வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!
நினைத்தாலே முக்தி தரும் திருஅண்ணாமலையில் சிவபுராணம் கூட்டுப்பிரார்த்தனை நிகழ்வு
தேதி : 19.04.2026 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரை
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், போளூர் சாலை, வேங்கிக்கால், திருவண்ணாமலை.
பேருந்து வழித்தடம் : திருவண்ணாமலை பேருந்து நிலையம் to மாவட்ட ஆட்சியர் அலுவலகம் டவுன் பஸ் அல்லது கலசபாக்கம் டவுன் பஸ் ஏறி EB ஸ்டாப்பில் இறங்கவும், திருவண்ணாமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஷேர் ஆட்டோ மூலமும் மண்டபத்தை அடையலாம்.
உலக நன்மைக்காகவும் தர்மங்கள் தலைநிமிர்ந்து நிற்கவும் ஈசனார் கட்டளைப்படி, அகத்தியர் அடியார்கள், சிவனடியார்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து அதிகாலை முதல் உலக நல வேள்வி (யாகம்), நவகிரக தீபவழிபாடு, கோளறு பதிகம் மற்றும் சிவபுராணம் பாராயணம் மற்றும் அகத்தியர் பெருமான் மற்றும் சித்தர்களின் கருணையால் மக்கள் நல்வாழ்வு பெறுவதற்கு ஜீவநாடி வாக்கு உபதேசங்கள் என தொடர்ச்சியாக நடைபெற உள்ளது.
அனைவரும் வருக!!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
