​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday 22 July 2022

சித்தன் அருள் - 1164 - அன்புடன் அகத்தியர் - ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்!







2/6/2022 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம்: ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். வன்னி வேடு கிராமம். வாலஜா பேட்டை . ராணிப்பேட்டை மாவட்டம்.

புவனத்தை ஆளுகின்ற புவனேஸ்வரியையும் புவன நாதனையும் பணிந்து வாக்குகளாக செப்புகின்றேன் அகத்தியன்.

இன்னும் இவ்வுலகத்தில் மாற்றங்கள் மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கும் எதனை எதனை என்று எதிர்பார்த்தீர்களோ அவையெல்லாம் எதிர்பாராமல் நடக்கும் என்பது மெய்யப்பா!!!!!! 

அப்பனே இன்னும் பல ஆண்டுகள் எதை என்று கூறுவதற்கு ஒன்றுமில்லை.
அழிவுகள் வந்த வண்ணமே இருக்கின்றன அப்பனே!!!!

இதனால் உண்மையான பக்தியை கடைப்பிடித்தாலே நன்று என்பேன்.அப்பனே!!!

அப்பனே இவையன்றி கூற ஆனாலும் அப்பனே ஓர் முறை அப்பனே எதை??  எதையெதையென்றும் அற்ப சுகத்திற்காகவே அலைந்து திரிந்து அப்பனே பின் வந்தார்கள் பல அரசர்கள்....

யான் பார்த்தேன் அப்பனே!!! 
இதையும் கூட....... 

ஆனாலும் அவர்களும் வந்தார்கள்!!!! ஆனாலும் புகழ் இல்லாமலே சென்று விட்டனர்... ஆனாலும் இறைவனை மதிக்காமலே பின் ஆட்சியையும் நடத்தினர் ஆனாலும் அவர்களுடைய பெயர்கள் அப்பனே  எதையென்று கூற அடியோடு அழிந்து விட்டது....

ஆனாலும் இன்னும் சில அரசர்கள் அப்பனே இறைவன் வழியை சித்தன் வழியே போய் கடைப்பிடித்து நல்விதமாகவே ஆட்சி செய்தார்கள் அதனால் அப்பனே அவர்கள் பெயரும் நிச்சயம் நின்று கொண்டு தான் இருக்கின்றது அப்பனே இதுதான் உண்மை.

அதனால்தான் அப்பனே சித்தர்கள் எதை எதை என்று நோக்க........

அனைத்தும் யாம் அறிவோம் அப்பனே!!!!!! 

ஆனாலும் மனிதனை  , நம்பி, நம்பி எதை என்று கூற!!......... உண்மையான பக்தி பின்  எதையென்று பொய்யான பக்திகளை காட்டி காட்டி அதை செய்கின்றேன் இதை செய்கின்றேன் என்றெல்லாம் கடைசியில் பார்த்தால்!!!!! பணங்களை எடுத்துக்கொண்டு ஏமாற்றியது தான் மிச்சம்...

அதனால் தான் யாங்களே வந்து... நிச்சயமாய் திருத்தலங்களை அமைப்போம்!!!.

உயர் பெரியோரின் நல் விதமாகவே மனதில் நுழைந்து நுழைந்து அனைத்தையும் செய்வோம்.

ஆனால் இவற்றின் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆனாலும் அழிவு காலம் வந்துவிட்டது!!!! அழிவு காலம் வந்துவிட்டது!!!

மகேந்திரவர்மனுக்கும்(பல்லவ அரசன்) இதை சரியாக முதலாம் மகேந்திரவர்மனுக்கும் தெரிந்து விட்டது....

ஆனாலும் எப்படி இதை தடுப்பது?? என்பதை கூட....

ஆனாலும் மகேந்திர வர்மனும் என்னுடைய பக்தனே என்று யான்!!!...கூறுவேன் 

எதையென்று கூறுவது!!!! ஆனாலும் அவந்தனும் பின் பல ஆலயங்களுக்கு சென்றான்!! ஆனால் ஈசனுடைய ஆலங்களுக்கு சென்று சென்று பின் காஞ்சியில் உள்ள காமாட்சியிடம், பல வருடங்கள் பின் அவளின் பக்தனாக இருந்து(பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர்) பக்தியாக இருந்து ஏகாம்பர நாதனையும் வணங்கி, வணங்கி, பல திருத்தலங்களுக்கு சென்றான்.

ஏனென்றால் அழிவு நிச்சயம் என்பதை கூட அவந்தனுக்கு தெரிந்து விட்டது.....

ஆனாலும் என்னை நாடி வந்தான்!!!!!

அகத்திய முனிவரே!!!!!

இவை யான் சிவ பக்தனாக இருந்தும் ஆனாலும் பின் யாருக்கும் அதிக அளவு தெரியவில்லை!! தெரியாதது போல இருந்தேன் ஆனாலும் பின் என் கண்களில் யான் உறங்கிக் கொண்டிருந்த பொழுதே கனவாக பின் இதையென்று இப்படி எல்லாம் அழிவுகள் வரும் என்பதை கூட எந்தனுக்கு காட்டி விட்டான் ஈசன்....

அதனால் அகத்திய முனிவரே!!! 
எவ்வாறு இது உண்மைதானா??

ஆனாலும் யான் சொன்னேன்... நிச்சயமாய் அழிவுகள் எதனிலிருந்து வருகிறது என்று பார்த்தால் மனிதரிடமிருந்தே வருகின்றது...... அதனால் எப்படி தடுக்க முடியும்???

எப்படி தடுக்க முடியும் என்பதை கூட யான் எதிர்மறையாகவே சொன்னேன் ஆனாலும் பின் மகேந்திரவர்மன் இல்லை!!! இல்லை!!!

 யான் இவ்வளவு பக்தனாக இருந்து.... நிச்சயம் சில மனிதர்களையாவது யான் காக்க வேண்டும் !!
காக்க வேண்டும் நிச்சயமாய் இதையென்று கூற..... ஆனாலும் இறைவன்கள் எதை என்று கூற இன்னும் உண்மையான பக்திகளும் நல்விதமாகவே மனிதர்கள் செலுத்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள். அதனால் நிச்சயம் பின் காக்க வேண்டும் நிச்சயம் மனிதர்களை!!!!!

அகத்திய முனிவரே!!!!!

ஏதாவது ஒரு வழியைச் சொல்லும்!!!!!!!

என்று கூட பின் மகேந்திரவர்மனோ என்னிடம்.!!! 

ஆனாலும் மகேந்திர வர்மனே!!!!!! இவையெல்லாம் தடுக்க முடியாது!!!!!

காலத்தின் கட்டாயம் இது!!!!!

எப்பொழுது?? எதை?? அழிக்க வேண்டும்??...

எதனை பின் உயர்த்த வேண்டும்!!! என்பதையெல்லாம் ஈசன் தான் அறிவான்!!!!!!

ஆனாலும் இதையென்று கூற.....அவ் அரசனும்!!! 

அகத்திய முனிவரே!!!!

அனைத்தும் உணர்ந்தவன் நீ!!!!!

இவை!!! இப்படி நீ சொல்லி விட்டாய்!!!!! ஆனாலும் அகத்திய முனிவரே யானும் ஈசனிடம் சென்று இருந்தேன் ஒருமுறை!!!
எவை எதை என்று கூட..... 

ஆனாலும் ஈசனோ!!!!  இதையென்று அறியாத அளவிற்கு கூட பின் காலங்கள் கடந்து கொண்டே போகின்றது.

அதனால் யான் பல வேலைகளை பார்க்க வேண்டும்!!!!!

அதனால் ஏதாவது நடந்தால் உன் சொப்பனத்திலே யான் செப்பி விடுவேன் என்று... ஈசன் மகேந்திரவர்மனை அனுப்பி விட்டான்.

ஆனாலும் யானும்(மகேந்திர வர்மன்) நினைத்துப் பார்க்கும் அளவிற்கு கூட....

நமச்சிவாயா!!! நமச்சிவாயா!!.... என்று மந்திரத்தைச் செப்பிக் கொண்டே இருந்தேன்.

ஆனாலும் ஈசன் கனவில் வந்து அகத்தியனை நாடு!! என்று  சொல்லிட்டான்!!!!

ஆனாலும் இதையென்று ஆனால்.... அப்பொழுதே யான் தெரிந்து கொண்டேன் சாதாரணமாக ஈசனோ எதை?? எப்படி?? குறிப்பிடுவது??
யாரை?? யார் பெயரை வைத்து குறிப்பிடுவது?? என்பதைக் கூட ....

ஆனாலும் நிச்சயமாய் உண்மையை அறிந்து அதனால்தான் அகத்திய முனிவரே உன்னிடம் வந்தேன்...என்று அவ்வரசனும்!!! 

ஆனாலும் யான் மௌனத்தை காத்தேன்!!!!

ஏனென்றால் உலகம் அழிந்து அழிந்து தான் வந்து கொண்டிருக்கின்றது!!!

ஆனாலும் பக்திகள் பெருமிதம்!!!!

ஆனாலும் இதை என்று அறிவதற்கு உண்மைகள் உண்மைகள் பலப்படும் பலப்படும்!!!

அவ் முதலாம் மகேந்திர வர்மனும் எதை என்றும் கூட... 

ஆனாலும் என்னிடத்தில் வந்தான் மீண்டும் மீண்டும்!!!

அகத்திய முனிவரே!!! நீ தான் காக்க வேண்டும்!!!

ஏனென்றால் அழியக்கூடிய உலகத்தில்  கூட நீ எதையென்று கூட நிச்சயம் அழிவுகள் வராமல் தடுக்கலாம்!!!

உன்னால் முடியும்!!!

எதையென்று கூற அனைத்தும் பல வழிகளிலே யான் சிவனை வழிபட்டும் ஆங்காங்கே திரிந்தும் சென்று!!!!  ஆனால் உண்மைதனை யான் புரிந்து கொண்டேன்!!

அகத்தியனே உன்னிடத்திலே அனைத்தும் இருக்கின்றது!!!!

அதனால் எதை என்று ஆனால் அழிவு காலம் வருகின்ற பொழுதே நீதான் காக்க முடியும் என்று கூட!!!

ஆனாலும் யான் சொன்னேன்!!!!(அகத்தியர்) 

அரசனே யான் இப்பொழுது காப்பாற்றி விடுவேன்!!! ஆனாலும் இன்னும் பல பல ஆண்டுகளில் கூட அழிவுகள் ஏற்பட்டு கொண்டே இருக்கும்!!

ஆனாலும் எதை என்று அப்பொழுது யார் காப்பாற்றுவார்கள்??

அகத்திய முனிவனே!!!! எதை? இப்பொழுது கூட.... ஆனால் சரிதான்!!....நீயும் சொல்வது!!!! 

யான் எதை என்று ஆனாலும் இப்பொழுது நீ இருக்கின்றாய்... யான் காப்பாற்றி விடுகின்றேன் ஆனாலும்....எதை??  எவற்றை?? என்று தெரியாமலே இன்னும் பல பல வழிகளில் கலியுகத்தில் மனிதர்கள் தெரியாமலே நுழைந்து நுழைந்து பின் அழிவைத் தேடிக் கொள்வார்களே தேடிக் கொள்வார்களே என்று கூட......

ஆனாலும் யான் எதனை சொல்லியதற்கு வினா விடைகள் உண்டா??? உண்டா எதை என்று கூற!!!

அரசனே!!!! இதனால் உன் நிலைமையை ஆராய்ந்து உன் வேலையை பார்!!! என்று யான் சொன்னேன்.

ஆனாலும் விடவில்லை அவ் அரசன்!!!

அகத்திய முனிவரே!! அகத்திய முனிவரே!! என்று கூட பின் கண்ணீர் மல்க காலை பிடித்துக் கொண்டான் அவ்வரசன்.

சரி என்று கூற ஆனாலும் திரும்பவும்  ஒரு வார்த்தை செப்பி விட்டேன் அரசனே இப்பொழுது யான் காப்பாற்றி விடுகின்றேன்.... ஆனால் இன்னும் பல ஆண்டுகள் வந்து கொண்டே இருந்தால் இவ்வளவு ஆண்டுகள் தான் பின் அழிவுகள் வருமே அப்பொழுது யார் காப்பார்கள்???

இதை யான் எதை என்று ஈசனிடமே முறையிடுகின்றேன் என்று அவ்வரசனும்!!!!.......

ஆனாலும் பின்  ஈசனிடம் முறையிட்டு மீண்டும்...வா!!! 
 என்று யான் சொன்னேன்.

சொன்னதற்கு பதிலாகவே மீண்டும் தவங்களை மேற்கொண்டான் மகேந்திரவர்மன்.

மேற்கொண்டு மேற்கொண்டு ஆனாலும் இதையென்று கூட..... ஆனாலும் ஈசனும் வந்து நின்றான் அழகாக!!!!

அரசனே என்ன வேண்டும்?? என்று கூறு!!!!!
கூறு!!!! எதையென்று கூட....

மக்கள் பின் எதை இப்பொழுது கூட அழிந்து போகின்றார்கள் ஆனாலும் அதனையும் யான் நிறுத்தி விட்டேன்!!! ஆனாலும் கலியுகத்தில் அழிய போகின்றார்களே!! அது எப்படி?? இன்னும் அழியப் போகின்றார்களே அதை எப்படி ??தடுத்து நிறுத்துவது?? என்று கூற.......

ஆனாலும் ஈசனோ!!!!

அப்பனே அது முடியாதப்பா!!!!!!

நிச்சயம் முடியாதப்பா!!!! ஏனென்றால் கர்மா பூமி!!!
அவனவன் செய்த கர்மாக்களுக்கு நிச்சயம் தண்டனைகள் அனுபவிக்க வேண்டும் என்று!!!!

ஆனால் இவ் அரசனோ ஈசனிடம் போராடினான்!! போராடினான்!!

இல்லை!! இல்லை!! ஈசனே!!!....... எப்படியாவது காக்க வேண்டும் என்று கூட......

அதனால் நிச்சயம் ஈசா!!!!! எதை எப்படியோ நீ தான் காப்பாற்ற வேண்டும் மக்களை என்று கூட....

ஆனாலும் ஈசன் சொன்னான்!!!!

சரி பார்ப்போம் !!!என்று கூட....

ஆனாலும் ஈசன்...... அனைத்தும் தெரியும்!!!! காப்பதற்கும் தெரியும்!!! அழிப்பதற்கும் தெரியும்!!!
எதை என்று உருவாக்குவதற்கும் தெரியும்!!!!!.....இதை அனைவரும் அறிந்ததே!!!!

அறிந்து!! அறிந்து!!! ஆனாலும்.....சரி என்று கூட........ 

ஆனாலும் மகேந்திரவர்மனோ!!! குறுக்கு புத்திகளால் பிரம்மாவை பார்ப்போம்!!

ஏனென்றால் பிரம்மா தான் அழகாக விதியை எழுதி அனுப்புகின்றான் மனிதர்களை ...பின் அவந்தனை பார்த்து பின் மனிதர்களுக்கு பின் விதியை மாற்றி அமைத்து விட்டால்? என்ன!!!!! ......என்று கூட.. 

ஆனால் மிகச் சிறந்த பக்திமான்!!!!! ஒருவன் என்றால் இதிலும் இவ்வரசனே நிச்சயம்!!!!!!

ஆனால் இவ்வரசன் எவ்வாறு வாழ்ந்தான் என்பதை கூட...யாமே!! அறிவோம்!!!!!! ....எதையென்று கூட.... 

இதனால் அவனும் பின் தவங்கள் மேற்கொண்டு மேற்கொண்டு....... எதனையும் பின் கூறாமலே பிரம்மனும் வந்து நின்றான்!!!!

இதையென்று கூட..... வந்து விட்டாயே!!!!! பிரம்மனே!!! 

ஆனால் கலியுகம் வந்து கொண்டே இருக்கும். ஆனால் இதில் மனிதர்கள் அழிந்து கொண்டே போவார்கள்!!! பிரம்மனே!! உன்னால் முடியும் மாற்றி எழுதியமைக்க!!!!  என்று கூற....

ஆனாலும் பிரம்மனோ!!! இல்லை! இல்லை! என்னிடத்தில் ஏதும் இல்லை!!!
நீ ஈசனை போய் பார் என்று கூற......

ஆனாலும் எவை!!  அவ்வரசனும் தலை குனிந்தான்!!!

இப்படியா!!!!!!
 மனிதர்களை எப்படி காப்பாற்றுவது? என்பதை கூட.....

ஆனால் பின் பிரம்மனோ இல்லை!! கர்மங்களுக்காகவே மனிதன் பிறக்கின்றான் அவையெல்லாம் அனுபவிக்க வேண்டுமே தவிர நிச்சயம் காப்பாற்ற முடியாது!!!

ஆனாலும்.... கருணை உள்ளவனாகவே இருக்கின்றான் அகத்தியன்!! அவனைப் போய் பார் என்று கூற!!!!

ஆனாலும் சரி என்று கூட ஓடோடி வந்தான் திரும்பவும் என்னிடத்திலே மகேந்திரவர்மன்!!!

அகத்தியா!!!!!!!  இதை முனிவரே!! முனிவரே!!!!
அனைத்திற்கும் நீயே காரணம்!!!! நிச்சயம் உன்னால் முடியும் என்று கூற...... 

இதனால் எதை? எப்படி என்று கூட அதனால்....பின் யான் சொன்னேன்.!!.....ஒரு வார்த்தை!!!!! 

அனைத்து ரிஷிமார்களையும் குருமார்களையும் இந்திரனையும் சந்திரனையும் சூரியனையும் அழைத்து வா!!!!!!

யான் பேசிக் கொள்கிறேன்!!!!!.....என்று கூட..... 

இதனால் பின் தவத்தை மேற்கொண்டு மேற்கொண்டு!!!!!! பின் அனைவரும் இங்கு வந்தனர்!!!! அனைவருமே இங்கு வந்து விட்டனர்.

யானும் இங்கு அமர்ந்து பேசினேன் அனைவரிடத்திலும்!!!

ஆனால் மேலோகத்தில் நீங்கள் எவை இன்னும் அழிவுகள் பின் நகர்ந்து செல்கின்றது!!! ஆனாலும்
இதனையும் விட என்று கூட... இவ்வரசனும் பக்திகள்!!! மிகுந்த பக்திகள் செலுத்தி விட்டான்!!!!

ஆனாலும் இவற்றின் தன்மையை யார் அறிவது???

அதனால் இவ் அரசனுக்கு யான் உதவி செய்யப் போகின்றேன் என்று கூற!!...

ஆனாலும் தேவர்கள் ரிஷிமார்கள்....எப்படி?? உதவி செய்வது??

எப்படி ?அகத்தியனே நீ மட்டும் உதவி செய்ய முடியும்???

இதை பிரம்மன் ஏற்பானா??

விஷ்ணு ஏற்பானா??

ஏன் ஈசனும் ஏற்பானா?? 

யாங்கள் ஏற்போமா??  என்று கூற...... 

ஆனால் இவை என்று கூற ஆனாலும் நிச்சயமாய் என்னை நம்பி வந்து விட்டவருக்கு நிச்சயமாய் யான் உதவிகள் செய்யத்தான் போகின்றேன்!!!

ஆனாலும் இவ்வரசனும் என் மேல் மிகுந்த பக்தியை செலுத்தி விட்டான்!!!

செலுத்தி! செலுத்தி! ஆனால் பல ஆலயங்களுக்கும் நல்விதமாகவே உருவாக்கி பல நல் மனிதர்களை உருவாக்கி விட்டான்..

 அதனால் யான் நல்லதைச் செய்யப் போகின்றேன்!!! யார் தடுத்தாலும் என்று கூட......

இதனால்......
அகத்திய முனிவரே!!! இந்திரனும் சந்திரனும் சூரியனும் இதை என்று கூற அகத்திய முனிவரே!!!!!

உன்னால் எவை என்று கூற இவ்வுலகத்தைக் காக்க முடியுமா?? என்ன!!! என்று கூட.... 

ஆனாலும் யானோ!!! பின் அமைதியை கடைப்பிடித்தேன்..இதையென்று. 

ஆனாலும் இவ்வுலகத்தைக் காக்க எவை என்று கூற அனைவருக்குமே தெரியும்!!!

சரி!!!! அனைவரும் சேர்ந்து அகத்தியா!!!! நிச்சயம் காக்க முடியாது!!!
அகத்தியா நீயோ!! காக்க முடியும் என்று கூறுகின்றாய்!!
உன்னால் முடிந்ததை நீ பார் என்று கூட.....

அதனால் எந்தனுக்கு சந்தோஷங்கள் மிகுந்தது!! இதனால் இவ் மன்னனிடம் சரி பார்த்துக் கொள்வோம் என்று கூற..... இதனால் எப்படி?? எப்படியெல்லாம் ஈசனை வடிவமைத்தால்!!
எப்படி எல்லாம் மனிதர்களுக்கு நன்மைகள் ஏற்படும் என்று கூட யான் சொன்னேன்!!!!

இதனால் எதை எவற்றை என்று கூட.... யானே பின் ஈசனை பின் உயிரோட்டமுடனே.... பார்த்து பார்த்து இங்கு அமைத்தேன்!!!!!

அமைத்து!!! அமைத்து!!!..... ஆனாலும்.... கஷ்டங்கள் எதன் மூலம் வருகின்றதென்பதால்... கஷ்டங்கள் என்று கூட....... யான் ஆராய்ந்தேன்!!!

மனிதன் பைத்தியமாக வேண்டும்!! பைத்தியமாக திரிந்து இறக்க வேண்டும் என்பதுதான் அப்பொழுது நியதி!!!

அதனால் எதை ஆனாலும் இதற்கும் ஓர் உபயம் உண்டு!!!!

அனைத்தும் அடங்கியவன் சரபேஸ்வரன்!!!!!

எதையென்று கூற.... இதனால் அவனை அழைத்து பின் அனைவரின் நிலைமையை ஆராய்ந்து அனைத்து அனைத்து தெய்வங்களும் கலந்தால் தான்.....எதையென்று கூட சரபேஸ்வரன் என்று அழைக்கின்றனர் ஆனாலும் ஓர் எதை இப்படி கூட பின் அமைத்து விட்டால்  நிச்சயம் பைத்தியக்காரனாக இருப்பவன் கூட நல்லவனாகி   எதையென்று கூற புத்தி உள்ளவனாக ஆகி விடுவான் என்று எண்ணி அனைத்து தெய்வங்களையும் சிறிது சிறிதாக வடிவமைத்தேன்!!!

இதனால் நிச்சயம் எதை என்று இதனால் பைத்தியமாகி திரிந்து கொண்டிருக்கையில் நிச்சயம்.... இவ்வாலயத்தில் எதை அவ்வரசனுக்கும் யான் சொன்னேன்..... மக்கள் எப்படி அலையப் போகின்றார்கள் என்றால்....  பைத்தியக்காரனாகவே திரிந்து ஒன்றும் தெரியாமலே இருந்து அழிவை நோக்கி!!!!

இதனால் இங்கு வந்து வழிபடச்சொல்!!!!..... அரசனே!!!!!

என்று சொல்லிவிட்டேன்!!!!!

இதனால் பல பல மனிதர்களும் இங்கு வந்து வழிபட்டு பைத்தியமாக இருந்த நிலைமையும் இங்கு மாறிவிட்டது!!!

இதனால்தான் இவ்வாலயத்திற்கும் ஒரு சிறப்பு!!!

பின் மனக்குழப்பம்!!! மன சஞ்சலம்!! பின் ஏதுமே நடக்கவில்லையே என்றெல்லாம் நினைத்து தவித்து தவித்து வருபவர்களுக்கு.... இங்கு வாரத்திற்கு ஒருமுறை வந்து அழகாக சரபேஸ்வரனை வணங்கி வணங்கி தியானம் செய்து வந்தால் நிச்சயம் அவந்தன் பைத்தியத்திலிருந்து விடுபடுவான்!!! மனக்குழப்பம் தீரும்!! பின் வாழ்ந்திடலாம் என்ற எண்ணம் வந்துவிடும்!!!!

ஏனென்றால் கலியுகத்தில் அதுதான் நடக்கப் போகின்றது.
நம்மால் முடியவில்லையே முடியவில்லையே என்று கூட....

எதை என்று கூற ஆனாலும் இன்னும் கூட  இவ் புவனேஸ்வரி தாய் இங்கே வந்து கொண்டு சென்று கொண்டிருக்கின்றாள் என்பது மெய்யப்பனே!!!! 

ஆனால் இதை யார் அறிவார்!!!!???

இவை மட்டுமில்லாமல் எதை எதை என்று நோக்க இன்னும் சப்தரிஷிகளும் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள்.... இவ்வாலயத்திற்கு!!!!

யானும் வந்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

ஆனால் தகுந்த புண்ணியவான்கள்!!!!!! எதையன்றி கூற....

 இதனால் அவ் சப்தரிஷிகளும் வருவதற்கு !!!!!!

பின் அவர்களும்(பக்தர்கள்) புண்ணியம் செய்திருந்தால் சப்தரிஷிகளையும் நிச்சயம் தரிசிப்பார்கள்!!!
சப்தரிஷிகளும் அவர்களை பார்ப்பார்கள்!!!

இதனால் தீயவை அகன்று புண்ணியம் பெருகும்!!!! இது ஒரு புண்ணிய ஸ்தலம்!!!!! எதையன்றி கூட 

இவற்றினிருந்து கூட யானே!!! மக்களுக்காக இதை வடிவமைத்தேன்!!!!

ஆனால் காலப்போக்கில் மாறிவிட்டது திரும்பவும் திரும்பவும் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது!!!

 ஆனாலும் இவை ஆனாலும் அரசன் சொன்னான் என்னவென்று கூட.......

அகத்தியனே இப்பொழுது கூட நீங்கள் காப்பாற்றி விடுகின்றீர்களே !!!ஆனால்
இன்னும் சில ஆண்டுகள் போனால் இன்னும் கூட மக்கள் பின் அவதிப்படுவார்கள் இன்னும் கஷ்டத்தில் ஆழ்ந்து துயரப்பட்டு பின் இறந்து விடுவார்கள் என்று கூற.......

ஆனால் அகத்திய முனிவரே!!!! உன்னையே நம்பிக் கொண்டிருக்கின்றேன் யான்!!!

நீயே பல பல வழிகளிலும் எந்தனுக்கு எதையெதையோ சொல்லிக் கொடுத்து நாட்டையும் ஆள வைத்தாய்!!! அதனால் நீங்கள் தான் கஷ்டத்தை போக்க வேண்டும்!!!!

இல்லை!!!!  அரசனே..... இப்பொழுது காப்பாற்றி விடுவோம் பின் பின்னர் இருப்பதை ஈசன் அறியட்டும்!!!! ஈசனே காப்பாற்றட்டும் என்று கூட!!!

அகத்திய முனிவரே!!! ஒரு சத்தியம் செய்து கொடுங்கள்!!!!

ஆனால் யான் பிறந்ததிலிருந்து இப்பொழுது வரையும் உன்னைத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றேன்!!!!

தோல்விகளானாலும் வெற்றிகளானாலும் ஆனாலும் அதை சமமாக பாவிக்கும் மனநிலையை நீயே ஏற்படுத்தி விட்டாய் !!!!!

ஆனால் நிச்சயம் அழிவு காலம் கலியுகத்தில் வரப்போகின்றது யான் அறிவேன்!!!

அதனால் சத்தியம் செய்து கொடு!!! அப்பொழுது கூட நீ மக்களைக் காப்பாய் என்று கூற.....

சரி என்று கூட யானும் ஒத்துக்கொண்டேன்!!!! 

ஆனால் அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது!!!

யான் இப்பொழுது கூட பின் நிச்சயம் எதை என்று இதனால் யான் மக்களை காப்பேன் இங்கு வருபவர்களையும் கூட சொல்லி விட்டேன்!!!!

இதையென்று கூட அதனால் என் பக்தனுக்கு செய்யும் ஓர் அருமருந்து என்பேன் இது!!!!!!(இவ் ஆலயம்) 

இதனால்தான் சரியாகப் பயன்படுத்தினால் என்னை நிச்சயமாய் பின் ஈசனும் பிரம்மாவும் விஷ்ணுவும் ஏன் தேவாதி தேவர்களும் எதை ஒன்றும் செய்யாமல் யான் பக்தனை நிச்சயம் காப்பேன்!!!!!
என் பக்தனின் ஒன்று சொன்னால் எதை என்று கூட அதனை இப்பொழுதும் காக்குகின்றேன்!!!!

இங்கிருந்து அழிவுகள் ஏற்படும் என்பேன் எதை என்று கூற... கிழக்கை நோக்கி நிச்சயம் அழிவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது!!!

ஆனாலும் இனிமேலும் பொய்யான பக்திகள் தான் இங்கிருந்து கிழக்கை நோக்கியவாறு அமையும் என்பேன்.

இதனால் ஆனால் நல்லோர்கள் பிழைப்பதற்காகவே நிச்சயம் யான் அமைப்பேன்.

இதனால் ஆனாலும் இவை என்று கூற ஆனாலும் இதை இதை என்று கூற யானும் இக்கலி யுகத்தில் ஒரு சில ஆண்டுகளிலே பின் ஈசனையும் பார்த்தேன்!!!

ஈசனே!!!!!  இன்னும் எதையன்றி கூற யானே  பல மக்களை பின் காப்பேன்!!!

ஆனாலும் அதனையும் நீ கொடுத்த பிச்சை!!!

ஆனாலும் அவை அவ்வரசனுக்கு தெரியாமல் போய்விட்டது!!!!

ஆனாலும் இன்னும் வந்து கொண்டே இருக்கின்றதே!! கலியுகத்தில் எவ்வாறு காக்கபோகின்றாய்?? என்பதைகூட.... 

ஆனால் ஈசனோ!!!!

அகத்தியா!!!!! எதையன்றி கூற நிச்சயம் யான் மனிதனை காக்க போவதில்லை!!!

ஏனென்றால் தரித்திர மனிதன் நம்புவதில்லை!!
எந்தனுக்கே பல பூசைகள் செய்து நமச்சிவாயா என்று அழைத்து ஏமாற்றியே பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கின்றான்.

அதனால் எதை என்று கூற என் வாயால் சொல்லக்கூடாது என்று கூட......

ஆனால் பார்வதி தேவியோ ஈசனே நிறுத்து!!!!

இப்படித்தான் செய்து கொண்டிருக்கின்றாய் நீ!!!!
என்று!!!! 

ஆனாலும் பார்வதி தேவி நிச்சயம் அகத்தியா!!!! யான் உன்னுடன் வருகின்றேன் என்று கூட!!! 

யானே!!!  அவ் அம்மையை(பார்வதி தேவியை) அழைத்து வந்தேன்!!!!!

அதனால் அம்மையே நீ வந்தால் போதும்!!!! ஈசனும் இங்கே அழகாக வந்துவிடுவான்!!!

உன் எதை என்று கூட ஓர் பிள்ளைக்கு இப்படி இறங்கி வருகின்றாயே என்று கூட....யானும்!!!!!......... 

ஆனாலும் பார்வதி தேவியோ!!!!
நிச்சயம் நீ என் பிள்ளை தான்!!!!! என்று கூற!!!!! 

என் கண்களில் கண்ணீர் மல்கியது!!!!

யானும் இப்படி எதை என்று கூற அதனால் கருணை மிகுந்து பக்திகள் கொண்டாலே அனைத்தும் செய்வாள்!!!!! எதையென்று கூற.....

பார்வதி தேவி வந்து விட்டாள் ஈசனும் என்று கூட இதனால் இங்கு நடமாடி கொண்டு தான் இருக்கின்றாள் பார்வதி தேவி!!!!அடிக்கடி வந்து!!!!

அண்ணாமலைக்கு எதை என்று கூறாமலே அங்கு தங்கி!!!...... ஆனாலும் திடீரென்று என்னை பார்க்கவே ஓடோடி வந்து விடுவாள் இங்கு!!!

ஆனாலும் யான் இங்கே தான் தங்கி இருக்கின்றேன் அதனால் பின் அடிக்கடி வந்து எதை என்று கூறாமல் அளவிற்கு கூட பார்வதி தேவி இங்கு வந்து நலமாகவே என்னையும் ஆட்கொண்டு!!!!

இதனால் கருணை பொங்கும்!!!!  உள்ளமே!!!! பரமேஸ்வரியை பரமேஸ்வரனை பணிந்து பணிந்து வணங்குகின்றேன்!!! வணங்குகின்றேன்!!!

மேன்மைகள் கொடு!!! மனிதர்களுக்கு!!! என்று கூட யான் பிரார்த்தித்து கொண்டே தான் இருக்கின்றேன்!!!!

ரிஷிமார்களும் வந்து வந்து எதை என்று கூற தெரியாமலே இன்னும் ஹோமத்தை சரியான முறையில் நடத்திக் கொண்டு தான் இருக்கின்றார்கள்!!!!!

அதனால் உண்மையில் பல சக்திகளும் அடங்கியும் உள்ளது!!! அவை மட்டும் இல்லாமல் பல பல வழிகளிலும் பல பல மரங்கள்!! அவ் மரங்கள் உண்மையானவை!!!!

எதையன்றி கூற மனதிற்குள் இருக்கும் அனைத்து மாய வினைகளையும் நீக்கும்!!!
அவ் மரங்களை யானே அமைத்தேன்!!!!

ஆனாலும் இதனை தெரிந்து கொண்ட பல தீயவர்கள் அவ் மரங்களை எல்லாம் அழித்தும் விட்டனர்!!

ஆனால் இதை அன்றி கூற விநாயகப் பெருமானுக்கு அவ் மரம்(வன்னி மரம்) சிறப்பாகவே பிடிக்கும் என்பேன்!!!

அதனால் அவ் மரத்தடியில் இருக்கும் விநாயகப் பெருமானை வணங்கினால் நிச்சயம் விடிவெள்ளி உண்டு என்பேன்!!!!!

அதனால்தான் பின் வன்னியும் (வன்னி வேடு ஊர் பெயர்)என்று கூட.....

வன்னியும் என்ற... பேருக்கு அதற்கும் அர்த்தங்கள் உண்டு அதனையும் கூட புரிந்து கொள்வீர்கள் நீங்கள்!!!!

அதனால் பின் மரத்தடியில் இவ் வன்னி மரத்தடியில் அமர்ந்திருக்கும் பிள்ளையோனை(விநாயகர்)  பின் வணங்கினால் என்னும் மாற்றங்கள் மாற்றங்கள் உண்டு உண்டு ஏராளம் ஏராளம்!!!!

பல தேவர்களும் இங்கு வந்து வணங்கித்தான் சென்றிருக்கிறார்கள் என்பது மெய்!!!!

இதனால் எதை என்றும் கூற இன்னும் மாயப்பிறப்பில் பிறந்திருக்கும் மனிதர்களும் இவைதனை(ஆலயத்தை) பார்த்துக் கொண்டு தான் சென்று கொண்டிருக்கின்றார்கள் ஆனால் உணர முடியவில்லையே!!!!!!!!!!!!! 

நிச்சயமாக உண்மையான பக்தர்களை இங்கு யான் அழைப்பேன்!!!! எதை என்று கூட இன்னும் இன்னும் இன்னும் எதையென்று கூட கூற கூற இன்னும் வழிகள் உண்டு!!!!

ஆனாலும் இதையன்றி கூற ஒரே நேரத்தில் பின் பக்கத்தில் உள்ள அனைத்து திருத்தலங்களையும் ஓர் நாள் அதாவது பௌர்ணமி தினத்திலும் கூட!!!! சிவராத்திரி தினத்திலும் கூட !!!பின் அமாவாசை தினத்தில் கூட!!! அனைத்தும் தரிசித்தால் சப்த திருத்தலங்களையும் தரிசித்தால் அவந்தனுக்கு இன்னும் மேன்மைகள் உண்டு உண்டு!!!!

[ குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த சப்த திருத்தலங்கள் 

அத்திரி, பரத்வாஜர், கௌதமர்,  காஸ்யப முனி, வால்மீகி, வசிஷ்டர், அகஸ்தியர் ஆகிய சப்தரிஷிகள் தமிழ்நாட்டில் வேலூர்,  ஆற்காடு, ராணிப்பேட்டை ஊர்களை சுற்றி சிவலிங்கத்தை நிறுவி சிவபெருமானை வழிபட்ட சப்தரிஷிகள், இந்த 7 கோயில்களும் சேர்ந்து ஷடாரண்ய ஸேத்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

வேப்பூர் - ஸ்ரீ வசிஷ்டேஸ்வரர் - பாலகுஜாம்பாள் - ஸ்ரீ வசிஷ்ட மகரிஷி

மேல்விஷாரம் - ஸ்ரீ வால்மீகேஸ்வரர் - வடிவுடையம்மை - ஸ்ரீ வால்மீகி மகரிஷி

காரை - ஸ்ரீ கௌதமேஸ்வர் - கிருபாம்பிகை - ஸ்ரீ கௌதம மகரிஷி.

அவரா கரை - ஸ்ரீ காஷ்யப மகரிஷி.

வன்னிவேடு – ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் – புவனேஸ்வரி – ஸ்ரீ அகஸ்திய மகரிஷி

குடிமல்லூர் - ஸ்ரீ அத்திரீஸ்வரர் - திரிபுரசுந்தரி - ஸ்ரீ அத்திரி மகரிஷி ;  கோவில் - பூமிநாதேஸ்வரர்.

புதுப்பாடி – ஸ்ரீ பரத்வாஜேஸ்வரர் – தர்மசம்வர்த்தினி – ஸ்ரீ பரத்வாஜ மகரிஷி

இந்த கோவில்கள் மிகவும் பழமையான கோவில்கள்.

இந்த ஏழு கோவில்களிலும் சிவபெருமான் இங்கு வழிபட்ட ரிஷியின் பெயரால் அறியப்படுகிறார்.

மஹா சிவராத்திரியில் இந்த கோயில்கள் அனைத்தையும் பார்வையிடுவது கைலாயம் தரிசனம் செய்து வணங்குவதற்கு சமம் என்று ஸ்தலபுராணம் கூறுகிறது.]

 தடைபட்ட திருமணமும் நடக்கும் நிச்சயமாக உண்மை!!!!!

நிச்சயமாக உண்மை எதை என்று இன்னும் பல தரித்திரங்கள் நீங்கும்!!!

ஆனாலும் ஒரு முறை சுற்றி வந்து எந்தனுக்கு ஏதும் நடக்கவில்லையே?? என்று சொல்லக்கூடாது!!!!!!!

இதற்கு ஒரு வழியை சொல்கின்றேன்!!! சொல்கின்றேன்!!!

ஒரு துறவி இருந்தான் சரியான ஒரு கிராமத்தில் ஆனாலும் அத்துறவிற்கு பின் ஈசன் மேல் நாட்டம்!!!

ஈசனையே பிடித்துக் கொண்டு பிடித்துக் கொண்டு !!!!
""'திடீர்!!!! "" திடீர் !!! என்று எனக்கு அனைத்தும் வேண்டுமென்றான்!!! 

ஆனாலும் ""திடீர்!! "" திடீர்!! என்று கூட ஈசன் அனைத்தையும் கொடுத்தான்.

கடைசியில் பார்த்தால் """திடீரென்றே!!!!!!! மரணம் ஏற்பட்டு விட்டது!!!!

அதனால் தான் பின் படிப்படியாக கொடுக்க வேண்டும் இறைவன்!!!!

அதுதான் நிச்சயம்!!!!

அப்படி திடீர் திடீரென்று கொடுத்து விட்டாலும் அதற்கு மதிப்பு இல்லை!!!!!
பின் அந்தஸ்தும் இல்லை!!!!

இதனால்தான் சொல்கின்றேன் இதனால் தான் நிச்சயம் தான் தன் செய்த கர்ம வினைகள் நிச்சயம் திருத்தலங்களுக்கு அழைத்துச் செல்லாது என்பேன்!!!!

இதனால் சில சில வகையிலும் யான் சொல்லிக்கொண்டே இருப்பேன்!!!!

இதனையும் சரியாக ஆராய்ந்து ஆராய்ந்து சென்று கொண்டே இருந்தால் நன்மைகள் தான் ஏற்படும் என்பேன்!!!!

பல அரசர்களும் கர்ம வினையை இங்கே கழித்தார்கள் என்பது மெய்!!!!

இதனால் பல காலங்கள் இங்கே தவம் செய்தான் இவ் அரசன் முதலாம் மகேந்திர வர்மன்!!!!

அதனால் இன்னும் மாற்றங்கள் உண்டு !!!!

எதையன்றி கூற.... அதனால் யான் பல திருத்தலங்களையும் அமைத்தேன்!!!!

மனிதர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
மனிதர்கள் நல்வழி பட வேண்டும்!! ஒழுக்கம் உள்ளவர்களாக வாழ வேண்டும்!!
பின் பண்பை பின்பற்றி அனைவரிடம் அன்பை காட்ட வேண்டும் என்று எண்ணி!!!!!!பல திருத்தலங்களை அமைத்தேன் யான்!!!

ஆனாலும் மனிதர்கள் மாயையில் சிக்கிக் கொண்டு... மாயையை தான் கேட்கின்றார்கள்..!!

ஆனால் ஈசனோ!!! 

அகத்திய முனிவரே!! பார்!!!!!!!! 

இவ்வுலகத்தில் உள்ள மனிதர்களைப் பார்!!!!

எதை? எதை? என்று கூற!!!

ஒருவனாவது உருப்படியானவற்றை கேட்கின்றானா????? என்று பார்த்தால் இல்லை!!!!

அனைத்தும் அழிவுகள் அழிவுகள் பின் எதை என்று குறிப்பிடாததை கூட கேட்கின்றனர்!!!!

இவ்வாறு பின் அழிவுகள் உள்ளதை கேட்கின்றார்கள் மனிதர்கள்!!!

அதையும் யான் கொடுத்தனுப்புகின்றேன்!!!!

ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் சொல்கின்றேன்!!!!

பின் அனைத்தும் அழிவு உள்ளதைத் தான் இறைவனிடம் மனிதன் கேட்கின்றான்!!!!

ஆனால் இறைவனோ!!! நகைத்துக் கொண்டுதான் இருக்கின்றான்!!!!

இவ்வாறு கேட்கின்றானே இவன்!!!

ஆனால் !! உண்மையான ஞானி ....,
பின் இறைவனே தேடுவான் என்பேன்!!!

நீயே என் அருகில் இரு!!! நீயே பார்த்துக்கொள்!!! நீயே வழி விடு!!! என்று யார் ஒருவன் வணங்குகின்றானோ நிச்சயமாய் இறைவன் சில சோதனைகள் கொடுத்தும் ஆட்கொண்டு அனைத்தும் செய்வான்!!!!

இதனால் என்னவென்று கூறுவது???

இத்திருத்தலத்தின் சிறப்பு!!! திருத்தலத்தின் சிறப்பு!!!! அனுதினமும் அன்னை புவனேஸ்வரி தாய் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றாள்!!!!!!

இதனால் அவ் தாய் நிச்சயம் அதிவிரைவில் இதை உண்மையாகவே பின் ஏற்படுத்துவாள்!!!!

பார் புகழும் என்பேன் இத்திருத்தலத்தை.. என்றென்றும்!!!!!

யானும் இங்கே எதை என்று கூறாமலே வந்து வந்து செல்கின்றேன்!!!

அதி விரைவிலே நிச்சயம் மேலோங்கும் என்பேன்!!

கர்மத்தை!! கர்மத்தை!! உருவாக்குகின்ற தலங்களும் எதையென்பதற்கிணங்க உருவாக்குவது எதையென்று அழிப்பதற்கு சமமானது உண்டா??
(விளக்கம் !!!மனிதர்கள் உருவாக்கும் ஆலயங்களுக்கு கர்மத்தை அழிக்கும் ஆற்றல் உண்டா?? சித்தர்கள் அமைத்த திருத்தலங்கள் மனிதர்கள் அமைக்கும் திருத்தலங்கள் இடையே வித்தியாசம் உண்டு) 

அதனால் இத்திருத்தலத்தில் வந்து நிச்சயம் பின் வழிபட்டு அவை மட்டும் இல்லாமல் இன்னும் ஏனைய திருத்தலங்களுக்கும் வழிபட்டு வந்தால் நிச்சயம் கர்ம வினைகள் நீக்கி சுகத்தை கொடுக்கும்!!!!

ஏனென்றால் அப்படித்தான் யானும் பல வழிகளிலும் ஈசன் சொன்ன முறையிலே அமைத்தும் விட்டேன் ஈசன் அடிமையாகவே!!!!

எதையென்று கூற இன்னும் பல பல உண்மைகள் தெரிய வரும்!!!

ஈசனை வணங்கிட்டு!! வணங்கிட்டு!! இன்னும் பல பல வழிகளிலும் ஞானங்கள்!!!!

சப்த ரிஷிகளும் இங்கே ஒர் நாள் உறங்குவார்கள்!!! உறங்குவார்கள் எதை என்றும் கூட!!!

இதனால் இத்திருத்தலத்தை அவர்களே நிச்சயமாய் எதை என்று கூற பின் ஏற்படுத்தி விடுவார்கள்!!!!

அதனால்தான் யானும் சொன்னேன்!!! பல தேவர்களுக்கும் எதை என்று!!!!!

இதனால் அனைத்து தேவர்களும் வந்து இவ் ஈசனை வணங்கித்தான் சென்று கொண்டிருக்கின்றார்கள்!!!

இவையன்றி கூற இன்னும் பல பல வரிசையிலும் தங்கி தங்கி எதை என்று கூட!!!!

ஒன்றை மட்டும் தெரிவிக்கின்றேன்!!!!

ஒருவன் தன் கர்மா பின் பலத்த பலத்த பின் காப்பாக இருக்குமானால் பின் நிச்சயம் இதுபோன்ற திருத்தலங்களை அடைய முடியாது என்பேன்!!!

இதனால் முழு முயற்சியோடு வந்து அகத்தியா!!! என்று கூட.... பின் பணிந்து!! பணிந்து!!!
அன்போடு வணங்கினாலே யானே!! அழைத்து வருவேன்!!! சொல்லிவிட்டேன்!!!
இது உண்மை!!! 

எதையென்று கூட இன்னும் மக்கள் பொய்யானதையே பற்றிக் கொண்டு திரிகின்றனர்!!!!
ஆனால் ஏதும் நடக்கப் போவதில்லை சொல்லிவிட்டேன்!!!!

அவ் பொய்யானதை நாடி சென்றால் நிச்சயம் நீயும் பொய்யானவனாவான்!!! பொய்யானவன் ஆவான் என்பது உண்மை!!!!

ஆனால் பின் யான் அதைக் கடைப்பிடித்தேனே!!!!
அவ் மந்திரத்தைச் சொன்னேனே!!!!
அகத்தியனை வணங்கினேனே!!!!! 
ஈசனை வணங்கினேனே!!!! 
ஒன்றும் புரியவில்லையே!!!!!
இறைவன் இருக்கின்றானா என்று கூட!!!!

ஆனால் நீயே பொய்யான இடத்தில் போய் சிக்கி தவித்து வருகின்றாய் இது நியாயமா???? மனிதா!!!!!

அப்படி எதை என்று கூற ஆனால் உண்மையான மனிதன் அனைத்தும் உணர்ந்தவன் பின் இறைவனே!!!! நீயே!!!!கதி!!! என்று!!!! 

ஆனாலும் இதையன்றி கூட மக்கள் வரும் காலங்களில் எந்தனுக்கு  அதுதேவை!!
இது தேவை என்றெல்லாம் வருவார்கள்!!.....

ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு நிச்சயம் இறைவன் என்னதான் கொடுக்கின்றான் என்பதை நீங்களே......................

ஆனாலும் இன்னும் பல மனிதர்களை பின் எதை என்று கூட சரியாக பயன்படுத்திக் கொண்டார்கள் மனிதர்கள் மனிதர்களை!!!

எவை?  பின் அனைத்தும் யான் செய்து தருகின்றேன் பல தோஷங்களை போக்குகின்றேன்!!
பல பல வடிவங்களை யான் செய்து கொடுக்கின்றேன்... என்பதெல்லாம் என்றெல்லாம் பொய் சொல்லி பணத்தைப் பறித்து!!!!!!.............

 ஆனால் ஒன்றும் நடக்கப் போவதில்லை!!!!!

கர்மாவை சேர்த்துக்கொண்டு இன்னும் பிறவா நிலையை பின் நிச்சயம் நீ அடைய மாட்டாய் என்று சொல்லிவிட்டேன்!!!! 

நம்பி விடாதீர்கள்!!!!

மக்களே!!! மக்களே!!!! இறைவன் பெயரைச் சொல்லி இன்னும் வருவார்களப்பா!! திருடர்கள்!!!! எண்ணற்ற கோடிகளப்பா!!!

இதனால்தான் உண்மையை யான் சொல்லிக் கொண்டே வருகின்றேன்!!!!

ஆனால் அதையும் மீறி மீறி இன்னும் மனிதர்கள் சென்று கொண்டு தான் இருக்கின்றார்கள்!!

அப்படிப்பட்ட மனிதர்களை கடைசியாக """"ஒரு முறை எச்சரித்து விடுகின்றேன்!!!!!

மனிதனால் ஒன்றும் நடைபெறுவது இல்லை மனிதனால் ஏதும் செய்ய முடிய மாட்டாது!!!!

இதனால் கர்மத்தை கர்மத்தால் தான் அழிக்க வேண்டும் என்பது நியதி!!!

இதனால் பிரம்மா இட்ட கட்டளையை( எழுதிய தலைவிதியை) ... யாரும் எங்கும் மாற்ற இயலாது!!!!!

ஆனால் எங்களைப் போன்ற சித்தர்களால் தான் நிச்சயம் மாற்ற முடியும்!!!!

ஆனாலும் அதுவும் கூட அதிலும் கூட மனிதன் இறங்கி விட்டான்!!!

யான் அகத்தியர் அருளைப் பெற்றவன்!!
யான் புசுண்ட முனியின் அருளை பெற்றவன்!!
யான் பார்வதி தேவியின் அருளைப் பெற்றவன்!!
யான் முருகனின் அருளைப் பெற்றவன்!!!

ஆனால் முருகனோ!!! நமச்சிவாயனோ!! யானோ!!
பின் நிச்சயமாய் பின் எதை என்று கூற என் அருளைப் பெற்றவன் என்பது எப்பொழுதும் யான் சொன்னதில்லை!! யாரும் சொல்வதற்கில்லை!!!

அதனால்  எதையென்று கூற.... இதனால் எவை எவை என்று கூட பின் மனிதன் எப்படி பக்திக்கு வருகின்றான் என்று பார்த்து கொள்ளுங்கள்!!!

பின் அனைத்தும் எதை என்று கூட பின் அனைத்தையும் அனுபவித்து விட்டு கடைசியில் பக்திக்காவது சென்றால்... அனைத்தும் வந்துவிடும் என்று கூட!!!!

பல பக்தர்களை இப்படித்தான் பார்த்தேன்!!!
பொய்யான பக்தர்களை அப்பொய்யான பக்தர்களை எதை என்று கூட ஏற்கனவே அவன் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கின்றான்!! அவனிடத்தில் சென்றால் பாதி கர்மா உந்தனுக்கு வந்தடையும்!!!

இது போலத்தான் நிச்சயம் மனிதர்கள் எவை என்று கூட தெரியாமலே கர்மத்தை ஏந்தி கொண்டு தான் இருக்கின்றார்கள்.

அதனால் உண்மையானவற்றை கடைப்பிடியுங்கள்!!!

இவ்வாலயம் பின் யானே எதை என்று கூட மக்களுக்கு நல்வழிப்படுத்த ஈசன் அருளால் பின் உருவாக்கியவன்!!!!

எதையென்று கூட ஆனாலும் இதற்கு முழுமுதற் பின் மன்னனே (முதலாம் மகேந்திர வர்மன்)  பின் வணங்கி வணங்கி எதையன்றி கூட பின் அமைத்து தருவதற்காக இதனால்தான் சொன்னேன்!! வரும் காலங்களில் பக்தர்களே உண்மையான பக்தர்களே எதையென்று கூற ....யானே எவை என்று கூட எந்தனுக்கு பின் உண்மையானவை வேண்டும் என்று கூட பின் ஆழ்ந்த தியானத்தில் இருந்தால் நிச்சயமாய்  யானே வந்து அனைத்தும் என் மக்களுக்கு அமைத்தும் தருவேன்!!!!

இதுதான் உண்மை!!!!

யாரிடமும் .......எதை என்று கூற......உண்மையை சொல்கின்றேன்!!!!!!!!

யான்!!! யாரிடமும் பிச்சை எடுப்பதில்லை....!!!!!

நிச்சயம், யான்தான் பிச்சை இட்டுக் கொண்டிருக்கின்றேன்!!!!!!!

ஆனால் மனித ஜென்மங்களே!!!!!

அகத்தியன் கேட்கின்றான்!! கேட்கின்றான்!! என்று கூட.......

அப்பனே இவையெல்லாம் நியாயமா???????????

மனித முட்டாள்களே!!!!!!!
அறிவுள்ள முட்டாள்களே!!!
எதையென்று கூட..... 

இறைவன் தான் உங்களுக்கு பிச்சை அளிக்க வேண்டுமே தவிர
நீங்கள் இல்லை!!!!!

எதையென்று கூற இதனால் எவை எவை என்று கூட ஆனாலும் எதையென்றுமே தெரியாத மனிதர்களே மனித முட்டாள்களே இனியும் எவ்வாறு வாழ்வீர்கள் என்பதை கூட....... 

அதனால் இவ்வாலயம் எதை என்று கூற பின் அறிவுகள் மேம்படும்!!!
பின் திருமண நிகழ்ச்சிகள் நடைபெறும் நடைபெறும் அவை மட்டும் இல்லாமல் அதிவிரைவிலே அனைத்து சுகங்களும் கிடைக்கும் என்பது மெய்!!!!

ஆனாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்!!! அதை சரியாக பயன்படுத்த கொள்ளாவிட்டால் யானே வந்து அனைத்தையும் பிடுங்கி விடுவேன்!!!!!
இதுதான் இனிமேலும் நடக்கப் போகின்றது!!!!

உண்மையை உணருங்கள் மக்களே!!!!

பொய்யான பக்திகளை செலுத்த வேண்டாம்!!!!
செலுத்த வேண்டாம்!!!!

பின் செலுத்தினாலும் அப்படிப்பட்ட பக்தியை நிச்சயம் இறைவன் ஏற்க மாட்டான் சொல்லிவிட்டேன்!!

அதனால் வீணான பக்திகள் தான் எவையென்று கூற ஆனாலும்.......

ஓர் துறவி இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று சொல்லிக் கொண்டே போவான்.

ஆனாலும் மனிதர்கள் இவன் இப்படியே சொல்லிக் கொண்டிருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று கூட பைத்தியக்காரன்!!!!
ஆனால் இவந்தனுக்கே ஒன்றும் செய்யவில்லையே இறைவன் என்று கூட!!!

ஆனாலும் அவ் துறவியோ இறைவன் இருக்கின்றான்!!! இறைவன் இருக்கின்றான்!!! என்று தான் சொல்லிக் கொண்டே போவான் ....

ஆனால் கடைசியில் அவந்தனுக்கு பார்த்தால் ஒன்றுமே கிட்டவில்லை!! உணவும் கிட்டவில்லை!! உடுக்க ஆடையும் கிட்டவில்லை!!! ஆனால் அப்பொழுது கூட இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்ற ஒரு வார்த்தையை மட்டும் சொல்லிக் கொண்டே போவான்!!!

ஆனாலும் மனிதர்களோ முட்டாளே இவன்தான்!!!
இறைவன் இருக்கின்றான் என்று கூட சொல்லி திரிகின்றான்....

ஆனால் இவந்தனுக்கு உணவு கூட இறைவன் கொடுக்கவில்லை உடுக்க ஆடையும் கொடுக்கவில்லை ஆனால் இதையன்றி கூற....இவ் மனிதனோ பின் இறைவன் இருக்கின்றான் என்று கூட சொல்லிக் கொண்டே இருக்கின்றான் என்று கூட!!!!

ஆனால் இதையன்றி முட்டாள் மனிதர்கள் எதையன்றி கூட ஆனாலும் இப்படித்தான்  ஆனாலும் பின் இதையே செப்பிக்கொண்டு இருந்தவனுக்கு.... ஒருவராலும் இவந்தனுக்கு ஏதாவது நாம் கொடுப்போம் என்று கூட ஒருத்தர்க்காவது அவ் அறிவு செயல்படவில்லை!!!!

இதனால்தான் யான் மனிதனை முட்டாள் என்று சொல்வேன்!!!

ஆனாலும் இறைவன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று கூறி கூறி..... ஆனாலும் இதை இதை என்று அறியாத அளவிற்கு கூட அவன் தான் இப்பொழுது கூட அனைவரின் நெஞ்சில் பல பல பாடல்களை பாடி இயற்றியுள்ளான்..... அவந்தனை"" பட்டினத்தார்.. என்பார்!!! (பட்டினத்தார் சுவாமிகள்) 

அவந்தனும் இங்கு வந்து பல பல உண்மைகளை நிகழ்த்தியுள்ளான்!!!!!

ஆனால் கடைசியில் இங்கிருந்தும் மக்கள் அவந்தனை விரட்டியும் அடித்தனர்....

ஆனால் அவந்தன்!!! வாழ்க்கையில் என்ன என்பது கூட.... பித்து பிடித்த மனிதனுக்கு உணர்வதே இல்லை!!!

இதனால் இங்கிருந்தே அப்படியே சென்று கொண்டிருந்தான் பல பாடல்களை இயற்றினான். கிழக்கு பக்கமாக சென்று!!!!

இதனால் இதை என்று அறிவதற்கு இன்னும் பல மட்டங்கள் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது!!!

அதனால் இங்கு வந்து நலமாகவே நலமாகவே பட்டினத்தான்!!! பின் அவந்தனின் பாடல்களையும் பாட இன்னும் பல ஞானங்கள் ஏற்படும் என்பேன்!!!!!

அவைமட்டுமில்லாமல் முருகனைக் காண ஓடோடி வந்தான் அருணகிரி இங்கே!!!! (அருணகிரிநாதர்) 
பல தவங்களையும் மேற்கொண்டு பல பல வழிகளிலும் இதை என்று கூட!!!!!

இதனால் பூசலானும்(பூசலார் நாயனார்) இங்கே வந்து பின் ஈசனை வணங்கி வணங்கி பின் சென்று விட்டான் இதனால் பல உண்மைகள் கிடைத்துக் கொண்டே வரும்!!!!!

ஆனால் இன்னும் எதை என்று கூட நாக கன்னிகளும் இங்கே தான் இருக்கின்றார்கள்!!!

அதனால் முன் ஜென்மத்தில் ஏற்பட்ட நாக கன்னிகளுடைய!! பெண்களுடைய சாபத்தை!!!.... நிச்சயம் இங்கு வர அவையெல்லாம் அழிந்து போகும்!!!!! என்பேன்.

இதனால் நீங்கள் எதை என்று கூட.... இப்பொழுது யான் சொல்லிக்கொண்டே இருக்கும்...... இவையெல்லாம் ஈசனும் கேட்டுக் கொண்டிருக்கின்றான்!! பார்வதி தேவியும் கேட்டுக் கொண்டிருக்கின்றாள்!!
ஏன் நாக கன்னிகளும் கேட்டுக் கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

இவ் நாக கன்னிகள் எதை என்று கூற மனிதனுக்கு நிச்சயம் சிறப்பான பின் எவை என்று கூட துணையையும்(திருமணவரம்) அமைத்து தருவார்கள்!!!! இங்கு வந்து வழிபடுபவர்களுக்கு!!!

இது உண்மை என்பேன்!!!!

ஆனாலும் பொய்யானவர்களுக்கு நிச்சயம் எதையன்றி கூற எவை என்றும் கூறாமல் இருக்கும் அளவிற்கு கூட ஆனாலும் இதன் அடியிலும் பல மர்மங்கள் ஒளிந்துள்ளது என்பேன்!!!

அதனையும் யான் சொல்லிவிட்டால் இப்பொழுது மனிதர்கள் தவறாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்பேன்.

முன்பெல்லாம் இங்கு பல பல ஞானியர்களும் வந்து தங்கி தங்கி எதை என்று கூற ஆனாலும் ரிஷிமார்களும் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் இவ்வாலயத்தை சீரமைக்க!!!

அதிவிரைவிலே இவ்வாலயம் சீர்பெறும்!!

அனைத்தும் செப்பி விட்டேன்!!!

 மனிதர்களே புரிந்து நடந்து கொள்ளுங்கள்!!! நன்மையாக முடியும்!!! நன்மையாக முடியும்!!!

எதையென்று கூற சித்தர்களை வணங்குபவர்களுக்கு மறுபிறப்பு இல்லாத வாழ்வை யாங்கள் நிச்சயம் கொடுத்தருள்வோம்!!!!

இனியும் இன்னும் பல சிறப்பான திருத்தலங்களை எடுத்துரைப்போம்!!!

