​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 14 December 2023

சித்தன் அருள் - 1539 - அகத்தியரின் மருத்துவக் குறிப்பு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியப்பெருமான் ஜீவநாடியில் வந்து, மனிதனை வாட்டும் நோய்களிலிருந்து விடுதலை பெற, பலவித மூலிகை மருந்துகளை உரைத்துள்ளார். அப்படி சர்க்கரை நோய்க்கு தொடர்ந்து கேட்ட பொழுது "அது ஒரு நோயே அல்ல!" என்றார். எனினும் தொடர்ந்து விடாமல் கேட்ட பொழுது, தினமும் திரிபலா, திரிகடுகம் எடுப்பது நல்லது என்று சூக்ஷுமமாக உரைத்தார். அடியேனின் நண்பர் ஒருவர், மருத்துவர். அவருக்கு சர்க்கரை நோய் இருந்தது. அகத்தியப் பெருமான் மீது மிகுந்த பற்றுள்ளவர். அவரின் வாக்கை முழுமையாக நம்பி சரணடைந்து அதுபோல் செயலாற்றுபவர். அவர் ஏற்கனவே ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க காலையிலும், இரவிலும் "மெட்ஃபார்மின் 500 mg" மாத்திரையை எடுத்து வந்தார்.

அகத்தியர் கூற்றின்படி, காலை உணவுக்கு முன் "திரிகடுகம்" 1 சிட்டிகையும், மத்திய உணவுக்கு முன் "திரிபலா" ஒரு சிட்டிகையும் சாப்பிட தொடங்கினார். சில நாட்களில் அவருடைய ரத்தத்தில் சர்க்கரை அளவு, சாப்பிடும் முன்னும், உணவு உண்டபின்னும் நிறய அளவுக்கு குறைந்து போனது. இந்த சூழ்நிலையில் 500gm மருந்தை 250gm ஆக குறைத்துப் பார்த்தார்.  அப்பொழுதும் அவரின் சர்க்கரை அளவு 100க்கும் கீழே மிக குறைந்து இருந்தது. அகத்தியப்பெருமான் உரைத்த மருந்தும், குருவாக்கின் மீதுள்ள நம்பிக்கையும்தான் இதற்கு காரணம் என்கிறார். ஆனால், இதனுடன் சாப்பாட்டிலும் கட்டுப்பாடு இருந்ததால், இது சாத்தியமாயிற்று, உடலும் வலிமை பெற்றது என்கிறார்.

தேவைப்படுகிறவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம்.

சமீபத்தில், தமிழ்நாட்டின் பல இடங்களுக்கும் அகத்தியப்பெருமானின் உத்தரவால் பயணிக்க வேண்டிய சூழ்நிலையில், நிறையவே, வைரஸ் ஆல் தாக்கப்பட்டு தவித்த பொழுது, கீழ் கண்ட சிகிர்ச்சைகள் அடியேனுக்கு மிக உறுதுணையாக இருந்தது. பல சித்த மருத்துவ முறைகளில் கூறப்பட்டுள்ள மருந்துகளை அகத்தியப்பெருமான் சுட்டி காட்டியதின் பேரில், உங்கள் பார்வைக்கு தெரிவிக்கிறேன்.

பச்சைக்கற்பூரம் 10 கிராம்
புதினா உப்பு(கல்) 10 கிராம்
ஓமம் கல் 10 கிராம்

கண்ணாடி பாட்டிலில் மூன்றையும் இட்டு 5 முறை குலுக்கி வைத்தால், 30 நிமிடத்தில் சிறந்த எண்ணையாகி  தலைவலி, ஜலதோஷம், மூக்கடைப்பு, மார்புச்சளி, தொண்டை வலி போன்றவைக்கு  நல்ல மருந்தாகும். சிறிதளவே உபயோகிக்கவும். மிகவும் எரிச்சலாக இருக்கும். மூன்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.

வேப்பங்கொட்டை (அ) வேப்பம்பட்டை பொடி 100 கிராம்
கடுக்காய் பொடி 50 கிராம்
இந்துப்பு 25 கிராம்.

இம்மூன்றையும் கலந்து, காலையில் பல் தேய்த்து வந்தால், பல் சம்பந்தமான எந்த பிரச்சினையையும் ஒரு வாரத்தில்தீர்ந்துவிடும். பல்லை எடுக்கவே வேண்டி வராது. பற்கள் நல்ல பலம் பெரும்.

ஒரு வெற்றிலை + தேன் + 1 மிளகு + 1 கிராம்பு - தினம் ஒரு முறை கலந்து சாப்பிட்டு வர வறட்டு இருமல் உடனே குணமாகும்.

ஒரு வெற்றிலை + தேன் + பெருங்காயம் பொடி (சிறிது) + ஒரு மிளகு + சிறிதளவு சுக்கு - இவை கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று உப்புசம்/வாயு தொல்லை. உடனே குறையும்.

மேற்கூறிய அனைத்தும் பக்க விளைவுகள் இல்லாதது. தற்போது, தமிழ்நாட்டில் எங்கும் மழையினால் பரவி நிற்கும் வைரஸ் தாக்குதல், தொண்டை வலி, ஜுரம், அதன் பின்னர் உள்ள உடல் வலி போன்ற பிரச்சினைகளுக்கு மிக சிறந்த நிவாரணிகள்.

மருந்து மூலிகைகள், வைத்தியம் சம்பந்தமாக அகத்தியப்பெருமான் உரைக்கின்ற விஷயங்கள், இனி இந்த பக்கத்தில் சேர்க்கப்பட்டு, தெரிவிக்கப்படும். இந்த பக்கம் "சித்தன் அருள்" வலைத்தளத்தில் மேல் வலதுபக்கம், "அகத்தியரின் மருத்துவக் குறிப்பு" என்கிற லிங்கில் காணப்படும்!

கல்வி, பரீட்ச்சையில் குழந்தைகள் சிறந்து விளங்க!

1. "Chest Nut Bud" என்கிற ஒரு ஹோமியோபதி மருந்து கிடைக்கும். தண்ணீர் போன்று இருக்கும். அது ஒரு அவுன்ஸ் வாங்குங்கள். உங்கள் குழந்தைகளுக்கு மூன்று சொட்டு இரவில், உணவுக்குப்பின், உறங்கப்போகும் முன் (சாப்பாட்டுக்கும் இதற்கும் 30 நிமிட இடைவேளை இருக்கவேண்டும்), நாக்கை நீட்டச் சொல்லி விடுங்கள். இதை தினமும் செய்து வாருங்கள். உண்மையாக கூறுவதென்றால், மிக மோசமாக படிக்கிற குழந்தை கூட 95% மதிப்பெண் வாங்கும். எல்லா வருடமும் அக்டோபர் மாதம் 1 ம் தியதியிலிருந்து கொடுத்து வந்தால் அடுத்த மார்ச் மாத பரீட்ச்சைக்கு நன்றாக தயாராகிவிடுவார்கள்.

2. ஆன்மீக பரமாக கூறுவதென்றால், தினமும் காலையில் பெற்றோர்களில் ஒருவர் ஒரு கப் குடிக்கும் நீரெடுத்து, அதில் மோதிரவிரலால் ஓம் என்று எழுதி, கிழக்கு திசை பார்த்து நின்று ஹயக்ரீவரின் மந்திரத்தை (ஞானானந்தமயம் தேவம்.....) 11 முறை ஜெபித்து, அந்த நீரை பள்ளி செல்லும் முன் அருந்தக் கொடுக்கவும். ஒரு சில நாட்களில், படிப்பு நன்றாக மாறிவிடும், மனம் தெளிந்துவிடும். 

சித்தன் அருள் - 1555:-

முதுகுவலி, கழுத்து வலி, மூட்டுவலி, கால் வலி, இடுப்புவலி, கை/கால் (ஜாயிண்ட்) வலி, போன்ற பலவிதமான வலிகளுக்கும் மிக சிறந்தது ஒரு எண்ணெய்


விளக்கெண்ணெய் - 1 லிட்டர்
கஸ்தூரி மஞ்சள் பட்டை - ஆறு
ஊமத்தை இலை - 10
துத்தி இல்லை - 10

விளக்கெண்ணையை ஒரு இரும்பு வாணலியில் மிதமான (sim) தீயில் வைத்து சூடாக்க வேண்டும். எண்ணெய் கொதித்து லேசாக ஆவி வரும் பொழுது கஸ்தூரி மஞ்சள் பட்டையை அதில் போட வேண்டும். மஞ்சள் பட்டையிலிருந்து நுரை வரும். 10 நிமிடத்தில் நுரை வருவது நின்ற உடன் ஊமத்தை இலை, துத்தி இலை இரண்டையும் எண்ணெயில் போட்டு 20 நிமிடங்களுக்கு கொதிக்க விட வேண்டும். பின்னர் எண்ணெய் குளிரும் வரை காத்திருந்து அதன் பின்னர் (அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறி, போகர் பெருமானை நினைத்து, பிரார்த்தித்து) உபயோகிக்கலாம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

12 comments:

  1. மிகவும் சிறந்த பதிவு. அனைவருக்கும் பயன் படும். அகத்தியர் ஐயன் துணை.

    ReplyDelete
  2. Om Agatheesaya namaha Ayya L4 L5 back pain problem marunthu ayyavidam kettu sollavum

    ReplyDelete
  3. Thank you so much sir..Om agatheesaya namah....

    ReplyDelete
  4. தகவல் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி அய்யா.

    ReplyDelete
  5. ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

    ReplyDelete
  6. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  7. எம்பெருமான் அகத்தியரின் திருவருள் 🙏🙏🙏

    ReplyDelete
  8. பச்சை கற்பூரம்,புதினாஉப்பு, ஓமம்கல் இந்த எண்ணெய் எப்படி பயன்படுத்துவது அன்பரே? வெளி உபயோகத்திற்கா? அல்லது உள் உபயோகத்திற்கா?

    ReplyDelete
    Replies
    1. வெளி உபயோகத்திற்கு. மார்பிலும், நெற்றியிலும், முதுகிலும் புரட்டினால் கபம் வெளியேறிவிடும். நீர் கட்டு விலகும்.

      Delete
  9. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  10. Thank you Agnilingam Aiyya for the invaluable information

    ReplyDelete