​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 4 July 2022

சித்தன் அருள் - 1156 - அன்புடன் அகத்தியர் - நீலகண்டேஸ்வரர்/ சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில். இருகூர். ஒண்டிப்புதூர், கோயமுத்தூர்










26/6/2022  அன்று. குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம் :ஸ்ரீ சுயம் வர பார்வதி தேவி சமேத நீலகண்டேஸ்வரர் / மீனாட்சியம்மன் சமேத சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில், இருகூர். ஒண்டிப்புதூர். கோயமுத்தூர். 

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!

அப்பனே இவ்வாலயம் மிகவும் சிறப்பு!!!!

சிறப்பு என்பதால் அப்பனே இங்கு வந்து வழிபட்டவர்கள் ஏராளம் ஏராளம் என்பேன் அப்பனே!!
அவர்களுக்கெல்லாம் இவ் ஈசன் நலன்களே நலன்களையே சேர்த்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே. 

யானும் பலமுறை இத்திருத்தலத்திற்கு வந்தேன் திரியும் பொழுது அப்பனே!!! 

இதனால் ஈசன் பின் சுயம்புவாகவே எழுந்து எழுந்து.. பல ரிஷிமார்களும் நிச்சயம் எதையென்று கூற..பின் வரும் வரும் என்று கூட அப்பனே இன்னும் மேன்மைகள் தான் பெறும்!!! இவ்வாலயம் என்பேன்.

பின் இவ்வாலயத்தை முடித்திட்டு சித்தர்கள்...அனைவரும் யாங்கள்  வருவோம் நிச்சயம்..பின் ஈசனை பார்க்க...... ஏனென்றால் ஈசன் எவ்வளவெல்லாம் உதவி செய்திருக்கிறான் இங்கிருப்பவர்களுக்கு.... பின் ஏனைய மனிதர்களுக்கும் இன்னும் அப்பனே பின் இங்கு உள்ள அனைவருக்குமே.. பின் வரும் காலங்களில் கூட வெற்றிகள் வெற்றிகள் எதன் மூலம் என்பதை எதையென்று கூற இன்னும் மேற் சொன்னவாறு பலன்கள் வந்து கொண்டே இருக்கும்.

ஏனென்றால் அப்பனே பின் வாழ்ந்த பல ஆண்டுகளுக்கு முன்பு இவனை தொழுது தொழுது அப்பனே பல பல வழிகளிலும் ஞானத்தை பெற்று நன்றாகவே வாழ்ந்து வந்தார்கள்.

ஆனாலும் காலப்போக்கில் அப்பனே இவ் ஈசனை மறந்து விட்டதால் அப்பனே பல மனிதர்களின் சொத்தும் அப்பனே பல பல வகையான ஆனாலும் கேட்டதெல்லாம் கொடுக்கும்  இவ் ஈசன் அப்பனே.... சொல்கின்றேன் அப்பனே இன்னும்.

அப்பனே ஏழை என்று சொல்பவர்களுக்கும் இயலாத நிலையும் இங்கு வந்து வந்து அப்பனே பல மனிதர்கள் சொத்துக்களையும் அப்பனே பல பல நில புலன்களையும் அவை மட்டுமில்லாமல் பல பணத்தையும் கூட அப்பனே ஈசன் கொடுத்திருக்கின்றான் ஒரு காலத்தில்!!! நன்றாக வாழட்டும் என்று கூட....

ஆனாலும் வர!!...வர!!... அவர்தம் சந்ததிகள் அப்பனே வந்து வந்து அப்பனே எதை என்று கூறாமலே இறைவனை மறந்து வாழ்ந்து வருகின்றதனால் நிச்சயம் எதையென்று கூறாமலே...அவ் சொத்துகளும் பணங்களும்...தேய்மானித்து அவை மட்டுமில்லாமல் பின் கஷ்டங்கள் பட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றனர்  இவ் ஊரை சுற்றி!!!!

இதனால் இவ் ஈசனை நன்முறையாகவே பின் அனுதினமும் வந்து வணங்கி சென்று சென்று கொண்டு வந்தாலே போதுமானது பின்அவர் நிலைமை மாறுபடும் என்பேன் அப்பனே. இதனால் தான் புண்ணியம் இதையென்று கூற அறியாமலே இதனால்தான் காலப்போக்கில் மிகவும் சக்தி வாய்ந்த கோயில்களை இடித்தும் எதை எதையென்று கூற தெரியாமலும் அப்பனே மறந்து விட்டனர்.

அப்பனே பொய்யான உலகத்தில் அப்பனே திரிந்து இன்ப சுகங்களுக்காகவே வலம் வந்து கொண்டிருக்கின்றனர் அப்பனே அது மட்டுமில்லாமல்.....

அப்பனே.... கரிகால சோழன் அப்பனே!!!!  பின் எவையென்றும் இதையும் கூட ... அப்பனே நல்முறையாகவே பல பல வழிகளிலும் கூட அப்பனே பின் நீர் நிலைகளை கட்ட ஆரம்பித்தான்.... ஆனாலும் இதற்கு எதிர்ப்பு பல வகையிலும் அப்பனே கரிகால் சோழனையும் கூட அப்பனே அழிக்க முயன்றனர்.. பல மனிதர்கள் அப்பனே!!!

எதையென்று கூற பின் வெளிநாட்டோர் இதையன்றி இவற்றினின்றும் அறியாத  , மீண்டும் மீண்டும் எங்கு செல்வது?? ஏது செய்வது?? என்றெல்லாம் கரிகால் சோழனுக்கு தெரியவில்லை......

ஆனால் எப்படியாவது பின் நிச்சயம் இவந்தன் கூட ஈசனுடைய பக்தனே என்று தான் யான் குறிப்பிடுவேன். சொல்லிவிட்டேன்.

ஆனாலும் எப்படியாவது நிச்சயம் பல மனிதர்களுக்கு உபயோகிக்க வேண்டுமாறு செய்ய வேண்டும் என்பதைக் கூட எண்ணி இதனையும் அறிந்து அறிந்து அறிந்து இவந்தனும் பின் தேடினான் தேடினான் எங்கேயாவது எதையென்று கூற பின்.. சக்தி மிகுந்த புலவர்கள் பின் சித்தர்கள் ரிஷிகள் இருக்கின்றார்களா என்று கூட.....

ஆனாலும் இவற்றை அறிந்த என் சீடன் புலத்தியனோ பின்.. திருத்தலங்களாக திருத்தலங்களாக திருத்தலங்களை வலம் வந்து கொண்டிருக்கும் பொழுது... நிச்சயம் கரிகால சோழனை... நிச்சயம் பின் அவன் மனதை மாற்றி பின் என் சீடன் புலத்தியனும் மனித ரூபத்தில் பின் அப்பா... இதையென்று எதனை தேடுகின்றாய்?? என்று கூட....

ஆனாலும் கரிகாலசோழனுக்கு.. பின் புரிந்து விட்டது புலத்தியனின் நிலைமைகள்!!! இவந்தன் பெரியவன்.... இதையன்றி கூற பல வித்தைகள் கற்றவன்.

ஆனாலும் நிச்சயம் ஓர் அடியார் போல இருக்கின்றானே!!! சிவனடியார் என்று கூறி கரிகால் சோழன் அனைத்தையும் உரைத்தான்.

எப்படி?? இவையெல்லாம் செய்வது?? பல மனிதர்களுக்கு இனிமேலும் பின் அவை மட்டும் இல்லாமல் கலியுகத்தில் கூட நிச்சயம் அழிவுகள் வந்து கொண்டே இருக்கும் அவற்றையெல்லாம் நிச்சயம் சீரமைக்க வேண்டும்.

இன்னும் வரப் போகின்ற காலங்களில் நிச்சயம் மனிதனின் பின் நீரே பின் அனைவரையும் அழித்து விடும்.

நீரே ஒரு பின் பல மாசுகள் கலந்த இன்னும் என்று ஏராளம் தூசிகள் இதை என்று பல மருந்துகள் கலந்து மனிதன் குடிப்பான் இதனால் என்ன செய்வது என்று கூட....

இதனால் ஏனென்றால் அக் கரிகால் சோழனுக்கும்.... நிச்சயமாய் உணர்ந்தான் ஏனென்றால் அவனும் பல பல பல பின் ஆண்டுகளாக தியானங்கள் ஈசன் மீதே!!! இதனால் தான் அவனுடைய பெயரும் நிலைத்து நின்றது.

ஆனாலும் ஈசனை!! நினைக்க பின் கஷ்டங்கள் வரும் என்பதை கூட அனைவரும் உணர்ந்ததே!!!! 

ஆனாலும் அவன் பெயர் அழியாது என்பதை கூட குறிப்பிடத்தக்கது!!!

இதனால்தான் ஈசனை பிடித்துக் கொள்ளுங்கள் கடைகாலத்தில் சொல்கின்றேன் அப்பனே!!!
மறவாதீர்கள் எதை என்று கூற......

அதனால் இன்னும் அவ் கரிகால்சோழனை பின் எதையென்று அறியாமலே என் சீடனே நிச்சயம் யான் பலங்கள் கொடுப்பேன்... ஆனாலும் என்னிடத்தில் என் குருவானவனிடத்தில் பின் கேட்டு அறியலாம் இவையெல்லாம் என்று கூட... 

ஆனாலும் இவற்றை உணர உணர பின் ....அகத்தியன் தெரியுமா?? என்று புலத்தியன் கேட்டதற்கு.... கரிகாலசோழனே........ தபதபவென்று!!! கண்ணீர் மல்க!! மல்க !!பின் புலம்பி அழுது விட்டான்!!!

ஆனாலும் புலத்தியனோ!!! 
ஏனப்பா!!! இப்படி அழுகின்றாய்???? 
பின் அனைத்தும் தெரிந்தவன் நீ!!!! 
அனைத்து.... எதையென்று கூற அரசனும் நீ!!!..... 

இதனால் குபு!! குபுவென்று கூட கண்ணீர்.. மல்குகின்றதே!!!!! எதனால்?? என்று கூட..... 

கரிகாலசோழன்.... அகத்திய முனிவரா!!!!!! பின் அவர்தனை யான் மனதில் நினைத்துக் கொண்டே இருக்கின்றேன்!!!!

அவந்தன் அன்பு மிகப்பெரியது!!!! எந்தனுக்கு!!!....

ஆனால் அவரை நினைத்து நினைத்து பின் எதனையென்று பார்த்தால் ஆனால் சிவன் தான்....

சிவனிடத்தில் சென்று என்றெல்லாம்  மனம் அவன் சொன்னது போலவே இருக்கும் அதனால் தான் யான் பல திருத்தலங்களுக்கு சென்று இருக்கின்றேன்.

ஆனால் நிச்சயம் பின் யான் பார்க்க வேண்டும் என்று கூட......

ஆனாலும் நிச்சயம் எவை என்று கூற மனதில் நினைத்தாலே ஓடோடி வந்து விடுவான் என் குருநாதன் என்று இதனை பின் கூற பின் புலத்தியன் நிச்சயமாய் நினை என்று கூற....

ஆனாலும் சரி யான் மக்களுக்கு நல்லதாக செய்ய வேண்டும் என்று விரும்புகின்றேன் செய்ய விரும்புகின்றேன் அதனால் நிச்சயம் பின் அகத்தியன் வருவான் என்பதற்கு இணங்க கரிகார் சோழனும் நிச்சயம் ஈசன் திருத்தலங்களுக்கெல்லாம் பல பல வழிகளிலும் ஞானத்தை பெற்று தியானங்கள் செய்து கொண்டிருக்க நிச்சயமாய் இவ்வாலயத்திற்கும் வந்தான் ஒரு முறை!!!!

நிச்சயம் எவை ?எதை?.... ஆனாலும் மறைக்கப்பட்டது....

அகத்தியன் எதை என்று கூறாமலே நிச்சயம் இவன் வந்த பொழுது பின் நிச்சயமாய் யான் முன் தோன்றினேன் கரிகால சோழன் முன்னே!!!!

பின் அவந்தனும் என்னை பின் அணைத்துக்கொண்டு எதையென்று கூற...... 

முனிவரே!!!!.... உன்னைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றேன் ஆனாலும் நீ!!! எப்படி?? எதை என்று கூற எதனை நம்பி?? என்னிடத்தில் வந்தாய்?? என்று கூட.... எதையென்று கூட.... 

அன்பு என்றாலே எந்தனுக்கு உயிர்!!!!!!

இதையன்றி கூற இதனால் பின் இவ்வுலகத்தில் சாதிக்கக் கூடியது என்னவென்றால் அன்பின் மூலமே!!!! அதனால் நிச்சயம் ...

எதை வேண்டுமென்று சொல்!!!! என்று கூட....

பின் கரிகால் சோழனோ இதையன்றி.... நிச்சயமாய் வரும் காலங்களில் நிச்சயமாய் கலியுகத்தில் முனிவரே!!!! என்னென்ன நடக்கப் போகின்றது என்று கூட யான் அறிவேன்!!! ஈசன் ஞானத்தால்....

ஆனாலும் உந்தனுக்கே அனைத்தும் தெரியும் அதனால்...யான் மனதில் நினைத்ததை நீயே கூறு என்று கூட ...

நிச்சயம் நீ நீர் நிலைகளை ஏற்படுத்துவாய் பல மனிதர்களுக்கும் எதை எவற்றிலிருந்து வருவது என்று கூட நல்முறையாகவே நீ தாராளமாகவே ஏற்படுத்தலாம்!! உன்னை யாரும் அசைக்கவும் முடியாது!!! நிச்சயம் எவை என்று கூற ஈசனே கனவில் வந்து செப்புவான் உந்தனுக்கு!!!

இப்படி செய்தால் நிச்சயம் அனைவருக்கும் நல்லது!!
ஆனால் உன்னை சிந்திக்க வைப்பார்கள்!!! எப்படியெல்லாம் இக் கரிகால சோழன் கட்டினான் இப்படியெல்லாம் கட்ட முடியாது என்று கூட யோசிப்பார்கள்...... மனிதர்கள்!!!!

அதுபோல் நினை!!!!

நிச்சயம் பின் அதிவிரைவிலே அதிவிரைவிலே என்றால் என்னும் சில மாதங்களிலே இப்படி இப்படி செய் அப்படி செய் என்றெல்லாம் நிச்சயம் பின் ஈசன் செப்புவான் என்பதற்கிணங்க.... 

அதனால் இங்கே பல தவங்கள் செய்தான்..அவ் அரசன். 

அவையன்றி கூற அதனால் நிச்சயம் இங்கேயே உறங்கினான் பல நாட்கள்!!
உறங்கி உறங்கி.....  

சொப்பனத்தில் வந்தான் ஈசன்.. பின்.... இது போல் கட்டினால் நிச்சயம் உந்தனுக்கு ஈடு நீயேதான் என்று!!!!!

உன் புகழ் பேசும்!!!!

அவைமட்டுமில்லாமல் அழியாது!!!....

பல மனிதர்களுக்கு உதவி செய்யும் என்று கூறி நிச்சயம் பின் இதையென்று அதேபோல பன்மடங்கு கட்டி விட்டான் கரிகாலசோழன்.

இப்பொழுது கூட அவந்தன் கட்டியதை  நிச்சயம் இனிமேலும் யாரும் கட்ட முடியாது(கல்லணை)... என்பதற்கணங்க..... அதுபோலத்தான் நிச்சயம் இவற்றில் இருந்து உணர உணர தெரிந்து கொள்ளுங்கள்!!!!!

இவ் ஈசன்  பலம் மிகுந்தவன்!!! சக்தி மிகுந்தவன் ஆனாலும் இதையன்றி இன்னும் சொல்கின்றேன்.....

ஒரு அடியவன் இங்கே இருந்தான் பின் அடியவன் போல் அவந்தனும்....ஞானி ஆகிவிட்டான்..... இப்பொழுது கூட பின் சமாதியாகி நிற்கின்றான்.

ஆனால் உடம்பு எதையென்று கூற ஏற்கவில்லை.பின் உயிர் இருக்கின்றது!!!

அவந்தன் இங்கே மனமுருக இங்கே பல மனிதர்களுக்கு நல்லதை சொல்லிக் கொண்டிருந்தான்!!! ஆனாலும் இவற்றின் மீது பின்  ஈசன் இருக்கின்றான்!!! ஈசன் இருக்கின்றான்!!!! என்றெல்லாம்!!!!

ஆனாலும் இதனையுமறிந்த பல மக்கள் பின் இவனிடத்தில் வந்தார்கள்!!

வந்ததுமே எதையென்று ஆனாலும்... பல மக்களுக்கு நன்மைகளை செய்வித்த்தான்.... ஆனால் இதனை பயன்படுத்தி பல மக்களும் நன்றாகவே வாழ்ந்தார்கள் இதனைச் சுற்றி வட்டார பகுதிகளில் அனைவருக்கும் காசுகள்  புரண்டோடியது!!!! புரண்டோடியது!!!!

அதனால் மென்மேலும் உயர்வுகள் பெற்றனர்.

ஆனாலும் நிச்சயமாய் பின் ஒருவன் எதையென்று கூட ஆனாலும் இதனை அறிந்த மிக்க செல்வம் செல்வாக்கு படைத்தவர்கள் எப்படி?? இவர்கள் எல்லாம் இப்படியெல்லாம் நன்றாக வாழ்கின்றார்கள்..... கீழானவர்கள் மேலானவர்களாக ஆகிக் கொண்டே போகின்றார்களே என்று உணர்ந்து...பின் அவந்தனுக்கு எதனை என்று கூற அவந்தனை ஜமீன்தார் என்றும் சொல்லிவிடலாம்.......

ஆனாலும் அவந்தனுக்கும்... இவ் விஷயங்கள் காதுகளில் எட்டியது!!!

இதனால் இங்கு வந்தான்!!

இங்கு வந்து பின் அவ் ஞானியை... பின் எட்டியும் உதைத்தான்!!!

இப்படி எல்லாம் சொல்லக்கூடாது!!!! எதற்காக நீ மனிதர்களை நல்வழிப்படுத்துகின்றாய்??

எங்கேயாவது ஓடிடு!! ஓடிப் போய்விடு!!! என்று கூற...

இல்லை இல்லை ஈசன் இங்கே தான் இருக்கின்றான்!!!!

இங்கே தான் இருக்கின்றான்!!!

யான் ஓட மாட்டேன்!! என்று கூற....

இதனால் நிச்சயம் ஈசன் இருக்கின்றானா??????

எங்கே?? காட்டு!!!..... என்று கூற....

இதனால் எதை என்று கூற மறுக்காமலே அவந்தனும்... ஆனால் அவனிடத்தில் உள்ள அடியாட்களும் இவனைப் போட்டு மிதித்து மிதித்து கால்களால் எதை என்று கூற செருப்புகளாலும் அடித்தனர்.

ஆனாலும் இவ் ஞானியோ...எவையென்று கூட..... 

ஈசா!!!!!!!!!!!!!! 
ஈசா!!!!!!!!!!!!!!....... மனமிரங்கவில்லையா!!!!!!
முருகா!!!!!!!!!! 
பார்வதி தேவியே!!!!!!!!!!!!!!
வேங்கடவனே!!!!!!!!!!!!!!!!
மனமிரங்கவில்லையா!!!!!

வாருங்கள்!! உங்களையே நினைத்துக் கொண்டு யான் மக்களுக்கு நன்மைகளை  செய்து கொண்டிருக்கின்றேனே!!

எதனால் எப்படி இவந்தன் இறைவன் இல்லை என்று சொல்கின்றானே!!!!!! இவந்தனுக்கு ஏதாவது பதிலடி கொடு என்று.....

ஆனாலும் ஈசனும் பார்த்துக் கொண்டிருந்தான்!!! 
பின் இவையென்று கூட விஷ்ணுவும் பார்த்துக் கொண்டிருந்தான்... அதனால் விஷ்ணுவும் இங்கே தான் இருக்கின்றான் எதை என்று கூற....

இதனால் இன்னும் எவை எவை என்று கூட.... பார்வதி தேவி!!!

ஆனாலும் திரும்பவும் அவனை மிதித்து மிதித்து பின் சங்கிலியால் அடித்து உதைத்தனர்.......

இதனால் கண் கலங்கினான்!!= ஈசன்!!!!!!

விஷ்ணுவும் கண் கலங்கினான்!!!!!!

எதனால் என்பதைக்கூட பின் பார்வதி தேவியே!!!! வந்து....... 

பின் கோபத்தோடு...ஈசனே!!!!!!! 

உன்னையே நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது உன் பக்தன் இப்படி எல்லாம் வேதனைப்படுகின்றானே இது நியாயமா?? என்று கூற...

நிச்சயமாய் எதை என்று பின் உடனே இரங்கினான் ஈசன்....எதையென்று கூற பின் இதனால்.....

அனைவரையும் நில்லுங்கள் என்று கூற!!!

ஆனாலும் நீ யார்???? நில்லுங்கள்!!!! என்று கூறுவதற்கு???????

என்று அவ் செல்வாக்கு மிகுந்தவர்கள்... என்று கூற..

யான் நிச்சயம் பின் யானும் ஒரு மனிதன் தான்!!!

ஆனால் ஒரு மனிதனை இப்படி போட்டு அடித்து மிதித்து இதையன்றி கூட... எவ்வாறு?? இவர்களுக்கெல்லாம் நலன்களாகும் என்று கூட...

அப்பனே இதையெல்லாம் ஆனாலும் எவற்றின் மூலம் வந்தவை தெரிந்து கொள்ள!!! தெரிந்து கொள்ள!!! ஆனாலும் அப்படியெல்லாம் பின் யானும் சாதாரண மனிதனப்பா!!!!!

இதையென்று எண்ணி ஆனாலும் இவந்தனை ஏன் இப்படி போட்டு அடிக்கின்றீர்கள் என்று கூட..

ஏன் இப்படித்தான் நாங்கள் அடிப்போம்..... உன்னையும் எதையன்றி கூற நியாயம் பேச வந்தால்  உன்னையும் சேர்ந்து அடிப்போம் என்று கூறிவிட்டார்கள்.

ஆனாலும் அப்படியா!!!!!

பின் அடியுங்கள் பார்ப்போம்!!

என்று கூற..... நிச்சயம் வந்து எதை என்று கூற பின் காலில் அணியும் காலனியை எடுத்து வீசினான் ஈசன் மீதே!!!!! 

பின் ஈசன் அப்படியே தடுத்து நிறுத்தினான்... 

பின் வீசிய கை அப்படியே நின்றிற்று!!! (நின்று விட்டது) அனைவரும் அசையாமல் நின்று விட்டனர்.

இதனால் பின் ஒருவருக்கொருவர் வாய்கள் பேசவில்லை எதனால் என்பது கூட அப்படியே நின்று விட்டார்கள்!!

இதனால் என்னவென்று கூறுவது!?? கூறுவது என்பதை கூட அவ் ஞானியவன் எழுந்து நின்றான்!! அப்பொழுது கூட மறைமுகமாக வந்து விஷ்ணு பகவான் எதை என்று கூற இங்கே வந்து விட்டான் கண்கலங்கி  எதையென்று கூற... இப்படி மிதிபடுகின்றானே என்று கூட!!!!!

அதனால் இது என்று அறியாத அவ் ஞானி....யான் ஈசா..... எதையென்று கூட உணர்ந்து கொண்டான் ஈசனை!!!! ஈசனை உணர்ந்து கொண்டு பின்.....

ஈசனே!!!!! என் அன்பில் உருவானவனே!!!!!

எப்படி இப்படி வந்து விட்டாய்??!!!!!! இதனால் தான் நான் ஏங்கிக் கொண்டிருந்தேன்!!! பல வருடங்களாக!!! ஆனால் நீயே வந்து விட்டாய்!!!

ஆனால் யான் ஒன்றை குறிப்பிடுகின்றேன்.... நிச்சயம் இங்குள்ள மனிதர்களுக்கு நீ நல்லதை செய்ய வேண்டும்!!!!

என்னால் முடிந்தவரை யான் நல்லதை செய்து விட்டேன்!!!! பல மனிதர்களுக்கு நல்லதை செய்து இப்படி செய்தால் பின் நன்றாக இருக்கும் அப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்றெல்லாம் பல உரைகள் உரைத்து விட்டேன்.

ஆனாலும் மனிதன்  இதையன்றி கூற சில பேர் கடைப்பிடித்தனர் !!!

சில மனிதர்கள் கடைப்பிடிக்காமலே சென்று விட்டனர்!!

ஆனால் எதற்கு? ஏது? என்றெல்லாம்.

ஆனாலும் ஈசனே!!!!! யான் கண்ணீர் மல்க உனக்காக வாழ்ந்து உனக்காகவே உயிர் துறக்க போகின்றேன்.
அதனால் நிச்சயம் எந்தனுக்கு ஓர் உதவி செய்ய வேண்டும். 

பக்தா!!!!!  பக்தா!!!!! 
கண்ணீர் மல்க ஈசனும் கேள் பக்தா!!!! என்று கூற.... 

நிச்சயம் நீ இங்கேயே தங்கிவிட வேண்டும்...

எவ்வாறு பலன்கள்... என்று ஈசனிடம் பல பல மனிதர்கள் உன்னைத் தேடி வருவார்கள் அவர்களுக்கெல்லாம் என்னென்ன தகுதிகள் உடையதோ!!! பின் நிச்சயம் எது எது தடங்கலாக இருக்கின்றதோ??? அதை எல்லாம் நீக்கி அவர்களுக்கு நிச்சயமாய் நீ செய்ய வேண்டும்!!! என்று கூற. 

ஆனாலும் நிச்சயம் பக்தனே உனக்காக மனம் இரங்குகின்றேன்!!! நிச்சயம் யான் இங்கே வாழ்ந்து விடுகின்றேன்.

அதனால் நிச்சயம் இங்கு வருபவர்களுக்கு யான் நிச்சயம் பல அனுகிரகங்கள் செய்வேன். பல  பல தாமதமான விஷயங்களையும் பல பல வழிகளிலும் பின் மணமாகாத பின் ஏழை எளியோருக்கும்... இன்னும் அவ் எதையெதையென்று கூறாத அளவிற்கும் அனைத்து வெற்றிகளும் தருவேன் என்று கூட ஆனாலும் ஈசனும் சொல்லிவிட்டான்..

அவ் பக்தனோ!!!!!  இல்லை!! இல்லை!! 

சத்தியம் செய்து கொடு!!!!

ஈசா!!!  நீ!! 

இங்கேயே தங்கி விட வேண்டும் என்று சத்தியத்தையும் வாங்கிக் கொண்டான்.

நிச்சயம் யான் இங்கே தங்கி விடுவேன் என்று கூட அழகாக ஈசன் இங்கே தங்கி விட்டான் சுயம்பாகவே!! (சுயம்புலிங்கமாக) சொல்லி விட்டேன். 

இதனையென்று கூட அதனால்.... அப்பொழுது தான் மறைமுகமாக விஷ்ணுவும் பின் பார்த்துக் கொண்டிருந்தான் எதை என்று கூட....

அப்பொழுது ஈசனும் இதனை நோக்க பின்... பக்தனையும் பார்க்க வந்தான்!! 

ஆனாலும் இவற்றின் மூலம் என்ன அறிவது எதனை என்று கூட.....பின் கோவிந்தா!!! கோவிந்தா!!!
நீயும் வந்து விட்டாயா!!!!

நீயும் ஆனாலும் உன்னையும் நினைத்துக் கொண்டிருந்தேன் நீயும் பின் ஈசனே இங்கு அமர்ந்தான்!!!! நீயும் இங்கு அமர்ந்து விடு என்று சொல்லிவிட்டான்.

இதனால் நிச்சயம் அவந்தனும் அமர நிச்சயம் இவ்வாலயம் எதையன்றி கூற... இன்னும் சிறப்புகள் இக்கலியுகத்தில் இன்னும் பல மாற்றங்கள் காணப் போகின்றது.

அதிவிரைவிலே நிச்சயம் கும்பாபிஷேகம் நிச்சயம் நடந்து நடந்து யாங்கள் சித்தர்கள் நிச்சயம் வருவோம்...எதையென்று கூற ஆனாலும் அப்பனே இன்னும் இன்னும் ஏனைய மனிதர்கள் எதை எதையென்று கூற தேவர்கள் நிச்சயம் வந்து ஆசீர்வதிப்பார்கள் என்பேன்.

இதனால் இத்திருத்தலத்தின் சிறப்பை சொல்லி விட்டேன்.

எதனால் எதனையென்று கூற.... இன்னும் ஈசன் உயிரோட்டமாகவே இருக்கின்றான் இத்திருத்தலத்தில் சொல்லிவிட்டேன்.

இதனையுமென்று அறியாத இப்படியெல்லாம் செய்து கொண்டு.... நலன்களை கருதி இன்னும் ஏராளம் ஏராளம் வெற்றிகள் காணப் போகின்றார்கள்!!! இவ்வூரை சுற்றி!!!!!

அதனால் நல் முறையாக பக்தியோடு இறைவனை காண வந்தால் இவ் ஈசன் அனைத்தும் கொடுப்பான்.

ஏனென்றால் சத்தியத்தை செய்திருக்கின்றான்!!! எதை என்று கூற அப்படி எவை என்று கூறாமலே!!!.....

இன்னும் அவ்  ஞானியவன் இங்கேயே பின் சமாதியாகவே(ஜீவசமாதி) கொண்டிருக்கின்றான் என்பதைக் கூட......

அதனால் இங்கேயே தங்கி நிற்கின்றான் இன்னும் பல மனிதர்கள் இங்கு வந்து கொண்டு தான் செல்கின்றார்கள்....

அதனால் அவர்கள் மனதில் நினைத்ததை என்ன வேண்டுமோ?? அதனை கொடுத்து தான் அனுப்பிக் கொண்டிருக்கின்றான் இதுதான் அவனுடைய வேலை இன்னும் பல மக்களுக்கு!!!!!

இதனால்தான் இதனை சுற்றி வட்டார பகுதிகளில் பணம் புழங்கும்!!! வாழ்வார்கள் நல்லோர்கள்!!

ஆனால் நிச்சயம் பின் இறைவனை வணங்காவிடில் நிச்சயம் அவர்களை கீழே தள்ளிவிடப்படுவார்கள்!! அதனால் என்னென்ன சூட்சமம் இன்னும் பின் வாழ்ந்திட்டு.... இதனால்தான் ஆங்காங்கு எதையென்று கூற  இத் திருத்தலத்தில்  இன்னும் மேன்மைகள் உண்டு என்பதற்கிணங்க.... இன்னும் யான் சொல்லிக் கொண்டே தான்  போய்க்கொண்டிருகின்றேன்!!!!.... இதனை நிச்சயம் மனிதன் பயன்படுத்தி கொண்டால் சரியாக....

ஆனால் உண்மை நிலை!!!! ஆனாலும் இவையெல்லாம் சொல்லும் பொழுது தீயவர்களும் இப்படித்தான் வருவார்கள்..... இவையெல்லாம் பொய்!! இவையெல்லாம் பின் பொய்யானது ஏற்காது மனம் என்று கூட... மனிதன் சொல்லுவான்..!!

அப்பனே திருந்திக் கொள்ளுங்கள் அப்பனே!!!

எதையென்று கூறாமலே நிச்சயம் பலபல திருத்தலங்களில் அப்பனே... பின் சக்திகள் இன்னும் காணப்படுகின்றது!!!! அதனை எதிர்க்கவே மனிதன்... பொய் சொல்லி !!! அவை பொய்.!!. அது பொய் !! என்று சொல்லிக்கொண்டு மனதை மாற்றி தீய வழிகளில் அழியச் செய்வான்!!!

நம்பி விடாதீர்கள்!!! ஏமாந்து விடாதீர்கள்!!!!

இது கலியுகம் அப்பனே!!!
உண்மைக்கு நிச்சயம் மதிப்பில்லை என்பேன்!!

அதனால்தான் யாங்களே இவ் முடிவை எடுத்து எடுத்து.. இன்னும் சீரமைத்துக் கொண்டே இருக்கின்றோம்!!!!
பல பல வகையிலும் பல பல திருத்தலங்களிலும்!!!!

உன்னால் நீ நிச்சயம் புண்ணியம் செய்து இருந்தால் பல திருத்தலங்களை நாடுவாய் ஈசனே உன்னை அழைப்பான்!!!!!!
என்பதற்கிணங்க!!!!

ஆனால் புண்ணியம் செய்யவில்லையென்றால் அப்பனே.... இப்பொழுதெல்லாம்  பின் இறைவன் ஒன்றும் செய்யப் போவதில்லை!!! மாந்திரீகத்தின் மூலம் அனைத்தும் நடக்கும் என்று கூட போய் சுற்றிக் கொண்டிருக்கின்றான்!!!

ஆனால் நிச்சயம் அவ்மாந்திரீகம் அவனையே அழித்துவிடும் அவன் பரம்பரையையும் அழித்து விடும் சொல்லிவிட்டேன்.

இதனைக் கூட..... புசுண்டன்(காகபுஜண்டர்) அழகாகவே சொல்லிவிட்டான்!!!!

அதனால் இறைவனை நாடுங்கள் நிச்சயம் எதையன்றி கூற....

அவ் மாய வித்தையில் விழுந்து விட்டால் இறைவன் நிச்சயம் இறைவன் அவ் மாயையை எதை என்று கூற ஆனாலும் இறைவன் மனிதர்களைப் படைத்துக் கொண்டே இருந்தான் பல மனிதர்களை புத்தியுள்ளவனாக!!!!

படைத்து படைத்து ஆட்சி செய்து.... மனிதர்களுக்கு இறைவன்.

ஆனாலும் ஒரு தீய!!!! எதையென்று கூற.... தீய சக்தி படைத்தவனே எதை என்று கூறாமலே அப்பனே

இறைவா!!! நீ நல்லோர்களை படைத்து கொண்டு இருக்கின்றாய் ஆனாலும் யான் தீயவர்களை படைத்து தீய சக்திகளில் ஆட்படுத்தி உன்னால் நல்லோர்களாக ஆக்கியவர்களையெல்லாம் தீமைக்கு அழைப்பேன் என்று கலியவன்(கலிபுருஷன்) உத்தரவிட்டு அழைத்துச் செல்கின்றான்.

அதனால் பின் தீயவர்களை எதை என்று கூற பின் நல்லோர்களை அழைத்துக் கொண்டே சென்று கொண்டிருக்கின்றான்.

அதனால் அப்பனே வர வர பக்திகள் பின் கம்மியாகும் என்பேன் அப்பனே!!! எதனையென்று  உணர்வதற்கு....

ஆனாலும் இதையன்றி கூற இன்னும் மேன்மைகள் பின் இதையன்றி கூற... எங்களால் நிச்சயம் எங்களைச் சுற்றி வருபவர்களை சிறிது சோதனைக்குள்ளாக்குவோமே!!!  தவிர... நிச்சயம் சாதனையும் படைப்போம் அனைத்தையும் கொடுப்போம் அப்பனே!!!

புண்ணிய பூமி..... ஆனால் தரித்திர மனிதனோ.... இறைவன் இல்லை இல்லை என்றெல்லாம் சொல்லிட்டு சொல்லிட்டு அப்பனே அவையெல்லாம் கீழே போய்க் கொண்டிருக்கின்றது.

நிச்சயம் எங்கள் நிச்சயம் எங்களுடைய அருளாசிகளால் உயர்த்துவோம் அப்பனே!!

பொய்கள் அப்பனே பக்தி பக்தி என்று கூட திரிந்து அலைந்து வந்து கொண்டிருக்கின்றான் அதை செய்கின்றோம் இதைச் செய்கின்றோம் என்றெல்லாம்!!!

நம்பி ஏமாந்து விடாதீர்கள்!!!

இறைவன் ஒருவன் இருக்கின்றான் அப்பனே!!

இறைவன் மீது பக்தி செலுத்தினால் அப்பனே  எவையென்று கூற இறைவன்.... இக்கலி யுகத்தில் நேரே வர தயாராக உள்ளான் அப்பனே!!!!

அதனால்தான் சொல்கின்றேன் அப்பனே நம்பி விடாதீர்கள்!!!
ஏமாந்து விடாதீர்கள் அப்பனே!!! 

ஒவ்வொரு முறையும் அப்பனே பல சித்தர்களும் இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

யானும் இப் புவியுலகத்தில் சுற்றிக்கொண்டே தான் இருக்கின்றேன்....

ஆனால் அவனவன் செய்த லீலைகள் இருக்கின்றதே அப்பனே!!!

அப்பப்பா!!!!!! வேதனைக்குரியது அப்பனே!!!!!

எதனையென்று கூற பொய் சொல்லி நடித்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!! அதைச் செய்கின்றேன், இதைச் செய்கின்றேன் என்றெல்லாம் பணத்திற்காக ஆசைப்பட்டு பணம் தான் அனைத்தும் என்று செய்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

அது நிலையானது இல்லை அப்பனே!!!!
அது தன்னையும் அழித்து விடும் தன்னை சேர்ந்த அனைவரையும் அழித்துவிடும்.... கடைசியில் குடும்பமே இல்லாமல் போய்விடும் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்..அப்பனே. 

இதனால் உயர்ந்த எண்ணத்தோடு இறை ஆசிகள் பெற்று.... இறை அனுகிரகங்களை இன்னும் ஞானங்களாக பெற்று பெற்று திருத்தலங்களுக்கு சென்று கொண்டிருந்தால் அங்கு இருக்கும் சக்திகள் அழகாகவே பாதுகாக்கும் என்பேன்.... எத்தொந்தரவும் வராது என்பேன்..அப்பனே!! 

இதனையும் கூட தெரிவித்து விடுகின்றேன் அப்பனே.... அவை மட்டுமில்லாமல் அப்பனே...இவையிவை என்று கூற...... 

ராஜராஜ சோழனும் இங்கே வந்து பல வழிகளிலும் வழிபட்டுச் சென்று தான் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!

அவன் பெரிய அரசன் அப்பனே!!!!!
அவனைப் பற்றி பல மனிதர்களுக்கும் தெரியும். அவனே எதையும் நம்ப மாட்டான்...
ஆனால் !!ஈசன் பக்தன்!!!!!

ஈசனை விட இவ்வுலகத்தில் ஏதுமில்லை அப்பனே!!!

ஆனால் இன்றுள்ள மனிதர்கள் அப்பனே ஏதுமில்லாதவனே அப்பனே பின் புத்தி உள்ளவனா???

எதையென்று கூற அதனால் தான் அப்பனே பின் சொன்னேன்....

நேற்றைய பொழுதிலும் உணர்ந்து இருப்பீர்கள் அப்பனே!!!!

இவையென்று கூற.... 

அனைத்தும் தெரிந்தவன் கோமாளி!!!!

அப்பனே பின் எதையென்று கூற.... தெரியாதவன் அறிவாளி!!!!

இதனை சரியாக ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலே போதுமானது அப்பனே!!!!

அனைவருக்கும் ஆசிகள் தந்துவிட்டு தந்துவிட்டு அப்பனே மேன்மைகள் பெறச் செய்வேன் அப்பனே!!

என் பின்னே வந்தவர்களை நிச்சயம் யான் காப்பேன்!!! 

ஆனால் என் பெயரை சொல்லி ஏமாற்றி வருபவர்களை யான் நிச்சயம் காப்பாற்றவும் மாட்டேன் அவர்களுக்கு நிச்சயம் ஆசிகளும் வழங்க மாட்டேன் அப்பனே!!!

எவ்வாறு அப்பனே பொய் சொல்லி எதையன்றி கூற அப்பனே அனைத்தும் தனக்காகவே கேட்கின்றான்.

உண்மை நிலையை தனக்காக கேட்டால் நிச்சயம் இறைவன் என்றுமே ஒன்றுமே செய்ய மாட்டான் ....எதையெதை என்று கூற..... 

அதனால் அப்பனே இன்னும் மேன்மைகள் மேன்மைகள் உண்டு உண்டு என்பேன் அப்பனே.

எவையென்றும் கூற அறியாத அளவிற்கும் கூட அப்பனே ஈசன்!!!!! எதையென்று கூற......சாதாரணமாக.... வரவில்லை.!!!...

ராஜராஜ சோழன் அப்பனே ஈசன் எதை என்று கூற நினைத்துக் கொண்டே இருக்கும் பொழுது அப்பனே பின் இங்கு இத்திருத்தலம் இருக்கின்றதே.... அங்கு சென்றிட்டு வா!!!! என்று ஈசனே கனவில் உரைத்ததற்காக இங்கே வந்து வழிபட்டான் அப்பனே!!

இதனால் பல வழிகளிலும்  இங்கே... இதனைப் பார்த்து பல வழிகளிலும் அப்பனே பல மனிதர்களுக்கு நன்மைகள் செய்துள்ளான் அப்பனே.

அதனால் மென்மேலும் நிச்சயம் உயர்வுகள் பெறும் அப்பனே...

இத்திருத்தலம் இன்னும் உயர்வுகள் பெற்று இங்குள்ள மனிதர்கள் இன்னும் உயர்ந்து வாழ்வார்கள் அப்பனே நல்விதமாகவே!!!

ஆனாலும் அப்பனே வரும் இக் கலியுகத்தில் தொந்தரவுகள் அப்பனே பல பல வழிகளிலும் தாய் தந்தையர்கள் எதனை என்று கூற ஆனால் முன்னொரு காலத்தில் அப்பனே பின் வழிபட்டார்கள். அதனால் வழிபட்டு வழிபட்டு இன்னும் கூட அவர்கள் பரம்பரைகள் அழியாமல் இருக்கின்றது.

ஆனால் அப்பனே இதையன்றி ஆனாலும் அவர்கள் தம் ஆனால் பழைய வழியில் பரம்பரையாக வந்தவர்கள் நிச்சயமாய் பின்... இவ் ஈசனை நிச்சயம் மறந்து விட்டார்கள்.

திரும்பவும் சொல்கின்றேன்.. இவ் ஈசனை!! காண வாருங்கள்!!!!!!!

நிச்சயம் கண்டுகொண்டால் இன்னும் மேன்மைகள் தான் உண்டாகும் என்பேன் அப்பனே.

இதனால் இன்னும் சிறப்புகள்!!! எதனை எதனை என்று கூட... 

அதனால் அப்பனே பல அரசர்களும் இங்கே வந்து வணங்கி வணங்கி பல வழிகளிலும் ஞானத்தை பெற்று கொண்டனர் அப்பனே சொல்லிவிட்டேன்!!

அப்பனே!! நன்மைகளாகவே முடியட்டும்....

அப்பனே!!! அதிவிரைவிலே இத்திருத்தலம் கும்பாபிஷேகம்..யான் பெற வைப்பேன் அப்பனே!!!

நிச்சயம் யாங்கள் சித்தர்கள்.. இருந்து வழி நடத்தி அதிவிரைவிலே உயர்த்திடுவோம் இத்திருத்தலத்தை அப்பனே!!!

நல்லோர்கள் அப்பனே நல்லோர்கள் வாழ  வேண்டும் என்பதற்காகவே..அப்பனே யான் இப்புவியுலகிலே அலைந்து கொண்டிருக்கின்றேன் அப்பனே....

நன்று!!!! ஆசிகள்....!!!

மற்றொரு தலத்தில் உரைக்கின்றேன் அப்பனே!!!

குருவே சரணம் குருபாதம் சரணம்

அவ் ஞானியவர் யார் அவருடைய பெயர் கூறுங்கள்!!!! 

அப்பனே இவையன்றி கூற யான் அவந்தனை ஞானி என்று தான் குறிப்பிடுவேன் சொல்லிவிட்டேன் அப்பனே ஆசிகள்!! ஆசிகள்!!

ஆசிகள் பெற்றுச் செல்லுங்கள் அப்பனே எதை எதை எப்பொழுது சொல்ல வேண்டுமோ அப்பொழுதுதான் யான் உரைப்பேன் அப்பனே...
நன்று!!!  இவ்வாலயத்தை முதலில் கும்பாபிஷேகம் செய்வித்து மற்றவை எல்லாம் உரைக்கின்றேன் அப்பனே!!!!!...

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ சுயம் வர பார்வதி தேவி சமேத நீலகண்டேஸ்வரர் / மீனாட்சியம்மன் சமேத சௌந்தர்யேஸ்வரர் திருக்கோயில். 
இருகூர். ஒண்டிப்புதூர். 
கோயமுத்தூர்.  மாவட்டம்.

+91-422-2632452, 94881 55164

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை மணி 5 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

ஆலயம் தற்போது திருப்பணிகள் நடந்து கொண்டிருக்கின்றது.

கும்பாபிஷேகம் விரைவில் நடைபெற உள்ளது. 

ஆலயம் பற்றிய விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய எண் 9790638022 சௌந்தர்ராஜ் சிவம்.

கோவை - இருகூர் ஸ்ரீநீலகண்டேஸ்வரர் கோயில்

பழைமைச் சிறப்பு!

கோவை இருகூரில் சுமார் 3000 வருடப் பழைமை வாய்ந்த ஆலயத்தில் இருந்தபடி, தன்னை நாடி வருவோருக்கு ஞானத்தையும் யோகத்தையும் தந்தருள்கிறார் ஸ்ரீநீலகண்டேஸ்வரர். கோயம்புத்தூரில் இருந்து இருகூர் செல்லும் பேருந்தில் சென்றால், கோயிலை அடையலாம்.

மேற்குப் பார்த்த ஆலயம்!

பிரமாண்டமான ஆலயத்தில், சுயம்பு மூர்த்தமாகக் காட்சி தருகிறார் ஸ்ரீநீலகண்டேஸ்வரர். கிழக்குப் பார்த்தபடி உள்ள 108 ஆலயங்களைத் தரிசித்தால் என்ன பலன் கிடைக்குமோ அந்தப் பலன், மேற்கு நோக்கி அமைந்திருக்கும் ஒரு சிவாலயத்தைத் தரிசித்தால் கிடைக்கும் என்கின்றனர் பெரியோர். இதோ... இந்த இருகூர் நீலகண்டேஸ்வரர் கோயில், மேற்குப் பார்த்தபடி அமைந்துள்ள சிறப்புப் பெற்ற திருத்தலம்!

மூவேந்தர் வழிபட்ட கோயில்!

சேர, சோழ, பாண்டியர்கள் வழிபட்ட தலம் இது. ராஜராஜதேவன், அமரபுயங்கன், சேரன் வீரகேரளன், கரிகால் சோழன் முதலான பலரும் இங்கு வந்து வழிபட்டுள்ளனர், திருப்பணிக்கு உதவியுள்ளனர் எனத் தெரிவிக்கிறது கல்வெட்டு. முக்கியமாக, கரிகால் சோழன் இந்தத் தலத்துக்கு வந்து சிவ வழிபாடு செய்ததால், பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றான் என்கிறது ஸ்தல வரலாறு.

கொங்கு தேசத்தில் கோயம்புத் தூரில் இருந்து கரூர் வரை உள்ள  பல தலங்களில், காமதேனுப் பசு வந்து சிவலிங்க பூஜை செய்து வழிபட்டதாக புராணங்கள் தெரிவிக் கின்றன. அதேபோல், இருகூர் ஸ்ரீநீலகண்டேஸ்வரரின் லிங்கத் திருமேனியையும் காமதேனுப் பசு வழிபட்டது என்கிறது கோயிலின் ஸ்தல புராணம்.

இங்கே, ஞானம் தரும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியின் மூர்த்தம் கொள்ளை அழகு! ஸ்ரீசௌந்தரலிங்கேஸ்வரர், ஸ்ரீசுயம்வர கல்யாண பார்வதி, ஸ்ரீகால பைரவர், ஸ்ரீகணபதி, ஸ்ரீசுப்ரமணியர் ஆகியோருக்கும் சந்நிதிகள் உள்ளன. அதேபோல், இங்கே ஸ்ரீபிரம்மா வும் தனிச்சந்நிதியில் இருந்தபடி அருள்பாலிக்கிறார்.

சேர மன்னன் ஒருவன், தங்கள் தேசத்தை நோக்கி இறைவன் பார்த்தபடி இருக்க வேண்டும் என்பதற்காக கோயிலை, மேற்கு நோக்கிக் கட்டினான் என்றும், அதையடுத்து சோழ மன்னன், இறைவன் தங்கள் தேசத்தைப் பார்த்தபடி இருக்க வேண்டும் என விரும்பி, ஸ்ரீசௌந்தரலிங்கேஸ்வரரை பிரதிஷ்டை செய்தான் என்றும் சொல்வர்.

சூரிய நமஸ்காரம்! பங்குனி சித்திரை, புரட்டாசி, ஐப்பசி ஆகிய மாதங்களில் நீலகண்டேஸ்வரர் மீது மாலைப் பொழுதில் அஸ்தமன சூரிய கதிர்கள் பட்டு, சுவாமியின் திருமேனி ஒளிர்கிறது.

மூலவரின் லிங்கத் திருமேனியில் சூரியக் கதிர்கள் விழுந்து வணங்குவது சிறப்புக்கு உரிய ஒன்று. அப்போது, லிங்கத் திருமேனி முழுவதும் ருத்திராட்சமென ஜொலிப்பதைப் பார்க்க கண் கோடி வேண்டும் என்கின்றனர் பக்தர்கள்.

கல்வியும் ஞானமும் நிச்சயம்! வியாழக்கிழமைகளில், இங்கு வந்து ஸ்ரீநீலகண்டேஸ்வரருக்கும் ஸ்ரீசௌந்தர லிங்கேஸ்வரருக்கும் வில்வ மாலை சார்த்தி, ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் ஸ்ரீபிரம்மாவையும் வணங்கி வந்தால், கல்வியில் சிறந்து விளங்கலாம்; ஞானத் துடன் யோகமும் கைவரப் பெற்று இனிதே வாழலாம் என்பது ஐதீகம்!

தேர்வுக் காலங்களில், மாணவர்கள் இங்கு வந்து சிவ வழிபாடு செய்வதுடன், குரு பிரம்மாவையும் குரு தட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு பலன் பெற்றுள்ளனர். கரிகாற்சோழன் தனது பிரம்மஹத்தி தோஷம் நீங்க கொங்கு நாட்டில் 36 பெரிய சிவன் கோயில்களிலும், 360 சிறிய சிவன் கோயில்களிலும் திருப்பணி செய்ததாக வரலாறு கூறுகிறது.

28வது கோவிலாக சவுந்தரேஸ்வரர் கோயிலில் திருப் பணி செய்துள்ளார்.

பீடத்தில் மாவிலை தேங்காயுடன் அமிர்த கலசம் இருப்பதால் மிருத்யுஞ்செய ஹோமம் செய்ய உகந்த தலம். 8நாகங்கள் சடைமுடியாக அஷ்ட சித்தி தட்சினாமூர்த்தி. ருத்ராட்சம்போல் சிகையுள்ள சண்டிகேஸ்வரர், வேறு உருவ அமைப்பு கொண்ட 4 நந்திகள். ராகு வலதுகையில் மனித தலையுடன். ஜ்வாலா கேசத்துடன் காலபைரவர்.

ஐப்பசி மாதத்தில் நடக்கும் சூரசம்கார விழா மிகவும் பிரசித்தி பெற்றது. தைப்பூசம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், நவராத்திரி, கார்த்திகை ஜோதி வழிபாடு, மார்கழி மாத வழிபாடு ஆருத்ரா தரிசனம் ஆகிய விழாக்கள் நடக்கிறது.

இக்கோயிலில் நீலகண்டேஸ்வரர், சுயம்வர பார்வதி தேவி, ஞான தண்டபாணி ஆகியோர் மேற்கு நோக்கியும், சவுந்தரேஸ்வரர், மீனாட்சியம்மன், வள்ளி தெய்வானை சுப்ரமணியர் ஆகியோர் கிழக்கு நோக்கியும் அருள்பாலிக் கின்றனர்.

இத்தலம் சேர, சோழ, பாண்டிய மன்னர்களால் திருப்பணி செய்யப் பெற்றது. சங்க காலத்தில் இந்த பகுதி பொன்னூர், மண்ணூர் என இரு பிரிவாக இருந்ததாகவும், அதுவே இருகூர் என்று ஆனது எனவும், இருளர் தலைவன் இருவன் பெயரில் இருவூர் என இருந்து இருகூர் ஆனதாகவும் பெயர்க் காரணம் கூறப்படுகிறது.

3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நீலகண்டேஸ்வர இலிங்கம் சுயம்புவாக தோன்றியது. இலிங்கத்தின் மையத்தில் ஒரு சிறு குழியும், வலப்பக்க நெற்றியில் சிறிய தேய்வும், பின்புறம் சிறிய குடுமியும் உள்ளது. சுவாமியின் இடப்பக்கத்தில் சுயம்வர பார்வதி தேவி உள்ளார். வலப்பக்கத்தில் தண்டத்துடன், ஞான தண்டபாணி காட்சியளிக்கிறார். பிரம்மதேவன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். தேன் வண்ண பாணலிங்கமாக கிழக்கு நோக்கி சவுந்திரேஸ்வரர் அருள்பாலிக்கிறார். இடப்பக்கத்தில் மீனாட்சியம்மன் நான்கு திருக்கரத்துடன் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார்.

கொங்கு மண்டலத்தில் எங்கும் இல்லாத வகையில் மார்க்கண்டேய முனிவர் வழிபட்ட மார்க்கண்டேஸ்வர லிங்கம் உள்ளது. பீடத்தில் அமிர்த கலசம் அமைந்துள்ளது. இங்குள்ள 4 நந்திகளும் வெவ்வேறான வடிவமைப்பில் உள்ளது.

உத்தம சோழன் செப்பேடு, மார்க்கண்டேய பண்டிதர் மடம் செப்பேடு, திருமுருகன் பூண்டி செப்பேடுகளிலிருந்து இருகூரின் பழமையை அறியமுடிகிறது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.............தொடரும்!

3 comments:

  1. திருமூலர் பாடல்:-
    "அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
    அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
    அன்பே சிவமாய் அமர்ந்திருந்தாரே...'
    (பாடல்: 270)
    அன்பு வேறு, சிவம் வேறு, இரண்டும் ஒன்றல்ல; வேறு வேறு என்று சொல்பவர்கள் அறிவில்லாத
    மூடர்கள். அன்பே சிவம் என்பதை யாரும் அறியாதிருக்கிறார்கள். அன்புதான் சிவம் என்பதை
    எல்லோரும் அறிந்து விட்டால், பிறகு அவர்களே அன்புருவான சிவமாய் வாழ்ந்திருப்பார்கள

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. அகத்தியர் அருளால் இந்த பதிவை வாசித்த பின் ஈசனை காண எங்களுக்கும் அவர் ஆசிர்வாதம் கிடைத்து சென்று பார்த்துவிட்டு வந்தோம். கடினமான பயனமாக இருந்தாலும் அவரை கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது.

    ReplyDelete