​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 19 November 2023

சித்தன் அருள் - 1508 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 20!


ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் (அகத்தியன்). 

ஆனாலும் யான் நேற்றைய பொழுதிலே (முந்தைய நாள் 4.9.2023) பல உரைகளை தெரிவித்து விட்டேன். ஆனாலும் யாராவது நிச்சயம் சரியாக கேட்டீர்களா என்றால் நிச்சயம் இல்லை. அது போலத்தான் சரியான அதாவது யான் சொல்லியதை நிச்சயம் சரி முறையாக பயன்படுத்தி வந்தாலே வெற்றிகள். ஆனாலும் அதை கடை பிடிப்பதே இல்லை. ஏனோ தானோ என இருந்து விட்டு பின் அங்கு சென்றால் இங்கு சென்றால் நல்லது நடக்குமா என்று மனிதர்கள் நினைத்துக்கொண்டிருக்கும் போது நிச்சயம் அதில்தான் இன்னும் இன்னும் கர்மாக்கள். அதனால் ஒவ்வொரு மனதையும் கூட யான் ஆராய்ந்து விட்டேன். 

ஆராய்ந்து சொன்னாலும் நீங்கள் நிச்சயம் யான் சொன்னாலும் அதைத்தான் (கர்மத்தை) மீண்டும் நீங்கள் திரும்பத் திரும்ப கேட்பீர்கள் என்பதை கூட யான் அறிவேன். இதனால்தான் அறிவுள்ளவனாக இருந்தும் , அறிவு கெட்டவனாகவே மனிதன் வாழ்ந்து வருகின்றான். இதனால் என்ன ஒரு பிரயோஜனம்?. பின் அதனால் பிரயோஜனமே இல்லை. மனித வாழ்க்கை என்ன? எவை, எதை பின்பற்ற வேண்டும் என்பதை எல்லாம் தெரிவதில்லை. அதனால்தான் ஓர் நாள் இல்லை , ஓரு நாள் பின் பல கஷ்டங்கள் அனுபவித்து தீர்த்தால்தான் நிச்சயம் புரியும். 

அப்போதுதான் இறைவன் நாட்டம் கிடைக்கும். யான் சொன்னேனே நேற்றைய பொழுதில் (4.9.2023) நிச்சயம் அதை யாராவது ஒருவர் சொல்லுங்கள்?

(குருநாதரின் கேள்வி/பதில் ஆரம்பமானது. நேற்றைய பொழுதில் உரைத்தவற்றை குருநாதர் அனைவரையும் எடுத்து உரைக்க சொன்னார்கள்) 

அடியவர்:- பஞ்ச பூத ஸ்தலங்களுக்கு போய் விட்டு வர சொன்னார்கள்.

குருநாதர்:- இன்னும் அறிந்தும் அறிந்தும் சொன்னேன். முதலில் மனிதனாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் என்று. ஆனாலும் சரி நிச்சயம் கேள்விகள் கேட்டு தெளிவு பெற்று ஆனாலும் மீண்டும் இதைத்தான் யான் செப்புவேன். அனைத்தும் சொல்லி விட்டேன். அதைத்தான் (கர்மத்தை) நீங்கள் கேள்விகளாக கேட்கப் போகின்றீர்கள். என்ன புரயோஜனம்? ஒன்றும் இல்லை. இதனால் கேளுங்கள்?

அடியவர்:- நான் எனக்காக கோட்கவில்லை. எனது உயிர் நண்பர் குடும்பம்….

குருநாதர்:- நிச்சயமாய் நீ அமைதியாக இருக்க வேண்டும். அப்படி கேட்டால் அவ் கர்மா உன்னை சாரும். உன்னை சாரந்தால் துன்பங்கள் வரும். அதை ஏற்றுக்கொள்ள தயாரா நீ? 

அடியவர்:- மனசு கேட்கலையே…

குருநாதர்:- அதை இறைவன் பாரத்துக்கொள்வான். அவர்களை கேட்கச்சொல் தாயே. தாயே இங்கு இருக்கின்றார்கள். இவர்களை விட்டு விட்டு அவர்களுக்கு சொன்னால் இவர்களுக்கு என்ன, அப்போது இவர்கள் அறிவாளியா அவர்கள் அறிவாளியா? அதனால் அம்மையே நோய் இருந்தால் எங்கு நோக்கி செல்கின்றார்கள் என்பதைக்கூட உந்தனுக்கு தெரியும் அம்மையே. அதனால் துன்பம் வந்தால் ஆனால் எங்கு அலைகின்றார்கள் என்பது கூட உந்தனுக்கே புரியும். ஆனாலும் அம்மையே இங்கு உள்ளவர்களை விட்டு விட்டு அங்கு சென்றாலும் கூட அவன்தனக்கு எவை என்றும் புரியாமல் கூட பின் புரியாதம்மா. நம்பவும் மாட்டார்கள் தாயே. பொறுத்திருக.  

அடியவர் :- ஐயனே, ஶ்ரீ வித்தையின் மகத்துவத்தை கூற வேண்டும். 

குருநாதர்:- அப்பனே இன்னும் சில காலங்களே அப்பனே தொடந்து செய். நிச்சயம் அரை பங்கு வந்து விட்டாய் அப்பனே. 

அடியவர்:- ( ஒரு ஆலயம் தொடர்பாக )

குருநாதர்:- அப்பனே பொறுத்திருக. அப்பனே செய்து கொண்டேதான் இருக்கின்றேன். அதனால் அங்கும் இங்கும் அலைவதை விட்டு விடு. அப்பனே சில சில செய்கையாலும் சில சில வழிகளில் கூட ( தனி வாக்குகள் ).

அடியவர்:- (வேறு ஒரு இடத்தில் சென்று நாடி வாக்கு கேட்டுள்ளார். அது குருநாதர் வாக்குதானா என்று உறுதி படுத்த கேள்வி கேட்டார்)

குருநாதர்:- அம்மையே இதனால்தான் உந்தனுக்கு எவை என்றும் புரியாமல் கூட அங்கு சென்று இங்கு சென்று கர்மா மேலும் மேலும் கர்மா உன்னிடத்தில் தேங்கி உள்ளது. அதை யான்தான் நீக்க வேண்டும். பொறுத்திருக. 

அடியவர்:- ஐயா எப்பொழுதும் உங்களுடைய ஆசிர்வாதம் வேண்டும். 

குருநாதர்:-  அப்பனே இதை ஏற்கனவே யான் செல்லி விட்டேன் ஏன் எதற்காக? யாராவது இவன்தனக்கு சொல்லுங்கள். 

அடியவர்:- ஆசிர்வாதங்கள் இருக்குது. அவர் பெயர் சொன்னாலே புண்ணியம். ஆசிர்வாதம் இருப்பதால் இங்கு வந்து உட்காந்து இருக்கீங்க ஐயா. 

நாடி அருளாளர்:- கேள்விகள் கேட்கலாம். 

அடியவர்:- அகஸ்தியர் தீபம் ஏற்றிக்கொண்டு இருக்கின்றோம். அதுல கர்மா வராம இருக்க என்ன செய்ய வேண்டும்?

குருநாதர்:- அப்பனே இதையும் நேற்றைய பொழுதில் சொல்லிவிட்டேன் அப்பனே. 

அடியவர்:- ( தனிபட்ட கேள்வி ) 

குருநாதர்:- ஏமாற்றுபவர்கள் இருக்கும் வரை பின் ஏமாறுபவர்களும் இருப்பார்கள். பொறுத்திருக. 

அடியவர்:- போன முறை கொரோனா வந்து மருந்து எடுத்தும் கூட இன்னும ( அதன் தாக்கத்தில் இருந்து ) வெளிய வர முடியல. 

குருநாதர்:- அம்மையே இறைவன் இருந்தும் நம்ப முடியவில்லையே அம்மையே. 

அடியவர்:- இதை பொதுவாகத்தான் நான் கேட்கின்றேன். எல்லாருக்கும் மருந்து எடுத்து சரியாகல.

குருநாதர்:- அம்மையே நீ பார்த்தாயா? அம்மையே எவரை பார்த்தாய்? எங்கு பாரத்தாய்?

அடியவர்:- அதில் பாதிக்கப்பட்டவர்கள் அனைத்து பேருமே இன்னும் முழுமையாக ……..

குருநாதர்:- அம்மையே எதற்காக? எவை என்றும் அறிய அறிய அம்மையே அனைவருக்குமே இந்நிலைதான் அம்மையே. மற்றவர்களை பற்றி சிந்தியுங்கள், உதவி செய்யுங்கள் என்றெல்லாம் பின் தன்னைப்போலே பிறரை எண்ணும் குணம் வரவேண்டும் என்றெல்லாம் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். ஆனால் அதை பின் பற்றுவதே இல்லையே. 

தாய், தந்தையரை கூட மதிக்கவில்லையே. யாருக்கு வந்திருக்கின்றது? கர்மா செய்தவர்களுக்கு மட்டும் அவை கூட. ஆனாலும் இவைஎல்லாம் ஒரு கேள்விகளே இல்லை. 

அம்மையே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் ( தனிப்பட்ட வாக்கு ) 

அடியவர்:- ( சில உரையாடல்கள் )

குருநாதர்:- கலியுகத்தில் அம்மையே மனிதன் தவறுகள் செய்து கொண்டே இருக்கின்றான். இதற்கான தண்டனைகள் அதிகப்படியாக வந்து கொண்டே இருக்கும் வரும் காலங்களில். அம்மையே பெற்றோர்கள் தன் பிள்ளையை செல்லமாக வளரத்து இப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகின்றார்கள். ஆனாலும் அதை பின் மாறிவிட்டு எதை என்று நோக்கி செல்லச் செல்ல பின் பெற்றோர்களே காயப்படுத்துகின்றார்கள் பிள்ளைகள். ஆனாலும் இதற்கு தண்டனை கொடுக்கலாமா வேண்டாமா?

அடியவர்:- கொடுக்கலாம்.

குருநாதர்:- அம்மையே அது போலத்தான் இறைவனை மீறிய செயல்கள் எல்லாம் இறைவன்தான் படைத்தான் மனிதனை. அதை மீறிய செயல்களை செய்யும் பொழுதுதான் மனிதனுக்கு தண்டனைகள் கொடுத்து பக்குவப்படுத்துகின்றான். அப்பொழுது இறைவன் பின் செய்வது தவறா?

அடியவர்:- சரிதான்.

குருநாதர்:- அம்மையே அப்பொழுது நீ கேட்டாயே இப்பொழுது புரிகின்றதா? 

அடியவர்:- புரிகின்றது.

குருநாதர்:- அம்மையே இன்னும் என்ன என்ன கேட்க வேண்டும் கேள்?

மற்றொரு அடியவர்:-  பையனுக்கு உடல் நலம், மன நலம் ….

குருநாதர்:- அப்பனே ஒன்றை சொல்கின்றேன். தன் பிள்ளை தன் பிள்ளை என்று சொல்கின்றாயே இங்கு ஒருவன் அப்பனே பரமனே எதை என்று கூற இழுத்துச்செல். இவன்தனை எதை என்று புரியும் அளவிற்கும் கூட இயலாதவருக்கு உதவி செய்யச்சொல். பின் தானாகவே (அடியவர் பையன்) வளர்ந்துவிடும் என்று சொல். பரமனே சொல். 

(ஊரார் பிள்ளையை ஊட்டி வளரத்தால் தன் பிள்ளை தானே வளரந்து விடும் என்பதை நினைவில் கொள்க ) 

அடியவர் மதுரை பரமசிவம்:-  நம்ம ( ஶ்ரீ அகத்தியர் இறை அருள் மன்றம் செய்யும் அன்ன சேவை ) சேவையில் பங்கு பெறுங்கள். 

குருநாதர்:- அப்பனே ஒன்றை சொல்கின்றேன். சேமிப்பு கிடங்கில் சேமிப்பு பின் இருந்தால்தான் அதாவது இன்றைய அளவில் சேமிப்பு என்று அனைவருமே இட்டு இருக்கின்றீர்கள். திடீரென்று ஏதாவது வந்தால் அவ் சேமிப்பில் இருந்து சிறிது அளவு எடுத்து செலவு செய்கின்றீர்கள். இதே போலத்தான் அப்பனே புண்ணியங்கள் சேமிப்பாக வைக்க வேண்டும். (அப்படி) யாருமே இல்லையப்பா. அப்போது கஷ்டங்கள் வரும்போது எங்கிருந்து அப்பா யான் கொடுப்பது நீங்களே சொல்லுங்கள்?  யான் மௌனம் காத்திருக்கின்றேன். 

(வங்கியில் உள்ள சேமிப்பு கஷ்ட காலத்தில் உதவும். அதே போல விதியின் கஷ்ட காலத்தில் கடும் துன்பம் உண்டாகும். அதனை சித்தர்கள் நமது புண்ணிய கணக்கில் இருந்து எடுத்து அந்த கஷ்டங்களை போக்குவார்கள். பல பிரச்சினைகளை சரி செய்து நமக்கு துன்பங்கள் அற்ற நல் வாழ்வை வழங்குவார்கள்.  வங்கி சேமிப்பை விட புண்ணியம் சேமிப்பு அவசியம் அனைவருக்கும். எனவே 

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!!

அனுதினமும் புண்ணியம் செய்யுங்கள்!!!!! 

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!!

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!!!

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!!!!

ஓவ்வொரு நொடியும் புண்ணிய சேமிப்பை உயர்த்துங்கள்!!!!! )

அறிந்தும் அறிந்தும் இதனால் அங்கும் இங்கும் அலைவதை நிறுத்தி விட்டு முதலில் புண்ணியங்கள் எப்படி செய்வது என்பதைக்கூட அதை சேமித்து வைத்துக்கொண்டால் நிச்சயம் பின் எத்துன்பமும் வராது. அப்படி துன்பம் வந்து விட்டாலும் நீங்கள் எளிதில் யான் புண்ணியம் செய்திருக்கின்றேன் என்று கர்வமாக கூறலாம். யாராவது சொல்வீர்களா யான் புண்ணியம் செய்திருக்கின்றேன் என்று?  

அடியவர்கள்:- ( சில விளக்க உரையாடல்கள் ) 

குருநாதர்:- (ஒரு அடியவரை குறிப்பிட்டு) இப்பொழுது (வேலையில்) பின் அலைந்தாயே அதற்கெல்லாம் ஏதாவது புண்ணியம் செய்திருந்தால் இப்பொழுது அவ் கணக்கை யான் சொல்லி இருப்பேன்.  ஆனால் மற்றவர்களுக்காக அலைந்தாய் திரிந்தாய் ஒன்றும் லாபம் இல்லை. 

எங்கு சென்றாலும் யான்தான் தீர்வு. 

நிச்சயம் ஆனால் அவை சொல்லலாம், இவை சொல்லலாம் இன்னும் இன்னும் அறிந்து சொல்லலாம் ஆனால் ஓரு புரோஜனம் இல்லை. ( தனிப்பட்ட வாக்கு ) 

குருநாதர்:- (ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கின் சாராம்சம்  இங்கு பொது நலம் கருதி பகிர்கின்றோம் -  பரிகாரம் என்று சொல்லி குறிப்பாக பெண்கள் பிறரிடம் (மாந்திரிக-ஜோதிடர்) அணுகுவதை முற்றிலும் தவிர்கவும். சுய நோக்கத்திற்காக வசியமும் செய்ய வாய்பு உண்டு.  எனவே இறைவனை வணங்குவதே அனைத்து நலங்கள் நல்கும்) 

குருநாதர்:- (ஓர் அடியவரை குறிப்பிட்டு) கேள் உந்தனுக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுக்கின்றேன். 

அடியவர்:- இனி மேல் நான் எந்த மாதிரி…

குருநாதர்:-  அனுதினமும் முதலில் யான் சொல்லியவற்றை செய். அதாவது பின் அறிந்தும் அறிந்தும் வாய் பேச முடியாத ஜீவரீசிகளிடம் இருந்து தொடங்கு முதலில் சொல்கின்றேன். (அனுதினமும் எறும்புகள், பறவைகள், பைரவர்களுக்கு அன்ன சேவை செய்ய அருளினார்கள் ). 

அறிந்தும் அறிந்தும் கூற எங்கெங்கு (நீ சென்று கேட்டாய் பல நாடி) வாக்குகள் ஆனாலும் அவர்கள் எல்லாம் சில கர்மாக்களை நீ ஏமாந்து போவது போல் இருப்பதால் உன்னிடத்திலே விட்டு விட்டார்கள். இதனால் இன்னும் சிறிது காலம் சென்றிருந்தால் சுவடிகளும் பொய் பின் இறைவனும் பொய் என்ற நிலமைக்கு வந்திருப்பாய். இது சத்தியம். சரியான வழியில் ஆனாலும் உந்தனுக்கும் கூட அறிவுகள். இனிமேலும் சரியாக பயன்படுத்திக்கொள். உன்னிடத்திலே இறைவன் இருக்கின்றான். முருகனை நினைத்துக்கொண்டு அனுதினமும் இல்லத்திலே தீபம் ஏற்றி வா. இன்னும் முருகன் கூட வாக்குகள் தருவான் அதை பயன்படுத்திக்கொள். இன்னும் கேள்?

அடியவர்:- சக்கரை நோய்கு மருந்து சொல்லுங்கள். 

குருநாதர்:- அம்மையே எதற்காக இதை கேட்டாய் நீ?

அடியவர்:- நிறையபேர் சர்கரை நோயால் அவதிப்படுகின்றனர்.

குருநாதர்:- அம்மையே, விதியில் என்ன உள்ளது என்பதைக்கூட ஆராய்ந்து , ஆராய்ந்து அதாவது விதியில் என்ன உள்ளதோ அது நடந்தே தீரும். ஆனால் கடைசி வாய்ப்பாக இந்நோய் இறைவன் கொடுத்து விடுகின்றான். ஆனால் இன்னும் பெரிய பெரிய அளவில் வரும்பொழுது சில புண்ணியங்கள் ஏதோ அளவு இருந்தால்தான் அம்மையே கடைசியாக இறைவன் இந்நோயை கொடுக்கின்றான். ஆனாலும் அம்மையே இதைக்கூட பின் இறைவன் கொடுக்க வில்லை என்றால் இறைவனுக்கு மரியாதை இல்லை என்பேன்.

அடியவர்:- மருத்துவமனை…….

குருநாதர்:- அம்மையே இப்போதுதான் சொன்னேன் அம்மையே.

(விளக்கம்:- மனிதன் தன் தவற்றை உணர்ந்து திருந்தி வாழ்வதற்க்கு ஒரு முன் எச்சரிக்கையாக இந்த நோயை இறைவன் கொடுக்கின்றார். இதன் பிறகும் தவற்றை உணரவில்லை என்றால்தான் மிகப்பெரிய சிக்கல்கள் உண்டாகும். இறைவன் ஏன் இந்த நோயை கொடுத்து உள்ளார் என்று சுய பரிசோதனை செய்து நல் வாழ்வு வாழ ஒரு கடைசி சந்தர்ப்பம்.)

அம்மையே ஆனாலும் அதைச்செய்யலாம் இதைச்செய்யலாம் என்றெல்லாம் ஆனாலும் அதை எங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும் சொல்லிவிட்டேன் அம்மையே. அறிந்தும் அறிந்தும் கூட அம்மையே எவ்வளவு என்னென்ன எதற்காக எல்லாம் முயற்சி செய்கின்றீர்கள் அம்மையே. பக்திக்காக முயற்சி செய்யுங்கள்.  நிச்சயம் யாங்களே வந்து காப்பாற்றுவோம் அம்மையே.

அடியவர்:- பிற உயிர்களை கொன்று தின்று விட்டு நான் அகத்தியனுடைய சிஷ்யன் , சித்த சிஷ்யன் என்று வருகின்றார்களே….

குருநாதர்:- அப்பனே அப்படி பட்டவர்களை யான் ஏற்றுக்கொள்வதே இல்லை. ஆனாலும் பொய் சொல்லலாம். யான் அகத்தியன் சீடன் என்று எல்லாம், ஆனால் அப்பனே அவை எல்லாம் வெறும் பொய்கள் அப்பா. அப்படி பட்டவர்களிடம் சென்றாலும் கூட நீங்களும் கர்மாவை பின் சேர்த்துக் கொள்ளத்தான் வேண்டும் சொல்லிவிட்டேன் அப்பனே. அதனால்தான் நம்பிவிடாதே, யாரையும் நம்பிவிடாதே. கோடி கோடி திருடர்களப்பா. பக்திகளாக இருந்தும் பின் (அசைவம்) அதை தின்றால் அப்பனே அவன் தன் அறிந்தும் அறிந்தும் கூட நாயைவிட கீழானவன்  சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் ஒருநாள் நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும். அம்மையே கேட்டாயே, (அசைவம்) இதை எல்லாம் சாப்பிட்டால் அம்மையே  இப்பொழுது கூறினாயே (சர்கரை நோய்) அந்நோய் தானாகவே வந்து விடும். ஆனாலும் சில மாறுதல்களும் உண்டு. அதனை பற்றியும் செப்புகின்றேன் அம்மையே. அதனால் அதை உண்ணாதவரை (அசைவம் சாப்பிடாதவர்களை) என்னிடத்தில் அழைத்து வா அம்மையே. ஆனால் உத்தனுக்கு மட்டும்தான் யான் சொன்னேன். மற்றவர்களுக்கு இல்லை.

அடியவர்:- எல்லா தவறும் செய்றாங்க. அசைவம் சாப்பிடுகின்றனர்.

குருநாதர:- அம்மையே ஒன்றை சொல்கின்றேன். அனைவரும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும். நேற்றைய பொழுதிலும் (4.9.2023) சொல்லி விட்டேன். இறைவன் மனிதனுக்கு அனைத்தும் கொடுக்க தயாராகவே இருக்கின்றான். ஆனாலும் நிச்சயம் மனிதன் பின் அதை பெற்றுக்கொண்டாலும் சரியான வழியில் உபயோகிக்கத் தெரியாமல் அழித்து விடுவான். அதனால்தான் அம்மையே இறைவன் கூட மௌனத்தை காத்துக் கொண்டிருக்கின்றான் அம்மையே அனைத்தும் , அனைத்தும் என்று. அம்மையே இது போலத்தான் நாராயணனும் ஏமாந்தான் அம்மையே. நாராயணனை பற்றி தெரியுமா தெரியாதா?

அடியவர்:- தெரியாது

நாடி அருளாளர்:- திருப்பதி ஏழுமலையான்.

அடியவர்:- தெரியும் ஐயா.

குருநாதர்:- ( இதுவரை வெளி உலகிற்கு தெரியாத கதை ஓன்றை செப்ப ஆரம்பித்தார்கள் ) அம்மையே ஒர் முறை தவம் இருந்தார்கள். ஏன் எதற்காக என்றால் பெண்கள் அனைவருமே தவம் இருந்தார்கள் அதாவது திருமலையிலே அறிந்தும் அறிந்தும் இப்பொழுது கூட ஆனாலும் பின் எவை என்றும் பெயரிலே ஆனாலும் பின் “ நாராயணா, நீ வர வேண்டும். அப்பொழுது தான் உண்பேன்” என்றெல்லாம். ஆனாலும் நாராயணா, நாராயணா என்று பல லட்சக்கனக்கான பெண்களே பின் உண்ணாமல், உறங்காமல் நாராயணா, நாராயணா என்றெல்லாம். ஆனாலும் பொருமானோ பின் இப்படியே நம்மீது பக்தி கொண்டு இருக்கின்றார்களே, அழுகின்றார்களே என்று எண்ணி உடனே அனைத்தும் நடக்கட்டும் என்று வரத்தை கொடுத்து விட்டான். அவ் லட்சக்கணக்கில் பின் வரங்கள் ஏற்றுக்கொண்டு பின் மனிதர்களை எல்லாம் தவறான வழியில் பின் நடத்தி , பின் அனைத்தும் பின் அறிந்தும் கூட எவ்வளவு நன்மைகள் செய்யாமல் தீங்குகளாகவே செய்வித்தனர் (அனைவருக்கும்) . இதனால் பின் ஈசனுக்கும் கோபமுற்று ஆனால் ஈசனோ அறிந்தும் அறிந்தும் கூட பின் “ நாராயணனே உன்னிடத்தில் இவ்வாறு பதவிகள் ( வரங்கள் ) கொடுக்கின்றதே ஏன் தரித்திரமாக யோசிக்காமல் கொடுத்து விட்டாயே. இப்பொழுது பார் ( என்ன நடந்து கொண்டு இருக்கின்றது)” என்றெல்லாம் ஆனாலும் மயங்கினான் பின் தயங்கினான் எதற்காக என்று. இப்படி நம்பி ஏமாந்தோமே என்று (காக்கும் கடவுள் நாராயணனே ) தலை குனிந்து விட்டான். பார்த்தீர்களா? இப்பொழுது அது போலத்தான் இறைவனை நோக்கி நோக்கி பக்திகள் ஏதோ ஒரு காரணத்துக்காக சென்று சென்று வழி பட்டுக்கொண்டு இருக்கின்றான். ஆனால் பின் அதை கொடுத்து விட்டால் நீ பின் அதை வைத்து மற்றவர்களை கூட கெடுப்பாயா இல்லை அனைவருக்கும் கொடுத்து பின் நல்லவர்கள் ஆக்குவாயா?  என்று யோசித்துத்தான் ( யான் கொடுப்பேன் வரங்களை ). ஆனால் நூறில் ஒரு மனிதன் கூட பின் அதற்காக ( மற்றவர்கள் நலனுக்காக ) இறைவனை வணங்குவதே இல்லை. பின் தன் சுய நலத்திற்காக வணங்கி வணங்கி அதனால்தான் இறைவன் கூட நீ அப்படியே இருப்பா என்றெல்லாம் சொல்லி ஆனாலும் தானே பக்தன் பக்தன் என்று பட்டையை தீட்டுவது, ருத்திராட்சம் அணிவது ஆனால் நீ தான் பக்தன் என்று சொல்ல வேண்டுமே தவிர ஈசன் சொல்லப்போவதில்லை ஒரு நாளும்.

அடியவர்:- வாலைத்தாய்க்கு  கும்பாபிஷேகம் பண்ண வழி காட்டனும்.

குருநாதர்:- அப்பனே யான் வருகின்றேன் அப்பனே. நன்றாகவே நடக்கும்.

நாடி அருளாளர்:- எங்கு கும்பாபிஷேகம்?

அடியவர்:- கொடி மங்கலம் ஐயா  பக்கத்தில…

அடியவர் 2:- இங்க இருந்து ஒரு 10 கிலோ மீட்டர் வரும்

அடியவர்:- ( ஓரு அறுவை சிகிச்சை மருத்துவர் நிபுணர், புற்று நோய்க்கு சிகிச்சை அளிப்பவர் சார்பாக அடியவர் ஓருவர் அனுப்பிய கேள்வி)

புற்று நோய் சிகிச்சை குறித்து , புற்று நோயாளிகள் மதுரை பசுமலையில் அமைந்துள்ள அகத்திய பிரம்ம ரிஷி ஆலயத்தில் சேவை செய்தால் அவர்கள் பிணி அகலுமா?

குருநாதர்:- அப்பனே எதனால் அப்பனே எப்பொழுதெல்லாம் பிற உயிர்களை கொன்று கொன்று அதாவது (அசைவம்) இப் புவிதனில் உட்கொள்கின்றார்களோ அப்பொழுது இந்நோய் அதிகமாகும் அப்பா. இதனால் அப்பனே பிற உயிர்கள் கொல்லுதல் ஆகாதப்பா. ஏனென்றால் இதை இறைவனே கொடுப்பதப்பா. அதனால்தான் பின் யாராலும் தடுக்க முடியாதப்பா. அதனால் இறைவனே நினைத்தால் தான் அப்பனே. இதனால் கோடியில் ஒருத்தனுக்கே நலமாகும் சொல்லிவிட்டேன். இதற்கான ஏற்பாடுகள் கூட சில காலம் யாங்கள் பொருத்திருப்போம்.

அடியவர்:- ஐயா சைவமாக உள்ளவர்களுக்கு இந்த நோய் வருகின்றது.

குருநாதர்:- அப்பனே இப்பொழுதுதான் சொன்னேனே அப்பனே. அப்படி இருப்பவனை இறைவனே காப்பாற்றி விடுவான்.  அப்பனே இதை கூட புரிந்து கொள்ளவில்லையே.

அப்பனே இதற்காகவும் புற கதிர்கள் (புற ஊதாக் கதிர் / UV rays ) என்று ஒரு கதிர் இருக்கின்றதப்பா. அது அதிக அளவில் மனிதனை தாக்கும் பொழுது பல நோய்கள் வந்து விடும் அப்பா. ஏனென்றால் மனிதன் அதாவது சாதனை சாதனை என்றெல்லாம் தெரிவித்துக்கொண்டு இருக்கின்றான் அப்பனே. 

அதாவது இங்கிருந்து எதை எதையோ கிரகங்களுக்கு அனுப்பும் பொழுது அவை உடைந்து அவ் கதிர்கள் பூமியை நோக்கி அதிக அளவில் வரும் பொழுதுதான் நோய்களின் (தாக்கம்) அதிகமப்பா. அதனால்தான் இனிமேலும் யாங்கள் தடுத்து விடுவோம் அப்பனே.

( விளக்கம்:- இறைவன் பூமிக்கு ஒரு பாதுகாப்பு வளையத்தை புற ( ஊதா ) கதிர்கள் பூமியின் உள் நுழையாதபடி நம்மை காக்கும் பொருட்டு அழகாக வடிவமைத்து உள்ளார்கள். ஆனால் மனிதர்கள் நமது விஞ்ஞான வளரச்சியினால் ராக்கெட் மூலம் அந்த பாதுகாப்பு வளையம் உடைந்து ( Ozone Layer Depletion என்று இணையத்தில் தேட இந்த தகவல் நன்கு புரியும்) புற கதிர்கள் ( UV rays from sun ) வெளியில் இருந்து பூமியின் மீது படுகின்றது. குருநாதர் வாக்கின்படி இந்த கதிர்கள்தான் புற்று நோய்க்கான மற்றும் இதர நோய்களுக்கான காரணம். )

அடியவர்:- பாகப்பிரிவினை வீட்டுல..

குருநாதர்:- அப்பனே எதற்காக உந்தனுக்கு பாக பிரிவினை?

அடியவர்:- அவுங்க கேட்கிறாங்க…

குருநாதர்:- அப்பனே இறைவன் உன்னையே கேட்கின்றான் அப்பனே. நீ கொடுத்து விடுவாயா என்ன?

அடியவர்:- …….

குருநாதர்:- அப்பனே இதனால் விதியிலே அனைவருக்குமே ( சொல்லுகின்றேன்)  இவனுக்கு சொல்லவில்லை ( பொதுவாக ) , (ஆனால் உதாரணமாக ) இவன் விதியை யான் சொல்லுகின்றேன். இவன்தனை நிச்சயமாய் எவை என்றும் புரியாமல் கூட எந்தனுக்கு ஞானம்தான் வேண்டும் என்று கேட்டு வந்தவன். இவ்வுலகத்தில் அதாவது பந்த பாசங்களில் சிக்கிக்கொண்டு அதாவது காசுக்காக ஆசைப்பட்டுக்கொண்டு பின் பாகப்பிரிவினை என்று கேட்கின்றானே அப்பொழுது விதியில் இருப்பது நடக்குமா? இல்லை இவன் விரும்பியது நடக்குமா? நீங்களே சொல்லுங்கள்.

( இந்த தனிப்பட்ட பதிலை பொதுவாக அனைவரையும் குருநாதர் கேட்டதால் நாம் எல்லோரும் விதியில் இருந்து எப்படி வேறு பட்டு , ஆசைப்பட்டு கஷ்டம் அடைகின்றோம் என்று உணர குருநாதர் நமக்கு எடுத்துச் சொன்ன வாக்காக உணருங்கள். )

அடியவர் 1 :- இங்கதான் ஐயா சந்தேகமே வருது. மாயைய அறுப்பதற்க்கு அவுங்கதான் உதவி செய்யனும்.

அடியவர் 2:- விதியில் உள்ளது நடக்கும்

அடியவர் 3:- ஞானப்பாதை ஒன்றும் கிடைக்கப்போவது இல்லை.

அடியவர் 4:- அவுங்கதான் உதவி செய்யனும்.

குருநாதர்:- அப்பனே இதனால் இறைவன் தலங்களை நாடி நாடி சென்று அடைய வேண்டும். என் விதியை மாற்று என்று அப்பனே. அப்பொழுதுதான் என்னாலும் கூட ( மாற்ற இயலும்), யானும் சொன்னேன் இவன் தனக்கு இப்படி என்று கூட ஆனாலும் பிரம்மாவும் “அகத்திய மாமுனிவரே , இவை எல்லாம் அவனவன் ( உலகோரில் பலர்) இன்னும் சாகப்போகின்றான், இன்னும் நோய்களுக்காக ( நோய் தீர வேண்டி ) ஏங்கிக்கொண்டு இருக்கின்றான். இன்னும் பிரச்சனைகள். அதை விட்டு விட்டு இவன்தன் சொத்துக்களுக்காக ஏங்கிக்கொண்டு இருக்கின்றானே அகத்திய மாமுனிவரே, நீயும் இப்படியா என்று பிரம்மா ( என்னை கேட்டு விட்டான் ). “

( இங்கு கருணைக்கடல் அகத்திய மாமுனிவர் நமக்கு தெரியாமல் நாம் அனைவரும் நன்கு வாழ பிரம்மாவிடம் சண்டையிட்டு விதியை மாற்ற போராடுகின்றார்கள். ஆனால் நமது புண்ணிய பலம் இதற்க்கு தேவை என்பதை உணர்க. நாடி வாக்கு வராத பலருக்காகவும் தான் என்பதை உணர்க. இதை படிக்கும் உங்களுக்காக என்னென்ன செய்திருப்பார் என்று உணர்ந்து ஒரு 5 நிமிடம் கண்களை மூடியபடி ஆதி குருநாதனுக்கு அகத்தின் ஈசனுக்கு நன்றி சொல்லுங்கள் அடியவர்களே )

அதனால் அப்பனே அடிதடிகள் அப்பனே. ஆனால் அப்பனே இதை நிச்சயம் பிரித்தால் ஓர்வர் இறந்து விடுவார் என்பேன் அப்பனே. ஆனால் அப்பனே இறைவன் எதை என்று அறிய அறிய முன்னோர்களும் கூட எதை என்றும் புரியாமல் பின் இதை தடுப்பது சரியா? தவறா? அனைவரும் கூறுங்கள் இவனுக்கு.

( விதிப்படி, பங்கு பிரித்தால் ஓர் உயிரும் பிரியும். பிரம்ம தேவர், இறைவன், முன்னோர்கள் ஒரு உயிரை காப்பதற்க்காக இந்த பாகப்பிரிவினையை தடுக்கின்றனர். இங்கு உயிர் காக்கும் தர்மமே முதல் நிலை ஆகின்றது.)

மற்ற ஒரு அடியவர்:- சரியே

குருநாதர்:- அப்பனே அப்பொழுது சொத்து வேண்டுமா? உயிர் வேண்டுமா? நீயே தீர்மானி. அப்பனே, அதற்காகத்தான் உன்னை அதாவது வாக்குகளாக இழுத்துக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. நாங்கள் தயாராகத்தான் இருக்கிறோம் மனிதர்களுக்கு. ஆனால் தக்கபடி கேள்.

அடியவர்:- …..

குருநாதர்:- அதனால் அப்பனே யாங்கள் கொடுப்பதைப் அப்பனே வாங்கிச் சென்றால் ( உந்தனுக்கு நல்லது.)

அப்பனே ஒன்றைச்சொல்கின்றேன். நாராயணனனே ( திருப்பதி ஏழுமலையான் ) எது என்று அறிய காசுகள் பார்த்து பார்த்து அலுத்து விட்டான். ஆனாலும் ஒர் ( எண்ணம் ) மனதில் தோன்றியது அவனுக்கு.  ஏன் நம் தனையே பிச்சை எந்தலாமே என்று. பார்ப்போம் யாராவது பிச்சை இடுகின்றார்களா என்று. ஆனாலும் அதாவது மலையில் இருந்து ஏழு மலையிலிருந்து பின்பு வந்து விட்டு பிச்சை ஏந்தினான். அனைவரிடத்திலும் பிச்சை ஏந்தினான் யான உண்ணவில்லையே என்று ஆனால் கொடுக்கவில்லை யாருமே கொடுக்கவில்லை. அங்கே இருந்த காவலாளிகள் இங்கெல்லாம் பிச்சை எடுத்துக்கூடாது என்பது எல்லாம் பின் பெருமானுக்கே சொல்கிறார்கள். ஆனாலும் பின் ஒருவன் அங்கே பூஜை செய்கின்றானே ( மூல ஏழுமலையான் சன்னதியில் இருந்து அவ் அர்சகர் ) வெளியே வந்துவிட்டான். ஆனால் பார்ப்போம் இவன் நம் இடத்தில் ( திருப்பதி மூலவர் ஏழுமலையான் சன்னதியில் ) நாராயணா நாராயணா என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறானே , இவன் இடத்திலேயே பிச்சை இருப்போம் என்று அவனிடத்திலேயே நாராயணன் பிச்சை எந்தினான்.

ஆனாலும் அவனோ பின் நீ எல்லாம் உருப்படாதவன். இதை எடுத்தாலும் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. அதனால் நீ செத்து விடு என்று நாராயணனனே!!! ( நாரணனை பார்த்து அவன் கூறி விட்டான்).

பார்த்தீர்களா? அப்பனே பக்தி என்பது கூட உள்ளத்தில் நன்றாக இருக்க வேண்டும். அப்பொழுதைதான் இறைவன் வந்தாலும் உங்களுக்கு தெரியும் அப்பா. ஆனால் பக்தியிலே இல்லாமல் ஏதோ தான் என்று வணங்கினால் , இறைவன் ( நேரடியாக உங்களிடம் ) வந்தாலும் உங்களுக்கு புரிய போவதில்லை அப்பா. புரிய போவதில்லை அப்பா. அதனால் அப்பனே வந்தும் இறைவன் பயனில்லை அப்பா. அதனால் அப்பனே யார் யார் எங்கு இருக்க வேண்டுமோ அப்பனே அங்கு இருந்தால்தான் சிறப்பு. சொல்லிவிட்டேன் அப்பனே.

அது போலத்தான் அப்பனே உன் முன்னோர்களை அதை (பாகப்பிரிவினையை) நிறுத்தி வைத்துவிட்டார்கள் மரணம் ( ஒருவனுக்கு )  ஏற்படும் என்று. ஆனால் அப்பனே இதை புரியாமல் நீ அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறாயே, பொறுத்திரு ஒரு தீர்வு அப்பனே சொல்கின்றேன்.

நாடி அருளாளர்:- புரியுதுங்களா ஐயா.

அடியவர்:- ……

குருநாதர்:- அதனால் அப்பனே பின் யாருடைய சொத்தை யார் அபகரிப்பது என்பது கூட தெரியவில்லை. அப்பனே இவ்வுலகம் அப்பனே இறைவனுடையது. அனைத்து இடமும் இறைவனுக்கு சொந்தமானது. ஆனால் மனிதனோ என்னுடையது என்னுடையது என்று கூற அப்பனே ஆனால் உயிரே சொந்தமில்லை அப்பா.  உடம்பும் கூட சொந்தம் இல்லையப்பா. ஆனால் மண் சொந்தமென்று அப்பனே ஏங்கிக்கொண்டு கடைசியில் அப்பனே இறந்து விடுகிறான். நாளை அப்பனே யாரோ ஒருவன் எடுத்துக்கொண்டு கர்மத்தை செய்யும் பொது அப்பனே மீண்டும் அவ்வான்மா கூட சென்றடைந்ததே மீண்டும் பிறப்பெடுத்து அப்பனே கஷ்டங்கள்படும் அப்பனே. இதனால் மண் ஆசை அப்பனே பெரிதளவு அப்பனே முத்திக்கு வழிவகுக்காதப்பா சொல்லிட்டேன்.

அடியவர்:- விதியே கர்மாவை மாற்றுமா? நாங்க ஜெனனம் ஆகும்போது எங்கள் (விதியை) நிர்ணயம் செய்கின்றீர்கள்.அகஸ்தியர் என்ன சொல்கின்றார் என்றால் நீ எல்லாம் ஆசைப்படுற, நீ எல்லாம் அப்படி இருக்க,  ஆனா ஆசை படுவதற்குதானே பூலோகத்துக்கு அனுப்பி இருக்கீங்க?

குருநாதர்:- அப்பனே ஆசைப்படுவதற்கா அப்பனே? (ஆசை) படு ஆனால் தேவை இல்லாததை எல்லாம் பட்டால் அப்பனே இறைவன் எப்படி அப்பா கொடுப்பான்? தேவை இல்லாத எல்லாம் பட்டால் நீயும் கேட்கலாம் தேவை இல்லாதது அது தேவை இல்லாது என்று எல்லாம் அப்பனே ஏற்கனவே அப்பனே கர்மத்தில் எதை என்றும் அறிந்தும் அறிந்ததும் தான் அப்பனே நீயும் வந்திருக்கிறாய் இவ் உலகத்திற்கு அனுபவித்து அனுபவித்துச் செல்ல. மீண்டும் மீண்டும் ஆசைகளில் நுழைந்து விட்டால் அப்பனே நேற்றைய பொழுதிலே யான் சொல்லிவிட்டேன் அப்பனே  கர்மாவை பற்றி அதைக் கேட்டாயா நீ?

அடியவர்:- இல்ல ஆனால் கர்மா குறித்து ஏற்கனவே நான் புரிஞ்சுருச்சு, இந்த ஆசைகளையும். நான் ஒரு ஆசைப்படுகின்றேன் என்றால் அதை உருவாக்குவது அவர்தானே?

குருநாதர்:- அப்பனே அப்படி என்று யார் சொன்னது?

அடியவர்:- நானே சொல்ரேன்.

குருநாதர்:- சரி அப்பா நீ ஆசைப்படுகிறாய் அப்பனே. உன் குடும்பத்தையே நீ காக்க முடியவில்லையே அப்பனே. பின் எப்படியப்பா?

அடியவர்:- காக்க முடியவில்லை என்றால் அது என் விதிதானே?

குருநாதர்:- அப்பனே தெரிகின்றதா அப்பா விதி என்று கூற. அப்பொழுது அனைவருமே வாக்குகள் நீ கூட வந்து கேட்கிறாய் அப்பனே . அப்பொழுது எப்படி அப்பா மாற்ற முடியும்? அப்பனே என்ன எழுதியதோ அது நடந்தே தீரும் என்பேன் அப்பனே. ஆனால் எங்களால் மட்டும் தான் மாற்ற முடியும். அப்பனே ( விதி மாற்றம் ) அதற்கும் ஆசைகளே படக்கூடாது என்பேன் அப்பனே. ஆசைகள் அப்பனே பல புத்தகங்கள் கூட எழுதி விட்டார்கள் அப்பனே ஆனால் ஆசை எது என்று அறிய அறிய நேற்றைய பொழுதில் கூட சொல்லிவிட்டேன்.

ஆசைகள் பட பட ( மூளையில் உள்ள ஆசை எனும் ) செல்களில் பலூன் போல் நல்லவிதமாகவே காற்று போல் விரிந்து அது உடைந்தால் அப்பனே யாராலும் காப்பாற்ற முடியாது அப்பா. அதனால் ஆசைப்படுவதே அப்பனே (திரு) மூலன் கூற்றை ( திரு மந்திரம் ) படித்தாயா? என்ன அப்பனே. ஆசை அறுமின் ( ஆசைகளை அறுத்து எறியுங்கள்) அப்பனே ஈசன் ஆயினும் ஆசை அறுமின்  என்று அப்போது நீ அறிவாளியா இல்லையென்றால் அப்பனே (திரு) மூலன் அறிவாளியா அப்பனே?

( அரும் தவம் இயற்றி சித்தர் திருமூலர் திரு வாய் மலர்ந்து அருளிய திருமூலர் பாடல்.

ஆசை அறுமின்கள் ! ஆசை அறுமின்கள் !
ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின்கள் !
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள் !
ஆசை விட விட ஆனந்தம் ஆமே !

- திருமந்திரம் 2615)

அப்பொழுது கேட்பதற்க்கு நீ தான் அறிவாளி பின் மூலன் புத்தி கெட்டவன் என்று சொல்லிவிட்டாயே அப்பனே. இதுதான் யான் ஏற்றுக்கொள்ள வேண்டும் அப்பனே. மீண்டும் சொல்கின்றேன். (திரு) மூலன் கூற்றைப்படி. அப்பனே இதை ஏற்கெனவே சொல்லிவிட்டார்கள் அப்பனே. அப்பனே நீ அறிவாளியாக இருந்து கொள். அப்பனே (திரு) மூலன் முட்டாளாகவே இருக்கட்டும் அப்பனே.

அடியவர் 1:- சாமி மூலன் எப்படி முட்டாள் ஆவார்? ( ஆசை அறுமின் ) அதில் தான் சந்தேகம். ஈசனிடம் இருக்கும் ஆசையைக்கூட அறுக்கனுமா?

அடியவர் 2:- ஆம்

அடியவர் 3:- அருணகிரிநாதர் மட்டும் முருகனோடு இருக்கும் போது முருகா, முருகா என்று சொன்னாலும் முருகன் நேரா வந்து கேட்டாலும் அவரையும் அறுத்திட்டாரு. பூலோகத்துல அவர் ஒருத்தர்தான் அப்படி நடந்து இருக்கின்றார். வேறு யாரும் அப்டி நடக்கல. அது மாதிரி நாங்களும்….

குருநாதர்:- அப்பனே இதை அதாவது கதையை பற்றிக்கூட யான் எடுத்து உரைத்து விட்டேன் அப்பனே (திருச்)செந்தூரிலே. அதே படித்தாயா முதலில்?

அடியவர்:- படித்தேன் சாமி என்னுடைய பிறப்பு என்னுடைய இறப்பும் தெரியாது. ஆனால் இந்த இடைப்பட்ட காலம் வந்து நான் வந்து ஆசைபடுகின்றேன். போன ஜென்ம கர்மாவில் விழுந்து அடிபடுகின்றேன். அது வந்து நான் நிச்சயக்கப்பட்டவனா இல்ல சித்தர்களால் …

குருநாதர்:- அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே  நேற்றிலிருந்து இதைத்தான் சொல்லி இருக்கின்றேன் அப்பனே. ஏற்கனவே அனைத்தும்  இவ்வாறு நடக்க வேண்டும், அவ்வாறு நடக்க வேண்டும் என்றெல்லாம் எழுதி வைத்துத்தான் அழகாகவே இங்கு அனுப்புகிறான் (இறைவன்) அப்பனே. அவ் எழுதி வைத்ததைவிட மனிதன் பின் மீண்டும் ஆசைகளோ நோக்கி செல்கின்றான். அப்போது தான் அப்பனே கர்மா வந்தடைகின்றது அப்பனே.

அடியவர்:- (விதியை) மீறுவதற்க்கு (என்னால்) முடியாது இல்ல. நான் இப்ப உங்கள சந்திக்க வருவது நிச்சயக்கப்பட்டது. இந்த நான் கேள்வி கேக்குறது நிச்சயிக்கப்பட்டது. இதை மீறி நான் என்ன செயல்பட முடியும்?

குருநாதர்:- அப்பனே செயல்பட முடியும் என்பேன் அப்பனே. அப்பனே ஆனாலும் உன் நண்பன் அப்பனே இதை பொதுவாகவே சொல்கிறேன் அப்பனே. அப்பனே உலகம் மாயை பின் நம் தான் பின் இன்பமாக இருக்கலாம் வா (என்னுடன்) இன்பத்திற்க்கான பின் அனைத்து யான் வழிகளையும் சொல்கிறேன் என்றால் அப்பனே நீ சென்று விடுவாயா இல்லை யான் வருவேன் என்று சொல்வாயா? வர மாட்டேன் என்று சொல்வாயா?

அடியவர் 1:- இருங்க யாரு பதில் சொல்லுங்க இதுக்கு.

அடியவர் 2:- இல்ல இதுக்கு பதில் சொல்லுங்க.

கேள்வி கேட்ட அடியவர்:- தெரியல. நான் அதான் சொல்ல வர்ரேன்.அதுவும் (விதி) அதுல எழுதி இருந்தாதானே நான் சொல்ல முடியும் என்ன?

குருநாதர்:- அப்பனே விதியில் இல்லை அப்பா.

கேள்வி கேட்ட அடியவர்:- சாமி இல்ல தீர்மானம் எடுக்குறதுல் இறைவன் தலையிட்டுதான் இங்க வந்து இருக்கேன். இப்ப ஒரு செயல் பண்ணுங்க….

அடியவர் 1 :- நான் சொல்ல வந்தது நீங்க…

கேள்வி கேட்ட அடியவர்:- இல்ல கேளுங்க நீங்க சொல்ல வந்தது தெரியுது தெரியுது.

அடியவர் 2:- எல்லாமே தெரியுது இப்டி சொல்றீங்க…

கேள்வி கேட்ட அடியவர்:- இல்ல அதாவது ஒரு தீர்மானம் நடக்குது.

அடியவர் :- ஆமாம்

கேள்வி கேட்ட அடியவர்:- நடக்குது. (விதி) அங்க நிச்சயிக்கப்பட்டுத்தான் (இங்க) நடக்குது.

நாடி அருளாளர்:- அது இல்ல. இதுக்கு கேள்வி கேட்கின்றார் குருநாதர். இப்போ வந்து ஒரு நண்பர் கேட்கின்றார் வந்து ஓகேங்களா. நீங்க போவீங்களா போக மாட்டீங்களா என்று கேட்கின்றார்.

கேள்வி கேட்ட அடியவர்:- நான் போக மாட்டேன்.

குருநாதர்:- அப்பனே இதனால் அப்பனே தப்பித்துக்கொண்டாய்.  ஆனால் செல்வாய் என்றால் அப்பனே கர்மா ஆனாலும் நீ சொன்னபடியே அவன் தனக்கும் பின் விதி இருந்தால்தான் உன்னிடத்தில் கேட்கவும் முடிந்தது. ஆனால் இப்படியே இருந்திருந்தால் அப்பனே கர்மா சேராது. ஆனால் சென்றிருந்தால் (சேரந்துவிடும்). அப்பனே புரிகின்றதா இதனையிலும் கூட.

கேள்வி கேட்ட அடியவர்:- புரியுது

மற்றொரு அடியவர்:- இந்த எண்ணம் எதனால் வருகின்றது?. போகனும் இல்ல போகக்கூடாது என்று?

குருநாதர்:- அப்பனே அனைத்தும் சொல்லிவிட்டேன் நேற்றைய பொழுதில் என்ன சொன்னேன் அப்பனே?.  (மூளையில் உள்ள ஒரு ) செல்லில் அனைத்து பதிவுகளும் கூட இருக்கின்றது. அதனால் அனைவருமே தவறான பாதையில் செல்வதும் உத்தம பாதையில் செல்வதும் அப்பனே பதிவுகள் அப்பா அனைத்தும் கூட  புரிகின்றதா?

(அடியவர்கள் இந்த மூளையில் உள்ள செல் ( karma memory card in our brain ) இதன் பதிவு எப்படி ஆட்டுவிக்கின்றதை என்ற ரகசியங்களை இதற்கு முந்தைய பதிவுகளில் அவசியம் படிக்கவும்)

கேள்வி கேட்ட அடியவர்:- அது இல்ல சாமி. இப்ப பொது தளம் ( பொது இடம் )  இருக்கு, அதில் நான் யாரோ அவர் யாரோ தெரியாது. எனக்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பப்ளிக்குல  ( பொது இடத்தில் ) நான் வந்து அவர அடிச்சு அவரு மரணம் மாதிரி ஆயிடுச்சு. அப்ப அது விதியா? இல்ல என்னோட….

குருநாதர்:- அப்பனே அவன்தனை நீயே ஏன் அடிக்க  வேண்டும் அப்பனே?. இதனையும் நேற்றைய பொழுது சொல்லிவிட்டேன். முன் பிறவியில் உன்னை அடித்திருக்கின்றான் அப்பனே. அவ்வளவுதான்.  இப்பிறவியில் அவனை அடித்து கருமா சரி செய்து கொள்கின்றாய். அவ்வளவுதான் அப்பனே.

நாடி அருளாளர்:- ஐயா நீங்க கேக்குற பதில் எல்லாம் நிறைய நேத்தே சொல்லிட்டாங்க.

அடியவர்:- ஐயா போன பிறவியில் அவரை அடிச்சார் என்பது இந்த பிறவியில நம்மை அடிக்க தூண்டுது என்றால், அதை தடுப்பதற்க்கு  நமக்கு விதி இருக்கா இல்ல  அய்யாவோட ஆசிர்வாதம் வேணுமா? 

குருநாதர்:- அப்பனே இதுதான் அப்பனே சூட்சுமம்.  அப்பனே இப்பொழுது புரிகின்றதா? அப்பனே. அங்கும் கூட பின் ஐயோ பாவம் செல்லட்டும் என்று விட்டு விட்டால் அங்கு தான் அப்பனே புண்ணியம் அப்பனே அதிகரிக்கின்றது. எனவே அப்பணி அதனால் புண்ணியங்கள் அதிகரிக்க அதிகரிக்க இறைவன் உன் பக்கத்திலேயே வந்து அப்பனே இப்பொழுது கேட்டானே அதனைக்கு மீறிய செயல் எல்லாம் இறைவனே செய்து வைப்பான்.  விதியில் இல்லாத கூட கொடுத்து விடுவேன் என்பேன் அப்பனே. அதனால் தான் அப்பனே மனதை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும். அப்பனே மாமனிதனாக வாழ வேண்டும்.  அப்பனே புரிகின்றதா?

கேள்வி கேட்ட அடியவர்:- சாமி புண்ணியங்கள் தேட வேண்டும். புண்ணியங்கள் எந்த வகையில் தேட வேண்டும்?.

குருநாதர்:- அப்பனே  இப்பொழுது கேட்டாயே அப்படியே விதியில் கூட அவனைப் பின் அடிக்கலாம் என்று கையை ஓங்கிவிட்டாய் அல்லவா? பழிக்குப்பழி அப்பனே அங்கே ( அவனை அடிக்காமல் ) நிறுத்தி விட்டால் அப்பனே இதுவே ஒரு புண்ணியம் தான் அப்பா. அப்னே யார் மனம் முதலில் புண்படக்கூடாது என்பேன் அப்பனே. முதலிலே கோபம் வரக்கூடாது என்பேன் அப்பனே. கோபம் வந்து விட்டாலே புண்ணியங்கள் அழிந்து விடும் என்பேன் அப்பனே.

அடியவர்:- கோபம் வராமல் கட்டுப்படுத்துவது எப்படி?

குருநாதர்:- அப்பனே இதன் விளக்கத்தையும் யான் சொல்லிவிட்டேன். முன்னோர்கள் தியான பயிற்சி செய், மூச்சு பயிற்சி அப்பனே இன்னும் இன்னும் எதை எதையோ கற்றுக்கொண்டு (வாழ்ந்தார்கள்) அதையெல்லாம் செய்வதே இல்லை அப்பனே.  எப்படி அப்பா? அதனால் தன் மீது குறையை வைத்துக் கொண்டு  இவை எல்லாம் நீ படித்தாயா என்ன அப்பனே! ஆனால் இந்த அளவு கூட கலியுகத்தில் எதையோ படிக்கிறார்கள்? ஆனால் நல்லதை படிக்க முடிவதில்லையே அப்பனே!!!!!. அப்பனே புரிகிறதா?


கேள்வி கேட்ட அடியவர்:- ஜீவாத்மா பேசுது. ஜீவாத்மா எங்க எல்லாரையும் வழி நடத்துது. ஒவ்வொரு மனிதனும் ஒரு வித்தியாசத்துல இருக்குறாங்க. அந்த வித்தியாசத்தை உண்டுபன்றதே இறைவன் தான். அதை காப்பது சித்தர்கள். நீங்க சொல்லி அத மாற்றக்கூடாதா? .

குருநாதர்:- அப்பனே மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான். மாற்றக்கூடாது என்று அறிய அப்பனே அனைவரையும் கூட மாற்றிக் கொண்டேதான் இருக்கின்றேன். அதனால்தான் அப்பனே இதையும் நேற்றைய பொழுது சொல்லி விட்டடேன்.  தவறான பாதையில் சென்று சென்று உலகத்தை அழித்துக் கொண்டிருக்கிறான் மனிதன் என்பேன் அப்பனே. இதுவும் விதியின் விளையாட்டு என்று எது என்று குறிப்பிடாதே அப்பனை உன் விதியில் மற்ற உயிர்களை கொல்லாதே என்று இறைவன் எழுதி வைத்திருக்கிறான். ( இந்த விதி பொது என்பதை உணர்க). ஆனால்  மற்ற உயிர்களை கொன்று குவித்து பின் உட்கொண்டு இருக்கின்றீர்களே அப்பனே,  யாங்களே சில கஷ்டங்கள் கொடுத்துத்தான் மாற்ற வைக்க முடியும் என்பேன் அப்பனே. இங்கு விதியில் இல்லாத கூட எப்படி செயல்படுத்த? மனிதனால் அப்பனே. அதனால்தான் அப்பனே மனிதனை விட்டு விட்டால் அப்பனே யான்தான் அனைத்தும் எந்தனுக்கு  தெரியும். இறைவனா இறைவன் எல்றெல்லாம் இறைவனேயே சாடுவான் ( திட்டுவான் ).  அதனால்தான் இறைவனே துன்பத்தை வைக்கின்றான் என்பதைக்கூட அனைத்தும் சொல்லிவிட்டேன் நேற்றைய பொழுதுலே.

அடியவர்:- அதாவது கடந்த முறையில நம்ம எல்லா பயிற்சியும் எல்லாத்தையும் கத்துக்குட்டோம். திருமணத்திற்கு அப்புறம் அதை தொடங்க ( தொடர ) முடியாத சூழ்நிலை என்ன செய்ய வேண்டும்? இது தொடர்வதற்கு ஆசிர்வாதம்…

குருநாதர்:- அப்பனே இதுதான் மாயை அப்பா. இறைவன் அனைத்து ஆசீர்வாதங்கள் கொடுத்துதான் அனுப்புகின்றான், ஆனால் சரியாக பயன்படுத்துவதே இல்லை. ஆனால் யார் ஒருவன் சரியாக பயன்படுத்துகின்றானோ  அவன் வெற்றியாளானாக திகழ்கின்றான் அப்பனே. சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அப்பனே யாங்களே கஷ்டங்களை கொடுத்து கொடுத்து அடித்து அடித்துத்தான் அப்பனே நல்ல வழிக்கு  ஆனாலும் அப்பனே விதி மதி இதைப்பற்றி எல்லாம் நேற்றைய பொழுது சொல்லி விட்டேன்.

விதியில் என்ன உள்ளதோ அதுதான் இங்கு நடக்கும். ஆனாலும் அப்பனேஅதை மீறி அப்பனே மனிதன் சென்று விட்டான். அப்பனே உந்தனுக்கே சொல்கின்றேன். விதியிலே இல்லை அப்பா. அதாவது வேற்று கிரகத்திற்கு அப்பனே இங்கிருந்து கருவி அனுப்புகிறான் அப்பனே. அதனால் விதியில் இல்லாத கூட செய்து விட்டான் அப்பனே. ஆனால் அதனால் என்ன பிரயோஜனம் என்று கூறு.?

கேள்வி கேட்ட அடியவர்:- ஒரு பிரயோஜனம் இல்லை.

குருநாதர்:- அப்பனே அதனால் ஒன்றை சொல்கின்றேன். விதியில் இல்லாததை செய்தால் அப்பனே துன்பங்கள்தான் மிஞ்சும் என்பேன். ஆனாலும் நீயும் கேட்கலாம் விதியில் உள்ளதை எப்படி தெரிந்து கொள்வது என்று கூற அப்பனே தியானங்கள் அப்பனே முறையான பயிற்சிகள் அப்பனே இறைவா நீ தான் (அனைத்தும்). நீ எதை கொடுத்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். கோபம் இல்லாமல் அனைத்தும் எவர் எதைச் சொன்னாலும் தாழ்வாக அதாவது அமைதியாக சென்று கொண்டே இரு அப்பனே. நிச்சயம் உன் விதியின் ரகசியத்தை கூட அப்பனே நீயே அறிவாய் என்பேன் அப்பனே. அப்போது உன்னையே நீ காத்துக்கொண்டு அப்பனே மற்றவர்களுக்கு உதவிகரமாக இருக்கலாம் எனபேன் அப்பனே. ஆனால் அப்படிப்பட்டவர்கள் அப்பனே இங்கு குறைவு அப்பா. அதாவது பூலோகத்தில் குறைவு அப்பா.

அடியவர்:- சரியான குருமார்கள் இல்லை.

குருநாதர்:- அப்பனே எப்படி சொல்லலாம் அப்பா? சரியான குருமார்கள் இல்லை என்று. அப்பனே இப்பொழுது நீ வந்திருக்கிறாய் அப்பனே அப்படியே தேடி தேடி வர வேண்டும் என்பேன் அப்பனே. அப்பனே பின் அதாவது அங்கு பணங்கள் இருக்கிறது என்றால் ஓடி விடுகிறாய் அப்பனே. ஆனால் அங்கே குரு நல்ல இருக்கின்றான் என்றால் குருவா அவன்? அவன் கேடு கெட்டவன். அவை எல்லாம் பொய் என்று நீ கூறி் விடுகின்றாய். எப்படி அப்பா ? பணத்துக்கு மட்டும் ஓடுகின்றாய் அல்லவா. அப்பனே இதுபோல் ஓடு. அங்கு அங்கு ஓடு.  அப்பனே இப்பொழுது வெளி தேசங்களுக்கு சென்றால், உடனடியாக உனக்கு வெளி தேசத்தில்  யான் அனைத்தும் செய்கின்றேன் அங்கு ஒரு கோடி பின் உனக்கு கிடைக்கின்றது என்றால் அப்பனே நீ நிச்சயம் அங்கு போய் விடுவாய்.

ஆனால் இங்கே இருக்கின்றான் ஒரு சித்தன். பின் அவனிடத்தில் சென்றால் அனைத்தும் கிடைக்கும் என்றால் அப்பனே அவனா சித்தன்?  அவன் பொய். சுவடிகளும் பொய்.  எந்தனுக்கு ஒரு கோடி வந்துவிட்டால் யான் அனைத்தும் செய்து விடுவேன் என்றுதான் நீ செய்வாய். யான் சத்தியம் அடித்து சொல்கின்றேன்.

இப்பொழுது அப்பனே எங்கிருக்கிறான் குரு? அப்பொழுது குரு யார்? பணம். அதை தேடிச் சென்றால் அதன் மூலமே அழிவுதான். மீண்டும் கடைசியில் எதை என்று அறிய அறிய அப்பொழுதே சொன்னான் அவ் குரு அங்கிருக்கின்றான் என்று. ஆதனால் அப்பனே பின் அடிபட்டு உதை பட்டு வந்தால்தான் அப்பனே உண்மை நிலை தெரியும் என்பேன் அப்பனே.

அடியவர்:- பணத்தின் பின்னாடியே போக கூடாது.

குருநாதர்:- அப்பனே எங்கு சென்றாலும் உந்தனுக்கு தீர்வு கிடைக்கவில்லை அப்பா. அதனால் தான் அப்பனே உன் மனது இப்படி சொல்கின்றது அப்பனே.  நிச்சயம் யான் அறிவேன் அனைத்தும் கூட அப்பனே. உண்மையில இதை பார்த்தால் அனைத்தும் பொய்தானப்பா.

அடியவர்:- ஜீவன் மூக்திக்கு என்ன வழி சொல்கின்றார் அகஸ்தியர்?

குருநாதர்:- அப்பனே ஒன்றும் செய்யாது அப்பா. என் வழியில் வாருங்கள் போதுமானது அப்பனே. யாங்களே இழுத்துச்செல்வோம்.

அடியவர் 1:- நீங்க வெறுத்துட்டீங்க. இதனாலதான் அப்டி சொல்கின்றார்.

அடியவர:- நான் வெறுக்கல. வெறுக்குற மாதிரி நடந்துக்குறாங்க.

அடியவர் 1:- அதுதான் சொல்கின்றார்

அடியவர்:- இந்த பக்கத்துக்கு வர வர நீங்களே வந்து இது நீங்க…

குருநாதர்:- அப்பனே இத்தனை வாக்குகளில் அப்பனே அனைத்தும் பொய் என்று வேடதாரிகள் என்று கூட சொல்லி இருக்கின்றேன் அப்பனே. அதை கூட புரிந்து கொள்ளவில்லையா நீ அப்பனே?.

எவனாலும், எதையாலும் அப்பனே ஒன்றும் சாதிக்க முடியாது அப்பனே. அனைத்தும் பொய்கள் அப்பா. அதனால் தான் சித்தர்களே யாங்கள் வந்து மனிதனை கஷ்டத்தில் உள்ளாக்கி அப்பனே திருந்துங்கள் திருந்துங்கள் என்று எல்லாம் அப்பனே கூறிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் ஒன்றை மட்டும் சொல்கிறேன் அப்பனே இப்படியே சென்று கொண்டிருந்தால் நேற்றைய பொழுது சொல்லிவிட்டேன் சித்தனே பொய் என்று சொல்லி விட்டு இருப்பான் அப்பனே அதனால்தான் அப்பனே அடித்து நொறுக்கி யாங்கள் எங்களையே அப்பனே காண்பித்து கொள்கிறோம் அவ்வளவுதான் அப்பனே. கஷ்டங்கள் வரும் சித்தனை நம்பினாலும் அப்பனே எவை என்று கூற இறைவனை நம்பினாலும் அப்பனே ஏன் என்றால் கஷ்டங்கள் வைத்துத்தான் எங்களாலும் திருத்த முடியும். கஷ்டங்களை எவ்பரிகாரத்தாலும் ஆகாதப்பா. யாங்கள் நினைத்தால்தான் உங்களுக்கு வாழ்க்கையில் விடிவெள்ளி சொல்லிவிட்டேன்.

அடியவர்:- முன்னடி சொன்னார்,  ஈசனோடு ஆயினும் ஆசை அறுமின், அந்த வாரத்தையோட அர்த்தம் தெளிவுபடுத்த வேண்டுகின்றோம்.

குருநாதர்:- அப்பனே ஆனாலும் அதாவது பின் துன்பத்திற்கு காரணம் ஆசை என்பது கூட அப்பனே முன்னோர்கள் அதாவது பின் ஞானிகளே அப்பனே உணர்ந்து உணர்ந்து அப்பனே அது உங்களுக்கே தெரியும். ஆனாலும் அப்பனே தன் கடமையை சரியாக செய்தாலே போதுமானது அப்பா. இறைவன் உன்னிடத்தில் வருவான் என்பேன் அப்பனே.தன் கடமையை சரிவர செய்யாமல் நமச்சிவாயா நமச்சிவாயா என்று அவனுடத்தில் உட்கார்ந்தாலும் அவன் ஒன்றும் செய்யப்போவதில்லை அப்பா. அதனால் ஈசன் என்ன சொல்லுவான் தெரியுமா? பின் உந்தனுக்கு கடமைகள் இருக்கிறது. அதை மறந்து விட்டு என்னிடத்தில் உட்கார்ந்திருக்கின்றாயே முட்டாளே. உனக்கு கொடுத்தும் லாபம் இல்லை என்று ஆனால் இவனோ யான் ஈசன் உடன் அதாவது ஈசன் நாமத்தைத்தான் உச்சரித்து கொண்டிருந்தேனே, ஒன்றுமே ஈசன் கொடுக்கவில்லையே என்று கடைசியில் ஈசன் மீது பழி சுமத்துவான் அப்பனே.

அடியவர்:- பற்றுக பற்றுக பற்றற்றவன் திருவடியை - என்ன அர்த்தம் ஐயா.

குருநாதர்:- அப்பனே யாராவது இங்கு சொல்லலாம். பின்பு யான் உரைக்கின்றேன்.  அனைத்துமே யான் உரைத்து விட்டால் நீங்களும் அறிவு உள்ளவராக இருங்கள்.

நாடி அருளாளர்:- ஐயா யாராவது சொல்லுங்கள்.

அடியவர்:- அதாவது நம்ம அலை பாய்கின்ற மனச….

குருநாதர்:- அம்மையே எது என்று அறிய அம்மையே பற்று எதுனுடைய அறிய அறிய அம்மையே பின் எதைப் பற்றிக் கொள்ள வேண்டும் முதலில் அம்மையே?

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. மிக நன்றி அய்யனே, குருவடி சரணம், திருவடிசரணம்
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய
    ஓம் நமசிவாய

    ReplyDelete
  2. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete