​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 24 June 2022

சித்தன் அருள் - 1153 - அன்புடன் அகத்தியர் - கந்தன் வாக்கு, கேதார்காட். கங்கைக்கரை காசி!




12/6/2022  வைகாசி விசாக திருநாள் அன்று கந்தன் உரைத்த பொதுவாக்குரைத்த ஸ்தலம் கேதார்காட். கங்கைகரை காசி.


அழகாக உலகை இயக்கிக்கொண்டிருக்கின்ற என் தந்தையையும் தாயையும் பணிந்து வேலனவன் செப்புகின்றேன் வாக்குகளாக!!!.....

இன்னும் பிறவிகள் மனிதன் எடுத்தாலும் புத்திகள் வரப்போவதில்லை!!!!

வரப்போவதில்லை என்றாலும் இன்னும் பின் சித்தர்கள் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!!!

ஆனாலும் மனிதன் திருந்துவதாக சரித்திரம் இல்லை!!
சரித்திரம் இல்லை!!

ஆசிகள்!!! என்னுடைய ஆசிகள்!! பல மனிதர்களையும் உயர்த்தி வைத்துக் கொண்டேதான் இருக்கின்றது

ஆனாலும் எப்படி? செய்ய வேண்டும்?? என்பதை கூட உணராமல் தவறு மேல் தவறுகள் மனிதன் செய்து கொண்டே இருக்கின்றான்.

இதனால் நிலைமைகள் நிச்சயம் பின் சரியத்தான் போகின்றது !! போகின்றது!!

ஏன்?? சித்தர்கள் சொன்னதை மனிதர்கள் நிச்சயமாய் வரும் காலங்களில் ஏற்பதும் இல்லை.... அவை மட்டுமல்ல....

இறைவன் எதனை நினைத்து வருந்துகிறான் என்பதையும்கூட.... மனிதன் நினைப்பதுண்டு!!! நினைப்பதுண்டு!!!

நினைப்பதில்லையே!! நினைப்பதில்லையே!!! இறைவனை நிச்சயமாய் கலியுகத்தில்......

தான் சுகத்திற்காகவே எண்ணி எண்ணி பின் சந்தோஷம் அடைகின்றான் சந்தோஷம் அடைந்து தான் ஏற்படுத்திய சுகங்களுக்காகவே வருத்தமும் அடைகின்றான் இதுதான் மனிதப்பிறவி!!!!

மனிதப்பிறவி என்பது அற்பம்!!!!!

என்பதை பல சித்தர்கள் ரகசியங்களாக சொல்லிவிட்டார்கள்....

அதனால் உண்மையான பக்திகள் நீங்கள் செலுத்தினால் மட்டுமே இவ்புவியுலகில் நிலையாகவே பெறமுடியும் அனைத்தையும் கூட.....

அப்படி இல்லையென்றால் ஆனாலும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.... மனிதன் வாழும் காலங்களில் எதையும் செய்யாமல் கடைசியில் பின் நோய்கள் பற்றிக் கொள்கின்றது இதனால் கடைசியில் என்னிடம் வந்தே... எந்தனுக்கு பின் அனைத்தையும் சரி செய்ய வேண்டும் அதை கொடுக்கின்றேன் இதை கொடுக்கின்றேன் அனைத்தும் தருகின்றேன் என்றெல்லாம் பேரம் பேசிக் கொண்டிருக்கிறான் மனிதன்!!!....

இவையெல்லாம் உண்மையா????!!!!!

உண்மையான பக்திகளா??!!!!!

இல்லை!!!!!!

அனைத்தையும் அனுபவித்து விட்டு கடைசியில் இறைவனிடம் வந்து ஐயோ!!!!! இறைவா!!!!

என்று இறைவனைப் பிடித்துக் கொண்டால்.... என்ன?!!  இறைவன் நல்லது செய்வானா???!!!!

நிச்சயம் செய்ய மாட்டான்!!!

ஆனால் செய்வான்!!.... புண்ணிய பிறவிக்கு!!!!!

புண்ணியமதை செய்து கொண்டே வர வேண்டும்!!!

இதனைத்தான் யான் மறுபடியும் சொல்லுகின்றேன்!!! மறுபடியும் ,மறுபடியும் சொல்லுகின்றேன்!!

புண்ணியங்கள் செய்ய!!! தர்மங்கள் காக்க!!!

லட்சியமாய் பின் வயதிற்கும் மேலாகவே... தற்போது ஆயுள்காலம் முடிவாயினும்... நிச்சயம் நீண்டு வைப்பான்

யானே நீண்டு வைப்பேன்...பிரம்மாவிடம் போராடியும்... ஆனால் மனிதனிடம் புத்திகள் இல்லையே!!!

வரும் காலங்களில் தாழ்ந்த புத்திகள் தாழ்ந்த புத்திகள் இன்னும் இன்னும். ஏராளம். மனிதன் உண்மையானவன் இல்லை... மனிதன் யாம் தான் வாழ வேண்டும் மற்றவர்கள் எப்படி போனால் என்ன??? என்றெல்லாம் மனதில் சிந்திப்பான்.... ஆனால்!!!! அவையெல்லாம் வீணானவற்றையே சேர்க்கும் என்பேன்.

ஆனால் இறைவன் யோசிப்பான்!!!!

நீ அப்படி நினைக்கிறாயா?!!!

யான் இப்படி நினைக்கின்றேன் சரி என்று கூட .....

இன்னும்... கலியுகத்தில் என்னென்ன?? மாயங்கள் நிகழப் போகின்றது??? என்பதை கூட சித்தர்கள் வரும் காலங்களில் தொடர்கதையாகவே சொல்வார்கள்.

மனிதனின் கதைகள் தொடர்கதைகள்!!!

ஆனாலும் மனிதனுக்கு வாயில் தான் பொய்யே!!!! பொய்யே!!!!

யானே பல தலங்களில் அழகாக இருக்கின்றேன்.

ஆனாலும் என் முன்னே காசுக்காக காசுக்காகவே பிழைப்பு நடத்திக் கொண்டு வந்து கொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களையும் யான் தண்டித்துக் கொண்டேதான் வருகின்றேன்.

அதனால் யான் இறைவனை வணங்கியும் பின் இப்படி ஏன்? வருகின்றது?? என்பதைக்கூட பின் வந்து வந்து நிற்பார்கள் இனிமேலும்!!!

இனிமேலும் பல சித்தர்களும் இங்கே தவம் செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அகத்தியனோ மாபெரும்....!!! அகத்தியனுக்கு கூட இவைதன் பிடிக்கும் ஸ்தலம் (காசி).... அதனால்தான் என்னவோ!!!! பின் அவனுடைய சுவடியை (ஜீவநாடி) இங்கே அடிக்கடி வரவழைத்து கொண்டே இருக்கின்றான்.

இன்னும் ஏனைய சித்தர்களும் வருவார்கள்..!!! எவையென்று கூற இன்னும் பல ரிஷிகளும் இங்கே தவம் செய்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

அதனால் சாதாரணமாக வர முடியாது....

என் தந்தையின் அருள் இருந்தால் தான் இங்கே வரவும் முடியும்!!! காலடியும் வைக்கமுடியும்!!!

ஆனால் ஒரு வாக்கில் புசுண்டனவன் (காக புஜண்டர்) அழகாக உரைத்துவிட்டான்.....

காசிக்குச் செல்லுங்கள் என்று!!!!!!

[16/4/2022 அன்று காகபுஜண்டர் ரிஷி சித்ரா பவுர்ணமி அன்று திரயம்பகேஷ்வரர் ஜோதிர்லிங்கம் வாக்கில்..

 """"வைகாசி என்று சொல்கின்றீர்களே... அதுவே காசி...

அவ் காசிக்கு அவைதன் முறையாகவே பயணம் மேற்கொள்ள வேண்டும் ...

மேற்க்கொண்டால் நலன்களே உறுதியானது அதனால்தான் வைகாசி. !!....என்று உரைத்திருந்தார்.
சித்தன் அருள் 1116 ல் வெளிவந்துள்ளது]

ஆனால் எத்தனை??? மனிதர்களுக்கு அவ் பாக்கியம்!!! கிடைத்ததென்றால்!!!! நிச்சயம் இல்லை...சில மனிதர்களுக்கே!!!!!

ஆனால் காகபுஜண்டன் அனைத்தும் உணர்ந்தவன்... அவன் பேச்சுக்கு இடமில்லையென்றால் அப்பொழுது பார்த்துக் கொள்ளுங்கள்!!! மனிதன் என்ன கர்மத்தில் இருக்கின்றான் என்று!!!!!

நிச்சயம் மனிதர்களைச் சொல்கின்றேன் நீங்கள் கர்மாவை சம்பாதித்துக் கொண்டே இருக்கிறீர்கள்!!

இதனால் எவை நிச்சயம் தன் தன் கேட்காமலே நிச்சயம் அனைத்தும் வரும் என்பேன்.

மனக் குழப்பங்கள் வரும்!!! நோய்கள் வரும்!!!

ஆனால் எதையும் ஆசைப்படாமல் இறைவனே நீயே !!கதி!!! என்று நீ தான் காக்க வேண்டும்! என்று இருந்தால் நிச்சயம் எதிரே வந்து நிற்பான் என் தந்தை ஈசன்!!!!!
என் அம்மை பார்வதி!!! என் அன்பான குருவானவன்.

பின் அதை உணர்த்துவதற்கு குருநாதன் பின் அனைவரும் சொல்வார்கள்!!!!

அகத்தியனுக்கு பின் அகத்தியனுக்கு குருநாதன் முருகன் என்று!!!!

ஆனால் யானும் சொல்வேன்... எந்தனுக்கு குருநாதன் அகத்தியனே என்று!!!!!

யார் அறிவார்கள்!!!!???

மனிதன் பல பொய்களைச் சொல்லி நடித்துக் கொண்டே இருக்கின்றான்!!! பின் எப்படி?மனமிரங்கி சித்தர்களும் காப்பாற்றுவார்கள்???

எண்ணிப் பாருங்கள்!!!

மாயாஜாலத்தை நம்புவது இப்படியெல்லாம் நடக்க வேண்டும் என்பதைக்கூட இன்னும் பல மனிதர்கள் ...
தான் அனைத்தும் வசியம் செய்து கொள்ள வேண்டும் !!
தான் நினைப்பது அனைத்தும் நடக்க வேண்டும்!!!! இவையெல்லாம் பொய்!!

நிச்சயம் எங்கள் அருள் இல்லாமல் எதை !??அதைவிட... என் அப்பன் ஈசன் அருள் இல்லாமல் ஒன்றும் நடக்கப்போவதில்லை!!!!

ஆனால்  மனிதா!!! இவையெல்லாம் செய்துகொண்டே இருந்தால் கடைசியில் மடிந்து போவாய்!!!

நீ மட்டும் மடிந்து போக மாட்டாய், உன் பிள்ளைகள் இதை குறிப்பிட்ட அளவில் என்ன சொல்வது ???யான்!!!

அதனால் திருந்திக் கொள்ளுங்கள்!!!!

மனிதனே!!! மனிதர்களே!!!

நீங்கள் திருந்திக் கொண்டால் நிச்சயம் சித்தர்கள் அவரவர் இல்லத்திற்கே வந்து நிச்சயம் வாக்குகள் செப்பி செல்வார்கள்.... இதுதான் முடிவுகள்!!!

அதை மீறியும் கூட ஆனால் இன்னும் இன்னும் பல ஆண்டுகளில்.... பல ஆண்டுகள் அல்ல!!!! சில ஆண்டுகளில் வருகிறது இன்னும் பல நோய்கள்!!!

அதனால் நீங்கள் உங்களை காத்துக் கொண்டால் நல்லவை!!!

அதனை விட்டுவிட்டு அனைத்தையும் செய்துவிட்டு பக்தனாக நடித்துக்கொண்டிருந்தால்
என்ன லாபம்???

என்ன லாபம்??? யான் ஈசனுக்கு பிரியன்!!! யான் ஈசனுக்கு பிள்ளை!! என்றுதான் சொல்லி நீங்கள் அலைந்து கொண்டிருக்க வேண்டும்.

ஆனால் என் தந்தை எதை விரும்புவானென்றால்!!!!!

அன்பை!!!!... அன்பை விரும்புவான் என் தந்தை.
என் தந்தைக்கு  அவ் அன்பை காட்டினாலே போதுமானது என் தந்தைக்கு!!!!!

இதை பல சித்தர்கள் சொல்லிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

ஆனாலும் உண்மை பொருளை யார்?? நம்புவது?? இவ்வுலகத்தில்!!

ஏதோ சொல்கின்றார்கள்!! ஏதோ செய்கின்றார்கள்!!ஆனால் நம் தனக்கும் பிழைப்பா கடைசியில் வந்து வந்து எதை என்று கூற பின் மாண்டிருக்கும்பொழுது பின் பிணத்தை பார்த்து மனிதன் அழுகின்றான்!!!

நியாயமா????

முதலிலே பின் சாகும் நேரம் என்பதுகூட அழகாக குறித்து வைக்கப்பட்டுள்ளது ஆனால் அதன் முன்னே என்னென்ன?? செய்ய வேண்டும் என்பதைக்கூட மனிதன் மறந்து விடுகின்றான்... கடைசியில் மாண்டு போய் விடுகின்றான்.

இதனால் அனைவரும் எதை என்று?? யாங்கள் சொல்ல!!!!!

ஆனாலும் திரும்பவும் திரும்பவும் வந்து பிறக்கின்றானே!!!! அதுதான் வேதனைக்குரியதும் கூட....

ஆனாலும் இதனை நிறுத்தலாம்!!

எப்படி நிறுத்தலாமென்றால்? பின் சுகங்களுக்கு ஆசைப்படாமல் இறைவனை மனதில் வைத்து மனதில் இறைவனை நேசித்துக் கொண்டே வந்தால்... நிச்சயம் உலகம் சிறப்படையும்!!!

சிறப்படையும் என்பது திண்ணமான வாக்கு!!!

வாக்கு இன்னும் பல சித்தர்கள் சொல்லிக்கொண்டே தான் வந்து கொண்டிருக்கின்றார்கள்!!

ஆனாலும் இப்படி செய்க!!! இப்படி செய்க!!!
ஆனாலும் பின் அப்படி செய்வதுமில்லை!!!

எதனால் வாக்குகள் உரைப்பது என்பதைக்கூட இனிமேலும் சித்தர்கள் கடுமையானவை பின் சோதித்து மனிதர்களை பின் வந்து இழுப்பார்கள்.

இதை நிச்சயம் யான் மனமுவந்து தெரிவித்து விடுகின்றேன்!!!

ஆனால் நம்பினால் நம்புங்கள்!!! இல்லையென்றால் நடுவில் தான் நிற்க போகின்றீர்கள்.... ஆனால் நடுவில் நிற்பது எவ்வளவு கடினம் என்றால் பின் மனிதன் ஆராய்ந்து விடுவான்!!

ஏன்?  கடலின் நடுவில் நிற்பது எவ்வளவு?? கடினம் என்று தெரிந்து கொள்ளுங்கள்  மனிதர்களே!!!

மனிதர்களே நீங்கள் இப்பொழுது கடலில் நடுவில் தான் நின்று கொண்டிருக்கின்றீர்கள்... அப்படியும் போகாமல் இப்படியும் போகாமல் எப்படிப் போவது??? என்பதை கூட......

ஆனால் இன்னும் மனிதர்கள் பின் தவறான பாதையில் சென்று சென்று தன்னையே அழித்துக் கொண்டு.... தன் குடும்பத்தையும் அழித்துக்கொண்டு தன் பிள்ளைகளையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

திருந்துங்கள் இன்னும்... ஏராளம்!!

சித்தர்களின் ரகசியமான பேச்சுக்களை கேளுங்கள்!!
நல் விதமாக தான தர்மங்கள் செய்யுங்கள்!!!

இவையெல்லாம் செய்தால் தான் நிச்சயம் வரும் காலங்களில் பிழைத்துக் கொள்ளலாம்!!!

ஏன் ?இன்னும் ஏராளமான சூட்சுமங்களை நிச்சயமாய் பின் பல சித்தர்கள் இங்கு செல்லலாம் !!அங்கு செல்லலாம்!! என்றெல்லாம் சொல்வார்கள்.

ஆனாலும் திருத்தலங்களுக்கு சென்றாலும்....நீ... எதனை ?எதனை? பயன்படுத்துகின்றாய் என்பதைத்தான்... முக்கியம்!!

நிச்சயம் தாய் தந்தையரை வணங்காமல் என்னிடத்தில் வந்தாலும் யான் வரங்கள் கொடுக்கப் போவதில்லை!!!

யார் ஒருவன் தாய் தந்தையரை நல் முறையாக மதித்து வருகின்றானோ அப்பொழுது என் அழைப்புக்கள் பலமாக இருக்கும்....

ஏன் என் தந்தையின் அழைப்புகளும் பலமாக இருக்கும்...!!!

ஏன் சித்தர்களின் அழைப்பும் இன்னும்......

அதனால்தான் முதலில் மனிதன் எப்படி வாழ வேண்டும் ??என்பதை கூட கற்றுக் கொண்டாலே!! அப்பொழுது தான் உண்மை நிலை பின் புரிய புரிய இன்னும் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

உண்மை நிலை புரிந்தால் வெற்றிகள் நிச்சயம் ஒன்று என்பேன்!!!

என்பேன் என்பதற்கிணங்க இன்னும் பல மாற்றங்கள் இவ்வுலகத்தில் வரத்தான் போகின்றது!!! வரத்தான் போகின்றது என்றில்லாமல் இன்னும் பல பல வினைகள் மனிதனை சூழ்ந்துகொள்ளும்!!!

ஆனாலும் ஒழுக்கமில்லையே!! பெண்டிர்களுக்கு (பெண்களுக்கு) ஒழுக்கம் இல்லையே!!! வரும் காலங்களில் சற்று  தாய் தந்தையர் தன் பிள்ளைகளுக்கு இப்படித்தான் வாழ வேண்டும் என்ற ஒழுக்கத்தினை நிச்சயமாய் சொல்லித்தாருங்கள்!!!

அதை கேளாவிடினும் அதன் கர்மம் நிச்சயம் அதை அனுபவித்தே தீர வேண்டும்..

தீர வேண்டும் என்பது இல்லை!! பொறுப்புக்கள் இல்லை!! வீண் விரயங்கள் இன்னும் பல பல வழிகளிலும் மனிதர்களுக்கு வந்துகொண்டே இருக்கும்!! இருக்கும் என்பதை கூட மறந்துவிட்டான்!!! இல்லாததை தேடுகின்றானே மனிதன்...

இல்லாததை பொல்லாததை என்று நினைத்து தேடுகின்றானே ஓடோடி!!!!!

எதனை தேடுகின்றாய்??? மனிதா!!!

நீ தேடினாலும் கிட்டியது என்ன???

கிட்டியது என்ன??

இன்னும் சொல்லப்போனால் யான் ஒரு பாடலை அழகாக அருணகிரி...தாளாததை கூட செப்புகின்றான் என்னிடத்தில்....

நிதானத்துடனே
இருந்தால் எதனையும்
முற் கொள்ளலாம்!!
முற் கொள்ளாதபடி
நடந்து கொள்ளலாம்!!
நடந்து கொள்ளாதபடி
முற்பிறவியின் ரகசியத்தை
எப்படியோ அப்படியே
வகுத்து அதை
நீங்கலாக்கி நீக்கி
நீங்கியபின் தரித்திரம்
தரித்திரம் இதனையும்
அன்றி அன்றி வாழ
கற்றுக்கொள்.
வாழக் கற்றுக்கொள்
நிதானத்துடன்.
நிதானத்துடன் இன்றி இன்றி இரு!!
அன்று  அன்றிரு
அன்றிரு இன்றிரு
மற்றொன்று மூலமாக
தெரிவித்திரு!!
தெரிவித்து இரு அலைபாயுது
அலைபாய்வதற்குள்
என்னவென்று
என்னவென்று இருக்குதடா
மனிதா! இதனையும்
கற்றுக்கொள்ளாதது ஏதடா
கற்றுக்கொள்ளாதது கற்றுணர்ந்து தெளிவு பெறுவது ஏதடா?
தெளிவு பெற்றபின் முற்றிலும் துறவி ஆகாதது ஏதடா?
ஏதடா ?குட்டுணர்ந்து
குன்றிய பிறகு
இறைவனை வந்து வணங்குவது ஏனடா?
வீணடா !வீணடா!
வீணாவது ஏதடா?
மனிதனின் நிலைமைகள்
பார்த்தால்
முன்னால் பின்னால்
வருங்கால் இன்னுங்கால்
இன்னும் வருங்கால்
வருங்கால் ஏதடா?
பிறவி ஏதடா
முற்பிறவியின்
ரகசியத்தை தெரிந்து
கொள்ளாதது கூனடா!
கூன் விழுந்த போது
இறைவனை நாடி
ஏதடா? !!பலன்கள்
பலன்கள் வந்ததடா
போனதடா ஆனால்
நீ ஒன்றும் திருந்தவில்லையடா!!!

என்று என்னிடத்தில் பாடியும் அசைத்தான் பின் அருணகிரி.

ஆனால் இதையும் உணர்ந்தால் இன்னும் பல பாடல்களையும் அருணகிரி அருணகிரிநாதன் அழகாக இயற்றியுள்ளான்...

ஆனால் யானே சொன்னேன்.... கலியுகத்தில் அப்பாடல்கள் மனிதனுக்கு நிச்சயம் கொண்டு சேர்க்க வேண்டும். அதனால் சில பாடல்களை நிச்சயமாய் மனிதருக்கு போய் சேரக்கூடாது என்பதை யானே தெரிவித்துவிட்டேன்.

அதனால் அருணகிரி தந்தையே!!! தந்தையே!!!

நிச்சயம் என் பாடல்கள் சில மனிதர்களுக்கு கடைசியில் கலியுகத்தில் போய் சேரும் என்று...

அதனால் நிச்சயம் அவனுடைய பாடல்கள் வரும் காலங்களில் நிச்சயம் அவந்தனே வந்து பாடுவான்.

இதனை இதுவரையில் யாரும் தெரிந்திருக்கவில்லை.

இன்னும் பல சூட்சமங்கள் ரகசியங்கள் நிச்சயமாய் நல்லோருக்கு சித்தர்கள் செப்புவார்கள்....

பிழைத்துக் கொண்டால் பிழைத்துக் கொள்ளுங்கள்!!!

யாங்கள் இப்படித்தான் இருப்போம் என்றால் அப்படியேதான் இருங்கள்..

அழகாக இறைவன் அனுப்புகின்றான் அனுப்புகின்றானே!!! 

வயது ஆக ஆக ஆசைகள் மனிதனை பிடுங்குகின்றது
அவ் ஆசைகள் ஆனால் ஆசை!! ஆசை!! ஆசை!!

எதன் மீது ஆசை??

சுகத்தின் மீது ஆசை!!
 
கடைசியில் சுகமே பின் பலமான சக்திகளை ஈர்த்து அழித்து விடுகின்றது....

இப்பொழுது புரிகின்றதா?? மனிதா!!

எதை நீ சென்று தேடி போனாயோ அதன் மூலம்தான் நிச்சயம் பின் அழிவுகள் நிச்சயம் என்பது கூட பின் அனைவருக்கும் தெரிந்ததே!!!!

திரும்பவும் ஞாபகப்படுத்தி விடுகின்றேன்...

எதனை நீ நம்பி போகின்றாயோ!?? நிச்சயம் அதன் மூலம் அழிவுகள்.

ஏன்?? இந்த ஆசைகள்!!!

நடுவில் வந்தவையா!!! ??? வந்தவையா இல்லையே பின் பிறப்பின் போதே வந்தவையா??

பிறப்பின் போது ஏதும் தெரியாமல் தான் வந்து நிற்கின்றாயே!!! ஆனால் அனைத்தும் உந்தனுக்கு கிடைக்கின்றது.... ஆனால் வயது ஆக ஆகத்தான் அனைத்தையும் தெரிந்துகொண்டு மனிதா...

ஆனால்?? இறைவன் நிலையை தெரிந்து கொள்ளவில்லையே!!!!!

இறைவன் நிலையை நீ தெரிந்து கொண்டால் நிச்சயம் நீ தான் மனிதன்.

ஆனால் இப்பொழுது மனிதன் நிச்சயமாய் காட்டில் தான் வாழ போகின்றான்...

இதற்கும் அர்த்தங்கள் உண்டு!! அர்த்தங்கள் உண்டு!!!

விலங்கினங்கள் எல்லாம் வரப்போகின்றது பின் எதனையென்று நேர்மையாகவே.... நேர்மையாகவே விலங்கினங்கள் போலில்லாமல் மனிதர்களைப் போல் நடந்து கொள்ளுங்கள்!!!!

நடந்து கொள்ளுங்கள் ஆனால் விலங்குகளுக்கும் மனசாட்சி என்று ஒன்று இருக்கின்றது!!!!

ஆனால் மனிதனுக்கு கலியுகத்தில் மனசாட்சி என்று ஒன்றுமே இருக்காது. இருக்காது.

சித்தர்கள் இல்லையென்றே!!! நினைத்து பிழைத்துக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்கள்.

ஆனால் ஒவ்வொருவருக்கும் நிச்சயமாய் தண்டனைகள் உண்டு... உண்டு இன்னும் ஏராளம்!!!

என் தந்தையானவனும் நிச்சயம் மனிதர்களுக்கு எப்படியெல்லாம் பாடத்தை உணர்த்த வேண்டும் என்பதையெல்லாம் எண்ணிக் கொண்டிருக்கின்றான்... ஏற்கனவே உணர்த்தியும் விட்டான்!!

இக்கலியுகத்தில் உண்மையானவைகள் எல்லாம் சித்தர்கள் இனிமேலும் நிச்சயம் ஏற்படுத்துவார்கள்... உண்மையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் நன்மைகளை செய்ய வைப்பார்கள்.

ஆனால் இன்னொரு விஷயத்தை மட்டும் சொல்கின்றேன்....

பக்தன் என்று ஏமாற்றுகின்றானே!!! 

அவனை நிச்சயம் யாங்கள் தேர்ந்தெடுக்க மாட்டோம்..

எந்தனுக்கே அனைத்தும் தெரியும் என்கின்றானே!!
அவந்தனையும் யான் தேர்ந்தெடுக்க மாட்டேன்.

அமைதியாக இருக்கின்றானே ஆனால் இருக்கின்றார்கள் பலர் தூய்மையானவர்கள் ஆனால் அவர்களைப் பார்த்தால் மனிதர்கள் திருடர்கள் என்று தான் சொல்வார்கள்.... ஆனால் எங்களுக்கு அவர்கள் நல்லோர்கள்!!!

அவர்கள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்.. அவர்களை தேர்ந்தெடுப்போம்.

மனிதா!! நீ !! எதனையென்று கூற எங்களால்... படைக்கப்பட்டவர்களை எப்படி?? நீங்கள் திருடர்கள் என்று.....

ஆனாலும் நிச்சயமாய் இது கலியுகம் நல்லோர்களை திருடர்கள் தான் என்று.

ஆனாலும் ஒருவன் பாதையை சரியாக கணிக்க கணிக்க கணிக்க எங்களுக்கு மட்டுமே தெரியும்!!!

எப்படி நீ சொல்கின்றாய் ???ஒரு மனிதன் நல்லவன் தீயவன் என்று கூட.... உன்னால் கணித்து விட முடியுமா என்ன???

ஆனால் அவன் ஆன்மா என்னென்ன செய்து கொண்டிருக்கின்றது என்பதை கூட எங்களுக்கு நன்றாகவே தெரியும்!!!

நன்றாகவே தெரியும்!!!

முற்றுப்பெற்ற மனிதா!!!!
முற்றுப்பெற்ற மனிதா!!!
முற்றும் இல்லாததை எதை உணர்த்தி கொண்டிருக்கின்றாய்???

உணர்த்தி கொண்டிருக்கின்றாய்???

இனிமேலும் மனிதன் வாழ்வாங்கு வாழ்வான்!!


எதையென்று நினைக்கும் அளவிற்கும் கூட... பெண் சுகங்களைத் தேடி தேடி அலைந்து போய்க்கொண்டே இருப்பான்.. கலியுகத்தில் நிச்சயமாய்!!! இதைத்தான் வரும் காலங்களில் இன்னும் பல சித்தர்கள்...

முதலில் யாங்கள் சொல்லிவிடுவோம் எதையென்று....
இப்படிச் சென்றால் இப்படி நடக்குமென்பதை கூட...

ஆனால் அதற்கும் கூட மனிதன் ஒழுங்காகவில்லேயே... ஒழுங்காகவில்லையே அதனால் தான் மனிதனை ஒரு நிலைப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதுதான் சித்தர்களின் நோக்கமாக உள்ளது.

அதனால்தான் மனிதர்களை ஒரு நோக்காக ஏற்படுத்தி பின் இப்படி நடந்தால் வெற்றிகள் கிடைக்கும் என்று சுலபமாக சொல்லிவிடுவார்கள்... அதன்படியே நிச்சயம் வெற்றி கொள்ளலாம்.

அதனால் மனிதா!!!!


அதைச் செய்கின்றேன் இதைச் செய்கின்றேன் என்னால் முடியும் இதை வைத்துக்கொள்!! அனைத்தும் நடக்கும்!!


என்பதெயெல்லாம் வீணே!!! வீணே!!!

மந்திரமாவது ஏதடா!!?? தந்திரமாவது ஏதடா!!??

என்ற பாடல் வரிகளையும் நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்!!

ஆனால் இவ்வளவு பாடல்களும் இன்னும் மறைத்து வைக்கப்பட்டுள்ளது!! என்பதுதான் தெரியாத மனிதனின் முட்டாள் குணங்கள்!!!

ஆனால் சித்தர்கள் விடப்போவதில்லை வரும் காலங்களில்!!!

தான் தன் பாடல்களுக்கு ஏற்ப இன்னும்.....

ஆனாலும் யானும் கூட நிச்சயம் மனிதனை எப்படி வழி நடத்துவதெல்லாம் நிச்சயம் வந்து புவிதனில் உரைத்து உரைத்து விட்டுவிட்டு செல்வேன்!!!

நம்புங்கள்!!!! நிச்சயமாய் உயர்வு பெறுவீர்கள்!!!

எதனால் என்பதையும் கூட ஆனாலும் என்னிடத்தில் வந்து எதையும் கேட்காதீர்கள்!!!!

யான் எதை? தன் பக்தனுக்கு தரவேண்டுமென்பதை கூட யான் அறிவேன்!!! அதனையே கொடுக்கின்றேன்!!!!

அனைத்தும் செய்துவிட்டு அனைத்தையும் செய்துவிட்டு.....கந்தா!!!  முருகா!!! என்று என்னை அழைத்தால்??? யான் என்ன!???  என்ன செய்ய முடியும்????

உந்தனிடத்தில் ஏதாவது!!! சிறு துளியாவது புண்ணியம் இருக்கின்றதா??

புண்ணியம் இருந்தால்தான் நிச்சயம் அனைத்தும் செய்ய இயலும்!!!

இதனால் தன்னைப்போலவே மற்றவர்களை எண்ணும் எண்ணம் இருக்க வேண்டும் என்பதை கூட பல சித்தர்கள் பல பல வாக்குகளிலும் உரைத்து விட்டார்கள்!!!

இதனால் முதலில் பிறரை பிறரை பின் பிறர்நலம் காக்க வேண்டும் என்பது உறுதியாக.....

பின் சித்தர்கள் இன்னும் வருவார்கள் மனித ரூபத்திலே!!!!!!!!

நிச்சயம் வந்து கொண்டே இருப்பார்கள்!!!

நிச்சயம் ''பழிக்குப் பழி'' என்பதைப்போல் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ..??? அப்பொழுதே தண்டனை கொடுப்பார்கள்!!!!

சித்தர்கள் நிச்சயம் மனித ரூபத்தில் திரிவார்கள்!!!
திடீரென்று அவதாரம் எடுத்து!! எடுத்து!! எடுத்து!!

ஆனால் நிச்சயம் ஏதோ ஒரு உடம்பின் மூலம் வந்து நிச்சயம் காப்பார்கள்!!! இதுதான் சத்தியம்!!!

இன்னும்   ஏராளமான      இக் காசி!! தன்னில் பின் பல பிறவிகள் எடுத்து எடுத்து இன்னும் என் தகப்பனிடத்தில் எந்தனுக்கு சாவுகள் வரக்கூடாது பல மனிதர்களுக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்று பல ஆன்மாக்கள் வேண்டிக்கொண்டன!!!!

இதனால் பல ஆத்மாக்கள் இங்கேயெல்லாம் தியானங்கள் செய்து கொண்டேதான் இருக்கின்றது!!!

இதனால் தான் இங்கு வந்தால்... அவர்கள் கண்ணில் பட்டால் கர்மம் போகும் என்பதை கூட... வரமாக யான் சொல்லிவிட்டேன்!!!!!

ஆனால் அதைக் கூட உன்னால் நிச்சயம் ஏற்க முடியவில்லையே???!!!!! என்றுகூட புசுண்ட (காகபுஜண்டர்) முனியும் வருத்தம்!!!!!!

யான் சொல்லியதை கூட மனிதன் சிறிதுகூட காதால் கேட்கவில்லை!!!!

ஏன்???? என் பக்தனே இதைக் கேட்கவில்லை..!!!

அவந்தனுக்கு யான் எப்படி?? அருள் கொடுப்பது என்பதையெல்லாம் சற்று............!!

ஆனாலும் புசுண்ட முனியோ!!!  யான் விடப்போவதில்லை!!! மனிதனை!!! மனிதனை நிச்சயம் விடப்போவதில்லை கஷ்டங்களில் ஆழ்த்தி!! ஆழ்த்தி.... புத்திகள் வைத்தால்தான்......

 இன்னும் பிறவிகள் கடந்து போகும் ஆனால்...என்னை!! என் பெயரைச் சொல்லியும் கூட புசுண்டன் என்று கூட மக்களை ஏமாற்றுகின்றான்..

ஆனால் அவன் ஒரு முறை கூட நிச்சயம் காசி தன்னில்... ஆனால் பக்தன்!!! சித்தன்!!! ஞானி!!! என்றெல்லாம் பொய் கூறி உரைத்துக் கொண்டிருக்கின்றானே!!! என் தந்தையிடத்திற்கு (காசி) வரச் சொல்லுங்கள் பார்ப்போம்!!!!!!!!!!!

நிச்சயமாய் அப்பொழுது தெரியும்!!! உண்மையானவனா நீ???? என்று கூட.......!!!!

பயந்து பயந்து ஒளிந்து கொண்டிருக்கிறான்!!!

காசுகளுக்காக காசுகளால் ஏற்படுத்திக்கொண்டு எதை எதையோ செய்து செய்து ஆனால் கர்மா என்று ஒன்று இருப்பதை மறந்துவிட்டானே!!!!  மனிதன்.

நிச்சயமாய் நிச்சயமாய் கர்மா வருவது எப்படி என்று எண்ணிப் பார்த்தால் தப்பித்துக்கொள்ளலாம்!!

அதனால் கடைசியில் கர்மா விடாது மனிதனே!!!!

எதைச் சொன்னால்....பிரம்மன்!!!!

ஒன்றைச் சொல்கின்றேன் பிரம்மன் அழகாக இப்படி தான் பின் வாழ வேண்டுமென்று மனிதனை வகுத்து சரியான முறையில் அனுப்பி விடுகின்றான்.

ஆனால் அதை மனிதனால் திருத்த முடியுமா???

சிரித்தேன் யான்!!!!!!

சிரித்தேன் யான்!!!  மனிதனால் அனைத்தும் செய்ய முடியுமா??? இவையெல்லாம் வீணான பேச்சுக்கள் என்பதைக்கூட பல சித்தர்களும்........

ஆனால் ஆனால் பிரம்மா எழுதியதை நிச்சயமாய் மனிதனால் நிச்சயமாய் உரைக்க முடியாது.

சித்தர்கள் சித்தர்களால் தான் உரைக்க முடியும்!!!
அப்படிப்பட்ட சித்தர்கள் இவ்வுலகத்தில் யாரும் இல்லையப்பா!!!!!

அதனால் பொய்யானவர்களே அதிகம்.... அதை நம்பியவர்களும் பொய்யானவர்களே தான்.....

உண்மை!!!

ஒருவன் பொய்யானதை நம்பினால் அவனும் பொய்யானவனே !!!இதுதான் உண்மை!!!!

ஒரு திருடன் என்றால் அத்திருடனை நம்பினால் அவனும் திருடனே!!!

ஒரு பொய்யான துறவி என்றால் அவ் பொய்யான துறவியை ஒரு மனிதன் நம்பினால் அவனும் பொய் யானவனே!!!!

திருடன் திருடனை நம்பினால் எப்படி இருக்கும்???

திருடன் திருடன் என்று தான் மனிதனை....

இன்னும் சித்தர்கள் பல சித்தர்கள் மனிதர்களை பலப் பல ரூபங்களில் பல பலகாலங்களில் கூட காத்து நின்றனர்....!!!

ஆனால் கலியுகத்தில் சுலபம் என்பதை கூட அருமையாக புசுண்டன் புசுண்டன் நிரூபித்து விட்டான்!!!

நிச்சயம் பின் மனிதனுக்கு நோய்கள் மூலமாகத்தான் இனியும் பலமான அடிகள்!!!!

இன்னும் வரப்போகின்றது!!!

என்னென்னவென்றால்??? சொல்ல முடியாத அளவிற்கும் கூட... இன்னும் நீர்நிலைகள் இதன்மூலம் பலமாகவே மனிதன் அழியப் போகின்றான்!!!

வருகின்றது... இன்னும் மழை எவையென்று கூற!!!.... இன்னும் கற்கள் ஒளி கற்கள்(விண்கல்) திடீர் திடீரென்று மனிதன் மீது விழும் என்பேன்!! அங்கேதான் சூட்சுமங்கள் இருக்கின்றது!!

அதனால் திருந்திக் கொள்ளுங்கள் மனிதா!!!

உலகம் நிரந்தரமில்லை!!!!

அனைவருக்கும் செய்யுங்கள்!!!

பிறர் மனதை ஆராய்ந்து செய்தால்தான் தர்மம்!!!

பிறர் வாங்கிக் கொடுப்பது தர்மமே இல்லை!!!

இதனையும் உணர்த்துவதற்கு கேட்காமலே செய்கின்றார்களே!!! அதுதான் தர்மத்தில் போகும்!!!!

அதனால் மற்றவர்களை உணர்ந்து இந்த சூழ்நிலையில் இருக்கின்றாயே!!!! என்றுகூட தர்மத்தை செய்தால் அது பெரும் புண்ணியமப்பா!!!!!

இதனை உணர்த்த  உணர்த்த உணர உணர இன்னும் ஞானங்கள்!!!

என் தாய் தந்தையரும் (ஈசன் பார்வதி தேவி) மிக்க மகிழ்ச்சி ஆகவே இங்கு வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!! இதனால் பல பல பல பல சித்தர்களும் பல ஞானியர்களும் ரிஷிகளும் இங்கு வந்து அழகாகவே அதிகாலையிலே நீராடுகிறார்கள்!!!!

இதையென்று கூற பின் மேலே!!!! எதையென்று கூற இமயமலையிலிருந்து இன்னும் பல பரிசுத்தமான ஆன்மாக்கள் பின் உடம்பு தான் இல்லையே..... உயிரோடு நீராடிக் கொண்டிருக்கின்றது!!! அந் நீரானது வந்து கொண்டே தான் இருக்கின்றது!!!

நிச்சயம் பின் அதில் மூழ்கினால் கர்மங்கள் பல கர்மவினைகள் தீரும்!!!!

அதற்கும் என் தந்தையின் அருளாசிகள் பெற வேண்டும்!!!!

என் தந்தையின் அருள் ஆசிகள் பெற வேண்டும் என்பதற்கிணங்க யான் சொல்லி விடுகின்றேன்!!!!

அனுதினமும் அதிகாலையிலே என் தந்தையினை 108 முறை சுற்றியும் என் தாயவளை 108 முறை சுற்றியும்(ஈசனையும் பார்வதி தேவியையும் தனித்தனியாக 108 முறை சுற்றி வணங்க வேண்டும்) சுற்றியே மாதங்கள் வந்தால்.... பல மாதங்கள் இப்படியே செய்து கொண்டிருந்தால் நிச்சயம் என் தந்தையே அனுமதித்து விடுவான்  இக் காசி தன்னில் நீராட!!!!!!

மற்றவையெல்லாம் செல்லாது!!!!!  செல்லாது!!!!

சொல்லிவிட்டேன் ரகசியத்தை!!!!

இதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!!

ஆனாலும் அனைவருக்கும் கிடைக்குமா??? என்பதை கூட.... சந்தேகமே!!!!!!

இவையென்று கூறாத அளவிற்கும் கூட..... இன்னும் இறைவனை நேரில்.........

ஆனாலும் என்னையும் பார்த்து நீ இறைவனா!??? என்று கூட பல நபர்கள் கேட்டு விட்டனர்....

ஆனால் என்னவென்று ??கூற....... பல அடிகள் பல அடிகள் !!!!

எதற்காக ??மனிதா நீ பிறந்தாய்??

உன்னுடைய வேலை என்ன!?...... அதை மட்டும் செய்து விட்டு போனாலே இறைவன் பக்கபலமாக இருப்பான்!!! அனைத்தும் செய்வான்!!!!

செய்வான்!!! இன்னும் பல சித்தர்கள் பல ரகசியங்களோடு சொல்வார்கள்.... அதைக் கேட்டுக்கொண்டே நன்குணர்ந்து பின் மீண்டு வாருங்கள்!!!! பிறவிக்கடலிலிருந்து!!!!!!

வந்தால் இன்னும் நலன்களோடு பல ரகசியங்களை செலுத்தி நீங்கள் நல்படியாக வாழலாம்!!!

முதலில் ஒழுக்கங்கள் எப்படி.... இப்படி இருந்தால் எப்படி வாழலாம் என்பதை கூட சித்தர்கள் முதலில் சொல்வார்கள்...!!! அதற்கு பிறகுதான் பல சூட்சுமமான விஷயங்கள் ரகசியங்கள் இத்திருத்தலத்திற்கு சென்றால்... அங்கே என்ன செய்ய வேண்டும் என்பதெல்லாம் சொல்வார்கள்!!! வரும் காலங்களிலப்பா!!!!

பிழைத்துக்கொள்ளுங்களப்பா!!!!!

பின் மீண்டும் எதையென்று உணராமலே.... என் தலத்திலே அற்புதமான வாக்கை ஒன்றை விளக்குகின்றேன்!!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

24 comments:

  1. ஓம் ஶ்ரீம் அகத்தியாய நம
    ஓம் நம குமாராய

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமஹ ....

    (( சித்தன் அருள் - 1151 - அகத்தியர் விஜயம் - குருவுடன் இரு நாட்கள்!)) ஐயா இப் பதிவின் இரண்டாம் பாகத்தின் அகத்தியர் ரின் உரையாடல் பதிவு க்கு ஆகா காத்திருக்கின்றோம்

    ReplyDelete
    Replies
    1. ARTICLE 1147 & 1151 ARE THE PUBLISHED ONES. THE NEXT CHAPTER WILL BE PUBLISHED SOON.

      Delete
  3. குருநாதர் அருளால் ஒரு பதிவு

    http://fireprem.blogspot.com/2022/06/blog-post_23.html?m=1

    ReplyDelete
  4. குருநாதர் அருளால் ஒரு பதிவு

    http://fireprem.blogspot.com/2022/06/blog-post_23.html?m=1

    ReplyDelete
  5. ஓம் நம குமாராய ஓம் சரவணபவ 🙏🙏🙏

    ReplyDelete
  6. அகத்தியர் அடியவர்களுக்கு அன்பு வணக்கங்கள்


    குருநாதர் அகத்தியரின் உருவம் குறித்து பலவித குழப்பங்கள் என்று.... ஆனால் ஒரு குழப்பமும் அடையத் தேவையில்லை யாரும் யாரையும் குழப்ப வேண்டிய அவசியமும் இல்லை


    நமது குருநாதர் அகத்தியரின் சித்தன் அருள் வலைத்தளத்தை முறையாக முழுவதும் படித்துக்கொண்டு வருபவர்களுக்கு குழப்பங்கள் இருக்காது....


    26/6/2014. திரு ஹனுமத்தாசன் ஐயா அவர்கள் கஞ்சமலை யாத்திரையில் குருநாதர் உரைத்த வாக்கு படித்திருந்தால் சில விஷயங்கள் புரிந்திருக்கும்...

    சித்தன் அருள் - 179 - கஞ்சமலை - முருகர் மயில் வாகனத்தை அமைத்துக் கொண்ட படலம்!


    ஒருநாள், பூசை முடித்து, பலருக்கும் நாடி வாசித்து அகத்தியர் அருள் வாக்கை சொல்லி, இன்று இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று நினைத்த பொழுது, அகத்தியரிடமிருந்து, உத்தரவு பிறந்தது.

    "உடனேயே நண்பர்களுடன் "கஞ்சமலைக்கு" சென்று முருகர் அருள் பெற்று அங்கே அமருக. யாம் அங்கு வந்து வாக்குரைப்போம்." என்று கூறினார்.

    என்ன இது, இந்த நேரத்தில் எப்படி செல்ல முடியும்? என்று யோசித்து, அகத்தியர் சொன்னால் ஏதேனும் விஷயம் இருக்கும் என்று உணர்ந்து, நண்பர்களை அழைத்து, அவர்களுடன் புறப்பட்டேன்.

    அடுத்த நாள் காலை கஞ்சமலையில் முருகர் தரிசனம் பெற்று, அகத்தியர் சொற்படி, ஒரு நல்ல இடமாக தேர்ந்தெடுத்து, அமர்ந்து, நாடியை பிரித்தேன்.

    பிரித்த வேகத்திலே அகியத்தியரின் அருள் வாக்கு வந்தது.
    "நவ நாகரீக சொற்படி, சிறிது இடைவேளைக்குப் பிறகு அகத்தியன் தொடர்கிறேன். இங்கு ஒரு அதிசயத்தை நீ பார்த்தாயா? இங்கிருந்து மேற்குப்புரம் இருக்கிற என் உருவத்துக்கு தொந்தியை அதிகமாக்கி, என்னை வயதான கிழவன் போல் ஆளாக்கிவிட்டீர்கள். லோபாமுத்திராவை, 18 வயது இளம் பெண்ணாக காட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார்கள். மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று யோசித்துப் பார்த்தேன். என்னையே கேலி செய்கிறான். எனக்கு வயது எழுபதாம், அவளுக்கு 18ஆம். அந்த உருவத்தில் தான் உருவச்சிலை அமைந்திருக்கிறது. அதை விட்டுவிடு. நீ உட்கார்ந்த இடத்தில் அகத்தியன் வாக்கு உரைக்கப் போகிறேனே, இடத்துக்கு மேலே அகத்தியன் சிலையும் இருக்கிறது. அதைப் பார். அதை 90 வயது கிழவனாக காட்டியிருக்கிறார்கள். எப்படியடா இந்த வித்யாசம். ஆக, அகத்தியன் சொல்வதை யாருமே நம்ப மறுக்கிறார்கள் என்பதைத்தான் சொல்லிக் காட்டினேன். நான் அப்படிப் பட்டவனல்ல என்று என்னை நானே, சுய புராணம் போட்டு உங்களிடம் அடிக்கடி ஞாபகப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நானே இருக்கிறேன் என்று சொல்லத்தான் இதை ஆரம்பித்தேன். ஆகவே, மனிதர்கள், நினைத்தால், கடவுள்களை, எப்படிவேண்டுமானாலும் மாற்றுவார்கள் போலும். ஆகவே, கடவுள் இதை எல்லாம் தாண்டி நிலையாக இருப்பவன். இதெல்லாம் தாண்டி இருப்பவன், ஆசைக்கு அப்பாற்பட்டவன் என்றாலும் கூட, மனிதர்கள் எப்படியெல்லாம் தங்கள் ஆசைக்கு, ஒரு உருவம் வரைந்து, தெய்வங்களை மறு பரிசீலனை செய்வது போல, இதை எல்லாம் மாற்றி அமைத்திருக்கிறார்கள் என்று லேசாக எடுத்துக் காட்டினேன்.



    நமது சித்தன் அருள் வலைத்தளத்தில் தஞ்சாவூர் கணேசன் ஐயா ஜீவநாடியில் வந்த உபதேசங்களை சித்தன் அருளிய தொகுப்பு PDF... வடிவிலுள்ள உப தேசங்களை படித்திருந்தாலும் குழப்பங்கள் வந்திருக்காது

    குருமுனி ... குறுமுனியாக மாற்றப்பட்டு உள்ளதை குறித்து குருநாதர்.... நான் ஆறடி உயரமப்பா எல்லாம் அந்த நடிகனால் வந்த வினையப்பா( சீர்காழி கோவிந்தராஜன்) ....
    அகத்தியர் வேடமேற்று நடித்ததை அடுத்து அவரைப்போலவே கற்பனை எண்ணம் கொண்டு அகத்தியர் என்றால் இப்படித்தான் இருப்பார் என்று நினைத்துக் கொண்டார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Sir, in some blogs where Agathiyar moola mantra is given, they mention saint of 4.5 feet appears in light form etc..., I think he appears in the gorm we have in our mind.

      Delete
    2. அசுரர்கள் சிவனை வழிபட்டு வழிபட்டு பலம் அதிகரித்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். நாரதரிடம் போய் மன்றாடினார்கள் தேவர்கள். நாரதர் தலை அசைத்து அசுரர்கள் இடம் போய் அவர்கள் மனதை மாற்றினார். 'அசுரர்களே சிவனை வழிபட்டு என்ன பயன் அப்பா.நான் சிவவழிபாட்டை விட்டு வெளியே வந்து உங்க கிட்ட சேரலாம் என்று நினைக்கிறேன் ' அதனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து புதிதாக அசுரர்கள் தலைவன் மாதிரி ஒரு உருவத்தை அமைத்து அதை வழிபாடு செய்யும் போது உங்கள் பலம் மேலும் அதிகரிக்கும் என்று அசுரர்கள் மனதை மாற்றி புதிய ஒரு சிலை வழிபாடு செய்ய வைத்தார் நாரதர். அசுரர்கள் பலம் நாளடைவில் குறைய ஆரம்பித்தது. எளிதாக தேவர்கள் அசுரர்களை கொன்று போரில் வெற்றி பெற்றனர் ... புராணம் கதை இது...
      புரிந்தால் சரி.

      அகத்தியர் தரிசனம் நிறைய அன்பர்கள் பெற்று உள்ளனர்.அனைவரது கருத்தும் ஒன்று போல் உள்ளது..அகத்தியரே தீயது அழித்து நல்லதை காப்பாற்றவும்.

      Delete
    3. Ramya mam நீங்கள் அகத்தியர் நேரடி தரிசனம் மணலில் பெற்றது பழைய கோவில்கள் உள்ள உருவம் தானே. அகத்தியர் தரிசனம் பெற்ற நீங்கள் எதற்காக குழம்ப வேண்டும்.

      Delete
    4. அசுரர்கள் சிவனை வழிபட்டு வழிபட்டு பலம் அதிகரித்தது. தேவர்கள் செய்வதறியாது திகைத்தனர். நாரதரிடம் போய் மன்றாடினார்கள் தேவர்கள். நாரதர் தலை அசைத்து அசுரர்கள் இடம் போய் அவர்கள் மனதை மாற்றினார். 'அசுரர்களே சிவனை வழிபட்டு என்ன பயன் அப்பா.நான் சிவவழிபாட்டை விட்டு வெளியே வந்து உங்க கிட்ட சேரலாம் என்று நினைக்கிறேன் ' அதனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து புதிதாக அசுரர்கள் தலைவன் மாதிரி ஒரு உருவத்தை அமைத்து அதை வழிபாடு செய்யும் போது உங்கள் பலம் மேலும் அதிகரிக்கும் என்று அசுரர்கள் மனதை மாற்றி புதிய ஒரு சிலை வழிபாடு செய்ய வைத்தார் நாரதர். அசுரர்கள் பலம் நாளடைவில் குறைய ஆரம்பித்தது. எளிதாக தேவர்கள் அசுரர்களை கொன்று போரில் வெற்றி பெற்றனர் ... புராணம் கதை இது...
      புரிந்தால் சரி.

      Delete
    5. குருநாதர் அகத்திய பெருமான் ஜீவ நாடியில் வந்து உரைத்ததை ஏற்றுக் கொள்ள முடிந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள் இல்லை எனில் ஏதோ ஒரு பிளாக்கில் எழுதியதை நம்பினால் நம்பிக் கொள்ளுங்கள் குருநாதரை நேரடியாக ஜீவநாடியில் வந்து வாக்கு தந்ததையும் எத்தனை தடவை ஆதாரமாக போட்டாலும் புரிந்துகொள்ளாமல் ஏற்க மறுப்பவர்களை பற்றி கவலைகள் இல்லை நாம் என்ன பேசுகின்றோம் என்ன நினைக்கின்றோம் என்பது அனைத்தும் அவருக்கு தெரியும் ஓம் அகத்தீசாய நமக

      Delete
    6. ஒன்றை நினைவுபடுத்துகின்றேன் ஹனுமத்தாசன் ஐயா அவர்களின் அரசண்ணாமலை அக்னீஸ்வரர் அரசாத்தாள் அம்மன் கோயிலில் மூன்று நாட்கள் குருநாதரின் ஜீவநாடி உத்தரவின்பேரில் தனியாக மலைமீது தங்கியிருந்த ஜீவநாடி அனுபவங்கள் நீங்கள் அனைவரும் படித்திருப்பீர்கள்...

      அதில் நள்ளிரவில் சித்தர்கள் நடக்கும் அர்த்தஜாம அபிஷேக பூஜை 120 வருடங்களுக்கு ஒரு முறை வந்து செய்யும் பூஜையை அனுமத்தாசன் ஐயா அவர்களுக்கு....

      நீ கண்ணை மூடி அமர்ந்திரு உள்ளே நடக்கும் காட்சிகள் எல்லாம் உன் மனதிற்குள் அப்படியே தெரியும் என்று மூடிய கருவறைக்குள் சித்தர்கள் முழங்கும் வேத கோஷங்கள் பரிமள வாசனை திரவியங்கள் கொண்டு செய்த அபிஷேகங்கள் அதை ஈசனும் பார்வதியும் ஏற்றுக்கொண்டது தேவாதி தேவர்கள் விஷ்ணு லஷ்மி தேவியுடன் சித்தர்கள் அனைவரும் வந்து செய்த அர்த்தஜாம பூஜை முழுவதும் அவருடைய மனக்கண்ணிற்கு காட்டிக் கொடுத்தார் குருநாதர் அகத்திய பெருமான்


      அரசண்ணாமலை ப்பயணம் குறித்து சில அகற்றி அடியவர்கள் ஹனுமத்தாசன் அய்யாவிடம் இறைவன் தரிசனத்தை பெற்று வந்துள்ளீர்கள் அவர்கள் காண்பதற்கு எப்படி இருந்தார்கள் என்ற கேள்வியை எழுப்பினர்...

      நாம் எந்த உருவத்தை நினைவில் வைத்து வணங்குகின்றோமோ அந்த உருவத்தில் தான் இறைவன் கள் வந்து காட்சி அளித்தார்கள்...

      குறிப்பாக ஹனுமத்தாசன் ஐயா அவர்களுக்கு நரசிம்மர் மிகவும் பிடித்தமான தெய்வம்...

      அவருடைய மனக்கண்ணிற்கு விஷ்ணு பகவான் நரசிம்மர் ஆகவே காட்சி அளித்து இருந்தார்....

      இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்..... நாம் சித்தர்களையும் சரி இறைவன் களையும் சரி நம்முடைய மனதில் எப்படி உருவகம் செய்து வைத்துள்ளோமே அதே ரூபத்தில் தான் அவர்களும் காட்சி கொடுப்பார்கள்...

      அகத்தியரின் விஸ்வரூப தரிசனத்தை கண்ட அடியார்களும் இங்கு உண்டு.....

      நாம் என்ன நினைத்து வணங்குகின்றோம் என்ன ரூபத்தில் நினைத்து வணங்குகின்றோம் எந்த வடிவில் வைத்து வணங்குகின்றோம் இதையெல்லாம் வைத்துதான் நமக்கு தரிசன அனுபவங்கள் கிடைக்கும்.......

      புரிந்து கொண்டால் சரி

      நன்றி வணக்கம் ஓம் அகத்தீசாய நமக🙏🏼🙏🏼🙏🏼🪷🪷🪔🪔🪔

      Delete
    7. அடியவர்கள் அனைவருக்கும் ஒன்றை மட்டும் சொல்கின்றேன் உங்களுக்கு எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சித்தன் அருள் வலைத்தளத்தை முதல் பதிவு முதல் படித்துக் கொண்டே வாருங்கள் எந்த சந்தேகமும் கேள்வியும் உங்களுக்கு வராது மிகப்பெரிய பொக்கிஷம் நமது சித்தன் அருள் வலைதளம் குருநாதர் உரைத்த ஒவ்வொரு வார்த்தையும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது மனிதர்களின் பேச்சை கேட்காதீர்கள் கேட்காதீர்கள் என்று எத்தனை தடவை சொன்னாலும் யாரும் அதை கேட்பதாக இல்லை இது வருத்தம் அளிக்கிறது சித்தர்கள் என்ன உரைத்திருக்கின்றனர் அதை மட்டும் படித்து தெரிந்தால் மனக் குழப்பங்கள் சந்தேகங்கள் அனைத்தும் விலகிவிடும் நன்றி நமசிவாய ஓம் அகத்தீசாய நமக

      Delete
  7. பஞ்சட்டி நாதா போற்றி

    ReplyDelete
  8. கேதார்காட். கங்கைக்கரை காசி கோவில் புகைப்படத்தில் சிவ சிவ என தமிழில் போட்டுள்ளதே

    ReplyDelete
    Replies
    1. காசியில் கங்கை கரையில் கேதாரேஷ்வரர் கேதார்காட்டில் இருக்கும் குமரகுரு ஸ்வாமிகள் மடத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் முருகன் ஆலயம் ஐயா...... இந்த ஆலயத்திற்கு எதிரே விசாக திருநாள் அன்று கந்தன் ஜீவநாடியில் வந்து வாக்குகள் தந்தார்.

      Delete
  9. பற்றற்ற பற்றே பற்றாகும்.
    பற்றில்ல பற்றை பற்றிடா
    பற்றில்லை உலகுக்கு.

    ReplyDelete
  10. புண்ணிய நகரமான காசி இங்கு திரும்பிய பக்கமெல்லாம் தமிழர்களை காணமுடியும் தமிழ் மடங்கள் நிறையவே உள்ளன கேதாரேஸ்வரர் ஆலயத்திலும் சிவசிவ என்று தமிழில் எழுதப்பட்டிருக்கும் கங்கை நதியில் இருந்து பார்க்கும் பொழுது பெரிய அளவாக தெரியும் இது
    சங்கர மடம் காஞ்சிமடம் காசி விசாலாட்சி கோயில் நாட்டுக்கோட்டை நகரத்தாரின் பயணிகள் தங்கும் சத்திரம் காசி விஸ்வநாதருக்கு தினமும் மண்டகப்படி பூஜை நாதஸ்வர ஒலி மேளதாளத்துடன் நடக்கும்.

    ஆந்திர மடங்கள் ஆந்திர பக்தர்கள் என காசி எந்நேரமும் தென்னிந்தியர்களால் நிரம்பி வழிகின்றது... தமிழ் தமிழக கட்டிட பணியில் ஏராளமான கோயில்கள் உள்ளன தமிழ் எழுத்துக்கள் முழுவதும் நிரம்பி வழியும் திருவாசகம் தேவாரம் கல்வெட்டுகள் ஆகவும் உள்ளது தென்னிந்திய உணவு களும் திரும்பிய பக்கமெல்லாம் கிடைக்கும்..

    காசியில் பாஷை தெரியாமல் கஷ்டப்பட நேரிடாது தமிழ்நாட்டில் இருக்கும் உணர்வை போலவே தரும்

    ReplyDelete
  11. அடுத்து...... குருநாதர் அகத்தியரிடம் ஜீவநாடி வாக்கு கேட்ட அடியவர்கள் தனிப்பட்ட கேள்விகள் மட்டுமல்லாது..... குருநாதரின் ரூபம் குறித்து ஐயப்பாடுகள் எழுப்பினர்...... ஏனென்றால் இங்கே பல விதமான ரூபங்கள் ஓவியங்கள் சிலைகள் வெவ்வேறு விதமாக அகத்தியர் என்ற பெயரில் இருக்கின்றன...

    உண்மையில் குருநாதர் எந்த ரூபத்தில் இருப்பார் லோபமுத்திரை அம்மா எப்படி இருப்பார் என்று விருப்பத்துடன் எழுப்பப்பட்ட கேள்விக்கு குருநாதர் பதில்தான் இவை...

    இந்த பதில்கள் எல்லாம் யாரும் சுயமாக எழுதவில்லை குருநாதரிடம் ஜீவநாடி வாக்கு கேட்கப்பட்டு அதன் பிறகு வெளியிடப்பட்டது


    சித்தர்கள் என்றால் இப்படித்தான் இருப்பார்கள் என்று மக்கள் நினைத்துக் கொண்டார்கள் அதன்படியே அவர்கள் சிலையை வடிவமைக்கிறார்கள்.

    எங்களுக்கு பிறப்பும் இல்லை இறப்பும் இல்லை விரும்பிய நேரம் விரும்பிய வடிவம் எடுப்போம்....

    சொல்லப்போனால் நாள் நட்சத்திரம் வயது இவற்றையெல்லாம் யாங்கள் கடந்தவர்கள்..... உடம்புதான் இல்லை ஆனால் உயிரோடு தான் இருக்கின்றோம்...


    முதலில் தன்னைப்பற்றி குருநாதர் அகத்தியர் வெளிப்படுத்த தயாராக இல்லை அன்பு காட்டி அன்பு காட்டி குருவே உங்கள் உருவம் இப்படித்தான் இருக்கும் என்று சிறு குறிப்பு தாருங்கள் என்று கேட்டபோது...

    கண்டிப்பாக எனக்கு பானை வயிறு கிடையாது முதிர்ந்த தோற்றமும் இல்லை குள்ளமான உருவமும் இல்லை யானும் அழகானவன் இளவரசனைப் போல் இருப்பேன்.... என்றுதான் குருநாதர் உரைத்திருந்தார்.

    அம்மையைப் பற்றி கேட்ட பொழுது அம்மையும் ஒரு இளவரசியே.....மெத்த படித்தவள்...... என்று கூறியிருந்தார்.

    அம்மையின் உருவம் குறித்துக் கேட்ட பொழுது..... நீண்ட தலை முடியும் கிரீடமும் கையில் தாமரை மலரும் வைத்திருப்பாள்.... விக்டோரியா மகாராணி போல் இருப்பாள்.... என்று உரைத்திருந்தார்....

    குருநாதர் விக்டோரியா மகாராணி போல் உத்தரதேவி இருப்பார் என்று உரைத்ததை சில அடியவர்களுக்கு அகத்தியர் குருநாதர் எப்படி ஒரு வெள்ளைக்காரியை உதாரணமாக சொல்லலாம் என்று குழப்பங்கள்...


    அவர்களுக்கெல்லாம் ஒன்றுதான்...

    இந்தப் பிரபஞ்சத்தில் ஈரேழு பதினான்கு உலகங்களையும் கட்டிக்காக்கும் நம் குருநாதர் அகத்தியருக்கு
    வெள்ளை இனத்தவரும் ஆப்பிரிக்க கருப்பு இனத்தவரும் மங்கோலிய இனத்தவரும் அரபு இனத்தவரும் திராவிட இனத்தவரும் ஆரிய இனத்தவரும் ஒன்றே.... எல்லாம் அவருடைய படைப்பே!!! எல்லா மதமும் ஒன்றே எல்லா மதத்தவரும் அவருக்கு ஒன்றே..... இதை நன்கு புரிந்து கொண்டாலே எப்படி அவர் தமிழ்நாட்டு தேவியரை விட்டு ஒரு வெளிநாட்டு பெண்ணை உதாரணமாக சொல்லலாம் என்ற கேள்வி எழும்பாது....

    ReplyDelete
  12. குருநாதரின் தோற்றம் குறித்து சொல்ல வந்தது என்னவென்றால் நாம் கண்டது எல்லாம் நம்மோடு போய்விடும்

    இனி வரும் தலை முறையினருக்கு குருநாதர் அகத்தியர் ரூபம் குறித்த ஐயப்பாடுகள் இருக்கக் கூடாது அந்த ஒரு நல்ல எண்ணத்தில் தான் கேள்விகளும் பதில்களும்...

    இவை அனைத்திற்கும் சரியான பதிலை கட்டியம் கூறும் இடம்தான் பாலராமபுரம்.... குருநாதரின் திருமேனியும் லோபமுத்திரை அம்மையின் திருமேனியும் கண்டாலே பல குழப்பங்களுக்கு விடை கிடைத்துவிடும்.

    குருநாதர் உருவாக்கிய அனந்தபத்மநாப சுவாமி ஆலய ராஜகோபுரத்தை கோபுரத்தில் உள்ள சிலைகளை நன்கு கவனித்தால் சில சூட்சுமங்கள் புரியும் ரூபங்களை குறித்து உண்மைகள் தெரியவரும்.


    வட்டியூர்காவு ஓவியமும் சரி மற்ற ஆலயங்களில் பொதிகைமலை உச்சியில் இருக்கும் அகத்தியர் சிலை உட்பட சிலைகளும் சரி.......அன்புடன் பக்தியுடன் செய்ததை கருணையோடு அவர் ஏற்றுக்கொண்டார்.

    குருநாதர் அகத்தியர் அன்பே வடிவானவர் கருணை மிக்கவர்..

    இன்றுவரை சில அடியவர்கள் குருநாதர் சிலையை தன் வீட்டில் வைத்து வணங்குவதற்கு பஞ்சலோகத்தில் செய்யலாமா கருங்காலி மரத்தில் செய்யலாமா என்று கேட்கும் பொழுது கூட...


    அப்பனே எங்களுக்கு இவை ஒன்றும் தேவையில்லை உங்கள் அன்பு மட்டுமே போதும் சிலைகளும் தேவையில்லை பூஜைகளும் தேவையில்லை அன்பை மட்டுமே செலுத்துங்கள் என்றுதான் இதுவரை உரைத்துக்கொண்டே வருகின்றார்....


    மண்ணில் பிடித்தாலும் சரி மஞ்சளில் பிடித்தாலும் சரி அப்பனே அகத்தியா என்று அன்போடு அழைத்தாலே அவர் மனம் இரங்கி வந்து விடுவார்.....


    உங்களுக்கெல்லாம் இது நினைவிருக்கும் என்று நினைக்கின்றேன் கண்திருஷ்டி கணபதி இப்படம் அகத்தியர் அருளியது என்ற வாசகத்துடன் கண்கள் பெரிதாக இருக்கும் கணபதியின் புகைப்படங்கள் கண்திருஷ்டிக்காக வீட்டு வாசலில் போட்டோவாக டைல்ஸ் ஆக விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகின்றது.

    இதனை குறித்தும் குருநாதர் தந்த பதில் என்னவென்றால்.... என் பெயரை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள் அப்படியாவது அவர்கள் பிழைத்துக் கொள்ளட்டுமே..... என்று கருணையோடு பதிலுரை தந்தார்..... அப்பேர்ப்பட்ட கருணை தெய்வம் நம் குருநாதர் அகத்தியர்

    அவருடைய படங்கள் சிலைகள் என வியாபாரம் செய்து வருபவர்களுக்கும் கருணையையே காட்டுகின்றார்....

    இனி புதிதாக சிலை செய்பவர்கள் ஓவியங்கள் வரைபவர்கள் வயதான தோற்றத்தில் வயிறு பெரிதாக இருக்கும் அளவில் செய்ய வேண்டாம் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகத் தான் கருத்து பதிவு செய்யப்பட்டது...

    இதில் யாருடைய தனிப்பட்ட கருத்துக்களும் இல்லை குருநாதர் அவரை குறித்து என்ன உரைத்தாரோ அந்தக் கருத்துக்கள் மட்டும் தான் இடம் பெற்றுள்ளது ....

    இதனை ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளட்டும் ஏற்றுக்கொள்ளாதவர்கள் பற்றி கவலைகள் இல்லை....

    இங்கு யாரும் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை

    குருநாதர் குறித்த தகவல்களை குருநாதர் உரைத்ததை பதிவு செய்யப்பட்டுள்ளது...

    அடியவர்களுக்கு எந்த ரூபத்தில் அன்பு காட்டி அகத்தியரை வணங்கினாலும் அவர் அன்போடு அணைத்துக் கொள்வார் இதுதான் உண்மை....

    இங்கு அப்படி உள்ளது அங்கு அப்படி உள்ளது என்று பலவித கருத்துக்கள் நேரடி சாட்சியங்கள் இருந்தாலும் தற்போது நிலையில் குருநாதர் என்ன உரைத்தாரோ அதை அடியவர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது நமது கடமை ஆகின்றது அதன்படி இந்த கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளது..

    அடியவர்கள் உங்களது விருப்பப்படி எப்படி குருநாதரை வணங்க விரும்புகின்றீர்களோ அதன்படியே வணங்கிக் கொள்ளுங்கள் ஆட்சேபனை ஒன்றுமில்லை

    குருநாதர் தன்னைப்பற்றிய உரைத்த வாக்கினை பதிவு செய்தாகி விட்டாயிற்று...

    மானகௌசிகேசர் ஆலய வாக்கில் கூட... நம் குருநாதர் அகத்திய பெருமான்

    அதனால் அப்பனே என்னுடைய வாக்குகள் எதை என்று கூற அப்பனே இன்னும் பல தலைமுறைக்கும் எதையென்று கூற எடுத்துசெல்லும் அப்பனே மனிதர்கள் திருந்துவார்கள் அப்பனே என்பதைக்கூட ....அப்பனே......



    இந்த வாக்கின் படியே குருநாதரின் உபதேசங்கள்..... நமது சித்தன் அருள் வலைத்தளத்தில் இன்னும் பல தலைமுறைக்கும் வழிகாட்டியாக அமையும்.......


    நன்றி வணக்கம் ஓம் அகத்தீசாய நமஹ 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    ReplyDelete
    Replies
    1. அருமை தீபன்.. நீங்க சொன்னதை போல் சித்தன் அருள் ஒரு பொக்கிஷம்..‌‌‌‌‌‌படிக்க படிக்க மனது பக்குவப்படும்...
      ஆசான் அகத்தீசர் பாதங்கள் போற்றி..
      அம்மா லோபமுத்ரா தாயே போற்றி போற்றி..

      Delete
  13. ஓம் அகத்தீசாய நமக நன்றிகள் அம்மா நம் குருநாதர் அகத்தியரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கிவரும் சித்தன் அருள் வலைத்தளம் ஒரு பிரபஞ்ச பொக்கிஷம்🙏🏼🙏🏼 இறைவனும் சித்தர்களும் மனிதர்களாகிய நம்மை நல்வழிப்படுத்துவதற்கு நம்மை தொடர்பு கொண்டு வழிகாட்டும் ஒரு கேந்திரமாக இருக்கின்றது. சித்தன் அருளில் வரும் குருநாதரின் உபதேசங்கள் குருநாதரின் வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றி நலமடைந்து குணமடைந்து வாழ்க்கையே மாறிப் நல்வழி பாதையில் வந்து சேர்ந்த அடியவர்களின் அனுபவங்கள் நிறையவே உண்டு.
    சித்தர்கள் நமக்காக எவ்வளவு பாடுபடுகின்றனர் எப்படி எல்லாம் நம்மளை நேர்வழிப்படுத்த வழிகாட்டுகின்றனர் அதை நமக்கு உணர்த்த குருநாதர் அகத்திய பெருமான் அனுமதித்த சித்தன் அருள் இன்னும் பல தலைமுறையினரையும் நல்வழிப்படுத்தும் நன்றி நமஸ்காரங்கள் ஓம் அகத்தீசாய நமக ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா தாயார் சமேத அகஸ்திய குருவே போற்றி🙏🏼🙏🏼🪔🪷🪷

    ReplyDelete