​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 15 April 2022

சித்தன் அருள் - 1114 - பாலராமபுரம் அகஸ்தியர் கோவில் திருவிழா - ஒரு சில காட்சிகள்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருக்கோவில், பாலராமபுரத்தில் பத்து நாட்கள் திருவிழா குருவருளால், இறைவன் முருகரின் வரவால், ஆசிர்வாதத்தினாலும் மிக சிறப்பாக நடந்தேறியது. சித்தன் அருள் வாசகர்கள் சிலரும் வந்திருந்து மகிழ்வுற்றனர்.

திருவிழாவில் பதிவு செய்யப்பட சில காட்சிகளை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.


 [ எரித்ததாவூரிலிருந்து புறப்பட்டு செல்லும் முருகப்பெருமானை அகத்தியப்பெருமான் தடுத்து நிறுத்தி, தனது நமஸ்காரத்தை, ப்ரதக்ஷிணத்தை சமர்ப்பிக்கும் காட்சி]



[இருவருக்கும் தீபாராதனை]


[புஷ்பாபிஷேகம்]


[முருகர் அகத்தியப்பெருமானுடன் பாலராமபுரம் கோவிலுக்கு வந்து சேருதல்]


[அகத்தியப் பெருமானுக்கு தீர்த்தவாரி]


 

[தீர்த்தவாரிக்கு கிளம்பிய பொழுது]







அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், அகத்தியப் பெருமான், முருகப்பெருமானின் அருள் கிடைக்கட்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

திருவிழாவில் பங்குபெற்ற அனைவருக்கும், பிரசாதம் விரைவில் அனுப்பிவைக்கப்படும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.

சித்தன் அருள்.............. தொடரும்!

2 comments:

  1. அருமை ஐயா சித்தன் அருள் வாசகர்களுக்கு பிரசாதம் கிடைக்குமா?

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete