​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 30 April 2022

சித்தன் அருள் - 1126 - அந்தநாள் >> இந்த வருடம் - சுபகிருது வருஷம் [2022-23]


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். பல அகத்தியர் அடியவர்களும், அந்த தினத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள் இந்த வருடம்", எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து இறைவன்/பெரியவர்களின் அருள், ஆசிர்வாதம், நிம்மதியான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ராமரும் சீதையும் ராமேஸ்வரத்தில்:-

ராமேஸ்வரத்தில் சிவபெருமான் தானே விரும்பி அமர்ந்தார். சித்திரை மாதத்தில், ராமரும், சீதையும் அங்கே வந்து, வளர்பிறை ஏகாதசி அன்று (12/05/2022, வியாழக்கிழமை) சிவபெருமானுக்கு பூசை செய்து பத்து நாட்கள் அங்கு உறைவார்கள்.  

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:-

28/05/2022 - சனிக்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

08/08/2022 - ஆடி மாதம் - திங்கட்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, கேட்டை நக்ஷத்திரம்

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

09/08/2022 - ஆடி மாதம் - செவ்வாய்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

09/08/2022 - ஆடி மாதம் - செவ்வாய்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி/திரயோதசி திதி - மூலம் நட்சத்திரம்.

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

24/08/2022 -ஆவணி மாதம் - புதன்கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம் (மாலை 3.35 முதல்).

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.

06/11/2022 - ஞாயிற்றுக்கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - ரேவதி நட்சத்திரம்.

முருகர், விநாயகர், ஐயப்பன் இணைந்து சந்தாேசமாக விளையாடக்கூடிய இடம் ஓதிமலை உச்சியில். ஓதிமலை உச்சியில் ஆலய சுற்றுபிரகாரத்தில். கார்த்திகை மாதத்தில் வரும் கடைசி சஷ்டி நாள் - 14/12/2022 புதன் கிழமை.

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்தியப் பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து, நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2022 முதல் 14/01/2023 க்குள் வருகிறது.

சிவபெருமான், சிதம்பரம்:-

06/01/2023 - வெள்ளிக்கிழமை, பௌர்ணமி திதி, திருவாதிரை நட்சத்திரம். ஆருத்திரா தரிசனம். சிதம்பரம் கோவிலில் சிவபெருமான், அபிஷேக நேரத்தில், ஸ்தல வ்ருக்ஷத்தின் அடியில் அமர்ந்திருப்பார். அன்று சிவபெருமானே விரும்பி அமர்கிறார். நாமும்  அன்று அங்கு அமர வேண்டும் என்கிறார் அகத்தியப்பெருமான்.

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-

09/01/2023 - திங்கட்கிழமை - மார்கழி மாதம், துதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம்.

அனைத்தும் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

Friday 29 April 2022

சித்தன் அருள் - 1125 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம்!







16/4/2022 சித்ரா பவுர்ணமி / வட இந்திய ஹனுமான் ஜெயந்தி அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொது வாக்கு .

வாக்குரைத்த ஸ்தலம் .ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் ஆலயம், மோடி தம்பாடி, வாப்பி தாலுக்கா, வல்சாட் மாவட்டம், குஜராத் மாநிலம்.

ஆதி ஈசனை மனதில் தொழுது உரைக்கின்றேன் அகத்தியன்.

நலமாக இவ்வாலயங்கள் இன்னும் சிறப்புகள் சிறப்புக்கள் உண்டு இன்னும் பல வெற்றிகளை பின் மனதில் நினைத்தவாறு பின் ஏற்படும்.

ஏற்படும் என்பதற்கிணங்க இன்னும் வெற்றிகள் இவையன்றி கூற பின் இப்பொழுது கூட.... இவந்தனையும்.. வீர சிவாஜி(மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி) என்று அழைப்பர்.

எதையென்று ஆனாலும் இவந்தன் பல ஆலயங்களை வணங்கினான். வணங்கி வணங்கி வெற்றிகள் வெற்றிகளைக் குவித்துக் கொண்டே சென்றான்.

ஆனாலும் இவையன்றி கூற சில தீயவர்கள் இவந்தன் பின் எப்படி?? பின் வெற்றிகள் கொள்கின்றான்?? என்று எண்ணி பின் இவையன்றி கூற  அவ் தீயவர்கள் சில ஆட்களை ஏற்படுத்தி மறைமுகமாக இவந்தனை தூதிட்டு ( சிவாஜியை தூதுவனாக ஆட்களை வேவு பார்க்க) இவன் என்ன செய்கின்றான்? என்று பின் பார்க்கச் சொன்னார்கள்.

இவையன்றி கூற ஆனாலும்  சிவாஜி பின் எதனையுமென்று பின் அறுவடையாக உண்டு உண்டு இதனால் மறைமுகமான பலபல பின் உண்மையான பின் எழுந்தருளியுள்ள (சுயம்பு) ஒளி வடிவமான பின் இறைவன், ஆலயங்கள் ,ஜீவசமாதிகளுக்கு சென்றான்.

ஆனாலும் இவைதன் உண்டு உண்டு என்பதற்கிணங்க சென்றுகொண்டே இருந்தான் இதனால் மேன்மையான பலன்கள் இவந்தனுக்கு உண்டாயிற்று.

ஆனாலும் (எதிரிகள்) அவர்களாலும் பின் இதனை கண்டுபிடிக்க இயலவில்லை.எதையன்றி கூற ஆனாலும் பின் இவ் அரசனே பின் எதையன்றி  கூற கூற  கூற முடிவுகள் தரவில்லை ஆனாலும் இவந்தன் எவை பின் நின்ற
ஈசனிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க
 யான் எப்பொழுதும் எதை வணங்கினாலும் யாருக்கும் தெரிய கூடாது என்று.

ஆனாலும் இதை தன் பின் இவைதன் உணர ஒன்றுமில்லை அர்த்தங்கள்.

அர்த்தங்கள் இதனால் மென்மேலும் இவந்தனுக்கு உயர்வுகள் கிடைத்துக் கொண்டே வந்தது.

ஆனாலும் பலப்பல சிரஞ்சீவியான பின் ஆஞ்சநேயனையும் இவந்தன் வணங்கி வணங்கி.... அதிலும் தூய சுயலிங்கமாக எழுந்தருளியுள்ள ஈசன்களும் எதையன்றி கூற பக்கத்தில்(ஆலயத்தில் இருக்கும் சுயம்பு பஞ்சமுக ஆஞ்சநேயர்) அமர்ந்து இருக்கும் வீர ஆஞ்சநேயனையும் கண்டுகொள்ள பல பல வழிகளிலும் இவந்தன் சென்றான். எதையன்றி கூற....அவ் சுய(சுயம்பு) லிங்கங்களையும் பின் பார்த்து இச் சுய நல்விதமான ஆஞ்சநேயனையும் பார்த்து வணங்கி விதவிதமான வெற்றிகளை கண்டு நவிழ்ந்து வந்தான்.

ஆனாலும் எவையென்று கூற பல மனிதர்கள் இதனையும் கூட இவந்தன் முன்னே இவையன்றி கூற ஆனாலும் இப்படித்தான் இவந்தன் வணங்கி வணங்கி முன்னேற்றங்கள் அடைகின்றான் என்று கூட பின் இவைதன் பின் பகைவர்களிடத்தில் சொல்ல....

ஆனாலும் இதை இவையென்றும் கூற ஆனாலும் பின் சிலசில சில சில உண்மைகளை அறிந்தபின் சுய லிங்கமாக எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயனையும் பின் இவையன்றி கூற.... இவ்வாறு இருந்தால்தான் இவந்தன் வெற்றி பெறுகின்றான் என்பதற்கிணங்க பல திருத்தலங்களை பகைவர்கள் அழிக்க முயன்றனர் ஆனாலும் ஒன்றை கூட அழிக்க முடியவில்லை.

அதிலும் ஒன்று இவைதன்(இவ்வாலயம்) என்பேன்.

இதனையும் எவை என்று கூற அவந்தன் வணங்கி வணங்கி வெற்றிகளை குவித்தான் என்பது நிச்சயமான உண்மை.

அறிந்து அறியாமல் எதையென்றும் கூறாத அளவிற்கு வெற்றிகள் இவ் ஆஞ்சநேயனை வணங்க வணங்க வெற்றிகள் குவியும்.

இதனால் பகைவர்களும் கண்டுகொண்டு பின் இவந்தனை(சிவாஜி) அடக்கவும் முடியவில்லை ...  பணியவைக்கவும் முடியவில்லை!!!
இவந்தனை இறக்கவும்  முடியவைக்கவில்லை.

ஆனால் இவன் வணங்கும் சிலசில சுயலிங்கங்களை அழித்தாலே இவந்தன் வெற்றிகள் பறிபோய்விடும் என்பதற்கிணங்க பல பல வழிகளிலும் பல சுய லிங்கங்களையும் அழித்து அழித்து வந்தார்கள்.

ஆனாலும் அழித்துவர அழித்துவர அவைதனை அழிக்க முடியவில்லை.. இதனையும் என்பதற்கு எவையென்று கூற திரும்பவும் திரும்பவும் சக்திகளை கொடுத்துக்கொண்டே இருந்தான்.

 சிவாஜி வீர சிவாஜி தற்போது நிலைமையிலும்.

ஆனாலும் அவ்வாறு இன்றி கூற ஆனாலும் ஒரு புண்ணியம் செய்வித்தான் எதையன்றி கூற காடு மேடு களாக மலைகளாக செல்கின்ற பொழுது அவ்வரசன் (சிவாஜி) பல மனிதர்களுக்கு உதவி செய்தான் அப்படி மட்டுமில்லாமல் பல ஜீவராசிகளுக்கும் உதவி செய்தான் உதவிகள் செய்து செய்து பின் நல் முறையாகவே அவ் ஜீவராசிகளும் மனமுவந்து வாழ்த்தி விட்டன.

இதனால் பன்மடங்கு உயர்வுகள் பெற்று விட்டான் அவன்.

எதனையுமின்றி குறிப்பிடாத அளவிற்குக்கூட வித்தியாசங்கள் அதனால்தான் வெற்றிகொள்வதற்கு இன்னும் சிறப்பான ஸ்தலங்கள் உள்ளது என்பேன்.

என்பது உண்மையப்பா!!!

உண்மை என்பதை தீர உணர்ந்து அப்பனே பல பல அரசர்களும் இதனை உணர்ந்து இங்கே வந்து வலம் வந்து நல் விதமாக வணங்கி வந்து பின் எதையன்றி கூற அனைத்து வெற்றிகளும் பெற்று அனைத்தும் செய்து முடித்தனர் அப்பனே.

பல வெற்றிகளை கொண்டனர்.

இன்னும்கூட அப்பனே இவ்வாலயத்தைப் பற்றி மறைமுகமாக தெரிந்திருக்கும் பல மனிதர்களுக்கு.

அவர்கள் மறைமுகமாகவே வந்து நல் விதமாகவே இவந்தனை வணங்கி வெற்றிக் கொள்கிறார்கள்.

பண மதிப்பும் தேவையான அளவும் இவந்தன் கொடுப்பான் என்பேன்... அதி விரைவாகவே.....

இவந்தனை நெருங்க நெருங்க பல பரிசுத்தமான சுய வடிவமாகவே இவந்தன் எதையென்று கூற நடுஇரவில் இவந்தன் பின் வெளியே வந்து நிச்சயம் உறங்குவான்!!! சுற்றுவான் சுற்றித் திரிவான் என்பது கூட மெய்யே.

மெய் என்பதை உணர்ந்து எதையென்று கூற ஆனாலும் இங்கு அமர்ந்து பின் 1008 முறை" ஸ்ரீ ராம ஜெயம்  "      செப்பிட்டே கொண்டிருந்தால்... யார் இவன்?? என்று கூட கூறி எழுந்தருளி அவந்தனுக்கு ஆசியளிப்பான். சில கஷ்டங்களையும் போக்குவான்.. மறைமுகமாக வருமானத்தை கொடுப்பான் தீய எண்ணங்களை எழவிடாது தீய எண்ணங்கள் இருந்தாலும் அதனை அடியோடு அழித்து விடுவான் பல வெற்றிகளை தருவான் பல பல வழிகளிலும் பணத்தை பெற்றவர்கள் இன்னும் இவந்தனை மறக்காமல் இங்கு வந்து செல்கின்றனர் அப்பனே இது தான் பெருமை.

பெருமைக்குரியது இன்னும் பல பல திருத்தலங்கள் பற்றியும் உள்ளது அப்பனே இவையன்றி கூற...

வெற்றி!!! வெற்றி!!! என்கின்றார்களே அவ் வெற்றிகளை கொடுப்பவன் இவந்தன்... உண்மை இவையன்றி கூற பின் மணமாகாதவருக்கும் இங்கு வந்தால் மணமாகிவிடும் எளிதில் கூட.

எதையன்றி கூற இங்கு வந்து வணங்குபவர்களுக்கு பண மதிப்பு அதிகரிக்கும் என்பது உண்மை நோய் நொடிகள் எதையன்றி கூற...இவையென்று கூற அதில்(சுயம்புமண்கல்பாறையாக உள்ள அனுமன் திருமேனி) இருக்கும் சிறிதளவு மண்ணை பின் எடுத்துக்கொண்டு அனுதினமும் பின் நெற்றியில் திலகம் இட்டு வந்தாலே போதுமானது அனைத்து குறைகளும் நீங்கும் படிப்படியாகவே என்பது மெய்.

இதையென்று கூற இன்னும் ஓர் சிறப்பான தலத்தையும் சொல்கின்றேன் அப்பனே.

மீண்டும் வந்து வாக்குகள் உரைப்பதுண்டு...

அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்...

குருநாதர் அகத்திய பெருமானிடம் அடியவர்கள் கேள்விகளுக்கு  அளித்த பதில் வாக்கு

குருவே. கை கூப்பி தொழுது வணங்குகிறோம்

ஆலயத்திற்கு செல்ல இயலாதவர்கள், முடியாதவர்கள்  எப்படி ஆஞ்சநேயரை வணங்குவது???

அப்பனே நல் முறையாக சனிதோறும் இல்லத்தில் ஆஞ்சநேயனுக்கு நல் தீபமேற்றி... ஸ்ரீராம ஜெயத்தை ஜபித்து வந்தாலே அவனருள் பெறலாம். சனியவனும் விலகிச் செல்வான் அப்பனே...

குருவே நமஸ்காரங்கள்

ஆஞ்சநேயரின் பரிபூரண அருள் கிடைக்க எவ்விதம் வழிபாடு செய்ய வேண்டும்???

அப்பனே சொல்கின்றேன் அப்பனே மாதம் ஒருமுறை வரும் உத்திர நாளன்று( உத்திர நட்சத்திர நாள்) அவந்தன் ஆலயத்திற்குச் சென்று பின் தியானங்கள் ஸ்ரீராமஜெயம் ஜெபம் செய்து வந்தாலே அவந்தன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறலாம் அப்பனே! வாயில்லா ஜீவராசிகளுக்கும் உதவிட அவந்தன் அருள்கள் பலமாகும் அப்பனே.!!!!

ஞாயிறு அன்று ராகுகாலத்தில் அவந்தனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபாடு செய்ய, செய்ய சில வினைகள் விலகும் என்பேன். அவந்தன் அருள்கள் கிட்டும் என்பேன் அப்பனே!!

ஆலயம் பற்றிய விவரங்கள்

சிறு கிராமத்தில் அமைந்துள்ள ஆலயம். போக்குவரத்து வசதிகள் குறைவு கிராமத்திலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவிலுள்ள வாப்பி எனும் நகரத்தில் இருந்து பேருந்து மூலம் தேகாம்,மற்றும் தாத்ரா& நாகர் ஹவேலி ஊர்களுக்கு வந்து அங்கிருந்து ஆட்டோ மூலம் செல்ல முடியும். ஆலயத்திற்கு என்று பிரத்தியோக பூஜாரிகள் இல்லை கிராமத்து மக்களில் ஒருவரே தினசரி காலை சிறிது நேரம் மாலை சிறிது நேரம் ஆரத்தி சமயத்தில் திறந்து விளக்கு ஏற்றி தீபாராதனை செய்து விட்டு செல்வார்.

செவ்வாய்க்கிழமை மற்றும் சனிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை கோயில் திறந்திருக்கும். பக்தர்கள் கூட்டமும் நிறைந்திருக்கும். ஆலயம் கிராமத்தில் அமைந்திருப்பதால் தங்குவதற்கும் வசதி வாய்ப்புகள் குறைவு. அருகிலுள்ள வாப்பி அல்லது சில்வாசா நகரத்தில் தங்கி அங்கிருந்து வந்து தரிசனம் செய்ய முடியும்.

ஆஞ்சநேயர் சுயம்பு லிங்கத் திருமேனி என்பதால் திரவிய அபிஷேகங்கள் இல்லை. நல்லெண்ணெய் அபிஷேகம் செந்தூரப்பொடி சாற்றுதல், கிராம்பு மாலை வெற்றிலை மாலை எருக்கம்பூ மாலை துளசி மாலை சாற்றி வழிபாடுகள் நடக்கின்றது.சுயம்பு திருமேனியில் அனுமனின் ஐந்து முகங்கள் பொருத்தப்பட்டுள்ளது. சுயம்பு அனுமன் சன்னதியை தவிர கணபதி தியான ஆஞ்சநேயர் சீதா லட்சுமணன் உடன் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சுவாமி நாராயணன் இவர்களுக்கும் சன்னதிகள் உள்ளன.

ஸ்ரீ பஞ்சமுகி ஹனுமான் மந்திர்.
மோடி தம்பாடி. கிராமம்.
வாப்பி தாலுகா.
வல்சாட் மாவட்டம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

Thursday 28 April 2022

சித்தன் அருள் - 1124 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


​கருடன் சிறிது யோசித்து விட்டு, மணிவண்ணப் பெருமானைத் தொழுது "சர்வ வியாபியே!  யமபுரி என்பது எங்குள்ளது?  அந்த எமலோகத்துக்குச் செல்லும் மார்க்கம் எப்படிப்பட்டது என்பதை மீண்டும் எனக்கு விளக்கமாகக் கூற வேண்டும்" என்று பிரார்த்தித்தான்.

திருமால், கருடனை நோக்கிக் கூறலானார்:

"வைனதேயா! யமபுரி மார்கத்தைப் பற்றி முன்னமே நான் கூறியிருக்கிறேன்.  மீண்டும் அதைப் பற்றிக் கேட்டதால் எஞ்சியவற்றை இப்போது சொல்லுகிறேன்.  கேட்பாயாக.  யமபுரிக்குச்.செல்லும் வழியில் சிறிது தூரம்வரை செம்பை உருக்கி வார்த்ததுபோல கனல் காந்திக் கொண்டிருக்கும்.  அதற்கப்பால் சிறிது தூரம் இண்டை முட்களாலும் தீக் கொள்ளிகளாலும் நிறைந்திருக்கும். சிறிது தூரம் பொறுக்க  முடியாத குளிர்ப் பிரதேசம் அமைந்திருக்கும்.  பூலோகத்திற்கும் எமலோகத்திற்கும் இடையே எண்பத்தாறாயிரம் காத வழி உள்ளது என்று முன்னமே உனக்குச் சொல்லியிருக்கிறேன்.  அத்தனைக் காத வழியிலும் பாபஞ் செய்த ஜீவனுக்கு அந்த வழி நெடுகிலும் மரத்தினிழலும்  பருகுவதற்குத் தண்ணீரும் சிறிதளவு கூடக் கிடைக்காது. பாபிகளுக்கு யமலோகமும் அதற்குச் செல்லும் மார்க்கமும் மிகவும் கொடுமையாகவே இருக்கும்.

"கருடா! இனி யமலோகத்தின் தன்மையைச் சொல்லுகிறேன். கேட்பாயாக. தென்திசைக்கும் நிருதியின் திசைக்கும் நடுமய்யத்தில் யமபுரியானது வஜ்ஜிரமயமாயும், தேவர்கள் அசுரர்கள் ஆகிய இரு தரத்தாராலும் சிதைக்கத் தகாததாயும் அமைந்திருக்கும்.  அந்தப் பட்டினத்திற்கு நடுவில் சச்சதுரமாய் நூறு யோசனை விஸ்திரமுள்ளதாயும் இருபத்தைந்து யோசனை உயரமுள்ளதாயும் அநேகஞ் சாளரங்களைக் கொண்டதாயும், துகிற்கொடிகள், முத்துக்கோவைகள், தோரணங்கள் இவற்றால் அலங்கரிக்கப் பெற்றதாயும் சுவர்ணமயமாகவும் எமதர்மராஜனின் அரண்மனை அமைந்திருக்கும்.  அந்த அரண்மனையின் உள்ளே பத்து யோசனை அகல நீளமுள்ள அநேகமாயிரம் வைரத்தாலான தூண்கள் நிறுத்திய மண்டபமும் மாளிகையும் அமைந்திருக்கும்.  அங்கு சைத்திய சௌரப்பியமான மென்காற்று இயங்குவதாயும் எப்போதும் ஆடலும் பாடலும் இடைவிடாமல் நிகழும் ஒரு திவ்விய மண்டபம் இருக்கும்.  அந்த மண்டபத்தில் யமதூதர்கள் கரங்குவித்த வண்ணம் ஒருபுறம் நின்று கொண்டிருப்பார்கள்.  ரோகங்கள் எல்லாம் கோர உருவத்துடன் நின்று கொண்டிருக்கும்.  அவர்களுக்கு நடுவில் கண்டவர் அஞ்சும்படியான ரூபத்தோடு, மகிழ்ச்சியாக யம தர்மன் வீற்றிருப்பான்.  அவன் வீற்றிருக்கும் அந்த மண்டபத்திற்கு அருகில் இருபத்தைந்து யோசனை அகல நீளமுள்ளதாகவும் பத்து யோசனை உயரமுள்ளதாயும் பலவித அலங்காரங்களால் அழகு செய்யப்பட்ட சித்திர குப்தனுடைய அரண்மனை இருக்கிறது.  அந்த அரண்மனையில் ஒரு திவ்விய மண்டபத்தில் சித்ரகுப்தன் வீற்றிருப்பான்.  அவன் சகல ஜீவன்களும் செய்யும் பாப புண்ணியங்களை ஒன்று கூட விடாமல் கணக்கு எழுதிக் கொண்டிருப்பான்.  அவன் எழுதும் கணக்கில் ஒரு சிறு பிழையும் உண்டாக மாட்டாது.  அந்தச் சித்திரகுப்தனுடைய அரண்மனைக்கு கிழக்குத் திசையில் ஜுரத்துக்கும், தென் திசையில் சூலை நோயோடு  வைசூரி நோய்க்கும், மேற்குப் பக்கத்தில் காலபாசத்தோடு கூடிய அஜீர்ணத்துக்கும் அருசிக்கும் வடக்குப் பக்கத்தில் வயிற்று வலிக்கும், தென் கிழக்கில் மயக்கத்துக்கும், தென் மேற்கில் அதிசார நோய்க்கும் வடமேற்கில் ஜன்னிக்கும் தனித்தனியே கிரகங்கள் அமைக்கப் பட்டிருக்கும்.  அவ்ரோகங்கள் யாவும் யமனுடைய உத்திரவை எதிர்பார்த்துக் கொண்டே அம்மனைகளில் வசித்துக் கொண்டிருக்கும்.  

"கருடா!  யமனுடைய அரண்மனைக்குத் தென்திசையில் பாபஞ்செய்த சேதனர்களை, யமகிங்கரர்கள் பற்பலவிதமாக ஹிம்சை செய்வார்கள்.  சில ஜீவர்களை உலக்கைகளால் நையப் புடைக்கிறார்கள்.  சிலரைக் கூரிய கொடிய ஆயுதங்களால் சிதைக்கிறார்கள்.  சிலரைச் சூரிகையால் சீவுகிறார்கள்.  சிலரைச் செக்கிலிட்டு வதைக்கிறார்கள். சிலரை இரும்புச் சலாகையில் கோர்த்துப் பெருந்தணலில்  வாட்டுகிறார்கள். இன்னுஞ் சிலரை அக்கினிக் குண்டத்தில் வேக வைக்கிறார்கள்.   வைனதேயா!  அங்கு செம்பினால் செய்யப்பட்ட ஆண்பாவைகளும்  பெண்பாவைகளும் அக்கினியில் சூடேற்றப்பட்டு  தகத்தகாயமாய் தகித்துக் கொண்டிருக்குக்கின்றன.  பரஸ்திரிகளைக் கூடி மகிழ்ந்த ஜீவர்களை யமதூதர்கள் பார்த்து, "பாவிகளே! தருமமும் மானமும் பாராமல் பிறன் மனைவியரைப் புணர்ந்த இன்பம் பூவுலகத்தில் இவ்வுலகத்தில் மாற்றான் பட்ட மனத்துன்பமே, இப்போது நீங்கள் அனுபவிக்க நேரிட்ட பயனாகும்.  அந்தப் பயன் இதுவேதான்!"   என்று அதட்டிச் சொல்லி, நெருப்பெனக் கொதிக்கும் பெண் பதுமையோடு, பாவிகளை ஒன்று சேர்ப்பார்கள்.  பரப்புருஷரோடு சேர்ந்த மங்கையரை, தகிக்கின்ற ஆண் பதுமையோடு அங்ஙகனமே  ஒன்று சேர்ப்பார்கள்.  வினுதையின் மைந்தனே! புருஷனானவன் தன் மனைவியைத் தவிர, பரஸ்திரீயை கூடிக் கலந்ததற்கும், ஸ்திரீயானவள் தனது கணவனையன்றிப் பரப்புருஷனைக் கூடியதற்கும், யமலோகத்தில் விதிக்கப்படும் தண்டனையைப் பார்!  இத்தகைய கொடிய தண்டனை உள்ளதாக இருந்தும் ஸ்த்ரீ புருஷர்களில் நல்லொழுக்கத்தில் நிற்பவர்களைப் பூவுலகில் காண்பதற்கே அரிதாகி வருகிறது!   யமபுரியில் சில பாவிகளைக் கரும்புகளை கரும்பாலையில் சிக்க வைத்து கசக்கி, சாறு பிழிவதைப்  போல ஆலையில் கொடுத்து வதைக்கிறார்கள்.   சிலரை நரகங்களில் தள்ளி அடியாழம் வரையிலும் அழுத்துகிறார்கள்.  கடன் வாங்கிக் கொண்டு, திருப்பிக் கொடுக்காதவர்களை, யமகிங்கரர்கள் அழைத்துச் சென்று " கடன் கொடுத்தவனுக்கு அதைத் திருப்பிக் கொடுப்பதை விட்டு அவனிடம் வன்கண்மை பேசினீர்களே!" என்று முனிந்து நையப்புடைக்கிறார்கள்.  பாவிகள் படுகின்ற துயர்களை விளக்கிச் சொல்வதால் பயன் என்ன?  இன்னவன் அறநெறியாளன்;  இன்னவன்  அதருமிஷ்டன் .  இன்னவன் சுவர்க்கம் புக வேண்டியவன்;  இன்னவன் நரகம் செல்ல வேண்டியவன் என்பதை அவரவர் ஒழுக்கத்தைக் கொண்டே உணரலாம்.  தர்மம் செய்தவனே சுவர்க்கம் புகுவான் என்பது நிச்சயம்.  ஆகையால் யாவரும் தர்மநெறியிலேயே வாழ்ந்து, தருமஞ்செய்வதே இகலோக வாழ்வுக்கும் பரலோக வாழ்வுக்கும் நல்லது!".

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

Tuesday 26 April 2022

சித்தன் அருள் - 1123 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


​கருடன் பரமபத நாதனைத் தொழுது, "சர்வலோக சரண்யரே! மனிதனின் உடலில், தோல், நரம்பு, எலும்பு, இரத்தம், மாமிசம், தலை, கைகள், கால்கள், நாக்கு, நாசி, இரகசிய உறுப்பு, நகம், ரோமம் முதலியவற்றால் அமைக்கப்பட்டு, இந்திரஜாலம் போலத் தோன்றுகிறதே!  இந்த சரீரம் எங்ஙனம் உண்டாகிறது? அதை அடியேனுக்குச் சொல்ல வேண்டும்"  என்று பிரார்த்தித்தான்.

பலவுலகங்களையும்  படைத்துக் காக்கும் பரந்தாமன் பறவைக்கரசனாகிய கருடனை நோக்கிக் கூறலானார்:

"காசிப முனிவரின் மைந்தனே! நீ கேட்ட கேள்வி, நல்லதொரு கேள்வியாகையால், அதற்குரிய பதிலைத் தெளிவாகச் சொல்லுகிறேன். கேள்....!

"மாத விலக்கான பெண்கள், நான்கு நாட்கள் வரையில் குடிமனைக்குப் புறம்பே இருக்க வேண்டும்.  முன்பு ஒரு காலத்தில், இந்திரன் தன் அரியணையில் அமர்ந்து அரம்பையர்கள் ஆடிய ஆட்டத்திலும் கந்தர்வர்கள் இசைத்த கானத்திலும் மதி மயங்கியிருந்தான். அந்தச் சமயத்தில் தேவகுருவான வியாழ பகவான் அங்கு வந்தான்.  இந்திரன் மங்கையர் மயக்கத்தில், தன் ஆசிரியன் வந்ததையும் கவனியாமல், அவருக்கு செலுத்த வேண்டிய மரியாதையையும் செலுத்தாமல், ஆடுக்கின்ற அரம்பையரின் அங்க நெளிவுகளிலும் வளவுகளிலும் ஆசை வயப்பட்டிருந்தான். ஆசிரியனுந் தன்னை, ஆயிரங் கண்ணன் வரவேற்பளித்து, கௌரவிக்காமல் இருந்ததைக் கண்டு மனம் புழுங்கி, அங்கிருந்து வெளியேறினான்.

"ஆசிரியனை மதியாததால், இந்திரனின் செல்வ வளங்கள் சிதைந்தன.  அதையறிந்த இந்திரன் வியாழனை இகழ்ந்ததால் வந்த வினையென்பதை ஆராய்ந்து உணர்ந்தான். திகைத்தான். ஆசிரியனைத் தேடிச் சென்றான்.  அவனது இருப்பிடத்திலும்  பிற இடங்களிலும் அவனைக் காண முடியாததால், குழம்பிய உள்ளத்தோடு நான்முகனிடம் சென்று நடந்தவற்றை அவனிடம் முறையிட்டான்.

நான்முகன் சிந்தித்தான். " குல குருவை இழந்ததால் தீவினை கொழுந்து விட்டு  வளர்ந்துள்ளது.  அதனை அருந்தும் செவ்வியும் கிட்டியது என்று உணர்ந்து,  அதற்கேற்ப, இந்திரனை நோக்கி, " இந்திரா! நீ செய்த  பிழை பிழையேதான். அதற்கு உன் ஆசிரியன் உனக்களித்த தண்டனையும் சரியானதுதான்.  ஆகையால் உன் ஆசான்  வருமளவும் இடைக் காலத்தில் உனக்கு ஓர் ஆசான் வேண்டுமல்லவா?  தானவனான துவஷ்டா என்று ஒருவன் இருக்கிறான். அவன் மகன் விச்சுவவுருவன் என்று ஒருவன் இருக்கிறான். அவன் முத்தலையன். சீரிய ஒழுக்கமுடையவன். அறிவிற் சிறந்தவன். அவனையே உனது குருவாகக் கொள்வாயாக!" என்று கூறினான்.

பிரமதேவன் கூறிய அறிவுரையை ஏற்ற இந்திரன் விச்சுவவுருவனைத் தன் ஆசிரியனாகக் கொண்டான். இந்திரன் வேள்வியொன்று செய்ய விரும்பினான்.  அந்த விருப்பத்தைத் தன் புதிய ஆசானிடம் புகன்றான்.  வேள்வி துவங்கியது.  வஞ்சகனான தானவன், அந்த வேள்வியில், தன் குலத்தைச் சேர்ந்த தானவர்களுக்கு ஆக்கங்  கூறி மந்திரங்களைச் சொல்லி வேள்வியைச் செய்தான்.  புதிய ஆசிரியனது வஞ்சகச் செயலை அறிந்த இந்திரன் கோபங்கொண்டு தன் குருவாகிய  விச்சுவவுருவனைத்  தன் வஜ்ராயுதத்தால் வெட்டினான். அவனது மூன்று தலைகளையும் இந்திரன் வெட்டியவுடன் அந்த வஞ்சகன் ஒழிந்தான்.  ஆனால் அவனுடைய தவவலிமையினால் சோம பானஞ்  செய்யும் அவன் தலைகளில் ஒன்று காடையாயிற்று. சுராபானஞ் செய்யும் தலை ஊர்க்குருவியாயிற்று.  அன்ன பானஞ் செய்யும் தலை,  கிச்சிலிப் பறவை ஆயிற்று.
 
விசுவவுருவன்  தனவனாயினும் அவன் குருவானபடியால், அவனைக் கொன்ற இந்திரனுக்கு பிரமஹத்தி தோஷம் பீடித்தது.   தேவர்கள் தங்கள் தலைவனைப்  பீடித்த பிரமஹத்தி தோஷத்தை நிவர்த்திப்பதற்கு ஒரு வழி செய்தார்கள். அவர்கள் பெண்களையும் மண்ணையும் தண்ணீரையும் வேண்டி, இந்திரனைப் பீடித்த தோஷத்தை பங்கிட்டுக் கொடுத்தார்கள்.  அவர்கள் தேவர்களை நோக்கி, " இதனை நாங்கள் போக்கிக் கொள்வது எப்படி?" என்று கேட்டார்கள்.

அதற்குத் தேவர்கள், "நீரிலே தோஷம் நுரையாகக் கழியும்.  மண்ணிலே உவராகக் கழியும்.  பெண்களுக்குப் பூப்பாகக் கழியும்!" என்றார்கள். அதற்கு அவர்கள் மூவரும், "பழி சுமக்கும் எங்களுக்குப் பயனேதும் உண்டா?" என்றார்கள். அதற்கு தேவர்கள்  "பெண்கள் கருவுயிர்க்கும் வரையில் கணவரை மருவிக் களிக்கலாம். மண்ணகழ்ந்த குழி தானே நிறையும்!  நீர் இறைக்க, இறைக்க சுரக்கும்!  மரம் வெட்ட வெட்டத் துளிர்க்கும்!" என்றார்கள்.

இவ்வாறு இந்திரனைப் பீடித்த பிரமஹத்தி பாவம், மங்கையர் முதலானவரிடம் போய்ச் சேர்ந்தது.  அதன்படியே ரஜஸ்வலையாகும் அப்பெண்கள் அந்தப் பாவத்தை ஏற்று கழிக்கலாயினர். ஆகையால், பயிஷ்டையான (மாதவிலக்கான) ஸ்திரீயை நான்கு நாட்கள் வரையில் பிறர் பார்க்கலாகாது.  பார்த்தால் பாவம் வந்து அடையும்.  பயிஷ்டையானவள், முதல் நாளன்று சண்டாள ஸ்திரீயைப் போலிருப்பாள். இரண்டாம் நாள் பிரமஹத்தி செய்தவளை ஒப்பாவாள். மூன்றாம் நாள் ஆடை ஒலிப்பாளைப் போலாவாள். நான்காவது நாள் புனலாடிய பிறகு, சிறிது தூய்மையடைவாள். ஐந்தாம் நாள்  குடும்பக் காரியங்களையெல்லாம் செய்வதற்கு உரியவளாகச் சுத்தியை அடைவாள். பயிஷ்டையான ஆறாவது நாள் முதல் பதினெட்டாவது நாள் வரையிலுள்ள இரட்டை நாள் எழில் இரவில் அவளோடு கூடி மகிழ்ந்தால் புருஷப் பிரஜை உண்டாகும்.  ஆகையால் ஆண்மகனைப் பெற விரும்புகிறவன் தன் மனைவியை இரட்டை நாளிலேயே சேர வேண்டும்.  நான்கு தினத்துக்குமேல் பதினெட்டு நாள் வரையில் இரவுக் காலத்தில், இரட்டை நாளில் கர்ப்பந்தரித்தால் குணவானாகவும் தனவானாகவும் தர்மிஷ்டனாகவும் ஸ்ரீவிஷ்ணு பக்தியுடையவனாகவுமுள்ள ஒரு புத்திரன் பிறப்பான். பயிஷ்டையான நான்கு தினங்களுக்கு மேல் எட்டு நாளைக்குள் பெரும்பான்மையாகக் கர்ப்பந்தரிக்கும் ரஜஸ்வாலையான  ஐந்தாம் நாள் ஸ்திரீகள் பாயசம் முதலிய மதுர பதார்த்தங்களையே அருந்த வேண்டும்.  காரமான பதார்த்தங்களை உண்ணலாகாது. ஸ்திரி புருஷர்கள் சந்தன, புஷ்ப , தாம்பூல வஸ்துக்களைத் தாரணம் செய்து கொண்டு குவிந்த மெய்யினர்களாய், சித்தத்தில் அதிக மோகமுடையவர்களைச் சேர்த்தல் வேண்டும்.  அவ்வாறு அவர்கள் இருவரும் சேர்ந்தால் சுக்கில சுரோணிதக் கலப்பால் ஸ்திரீ வயிற்றில் கருத்தரித்து, வளர்பிறைச் சந்திரனைப் போல் அந்தக் கருவானது விருத்தியாகும்.  மன்மதனும் மனமும் ஒத்த காலத்தில் இருவராலும் விடப்படும். சுக்கில சுரோணிதங்களால் ஆணின் சுக்கிலம் அதிகமானால் ஆண்பிள்ளையும் பெண்ணின் சுரோணிதம் அதிகமானால் பெண்ணும் பிறக்கும்.  சுக்கில சுரோணிதங்கள் இரண்டும் ஏற்றக் குறைவில்லாமல் சமமாயின் பிறக்கும் பிள்ளை அலியாக இருக்கும்.   கருத்தரிக்குமானால் புணர்ந்த ஐந்தாவது நாளன்று, கர்ப்பப் பையினுள்ளே ஒரு  குமிழியுண்டாகும்.  அது பதினான்கு நாள்களில் தசையால் சிறிது பெருக்கும்.   இருபதாவது நாளில் மேலும் அதற்குச் சிறிது தசையுண்டாகிறது. இருபத்தைந்தாவது நாளில் அது மேலுஞ் சிறிது புஷ்டியடைகிறது.  ஒரு மாதத்தில் அதனிடம் பஞ்சபூதத்தின் சேர்க்கையுண்டாகிறது.   இரண்டாவது மாதத்தில் தோல் உண்டாகிறது.  மூன்றாவது மாதத்தில் நரம்புகள் உண்டாகின்றன.  நான்காவது மாதத்தில் மயிரும் புரவடிவும் உண்டாகும்.  ஐந்தாவது மாதத்தில் காதுகளும் மூக்கும் மார்பும் தோன்றும்.  ஆறாவது மாதத்தில் கழுத்தும் சிரசும் பற்களும் உண்டாகும்.  ஏழாவது மாதத்தில் ஆண் மகவாயின் ஆண் இனக் குறியும் பெண் மகவாயின் பெண் இன குறியும் உண்டாகும்.  எட்டாவது மாதத்தில் எல்லா அவயவங்களும் உண்டாகி ஜீவனும் பிரவேசிக்கிறான்.  ஒன்பதாவது மாதத்தில் ஜீவன், சுழி முனை என்ற நாடியின் மூலத்திலிருந்து, பூர்வஜென்ம கர்மங்களை நினைத்து தனக்குப் புதிய பிறவி வந்ததைக் குறித்துத் துக்கித்துக் கொண்டே, பத்தாவது மாதத்தில் பிறக்கிறான்.

வைனதேயா!   பஞ்ச பூதாத்மகமாகிய தேகமானது, பஞ்ச இந்திரியங்களையடைந்து, பத்து நாடிகளால் அலங்கரிக்கப்பட்டு, பிராண, அபான, வியான, உதான , சமான , நாக, கூர்ம, கிருக , தேவதத்த .  தனஞ்சயன் என்ற தசவித வாயுக்களோடு சேர்ந்துள்ளது.  மேலும் அந்தச் சரீரம், சுக்கிலம், எலும்பு, நீர், ரோமம், இரத்தம் என்ற ஆறு கோசங்களுடனும் அமைந்துள்ளது. நரம்புகளால் கட்டப்பட்டிருக்கும் ஸ்தூல சரீரத்தில் ( பருவுடலில்)  தோலும் எலும்பும் மயிரும் மாமிசமும் நகமும் பிரித்வியின்  (மண்ணின்)   குணத்தால் உருவாகின்றன.  வாயில் உண்டாகும் உமிழ்நீராகிய  எச்சிலும், சிறுநீரும், சுக்கிலமும், ஊனீரும் , புண்ணீரும், அப்புவின் (நீரின்)  குணமாகின்றன.  பசி, தாகம், நித்திரை, சோம்பல், காந்தி முதலியவை தேயுவின்  (நெருப்பின்)  குணமாகின்றன.   இச்சை கோபம், நாணம், பயம், மோகம், இயக்கம், சுழலுதல், ஓடுதல்,  கைகால்களை மடக்கி நீட்டுதல், ஒரு வினையும் செய்யாமலேயே இருத்தல் ஆகிய அனைத்தும் வாயுவின் (காற்றின்)  குணமாகும்.  சப்தம், எண்ணம், கேள்வி, காம்பீர்யம், சத்திரம் ஆகியவை ஆகாயத்தின் குணமாகும்.  காதுகள், கண்கள், மூக்கு, நாவு, தொக்கு ஆகிய ஐந்தும்  ஞனேந்திரியங்களாகும்.   இடை, பிங்கலை, சுழிமுனை என்ற மூன்றும் முக்கியமான  பெரிய நாடிகளும் காந்தாரி, கஜசிம்மஹி, பூழை, யச்சு , அலாபு , குரு , விசாகினி  என்ற ஏழு நாடிகளும் சரீரத்தின் மிக முக்கியமான நாடிகளாகும்,  ஜீவன் உண்ணுகின்ற சாறு முதலியவற்றை மேலே  சொன்ன வாயுவே, அந்தந்த இடத்தைச் சேரும்படிச் செய்கிறது.  வயிற்றில் அக்கினிக்கு மேல் தண்ணீரும், அந்தப் புனலுக்கு மேல் அன்னமும் உள்ளன.  அந்த அக்கினியை வாயுவானது ஊதி விருத்தி செய்கிறது! சரீர முழுவதும் மூன்றரைக் கோடிக்கு மேற்பட்ட  ரோமங்களும் முப்பத்திரண்டு பற்களும், இருபது நகங்களும் இருபத்தேழு கோடி கூந்தல் மயிர்களும்  ஆயிரம் பலம் இறைச்சியும், நூறுபலம் இரத்தமும், பத்துப்பலம் மேதஸும் , பத்துபலம் தொக்கும், பன்னிரண்டு பலம் மஜ்ஜையும் மூன்று பலம் முக்கிய இரத்தமும் கபமும் மலமும் மூத்திரமும் முடிவாக அமைந்துள்ளன.  அண்டத்திலுள்ளவையெல்லாம் பிண்டத்திலுமுண்டு. பிண்டத்திலுள்ளவையெல்லாமே மனித தேகத்திலும் இருக்கின்றன.  உள்ளங்காலை அதலலோகம் என்றும், கணுக்காலை விதலம் என்றும், முழங்காலை சுதலம் என்றும், அதற்கு மேற்பட்ட பகுதி நிதலம் என்றும், ஊரு , தராதலம் என்றும், குஹ்யத்தை ரசாதலம்  என்றும், இடையைப் பாதலம் என்றும், நாபியைப் பூலோகம் என்றும், இதயத்தைச் சுவர்க்கலோகம் என்றும், தோளை மகாலோகம் என்றும், முகத்தை ஜனலோகம் என்றும், நெற்றியைத் தவலோகம் என்றும்,  சிரசைச் சத்தியலோகம் என்றும் சொல்லுகிறார்கள்.  திரிகோணத்தை மெருகிரியென்றும்  கீழ்க்கோணத்தையும் மந்தரபருவதம்  என்றும், அந்தக் கோணத்துக்கு வலதுபுறம் கைலாயம் என்றும், இடதுபுறம் ஹிமாசலம் என்றும்,  மேற்பாகம் நிக்ஷேப முகபர்வதம் என்றும், தென்பாகம் கந்தமாதன பர்வதம் என்றும், இடது உள்ளங்கையிலுள்ள ரேகை வருணபர்வதம் என்றும் வழங்கப்படும். எலும்பு நாவலந்தீவு என்றும், மேதசு, சரதகத் தீவு என்றும், தசை சூசைத்தீவு என்றும், நரம்பு கிரௌஞ்சத் தீவு என்றும், தொக்கு சான்மலித் தீவு என்றும், ரோமத்திரன் பிலட்சத் தீவு என்றும், உகிர்புஷ்காரத் தீவு என்றும் வழங்கப்படும்.  மூத்திரம், உப்புக்கடல் என்றும்,  நீர் பார்க்கடல் என்றும், கபம் சுராசிந்து என்றும், மஜ்ஜை  நெய்க்கடல் என்றும், வாய்நீர் கருப்பஞ்சாற்றுக் கடல் என்றும், இரத்தம் தயிர்க்கடல் என்றும், வாயில் உண்டாகும் இனியபுனல், சுத்தோதக சிந்து என்றும் வழங்கப்படும்.   சரீரத்தில் இரண்டு சக்கரங்கள் உள்ளன. அவற்றில் நாத சக்கரத்தில் சூரியனும் பிந்து சக்கரத்தில் சந்திரனும் நேத்திரங்களில் அங்காரகனும் இதயத்தில் புதனும் வாக்கில் தேவ குருவும், சுக்கிலத்தில் அசுர குரு, சுக்கிரனும், நாபியில் சனியும், முகத்தில் இராகுவும், காலில் கேதுவும் உள்ளனர்.  மனித உடலில் பதினான்கு உலகங்களும், சப்தகுலாசங்களும் தீவுகளும் நவக்கிரகங்களும் இருக்கும் வகையை மேலே சொன்னேன்.  ஜீவன் கர்ப்பவாசம் செய்யும்போது, தானே அந்த ஜீவனுக்கு ஆயுள் இவ்வளவுதான் என்றும் இன்ன வித்தை இவ்வளவுதான் என்றும் கோபம், யோகமும், போகமும் இவ்வளவு தான் என்றும் இன்ன சமயத்தில் இன்னவிதமாக மரணமுண்டாகத் தக்கது என்றும் பூர்வ கர்மானுசாரத்தை அனுசரித்து, பிரமன் விதித்து நிச்சயித்து விடுகிறான்.  ஆகையால் தீர்க்க ஆயுளும் உயர்ந்த வித்தையும் போகமும் யோகமும் மற்ற யாவுமே மறுஜென்மத்திலாவது ஒருங்கே அடைவதற்காகவாவது ஒரு ஜீவன் நற்கர்மங்களை செய்ய வேண்டும் என்று சாஸ்திரங்கள் அறிவித்துள்ளன.  ஜீவன் தன் பூர்வ ஜன்மத்தில் செய்த கர்மா வினைப்பயனையே மறு ஜன்மத்தில் அடைகிறான் என்பதில் ஒரு சிறு சந்தேகமும் வேண்டியதில்லை.  கருடா!  காசியபன் மைந்தனான உனக்கு இவை அனைத்தையும் உலக நன்மையைக்  கருதிக் கூறினேன்.  இனி, நீ கேட்க வேண்டியது ஏதாவது இருந்தால் அதையும் நீ கேட்கலாம் நான் அதற்கும் பதில் சொல்லுகிறேன்!"  என்று திருவாய் மலர்ந்தருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................தொடரும்!

Monday 25 April 2022

சித்தன் அருள் - 1122 - குருநாதருடன்..... ஒரு அனுபவம்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபகாலமாக, பலமுறை குருநாதரை, பாலராமபுரம் கோவிலில் சென்று தரிசிக்கிற பாக்கியம் கிடைத்தது. ஒவ்வொரு முறையும், வித்யாசமான சில நிகழ்ச்சிகளை நடத்தி, தன் எண்ணங்களை வெளிப்படுத்துவார். அம்மாவிடம் கொழுந்து வாங்கி கொடுக்கச் சொன்னதை நீங்கள் எல்லோரும் அறிவீர்கள். அது போல்......

பாலராமபுரத்தில் வசிக்கும் நண்பர்களுடன் ஒரு முறை கலந்துரையாடல், கோவிலில் வைத்து நடந்தது. அனைத்து சன்னதிகளிலும், வெளியே நின்று தரிசிக்கும் பொழுது மிகுந்த வெப்பம் சுழல்வதை உணர்ந்து, குருநாதருக்கான அபிஷேக தீர்த்தத்தில், முதல் நாளே "வெட்டிவேர்" போட்டு வைத்து அந்த நீரை அவருக்கு அபிஷேகம் செய்தால் நல்லது என்று விவாதிக்கப்பட்டது. கூடவே, செக்கில் தயாரித்த சுத்தமான நல்லெண்ணை கிடைத்தால் நல்லது. அது வெகு எளிதில் உஷ்ணத்தை குறைக்கும் என்றேன். பூஜாரியும், பிற நண்பர்களும் ஏற்றுக்கொண்டனர். உடனேயே, ஒரு நண்பரிடம், இங்கு எங்கே எண்ணெய் தயாரிக்கும் செக்கு உள்ளது என கண்டுபிடி. குருநாதருக்கு நல்லெண்ணெய் வாங்கி கொடுத்து விடுவோம் என்றேன்.

பத்துநாள் திருவிழாவிற்கு, எரித்தாவூர் முருகர் அகத்தியரை பார்க்க வருகிற வழியில், ஒரு மாரியம்மன் கோவிலில் வந்தமர்ந்து இருப்பார். அவரை அங்கு சென்று பார்க்கலாம் என்று போகும் வழியில், எதேச்சையாக எண்ணெய் விளம்பரம் கண்ணில் பட்டது. அங்கு ஒரு வயதான அம்மா செக்கில் தயாரித்த எண்ணையை வாங்கி விற்பதை அறிந்து, விவரங்கள் விசாரித்து வைத்துக் கொண்டேன். பின்னர் பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து, மறந்தும் போனேன்.

பொதுவாக வண்டியில் எங்கு சென்றாலும், மனதுள் குருநாதர் திருப்பாதத்தை தியானித்து "ஓம் அம் அகத்தீசாய நமஹ!" என தொடர்ந்து ஜெபிப்பது பழக்கம். அன்று பலராமபுரம் சென்று குருநாதரை பார்த்து ஆசிர்வாதம் பெற்று வரலாம் என்று கிளம்பினேன். மிகுந்த வெப்பத்தால், வியர்வை ஊற்றியது. அனைத்தையும் பொறுத்துக் கொண்டு ஊர் எல்லையை தாண்டும் போது,

"நல்லெண்ணெய் எங்கே?" என்று கேட்பது எதிரொலித்தது. மறந்து போன விஷயம் உடனேயே ஞாபகத்துக்கு வர, மனதுள் "குருநாத மன்னிக்கவும்! அடியேன் சற்று மறந்துவிட்டேன் என்பது உண்மை. சுத்தமான எண்ணெய் கிடைக்கும் இடம் தேடி கண்டுள்ளேன். விசாரித்துள்ளேன். பின்னர் அங்கு சென்று பார்க்கிற வாய்ப்பு வரவில்லை. கூடிய விரைவில் கொண்டு வந்து உங்கள் சன்னதியில் சேர்த்து விடுகிறேன்!" என்றேன். இது அடியேனுக்கும் குருநாதருக்கும் இடையில் மானசீகமாக நடந்த உரையாடல். யாருக்கும் தெரிய வர வாய்ப்பில்லை.

மிகுந்த வெப்பத்தால், வியர்த்து, களைத்து, பாலராமபுரம் கோவிலை அடைந்தவுடன்,

"வாங்க, ஏன் தாமதமாகிவிட்டது? இனிமேல்தான் தீபாராதனை!" என்று கூறியபடி பூசாரி வரவேற்றார்.

"காத்திருக்கிறேன்!" என்ற ஒரு வார்த்தையுடன், லோபாமுத்திரா தாய்க்கும், அகத்தியப்பெருமானுக்கும் சேர்த்து குருவந்தனம் முத்திரையை சமர்ப்பித்து, மண்டபத்துக்கு முன் போய் நின்றேன். ஒரு நிமிடத்தில் பூசாரி, தீபாராதனைக்காக சன்னதியின் கதவை சார்த்திக்கொண்டு உள்ளே சென்றார்.

காத்திருந்தேன்...........

சற்று நேரத்தில், சன்னதி கதவு திறக்கப்பட்டு, தீபாராதனை நடந்தது. எப்போதும்போல், மந்திரங்களை ஜெபித்து, தீபாராதனையை கண்டு, தீர்த்தம் தெளிக்கப்பட காத்திருந்தேன்.

வெளியே வந்த பூஜாரி, சங்கில் தீர்த்தம் கொண்டு வந்து எல்லோருக்கும் தெளித்தார். சிறிது தீர்த்தம் அடியேனுக்கு தந்த பின்,

"ஒரு உத்தரவு இருக்கு" என்றார்.

"என்ன? என்றேன்.

"அவனிடம் கேளு. எண்ணெய் எங்கே என்று? இன்று வாங்கித்தரச் சொல்" என்கிறார்.

சற்றே ஆச்சரியத்துடன், "இன்று! இப்போதா! அது எப்படி? சரி முயற்சி செய்கிறேன்! 5 நிமிடத்தில் வருகிறேன். கோவில் சன்னதியை சார்த்திவிடாதீர்கள்" என்று வெளியே வரவும், ஒரு நண்பர் வந்தார்.

விஷயத்தை கேள்விப்பட்டதும் "நாளைக்கு வாங்கி கொடுக்கலாம் அய்யா. நான் ஒரு எண்ணெய் செக்கு பார்த்து வைத்திருக்கிறேன்" என்றார்.

"நாளை என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இப்பொழுதே. வண்டிய எடுங்க போகலாம். நான் ஒரு கடை பார்த்து வைத்திருக்கிறேன். அங்கு கிடைக்கும்" என்றேன்.

மின்னல் வேகத்தில் இருவரும் அந்த கடையை அடைந்ததும், கடை பூட்டியிருந்தது. காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரைதான் திறந்திருப்பார்கள் என்று அறிந்து, "சரி! கோவிலுக்கு போகலாம், வாங்க" என்றேன்.

குருநாதர் முன் நின்று, "அய்யா! சென்றிருந்தேன். கடை மூடிவிட்டார்கள். நாளை உங்களுக்கு கிடைக்குமாறு ஏற்பாடு செய்கிறேன்! மன்னித்துக்கொள்ளுங்கள்" என்று கூறியபடி, நண்பரிடம் "நீங்க என்ன பண்ணுவீங்கன்னு தெரியாது. நாளை காலை 9 மணிக்கு அந்த கடை திறந்ததும், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் வாங்கி குருநாதர் சன்னதிமுன் வைக்க வேண்டும். அது நாளை மறுநாள் அவருக்கு காலை அபிஷேகத்துக்கு உபயோகப்பட வேண்டும்" என்றேன்.

நண்பர் ஒத்துக்கொண்டார்.

கோவில் நடை சார்த்தியதும், அந்த நண்பருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, வீட்டுக்கு கிளம்பினேன். கோவில் தெருவை கடந்து பாலராமபுரம் சந்திப்பை தொடும் முன் பயங்கர மழை பெய்தது. தார் சாலை கண்ணை விட்டு மறைந்தது. மெதுவாக வண்டியை ஒரு நிறுத்தத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு, மழை கோட் போட்டு வேகம் குறைய காத்திருந்தேன். அரை மணிநேர காத்திருப்புக்கு பின் வண்டியை மெதுவாக ஒட்டி வீட்டுக்கு கிளம்பினேன். மழை மறுபடியும் பிடித்துக்கொண்டது. மொத்தமாக நனைந்து ஊருக்குள் நுழைய அங்கு மழையே பெய்யவில்லை. வண்டியில் செல்லும் அனைவரும் "என்ன! ஏதேனும் குளத்துக்குள் இறங்கி வந்தாயா?" என்பது போல் பார்த்தனர்.

மறுநாள், சுத்தமான நல்லெண்ணை வாங்கி அவர் சன்னதி முன் வைக்கப்பட்டது. சனிக்கிழமை இருவரையும் தரிசிக்க சென்ற பொழுது, பாலராமபுரத்தில் வெப்பம் குறைந்து, எண்ணெய் தேய்த்து குளித்த ஒரு மயக்கத்தில் இருவரும் இருப்பது போன்ற உணர்வு ஏற்பட்டது.

அடியேன் குருநாதரிடம் "வர வர, சிவன்மலை முருகப்பெருமான் போல் ஆகி வருகிறீர்!" என்றேன் நகைச்சுவையாக.

சரி! அகத்தியர் அடியவர்களிடம் அடியேன் சமர்ப்பிப்பது ஒன்று தான். உங்களால் முடிந்தால், அகத்தியப் பெருமானுக்கு, அபிஷேகத்துக்கு, சுத்தமான, செக்கில் தயாரித்த "நல்லெண்ணெய்" யை வாங்கிக் கொடுங்கள். என்ன அனுபவம் தருகிறார் என்று பாருங்கள். பிளாஸ்டிக் பையில் கடையில் விற்கப்படும் பல பிரபலமான "நல்லெண்ணெய்" களும், எள்ளெண்ணை இல்லை என்கிறார் குருநாதர். கவனம் தேவை!

அகத்தியப்பெருமான் அருளி, உதவிய இரு உபாயங்களை, அவர் அனுமதியுடன் பிறகு தெரிவிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.................தொடரும்!

சித்தன் அருள் - 1121 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம், சாரொட்டி!





16/4/2022 அன்று சித்ரா பவுர்ணமி அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த ஆலய பொது வாக்கு .

வாக்குரைத்த ஸ்தலம் : ஸ்ரீ மகாலக்ஷ்மி ஆலயம், சாரொட்டி, என். எச். 8 தேசிய நெடுஞ்சாலை, தஹானு, தானே மாவட்டம், 
மகாராஷ்டிரா மாநிலம். 

ஆதி பரமனை மனதில் எண்ணி உரைக்கின்றேன் அகத்தியன்.

நலமாக !!நலமாக!! எதையன்றி கூற இவள்தன் அருள் பலமாகவே இருக்க இருக்க எதையென்று  செப்புவது!!!!

நலமாகவே கொண்டு வந்துள்ளேன் கொண்டு வந்துள்ளேன் இவற்றைப் பற்றியும் தெளிவாக தெளிவாக பல பல பல வழிகளிலும் தனத்தை ஈந்து தருபவள் இவள். அதனால் மனம் உவந்து இவளை வழிபட்டாலே போதுமானது பல வெற்றிகனிகளை குவிக்கலாம்.

அவைமட்டுமில்லாமல் செல்வங்கள் தேடிவரும் இவையன்றி கூற  ஒழுக்கத்திற்கு பின் எவையன்று மாறாக செல்கின்றார்களே. இவைதன் இங்கே அழைத்து வர அழைத்து வர மேன்மை பெருகும் என்பது உண்மை.

இவையன்றி கூற இவள்தனே மாற்றி அமைப்பாள்!! நிச்சயம் சொல்லிவிட்டேன்.

இதனையுமன்றி கூற ஓர் நாளில் இந்நாளில் (சித்ரா பவுர்ணமி) நிச்சயமாய் பின் இவற்றின் இன்றும் கூற பௌர்ணமி அன்றைய தினத்தில் இவள்தன் நிச்சயமாய் இங்கே வருவாள்... அமர்ந்து.

இவையன்றி கூற அமாவாசைத் திதிகளிலும் நிச்சயம் வருவாள் இங்கு. இவையன்றி கூற மற்றபடி இவள்தனக்கு இடம் இவ் மலை மேலே என்பேன்.

இதையன்றி கூற இந்நாளில் வரவர செல்வாக்கு பெருகும் பெருகும் அவை மட்டுமில்லாமல் இதையென்று எவை எவை என்று கூற இன்னும் மாற்றங்கள் நிச்சயமாய் சொல்லிவிட்டேன்.

எவை பின் இவள்தனை மனதார எண்ணி

 """லக்ஷ்மி பதயே நமோ நம...!!!! 

இவற்றின் முதலே இவையன்றி கூற இவைதன் உணர உணர இதைச் சொல்லிக் கொண்டாலே போதுமானது.

இவள் தன் நிச்சயமாய் மனம் இரங்குவாள்!!. 

இரங்குவாள் என்பதற்கிணங்க பல வழிகளிலும் செல்வாக்கு பெற்றவர்கள் இவளை பின் பின் தொடர்ந்து தொடர்ந்து தான் நிச்சயம் ஏற்படுத்தியுள்ளாள். இவள்தன் . அவர்களும் நல்ல விதமாகவே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே.

இதைச் சுற்றியுள்ள இன்னும் ஊர்கள் பன்மடங்கு உயர்வுகள் உண்டு மக்களுக்கு ஏனென்றால் இவள் தன் கேட்டதை கேட்டபடியே கொடுப்பவள்.

இதனால் ஆனாலும் மக்களுக்கு அறியாமலே பல திருத்தலங்கள் உள்ளது.

அதனைமன்றி கூற வந்து விட்டால் நிச்சயம் செல்வாக்கு செல்வங்கள் சேரும் என்பது மெய்!!

இவையன்றி கூற இன்னும் பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் உண்டு இதையன்றி கூற நோய்களுக்கு...

ஆனாலும் ஒன்றை சொல்கின்றேன்... வரும் ஆடி மாதத்தில் நல்முறையாக இவள்தனை வணங்கி இவள்தன் இடத்தில் சிறிதளவு வேப்பிலை வைத்து அதனை கூட பின் ஆடி மாதத்தில் முழுவதும் தன் இல்லத்தில் வைத்து விட இன்னும் சிறப்புக்கள்... தீயவை அண்டாது. இன்னும் சக்திகள் பிறக்கும்.

பின் அம்மனவள் பேரருள் கிடைக்கும்.

இன்னும் பல திருத்தலங்களை தன் மனதில் எவ்வாறு என்பதைக்கூட அவ் அம்பாளே பின் அனைத்து திருத்தலங்களுக்கும் அழைப்பாள் என்பது மெய்.

இதுமட்டுமில்லாமல் சில சில மன பேய்கள் இதையன்றி கூற... பேய் என்பது மனதே!!! 

மனக்குழப்பம் கொண்டவர்களும் இங்கே நல் விதமாக தங்கித் தங்கி வழிபட்டு வந்தாலே மன குறைகளும் நீங்கிவிடும் தெளிவு பெருகும்.

தெளிவு பெருகும் எவையன்றி கூற(மனநிலை பாதிக்கப்பட்டவர்கள். மூளை வளர்ச்சி குன்றியவர்கள்) செயலிழந்தவர்கள் நிச்சயமாய் அறிவு இயலாதவர்கள் கூட சிறிதளவு இவையன்றி கூற இவள்தனை வந்தடைந்து வந்தடைந்தது சென்றாலே போதுமானது மாற்றங்கள் நிச்சயம் உண்டு.

உண்டு என்பதற்கிணங்க இன்னும் பல வெற்றிப் படிகள் இவள்தன் கொடுப்பாள் என்பது மெய். 

இவள்தன் இடம் இங்கே மேலே உள்ள மலையே என்பேன். அவ் மலை உச்சியில்  இவள்தனும் நல் முறையாக பல ஞானியர் களும் தங்கி கொண்டே இருக்கின்றார்கள்..எவையென்று கூற. அவ் ஞானியர்கள் ஒர் நாள் வருவார்கள் அது இன்றைய தினமே!!!

இன்றைய தினமே என்று எவ்வாறு என்பதை கூட பல மக்களுக்கு தெரியப்படுத்துவாள் அவள் தன்...அவள்தன் படியே நிச்சயமாய் யான் சொல்லிய மந்திரத்தையும் நிச்சயமாய் கடைபிடித்துக் கொண்டே இருந்தால்..... 

அவள்தனே இங்கே அழைத்து விடுவாள் செல்வாக்கையும் கொடுத்து விடுவாள் ஆனாலும் அதற்கு அனுகிரகங்கள் புண்ணியங்கள் தேவை...இவை இவை என்று கூட.. 

அதனால் பல திருத்தலங்களை பற்றியும் யான் சொல்கின்றேன்... உரைத்துக் கொண்டே வருகின்றேன் மக்களே தெரிந்து கொண்டு நல் விதமாகவே திருந்திக்கொண்டு சென்றடைந்தால் உண்மை நிலை என்னவென்று தான் தன் இஷ்டப்படி நிச்சயம் நடக்கும் என்பேன் குறைகள் வராது.

அதைவிட்டுவிட்டு இவையென்று கூற இங்கே தெய்வத்தின் அருள் பரிபூரணம். தெய்வத்தின் அருள் சக்தியைவிட இங்கே வேறொன்றுமில்லை  இவையென்று கூற... இதன்படியே பின் பல திருத்தலங்களுக்கு சென்று விட்டால் மனோவசிய சக்திகள் நம் உள்ளத்தில் நுழையும் என்பேன்.

இவ்வாறு நுழைந்தால் நன்மைகள் ஏற்படும் என்பேன். கிரகங்கள் எதையென்று கூற கட்டுப்பாடுகள் வராது என்பேன்.

இவர் தான் உணர உணர அதனால் தான் பல திருத்தலங்களை பற்றிச் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

அங்கெல்லாம் சென்று கொண்டே வந்தால் நிச்சயம் மீண்டு கொள்ளலாம் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொள்ளலாம்!!! நடந்துகொள்ளலாம்!! உண்மை நிலையை அறிந்து, பின் இக்கால நிலையைப் போக்கி தன் காலத்தையும் வென்றுவிடலாம்!! இதுதான் உண்மை.
செப்பிவிட்டேன்!!!! 

இன்னும் பல சூட்சமங்கள் ஒளிந்துள்ளன... ஆனாலும் மக்களுக்கு தெரியாமலே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம் திரிந்து கொண்டு இருக்கின்றான்.

ஆனாலும் கஷ்டங்கள் எவையென்று கூற தெரியாமல் வருவதுண்டு தெரியாமல் போவதும் உண்டு ஆனாலும் எதையென்று  நிரூபிக்கும் அளவிற்கும் கூட இன்னும் கஷ்டங்கள் வரும்.

அவற்றிலிருந்தும் கூட ஆனாலும் பின் இறை பலங்களுக்குத்தான் பின் எவை என்று கூற இவ் கஷ்டங்களை நீக்கும் தகுதி உள்ளது.

ஆனாலும் அதை அறியாமல் மனித நிலை மாறி மனிதனிடத்தில் சென்று எவ்வாறு என்பதை சில காசுகள் கொடுத்து எவ்வாறு செய்யலாம்?? என்று கூட.... ஆனாலும் அது சிறிது காலத்திற்கே.... 
பின் அடித்தால் அனைத்தும் அழிந்து போகும் என்பதைக்கூட யான் முன்னே சொல்லிவிட்டேன்.

ஆனால் தெய்வ பலங்கள் அப்படி இல்லை.... சோதனைகளைத் தரும் அதையும் தாண்டினால் அனைத்தும் கொடுத்துவிடும். இயல்பில்லா வாழ்க்கையையும்  கொடுத்து விடும்...இதையென்று கூற கொடுத்து கொடுத்து நல்வழியாக்கி இறையருள் பெற்று பலமாக இப்பிறவி மோட்சமும் அடையும்.. என்பது நிச்சயமான வாக்கு அதனால் இதனை பல வழிகளிலும் யாங்கள் சித்தர்கள் பல பல வழிகளிலும் பின் திருத்தலங்களை அமைத்தோம்... அங்கெல்லாம் எப்படி சென்று வழிபட வேண்டும் என்பதைக்கூட யான் வரும் வரும் காலங்களில் அவை மட்டுமில்லாமல் இன்னும் ஏனைய சித்தர்களும் பல ரிஷிமார்களும் நிச்சயம் வாக்குகள் உரைப்பார்கள் வந்து இச்சுவடி தன்னில்.
நல் விதமாகவே.

இதனால் பயன்படுத்திக்கொண்டு அப்பனே நல்லோர்கள் எவையன்றி கூற எங்களுக்கு ஒருவர் இருந்தாலும் அவற்றின் மூலம் யாங்கள் மற்றவர்களை கூட எவை என்று கூற தூண்டித் தூண்டி மற்றவரை மற்றவரை இதனால் பல மனிதர்களை உருவாக்குவோம் இதுதான் உண்மை.

எவையன்றி கூற என் வாக்குகளை சரியாக கேட்டு நன்கறிந்தால் அப்பனே நலமாகும் பிழைத்துக் கொள்ளலாம்.

இவ்வுலகத்தில் எப்படி வாழலாம் என்பதை கூட ஏனைய சித்தர்கள் நிச்சயம் செப்பிக்கொண்டே வருவார்கள்.. தெரிவித்துவிட்டேன். """"தெளிவு குருவின் அருள்!!! தெளிவின் குரு அதனால் தான் குருவின் அருள் பரிபூரணம்.

பரிபூரணம் என்பதற்கிணங்க ""தெளிவு குருவின்....... """இதனால் குருவைப் பிடித்துவிட்டால் குருவானவர் நிச்சயம் வழிகள் காட்டுவான்.

ஆனால்  மனித வடிவில் உருவானது  குருவானவனை பிடித்தால் தரித்தரமே!! என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே இவையன்றி கூற  அவற்றின் தன் மூலமாக பின் பிடித்துக் கொண்டாலும் அவர்களுக்கும் சிறு நிம்மதி தரும் ஆனால் சில கஷ்டங்கள் வந்து அவர்கள் பிள்ளைகளை தாக்கக்கூடும் .

ஏனென்றால் மனித குருவானவன் எவையென்று கூற எவற்றை சொல்லித்தரப் போகின்றான்?? சுகங்களுக்காகவே சொல்லித்தர போகின்றான்.

அதனால் தான் சொல்லிவிட்டேன் மனித குருமார்களை யார் பிடித்துக்கொண்டார்களோ அவர்கள் வீண்!!! என்று சொல்லிவிட்டேன்.

இவையன்றி கூற நேரடியாக எவையன்றி கூற பின் எதையென்று கூற சீடன் என்பவன் குருவைத் தேடி வர கூடாது என்பேன்.

பின் எவையென்று கூற குரு தான் சீடனைத் தேடி வரவேண்டும்.

இவையென்று கூற அவற்றிற்கு  எவையென்று தகுதியானவைகள் சீடன் படைத்திருக்க வேண்டும் அதனால் சொல்கின்றேன். 

அமைதியாக தியானங்கள் செய்து நல் விதமாக நல்லெண்ணங்களை மேம்படுத்தி ஒழுக்கமாக வாழ்ந்திட்டு பின் பொறாமைப் படாமல் எதையன்றி கூற நல்தனமாக வாழ்ந்திட்டு சென்றால் யாங்கள் அவந்தனை சீடனாக ஏற்றுக்கொள்வோம். எவையன்றி கூற அவந்தனுக்கு பல வழிகள் காட்டுவோம்... மேலும் உயர்த்தி கொண்டே போவோம் .

இதுதானப்பா வாக்கு....

எவையன்றி கூற இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே.

எதை எதை என்று கூறும் அளவிற்கு கூட இன்னும் மாற்றங்கள் எதனை எதனை என்று கூறும் அளவிற்குக்கூட இவ்வுலகத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும் பின் மற்ற எதையென்றும் எவற்றினென்றும் அப்பனே நல்விதமாக இன்னும் மாற்றங்கள் இவ்வுலகத்தில் ஏறக்கூடும்....பின் சொல்கின்றேன் வாக்குகளாக... இன்னும் இன்னும் பல சித்தர்களும் வந்து செப்புவார்கள் அப்பனே கவலைகள் இல்லை.....மீண்டும் வந்து வாக்குகள் செப்புகின்றேன். 

அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்!!! 

பின் குறிப்பு :

வணக்கம் அகத்தியர் அடியவர்களே.....

குருநாதர் அகத்தியரின் ஜீவநாடி வாசிக்கும் மைந்தன் திரு ஜானகிராமன் ஐயா அவர்கள் கடந்த மாதம் சிவராத்திரி காசி பயணத்தின் போது செல்லும் வழியில் குருநாதர் அகத்தியர் செல்லும் வழியில் இருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி தாயாரின் திருக்கோயிலில் தரிசனம் செய்வித்தார்.

நல்ல முறையில் தரிசனம் செய்துவிட்டு தொடர்ந்து காசி பயணத்தை மேற்கொண்டார்.

இந்த மாதம் குருநாதர் அகத்தியப் பெருமான் உத்தரவுப்படி வட இந்திய யாத்திரையில் சித்ரா பௌர்ணமி அன்று திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் தரிசனத்தில் போது காகபுஜண்டர் வாக்குகளுக்கு பிறகு குருநாதர் அகத்தியர்.... அவ் அம்மை எதிர் பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றாள்.... இன்றைய தினம் அவளுடைய தினம்.... அதனால் அங்கு விரைந்து செல்க!!!  வாக்குகள் உரைத்தார்.. 

அதன்படியே சாரொட்டி மகாலட்சுமி ஆலயத்திற்கு வந்தடைந்தார். அன்றைய தினம் மகாலட்சுமி அம்மன் ஆலயத்தில் திருவிழா தினம்.... நல்முறையாய் தரிசனம் செய்வித்த குருநாதர் வாக்குகளையும் உரைத்தார்.

ஆலயம் பற்றிய விவரங்கள் 

தானே கோயில் கொண்ட தஹானு திருமகள்

பால்கார் மாவட்டம் தஹானு ஸ்ரீ மஹாலட்சுமி  மஹாராஷ்டிர மாநிலத் தலைநகரான மும்பையிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள பால்கார் மாவட்டம்,  தானே எனப்படும் தஹானு என்ற கிராமத்தில் மலை மீது ஒரு ஆலயமும், மலையடிவாரத்தில் ஒரு ஆலயமுமாக இரண்டு ஆலயங்களில்ஸ்ரீ மஹாலட்சுமி எழுந்தருளி அருள் பாலிக்கிறாள்.

அடிவாரத்தில் உள்ள ஆலயம் சரோட்டி நாகா என்ற இடத்திலும் இன்னொரு ஆலயம்  இங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ள மலை உச்சியிலும் உள்ளன. இந்த மலை, மஹாலட்சுமி மலை   என்றே அழைக்கப்படுகிறது. இந்த ஆலயங்களில் ஸ்ரீ மஹாலட்சுமியின் சிரசு மட்டுமே கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடற்கரை நகரமான தஹானு ஒரு காலத்தில் இங்கு வளர்க்கப்பட்ட ஏராளமான பசு மந்தைகளின் காரணமாக தேனு (பசு) கிராம் என்று அழைக்கப்பட்டு அதுவே தஹானு கவோன் என்றும், தஹானு என்றும் அழைக்கப்பட்டது. காமதேனுவின் உடலில் அனைத்து தேவர்களும் உறைவதாக ஐதீகம். அதன் வால் பகுதியில் ஸ்ரீ மஹாலட்சுமி வாசம் செய்கிறாள். இத்தலத்தில் ஏராளமான பசு மந்தைகள் இருந்ததால் பசுக்களில் வாசம் செய்யும் ஸ்ரீ மஹாலட்சுமி இத்தலத்தை தான் கோவில் கொள்ளும் தலமாகத் தேர்ந்தெடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்த சஹ்யாத்ரி மலையில் தஹானு கிராமப் பகுதியில் பக்தர்களுக்கு செல்வத்தை வாரி வழங்க எழுந்தருளி அருள்பாலிக்கும் ஸ்ரீ மஹாலட்சுமி இம்மாநிலத்தில் உள்ள மிகப் பிரபலமான கோல்ஹாப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது.

ஸ்ரீ கோல்ஹாப்பூர் மஹாலட்சுமி கோலாசுரனோடு போரிட்டு அவனை வதம் செய்த பின்னர் கோல்ஹாப்பூரில் தங்கி அருள்பாலிப்பது போன்றே, தானே மஹாலட்சுமியும் இங்கு ஒரு அசுரனோடு போர் புரிந்து, அவனை வதம் செய்த பின்னர் ஓய்வு எடுக்கும் பொருட்டு மலையின் உச்சியிலும், கீழும் இரண்டு ஆலயங்களில் கொலு வீற்றிருப்பதாக ஐதீகம். மேலும் தேவி இங்கு வந்து தங்கியதன் பின்னணியில் இன்னொரு நிகழ்வை மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

பல நுற்றாண்டுகளுக்கு முன்பாக மலையின் மீது வாழ்ந்த ஒரு ஆதிவாசி இனத்தைச் சேர்ந்த ஒரு நிறை மாத கர்ப்பிணிப்பெண் பிரசவ வலியால் அவதிப்பட்டதை பார்த்த தேவி அந்தப் பெண்ணைப் பார்த்து பவித்திரமான அந்த மலையிலிருந்து கீழே இறங்கிச் செல்லுமாறு கூறி,  தான் அவளைத் தொடர்ந்து வந்து அவளுக்கு உதவுவதாக வாக்களித்ததோடு அந்தப் பெண் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது என்றும் ஆணையிட்டாளாம். ஆனால், அந்தப் பெண் மலையடிவாரத்தில் வந்த போது திரும்பிப் பார்க்க, தொடர்ந்து வந்த தேவி மலையின் கீழேயுள்ள சரோட்டி நாக் என்ற அந்த இடத்திலேயே பிரதிஷ்டை ஆனாளாம்.

மராட்டிய மாமன்னர் சத்ரபதி சிவாஜி காலத்தில் இந்த ஆலயம் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. வட இந்திய ஆலயக் கட்டிடப் பாணியில் கருவறை மீது ஒரே கலசத்துடன் நாகரம் எனப்படும் நான்கு பட்டை விமானம் அமைந்துள்ளது. இந்த விமானத்தின் மீது வெண்மை, செந்நிறக் கொடிகள் பறந்த வண்ணம் உள்ளன.

கருவறையின் நடுநாயகமாக நான்கு தூண்களைக் கொண்ட வெள்ளி மண்டபத்தின் இரண்டு புறங்களிலும் துவாரபாலகர்கள் காட்சியளிக்க சிந்தூர வண்ணம் பூசப்பட்ட ஸ்ரீ மஹாலட்சுமியின் பெரிய முகம் மட்டும் பத்ம பீடத்தின் மீது பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பொதுவாக ஸ்ரீ ரேணுகா தேவி ஆலயங்களில் சிரசு மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும்.

ஆனால், இத்தலத்தில்ஸ்ரீ மஹாலட்சுமியின் சிரசு மட்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது. கோல்ஹாப்பூர் ஸ்ரீ மஹாலட்சுமி ஆலயம் சதிதேவியின் கண்கள் விழுந்த இடமாகக் கருதப்பட்டு சக்தி பீடமாக வணங்கப்படுவதைப் போல இங்கும் தேவியின் பெரிய நயனங்களுக்கு மகிமை உள்ளன.

மேலும், தேவியின் நீண்ட அழகிய நாசியில் அணிவிக்கப்பட்டுள்ள, மீன் உருவில் உள்ள மத்ஸ்யாபரணம் இக்கோவிலுக்கே உரிய தனிச் சிறப்பாகும். மலை உச்சியின் மீது கொலுவீற்றிருக்கும் தேவியை மூல மூர்த்தி என்று பக்தர்கள் கருதுவதாலும், மலையேறி தன்னை தரிசிக்க முடியாத பக்தர்களுக்கு தான் எளிதில் காட்சி தரவேண்டும் என்ற கருணையோடு தேவி மலையடிவாரத்திலும் குடி கொண்டிருப்பதாலும் கீழ் கோயிலில் நடைபெறும் பூஜைகள், வழிபாடுகள் அனைத்தும் மலை உச்சியிலுள்ள மூலவிக்ரகத்திற்கு நடைபெறும் பூஜைகளாகவே கருதப்படுகின்றன.

குன்றின் உச்சியில் அமைந்துள்ள மூலஸ்தான ஆலயத்திற்குச் செல்ல 900 படிக்கட்டுகள் உள்ளன. அங்கும் தேவியின் சிரசு மட்டுமே கருவறையில் பிரதிஷ்டை செய்து வழிபடப்படுகிறது.  சுமார் 1540 அடி உயர செங்குத்தான இந்த மலை உச்சியில் ஒரு சிறிய ஆலயத்தில். ஸ்ரீ மஹாலட்சுமி தேவி எழுந்தருளியிருக்கிறாள்.

அக்காலத்தில் இப்பகுதியில் அதிக அளவில் வாழ்ந்து வந்த ஆதிவாசிகள் ஸ்ரீ மஹாலட்சுமியை தங்கள் குல தேவதையாக வழிபட்டு வந்து கொண்டிருக்கின்றனர். மகாலட்சுமி தேவி இப்பகுதி மக்களால் ஆதி வாசி மாயி (ஆதிவாசிகளின் தாய்) என்றே பக்தியோடு வழிபாடு செய்து வருகின்றார்கள்.

இரண்டு ஆலயங்களிலுமே ஆதிவாசிகளும் அந்தணர்களும் இணைந்தே ஆலய வழிபாடுகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. சித்ரா பௌர்ணமி நாளன்று நள்ளிரவில் மலை உச்சி மீது ஜோஹார் ஆதிவாசி வகுப்பினைச் சேர்ந்த ஒருவர் கொடியேற்றி வைப்பது வழக்கம். 

