​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 18 September 2026

சித்தன் அருள் - 2322 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு!


வணக்கம் அகத்தியர்  அடிவர்களே

திருவண்ணாமலையில் ஆதி காமாட்சி ஆலயத்தில் வைத்து குருநாதர் அகத்தியர் அடியவர்களுக்கு.. சில பொதுவான சந்தேகங்களை கேள்விகளுக்கு குருநாதர் பதில் வாக்குரைத்தார்.

இவ் வாக்கினில் மந்திர ஜபம் குறித்து குருநாதர் உரைத்த வாக்கு

குருவே சரணம் , எங்களுக்கு தனிப்பட்ட முறையில் சொல்கின்ற வாக்குகளில்  பரிகாரங்களை செய்து கொண்டே இருக்கின்றோம்... நீங்கள் தனிப்பட்ட வாக்குகளின் கூறும் மந்திரங்களையும் பாராயணம் செய்து கொண்டே இருக்கின்றோம்., ...அது மட்டுமில்லாமல்  கூட்டு பிரார்த்தனையில் வரும் மந்திரங்கள், பரிகாரங்கள், அதையும் செய்ய வேண்டுமா?


குருநாதரின் பதில் வாக்கு 


அப்பனே
அனைத்தும் செய்தால் உங்களை நீங்கள் வெல்லலாம்.


(அதாவது குருநாதர் தனிநபர் வாக்குகளில் அவரவருடைய விதியின் தன்மைக்கு ஏற்ப பரிகாரங்களும் சொல்லி வர வேண்டிய மந்திரங்களையும்... இது மட்டுமில்லாமல் பொதுவாக கூட்டுப் பிரார்த்தனையில் அனைத்து மக்களையும் கஷ்டங்கள் தீர்வு அதற்கு கூறும் பரிகாரங்களையும் மந்திரங்களையும் இவை அனைத்தையும் சேர்ந்து செய்து கொண்டே வந்தால் மந்திரங்கள் ஜெபித்துக் கொண்டே வந்தால் உங்களை நீங்கள் வெல்லலாம் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்)

குருவே...... மதுரை கூட்டுப்பிரார்த்தனையில் பனதேரையர் சித்தர் மந்திர ஜெபங்கள் குறித்தும் ஓம் நமசிவாய எனும் மந்திரம் ஜெபம் செய்யும் காலவரையறை ஒன்பது வினாடிக்கு மேல் இருக்க வேண்டும் என்று
வாக்குரைத்து இருக்கின்றார்... ஆனால் நாங்கள் ஓம் நமசிவாய வேண்டும் மந்திரம் சொல்லும் பொழுது எங்களுக்கே தெரியாமல் விரைவில் சொல்லிவிடுகின்றோம்... இதனால் தோஷங்கள் ஏற்படுமா?

  
அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், சரியாக சொல்லுங்கள் என்பேன், அப்பனே.

 நிச்சயம் தன்னில் கூட, ஓர் முறை சொன்னாலும், கூட அப்பனே.

(அதாவது ஓம் நமச்சிவாய எனும் மந்திரத்தை 9 வினாடிகளுக்கு மேலாக இருக்கும்படி மூச்சை உள்ளிழுத்து ஒருமுறை சொன்னால் ஆவது சரியாக இதன்படி செய்ய வேண்டும்..

எந்த ஒரு மந்திரத்தை அதாவது அனைத்து தெய்வங்களின் மந்திரங்களையும் ஒரு தடவை சொன்னாலும்  அதாவது ஒன்பது வினாடிகளுக்கு சரியாக சொல்ல வேண்டும். சிலர் 108 முறை 1008 முறை மந்திர ஜெபம் செய்கின்றார்கள் ஆனால் மந்திரம் ஒவ்வொரு மந்திரமும் ஒன்பது வினாடிக்கு மேல் தான் இருக்க வேண்டும் ஒன்பது வினாடிக்கு கீழே மந்திர ஜபம் உச்சரிப்பு இருக்கக் கூடாது.


.(அனைத்துமந்திர ஜெபங்கள் எப்படி ஜெபிக்க வேண்டும் என்பதை குறித்து தேரையர் சித்தர் மதுரை கூட்டுப் பிரார்த்தனையில் கூறிய வாக்கு சித்தன் அருள் 2033 பதிவாக வெளிவந்துள்ளது மீண்டும் அனைவரும் படித்து உணர்ந்து கொள்ளவும்)





 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின், நமச்சிவாய என்பது, அப்பனே, பின், எவை என்று கூற, பின், பெயரை குறிக்கவில்லை....

(நமச்சிவாயா என்பது பெயர் அல்ல)

, ந .......என்பதற்கும், சி............ என்பதற்கும் இப்படி அனைத்து அக்ஷரத்திற்கும் பல அர்த்தங்கள் உண்டு என்பேன், அப்பனே.

அதை எல்லாம் வருங்காலத்தில் சொல்லித் தருகின்றேன், அப்பனே.

அப்பனே, வெற்றி சிறப்புகள் உண்டு வருங்காலத்தில்.

அப்பா, நீங்கள் எங்களுக்கு பரிகாரமாக சொல்கின்ற மந்திரங்கள், நாங்கள் வாய்விட்டு சொல்ல வேண்டுமா, மனதிற்குள்ளேயே சொல்லலாமா?



குருநாதருடைய பதில் வாக்கு 


மனதிற்குள்ளே சொன்னாலும், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட..., எதை என்று புரிய, அப்பனே, பின், சக்திகள் அதிகம் அப்பனே.!!

(அதாவது மந்திர ஜெபங்கள் மனதை ஒரு முகமாக நிறுத்தி ஆழ்ந்து மந்திரத்தை ஒன்பது வினாடிகளுக்கு மேல் வருமாறு அமைதியாக ஜெபிப்பதற்கு சக்திகள் அதிகம் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்.)

குருவே சரணம்... எங்களுடைய தியானத்தின் சக்தியை எவ்வாறு அறியப்படுத்துவது???.. சிலர் பிரமிடுகளை அதாவது உலோகத்திலான பிரமிடுகளை பயன்படுத்தி தியான சக்தி அதிகப்படுத்தலாம் என்று கூறுகின்றார்கள் நாங்கள் எவ்விடம் தியான சக்தியை அதிகப்படுத்துவது???

 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, பின் ஏற்கனவே தெரிவித்துவிட்டேன், அப்பனே. பின்..... பிம்பத்தின் (கண்ணாடி) எவை என்று அறியறிய  பின் நிச்சயம் தன்னில் கூட, பிம்பத்தின் முன்பாக இவ்வாறு. தீபங்கள் ஏற்றி, அப்பனே, பின் அதன் பின் எவை என்று கூட, ஒளியை இதன்  பின்(கண்ணாடி முன்பாக) முன்னே பார்த்து, அப்பனே, பின் மந்திரத்தை செப்பி வந்தால், அப்பனே, பின் சக்திகள் அதிகம்.

(அதாவது கண்ணாடி முன்பாக ஒரு விளக்கேற்றி அந்த தீப ஜூவாலையை உற்று நோக்கிக் கொண்டு மந்திரங்களை எப்படி தியானம் செய்து வந்தால் அதற்கு சக்திகள் அதிகம் என்று குருநாதர் கூறுகின்றார்)

வள்ளலார் ராமலிங்க சுவாமிகள் கடைபிடித்த வழிமுறை...)

குருவே சரணம் இந்த நரம்பு சம்பந்தப்பட்ட வெரிகோஸ்...நோயால் மனிதர்கள் பல துன்பங்களுக்கு ஆளாகின்றார்கள்
உலகம் முழுவதும் இந்த பிரச்சனையால் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கு அப்பா அவர்கள் தீர்வு சொல்ல வேண்டும் 

குருநாதரின் பதில் வாக்கு 

அப்பனே, எதை என்று கூற அப்பனே, இதுக்கு சிறந்த அப்பனே, பின் மூலாதாரணி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட,.. வேப்பிலை என்பேன் அப்பனே .

குருவே... வேப்பிலையை பச்சையாக எடுத்துக் கொள்ளலாமா எப்படி எடுத்துக் கொள்வது??

அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பின் (பச்சையாக உண்டு) எடுத்துக்கொண்டு வந்தாலே, அப்பனே, சிறப்பாகும் என்பேன், அப்பனே.

ஏனென்றால், அப்பனே, இதற்கு ஏது, அப்பனே, பின் வருகின்றது???, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, சில திசுக்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, ஏதேனும்.. ரத்தத்தில் கலப்பதே.

(வேப்பிலை பச்சையாக உண்ணுவதால் ரத்தத்தில் திசுக்களில் சுத்தம் செய்து அந்த நோய் கட்டுப்படும்)

குருவே சரணம் 

இந்த பராபவ ஆண்டின் அதிபதியாக ஆட்சி செலுத்தும் தெய்வம் யார் என்று சொல்லுங்கள்!!

அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,  பல எவை என்று கூட, பின் வரலட்சுமி என்பேன், அப்பனே.

குருவே சரணம் 
வரலட்சுமி மாதா. தேவிக்கு வரலட்சுமி அம்மைக்கு எந்த மந்திரம் உச்சரிப்பது?


அப்பனே, பின் பலமுறை சொல்லிவிட்டேன் என்பேன், அப்பனே. லட்சுமி. மந்திரம். லட்சுமி, 

லட்சுமி மந்திரம் தேரையர் சித்தர் ஏற்கனவே... திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கில் சித்தன் அருள் பதிவு எண் 2067 ல்... மதுரை மீனாட்சி அம்மையின் நாணய வழிபாடு லஷ்மி பூஜை எப்படி செய்வது என்றும் லட்சுமி மந்திரமும் இந்த வாக்கில் தெரிவித்திருக்கின்றார்... மீண்டும் படித்து உணர்ந்து செய்முறையை தெரிந்து கொள்ளவும் 

அதாவது வரலட்சுமி தேவிக்கான லட்சுமி மந்திரம்... இதில் ஏற்கனவே வாக்கில் கூறியபடி அந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். 



தேரையர் சித்தர்
வாக்கில் உரைத்த மகாலட்சுமி வழிபாடு வரலட்சுமிக்கும் இந்த மந்திரத்தை உச்சரித்து பூஜை செய்யலாம் 



தேரையர் சித்தர்:-

இவைத்தன் அறிய பின் மண் பானை தன்னில் கூட, அழகாக பின் உப்பை, பின் சம அளவு அறிந்தும் பின் பச்சை அரிசியும் கூட சம அளவும்.

தேரையர் சித்தர்:-

இதனுள்ளே அறிந்தும் இவ் நாணயத்தை நாணயத்தை அறிந்தும் புரிந்தும், இவை அறிந்து அவ் நாணயத்தின் அறிந்தும் கூட பின் மஞ்சள் இட்டும் அழகாக பின் குங்குமம் இட்டும் பின் ஏலக்காய் எதை என்று கூற கிராம்பையும் இட்டு அழகாக அனுதினமும் பின் வாசனையை பின் காண்பிக்க நன்று!

-இவைத்தன் உருவாக்க! இவைத்தன் பின் அதாவது அரச இலைகளில் கூட பின் தீபம் ஏற்ற நன்று! அறிந்தும் இதைத்தன் புரிய வைக்க, மண் பின் தீபம் அறிந்தும் இதைத்தன் எவை என்று புரிய, பின் அழகாக பின் அரச எவை என்ற இலையை பின் நல் விதமாக, அதன் மேலே அறிந்தும் இவைத்தன் பின் நிச்சயம் தன்னில் தீபம் ஏற்றி நிச்சயம் தன்னில் கூட பின் "லட்சுமியே அறிந்தும் பின் வருக நலம் தருக வசி மம வசி" என்று மந்திரத்தை உச்சரிக்க நன்று!

மக்கள் அனைவரும் இதய நோயால் அவதிப்பட்டு வருகின்றார்கள் இளம் வயதிலேயே ஹார்ட் அட்டாக் .... முதலிய இதய நோய்கள் ஏற்படுகின்றது இதற்கு குருநாதர் மூலிகைகள் மருந்துகள் தீர்வினை கூற வேண்டும் 

குருநாதருடைய பதில் வாக்கு 

அப்பனே எதை என்று கூற, மருதம் எவை என்று கூற, அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

( மருத மரத்தின் பட்டை)

குருவே மருதம் பட்டையை நீரில் ஊறவைத்து அருந்தலாமா??

மருதம் பட்டையை நீரில் இட்டு சூடேற்றி காய்ச்சி அதை அருந்தலாமா?
  
அப்பனே, பின் எப்படி  வேண்டுமானாலும் சரி.

மருத மரத்தின்  முடிந்தவரை பச்சையாக இருக்கும் பட்டையை மேற்புறமாக இருப்பதை உரித்து அதை நேரில் குறிப்பிட்ட கால அளவு நேரம் ஊறவைத்து அருந்தலாம் அல்லது நீரில் இட்டு காய்ச்சியும் ஆறவைத்து அருந்தலாம்... குருநாதர் ஏற்கனவே அடியவர் ஒருவரின் மனைவிக்கு இதயத்தில் பிரச்சனை இருந்தபோது குருநாதர் மருதம்பட்டையை கூறி அதை நேரடியாக உனக்கு வேறு ஒரு வழியில் உணர்த்துவேன் என்று கூறி... மறுநாள் துறவறம் பூண்டு இருக்கும் அகத்தியர் மகளென வாழ்ந்து வரும் மூதாட்டியின் மூலம் மருதம் பட்டையை எப்படி பயன்படுத்துவது என்றும் சில வாக்குகளாக கூற வைத்தார் 

