​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday 29 November 2022

சித்தன் அருள் - 1231 - பச்சை கற்பூரம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே

நமது பாலராமபுரம் ஆலயத்தில் பச்சை கற்பூரம் குறித்து சூட்சுமமான முறையில் குருநாதர் வாக்குகள் தந்திருந்தார். இதன் அடிப்படையில் பச்சைக் கற்பூரம் பற்றிய பதிவை நமது சித்தன் அருளில் வெளியிட்ட பொழுது அனைவரும் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் பச்சை கற்பூரத்தை அனுப்பி வைத்திருந்தனர்.

பச்சைக் கற்பூரம் பற்றிய பதிவுகளும் வணிக சந்தையில் கிடைப்பவை மற்றும் நடந்தவை அனைத்தும் நீங்கள் அறிந்ததே. பச்சைக் கற்பூரம் பற்றிய சந்தேகமும் கருத்து வேறுபாடுகளும் இருந்தன. இவற்றிற்கெல்லாம் ஒரே தீர்வு நம் குருநாதரிடம் வாக்கு கேட்பதுதான் என்று தீர்மானித்து வாக்கு கேட்ட பொழுது!!!!

அப்பனே மகாராஷ்டிராவில் ஒரு முதியவன் இருக்கின்றான் அவனிடம் உண்மையான பச்சை கற்பூரம் இருக்கின்றது அவனை நீங்களே தேடிச் செல்லுங்கள் அப்பொழுதுதான் அருமை தெரியும் என்று கூறியிருந்தார்.

அகத்தியர் கூறிய வாக்கினை சிரம் ஏற்று சிரமம் பார்க்காது அகத்தியரின் வாக்கே வேதம் என வாழ்ந்து வரும் அடியவர்கள் அந்த முதியவரை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்!!!

மிக ஆச்சரியமான சம்பவம் என்னவென்றால் அந்த முதியவரை தேடி அவரை பற்றி அறிந்து கொள்ள முயற்சிகள் ஒவ்வொன்றாக எடுக்கும் பொழுது குருநாதரே ஒவ்வொரு படியாக ஏற்றி விட்டார் அவரை கண்டறிய வழிகளை சுலபமாக்கி தந்தார்.

குருநாதர் அகத்தியப் பெருமானின் திருவருளால் அந்த முதியவரை சந்திக்க முடிந்தது!!!!

அந்த முதியவரின் குடும்பம் மிக எளிமையான குடும்பம்!!! குடும்பத்தினர் முழுவதும் ஈசனின் பக்தர்கள்!! அவர்கள் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான திரியம்பகேஸ்வர் ஆலயத்தின் அருகே வசித்து வருகின்றார்கள். திரியம்பேஸ்வரர் ஆலயத்திற்கும் அவர்கள்தான் பச்சைக் கற்பூரம் வழங்கி வருகின்றார்கள். எந்த ஒரு வியாபார நோக்கமும் இல்லாமல் லாப நோக்கமும் இல்லாமல் பச்சைக் கற்பூரத்தை வழங்கிக் கொண்டு வருகின்றார்கள்.

அவர்களிடம் பேசிய பொழுது நாங்கள் அகத்தியர் பக்தர்கள் குருநாதர் தங்களைப் பற்றி தன்னுடைய ஜீவனாடி வாக்கில் கூறியிருந்தார் என்று சொன்ன பொழுது அவர் மிகவும் ஆச்சரியமடைந்தார் மனம் நெகிழ்ந்து விட்டார். 

மேலும் அவர் நான் திரியம்பகேஸ்வரர் ஆலயத்தில் 40 ஆண்டுகள் பணிபுரிந்து இருக்கின்றேன்... ஈசனே எனக்குப் பெரும் சொத்து!!! சிவத்தொண்டே எனக்கு மிகவும் பெரியது!!! நான் நினைத்திருந்தால் எனக்கு கிடைத்த இதை ஒரு வியாபாரமாக பெரிதளவில் செய்திருக்க முடியும் எனக்கு அப்படி செய்ய மனதில்லை!!! உண்மையான பொருளை கோயில்களுக்கும் பக்தர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் தான் இதுவரை என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றது நான் செய்யும் செயல்கள் அனைத்தையும் இறைவன் திரயம்யகேஸ்வரன் பார்த்துக் கொண்டிருக்கின்றான். அதனால் எவ்வித கலப்படமும் இல்லாமல் சுத்தமானதை நான் வழங்கிக் கொண்டு வருகின்றேன்.

இந்தியாவில் பச்சைக் கற்பூரம் தயாரிப்பதற்கு எந்தவித ஏற்பாடுகளும் இல்லை கம்பெனிகளும் இல்லை என்னுடைய 40 வருட அனுபவத்தில் சொல்கின்றேன் இந்தியாவில் பச்சைக் கற்பூரம் தயாரிப்பதற்கு மூலப்பொருள் சைனாவில் இருந்து தான் வருகின்றது.

சைனாவிலும் ஏராளமான கம்பெனிகள் இருக்கின்றன அந்த கம்பெனிகளும் சில லாப நோக்கில் ரசாயனத்தை கலந்து விடுகின்றன ஆனால் எங்களுக்கென்று நாங்கள் லாப நோக்கம் எதுவும் இல்லாமல் சுத்தமான பச்சைக் கற்பூரம் தயாரிக்கும் கம்பெனியிடமிருந்து மூலப் பொருள்களை வாங்கி அதை நாங்கள் எங்களுடைய இல்லத்தில் ஒரு சிறிய ஒரு குடிசைத் தொழில் போல உண்மையாக சுத்தமாக இயற்கையாக உருவாக்கி நாங்கள் கொடுக்கின்றோம்.

எங்களுக்கு வியாபார நோக்கம் கிடையாது!!! கோயில்களுக்கும் பூஜைகளுக்கும் நாங்கள் வழங்கி வருகின்றோம் என்று அந்த முதியவர் கூறினார்.

அகத்தியர் அடியவர்களும் நாங்கள் குருநாதர் அகத்தியர் பெருமான் உரைத்தபடி உண்மையான பக்தர்களுக்கும் ஆலயங்களுக்கும் உண்மையான பச்சை கற்பூரம் சென்று சேர வேண்டும் அதற்காக தங்களுடைய உண்மையான பச்சை கற்பூரம் தங்களிடம் கிடைக்கும் என்ற தகவலை உங்கள் அனுமதியுடன் சித்தன் அருள் வலைத்தளத்தில் வெளியிடப் போகின்றோம் என்று கூறியதற்கு!!!!

அவர் எனக்கு வயது ஆகிவிட்டது நாங்கள் பச்சைக் கற்பூரத்தை ஒரு குடும்பமாக சேர்ந்து தான் செய்து கொண்டிருக்கின்றோம் என்னுடைய அண்ணன் மகன் அதர்வா ஜோஷி இவர்தான் எனக்கு உதவிகள் செய்து கொண்டிருக்கின்றார் அதனால் இவரிடம் என்ன தகவல் தெரிவிக்க முடியுமோ அதை தெரிவித்து விடுங்கள் .

மற்றும் சில நிபந்தனைகளையும் அந்த முதியவர் கூறினார். அதாவது வியாபார நோக்கத்திற்காக லாப நோக்கத்திற்காக நாங்கள் எதையும் செய்வதில்லை எங்களிடம் இருப்புகள் எவ்வளவு இருக்கின்றதோ அதை மட்டும் வழங்க முடியும் வியாபார நோக்கத்திற்காக சென்றால் எங்களால் சுத்தமான தரமான பச்சை கற்பூரத்தை வழங்க முடியாது ஆதலால் அனைவரும் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் கோயில்களுக்கு அகத்தியர் பக்தர்களுக்கு தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டு பேசி பெற்றுக் கொள்ளலாம். எங்களைப் பற்றியும் எங்கள் முகவரி எங்கள் குடும்பத்தை பற்றி விளம்பரங்கள் எதுவும் வெளியே தெரிய வேண்டாம் நாங்கள் ஈசனின் பெயரில் பிராண்ட் பெயர் ஒன்று உள்ளது அந்தப் பெயரில் நாங்கள் தற்போது வழங்கிக் கொண்டு இருக்கின்றோம் நாங்கள் செய்வதை பார்த்து பல நாங்கள் உபயோகிக்கும் ஈஸ்வரன் பெயர் கொண்டே பல போலிகளும் மார்க்கெட்டுகளிலும் ஆலய வாசல்களிலும் விற்பனை செய்யப்பட்டு  கொண்டிருக்கின்றன. இதில் எங்களுக்கும் வருத்தம்!! உண்மையான பொருளை நாங்கள் கொடுக்கின்றோம். ஆதலால் எங்களுடைய பிராண்ட் பெயர் எங்களுடைய புகைப்படம் எங்களுடைய முகவரி இவற்றை நாங்கள் தர முடியாது எங்களுடைய தொலைபேசி எண்ணை தருகின்றோம் தேவைப்படுபவர்கள் தொடர்பு கொண்டு பேசி கொரியர் மூலம் போஸ்ட் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று நிபந்தனைகளை விதித்தார்.

நாங்களும் சரி என்று கூறிவிட்டு அவரிடம் சிறிதளவு பச்சைக் கற்பூரத்தினை பெற்றுக்கொண்டு விடைபெற்று வெளியே வந்தோம்.

இதனைக் குறித்து குருநாதரிடம் மீண்டும் வாக்குகள் கேட்ட பொழுது அவந்தனிடம் இருப்பது உண்மைதானப்பா அவந்தனக்கு அனைத்தும் தெரியும்!!! என்று வாக்குகள் தந்திருந்தார். அதன்படியே அவர்களிடமிருந்து பச்சை கற்பூரம் பெற்றுக் கொண்டு பாலாராமபுரம் அகத்தியர் லோப முத்ரா தேவி ஆலயத்தில் பச்சை கற்பூரத்தை பயன்படுத்திய போது குருநாதர் மனதார ஏற்றுக்கொண்டார் அதனுடைய உண்மையான சாநித்யம்.அறிந்து கொள்ள முடிந்தது.

தற்பொழுது அகத்தியர் அடியவர்களுக்கு ஒன்றை தெரிவிக்கின்றோம்.

இவ்வுலகத்தில் குருநாதருடைய வாக்குகளை மீறி எதுவும் உண்மை இல்லை.

குருநாதர் ஒரு வாக்கினை உரைக்கின்றார் என்றால் அதனை அப்படியே ஏற்றுக் கொள்வது தான் நல்லது. குருநாதருக்கு தெரியாதா?? 

அதனால் அவர் இந்த பாரத தேசத்தில் உண்மையான பச்சை கற்பூரம் இருக்கும் இடத்தை அவரே குறிப்பிட்டு அடையாளப்படுத்தி காட்டிவிட்டார்!! அடியவர்கள் உங்களுக்கு தேவை என்றால் தொடர்பு கொண்டு தங்களுக்கு எவ்வளவு வேண்டுமோ அதை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்!!!!

பீம் சேனி கர்ப்பூர்!!!! பச்சைக் கற்பூரத்தை இப்படித்தான் வட இந்தியாவில் அழைக்கின்றார்கள். அதர்வா ஜோஷி அவர்களிடம் மீண்டும் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவர் கிலோ 1600 முதல் 2000 வரை ஆகலாம் ஏனென்றால் மூலப் பொருள்களின் விலை அடிக்கடி ஏறிக்கொண்டே இருக்கும் அதனால் எங்களால் விலை நிர்ணயம் செய்ய முடியாது மூலப் பொருள்களின் விலையை அனுசரித்து நாங்கள் விலையை நிர்ணயம் செய்ய முடியும். அதனால் தற்போது உள்ள சூழ்நிலையில் கிலோ 1600 ரூபாய்க்கு கொடுக்கின்றோம். இதனை உணவு பொருள்களில் தாராளமாக பயன்படுத்தி கொள்ளலாம். மீண்டும் மூலப்பொருள் விலை ஏறினால் நாங்கள் விலையை மாற்ற வேண்டி நேரிடும். தொடர்பு கொள்ளும் பக்தர்கள் வியாபார நோக்கத்திற்காக எங்களை அணுகாமல் கோயில்களுக்கு சொந்த உபயோகத்திற்கு என்று வாங்கினால்  மட்டும் எங்களுக்கு போதும். சில கற்பூர கம்பெனிகள் எங்களை அணுகுகின்றன எங்களிடமிருந்து உண்மையானதை பெற்றுக் கொண்டு அதனுடன் மெழுகு ரசாயனம் சேர்த்து மார்க்கெட்டில் விற்கின்றன எங்களுக்கு அது போன்று வியாபாரம் செய்ய உடன்பாடு இல்லை.

எங்களை தொடர்பு கொள்ளுபவர்கள் வியாபார நோக்கத்திற்காக இல்லாமல் தொடர்பு கொண்டால் நல்லது என்று தயக்கத்துடனே அவர்கள் வேண்டுகோள் வைத்தனர்.

பச்சைக் கற்பூரம் தேவைப்படும் அடியவர்கள் ஒரு கிலோ 1600 ரூபாய் ஆகும் அதனுடன் தங்களுக்கு எவ்வளவு தேவையோ அதனுடன் போஸ்டல் சார்ஜ் தனியாக கொரியர் சார்ஜர் தனியாக அனுப்பி வைக்க வேண்டும்.

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டம் திரிம்பகேஸ்வர் ஊரிலிருந்து மற்ற ஊர்களுக்கு கொரியரில் அனுப்பி வைக்கும் பொழுது ஊருக்கு ஊர் அதனுடைய கட்டண சேவை மாறுபடும் அதனால் அதை உணர்ந்து பச்சை கற்பூரத்தின் விலை மற்றும் போஸ்டல் சார்ஜை அவருடைய கூகுள் பே எண்ணிற்கு அனுப்பி வைத்து தங்களுடைய முகவரியும் தெரியப்படுத்தினால் அதை அடியவர்களுக்கு அனுப்பி தந்து விடுவார்.

பச்சைக் கற்பூரம் பற்றிய தேவையில்லாத சர்ச்சைகளோ கருத்து வேறுபாடுகளோ எதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் குருநாதர் உரைத்த உண்மையை உணர்ந்து அடியவர்கள் நடந்து கொள்ளும் படி கேட்டுக்கொள்கிறோம். 

அதர்வா ஜோஷி 
திரயம்பகேஷ்வரர். 
நாசிக். 

தொடர்பு எண் மற்றும் கூகள் பே எண். 

8975743784.

(பின் குறிப்பு. அகத்தியர்  அடிவர்களே அந்த முதியவரின் குடும்பம் தங்களைப் பற்றி விளம்பர ப்படுத்துவதற்கு அவர்களுக்கு விருப்பமே இல்லை இந்த பச்சைக் கற்பூரத்தை வியாபார நோக்கத்தில் லாப நோக்கத்தில் பெரும் நிறுவனமாக மாற்றி செய்வதற்கும் அவர்களுக்கு விருப்பமில்லை குருநாதர் அகத்திருடைய திருவருளால் அவரைப் பற்றி அறிய முடிந்தது அனைவருக்கும் பச்சை கற்பூரம் சென்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் அடியவர்கள் குருநாதன் மேல் பாரத்தை போட்டு அவர்களை மேலும் மேலும் வலியுறுத்தி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களை பற்றி சித்தன் அருள் வலைத்தளத்தில் கூறுவதற்கும் அனுமதி வாங்கி வெளியிட்டு இருக்கின்றோம். குருநாதர் அகத்திய பெருமாள் தன் பிள்ளைகளுக்கு ஆலயங்களுக்கு உண்மையான பச்சை கற்பூரம் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நமக்கு இந்த வாக்கினை தந்திருக்கின்றார் ஆதலால் தொடர்பு கொள்ளும் அகத்தியர் அடியவர்கள் தங்களுக்கு தேவையானதை மட்டும் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். வியாபார நோக்கத்தில் லாப நோக்கத்தில் என்ன ஏது என்ற விசாரணை நோக்கத்தில் யாரும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கின்றோம். நம் குருநாதர் அகத்திய பெருமான் கண்ணசைவில் தான் அனைத்தும் நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.......தொடரும்!

3 comments:

  1. அகத்தியர் சூட்சமமாக தெரியப்படுத்திய தகவல்
    1. பச்சை கற்பூரம் உபயோகிகபடுத்தி நாம் வழிபடும் தெய்வத்தை நமக்கு அனுக்கிரகம் பண்ண முடியாமல் தெய்வ கட்டு போட்டு இருந்தால்கூட அவிழ்க்க முடியும்.
    2. பச்சை கற்பூரம் வாசனை தாண்டி துர் தேவதைகள் நம் இல்லம் புகாமல் இருக்க தலைவாசல் படியில் பச்சை கற்பூரத்தை தூவினால் போதுமானது

    3. கை கால் வலி இருந்தால் தேங்காய் எண்ணெய் சூடு பண்ணி விட்டு அதில் பச்சை கற்பூரம் கலந்து வலி உள்ள இடங்களில் தேய்த்தால் வலி நிவாரணம் கிடைக்கும்
    4. சொல்ல முடியாத அளவுக்கு பச்சை கற்பூரம் உபயோகபடுத்தி நம் வாழ்க்கை வெற்றி பெற வைக்க முடியும். தலையெழுத்தையும் மாற்றி அமைக்கலாம் .பல தெய்வ ரகசியங்கள் உண்டு ... தேவை என்றால் அகத்தியர் கிட்ட சரணடைந்து தெரிந்து கொள்ள முடியும்

    ReplyDelete
  2. அகத்தியர் சொன்னது மூலிகை மூலம் தயாராகும் பச்சை கற்பூரம் ஆக இருக்கலாம். சில இலைகளுக்கு இயற்கையாகவே கற்பூரம் வாசனை உண்டு. (Ex விக்ஸ் செடி) இதன் இலைகள் எடுத்து கசக்கி வாசனை செய்தால் கற்பூரம் வாசனை வரும்.இந்த மாதிரி எனக்கு தெரிந்த மூலிகை செடிகள் பல உள்ளன. ஒருவேளை இந்த மாதிரி மூலிகை இலைகள் கொண்டு கொதிக்க வைத்து ஆவிகுளிர வைத்து மீண்டும் அதே முறையில் purification செய்து எடுக்கும் போது கண்ணாடி மாதிரி பச்சை கற்பூரம் கிடைக்கும்... argument பண்ணாமல் நாடி கேட்டு சொன்னால் உபயோகமாக இருக்கும். அவரவர் தேவைக்கு அவரவர் உற்பத்தி செய்துகொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. Render some photos for clarity.No use of your tactics here.Sorry sister,you are not approved by appa.

      Delete