​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 18 November 2022

சித்தன் அருள் - 1222 - ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

நம் குருநாதர் அகத்தியப்பெருமானின் உத்தரவின் பேரில், அவரும், லோபாமுத்திரா தாயும், அகஸ்தீஸ்வரர் லிங்கமும் சேர்ந்திருக்கிற படமானது, பாலராமபுரம் அகத்தியர் கோவில் சார்பாக, கோடகநல்லூரில் அகத்தியர் செய்த பெருமாளுக்கான அபிஷேக பூஜை தினத்தன்று வந்திருந்த அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

அகத்தியர் உத்தரவின் பேரில் வழங்கப்பட்டதால், அங்கு வந்து பங்கேற்க முடியாத அகத்தியர் அடியவர்களுக்கும்  அந்த படம் சென்று சேர வேண்டும் என்கிற எண்ணத்தில், சித்தன் அருள் வலைப்பூ வழி, வழங்கப்படுகிறது.

அனைவரும் இந்த படத்தை தரவிறக்கம் செய்து, பிரிண்ட் போட்டு உங்கள் இல்லத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

நல்லதே நடக்கும், உங்கள் வீட்டிலும் அவர்கள் வந்தமர்வார்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......... தொடரும்!

4 comments:

  1. அகத்தீசாய நம

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    நன்றிகள் ஐயா 🙏

    ReplyDelete
  3. ​வணக்கம்!

    இங்கு வியாபாரத்துக்காக எதுவும் கூறப்படுவதில்லை. தெரிவிப்பது அகத்தியர் அருளால் தெரிவிக்க சொன்னதை மட்டும். யாரும் வியாபார சிந்தையுடன் "சித்தன் அருளை" சீண்ட வேண்டாம். அனைவருக்கும் நல்லது கிடைக்க வேண்டும், உண்மை விளங்க வேண்டும், அகத்தியப்பெருமான் கூற்றில் செயல்பட வேண்டும் என்ற எண்ணத்தில், கூறப்படுகிறது. ஆகவே, அகத்தியப்பெருமானும், லோபாயத்திரையும், என் கற்பனையில் இப்படி இல்லையே என்கிற எண்ணம் வேண்டாம். அகத்திய பெருமான் சொல்லச்/செய்யச் சொன்னதை செய்கிறோம். விருப்பம் உள்ளவர் எடுத்துக்கொள்ளுங்கள். யாரையும் கட்டாயப் படுத்தவில்லை. விட்டுவிடுங்கள். அக்னிலிங்கம்!

    ReplyDelete
    Replies
    1. ஐயா தங்களின் பதிவு அய்யனின் அருள் எங்களுக்கு புண்ணியம்.... நன்றிகள் பல. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

      Delete