​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 14 April 2024

சித்தன் அருள் - 1588 - கேள்வி-பதில் - 2 !

 

அகத்தியன் உதவி செய்ய வேண்டுமென்றால் புண்ணியம் சேர்த்திருக்க வேண்டும். அதனால் தான் புண்ணிய காரியங்களை செய்யச் சொல்கிறேன்.

கேள்வி:- நிறைய நல்ல விஷயங்களை பற்றி எழுத வேண்டும். 

பதில்: "அப்பனே சிறிது காலம் போகட்டும்! பிறகு யாமே, ஒன்றை எடுத்து தருகின்றேன். நீயும் புரிந்து பிடித்துக்கொள்வாய்."

கேள்வி: எத்தனையோ அடியவர்கள் தங்களின் குறைகளை, தன் விஷயத்தை பலவாறு உரைக்கின்றார்கள். அடியேனுக்குள் இருந்து நீங்கள் அவர்கள் கூறுவதை  கேட்டு அவர்களின் பிரச்சினையை தீர்த்து வைக்க வேண்டும்.

பதில்: "அப்பனே உடனடியாக என்பது முடியாத விஷயம், காரணம் என்னவென்றால் புண்ணியங்கள் சேமிப்பில் கிடக்க வேண்டும் அப்பனே. அப்பொழுதுதான் ப்ரம்மாவிடத்தில் சென்று யானும் முறையிடவேண்டும். அப்பனே! அப்படி புண்ணியங்கள் இருந்தால், யானே சொல்லி நடத்திக் கொடுப்பேன் அப்பனே. அனைவருக்கும் எங்கள் ஆசிகள் உண்டு அப்பா! மனிதனை புண்ணிய பாதையில் அழைத்துச் சென்று நல்லது செய்யத்தான் யங்கள் போராடிக் கொண்டு இருக்கின்றோம் அப்பனே. ஆனால், அப்பனே, அவனவன் எதை எதையோ செய்துவிட்டு, தானாகவே மாந்திரீகத்தில் நுழைந்து, இன்னும் எதை எதையோ செய்து, புண்ணியங்கள் இல்லாமல் வருகின்றானப்பா.  இறந்த பிறகு அனைத்து ஆத்மாக்களும் அழுதுகொண்டே எங்களை நெருங்கித்தான் போகும். அப்பொழுது அழுது கொண்டே போகுமப்பா, இவ்வாறெல்லாம் செய்து விட்டேனே என்று. அப்பொழுது யாங்கள், "நீ தெரியாமல்தான் செய்தாய்! சிறப்பு இருக்கின்றது. அடுத்த பிறவியில் யாங்கள் வந்து உன்னை வழி நடத்தி பின் முக்திக்கு அழைத்து செல்வோம் என்று கூறுவோம். அப்படிப்பட்ட ஆன்மாக்கள், எப்படியாவது எங்களைத் தேடி வந்துவிடும் அப்பா. அப்படி தேடி வராவிடிலும், புண்ணியங்கள் செய்து வந்தாலே, யான் வருவேனப்பா! யான் வந்து வாக்குகள் செப்புவேனப்பா. தகுதி உடையவனாக இருக்க வேண்டும் அப்பா.

அப்பனே!, இறைவன் கொடுப்பதற்கு தயாராக இருக்கின்றான். மனிதனுக்கு பெற்றுக் கொள்ளத்தான் தகுதி இல்லையே.  யான் ஆசிகள் கொடுக்க தயாராக இருக்கின்றேன். ஆனால், மனிதன் அதை பெற்றுக்கொள்ள, புண்ணியங்கள் அவசியமாகின்றது. 

அதனால், அப்பனே, தன்னால் முடியாவிடினும், வாயில்லா ஜீவராசிகளுக்கு உங்களால் இயன்றதை செய்து வாருங்கள். அப்பனே! மனம் இருந்தால், மார்க்கமும் உண்டு!

வயது ஆக ஆக, உடல் உள்ளுறுப்புகள் பாதிப்படையும். அதனால் தான் இயற்க்கை உணவை உட்கொள்ளுங்கள் என்கிறேன். இயற்க்கை மருந்துகள் உடலில் ஊற, இரு வருடங்களாகும். உடலை பக்குவப்படுத்த வேண்டும். அதனால் தான், சிறு வயது முதலே இயற்கை உணவை உண்ணுங்கள் என்று கூறி வருகின்றோம்.

மனிதன் தன் மூளையின் சக்தியை 100% உபயோகப்படுத்துகின்றானா?

இல்லையப்பா! 10% தான் உபயோகப்படுத்துகின்றான். 100% உபயோகப்படுத்தினால், அவனுக்கு அனைத்தும் தெரிந்துவிடும் அப்பா. [இவ்வுலகிலே தன் மூளையின் சக்தியை அதிகமாக உபயோகிக்கும் ஒரே உயிரினம் "டால்பின்" தான். 20%]

ஒரு மனிதன் 100% ஆக முயற்சி செய்தால்?

புருவ மத்தியில் நடராஜனின் நடனத்தை காணலாம். ஞான நிலையை அடைந்துவிடுவான்.

ஞாபக சக்தி அதிகரிக்க!

தினமும் சிரசாசனம் செய்ய வேண்டும்.

இத்தனை பிரச்சினைகளுக்கு இடையில், நிறுத்தாமல், நேரம் காலம் பாராமல், நீங்கள் தரும் வாக்கை தொகுத்து அளித்தாலும், வாசிக்கும் யாருக்குமே உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று தோன்றுவதில்லையே!

அப்பனே! எது என்று புரிய புரிய. வரும் காலத்தில் உபயோகப் படுமப்பா. இப்பொழுது நன்றி கெட்டவர்கள் தான் அதிகம் என்பேன். உண்மைகள் வெளி வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் தான் அப்பனே. ஆனாலும், இதை பார்த்திட்டு, மனதில் வேண்டிக் கொள்வதையும், யான் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றேன். பெற்றால் தான் பிள்ளையா? 

கண்டமாலை (கான்செர்) ஏன் வருகிறது என்றால், கோமாதாவின் மாமிசத்தை உண்பதினால். பிறர் உண்பதை பார்த்துக் கொண்டிருப்பவனுக்கும், அதை தடுக்காததினால் இது வரும். கோமாதாக்களை பாதுகாப்பது மிக சிறந்த பரிகாரம். அப்படி பாதுகாக்கத் தவறினால், இந்த நோய் கொன்று விடுமப்பா. பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே.

இந்த கலியுகத்தில் ஆரோக்கியங்கள் நலிவடையும். இது நல்லவிதமாக இருக்க, நல் எண்ணங்களுடன், நற் செயல்களை செய்தாலே போதுமானது. வாயில்லா ஜீவ ராசிகளுக்கு அன்னம் கொடுத்திட, அவைகள் மகிழ்ந்தாலே, ஈசனும் மகிழ்ந்து கிரகங்களை கட்டுப்படுத்துவான்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

7 comments:

  1. மிக்க நன்றிகள் ஐயா...இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha
    Happy new year
    people are earning from gulf and Western countries directly and indirectly.
    We get their money and also their sin of cow slaughter.
    We should vote carefully
    Regards
    Chitra


    ReplyDelete
  3. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM ANAMASHIVAYA

    GURUVADI SARANAM
    THIRUVADI SARANAM
    NANRI AYYANE

    ReplyDelete
  4. Appa Guruvae.... Ungal Vazhikaattudalil naangal payanikka aasi koorungal Ayyanae....

    ReplyDelete
  5. குருநாதரின் அருளால் ஒரு ஆய்வுப் பதிவு.

    https://fireprem.blogspot.com/2024/03/blog-post.html?m=1

    ReplyDelete