​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 28 March 2024

சித்தன் அருள் - 1576 - இவர்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இவர் என்கிற தலைப்பில், 1573/1575 தொகுப்புகளில் ஒரு சிவனடியாரை பற்றி விளக்கியிருந்தேன்.

இன்று அகத்தியப்பெருமான், அவரின் ஜீவநாடி, திரு ஜானகிராமன் ஆகியோர் பொதிகை சென்று விட்டு திரும்பி போகும் வழியில், அடியேனை பார்க்க வந்திருந்தனர்.

நலம் விசாரித்து, ஆசிகள் தந்தார்.

அடியேனுக்கு நண்பரின் எண்ணம் உதிக்கவே, அவரை வீட்டுக்கு வரச்சொன்னேன். அகத்தியப்பெருமானின் நாடியில் ஏதேனும் கேட்கலாம் என்றுரைத்தேன்.

வந்தவர் அகத்தியப் பெருமானை வணங்கிவிட்டு அமர்ந்தார். வந்தவர் யார் என யாருக்கும் தெரிவிக்கவில்லை.

"இவர் என் நண்பர். இவருக்கு ஏதேனும் வாக்கு உள்ளதா, என அகத்தியரிடம் கேட்டு சொல்லுங்கள்" என்று கூறி முடிப்பதற்குள் அகத்தியப் பெருமான் நாடியில், ஒரு வரியில், அவரை பற்றி விளக்கி முடித்துக் கொண்டார்.

"இவனைப் பற்றி என்ன சொல்ல! வாழ்க்கையில், அனைத்தையும் உணர்ந்து, அனுபவித்து வந்தவன்" என்றார்.

ஏன் இந்த நிகழ்ச்சியை இங்கு தெரிவிக்கிறேன் என்றால், ஒருவன் செய்த நல்லது, எத்தனை வருடமானாலும், சித்தர்களால் போற்றப்படும். இது போல் வாழ்க்கையை வாழப் பாருங்கள். சித்தர்கள் அருள், என்றும் துணை நிற்கும்.

நேற்றுதான் இவரைப்பற்றி உங்கள் அனைவருக்கும் தெரிவித்தேன், இன்று அவர் அகத்தியப்பெருமானின் வாக்குகளை பெறுகிறார். கடைசியில், நாடியை வாங்கி கையில் வைத்து அகத்தியப் பெருமானை வணங்கி, கண்ணில் ஒற்றிக் கொண்டுவிட்டு சென்றார்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. நல்லதுங்க ஐயா...மிக்க நன்றி🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete