் அப்பனே ஆசிகள் ஆசிகள் அப்பா. 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 04/02/2026 அன்று திருக்கோணேஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை இராவணேஸ்வரர் ரகசியங்கள் வாக்குகள் நிறைவு அடைந்தது)

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!