​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 23 December 2023

சித்தன் அருள் - 1546 - வைகுண்ட ஏகாதசி பத்ராச்சல ராமர் தரிசனம்!










வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருள் தொகுப்பு 1530ன் படி, 23/12/2023 சனிக்கிழமை, இன்று வைகுண்ட ஏகாதசி திருநாள். இதே தினத்தில் பல வருடங்களுக்கு முன் அகத்தியர் மைந்தன் திரு.ஹனுமந்த தாசன் ஸ்வாமிகள், பத்ராச்சலத்தில் ராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயரின் தரிசனம் பெற்ற நாள். மேற் தொகுப்பில், யாருக்கு இன்று பத்ராச்சல தரிசனம் கிடைக்குமோ என்று குறிப்பிட்டிருந்தோம்.

திரு.சந்திரசேகர், சென்னை, அகத்தியர் அடியவர் பத்ராசலம் சென்று ராமர் தரிசனம், பர்ணசாலை தரிசனம் முடித்து ஓரிரு படங்களை அனுப்பி தந்துள்ளார். (மேலே உள்ள படங்கள்)
 
திரு.சூர்யோதனன் என்கிற அகத்தியர் அடியவர் அனுப்பி தந்த படங்களை கீழே தருகிறேன்.
 










அவர்களுக்கு நம் அனைவர் சார்பாக நன்றியை உரைத்து, சித்தன் அருள் வாசகர் அனைவரும் கண்டிட, அந்த படங்களை இங்கு சமர்ப்பிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!   

2 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete