​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 8 November 2022

சித்தன் அருள் - 1211 - அகத்தியர் மைந்தன் !


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அகத்தியர் அருளை பெற்று பலருக்கும் நாடியில் வாக்குகளை வாங்கி கொடுத்து, அவர்கள் வாழ்க்கையை நல்லபடியாக மாற்றி அருள் புரிந்த அகத்தியர் மைந்தன் திரு. ஹனுமந்ததாசன் அவர்களின் திதி இந்த மாதம் 12/11/2022 அன்று வருகிறது. நம்மில் பலரும் அவரை குருவாக நினைத்து வாழ்ந்து வருவதால், நாமும் அவர் பிள்ளைகளே. ஆகவே, அன்றைய தினம் அவருக்கு திதி கொடுக்கும் விதமாக யாரேனும் ஒரு சாதுவுக்கோ/ஏழை எளியவருக்கோ குறைந்தது ஒரு நேர உணவேனும் வாங்கி கொடுத்து, அவர்/அகத்தியர் அருள் பெற்றுக் கொள்ளும்படி வேண்டிக் கொள்கிறேன். முடிந்தால் நவம்பர் 12க்கு முன் அவர் அடியேனிடம் தனிமையில் பகிர்ந்து கொண்ட ஒரு இறை அனுபவத்தை குருநாதர் அனுமதியுடன் இந்த வலைப்பூவில் வெளியிடுகிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்........ தொடரும்!

5 comments:

  1. அகத்தீசாய நம

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    சரிங்க ஐயா 🙏

    ReplyDelete
  3. சித்தன் அருள் ஒரு பொக்கிஷம்....
    அகத்தியர் மைந்தன் ஹனுமந்ததாசன் ஐயா மூலம் பெற்றது.
    செய்கிறோம் ஐயா..
    ஆசான் அகத்தீசா.. கருணை கடலே..
    பொற்பாதம் போற்றி ...‌‌போற்றி..

    ReplyDelete
  4. குருவே சரணம்
    குருவே சரணம்
    ஓம் அகத்தீசாய நமக

    ReplyDelete
  5. Definitely we will do it sir tq

    ReplyDelete