​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 12 May 2023

சித்தன் அருள் - 1336 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 2


1. குருதேவா, ஐயன் திருமூலரின் காலம் யாருக்கும் இதுவரை தெரியவில்லை. திருமந்திரத்தில் தங்களைப் பற்றிய குறிப்பும் உள்ளது. தாங்கள் விளக்கி அருள வேண்டுகிறேன்

எதை என்றும் அறிய! அறிய! நிச்சயம், திருமூலர் வந்து, இதற்கு பதிலளிப்பான். வாக்குகளும் வந்து கொண்டேதான் இருக்கின்றது. திருமூலர் இப்பொழுது வாழ்ந்து கொண்டேதான் இருக்கின்றான். ஆனால், நிச்சயம், அறிந்து, அறிந்து உடம்பில்லை, அவ்வளவுதான். நிச்சயம் ஒவ்வொன்றாக தெரிவிப்பேன். ஏன் திருமூலனே தன் வாழ்க்கை வரலாற்றை தெரிவிக்கப்போகின்றான். பொறுத்திருக்கத்தான் வேண்டும். பொறுத்திருந்தால்தான் வெற்றிகள் நிச்சயம். அதனால், நிச்சயம், மூலனே வந்து உரைப்பான். 

2. ஐயனே, இதுவரை 37 அகத்தியர்கள் வாழ்ந்துள்ளனர் என்று நூல் பதிப்பித்து உள்ளார்கள். அனைத்து அகத்தியரும் தாங்களே அல்லவா குருவே?.  எம்மை தெளிவு பெற  வைக்க வேண்டுகிறேன்.

எவை என்றும் அறிய! அறிய, எவை என்றும் புரிய! புரிய! மனித முட்டாளே! புசுண்டன் உரைக்கின்றேன்! இவ் உலகத்திற்கு, சூரியன் ஒருவன்தான். பின் சந்திரன் ஒருவன்தான். ஈசன் ஒருவன்தான். ஆனால், மனித ஜென்மங்கள், அகத்தியன் பெயரை வைத்துக் கொண்டு "யான்! அகத்தியன்! யான்! அகத்தியன்!" என்று கூறி வருகின்றனர். கலியுகத்தில் கூட இப்படித்தான் நடந்து கொண்டு இருக்கின்றது. மனிதனை காரி துப்பிவிடுவேன்!

3. அப்பா, இரு நாள் முன்பு அதிகாலை கனவில் தோன்றிய காட்சி! சயன கோலத்தில் வாசுதேவர் கல் சிலையின் தோற்றம் காண்கிறேன். அதே கோலம் பின்னால் உள்ள மிகப் பெரிய மலையில் பெரியதாய் தத்ரூபமாக செதுக்கப்பட்டு அங்கு இதை வடிவமைத்தது சுப்பிரமணியர் என்று முருகர் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மேல் பிரமிப்பாக சென்றேன். அங்கு ஆலைய கோபுரம் மிகப் பெரிதாய் தோற்றம் கொண்டு உள்ளது. செதுக்கியது போன்று சீரான நகரம். மனித நடமாட்டம் இன்றி தேவ காட்சி போல உள்ளது. இது என்ன சூட்சமம் அப்பா?  இந்த காட்சி இன்று வரை கண் மூடினால் மனதில் படமாய் தோன்ற காரணம் யாது? எதை உணர்த்த காத்திருக்கிறா்கள்? எங்கள் அனைவர்க்கும் தெரியப்படுத்த விரும்பினால் பொது வாக்காய் உரைத்திடுநகள்.

எதை என்றும் அறிய! புசுண்டன் பேசுகின்றேன்! பின் மனது தான் கல், மனிதன் தான் கல். இறைவனை கல் என்று சொல்ல எவ்வளவு தகுதி? ஆனால், பின் நம்பிக்கை, பக்தி இங்கு பொய்யாகிவிட்டது. அதனால் உரைக்கவில்லை. பின் அகத்தியன் பதில் உரைப்பான்.

அகத்தியர்: அப்பனே! ஏன் இதை புசுண்ட முனி சொல்கின்றான் என்றால், அப்பனே! பின், கல்லை கூட பேச வைக்கலாம் அப்பனே. எது என்று அறிய! அறிய! அப்பனே! பக்திகள் மிகுந்து காணப்பட்டால் அப்பனே! ஆனால், எவை என்று கூற அப்பனே! முன்பெல்லாம், கல்லை தெய்வமாக வழிபடுவார்கள் அப்பனே! பின், அக்கல்லிலே தெய்வம் இருந்து பேசுவார் அப்பனே! ஆனாலும், எதை என்று அறிய~! அறிய! ஏற்கனவே யான் சொல்லிவிட்டேன் அப்பனே! இறைவன் ஒருவனே! அதை எல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் மனிதன் புரிந்து கொள்ளப் போவதில்லை. மூளையும் இல்லை. அதனால், ஒவ்வொன்றாகத்தான் வரிசைப்படுத்துவேன்!

புசுண்டன்: "இறைவனே! கல்லா! எப்படி மானிடருக்கு தகுதிகள் இருக்கின்றது. பக்தியே இல்லாதவனுக்கு, பின் சொல்லிக் கொண்டிருந்தாலும் ஒன்றும் விளங்காது.  

4. குருவே, அப்பா வணக்கம் மிகப்பழமையான கோவில்களில் கண்டிப்பாக சித்தர் ஆட்கொண்டிருப்பார்கள்( ஜீவ இருப்பிடம்) என்று கேள்விபட்டிருக்கிறேன், உத்திரகோசமங்கையில் எந்த மகான் ஆட்கொண்டுள்ளார் (ஜீவ இருப்பிடம்) ஜீவ இருப்பிடம் எங்கே உள்ளது அப்பா!

அங்கே பல ரிஷிகள், ஈசனை நோக்கி வந்தவர்கள் தான். ஏதாவது ஒன்றென்றால், பல சித்தர்களும், இன்றும் ஈசனை நோக்கி, உத்தர கோசமங்கைக்கே செல்வார்கள். ரிஷிகளும் கூட. ஏன் என்றால், அங்கே தான் அனைத்தும் நடக்கின்றது. பிறப்பில் கூட அறியாத ஒன்றை கூட, நிச்சயம், அங்கே தான் நடந்து கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலையில், அங்கே சென்று கொண்டிருந்தால் வாழ்க்கையின் தத்துவத்தை கூட புரிந்து கொள்ளலாம். இதை நன்றாக புரிந்து கொள்ள, திருமூலர் எழுதிய திருமந்திரத்தை படித்து வரச்சொல், நிச்சயம் உரைப்பேன் நான்.

5. பெருமானே ஒருவர் பிறந்த இறைமார்க்கத்திலிருந்து கொண்டு வேறு இறைமார்க்க வழிபாடு செய்வதால் இறைவன் அருள் கிடைக்குமா அல்லது சாபங்கள் ஏற்படுமா குருவே.

புசுண்டன் உரைக்கின்றேன்! இறைவன் ஒருவனே! பின் இறைவன் என்ன, மாறி மாறி உரைத்துக் கொண்டிருக்கின்றானா என்ன? அதையும் கூட, எப்படி கேள்விகள் கேட்பது என்று தெரியாமல், ஆனாலும், இவந்தானுக்கு சாட்டை அடி, என்னிடத்திலே உண்டு! துரத்தி, துரத்தி அடிப்பேன். பின்பு வருவான் அகத்தியரிடம். பின்பு உரைக்கின்றேன் இது பற்றி.

6.குருநாதா! வணிக உலகம் மருத்துவ காரணஙகள் கூறி மனிதர்களை அடிமையாக்கி வருகிறது. நவீன தொழில்நுட்பங்கள் கொண்டு உலகத்தை தங்கள் காலடியில் வணிகம் வைத்துள்ளது. இதிலிருந்து உலகம் விடுபட அகத்தியர் பெருமான் வழி காட்ட வேண்டும்.

புசுண்டன் பேசுகின்றேன்! முட்டாள் மனிதனே, அகத்தியன் பல உரைகளிலும் பலப்பல மூலிகைகளை செப்பிவிட்டான். அதை கூட பயன்படுத்த தெரியவில்லையே! அதனால், இவந்தானுக்கு ஓர் தண்டனை. பல நபர்களுக்கு, அகத்தியன் சொன்னதை செய்து வர வேண்டும்! இவன் கட்டங்கள் தீரும்! கட்டங்கள், இவனை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது. ஏன் என்றால், அமைதியாக இருப்பவர்களுக்கு, ஏதாவது ஒரு கேள்வியை கேட்டு விடலாமே, பின் சித்தர்கள் சொல்லி விடுவார்களே என்கிற நினைப்பு! பின் எவற்றை உரைக்க, சித்தன் என்ன உன் வேலைக்காரனா, உன்னிடம் உரைப்பதற்கு! இறைவனிடம் சென்று எப்படி கேட்க வேண்டும் என்று தெரியாதவன் என்ன வணங்கி என்ன பிரயோசனம்! சாதாரண மனிதனுக்கு கூட பல வழிகளிலும், மரியாதை, மதிப்பு. ஆனாலும் இறைவனிடத்தில், தேடி, தேடி எங்களிடத்தில் வந்தால் தான் சரியான பதில்கள் கிட்டும். பின் நீங்கள் நினைக்கும் போதெல்லாம் யாங்கள் வந்துவிட்டால், எங்களுக்கு இவ்வுலகத்தையே காக்க வேண்டும். இன்னும், இவ்வுலகத்தை காப்பவர்கள் யாங்கள்! இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கின்றோம். அங்கே நூறு ரூபாய் இருக்கிறது என்றால், தேடி தேடி சென்றடைந்து, அதை எடுத்து வீட்டில் பத்திரமாக பதுக்கிவிடுவான். எங்களிடத்தில் வருவதென்றால் நிச்சயம் சோதிப்பது, எதை என்று அறிவது, பின் எவை என்று சித்தர்கள் எல்லாம் உண்மையா என்று அறிவது இவை எல்லாம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. ஆனால், யாங்கள் நிச்சயம் உங்களை சோதித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். இன்னும் பதில்கள் வரும், பொறுத்திருந்தால்.

7. அய்யா   இமயமலையில்  உள்ள கைலாய மலையை பற்றி சொல்லுங்கள் அய்யா!

முதலில், திருவண்ணாமலையை பற்றி, எவை என்று அறியாமலேயே (இருக்க), அண்ணாமலை/உண்ணாமலையை வலம் வந்து, அண்ணாமலையை பற்றிய வரலாறை தெரிந்திருக்க, நன்று. பின் எவை என்று எழுந்து நிற்கவே வழிகள் இல்லயாம், பின் உயரத்துக்கு சென்று விட்டானாம். இங்கிருப்பதை பார்க்கச்சொல், பின்பு பார்ப்போம்.

8. குருவே! எளிய வழியில், பித்ருகடன் தீர்ப்பது பற்றி கூறுங்களேன்!

எவை என்றும் அறிய! அறிய! நிச்சயம் சொல்கின்றேன்! இயலாதவர்களுக்கு, பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு உதவிடச் சொல்லச்சொல், நிச்சயம் முன்னோர்கள், ஏதாவது ஒரு ரூபத்தில், வந்து உணவை வாங்கி உட்கொண்டு, கர்மத்தை எடுத்துச் செல்வார்கள். இதை செய்வார்களா என்றால், நிச்சயம் செய்ய மாட்டார்கள். சோம்பேறிகள். இதை செய்திட்டு வரச்சொல், வாக்குகள் பலமாக உரைக்கின்றேன்.

9. அய்யா  நட்டாலீஸ்வரர்  என்ற. நடு காவிரி ஆற்றில்  உள்ள  அகத்தீஸ்வரர்  கோவிலை. பற்றி. அறிய விருப்பம்  அப்பா அருள வேண்டும்!

யான், இரவில் அங்குதான் தங்கி இருக்கின்றேன். நிச்சயம் என்னுடைய தலம். யான் உருவாக்கியவளே, காவிரி நிச்சயம் அங்கு வந்தால், வளங்கள் பெற்று செல்வது உறுதி. அனைத்தும், எம் அருளால், அங்கு நடக்கும், வரும் காலங்களில்.

10. அய்யா. துறையூர்  ஶ்ரீ அகத்தியர்  சன்மார்க்க  சங்கம் பற்றியும்  ஆறுமுக அரங்கமகா தேசிகர் சுவாமிகள்  பற்றி கூறி அருள வேண்டும்.

எதை என்று அறிய! அறிய! ஒரே வரியில் முடித்து விடுகின்றேன்! என் பிள்ளை தானப்பா! அவன்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தியர் திருவடிகளே சரணம்

    ReplyDelete
  2. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete