​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 29 June 2022

சித்தன் அருள் - 1155 - அன்புடன் அகத்தியர் - காசியில் பொது கேள்வி/பதில் வாக்கு!










வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

நம் குருநாதர் புண்ணிய பூமியான காசியில் கேதார்காட்  ல் உள்ள திருப்பனந்தாள் குமாரசுவாமி மடத்தின் நிர்வாகத்தில் கீழுள்ள தெய்வப் புலவன் அய்யன் திருவள்ளுவர் சன்னதியில் சில அகத்திய அடியவர்கள் எழுப்பிய பொதுவான கேள்விகளுக்கு பதில் வாக்குகள் தந்தார் அவற்றைப் பற்றிய தொகுப்பு..

குருவே சரணம்!!! குரு பாதம் சரணம்!!! அகத்திய மாமுனியே உங்கள் பாதாரவிந்தங்கள் போற்றி!!! போற்றி !!!

குருவே!! காசி விசுவநாதர் ஞானவாபி சிவலிங்கம் குறித்து சில சர்ச்சைகள் சந்தேகங்கள் உள்ளன நீங்கள் எங்களுக்கு அதனைப்பற்றி வாக்கு உரைக்க வேண்டும்!!!

அப்பனே இதையன்றி கூற அப்பனே இன்னும் ஏராளம் அப்பனே அங்கே அடங்கி உள்ளது என்பேன் அப்பனே.... அதை வணங்கி வணங்கி அனைத்தும் அப்பனே அப்பனே இவையென்றும் பல கர்மாக்கள் விலகி ஓடியது... அதனை வைத்து எதை என்று கூற அதை தொட்டாலே அனைத்தும் வெற்றிதான் என்று இருந்தது... ஆனாலும் மாய மனிதர்கள் இதை அறிந்து நிச்சயமாய் மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டாம் என்று எண்ணி அதனை அப்படியே மறைத்து விட்டனர் அப்பனே.

ஆனால் யான் சொன்னேன் முன்னே. அப்பனே இன்னும் ஏராளமான அப்பனே ஈசனே எழுப்புவான் என்பேன் அப்பனே. அவனுடைய தரிசனங்களை நிச்சயம் அப்பனே மிரளத்தக்க இருக்கும் என்பேன் வரும் காலங்களில் சொல்லிவிட்டேன். 

குருவே!! சிறிது நாட்களுக்கு முன்பு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா சில ஆய்வு  முடிவுகளைஅதிகாரப்பூர்வமாக வெளியிட்டது அதில் பறக்கும் தட்டை ஒன்றை கண்டுபிடித்ததாக அறிவித்திருந்தது.... வேற்று கிரக வாசிகள் உண்மையில் இருக்கின்றார்களா??? நீங்கள் எங்களுக்கு தெளிவைத் தாருங்கள்

அப்பனே இன்னும் அப்பனே இவை போன்றே அப்பனே மறு உலகமும் உண்டு என்பேன். குட்டி குட்டி மனிதர்கள் அலைந்து திரிந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் அப்பனே அதனையும் வரும் காலங்களில் எளிதாக உரைத்து விடுவேன்..யான். 

குருவே!!! அவர்கள் இந்த பூமிக்கு வந்து செல்கின்றார்களா???? 

அப்பனே இவையன்றி கூற நிச்சயம் வந்து தான் செல்கின்றார்கள் அப்பனே.

குருவே !!! அந்த மறு உலகத்தில் வாழும் மனிதர்கள் எப்படி நல்லவர்களா? பக்திமான்களா?? அவர்களுடைய குணாதிசயம் என்ன??

அப்பனே இவையென்று உணர அப்பனே.. அவர்கள் நல் மனிதர்கள் என்று தான் யான் சொல்வேன். அப்பனே.

குருவே மக்களனைவரும் முருங்கை கீரையை அடிக்கடி உண்ணவேண்டும் என்று கூறியிருந்தீர்கள் அதை பச்சையாக அரைத்து அருந்துவதா? அல்லது வேகவைத்து உணவில் சேர்த்துக்கொள்வது  நல்லதா??

அப்பனே பச்சையாக உண்ணுவது அதைவிட அப்பனே நீரில் இட்டு காய்ச்சி (சூப் போல) குடிப்பது சக்தி வாய்ந்தவை.

குருவே இந்த உலகத்தில் அனைத்து உணவுகளும் குடிநீர் உட்பட மாத்திரை மருந்துகள் உட்பட அனைத்தும் பிளாஸ்டிக் இல் தான் கிடைக்கின்றது தற்போதைய உலகத்தில் அதை தவிர்க்க முடியாத அளவிற்கு போய்விட்டது. இந்த காரணத்தினால் மனித உடலிலும் பிளாஸ்டிக் பொருள் சேர்ந்து விடுகின்றது ரசாயன பொருள்கள் கலந்த நச்சு பிளாஸ்டிக் உடலில் கலந்த நச்சு கழிவுகளை எப்படி வெளியேற்றுவது??? நாங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன கூறுங்கள்!!!

அப்பனே இதையன்றி கூற பல வாக்குகளிலும் யான் தெரிவித்துவிட்டு விட்டேன். கோரைக்கிழங்கு என்னும் மூலிகையை உட்கொள்ள நச்சுக்கள் அனைத்தும் வெளியேறிவிடும்.

அவைமட்டுமில்லாமல் அப்பனே நீ இப்போது கேட்டாயே.......!!!!! முருங்கைக்கீரை அதன் சாற்றை அனுதினமும் அப்பனே வெறும் வயிற்றில் அருந்தி வந்தாலே போதுமானது அனைத்தும் வெளியில் வந்துவிடும்.

குருவே சிறு சிறு பெண் குழந்தைகள் இந்த பிளாஸ்டிக் பொருட்களை  உபயோகப்படுத்துவதால் பிளாஸ்டிக் ரசாயன நச்சுப் பொருட்கள் உடலில் சேர்வதால் அவர்களுக்கு ஹார்மோன் கோளாறு ஏற்பட்டு சிறுவயதிலேயே சீக்கிரம் பருவத்தை அடைந்து விடுகின்றார்கள்... தேவையான வளர்ச்சி பெறுவதற்கு முன்னரே வயதிற்கு வந்து விடுகின்றார்கள் இதிலிருந்து பிரத்தியோகமாக பெண்குழந்தைகள் ஹார்மோன் கோளாறுகளிலிருந்து குணமாகி இயற்கையான முறையில் அவர்கள் வளர்ச்சி பெற வழிகாட்டுங்கள்!!

அப்பனே இதையன்றி அப்பனே நல்முறையாக.... மண் பானையில் இருக்கும் நீரை குடித்தாலே அப்பனே  நல்முறையாகவே மாறும்..

அப்பனே அதுமட்டுமல்லாமல் சிறிது நல் விதமாகவே புற்று மண்ணை நல் விதமாகவே அவ் பானையில் இட்டு... தண்ணீரை அருந்தி வந்தாலே அப்பனே போதுமானது என்பேன் அப்பனே!!! அப்பனே அனைத்து வியாதிகளிலிருந்தும் விடுதலை!!!

குருவே முன்பெல்லாம் ஆற்று நீர் குளத்து நீர் ஏரிநீர் என்று குடிநீரை குடித்து வந்தனர் ஆனால் இன்று நவீன காலத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் என்று பல வகையான ரசாயனங்கள் பயன்படுத்தி நீரின் உண்மையான தன்மையையே மாற்றி ரசாயனங்கள் கலந்த கலவைதான் நீரென்று குடித்து வருகின்றோம்..

ரசாயனங்கள் சேர்க்காமல் நீரை அதன் தன்மையை மாற்றாமல் இயற்கையாக சுத்தப்படுத்துவது எப்படி??

அப்பனே இன்னும் ஏராளம் ஏராளம் அப்பனே உண்டு அப்பனே!! மண் பானை நீரில் வேப்பிலையும் அப்பனே ஆலமரத்தின் இலைகளும் அப்பனே அரச மரத்தின் இலைகளும் அப்பனே பின் இன்னும் அப்பனே ஏராளம் அப்பனே புல் (அருகம்புல் நன்னாரி வேர் விலாமிச்சை வேர் வெட்டிவேர்) பூண்டுகளையும் இன்னும் ஏராளம் இயற்கையில் முளைக்கின்ற அப்பனே பின் இலைகளை (துளசி, வில்வம், அத்தி) அதில் இட்டாலே அப்பனே அனைத்தும் மாறிவிடும்.

குருவே உங்களுடைய திருவுருவ சிலையை கருங்காலி மரத்தில் செய்தால்... அந்த சிலைக்கு அபிஷேகம் செய்ய முடியுமா?? உலோகத்தில் உள்ள சிலைகளுக்கு அபிஷேகம் செய்யும் பொழுது ஒன்றும் ஆகாது ஆனால் மரத்தால் செய்யப்பட்ட சிலைக்கு அபிஷேகம் செய்யலாமா???

அப்பனே பின் இதையன்றி கூற அறிய!!!  அப்பனே பின் ஏன் அபிஷேகம் செய்ய வேண்டும்??? 

குருவே சிலையென்று ஒன்றிருந்தால் அபிஷேகம் செய்யவேண்டுமல்லவா அதனால் தான் குருவே!! 

அப்பனே இதைத்தான் பல முறை சொல்லி விட்டேன். அப்பனே!!!! 

அன்பு காட்டு!!! என்று அப்பனே .

குருவே அன்பாலே உங்களையே வணங்கி வருகின்றோம்.... ஆனால் நீங்கள் இதற்கு தெளிவாக எங்களுக்கு கூறுங்கள். 

அடியவர்கள் உயிருக்கு உயிராக நினைத்து வரும் ஒரு வார்த்தை ""அகத்தியன்"" இந்த வார்த்தை நிஜமானது யுகம் கடந்தது!!! நிரந்தரமானது!!!

அமர தத்துவ பொருளான அகத்தியன் என்ற ஒரு வார்த்தையில் இருக்கும் உண்மை தங்களுடைய திருஉருவப்படங்களில் அகத்தியர் இப்படித்தான் இருப்பார் என்ற கற்பனையில் வரைந்த  அச்சிடப்பட்ட உங்களுடைய உருவங்கள் சிலைகளில் உண்மை தன்மை இருக்கின்றதா என்பதை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். 

உங்கள் பெயரையே உயிருக்கு உயிராக நேசித்து வரும் அடியவர்கள் உங்களைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள மனம் உருகி தவித்துக் கொண்டிருக்கின்றோம்.

எடுத்துக்காட்டாக அகத்தியன் என்ற பெயரில் உள்ள படங்களை இப்பொழுது உங்கள் முன்னே காட்டுகின்றோம் இதில் எந்த புகைப்படம் உங்களை ஓரளவாவது உண்மை தன்மையை காட்டுகின்றது தயவுகூர்ந்து அருளுங்கள் குருநாதா!!!

ஏனென்றால் அடியவர்கள் அனைவருக்கும் உங்களுடைய உண்மையான ரூபத்தை காண வேண்டும்.. அதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ள எங்களுக்கு வழிகாட்ட வேண்டும்!! 

(அகத்தியர் அடியவர் ஒருவர் தன்னுடைய மொபைல் போனில் இருக்கும் மூன்று விதமாக இருக்கும் அகத்தியர் படத்தை ஜீவநாடி முன்பாக காட்டினார்) 

அப்பனே இதில் எவை வேஷமில்லாததை தேர்ந்தெடுத்துக்கொள்!!!

குருவே உங்கள் சிரசில் உள்ள கீரிடம் எப்படி இருக்கும்... பெரியதாகவா? சிறியதாகவா? 

அப்பனே நீ என்ன நினைக்கிறாயோ அதன்படியே செய்து கொள் அப்பனே யான் என்னவென்று கூறுவது அப்பனே!!!!

குருவே இக்கேள்வி உங்களை எப்படி எப்படியோ காட்டி அதையே பின்பற்றி வரும் உண்மையான அகத்தியர் அடியவர்களுக்கு உண்மையானதை விளக்க விரும்புகின்றோம்

அப்பனே எதையென்று.... ஆனாலும் தெரிவித்து விடுகின்றேன்.

அழகாக கீரீடம் என் மேல் இடு!!! அப்பனே அழகாக அப்பனே ஈசனின் நாமத்தை இடு!! அப்பனே அவைமட்டுமில்லாமல் அப்பனே என் நெற்றியில் அழகாக சந்தனத்தை இடு... அப்பனே அப்படியெல்லாம் யான் உரைப்பேனா என்று நீ எதிர் நோக்குகின்றாய்... ஆனால் அப்பனே சொல்லியும் விட்டேன் அப்பனே.

ஆனாலும் அப்பனே இதற்கெல்லாம் மேல் அன்பு ஒன்றே!!! எந்தனுக்கு பிரதானமானது!!! 

குருவே நீங்கள் இப்படி தான் கூறுவீர்கள் ஆனால் உங்களுடைய அன்பை நாங்கள் அறிவோம் இருந்தாலும் நீங்கள் கூறுங்கள்

அப்பனே இன்னும் ஏராளமாகச் சொல்கின்றேன் அப்பனே எதை எதை என்று கூற அப்பனே அப்பனே பின் யான் காலத்திற்கேற்ப என்னை மாற்றிக் கொண்டே இருப்பேன்!!! அப்படிப்பட்டவனுக்கு எவ்விதம் அப்பனே !!! யான் குறிப்பிட???

நீண்ட தாடியும் வயதான தோற்றமும் அப்பனே பெருவயிறும் அப்பனே 
அவையெல்லாம் பொய்யே என்பேன் அப்பனே!!

யான் முற்றும் துறந்த ஞானி!! ஆனால் பானை வயிறை போல் இருப்பேனா ??என்ன!!

குருவே.இன்னும் ஒரு சந்தேகம் உங்கள் உருவத்தில்.... படம் வரைவதற்கு ஏதுவாக.... சினம் கொள்ள வேண்டாம் குருவே....உங்களை ஓவியமாக வரையும் பொழுது உங்கள் திருவதனத்தில் பொன்னுதடுகள் சிறிதாக இருக்குமா?  பெரியதாக இருக்குமா?? 

அப்பனே இப்பொழுதுதான் யான் சொன்னேன் அப்பனே... அனைத்தும் தெரிந்தவனுக்கு அப்பனே எப்படி இருக்கும் அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே.....அழகானவன்!!! அவ்வளவு தான்!! 

மிக்க நன்றி குருவே ஏனென்றால் இந்த பிரபஞ்சம் முழுவதும் நிறைந்து  இருக்கின்றீர்கள் உங்களைப் பற்றிய படங்கள் உருவங்கள் மட்டும் நூறு விதமாக உள்ளது இதில் சிறிதளவாவது உண்மையாக தெரிந்து கொண்டு உங்களைப் பற்றிய படங்களை ஓவியமாக வரைய விருப்பப்படுகின்றோம்

அப்பனே. இவைமட்டுமல்ல இன்னும் பல சந்தேகங்களை நீ எழுப்புவாய் என்பேன். 

அப்பனே இவையன்றி கூற( ஓவியம்) நீ செய்வாய் அப்பனே. அது தான் உண்மை. யானே முன் நின்று வழி நடத்துவேன் அப்பனே.

குருவே மக்கள் அனைவரும் கடலில் இருந்து எடுக்கப்படும் உப்பைதான் அனைவரும் உணவில் சேர்த்துக் கொண்டு வருகின்றார்கள் தற்போது மருத்துவர்களாலும் பரிந்துரைக்கப்பட்டு பிரபலமடைந்து வரும்  தற்போது பாறை உப்புக்கள்( ராக் சால்ட், இந்துப்பு) இதில் எந்த உப்பு நல்லது???

அப்பனே இரண்டுமே தீமையைத் தான் ஏற்படுத்தும் அப்பனே!!! இச்சைகளை தூண்டும் என்பேன் அப்பனே.
அதனால் அப்பனே சிறிது அப்பனே சிறிதளவாவது அப்பனே ருசிக்காகவே இட்டுக் கொள்ளவது நல்லது என்பேன்.

குருவே மனிதர்களாகிய நாங்கள் எங்களுடைய இச்சைகளை கட்டுப்படுத்துவது எப்படி 

அப்பனே சொல்கின்றேன் உப்பு புளி காரம்  இனிப்பு, மாமிச உணவுகள் இவற்றை படிப்படியாக குறைத்து வந்தாலே இச்சைகளும் கட்டுப்படும் என்பேன் அப்பனே.

குருவே - சுவடிகள் குறித்து பலவிதமான சந்தேகங்கள் மக்களிடையே உள்ளது அவற்றைப் பற்றி விளக்கம் தாருங்கள்!!! 

அப்பனே இவையன்றி கூற ஜீவநாடி என்பது ஈசன் பின் பிரம்மா பின் விஷ்ணு அப்பனே இவர்கள் மூன்று பேரும் சேர்ந்து அனுமதிக்க வேண்டும். அப்பனே சித்தர்களின் அருளாசிகளோடு தேர்ந்தெடுக்கப்படும் அப்பனே.

உண்மையான சுவடிகள் பல ஆலயத்திற்கும் செல்லும் அப்பனே ஏன் ஈசனே வரவழைப்பான் அப்பனே!!! மாந்திரீக மாய சுவடிகள்... ஈசனுடைய ஆலயத்திற்கு வர முடியாது. ஏன் இவ் காசிக்கும் வரமுடியாது. அப்பனே.... அப்படியே வந்தாலும் அவையெல்லாம் செயலிழந்து போகும் அப்பனே.

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே எதை என்று கூற அப்பனே எவனாவது பின் அப்பனே சுலபமாக நிச்சயமாய் இறைவனிடத்தில் காசுக்காக படிக்காமல் பின் நல் மனதாக சொல்கின்றார்களா நிச்சயம் இல்லை அப்பனே அப்பனே ஏமாற்றுகாரர்கள் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்பதை கூட யான்.

அனைத்தும் காசுக்காகவே அப்பனே எதையென்று கூற அப்பனே நிச்சயம் இப்பொழுது காண்ட நாடிகள் என்று சொல்கின்றார்களே அவையெல்லாம் மனிதர்கள் எழுதியவை சொல்லிவிட்டேன் அப்பனே.
நம்பி நம்பி ஏமாந்து அப்பனே அதனால்தான் உண்மை நிலையைச் சொல்கின்றேன் அப்பனே..

காசுக்காகவே பலவற்றையும் உரைத்து அவந்தனும் கர்மாக்களை சேர்த்து விடுகின்றான் அப்பனே... இவர்களுக்கும் கர்மா சேர்ந்து விடுகின்றது அப்பனே

அப்பனே எங்கு தர்மங்கள் இருக்கின்றது அப்பனே சொல்லுங்கள். அவை மட்டும் இல்லாமல் நியாயங்கள் இல்லையப்பா.

ஆனாலும் இதையன்று கொண்டு உணர்ந்து யாங்களும் முயற்சி செய்து கொண்டே இருக்கின்றோம்.

ஆனாலும் அதில் கூட எங்களையே பின் நினைத்துக்கொண்டு எங்களையே வழிபட்டுக் கொண்டு நிச்சயம் நல்லோர்களும் கெட்டு பின் எதையன்று கூற பின் அவந்தனும் கெட்டு விட்டே சென்று கொண்டே இருக்கின்றான்.

எவ்வாறு நலமாகும்? அப்பனே !!!

உங்களுக்கே தெரியும் எப்படி எதையன்று கூற யார்?? யார்?? எதனை எதனை பயன்படுத்தி ஆனாலும் மர்மங்கள் பல ஒளிந்து உள்ளது இவ்நாடியில் அப்பனே. 

பல நாடிகள் இருந்தாலும் அவற்றை எல்லாம் எப்படி இயக்குகின்றார்கள் என்பதையும்கூட ஆனாலும் எதை என்று கூற மாந்திரீகம், தாந்திரீகம் இதையன்றி கூற கையில் வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள் அப்பனே இறைவனிடத்திலே.

அவையெல்லாம் ஈசன் பொருத்துக்கொண்டே இருக்கின்றான்.

அப்பனே உங்களுக்கும் தெரியாத பல விஷயங்கள் உண்டு அப்பனே... 

மக்கள் பல பல சுவடிகளை நாடிச் சென்று ஆனாலும் அப்பனே மாந்திரீகத்தால் இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது கூட மக்களுக்கு தெரியவில்லை பின் சுவடியில் மாந்திரீகத்தை வைத்து பார்க்கும் பொழுது காசுகளை கொடுத்தால் அவ் காசுகளையும் அவர்கள் பலத்த மாந்திரீகத்திற்கு செலவு செய்கின்றார்கள் அப்பனே அதனால் இதையன்றி கூற அப்பனே அவ் காசுகளும் அந்த வழியே செல்வதினால் பல பல வினைகள்!!!!

அவந்தனுக்கும் இவர்களுக்கும் ஏற்படுகின்றது அப்பனே அவ் மாந்திரீகத்தால் அழிவு தான் ஏற்படுமே தவிர ஒன்றும் நடக்கப்போவதில்லை பலப்பல சுவடிகளை நாடிச் சென்று அவர்கள் கேட்டதை எல்லாம் கொடுத்து அவர்கள் சொல்லுவதையெல்லாம் செய்து ..... எவ்வாறு என்பதையும் கூட அப்பனே எதையென்று கூற .....

ஆனால் நிச்சயம் அவ் மாந்திரீகத்தை பயன்படுத்துவர்கள் மட்டுமல்லாமல் அவர்களுக்கு உதவி செய்தவர்களுக்கும் கர்மங்கள் சேரும் எவையென்று கூற....

அப்பனே இவைதான் அப்பனே நடந்து கொண்டிருக்கின்றது சொல்லிவிட்டேன் அப்பனே

ஆனால் அதன் மூலம் அழிவு என்பதைக்கூட தெரியாமல் போய்விட்டது மனிதனுக்கு.அப்பனே!!! அதனால் அப்பனே அதனால் தான் நம்பி நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைமையை யான் ஏற்ப்படுத்தி உங்களிடத்திலே யான் விட்டுவிட்டேன் அப்பனே. 

நீங்கள் சரியாக எதை நினைக்கின்றீர்களோ அதைச்செய்யுங்கள். போதுமானது என்பேன் அப்பனே. அதனால் யான் சொல்லுவதற்க்கு ஒன்றும் இல்லை அப்பனே. நல்முறையாக என் பக்தர்களாக இருந்துவிட்டுச்செல்லுங்கள் அப்பனே போதுமானது.

என்னை அப்பனே நம்பியோரை யான் கைவிட்டதாக சரித்திரம் இல்லை அப்பனே..... 

யானே முன்னின்று அப்பனே அனைத்தும் நல்விதமாகவே வழிநடத்திச்செல்வேன் .அப்பனே. 

இனியும் மாற்றங்கள் உண்டு அப்பனே. அனைவருக்கும் என்னுடைய நல்லாசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

12 comments:

  1. என் வாழ்க்கை சிக்கல் தீர எப்போது அருள் புரிவார்..நீண்ட நாட்கள் எதிர்பார்த்து காத்திருந்து சோர்ந்துவிட்டேன்.
    🌷அகத்திய பெருமான் திருவடிகள் சரணம் 🙏

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. அகத்தியமே சத்தியம்!
    சத்தியமே அகத்தியம்!!
    எம்பெருமானே அகத்தீசா அனைவருக்கும் அருள்செய்வீர் ஞானக்கடலே!!!
    அகத்தியர் திருத்தாள் போற்றி.

    ReplyDelete
  4. இக் கவிதையையே இச் சம்பவத்தில் பாட தோன்றுகிறது


    அசைந்தாடும் மயில் ஒன்று கண்டால் – நம் –
    அழகன் வந்தானென்று – சொல்வதுபோல் தோணும்!

    எங்காகிலும் – எமதிறைவா! இறைவா! எனும் மனநிறை அடியவரிடம்
    தங்கு மனத்துடையான்! – அருள் பொங்கும் முகத்துடையான்! – ஒரு –
    – பதம் வைத்து மறு பதம்தூக்கி – நின்றாட – மயிலின் இறகாட – மகர குழையாட
    – மதிவதனமாட – மயக்கு விழியாட – மலரணிகளாட – மலர்மகளும் – பாட –
    இது “கனவோ நனவோ!” – என – மனநிறை முனிவரும் மகிழ்ந்து கொண்டாட

    ReplyDelete
  5. அகத்திலே அகமாகி நின்று
    அகத்தின் அகம்பாவத்தை
    அகத்திலே நின்று அகற்றியா
    அகத்தின் ஈசேன் அகத்தி(ஈ)சனை
    அகத்தில் அகமாக்கி அகமகிழந்து
    அகத்தி(ஈ)சனை வணங்கிட
    அகமகிழ்வரே அகத்தின் (ஈ)சனே

    வாழ்க வளமுடன்
    நற்பவி நற்பவி நற்பவி


    ReplyDelete
  6. Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!
    Om Agatheesaya Namaha !!!

    ReplyDelete
  7. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  8. Nice info.. pls ask can we use triphala powder as tooth powder in general reading

    ReplyDelete
  9. Hello sir. Please tell me from which jeeva naadi this 'vaaku' is given. who is the naadi reader? Kindly share more details on all this please. It will be very useful

    ReplyDelete
    Replies
    1. நாடி வாசிக்க தொடர்பு கொள்க!
      திரு.ஜானகிராமன்,
      CELL NO: 8610738411
      [வாரத்தில் புதன், வியாழன், வெள்ளி என மூன்று நாட்கள் மட்டும் நாடி வாசிக்கப்படும்.
      ​SMS செய்து (உங்கள் பெயர், ஊர், செல் நம்பர்) முன் பதிவு செய்ய வேண்டும்.]

      TO READ NAADI - CONTACT:-

      SRI.JANAKIRAMAN
      CELL NO:8610738411
      [ONLY ON WEDNESDAY/
      THURSDAY/FRIDAY]
      SEND SMS STATING(YOUR NAME,
      PLACE, CELL NO) FOR REGISTRATION.

      Delete
  10. அகத்தியர் ஐயா போற்றி போற்றி ஐயனே கங்கைக்கரை காசி கேதார்நாத் கேதார்நாத் திருநெல்வேலி உச்சிஷ்ட கணபதி அகரம் ஆலங்குளம் போன்ற இடங்களில் உள்ள சூட்ஷாங்களை பற்றி கூறும் எம்பெருமானே பஞ்சட்டி ஸ்தலத்தின் மகிமை களை பற்றி கூறவும் ஐயா

    ReplyDelete
  11. இந்த வாக்கில்கூறிய படி அகத்தியரின் திருவுருவம் ஓவியமாக வரையப்பட்டு விட்டதா? அப்படி இருந்தால் பதிவிடுமாறு வேண்டி கொள்கிறேன்.
    ஓம் அகத்தீசாய நமஹா.

    ReplyDelete