சித்தன் அருள் - 2122ன் தொடர்ச்சியாக!
14. முன்னர் கூறிய பதிலில் பிரம்மாவின் சம்மதத்துடனேயே இதை எடுத்துரைக்கப் போகின்றேன் அப்பா! இதனால், நிச்சயம், வருங்கால மனைவி, கணவர் பற்றி நீங்களே ' அறிந்து கொள்ளலாம். அதுவரை பொறுத்திரு, நிச்சயம் என்றீர்கள்.
அப்பா! இப்பொழுதுதான் நீ சொன்னாய். குழந்தை திருமண சாப்பாட்டை சாப்பிட குறிப்பிட்ட காலங்கள் அடைய வேண்டும் என. அது போல், குறிப்பிட்ட காலத்தை கடந்தபின் இதற்கான பதிலை கூறுகிறேன்.
அடியவர்: எனக்கென்னவோ உங்கள் பதிலில் திருப்தி இல்லை. என்னவோ சால்ஜாப்பு சொல்லி சொல்லி தள்ளி போடுகிறீர்கள்.
குருநாதர்: அப்பா! கேள்!
அடியவர்: ஒரு கேள்விக்கான பதிலை, யார் கேட்க்கிறார்களோ, அவர்களின் வாழ்க்கையில், அவருக்கு ஞாபகம் இருக்கும் நேரத்திற்குள் கொடுக்கவேண்டும்.
குருநாதர்: அப்பனே உண்மை! ஒருவன் எப்பொழுது தெளிவு பெருகின்றானோ, அப்பொழுது பதில் கொடுத்தால்தான், நிச்சயம்! பின் (இவனுக்கு) மனதே சரியில்லை. பதிலை கொடுத்தால் நிச்சயம் குழப்பம்தான் வரும். அதனால் தான், எப்பொழுது, எங்கு, காலங்கள், நேரங்கள் சரியாகிறதோ அப்பொழுது சொல்ல தெரியுமப்பா.
அடியவர்: இப்பொழுதும் திருப்தி இல்லை!
குருநாதர்: அப்பா! நிச்சயம்! இடம், பொருள், ஏவல்! புரிந்து கொள்கின்றாயா இப்பொழுது.
அடியவர்: சரி!
15. காகபுஜண்டர் சித்தர் அவருடைய பெயரைக் கேட்டாலே இனம் புரியாத சந்தோஷம் அளவுக்கு அதிகமா இருக்கிறது அதனுடைய அர்த்தம் என்னப்பா! (அடியேன் "நல்ல அடி வாங்கியிருப்பார் போலிருக்கிறது! என மெதுவாக கூறவிட)
குருநாதர்: அப்பா! எதுவென்று அறிய அறிய! நீயே சொல்லிவிட்டாய்! (அனைவரும் சிரித்தனர்)
16. அகத்தியர் அப்பா லோபாமுத்திரை அன்னை பாதமே போற்றி அப்பா பல நேரங்களில் எனக்கு அப்பாவாக இருந்து வழி நடத்துகிறீர்கள் சில நேரங்களில் எனக்கு குழந்தையாக இருக்கிறீர்கள் செல்லமாக நானும் உங்களை கொஞ்சுகிறேன் குழந்தையாக இருக்கும்போது மனம் அவ்வளவு ஆனந்தமாக இருக்கிறது இதனுடைய அர்த்தம் என்னப்பா உண்மைதானா?
குருநாதர்: எதுவென்று கூற! தாயே! தந்தையே! என்று எடுத்துரைத்தாள், நிச்சயம் யாங்கள் பார்த்துக் கொள்வோம். எவை என்று கூற? நினைக்கச்சொல்! எமக்கு பதில் சொல்ல வரவில்லை!
17. அகத்தியர் ஐயா, மனதில் தீய எண்ணங்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
குருநாதர்: அப்பா! கலியுகத்தில் முடியாதப்பா! முடியாத காரணங்களை கேட்டுக்கொண்டு இருக்காதே! முதலில் மனதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏன் இக்கேள்வியை வருகிறது என்று பார்த்தால், நீயே நினைத்துக்கொள்.
18. மக்கள் அனைவருக்கும் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும்!
குருநாதர்: அப்பா! அதற்காகத்தான் போராடிக் கொண்டு இருக்கிறோம், இந்நாளில்.
19. பொதிகை மலையில் அய்யாவிற்கு 4 இரும்பு கம்பிகள் கொண்டு மேலே ஒரு தகரம் போடப்பட்டு பல வருடங்களாக இருக்கின்றன அதை மாற்றி நான்கு பக்கமும் கருங்கல் ஆன தூண்கள் வைத்து மேலே ஒரு சிறு விமானம் அமைக்கலாமா அதற்கு அய்யாவின் உத்தரவு கிடைக்குமா?
குருநாதர்: நிச்சயம்! இதற்கு நான் நினைத்தால் தான் உண்டு!
அடியவர்: அப்போ! அது நடக்கும்னு தோன்றவில்லை!
20. கூவம் நதி : 72 km நீளமான, திருவள்ளூர் மாவட்டத்தில் தொடங்கி சென்னையின் முக்கிய நகரங்களின் வழியாக வங்கக்கடலில் கலக்கிறது. 70 ஆண்டுகள் முன்பு வரை சுத்தமான மற்றும் மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. இந்நதிக் கரையில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்ற சிவன் ஆலயங்களும் அமைந்துள்ளது. தற்போதைய நிலை கழிவு நீர்களால் மாசுபட்டு நச்சுத்தன்மையுடன் நிரம்பியுள்ளது. கடந்த நூற்றாண்டில் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியை மீட்டது போல, மீண்டும் கூவம் நதி உயிரோட்டத்துடன் திருவள்ளூர் மற்றும் சென்னை மாநகரை உலா வர வேண்டுகிறோம் அப்பா!
குருநாதர்: நிச்சயம்! (நாங்கள்) நீர் விட்டால், அனைத்தும் அடித்து சென்று விடும். அதனால் தான் பொறுத்துக்க கொண்டு இருக்கிறோம், நாங்கள்!
அடியவர்: அப்படியென்றால், தற்காலத்தில் சுத்தமாகாது!
குருநாதர்: நிச்சயம், அவைகள் எல்லாம் கடல் இருந்த பகுதியப்பா! ஆனாலும், (ஒருநாள்) வந்துவிடும். பட்டினத்தார் பார்த்துக் கொண்டே இருக்கின்றான்.
21. அப்பா சனீஸ்வரபகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசி வரை சென்று மீண்டும் மீன ராசிக்கு வருவார், அவ்வாறு மீண்டும் மீன ராசிக்கு வரும்பொழுது, சில நாட்கள் மட்டுமே சனீஸ்வர பகவான் ஒரு புள்ளியில் நிற்பார், அப்போது சில ஆலயங்களில் அக்கதிர் வீச்சுக்கள் விழும், அப்பொழுது வழிபட்டால் யோகங்கள் என்று குறிப்பிட்டு இருந்தீர்கள் அப்பா. எப்போது இவை நிகழும், எங்கெல்லாம் மக்கள் வழிபாடு செய்ய வேண்டும் அப்பா?
குருநாதர்: அப்பா! அடுத்தமுறை இடைக்காடர் இது பற்றி சொல்வானப்பா. அதுவரை பொறுத்திருக்கச்சொல்! அப்பா! மீண்டும் சொல்கின்றேன்! சனீஸ்வரனை பார்த்து ஏன் பயப்பட வேண்டும்! நிச்சயம் தன்னில் தவறு செய்திருந்தால் பயப்பட வேண்டும். நிச்சயம் நீதிமானாக இருந்தால் சனீஸ்வரன் என்ன செய்து விட முடியும்?
அடியவர்: நீதிமான் என்கிற நிலைமை, இந்த ஜென்மமா இல்லை பூர்வ ஜென்மமா?
குருநாதர்: அப்பா! இப்பொழுது வேண்டாம் அப்பா, இதை பற்றி!
அடியவர்: சரியான கேள்வியை கேட்டாலே, விட்டுடு என்கிறீர்கள்!
குருநாதர்; அப்பா! அவை எல்லாம் எடுத்துரைப்பதற்கு ஒரு நாள் ஆகும்!
அடியவர்: அய்யா! நீங்கள் எங்கும் செல்ல வேண்டாம்! நான் இங்குதான் இருக்கப்போகிறேன்! இப்பொழுது சொல்லுங்கள்!
குருநாதர்: அப்பா! இவன் (ஜானகிராமன்) தாங்குவானா என்ன?
அடியவர்: இப்படியே சொல்லி ஏமாத்திட்டு போயிட்டு இருங்க!
குருநாதர்: அப்பா! அடுத்த கேள்வியை கேள்! இப்பொழுதும் கூறுகிறேன். இடம் பொருள் ஏவல். எதை எங்கு வைத்து சொல்ல வேண்டுமோ, தன் பிள்ளைக்கு எங்கு வைத்து உரைத்தால் நல்லதோ, அங்கு வைத்து உரைக்கும் பொழுது நன்றாகும். அப்பா! தலைவலி என்று மருத்துவரிடம் செல்கிறாய், அவன் கால் வலிக்கு மருந்து தந்தால் எப்படியாப்பா சரியாகும்!
அடியவர்: சரி! என்னவோ சொல்கிறீர், ஒத்துக் கொள்கிறேன்!
22. அப்பா! குரு பகவான் மற்றும் சுக்கிர பகவான் ஒரு ஜாதகத்தில் இணைந்தால் மூடம் என்றும், கிரக பகை என்றும், அவ்விடம் செயல்படாது என்றும் சொல்லப்படுகிறது. அவ்விடத்தை சனீஸ்வர பகவான் பார்வை செய்தால் விதி விலக்காக அமையும் என்றும் சொல்கிறார்கள். இதை பற்றின விளக்கங்களை வேண்டுகிறேன் அப்பா.
குருநாதர்: அப்பா! இது ஒரு பெரிய யோகமப்பா! கெடுத்துவிட்டார்கள் அப்பா. ராவணேஸ்வரனே கிரகங்களை பற்றி தெளிவாக எழுதியுள்ளான். அவை எல்லாம் மறுத்துவிட்டார்கள் அப்பா! தக்க காலத்தில் எடுத்துரைக்கின்றேன்! அவன்தன் எழுதியதை! இவை இரண்டும் சேர்ந்தால், (அந்த ஜாதகனை) யாரும் வெல்ல முடியாது! அவை, இவை பார்வை என்பதெற்கெல்லாம், இப்பொழுது யான் சொல்வதற்கில்லை.
23. மதுரை கூட்டு பிரார்த்தனையில் இடைக்காடர் சித்தர் பெருமான் லக்கினத்தில், 7ல், அல்லது சந்திரனுடன் ராகு/கேது சேர்ந்து இருந்தால், பிரம்ம தேவர் எழுதிய விதிப்படி வாழ்க்கை முழுவதுமே கஷ்டம் என்றும், அருணகிரிநாத பெருமானுக்கு இந்த அமைப்பு இருந்து முத்தைத்தரு பத்தித்திருநகை என்று திருப்புகழை பாடி விதியை மாற்றி கொண்டார். இந்த அமைப்பு உள்ளவர்கள் திருஅண்ணாமலையை சுற்றி சுற்றி இத்திருப்புகழை பாட வேண்டும் என்ற மாபெரும் ரகசியத்தை உரைத்திருந்தார்கள்! அதன் படி கடைபிடித்து வருகின்றோம். இவை முழுமையாக நீங்கியது என்று உணர ஏதேனும் வாய்ப்பு இருக்கிறதா அப்பா! இல்லை இது கடைநாள் வரைக்குமான ஒரு வழிமுறையா! தெளிவு பெற வேண்டுகின்றேன் அப்பா!
குருநாதர்: எவை என்று புரிய! நூற்றாண்டுகள் கடந்து இவ்வரத்தை பெற்றான் அருணகிரிநாதனவன். சாதாரணமாக நினைத்து விட்டீர்கள்.
அடியவர்: அப்படியென்றால், இப்பொழுது இருக்கிற சாதாரண மனிதன் மூன்று ஜென்மம் எடுக்க வேண்டும்!
குருநாதர்: அப்பா! செய்து கொண்டே இருக்க வேண்டும்! இறைவன் எப்பொழுது நினைக்கிறானோ, அப்பொழுது தான்.
24. யாகவா முனிவர் என்பவர் பற்றி அகத்தியர் வாயிலாக அறிய வேண்டும் ஐயா?
குருநாதர்: நிச்சயம்! இவற்றுக்கெல்லாம் திருத்தலத்தில் வைத்து சொல்ல வேண்டும்! அப்பொழுதுதான்! நிச்சயம் திருவண்ணாமலையில் வைத்து இது பற்றி சொல்வேன்!
25. முன் ஜென்ம பாவத்தை பொறுத்து தான் இந்த பிறவி வாழ்க்கை என்பது தாங்கள் ஏற்கனவே புரிய வைத்து விட்டீர்கள், ஆனாலும் 'தெய்வத்தால் ஆகதெனிலும் முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்' என வள்ளுவனின் வாக்குக்கு ஏற்றார் போல, பிரச்சினைகளால் துவண்டு நல்ல வாழ்க்கை வேண்டும் என தங்கள் வழியில் வந்து அசைவத்தை தவிரத்து, பிற ஜீவராசிகளுக்கு உணவளித்து, போட்டி பொறாமைகளை தவிர்த்து அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என பிராத்திக்கும் மனிதனுக்காவது சிறு ஏற்றத்தை தரலாம் அல்லவா? அவனுடைய முன்னேற்றத்தை பார்த்து மற்றவர்களும் நேர்மையான வழிக்கு வருவார்கள் அல்லவா?
குருநாதர்: நிச்சயம் தொடர்ந்து செய்யச்சொல்! நண்பா! (இந்த கேள்வி கேட்டவரை "நண்பா" என்கிறார்). நிச்சயம், எப்பொழுது கொடுக்க வேண்டுமோ அப்பொழுது கொடுப்போம்.
அடியவர்: அவரது முன்னேற்றத்தை பார்த்து மற்றவர்களும் நேர்மையான வழிக்கு வருவார்கள் அல்லவா?
குருநாதர்: நிச்சயம் தன்னில் கூட. அவ்வாறு ஒருவரைத்தான் நாங்கள் தேடிக்கொண்டு இருக்கின்றோம்.
அடியவர்: ஹ்ம்ம்! நீங்கள் கொடுத்து, நான் பார்த்து, விடிஞ்சுடும்!
26. அய்யா! கடவுளிடம் கேட்டால் அனைத்தையும் கொடுப்பார் என்பார்கள்! ஒரு சிலர் கடவுளுக்கு எப்ப கொடுக்க வேண்டும் என தோன்றுகிறதோ அப்பொழுது கொடுப்பார் என்கிறார்கள். சரி! நியாயமான ஆசை, அநியாயமான ஆசை என்று எப்படி கண்டு பிடிப்பது?
குருநாதர்: கேட்பதெல்லாம் நியாயமா என்று நினைக்கிறார்களா மனிதர்கள்.
27. மனதில் மிகுந்த கெட்ட எண்ணம் வருகிறதே, அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் அய்யா?
குருநாதர்: இதற்க்கெல்லாம் நான் பதில் சொல்லவா! நீங்களே யாராவது பதில் சொல்லுங்கள்.
அடியவர்: பார்ப்பதை எல்லாம் ஆசைப்பட்டால் இப்படித்தான்.
28. வள்ளி தெய்வானை இரு அம்மையர்களும் ஒருவரே அல்லது இருவரா என்று தெளிவு படுத்த வேண்டும்.
குருநாதர்: இருவரும் ஒருவரப்பா! ரகசியத்தை விரிவாக சொல்ல வேண்டும். இல்லை என்றால் மனிதன் ஏசுவான், எப்படி, இப்படி, அப்படி என்று! மனிதனின் வாய் தரித்திரம் பிடித்த வாய் அப்பா! இப்படியும் பேசுவான், அப்படியும் பேசுவான். ஆகவே இப்பொழுது தேவை இல்லை. இருந்தாலும் மாற்றிவிட்டார்கள் மனிதர்கள். முருகனுக்கு மட்டும் இரண்டு பொண்டாட்டிகளா? என்பான். எனக்கும் இரண்டு பொண்டாட்டிகள், யான் திருமணம் செய்து கொள்கிறேன் என்று! முருகனை வைத்து கேலி செய்து கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள். அதனால் தான், பக்தியில் இருப்பவன் முன்னேற முடியவில்லை. உண்மை தெரிந்தால் முன்னேறிவிடுவான். அதனால் தான் போராடிக்கொண்டு இருக்கின்றோம்.
அடியவர்: எல்லாம் நீங்க காட்டிக்கொடுப்பதை பார்த்துதான் உங்கள் பசங்க படிக்கிறார்கள். அப்புறம் எப்படி உருப்படும்?
குருநாதர்: அப்பப்பா! அனைத்தும் மாற்றிவிட்டார்கள் அப்பா. அப்பனே! ஒரு ரகசியத்தை சொல்லுகின்றேன். ராவணனுக்கு நிச்சயம் தன்னில் கூட, சீதை மகளே! ராவணன் ஒரு சிவபக்தன். எப்படியாப்பா, ஒரு சிவபக்தன் தவறு செய்ய முடியும்? அப்பொழுதெல்லாம், ஆணும், பெண்ணும் சண்டை இட்டு கொண்டால், தந்தையின் வீட்டுக்கு செல்வாள். அதே போல்தான் சீதை அங்கு சென்றாள். மாற்றிவிட்டார்கள் வரலாற்றை.
அடியவர்: உண்மையை சொல்லி அழைத்து சென்றிருக்கலாமே! ஏன் கடத்தி செல்ல வேண்டும்?
குருநாதர்: அப்பா! உனக்கு திருமணம் ஆகின்றது. மிக கொடுமை படுத்துகின்றாய் (அவளை). அப்பொழுது அவள் முத்தமா இடுவாள் உன்னை?
அடியவர்: (கடத்தவில்லை) என்கிற விஷயம் சீதைக்கு தெரிய வேண்டுமே?
குருநாதர்: அப்பா! இன்னும் நான் கூறினால், அனைத்தும் தெரிந்துவிடும். அமைதியாக இரு. நிச்சயம் தான் கஷ்டப்படப் போகின்றான் என்பது ராமனுக்கு தெரிந்துவிட்டது. இன்னும் கூட! நேரம் வரும் பொழுது வரிசையாக கூறுகின்றேன். இதில் கூட மாற்றிவிட்டார்கள்.
அடியவர்: ராமன் ஆதி நாராயணன் என்பது ராவணனுக்கு தெரியுமே! அப்புறம் ஏன் கடத்தி செல்ல வேண்டும்?
குருநாதர்: அப்பா! ஒன்றை சொல்கிறேன்! நீ குடிகாரனப்பா! பெண் கொடுத்தவன் உன்னிடத்தில் கேட்டால் நீ என்ன சொல்வாய்! அப்பா! பொறுமையாக இரு! அனைத்தும் பரப்புகின்றேன்! அப்பா! இவ்வளவு கேட்கிறாய் அல்லவா? ஒன்றை கேட்கின்றேன். இதற்கு நீ பதில் சொல்லியே ஆக வேண்டும்! ஈசன், கெட்டவரின் கையை தன் மேல் பட விடுவானா என்ன? நிச்சயம் மாட்டான். அப்படி பட்டாலும், ஈசன் தான் கெட்டவன் என்று நீங்கள் சொல்ல வேண்டும். அவன் சிவபக்தன் என்று உங்களுக்கு தெரியும். இப்படிப்பட்டவனை வைத்திருக்கும் ஈசனிடம்தானே நீங்கள் சண்டை இடவேண்டும். அவ்வளவு பெரிய முட்டாள் மனிதன்.
அடியவர்: ராமன், ராவணன் இருவரில் மிக சிறந்த சிவபக்தன் யார்?
குருநாதர்: இந்த வரலாறை இப்பொழுது சொல்வதிற்கில்லை. பெண்களுக்கு மதிப்பளிப்பவன். ஒரு பெண் என்றால், இவ்வுலகத்தில், தலை குனிந்துதான் நடக்க வேண்டும் என்று முதலில் எடுத்துரைத்தவன், ராவணனே!
அடியவர்: அப்படி என்றால், ராவணனுக்கு எப்படி சாபம் கிடைத்தது?
குருநாதர்: யார் சொன்னது, சாபம் கிடைத்தது என்று. பொறுத்திருந்தால் (கூறுகிறேன்). இப்பொழுது ராவணனை பற்றி யான் பேசப் போவதில்லை. அனைத்தையும் மாற்றி எழுதிவிட்டார்கள். அனைத்து இதிகாசங்களையும் பார்த்தால், எந்த ஜீவ ராசிகளையும் கொல்லக்கூடாது என்றுதான் இருக்கின்றது. அப்பா! அனைத்தும் எடுத்துரைக்கின்றேன், நீ அமைதியாக இரு. அப்பனே, இராவணன் கூறினான், எப்பொழுது பெண்கள் தலை குனிந்து நடக்கின்றார்களோ அப்பொழுது இவ்வுலகம் செழிப்படையும், சிவபக்தியில் அனைவரும் மிதப்பார்கள். எப்பொழுது ஒரு பெண் தலை நிமிர்த்தி நடக்கிறதோ, அப்பொழுது அனைத்தும் அழியும். அதனால் தான் ராவணனை இழுத்து வந்தேன். இன்னும் ராவணனை பற்றி, அப்பா! சைவத்தை கடைபிடித்தவன்!
அடியவர்: சிறந்த சிவபக்தன், ஆனால் எத்தனை போர்களை செய்து, எத்தனை ரிஷிகளை கொன்று?
குருநாதர்: அப்பனே! ஒருவன் உன்னை கொல்ல வருகின்றான்! நீ என்ன செய்வாய்? அப்பனே! அப்பொழுதெல்லாம், விதி முடிந்தவர்கள்தான் போரில் பங்கு பெறுவார்கள் அப்பா! ராமனால் ஏன் ராவணனை அழிக்க முடியவில்லை. கடைசியில் என்ன ஆயிற்று என யாருக்குமே தெரியாது.
29. பன்னிரு ஜோதிர் லிங்கங்கள் பன்னிரு ராசிகள் இவைக்கு எதேனும் தொடர்பு உள்ளதா ஐயா
குருநாதர்: அப்பா! நிச்சயம் உண்டு! அதனால் தான் வடிவமைத்தான், பின் ராவணனே!
30.ஜோதி நிர்வாண சுவாமிகள் புகை குழாய் வழிபாடு தெளிவு வேண்டும்.
குருநாதர்: அப்பா! நிச்சயம் இப்பொழுது வேண்டாம். சில ஞானிகளை பற்றி திருத்தலத்தில் சொன்னால் தான் சிறப்பு, கேட்போருக்கும் புண்ணியம், அவனுக்கும் புண்ணியம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
