​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 12 December 2023

சித்தன் அருள் - 1537 - அன்புடன் அகத்தியர் - தேவ்பிரயாகை ஸ்ரீ ரகுநாத்ஜி ஆலயம் உத்தர்கண்ட்.






14/10/2023 அன்று மஹாளய அமாவாசை திதி அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம். அலக்நந்தா பாகீரதி மந்தாகினி நதிகள் சங்கமிக்கும் தேவ்பிரயாகை ஸ்ரீ ரகுநாத்ஜி ஆலயம் உத்தர்கண்ட்.

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!! 

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!

அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எவை எவை செய்ய செய்ய அப்பனே எவ்வாறு பிறந்துள்ளீர்கள் ?? அப்பனே எதற்காக பிறந்துள்ளீர்கள் ?? அப்பனே !!! பின் எதற்காக வாழ்வீர்கள்??? அப்பனே எதற்காக வாழ போகின்றீர்கள்????? அப்பனே எதற்காக ?? அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே இவையெல்லாம் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் அப்பனே எதை என்றும் புரிந்தும் புரிந்தும் அப்பனே மனிதர்களுக்கு புரியும் வகையில் அப்பனே நிச்சயம் அப்பனே புண்ணியத்தை சேர்த்து சேர்த்து அப்பனே எதற்காக அப்பனே பிறந்துள்ளாய்  என்பதையெல்லாம் தெரிவித்து விடுவோம் யாங்கள் !!!

அதனால் அப்பனே நிச்சயம் நன் முறைகளாகவே அப்பனே பின் நடக்க நடக்க நன்று என்பேன் அப்பனே!!!

ஏனென்றால் அப்பனே அழியும் யுகம் அப்பா இது அதனால் அனைவருக்குமே கஷ்டங்கள் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து கொண்டே தான் இருக்கின்றது!!!! 

அப்பனே எதை என்று புரிய புரிய ஆனாலும் சில பேர்கள் எதை என்று புரியாமலே பொய் சொல்லி அதாவது யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே

யான் பின் எதை என்றும் அறிய அறிய பின் எவற்றிற்கும்  துரோகம் செய்யாமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் ஏன் கஷ்டங்கள் என்று !!!

ஆனால் அப்பனே பொய்களப்பா!!!!

அப்பனே என்னிடத்தில் வரச்சொல் அப்பனே அனைத்தும் சொல்கின்றேன்!!!

என்னென்ன ?? நீ செய்தாய் என்பதையெல்லாம்!!!

அப்பனே இதனால் அப்பனே பின் அனைத்திலும் இருந்து தப்பித்துக் கொள்ளலாம் ஆனாலும் அப்பனே இறைவனிடத்தில் இருந்து யாரும் தப்பிக்க இயலாதப்பா !!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

இறைவன் கணக்கு எதை என்றும் புரிய புரிய அப்பனே நீங்கள் என்னென்ன செய்வீர்கள் இன்னும் எவை என்று புரிய புரிய அவ் கர்மா எல்லாம் அப்பனே சேமித்து சேமித்து அப்பனே புண்ணியம் கூட எதை என்று அறிய அறிய சேமித்து சேமித்து பாவத்தை கூட சேமித்து சேமித்து அப்பனே கடைசியில் பார்த்தால் இதை சமநிலைப்படுத்தி தண்டனைகள் உண்டப்பா!!!

அதனால்தான் சொல்லி விடுகின்றோம் அப்பனே

மனிதனுக்கு எவ்வாறு நிலைமைகள் மாறுபடும் என்பவை எல்லாம் அப்பனே என்னுடைய ஆசிகளோடு அப்பனே எதை என்று அறிய அறிய......

யான் சொல்கின்றேனே அப்பனே அவை செய்யாவிடிலும் அப்பனே எதை என்று அறிய அறிய பின் அகத்தியனே !!!! சித்தர்களே !!!! எதை என்று கூற இறைவா!!!!! எவை என்று புரியப் புரிய எங்களுக்கு எதுவுமே தெரியவில்லையே!!!! யாங்கள் என்ன செய்வது என்று நிச்சயம் மனதார நினைத்துக் கொண்டிருந்தாலே அப்பனே யாங்களே அழைத்துச் செல்வோம் அப்பனே!!!!!

யாங்களே வருவோம் அப்பனே!!!! 

நிச்சயம் பல மனிதர்களுக்கு இவ்வாறு செய்து கொண்டே தான் இருக்கின்றோம் அப்பனே கலியுகத்தில் அப்பனே

ஏனென்றால் தெரியாமல் அப்பனே வாழ எவை என்று அறிய அறிய தெரிந்து வாழுங்கள் அப்பனே

தெரியாமல் வாழ கற்றுக்கொண்டு அப்பனே எதையெதையோ பயன்படுத்தி எதையெதையோ செய்து கர்மத்துக்குள் நுழைந்து நுழைந்து கஷ்டங்கள் பட்டுப்பட்டு அப்பனே நீ மட்டும் இல்லாமல் பின் அனைவரையும் கெடுக்கின்றாயே !!! அப்பனே!!!!

இது நியாயமா??????

அப்பனே ஏன் எதற்காக இங்கெல்லாம் வாக்குகள் செப்புகின்றேன் என்றால் அப்பனே இவையெல்லாம் எங்களுடைய இடமே என்பேன் அப்பனே!!!!

யாங்கள் எதை என்று புரிய புரிய இதனால் அப்பனே நிச்சயம் மீண்டும் மீண்டும் இதைத்தான் தெரிவிப்பேன் அப்பனே!!!

ஒரு விஷயத்துக்கு (லட்சியம் /கனவு) அப்பனே அதாவது நம்தன் அடைய வேண்டுமென்றால் அப்பனே கடும் போராட்டமும் அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே கடும் முயற்சிகளும் கூட அப்பனே ஓயாத உழைப்பும் கூட வேண்டும் என்பேன் அப்பனே!!!!

அது போலத்தான் அப்பனே இறைவனை காணுவதில் அப்பனே அதாவது இறைவனை காண அப்பனே ஓடியும் அப்பனே போராட்டங்களும் கூட அப்பனே மனக்குழப்பங்களும் கூட அப்பனே எதை என்று அறிய அறிய கடும் முயற்சிகளும் கூட அப்பனே பின் செய்தால் தான் அப்பனே இறை ஆசிகளும் கிட்டும் அப்பனே இறை பலங்களும் கிட்டி கிட்டி அப்பனே நிச்சயம் அப்பனே வாழ்க்கையே மாறுமப்பா!!!

மாறும் அப்பா அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே புரியாமல் அப்பனே வாழ்ந்து விடாதீர்கள் என்பேன் அப்பனே புரியாமல் வாழ்ந்தால் அப்பனே மீண்டும் பிறவிகள் வந்துவிடும் என்பேன்!!!

அப்பனே அதனால் இப்பிறவி நன் முறைகளாகவே அப்பனே கொடுக்கப்பட்டுள்ளது.

அதை சரியாகவே அப்பனே பயன்படுத்தி கொள்ளுங்கள் அப்பனே

இதனால் அப்பனே இக்கங்கையும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரிய புரிய எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய இதனால் அப்பனே இதனால் பச்சை நிறத்தில் அப்பனே எதை என்று அறிய அறிய மனதை சுத்தமாகவே எதை என்றும் அறிய அறிய வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!

எதை என்று அறிய அறிய கோபங்கள் வேண்டாம் அப்பனே பொறாமைகள் வேண்டாம் அப்பனே போட்டிகள் வேண்டாம் எதை என்றும் அறிய பொய்கள் சொல்ல வேண்டாம் அப்பனே எவை என்றும் அறிய அறிய காமம் வேண்டாம் அப்பனே அமைதியாக இருந்தாலே போதுமப்பா!!!

இறைவன் நிச்சயம் உன்னை வந்தடைந்து உந்தனக்கு என்ன தேவை ??? என்று அப்பனே நிச்சயம் அனைத்தும் செய்வான் அப்பனே 

அப்பனே சில பேர் தொழிலுக்காக போராட்டங்கள் அப்பனே சில பேர் வேலைக்காக போராட்டங்கள் அப்பனே வேலை வேண்டும் தொழில் வேண்டும் திருமணம் வேண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே இவையெல்லாம் நீ பெற்றுக் கொண்டு அதாவது எதை என்று அறிய அறிய வந்தால் அப்பனே இதனாலே தொல்லைகள் அப்பா!!!

ஆனால் இறை எவை என்று அறிய அறிய முதலில் பலத்தை பெற்று இருக்க வேண்டும் அப்பனே இறை பலத்தை பெற்றாலே போதுமானதப்பா!!!!! எவை என்று அறிய அறிய அப்பனே இவையெல்லாம் எளிதில் கிடைத்து விடும் அப்பா!!!

அப்பனே அழியாதப்பா!!! 

ஆனால் இச் ஜென்மத்தில் அப்பனே அப்படி இல்லை அப்பா எதை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பல போராட்டங்களும் பல பல வழிகளிலும் கூட இன்னல்களும் கூட எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய இதனால் மனிதன் மாய வலையில் விழுந்திட்டு அப்பனே  கஷ்டங்கள் பட்டுப்பட்டு அப்பனே கடைசியில் இறைவனிடத்தில் வருகின்றான் அப்பனே!!!

அதற்குள்ளே அப்பனே பல எவை என்று அறிய அறிய கர்மாக்கள்..... அதாவது பாவங்களை சேமித்துக் கொண்டு கடைசியில் இறைவனிடத்தில் வந்தால் என்ன லாபமப்பா????

இறைவனும் அப்பனே ஒன்றும் செய்ய மாட்டான்!!

ஆனால் அனைத்து பரிகாரங்களும் செய்வார்கள் எதை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும்!!!!..... ஆனாலும் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா!!!!

அதனால் இளமையில் கற்க வேண்டும் அப்பனே

எதனை கற்க வேண்டும்???

இறை பலத்தை கற்க வேண்டும் அப்பனே!!!

இளமையில் ஆடி ஒழிந்திட்டு அப்பனே ஆட்டங்கள் பாட்டங்கள் பாடிட்டு அப்பனே எதை என்றும் புரியாமலும் எதை என்றும் அறியாமலும் அப்பனே பின் கடைசியில் அப்பனே வயதாகி விட்டதே!!!!! மீண்டும் இறைவனிடத்தில் செல்லலாம்!!...... என்றால் அப்பனே எப்படியப்பா ???? இறைவன் காட்சிகளும் அளிப்பான்??? அப்பனே

இதனால் அப்பனே மாய வலையில் சிக்கிக் கொண்டுள்ளீர்கள் நீங்கள் அப்பனே இதற்கெல்லாம் விடிவெள்ளியாக நிச்சயம் அப்பனே நன் முறைகளாகவே யானே விளக்கம் அளிக்கின்றேன் அப்பனே வர வர எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே இதனால் நல்விதமாக அப்பனே இவ் (சங்கமம்) தன்னில் இப்பொழுது கூட பல கோடி அப்பனே ஞானிகளும் கூட அப்பனே வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே நல் முறைகளாகவே!!!

இதனால் அப்பனே எதை என்றும் புரிந்து புரிந்து அப்பனே நன்முறைகளாகவே இன்னும் ஆசிகள் அப்பா தருகின்றேன் அப்பனே இப்பொழுது போதும் ஆசிகள் அப்பனே இன்னும் வாக்குகள் உரைக்கின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

9 comments:

  1. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  2. சிவபெருமானே வந்து அந்த குழந்தையை காப்பாற்றிய இடம் அலக்நந்தா நதி சித்தன் அருள் 112

    ReplyDelete
  3. தெய்வதிரு அகத்திய மைந்தன் ஹனுமத்தாசன்....அப்பா....அவர்கள். அகத்தியர் அருளும் "ஜீவநாடி" இருந்ததை போல், போகரின் ஜீவா நாடி ஒன்றும் அகத்தியர் அருளால் என்னிடம் வந்து சேர்ந்தது. பொதுவாக அதில், போகர் மருத்துவ முறைகளை பற்றியும், இன்ன வியாதிக்கு இன்ன மூலிகை என்றும் தகவல் தருவது வழக்கம். ஜீவ நாடி போலவே அதிலும் போகரின் வார்த்தைகள் தங்க நிறத்தில் வந்து போகும். அதை படித்து பலருக்கும் போகர் அருளால் மருந்துகளை கிடைக்க வழி செய்துள்ளேன்.

    ஒருநாள் இரு இளம் வயது தம்பதியர் நாடி படிக்க வந்து அமர்ந்தனர். இருவரையும் அமரச்செய்து விஷயம் என்னவென்று விசாரித்தேன்.

    "எங்களுக்கு திருமணமாகி சில ஆண்டுகளுக்குப் பின் தான் ஒரு குழந்தை பிறந்தது. அதற்கு இப்பொழுது இரண்டு வயது ஆகிறது. பிறக்கும் போதே உடல் நலக் குறைவுடன் பிறந்துள்ளது. "

    "என்ன உடல் நலக் குறைவு?"

    "ஒன்றரை வயதானதிலிருந்து திடீர் திடீர் என்று உடல் முழுவதும் நீல நிறமாகி விடும். உடனே, குழந்தையை வாரி எடுத்து மருத்துவ மனைக்கு தூக்கி சென்று சிகிர்ச்சை அளித்தால் வியாதி விலகி விடுகிறது. ஆனால் மறுபடியும் அந்த வியாதியின் தாக்கம் எப்பொழுது வரும் என்பதை எங்களால், மருத்துவர்களால் கணிக்க முடியவில்லை. எத்தனையோ மருத்துவ முறைகளை கையாண்டு விட்டோம். முதலில் மாதம் ஒருமுறை என்று வந்த உடல் நலக்குறைவு, இப்பொழுது வாரம் ஒருமுறை என்று ஆகிவிட்டது. கடைசியாக ஒரு மருத்துவரிடம் சென்ற போது அவர்தான் இந்த தாக்கம் எதனால் வருகிறது என்பதை கண்டுபிடித்தார். பிறவியிலேயே எங்கள் குழந்தையின் இருதயத்தில் ஒரு துவாரம் உள்ளதாம். அதனால் ரத்தம் பம்ப் பண்ணுவது சரியாக அமையாத நேரங்களில், பிராணவாயு குறைவால் உடல் நீல நிறமாகிவிடுகிறது. இதற்கு இரண்டு வழிதான் உள்ளதாம். ஒன்று குழந்தைக்கு அறுவை சிகிர்ச்சை செய்து பார்க்க வேண்டும். ஆனால் குழந்தை அறுவை சிகிர்ச்சையை தாங்குகிற அளவுக்கு உடலில் சக்தியை பெறவில்லை. அதனால் அறுவை சிகிற்ச்சை செய்தால் பலன் எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்றார்".

    "சரி! இரண்டாவது வழி என்ன சொன்னார்?"

    "அந்த மருத்துவர் போகர் சித்தரின் மருத்துவ முறைகளில் மிகுந்த நம்பிக்கை உள்ளவர். அதனால், போகர் சித்தர் மனது வைத்தால் மருந்து மூலம் இந்த குழந்தையை பிழைக்க வைக்கலாம் என்றார். மேலும் அவர் உங்களிடம் போகர் நாடியில் போகரின் உத்தரவு என்ன என்பதை கேட்டு வரச் சொன்னார். தாங்கள் தான் போகர் நாடி படித்து எங்கள் பிரச்சினைக்கு வழிகாட்ட வேண்டும்" என்று வேண்டினர்.

    போகரின் ஜீவநாடியை எடுத்து முறையாக பிரார்த்தனை செய்து "சித்தபெருமானே! இந்த தம்பதியரின் குழந்தைக்கு நல்ல சரியான ஒரு தீர்ப்பை வழங்குங்கள்" என்று மனதுள் வேண்டிக்கொண்டேன்.

    நாடியில் வந்த போகர் பெருமான் இவ்வாறு சொன்னார்.

    "இந்தக் குழந்தையை சிவபெருமானால் மட்டும் தான் காப்பாற்றமுடியும். இந்த குழந்தை காப்பாற்றப்பட வேண்டுமென்றால் அது, ஒரு வியாழக்கிழமை அன்று அலகானந்தா நதியில் மூன்று முறை மூழ்கி குளிக்கப்படவேண்டும். அப்படி குளிப்பாட்டும் போது சிவநாமத்தை உச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். கண்டிப்பாக சிவபெருமான் வந்து இந்தக் குழந்தையை காப்பாற்றுவார்" என்று கூறி உடனே மறைந்துவிட்டார்.

    ReplyDelete
  4. பொதுவாகவே போகர் சித்தர் கேட்ட கேள்விக்கு மிக சுருக்கமாக பதில் சொல்பவர். மருந்து எதையும் கூறாமல், குழந்தையை அலகாநந்தா நதியில் மூன்று முறை முக்கி குளிப்பாட்ட வேண்டும் என்று கூறியதை கேட்ட அந்த பெற்றோர்கள் அதிர்ந்து போய் விட்டனர். அலகாநந்தா நதி குளிர்ச்சிக்கு பெயர் பெற்ற ஒன்று. பெரியவர்களே அதில் ஒரு முறை நீராடினால் விறைத்து போவார்கள். அதிலும் இந்த குழந்தை ரொம்ப பலவீனமான இதயத்தைக் கொண்டு பிறந்துள்ளது. அந்த குளிரில் மூன்று முறை முக்கி எடுத்தால் என்னவாகும்? என்று நினைப்பு எனக்கு.

    "இதை தவிர வேறு எதுவும் போகர் கூறவில்லையா?" என்று கேட்டனர்.

    "போகர் சொன்னதை கூறிவிட்டேன், மருந்து எதுவும் சொல்லவில்லை. அவர் சொன்னபடி செய்துவிட்டு வாருங்கள். கண்டிப்பாக நல்ல செய்தியுடன் திரும்பி வருவீர்கள்" என்றேன்.

    சற்றும் நம்பிக்கை இல்லாமல் சோர்ந்த மனதுடன் எழுந்து சென்றனர் அந்த தம்பதியினர்.

    இரண்டு மாதங்கள் வரை அவர்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்கவில்லை.

    ஒரு நாள் சோர்ந்த முகத்துடன் அந்த தம்பதியினர் வந்தனர். அந்த குழந்தையின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாகவும் அவர்களால் போகர் நாடியில் வந்து சொன்னதை நிறைவேற்ற முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

    "உண்மை தான். போகர் நாடியில் வந்து சொன்னதை சாதாரண மனிதர்களின் மன நிலையில் இருந்தால் நிறை வேற்ற முடியாது தான். சற்றே திட மான மன நிலையுடன் சித்தர் மீது நம்பிக்கை வைத்து காரியத்தில் இறங்குங்கள். எல்லாம் வெற்றி அடையும். சீக்கிரம் போங்கள்" என்றேன்.

    "இன்னும் ஒருமுறைகூட போகரின் நாடி படித்து ஏதேனும் மருந்தை போகர் சொல்கிறாரா என்று பார்த்து சொல்லுங்களேன்" என்றனர் அவர்கள்.

    மறுபடியும் நாடியை படிக்க முன்னர் சொன்னதே இப்பொழுதும் வந்ததை கண்டு மனம் தளர்ந்த அவர்களை நோக்கி,

    "வியாதிக்கு காரணமான கர்மாவையே அழித்தவர் சிவபெருமான். உங்கள் குழந்தையை அவர் கண்டிப்பாக காப்பாற்றுவார். இனிமேல் அந்தக் குழந்தையை சிவபெருமானின் குழந்தை என்ற எண்ணத்துடன் தூக்கி சென்று, போகர் பெருமான் கூறியதை நிறைவேற்றுங்கள். நல்லதே நடக்கும்" என்றேன்.

    அந்த தம்பதியர்களுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை;

    "உங்கள் வாக்கை வேத வாக்காக வைத்து, இந்த நிமிடம் முதல் அந்தக் குழந்தை "சிவபெருமானின்" குழந்தை என்ற எண்ணத்துடன் சென்று நீங்கள் சொன்னதை நிறைவேற்றி விட்டு வருகிறோம்" என்று கூறி விடை பெற்றனர்.

    இரு வாரங்களுக்கு பின் அந்த இருவரும் என்னை காண வந்தனர். கையில் அந்த குழந்தை நல்ல ஆரோக்கியமாக விளையாடியபடி இருந்தது. அவர்கள் முகத்தில் நிறையவே சந்தோஷம்; கூட நிறையவே புல்லரித்துப்போக வைக்கிற அனுபவங்கள். அந்த குழந்தையின் தந்தை நடந்ததை விவரித்தார்

    ReplyDelete
  5. "போகர் சித்தர் சொன்னது போலவே ஹிமாலயத்தில் உள்ள அலகானந்த நதிக்கரைக்கு குழந்தையுடன் போய் சேர்ந்தோம். தண்ணீரின் வேகமும் அதில் உறைந்த குளிர்ச்சியின் வீரியமும் எங்களை அதிர வைத்தது. குழந்தையை எப்படி இந்த குளிர்ந்த தண்ணீரில் மூழ்கடிப்பது? என்ற யோசனை இருமுறை எங்களை தாக்கியது. மூன்றாவது முறையும் அந்த கேள்வி எங்களை தாக்கும் முன் சித்தர் சொன்னபடி இறைவன் நாமமான "நமச்சிவாய" என்பதை கூறிக்கொண்டே மெதுவாக ஒருமுறை பயத்துடன் முக்கினோம். என்ன நடந்தது என்று புரியவில்லை. பொதுவாகவே அப்படிப்பட்ட குளிர் உடலை தாக்கும்போது குழந்தை "வீ ல்" என்று அலறியிருக்கும். ஆனால் அந்தக் குழந்தை சிரித்தபடி அந்த நீரின் ஸ்பரிசத்தை விரும்பியது. அப்போது எங்கள் பக்கமாக நடந்து வந்த ஒரு சாது, "குழந்தையை என்னிடம் கொடுங்கள். நான் குளிப்பாட்டி பத்திரமாக திருப்பி தருகிறேன், கவலை வேண்டாம்!" என்று கூறி வாங்கி சென்றார்.

    குழந்தையை வாங்கி சென்றவர் நாங்கள் நின்ற பகுதிக்கு நேராக சற்று ஆழமுள்ள பகுதிக்கு சென்று குழந்தையை பலமுறை நீரியில் முக்கியபின் சற்று அருகில் வந்து குழந்தையின் உடலை தடவி கொடுத்து, பின் தன நனைந்த வஸ்திரத்தின் ஒரு முனையிலிருந்து சிறிது விபூதியை எடுத்து குழந்தையின் நெற்றியிலும் மார்பிலும் தடவி, சிறிதளவு அதன் வாயிலும் போட்டு அதன் வலது காதில் எதையோ முணுமுணுத்துவிட்டு எங்களிடம் தந்தார். குழந்தை கிடைத்த வேகத்தில் அதன் உடலில் உள்ள நீரை துவட்டும் வேலையில் கவனத்தை செலுத்தியதில் அந்த சாதுவுக்கு நன்றி சொல்ல கூட மறந்துவிட்டோம். ஒரு நிமிட இடைவேளையில் நிமிர்ந்து பார்க்க அங்கே அந்த சாதுவை காணவில்லை. குழந்தையின் உடல் சூடு முன்னரை விட சற்று அதிகமாக இருக்கவே, குழந்தைக்கு எல்லாம் சரியாயிருக்க வேண்டும் என்ற எண்ணத்தில், ஊர் வந்து சேர்ந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்ததில், மருத்துவர்களே அசந்து போய் விட்டனர். எங்கள் குழந்தையின் இருதயத்தில் இருந்த ஓட்டை முழவதுமாக அடைந்து போய் இப்பொழுது பம்பிங் சரியாக நடப்பதாக சொல்கின்றனர். வந்தவர் யார் என எங்களுக்கு புரியவில்லை. எப்படி குணப்படுத்தினார் எனவும் தெரியவில்லை. ஆனால் நீங்கள் சொன்னபடி நல்ல விஷயம் மட்டும் நடந்துள்ளது எங்கள் நன்றியை போகர் சித்த பெருமானுக்கு தெரிவிக்க வேண்டும்" என்றார்.

    போகர் ஜீவ நாடியில் நடந்த அதிசயத்தைப் பற்றி கேட்ட பொழுது அவர் சொன்னார்

    "இந்தத் திருவிளையாடல் சிவ பெருமான் நேரடியாக நடத்தியது. சித்தர்களுக்கே தலையாய சித்தர் தான் ஒரு திருவிளையாடலை ஏதோ ஒரு காரணத்துக்காக நடத்த விரும்புகிறார் என்றால், எங்களுக்கு அங்கே என்ன வேலை? சொன்னதை சொல்வதுடன் எங்கள் வேலை முடிந்தது. அதனால் தான் எந்த மருந்தும் அந்த குழந்தைக்கு விதிக்கப்படவில்லை. சில திருவிளையாடல்களுக்கு அர்த்தம் புரியாது. புரிந்துகொள்ளவும் முயற்ச்சிக்கக்கூடாது." என்ற உபதேசத்துடன் நிறுத்திக்கொண்டார்.

    சிவபெருமானே நம்மிடை சித்தனாக உலா வருகிறார் என்பதை அறிந்த பொழுது உண்மையில் நானே அசந்து விட்டேன்.

    சித்தன் அருள்......................... தொடரும்!

    ReplyDelete
  6. Om Namasivaya, Om Agasthiyar ayyan Thiruvadigal potri!

    ReplyDelete
  7. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete