​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 15 May 2023

சித்தன் அருள் - 1339 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 5


31. அய்யா! இந்த மனிதர்களுக்கு, எந்த விதத்தில் சேவை செய்து உதவலாம்?

முதலில் சித்தர்களை நாடுவது எப்படி என்று புரிந்து வரச்சொல்! பிறகு உரைக்கின்றேன்!

32. அய்யனே! நாக தோஷத்துக்கான, சிறந்த பரிகாரம் எது?

நிச்சயம் இல்லை! நிச்சயம் இல்லை. இவ் தோஷமானது முப்பது வயதுக்கு மேல் போய்விடும்! இதனை, இப்பொழுது அறிவியல் ரீதியாகவும் விளக்க முடியாது. நிச்சயம் உரைக்க முடியாது! எவ் திருத்தலம், எங்கு சென்றால், பாபங்கள் சேராதோ, அங்கு உரைக்கின்றேன்.

33. அப்பா! சோழபுரம் சிவன் கோவிலில் சமாதி அடைந்த சித்தரின் பெயரை கூற முடியுமா?

எதை என்று அறிந்து. அங்கே தான் நிச்சயம் உரைப்பேன். ஏன் என்றால், பின் ஈசனே கோபித்துக் கொள்வான்.

34. அய்யனே! ஒருவன் சம்பாதிக்கும் பணத்தின் எத்தனை சதவிகிதத்தை தான தர்மங்களுக்காக உபயோகிக்க வேண்டும்?

பின் சம்பாதித்தால், பின் கொடுக்க கூட மனசு வராதப்பா!

35. அகத்திய பெருமானுக்கு எனது சிரம் தாழ்ந்த அன்பு வணக்கங்கள்.‌ அகத்திய பெருமானே மனித உடலில் உள்ள ஆரா சக்தி இயங்கும் விதம் பற்றி விளக்கங்கள் கொடுங்கள் பெருமானே!

நிச்சயம் சொல்கின்றேன்! ஆனால், பொருத்தாக வேண்டும்! எவை என்று அறிய அறிய! எப்படி சொல்ல வேண்டுமோ, அப்படி, இறைவனை நாடித்தான் சொல்வேன்.

36. குருவே  கணக்கம்பட்டி மூட்டை சித்தர் என்பவர் யார்?

நிச்சயம் தெரிவிக்கின்றேன்! பொருத்தாக வேண்டும்!

37. அகத்தியம்பெருமான் திருவடிகள் பணிந்து, ஐயா, என்னுடைய தந்தை திருச்சி காந்தி மார்கெட் பகுதியில் அம்பாள் ஆலயத்தை புதுப்பித்து நிர்வகித்து வந்தார், அந்த ஆலயம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக அரசு அகற்றிவிட்டது. அடியேன் அம்பாளுக்கு 2 கிலோ மதிப்பில் கவச செய்து அணிவிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது ஆலயம் இல்லாத நிலையில், அம்பாள் விக்ரஹம் பாதுகாப்பு இல்லாத மற்றொரு ஆலயத்தில் உள்ளது. இதற்கிடையில் எனது தந்தை இறைவனடி சேர்ந்தார். அந்த வெள்ளி கவசம் எங்கள் வீட்டில் உள்ளது. தயவுகூர்ந்து, அந்த கவசத்தை எந்த வகையில் இறைவனிடம் சேர்க்க வேண்டும் என்று அகத்தியம்பெருமான் வழிகாட்ட பணிவுடன் வேண்டுகிறோம்.

எதை என்று அறிய! அறிய! இதை நிச்சயம் ஆனி மாதம் சொல்வேன்!

38. குருநாதா, அப்பா, மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய  மூல பவுத்திரமகுணமாக எளிய இயற்கை வைத்தியம் கூறுங்கள் ஐயா.

இவை எல்லாம் கர்மாவினால்தான் வருகின்றது. நிச்சயம் சொல்வேன். கர்மா சேராத ஒரு ஆலயத்தில் இருந்து சொன்னால்தான் நல்லது. பொறுத்திருக்க! நிச்சயம் பதில் சொல்வேன்! இங்கெல்லாம் இருந்து சொன்னால், நிச்சயம் கர்மா!

39. அகத்தியர் அப்பாவிற்கு தங்கள் திருவடி போற்றி போற்றி... லக்னத்திற்கு ஆறாம் வீட்டில் மனோக்காரகன் அமைய, அதுவும் ஜென்ம நட்சத்திரம் சந்திரனின் திருவோணம் மகர வீட்டிலேயே இருக்க,  புத்திக்காரகன் திசையில், ஏழரை நாட்டான் நடக்கையில் அவ்ஜாதகர்  மன அழுத்த நோய்யுக்குள் தன்னிலை மறந்து பிரமை நிலையில் சென்று விடுவாரா....... அதிலிருந்து குணமடைய வழிகள் உண்டா அய்யா....

நிச்சயம் கர்மா இவனை வந்தடைந்து கொண்டு. எதை என்றும் அறியாமலே. நிச்சயம் கர்மா காலம். ஆனால், கிரகங்கள் அனைத்துமே நல்லதை செய்யும். ஆனால், கர்மா அனைத்துமே அனுபவித்து ஆகவேண்டும் என்பது தீர்ப்பு! அதை நிச்சயம் போக்க வழிகள் சொல்வேன், பொறுத்திருந்தால்.

40. ஐயா வணக்கம் ஓம் ஸ்ரீ லோப முத்ரா அன்னை பாதம் போற்றி ஓம் ஸ்ரீ அகத்தியர் அப்பா பாதமே போற்றி  அன்னை ஓம் ஸ்ரீவராஹித்தாய் அவர்களைப் பற்றி அறியாத விஷயங்களை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன் அவர்களுக்கான தனி சிறப்பை கூறவும் அப்பா ஓம் ஸ்ரீ லோப முத்ரா அன்னை பற்றியும் கூறுங்கள் அப்பா!

நிச்சயம், இதை யார் என்று அறிந்து அறிந்து, இப்பொழுதே சொல்லிவிட்டால், பைத்தியம் ஆகிவிடுவான் மனிதன். நிச்சயம் வணங்கி வரச்சொல். இதன் ரகசியத்தை சொல்வேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

5 comments:

  1. ஓம் அகத்திசாய நமஹ

    அகத்தியம்பெருமான் திருவடிகள் பணிந்து,

    அடியேனின் ஐயத்திற்கு அகத்தியம்பெருமானின் பதிலைக்கண்டு பெரும் மகிழ்ச்சி, ஆனந்த கண்ணீருடன் அகத்தியம்பெருமானை பணிந்து கோடான கோடி நன்றிகளை அவர் திருபாதங்களில் பணிகிறேன்.

    அடியேனின் வினாவினை கவனத்தில் கொண்டு அகத்தியம்பெருமானிடம் உத்திரவு பெற்றுத்தந்த திரு அக்னிலிங்கம் ஐயாவிற்கும் திரு ஜானகி ராமன் ஐயா அவர்களின் திருபாதங்கள் பணிந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. ஓம் அகத்திசாய நமஹ

    அகத்தியம்பெருமான் திருவடிகள் பணிந்து,

    அடியேனின் ஐயத்திற்கு அகத்தியம்பெருமானின் பதிலைக்கண்டு பெரும் மகிழ்ச்சி, ஆனந்த கண்ணீருடன் அகத்தியம்பெருமானை பணிந்து கோடான கோடி நன்றிகளை அவர் திருபாதங்களில் பணிகிறேன்.

    அடியேனின் வினாவினை கவனத்தில் கொண்டு அகத்தியம்பெருமானிடம் உத்திரவு பெற்றுத்தந்த திரு அக்னிலிங்கம் ஐயாவிற்கும் திரு ஜானகி ராமன் ஐயா அவர்களின் திருபாதங்கள் பணிந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. ஓம் அகத்திசாய நமஹ

    அகத்தியம்பெருமான் திருவடிகள் பணிந்து,

    அடியேனின் ஐயத்திற்கு அகத்தியம்பெருமானின் பதிலைக்கண்டு பெரும் மகிழ்ச்சி, ஆனந்த கண்ணீருடன் அகத்தியம்பெருமானை பணிந்து கோடான கோடி நன்றிகளை அவர் திருபாதங்களில் பணிகிறேன்.

    அடியேனின் வினாவினை கவனத்தில் கொண்டு அகத்தியம்பெருமானிடம் உத்திரவு பெற்றுத்தந்த திரு அக்னிலிங்கம் ஐயாவிற்கும் திரு ஜானகி ராமன் ஐயா அவர்களின் திருபாதங்கள் பணிந்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙏🙇‍♂️

    ReplyDelete
  5. Om Sri LopaMudra Devi Sameth Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete