​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 11 December 2021

சித்தன் அருள் - 1051 - அன்புடன் அகத்தியர் - கோரக்கர் வாக்கு!


18/11/2021 அன்று கோரக்கர் சித்தர் உரைத்த பொதுவாக்கு! வாக்குரைத்த ஸ்தலம் : கோரக்கர்நாத் மந்திர், கோரக்பூர். உத்தரபிரதேசம். 

அண்ட சராசரங்களையும் படைத்துக் காக்குகின்ற பரமேஸ்வரனையும் பரமேஸ்வரியையும் பணிந்து கோரக்கன் செப்புகின்றேன்.

இவ்வுலகத்தில் மாற்றங்கள் நிச்சயமாக வரும்.

வரும் என்பதெல்லாம் மனிதர்கள் இறை அன்பு என்பதை புரிந்து கொள்வதே இல்லை.

இறையின் பாதையைத் தேர்ந்தெடுத்து விட்டால் அவை நன்றாக அமையும் என்பதைக் கூட தெரிவதில்லை இறைவனை மனிதன் ஒரு பொழுது போக்காகவே பார்க்கின்றான்.

இறைவன் எதனை தர வேண்டும் என்று எண்ணித்தான் மனிதனுக்கு தருவான் என்பது மனிதனுக்கு தெரிவதே இல்லை.

தெரியவில்லை இதனால் குற்றங்கள் குறைகள் மனிதர்களிடமிருந்தே ஏற்படுகின்றது. ஏற்படுகின்றது என்பதே உண்மை.

உண்மை

இறப்பவர் பின்பு பிறப்பதில்லை பிறப்பவர் பின்பு இறப்பதில்லையா? 

இறப்பதில்லை எதனால் என்பது இச் சூட்சுமத்தை சஞ்சீவினி மந்திரத்தின் மூலம் உணர்ந்து கொள்ளலாம்.

ஆனாலும் வரும் காலங்களில் சஞ்சீவினி மந்திரம் தனக்கு தெரியும் என்று பல கெட்ட துஷ்டர்கள் வந்து மனிதர்களை ஏவுவார்கள் ஏவுவார்கள் என்பதைவிட மனிதனை மனிதனே ஏவி விடுவான் இதுதான் நடக்கப் போகின்றது.

யாங்கள் பல முறையும் காத்திருந்தோம் இவ்வாறு உலகத்தில் நடைபெற்றுக் கொண்டிருப்பதை.

ஆனால் இனிமேலும் ஆனாலும் இதனையும் ஒன்று சொல்வதற்கு ஒன்றுமில்லை.

யான் தயாரித்த மூலிகையை எதனால் என்பதை கூட சொல்கின்றேன்.

அப்போதெல்லாம் மனிதர்கள் பின் பெரிய அரசர்கள் இவர்களெல்லாம் தன் மனம் போன போக்கிலே சில சில தீய செயல்களிலும் பின் நடந்து கொண்டிருக்கையில் பல விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். அதனால் யான் தயாரிக்கும் மூலிகையை பன்மடங்கு என் சீடர்களை வைத்து பலருக்கு கொடுத்தேன் அதனால் அவர்கள் போதை மயக்கத்திலேயே இருந்து இருந்து ஆயுற் கடலில் மீந்து விட்டனர். 

ஆனாலும் இதைத்தான் செய்து வந்தேனே தவிர நல்லவற்றிற்கு தான் செய்து வந்தேனே தவிர, தீயவை செய்வதற்கு அல்ல.

ஆனாலும் இக் கலியுகத்தில் மனிதர்கள் தீயவைகளுக்காகவே இதனையும் பின் ஏற்றம் மாற்றி ஏற்றம் ஏற்றி பின் பயன் படுத்துகின்றனர்.

ஆனாலும் அவர்களுக்கு பலமாக கர்மாக்கள் சேரும். சேரும் என்பதே உண்மை.

சித்தர்கள் எழுதி வைத்ததை மனிதன் எவனாலும் கண்டுபிடிக்க முடியாது என்பது திண்ணமான வாக்கு.

ஆனால் மனிதனோ சித்தன் எந்தனுக்கு தெரியும் சித்தன் என்னிடத்தில் பேசுவான் என்றெல்லாம் பொய் பித்தலாட்டம் ஆடிக் கொண்டிருக்கின்றான்.

ஆனாலும் யாங்கள் சித்தர்கள் கவனித்துக் கொண்டே தான் இருக்கின்றோம்.

ஆனால் அவந்தனக்கு  நிச்சயமாய் கடைசியில் வரும் கஷ்டங்களை எண்ணிப் பார்த்தால் அப்பப்பா!!!!!

யான் சொல்வதற்கு வாய் இல்லை வார்த்தைகள் இல்லை.

 இதனையுமென்று இறைவன் படைத்திருக்கின்றான் இப்புவியுலகில் எப்படி வாழ வேண்டும் என்பதை கூட தீர்மானித்து தான் அனுப்புகின்றான் இப்புவி உலகத்திற்கு மனிதர்களை.

ஆனால் மனிதர்களோ எதனையோ எண்ணிக் கொண்டு தான் தான் சிறந்தவன் எனக்கு அனைத்தும் தெரியும் என்று வேடம் போட்டு மனிதர்களை ஏமாற்றி பின் பொய் கணக்கு போட்டு அவந்தன்  பாவத்தை அவந்தனே அனுபவிக்கக்கூடியது மட்டுமில்லாமல் பல பாவங்கள் ஏற்றுக்கொண்டு அனுபவித்து கடைசியில் சித்தர்களே !
ஈசனே !

முருகனே !

பின் பிள்ளையோனே! என்றெல்லாம் கூவியழைத்தால் இறைவன் வந்து உதவி விடுவானா என்ன????

இல்லை நீ செய்யும் கர்மம் நீ தான் அனுபவிக்க வேண்டும் என்பது விதி.

அதை தடுப்பதற்கு இவ்வுலகத்தில் மனிதர்கள் எவராலும் முடியாது முடியாது என்பேன்.

பல சித்தர்களும் பல நூற்றுக்கணக்கான திருத்தலங்களில் ஜீவசமாதி அடைந்துள்ளனர் அவையெல்லாம் வருங்காலத்தில் அனைவருக்கும் தெரிவிப்போம் சித்தர்கள் யாங்கள்.

நல்லோர்களுக்கு மட்டும் தான் விடிவெள்ளி உண்டு.

என்பதுபோல் ஆனாலும் தீயவர்களுக்கு என் வாக்குகள் செல்லாது செல்லாது செல்லாது இனிமேலும் சித்தர்கள் வாக்கு தீயோர்களுக்கு செல்லாது பின் அப்படி சென்று விட்டாலும் பின் சித்தர்கள் எவர்கள் என்றெல்லாம் பொய் கூறிக் கொண்டு வாழ்ந்து திரிவார்கள் அதனால் இனிமேலும் எங்களுடைய அனுக்கிரகம் பெறுவதற்கு பல சுத்த சன்மார்க்கத்தை ஜீவகாருண்ய விதியை கடைப்பிடித்தால் பயன்படுத்தினால் மட்டுமே அவர்களுக்கு விடிவெள்ளி.

அவர்களை யாங்கள் சித்தர்கள் கையைப் பிடித்து அழைத்துச் செல்வோம் செல்வோம் என்பது மெய்யே.

பொய்யான மனிதர்களடா!

பொய் பித்தலாட்டங்களடா! 

பொய்யான உலகமடா!

பொய்யான கலியுகமடா!

கலியுகமடா பொய்யாகவே ஆகுமடா!! 

அனைத்தும் பொய் ஆகுமடா!!!

மனிதன் மனிதனையே இழிவுபடுத்துவானடா!

ஒழுக்கம் இல்லாமல் வாழ்வானடா !

மிஞ்சியும் போனால் மனிதனை மனிதனே கொல்வானடா! பணத்திற்காக.

அனைத்தும் பணத்திற்காக.

இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் தக்க சமயத்தில் பதிலடி கொடுப்பான் என்பது மெய்யே.

உண்மையடா!

போலியடா! 

எதனையடா விட்டுவிடுவது என்பதெல்லாம் மனிதனுக்கு தெரியாது.
நுழைந்தால் இறைவன் காப்பாற்றுவான்.

அனைத்தும் செய்துவிட்டு இறைவன் காப்பாற்றுவான் என்றால் இறைவன் என்ன உந்தனுக்கு வேலைக்காரனா??? 

முட்டாள் மனிதனே சிந்தித்துப்பார்.

யாங்கள் மனிதர்களை இனிமேலும் தாக்குவோம் பலத்த பலத்த  அடிகளால்.

ஏனென்றால் மனிதனுக்கு புத்திகள் இல்லாமல் குறுக்கு புத்தியிலே  சென்றுவிட்டு திருடிக் கொண்டு வாழ்ந்து வருகின்றான் இவையெல்லாவற்றையும் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் அமைதியாக.

இனிமேலும் வந்ததடா காலம் எங்களுக்கே!! 

பார்ப்போம் நீங்கள் பெரியவர்களா? என்று!

ஆனாலும் பொய் வேடம் போட்டு சித்தர்கள் என்றெல்லாம் இதைச் செய் அதைச் செய் என்றெல்லாம் பொய் பித்தலாட்டம் ஆடுகின்ற மனிதா!! ஏனடா???

உன் வாழ்க்கையை நீயே பார்க்க முடியவில்லை என்று யாங்கள் பலமுறையும் கூறி விட்டோம்.

அமைதியாக இரு அமைதியாக தரிசனம் காண். 

பொய்யான கணக்கிற்கு இவ்வுலகத்தில் இனி இடமில்லை.

யாங்கள் இனிமேலும் காப்போம் இவ்வுலகத்தை மீண்டும் இத்தலத்திலேயே ஒரு வாக்கையும்  உரைக்கின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

2 comments:

  1. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  2. Translation:
    https://drive.google.com/file/d/125L3yJ9Ns_nO1nxI2XRwv8hazUu0P4ee/view?usp=sharing

    ReplyDelete