மும்பை-அஹமதாபாத் தேசிய நெடுஞ்சாலையில் மும்பையிலிருந்து 65 கி.மீ. தொலைவில் உள்ள சஹ்யாத்ரி மலைத் தொடரில் மலைஉச்சியிலும், அடிவாரத்திலும் தேவிக்கு இரண்டு ஆலயங்கள் உள்ளன.

ஆலய முகவரி ஸ்ரீ மஹாலட்சுமி மந்திர் சரோட்டி அஞ்சல்  என்.எச்.8 தஹானு, தானே மாவட்டம் 401607. ஆலயத் தொடர்புக்கு: 092724 56489

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்...........தொடரும்!

Saturday 23 April 2022

சித்தன் அருள் - 1120 - அன்புடன் அகத்தியர் - அகத்தியர் வாக்கு - சென்னீஸ்வரர் ஆலயம்!














7/4/2022 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : அருள்மிகு ஸ்ரீ பெரியநாயகி உடனுறை ஸ்ரீ சென்னீஸ்வரர் திருக்கோயில், வாணத்திரையன் பட்டினம் கிராமம், உடையார் பாளையம், ஜெயம் கொண்டான் வட்டம், அரியலூர் மாவட்டம்.

""உலகமெல்லாம் ஆளுகின்ற ஈசா!!! போற்றி!!!! ஈசா!! போற்றி!!! உந்தனை பணிந்து வாக்குகள் செப்புகின்றேன் அகத்தியன்!!

இவையென்றும் கூறாத அளவிற்கு, அப்பனே!! இன்னும் பல முன்னேற்றங்கள் உண்டு திருத்தலங்களை யாங்கள் வடிவமைப்போம்  இனிமேலும்!!

ஏனென்றால் மக்களைப் பாதுகாக்க வேண்டும்.!!

வேண்டும்!! இதனை பல ,பல வழிகளிலும்!!!

இத்திருத்தலமும் சிறப்பு வாய்ந்தது தான்!!! வெற்றிக்கான திருத்தலம் என்பேன்!!!

எதையென்றும் பின் பின் வரும் காலங்களிலெல்லாம் இன்னும் சில திருத்தலங்கள் மறைந்து போயிற்று!!! மறைந்து போயிற்று!!!

இதன் (இவ்வாலயத்தில்) சிறப்பு என்னவென்று செப்புகிறேன்!!

இதைதன் பின் ராஜ ராஜ சோழன்...இதையன்றி ஆண்டுவந்தான் இத்தேசத்தை..... ஆண்டு வந்த பொழுது ஆனாலும் எளிய நடையில் தற்பொழுது ஓய்வு இருக்கும்  நேரமெல்லாம் ஈசன் அருளை பலமாக பெற்று  சில சுவடிகளை பின் எழுதி வைத்திருந்தான்.சில மர்மமான விஷயங்களைக்கூட....

இதையன்றி கூற கணிப்பதற்கு.. பின் தோல்வியை வெற்றியை இவையன்றி கூற சில விஷயங்கள் இவ்வுலகத்தில் அழிந்து போகும் என்று கூட இதனால் எதையென்று கூறாமலே எழுதி வைத்துவிட்டு சென்றான் சில சுவடிகளில் அழகாகவே!!!! 

இதனால் மர்மம் நிறைந்தது நிறைந்தது இன்னும் பல வழிபாட்டுத் தலங்களிலும் உண்டு. உண்டு பின் நன்கறிய இதனையும் அறிந்து அறிந்து பின் மேற்சொன்ன கடைசி காலங்களில் கூட அதை அழகாக ஓர் இதையன்றி கூற அறிவித்த நிலையில் இங்கே(இவ்வாலயத்தில்) புதைத்துவிட்டு சென்றான். இன்னும் சுவடிகள் எதையென்று கூறும் பொழுது இங்கேயே புதைக்கப்பட்டுள்ளது.!!!

இதையன்றி கூற ஆனாலும் இவற்றின் தன்மைகளை ஆனாலும் அறிந்தான் இதையன்றி  கூற ராஜேந்திரன்!! (ராஜ ராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன்) .

இதை, இதனை நலமாக!! நலமாக!! ஆனாலும் இதை தவிர தன் பரம்பரையில் இருக்கும் எதையன்றி கூற அவன் தான் இதனையும் எடுக்க(சோழ வாரிசுகள் மட்டும்) வேண்டுமென்று கூட ..

இதனையன்றி வேறு யாராவது பின் எடுத்து விட்டால் பின் நாகம் தீண்டிவிடும்..(நாகத்தால் தண்டிக்கபட வேண்டும்) என்று கூட ஈசனிடம் வரம் கேட்டு விட்டான் ராஜராஜ சோழன்.

இதையன்றி கூற அவ் நாகத்திற்கும் இன்னும் சாவு நேரம் வரவில்லை( இன்று வரை உயிருடன் சுவடிகளை பாதுகாத்து வருகின்றது). 

அழகாக இட்ட கட்டளை அதுபோல் காத்துக் கொண்டிருக்கின்றது ஆனாலும் இதை அறிந்து பின் மாய்ந்தான்.(ராஜ ராஜ சோழன்) பின் ஆனாலும் இவையன்றி கூற ராஜேந்திரனும் அழகாக பின் இறைவனிடத்திலே... தஞ்சம் புகுந்து இதையன்றி கூற.... இவ்வுலகத்தை எப்படி ஆட்சி செய்வது?? என்பதை கூட தெரியாமல் போய் விட்டது.

ஆனாலும் இதன் சூட்சமங்கள் எண்ணி, எண்ணி ,எண்ணி, எண்ணி, இதனையும் அறிந்து அறிந்து உண்மைகள் தெளிய,தெளிய !பல திருத்தலங்களுக்கு சென்றான்.

ஓர் நாள் கனவிலே பின் நன்கறிந்து ராஜராஜ சோழன் இதையன்றி கூற பின் ராஜேந்திரன் சொப்பனத்தில் வந்து இவையன்றி கூற பின் .. இச் சுவடிகள் ஓரிடத்தில் உந்தனுக்கு ஒன்றை மட்டும் வைத்திருக்கின்றேன்.

அச் சுவடியில் மாணிக்கம் காணப்படும்!! அச் சுவடியை  எடுத்துக்கொண்டால் .. அதில்!!  இவ்வுலகத்தில் எப்படி எல்லாம் ஆளலாம்? என்று கூட தெரியும்!! அதை மட்டும் எடுத்துக் கொள் என்று கூட சொப்பனத்தில் வந்து சொல்லிவிட்டான் ராஜராஜ சோழன்.

இதையன்றி கூற ஆனாலும் பின் மகிழ்ந்தான் ராஜேந்திரன். இதையன்றி கூற...

அதனால் அதை எடுப்பதற்கோ...!!??  பல வழிகளில் நாகங்கள் விடவில்லை. ஆனாலும் இதையன்றி... தயங்கினான்!!தயங்கினான்!! ராஜேந்திரன்.

இதனையன்றி பல பல சோழர்களையும் அழைத்து வந்து ஆனாலும் நாகங்கள் விடவில்லை!! அனைவரையும் கொன்று விட்டது...

நல் முறையாக இதனையுமென்று ஆராய்ந்து ஆராய்ந்து பார்த்ததில் மீண்டும் மனக் கவலை அடைந்தான் ராஜேந்திரன்.

இதையன்றி கூற அறியாத அறியாது மீண்டும் மீண்டும் ஆனாலும்  சொப்பனத்தில் வரவில்லை. வரவில்லை ராஜராஜ சோழனும்.

மீண்டும் தவங்கள் புரிந்து பல ஆலயங்களுக்குச் சென்று சென்று சென்று ஈசனை வழிபட்ட பிறகு மீண்டும் எதையன்றி கூற.. ராஜராஜசோழன் கனவில் வந்தான். 

ஆனாலும் இதற்கு பல வழிகள் உண்டு உண்டு என்பதற்கிணங்க பின்,பின் இதனையென்றும்... அதற்குள்ளேயே பல விஷயங்கள் நடந்து விட்டது.

ஆனாலும் மேற்கொண்டான்!! மேற்கொண்டான் !! இதையன்றி கூறும் பொழுதும் கூட....

கடைசியில் என்னிடத்திலே (அகத்தியரிடம்) வந்தான்.

இதையென்று அறியாமல், அறியாமல், இவையன்றி கூற அவந்தனுக்கும் யாங்கள் வழிகள் காண்பித்தோம்.

காண்பித்தோம்!! இப்படி செய்தாலே ...நன்று!!! என்று!!! 

இதையன்றி கூற ஆனாலும் வந்தான் சொப்பனத்தில் ராஜராஜ சோழன். இதையன்றி அறிந்து பின் நீயே!!!  இங்கு சில நாட்களும் தவம் செய்தால்.. உன் நிலைமைகள் அவ் சர்ப்பங்களுக்கு(நாகம்) தெரிந்துவிடும்.

தானாகவே அதை(சுவடியை) எதையன்றி கூற நீ!!! எடுக்காமலே.. அவ் சர்ப்பம் உந்தனுக்கு என்ன வந்து சொப்பனத்தில் உரைத்தானோ!!! அச்சுவடி உந்தனுக்கு கிடைக்குமென்று சொல்லிவிட்டேன் யானே!!! 

அதனால் இவையன்றி கூற இங்கே தவம் செய்தான் ராஜேந்திரன். இதையன்றி கூற பல ஆண்டுகளுக்கு!!!

பல ஆண்டுகளுக்கு அதனால் மிகுந்த செல்வாக்குடைய ஒரு இதையன்றி கூற சர்ப்பமே!!... அவ் மாணிக்கத்துடன் நல் விதமாகவே பின் எடுத்து வந்து கொடுத்துவிட்டது ராஜேந்திரனிடம். 

அதில் அச்சுவடியில் பல வெற்றி ரகசியங்கள் வெற்றி ரகசியங்கள் எழுதப்பட்டிருந்தன. இதனை இதனை சரியாக கவனித்துக் கொண்டு பல வழிகளிலும், பலவழியிலும் வென்றான் ராஜேந்திரன்..இதையன்றிகூற.... 

அதனால் இதிலும்கூட ராஜராஜ சோழன் இவையன்றி கூட இப்படி செய்தால்!! இப்படி திருத்தலங்களை பின் கட்டினால் இவையன்றி கூற பின் சிறப்பாக வாழலாம் என்று கூட ஆனாலும் அதற்கு கூட பன்மடங்கு பல வழிகளிலும் திருத்தலத்தில் பல பல விஷயங்களை இட வேண்டும் என்பதெல்லாம் அச் சுவடியில் நிலைத்துவிட்டது... இப்பொழுதுகூட ...

அத் திருத்தலம் கங்கை கொண்ட சோழபுரம்!!!! என்றே... 

இவையன்றி கூற அங்கேயே வைத்து விட்டான் பின் ராஜேந்திரன்.

இதனையென்று கூற.. அங்கும் அத்தலம் சிறப்பு வாய்ந்தது என்பேன். 

அச் சுவடியும் இப்பொழுதும் கூட ஒளிவட்டமாகவே மாணிக்கம் போல் காட்சியளிக்கும் என்பேன்.

அறிவதற்குள் இதனை பயன்படுத்தி ஆனாலும் கட்டடங்கள் கட்டினான் அதி விரைவிலே!!!

பல திருத்தலங்களும் எதற்காக ?எவையென்று கூற !!!ஆனாலும் அதில் "ஒன்று" உங்களுக்கு குறிப்பிடப் போகிறேன்.

இதையன்றி பின் பல கஷ்டங்கள் அவமானங்கள் பட்டு பட்டு இங்கு வந்தவனுக்கு இங்கே வந்தால் சனீஸ்வரன் விலக்கம்( சனி விலகல்) அளித்து விடுவான். இதுதான் இத் தன்மையின்(ஸ்தல மகிமை) சிறப்பு!!!. ஆனாலும் யாரும் அறிந்திருக்கவில்லை என்பதுதான் கருத்து..

இவையன்றி கூற இப்படித்தான் முதலில் எழுதப்பட்டது இப்படித்தான் முதலில் எழுதப்பட்டு இருந்தது ..

இவை ஆனாலும் சனீஸ்வரன் பின் இதையன்றி  கூற பிடித்துக்கொண்டால் இதனைமென்றறிவதற்கு ஆனாலும் சில கஷ்டங்கள் தோன்றித் தோன்றி வெற்றிநடை போடுவதில்லை இதனால் இவையன்றி கூற....

இதனையும் ஓர் மண்டலம் இவந்தனுக்கே பின் எவையென்று கூற சனியவனே பின் பின் வந்து பின் அழகாகவே இவந்தனை தரிசித்து பார்த்தாலே( 48 நாட்கள் ஒரு மண்டலம் சென்னீஸ்வரர் தரிசனம்)  பின் சனியவன் போய்விடுவான். கஷ்டங்கள் சடுதியாக(விரைவாக) நீங்கிவிடும். என்பதே முதல் கருத்து.

இதை அப்படியே செய்தான் பின் ராஜேந்திரன்!! (சுவடியில் முதலில் எழுதப்பட்டு இருந்த விஷயம்).... இவையன்றி கூற கஷ்டங்களும் கலைந்துவிட்டது அனைத்தும் ஏற்பாடு செய்தான் .உடனே...

இதையன்றி கூற ஆனாலும் இவைதன் உணர்வதற்கு இத் தலத்தில் ராகுவும் கேதுவும் சிறப்பான இடத்தை பிடித்துள்ளனர்.

இதனால் இங்கு எதையன்றி கூற வணங்கி கொண்டே வருபவர்களுக்கு கூட திடீரென்று மாற்றம் நிச்சயம் ஏற்படும் என்பேன் .

சர்ப்பமும்( ராகு கேது தோஷம்) பின் எதையன்றி கூற... அடியோடு அழிந்து விடும் இது உண்மை.

இவையன்றி கூற இங்கே இதையன்றி பின் நன்றாகவே இதைப் பயன்படுத்தி பின் கங்கை கொண்ட சோழபுரம் நல்விதமாகவே அங்கே சென்றால் அங்கேயும் தீர்க்கம்!!!! (முதலில் சென்னீஸ்வரர் வழிபட்டு பின் கங்கை கொண்ட சோழபுரம் தரிசனம்) தீர்க்கம் என்பேன். நிச்சயம் வெற்றிகள் பிடித்துக்கொள்ளும் இதுதான் உண்மை.

ஆனாலும் பல மனிதர்களுக்கு இதுவும் தெரியும் என்பேன் ஆனாலும் சொல்வதில்லை!!!!

இதையன்றி கூறிய அளவிற்கு மேலாகவே புண்ணியங்கள் அதனால் புண்ணியங்கள் சேரவில்லை என்றால் இன்னொரு விஷயத்தையும் சுவடியில் எழுதி வைத்திருந்தான் ராஜராஜசோழன் இதையன்றி கூற....

புண்ணியங்கள் பின் சேர்த்துக் கொண்டே இருந்தாலே... இவ்வாலயம் தானாகவே!! அழைத்துக் கொள்ளும். அழைத்துக் கொண்டு வந்துவிடும்.

இதனால் இவையென்றும் அதில் அச்சுவடியில் எழுதப்பட்டிருந்தது.

இதையன்றி அறிவதற்குள் அதனால் சில சில எவை என்று கூட புண்ணியங்கள் ஆனாலும் செய்ய முடியவில்லையே!!! இறைவா !!!என்று தேடி வந்து விட்டாலும் அவந்தனை புண்ணியப் பாதையில் அழைத்துச் செல்வான் இவ் இறைவன்!!(சென்னீஸ்வரர்). இவ் இறைவன்!!! சொல்லி விட்டேன் யான்.!! 

இதன்போலே!! புண்ணியங்கள் செய்து செய்து பல வெற்றிகளை குவித்து விடலாம் என்பேன்.

ஆனாலும் அனைத்து ரகசியங்களும் அதிலே!! அடங்கியுள்ளது!!!

அதனையும் யான் செப்பிவிட்டால்?!! மனிதர்கள் தவறான நோக்கத்தையே!!! பயன்படுத்துவார்கள்.

சில, சில வினைகளை அறுப்பதற்கு பின் சொல்லிவிட்டேன்.!!

ஆனாலும் இவையென்று கூட... (கோயில்) அடியில் கூட.... பல சர்ப்பங்கள்!!!! இவையன்றி கூற காத்தும் நிற்கின்றது...

அச் சுவடிகள்!!! யாரும் அண்டவும் விடவும் முடியாது சொல்லிவிட்டேன்!!!

பல ரகசியங்கள்!!! அவ் ரகசியங்களை தெரிந்து கொண்டால் ஆனாலும் இவைதன் உணர, உணர, இனிமேலும் எதையன்றி கூற கூற ஆனாலும் திருத்தலங்களை அடிமட்டம் ஆக்குவார்கள் மனிதர்கள்.

ஏனென்றால் இவையன்றி கூற..ஓர் மனிதனுக்கே!!(மனிதர்களுக்கு மட்டும்) இவ் விஷயங்கள் ரகசியங்கள் தெரியும்.

ஏனென்றால் எதையன்றி கூற அவ் ஆலயத்திற்கு கீழே!!! பல ரகசியங்கள் பல சுவடிகள் ஒவ்வொரு இடத்திலும் ஒளிந்து விட்டது.

இதனை எப்படி!?? எடுத்து வந்து விட்டு வந்து விட்டாலே கைக்கு வந்து விட்டாலே அவன் செல்வாக்கு உடையவன்.. இவ்வுலகத்தை ஆளலாம் நிச்சயம்.

ஆனாலும் யாங்கள்(சித்தர்கள்) தடுப்போம் யாங்கள் நிச்சயமாய் மனிதர்களுக்கு இவை கொண்டு செல்ல விடமாட்டோம்.

பல திருத்தலங்களும் இது போலவே மாறி மாறி மாறி மாறி அமைந்துள்ளது.

இதனால் எதையன்றி கூற எவையன்றி இன்னும் இன்னுமின்னும் காணக்கிடைக்காத பொக்கிஷங்களும் இதனருகே இங்கிருந்து ஒரு வட்டத்திற்குள்ளவே!!! பின் இவையன்றி கூற இருநூறு!! (அடி வட்டத்திற்குள்) பின் இதையன்றி கூற அமைந்துள்ளது.

அதனை நிச்சயம் எங்கள் அருள் இல்லாமல் எடுக்க முடியாது!!!

ஆனாலும் தற்போது நிலைமைகள் தானாகவே மனிதர்கள் எழுதிக் கொண்டிருக்கின்றார்கள் பொய்யாகவே(போலியான ஓலைச்சுவடிகள்) இதுதான் பலிப்பதில்லை வாக்குகள் சொல்லிவிட்டேன்.

நலமாக புண்ணியங்கள்!!!

இதையன்றி கூற இதனால் ஒன்றை சொல்கின்றேன்.

""ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் எல்லாம் புண்ணியம் செய்தவர்களே வரமுடியும் என்பேன்.

இதையன்றி கூற அவன் சரித்திரத்தையும் இன்னும் இன்னும் ஆண்டுகள் சொல்லச் சொல்ல......தீராது

ஆனாலும் ராஜேந்திரன் ஒரு தவறு செய்து விட்டான் இதையன்றி கூற ...அச் சுவடியை பணத்திற்காக கொடுத்துவிட்டான். இதனால் அவந்தன் பரம்பரையையும் பின் அழிந்துவிட்டது அடியோடு!!!.......


ஆனாலும் இதையன்றி கூற ஆனாலும் உண்டு!! உண்டு!! ஆனாலும் அதையும் கூட பின் அவந்தனும் பின் பெற்றுச் சென்றானே... சில ரகசியங்கள் தெரிந்து கொண்ட பிறகும் ஆனாலும் அவனும் மாய்ந்து விட்டான் .

பின் சர்ப்பம் அழகாக அச்சுவடி அங்கே(கங்கை கொண்ட சோழபுரத்தில்) கொண்டு திரும்பவும் சேர்த்துவிட்டது.

இதையன்றி கூற அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்!! ஓவ்வொரு இதையன்றி கூற இங்கும்  ஆளும் திறன் பெற்றவர்கள் எதையென்று கூற அறியாமலே ஒவ்வொரு லிங்க வடிவமான ஈசனின் இடத்தில் அடியில் சுவடிகள் கிடந்துள்ளது. அதன்படியே தான் நடந்து கொண்டிருக்கின்றது அதற்கு ஒளி வடிவம் உண்டு என்பதற்கிணங்க ஈசனே!!! இதையன்றி கூற..

ஆனாலும் உண்டு!! உண்டு!! இன்னும் பன்மடங்கு வெற்றிகள்!!!. இத் திருத்தலத்தை வந்து நாடினால் அப்பனே....

ஏனென்றால் அப்பனே தர்மம் மறைந்துவிட்டது ஏனென்றால் அநியாயம்!! அக்கிரமங்கள்!!! மிகுந்து விட்டது. இதையன்றி கூற அதனால் கலியுகத்தில் அப்பனே சில திருத்தலங்களை நாடினாலே போதுமானது!!

""வெற்றிகள் குவியும்!!!!

ஆனாலும் அவ் வெற்றியை சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால்தான் நலமாகும் என்று விதி இருந்தால் மட்டுமே இத்திருத்தலத்திற்கும் வரமுடியும் என்று சொல்லிவிட்டேன்.

ஆனாலும் இதையன்றி கூற வந்து வணங்கி விட்டால் பணம் ,,பணம்,, என்று மாயையை நோக்கி கொண்டிருக்கிறார்களே!! அவர்களுக்கு நிச்சயம் குவியும்!!! என்று சொல்லிவிட்டேன்.

ஆனாலும் அதைதன்(பணத்தை) நல்நோக்கத்திற்காகவே பயன்படுத்த வேண்டும்.

பின் ராஜேந்திரன் செய்தானே !!!அவை போன்று செய்துவிட்டால்!!! இன்னும் பேராசை கொண்டு பின் அவந்தனும் அடியோடு கூட அழிந்து விடுவான் சொல்லிவிட்டேன்.

ஆனாலும் நிச்சயமாய் வெற்றிகள் உண்டு!!!

நல் விதமாகவே புண்ணியம் செய்தவர்க்கே உண்டு திறமைகள் என்பேன்.

ஏனென்றால் ஒன்றை மட்டும் சொல்கிறேன்!!!

ராஜராஜ சோழன் அமைத்த திருத்தலங்கள் பல உள்ளது.

ஆனாலும் அவற்றையெல்லாம் ஈசனிடம் (வரமாக) கேட்டுக்கொண்டான்.

யார் ??யார்?? எவையென்று கூற புண்ணியம் செய்தவர்களே!!!
நான்!! எதையென்று உருவாக்கிய தலத்திற்கு வரவேண்டும்!! அவர்கள் வெற்றி நடை போட வேண்டும்!!

இதையன்றி கூற இன்னும் பல ஆலயங்கள் எவ்வாறு என்று சீரமைக்க வேண்டும் யான் சென்று விட்டாலும் இன்னும் எதையன்றி கூற என்னுடைய திருத்தலங்களை நல் விதமாகவே நீதி!! நேர்மையுடன்!!! செய்ய வேண்டும் என்று கூட ஈசனிடமே  எதையென்று கூற சத்தியத்தை வாங்கிக் கொண்டான்.

அதனாலே ஈசனும் கொடுத்துவிட்டான்.

அதனால் இன்னும் பல திருத்தலங்கள் பின் வடியமைக்கவே  முடியவில்லை என்பேன். 

இதனால் நன்மைகள்!! வெற்றிகள்!! நிச்சயம் உண்டு!!.... இவையன்றி கூற...

இத் திருத்தலமே ""பணம்"" திருத்தலம் என்பதுதான் யான்  சொல்லிவிட்டேன். கலியுகத்தில்.

இவையன்றி கூற அப்பனே இன்னும் பன்மடங்கு எதை எதை என்று கூற இன்னும் உள்ள திருத்தலங்கள் பற்றியும் சொல்கின்றேன் விவரமாகவே!!!

இவையன்றி கூற இன்னும் திருத்தலம் இதனையும் சரிசெய்ய வருவான் என்பேன். எவை!! எவை!! என்று கூற....

நல் விதமாகவே ஆக்குவார்கள் இதையன்றி கூற இன்னும் பல விஷயங்கள் அடங்கியுள்ளது..

சொல்லிவிட்டேன் நல்படியாக இதனால் தான் இதிலும் சூட்சுமங்கள் அடங்கியுள்ளது அதனுள்ளே நன்றாகவே அனைத்தும் ஏற்பாடு செய்வேன். யானும் இங்கு( ஆலயத்திற்கு) வந்துவிட்டேன். கவலைகள் இல்லை

வரும் வைகாசி திங்களிலும் விரிவாக விவரிக்கின்றேன்!!
அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள்

ஸ்ரீ  பெரியநாயகி உடனுறை சென்னீஸ்வரர் ஆலயம். வாணதிரையன்பட்டணம் கிராமம் உடையார்பாளையம் வட்டம் ,ஜெயம் கொண்டான். 
அரியலூர் மாவட்டம் .

ஆலயம் இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ளது. கோவில் புனரமைக்கும் பணி தொடங்க உள்ளது.

ஆலயம் தொடர்பாக விபரங்களை அறிய அணுக வேண்டிய எண். 

திருமதி :ஆனந்தி 8056116062

ஸ்ரீ சென்னீஸ்வரர் பக்தர்கள் அறக்கட்டளை
Contact no:8524844709 வாணதிரையன்பட்டணம்
அறக்கட்டளையின் பதிவு எண் - 6/2019
Acc.Name – SRI CHENNESWARAR PAKTHARGAL TRUST
Bank Name - State Bank of India.
Acc.No – 38992242280.
IFSC – SBIN0000998.
Branch – Jayankondacholapuram.
Branch Code – 998.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

Friday 22 April 2022

சித்தன் அருள் - 1119 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


ஜகத்காரணரான ஸ்ரீமந் நாராயணர், கருடனை நோக்கி "வைனதேயா! என்னை ஆராதித்து எனது புண்ணிய க்ஷேத்திரங்களில் தான தர்மஞ் செய்பவன் புண்ணியங்களை அதிகமாக அடைவான்.  மாய்ந்து போன ஜீவனைக் குறித்து பூமி தானஞ் செய்தால் பூமியானது எத்தனை அடிகள் ஆழமாக இருக்கிறதோ, அத்தனையாண்டுகள் அந்த ஜீவன் சுவர்க்கலோகத்தில் வாசிப்பான்.  மாரடிதானம் செய்தால் குதிரை மீதேறி நல்லுலகு சேர்வான் என்பது மட்டுமல்ல, அவன் செல்லும் மார்க்கத்தில் முள் முதலியவற்றால் துன்பம் ஏதும் அடையாமல் செல்வான்.  குடை தானம் செய்தால், நிழலுள்ள பாதை வழியாக யமபுரம் செல்வான்.  மழை வந்தாலும் அதனால் இன்னலுறான்.   தீபதானம் செய்தால் இருள் வழியில் பிரகாசத்தோடு செல்வான்.  ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மூன்று மாதங்களிலாவது, சதுர்த்தசியிலாவது, பௌர்ணமியிலாவது ஒருவன் இறந்த தினத்திலாவது தீபதானம் செய்வது சிறப்பாகும்.   ஒருவன் இறந்த நாள் முதல் ஓராண்டு காலம் வரையிலும் தினந்தோறும் தீபதானம் செய்தால் மாண்டவன் மேடுபள்ளம் இல்லாத நல்லதொரு வழியாக யமபுரியைச் சார்ந்து, அவனது குலத்தைச் சேர்ந்தவர்கள் அந்த யமபுரியில் இருந்தால் அவர்களையும் நல்லுலகம் சேர்த்து தானும் நற்கதியை அடைவான்.  தீபதானத்திற்குள்ள மதிப்பு சிறிதல்ல.  பிரமாலயத்திலும், தேவாலயத்திலும்  வடக்கு முகமாகவாவது கிழக்கு முகமாகவாவது தீபம் வைக்கவேண்டும்.  தீபத்தானம் செய்பவன் தனக்கு எதிர்முகமாக தீபத்தை சுடர்விட்டெரியச் செய்து கொடுக்க வேண்டும்.  

மனிதனாக பிறந்தவன், என்றாவது ஒருநாள் இறந்தே தீர வேண்டும் என்பதை உணர்ந்தவன் மேலே சொன்ன தானங்களைத்  தனக்குத் தானே செய்து கொள்ள வேண்டும்.  ஆசனப் பலகையையும் செப்புத் தாலியையும் சுயம்பாகப் பொருளையும் தானஞ் செய்தவன், மரித்த பிறகு ஆகாய மார்க்கமாகவே இனிதாகச் செல்வான்.  அரிசியும்,எள்ளும், பதிமூன்று கடகமும், மோதிரமும்,  குடையும், விசிறியும், பாதரக்ஷயையும் அவசியமாகத் தானஞ் செய்ய வேண்டும்.  யானை, குதிரை இவற்றைத் தானஞ் செய்தால்  விசேஷமான புண்ணியம் உண்டாகும்.  எருமைக் கிடாவைத் தானஞ் செய்யும் போது அதனுடன்  ஏராளமான பொருள்களையும் தானஞ் செய்வது மிகவும் சிறப்பாகும்.  வெற்றிலை, பாக்கு, புஷ்பம் ஆகியவற்றைத் தானஞ் செய்தால் யமதூதர்கள் மகிழ்ச்சியடைந்து ஜீவனை வருத்தச் செய்ய மாட்டார்கள்.  ஆடைகளைத் தானஞ் செய்தால்,  கார்மேகம் போன்று கருத்த மேனியும், பிறைபோன்ற கடைவாய்ப் பற்களும் செம்பட்டை ரோமமும் அச்சந்தரும் பயங்கர உருவமும் கொண்டு யமதூதர்கள் ஜீவனின் முன்பு நல்ல உருவத்துடன் தோன்றுவார்கள்" என்றருளிச் செய்தார்.

கருடன் அவரை நோக்கி, " ஸ்ரீஹரியே! அடியார்க்கெளிய ஆபத்பாந்தவரே! மனிதனின் சரீரத்திலிருந்து உயிரானது எப்படி நீங்குகிறது?  இதை திருவாய் மலர்ந்தருள வேண்டும்!"  என்று கேட்க சர்வாந்தர்யாமியான பகவான் கூறலானார்:

"கருடா! உயிரானது மனிதனது சரீரத்தைவிட்டு விலகும்போது கண் வழியாகவோ, நாசி வழியாகவோ, ரோமாக் கால்கள் (துவாரம்)  வழியாகவோ, நீங்கிவிடும்.  ஞானிகளுக்குக்  கபாலம் விரிந்து  நீங்கும் .  பாபிகளுக்கு அபான மார்க்கமாக உயிர் நீங்கும்.  உயிர் நீங்கியதும் மனித உடல் கட்டையைப் போலக் கிடைக்கும்.  பிறகு அந்த உயிரற்ற உடல், மரக்கட்டையைப் போன்ற அந்த உடல் பஞ்சபூதாத்மகம் ஆகலாம்.  உடல் கூறுகள் பஞ்சபூதத்தால் உருவானவை.  ஆகையால் பிரித்வி மண்ணிலும், அப்பு - புனலிலும், தேயு  - அக்கினியிலும், வாயு  - காற்றிலும், ஆகாயம் - ஆகாயத்திலும் லயமாகிவிடும். காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியமாகிய ஆறும், கர்மேந்திரியம் ஐந்தும், ஞானேந்திரியம் ஐந்தும் மனித சரீரத்தில் திருடர்கள் போலப் பதுங்கி ஒளிந்து ஒன்றோடொன்று உறைந்து இருப்பன.  உயிரானது நீங்கும்போது அவையனைத்தும் மனத்தோடு ஒன்றாகும்.  சேதனனானவன் தனது கர்மத்தாலேயே மறுபிறவியை அடைகிறான்.  பழைய வீட்டில் வசிப்பவன் பொருள்  சம்பாதித்து நல்லதொரு புதிய வீடு கட்டிக் கொண்டு அதில் குடியேறுவதைப் போலவே, புண்ணியஞ் செய்த ஜீவன், தன் வாழ்நாள் முடிந்த பிறகு இந்திரியங்கள் ஐந்தும் அமைந்த ஒரு திவ்விய தேகத்தில் அவன் குடியேறுவான்.  மால மூத்திரங்களும், பயன் தராத கற்பனைகளும், ஊணும், ஊனும் நரம்பும் எலும்பும் மெய்யோடு நசிக்கப்பட்டோ எரிக்கப்பட்டோ  நாசமடைந்து விடுவதே மனித உடலாகும்!  ஓ, கருடா! மனிதன் மரிக்கும் விதம் இதுவேயாகும்.  இனி, மனிதன் இறந்த பிறகு, மீண்டும் பிறக்கும் விதத்தையும் சொல்கிறேன், கேட்பாயாக!

"பல நரம்புகளோடு தூணைப் போல் ஒரு பெரிய நரம்பைக் கொண்டதும் இந்திரியங்கள் பொருந்தியதும் காமக் குரோத  லோப மோக மதமாற்சரியமாகிய உட்பகைகளுடன் கூடியதும், காம, குரோத, இச்சை துவேஷங்களால் வியாபிக்கப் பெற்றதும் மாயையோடு கூடியதுமான  தேகம், எல்லாப் பிராணிகளுக்கும் உறுதியாய் உளதாகும்.  சமஸ்தலோகங்களுக்கும் உரிய சமஸ்த தேவர்களும் தேகத்திலேயே இருக்கிறார்கள்!" என்று கூறியருளினார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

Thursday 21 April 2022

சித்தன் அருள் - 1118 - கருட பகவானுக்கு நாராயணர் உரைத்த உண்மைகள்!


​​கருடன், திருமாலைப் பணிந்து, " சர்வேசா! தங்கள் இதுவரை கூறிய விஷயங்களை மிகவும் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள்.  இது போதாது.  கருமங்களைச் செய்யும்போது கருமஞ் செய்ய வேண்டிய ஸ்தலத்தைக் கோமயத்தால் ஏன் மெழுக வேண்டும்?  பிதுரர்களுக்குரிய கர்மங்களைச் செய்யும் போது மட்டும் எள்ளையும் தர்ப்பைப் புற்களையும் உபயோகிப்பானேன்? கட்டிலில் படுத்துறங்கியபடியே இறந்தவனும் உப்பரிகையில் மாய்ந்தவனும் நற்கதியை அடையமாட்டான் என்று தேவரீர் முன்பு ஒரு சமயம் கூறியிருக்கிறீர்கள்.   அப்படியானால் இறக்கும் நிலையை அடைந்தவன் எந்த இடத்தில எப்படி இறத்தல் வேண்டும்?  தானங்களையெல்லாம் எப்படிச் செய்தல் வேண்டும்?  அவ்வாறு செய்யப்படும் தானங்களுக்கு   ஏற்படும் பயன்கள் யாது?  இவற்றையெல்லாம் அடியேனுக்குத் தெளிவாகவும் விளக்கமாகவும் கூறியருள வேண்டும்!" என்று பிரார்த்தித்தான்.

கருடாழ்வான், அவ்வாறு வேண்டியதும், பரமகாருண்யனான ஸ்ரீபுருஷோத்மன், கருடனை நோக்கிக் கூறலானார்:

"வைனதேயா ! நல்ல கேள்வி!  இந்தக் கேள்வியைக் கேட்டது சரியானதுதான்.  மாய்ந்தவனைக் குறித்துச் செய்ய வேண்டியவற்றையெல்லாம் விளக்கமாகக் கூறுகிறேன்.  நீயும் கவனமாகக் கேட்பாயாக.  புத்திரனைப் பெறாதவனுக்கு எந்தவுலத்திலும் இன்பம் இல்லை.  இகத்திலும் பரத்திலும் இன்பத்தைப் பெற வேண்டும் என்று இச்சிப்பவன், நிச்சயமாகக் கருமமும் தவமும் செய்த நற்புத்திரனைப் பெறவே வேண்டும்.  தர்மமும் தவமும் செய்யவில்லையென்றால் அவனது மனைவியின் வயிற்றில் கர்ப்பம் தரியாது.   அப்படியே தரித்தாலும் அது பத்து மாதம் நிரப்புவதற்கு முன்னாலேயே கரைந்து, கழிந்து போகும்.  கருவானது கரைந்து சிதைந்தால் புருஷனுக்கு நற்கதி கிடைக்காது.  நல்லதொரு நன்மகனை பெற்றவனே, எல்லாவுலகங்களிலும் நன்மையை அடைவான்.

"வைனதேயா! கருமங்களை செய்யத் துவங்குவதற்கு முன்னாலேயே, ஒரு குறிப்பிட்ட ஸ்தலத்தை திருவலகால் துடைத்துச் சுத்தம் செய்து, கோமயத்தால் நன்றாக மெழுகிய பிறகே, எந்தக் கர்மத்தையும் செய்ய வேண்டும்.  அவ்வாறு சுத்தஞ் செய்யாமல் கிரியைகளைச் செய்தால், அரக்கரும், பூதங்களும் பிரேதங்களும்  பைசாசங்களும் அங்கு வந்து அக்கருமங்களை அங்கு செய்யவிடாமலும், அக்கருமங்களை முற்றுப் பெற முடியாதவாறும் தடுத்து நிறுத்தி விடும்.  சுத்தம் செய்த ஸ்தலத்தில் கருமம் செய்யத் துவங்கினால், தேவர்கள் அவ்விடம் வந்து அக்கருமங்களை நிறைவேறச் செய்வார்கள்.  மரித்தவன் தானே. அவனுக்குச் செய்யும் கர்மங்களை எங்கு செய்தால்தான் என்ன?  என்று எண்ணி, மரித்தவனுக்குத் தூய்மை செய்யாத இடத்தில் கர்மங்களைச் செய்தால், அக்கருமங்களைச் செய்ததனாலடையும்  பயனை இறந்தவன் அடைய முடியாமற் போவதோடு, இறந்தவன் நரகத்தையே அடைய நேரிடும்.

'எள்' என்பது எனது வியர்வையிலிருந்து தோன்றியதாகையால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும் .  அந்த எள் இரு வகைப் படும். கருப்பு எள். வெள்ளை எள் என்ற இருவகையில் எந்த நிறமுள்ள எள்ளையேனும்  தானங்களோடு சேர்த்துக் கொடுத்தால் அதிகப் பயன் உண்டாகும். அதாவது சிறப்புடையதாக அமையும்.  சிரார்த்த காலத்தில் கருப்பு எள்ளைச் சேர்த்தால், பிதுர்த் தேவர்கள் மிகவும் திருப்தியடைவார்கள்.  சூசைப் புல்லாகிய தர்ப்பைப்புல், ஆதியில் ஆகாயத்தில் உண்டாயிற்று!   அந்தத் தர்ப்பையின் இரு கடையிலும் பிரமனும் சிவனும், அதன் நடுவே, ஸ்ரீஹரியும் வாசஞ் செய்கின்றனர். தர்ப்பை இல்லாமல் சிரார்த்தம் முதலிய கர்மங்களெதையும் செய்யலாகாது.  பிராமணருக்கும்  மந்திரத்திற்கும் தர்ப்பைக்கும் அக்கினிக்கும் திருத்துழாக்கும் நிர்மாலிய தோஷமில்லை.  ஆகையால் பயன்படுத்திய தர்ப்பைப் புல்லையே மீண்டும் உபயோகப்படுத்தலாம்.  ஏகாதசி விரதமும் திருத்துழாயாகிய துளசியும், பகவத் கீதையும் பசுவும் பிராமண பக்தியும் ஸ்ரீஹரியின் சரணமும் ஆகிய இவையனைத்தும் சம்சார சாகரத்தைத் கடக்க வேண்டியவருக்கு நல்ல தெப்பமாகும்.   இறக்கும் நிலையை அடைந்தவன், கோமயத்தில் நன்றாக மெழுகப்பட்ட ஸ்தலத்தில், சூசைப் புல்லை பரப்பி, அதன் மீது எள்ளை இறைத்து , அந்தத் தர்ப்பைப் புல்லணையின் மீது சயனித்து, தருப்பைப் புல்லையும் திருத்துழாயையும் கையில் ஏந்தி, எனது நாமங்களை வாயாரப்  புகன்ற வண்ணம் மடிவானாகில், அவன் அயனரனாதியருக்கும்  அரிதாகிய நிரதிசய இன்ப வீடாகிய நமது உலகத்தை வந்தடைவான்.  மாய்பவன் , தர்ப்ப சயனத்தில் குப்புறபடுக்கலாகாது.  முதுகு கீழுறவே சயனஞ் செய்தல் வேண்டும்.  உயிர் நீங்கும் முன்பே திருத்துழையோடு, தனது நல்லுலக வாழ்வைக் கருதிய தானங்களையெல்லாம் கொடுத்து விடவேண்டும்.  அவற்றில் உப்பைத் தானம் செய்வது மிகவும் சிறப்பாகும்.  உப்பானது, விஷ்ணு லோகத்தில் உண்டானதாகும்.  ஆகையால் அதற்கு மகிமை அதிகம்.  மரித்தவன் உப்பைத் தானம் செய்வதால் சுவர்க்க லோகத்தை அடைவான்!" என்றார் திருமால். 

திருமால் திருவாய் மலர்ந்து கூறலானார். "கருடா! தானங்களைச் செய்ய வேண்டிய முறைகளையும், அத்தானங்களால்   ஏற்படும் பயன்களையும் கூறுகிறேன்: கேள்.

"தானங்கள் யாவற்றிலும் பருத்தி தானமே மிகவும் சிறந்தது. அந்தப் பருத்தி தானமே மகாதானம்  என்ற பெயரைப் பெற்றது.  அறப்படி வாழ்ந்து அறங்களையே  புகன்று, நான்கு வேதங்களையும் நன்றாக அறிந்த அந்தணர்கள் பூணுகின்ற பூணூலுக்குப் பருத்தியே ஏதுவானது.  சகல ஜீவன்களும் உலகில் வாழ்கின்ற காலத்தில் அவர்களுடைய மானத்தைக் காப்பதற்குரிய ஆடைகளையணிவதற்கும்  பருத்தியே பயனாவதால் அது மிகவும் சிறப்புடையதாகும்.  பருத்தித் தானம் செய்தால், மாமுனிவர்களும் பிரமருத்திர இந்திராதி தேவர்களும் திருப்தியடைவார்கள்.  பருத்தி தானஞ் செய்தவனது வாழ்நாள் முடிந்த காலத்தில், சிவலோகத்தையடைந்து, அங்கேயே வாசஞ் செய்து, பிறகு சகலகுண சம்பன்னனாய் அழகிய மேனியையுடையவனாய்,  மஹா பலசாலியாய்,  உலகாளும் அரசனாய், தீர்க்காயுள் உடையவனாய் மீண்டும் பூமியில் பிறந்து,  யாவரும் போற்றிப் புகழ நெடுங்காலம் வாழ்ந்து சுவர்க்கலோகத்தையடைவான். திலதானமும், கோதானமும்,  பூமிதானமும், சுவர்ணதானமும் , தானிய தானமும் செய்தால், மகா பாபங்கள் அனைத்தும் உடனே விலகி விடும்.  திலாதானமும் கோதானமும் சிறப்பான தானங்களாகும்.  அவ்விரண்டு தானங்களும் மிகக்கொடிய பாவங்களையும் நசிக்கச் செய்வன.  ஆகையால் இந்தத் தானங்களைச் சாதாரண, சாமானிய பிராமணர்களுக்குக் கொடுக்கலாகாது. உத்தம பிராமணருக்கே இவ்விரண்டு தானங்களையும் வழங்க வேண்டும். மங்கையருக்கும் தனக்குவேண்டியவருக்கும்  அம்மூன்றையும்  உத்தேசமாகக் கொடுக்கலாமே தவிரத் தானமாகக் கொடுக்கலாகாது.  தானங்கள் செய்வதற்குச் சிறந்த காலம், ஜீவன் மரிக்கும் காலத்தில் செய்வதேயாகும்.  கிரகண புண்ணிய காலமும் தானம் செய்வதற்குச் சிறந்ததுதான்.  ஓ வைனதேயா!  எந்த மனிதனும் தான் இன்பமாயும் மகிழ்ச்சியாயும் வாழும்காலத்திலேயே தனக்கான தான தருமங்களைச் செய்து கொள்வது நல்லது.  அவ்வாறு தானஞ் செய்ய விரும்புவோனுக்குப் புத்திரன் இருந்தால் அவனிடம் தான் தனக்காகத் தானம் செய்ய விரும்புவதைச் சொல்லி,அவனுடைய ஒப்புதலைப் பெற்ற பிறகே தானத்தைச் செய்தல் வேண்டும்.   ஒருவன் மரிக்கும் காலத்தில் திலத்தையும், இரும்பையும் லவணத்தையும்  பருத்தியையும், தானியத்தையையும்,  பொன்னையும், பூமியையும், கோவையும் தானம் செய்தால் மிகவும் விசேஷமாகும்.எள்ளையும்,  இரும்பையும் தானம் செய்தால் மிகவும் விசேஷமாகும்.  எள்ளையும், இரும்பையும் தானம் செய்தால், யமதர்மன் மகிழ்ச்சியடைவான்.  லவணத்தானம்  செய்தால் இறப்பவனுக்கு யமனிடத்தில் பயம் உண்டாகாது.  பருத்தித் தானத்தைச் செய்தால் யமதூதர்களிடத்தில் பயம் உண்டாகாது.  பருத்தி தானத்திற்கு முன்புச் சொன்னதை தவிர, இந்தப் பயனும் உண்டு.  தானியங்களைத் தானம் செய்தால், கூற்றுவனும் அவனது தூதர்களும் மகிழ்ந்து, ஜீவனுக்கு வேண்டியவற்றையெல்லாம் வழங்குவார்கள்.  சுவர்ணதானத்திற்கும், கோதானத்திற்கும் பாபங்களையெல்லாம் நசிக்கச் செய்யும் ஆற்றல் உண்டு  என்று முன்னமேயே உனக்குச் சொல்லியிருக்கிறேன்.  மரணமடையும் நிலையை அடைந்தவன், நம்மையே தியானித்து, நமது திருநாமங்களையே உச்சரிப்பானாகில் அவன் நிரதிசய இன்ப வீடாகிய நமது வைகுண்டலோகத்தையடைவான்.  தந்தை இறந்த பிறகு அவனுடைய புத்திரன், கயா சிரார்த்தம் செய்வதைவிட தந்தை இறக்கும் சமயத்தில் அவன் தன் தந்தையின் அருகிலேயே நெருக்கியிருந்து தான தருமங்களைச் செய்வதே உத்தமமாகும்.  கூடாரமும், முசலமும், சூரிகையும், இரும்புத் தண்டமும் காலனுக்கு ஆயுதங்களாகும்.  பொதுவாக கூறவேண்டுமானால் அவனது ஆயுதங்கள் அனைத்துமே இரும்பாலானவைகள்.  அதனால் தான் ஒருவன் மரிக்கும் காலத்தில் இரும்பை தானம் செய்தால் யமன் மகிழ்வான் என்று   சொன்னேன்.  எவன் இறக்கும் போது எவனுடைய கிரகத்தில் இரும்பு தானம் செய்யப்படுகிறதோ, அந்த கிரகத்தில் யமதூதர்கள் அடி வைக்கவும் அஞ்சுவார்கள்.  இறப்பவன் யாராயினும் இரும்புதானம் செய்தல் வேண்டும்.  அந்தத் தானத்தைச் செய்தால் காண்டாமிருகன், ஒளதும்பரன், சம்பரன், சார்த்தூலன் முதலிய யமதூதர்கள் திருப்தியடைவார்கள்.

"வைனதேயா!  ஜீவனுடைய அங்கங்களாகிய கால் முதல் தலை வரையிலுமுள்ள உறுப்புகளில் பிரும்மருத்திர இந்திராதி தேவர்களும் ஸ்ரீகிருஷ்ண பகவானும் இருக்கிறார்கள்.  தாயும், தந்தையும், குருவும், சுற்றமும் ஜீவர்களுக்கு ஸ்ரீவிஷ்ணுவேயன்றி மற்றோருவருமில்லை.  "சர்வம் விஷ்ணு மயம் ஜகத்" என்ற அருள் வாக்கை நீயும் உணர்ந்திருக்கிறாய் அல்லவா ?   நிலம், நீர், நெருப்பும், காற்று, ஆகாயம், சுவர்ணம், தானியம், தேன் , நெய், பசு, யாகம், அந்தணர், அஜசங்கர இந்திராதி தேவர்கள் யாவுமே விஷ்ணு மயமேயாகும்.  ஒன்றைக் கொடுப்பவனும் வாங்குபவனும் பிறகு யாவரும் யாமேயன்றி வேறொன்றும் இல்லை.  ஜீவர்கள் பூர்வத்தில் செய்த கர்மத்தை அனுசரித்துப் பாப புண்ணியங்களில் அவர்களது புத்தியை நாமே நாடச் செய்கிறோம். புண்ணியஞ் செய்தவன் சுவர்க்கம் அடைவான்.  பாபம் செய்தவன் நரகத்தை அடைவான்." 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்................... தொடரும்!