மருதம்பட்டையை சிறிது நீரில் காய்ச்சி அதனுடன் 

 பாலில்  மிளகு சீரகம் சேர்த்து அதையும்  காய்ச்சி... இரண்டையும் ஒன்றாக கலந்து அதை அருந்தி வரக்கூறியிருந்தார்.. அப்படியே செய்த அகத்தியர் அடியவரின் மனைவி தற்பொழுது இருதய நோயின் தாக்கம் இன்றி.. ஓதிமலை பழனி மலை என படி ஏறி இறைவனை வழிபாடு செய்து வருகின்றார். 

இருதய நோய் இருந்த பொழுது... நடக்கக்கூட முடியாது அவரால் ஆனால் தற்பொழுது குருநாதருடைய திருவருளால்.. நல் முறையில் இயங்கி வருகின்றார். 
நம்மை வாழவைக்கும் கருணை தெய்வம் அகத்தியர் பெருமான் கருணையோ கருணை.

ஏற்கனவே மருதமலை மருத மரத்தின் ரகசியங்கள் இருதய நோய் தொடர்பாக செய்ய வேண்டியது குறித்து கூட்டு பிரார்த்தனை வாக்கில் தேரையர் சித்தர் கூறியிருக்கின்றார் அவையும் பின்வருமாறு 

தேரையர் சித்தர் :- அறிந்தும் இளம் ஏது என்று புரிய இருதயம் பலவீனப்பட்டவர்கள் அங்கேதான் அறிந்தும் கூட அமர்ந்து தியானம் செய்தால்,  பின் “மரத்தில் உள்ள ஓசைகள்” அறிந்தும் கூட பின் “உடம்பில் விழுந்து பின் இருதயம் பலமாகும்”. 


===========================
# சிறு குறிப்பு :- மருதமலையின் முதன்மை ஸ்தல விருட்சம் மருத மரம் (Terminalia arjuna) ஆகும்.  மருத மரங்கள் அதிக அளவில் காணப்படுவதால், இந்த மலை மருதமலை என்று அழைக்கப்படுகிறது. நீர் மருது, கரு மருது, பிள்ளை மருது போன்ற பல்வேறு வகைகள் இங்கு காணப்படுகின்றன. மருத மரத்தின் பட்டை ஆயுர்வேத மருத்துவத்தில் இதய நோய் மற்றும் பல உடல் பிணிகளைத் தீர்க்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. இதயம் பலவீனமானவர்களை இங்கு செல்ல சொல்லுங்கள். மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி (மருதாசலமூர்த்தி) அருளால் நமது இருதயம் பலமாகும். 
===========================


சுவடி ஓதும் மைந்தன் :- அங்க ஒரு ரகசியம் இருக்குது.


அடியவர் :-   பெரிய உண்மையை சொல்றாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :- மனசெல்லாம் விட்டுப்போச்சு. என்னடா இது வாழ்க்கை. என்னடா இதுன்னு சொல்லி இருக்கிறவங்க எல்லாம் வந்து மருதுமலையில கொஞ்சம் தியானங்கள் செஞ்சா, அதெல்லாம் அங்க நீக்குற சக்தி.. என்னங்க அது?


அடியவர் :-   இருதயத்ததின் வலிமையை வந்து அதிகப்படுத்துற சக்தி மருதமலையில இருக்கின்றது..


தேரையர் சித்தர் :- அனைவருமே நல்லது நடக்கத்தான் வந்திருக்கின்றீர்கள். இதனால் பின் மருதுமலையோனை பின் அழைப்பேன். அழையுங்கள்.


மீண்டும்... முழு வாக்கையும் படித்து உணர்ந்து கொள்ளுங்கள்.


குருவே திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் அஷ்ட லிங்கங்களுக்கு எதிரே சிலர் நெல்லிக்கனிகளில் துளையிட்டு தீபம் ஏற்றுகின்றார்கள் இதனுடைய மகத்துவம் என்ன??

அப்பனே அவரவர் விருப்பம் அப்பா. நிச்சயம் தன்னில்..நீயும் கூட வேறு பழங்களில் தீபம் இடு என்பேன் அப்பனே... எவை என்று புரிய அப்பனே பின்.




குருவே சரணம்... அப்பா நீங்கள் ஏற்கனவே விதவிதமான பழங்களில் விளக்கேற்றலாம் என்று சொல்லி இருந்தீர்கள்.. ஆற்றங்கரை ஓரமும் கடலோரத்திலும் முன்னோர்களுக்கும் விதவிதமான காய்கறி பழங்களில் விளக்கு ஏற்றலாம் என்று சொல்லி இருந்தீர்கள் 

 அப்படி... இறைவனுக்கு முன்பாக விளக்கு ஏற்றுவதாக இருந்தால் எந்த பழத்தில் ஏற்றலாம்???

ஆப்பிள் பழத்தில் அப்பா???



குருநாதருடைய பதில் வாக்கு 

அப்பனே எதை என்று கூற இப்பொழுது நீ சொன்னாயே அதில் ஏற்று!! நிச்சயம் தன்னில் கூட இன்னும் வித்தியாசம் வரும்!!

(ஆப்பிள் பழத்தை இரண்டாக வெட்டி நடுவில் குழியை ஏற்படுத்தி அதில் இலுப்பெண்ணெய் விட்டு விளக்கு ஏற்றலாம்.

அப்பனே நீங்கள் எதை எதைக் கேட்கின்றீர்கள் அதற்கு தகுந்தவாறு யானும் சொல்கின்றேன் அப்பனே



அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, எவை என்று கூட, ஏன் எதற்கு , சொன்னேன் என்றால், அப்பனே, அப்பனே, பின் எவை அதிர்ஷ்டம் வரும் என்பேன், அப்பனே,

 பின்.....(ஆப்பிள் பழத்தில் தீபம்)... ஏற்றி வா. தவறில்லை.



 அப்பனே, ஈசனுக்கு பிடித்த பின் பழம். அப்பனே, எதை என்று கூட, பின் நிச்சயம் தன்னில் கூட. அதனால்தான் சொன்னேன்.




 அப்பனே, எண்ணெய் ஊற்றிக் கொண்டே இரு, என்ன நடக்கிறது? என்று பார்.


அதாவது ஆப்பிள் பழத்தில் தீபம் தொடர்ந்து ஏற்றிக் கொண்டே வா.. உன் வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பதை பார் என்று குருநாதர் கூறுகின்றார்.

குருவே அஷ்டலட்சுமிக்கு தீபம் ஏற்றும் பொழுது இரவு முழுவதும் எரியவிடலாமா அந்த தீபத்தை 


அப்பனே நிச்சயம். 


(அதாவது தீபம் இரவு முழுவதும் எரியலாம் என்று குருநாதர் கூறுகின்றார்)


குருவே சரணம்..........மூல நோய் பைல்ஸ் எனப்படும் நோய் அதிகமாக இருக்கிறது இவ்  நோய்க்கு தீர்வுகள் வேண்டும் ஐயனே!!

அப்பனே எதை என்று புரிய, . இதற்கு, அப்பனே, பின், அதாவது, சாஸ்டாங்கமாக, அப்பனே, நிச்சயம் தன் கூட, அப்பனே, திரும்பி திரும்பி (தரையில் உருண்டு உருண்டு), அப்பனே, எவை என்று கூற, அப்பனே, நிச்சயம் தன் கூட, பின், அங்க அங்க பிரதட்சணம் செய்தாலே, அப்பனே, பின், அனைத்தும் சீராகும் என்பேன், அப்பனே.

 அது மட்டுமில்லாமல், அப்பனே, பல வகையில் கூட, அப்பனே, எதை என்று கூற, பின், இதற்கு ஆசனங்கள் எல்லாம் இருக்கின்றது என்பேன், அப்பனே.
(யோகாசனங்கள்)

 அவ்வாறாக, நிச்சயம் பின் ஆசனங்கள் செய்தாலே.....,

 ஆனாலும் சில, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று கூற, (நோயின் தாக்கம்) அதிகமாக சென்றால், அப்பனே, நிச்சயம்  அப்பனே, சில, அப்பனே, பின், பின்,(சிகிச்சை) எடுத்துத்தான் ஆகவேண்டும், அப்பனே, பின், நிச்சயம் செயற்கை முறையில்.

குருநாதர் இதற்கு முன்பு அங்க பிரதட்சணம் செய்தால் உடல் உறுப்புகள் சீராகி வியாதிகள் குணமாகும்... என்று கூறியிருக்கின்றார்.

வீட்டிலும் அங்க பிரதட்சணம் செய்யலாம் என்றும் குருநாதர் கூறியிருக்கின்றார்.

ஆண் பெண் குழந்தைகள் என அங்க பிரதட்சணம் அனைவரும் செய்யலாம்...

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!