அங்கெல்லாம் சென்று கர்மம் தீர்த்து, சிறப்பாக வாழ்க்கையை வெற்றி கொண்டு மற்றவர்களுக்கும் உதவிட நன்று என்பேன்....

மற்றொரு வாக்கும் அதிவிரைவிலே செப்புவேன்!!!! 

முற்றே!!!!!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் ஆலயம். 
வன்னி வேடு கிராமம் 
வாலஜாபேட்டை. வாலஜா. 
ராணிப்பேட்டை மாவட்டம். 

போன் 9894635363
காலை 8 மணி முதல் 11மணிவரை.
மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். 

திருவிழா:
பவுர்ணமி, பிரதோஷம், சிவராத்திரி

சித்தன் அருள்......... தொடரும்!

7 comments:

  1. வேலூா்
    ஏழு ஷடாரண்ய திருத்தலங்கள் தாிசிக்க செல்லும் வழிகள்

    வேலூர்
    விஷாரம் ~18கிமி

    அருள்மிகு வால்மீகீசுவரர் கோயில்
    விஷாரம்

    Arulmigu Valmikieswarar Temple -Shada Aranya Kshetram
    087543 53055
    NH 48, Melvisharam, Tamil Nadu 632509
    https://maps.app.goo.gl/KShSUEGjoKSQivqz8

    வேப்பூா் ~4கிமி
    Sri Annai Balagujambikai Samedha
    Sri Vasishteswarar Temple
    Vepur
    Arcot, Tamil Nadu 632503
    https://maps.app.goo.gl/jhJSs5kkBFE7kgGN7

    ஆற்காடு
    புதுப்பாடி~11கிமி
    Arulmigu Sri Bharadwaj Temple-Shada Aranya Kshetram
    SH 5, Puthupadi
    Tamil Nadu 632503
    https://maps.app.goo.gl/681K6TAgSUPK9suZ7

    ஆற்காடு
    வாலாஜா
    வன்னிவேடு~10கிமி
    Shri Agastheeswarar Temple
    Walajapet Lake, Vannivedu, Tamil Nadu 632513
    https://maps.app.goo.gl/BFJmDZ4x3fA22o6Y8

    குடிமல்லூா்~8கிமி
    Sri Thiruvantheeswarar Temple - Shadaranya Shethram (Athiri Maharishi)
    ward no-02, Brahmin street, Walajapet taluk, Vellore, Gudimallur, Tamil Nadu 632513
    https://maps.app.goo.gl/7y17Rmra6Uwg48359

    வாலாஜா
    இராணிப்பேட்டை
    அவரக்கரை~10கிமி

    ஸ்ரீ பா்வதவா்த்தினி சமேத காச்யப ஈஸ்வரா் ஆலயம்
    அவரக்கரை

    Avarikarai Sivan Temple
    Avarikarai Thengal road, Ranipet, Navlock, Tamil Nadu 632404
    https://maps.app.goo.gl/bjNFMXzRcryZ9gJx8

    அருகில்
    காரை~1கிமி

    ஸ்ரீ கிருபாம்பிகை சமேத ஸ்ரீ கௌதம ஈஸ்வரா் ஆலயம்
    காரை

    Shivan Temple-Shada Aranya Kshetrams
    Bajanani Koil St, Karai, Tamil Nadu 632404
    https://maps.app.goo.gl/L2gHEpLz78YGPccq7

    பழமையான ஆலயம்
    ஸ்ரீ விஸ்வாமித்ரா் ஆலயம் ~4கிமி
    Arulmigu Visvamithirar Temple
    Puliyankannu, Karai, Tamil Nadu
    https://maps.app.goo.gl/5sW7XSZSus9VV3Qj6

    வேலூா்~28கிமி

    ReplyDelete
  2. வேலூர் மாவட்டத்தில் உள்ள ஷடாரண்ய ஷேத்திரங்கள் மிக முக்கியமானவையாக விளங்குகின்றன. பாலாற்றின் கரைகளில் அமைந்துள்ள இந்த சிவாலயங்கள் அனைத்தும், அங்கு லிங்கங்கள் அமைத்து வழிபட்ட முனிவர்களின் பெயர்களாலேயே அழைக்கப்படுகின்றன. மேலும் பக்தர்களின் குறைகள் நீங்கி, வாழ்வில் வளம் கொழிக்கும்.

    தல வரலாறு:
    ஆதியில் அன்னை பார்வதிதேவி பஞ்சபூத தலங்களில் ஒன்றான காஞ்சிபுரத்தில் சிவபெருமானை நினைத்து தவம் இருந்தார். பார்வதிதேவியின் தவத்தில் மகிழ்ந்த சிவபெருமான், பார்வதிதேவியை மணம் முடிக்க காஞ்சிபுரத்தில் எழுந்தருளினார். இறைவனின் திருமண விழாவை காண மகரிஷிகள், முனிவர்கள் என பலரும் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தனர். காஞ்சி மாநகரமே கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால் முனிவர்களும், ரிஷிகளும் தங்கள் தினசரி பூஜைகளை செய்வதற்கு அமைதியான இடம் தேடினர். அதற்காக பாலாற்றின் கரையோரம் இருந்த காடுகளில் தங்கினர். இவ்வாறு ரிஷிகள் தங்கி லிங்கங்கள் அமைத்து பூஜைகள் செய்த இடங்கள் பிற்காலத்தில் ஷடாரண்ய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் சுயம்பு லிங்கங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஷடாரண்ய ஷேத்திர சிவாலயங்கள் ஆற்காட்டை அடுத்த வேப்பூர் மற்றும் மேல்விஷாரம், புதுப்பாடி ஆகிய இடங்களில் பாலாற்றின் தென்புற கரைகளிலும், அவரக்கரை, காரை, வன்னிவேடு, குடிமல்லூர் ஆகிய இடங்களில் பாலாற்றின் வடபுற கரைகளிலும் அமைந்துள்ளன.
    காரைக்காடு : ஆற்காட்டிலிருந்து 7 கி.மீ. தொலைவில் இருக்கும் காரைக்காட்டில் கவுதமேஸ்வரர் ஏகாந்தமாக அமர்ந்து அருள்பாலிக்கிறார். கவுதமரிஷி வழிபட்ட ஈசன் இவர்.
    வன்னிக்காடு : காரைக்காட்டிலிருந்து 5.5 கி.மீ. தொலைவில் பாலாற்றின் வடகரையிலேயே பயணித்தால் வருகிறது வன்னிவேடு. இது முன்னர் வன்னிக்காடாக இருந்துள்ளது. அகத்திய மகரிஷி வணங்கிய ஈசன் இவர். புவனேஸ்வரி அம்பாள் சமேத அகத்தீஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக இங்கு கோயில் கொண்டுள்ளார்.
    குடிமல்லூர் : வன்னிவேடு கோயிலிலிருந்து பாலாற்றங்கரையின் இடது கரையில் உள்ளது குடிமல்லூர். வன்னிவேட்டிலிருந்து 5.8 கி.மீ. தொலைவில் அணைக்கட்டு செல்லும் சாலையில் இந்த ஆலயம் உள்ளது. திரிபுரசுந்தரி அம்பாள் சமேத அத்திரியீஸ்வரர் இங்கு அருள்புரிகிறார். அத்திரி ரிஷி வழிபட்ட தலம் இது.
    புதுப்பாடி: குடிமல்லூரிலிருந்து 6 கி.மீ. தொலைவில் ஆற்காடுசெய்யாறு சாலையில் இந்த ஊரும், ஊருக்குள் ஆலயமும் அமைந்துள்ளது. பரத்வாஜ ரிஷியால் ஸ்தாபிக்கப்பட்டு பூஜிக்கப்பட்டதால், ஈசன் பரத்வாஜேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
    வேப்பூர்: புதுப்பாடியிலிருந்து 5.2 கி.மீ. தொலைவில் பாலாற்றின் தென்கரையில் வேப்பூர் அமைந்துள்ளது. இது வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பதால், வசிஷ்டேஸ்வரர் கோயில் என்று அழைக்கப்படுகிறது. பாலகுஜாம்பிகை சமேத வசிஷ்டேஸ்வரர் இங்கு அருள்பாலிக்கிறார்.
    மேல்விஷாரம்: வேப்பூரிலிருந்து தென்கரையில் 4 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருத்தலம் விஷாரம். வால்மீகி முனிவர் இந்த எட்டிமரக்காட்டில் வந்து சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார். இதனால் ஈசன் வால்மீகீஸ்வரர் என்று வணங்கப்படுகிறார். இந்த ஆறு தலங்கள்தாம் ஷடாரண்ய க்ஷேத்திரங்கள்’’ என்று அழைக்கப்படுகின்றன. இந்த ஆறு ரிஷிகள் வழிபட்ட தலங்களுடன், காஷ்யபர் வழிபட்ட ஆவாரங்காட்டு இறைவனையும் வழிபடவேண்டும் என்பது மரபு.
    அவரக்கரை: காஷ்யபர் ஆவாரங்காட்டில் சிவபெருமானைக் குறித்து தவமியற்றினார். அவர் மனதில், ஈசன் என்ன தனக்கு உபதேசிப்பது’’ என்பதாக ஒரு கர்வம் சிறுபொழுது ஏற்பட்டு மறைந்தது. அதன் காரணமாக ஈசன் அவருக்கு நீண்ட காலம் சென்றே தரிசனம் தந்தார். கல்ப மூலிகை ரகசியங்களையும் எடுத்துரைத்தார்.
    ஆற்காட்டில் இருந்து கார், ஆட்டோ அல்லது இரு சக்கர வாகனத்தில் சென்று கோயில்களை தரிசிக்கலாம். பேருந்து வசதிகள் எல்லா கோயில்களுக்கும் இல்லை. ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை பகுதிகளில் சுமார் 60 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த கோயில்கள் அமைந்துள்ளன

    ReplyDelete
  3. எம்பெருமானே அகத்தீசா... ஞானஅருட்கடலே, நின் திருத்தாளை (எண்ணமலரால்) - மலரால் வணங்குகிறேன். உன் பெயரை கூறவே தன் வாழ்நாளில் ஒருவர் 12 வருடம் (தவம்) காக்கவேண்டும். எதையன்றி கூற அது உண்மையே, அதுவும் உம்மையே - இதுவும் உண்மையே. தங்களின் குழந்தைகளை (அடியவரகள்) விழி பார்த்து நல்வழியில் கைகோர்த்து நடத்திச் செல்லுங்கள். அடியவன் இவன் வர சித்தமாயிருக்கிறான். இப்பிறவிக்கடலை - இப்பிறவிக்கடனை கடைத்தேற்றுங்கள். இந்த ஜீவ அருள் ஓலையில் என்னுடன் நீங்கள் உறையாடவில்லை என்றாலும் இப்பதிவின் மூலமாய் - தாங்களே மூலமாய் - அனைத்திற்கும் மூலமாய் கண்டு கண்டு கண்டு உரையாடி உறவாடுகிறேன். இந்நேரம் இப்பதிவு - என் - என் - எண்ணப்பதிவு உங்களை வந்தடைந்திருக்கும் என்ற உறுதியான நம்பிக்கையில் அன்புடன் அடியவன். ச. சுந்தரமூர்த்தி.

    ReplyDelete
  4. பொது தகவல்:
    கோயில் பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் தங்களுக்குரிய திசையில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். இவர்களில் வடக்கு திசையில் குபேரரும், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோருக்கும் சந்நிதி இருக்கிறது.


    பிரார்த்தனை


    செவ்வாய் தோஷ நிவர்த்திக்கும், சனியின் தாக்கத்தைக் குறைத்து, இனிமையாய் வாழ இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.


    நேர்த்திக்கடன்:
    சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபட்டும், முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைத்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.



    பாலாற்றின் வடகரையில் அமைந்த கோயில் இது. அகத்தியர் ஸ்தாபித்த லிங்கம் பாணத்தில் கை ரேகைகள் தெரிகின்றன. கடன் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் திங்களன்று சந்திரஹோரை நேரத்தில், சிவனுக்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்கிறார்கள். சிவன் சந்நிதி எதிரில் அகத்தியர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். சதயம் நட்சத்திர நாட்களில் இவருக்கு பூஜை நடக்கிறது. ஆவணி வளர்பிறை பஞ்சமியன்று இவருக்கு ரிஷி பூஜை நடத்தப்படும்.


    ஆவுடை அம்பிகை:
    அம்பாள் புவனேஸ்வரி ஆவுடையார் (பீடம்) மீது நின்று தவக்கோலத்தில் காட்சி தருகிறாள். நவராத்திரியின் போது இவளுக்கு ஹோமத்துடன் பூஜை நடக்கும். பவுர்ணமியன்று சப்தரிஷிகளான அகத்தியர், அத்திரி, வசிஷ்டர், காஷ்யபர், கவுதமர், பரத்வாஜர், விஸ்வாமித்திரர், ஜமதக்னி ஆகியோர் இவளை பூஜிப்பதாக ஐதீகம். இதற்காக அன்றிரவில் அம்பாள் சந்நிதி முன்பு, லகுசண்டி ஹோமம் நடத்துகின்றனர். சப்தரிஷிகளே இதை நடத்துவதாக ஐதீகம். இந்த பூஜை நடக்கும்போது 7 இலைகளில் ரிஷிகளுக்கு நைவேத்யம் படைப்பர்.


    அஷ்டதிக்பாலகர்:
    கோயில் பிரகாரத்தில் அஷ்டதிக் பாலகர்கள் தங்களுக்குரிய திசையில் தனித்தனி சந்நிதிகளில் காட்சி தருகின்றனர். இவர்களில் வடக்கு திசைக்குரிய குபேரருக்கு, செல்வ விருத்திக்காக வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபடுவர். வடமேற்கு திசைக்குரிய அக்னி பகவானுக்கு திருமணத்தடை நீங்க சிவப்பு வஸ்திரத்துடன் தக்காளி சாதம் படைப்பர். தெற்கு திசைக்குரிய எமனுக்கு விபத்தை தவிர்க்க பாலபிஷேகம் செய்வர்.


    பாகற்காய் மாலை:
    ஒரு வன்னி மரத்தின் கீழ் விநாயகர், சனீஸ்வரர் இருவரும் அடுத்தடுத்து உள்ளனர். வீடு, கட்டடம் கட்டும் பணியைத் துவக்குவோர் அது தடங்கலின்றி நடக்கவும், வாழ்க்கையில் கசப்பான அனுபவங்களில் மூழ்கியிருப்போர் அது நீங்கவும் இவர்களுக்கு பூஜை செய்வர். சனிக்கிழமைகளில், சனீஸ்வரருக்கு 17 பாகற்காய்களை மாலையாகத் தொடுத்து அணிவித்து எள் தீபமேற்றி வழிபட்டால் கசப்பை சனீஸ்வரர் ஏற்று நமக்கு விடுதலையளிப்பார் என்பது நம்பிக்கை.


    முருகனுக்கு பீட்ரூட்:
    செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு இங்கு உள்ள முருகனுக்கு பீட்ரூட் சாதம் படைக்கிறார்கள். இதனால் திருமணத்தடை நீங்கி சிறந்த வாழ்க்கைத்துணை அமையும் என நம்புகிறார்கள். காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சுப்பிரமணியர், சரபேஸ்வரர், காலபைரவர் ஆகியோருக்கும் சந்நிதி இருக்கிறது. பள்ளி திறக்கும் இந்த நேரத்தில் இங்குள்ள ஹயக்ரீவரை வழிபடுவது நல்லது. அகத்தியர் சிவபூஜை செய்யும் சுதை சிற்பமும் உள்ளது. வன்னிமர வனமாக இருந்ததால், வன்னிக்காடு என அழைக்கப்பெற்ற இத்தலம், பிற்காலத்தில் வன்னிவேடு என மருவியது.


    தல வரலாறு:
    ஒருமுறை அகத்தியர் வன்னி மரங்கள் நிறைந்த இத்தலத்தில் தங்கினார். மணலால் லிங்கம் அமைத்து சிவபூஜை செய்தார். தன்னை பூஜித்த அகத்தியரின் பெயரால் சிவன், அகத்தீஸ்வரர் என்று பெயர் பெற்றார். பிற்காலத்தில் இப்பகுதியை ஆட்சி செய்த மன்னர் ஒருவர் இவ்விடத்தில் கோயில் எழுப்பினார்.

    ReplyDelete
  5. ஷடாரண்ய தலங்களில் மிக முக்கியமானதாக விளங்கும் இந்த கோவிலில் ஞாயிறு தோறும் சரபேஸ்வரர் வழிபாடு நடக்கும். இதில் 50 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பார்கள்.

    ReplyDelete
  6. வாலாஜா : வாலாஜா அகத்தீஸ்வரர் கோயில் அம்மன் சன்னதியில் எண்ணெய் ஊற்றியதும் தூங்கா விளக்கு தானாக எரிந்து பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த வன்னிவேட்டில் புவனேஸ்வரியம்மன் சமேத அகத்தீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. க்ஷடாரண்ய ஷேத்திரங்களில் ஒன்றான இக்கோயில் அர்ச்சகர்களாக மனோஜ், கிருஷ்ணசாமி உள்ளனர். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை அர்ச்சகர் கோயிலை திறந்து சுவாமி மூலவர் சன்னதியில் உள்ள தூங்கா விளக்கை ஏற்றியுள்ளார். தொடர்ந்து, அம்மன் சன்னதி தூங்கா விளக்கிற்கு எண்ணெய் ஊற்றிய அர்ச்சகர் விளக்கை ஏற்ற திரியையும், தீப்பெட்டியையும் கொண்டுவர மூலவர் சன்னதிக்கு சென்றாராம்.

    அங்கு திரி கிடைக்காமல் மீண்டும் அம்மன் சன்னதிக்குள் திரும்பியபோது, எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்கில் தானாக வழக்கத்துக்கு மாறாக கிழக்கு முகமாக தீபம் சுடர்விட்டு எரிந்ததை கண்டு ஆச்சரியமடைந்தார். இதையறிந்து அங்கிருந்த பக்தர்கள் பக்தி பரவசத்தில் ஆழ்ந்தனர். பின்னர், நேற்று முன்தினம் இரவு விளக்கை அணைக்காமல் கோயிலை பூட்டிவிட்டு அர்ச்சகர் சென்றார். நேற்று காலை மீண்டும் அம்மன் சன்னதியை திறந்தபோது விளக்கு பிரகாசமாக எரிந்து கொண்டிருந்ததுடன் அதில் ஊற்றப்பட்ட எண்ணெயின் அளவு குறையாமல் இருந்ததாம்.
    இதையறிந்த வாலாஜா, வன்னிவேடு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இதை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த வீடியோ வைரலாகி உள்ளது.
    இந்த கோயிலில் ஏற்கனவே 6 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அதிசயம் நடந்தது. இந்த கோயிலின் அறங்காவல் குழு தலைவராக இருந்தவரும், கைலாய யாத்திரை சென்று திரும்பியவருமான சாம்ராஜ்யலட்சுமியும், அவரது தோழியான கங்கம்மாவும் 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ம் தேதி இரவு 7 மணியளவில் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய முதலில் புவனேஸ்வரியம்மன் சன்னதிக்கு சென்றனர்.
    அப்போது அங்குள்ள பஞ்சகோஷ்ட மூர்த்தியான துர்க்கையம்மன் மாடத்தில் இருந்து இறங்கும் படிகளில் மங்கலான உருவத்தில் சிறு பெண் கொலுசு சத்தம் ஒலிக்க இறங்கி பிரகாரத்தை சுற்றி நடந்து சென்றது. அப்பெண்ணை அழைத்தபடி 2 பேரும் பின்தொடர்ந்து சென்றபோது அந்த உருவம் புவனேஸ்வரியம்மன் சன்னதி மூலவருடன் சென்று ஐக்கியமானது.
    மேலும் அந்த உருவம் நடந்து சென்ற பிரகா தரையில் சிறுபெண்ணின் பாதங்கள் கல்லில் செதுக்கியதுபோல் அழுந்த பதிந்திருந்தது. இதை பார்த்த இருவரும் மெய்சிலிர்த்து போயினர். கலியுகமான இக்காலத்திலும் இறைவன் தனது அதிசயங்களை நிகழ்த்துவான் என்பதற்கு அத்தாட்சியாக தரையில் பதிந்த அம்மனின் பாதங்களை பக்தர்கள் காணும் வகையில் பாதுகாத்துள்ளனர்

    ReplyDelete
  7. Pranam to all devotees of agthiyar my humble request pls translate this post to english .We are egarly waiting for every post .Please do not suggest google translator it does not have 100% accuracy.

    ReplyDelete