​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 31 December 2021

சித்தன் அருள் - 1062 - அகத்தியப்பெருமான் இயற்றிய ஸ்ரீ அய்யப்ப பஞ்சரத்னம்!


Song: Agathiyarin Shri Ayyappa Pancharathnam
Lyrics by Agathiya Munivar
Composed arranged and sung by Tippu
(Sai Dhwani studios-chennai)
Concept conceived and curated by L Saranathan (Guruswamy)
“IYYAPPA ANNADHANA SEVA TRUST,ALLWARTHIRU NAGAR”

சித்தன் அருள்.............தொடரும்!

Monday 27 December 2021

சித்தன் அருள் - 1061 - பாலராமபுரம் அகத்தியர் லோபாமுத்திரா கோவிலில் அபிஷேக பூஜை!



வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

டிசம்பர் மாதம் 23ம் தேதி, இவ்வருடத்தின் இரண்டாவது "உலக சித்தர்கள் தினம்" உலகெங்கும், அகத்தியப்பெருமான், லோபாமுத்திரை தாய்க்கு அபிஷேக பூஜை, அன்னதானத்துடன், மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது! ஆம் அன்றைய தினம் நம் குருநாதரின் திரு நட்சத்திரம் என மனதுள் வரித்து பல இடங்களிலும் ஹோமம், கும்ப அபிஷேகத்துடன் நடைபெற்றது. பல அடியவர்களும் பகிர்ந்து கொண்ட படங்களை தொகுப்பு 1059இல் காணலாம். அனைவருக்கும் அடியேனின் நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

பாலராமபுரம் அகத்தியர் கோவிலில் நடந்த பூஜையில் கலந்து கொள்கிற வாய்ப்பை அடியேனுக்கு அருளினார், நம் குருநாதர். நடந்த விஷயங்களை சுருக்கமாக உரைக்கிறேன்.

குருநாதரின் திருநட்சத்திர விழாவில் கலந்து கொண்டு, அல்லது பங்குபெற விருப்பமுள்ள அகத்தியர் அடியவர்களுக்காக சித்தன் அருள் தொகுப்பு 1053இல் வழிகாட்டப் பட்டிருந்தது. நிறைய அகத்தியர் அடியவர்கள், கோவில் நிர்வாகத்தினரை தொடர்பு கொண்டு தங்கள் பங்களிப்பை செலுத்தினர். ஒரு சில அகத்தியர் அடியவர்கள் வந்திருந்து உழவாரப்பணி செய்து பூஜையை சிறப்பாக நடத்திக் கொடுத்தனர்.

மாலை 5 மணிக்குத்தான் பூஜை என்றாலும், காலை முதலே பம்பரமாக சுழன்று, அகத்தியர் அடியவர்கள் ஒவ்வொரு பணியையும், சிறப்பாக செய்தனர். 

அனைத்தும் அமைந்து அபிஷேகம் தொடங்க 5.45 நிமிடமாகிவிட்டது. முதலில் எண்ணெய் காப்பு இருவருக்கும் செய்து, அகத்தியர் உத்தரவால், அவரது வலது கரத்திலிருந்து வழிந்த அந்த எண்ணையை, வந்திருந்த அனைத்து அடியவர்களுக்கும், நெற்றிக்கு இட்டுக்கொள்ள கொடுக்கப்பட்டது.

பின்னர் பலவிதமான அபிஷேகங்கள்: அவரை குளிரவைக்க வெட்டிவேர் தீர்த்தம், பஞ்சாமிர்தம், தேன், நெய், பால், தயிர், இளநீர், சந்தனம், மஞ்சள் பொடி, அரிசி மாவு, மூலிகை பொடி, குங்கும தீர்த்தம், பன்னீர், வாசனாதி திரவியங்கள், காவேரி தீர்த்தம், விபூதி, கடைசியில் பச்சை கற்பூர அபிஷேகத்துடன் நிறைவு பெற்றது. அகத்தியர் அடியவர்களுக்கு ஏதேனும் ஒரு அபிஷேக பொருளை தங்கள் கரங்களால் பூஜாரியிடம் எடுத்துக் கொடுக்கிற பாக்கியமும் கிடைத்தது.

இவை அனைத்தும், அவரே தருவித்துக் கொண்ட, அவர் திருநட்சத்திரத்தன்று மட்டும் வெளியில் எடுத்து அபிஷேக பூஜை செய்கிற மரகதலிங்கத்துக்கும் செய்யப்பட்டது.

அபிஷேகம் நிறைவு பெற்ற உடனேயே, அகத்தியப்பெருமானின் உத்தரவால், அவருக்கு நிவேதனம் அளிக்கப்பட்டது.

அதன் பின் புஷ்பஅபிஷேகம் (பூக்களால் அபிஷேகம்) தொடங்கியது. இதில் அகத்தியர் அடியவர்களுக்கு தங்கள் கைகளால் பூவை எடுத்து தட்டில் வைத்து பிரார்த்தனையுடன், கொடுப்பதற்கான ஒரு பாக்கியம் உருவானது. வித விதமான பூக்கள் உபயோகப் படுத்தப்பட்டது.

புஷ்ப அபிஷேகம் நிறைவு பெற்றதும் உள்ளே எட்டிப் பார்த்தவுடன் அடியேன் அசந்து போனேன். அவர் பூக்களுக்குள் மூழ்கி எழுந்து மிக ஆனந்தமாக இருந்த நிலை. இருவர் முகத்திலும் புன்னகை. பூவிலிருந்து வெளியே தோன்றிய வலதுகரம், அருளை பொழிந்தது. இது போதும் என அடியேனின் மனம் உரைத்தது. ஆம் குருநாதர் மகிழ்ந்துவிட்டால், இவ்வுலகில் எது வேண்டும். அனைத்தும் அனைவருக்கும் அவர் அருளிடுவார். அதுவே அன்று நடந்தது.

அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், வெள்ளி கவசம் சார்த்தப்பட்டது. தீபாராதனைக்காக நடை சார்த்தப்பட்டது.

தீபாராதனைக்காக சந்நிதான நடை திறக்கப்பட்டதும், அப்படி ஒரு மணமும் தேஜஸும் அனைவரையும் தாக்கியது. மிக அற்புதமான தரிசனம். தன்னையே, மெய் மறந்த அடியவர்கள், அனைவர் மனதிலும், ஓர் அமைதி, ஆனந்தம் என வித விதமான அருளை வாரி வழங்கி குருநாதரும், தாயும் நின்றிருந்தனர்.

ஒரு அகத்தியர் அடியவர் தன் கையினால் வரைந்த அகத்தியப்பெருமானின் ஓவியத்தை அன்றைய தினம் கோவிலுக்கு சமர்ப்பித்தார்.

அகத்தியப்பெருமான் அருளுடன் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

அன்று அங்கு வந்திருந்த அவரின் அடியவர்கள் அனைவருக்கும், பூசையில் அவர் பாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட கீழ் காணும் விஷயங்கள் அருளப்பட்டது.

  • அகத்தியப் பெருமானின் படம் பதித்த ஒரு ரூபாய் நாணயம்.
  • ஒரு பத்து ரூபாய் (786/108/354) குருநாதரின் பரிசாக வழங்கப்பட்டது.
  • அகத்தியப்பெருமான் லோபாமுத்திரையுடன் அருளும் ஒரு படம்.
  • அபிஷேக பிரசாதம்.
  • மிக சிறந்த முறையில், கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த அன்னம், அனைவருக்கும்.
இனி இப்படி ஒரு விழாவை குருநாதருக்கு செய்ய, ஒரு வருடத்துக்கு மேல் காத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்த பொழுது, மனம் ஏனோ அமைதியாகிவிட்டது. (09/01/2023). சரி! குருநாதரின் உத்தரவுக்காக காத்திருப்போம், என தோன்றியது.

பின்னர் அன்றைய தினம் உலகெங்கும் நடந்த பூஜையை பற்றி நாடியில் வந்து அருள் வாக்கு உரைத்த குருநாதர், "மிகுந்த அன்புடன் எம் சேய்கள் செய்த அபிஷேக, பூஜை, யாகங்களை யாம் ஏற்றுக்கொண்டோம். அன்று பூஜைக்கு வந்தவர்களுக்கும், பங்கு பெற்றவர்களுக்கும், வர வேண்டும் என நினைத்தவர்களுக்கும் யாம் ஆசிர்வதித்துள்ளோம்" என உரைத்தார்.

அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் அடியேனின் வணக்கங்கள். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்! 

சித்தன் அருள்........ தொடரும்!

Sunday 26 December 2021

சித்தன் அருள் - 1060 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் வாக்கு!


25/12/2021 அன்று குருநாதர் அகத்தியர் உரைத்த பொது வாக்கு !

வள்ளி தெய்வானையோடு அன்பாக அமர்ந்திட்ட ஐயன் பாதம் போற்றி போற்றியே பணிந்து அகத்தியன் செப்புகின்றேன் வாக்குகள்.

அப்பனே நல்லாசிகள் அப்பனே அனைவருக்கும்.

அப்பனே இருப்பினும் ஒரு செய்தியை செப்புகின்றேன்.

அப்பனே அனைத்தும் கடந்த   யான். 

இவையன்று எந்தனுக்கு நாள் கோள் இவை பின் நட்சத்திரம் இவையெல்லாம் அப்பனே இல்லை என்பேன். 

அப்பனே காலத்தை வென்றவன் யான்.

அதனால் அப்பனே எந்தனுக்கு அப்பனே ஆனாலும் நீங்கள் அன்பாக செய்கின்றீர்கள் அப்பனே.

அவையும் யான் ஏற்றுக்கொள்கிறேன் மகிழ்ச்சியோடு.

மகிழ்வோடு அப்பனே அனைவருக்கும் ஆசிகள்.

அப்பனே இன்னும் வரும் வரும் காலங்களில் அப்பனே பின் தீமையே இவ்வுலகத்தில் நடைபெறும் என்பேன்.

அதனால் அப்பனே என் பக்தர்கள் ஒவ்வொருவரும் நன்மைகள் செய்ய வேண்டும் என்பேன்.

அப்பனே பல மனிதர்களை இவ்வாறுதான் வாழ வேண்டும் என்பதைக்கூட பின் கற்று பின் நல் முறையாக செப்பினால் அப் புண்ணியம் சாரும் என்பேன். அப்பனே.

இதனையும் நன்கு தெரிவித்திடுக. 

அப்பனே இவை இதனையும் என்று கூற 

எந்தனுக்கு பின் அம்பை அப்பனே அம்பாசமுத்திரம் என்கிறார்களே அப்பனே அவ்வூரில் அப்பனே எந்தனுக்கு ஈசன் கொடுத்த பட்டம் எவ்வாறு எதனை என்றால் அப்பனே பின்

நீ அகத்தியா சிரஞ்சீவியாக வாழ்

நீ ஒரு சிரஞ்சீவி.

அப்பனே புவி உலகத்தில் உன்னால் காக்க முடியும்.

அப்பனே எந்தனுக்கு இவ்வாறு இவ்வாறு நடைபெற்ற பொழுதிலும்

அப்பனே பின் ஈசனார் அப்பனே பார்வதியோடு முருகனோடு பிள்ளையோனோடு வந்து

அகத்தியா பின் என்னை எப்படி எந்தனுக்கு சமமான உந்தனையும் யான் எதனை என்று தீர்மானிக்க எந்தனுக்கு எவ்வாறு எதை என்று நிகரோ இவ்வுலகில் நீயே நிகர் அதனால் இதனை என்றும் கூற எப்பொழுதும் நீ சிரஞ்சீவியாக வாழ்வாய். வாழ்வாய் என்று கூற இப்பொழுதுகூட அம்பாசமுத்திரத்தில் இவையும் கூட அங்கே எந்தனுக்கு பின் வாக்குகள் ஈசனே செப்பினார் என்பேன்.

அதனால் அப்பனே யான் எப்போதும் சிரஞ்சீவியே!!!!! என்பேன்.

அப்பனே இதனை என்றும் கூற காலம் கடந்து கடந்து அப்பனே யான் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றேன். புவி உலகில் அப்பனே.

அப்பனே மனிதர்களுக்கு ஒவ்வொரு விதமான புத்தியை கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறேன் அதனால் அப்பனே ஈசனுக்கு நிகரானவன் அப்பனே யான் என்றுகூட யான் சொல்லவில்லை.

அப்பனே அதனை ஈசனாரே கொடுத்து விட்டார். 

ஆனாலும் ஈசனிடம் அப்பனே

நீதான் இவ்வுலகத்தில் பெரியவன் அதனால் எந்தனுக்கு எல்லாம் அவையெல்லாம் வேண்டாம் அப்பனே இவை என்று யானும் கெஞ்சினேன்.

ஆனாலும் இவ்வுலகத்தை நீதான் அகத்தியனே சமன் செய்ய முடியும் மக்களை நல்வழிப்படுத்த முடியும் கலியுகத்தில்.

அதனால் தான் உன்னிடத்தில் யான் விட்டேன் என்று.

ஆனாலும் இவையன்றி கூற யானும் பின் ஒத்துக்கொண்டேன்.

இதனையும் பல சித்தர்கள் பல எண்ணிலா சித்தர்கள் இதனையும் என்று கூற யான் சொல்லிவிட்டேன் அனைவருக்கும் ஓர் வேலை பின் ஓர் ஓர் விருப்பமாக தொழிலும் செய்து இவ்வாறு செய்க என்று கூட உத்தரவிட்டு விட்டேன் இது யான் சித்தர்களுக்கு.

இதனால் ஒவ்வொருவரும் இவ்வுலகத்தை நன்கு திருத்த தான் பார்ப்பார்கள் என்பேன்.

வரும் வரும் காலங்களில் ஒழுக்கம் இல்லாமல் வாழ்வார்கள்.

சிலசில வினைகள் மனிதனே ஏற்படுத்திக் கொள்வான் என்பேன்.

அதனால் நன்மையைச் செய்யுங்கள் நன்மையைச் செய்யுங்கள்.

எதை என்று இப்படித்தான் வாழவேண்டும் வள்ளலார் முறைப்படி பின்பற்றினால் இவ்வுலகத்தில் ஒரு குறையும் வராது.

ஆனாலும் எங்கள் சித்தர்கள் ஆட்சியில் நல்லதையே பின் மேற்கோள் காட்டி  அனைத்தும் பக்திக்கு இழுக்க பின் யாங்களே வந்து இதனையுமென்று செய்வோம். செய்வோம் எப்பொழுதும் செய்துகொண்டே இருப்போம் கலியுகத்தில்.

ஆனாலும் கலியுகத்தில் கலிபுருஷன் பின் தொல்லைகளை ஏற்படுத்துவான் நல்லோர்களுக்கு இதனையும் அறிந்து தான் நிச்சயம் இவையன்றி கூற பின் அதனையும் நிறுத்த என் மக்களுக்கு நல்வழி காட்டுவேன்.

எவற்றைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை.

அகத்தியன் அகத்தியன் அகத்தியன் என்றெல்லாம் கூறிக் கொண்டே இருந்தால் அனைத்தும் கொடுப்பான் என்பதுகூட மனிதர்களின் விருப்பமாக கூட உள்ளது.

ஆனால் எவை என்று கூற யான் யோசிக்க வேண்டும் எவை கொடுக்க வேண்டும் என்று மனிதனுக்கு அதைத்தான் கொடுப்பேன்.

முதலில் பின் நன்மைகளை செய்யுங்கள் பின் பிறர் துயரை துடையுங்கள் இவ்வாறு செய்து வந்தால் நீங்கள் கேட்க தேவையில்லை யானாகவே வந்து நிற்கின்றேன்.

பின் இவை இதை என்று கூற பின் அகத்தியனை வழிபட்டால் அவை நடக்கும் இவை நடக்கும் என்பதெல்லாம் வீண் என்பேன்.

யான் புண்ணிய பாதைக்கு அழைத்துச் செல்வேன்.

புண்ணியப் பாதைக்கு அழைத்துச் செல்லும் பொழுது பின் அப் புண்ணியமே உங்களைப் பார்த்துக் கொள்ளும் என்பேன்.

அதற்கும் சில வழிமுறைகள் உண்டு உண்டு உண்டு வருங்காலங்களில் செப்புகிறேன் அப்பனே. 

அதனால் கோபம் கொள்ளாதே! அப்பனே. கோபம் கொள்ளாதே என்பேன்.

அப்பனே இதனையும் என்று பிறர்பொருளை அடையாதே! அடையாதே!

பொய் கூறாதே! அப்பனே நல்லோர்கள் வாழவேண்டும் தம் போல் பிறரை எண்ண வேண்டும். எந்தனது வாக்கை நிச்சயமாய் என்னை பின்பற்றுபவர்கள் நிச்சயம் கடைபிடிக்க வேண்டும். எப்பொழுதும். நிச்சயமாய் கோபம் வருதல் அவசியம் இல்லை .

அவசியமும்  இருக்கக்கூடாது என்பேன். 

அமைதியாக இருந்தாலும் என் மீது பழிபோடுங்கள். 

