1/4/2026 , புதன் கிழமை பங்குனி உத்திரம் தினத்தன்று பாம்பாட்டி சித்தர் பாடல் வடிவில் உரைத்த வாக்கு.
வாக்குரைத்த ஸ்தலம்: நாகமலை குன்று வேலோடுமலை முருகன் ஆலயம் எதிரில்.சித்தான்டி. மட்டக்களப்பு.கிழக்கு மாகாணம்.இலங்கை.
அழகாக ஆட்சி செய்கின்ற உலகத்தை!!, இறைவா போற்றியே!!! பணிகின்றேனே பாம்பானவனே.!!!!
விளக்கம்.
இந்த உலகத்தை அழகாக படைத்து ஆட்சி செய்கின்ற இறைவனை போற்றி பணிந்து வாக்குகள் உரைக்கின்றேன் பாம்பாட்டி சித்தர்.
அறிந்தும் (அழிவு) என்றும் இல்லாதவனே!!
ஒன்று பொல்லாத வினை மக்களுக்கு அளிப்பவனே!!
என்று இருந்தும் தானே அதில் என்னவென்று தெரியவில்லையே!?!?!?.
விளக்கம்.
இந்த உலகத்தில் என்றும் அழியாமல் இருந்து மறை பொருளாய் இருந்து ஆட்சி செய்து மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு புண்ணியங்களுக்கு ஏற்ப வினைகளை தருபவரே.
என்றென்றும் உள்ளது என்னவென்று கூட தெரியவில்லையே மனிதனுக்கு.!!!
எங்கெங்கு?? எத்தனை பிறவிகள்?? தான் எடுத்தாலும் அதனை அறிந்து கொள்வானாம்.!?!?!
விளக்கம்.
மனிதர்கள் தம்முடைய பாவ கர்மாக்களில் இருந்து விடுபட வழி தெரியவில்லை.
இந்த உலகில் நிரந்தரமாய் அழியாது என்றென்றும் நிலைத்து நிற்கும் இறைவனுடைய சக்தியை யாரும் உணரவில்லை.. நிரந்தரமாய் எப்பொருள் இருக்கின்றது என்பது தெரியவில்லை மனிதர்களுக்கு.
இன்னும் மனிதர்கள் எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்தாலும் இதையெல்லாம் அறிய முடியுமா!???? என்ன!??
எங்கெங்கும் உன்னுடைய லீலைகள் தான், எங்கெங்கும் உன்னுடைய ராஜ்ஜியம் தான், எங்கெங்கும் உள்ளது என்று ஆராய்ந்து பார்த்ததிலே பின் வல்லவனே மனிதனே.
விளக்கம்.
இந்த பிரபஞ்சம் முழுவதும் இறைவனுடைய ஆட்சி தான் நடக்கின்றது... அனைத்திற்கும் காரண கர்த்தாவாய் அனைத்திற்கும் மூலப் பொருளாய் அனைத்தையும் இயக்கும் இறைவனுடைய உண்மை பொருளை சக்தியை தெரிந்து கொண்டால் மனிதர்கள் வல்லவர் ஆகிவிடுவார்கள்.
மனிதனுக்கு என்னென்ன,?? என்னென்ன புத்திகள் கேளடி,!!!...
அதிக இன்றும் வந்தது என்று போனது என்றும் தெரியவில்லை.
விளக்கம்.
இறைவன் அழகாக அறிவுகள் கொடுத்து புத்திகள் கொடுத்து அனுப்புகின்றார்.. ஆனால் இறைவன் கொடுத்த அறிவையும் புத்தியையும் மனிதர்கள் எதற் எதற்கோ பயன்படுத்தி அறிவை வீணாக்குகிறார்கள்.
எதற்காக இந்த பிறவி?? தான் யார்??? எதற்குப் பிறகு எடுத்து வந்தோம்?? எதற்காக பிறந்தோம்? எதற்காக இறக்கின்றோம்?... என்று ஒன்றும் தெரியவில்லை. அறிவிருந்தும் அதனை பயன்படுத்தி புரிந்து கொள்ள முடியவில்லை.
அன்பென்று ஒன்று உள்ளதய்யா!!
ஏது என்று அறியவில்லையே.
விளக்கம்.
அன்புதான் அனைத்தும்
அந்த அன்பை பிற உயிர்களிடமும் இறைவன் மீதும் செலுத்த வேண்டும்.
யாரிடம் அன்பு செலுத்துவது என்றே மனிதர்களுக்கு தெரியவில்லை.
அங்கங்கு ஆடி ஆடி நானே பாம்பு ஆடி நானே ஆடி நானே.
எத்தனை ?எத்தனை? பிறவிகளே கடந்தாலும் ஒன்றை அறிந்திருக்கவில்லையே என்று ஆடினேனடி.
விளக்கம்...
பாம்பாட்டி சித்தன் நான் பாம்பு உருவில் பார்த்துக் கொண்டே வருகின்றேன் யுகம் யுகங்களாக..
மனிதர்கள் பல பிறவிகள் எடுத்து வந்தாலும் பிறவி கடலை நீந்த முடியாமல் ஒன்றும்... தெரியாமல் ஒன்றைக் கூட அறிந்து கொள்ள முடியாமல் உண்மை பொருளை தெரிந்து கொள்ளாமல் இப்படியே பிறவிகள் கடந்து போய்க் கொண்டே இருக்கின்றது. இதை பாம்பு படம் எடுத்து அடிக்கொண்டு பார்ப்பது போல நான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் மனிதர்களை.
எப்பொழுதும் எதனை என்றென்றென்று,
அத்தனை அத்தனை எப்பொழுதும் நின்று எத்தனை பிறவிகள் கடந்திட்டானே.
என்றென்றும் எங்கும் உள்ளதுதான்,!!
எங்கெங்கும் என்றும் உள்ளதுதான்.
பல பிறவிகள் கடந்தாலும் அதனை உணர்த்தி யாங்கள் தெரிவிப்போமே.
விளக்கம்.
மனிதர்கள் பல பல பிறவிகள் எடுத்து வந்தாலும் நிரந்தரமாய் எங்கும் வீற்றிருக்கும் பரம்பொருளை மனிதர்கள் உணரவில்லை.... பல யுகங்களில் இதை மனிதர்களை உண்மை பொருள் எப்படி என்பது தெரியாமல் பிறவிகளை எடுத்து கடந்து வரும் மனிதர்களை பார்த்து கொண்டே இருக்கின்றோம்.
மனிதர்களுக்கு உண்மை பொருளை நிரந்தரமான இறைவனை.. புரியவைத்து உண்மையை உணர்த்துவோம் சித்தர்கள் நாங்கள்.
எங்கெங்கு எண்ணற்ற சித்திரங்கள்,!!
எங்கெங்கு எண்ணற்ற சித்திரங்கள்.
சித்திரத்தில் அறிந்ததென்னது உண்மையையே இல்லையடி.
விளக்கம்.
இந்த உலகத்தில் எத்தனை ஆலயங்கள்?? எத்தனை பதிகங்கள்?? எத்தனை எத்தனை பாடல்கள்?? எத்தனை எத்தனை இறைவனின் திருவிளையாடல்கள் உருவங்கள்... இதெல்லாம் மனிதர்களுக்கு உண்மையை உபதேசம் செய்தாலும்.. மனிதர்கள் உண்மையை தெரிந்து கொள்ளவே இல்லை.
எங்கெங்கு பின் பாம்புகள் தான் ராஜ்ஜியம் என்றோ இருந்ததடி.
எங்கும் உள்ளது, இங்கு உள்ளதடி. அறிந்தும் எனது உள்ளமதே, அறிந்தும் எனது உள்ளமதே. அங்கங்கு நின்று சித்தர்கள் தானே பின் தவத்தின் வலிமையாய் இருக்கின்றார்களே.
அங்கெங்கும் பின்னும் சித்தர்கள் தானே தவத்தின் வலிமையாய் இருக்கின்றார்களே.
விளக்கம்.
இந்த உலகத்தில் எங்கும் நாகங்களின் ஆட்சி இருக்கின்றது நாக தேவதைகளின் ராஜ்ஜியம் இருக்கின்றது... உலகமெங்கும் இருக்கின்றது எங்கும் இருக்கின்றது.
எங்கெல்லாம் நாகலோகங்கள் நாகராஜகங்கள் இருக்கின்றதோ அங்கெல்லாம் சித்தர்கள் தவ சக்தியாய் வீற்றிருக்கின்றார்கள். இங்கும் நாகலோகம் இருக்கின்றது... இங்கும் சித்தர்கள் தவ சக்தியாய் இருக்கின்றார்கள்.
என்றென்றும் எதனை ஒப்புக்கொள்வான், என்றென்றும் எதனை? ஒப்புக்கொள்வான்.
எதனையும் நின்று ஒப்புக்கொள்ளாதபடி மாய வினைகள் செய்யுமடி.
எங்கெங்கும் ஒப்பிக்கப்படாதபடி மாய வினைகள் செய்யுமடி.
விளக்கம்.
சித்தர்கள் அருவுருமாக இந்த உலகம் எல்லாம் தவசக்தியால் தவ வலிமையால் வீற்றிருந்து அருள்பாலித்து வருவதை நல்வழிப்படுத்தி வருவதை மனிதர்கள் இந்த உண்மை தெரியாமல். வாழ்ந்து வருகின்றார்கள்.
சித்தர்கள் தவ வலிமையால் காத்து வருவதை மனிதர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள்.
ஏன் மனிதர்களுக்கு இந்த உண்மை தெரிவதில்லை?? ஏன் ஒத்துக்கொள்வதில்லை?
ஏனென்றால் மனிதர்கள் செய்த பாவங்கள் கர்ம வினைகள் கண்களை மறைத்து தெரியாமல் செய்து விடுகின்றது.
மாயை வந்து மனிதனை ஆட்கொள்ளும் பொழுது இறை சக்தியை சித்தர்களின் தவசக்தியை உணர்ந்து கொள்ள முடிவதில்லை.
எங்கெங்கும் பொக்கிஷம் உள்ளதடி, எங்கெங்கும் பொக்கிஷங்கள் உள்ளதடி.
அங்கெங்கு நன்றாக அதையே தானே எப்பொழுதும் காத்து நிற்கின்றேன் எப்பொழுதும் காத்து நிற்கின்றேன்.
விளக்கம்.
இந்த உலகத்தில் விலை மதிக்க முடியாத பொக்கிஷங்களும் நிதிகளும் இருக்கின்றது அதையெல்லாம் பாம்பு உருவம் கொண்டு பாம்பு வடிவில் பாம்பாட்டி சித்தர் நான் எப்போதும் காத்து வருகின்றேன்.
திருவட்டாறு ஆதி கேசவன் சுரங்கப்பாதை குறித்தான வாக்கிலும் வன்னி வேடு ஆலய வாக்கிலும் திருப்பதி காளஹஸ்தி செல்லும் வழியில் தூக்கிவாக்கம் பீமேஸ்வரர் ஆலய வாக்கிலும் மண்ணிற்கு அடியில் இருக்கும் பொக்கிஷங்களை நாகங்கள் காவல் காத்து வருகின்றது என்று குருநாதர் வாக்கில் கூறியதை இங்கு நினைவு கூறுகின்றோம்.
எங்கெங்கும் கூட அலைந்தேனடி, எங்கெங்கும் கூட அலைந்தேனடி.
அழகாக என் உள்ளம் புகுந்தானடி ஈசன், இங்கேயே யானே அமர்ந்திட்டேனே.
அழகாக என்னுள் புகுந்தானடி ஈசன், இங்கேயே யான் அமர்ந்திட்டேனே.
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் நான் இறைவனை தேடித் தேடி அலைந்தேன்..... இறைவனை உணர்ந்தேன்... அலைந்து திரிந்து உண்மை பொருளை கண்டபின் அழகாக ஈசனார் என் உள்ளத்தில் குடி கொண்டு விட்டார்.. இங்கே வேலோடு மலை நாகமலையில் நான் தங்கி இருக்கின்றேன்.
எத்தனை? எத்தனை? ராஜ்ஜியங்கள், எத்தனை? எத்தனை? ராஜ்ஜியங்கள். எங்களுக்கும் தான் இங்கே தானே ராஜ்ஜியம் என்று உள்ளதடி.
விளக்கம்.
எத்தனை லோகங்கள் இருந்தாலும் எத்தனை நாடுகள் இருந்தாலும் அங்கெல்லாம் எங்களுடைய நாகலோகம் இருக்கின்றது இங்கே எங்களுக்கென பாம்புகளின் உலகம் நாகலோகம் இருக்கின்றது.
சித்தன் அருள் நாகபூசணி ஆலய வாக்கு பதிவு எண் 1658..ல் இலங்கையில் நாக தீவில் இருக்கும் நாகபூசணி ஆலயம் நாகலோகத்தின் வாசல் என குருநாதர் வாக்கில் கூறியதை உணர்ந்து கொள்ளுங்கள்.
வேலோடு நாகமலைக்கு அடியே நாக லோகம் உள்ளது. இங்கிருந்து சற்று தொலைவில் இருக்கும்
இலங்கையின் நாகத்தீவு குமரிக்கண்டத்தின் தற்பொழுது எஞ்சி உள்ள பகுதி நாகர்கோவில் நாகராஜா.. ஆலய தொடர்பு ஏற்கனவே குருநாதர் இலங்கையில் பாதாள லோகம் நாகலோகம் தெற்கு அதாவது இந்தியாவின் தெற்கு இலங்கைக்கு அருகில் இருக்கும் கடலுக்கு அடியில் இருக்கின்றது என்று கூறியிருப்பதும் தொடர்பு உடைய சம்பந்தங்கள் குறித்தும் உணர்ந்து கொள்ளலாம்.
இங்கு வேலோடு மலை அருகில் இருக்கும் நாகமலை பகுதிகளில் நாகர்கள் அதாவது நாகர் இனம் வாழ்ந்ததாக தொல்லியல் சான்று உள்ளது.. என்பது கூடுதல் தகவல்.
அறிந்தும் எதை என்று யான் சொல்லவே, அறிந்தும் எதனை என்று யான் சொல்லவே...
எங்கள் அருள் பின் பெற்றவளை தானே யாங்கள் வந்தோமே அலைத்தோமே.
எங்கள் அருள் பின் பெற்றவள் தாமே யாங்கள் இங்கும் தான் அலைத்தோமே.
அறிந்து உள்ளம் எதை எதை என்று, அறிந்து உதயம் எதை என்றென்று.
உதயம் ஆகில் நிச்சயம் தானே சத்தம் நின் தானே கேட்குமமே. இளவரசியின் தானே சத்தமடி, அது எங்கும் எங்கும். சலங்கை சத்தம்.
விளக்கம்.
அறிந்தும் ஒரு உண்மையை நான் கூறுகின்றேன். இங்கே நித்ய தவக்கோலத்தில் தவம் இருக்கும் இளவரசியை நாங்கள் தான் பிறவியை கொடுத்து எடுத்து வந்தோம். அந்த இளவரசி சித்தர்கள் எங்கள் அருமை பெற்றவள்.
இந்த இளவரசியை குறித்து சென்ற வாக்கில்.. போகர் பெருமான் கூறியுள்ளார் மீண்டும் படித்து உணர்ந்து கொள்ளவும் சித்தன் அருள் பதிவு எண் 2230.
இங்கு அதாவது வேலோடு மலையில் இரவில் தங்கினால் பல அடியில் இருக்கும் உலகத்தில் இருந்து சப்தங்கள் கேட்கும்... சூரிய உதயத்தின் போது இதன் அருகில் தவம் இருக்கும் இளவரசியின் கால் சிலம்பு சலங்கை சத்தம் கேட்கும்.
எப்பொழுதும் பிணி வீழூமடி,??? எப்பொழுது தன்னில் வினை தீருமடி.??
எப்பொழுதும் அதை எதிர்கொள்ளவில்லை
எத்தனை எத்தனை பிறவிகள். நீங்கள் எல்லாரும் அறிந்துள்ள உண்மை, நீங்கள் எல்லாரும் அறிந்த உண்மை. எத்தனை எத்தனை பிறவிகள் பின் கடந்து தானே வந்துள்ளீர்கள்.
எத்தனை எத்தனை பிறவிகள் கடந்து கடந்து வந்துள்ளீர்கள்.
விளக்கம்.
மனிதர்களுக்கு தாக்கும் நோயிலிருந்து எப்பொழுது விடுதலை??
மனிதர்களின் கர்மவினைகள் எப்பொழுது தீரும்??
மனிதர்கள் பல பிறவிகள் எடுத்து வந்தாலும் இதைப்பற்றி யாரும் சிந்திக்கவில்லை... ஏன் இவ்வாறு நடக்கின்றது?? என்பதை யாரும் உணர்ந்து கொள்ளவில்லை.
பிறப்பு இறப்பு பிறப்பு இறப்பு என பல பிறவிகள் எடுத்து வந்தாலும் இதனைப் பற்றிய உண்மையை முழுமையாக யாரும் புரிந்து கொள்ளவில்லை.
இத்தனை பிறவிகள் கடந்து தானே, இத்தனை பிறவிகள் கடந்து தானே....
அப்பொழுதும் தான் உண்மை நிலை பின் அறிந்து கொள்ளுமடி உண்மையையே.
அப்பொழுதுதான் உண்மை நிலையை பின் அறிந்து கொள்ளுமடி உண்மையையே.
விளக்கம்.
பலபிறப்புக்கள் மனிதர்கள் மாறி மாறி எடுத்து வந்தாலும் அவர்களுடைய பாவங்கள் கர்மங்கள் வினைகள் அகலும் போது இத்தனை அதாவது குறிப்பிட்ட பிறவிகள் கடந்து வந்தால் தான் உண்மை நிலையை தெரிந்து கொள்ள முடியும்.
மனிதர்கள் செய்யும் செய்த பாவங்களால் ஒரே பிறவியில் உண்மை நிலையை புரிந்து கொள்ள முடியாது.
எத்தனை எத்தனை ராஜ்ஜியங்கள், அத்தனை ராஜ்ஜியத்தில் எங்கள் ஆட்சி பின் நடைபெற்றே கொண்டிருக்கின்றது.
விளக்கம்.
இந்த உலகத்தில் எத்தனை நாடுகள்? எத்தனை அரசாங்கங்கள்?.. ஆனாலும் எங்களுடைய சித்தர்கள் உடைய ஆட்சி தான் உலகமெங்கும் அனைத்து நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கின்றது.
மனிதன் என்னென்ன செய்கைகள், மனிதன் என்னென்ன செய்கைகள். அத்தனைக்கும் பின் அமைதியாக இருந்து காக்குபவனே எம் முருகனே.
அத்தனைக்கும் பின் ராஜாவாக இருந்து முருகனே பின் காப்பு.
விளக்கம்.
மனிதர்கள் என்னென்ன செய்வார்கள்? என்னென்ன பாவங்கள் செய்வார்கள்? என்னென்ன புண்ணியங்கள் செய்வார்கள்? அவர்களுடைய அன்றாட நிகழ்வுகள் அனைத்தையும் அவர்களுடைய செயல்பாடுகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே அமைதியாக பாதுகாத்து வருகின்றார் எங்கள் முருகன்.
இந்த உலகத்திற்கே அரசனாக இருந்து இந்த உலகத்திற்கு பாதுகாவலனாக இருந்து பாதுகாத்து வருகின்றார் எங்கள் முருகன் .
காப்புதானே எங்கு? இங்கு, காப்புதானே பின் எங்கு? இங்கு.
விளக்கம்.
அவருடைய காப்பு சக்தி இங்கு வேலோடு மலையில் இருக்கின்றது.
விளக்கம்.
இங்குதானே பல அடியில் தானே புகுந்து உள்ளது பல வழிகளில்.
தேவதைகள் தானே!! எங்கெங்கும் தானே பாம்பில் வடிவில் ஆடுகின்றார்கள்.
எங்கெங்கும் எதனையும் என்றென்றென்று, எதனையும் என்றென்றும் எங்கு உள்ளது??.
அடியில் தன்னில் அப்படியே பின் சென்றால் சில தொலைவில் தானே.
வந்து வந்து யாங்கள் செல்வோமே, வந்து வந்து யாங்கள் செல்வோமே.
விளக்கம்.
இங்கே வேலோடு மலையில் நாகமலைக்கு அடியில் பல ரகசியங்கள் பல உண்மைகள் பல வழிகளிலும் இருக்கின்றது. நாக தேவதைகள் பாம்பின் வடிவம் கொண்டு இங்கு முழுவதும் சுற்றி தெரிகின்றார்கள் படம் எடுத்து ஆடிக் கொண்டிருக்கின்றார்கள்.
இதன் அடியில் இருக்கும் நாகலோகத்தில் இருந்து வெளியே வந்து சுற்றி திரிகின்றார்கள் தேவதைகள்.
இங்கிருந்து வேலோடு மலைக்கு அடியில் கீழே சற்று தொலைவில் சென்றால்.. எங்களுடைய நடமாட்டம் அங்கு எங்கள் நாகலோகம் இருக்கின்றது அதாவது அங்கு நாக தேவதைகளின் நடமாட்டங்கள்.
நாங்கள் அடியிலிருந்து மேலே அடிக்கடி இங்கே முருகனை தரிசனம் செய்ய வந்து சென்று கொண்டே இருப்போம்.
வேலோடு மலை போகர் வாக்கில் அமாவாசை பௌர்ணமி தினங்களில் அந்த இளவரசி முருகனை தரிசனம் செய்ய வரும் பொழுது ஐந்து தலை நாகமுடன் வந்து செல்வார் என்று கூறியிருப்பதை உணர்ந்து கொள்ளுங்கள்.
அதனை என்றென்றும் மக்களுக்குப் பின் கண்ணுக்குத் தெரியாதபடி அலைகின்றோமே.
கண்ணுக்குத் தெரியாமல் அலைகின்றோமே, கண்ணுக்குத் தெரியாமல் அலைகின்றோமே.
எப்பொழுதும் மனிதனுக்குத்தான், எப்பொழுதும் தான் மனிதனுக்குத்தான். அதை யாங்கள் காண்பித்தாலும் பின் பாவம் வந்து விடுமே.
அதனாலேதான் அமைதி காத்துள்ளோம்.
விளக்கம்.
நாக தேவதைகளும் நாங்களும் வெளியே வந்து சுற்றி திரிந்தாலும் மக்களுடைய கண்களுக்கு தெரிவதில்லை.. மனிதர்களுக்கு எங்களுடைய சுய ரூபத்தை காட்டினால் பாவங்கள் வந்துவிடும்.. அதனால மறைபொருளாக மறைமுகமாக சுற்றி திரிகின்றோம் இங்கு வந்து செல்கின்றோம்.
எப்பொழுது? எப்பொழுது? நீங்கள் தன்னை பக்குவங்கள் பெற்று பெற்று பெற்று பலமாக இருந்தால் போதுமடி.
பின் அறிந்தும் எங்கள் ராஜ்ஜியங்கள் உங்களுக்குப் பின் காட்டிய பின் அறிந்து உள்ளம் அறிந்து உள்ளம்.
விளக்கம்.
நீங்கள் எப்பொழுது தன்னை தான் யார்? என்பதை உணர்ந்து பக்குவங்கள் முழுமையாக அடைந்திருந்தாலே போதும்.. நீங்கள் எங்களை பார்க்க முடியும் எங்களுடைய ராஜ்ஜியங்களையும் எங்களுடைய சக்தியையும் தரிசனத்தையும் உங்களுக்கு காட்டுவோம்.
எத்தனை??? எத்தனை ??மாணிக்கமடி, எத்தனை ??எத்தனை?? மாணிக்கமடி.
யாங்கும் தானே உமிழ்ந்தோமே......
அதை தன்னில் மனிதனுக்கு கொடுத்தாலும் வீணாகுமே.
வீணாகப் போகும் என்றே தெரிந்து யாங்கள் தானே மீண்டும் எடுத்துக்கொண்டோம்.
விளக்கம்.
எத்தனை? எத்தனை? நாகங்கள்? எத்தனை? எத்தனையோ நாக மாணிக்கங்களை இங்கே உமிழ்ந்து பரவச் செய்திருக்கின்றோம். அவையெல்லாம் மனிதர்கள் கையில் கிடைத்து விட்டால் அதை வைத்துக்கொண்டு அனைத்தையும் அழித்து விடுவான்.. அனைத்தும் அழிந்து விடும் என்பதற்கு நாங்களே மீண்டும் எடுத்துக் கொண்டோம் எங்களிடத்தில் வைத்துக் கொண்டோம்.
அன்பின்றி எதனின்றும் இங்கும் தங்க, அன்பின்றி எதனின்றும் இங்கும் தங்க......
. எப்படி ? எப்படி? மனிதனின் பின் லீலைகள் என்றே தெரியாதடி.
விளக்கம்.
உண்மையான பக்தியும் உண்மையான அன்பும் இல்லாதவர்கள் இங்கு யாரும் தங்க முடியாது இங்கு வரவும் முடியாது..
ஏனென்றால் மனிதர்களுடைய பேராசைகள் மனிதர்களுடைய கீழ்த்தரமான எண்ணங்கள் கீழ்த்தரமான செய்கைகள் அவர்களுடைய லீலைகள்.. மனிதர்களுடைய மனது எப்படி எல்லாம் மாறும் என்பது யாருக்குமே தெரியாது.. அதனால் இப்படிப்பட்ட மனிதர்கள் இங்கு யாரும் வந்து தங்க முடியாது.
எத்தனை எத்தனை ஆண்டுகள் தன்னில் மனிதனுக்கு வயதுகள் ஆகினால் புத்திகள் மட்டும் அப்படியே.
அப்படி அப்படி இருந்தாலும், அப்படி அப்படி புத்திகள் தான் இருந்தாலும் எப்படி யாங்கள் தானே பின் உண்மை நிலைகளை தெரிவிப்போமே.
உண்மை நிலைகளை தெரிவிப்பதற்கு, உண்மை நிலைகளை தெரிவிப்பதற்கு யாங்கள் தானே பின் தயாராக இருக்கின்றோம்.
விளக்கம்.
மனிதர்களுக்கு வளர்ந்து எத்தனை வயது ஆனாலும் மனிதர்களுடைய புத்தி சிறு புத்தி.. மனிதர்கள் வளர்ந்தாலும் புத்திகள் மட்டும் வளர்வதில்லை
எத்தனை ஆண்டுகள் ஆனாலும் சிறுமை எண்ணங்களோடு இருக்கின்றார்கள் அப்படியே.
அப்படி சிறிய புத்தியை மனிதர்கள் வைத்திருந்தாலும் அவர்களுக்கு வாக்குகள் கொடுத்து உண்மையை புரிய வைத்து உண்மை பொருளை நாங்கள் காட்டுவோம் சித்தர்கள்.
மனிதர்களுக்கு உண்மை பொருளை காண்பிப்பதற்கும் தெரிவிப்பதற்கும் சித்தர்கள் நாங்கள் தயாராக இருக்கின்றோம்.
அதைத்தானே பின் மனிதன் தன்னில், மனிதன் தன்னில் கொடுத்தால் தன்னில், மனிதன் தன்னில் கொடுத்தால் தன்னில். அதை வைத்து பாவத்தை பின் சம்பாதிப்பானே என்று முருகனுக்கே. அதை வைத்து தான் மனிதன் பாவத்தை பின் சம்பாதிப்பானே என்று முருகனுக்கு.
விளக்கம்.
பக்குவம் இல்லாத மனிதர்களுக்கு எதை கொடுத்தாலும் அதை வைத்து பாவத்தை சம்பாதித்து விடுவார்கள்..
அதனால் அனைத்தும் முருகனுக்கு சமர்ப்பணம் என்று முருகனிடம் ஒப்படைத்து விட்டோம்.
முருகன் தன்னில் சுற்றிச் சுற்றி, முருகனைச் சுற்றி எதை என்று அறிய. பின் எதையே என்று தேவதைகள் பின் அப்படியே. பின் பாம்புகள் வடிவில் இருந்தாலும், அப்படியே தேவதைகள் உருமாறி முருகனைக் கூட இன்றளவும் கூட பின் எதை என்று விளையாட்டாக விளையாடி விளையாடி போய்க்கொண்டிருக்கின்றனர்.
விளக்கம்.
வேலோடு மலையில் முருகன் வேல்ரூபத்தில் இருக்கின்றார். முருகனுக்கென சிலைகள் இல்லை.
வேலோடு மலை கருவறையில் முருகனின் வேலை சுற்றி... தேவதைகள்.. நாகங்களாக உருமாறி பின்னிப்பிணைந்து... முருகனை தழுவி சுற்றி வளைத்துக் கொண்டு விளையாடி செல்கின்றார்கள் இன்றளவும் அது நடந்து கொண்டே இருக்கின்றது.
மீண்டும் எதனை என்றென்றுமே நம்பி நம்பி, எதை என்றென்றும் கூட அன்றென்றும் என்றும் விளையாடினானே.
விளக்கம்.
முருகனை நம்பி வரும் தேவதைகளுக்கு அவர்களுடன் எப்பொழுதும் அவர்களுடன் இணைந்து முருகன் விளையாடுவார்.. இது நடந்து கொண்டே இருக்கின்றது அன்றும் நடந்தது இன்றும் நடந்து கொண்டிருக்கின்றது நாளையும் நடக்கும் முருகனுடைய விளையாட்டு நிற்காமல் தொடர்ந்து முருகனுடைய விளையாட்டு நடந்து கொண்டே இருக்கும்.
முருகன் தன்னை எத்தனை எத்தனை பிறவிகள் தன்னை வந்தாலும், எத்தனை எத்தனை அதிகம் மிச்சம்.
விளக்கம்.
முருகனைக் காண எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும் அந்த பிறவிகள் எல்லாம் போதாது.. ஏனென்றால் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் முருகனை காண வேண்டும் என்பதே பிறவியின் மிச்சமாக இருக்கின்றது.
எத்தனை எத்தனை வேலுமடி, எத்தனை எத்தனை வேலுமடி. எத்தனை வித விதமாக வேலும் இங்கே பின் நிற்கின்றது.
வைர வேல் என்கின்றார்களே, வைர வேலு என்கின்றார்களே. இங்குது தானே புதைத்துள்ளானே முருகன், இங்கு தானே பின் புதைத்துள்ளானே.
அதைத்தானே பின் தேவதைகள், அதைத்தானே தேவதைகள் காத்து காத்து நிற்கின்றாரே. பின் நிற்கின்றாரே, பின் நிற்கின்றாரே.
விளக்கம்.
இந்த வேலோடு மலையில்... எத்தனை எத்தனையோ வேல்கள் இருக்கின்றன... விதவிதமான வேல்கள் இங்கே இருக்கின்றது.(கருவறையிலும் பிரதானமாக வேல்கள் ஊன்றி வைக்கப்பட்டுள்ளது)
மறைமுகமாகவும் வேல்கள் இங்கு இருக்கின்றது.
முருகன் எங்கே தன்னுடைய வைர வேலை இங்கே மறைத்து புதைத்து வைத்திருக்கின்றார்.
முருகன் மறைத்து வைத்திருக்கும் வைர வேலை... நாக தேவதைகள் காவல் காத்து நிற்கின்றார்கள்.
உள்ளே தானே பாம்பின் வடிவம், உள்ளே தானே பாம்பின் வடிவம்.
எவை என்று என்று சொல்லப் பின் வெளியே வந்தால், பெண்ணாக, பெண்ணாக, பெண்ணாக வலமும் வந்து, பெண்ணாக, பெண்ணாக வலமும் வந்து....
விளக்கம்.
வேலோடு மலை நாக மலையில் அடியில் அமைந்திருக்கும் நாக லோகத்தில் உள்ளே பாம்பு ரூபத்தில் இருப்பார்கள் வெளியே வரும் பொழுது நாக தேவதைகள் பெண் உருவம் கொண்டு வெளியே வருவார்கள் வெளியே பெண் உருவம் கொண்டு வந்து சுற்றித் திரிவார்கள்.
சிலர் தன்னை பார்த்திட்டு, பின் எத்தனை எத்தனை பின் துன்பங்களே. எத்தனை எத்தனை ஏன் இந்த பின் துன்பங்கள் என்று நினைக்கவில்லையே. ஏன் இந்த துன்பங்கள் நினைக்கவில்லையே.
விளக்கம்.
அடியில் இருக்கும் நாகலோகத்தில் இருந்து மேலே பெண் உருவத்தில் வந்து சுற்றித் திருவதை மனிதர்கள் பார்த்தால் அவர்களுக்கு துன்பங்கள் ஏற்படும்... அப்படி துன்பங்கள் வந்த மனிதர்கள் நமக்கு ஏன் இந்த துன்பங்கள் வந்திருக்கின்றது? என்பதை யாரும் உணர்வதில்லை.
உண்மை ஞானியை தரிசித்தாலே, துன்பங்கள் வந்து பற்றிக் கொள்ளுமே. உண்மை ஞானியை தரிசித்தாலே, பின் துன்பங்கள் வந்து பற்றிக் கொள்ளுமே.
ஏனிந்த இந்த அவல நிலை???, ஏனிந்த இந்த அவல நிலை.??
விளக்கம்.
உண்மையான ஞானிகளை மகான்களை பார்த்தால் மனிதர்களுக்கு துன்பங்கள் வரும் கஷ்டம் வரும்.
துன்பத்தைக் கண்டு எதை என்று உப்பின் போலே பின் இருப்பாயே.
விளக்கம்.
ஏன் உண்மையான ஞானிகளை பார்த்தால் துன்பங்கள் கஷ்டங்கள் வருகின்றது???
