​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 10 April 2024

சித்தன் அருள் - 1584 - அகத்தியப்பெருமானின் உத்தரவு!



8/4/2024 அன்று காசியிலிருந்து குருநாதர் அகத்திய பெருமான் உத்தரவு.

வணக்கம் அகத்தியர் அடியவர்களே குருநாதர் கட்டளைப்படி திரு ஜானகிராமன் ஐயா காசிக்கு சென்றுள்ளார்.

குருநாதர் அகத்திய பெருமான் பொது வாக்குகள் உரைத்த பின் அடியவர்களுக்கு தனி வாக்குகள் தரும்பொழுது பொதுவாக்குகளாக சில விஷயங்களை கூறினார் இதை மக்களுக்கு உடனடியாக எடுத்து கூறும்படியும் உடனடியாக இதன்படி செயல்பட வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!!

அப்பனே நலன்களாக எம்முடைய ஆசிகள்!!!!

எதை என்று புரிய புரிய அப்பனே எவை என்று அறிய அறிய இவ்வுலகமே அப்பனே பாவத்தால் நிறைந்திருகின்றது அப்பனே!!!!! இப் பாவங்களை எல்லாம் நீக்குவதற்கு புண்ணியங்களே அப்பனே தீர்வு என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் ஈசன் ஏற்கனவே கட்டளையிட்டு விட்டான் அப்பனே எதை என்று அறிய அறிய சூரியனிடத்திலும் எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய அப்பனே சந்திரன்டத்திலும் அப்பனே!!!! மனிதர்களின் பாவங்கள் மிகுதியாக மிகுதியாக சூரியன் நெருங்கி வந்து சுட்டெரித்துக் கொண்டே இருக்கின்றான் அப்பனே... இது ஈசனின் கட்டளை அப்பா!!!!

ஆனாலும் அப்பனே அகத்தியன் அதைச் செய்யவில்லை இதை செய்யவில்லை என்றெல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடாது அப்பனே உங்களை காப்பாற்றவே யாங்கள் வாக்குகளாக தந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே எதை என்று அறிய அறிய!!!!

யான் ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் அப்பனே எதை என்று கூட புண்ணியங்கள் அப்பனே உங்களிடத்தில் நிரம்பி இருந்தால் உங்களை யாராலும் எதுவும் செய்ய முடியாதப்பா!!!! எதை என்று அறிய அறிய அப்பனே

அனைவருக்கும் நீர் தானம் செய்யுங்கள் அப்பனே!!!(நீர் மோர் அன்னதானங்கள்) அப்பனே இவற்றை அதிகப்படுத்துங்கள் அப்பனே.... மனிதர்களுடைய பாவத்தை நீக்குவதற்கு புண்ணியம் மட்டுமே அப்பனே எதை என்று கூட அப்பனே இப்படி நீங்கள் செய்து கொண்டே வந்தால் தான் அப்பனே ஈசனும் சூரியனிடம் சற்று விலகி நிற்க கூறுவானப்பா!!!! அப்பனே மனிதர்களிடத்தில் புண்ணியம் இருந்தால் மட்டுமே அனைவருக்கும் நன்மை ஏற்படும் என்பேன் அப்பனே!!!

(திரயம்பகேஷ்வர் ஜோதிலிங்க ஆலய வாக்கில் ஈசன் புவியில் பாவங்கள் அதிகமாகி விட்டதால் ஏற்கனவே சூரியனை மக்களை நெருங்கி வரச் சொல்லி உத்தரவிட்டு விட்டார் என்பதை குருநாதர் கூறியிருந்தார்)

நீங்கள் புண்ணியங்களை செய்து கொண்டே வந்தால்

ஈசனும் மனம் மகிழ்ந்து சூரியனை விலகி இருக்க கட்டளை இடுவானப்பா!!!

மழையாக பெய்விப்பான் அப்பா!!!!! குளிர வைப்பானப்பா

அதேபோலத்தான் அப்பனே ஏற்கனவே ஈசன் சந்திரனிடத்தும் கட்டளை இட்டு அப்பனே எதை என்று அறிய அறிய சந்திரனும் நெருங்கி அப்பனே

அப்பனே மனதில் எண்ணங்கள் நன்றாக இருக்க வேண்டும் அப்பனே தீயவை போட்டி பொறாமை காமம் இவற்றையெல்லாம் ஒழிக்க வேண்டும் அப்பனே அப்போதுதான் ஈசனும் சந்திரனுக்கு விலகி இருக்கும் படி கட்டளை இடுவான் அப்பா!!!

சந்திரன் நெருங்க நெருங்க அப்பனே  . அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்  அப்பனே யாராலும் நிம்மதியாக நித்திரை (உறக்கம் )கொள்ள முடியாதப்பா!!!! மனக்குழப்பங்கள் மனச்சஞ்சலங்கள் ஏற்படும் அப்பா!!!!

மனதை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் அப்பனே மனது தூய்மையாக இருந்தால்தான் அப்பனே சந்திரனுக்கும் ஈசன் கட்டளை இடுவானப்பா!!!!

நீங்கள் செய்யும் புண்ணியங்கள் தான் அப்பனே உங்களை காப்பாற்றும் புண்ணியமே வெல்லும் அப்பா!!!!

அப்பனே புண்ணியங்கள்  இருந்தால் மட்டுமே இந்த  உலகில் வாழ முடியும் என்பேன் அப்பனே

மனிதன் தன் சுயநலத்திற்காக எதையெதையோ செய்து கொண்டு எப்படி எப்படியோ அழித்துக் கொண்டு அப்பனே தான் மட்டும் அழியாமல் மொத்தத்தையும் அழித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே அழிவில் இருந்து உங்களை காப்பாற்ற அப்பனே யாங்கள் சித்தர்கள் வந்து கொண்டே இருக்கின்றோம் அப்பனே எப்பொழுது என்ன செய்ய வேண்டும் எதை செய்ய வேண்டும் என்பதெல்லாம் மனிதர்களுக்கு செப்பி செப்பி வழிகாட்டிக் கொண்டே வருகின்றோம் அப்பனே.

எதை என்று புரிய புரிய யாங்கள் காட்டுகின்ற வழியில் அப்பனே நீங்கள் வந்தால் எதை என்று அறிய அறிய யானே உங்களுடன் இருந்து அனைத்தையும் செய்து கொடுப்பேன் என்பேன் அப்பனே.

என் பக்தர்கள் ஆயினும் சரி அப்பனே என் வழியில் வருகின்ற அனைவருக்கும் யான்  எதை என்று கூட ஒன்றை மட்டுமே சொல்கின்றேன் அப்பனே.... புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள் அப்பனே!!!! நீங்கள் எப்படி புண்ணியங்கள் செய்ய வேண்டும் என்பதை எல்லாம் அப்பனே யான் கூறிக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!! நீங்கள் புண்ணியம் செய்வதற்கு வழியை யான் காட்டிவிட்டேன் அப்பனே... புண்ணியத்தின் பாதையில் அப்படி நீங்கள் அனைவரும் வாருங்கள் அப்பனே!!! மாற்றமும் ஏற்றமும் உண்டு என்பேன் அப்பனே

யான் சொல்லியதை 

அப்படியே கேட்டு வந்தாலே போதுமானதப்பா உங்களுக்கு புண்ணியமும் சேரும் அப்பா இறைவனின் தரிசனமும் கிடைக்கும் அப்பா  யானே அப்பனே உங்கள் வாழ்கையில் மாற்றத்தையும் ஏற்றத்தையும் அப்பனே ஏற்படுத்தி  தருவேன் என்பேன் அப்பனே!!!!

கலியுகம் என்றாலே அழிவுயுகம் தானப்பா!!!

அப்பனே சூரியனின் தாக்கம் குறைய வேண்டுமென்றால் அப்பனே யான் கூறியவாறு நீர் எதை என்று கூட மோர் இயலாதவர்களுக்கும் சகல ஜீவராசிகளுக்கும் முடிந்தவரை உதவி செய்து கொண்டே வாருங்கள் அப்பனே.

நீங்கள் இப்படிச் செய்யச் செய்ய அப்பனே சூரியனும் குளிருவான் ஈசனும் சூரியனுக்கு கட்டளை இட்டு விடுவான் சூரியனே சற்று பொறு பொறு என்று!!!!அப்பனே

அப்பனே... சூரியனையும் சந்திரனையும் சாந்தப்படுத்த வேண்டும் என்பேன் அப்பனே!!!!

இதை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்பேன் அப்பனே

என் பக்தர்கள் அனைவரும் இன்னும் இன்னும் தான தர்மங்கள் இவ்வுலகில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் நீர் தானம் செய்யுங்கள் அப்பனே....

யாங்கள் இருக்கின்றோம் அப்பனே அனைத்தையும் மாற்றவோம் அப்பனே சித்தர்கள் பேச்சைக் கேட்டு நடந்தாலே உங்களுக்கு வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவது உறுதி அப்பனே அனைவரும் இதை கடைப்பிடித்து வாருங்கள் அப்பனே ஆசிகள் ஆசிகள் அப்பனே!!!

வணக்கம் அகத்தியர்  அடியவர்களே நம் குருநாதர் பெருமான் இன்னும் பொதுவாக்கிலும் இந்த உலகத்திற்கு என்னவெல்லாம் வரப்போகின்றது என்னென்ன மாற்றங்கள் நிகழப் போகின்றது என்பதை பற்றி எல்லாம் எடுத்து கூறி இருக்கின்றார் அவை அடுத்தடுத்த வாக்கில் வரும்... இந்த வாக்கு ஒரு அவசர உத்தரவாக அனைவரிடத்திலும் கொண்டு போய் சேர்க்கும் படி கூறி இருக்கின்றார்... இன்னும் பல விஷயங்கள் பொதுவாக்கில் வெளிவரும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

4 comments:

  1. ஓம் ஸ்ரீ லோபாமுத்ராம்பிகா சமேத அகத்திய பெருமான் துணை.

    ReplyDelete
  2. OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA
    OM NAMASHIVAYA

    ReplyDelete
  3. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  4. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete