​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 14 May 2023

சித்தன் அருள் - 1338 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 4

21. குருநாதருக்கும் அன்னைக்கும் அடியேனின் பணிவான வணக்கங்கள். அன்னையின் அம்சமான நதி காவிரியா அல்லது தாமிரபரணியா என கூறுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். குருவே சரணம் 

அனைத்தும் நானே!

22. அய்யனே! கால நேர பயணம் என்பது சாத்தியமானதா? இக்கலியுகத்தில் அது நடக்கிறதா?

நிச்சயம் இல்லை. கோளறு பதிகத்தை படிக்கச்சொல்~!

23. அய்யா! நல்லவர்கள் ஆட்சி  செய்த காலங்களில் அனைவரும் ஆனந்தமாக அமைதியாக வாழ்ந்தனர். இன்று, கெட்டவர்கள் ஆட்சியில் மனிதர்கள் இத்தனை சிரமப்படுகின்றனரே! இது மாற வழியிருக்கிறதா?

முதலில் தன்னை உணரச்சொல்! அதன் பின்பு இதற்கான பதிலை உரைக்கின்றேன்.

24.   அய்யா! சித்தன் அருள் வலைப்பூவை வாசிக்கும் பொழுது. ஒரு சிலருக்கு மட்டும், அகத்தியப்பெருமான், அருள்வதையும். உத்தரவு இடுவதையும், காட்சி கொடுப்பதையும்  கண்டுள்ளேன். எங்களை போன்ற அடியவர்களுக்கும் அகத்தியப்பெருமானையும், அன்னை லோபாமுத்திரை தாயையும் தரிசிக்கும் பாக்கியம் கிட்டுமா?

அனைவருக்கும் உண்டு, எதை என்று அறிய! அறிய! ஆனால், சரியாக அதை பயன்படுத்த தெரியவில்லை. நிச்சயம்.

25.  அய்யனே! வீடும், உலகமும் நலமாக இருக்கவும் ஆத்ம பலம் பெருகவும் ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய மரங்கள் யாவை.

எதை என்றும் அறிய! அறிய! முதலில் துளசி. நிச்சயம் இதை வைத்துக் கொண்டாலே போதுமானது. முதலில் இதை வைக்கச்சொல், பின்பு பார்ப்போம்.

26. அய்யா! மனம் மௌனத்தில் நிலைக்க வழி காட்டுங்கள் ஐயனே.

அறிந்து அறிந்து, நிச்சயம் இதை பற்றியும் உரைத்துவிட்டேன். அதிகாலையிலேயே 3 மணிக்கு உணர்ந்து எழச்சொல். அறிந்து! அறிந்து! தியானங்கள் செய்யச்சொல். பின் நீராடச்சொல். பின் மத்திய வேளையிலும் நீராடச்சொல். பின் மாலை வேளையிலும் நீராட, நீராட பக்குவங்கள். அதனால், உடம்பிலுள்ள தரித்திரங்கள் நீங்குவதோடு நிச்சயம் நாள் வழி. உடம்பிலுள்ள அழுக்குகள் தங்க தங்க, கேட்ட எண்ணங்கள் எல்லாம் வரும்.இதை நிச்சயம், எதையும் எதிர்பார்க்காமலேயே , விஞ்சானப்பூர்வாமாக எடுத்துரைப்பேன், நிச்சயம் பொறுத்திருந்தால்.

27. ஓம் அகத்தீசாய நம. வெளி நாட்டில் வாழும் எங்களை போன்றோரும் ஜீவ  வாக்கு முதலிய அகத்தியர் அப்பாவின் நேரடி வழிகாட்டுதலை பெற அகத்திய பெருமான் மனமிரங்கி அருள் செய்ய வேண்டும்.

நிச்சயம் உண்டு. எவை என்று அறிய, அறிய! எதை என்று உணர, உணர! இப்பொழுது இதோ இருக்கின்றதே! அதை எடுத்துப் போகச்சொல்!

28. அய்யனே! எல்லோரும் விரும்பும் ஒரு மனிதனாக இருக்க இவ்வுலகில் என்ன செய்ய வேண்டும்?

எதுவும் செய்யத் தேவை இல்லை. இறைவனை வணங்கி வந்தாலே, அறிந்து அறிந்து செய்வான். அது மட்டும் இல்லாமல், மௌனத்தை, நாவடக்கத்தை, கோபத்தை, காமத்தை நிச்சயம் பொறுத்தருள நன்று. ஆனாலும் இதனை கூட, இவ்வுலகத்தில் கடமையை செய்யாமல் ஒழிந்து விடுகின்றார்கள். ஏன்! எதனால் என்றெல்லாம் நேரில் கண்டு உரைக்கின்றேன்.

29. அய்யனே! இக்கலியுகத்தில், ,முக்தி கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்யத் தேவை இல்லை. யாங்கள்தான் தேர்ந்தெடுத்து முக்தியை அருள வேண்டும். நீங்கள் விரும்பியதெல்லாம் கொடுத்துவிட்டால், மனிதன் தான் தான் இறைவன் என்று சொல்லிவிடுவான். அதனால் தான், பொறுத்திரு! பொறுத்திரு என்றெல்லாம் கூறுகிறோம். அதனால் மனிதனின் ஆட்டங்கள், பின் நினைப்பு வீணாம். இறைவன் நினைப்பு, பலமாம்.

30. அப்பா! தங்கள் தரிசனம் கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

எதுவும் செய்ய தேவை இல்லை! அன்புதான் மூல காரணம்! அன்பை பரிமாறிக் கொள்ளுங்கள்! நிச்சயம் யானே வருவேன், தேடி!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் பாதங்களில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

5 comments:

  1. Om Agatheesaya Namaha.
    Thank you for the kind effort in getting reply for my question on time travel. Agathia peruman has answered with patience and also graced me with extra advice for my personal problem.

    Thanks and Regards
    Chitra

    ReplyDelete
  2. வணக்கம் ஐயா .குருநாதரிடம் உதவி கேட்பது எப்படி என்று சொல்லுங்கள்.பல வருடங்களாக வாழ்க்கையில் தோல்வியை மட்டுமே கண்டுள்ளேன்.கல்வி ,தொழில்,ஆரோக்யம்,ஆள்பலம் என்று எதுவும்
    நன்றாக இல்லை.தெய்வ அருள் பெறுவதிலும்
    தோல்வி . அகத்திய பெருமான் ஏதாவது உதவி செய்வார் என்று எதிர்பார்த்து ஏமாற்ற மாக உள்ளது .என்னிடம் உள்ள குறைகளால் எனக்கு எந்த முன்னேற்றத்தையும் குருநாதர் தரவில்லை.பல கோவிலுக்கும் சென்று விட்டேன்.ஒன்றும் மாறுதல் இல்லை.எனக்கு வயது 34 .26வயதிலிருந்து அகத்தியப் பெருமான் வாழ்கையில் உதவி செய்வார் என்று காத்திருந்து காத்திருந்து விரக்தி அடைந்து விட்டேன்.இனி எந்த முயற்சியும் செய்ய இயலாது.அகத்திய பெருமான் உதவி செய்வாரா..

    ReplyDelete
    Replies
    1. இறைவா நீயே அனைத்தும்.
      இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

      அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
      உங்களுக்கு வெற்றி அருளும் கோளறு பதிகம் ரகசியங்கள். திருத்தலங்களில் சென்று படியுங்கள்.

      Youtube link:
      https://www.youtube.com/watch?v=LwWkKgVNqRE
      கோளறு பதிகம் குறித்து குருநாதர் உரைத்த வாக்குகள் :-

      சித்தன் அருள் - 1813 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!
      சித்தன் அருள் - 1388 - அன்புடன் அகத்தியர் - அனந்த் நாக் மார்தண்ட் சூரியனார் கோயில். ஜம்மு காஷ்மீர்.
      சித்தன் அருள் - 1805 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு - 2!
      சித்தன் அருள் - 1812 - மறுபடியும் குருவின் பாதையில்!
      சித்தன் அருள் - 1338 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 4
      சித்தன் அருள் - 1682 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை!


      வாக்கு சுருக்கம் / விளக்கம்

      வணக்கம் அடியவர்களே, நவகிரகங்களின் துகள்கள் மனித உடம்பில் இதயத்தில் இருக்கின்றது. கோளறு பதிகத்தைப் பாடிக் கொண்டே இருக்கும் பொழுது, நிச்சயம் மனித உடம்பில் இதயத்தில் உள்ள நவகிரகங்களின் துகள்கள் அவை அசைகின்ற பொழுது, உங்கள் உடம்பில் இதயத்தில் உள்ள நவகிரக துகள்கள் மூலம் நேரடியாக விண் வெளியில் உள்ள நவகிரகங்களின் மீது எதிரொலிக்கும் தன்மை உண்டாகும். இதனால் நவகிரகங்கள் உங்களை தாக்காமல் அப்படியே விலகி நிற்கும். இதனால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். இனி வரும் காலங்களில் நிறைய தொல்லைகள் கிரகங்களால் தான் இவ்வுலகத்துக்கு வரப்போகின்றது. நவகிரகங்களால் உங்களுக்கு அதிக தொல்லை வராமல் இருப்பதற்கு , சிறப்பாக அனுதினமும் ஆதி ஈசனாரை மனம் உருகி அன்புடன் திருத்தலங்களில் கோளறு பதிகம் படித்து, அத்துடன் அன்புடன் ஜீவராசிகளுக்குக் கட்டாயம் அன்ன சேவைகள் செய்து வர வர , இறை அருளால் நல் வாழ்வு உண்டாகும். அனைவர்க்கும் இயன்றவரை எடுத்து சொல்லிப் புரியவைத்து அவர்களையும் புண்ணியத்தில் இறக்கிவிடுங்கள். இவை அனைத்தும் புண்ணிய பாதையில் சென்றால் மட்டுமே நன்மை உண்டாகும். புண்ணியங்கள் செய்க. புண்ணியங்கள் செய்க. புண்ணியங்கள் செய்க. அனுதினமும் புண்ணியங்கள் செய்க.

      ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
      சர்வம் சிவார்ப்பணம் !

      Delete
  3. Om Sri LopaMudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  4. இறைவா நீயே அனைத்தும்.
    இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்

    அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
    உங்களுக்கு வெற்றி அருளும் கோளறு பதிகம் ரகசியங்கள். திருத்தலங்களில் சென்று படியுங்கள்.

    Youtube link:
    https://www.youtube.com/watch?v=LwWkKgVNqRE
    கோளறு பதிகம் குறித்து குருநாதர் உரைத்த வாக்குகள் :-

    சித்தன் அருள் - 1813 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!
    சித்தன் அருள் - 1388 - அன்புடன் அகத்தியர் - அனந்த் நாக் மார்தண்ட் சூரியனார் கோயில். ஜம்மு காஷ்மீர்.
    சித்தன் அருள் -1805 - அன்புடன் அகத்தியர் - கோவை வடவள்ளி வாக்கு - 2!
    சித்தன் அருள் - 1812 - மறுபடியும் குருவின் பாதையில்!
    சித்தன் அருள் - 1338 - அகத்திய பெருமானின் பொதுவாக்கு - கேள்வி/பதில் 10/05/2023- 4
    சித்தன் அருள் - 1682 - அன்புடன் அகத்தியர் - சபரிமலை!



    வாக்கு சுருக்கம் / விளக்கம்

    வணக்கம் அடியவர்களே, நவகிரகங்களின் துகள்கள் மனித உடம்பில் இதயத்தில் இருக்கின்றது. கோளறு பதிகத்தைப் பாடிக் கொண்டே இருக்கும் பொழுது, நிச்சயம் மனித உடம்பில் இதயத்தில் உள்ள நவகிரகங்களின் துகள்கள் அவை அசைகின்ற பொழுது, உங்கள் உடம்பில் இதயத்தில் உள்ள நவகிரக துகள்கள் மூலம் நேரடியாக விண் வெளியில் உள்ள நவகிரகங்களின் மீது எதிரொலிக்கும் தன்மை உண்டாகும். இதனால் நவகிரகங்கள் உங்களை தாக்காமல் அப்படியே விலகி நிற்கும். இதனால் உங்களுக்கு வெற்றி உண்டாகும். இனி வரும் காலங்களில் நிறைய தொல்லைகள் கிரகங்களால் தான் இவ்வுலகத்துக்கு வரப்போகின்றது. நவகிரகங்களால் உங்களுக்கு அதிக தொல்லை வராமல் இருப்பதற்கு , சிறப்பாக அனுதினமும் ஆதி ஈசனாரை மனம் உருகி அன்புடன் திருத்தலங்களில் கோளறு பதிகம் படித்து, அத்துடன் அன்புடன் ஜீவராசிகளுக்குக் கட்டாயம் அன்ன சேவைகள் செய்து வர வர , இறை அருளால் நல் வாழ்வு உண்டாகும். அனைவர்க்கும் இயன்றவரை எடுத்து சொல்லிப் புரியவைத்து அவர்களையும் புண்ணியத்தில் இறக்கிவிடுங்கள். இவை அனைத்தும் புண்ணிய பாதையில் சென்றால் மட்டுமே நன்மை உண்டாகும். புண்ணியங்கள் செய்க. புண்ணியங்கள் செய்க. புண்ணியங்கள் செய்க. அனுதினமும் புண்ணியங்கள் செய்க.

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம் !
    சர்வம் சிவார்ப்பணம் !

    ReplyDelete