ஏனென்றால் மனிதர்கள் தங்களுடைய பாவ கர்ம வினைகளால் உப்பை போன்று மாறி இருக்கின்றார்கள்.
அதனால்தானே ஞானியைக் கண்டு, அதனால்தானே ஞானியைக் கண்டு. உப்பும் கூட கரையுமடி, உப்பும் கூட கரையுமடி.
விளக்கம்.
உண்மையான ஞானியை சந்தித்தால் அவருடைய பார்வை நம் மீது பட்டால் நம் உடலில் இருக்கும் பாவ கர்ம வினை உப்பை போன்றது அந்த உப்பை கரைக்க அவர் ஆசிகள் வழங்கி செல்கின்றார்.
இது ஒரு சிகிச்சை போன்றது!
சிகிச்சையின் போது வலிக்கச் செய்வது போல.. மனிதர்களுடைய தங்களுடைய பாவ கர்மா வினை உப்பு மூட்டைகள் கரைக்கும் பொழுது துன்பம் என்ற வேதனை ஏற்படுகின்றது.
இந்த இடத்தில் நீங்கள் உணர்ந்து சிந்திக்க வேண்டும் இந்த வாக்கினை!!
இறைவனை குருவை வழிபடாதோர் உண்மையான ஞானியை காணாதவர் வாழ்க்கையில் கஷ்டங்கள் அனுபவிப்பதில்லை இறைவன் இல்லை என்று சொல்பவர்களும்
நன்றாக வாழ்கின்றனர்
இறையை பின்பற்றவர்களுக்கும் ஏன் கஷ்டங்கள் வருகின்றது என்பதை இதில் புரிந்து கொள்ளலாம்.
உண்மையான இறை பக்தியையும் உண்மையான குரு பக்தியையும் காண்பிக்கும் பொழுது அவர்களுடைய அருட்பார்வை நமக்கு கிடைக்கின்றது அப்பொழுது நம்முடைய பாவ உப்பு மூட்டைகள் கரைய வைக்கப்படுகின்றது அப்பொழுது துன்பங்கள் வருகின்றது.
அதனால்தான் கடவுள் மீது பக்தி உள்ளவர்களுக்கு கஷ்டங்கள் ஏற்படுவது இது தற்காலிகம் தான் பாவம் என்கின்ற உப்புமூட்டை முழுமையாக கரையும் பொழுது ஞானமும் கிடைக்கின்றது நாம் விரும்பியது எல்லாம் இறைவன் அருளால் கிடைக்கின்றது.
இறையை குருவை நம்பாதோருக்கு அவர்கள் எல்லாம் நன்றாக இருக்கின்றார்கள் அவர்கள் எல்லாம் வாழ்க்கையில் உயர்ந்து நிற்கின்றார்கள் என்கின்ற எண்ணம் பலருக்கும் இருக்கின்றது ஏனென்றால் அவர்கள் இறைவனையோ குருவையோ வணங்குவதில்லை அதனால் அவர்களுடைய பாவங்களும் கரைவதில்லை மேலும் மேலும் பாவங்களை அதிகரித்து அதிகரித்து அடுத்தடுத்த பிறவிகளில் அந்த பாவத்திற்கு ஏற்ப அவர்களுக்கு தண்டனையான பிறவிகள் கிடைக்கும்.
அதனால் தானோ!?!?! என்னவோ!?!??,
பின் மனிதன் உடம்பு உப்பாகி, ஞானியின் மேலே பற்றுக் கொண்டோன். ஞானியின் மேலே பற்றுக் கொண்டோன். உப்பின் வழியே எதை என்ற ஞானத்தின் பின் கரைந்து, பின் ஞானத்தின் ஞானத்தின் வழியாகுமே.
விளக்கம்.
மனிதர்கள் தன்னுடைய பாவகர்மா வினை உப்பு மூட்டைகளை கரைத்தால் தான் ஞானம் கிடைக்கும்... அதனால் தான் ஞானியை சித்தரை பக்தியோடு உண்மையான அன்போடு பற்று கொண்டு பின்பற்றும் பொழுது உப்பு கரைவிக்கப்படுகின்றது அவர்களுடைய ஆசிர்வாதத்தால்.
அப்பொழுது சிகிச்சை எனும் துன்பங்களை அனுபவிக்க நேரிடுகின்றது...
பாவ கர்மா வினை உப்பு மூட்டைகள் முழுமையாக கரைந்து விடும் பொழுது ஞானம் பாதைக்கு சென்று ஞானம் சித்திக்கும்.
அத்தனையும் பின் உண்மையடி,
அத்தனையும் பின் உண்மையடி.
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் நான் கூறுவது அனைத்தும் சத்தியம்! சத்திய வாக்கு!
இப் பாம்போட்டோவோனும் எத்தனை எத்தனை மனிதனை இங்கு பார்த்தேனடி. எத்தனை? எத்தனை? பார்த்தேனடி. பின் பொய்யானவரை எதை நின்று வந்து வந்து பின் தேடினார்களே.
வந்து வந்து பின் தேடினார்களே.
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் நான் இங்கு இருக்கையில் எத்தனையோ பொய்யான மனிதர்கள் இங்கு புதையல் இருக்கின்றது பொக்கிஷம் இருக்கின்றது என்று அபகரிக்க இங்கு வந்து தேடி தேடி பார்த்தார்கள்.
அதனையும் தன்னை விரட்டியடித்தாரே. தேவர்கள் தானே எதை என்று.
தேவர்கள் தானே பாம்பின் மூலம், தேவர்கள் மூலம் பாம்பின் உருவம் எடுத்துதானே. விரட்டி அடித்தார், விரட்டி அடித்தாரே, விரட்டி அடித்தாரே.
விளக்கம்.
புதையலுக்கும் பொக்கிஷத்திற்கும் ஆசைப்பட்டு இங்கு தேடி வந்த பொய்யான மனிதர்களை நாக தேவர்களும் நாக தேவதைகளும் பாம்பின் ரூபம் கொண்டு.. சீறி அவர்களை இங்கிருந்து விரட்டியடித்தனர்.
எங்கும் உள்ளது பரம்பொருளே. அனைத்தும் நிற்கும் அனைவருக்கும், பின் அனைவருமே தெரிந்தது.
விளக்கம்.
எங்கும் நீக்கமற நிறைந்து நிற்பது பரம்பொருளான இறைவன் அவர் அனைவருக்கும் பொதுவானவர் அனைவருக்கும் தந்தையானவர்.. இது பொய்யான மனிதர்களுக்கு உணர்ந்து கொள்ள முடியாது உண்மை பக்தியுள்ளவர்கள் அனைவருக்குமே தெரிந்த உண்மை இது.
எத்தனை எத்தனை பின் சித்தர்களே. எத்தனை எத்தனை சித்தர்கள் இங்கு தானே..... பின் அழகாக வந்து இன்றைய நாளே, பின் முருகன் தானே. இன்று நாளே, பின் முருகன் தானே விளையாடினானே. யாங்கள் அனைவரும் கண்டு, பின் பின் சந்தோஷமே, சந்தோஷமே அடைந்தோமே. சந்தோஷமே அடைந்தோமே.
விளக்கம்.
பங்குனி உத்திரமான இன்றைய தினத்தில் சித்தர்கள் அனைவரும் நாங்கள் இங்கு வந்தோம்.
விளையாட்டுப் பிள்ளையான முருகன் இங்கு விளையாடினார். அவர் ஆடி பாடி களித்ததை.. சித்தர்கள் நாங்கள் அனைவரும் கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்தோம்.
அத்தனை பின் சந்தோஷம் தனி மக்களுக்கு யாங்கள் கொடுத்தோமே. அத்தனை சந்தோஷத்தை பின் வரங்கள் மக்களுக்கு தானே கொடுத்தோமே.
விளக்கம்.
சித்தர்கள் முருகன் விளையாடியதை பார்த்த அடைந்த மகிழ்ச்சி எங்கள் மனம் நிறைந்த ஆசிகளையும் சந்தோஷமாக வரங்களையும் மக்கள் அனைவருக்கும் சித்தர்கள் நாங்கள் கொடுத்தோம்.
அதனும் என்று பயன்படுத்துவது, அதனை என்று எவ்வாறு தான்? பயன்படுத்துவது என்று சரியாகவே பயன்படுத்திக் கொண்டால் வெற்றி நிஜமாகும்.
வெற்றி நிஜமாகும். எம்மருளால் அனைத்தும் இங்கே நலமாகும்.
விளக்கம்.
நாங்கள் சித்தர்கள் மகிழ்வோடு கொடுத்த வரங்களையும் ஆசிகளையும் சரியாக பயன்படுத்திக் கொண்டால் உங்களுக்கு நிச்சயம் வெற்றி நிஜமாகும் எங்களது அருளால் அனைத்தும் உங்களுக்கு இங்கு நலமாகும்.
அனுதினமும் யானும் வந்து, அனுதினமும் யானும் வந்து முருகனைப் பின் வேலோடு பின் பின்னிக்கொண்டு பின் செல்கின்றேனே.
வேலோடு வேலோடு வந்து, பின் பின் பாம்பின் ரூபம் பின்னிக்கொண்டு பின் செல்கின்றேனே.
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் நான் பாம்பின் வடிவம் எடுத்து கருவறையில் இருக்கும் முருகன் வேல்
வேலாக இருக்கும் முருகனை நித்தம் தழுவி பின்னிப்பிணைந்து ஆராதிக்கின்றேன்... ஒரு கொடி மரத்தை சுற்றி பின்னிப் பிணைந்து போல பாம்பின் உடல் கொண்டு வேலை பின்னி பிணைந்து கொள்கின்றேன்.
எத்தனை எத்தனை விதவிதமான, எத்தனை எத்தனை விதவிதமான பாம்பில் தன்னை உருவம் எடுத்து மக்களை காத்து நின்றேனே.
விளக்கம்.
பாம்பாட்டி சித்தர் நான் மக்களை காப்பதற்கு அடிக்கடி இந்த உலகில் எல்லா இடங்களிலும் அதிகமாக அதிகமாக விதவிதமாக பாம்பின் வடிவம் கொண்டு மக்களை ஆபத்திலிருந்து காத்து நின்று இருக்கின்றேன்.
பாம்பின் பின் போல் உருவம் எடுத்து மக்களைக் காண என்றென்றுமே,
என்றென்றும் மக்களைக் காணவே !!!!!
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் நான் பாம்பின் உருவம் எடுப்பது மக்களை காணவும் பாதுகாக்கவுமே..... பாம்பின் ரூபத்தில் என்றென்றும் எப்பொழுதும் மக்களை பார்த்துக்கொண்டே இருப்பேன்.
இன்றும் கூட அபிஷேகம் தன்னை பார்த்தேனே. மறைமுகமாக வந்துதானே பாம்பின் வழியே எத்தனை எத்தனை மனிதன் நின்று பார்த்தேனே.
விளக்கம்
இந்த வேலோடு மலையில் இன்றும் அதாவது பங்குனி உத்திர நாள் இன்று பாம்பின் வடிவம் எடுத்து முருகனின் வடிவமாக இருக்கும் வேலுக்கு நடந்த அபிஷேகத்தை பார்த்தேன் மறைமுகமாக இருந்து பார்த்தேன்
இங்கு வந்த மனிதர்கள் அனைவரையும் பாம்பின் வடிவம் கொண்டு பாம்பின் உருவத்திலேயே யார் யார் என்பதை பார்த்தேன்.
யார் என்னை பின் கண்டுகொண்டார்கள்? யார் என்னை என்னை கண்டுகொண்டார்கள்?
யாருமில்லையே.
விளக்கம்.
நான் பாம்பின் வடிவம் கொண்டு மனிதர்களை பார்த்துக் கொண்டிருந்ததை யாரும் என்னை பார்க்கவில்லை.. யாரும் என்னை உணரவும் இல்லை.
எதனை?? கொண்டு ஆசிகள் பெறவே அழைத்தானே. யான் என்றும் பின்ன எது என்றும் அறிய முருகன் தானே ஆசிகள் பெற அழைத்தானே.
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் என்னை முருகனை அழைத்தார்.. ஆசிகளை வழங்குவதற்கு என்னை அழைத்தார்.
அவ் ஆசிகள் பெற்றுக்கொண்டேனே!!!!
, அவ் ஆசிகளை பெற்றுக்கொண்டேனே!!....
ஆசிகள் பெற்று மனிதனுக்குப் பின் எண்ணங்கள் பிற சரி செய்தேனே. ஆசிகள் பெற்று பல மனிதருக்கு எண்ணங்கள் யானே சரி செய்தேனே.
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் நான் முருகனிடம் ஆசிர்வாதங்களையும் வரங்களையும் பெற்றுக் கொண்டு அதை கொண்டு இங்கு வந்த மனிதர்களின் எண்ணங்களை கண்டு சில தீய எண்ணங்களை மாற்றி அகற்றி சரி செய்தேன்.
இங்கு வந்த மனிதர்களுக்கு நல் எண்ணங்களை நானே புகுத்தினேன்.
எத்தனை? எத்தனை? கலியுகத்தில்,..... எத்தனை? எத்தனை? கலியுகத்தில் வரும் !!
வருமோ துன்பம் என்று பின் மனிதன் பின் உணர்ந்திருக்கவில்லையே.
எத்தனை எத்தனை துன்பங்கள் பின் வருவதென்பது அறிந்திருக்கவில்லையே.
விளக்கம்.
கலியுகத்தில் எவ்வளவு துன்பங்கள் வரும் என்பதை மனிதர்கள் யாரும் யோசிக்கவில்லை உணரவும் இல்லை. மனிதர்களுக்கு கலியுகத்தில் ஏற்படும் துன்பங்களை குறித்து அறிவுகள் இல்லை.
துன்பம் வந்த பிறகே தான் துன்பம் வந்த பிறகு தான் வருந்துகின்றானே, வருந்துகின்றானே.
விளக்கம்.
வரும் முன் காப்போம் என்ற எண்ணமே மனிதர்களுக்கு இல்லை... துன்பங்களும் கஷ்டங்களும் வந்த பிறகு தான் மனிதன் அதை நினைத்துப் பார்க்கின்றான் வெதும்புகின்றான் வருத்தம் அடைகின்றான்.
அத்தனைக்கும் பின் சுலபமாக வழிகள் செய்யவென இங்குதானே வருகின்றார்கள்.
விளக்கம்.
துன்பங்களிலிருந்து எளிதாக தப்பிப்பதற்கு என்ன வழி?? என்பதை அறிந்து கொள்ளவே இங்கு மனிதர்கள் வருகின்றார்கள்.
தேவதைகள் தானே எதை என்றும் புரிய எச்சில் தானே துப்புகின்றார்.
அதுதான் என்றும் மறைமுகமாக சொல்வதற்கு இல்லையே.
விளக்கம்.
இங்கே சுற்றித் திரியும் நாக தேவதைகளின் வாயிலிருந்து மாணிக்கத் தன்மையுடைய திரவங்களை தன் உமிழ்நீர் இங்கு கக்குகின்றார்கள்.
அது ரகசியமானது அதைப்பற்றி முழுமையாக இங்கு சொல்வதற்கு இல்லை. அந்த ரகசியத்தை இப்பொழுது சொல்ல முடியாது.
எதை என்று எச்சில் என்பது யான் என்ன சொன்னேன்? எச்சில் என்பது யான் என்ன சொன்னேன்?
விளக்கம்.
பாம்பாட்டி சித்தர் கூறுவதை.. சிரத்தையோடு கவனிக்க... நாக தேவதைகளின் வாயிலிருந்து வெளிப்படும் மாணிக்கத் தன்மையுடையது உமிழ்நீர் தெய்வீகமான ஒன்று நாகங்களின் வாயிலிருந்து வெளிப்படும் அந்த உமிழ் நீர் மாணிக்க தன்மை உடைய திரவம் இங்கு நாக தேவதைகள் வேலோடு மலையில் ஆங்காங்கு கக்கி விட்டு செல்கின்றது.
இதைப் பற்றி நாக தேவதைகளின் உமிழ்நீர் தன்மை குறித்து குருநாதர அகத்திய பெருமான் கூறிய வாக்குகள்
1 சுருளிமலை
சித்தன் அருள் பதிவு எண் 1895 அன்புடன் அகத்தியர் சுருளி மலைவாக்கில்... பல கோடி ஆண்டுகள் வாழ்ந்து வரும் ஒரு பெரிய நாக தேவதை இங்கு உள்ளதப்பா
அப்பனே அதுதான் நிச்சயம் தன்னில் கூட இங்கு உமிழ்ந்து கொண்டே இருக்கின்றது நீரை அப்பனே நிச்சயம் தன்னில் கூட...
அதாவது சுருளி மலையில் இருக்கும் புனித தீர்த்தத்தில் நாக தேவதையின் மாணிக்க உமிழ் நீர் திரவம் கலக்கின்றது இந்த நீரை அருந்தி வர நோய்கள் தீரும் என்று குருநாதர் கூறி இருக்கின்றார். அந்த நாக தேவதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்திலும் சஞ்சாரம் செய்து கொண்டே இருப்பார் சுருளி மலை பொதிகை மலை என சுற்றி திரிந்து கொண்டே இருக்கும் நாக தேவதை...
அந்த தேவதை எப்பொழுது தன்னுடைய மாணிக்கம் உமிழ் திரவத்தை அருவியில் கக்குவார் என்பதை மற்றும் எந்த தினத்தில் பக்தர்கள் சென்று அந்த நீரை எடுக்க வேண்டும் என்பது குருநாதர் மறு வாக்கில் கூறுகின்றேன் என்று உரைத்திருந்தார்.. அனைவரும் நினைவில் கொள்ளவும்.
2 குற்றாலம்
இதற்கு முன்பாக சித்தன் அருள் பதிவு எண் 1313 தலைக்காவேரி குடகு மலை வாக்கில்
குற்றாலம் அருவியில் நீண்ட நாட்களாக வாழ்ந்து வரும் நாக கன்னிகை பிரம்ம முகூர்த்தத்தில் வந்து நீராடி அதன் மாணிக்க தன்மையை உடைய உமிழ்நீரை கலந்து விட்டு செல்கின்றது அந்த நீரையும் பருகி வந்தால் அந்த நீரில் குளித்து வந்தால் பல பிணைகள் தீரும் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்...
(இன்னும் குற்றாலத்தில் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் அப்பனே ஓர்""""""" நாக கன்னிகை """" எதை என்று அறிய அறிய அப்பனே அங்கு எதையென்று நீராடும் அனுதினமும் அதிகாலையிலே!!!!! அப்பனே அதாவது மூன்று மணி அப்பனே எதையென்றும் அறிய அறிய அப்பனே அங்கு நவ கன்னிகைகள் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் நீராடுவார்களப்பா!!!!!!!!
இன்னும் எதையென்று அறிய அறிய அப்பனே பின் """" பாம்பின் கால் பாம்பறியும்!!!!!!! என்று ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே!!!!!
எதையென்று அறிந்து அறிந்து அப்பனே அங்கு நீராடும் பொழுது அப்பனே ஊர்ந்து செல்கின்றது அது பல ஆண்டுகளாக காணப்படுகின்றது. அப்பனே அப் பாம்பு எதை என்று அறிய அறிய அது ஊர்ந்து செல்லும் பொழுது அப்பனே சிறிது....... ""'""'கக்கும்!!!!!
அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அது """""" விஷேசமானது """""" அங்கே கலக்கின்றது!!!!! அதனால்தான் அப்பனே பின் எதை என்று நதியில் அதாவது குற்றாலத்தில் ஓடுகின்ற எவை என்று அறிந்து அப்பனே நிச்சயம் பின் பார்த்து கொள்ளுங்கள்!!!!
அங்கே நீராடும் பொழுது அப்பனே பின் மேலிருந்து படுகின்ற பொழுது அப்பனே சில மாற்றங்கள் உருவாகும் என்பேன் அப்பனே!!!!!!)
3 ஓதிமலை
ஓதி மலையில் வாழும் நாக தேவதை குறித்து
சித்தன் அருள் பதிவு எண் 1592..... ஓதி மலையில் இருந்து இரவில் தன்னிடம் இருக்கும் மாணிக்கம் வைரம் ஒளிக்கற்றையை அதாவது கதிர்வீச்சை வெளிப்படுத்தும் நாகதேவதை குறித்து படித்து உணர்ந்து கொள்ளலாம்.
சமீபத்தில் ஸ்ரீமுஷ்ணம் ஆதிவராக நல்லூர் பற்றிய வாக்கிலும் ஒரு ராஜநாகம் இந்த பகுதிகளில் நீண்ட காலங்களாக சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது என்று குருநாதர் கூறியதையும் நினைவில் வைத்துக் கொள்ளவும்
சமீபத்தில் பண்ணாரி அம்மன் ஆலயத்தில் வாழும் நாகதேவதை குறித்த குருநாதர் கூறிய வாக்கு பின் இணைப்பாக இணைக்கப்பட்டுள்ளது அதையும் படித்து புரிந்து கொள்ளுங்கள்.
அன்றையும் எதையும் என்றென்றும் கூட அனுதினம் ஒன்றும் பூஜிப்பார்கள். ஒவ்வொருவரும் தேவதையும், ஒவ்வொருவரும் தேவதையும் ஒவ்வொரு நாளும் உருவம் எடுத்து பின் பின்னிக்கொள்வார். பின் வேலோடு!!
விளக்கம்.
ஒவ்வொரு நாளும் நாகலோகத்தில் இருந்து நாக தேவதைகள் பாம்பின் உருவம் கொண்டு வந்து வேலோடு மலை கருவறைக்கு உள்ளே வேல் வடிவத்தில் இருக்கும் முருகனை பின்னிப்பிணைந்து தழுவி செல்வார்கள்.. ஒவ்வொரு நாளும் முறை வைத்து இது நடக்கும்.
அப்பொழுது, அப்பொழுது எச்சில் தன்னை, அப்பொழுது, அப்பொழுது எச்சில் தன்னை விட்டுவிட்டு பின் செல்வார்களே.
விளக்கம்.
ஒவ்வொரு நாளும் பாம்பாக நாக தேவதைகள் வந்து வேலை பின்னி பிணைந்து தழுவிக் கொள்ளும் பொழுது தம்முடைய வாயிலிருந்து வெளிப்படும் மாணிக்கத் தன்மையுடைய திரவத்தை ஆங்காங்கே துப்பி கக்கி விட்டு செல்வார்கள்.
பின் அதையும் கூட மிதிப்பார்களே. அதை தன்னை மிதித்துவிட்டால், அதை தன்னை மிதித்துவிட்டால் ஞானங்கள் பெருகுமடி.
மனிதனுக்கு ஞானங்களும் பெருகுமடி.
விளக்கம்.
நாக தேவதைகள் துப்பி விட்டு கக்கிவிட்டு செல்லும் மாணிக்கத் தன்மை உடைய திரவம் ஆங்காங்கு மண்ணில் இருக்கும்.. அதை மனிதர்கள் மிதித்தாலே அதன் மீது நடந்தாலே ஞானங்கள் கிடைக்கும்.
எத்தனை? எத்தனை? எத்தனை? எத்தனை? எத்தனை? எத்தனை? வேஷங்கள் தான் அத்தனையும் பின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் 'பூஜிக்கின்றார்.
பாம்பின் ரூபமாகவே வந்து வந்து ஒவ்வொரு தேவதையும் பாம்பு ரூபமாக வந்து வந்து வேல் தன்னைப் பின் பூஜிக்கின்றது. பின் பூஜிக்கின்றது.
விளக்கம்.
அடியில் இருக்கும் நாகலோகத்தில் இருந்து நாக தேவதைகள் ஒவ்வொரு ரூபம் எடுத்து அவதாரம் எடுத்து.. சில நேரங்களில் மனிதர்களைப் போல் பெண்களைப் போல் பக்தர்களைப் போல் வந்து வேல் பூஜை செய்து செல்கின்றார்கள்.
எத்தனை ? எத்தனை? அபிஷேகங்கள், எத்தனை ?எத்தனை? ஆராதனைகள், எத்தனை எத்தனை பார்த்திட்டேனே, பார்த்திட்டேனே, பார்த்திட்டேனே!!
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் இங்கு நான் முருகனின் வேலுக்கு நடக்கும் அபிஷேகங்கள் ஆராதனைகள் பூஜைகள் அனைத்தையும் எண்ணற்ற முறை பார்த்துள்ளேன்... அதிகமாக மிக அதிகமாக அளவில் அபிஷேகங்களையும் பூஜைகளையும் நான் பார்த்துள்ளேன்.
என்பவையா என்பது எத்தனை என்றென்றும் எட்டு எட்டு பின் கூட்டினாலே பின் என்ன வருவது தெரியவில்லையே.
அன்றென்றும் எத்தனை எத்தனை எத்தனை அத்தனையும் ஒன்று கூட்டினாலே பின் ஆயிரக்கணக்கான ஆகுமே.
விளக்கம்.
எத்தனை முறை நான் பார்த்துள்ளேன் என்பதை எட்டு எட்டு என கூட்டினால் என்ன வரும்??? அப்படி கூட்டிக் கொண்டே சென்றால் ஆயிரக்கணக்கான முறை நான் பார்த்துள்ளேன்.
இங்கு எட்டு என்பது எட்டாம் நாளான அஷ்டமி திதியை இப்படி எட்டாம் நாளான அஷ்டமி திதி கணக்கில் வைத்துக் கொண்டாலும் ஆயிரக்கணக்கான முறை பாம்பாட்டி சித்தர் பார்த்துள்ளார்.
எத்தனை வருடங்கள் மனிதனுக்கு, எத்தனை வருடங்கள் மனிதனுக்கு, மனிதன் புரிந்து கொண்டானே. பின் இத்தனை பின் வயதுகள், பின் இத்தனை வயதும் வாழ வேண்டும் என்று அத்தனை கூட வயதாகி என்று சொல்கின்றானே.
விளக்கம்.
மனிதர்களுடைய ஆயுட்காலம் எவ்வளவு தான் என்று மனிதர்களை தீர்மானித்துக் கொள்கின்றார்கள்.. எனக்கு இவ்வளவு வயது ஆகிவிட்டது இனியும் எத்தனை ஆண்டு காலம் தான் வாழ முடியும் என்று இவர்களே எண்ணிக் கொள்கின்றார்கள்.. குறிப்பிட்ட வயதை அடைந்து விட்டால் எனக்கு வயதாகி விட்டது நான் முதியவன் ஆகிவிட்டேன் எனக்கு இவ்வளவு வயதாகி விட்டது என்று மனிதர்கள் நினைத்துக் கொள்கின்றார்கள்.
ஆனாலும் அது பொய்யே தான்,
ஆனாலும் அது பொய்யே தான்.
விளக்கம்.
மனிதர்கள் தமக்கு வயதாகிவிட்டது முதியவனாகி விட்டேன் என்பதெல்லாம் பொய்.. இதைப் பற்றி குருநாதர் அகத்தியர் பெருமான் உடம்பை இரும்பாக்கும் முறையை மற்றும் இளமையாக உடம்பை வைத்துக் கொள்ள குருநாதர் வாக்கில் ஒவ்வொரு ரகசியங்களை தெரிவித்துக் கொண்டே வருகின்றார் பண்டைய காலங்களில் மனிதர்கள் எப்படி எல்லாம் கடைப்பிடித்தார்கள் 100 ,200, 300, ஆண்டுகள் என வாழ்ந்தார்கள் என்பதை குருநாதர் ஏற்கனவே வாக்கில் தெரிவித்து இருக்கின்றார் நினைவு கூர்க.
இதன் அடிப்படையில் மனிதர்கள் வயதாகிக் கொண்டு புலம்புவதை அதெல்லாம் பொய் என்று இந்த இடத்தில் பாம்பாட்டி சித்தர் கூறுகின்றார்.
பாம்பின் இட்ட பின் எச்சிலே, பின் மிதித்தாலே, பின் சாபங்களே, சாபங்கள் ஓடிடும், ஓடிடும், ஓடிடும்.
விளக்கம்.
இங்கு வேலோடு மலையில் நாக தேவதைகள் வந்து துப்பி செல்லும் மாணிக்கத் தன்மை திரவத்தை உமிழ்நீரை மனிதர்கள் அதன் மீது நடந்து சென்றாலும் மிதித்தாலும் மனிதர்களுக்கு இருக்கும் தோஷங்கள் சாபங்கள் விலகிவிடும்.
எப்பொழுதும் பின் அண்டாதே!!!!
விளக்கம்.
இப்படி இங்கு வந்து சென்றால் மாணிக்கத் தன்மை உமிழ் நீரை மிதித்து விட்டு சென்றால் சாபங்கள் விலகிவிடும் மீண்டும் அந்த சாபங்கள் வராது நம்மை தொடராது.
. சரியாக முருகனை நினைத்தாலே, சரியாக மனிதர், மனிதன் பின் முருகனை நினைத்தாலே,..
யாங்கள் அழைத்து வந்து அவ் எச்சில் தன்னைப் பின் மிதித்து வைத்துப் பின் அனைத்தும் பின் தீருமப்பா,
விளக்கம்.
இப்படி உங்களுக்கு இந்த ரகசியத்தை சொல்லி உங்களுடைய சாபம் தோஷம் தீருவதற்கு கூறும் இந்த அருளை பெறுவதற்கு... முருகனிடத்தில் உண்மையான பக்தி கொண்டிருக்க வேண்டும்.. முருகனே கதி என்று இருக்க வேண்டும்.. முருகனின் உண்மையான பக்தர்களை நாங்கள் சித்தர்களே இங்கு வரவழைத்து நாக தேவதைகளின் எச்சில் உமிழ்நீரை மிதிக்க வைத்து அதன் மீது நடக்க வைத்து உங்கள் தோஷங்களையும் சாபங்களையும் நாங்களே தீர்க்க வைப்போம்.
எத்தனை? எத்தனை? அவதாரங்கள்,? எத்தனை ?எத்தனை? அவதாரங்கள்,? எத்தனை ?எத்தனை? அவதாரங்கள்? என்பவை மனிதனுக்குப் பின் தெரிவதில்லையே.
விளக்கம்
இறைவனுடைய திருவிளையாடலை மனிதர்கள் இதுவரை யாரும் தெரிந்திருக்கவில்லை..
எத்தனை எத்தனை இறைவனின் அவதாரங்கள் திருவிளையாடல்கள் எத்தனை எத்தனை இறை வடிவங்கள் பெண் தெய்வங்கள் ஆண் தெய்வங்கள் இறை வாகன தெய்வங்கள் இறை பறவை தெய்வங்கள் என எத்தனை எத்தனை அவதாரங்கள் இறைவனுடையது இதைப் பற்றி மனிதர்களுக்கு ஒன்றும் தெரிவதில்லை. ஏன் இறைவன் இவ்வளவு அவதாரங்கள் எடுத்தார்? ஏன் கல்விக்கென்று பெண் தெய்வம் செல்வத்திற்கென்று பெண் தெய்வம் எதற்காக வீரத்திற்கென்று பெண் தெய்வம்? அனுமார் நந்தி மயில் வாகனம்.. விஷ்ணுவின் தசாவதாரங்கள்
ஈசனின் மாற்று உருவில் வந்து திருவிளையாடல்கள் எதற்காக எந்த நோக்கத்திற்காக என்பதை எதுவும் மனிதர்களுக்கு தெரிவதே இல்லை
அனைத்தும் ஒன்றுதான் இறைவன் ஒருவரே அவரிடம் இருந்து அத்தனை அவதாரங்களும் சக்திகளும் தனித்தனியாக பிரிந்து செயல்பட்டதை செயல்படுவதை குருநாதர் ஏற்கனவே தம் வாக்குகளில் விளக்கியுள்ளார்.
இவ்வுலகத்திற்கு என்னையே மன்னனாக இருக்கும்படி சொன்னானே எம் முருகன். மன்னனாக இருக்கச் சொன்னானே!!!
விளக்கம்.
இந்த உலகத்திற்கு நீ அரசனாக இருந்து ஆட்சி செய் என்று பாம்பாட்டி சித்தன் என்னை முருகன் ஆட்கொண்டு வரம் அருளினார் என்னை மன்னனாக இருந்து அரசாட்சி செய்யச் சொன்னார்.
எத்தனை எத்தனை புவி தன்னில், எத்தனை அங்கும், எத்தனை எத்தனை எவையையும் என்று துருவங்கள்.
துருவின் வழியே என்னவென்று எதை என்றும் எட்டிப் பார்த்து, எட்டிப் பார்த்து, எட்டிப் பார்த்துக் கொண்டு கொண்டு இருக்கின்றோம்.
விளக்கம்.
இங்கு துருவம் துரு எனப்படுவது துளை என எடுத்துக் கொள்ளலாம். துளை என்பது ரகசிய வழிகள் ரகசிய குகைகள்... பாம்பின் புற்றும் இது போன்ற அமைப்பில் தானே உள்ளது அந்த துளையின் வழியாக மனிதர்களை வெளியே எட்டிப் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம்.
பாம்பு புற்றில் இருந்து துளை வழியாக மேலே வந்து ஒரு பாம்பு நோக்குவதை இந்த இடத்தில் நினைவில் வையுங்கள்.
மனிதனுக்கு
மனிதனுக்கு சேவைகள் செய்ய எத்தனை எத்தனை பின் ஆகினோம். எத்தனை எத்தனை பிறவிகள் தன்னை வந்து வந்து, பின் உண்மைகள் தன்னை எங்களிடத்தில் இருந்து கொண்டால், எங்களிடத்தில் இருந்து கொண்டால் யோகங்கள் யாங்கள் தருவோமே. யாங்கள் யோகங்கள் யாங்கள் தருவோமே.
விளக்கம்.
நாங்கள் இப்படி செயல்படுவது மனிதர்களுக்கு சேவைகள் செய்வதற்கு..
மனிதர்கள் எத்தனை எத்தனை பிறவிகள் எடுத்து வந்தாலும் உண்மை பொருளை அறிந்து கொள்ள முடிவதில்லை.
எங்களை அடைந்து எங்கள் வழியில் மனிதர்கள் நடந்தால் அவர்களுக்கு உண்மையை நாங்கள் உண்மை பொருளை புரிய வைப்போம்.
எங்களை சித்தர்களை பின்பற்றி எங்களிடமே இருந்து கொண்டால்.. எங்கள் வழியை பின்பற்றி நாங்கள் கூறும் வாழ்க்கை முறையை பின்பற்றி அதாவது தர்மம் செய்ய வேண்டும் புண்ணியங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் எந்த உயிருக்கும் துன்பங்கள் தரக்கூடாது எந்த உயிரையும் கொல்லக்கூடாது இறை பக்தி மிகவும் முக்கியம் அன்பு தான் அனைத்திற்கும் காரணம் அன்பு அனைவரிடமும் செலுத்த வேண்டும் இப்படி நாங்கள் கூறும் வழிமுறையை நீங்கள் பின்பற்றினாலே உங்களுக்கு யோகங்களை சித்தர்கள் நாங்கள் தருவோம்.
ராகு கேது தீயவைகள், ராகு கேதுகள் தீயவைகள் என்று பின் மனிதன் பின்று சொன்னானே......... அவை பொய்யே, பொய்யே என்று சொல்வேன்.
விளக்கம்.
பாம்பு கிரகங்களான ராகுவும் கேதுவும் தோஷங்கள் தரும் அவை தீய கிரகங்கள் என்று மனிதர்களும் ஜோதிடர்களும் பொய்யை பரப்பிக் கொண்டு இருக்கின்றார்கள்.
உண்மையில் ராகுவும் கேதுவும் மனிதர்களுக்கு ஞானத்தையும் அறிவையும் செய்த பாவங்களை அனுபவித்து தீர்க்க வைத்து ஞானத்தை யோகத்தை தருபவை
ஆனால் மனிதர்கள் ராகு கேதுவை தீய கிரகங்கள் என பொய் சொல்லித் திரிகின்றனர்.
எம்மிடத்தில் இருந்து கொண்டு பின் அவை பொய்யே, பொய்யே என்று சொல்வேன்.
பாம்பாட்டு சித்தனின் எதை என்று கூட, பாம்பாட்டு சித்தனின் எது என்றும் கூட அறிந்தது என்றும் என்பவை என்று ராகு கேது பின் தோஷங்கள் நின்றோம். ராகு கேதுகளின் தோஷங்கள் நின்றோம். எம்மிடத்திலே இருந்து கொண்டு பின் ஞானத்தை யானே வணங்குவனே.
ஞானத்தை வழங்கி அதிர்ஷ்டத்தையும், ஞானத்தை வழங்கி அதிர்ஷ்டத்தையும் கொடுப்பேனே.
இவ்வுலகத்தை புகழ் பாடப் பின் கொடுப்பேனே.
அருள்கள் என்றென்றும்!!
விளக்கம்.
பாம்பாட்டும் சித்தன் நான்... ராகு கேது குறித்து மனிதர்கள் சொல்லும் கருத்துக்கள் அனைத்தும் பொய்யே.
ராகு கேது உங்கள் ஜாதகத்தில் நின்றால் அவை உங்களுக்கு ஞான பாதையை காட்டுகின்றது.
ராகு கேது கிரகம் இருந்தால் அவை தீயவை என்று எண்ணாமல் நமக்கு அனுபவ பாடத்தை ஞானத்தை காண்பிக்கின்றது என்று நினைத்துக் கொண்டு பொய்யை பேசாமல் உண்மையை உணர்ந்து கடந்து வர வேண்டும்.
அந்த ஞானத்தை பாம்பாட்டும் சித்தன் நானே வழங்குவேன்.
ஞானத்தையும் கொடுத்து அதிர்ஷ்டத்தையும் யோகத்தையும் கொடுப்பேன்.
இந்த உலகத்தில் சீரும் சிறப்புமாக பேரும் புகழுமாக வாழ்வதற்கு அருள்கள் நான் கொடுப்பேன்
எத்தனை எத்தனை மனிதர்கள் பின் ராகு கேதுவை பின் புரிந்து கொள்ளவில்லையே. ராகு கேதுவை புரிந்து கொள்ளவில்லை.
எத்தனை எத்தனை அதனால்தானே ராகு கேதுவை, அதனால்தானே ராகு கேதுவை பின் தீய கிரகங்கள் என்று சொல்லிவிட்டானே.
மனிதன் கேடுகெட்ட மனிதனே.
விளக்கம்.
பாம்பாட்டி சித்தன் நான் பல மனிதர்களை பார்த்து விட்டேன் இதுவரை மனிதர்கள் யாரும் ராகுவின் தன்மையை கேது கிரகத்தின் தன்மையை யாரும் சரியாக புரிந்ததில்லை..
ராகு கேது கிரகம் என்ன செய்யும்? எதை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும்? என்பதை உண்மையை புரிந்து கொள்ளாமல் கேடுகெட்ட மனிதர்கள் ராகு கேதுவை தீய கிரகங்கள் என்று பழிக்கின்றார்கள்.
என்னென்ன பின் எப்பொழுது, எப்பொழுது எதை என்றும் கூட அழகாக ஐந்தின் பால் எதை என்றும் கூட அறிந்தது போன்ற இன்றுள்ளமே யாங்கள் மகிழ்ந்து வந்தோமே. வெளியே சென்றுதானே முருகனை தரிசித்தோமே.
விளக்கம்
ஐந்தின் பால் ஐம்பால்
அதாவது
தமிழ் இலக்கணத்தில் பால் ஐந்து வகைப்படும்.
உயர்திணைக்கு உரிய பால் 3
ஆண்பால்
பெண்பால்
பலர்பால்
அஃறிணைக்குரிய பால்கள்
ஒன்றன்பால் .
பலவின்பால்
அதாவது ஆண் பெண் மரங்கள் கால்நடைகள் பறவைகள் என அனைவரும் வெளியே வந்து அதாவது இந்த பங்குனி உத்திர நாளில் அவரவர் தமது இடத்திலிருந்து வெளியே வந்து அதாவது இங்கே வந்து முருகனை தரிசனம் செய்து சந்தோஷம் அடைந்தோம்.
பங்குனி உத்திர நாளில் வேலோடு மலையில் விளையாடிக் கொண்டு இருக்கும் முருகனைக் காண
அனைத்து உயிர்களும் அனைத்து ஜீவராசிகளும் இங்கே வந்து தரிசனம் செய்து மகிழ்ந்தோம்.
அன்னையையும் பின் தந்தையையும் கூட பார்த்தோமே. அன்னையையும் தந்தையையும் பார்த்தோமே.
பிள்ளையானையும் பின் பார்த்தோமே.
பின் அறிந்து உள்ளம் முருகன் தானே, முருகன் தானே மனமகிழ்ந்து, முருகன் தானே மனமகிழ்ந்து எப்பொழுதும் பின் வேலோடு பின் விளையாடினானே.
விளக்கம்.
இங்கே நாங்கள் அனைவரும் வந்து அன்னையான பார்வதி தேவியையும் தந்தையான ஈசனையும்.. பிள்ளையான் அதாவது பிள்ளையோன் ஆன கணபதியையும் நாங்கள் தரிசனம் செய்தோம் இவர்கள் அனைவரும் முருகனுடைய விளையாட்டை காண இங்கு வந்திருந்தார்கள்.
அனைவரும் தன்னைக் காண வந்திருப்பதை கண்டு மகிழ்ந்த முருகன் முழு மனதோடு மனம் முழுக்க மகிழ்ச்சியில் நிறைந்து வேல்ப்பிடித்து திருவிளையாடல் திரு நடனம் புரிந்தார்.. முருகனுடைய அளவிலா விளையாட்டை கண்டு நாங்கள் மகிழ்ந்தோம்.
இங்கு தானே அதையும் யாங்கள் பார்க்க வந்தோம். அதையும் கூட யாங்கள்தான் பின் பார்க்க வந்தோம்.
பின் பார்த்திட்டு, பார்த்திட்டு அனைவருக்கும் பின் ஆசிகள் தானே கொடுத்திட்டோமே.
விளக்கம்.
இங்கு வேலோடு மலையில் சித்தர்கள் நாங்கள் அனைவரும் இங்கு தான் அந்த மகா அனுபூதியை கண்டோம் அனைவரும் மகிழ்ந்தோம் அனைவரையும் பார்த்தோம் வந்திருந்த அனைவருக்கும் ஆசீர்வாதங்களும் கொடுத்தோம்.
இன்னும் சித்தர்கள் இவ் ரகசியத்தை எல்லாம் சொல்லச் சொல்லப் பின் வருவார்களே.
இன்னும் இவ் ராஜ்ஜியத்தைக் காணப் பின் விஷயங்கள் பின் சொல்லச் சொல்லப் பின் வருவார்களே.
விளக்கம்.
இன்னும் இந்த வேலோடு மலை ரகசியங்களை எல்லாம் சொல்வதற்கு சித்தர்கள் படையெடுத்து வருவார்கள்.
ஏற்கனவே குருநாதர் அகத்திய பெருமான் போகர் பெருமான் இப்பொழுது பாம்பாட்டி சித்தர் என வேலோடு மலை ரகசியங்களை வாக்கில் கூறிக் கொண்டே வருகின்றார்கள். மேலும் சித்தர்கள் பல பல சித்தர்கள் வந்து இன்னும் வேலோடு மலை ரகசியத்தை வாக்கில் உரைக்கப் போகின்றார்கள்.
இன்னும் இந்த நாட்டை அதாவது இலங்கையை காப்பதற்கு வழிகளும் இன்னும் ரகசியங்களும் மக்களுக்கு தெளிவுபடுத்த உண்மையை உணர்த்த இந்த நாட்டை சரியாக பார்த்துக் கொள்வதற்கு இன்னும் நல்வாக்குகள் வந்து சித்தர்கள் உரைக்கப் போகின்றார்கள்.
எத்தனை எத்தனை விஷயங்கள்,?? எத்தனை வித்தனை விஷயங்கள்?? மறைக்கப்பட்டுள்ளது.
எப்படித்தான் மனிதனுக்குத்தான் சொல்வது என்று தெரியவில்லையே.
விளக்கம்.
இந்த பூமியில் எத்தனை எத்தனை புனித நிகழ்வுகள் புனித விஷயங்கள் ரகசியங்கள் உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளது..
இது எல்லாம் மனிதர்களுக்கு எப்படி சொல்வது??
ஏனென்றால் சித்தர்கள் கூறும் ரகசியங்களை புரிந்து கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் புண்ணியங்கள் தேவைப்படுகின்றது.
சித்தர்களின் வாக்கை படிப்பதற்கும் கேட்பதற்கும் அதை உணர்ந்து சித்தர்கள் வழியை பின்பற்றுவதற்கும் புண்ணியங்கள் தேவைப்படுகின்றது.
அதனால்தானே மனிதனுக்குத் தான், அதனால் தானே மனிதனுக்குத் தான் யாங்கள்தானே சில, புண்ணியங்கள் பின் கொடுத்து கொடுத்து பக்குவ நிலையை ஏற்படுத்தி அனைத்தும் தானே சொல்வோமே.
விளக்கம்.
மனிதர்களுக்கு சித்தர்கள் நாங்கள் கூறும் வாக்குகள் புரிந்து கொள்வதற்கும் உணர்ந்து கொள்வதற்கும் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்துவதற்கும் புண்ணியங்கள் மனிதர்களுக்கு தேவைப்படுகின்றது.. அந்தப் புண்ணியங்களை மனிதர்களுக்கு சித்தர்கள் நாங்களே கொடுத்து மனிதர்களுக்கு பக்குவத்தை கொடுத்து.. ஒவ்வொரு வாக்கிலும் ஒவ்வொரு ரகசியங்களை சொல்லி மனிதர்களை உயர்த்துவோம்.
வருங்காலத்தில் எங்களைப் பின் தொடர்பவர்கள் வெற்றிதானே. பின் நிச்சயமே வெற்றிதானே.
பின் நிச்சயமே பின் யாங்கள் தருவோமே வெற்றியை.
ஆசிகள், ஆசிகள்.
விளக்கம்.
வரும் காலம் இந்த கலியுகத்தில் அழிவு காலமாக இருக்கும்.. இந்த காலத்தில்.. உண்மையான பக்தியை கொண்டு தான தர்மம் செய்து சித்தர்களின் வழியை பின்பற்றி சித்த மார்க்கத்தை பின்பற்றி வருபவர்களுக்கு எப்பொழுதும் வெற்றியே சித்திக்கும்.
நிச்சயம் சித்தர்கள் எங்கள் பேச்சைக் கேட்டு வருபவர்களுக்கு வெற்றியை நாங்களே தருவோம்.
உங்கள் அனைவருக்கும் ஆசிகள் ஆசிகள்.
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!
சமீபத்தில் குருநாதர் அகத்தியர் பெருமான் அகத்தியர் அடியவர்களுக்கு கூடிய வாக்கில் நாக கன்னிகை குறித்து உரைத்த வாக்கு இதனுடன் பக்தர்கள் அனைவருக்கும் தெரிவிக்க.. பாம்பாட்டி சித்தரின் வாக்கோடு இணைக்கின்றோம்.
நாகங்கள் புற்று வழிபாடு குறித்து குருநாதர் கூறிய வாக்கு
அதாவது தன் முன்னோர்கள் நாகத்திற்கு செய்த ஒரு தீங்கின் விளைவாக அந்த நாகத்தின் கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளானதால் வீட்டில் சண்டை சச்சரவுகள் நிம்மதி இல்லாத காரணத்தால் இப்படியே வாழ்க்கை சென்று கொண்டிருந்தது
அதன் பாதிப்பிலிருந்து விடுபட குருநாதர் கூறிய வழிபாட்டு முறை மற்றும் பொது வாக்கையும் படித்து உணர்ந்து கொள்ளுங்கள்
நல்விதமாகவே எதை என்று அறிந்தும் கூட வெள்ளி (கிழமை) தன்னில் கூட புற்றிடத்திற்கு (புற்று அல்லது புற்றுக்கோயில்) சென்று அங்கு பாலை தானமாக வைத்துவிட்டு வழிபாடு செய்தால்... இதனால் நிச்சயம் தன்னில் கூட... முன் ஜென்மங்களிலோ உங்கள் முன்னோர்களோ நாகங்களுக்கு செய்த சில காரியங்களால் ஏற்பட்ட சாபம் விலகும்.
இவ்வாறாக செய்துவிட்டு வந்தாலே நிச்சயம் போக போக பல நல்ல விஷயங்கள் இல்லத்தில் நடக்கக்கூடும்..
நாகங்கள் மனம் மகிழ்ந்து யோகத்தை கொடுக்கும்.
இன்னும் நிச்சயம் தங்கள் கூட ஆயிரம் வருடங்கள் நிச்சயம் பின் வாழ்ந்து வருகின்ற சர்ப்பங்கள் கூட இருக்கின்றது.. அவை வாழும் இடங்களுக்கு அருகில் சென்றாலே யோகங்கள்.. வரும் காலத்தில் அத்தகைய சர்ப்பங்கள் எங்கு வாழ்கின்றது என்பதையும் கூட அனைவருக்கும் செப்புவேன்..
அங்கெல்லாம் சென்று யோகங்களாக மாற்றிக்கொண்டு கொண்டு எதையென்று புரிய... வாழலாம்.
நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய ஏது என்று கூட பண்ணாரி அம்மன்.. என்னும் இடத்திலே நிச்சயம் அதாவது ஆயிரம் வருடங்கள் இன்னும் நிச்சயம் தன்னில் கூட ஒரு நாக கன்னிகை இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றது.
(ஆயிரம் வருடங்களை கடந்து வாழ்கின்ற நாகங்கள் இன்னும் இந்த பூமியில் இருக்கின்றது அவை வாழ்கின்ற இடத்தில் சென்று வழிபட்டாலே நமக்கு யோகங்கள் ஏற்படும் அவையெல்லாம் எங்கெங்கு வாழ்கின்றது என்று குருநாதர் வரும் காலத்தில் வாக்கில் கூறப் போகின்றார்.
தற்போது ஈரோடு சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் ஆலயத்தில் இருக்கும் புற்றில் ஆயிரம் ஆண்டுகள் கடந்து வாழும் நாகதேவதை இருக்கின்றது என்று குருநாதர் இந்த வாக்கில் தெரிவித்திருக்கின்றார்.
நிச்சயம் இவ்வாறாக குழப்பங்கள் எவ்வாறு என்பதெல்லாம் நிச்சயம் மன குழப்பங்கள் மனப்போராட்டங்கள் இருப்பவர்கள்.. நிச்சயம் பண்ணாரி சென்று அங்கு அமர்ந்து நிச்சயம் தன்னில் கூட பின் எதை என்று கூட அத் தாயிற்கு எதை என்று கூட 108 எலுமிச்சை பழங்கள் கொண்டு அதன் தாய்க்கு மாலையாக இட்டு வந்தாலே நிச்சயம் இவ்வாறாக மூன்று ஐந்து ஏழு இவ்வாறாக மாதங்களாக சென்றாலே.. சில தரித்திரங்கள் நீங்கும் அனைவருக்குமே. சொல்லிவிட்டேன்.
என்று குருநாதர் அனைவருக்கும் வாக்குகள் கூறியிருக்கின்றார் பொதுவாக.. இதை அனைவரும் உணர்ந்து பண்ணாரி சென்று வழிபாடுகள் செய்யலாம்.
வேலோடு மலைக்கு எதிரில் இருக்கும் நாகமலை விவரங்கள்.
வேலோடும் மலைப் பகுதியில் பண்டைய காலத்தில் வேடர் மட்டுமல்லாது நாகரும் வாழ்ந்துள்ளமை ஆய்வுகள் மூலம் தெரிகிறது.இம்மலையின் உச்சிப் பகுதியில் செம்மஞ்சள் நிறத்தில் மண் மேடும், ஒரு புற்றும், குட்டையான மரங்கள் சிலவும் காணப்படுகின்றன.
நாக மன்னர்களும் ஆட்சி செய்துள்ளமை தெரிய வருகிறது. இவர்களில் மூவர் நாக மன்னர்கள் ஆவர். இவர்கள் மண்டுநாகன், கொட்டாயன், கொட்டியன் என மான்மியம் கூறுகிறது.
இலங்கையில் 2300 ஆண்டுகளுக்கு முன்பு பொறிக்கப்பட்ட சுமார் 100 பிராமிக் கல்வெட்டுக்களில் நாக மன்னர்கள், நாக தலைவர்கள், நாக பிரதானிகள், நாக சுவாமிகள், நாக அதிகாரிகள் ஆகியோர் பற்றிய குறிப்புகள் உள்ளன. இலங்கையின் வரலாற்றுதயக் காலத்தில் நாக எனும் பெயர் கொண்ட மன்னர்கள் பலர் ஆட்சி செய்துள்ளனர். இவர்களில் பலர் தமிழ்ச் சமூகத்தோடு தொடர்புடையவர்கள். இவர்கள் பற்றிய வரலாறு மற்றும் வழிபாட்டுப் பாரம்பரியம் ஆகியவை பிராமிக் கல்வெட்டுக்களை ஆதாரமாகக் கொண்டு இத்தொடரில் ஆராயப்படுகின்றன.
மட்டக்களப்பு நாகமலை: மட்டக்களப்பு மாவட்டத்தில், வந்தாறுமூலைக்கும் சித்தாண்டிக்கும் இடையில் இந்த மலை அமைந்துள்ளது. இதன் அருகில் 'வேலோடும் மலை' உள்ளது. இங்கு பண்டைய தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த மலைகள் மகா நாக மன்னன் காலத்தவை என்று ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.
நாகர் குடிகள்: இலங்கையின் ஆதி குடிகளான 'நாகர்கள்' வாழ்ந்த இடமாகவும், அவர்களின் வழிபாட்டு முறைகளுடனும் இந்த மலைத்தளங்கள் தொடர்புபடுத்தப்படுகின்றன.
3000 வருடங்களுக்கு முன் நாகர்கள் இனத்தை சேர்ந்த நாகராஜன் மன்னன் ஆட்சி செய்தகாலத்தில் "வேலோடும் மலை" முருகன் ஆலயம் என்ற ஸ்தாபனம் தோற்றம் பெற்றது.
இது இலங்கை மட்டக்களப்பு சித்தாண்டியில் இருந்து 7கிலோமீற்றர் பயணித்து சந்தனமடு ஆற்றை கடந்து வனத்துக்குள் 7 கிலோமீட்டர் பயணித்தால் அடையலாம். அங்கு சித்தர்கள் ரிஷிகள் விட்டு சென்ற எச்சங்கள் இன்னும் இருக்கின்றன.
இன்றும் மிக சக்தி வாய்ந்த தேவ நாகங்கள் இங்குள்ள சித்தர்களின் பொக்கிஷங்களை பாதுகாக்கின்றன. நேராக நாகங்களின் தரிசனங்களை, தெய்வீக வாடைகளை உணரலாம். இலங்கை சார்ந்த பல தெய்வ ரகசியங்கள், தேவ ரகசியங்கள் இன்றும் மறைந்திருக்கும் அற்புத மலைத்தொடர்.
சித்தாண்டியின் மேற்கே இலுக்குப் பொத்தானை எனுமிடத்திலுள்ள வேலோடும்மலையருகேயுள்ள நாகமலை.
இன்றும், இலங்கையின் தேசிய மரம்= நாக மரமே!
நாக நாடு = ஆதி தமிழர் நாடு!
(தென் தமிழகம் + வட ஈழம்) மிகுந்த பகுதி!
*நாகர்கோயில்
*நாகமலை
*நாகமேடு
*நாகப்பட்டினம்
இப் பேர்கள்.. ஈழம்/தமிழகம் இரண்டிலும் உண்டு!
சிலப்பதிகாரம்
மணிமேகலை
சங்கத் தமிழ்.. நாக நாடு பேசும் ஆவணங்கள்! என நாகலோகம் நாகர் வழிபாடு நாகர் இனம் குறித்து பல ஆராய்ச்சி தகவல்கள் வரலாற்று பதிவுகள் உள்ளது.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)
.jpeg)
