​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday 18 November 2023

சித்தன் அருள் - 1507 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 19!


குருநாதர்:- அப்பனே உடலில் அழுக்குகள் தங்கி இருக்கிறது. அதை எடுக்கச்சொல் முதலில் அப்பனே. நீ கூறு ஏன் என்றால் அப்பனே இவை எல்லாம் யான் என்ன சொல்வது. ( அடியவரை கேள்வி கேட்ட அடியவருக்கு பதில் உரைக்க திருவாய் மலர்ந்து அருளினார் குருநாதர் )

அடியவர்:- உடம்பு முழுதும் அழுக்கு இருக்குன்னு  அப்பா சொல்கின்றார். ( உடல் கழிவை வெளியேற்ற சில உரையாடல்கள் - பேதி கொடுத்தல், நல் எண்ணெய் குளியல், விரதம் இருத்தல், விரதம் உடலை சுத்தப்படுத்த, இயற்கை ஆகாரங்கள் எடுத்தல்,)

குருநாதர்:- அம்மை யே மீண்டும் என்ன சந்தேகம் கூறு.?

அடியவர்:-  (திரிபலா, திரிகடுகம் எடுத்தாலே அனைத்து கழிவுகளும் உடலை விட்டு நீங்கிவிடும் என்று குருநாதர் பல முறை உரைத்துள்ளார்கள்.)

குருநாதர்:- அப்பனே புரிகின்றதா? அம்மையே ( திரிபலா, திரிகடுகம் ) அனைத்தும் சொல்லி விட்டும் யாரும் அதை பயன்படுத்துவதில்லை. இதனால்தான் துன்பங்கள். அதனால் தான் கஷ்டங்கள் கொடுத்துத்தான் நிச்சயம் நல்வழி படுத்தமுடியும் என்பேன் என்னால் அம்மையே. யான் செய்வது சரியா தவறா நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்?

அடியவர்:- சரிதான்

அடியவர்:- கஷ்டம் கொடுத்தாலும் சில பேர்கள் தெய்வத்திடம் வரமாட்டேன் அப்டின்னு…. (இருக்காங்க)

குருநாதர்:- அம்மையே எவை என்று கூற பாவங்கள் இருந்தால் இறைவனைக் கூட நெருங்க முடியாது சொல்லிவிட்டேன். இறைவனே பின் நோக்கி வந்தாலும் இறைவன் கூட நீ அப்படியே இருந்து விடு என்று சொல்லிவிடுவான் அம்மையே. அம்மையே ( மனிதர்களுக்கு ) வயது ஆகிக்கொண்டே போகின்றது. ஆனால் அறிவுதான் இல்லை அம்மா.

அடியவர்:- ( உலகில் ) புற்று நோய் அதிகமாக இருக்கு.

குருநாதர்:- அப்பனே ஒரு வலைத்தளத்தை நடத்துகின்றான் இங்கு.

( சித்தன் அருள் வலை தளம், திரு. அக்னிலிங்கள் ஐயா அவர்கள் - https://siththanarul.blogspot.com ).

அப்பனே எத்தனை பதிவுகள் அப்பா. அவை எல்லாம் படித்தாலே நீ திருந்திவிடுவாய் அப்பனே. படிப்பதே இல்லை அப்பனே. அதை படித்துவா. அப்பனே உன் ரகசியத்தை அனைத்தும் சொல்கின்றேன் அப்பனே.

அடியவர்:- பொதிகைக்கு ( பொதிகை மலை ) தமிழ்நாட்டு வழியாக முன்னாடி போனாங்க. இப்ப கேரளா வழியாகத்தான் கஷ்டப்பட்டு போகின்றோம்……

குருநாதர்:- அப்பனே அனைத்தும் தவறுகள் செய்து விட்டு அப்பனே என்னிடத்தில் வந்தால் என்ன லாபம்? அப்பனே யான்தான் அனுமதிக்க வேண்டும் என்பேன். என் அருள் இருந்தால் தான் என்னையும் நெருங்க முடியும் சொல்லி விட்டேன் அப்பனே. அதனால் அவர் இவர் என்றெல்லாம் மற்றவர் மீது குற்றம் சொல்லாதீர்கள் அப்பனே. உன்னை பற்றி உங்கள் மீது என்ன குற்றம் என்று முதலில் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே அவ்வளவுதான்.அப்பனே இன்னும் விளக்கம் (ஏதும் வேண்டுமா?)

அடியவர்:- பொதிகை மன்னூர் கரையில் அப்பா போனதாக சொல்கின்றார்கள்.

குருநாதர்:- அனைத்துமே என்னுடையதுதான் அப்பனே. அங்கு இங்கு எவை என்று அறிய அறிய ஏன் அப்பா பின் அங்கு கூட இடத்தை பிடித்து விட்டீர்களா என்ன?

அடியவர்கள் :- ( பலர் பலத்த சிரிப்பு )

அடியவர்:- சர்கரை வியாதிக்கு மாற்று மருந்தாக இப்ப ஊசி போட்டு கிட்டு இருக்கேன். அதிக உச்ச அளவு ( maximum dose ) மருந்து போட ஆரம்பிச்சேன். ஆனாலும் இந்த மருந்துகள் மூலம் ஒரு முன்னேற்றமும் இல்லை.

குருநாதர்:- அம்மையே எதை என்று அறிய அறிய முன்னேற்றம் இருக்காது அம்மா. எது என்று அறிய இதை பற்றி விவரமாக குறிப்பிட்டாலும் இப்போது வேண்டாம் அம்மையே.  யான் கவனித்துக் கொள்கிறேன் பொறுத்து இரு.

அடியவர்:- ( தனி விளக்கம் வேண்டல் )

குருநாதர்:- ( அருள் தனி விளக்கம்)

அடயவர்:- ( தனி விளக்கம் வேண்டல் )

குருநாதர்:- ( அடியவர் பிறர் சொல்லிய பரிகாரங்களை செய்து தீய வினைகளால் சூழப்பட்டு இருக்கின்றார். அதாவது பரிகாரம் செய்ய சொன்னவர் கர்மாவை இந்த அடியவர் அவர் அறியாமல் ஏற்கும் சூழல் மற்றும் பரிகாரத்தால் வந்த கடும் கர்ம வினைகள். அன்பு குருநாதர் அவற்றை நீக்குவது பெரும் பாடு என தெரிவித்தார்கள்.

அடியவர்களுக்கு ஒர் வேண்டுகோள் :-

யார் எந்த பரிகாரம் சொன்னாலும் ஏற்கவேண்டாம். பரிகாரம் செய்ய சொன்னவர்களின் கடும் கர்மாவை நீங்கள் உங்கள் முதுகில் சுமக்கும் நிலை உண்டாகும். தலைக்கு மேல் கையை தூக்கி உங்கள் குறைகளை சொல்லி குருநாதரிடம் வேண்டுங்கள். கர்மம் இல்லாமல் வாழுங்கள். இறைவனை நம்புங்கள். அதுவே அனைத்தும்.)

(அடியவரின் பூர்வ ஜென்ம பரம ரகசியத்தை , பரிகாரமே செய்ய முடியாத வினையை எடுத்து உரைத்தார்கள்).

அடியவர்:- முன்னோர்கள் ஆத்மா சாந்தி அடையனும் என்றால் என்ன செய்ய வேண்டும்?

குருநாதர்:- இதனைப்பற்றி எல்லாம் ஏற்கனவே சொல்லிவிட்டேன்.

அடியவர்:- ( தனி விளக்கம் வேண்டல் )

குருநாதர்:- ( அருள் தனி விளக்கம்)

அடியவர்:- சில வருடம் முன்னர்  ஒரு கோயில் போனபோது ஒருத்தர் வந்து…

குருநாதர்:- அப்பனே அன்னத்தை அளிக்கின்றாய் அல்லவா? இவளையும் அழைத்துச் சென்று அப்பனே பின் என்று அறிய கொடுத்திட்டு பின்பு உரைக்கின்றேன். ( அடியவரை அன்ன சேவை செய்ய அருளினார்கள்.)

அடியவர் :- ( தனிப்பட்ட பிரச்சினை குறித்த கேள்வி )

குருநாதர்:- யான் சொல்லியதை விட்டு விடு அப்பனே. ( அசைவம் சாப்பிடுவதை நிறுத்த உத்தரவு )

அடியவர்:-  …………

குருநாதர்:- அப்பனே அறிவுப்பூர்வமாக கேட்டு விடாதே. அனைவரும் உட்கொள்கிறார்களே அனைவரு ம் நன்றாக இருக்கிறர்கள் என்று கேட்டு விடாதே. ஆனால் இதையும் நீ கேட்பாய் என்பது நன்றாக தெரியும். ஆனால் இப்பொழுது நீ கேட்கவில்லை என்றாலும் நீ இல்லத்தில் சென்று யோசிப்பாய் அப்பனே. யோசிப்பதில் வல்லவனப்பா.

அடியவர் 1:- கரி சாப்புடுரவுங்க நல்லாத்தான் இருக்காங்க அப்டீன்னு நீங்க நினைக்கலாம்.

அடியவர் 2:- அப்படி யோசிப்பதில்லை.

அடியவர் 3:- அசைவத்த வளர்ப்பு பிராணிகளுக்கு வாங்கி கொடுப்பது…

குருநாதர்:- எதற்காக அப்பா ( வாங்கி கொடுக்கின்றாய்?)

அடியவர்:- தெரியாமல் கேட்கின்றேன்.

அடியவர் 2:- எனது பாப்பாவிற்கு ரெண்டு வயசு ஆகுது. Egg கொடுக்கலாமா?

குருநாதர் :- அப்பனே அனைவரும் சரி என்று யார் என்று கூற பின் யார் என்று கூற அனைவரும் கேளுங்கள். அனைவருமே இருக்கிறார்கள் அல்லவா? யார் சரி யார் தவறு என்று அனைவரையுமே கேள்?

( இந்த கேள்வியே தவறு என்றபோதும் அங்குள்ள அனைவரின் விவாத்திற்கே விட்டுவிட்டார்கள். பலத்த அடியவர் உரையாடல்கள்)

குருநாதர்:- அப்பனே அம்மையே (எந்த அசைவம் சாப்பிட்டால்) கர்மமும் விடாது என்பேன். நோய்கள் அனுபவித்தே தீர வேண்டும்.

அடியவர்:- எல்லோருமே இறை வழிபாட்டில் இருக்கின்றோம். பல நேரங்கள்ல எங்களுக்கு மனம் ஒருமுகப்பட வில்லை…

குருநாதர்:- அம்மையே இதனால் ஆசைகள் இதற்கு காரணம் என்பேன்

அடியவர்:- காளான் உணவு வந்து சைவம் என்று நிறைய எடத்துல சாப்பிடுகின்றனர். அது தவறா?

குருநாதர்:- அப்பனே தெரிந்துகொள். இவையெல்லாம் ஒரு கேள்விகளே இல்லை அப்பனே.

அடியவர்:- திருச்சுனையில் பாண்டியம்மா வந்திருக்காங்க. அன்ன சேவை செய்து கொண்டு உள்ளார்கள்.

(அகத்திய பிரம்ம ரிஷிகள் பரிபூரண ஆசி பெற்று மாமனிதனாக வாழும் இந்த அம்மையை அங்கு உள்ள அடியவர்கள் முன்னே சென்று அமர வைத்தனர். மகத்தான சேவை செய்துவரும் இந்த அடியவரை பற்றிய தகவல்களை பின் வரும் பதிவில் காண்க

https://siththanarul.blogspot.com/2023/11/1491.html?m=1)

குருநாதர் ஆசி வேண்டும். திருச்சுனையில் கும்பாபிஷேகம் பண்ணப்போகின்றார்கள். வள்ளளார் மடத்தில் அன்னதானமும் இருபத்தைந்து வருஷமா செய்து கொண்டு வருகின்றார்கள்.

குருநாதர்:- அம்மையே உன்னை பல முறையும் யான் பார்த்தேன் அம்மையே.  வள்ளல் பெருமானும் நல்ல விதமாகவே உந்தனக்கு பல சேவைகளை செய்திருக்கின்றான் என்பேன் அம்மையே. அதனால் தான் எது என்று அறிய அறிய எப்பாவங்களும் உன்னை அணுகவில்லை என்பேன் அம்மையே. ஆனாலும் அமைதியாக இரு அம்மையே சித்தர்களே வந்து உந்தனுக்கு உதவிடுவார்கள். என்ன தேவை தாயே? அதனை நான் கொடுப்பேன் உந்தனுக்கு மட்டும்.

(இந்த இடத்தில் தட்டச்சு செய்யும்போது உடல் முழுவதும் மயிர்கால்கள் எழுந்து நின்றது இந்த அம்மையின் புண்ணிய பலத்தை உணர்ந்து என்பது உண்மை. வணக்கம் அடியவர்களே, சர்வ வல்லமை படைத்த அகத்தீசர் இதுவரை இப்படி எந்த வரம் வேண்டும் என்றாலும் தருகின்றேன் என்று யாருக்கும் உரைத்ததில்லை. முதல் முறையாக இப்படிப்பட்ட மகத்தான வாக்கை படிக்கும் பாக்கியம் உங்களுக்கு என்று உணர்க. )

மற்ற அடியவர்கள்:- என்ன வேணும்னு கேளுங்கள் அப்பாகிட்ட. உங்களுக்கு மட்டும் கொடுக்கின்றேன் என்று சொல்கின்றார்.

(இதுவரை எந்த அடியவர்கள் பெயரையும் இந்த வாக்கில் குறிப்பிடவில்லை. அம்மை பாண்டியம்மாள் அவர்களின் புண்ணிய சேவையை உலகோருக்கு தெரிவிக்கும் வகையில் அவர் சேவைக்கு சிரம் தாழ்த்தி தலை வணங்கி அவர்கள் பெயரை இங்கு பதிவிடுகின்றோம் )

அடியவர் பாண்டியம்மாள் :- எனக்கு என்றைக்கும் சாதம் போடுவது மட்டும் , அன்னம் போடுவது மட்டும் வேண்டும். ( பிறருக்கு அன்ன சேவை செய்யும் பாக்கியம் வேண்டும் ) .

குருநாதர்:- அதனாலதான் உந்தனுக்கு கொடுக்கிறேன் என்று ( யான் உரைத்தேன் ) ஆனால் மற்ற அனைவருமே கருமத்தைத்தான் கேட்பார்கள் தாயே. உனக்கு கொடுத்து விட்டேன். வள்ளல் பெருமானே இருக்கிறான் அங்கே.

(திருச்சுனையில் அடியவர் பாண்டியம்மாள் அன்ன சேவை செய்யும் இடத்தில் வள்ளல் பெருமான் நிரந்தரமாக அருளுகின்றார்.)

நாடி அருளாளர்:- அப்போ மற்றவங்க எல்லாருமே கருமத்தைதான் கேப்பாங்க. அதனால நான் கொடுக்கவில்லை என்று  சொல்லிவிட்டார். உங்களுக்கு மட்டும் ஏன் நீங்க என்ன கேட்டாலும் குடுக்பேன் என்று சொன்னார் குருநாதர்? . அந்த பதிலை கேட்டீங்களா?

குருநாதர்:- அம்மையே குற்றங்கள் இல்லை. குறைகள் இல்லை. அதனால் அம்மையே நல்லவிதமாகவே இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க அம்மையே உன் ரகசியத்தை எல்லாம் சொல்கின்றேன். ஏன் எதற்காக இப்புவிதன்னில் பிறந்தாய் அம்மையே எதற்காக அதனால் உன்னை எதற்காக ஈசன் ஆட்கொண்டான் என்பதை எல்லாம் நிச்சயம் சொல்கிறேன் தாயே. உன் வேலையை நடத்து யான் பார்த்துக்கொள்கிறேன்.

நாடி அருளாளர்:- பாத்தீங்களா அம்மா (அடியவர் பாண்டியம்மாள்).உங்களுக்கு மட்டும்தான் சென்னார் அகத்தியர். நீங்கள் என்ன கேட்டாலும் கூட கொடுக்கின்றேன் என்று சொன்னார்கள். வேற யாருக்காவது கொடுக்கின்றேன் என்று சொன்னார்களா குருநாதர்?  குருநாதருக்கு தெரியும் யார் என்ன கேள்வி கேட்பார்கள் என்று. உங்களுக்கு மட்டும் தெரியமாக நீங்கள் என்ன வேண்டும் ஆனாலும் கேளுங்கள் தருகிறேன் என்று சொன்னார்கள். ஆனால் இங்கு உள்ள மற்றவர்களுக்கு இதே கேள்வியை கேட்டு இருந்தால், என்ன அவர்கள் கேட்டு இருப்பீர்கள்? நீங்க மாயை தான் கேட்டு இருப்பீர்கள். இவர்கள் (அடியவர் பாண்டியம்மாள்) என்ன கேட்டாங்க என்று சொல்லுங்கள்?

டியவர்கள்:- அடுத்தவர்கள் பசியை போக்கனும்.

குருநாதர்:- இதனால் அம்மையே , ( அங்கு உள்ள மற்ற அடியவர்களிடம் )  தன்னால் இருப்பதை அவரிடத்தில் (அடியவர் பாண்டியம்மாளிடம் ) கொடுங்கள் அம்மையே காசுகளாக பின் அன்னத்தை (அடியவர் பாண்டியம்மாள் பிறருக்கு ) ஈயட்டும். பின் இதையாவது செய்யுங்கள்.

( அங்கு உள்ள அடியவர்களிடம் காசுகள் கொடுக்கச்சொன்னார்கள் குருநாதர். எல்லையே இல்லாத புண்ணியத்தை இங்கு ஒரு புரிதலுக்காக கீழே ஒரு படத்தில் கொடுத்து உள்ளோம். கர்ம வட்டத்தில் எதை கேட்டாலும் அதை இறை வழங்குவது கடிணமே. ஆனால் இதற்கு வெளியில் எதை கேட்டாலும் அருளும் என்பதை உணர்க. இங்கு இறைவன் அதே போல் இந்ந அம்மைக்கு உடனே அருளினார்கள். )

(அடியவர்கள அங்கு தன்னிடம் உள்ள காசுகளை புண்ணிய பலம் ஓங்கி சேவை செய்யும் பாண்டியம்மாள் அவர்களிடம் வழங்கினர்கள். )

குருநாதர்:- அம்மையே ( பாண்டியம்மாள் ) யான் இருக்கின்றேன் உந்தனுக்கு அம்மையே. அதனால் நிச்சயம் என்னை பற்றி எடுத்துரை் அனைவருக்குமே.

(குருநாதர் தன்னைப்பற்றி எடுத்து உரைக்க பாண்டியம்மாள் அவர்களிடம் உரைத்தார்கள்)

அடியவர் பாண்டியம்மாள்:- ( பாசம் மிகுந்த அவரின் வாய் மொழியை அப்படியே இங்கு பகிர்ந்து உள்ளோம்) என் மகனுக்கு கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு அவர் அகத்தியர் வந்து என்ன சொன்னாரு ஒருத்தர் வருவாரு. அவருக்கு வந்து ஒரு உடை எடுத்துக் கொடுங்க,  துணி எடுத்து குடுங்கன்னு கேப்பாரு. அப்ப வந்து டிவி ல போட்டு கட்டினார்கள். அதே மாதிரி கல்யாணம் மண்டபத்தில ஒரு கோவில்ல வந்து ஒக்காந்து விளக்கை ஏத்தி  எடுத்து வந்து அன்னம் கேட்டார். சாப்பிட்டாங்களா ஒரு துண்டும், ஒரு உடை மட்டும் குடுமா எந்த குறையும் இல்லாம நடத்தி குடுத்துட்டு போறேன்னு சொன்னாரு.

மனசு போல எல்லாமே உன் மனசு எப்புடி இருக்கோ நல்லது கெட்டது பூராமே நம்மகுள்ளதான் இருக்குது. எல்லாமே வந்து நம்மளா. நல்லது நினைங்க எல்லாமே நல்லதா நடக்கும்.  தாய் தகப்பனுக்கு மட்டும் அன்னம் போடுறத விட்டுடாதீங்க. மாமியாள ஒதுக்கி வச்சு தாய மட்டும் நினைச்சுகிட்டு விட்டுடாதீக. யாருக்காக இருந்தாலும் சாப்பாடு போடுங்க. இறைக்குற கிணறுதான் ஊறும். இல்லாட்டி ( கிணறு) அடி பாசம் பிடிச்சு போயிடும். எல்லா உயிரும் இன்புற்று வாழ்க என்று இராமலிங்க அடிகள் சொல்ராரு. ஒரு இருபத்தஞ்சு வருஷமா ( அன்னம் கொடுத்து வருகின்றேன்) நான் சம்பளம் எல்லாம் கிடையாது ( எனக்கு வேலை இல்லை ) . என்னால முடிஞ்சது கடயில கூட பிச்சை எடுத்தது பிச்சைக்காரீன்னு ( என்னை சொல்லு) வாங்க. ஆமா நான் பிச்சக்காரிதான். என்ன ( நாம் ) பிறக்கையில என்னத்த கொண்டுவந்தோம். போகையில என்னத்த கொண்டு போகப்போறோம். ஒன்னும் கிடையாது. மண்ணு கரையான் திங்கிறது கூட நல்ல மனசு வந்துச்சுன்னா நல்லது இருந்தாத்தான் நல்லதோட சாப்பிடும். இல்லன்னா அது தொடாது. மண்ணோட மண்ணா இருந்தாலும் அன்னைக்கி்.. மாடி மாடியா கட்டுனாலும் நிக்காது. மண்ணுகூட சொல்லுமாம் நீ எத்தன மாடி கட்டுனாலும் கடசில திங்குறது நான் தான். வீட்ட கட்டு, வாசல கட்டு , அடுப்ப போடு எல்லாம் போடு … நான்தான் சாப்புடுவேன்னு சொல்லுமாம். சொல்லிட்டேன் சாமி.

குருநாதர்:- எதை என்றும் அறிய அறிய அதனால்  நீங்கள் சரியாகவே உங்கள் வழியில் போய்க் கொண்டிருந்தால் யானே உங்களுக்கு மனித ரூபத்தில் வந்து அனைத்தும் செய்வேன் எதை என்றும் அறிய அறிய இதுதான் அம்மையே எவை என்று கூற இன்னும் சொல்.

(ஆதி குருநாதனே ஆசைப்பட்டு இன்னும் என்னைப்பற்றி சொல் என்று கேட்ட புண்ணியத்தாயே பாண்டியம்மாள் அவர்கள்..என்னே ஒரு புண்ணியம் இந்த தாய்க்கு )

அடியவர் 1:- இன்னும் சொல்ல சொல்றாங்க.

அடியவர் 2:- கோயில பத்தி சொல்லுங்க

அடியவர் 3:- அகத்தியரை பற்றி சொல்லுங்க

(அடியவர்கள் உற்சாகமாக இந்த அன்ன சேவை தாயிடம் வாக்கு கேட்க ஆவலானார்கள் )

அடியவர் பாண்டியம்மாள்:- அகத்தியர் வந்து ரெண்டு ஒருத்தர் என்ன சொல்ரது பரதேசி பண்டாரம் சாப்டுறது இந்த இடத்துக்கு வந்து நாங்கலாம் குடுக்க மாட்டேன்னு கிராமத்துல சொல்லிட்டாக. நான் என்ன செஞ்சேன் ஒரு தக்காளி சாதம் வாங்கி குடுத்து தக்காளி சாதம் போட்டு , பொங்கல் போட்டு சாப்பாடு.  இது பரதேசி பண்டார இருக்கிற இடத்துல சித்தர் வந்து என்ன என்ன நினைச்சிட்டு செஞ்சிட்டு போராரு, உன் சாதம் காலியாகும். அவங்க என்ன ஞானியா, பெரிய எஸ்.பி யா, தாசில்தார், கலேட்டரா இவுக உல்லாம் சாப்பிடற அந்த சாதம் மிச்சப்பட்டு போச்சு அள்ளி  தள்ளுனாங்க அரிசி அரைச்சி,  இந்த பரதேசி பண்டாரம் ( தன்னை சொல்கின்றார் )  நான் ஒரு மெண்டல் மாறி இருக்கிறவ ( சாதம் ) ஆக்குனதுல  அதுல வந்து அகத்தியரே சாப்பிட்டு போய்டாரு. கொடுப்பதும் கடவுள் சாப்பிடுரவனும் கடவுள். என்ன சரியா. குடுப்பதும் அவர்தான். சாப்பிடுரதும் அவர்தான். யாரையும் வேத்துமையா ( நினைக்காதீக).

குருநாதர்:- அம்மையே எதை என்று கூற அனைவரும் புரிந்து கொண்டிர்களா என்ன? . எந்தனுக்கு  எதுவுமே தேவையில்லை என்று யார் ஒருவர் ஆசையை அடக்கி வைத்துக் கொண்டிருக்கிறார்களோ அவருக்குத்தான் யான் உதவி செய்வேன். மீண்டும் எதனையும் என்னை கேட்டு விடாதீர்கள் சொல்லிவிட்டேன். அதனால் உங்களுக்கு எந்த நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்பவை எல்லாம் நிச்சயம் செய்வேன். இதை பல உரையில் கூட எடுத்து உரைத்துவிட்டேன் அம்மையே. அம்மையே, மகளே கேள் எதை என்றும் அறிய அறிய நீ இதை எதிர்பார்த்து தான் வந்தாயா.?

அடியவர் பாண்டியம்மாள்:- எதுவும் கிடையாது. இந்த காசு வந்து உங்ககிட்ட இருக்கு. என்கிட்ட இருக்கு. யார் கிட்டயும் இருக்கும். அந்த தெய்வத்தோட நம்பிக்கை, ஒரு அகத்தியரோட நம்பிக்கை வந்துச்சுனா அந்த காசு எல்லாத்து கிட்டையும் போய்விடும் ( வந்து விடும் ). இந்ந காசு 10 ரூபாயா இருந்தாலும் அது (பிறருக்கு பயன்) பலன் படனும்.

குருநாதர்:- ( அனைவரையும் நோக்கி ) அப்பனே , அம்மையே பின் தெரிந்து கொண்டிர்களா?  எதை என்றும் அறிய அறிய அதனால் இறைவன் அருளை முதலில் பெறுங்கள்.எவை என்றும் புரிய புரிய அதனால் தானாகவே அனைத்தும் நடந்தேறும். அப்படி இல்லை என்றால் அதை இதைக் கேட்டுக் கொண்டிருந்தாலும், இறைவன் நிச்சயம் தரமாட்டான். எதையும் எதிர்பார்க்காமல் இறைவா எதை கொடுத்தாலும் யான் ஏற்றுக்கொள்கின்றேன் என்று அன்போடு நெருங்குங்கள் இறைவனை. அப்பொழுதுதான் அனைத்தும் கொடுப்பானே தவிர மற்றவை எல்லாம் செல்லுபடியாகாது.  தாயே இவை யானே கொடுத்தேன் என்று வைத்துக்கொள். இன்னும் கொடுக்கிறேன் உந்தனக்கு.

அடியவர் பாண்டியம்மாள்:- ( குருநாதரின் கருணை மழையில் நெகிழந்த தருணம்… )

குருநாதர்:- எதை என்று அறிய அறிய ஏன் அனைவரையும் பின் கேட்டீர்களே? யாராவது மற்றவருக்கு சேவை செய்ய வேண்டும். ஏதாவது கொடு என்று நீங்கள் கேட்டீர்களா என்ன? நிச்சயம் இல்லை. அப்பொழுதே உங்கள் பக்தி எங்கு உள்ளது என்று புரிந்து கொள்ளுங்கள். அப்போது இறைவன் எப்படி தருவான்?. தா , தா என்று கூற பிச்சை எடுத்துக்கூட எவை என்று அறிய மற்றவருக்கு கொடுத்தால் இறைவன் உங்களுக்கு கொடுக்க தயாராக இருக்கிறான்.  ஆனால் உன் மனது அதாவது உங்களுடைய மனது அப்படி இல்லையே. குறுகிய மனமே வைத்திருக்கின்ற பொழுது இறைவன் அவ் குறுகிய மனதில் வரமாட்டான் சத்தியமாக.

குருநாதர்:- அதனால் பெரிதாக்குங்கள் மனதை. பெரிதாக வைத்துக்கொள்ளுங்கள் எது என்று புரிய புரிய அங்கே (இறைவன்) அமர்ந்து கொண்டால் இறைவன் அனைத்துமே கொடுத்துவிடுவான். அதனால் நல்ல எண்ணங்களோடு,  தான் மட்டும் , தன் பிள்ளைகள் மட்டும் பின் இறைவனிடத்தில் வேண்டாமல் அனைவருக்காகவும் வேண்டிக் கொள்ளுங்கள். இறைவன் எப்படி அதாவது எவ் ரூபத்தில் வரவேண்டும் என்பதை எல்லாம் எண்ணி எண்ணி இறைவனே வந்து உதவிகள் உங்களுக்கு செய்வான் இக்கலியுகத்தில். ஏன் கஷ்டங்கள் வருகின்றது? எவை என்றும் அறிய அறிய இவ்வம்மையை விட உங்களுக்கு கஷ்டங்களா கூறுங்கள்?

அடியவர்:- வீட்டுலேயும் இவங்களுக்கு சப்போட் ( ஆதரவு )  கிடையாது. எல்லாருமே ஒதுக்கி வைச்சுட்டாங்க.

நாடி அருளாளர்:- இந்த அம்மாவ விட நீங்க கஷ்டமான்னு கேட்கின்றார் குருநாதர்.

அடியவர்:- ( பாண்டியம்மாள் அவர்கள் ) வீட்ட விட்டு தனியா வந்து தங்கி அவங்க பேரனை வச்சிக்கிட்டு சமைச்சிட்டு இருக்காங்க. யார் ஆதரவும் கிடையாது. ஒத்தையா ஆளா போராடிகிட்டு இருக்காங்க 25 வருசமாக…

அடியவர் பாண்டியம்மாள்:- ( என்ன பத்தி ) ரிப்போர்ட பண்ணிட்டாங்க. எங்க _________ சோறு போட கூடாதுன்னு (அன்னதானம் செய்யக்கூடாது என்று) சொல்லி. அங்க எல்லாமே சொல்லி இந்த புள்ள சோறு போடக்கூடாதுன்னு. இப்ப அவங்கதான் நான் ஸ்டேசன்ல கூட சொன்னேன். நான் சோறு,  கணவன் வேணாம். ஒரு மரத்துல காய்கிது.  ஒரு இடத்துல பூக்குது.  எனக்கு நாலு குழந்தைகள்.  அது இதுக்கு இந்த ஆண்டவர் இந்த அகத்தியரும் சிவனும் அது அதுக்கு ஒரு அது அதுக்கு கல்யாணம் காட்சி பன்னா என்னோட ஆசை வந்து அவரு நாலு பேருக்கு சோறு போடனும்ன்னு என்னைய வவுத்துல (என்) தாயின் கருவிலேயே படைச்சிட்டாங்க. எனக்கு இது தான் அது எனக்கு சொத்து வேண்டாம் சுகம் வேண்டாம். நீங்களே கையெழுத்து போட்டு தாங்க. வேற கல்யாணம் கூட பண்ணிக்குங்க. எனக்கு தர்ம சாலையிலே இருந்து என்ன (கடைசியில்) தூக்கி போட்டா போதும்….( இறுதி மூச்சு உள்ளவரை பிறருக்கு சேவை செய்ய வேண்டும் ).

குருநாதர்:- அம்மையே, அப்பன்களே நீங்கள் பெரியவர்களா? அதாவது உங்களிடத்தில் அனைத்தும் இருக்கிறது. அப்பொழுது இவள் இங்கு பெரியவளா என்று கூறுங்கள்?  யான் கூறுகின்றேன் இவள் தான் பெரியவள்.

அடியவர்:- ( இந்த அம்மைக்கு நடந்த கொடுர நிகழ்வுகளை விவரித்தார்கள். அந்த நிகழ்வில் அக்கணமே இறைவன், சித்தர்கள் நொடியில் தண்டனையும் பிறருக்கு உடன் வழங்கிவிட்டனர். )

அடியவர் பாண்டியம்மாள்:- ( தனக்கு கொடுமை, அவமானம் அளித்தவர்களையும் மன்னித்துவிட்டார்கள் )

குருநாதர்:- அப்பனே அனைவருமே எந்தனக்கு அவை வேண்டும் இவை வேண்டும். ஆனால் இவள் தனக்கு உன்னத்தான் கேட்கிறாள். இதுபோல் அதனால் இறைவனிடம் எதையும் கேட்காதீர்கள் உங்களுக்கு எது தேவை என்று கூற இறைவனே பூர்த்தி செய்வான். இது தான் கடைசி வரையும் நீடிக்குமே தவிர மற்றவை எல்லாம் நீடிக்காது சொல்லி விட்டேன். அனைவருக்குமே என்னுடைய ஆசிகள் மீண்டும் வந்து வாக்குகள் பரப்புகின்றேன்.  ஆசிகள். ஆசிகள்.

அடியவர் பாண்டியம்மாள்:- கொரோனாவிலே ( Covid period ) அரிசி கொண்டுவந்து என்ன சோறு போட சொன்னாங்க. எல்லாத்துக்கும் எட்ட நின்னு ( சோறு ) போடனும்னு சொன்னாங்க. அம்மா பசின்னு வர்ரவங்களுக்கு நாங்க குடுத்தது நீங்க சாப்பாடு போடுங்கமா அப்டினுட்டு வீட்டு வாச, வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நின்னு இப்டி எட்டத்துல ( தள்ளி நின்று சோறு ) போட சொன்னாங்க. எனக்கு என்ன ஆகப்போகுது ? (நாம்) இறப்பதும் பிறப்பதும் ஒரு நாள் தான். எப்போ (இறைவன்) கூப்பிடுரானோ அப்போ  போயித்தான். புள்ள குட்டி இருக்குது , தங்க இருக்கு எல்லாரும் இருக்குதுன்னு பிடிக்க வந்தா வந்தா எமன் விட்டுட்டு போறானா ? கிடையாது. நனக்கிறது தான் நடக்கும். அதனால நான் பாட்டுக்கு சோற போட்டேன். சாமி கொண்டாந்து அரிசி குடுத்தாங்க. சாமி அகத்தியர் சாப்டாரு.

நாடி அருளாளர்:- இப்ப கூட அகத்தியர்தான் உங்கள வரவைத்தார்கள். அகத்தியர்தான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிஞ்சு கிட்டார் (கொடுத்தார்).

அடியவர்:- ( பாண்டியம்மாள் அவர்களை மதுரைக்கு குருநாதருன் நாடி வாக்கு கேட்க அழைத்து வந்தார்கள் )

அடியவர் பாண்டியம்மாள்:-  (அரிசி) உலை கூட வச்சேன் சாமி.  உல இன்னைக்கு காயில்லையே,  அரிசியில்லையே இன்னைக்கு உல வச்சுட்டேனே அப்படின்னு கேட்டா எங்க வீட்டுகார் அலுவலகம் எல்லாம் உக்காந்து இருப்பாங்க.  ஒருத்தன் கொண்டாருவேன் நீ உக்காந்து இருக்குறயா அப்படீன்னு..

எப்படியாச்சும் ஒருத்தரு 2 பிடி இந்தாங்கமா இந்த காய்கறி கஞ்சியாச்சி ஊத்தி ரெண்டு ஊறுகாவாச்சும் குடுத்துறுவேன். கீரை தளயகூட பிடுங்கி 15 வருசம் முன்னாடி சாப்பாடு போட்டு இருக்கேன்.

இந்த முடியாதவக , மென்டலா இருக்காக, லூசா இருக்காங்க, வானீர் (எச்சில்) வடிச்சிகிட்டு திரியுராக  அப்படின்னா அவனுக்குலாம் பாக்ககூடாது. ( எந்த பேதம் பார்க்காமல் அன்னம் இடல் வேண்டும் ). ( அவர்கள் ) முன்னால கலெட்டரா இருத்திருப்பான், தாசில்தாரா இருத்திருப்பான், இஞ்சினியா இருந்திருப்பான் அவங்க இப்ப உள்ள வங்க இருப்பாங்க என்ன சொல்றீங்க? ( முன்பு மதிப்பு மிக்கவரகள் வாழ்க்கை சூழலில் இப்படி கர்ம வினை வசத்தால் தலை கீழாக இருக்க வாய்ப்பு உண்டு - என்னே ஒரு இறை ஞானம் இந்த அம்மைக்கு)

அந்த இது வந்து இப்டி  வாங்குறாகளே, எச்சி வடியுது, இப்படி ஒரு குஷ்ட ரோகி வாராங்களே அப்படி நினைக்க கூடாது. தட்ட கழுவிதான் சாப்பாடு போடுவோம். நான் கூட கிடையாது கடவுள் குடுப்பாரு கடவுள் சாப்பிடுவாரு என்னுகிட்ட எதுவும் கிடையாது. ( உயர் ஞானங்கள் பெற்ற அம்மை இவர்கள் எனபதை நிறுபிக்கும் உயர் சித்த ஞான வாரத்தைகள் )

அப்டின்னு என்னால முடிஞ்சத செய்றேன்.

( ஆசிகள் என்று வாக்கு உரைத்து வாக்கை நிறைவு செய்ந  குருநாதர் அகத்திய பெருமான் இந்த அம்மை பேசி முடித்த உடன் மறுபடியும் மீண்டும் ஆர்வமாக வாக்கு தர ஆரம்பித்தார்கள் என்றால் பாண்டியம்மாள் அவர்களின் உயர் சேவை புண்ணிய பலம் என்ன என்பதை உங்கள் ஆன்மா மூலம் உணர்ந்து கொள்வீர்களாக)

குருநாதர்:- அப்ப னே இப்போது கேட்கிறீர்கள் கடைசியில் அதாவது என்னிடத்தில் இல்லை ஏதும் இல்லை என்று அதை அனைவருமே அதை பயன்படுத்தினாலே வெற்றி உண்டு. என்னிடத்தில் ஏதுமில்லை அப்பா. இறைவா அனைத்தும் கொடு என்றால் அக் கைகளுக்கு இறைவனே கொடுப்பான் அப்பனே.

( அகத்திய பிரம்ம ரிஷி 3/4/2022 அன்று திருவையாற்றில் உரைத்த வாக்கு கீழே உங்கள் புரிதலுக்காக:-

“என்னால் ஒன்றும் முடியாது இறைவா!!!! நீ பார்த்துக் கொள்... இதுதான் இறைவனுக்கு பிடித்த விஷயம் இறைவனுக்கு பிடித்த விஷயம் தெரிந்து கொள்ளுங்கள் மக்களே!!”    )

அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே வாழ்க்கை தெரியாமல் எவையென்று ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பேன் அப்பனே.  அப்படி ஓடிக் கொண்டிருந்தால் இன்னும் ஓடிக்கொண்டே ஓடிக்கொண்டே அப்பனே கடைசியில் அப்பனே ஓடிக்கொண்டு அது மறு பிறவியாகவம் கூட அப்பொழுது பின் ஓடிக்கொண்டே தான் இருக்க வேண்டும் அப்பனே. ஒரு தெளிவு கூட பிறக்காது அப்பனே. அதனால் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே அதனால் தெரிந்து தெரிந்து பல வாக்குகள் செப்புகின்றேன் அப்பனே,

அது சரியான முறையில் பயன்படுத்தினால்தான் மட்டுமே உங்கள் விதியைக் கூட யான் மாற்ற முடியும் என்பேன் அப்பனே. சொல்லி விட்டேன் அப்பனே விதியை மாற்றி விடலாம் என்று. ஆனாலும் அப்பனே  அதை வைத்துக் கொண்டு நீங்கள் சரியான வழியில் பயன்படுத்த மாட்டீர்கள் என்பேன் அப்பனே. மீண்டும் குற்றங்கள் செய்து விடுவீர்கள். அதனால் தான் அப்பனே பக்குவங்கள் படுத்தி படுத்தி அப்பனே உங்களுக்கு ஒவ்வொன்றாக யான் தருவேன் அப்பனே. அதனால் அகத்தியனிடம் எதையும் கேட்டு விடாதீர்கள் அப்பனே பின் ஆராய்ந்து ஆராய்ந்து அனைத்தும் செய்வான் அப்பனே. பின் எடுத்துக்காட்டாக இவ்வம்மாவை ( அன்ன சேவை அடியவர் பாண்டியம்மாள் ) வைத்துக் கொள்.

அதனால் எத்தனை எத்தனை மனிதர்கள் எவை என்று புரியாமல் கூட, இன்னும் வாக்குகள் பலமாக எடுத்துரைப்பேன். இன்னும் யான் பலகையில் கூட பல பல வழிகளில் கூட பின் நல்லவிதமாகவே காட்சிகளும் அளித்துள்ளேன். அதனால் முதியவன் வேடத்திலும், இளைஞன் வேடத்திலும், குழந்தை ரூபத்திலும் யான் வந்து கொண்டு நன்மைகள்தான் செய்து கொண்டிருக்கிறேன் அனைவருக்குமே. அதனால் எவையும், எவைபற்றியும் கவலைப் படாதீர்கள். எவ் நேரத்தில் எதை செய்ய வேண்டும் என்று எண்ணி நிச்சயம் யானே செய்வேன். வருத்தப்பட தேவையில்லை. கேளுங்கள்.

(புண்ணியப்பிறவி பாண்டியம்மாள் தொடர்பாக அருள்வாக்கு அளித்த மகிழ்வில்,  மறுபடியும் கேள்வி பதிலுக்கு உத்தரவு இட்டார்கள் )

( ஆசிகள் சொல்லி முடித்த பின்னர் கேள்வி/பதில் மீண்டும் ஆரம்பமானது. குருநாதர் சில தனிப்பட்ட வாக்குகள் கொடுத்து அருளினார். )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

3 comments:

  1. அகத்தீசாய நம நன்றி ஐயா 🙏🙇‍♂️

    ReplyDelete
  2. ஓம் அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete