​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 28 November 2022

சித்தன் அருள் - 1230 - குருநாதர் வாக்கு!


குருநாதரை மறவாமல் இருப்பதற்கு வழி!

எத்தனையோ ஜென்மங்களில் மனிதர்கள் சித்தர்களை நாடுகிறார்கள். நாங்களும் இறைவனின் அருள் ஆணைப்படி வழி காட்டுகிறோம். அந்த வழிமுறையை விடாமல் பின் பற்ற வேண்டும். இடையிலே சில துன்பங்கள் வரும் பொழுது, மனசோர்வு கொண்டு விரக்தி அடைந்து, மனிதர்கள் விலகிவிடுவது இயல்பாகி விடுகிறது. அப்பொழுதெல்லாம், ஏன் எங்களை மாற்றக்கூடாதா என்ற வினா எழலாம். நாங்கள், எதில் தலையிடலாம், எதில் தலையிடக் கூடாது என்று விதி இருக்கிறது. இருந்தாலும், பார்வையாளனாக இருக்கத்தான் இறைவன் எங்களுக்கு அருளாசி தந்திருக்கிறான். இறைவன் அருளாணை கொடுத்தால் ஓழிய, நாங்கள் எல்லாருடைய வாழ்க்கையிலும் குறுக்கிட்டு பிரச்சினைகளை தீர்க்க முடியாது. ஆனால் நாங்கள் காட்டுகின்ற வழியில் அமைதியாக சென்றால், கட்டாயம், அமைதியான, நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை உண்டு. இந்த உறுதியை மறவாமல் இருக்க நன்றாகும்!

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.........தொடரும்!

2 comments:

  1. நலம் நலமே தோடரும்... அய்யனே... ஓம் அகத்தீசாய நம... சித்தர்கள் கூறும் ஜாதக முறையை எடுத்துரையுங்கள் அய்யனே 1????

    ReplyDelete