​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 6 February 2026

சித்தன் அருள் - 2101 - அன்புடன் அகத்தியர் - திருக்கேதீஸ்வர சிவபுராண கூட்டு பிரார்த்தனை வாக்கு 7


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7

நாள் : 29/01/2026 (வியாழக்கிழமை) 
நேரம் : காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை 
இடம் : திருகேதீஸ்வரம் , மன்னார் மாவட்டம் , இலங்கை
Google map :- https://maps.app.goo.gl/bi3iBs3vGWBQYyY99

அன்புடன் குருநாதர் அகத்திய மாமுனிவர் அருளால் - அகில இலங்கை அகத்திய மாமுனிவர் மன்றம்,  இலங்கை  இந்து சமய அலுவலகங்கள் கலாச்சார திணைக்களம் மற்றும் இலங்கை  திருக்கேதீஸ்வரர் ஆலய திருப்பணி சபை  இணைந்து நடத்திய கூட்டுப் பிரார்த்தனை என்று அடியவர்கள் அறியத்தருகின்றோம்.

========================================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
========================================

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரத்தில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7)

=========================================
# ஞானங்கள் அதிக அளவு பெற்றால்தான், இவ்வுலகத்தில் தன்னையும் பாதுகாத்து கொள்ளலாம்.இதன் மூலம் பிறரையும் காப்பாற்றலாம்
=========================================

குருநாதர் :- அப்பனே, இதைத்தான் நன்கு அறிந்து, பல வழிகளில் கூட மனிதன் ஞானம் பெற வேண்டும், அப்பனே. சொல்லிக் கொண்டே இருக்கின்றேன், அப்பனே. ஞானங்கள் அதிக அளவு, அப்பனே, பெற்றால்தான், அப்பனே, இவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட தன்னையும் பாதுகாத்து கொள்ளலாம், அப்பனே. 

இதன் மூலம் பிறரையும் காப்பாற்றலாம் என்பேன் அப்பனே. 

இதன் மூலம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இதனால் இன்னும் இன்னும் ஞானங்கள், அப்பனே, பின் இறைவனுடைய, அப்பனே, அனுக்கிரகங்கள், அப்பனே, அதிக அளவு, அப்பனே, கிடைக்கப் பெற்று, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தன்னைத்தானே வென்று, அப்பனே, பிறரையும், அப்பனே, காப்பாற்றலாம். 

பிறரையும் கூட நல்வழிப்படுத்தி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட துன்பமில்லா, அப்பனே, பின் வாழ்க்கையையும் கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அளிக்கலாம். 

==============================================
# நீங்கள் சக்திகள் பெறும் ரகசியங்கள் - பல எண்ணற்ற பரிசுத்தமான ஆன்மாக்கள் இவ்வுலகத்திற்கு வந்து வந்து,பல வழிகளிலும் தியானங்கள் செய்து, உடம்பை பரிசுத்தமான இடத்தில் எல்லாம் விட்டுச் சென்றிருக்கின்றது.
==============================================

குருநாதர் :-  அப்பனே, நல்விதமாகவே. எண்ணற்ற, அப்பனே, பரிசுத்தமான, அப்பனே, ஆன்மாக்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வுலகத்திற்கு வந்து வந்து, அப்பனே, நன்மைகள் செய்ய, அப்பனே, பின் அதாவது, பின் இறைவனை நினைத்து நினைத்து, அப்பனே, பல வழிகளிலும் தியானங்கள் செய்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நல்வழியாகவே, அப்பனே, பின் உடம்பை, அப்பனே, பரிசுத்தமான இடத்தில் எல்லாம் விட்டுச் சென்றிருக்கின்றது என்பேன் அப்பனே. 

அவ்விடங்களுக்கு சென்றாலே பன்மடங்கு மாற்றங்கள் உண்டப்பா. ஏற்றங்களும் உண்டப்பா. நல்படியாக, அப்பனே, வருங்காலத்தில் எல்லாம் இவையெல்லாம் யான் செப்புகின்ற பொழுது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதை ஏற்றி, அப்பனே, அப்படியே செய்ய, தான் தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட என்ன வேண்டுமோ அவை தன் நிச்சயம் பெற்றுக் கொள்ளலாம் என்பேன் அப்பனே. 

============================================
# வரும் காலங்கள் நோய்கள் காலம். ஆனால் குருநாதர் அவுஷதங்கள் பல சொல்லியுள்ளார்கள். அடியவர்கள் பயன்படுத்தி கொள்க.
============================================

குருநாதர் :- இதனால், அப்பனே, வருங்காலங்களில், அப்பனே, நோய்கள் காலமாகவே இருக்கின்றது என்பேன், அப்பனே. இதனால், அப்பனே, நிச்சயம், பின் அதற்கும், பின் அவுஷதங்கள் பல சொல்லிவிட்டேன், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றது தெரியுங்களா? 

அடியவர் :- நோய்களுக்கு மருந்து சொல்லி இருக்காரா?

சுவடி ஓதும் மைந்தன் :- ஏற்கனவே சொல்லி இருக்காரு. ஆமா. ஏன்னா வருங்காலத்துல வந்து அதிகமா நோய்தான் தாக்குன்றார் மனிதன் வந்து. மனுஷனுக்கு வந்து அதிகமா வந்து நோயை தாக்கும். 

=========================================
# கலியுகம் முற்றுகின்ற பொழுது அதிக அளவு நோய்தான் தாக்கும்
=========================================

குருநாதர் :-  அப்பனே, ஏன், எதை என்று புரிய, அப்பனே. அதாவது கலியுகம், கலியுகம், அப்பனே, பின் முற்றுகின்ற, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் பொழுது அதிக அளவு நோய்தான் தாக்கும் என்பேன், அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப வந்து அதிகமா நோய் தாக்குமன்னா கலியுகம் முற்றி அதான் அது நோய் அதிகமா தாக்குதுன்னாவே கலியுகம் வந்து முற்றி முத்தி போகுதுன்னு அர்த்தமா வந்து. 

=========================================
# கலியுகம் முற்றுகின்ற பொழுது  இளைஞர்கள் அதிக அளவு அழிவார்கள்
=========================================

குருநாதர் :-  அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை மட்டுமில்லாமல் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே இளைஞர்கள் அப்பனே அதிக அளவு அழிவார்கள் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இளைஞர்கள் அதிக அளவு எப்ப அழியுறாங்களோ, அப்ப கலியுகம் முற்றுகிறது. 

=========================================
# கலியுகம் முற்றுகின்ற பொழுது  தர்மத்தை சரியாக  காப்பவனை, கெடுப்பார்கள்.
=========================================

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் தர்மத்தை காக்காமல், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அவை மட்டுமில்லாமல் தர்மத்தை சரியாக அப்பனே காப்பவனே   அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதையும் கூட கெடுப்பான் என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப தர்மத்தை சரியா வந்து காப்பாத்துறவராய்  வந்து அடுத்து என்ன பண்ணுவான்?

அடியவர் :- கெடுப்பான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  கெடுப்பாராம். 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனை வணங்குவானப்பா மனிதன். 

==================================================
# ஞானியர்களின் பாடல்களை திருத்தலங்களில் பாடினால் பல வழிகளில் ஒரு ஞானம் பிறக்கும் அப்பனே. 
# ஞானம் பிறந்து முதலில் தன்னைத்தான் காத்துக் கொள்ளலாம். 
===================================================

குருநாதர் :-  அப்பனே இதனால்தான் அப்பனே இன்னும் எதை என்று புரிய அப்பனே நல்லோர்களும் எவை என்று அப்பனே, இன்னும் தீயோர்களும் அப்பனே எதை எது என்று அப்பனே தெரிவிக்க, அப்பனே நிச்சயம் தன்னில் கூ,ட அப்பனே நல்விதமாகவே அப்பனே கலியுகத்தில், அப்பனே பின் பல ஞானிகள் தோன்றி, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பல மக்களுக்கு உரைத்துக் கொண்டதை, அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வழியிலும் கூட, அப்பனே திருத்தலத்தில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் பாடினால் நிச்சயம் தன்னில் கூட, பல வழிகளில் ஒரு ஞானம் பிறக்கும் அப்பனே. ஞானம் பிறந்து முதலில் தன்னைத்தான் காத்துக்கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (நம்ம ஊர்ல இருக்குற ஒவ்வொரு திருத்தலமும் ஒரு சக்தி மையம். அங்க இறைவனை அடைய பல ஞானிகளும் ரிஷிகளும் பல வருஷம் தவம் பண்ணி, பதிகங்களைப் பாடி அந்த இடத்தோட சக்தியை அதிகப்படுத்தி வச்சிருக்காங்க. நாம அந்தத் தலங்களுக்குப் போய் அந்தப் பாடல்களைப் பாடும்போது, அங்க இருக்குற நல்ல சக்திகள் (Positive Energy) தானாவே நம்ம உடம்புல ஏறிக்கும்.)

=========================================
# காலத்தால் அழியாத பல மூலிகைகளை திருத்தலங்களில் சித்தர்கள் வைத்துள்ளார்கள். 
=========================================
# திட்டுத்தலங்களில் உறங்கினால் - உடம்பில் உள்ள சக்திகளை அதிகப்படுத்தலாம்.
=========================================

குருநாதர் :-  அப்பனே முன்பே அப்பனே யாங்கள் பல அப்பனே நிச்சயம் தன்னில் மூலிகைகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் திருத்தலத்தில் வைப்போம் என்போம் அப்பனே. 

அவை தான் அப்பனே எப்பொழுதும் அப்பன் நிச்சயம் அழியாது என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

அவ்வாறாக அப்பனே பின் நிச்சயம் தன்னில் உடம்பில், அப்பனே நிச்சயம் மனிதனுக்கு ஒவ்வொரு அப்பன் நிலைமையில் கூட சக்திகள், அப்பனே பின் அவ்வாறு குறைகின்ற பொழுது, அப்பனே மனிதனுக்கு என்ன செய்வது? ஏது செய்வது என்றெல்லாம் தெரியாமல் போகும். 

இதனால் அப்பனே பின் அன்றைய காலகட்டத்தில் அப்பனே திருத்தலத்தில் அப்பனே தங்கினார்கள் என்பேன் அப்பனே ஆனாலும் இன்றைய காலகட்டத்தில் அவை சாத்தியமே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அந்த காலகட்டத்தில் சித்தர்கள் வந்து பல மூலிகைகளை வச்சு செஞ்சாங்க.கோயில் கட்டினார்கள். வந்து அந்த அப்ப மனுஷனுக்கு வந்து சில சக்திகள் குறையும் பொழுது, கோயில்ல வந்து படுத்து தூங்குனாங்கன்னாவே, சரியாயிடும்ன்றாரு. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அது சாத்தியமில்லை. 

====================================
# இல்லத்தில் உள்ளவர்களே , ஏன் இறைவன் வணங்குகின்றீர்கள் என்று கேட்பார்கள்.
====================================

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் இறைவனை அழைத்தாலும் அப்பனே பின் இல்லத்தில் உள்ளவர்கள் ஏன் இறைவன் வணங்குகின்றீர்கள் என்றெல்லாம் அப்பனே பின் செப்புவார்கள் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கோயில்ல தங்கவிட்டாலும், வீட்ல இருக்கிறவங்க என்ன பண்ணுவாங்களாம்? நீ ஏன் வந்து கோயில்ல சாமி, ஏன் கோயில்ல சாமி கும்பிடுற? ஏன் கோயில்ல தங்குற? வந்து உனக்கு வேலை இல்லையா? வெட்டி இல்லையான்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாங்களாம், வீட்ல இருக்கிறவங்களே பேசுவார்கள். 

குருநாதர் :-  ஏனென்றால் ஆக மொத்தத்தில் அப்பனே நிச்சயம் தன்னில் ஒரு கலியுகம் அப்பனே பின் அழிய வேண்டும் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. என்னென்ன அப்பனே முயற்சிகள் பின் மனிதன் என்னென்ன எது என்று அப்பனே 

அடியவர் :- எவ்வளவு காலம் நடக்கணும் கலியுகம்?

குருநாதர் :- அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அப்பன் நிச்சயம் தன்னில் கூட நாளை கூட அப்பனே பின் நினைத்தால் அப்பனே இறைவன் பின் முடித்து விடுவான் என்பேன் அப்பனே.

அடியவர் :-  இறைவன் கையில தான் இருக்கு.

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் கையில தான் இருக்குது. வந்து இது மாதிரி வந்து சரியான வழியில நிறைய ஞானிகள் வந்து சொல்லுவாங்க மனிதனுக்கு வந்து திருந்தி கூடாதுன்னு சொல்லிட்டு இல்லைன்னா என்ன பண்ணுவாங்க?

அடியவர் :- நாளைக்கே அழிச்சிருவாங்க.

குருநாதர் :-  அப்பனே அடுத்தடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் ஒரே முறையில் அழியாதப்பா நிச்சயம் தன்னில் கூட. அப்பனே மனிதன் சரியில்லாமல் நிலையில் இருந்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பெருத்த அழிவுகளை தந்து தந்து அப்பனே அடுத்த அழிவும் வந்து கொண்டுதான் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த அழிவையும் வந்து கொண்டுதான் இருக்கிறது. 

===========================================
# அழிவுகள் தடுத்து தடுக்க, சித்தர்களால் மட்டுமே முடியம். 
# சித்தர்கள்  சொல்லியதை கேட்டாலே போதுமானது.
============================================

குருநாதர் :-  அப்பனே பின் அழிவுகள் தடுத்து தடுக்க அப்பனே பின் எங்களால் மட்டுமே முடியும் என்பேன் அப்பனே. மனிதன் சொல்லிக் கொள்ளலாம் அவை அழிவு இவை அழிவு. பயம் வைத்து விடலாம் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே நிச்சயம் தன்னில் கூட யாங்கள் இருக்கின்றோம் அப்பனே. யாங்கள் சொல்லியதை கேட்டாலே போதுமானது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   மனிதன் சொல்லுவாங்க. ஆனா அழிவு இருக்குதே, மனிதன் சொல்லிட்டே இருப்பாங்க. வந்து அந்த அழிவு வருது. இந்த அழிவு வருது. ஆனா எப்படி காக்குறதுக்கு மனிதனுக்கு தெரியாதப்பா. அதனால நாங்க சொல்றதை நீங்க கேட்டீங்கன்னா என்ன ஆகும், நாங்க பார்த்துக்கிறோம். 

===============================================
# பிரபஞ்ச நெருப்பும் கோபுரக் கலசங்களின் ரகசியமும்!
===============================================

===============================================
பிரபஞ்சத்தில் ஒரு மகா நெருப்புப் பிழம்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கிறது. அதிலிருந்து வெளிப்படும் அதீத ஆற்றலைச் சில கிரகங்கள் ஏற்றுக் கொள்கின்றன, சில கிரகங்களால் அதைத் தாங்க முடிவதில்லை. அப்படித் தாங்க முடியாத அந்த உக்கிரமான கதிர்வீச்சுகள் நேரடியாகப் பூமியில் இறங்கிப் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதற்காகவே, ஞானிகளாகிய நாங்கள் இறைவன் அருளோடு "கோவில் கலசங்களை" (கும்பங்களை) அமைக்கும் ரகசியத்தைச் சொல்லிக் கொடுத்தோம். அவை மேலிருந்து வரும் அந்த அதீத சக்தியைத் தடுத்து, முறைப்படுத்தி நமக்கு நன்மையாக மாற்றுகின்றன.
===============================================

குருநாதர் :-  அப்பனே இன்னும் அப்பனே பன்மடங்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அழிவிலே அப்பன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதாவது நிச்சயம் அப்பனே அதாவது நெருப்பு பிளம்பு அப்பனே எரிந்து கொண்டே,  எப்பொழுதும் கூட, அவை தன் கீழே எதை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :- இன்னும் இன்னும் அப்பனே பின் எவை என்று அறிய, அப்பனே பின் அவை தன் அப்பனே பின் நிச்சயம் தன்னில் கூட, பின் வந்து அப்பனே பல கிரகங்களை, அப்பன் நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு கிரகமும் அப்பனே ஏற்றுக்கொள்ளும். 

குருநாதர் :- ஆனாலும் அப்பனே பின் சில கிரகங்கள் ஏற்றுக்கொள்ளாதப்பா. 

குருநாதர் :- அவ்வாறு நிச்சயம் தன்னில் கூட பின் இவ்வாறாக அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பன் ஏற்றுக்கொள்ளாததற்குத்தான், அப்பன் நிச்சயம் தன்னில் கூட அதாவது நிச்சயம் தன்னில் சொம்பை ( கோவில் கலசம் )  ஒன்றை நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, அப்பனே அதாவது அப்பனே, பின் இறைவன் அப்பனே பின் மேலிருந்து அப்பனே, அவை நிச்சயம் தன்னில் கூட, தடுக்க அப்பனே பல வழியில் கூட, அப்பனே கும்பங்களை, அப்பனே பின் கலசங்களை கூட வைத்துள்ளானப்பா நிச்சயம் தன்னில் எவை என்று கூற. பின் சொல்லியும் கொடுத்தோம் யாங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவனது அந்த மகா ஒளிப்பிழம்பு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். சில கிரகங்கள் அந்தப் பாதைக்கு வரும்போது - அந்த ஒளியை சில கிரகங்களால் அதைத் தாங்க முடிவதில்லை.  அந்த ஒளியின் வேகம் (Force) மிக உக்கிரமாக மாறும். அந்தப் பேரதிர்வு நேரடியாகப் பூமியைப் பாதிக்காமல் இருக்கவே கோபுரங்களின் மேலே கலசம் வைக்கப்பட்டுள்ளது. அந்தக் கலசத்தின் ஆற்றலும் மேலிருந்து வரும் ஒளியின் ஆற்றலும் ஒன்றை ஒன்று மோதி, அந்த வேகத்தைத் தடுத்துத் தள்ளிவிடுகிறது.)

=========================================
# பல திருத்தலங்களில் உள்ள கலசங்கள் எல்லாம்  வலுவிழந்து கொண்டே வருகின்றது. அவற்றை எல்லாம் சரி செய்ய வேண்டும்.
=========================================

குருநாதர் :-  அப்பனே ஆனால் மீண்டும் அப்பனே அவையெல்லாம் வலுவிழந்து கொண்டே இருக்கின்றது என்பின் அப்பனே மீண்டும் அவற்றை சரி செய்ய வேண்டும் என்பேன் அப்பனே பல திருத்தலங்களில். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (இப்ப நிறைய கோயில்கள்ல கும்பாபிஷேகம் நடக்காம அப்படியே இருக்கு. ஆனா, அந்தப் பழைய கோயில்களைத் திரும்பவும் புதுப்பிச்சு கும்பாபிஷேகம் பண்ணாதான், அந்த கலசத்தோட சக்தி திரும்பவும் உயிர் பெறும். அப்படிச் செஞ்சா மட்டும்தான் மேலிருந்து வர்ற அந்த உக்கிரமான கதிர்வீச்சுகளைத் தடுத்து நிறுத்த முடியும். இல்லைன்னா அந்தப் பாதிப்பு நேரடியா பூமி மேல விழுந்து மனுஷங்களுக்கு அழிவைத் தரும். நம்மைக் காப்பாத்திக்கணும்னா கோயில்களைப் புதுப்பிக்கிறதுதான் ஒரே வழி.)

குருநாதர் :- அப்பனே மனிதன் எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை நாடு செல்கின்றானோ அவ்வளவுக்கு அவ்வளவு அழிவுகள் தான் அப்பா இவை பலமுறை யான் எடுத்துரைத்து விட்டேன் 

சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் வந்து எவ்வளவுக்கு எவ்வளவு செயற்கை விஞ்ஞானத்துக்கு,  செயற்கை போறானோ, அவ்வளவுக்கு அவ்வளவு அழிவுகள் அழிவுகள். 

====================================================
# தன்னை பாதுகாக்க இறைவன் அளித்துள்ள உபாயம் 
# ஐந்தறிவு உள்ள ஜீவராசிகள் மட்டுமே பயன்படுத்துகின்றது.
====================================================

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே சொல்லிவிட்டேன். அனைத்து உயிர்களும் கூட அப்ப நிச்சயம் தன்னில் கூட தன்னை தானே பாதுகாக்க இறைவன் அப்பனே ஒரு உபயகரம் அளித்துள்ளானப்பா. ஆனாலும் அதை பின் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது ஐந்து உள்ள ஜீவராசிகள் மட்டுமே பயன்படுத்துகின்றது.


சுவடி ஓதும் மைந்தன் :- (ஒவ்வொரு உயிருக்கும் தன்னைத்தானே காப்பாத்திக்கிற சக்தியை இயற்கை கொடுத்திருக்கு. அஞ்சு அறிவு உள்ள ஜீவராசிகளுக்கு உடம்பு சரியில்லைன்னா அதுவே பச்சிலையைத் தின்னு சரி பண்ணிக்கும்; ஒரு ஆபத்து வருதுன்னா அதுக்கு முன்னாடியே தெரிஞ்சு எங்க போய் தப்பிக்கணுமோ அங்க ஓடிடும். ஆனா, ஆறறிவு உள்ள மனுஷனுக்கு மட்டும் அந்தத் தற்காப்பு உணர்வு மழுங்கிப் போச்சு. தன்னை எப்படிப் பாதுகாத்துக்கணும்னு தெரிஞ்சும் அவன் அதைச் சரியா பயன்படுத்துறது இல்லை.)

குருநாதர் :-  அப்பனே உலகம் எதை என்று அறியப்ப நிச்சயம் தன்னில் கூட பின் அழிவில் கூட அப்ப நிச்சயம் தன்னில் கூட விலங்குகளால் பின் நிச்சயம் பின் தெரிந்து கொள்ள முடியும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- விலங்குகள் கூட வந்து அழிவுக்கு அழிவுக்கு வந்து தெரியும் என்றார் வந்து 

=======================================
# அழிவு வரும் இடங்கள் கோடுகளாக தெரியும். உடனே ஜீவராசிகள் அவ் இடத்தை விட்டு விலகிவிடும். அவ் அழிவு கோடுகள் ஜீவராசிகள் கண்களுக்கு தெரியும்.
=======================================

குருநாதர் :-  அப்பனே கோடுகள் அப்பனே பலமாக எதை என்று அப்பனே நோக்கி நோக்கி அப்பன் நிச்சயம் தன்னில் கூட அப்பனே அவ்வாறு கோடுகள் இருக்கும் பகுதியில் அப்பன் நிச்சயம் தன்னில் கூட பின் அது தங்காது அப்பா. மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து விடும் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- (இயற்கை சீற்றம் அல்லது ஒரு பெரிய அழிவு வரப்போகுதுன்னா, அஞ்சு அறிவுள்ள ஜீவராசிகளுக்கு அது கண்ணுக்கே தெரியுமாம். ஒரு கோடு மாதிரி "இதுவரைக்கும் தான் அழிவு வரும்"னு அதுங்களுக்குத் தெரிஞ்சிரும். அந்த கோட்டைப் பார்த்த உடனே, அதுங்க உஷாராகி அந்த இடத்தை விட்டுப் பாதுகாப்பான இடத்துக்கு ஓடிப் போயிடும் (Escape ஆயிடும்). ஆனா அந்த நுணுக்கம் மனுஷனுக்குப் புரியறது இல்லை.)

அடியவர் :- ஏன் மனிதனுக்கு தெரிய மாட்டேங்குது? 

குருநாதர் :-  அப்பனே இவ்வாறாக அப்ப நிச்சயம் தன்னில் கூட பல அழுக்குகள் அப்பனே இருப்பதனாலே அப்பனே மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன் அப்பனே 

சுவடி ஓதும் மைந்தன் :- மனிதனுக்குள்ள பல அழுக்கு பல அழுக்கு இருக்குது.

===============================
# துன்பத்திற்கு காரணம் ஆசை
===============================

குருநாதர் :-  அப்பனே பல ஆசைகள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. அப்பனே சொல்லிவிட்டான் என்பேன் அப்பனே ஞானி அவன் பின் நிச்சயம் தன்னில் கூட. பின் துன்பத்திற்கு காரணம் ஆசை என்று. 

குருநாதர் :-  அப்பனே மற்ற உயிரினங்கள் அப்பனே என்ன ஏது கிடைக்கின்றதோ அதை உட்கொண்டு அப்ப நிச்சயம் தன்னில் கூட அன்றைய நாள் பூர்த்தி செய்துவிடுகின்றது 

குருநாதர் :-  அதனாலதான் அப்ப அதனாலதான் அப்பனே நிச்சயம் அதற்கு தெரிகின்றது அப்பனே அவை பொய் பேசுகின்றதா என்ன அப்பனே நிச்சயம் கூறுங்கள் அப்பனே?

========================================
# பொய்கள் சொன்னால் - நோய்கள் வரும் 
========================================

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அதாவது கேதுவானவன் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அப்பனே மனிதனின் வாயிலிருந்து அப்பனே பின் நிச்சயம் எதை பின் நிச்சயம் தெரிவிக்க வேண்டுமோ, அதைப் பின் தெரிவித்தால், அப்ப நிச்சயம் தன்னில் கேதுவன் அப்பனே உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் செல்வான் அப்பனே  நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-   அப்பனே பின் பொய்யான பின் விஷயங்கள் எல்லாம் அப்பனே சொல்லிக்கொண்டிருந்தாலே நோய்கள் பற்றுக்கொண்டே வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (மனுஷன் அதிகமா பொய் பேசினா, அதுவே அவனுக்குப் பெரிய நோய்களைக் கொண்டு வந்து விட்டுடும். ஏன்னா, இந்த விஷயத்துல கேது பகவானோட ஆதிக்கம் ரொம்ப அதிகம். கேதுதான் நம்ம வாழ்க்கையோட அடுத்த கட்டத்துக்குப் போறதுக்கான வழியை வச்சிருக்காரு. அவரைத் திருப்திப்படுத்தாம, அதாவது உண்மையை உணர்ந்து பொய் பேசுறதை நிறுத்தாம, நம்மால வாழ்க்கையில அடுத்த லெவலுக்குப் போகவே முடியாது.)

குருநாதர் :-  அப்பனே கீழேயும் அப்பனே பின் கேது மேலேயும் ராகு அப்பனே ஆனாலும் கேது ராகு ராகு கேது அப்பனே இவை தன் மனிதனை அழுத்திக் கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே 

சுவடி ஓதும் மைந்தன் :- ( வாழ்க்கையில மனுஷன் மேல ராகு, கீழ கேதுன்னு ரெண்டு பக்கமும் ஒரு பெரிய 'பிரஸ்' (Press) பண்ற மெஷின் மாதிரி அமுக்கி வச்சிருக்காங்க. இந்த இடுக்கில் சிக்கித் தான் மனுஷன் தவிக்கிறான். இந்த அழுத்தத்துல இருந்து தப்பிக்கணும்னா, நாம எப்போ உண்மையை உணர்ந்து, ஞானத்தை அடையுறோமோ... அப்போதான் அந்தப் பிடி தளர்ந்து நமக்கு விடுதலை கிடைக்கும்.) 

=======================================
# நால்வர் பெருமக்கள், திருத்தலங்களில் பாடிய  பதிகங்களை , அவ் திருத்தலத்திற்கு சென்று பாடிக்கொண்டே வர வர உண்மைகள் தெரிய வரும். அமுக்கி கொண்டிருக்கும் கேதுவின் பிடியில் இருந்து வெளிவரலாம். வாழ்வில் உயரலாம்.  
=======================================

குருநாதர் :-  அப்பனே உண்மைகள், அப்பனே பின் தெரிந்து கொள்ள, அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல வழியில் கூட, அப்பனே தேவாரம் இன்னும், அப்பனே நிச்சயம் தன்னில் கூட, பல வழியில் கூட அப்பனே நால்வர் பெருமக்கள், அப்பனே  நிச்சயம் பின் அங்கங்கு பாடினார்கள் என்பேன் அப்பனே நிச்சயம். 

குருநாதர் :-  அவ் திருத்தலத்திற்கு எல்லாம் சென்றால் மட்டுமே அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

குருநாதர் :-  அப்பனே இவை தான் அமுக்கிக் கொண்டிருப்பதை அப்பனே நிச்சயம் தன்னில் கூட சிறிதில் வெளிவரலாம் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. இவ்வாறாக உயர்ந்திருக்கலாம் என்பேன் அப்பனே அப்பனே. 

==========================================
# கேதுவை ஜெயிக்க ஒரே வழி - அரசமர தியானம்!
==========================================

குருநாதர் :-  அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் சொன்னேனே அப்பனே பின் கேதுவிற்கும் எவை என்று அப்ப நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எவை என்று அப்பனே பின் அதாவது நிச்சயம் தன்னில் கூட அவ் மரத்தை அப்பனே பின் தியானங்கள் செய்தால் நிச்சயம் தன்னில் கூட பின் கேதுவை வென்று விடலாம் 

சுவடி ஓதும் மைந்தன் :- (வாழ்க்கையில கேது பகவானோட பிடியில இருந்து தப்பிக்கணும்னா, அதுக்கு இருக்குறதுலயே சிறந்த வழி அரசமர வழிபாடுதான். அரசமரத்தைச் சுத்தி வர்றதோ, அங்க தீபம் ஏத்துறதோ கிடையாது; மெயினான விஷயம் அங்க உட்கார்ந்து தியானம் பண்ணனும். அந்த அரசமர தியானம் மட்டும்தான் கேதுவை வெல்லுற சக்தியைக் கொடுக்கும், நமக்கு உண்மையான ஞானத்தையும் தரும்.)

குருநாதர் :-  நிச்சயம் தன்னில் ஞானம் பெற்று தன்னைத்தான் வென்று மற்றவர்களையும் பின் வெல்லலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- அமுக்கியமா இந்த கேது இது வந்து தேவைப்படுதுங்க ஐயா

===================================================
# அரசமர பிரதட்சணம் - உடம்பு அழுக்கை நீக்கிப் புகழைத் தரும் ரகசியம்!
===================================================

குருநாதர் :-  அவை மட்டுமில்லாமல் நிச்சயம் தன்னில் கூட, எப்பொழுதும் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக பின் சுற்றி சுற்றி வந்தாலே நிச்சயம் இன்னும் ஞானங்கள் பிறக்கும், பல நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் தரித்திரங்கள் மறைந்து நிச்சயம் தன்னில் கூட உடம்பில் உள்ள அழுக்குகள் எதை என்று புரிய நிச்சயம் தன்னில் மறைந்து, நிச்சயம் தன்னில் கூட இன்னும் பின் புகழ் பெறலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அரசமரத்தை விடாம சுத்திச் சுத்தி வந்தாலே போதும், நம்ம உடம்புல இருக்குற கர்ம வினைகள்ங்கிற 'அழுக்கு' எல்லாம் தானா நீங்கிடும். தரித்திரம் விலகி, புதுசா ஞானம் பிறக்கும். அந்த மரத்தைச் சுத்த சுத்த நம்மகிட்ட இருக்குற எதிர்மறை எண்ணங்கள் குறைஞ்சு, நமக்குத் தேவையற்ற தடைகள் விலகும். அப்புறம் என்ன? தானாவே ஒரு மனுஷனுக்குப் புகழும் கௌரவமும் வந்து சேரும்.)

==========================================
# முதுகுத்தண்டு சுத்தம்... வேப்பமர ரகசியம்! - ஞானம் பிறக்க ஒரு எளிய வழி
==========================================

குருநாதர் :-  அப்பனே அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே முதலில் அப்பனே பின் அதாவது பின் முதுகு தண்டை அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சுத்தப்படுத்த வேண்டும். 

குருநாதர் :-  அச்சுத்தப்படுத்துவதற்கு கூட அப்பன் நிச்சயம் பின் அப்பனே பின் வேப்பிலை மரம் அப்பனே முக்கியமாக பங்கு வகிக்கின்றது என்பேன் அப்பனே. 

சுவடி ஓதும் மைந்தன் :- (ஒரு மனுஷனுக்கு உண்மையான ஞானம் பிறக்கணும்னா, முதல்ல அவனோட முதுகுத்தண்டு (Spinal Cord) சுத்தமாகணும். ஏன்னா, அறிவு மேல ஏறுற வழியே அதுதான். அந்த முதுகுத்தண்டைச் சீர்படுத்தி, அங்க இருக்குற நரம்பு மண்டலத்தைச் சுத்தப்படுத்துறதுல 'வேப்பமரம்' ஒரு முக்கியமான பங்கை வகிக்குது. வேப்பமரத்தோட காத்தும் சக்தியும் முதுகுத்தண்டுல இருக்குற அடைப்புகளை நீக்கி, அறிவைத் தெளிவாக்கும்.)

குருநாதர் :-  அப்பனே அங்கு அமர்ந்து, அப்பனே நிச்சயம் தியானங்கள் செய்தால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட, அப்பனே பின் எதை என்று, அப்பனே முதுகு அப்பனே இருக்கும். அழுக்குகள் மறையும் அப்பா, அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

சுவடி ஓதும் மைந்தன் :- அங்கிருந்து அங்க வந்து தியானம் செஞ்சோம்னா என்ன ஆகும் வந்து அழுக்குகள் நீங்கிடும் அழுக்குகள் நீங்கும் 

அடியவர் :- வேப்ப மரத்தடியில்?

சுவடி ஓதும் மைந்தன் :-  வேப்ப மரத்தடியில்.

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவையெல்லாம் முன்னோர்கள் எவை என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே யாங்கள் எல்லாம் எழுதி வைத்தோம் அவையெல்லாம் அழித்து விட்டனர்.

குருநாதர் :-  அப்பனே மனிதன் புதுப்புதுவாக அப்பனே வித்தைகளை சொல்லி ஏமாற்றுவான் அப்பா வரும் காலத்தில். அப்பனே பிழைப்பிற்காக தான் வயிற்றுப் பிழைப்பிற்காக. 

======================================
# கிரகங்களை பற்றி பல பொய்கள் சொல்வார்கள் மனிதர்கள்.
# ஆனால் இறைவனை பற்றி, தர்மத்தை பற்றி எடுத்து சொல்ல மாட்டார்கள். 
======================================

குருநாதர் :-  அப்பனே கிரகங்கள் அப்பனே பற்றி சொல்லி அப்பனே கிரகங்கள் அவை செய்யும் இவை செய்யும் எல்லாம் சொல்லுவான் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. 

குருநாதர் :-  ஆனாலும் அதையெல்லாம் இயக்குபவனே இறைவனே அவன் நினைத்தால் அனைத்தும் சரியாகும் என்று யாரும் சொல்ல மாட்டான் அப்பா 

குருநாதர் :-  நிச்சயம் அவன் எவ்வாறு நினைப்பது நிச்சயம் தன்னில் கூட தர்மத்தின் வழி செல் என்று யாரும் சொல்ல மாட்டான் அப்பா 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே அழிகின்ற மனிதன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதில் அப்பனே அதிக அழிவு இருக்கின்றதோ அதையே பயன்படுத்துவான் என்பேன் அப்பனே வரும் காலத்தில். சொல்லிவிட்டேன். 

குருநாதர் :-  அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய, அப்பனே இதனால் அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் ஆசிகளோடு அப்பனே பின் ஏற்றங்கள் உண்டு மனிதனுக்கு ஆனால் அதை சரியாக பயன்படுத்த மாட்டானப்பா கலியுகத்தில் 

குருநாதர் :-  அப்பனே பின் அவ் சரியாக பயன்படுத்துவதற்கும் யாங்கள் உதவி செய்கின்றோம் அதனால்தான் அப்பனே உண்மை தெரிந்து கொள்ள வாழ வேண்டும். உண்மையை பின் நிச்சயம் தெரிந்து கொண்டால், அப்பனே சரி பின் சரியான வாழ்வை வாழினால், அப்பனே நிச்சயம் தன்னில் கூட உதவிகள் செய்து, அப்பனே மேலே தூக்கி விடுவோம்.

குருநாதர் :-  அப்பனே முதல் அப்பனே பின் எவை என்று அப்பனே பின் மற்ற உயிரை எப்பொழுது பின் அழிக்கின்றானோ அப்பொழுதே மனிதன் அழிந்து கொண்டே இருக்கின்றான் என்று அர்த்தம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  எப்ப ஒரு உயிரை, மற்ற உயிரை அழிக்கின்றானோ அப்பவே வந்து அழிகிறான்.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 29.1.2026 அன்று திருக்கேதீஸ்வரதில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு தொடரும்….. )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!