எதுவாயினும் அகத்தியன் பார்த்துக்கொள்வான் என்று பின்.

ஆனால் அதனையும் நிர்ணயித்து யான் நிச்சயம் என் மக்களுக்காக பிரம்மாவிடமே போராடிக் கொண்டுதான் இருக்கின்றேன்.

என்னை வணங்கு பவர்களுக்கும் பலபேர் கஷ்டத்தில் தான் ஆழ்ந்து உள்ளார்கள் என்பேன்.

ஏனென்றால் அப்பனே ஒரு விதத்தில் இக்கலியுகத்தில் அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்பது விதியப்பா.

விதியப்பா அவை மட்டுமில்லாமல் இதை இதை இதை என்று எதை எதையோ கற்றுக் கொண்டோம் என்பது தெரியாமல் கூட மனிதன் வாழ்ந்து வாழ்ந்து இப்பிறப்பு எதற்காக எடுத்தோம் என்று கூட தெரியாமல் வாழ்ந்து வருகின்றான். இது மெய்யே.

ஆனாலும் இதனையும் என்று கூற இவ் கஷ்டங்களை எவ்வாறு என் பக்தர்களுக்கு யான் நிச்சயம் விடமாட்டேன் பின் பிரம்மாவிடம் சென்று யான் முறையிட்டு  கொண்டே இருக்கின்றேன். பல மனிதர்களின் விதியை மாற்றி அமைக்க.

அதனால் என் மக்களே கவலை கொள்ள அவசியமில்லை எப்பொழுதும் கூட.

நன்மைகள் நன்மைகள் இன்னும் பல ஏராளம் என்பேன்.

ஏராளம் என்பேன் அப்பனே எங்களுக்கு தேவை அன்பு தான்.

அன்பு பிரதானமானது இவ்வுலகத்தில்.

அன்பு செலுத்தினால் யாங்கள் ஓடோடி வருவோம் என்பதை கூட பல வாக்குகள் சொல்லிக் கொண்டேதான் இருக்கின்றோம் அப்பனே.

ஆனாலும் நல் விதமாக அப்பனே இதைச்செய்தால் அதைச் செய்தால் அப்பனே

ஒன்றை சொல்கின்றேன் அப்பனே கலியுகத்தில் பரிகாரங்களும் பயனற்று போய்விடும்.

அப்பனே பரிகாரங்கள் அதனையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை கூட ஒவ்வொரு விதத்தில் சொல்கின்றேன்.

அப்பனே முதலில் அப்பனே அன்னை தந்தையரை வணங்க வேண்டும். என்பேன்.

அன்னை தந்தையரை வணங்கிட்டு தான் என் பக்தர்கள் நிச்சயமாய் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம்.

அன்னை தந்தையரை மதிக்காதவர்களை யான் எப்பொழுதும் நிச்சயம் மதிக்க மாட்டேன் அப்பனே.

அப்பனே அவரவர் விதி அப்பனே எத் தெய்வத்திடம் எத் திருத்தலத்திலும் சென்றாலும் அன்னை தந்தையரிடம் பரிபூரணமாக ஆசீர்வாதம் பெற்று தான் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் இறையருள் நன்கு கிட்டும் என்பேன்.

அதனால் அப்பனே இன்னொரு முறையையும் சொல்கின்றேன் ஓர் திருத்தலத்திற்கு போகும் முன்பே அப்பனே பின் இரு வாரங்கள் கூட சுத்தமாக அப்பனே இவையன்றி கூற அத்திருத்தலத்தை  பற்றி பல பல வழிகளில் அப்பனே வாசகத்தை திருவாசகத்தை பின் அனுதினமும் பாடிட்டு வரவேண்டும்.

பாடிட்டு வந்து தூய உள்ளமாய் அனுதினமும் இரு மண்டலம்(96நாட்கள்) உயிரினங்களுக்கு ஒரு உயிரினத்திற்காவது உணவளிக்க வேண்டும்.

உணவளித்து ஓர் எவ்வாறு என்பதையும் கூட இரு வாரம் அன்னை தந்தையரை மதித்து பின் பின்பற்றி திருத்தலத்திற்குச் சென்றால் அப்பனே அதன் விஷயமே தனி என்பேன்.

ஆனால் பின் மக்களுக்கு இதை உணராமலே சென்று விடுகின்றனர்.

ஆனால் இறைவனோ என்ன செய்வான்????

அப்பனே இது தான் நடந்து கொண்டிருக்கின்றது கலியுகத்தில்.

அப்பனே வரும் வரும் காலங்களில் அப்பனே கலியுகத்தில் எப்படி வாழ வேண்டும் என்பதெல்லாம் சொல்கின்றேன் அப்பனே அப்பொழுது கலிபுருஷனிடமிருந்து யான் உங்களை நிச்சயமாய் தப்ப வைத்துவிடுவேன் அப்பனே.

இதனால் அப்பனே சித்தர்களை வணங்குபவர்களுக்கு அப்பனே அவை வேண்டும் இவை வேண்டும் என்றெல்லாம் எப்பொழுதும் கேட்கக் கூடாது என்பேன் அப்பனே.

உன் விதியை ஆராய்ந்து தான் யான் கொடுப்பேன் அப்பனே.

அதனுள்ளும் ஒன்றை சொல்கின்றேன்.

நீ அப்பனே மனிதனுக்கு எவை? எப்பொழுது? பல மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் அப்பனே உன்னை பின் உன் மனதை ஆராய்ந்து உன்னை உயர்த்தி விடுவேன்.

அதனால் அப்பனே உன் விதியை மாற்றும் அளவிற்கு கூட சக்திகள் என்னிடத்தில் இருக்கின்றன அப்பனே.

இதனால் யாரும் எவரும் கவலைப்பட அவசியமில்லை என்பேன்.

அப்பனே கலியுகத்தில் எப்படி எப்படி தப்பித்துக் கொள்வதெல்லாம் சித்தர்கள் ஒவ்வொரு வாக்காக சொல்வார்கள் என்பேன். அதன்படியே நடந்து விட்டால் அப்பனே குறைகள் ஏது??? 

அப்பனே மனிதன் மனிதனாக வாழ்ந்துவிட்டு கடைபிறப்பாக ஆக்கலாம் என்பேன். அனைவரும் கூட.

இதுதான் அப்பனே வேண்டாம் அப்பனே அடுத்தடுத்த பிறப்புக்கள்  எடுத்து எடுத்து அப்பனே தேவையில்லை.

அப்பனே இதனால் நல் விதமாக ஒவ்வொரு விஷயத்திலும் யான் சொல்லிக்கொண்டே இருப்பேன் இப்படி வாழ வேண்டும் இப்படி செய்ய வேண்டும் என்பதெல்லாம்.

அதைக் கடைப்பிடித்தாலே போதுமானது. அப்பனே.

அப்பனே திருத்தலத்தை பற்றி யான் சொல்லிவிட்டேன் இதை கலியுகத்தில் நிச்சயமாய் என் மக்கள் பயன்படுத்துங்கள். அப்பனே.

அப்பனே இன்னும் பல கலியுகத்தில் எவ்வாறு எவ்வாறு நடைபெறும் என்பதையும் கூட தீங்குகளே பலமாக இருக்கின்றது அப்பனே.

அப்பனே முக்கால் பங்கு கர்மங்கள் அப்பனே முக்கால் பங்கு தீயவையே நடக்கும் என்பது விதியப்பா. கலியுகத்தில் ஆனாலும் கால்பங்கு அப்பனே இவையும் அப்பனே நல்லவை ஆனாலும் கர்மத்தினை மாற்றுவதற்கு மனிதர்கள் நீங்கள் உங்களிடத்தில் இருக்கின்றன.

பக்திகள் எவ்வாறு செலுத்த வேண்டும்? ஒழுக்கத்துடன் வாழ வேண்டும் அப்பனே.

அப்பனே எவ்வாறு என்பதையும் கூட 

அப்பனே அதிகாலையில் அப்பனே ஒருவன் நல் விதமாக எழுந்து அப்பனே பின் சில சில பிராணாயாமங்களை அப்பனே நல் மந்திரங்களை ஓதி வந்தாலே போதுமானது அவனுடைய வாழ்க்கை மேன்மை பெறும் அப்பனே.

அப்பனே கலியவன் விட்டு விடுவான் என்பேன்.

அப்பனே கலியவன் சொல்கின்றேன் அப்பனே அதிகாலையில் தான் தேடிக் கொண்டிருப்பான் யார் ?யார்? சோம்பேறித்தனமாக பின் உறங்கிக் கொண்டிருப்பது என்பது!

 அப்பனே அதனை உணர்ந்து விட்டால் இவந்தனை பின் கஷ்டத்தில் ஏற்படுத்திக் கொள்ளலாம் என்று ஆனாலும் அதிகாலையிலே பிரம்ம முகூர்த்தத்திலே இறைவனை வழிபட்டு சென்றால் 

கலியவனும் "ஐயோ" இவந்தன் இறைவனை பிடித்துக் கொண்டிருக்கின்றான். என்பதைக் கூட அவந்தனுக்கு புரிந்து விடும் அவன் விட்டுவிடுவான் அப்பனே தப்பித்துக் கொள்ளுங்கள்.

அப்பனே யாங்கள் சித்தர்கள் அப்பனே வழியைத்தான் காட்டிவிடுவோம். அதன்படியே நீங்கள் நடந்துவிட்டால் குறைகள் ஏது?? அப்பனே.

ஆனாலும் இதைச் செய்தால் அவை நடக்கும் என்பதெல்லாம் "வெற்றே "!!!! என்பேன்.

அப்பனே எங்களிடத்தில் வருபவர்களை அப்பனே புண்ணியங்கள் செய்ய வைப்போம். அவ் புண்ணியத்தின் மூலம் அப்பனே வாழ்க்கையை கடந்து கடந்து மேன்மையான நிலைகளை பெறுவீர்கள் என்பேன்.

அப்பனே எதை என்று  கூற இன்னும் பல விஷயங்கள்      இருக்குதப்பா

அப்பனே இவை இவை என்று கூற இன்னும் பூமிக்கு அடியில் புதைந்துள்ளது அப்படி பலமர்மங்கள் என்பேன்.

அவற்றையெல்லாம் நாங்கள் சித்தர்களின் நிச்சயம் வெளிக்கொண்டு வருவோம் இக்கலியுகத்தில்.

கலிபுருஷனை அப்பனே அப்படியே நிற்பதற்கு அப்பனே பல பல உண்மைகள் அப்பனே அடியில் அழிந்து கிடக்கின்றன.

அப்பனே புதையல் போல் எவ்வாறு என்பதையும் கூட பூமிக்கடியில்.

அப்பனே அவை ஒன்றொன்றாக அப்பனே ஈசனே பின் தன்னை ஏற்படுத்திக் கொள்வான் என்பேன் இவ்வாறு ஏற்படுத்திக்கொண்டு அப்பனே பல பழமையான ஸ்தலங்களில் பல சூட்சமங்கள் ஒளிந்து கொண்டிருக்கின்றது.

அப்பனே ஒன்றைச் சொல்கிறேன் இவையன்றி கூற பல திருத்தலங்கள் அப்பனே பல பல விசேஷங்கள்.

அப்பனே பின்  ஓர் காலத்தில் அப்பனே யாருக்குமே அப்பனே பின் தீங்கு  விளைவிக்காததற்காக நன்மைகள் நடந்துகொண்டிருந்தது ஆனாலும் இவைதன்  உணர உணர சிலர் தீய மனிதர்களே அப்பனே இவ்வாறு உலகம் நடந்து கொண்டிருந்தால் போட்டி பொறாமைகள் கொண்டு அத்தலம் இத்தலம் இவ்வாறு பக்திகள் பலப்பல மர்மமான அப்பனே சக்திகள் மிகுந்த கோயில்களை எல்லாம் அப்பனே மனிதன் அழித்துவிட்டான்.

ஆனாலும் அவ் சக்திகள் இக்கலியுகத்தில் அப்பனே யாங்கள் ஏற்பாடு செய்வோம் செயல்பட செய்வோம் அப்பனே.

அப்பனே இவ்வாறே செய்து வந்தால் நலன்களே என்பது உறுதி என்பேன் அப்பனே.

அப்பனே !அப்பனே! சொல்கின்றேன் அப்பனே அனுதினமும் என்வழி வருபவர்களுக்கு வருபவர்களுக்கும் சொல்கின்றேன் அப்பனே அனு தினமும் ஏதாவது ஒரு உயிரினத்திற்காவது உணவு அளியுங்கள் அப்பனே அதுதான் அப்பனே மனிதனாக பிறப்பதற்கு அப்பனே. இதை என்று கூற மனிதன் வந்தான் போனான் சென்றான் அப்பனே தின்றான் இவையன்றி கூற இறந்தான் என்றெல்லாம் இருக்கக் கூடாது என்பேன்என்வழி வந்தவர்களுக்கு.

அப்பனே நல் முறைகள் ஆகவே அப்பனே எதற்காக? பிறந்தோம்! எதற்காக வளர்ந்தோம்! அப்பனே பின் தன் வாழ்க்கை வரலாற்றை அப்பனை இப்படித்தான் ஆன்மா பூமியில் பிறந்து இருக்கின்றது என்பதை எண்ணி எண்ணி மேற்கோள் காட்டி வாழ வேண்டும் அப்பனே.

ஒவ்வொருவருக்கும் அப்பனே புண்ணியங்கள் மிகுந்த காணப்பட்டால் அப்பனே யானே அழைத்து அவன் புண்ணியங்களை யானே செப்புவேன் அப்பனே. அதுதான் உண்மையப்பா.


அப்பனே ஒன்றை சொல்கின்றேன் அகத்தியனை அப்பனே அகத்தியனை வணங்குபவர்களும் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அப்பனே.

என்னை அப்பனே யான் தற்செயலாக சொல்லவில்லை.

அப்பனே இவைதன் அப்பனே பின் உலகம் போதையில் மாயையில் போய்க்கொண்டிருக்கின்றது அதனைத்தான் யாங்கள் மீட்டெடுப்போம் அப்பனே.

அப்பனே சித்தாந்தம் வேதாந்தம் இவையெல்லாம் அப்பனே எவ்வாறு என்பதையும் கூட அப்பனே நீங்கள் செய்யும் வினையே அப்பனே ராகு காலம் எமகண்டம் அப்பனே தீய நேரங்கள் பின் நல் நேரங்கள் எல்லாம் மாறிக் கொண்டிருக்கின்றது அதனால் அப்பனே நீங்கள் செய்யும் புண்ணியத்தில் தான் அப்பனே இருக்கின்றது வாழ்க்கை.

அதனால்தான் அப்பனே பின் நல் வாழ்க்கையாக அமைவதற்கு உங்களிடத்திலேயே பல திறமைகள் இருக்கின்றன அதனையும் வரும் வரும் காலங்களில் அப்பனே கலியுகத்தில் எப்படி வாழவேண்டும் அப்பனே அனைத்தும் மனிதர்களிடத்தில் அப்பனே இருக்கின்றது.

ஈசனும் மனிதனிடத்தில் அப்பனே அனைத்து திறமைகளும் பின் பின்பற்றி பின்பற்றி இவ்வாறு வாழ வேண்டுமென்று அனுப்புகின்றான் ஆனாலும் அப்பனே கலியுகத்தில் அப்பனே எவ்வாறு இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்கின்றது இவ்வுலகில்.

அப்பனே யானே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றேன் அப்பனே 

ஆனாலும் மாற்ற மாற்ற இன்னும் அப்பனே பலமாக ஆனாலும் ஈசனாரும் கோபத்தால் அப்பனே சில மாற்றங்களை நிச்சயமாய் அப்பனே மனிதர்களுக்கு சில கெடுதல்களை ஏற்படுத்தித்தான் கெடுதல் என்பதைக் கூட சில கஷ்டங்களை ஏற்படுத்தத்தான் அப்பனே கொடுப்பான் என்பேன்.

அப்பனே கஷ்டங்கள் வராமல் இருந்தால் அப்பனே இறைவனே இல்லை என்ற சொல்லுக்கு அப்பனே போய் விடுவான் என்பது மனிதன் யான் தான் இறைவன் என்று வரும் காலங்களில் அப்பனே சொல்லுவான் என்பேன் அப்பனே. 

ஆனாலும் யாங்கள் பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றோம்

அவன் எதனை என்றும் கூற அவந்தனையும்   வேரோடு அப்பனே அமுக்குவோம் என்போம் அப்பனே. 

எதனை என்று கூற யாரை ஏமாற்ற?? அப்பனே சித்தர்களை ஏமாற்ற பார்க்கிறீர்களா??

அப்பனே உன்னுடைய வந்த வேலை என்னவென்று கூட தெரியாமல் அப்பனே வாழ்ந்து வருகின்றாய்

அப்பனே இதனால் அப்பனே யான் யுகம் யுகமாக பார்த்துக்கொண்டே தான் இருக்கின்றேன்.

மனிதன் வந்தான் அப்பனே அவந்தன் தனக்காகவே வாழ்ந்து விட்டு சென்றான் அப்பனே ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை திரும்பவும் மனிதனாகப் பிறப்பெடுக்கின்றான்  தனக்காக வாழுகின்றான்.

 இவையெல்லாம் ஒரு பிறப்பா?? அப்பனே!

இவ்வாறு கோடிக்கோடி அப்பனே பார்த்ததுண்டு யானும். அப்பனே.

ஆனாலும் அப்பனே சரியாக நடந்து விட்டாலே அப்பனே நல்லோர்களை யாங்கள்  தேடிக் கொண்டே இருக்கின்றோம்.

அப்பனே சித்தர்களை நீங்கள் தேட அவசியமில்லை.

அப்பனே யாங்களே தேடி வருவோம் நல்லோர்களை பார்த்து அனைத்தும் செய்வோம் அப்பனே.

இவைதன் இவ்வுலகத்தில் அப்பனே நல்லதைச் செய்ய யாங்கள் காத்துக் கொண்டிருக்கின்றோம்.

அதனால் அப்பனே நீங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூட நீங்கள் யோசித்து விட்டால் அப்பனே ஓர் மடங்கு அப்பனே நீங்கள் எடுத்து வைத்தால் உண்மை நிலைக்கு யாங்கள் நூறு மடங்கு அப்பனே அழைத்துச் செல்வோம் புண்ணியத்தையும் தேடி தருவோம் அப்பனே.

அப்பனே இன்னும் பல வாக்குகள் உண்டு அப்பனே சொல்கின்றேன் அப்பனே ஒவ்வொரு விதத்திலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் மனிதன் வாழ்ந்து வந்தால் இறைவனே தன் இல்லம் தேடி வருவான் என்பது கூட மெய்யே. 

அது தெரியாமல் வாழ்ந்து கொண்டு அப்பனே பயனற்ற அப்பனே பயனுள்ள மனிதப் பிறப்பை பயனற்றதாக ஆக்கிவிடாதீர்கள் அப்பனே.

அப்பனே இன்னும் சொல்கின்றேன் அப்பனே வருங்காலங்களில் ஏமாற்றுவார்களப்பா. 

அப்பனே  இழிவு படுத்துவார்களப்பா

அப்பனே ஏமாறாதீர்கள் அப்பனே என்றெல்லாம் அப்பனே உங்களிடத்திலே யான்  சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

அப்பனே இறைவன் என்பதை கூட எதை எதை  தரவேண்டும் என்பதை கூட நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட சொல்கின்றேன் அப்பனே.

அப்பனே இறைவனை அன்பால் வணங்க வேண்டும்.

ஆனாலும் அப்பனே மனிதர்களோ அப்பனே இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என்பதெல்லாம் சுயநலத்திற்காகவே செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே.

ஆனாலும் இதையும் பார்த்துக்கொண்டு இருந்தான் இறைவன் அதனால் அப்பனே இவை எல்லாம் நிச்சயமாய் இனிமேலும் நல்வழிக்கான பின் வள்ளலார்(சுத்த சன்மார்க்க ஜீவ காருண்ய வழி) முறையை பின்பற்றி வந்தால் இறைவனே அனைத்தும் வழங்குவான் என்பேன்.

அப்பனே மனிதன் நிலை  இல்லாதவன் அப்பனே ஆனால் மனிதன் நிலையில்லாதவன்  நிலை இல்லாததை தான் தேடுகின்றான் நிலையுள்ளதை தேடுவதில்லை. என்பேன் அப்பனே.

வரும் வரும் காலங்களில் எப்படி வாழ வேண்டும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு வளையம் போல் காத்து பின் வாழ்ந்து வந்தால் அப்பனே இன்னும் பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் உண்டு கந்தனாரும் (கந்தன்)  அப்பனே சில வாக்குகள் அடுத்த வாக்குகளாக செப்புவான் என்பேன் அப்பனே.

குறைகள் இல்லை அப்பனே என் மக்களே அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் அப்பனே நல் விதமாக யானும் அங்கங்கு வந்தேனப்பா லோபமுத்ரா தேவியுடன் அப்பனே செய்த பூஜைகள் அப்பனே பலம் என்பேன்.

இவ்வாறே அன்பாக வாழ்ந்திட்டு அப்பனே நல் முறையாக நல்லோர்க்கு இன்னும் இப்படித்தான் வாழவேண்டும் அப்பனே சில சில உயிர்களை பின் கொல்லக்கூடாது.

அப்பனே நெறியை பயன்படுத்த வேண்டும் ஒழுக்கங்களோடு வாழ வேண்டும் என்றெல்லாம் அப்பனே சொல்லித்தாருங்கள் அப்பனே ஒரு கூட்டமாகவே இருந்து.

இதனால் என்னுடைய,  சித்தர்களுடைய, ஆசிகளும் கிடைக்கப் பெற்று அதனாலும் புண்ணியங்கள் ஏற்படும் என்பேன் அப்பனே.

மறு வாக்கும் செப்புகின்றேன். 

உத்திரகாேசமங்கை சிவாலயத்தில் ஈசன் தரிசனம் உத்திரகாேசமங்கை சிவாலயத்தில் ஈச தரிசனம் பற்றி அகத்திய மாமுனிவர் (குருநாதர்) ஜீவநாடி பாெதுவாக்கு 

அப்பனே எவை என்று கூற இன்னொரு ரகசியத்தை சொல்கின்றேன். அப்பனே தற்போது நல் முறையாக நல் முறைகள் ஆகவே எவ்வாறு என்று ஓர் முறை சொல்லி விடுகின்றேன். அப்பனே ஒரு ரகசியத்தை.

அப்பனே அங்கும் வருவான் என்பேன் ஈசன் எப்பொழுது வருவான் என்பதுகூட எந்தனுக்கு தெரியும்.

அதை அங்கு அவன் (ஈசன்) வரும் பொழுது அவன் கண்ணில் பட்டாலே போதும் பாவங்கள் தொலைந்துவிடும் என்பேன்.

அவ் சூட்சுமத்தையும் ஆருத்ரா தரிசனம் என்கின்றார்களே அவ் ஏழு நாட்களையும் அப்பனே சேர்த்துப் பார்த்தால் ஒரு நாள் வரும் கடைசி நாளில் வருவான். நேரமும் சொல்கின்றேன் வரும்பொழுது உங்களுக்கு.

இவையன்றி கூற

அப்பனே ஒரு நாள் தங்குவான் என்பேன் உத்தரகோசமங்கையில்.

பின் எவை என்று கூற இப்பொழுதும் கூட அதை சொல்லி விடுகின்றேன். அப்பனே மார்கழி மாதத்திற்கு முன் ஒரு மாதத்தில் சொல்கின்றேன்.

அப்பனே எவை என்று கூற நல் முறைகள் ஆகவே அப்பொழுதுதான் அவனுக்கு (ஈசனுக்கு) நல் முறையாக வருடத்தில் ஒரு நாள்  அபிஷேகங்கள் (திருவாதிரை நாள் ஆருத்ரா தரிசனம்) நடக்கும் என்பேன்.

அப்பனே அவனுக்கு பிடித்தமான தலம் உண்டு என்பேன் அங்கு கூட.

அவன் எங்கு அமர்ந்திருப்பான் என்பதைக்கூட இப்பொழுதே சொல்லிவிடுகிறேன் அப்பனே அங்கு ஒரு மரம் இருக்குமே அங்கேதான்.

ஆனாலும் அதை தெரியாத மனிதர்கள் அப்பனே அவ் அபிஷேகத்தை காண அபிஷேகத்திற்காக தான் அனைவரும் காத்திருப்பார்கள். ஆனால் ஈசனோ இங்கு மரத்தடியில் அமர்ந்து கொண்டு இருப்பான்.

*அவ்விடத்தில் (மரத்தடியில்) நீங்கள் நிச்சயம் அமருங்கள் அங்கு சென்று.        

இவ்வாறு  குருநாதர் அகத்தியர் வாக்கு உரைத்திருந்தார். 

உத்திரகோச மங்கை ஈசன் தரிசனம் குறித்து குருநாதர் அகத்தியர் உரைத்த பின்வாக்கு .

ஆருத்ரா தரிசனம் அன்று  

உத்தரகோசமங்கையில் கூட ஈசனார் பின் பார்வதி தேவியுடன் வந்தானப்பா வந்தானப்பா அப்பனே சுற்றி அப்பனே வளைத்து கொண்டீர்கள் நீங்களும் அப்பனே இவை என்று கூற சோதித்தான் ஈசன் யார் இதை கூட தெரிவித்துவிட்டது என்பதைக்கூட  பின் நெற்றிக் கண்ணில் பார்க்கும் பொழுது இவையோ

என்று கூற அப்பனே இவ் பாக்கியம் உங்களுக்கு கிடைத்தது என்பேன் நினைத்தாலே அப்பனே முக்தி தருவது இறைவனுடைய கருணை ஈசனே என்பேன் அதனால் அப்பனே வர இயலாதவர்களுக்கும் அங்கு செல்லவில்லையே என்று யார் யோசித்து இருந்தார்களோ அவர்களுக்கும் அப்பனே நிச்சயமாய் அங்கிருந்தே ஆசீர்வதித்தான் அப்பனே அப்பனே நல்விதமாக ஒவ்வொருவருக்கும் அப்பனே எதனை என்று கூற சில சில வழிகளிலும்  கொடுத்தனுப்பினான் ஆசிகள் .
இதனால் கவலைகள் இல்லை.

மறு வாக்கும் செப்புகின்றேன் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள்.

Friday 24 December 2021

சித்தன் அருள் - 1059 - அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திர பூஜை!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

23/12/2021 வியாழக்கிழமை அன்று நம் குருவின் திரு நட்சத்திரம் அமைந்ததால், அவரின் சன்னதியில், மிக சிறப்பாக அபிஷேக பூஜைகள் நடந்தது.

பல அகத்தியர் அடியவர்களும் அனுப்பிதந்த பூஜை படங்களை, உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன்.

இங்கு வெளியிட பூஜை முடிந்த பின் எடுத்த படங்களை அனுப்பித்தந்தால் வெளியிடுகிறேன். உங்கள் படங்களை AGNILINGAMARUNACHALAM@GMAIL.COM என்கிற மெயிலுக்கு அனுப்புங்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!




[பனப்பாக்கம்]



[பாலராமபுரம்]
[பனப்பாக்கம்]
[வடசேரி, நாகர்கோயில்]

[பொதிகை அடிவாரம்]

[சென்னை சித்த மருத்துவ கல்லூரி]
[ வடசேரி, நாகர்கோயில்]











[தேவிகாபுரம், திருவண்ணாமலை]

[மேட்டுப்பாளையம் மாதேஸ்வரன் கோவில்]
[வேலூர் அகத்தியர் கோவில்]

[மதுரை சக்தி மாரியம்மன் கோவில்]
[மதுரை ராமதேவர் சித்தர் பீடம்]
[சின்னாளம்பட்டி, திண்டுக்கல்]
[இரட்டை கோபுரம், மலேசியா]
[சூரத், குஜராத்]

[மலேசியா]
[பாலராமபுரம்]
[அகத்தியர் இல்லம், பாண்டிச்சேரி]
[சென்னை அகத்தியர் அடியவர் வீட்டில்]
[கூடுவாஞ்சேரி]
[பேரளம்]

[அகத்தியர் பீடம், பொகளூர்]
[பசுமலை, மதுரை]
[தாண்டிக்குடி]

சித்தன் அருள்............தொடரும்!