அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 12 ( நிறைவு பகுதி )
நாள், நேரம் : 24/05/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை
முழு நிகழ்வின் நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=1
இடம் : உலக நன்மைக்காக 10 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
===========================
# இவ் பகுதி வாக்கின் நேரலை:- https://youtu.be/NqRaI13qIDU?t=36925
===========================
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
ஒரு அடியவர் :- ( ஒலிபெருக்கி இல்லாமல் கேட்ட கேள்வி )
குருநாதர் :- விருப்பம் போல் ஆகட்டும்.
சுவடி ஓதும் மைந்தன் :- விருப்பம் போல் ஆகட்டும்ங்க ஐயா.
அடுத்து கூட்டு பிரார்த்தனை சொல்லியிருக்கார். ஞாபகமா வந்து, காப்பர் அந்த வேலை வாங்கிக்கோங்க, தயவு செய்து வந்து. நீங்க மட்டும் வாங்காம, எல்லாருக்கும் வாங்க வைங்க, தயவு செய்து வந்து. எல்லாரும் ஐயா, கேட்டுக்கிட்டு இனிமேல் வந்து எவ்வளவு செய்யணுமோ, யார் யார் சொல்லிட்டு கேட்டுக்கிட்டு, அவங்க நேர்ல இருந்தா எப்படி வணங்குறது எல்லாம் கொஞ்சம் சொல்லிக் கொடுங்க. வந்து இதை சரியா நீங்க ஃபாலோ பண்ணி வந்தா, நீங்க யாருமே கேட்க தேவையில்லமா. வந்து அகத்தில வாக்கு கேட்க தேவையில்லமா, வந்து தானாவே உங்களுக்கு வந்து அகத்தில வாக்கு சொல்வாரும்மா. வந்து ஏன்னா, இத்தனை நன்மைகள் வந்து அகத்தில சொல்லி இருக்கார். வந்து இத்தனை நன்மைகள் செஞ்சுட்டு இருக்கார். வந்து இன்னும் அது வந்து அப்படியே வந்து நிறைய பேர் கொண்டு போய், நிறைய பேர் மனசை மாற்றி, இறைவன் பால் வரவழைப்போம். அதுக்கு அகத்தியர் துணை இருக்கிறாங்க. வந்து
===========================
# தர்மத்தை பத்தி சொல்லுங்க, போதும்.
===========================
# தர்மத்தை பத்தி சொன்னா மட்டும்தான் இறைவன் தானா வாக்குரைப்பார்.
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க வந்து அதனால வந்து நிறைய பேர் தர்மத்தை பத்தி சொல்லுங்க, போதும். வேற ஒண்ணுமே இல்ல. தர்மத்தை பத்தி சொல்லுங்க. அதுதான் அந்த தர்மத்தை பத்தி சொன்னா மட்டும்தான் இறைவன் தானா வாக்குரைப்பார். வந்து ஜீவனாடியில வந்து ஆமா. பெரிய விஷயம் இதெல்லாம் வந்து இப்படி செய்றது எல்லாம். வந்து அதனால நீங்களும் நன்மை பெறுங்கள். வந்து உங்க கையில எதுவுமே விரும்பல. அது கூட இதெல்லாம் எதுவும் செய்யல. இறைவன் பத்தி நாலு பேருக்கு தர்மத்தை பற்றி நிலைநாட்டுங்க, போதும். மத்தபடி எல்லாம் வந்து அகத்தியர் பார்த்துப்பார். ரொம்ப சந்தோஷமா. ஐயா, அடுத்து என்ன கேக்குறீங்களா?
ஒரு அடியவர் :- ( ஒலிபெருக்கி இல்லாமல் கேட்ட கேள்வி )
குருநாதர் :- எதை ஏது என்று புரிய, இஷ்டம் போல் செய்யட்டும்.
ஒரு அடியவர் :- ( ஒலிபெருக்கி இல்லாமல் கேட்ட ஒரு கோரிக்கை )
குருநாதர் :- தாயே, நிச்சயம் தன்னில் கூட ஆசிகள். அனைவரும் வந்துவிட்டார்கள். அனைத்தும் நடக்கும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் வந்து பார்த்தாங்க. அந்த காலையிலேயே வந்து எல்லாமே நடக்கும்ட்டார். வந்து எல்லாமே நடக்கும்ட்டார்.
குருநாதர் :- நிச்சயம் ஆசிகள், நிச்சயம் அடுத்தடுத்த வாக்கிலும் விவரமாக குறிப்பிடுகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தடுத்த வாக்கிலும் நிறைய குறிப்பிடுகின்றார் என்றார். வந்து
குருநாதர் :- தாயே, ஆசிகள் ஒவ்வொருவரும் என்ன நினைத்திருக்கிறீர்கள் என்பவை எல்லாம், அதாவது நிச்சயம் தன்னில் கூட பல ஞானியர்கள் அப்பொழுதே வந்துவிட்டார்கள். அப்பொழுதே நினைத்து நினைக்கச் சொன்னேன். நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறு என்பதை எல்லாம் நினைக்கு எவை என்று
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருமே வந்தாங்க. அப்ப என்னென்ன தேவைன்னு சொல்லிட்டு அப்படியே நினைச்சிருந்தா, அது நிறைவேறும்ட்டாங்க. ஐயா, வந்து நிறைவேறும்மா. எல்லாம் கோரிக்கை நிறைவேறும்.
அடியவர் 4:- அம்மா, போன முறை வந்துட்டுங்க. நாணயம் வாங்கிட்டு போயிட்டு, அந்த ஒரு சட்டி வாங்கி, பச்சரிசி போட்டு, கிராம்பு, ஏலக்காய் எல்லாம் பண்ணீங்க இல்லைங்களா? அது மூன்றாம் பிறையில பண்ண சொன்னாங்க. மூன்றாம் பிறையில பண்ண முடியாதவங்க, இந்த மாதம் வரக்கூடிய மூன்றாம் பிறையில பண்ணுங்க. அப்படி பண்ணுனவங்க தொடர்ந்து வந்து மகாலட்சுமி துதி, மகாலட்சுமி பாடல் பாடி, நீங்க தொடர்ந்து டெய்லி வந்து தீபம் ஏந்தி, கையில ஏந்தி, அதே மாதிரி வழிபாடு பண்ண சொல்லி இருக்காங்க. தேனும் அப்படியே தான் இருக்கட்டும். அது ஒண்ணுமே ஆகாது. ஆமா, அப்படி பண்ணுவாங்க.
===========================
# சித்தர்கள் என்ன சொல்கின்றார்களோ, அதை செய்தாலே, நிச்சயம் அனைத்தும் நிறைவேறும்.
===========================
குருநாதர் :- ஆசிகள் கவலை வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொன்றாக, நிச்சயம் அனைவருக்குமே வாக்குகள் உண்டு. ஆனாலும் சித்தர்கள் என்ன சொல்கின்றார்களோ, அதை செய்தாலே, நிச்சயம் பின் அனைத்தும் நிறைவேறும்.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருக்கும் வாக்கு இருக்குது. வந்து ஆனா சித்தர்கள் என்ன சொல்றாங்களோ, அதை செஞ்சாவே போதும்ன்றாரு. பாதி மாற்றத்தை ஏற்படுத்திட்டேன்னு சொல்றாரு.
===========================
# கவலைகள் வேண்டாம். நலங்களே நடக்கும்.
===========================
குருநாதர் :- கவலைகள் வேண்டாம். நலங்களே நடக்கும். எது என்று புரிய, சித்தர்கள் இன்னும் பின் உலகத்தை, நிச்சயம் தன்னில் கூட மாற்ற, எது என்று புரிய. ஏனென்றால் பின் வாரி, அதாவது நிச்சயம் பின் ஆறு எவை என்று அறிய , நீர் போல், நிச்சயம் தன்னில் கூட, அனைத்தும் அதிவேகமாக, தீயவை எல்லாம் வந்து கொண்டிருக்கின்றது. இதனால் அதை தடுத்து நிறுத்தவே, இத்தனை போராட்டங்கள். கவலைகள் வேண்டாம். உங்கள் போராட்டங்கள் எல்லாம் எங்கள் மாற்றித் தருவோம். நிச்சயம் தன்னில் கூட, ஆசிகள். அண்ணாமலையும், உண்ணாமலையும் பின் நினைத்து, நிச்சயம் சிவபுராணத்தை ஓதுங்கள். பின்பு நல்விதமாக,
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அண்ணாமலையும், உண்ணாமலையும் நினைச்சுக்கோங்க. என்ன வேண்டுதலோ, அதை வந்து நல்லா வேண்டிக்கிட்டு, சிவபுராணத்தை பாடிடுங்க. இது அகத்தியர் சொல்லி இருக்காரு. பாருங்க ஐயா, அந்த இதுவும் ஐயா,
அடியவர் 4:- என்னென்னலாம் அகத்தியர் இதுக்கு முன்னாடி சொல்லிக் கொடுத்தார்களோ, அதெல்லாம் வந்து தொடர்ந்து செஞ்சுகிட்டே வாங்க. வந்துட்டுங்க.
