​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 26 September 2019

சித்தன் அருள் - 819 - தாமிரபரணி மஹாபுஷ்கர நிறைவு விழா!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இறைவன் அருளால்,  2018ம் ஆண்டு 12.10.2018 முதல் 23.10.2018 முடிய தாமிரபரணி மகா புஷ்கரவிழா சிறப்பாக  நடைபெற்றது.

இந்த ஆண்டு  (2019) குருபகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு செல்வதால் அதற்குரிய பிரம்மபுத்திரா நதியில் புஷ்கரவிழா கொண்டாடப்படுகிறது. அதற்கு முன்னதாக *தாமிரபரணி மகாபுஷ்கரத்தின் நிறைவு* நிகழ்ச்சியாக "தாமிரபரணி அந்திம புஷ்கர விழா"  1.11.2019 முதல் 4.11.2019 முடிய நடைபெற உள்ளது.

இந்த விழா நெல்லை குறுக்குத்துறை, திருப்புடைமருதூர் ஆகிய பகுதிகளில் நான்கு நாட்கள் வேதபாராயணம், நதிபூஜை, நதி நீராடல், சிறப்பு பூஜைகள் ஆகியவையுடன் நடைபெற உள்ளது. விழாவில் மடாதிபதிகள் கலந்து கொள்கிறார்கள். விழாக்குழுவினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

தாமிரபரணி புஷ்கர விழாவின் தொடக்கத்தில் கலந்துகொள்ளவேண்டும் என ஆசைப்பட்டு, பின்னர் முடியாமல் போன அகத்தியர் அடியவர்களுக்கு, இந்த ஜென்மத்தில் கிடைக்கும் ஒரு அரிய வாய்ப்பு.  01.11.2019க்கும் 04.11.2019க்கும் இடையில் ஒருநாள் சென்று தாமிரபரணியில் ஸ்நானம் செய்து, இறை அருள், உன்னத நதியாம் தாமிரபரணியின் அருள் பெற்று நலமாக வாழ வேண்டுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் நமஸ்காரம்!

சித்தன் அருள்................ தொடரும்!