அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 4
நாள், நேரம் : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
முழு நிகழ்வின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=1
இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
===========================
# உடனடியாக நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும் ?
===========================
குருநாதர் :- ஏன், எதற்காக, இன்றும் எதை என்று புரிய, ஏன், எவற்றாக, பின் பிரார்த்தனை உருவாக்க வேண்டும். அதாவது அங்கங்கு நிச்சயம் தியானங்கள், தவங்கள் செய்ய வேண்டும். அழைத்து இறைவன் நாமத்தை புகுத்திட வேண்டும். அங்கங்கு எண்ணங்கள், அதாவது எதை தந்தாலும், இறைவன் தான் பின் தருவான் என்ற மனதை ஏற்படுத்த வேண்டும். அங்கங்கு பக்தி என்ற காதலை பரப்ப வேண்டும். இவ்வாறு பரப்பினால் மட்டுமே, வருங்காலத்தில் உலகத்தில் அழிவுகளை தடுத்து நிறுத்த முடியும்.
அடியவர் :- அங்கங்க பிரார்த்தனைகள் பண்ணனும், அங்கங்க தவங்கள் பண்ணனும், அங்கங்க தியானங்கள் செய்யணும், அங்கங்க வந்து பக்தியை வந்து மேலும் மேலும் வளர்க்கணும். இந்த மாதிரி வந்தாதான், இந்த உலகத்தை வந்து நம்ம காப்பாத்த முடியும், அப்படின்னு சொல்றாங்க குருநாதர்.
===========================
# ஓவ்வொரு ஊரிலும் கூட்டுப்பிரார்தனைகள் நிச்சயம் நடக்க வேண்டும்.
===========================
குருநாதர் :- அறிந்தும் எதை பொறுத்து, எவை என்று அறிய, இதனால் சிறு சிறு கூட்டங்களாக பெருக்கி, நல்விதமாகவே, நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம் இறைவன் நாமத்தை அனைவரும், அதாவது பின் இறைவன் மீது காதல் செலுத்திவிட்டால், இவ்வுலகத்தில் அழிவுகள் கிடையாது. நல்லதே நடக்கும்.
அடியவர் :- நிச்சயமா? சிவாய நம. அதாவது என்ன சொல்றாங்கன்னா, குருநாதர் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு ஊர்லயும் இந்த மாதிரி சிறு சிறு கூட்டங்களை உருவாக்கி, இறைநாமத்தை வந்து நாம செபிச்சு, ஒரு பக்தி மையம் ஆக்கணும். அப்படின்னா, இந்த உலகத்துல அழிவுகள் எதுவும் வராதுப்பா, மக்கள் காப்பாற்றப்படுவாங்கன்னு சொல்றாங்க.
===========================
# ஏன் அழிவுகள் வருகின்றது?
===========================
குருநாதர் :- ஏன் அழிவுகள் வருகின்றது என்பதை எல்லாம் யான் விஞ்ஞான பூர்வமாகவே கண்டு கண்டுபிடித்துள்ளேன். இதையெல்லாம் நான் உங்களுக்கு எடுத்துரைக்க போகின்றேன் இப்பொழுது.
அடியவர் :- குருநாதர் வந்து, இந்த அழிவுகள் சொல்றாங்கல்ல, நிறைய அழிவுகள் எல்லாம் சொல்றதெல்லாம் விஞ்ஞான பூர்வமா வந்து, குருநாதர் நிறைய கண்டுபிடிச்சிருக்காங்க. அந்த கண்டுபிடிப்புகளை நான் உங்களுக்கு அறிவியல் பூர்வமா சொல்றேன்றாங்க.
===========================
# தாயே, உன்னை அம்மா என்று அழைக்கின்றேன்.
===========================
குருநாதர் :- தாயே, அறிந்து கூட உன்னை அம்மா என்று அழைக்கின்றேன். எதுவுமா, நிச்சயம் இக்குழந்தை உனக்கு என்ன பரிசு கொடுக்க வேண்டும்?
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் சொல்றாரு, என்ன சொல்றாரு தெரியும்களா? அம்மா. அம்மா, (அகத்தியர் ) நான் (உனக்கு) ஒரு குழந்தை. (என்) அம்மாக்கு என்ன வேணும்?
அடியவர் :- நமச்சிவாய!!!!! நமச்சிவாய!!!!!. எப்பேர்ப்பட்ட ஒரு தகவல் கொடுத்திருக்காங்க குருநாதர்!
சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா இது மாதிரி நீங்க வந்து ஜீவனாடிக்கு வந்து எப்படி தெரியும்களா? எனக்கு வேணும், எனக்கு அது வேணும், இது வேணும்னு கேட்கக்கூடாது. அகத்தியர் கேட்கிற மாதிரி நீ நடந்துக்கணுமா.
அடியவர் :- தகுதியை உருவாக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- தகுதி உருவாக்கணும். எண்ணங்களை உருவாக்கணும். என்ன சொல்றாரு பாருங்க.
அடியவர் :- தகுதி என்பது உயர்ந்த எண்ணங்கள்.
https://youtu.be/NqRaI13qIDU?t=17263
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா, உனக்கு என்ன வேணும்? நான் பரிசு தளிக்கின்றேன் என்றாரு. அம்மா, அகத்தியர் இங்க சின்ன குழந்தை மாதிரி ஆயிட்டாரு இங்க. வந்து, நீங்க தான் அம்மான்றாரு. அதனால என்ன கேணுமோ கேளுங்க. அகத்தியர் கேட்டதை சத்தியமா கொடுப்பார்.
அடியவர் :- பக்தி செலுத்த, செலுத்த, இறைவன் குழந்தை.
===========================
# அகத்தியர் என் கூடவே இருக்கணும். என்னை விட்டு பிரிய கூடாது
===========================
# குழந்தை, தாய்மையின் உயர் எண்ணத்தை அடைந்த ஆச்சரியங்கள்.
===========================
குருநாதரின் அன்னை :- (எப்பொழுதும் அகத்தியர் என் கூடவே இருக்கணும். என்னை விட்டு பிரிய கூடாது. )
அடியவர் :- நமச்சிவாய!!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாங்க தெரியும்களா? என்ன சொல்றாங்க? எப்பொழுதும் அகத்தியர் என் கூடவே இருக்கணும். என்னை விட்டு பிரியக்கூடாது.
அப்படின்னா என்ன அர்த்தம் தெரியும்களா? எப்படி அந்த அகத்தியர் என்ன சொல்றாரு? அந்த அம்மா என்ன சொல்லுது பாருங்களேன். குழந்தை, கொஞ்சம் இது யாராவது நல்லா விவரிச்சு சொல்லுங்க, ஐயா.
அடியவர் :- ஐயா, இது வந்து, இது வந்து ஒரு கல்லை பலமாக அடிக்கிறது. ஒரு பெரிய தெய்வம் வந்து…
சுவடி ஓதும் மைந்தன் :- உண்மையில் , அவங்க அம்மா ஆயிட்டாங்க. அகத்தியர் இங்க உண்மையிலேயே குழந்தை ஆயிட்டாருங்க ஐயா. அகத்தியருக்கு தெரியுது, இந்த அம்மா இப்படித்தான் பேசும். எக்ஸ்பிளைன் பண்ணுங்க ஐயா.
===========================
# “ஒரு குழந்தையின் தாய் ஞானம்”
===========================
அடியவர் 1 :- ( எழுந்து விளக்கங்கள் அளித்தார்கள் ) அன்பர்களுக்கு வணக்கம். பொதுவா, ஒரு தாய் வந்து தன் குழந்தை என்ன நினைப்பாங்க? தான் கூட தான் இருக்கணும்னு நினைப்பாங்க. அந்த மாதிரி இந்த குழந்தைக்கு நல்ல உயர்ந்த அறிவு பக்குவம் இருக்கு. அகஸ்தியர் தன்னை அம்மையாக அழைத்துவிட்டதுனால, தாயோட உள்ளத்திலிருந்து இந்த பொண்ணு நினைக்குது. குழந்தை நினைக்குது, என் குழந்தை என் கூட இருக்கணும்னு சொல்லி, மிகப்பெரிய ஞானம்.
===========================
# நாடி படித்து சுயநலவாதிகளை, பார்த்து சலித்து போன சுவடி ஓதும் மைந்தன்.
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- மிகப்பெரிய ஞானம். அம்மா, இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்கம்மா. நிறைய பேர் பார்த்துக்கிறேன். எனக்கு அது வேணும், இது வேணும். ஒன்னு எல்லாமே வந்து, ஒரு ஏதோ ஒரு விஷயத்துக்காக தான் இறைவனை வணங்குறாங்கம்மா. பக்தி இல்லம்மா. கண்ணால பார்த்து பார்த்து சலிச்சு போச்சுமா எனக்கு வந்து.
சுவடி ஓதும் மைந்தன் :- லட்சக்கணக்குல படிச்சிருக்கிறோமா. வந்து பொய் எல்லாமே மாயை. எல்லாம் பொய் நடிக்கிறாங்க. இறைவன் இடத்திலிருந்து நடிச்சுக்குது. என்ன பிரயோஜனம்ங்க, ஐயா? நல்லா ஆயிடுது. இறைவனா கொடுத்த அது வந்து, அகத்தியர் சொல்லி நல்லா ஆகும். எல்லாம் கொடுப்பாரு. இது வந்து எனக்கு இதா கொடுத்தாரு. வேற நாங்க உழைச்சோம். எல்லாமே நடிப்புங்க, ஐயா.
===========================
# தர்மத்தை நிலைநாட்டுவோம்.
===========================
# தர்மத்தை காப்பவனை , தர்மம் காக்கும்
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- ஏன்? உலகம் அழிவு நிலைக்கு போகிறது. ஏன் மனிதன் இப்படி அழிக்க? இப்படி, இப்படித்தாங்க, ஐயா. வந்து கெட்டவங்க. அதனால வந்து தர்மத்தை நிலைநாட்டுவோம். ஐயா, எடுத்து சொல்லுங்க, ஐயா. தர்மத்தை நிலைநாட்டணும். வந்து யாரெல்லாம் ஒருவன் தர்மத்தை வந்து கட்டியா பிடிச்சுக்கிட்டு, தர்மத்தை வந்து காத்தானோ, தர்மம் உங்களை காக்கும். அதனால, தர்மத்தை தயவு செய்து சொல்லுங்க. எல்லாருக்கும் வந்து தர்மத்தை சொல்லுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள் அளித்தார்கள் )
https://youtu.be/NqRaI13qIDU?t=17544
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( இந்தக் உரையின் சாரம் என்னவென்றால் — அகத்தியர் குழந்தையிடம் “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்கும்போது, அந்த குழந்தை சொல்வது ஞானம் வேண்டும், எல்லாரும் நல்லா இருக்கணும் என்பதுதான். கடைசியில் அகத்தியர் தாயிடம் கேட்கும்போது, அந்த அம்மா சொல்வது மிகப் பெரிய பக்குவம்: “என்னை விட்டு நீ எப்போதும் பிரியக்கூடாது.” இறைவன் நம்ம பக்கத்தில் இருந்தால் நல்லதையே செய்வார், ஆனால் மனிதன் அதைப் பற்றி சிந்திக்கவே மாட்டான்; யாரும் “இறைவா, என் பக்கத்திலேயே இரு” என்று கேட்க மாட்டார்கள். மனிதனின் புத்தி எவ்வளவு இருக்கிறதோ அதற்கேற்பத்தான் அவனுக்கு அதிர்ஷ்டமும் யோகமும் கிடைக்கும். இறைவன் எப்போதும் நம்ம பக்கம் இருக்கத் தயாராக இருக்கிறார், ஆனால் நாம் கேட்கவே தெரியாமல் இருப்பதுதான் உண்மை. அகத்தியர் சொல்வது, “உன் கையில வருபவன் எல்லாம் அறிவில்லாதவன்; நீ எப்படி சமாளிக்கப் போகிறாய்?” என்பதே குருவின் மிகப் பெரிய பொறுப்பை நினைவூட்டும் கேள்வி. )
https://youtu.be/NqRaI13qIDU?t=17611
அடியவர் #3 உரைத்த உரையின் சுருக்கம் :- ( குருகுலத்தில் மாணவன் எதுவும் தெரியாமல் வருவது போல, கூட்டு பிரார்த்தனையில் வருபவர்களும் ஒவ்வொரு முறையும் புதிய பாடம் கற்க வருகிறார்கள். சித்தர்கள் ஒவ்வொரு முறை ஒரு படிக்கட்டாக புதிய விஷயங்களை அளிக்கிறார்கள் — நாணயம், தீர்த்தம், உபதேசம் போன்றவை. அவற்றை கடைபிடித்தால்தான் அடுத்த படி புரியும். குருநாதர் சொல்வதை ஏற்று நடைமுறைப்படுத்தினால் மட்டுமே ஆன்மீகப் பயணம் முன்னேறும். குருவின் கடமை கற்றுக்கொடுக்குவது; மாணவனின் கடமை கேட்டதை வீட்டில் செய்து, அடுத்த முறை வரும்போது அதற்கான பக்குவத்துடன் வருவது. இதனால் தான் ஒவ்வொருவரும் படிப்படியாக உயர்ந்து, இறைவனை நோக்கி செல்ல முடியும். )
சுவடி ஓதும் மைந்தன் :- ( சில விளக்கங்கள் அளித்தார்கள் )
குருநாதர் :- அறிந்தும் தாயே, நிச்சயம் முருகன் அறிந்தும் எதை என்று புரிய ஈசனாரும் நிச்சயம் தன்னில் கூட நீ என்ன வேண்டுதல் வைக்கின்றாயோ, அதை நிச்சயம் தன்னில் கூட இவர்களுக்கு கொடுப்பார்கள். சிறு குழந்தை அன்பாக கருணையுடன் கேட்டாலே, முருகன் இறங்கி வருவான். எதனால் இவர்களுக்காக என்ன முருகன் என்று நீ கேட்கப் போகின்றாய்.
சுவடி ஓதும் மைந்தன் :- நீ மனசை வச்சா, முருகன் இறங்கி வருவார்மா? சின்ன குழந்தை கருணை காட்டுவார்மா? இவங்களுக்காக நீ முருகன் கையில என்ன கேட்க போற?
அடியவர் #3:- எல்லாருக்காகவும் நீ என்ன கேட்க போற? முருகன் ஏதாவது கேட்டு வாங்கி கொடு. அவங்களுக்கு நீதான வாங்கி கொடு. வாங்கி கொடுன்றார். நீ முருகன் கையில என்ன கேக்குறீங்க? சொல்லுங்க.
===========================
# அனைவருக்காகவும் முக்தியை கேட்ட தெய்வ குழந்தை.
===========================
குருநாதரின் அன்னை :- எல்லாரும் இறைவனை அடையனும், முக்தி அடையனும். அடுத்த பிறவி வேண்டாம். நானே அப்படித்தான் கேட்பேன்.
அடியவர்கள் :- ( பலத்த கை தட்டல்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? அந்த பாப்பா என்ன சொல்லுச்சுன்னு பார்த்தீங்களா? அந்த பாப்பா என்ன சொல்லுச்சு? வந்து பிறவியின் நோக்கம். பிறவியின் நோக்கம். ஐயா, சொல்லுங்க. ஐயா, இந்த பாப்பா என்ன சொல்லுச்சு? பிறவியின் நோக்கத்தையே கேட்டாங்க. எதுக்காக? எத்தனையோ பிறவிகள் எடுத்து, எத்தனையோ ஜென்ம ஜென்மங்களா இந்த பூமியில இந்த ஆன்மா பிறந்திருக்கோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றி கொடுப்பான்னு ஒரே வார்த்தையில கேட்டாங்க. பிறவி வேண்டாம். அதாவது பிறவி வேண்டாம்.
( உங்களிடம் கேட்டிருந்தால் ) நீங்க ஏதாவது சொல்லி இருப்பீங்களா? அதுக்கு பதிலு என்ன கேட்டிருப்பீங்க? ஐயா, எனக்கு பணம் வேணுங்க. ஐயா, நான் வீடு கட்டணுங்க. ஐயா, ஐயா, மனுஷன் என்ன தெரியுங்களா? இதனாலயே அழுகுறாங்க. ஐயா, ஆமா, தேவையில்லாத எல்லாம் கேட்டு, அதனாலயே அழிஞ்சு போயிடுறாங்க. ஐயா, வந்து மனுஷன் வந்து உண்மையான மெய்ப்பொருள் என்ன? என்ன கேட்டுச்சு? இந்த குழந்தை என்ன கேட்டுச்சு? எல்லாருக்கும் முக்தி தரணும். மறுபிள்ளை மறுபிறவி இருக்கக்கூடாது.
===========================
# குருநாதர் அனைத்தும் தரும் ரகசியங்கள்
===========================
குருநாதர் :- அடுத்து எதை எவை என்று அறிய, இப்படிப்பட்ட ஞானத்தை இருப்பவர்களுக்கு யான் தருவேனா? ஆனால் நிச்சயம் அனைத்தும் கேட்கின்றானே. அவனுக்கு யான் தரட்டுமா? நீங்களே சொல்லுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- நானு இப்பேர்ப்பட்ட எண்ணங்களுடைய இந்த சிறு பிள்ளைக்கு நான் தரட்டுமா? எல்லாத்தையும் இல்லைன்னா, நீங்க கேக்குறீங்க பாருங்க. எனக்கு பணம் தா, வீடுதா, அதுதா, இதுதான்னு உங்களுக்கு கொடுக்கட்டுமா? ஐயா, சொல்லுங்க. யாராவது
===========================
# எப்போது இறைவனுக்கு நஷ்டம் உண்டாகும்?
===========================
குருநாதர் :- எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட குழந்தை கேட்பதுதான் சரி. இதை இப்பொழுது எதை என்று அறிய, இதை கேட்டுவிட்டால், பின் இவன் முக்தி அடைந்துவிட்டால், நமக்குத்தான் நிச்சயம் தன்னில் நஷ்டம் என்று இறைவன் சிந்திப்பான். இதனால் இவனுக்கு அனைத்தையுமே கொடுத்து விடலாம் என்று எண்ணுவான். இதனால்தான் இறைவன் புத்தி மிகப்பெரியது.
சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( குழந்தை “எதை வேண்டும்?” என்று இறைவனை கேட்டால், அது நேராக மோட்சம்/முக்தி நோக்கி செல்கிற கேள்வி. மனிதன் முக்தியை கேட்டுவிட்டால், அவன் உடனே விடுபட்டு விடுவான்; அப்போ அவனை வழிநடத்திக் கொண்டிருக்கும் இறைவனுக்கே “நஷ்டம்” என்று இறைவன் சிந்திப்பான். அதனால், “இவன் முக்தி கேட்டுவிட்டான்; இவனை இப்போதே விடுதலை செய்தால், எனக்கு வேலை முடியுது; அதனால் இவனுக்கு எல்லாமே கொடுத்து விடலாம்” என்று முடிவு செய்கிறான். ஆனால் சாதாரண மனிதர்கள் எல்லாவற்றையும் கேட்பதால், இறைவன் அவர்களை பூஜ்ஜியத்தில் அடைத்து வைக்கிறான் — அதாவது ஆசைகளின் வட்டத்தில் சுற்றவைக்கிறான். மோட்சத்தை கேட்டால் விடுதலை; உலக ஆசைகளை கேட்டால் பூஜ்ஜிய வட்டத்தில் அடைப்பு — இதுதான் இறைவனின் பெரிய புத்தி. )
குருநாதர் :- இதனால் தாயே, நிச்சயம் பின் அதை எதை என்று கூறிய பின், அதாவது இறைவனை நினைத்துக்கொண்டு, இவர்களுக்காக அழகாக ஒரு பாடலை பாடு. பாவம் தொலையட்டும்.
உலகோருக்கு சிவ குழந்தை, அகத்திய மாமுனிவரின் அன்னை பாடிய பாடல் ( சொற்றுணை வேதியன்…. )
நேரலை https://youtu.be/NqRaI13qIDU?t=18496
கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள் :- சாதுக்களுக்கு மத்திய உணவு அழைப்பு விடுத்தனர் …..
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் …..)
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