===========================
# காசி மண் - நுண்ணுயிரிகள் அதிகம்.
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமா, இந்த இது மணல் பரிகாரம் எதுக்குன்னா, மணல் பரிகாரம் எதுக்குன்னா, வந்து என்ன சொல்றாருன்னா, அதனுடைய நுண்ணுயிர்கள், நுண்ணுயிர்கள் எல்லாம் வந்து அதிகம். அதுல நல்ல நல்ல விதமான நுண்ணுயிர்கள் இருக்குது. நல்ல ஆமா, நல்ல நுண்ணுயிர்கள் எல்லாம் அதிகமா இருக்குது. அப்ப கெட்டதெல்லாம் வயிறு சாக்குகின்ற வரும்பொழுது, இதை போட்டு அடிக்கும். வேற ஒண்ணுமே இல்ல. அவ்வளவுதான். அதுக்காக அது சயின்ஸ் மூலமாவே இது பண்ணிக்கிறார்.
சுவடி ஓதும் மைந்தன் :- சும்மா மணல் எடுத்து வைன்னு அகத்தியர் சொல்லல. சயின்ஸ் பிரகாரமே அவர் இது பண்ணிக்கிறார். வந்து அதனால அதை தயவு செய்து எடுத்து வச்சு, நல்லா வணங்குங்க. அதுல என்ன பண்றதுன்னு சொல்லிட்டு, அதை ஒரு இது பண்ணுங்க.
அடியவர் 4:- அதுக்கு மேல வேல் வைக்கணுங்க. போன முறை வந்து அறுபடை வீடு, மத்த விபூதி கொடுத்து, அதுல வேல் பூஜை பண்ணிட்டு இருக்கீங்க இல்லைங்களா? அந்த விபூதிக்கு மேல வந்து இந்த மண்ணை போட்டு, அதுக்கு மேல வேலை வச்சு, பூஜை பண்ணுங்க. வந்துட்டுங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் நிறைய விஷயங்கள் சொல்லுவாருங்க ஐயா. ஏன்னா அகத்தியர் வந்து இவ்வளவு சொல்றாங்கன்னா, நம்மளுக்காக இறங்கி வந்து, அது பயன்படுத்திக்கணும். ஆமா, ஏன் சொல்றாருன்னா, இது ஏதோ எத்தனையோ பிறவிகள் செய்த புண்ணியங்கள் தான். இதெல்லாம் வந்து ஆமா, ஏதோ இறைவன் நம்மளுக்காக இறங்கி வந்து, அகத்தியர் இன்றைய காலத்துல சொல்லி இருக்காரு. வந்து அதை அப்படியே பின்படுத்துவோம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தடுத்து நிறைய கோயில்களுக்கு வந்து, இன்னும் நிறைய வந்து வலுவிழந்து இந்த போய்க்கொண்டே இருக்குதாம். வந்து கோயில் ஆற்றல், அதெல்லாம் எப்படி ஏத்துறது, அதெல்லாம் நம்மளால் மட்டும்தான் முடியும். வேற யாரும் பக்தரால் மட்டும்தான் முடியும். வேற யாராலும் முடியாது. ஏன்னா சொன்னாவும் தெரியாது. அதெல்லாம் வந்து அதனால இன்னும் வந்து அடுத்த ஏன்னா 100 வருஷங்களோ, 50 வருஷங்களோ, இது மாதிரி எல்லாம் ஆகும். அழிவுகள் வரும் ஐயா. ஒரு 100 வருஷத்துக்கு ஒரு தடவை பெரிய பெரிய அழிவுகள் எல்லாம் வரும். அதனாலதான் ஐயா,
அடியவர் 4:- ஒவ்வொரு 100 வருடமும் நீங்க கடந்த பின்னாடி பார்த்தீங்கன்னா, உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஒவ்வொரு 100 வருடத்துக்கு முன்னாடியும் வந்து பெரிய பெரிய சீற்றங்கள், இறைக்க சீற்றங்கள், ஏதோ ஒன்னு வந்திருக்கும். வந்துட்டுங்க.
===========================
# அகத்தியர் சொல்றது நம்ம கேட்போங்க. நல்லதே நடக்குங்க. ஐயா,
===========================
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால பெரிய சீற்றங்கள், இதெல்லாம் நடக்கப்போகுது. அதனால தயவு செய்து அகத்தியர் சொல்றது நம்ம கேட்போங்க. ஐயா, நல்லதே நடக்குங்க. ஐயா, பிரேயர் பண்ணுவோம். இன்னும் அடுத்தடுத்து என்ன நல்லது நடக்க போகுதுன்னு சொல்லிட்டு, இன்னும் அகத்தியர் சொல்வார். தெரிஞ்சுக்கலாம். தெரிஞ்சுக்கிட்டு மத்தவங்களும் நம்மள மாற்றலாம். அவங்களையும் மாற்றலாம். பேரின்பத்தை வந்து இறைவன் தான் எங்க பேரின்பம் கண்டிப்பா காட்டுவார். நம்மளுக்கெல்லாம்…
ஒரு அடியவர் :- ( ஒலிபெருக்கி இல்லாமல் கேட்ட கேள்வி )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா,
ஒரு அடியவர் :- ( ஒலிபெருக்கி இல்லாமல் கேட்ட கேள்வி )
குருநாதர் :- அப்பனே, உனக்கு தெரியாதா அப்பா? அவனருளாலே, அவன் தாள் வணங்கி. அப்பனே, ஈசன் முடிவு எடுக்கட்டும். இன்னும் முடிவு எடுக்கவில்லை. அப்பா,
சுவடி ஓதும் மைந்தன் :- ஈசன் முடிவெடுக்கட்டும்.
குருநாதர் :- அப்பனே, அங்கே இருக்கின்றார்கள் அப்பா, மக்கள், அப்பனே, ஆனாலும், அப்பனே, உங்களை விரட்டி விடுவார்கள். அப்பொழுது என்ன நீங்கள் செய்வீர்கள்? அதனால் பொறுத்திரு. அப்பனே, வழிகளும் செய்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அங்கேயே சிவ சிவபுராணம் பாடுன ஆள் இருக்கிறாங்க. நீங்க போனீங்கன்னா என்ன பண்ணுவாங்களாம்? விரட்டுருவாங்கப்பா. அதனால நான் முடிவெடுத்து நான் சொல்றேன். பண்றாரு. வந்து செய்வீங்க. வந்து புரியுதுங்களா?
ஒரு அடியவர் :- ( ஒலிபெருக்கி இல்லாமல் கேட்ட கேள்வி )
குருநாதர் :- தாயே, நிச்சயம் சொல்வேன். நேரங்கள் இல்லை. எதை என்று புரிய. அதாவது, நிச்சயம் தன்னில் கூட எவை என்று உடனடியாக நிச்சயம் இதுவே புரியவில்லை. அதாவது, யான் என்ன சொன்னேன் என்று மீண்டும் நீ சொல். பின்பு யான் சொல்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அம்மா சொல்லுவாருமா. ஆத்மாக்கள் பத்தி எல்லாம் எப்படி ஏதுன்னு சொல்லுவாருமா. ஏன்னா, அது வந்து அவருக்கு இன்னும் பாருங்க. இதோட நிறுத்தினார். ஏன்னா, இதோட வந்து இன்னும் இருங்கமா. ஏன்னா, எல்லாத்தையும் சொல்றாருமா. அகத்தியர் வந்து ஏன்னா, மனுஷன் நம்புறது இல்லமா. மனுஷன் எதற்காக நம்புறது இல்ல. சொல்லுங்க, பார்ப்போம். எல்லாம் வந்து போதை. எல்லாத்தையும் எப்படி சொல்றது? வந்து இறைவன் நினைக்க மாட்டான். கலியுகத்துல அவ்வளவுதான்மா.
( சில அறிவுரைகள் , வழிகாட்டுதல்கள்)
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க ஏதாவது பேசணுமா?
===========================
# ஒரு குட்டி கதை
===========================
நேரலை :- https://youtu.be/NqRaI13qIDU?t=37767
ஈசனார் அடியவர் :- பக்தர்களுக்கு வணக்கம். ஒரு குருகுலத்துல குரு தன் மாணவன் சொல்லிக் கொடுக்கிறார். சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொன்னார். ஆனா அந்த மாணவன் சூரியன் கிழக்கே உதிக்கும்னு சொல்லல. சூரியன் “கியக்கே” உதிக்கும். அவனுக்கு “ழ” வரல “ய” தான் வந்துச்சு. கோடின்னா அவன் கோயி அப்படின்னான். நம்ம என்ன இப்படி சொல்லிக் கொடுக்கிறோம் ஆனா கேட்க மாட்டேங்குறான். அவனுக்கு “ழ” வரலையே “ழ” வுக்கு பதிலா “ய” தானே வருது அப்படின்றாங்க.
அப்ப குரு சொல்றாரு, நாளைக்கு வரும்போது உங்க அப்பாவை கூட்டிட்டு வா அப்படிங்கிறாரு. குருகுலத்துக்கு உங்க அப்பா கூட்டிட்டு வா அப்படிங்கிறாரு. அப்ப அந்த பையன் நாளைக்கு காலையில மறுநாள் வந்து என்ன பண்றான்? உங்க அப்பாவை கூட்டிட்டு வரான். குருகுலத்துக்கு கூட்டிட்டு வரான்.
கூட்டிட்டு வந்த உடனே அவங்க அப்பாகிட்ட சொல்றாரு, உங்க பையனுக்கு வந்து சொல்லிக் கொடுத்தேன். சூரியன் கிழக்கே உதிக்கும் என்று சொன்னால் , கி”ய”க்கே உதிக்கும்ன்றான். கழுதை உதைக்கும்னாக்க க”யி”தை உதைக்கும்னு சொல்றான். அப்படின்னா என்ன? அதுக்கு அந்த குழந்தையோட அப்பா சொல்றாரு, என்ன சார் பண்ண முடியும்? அதை ப’ய’க்க வ’ய’கம் அப்படிங்கிறாரு. 9 பழக்க வழக்கம் என்பது அவ் தந்தைக்கு சரியாக சொல்ல வரவில்லை )
அவரு அப்ப உங்களுக்கே “ழ” வரலையா? அப்படின்னு அவங்க அப்பாவை வந்து கேக்குறாரு.
===========================
# அவசியம் உங்கள் குழந்தைகளை கூட்டுப்பிரார்தனைக்கு அழைத்து வாருங்கள்
===========================
அதே மாதிரி, இந்த மாதிரி சிவபுராணம் கூட்டு பிரார்த்தனைக்கு நம்ம குழந்தைகளை கூட்டிட்டு வந்தோம்னாக்க, இந்த உலகத்தை நம்ம வெல்லலாம், ஜெயிக்கலாம். நம்ம ஆனா அதெல்லாம் யாரும் செய்யல.
இப்ப குழந்தைகளுக்கு வந்து இப்ப வந்து ஆன்மீகத்தை பத்தி யாரும் சொல்லிக் கொடுக்கல. அந்த குழந்தைகளுக்கு என்ன வேணுமோ, அது அவங்க போக்குல.
===========================
# நம்ம குழந்தைகளை நம்ம தான் பாதுகாக்கணும்.
===========================
நம்ம குழந்தைகளை நம்ம தான் பாதுகாக்கணும். அப்படின்னா நம்ம தான் இந்த மாதிரி ஆன்மீக சொற்பொழிவு நடத்தும் போது, அவங்களை கூட்டிட்டு வரணும். இதுதான் என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்.
===========================
# உலகத்தை வெல்ல , உங்கள் குழந்தைகளை கூட்டுப்பிரார்தனைக்கு அவசியம் அழைத்து வாருங்கள்.
===========================
அனைத்து நல்ல உள்ளங்களும் தன்னோட குழந்தைகளை இந்த மாதிரி கூட்டி கூட்டிட்டு வந்தீங்கன்னாக்க, இந்த உலகத்தை நம்ம வெல்ல முடியும். வெல்ல முடியாம இல்ல, சித்தர்களே சொல்றாங்க, நீங்க தான் வெல்ல முடியும்னு சொல்றாங்க. அவங்க நம்மள பொறுப்பு ஒப்படைச்சிட்டாங்க. இந்த காரியத்தை நம்ம தான் செய்யணும். நான் மட்டும் இல்ல, எல்லாரும் செய்யணும்.
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( சிவபுராணம் பாராயணம் ஆரம்பித்தார்கள் …..)
( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 24/05/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்குகள் நிறைவு அடைந்தது )
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
