​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 10 July 2022

சித்தன் அருள் - 1158 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் திருப்பதி வாக்கு!






6/6/2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு!! வாக்குரைத்த ஸ்தலம் : திருமலை திருப்பதி.

நமச்சிவாயனை பணிந்து வாக்குகளாக பரப்புகின்றேன் புசுண்டனவன்!!!

எதையென்று விளக்கும் அளவிற்குகூட மனிதனின் நிலைமை இல்லை....இல்லை என்பதற்கிணங்க எதையெதையோ பின்பற்றிக்கொண்டு!!... பின்பற்றிக்கொண்டு!!!  பின் நலன்கள் நடக்குமா??? என்ன??!!! 

ஆனால் கலியுகத்தில் இன்னும் பல தரித்திரங்கள் பின் நிச்சயமாய் வரும் என்பேன். வரும் என்பேன் இரத்த மழையும் பெய்யும் என்பேன். கலியுகத்தில் அவை மட்டும் இல்லாமல் பின் பூகம்பமும் பின் உணராமலே திடீர் திடீரென்று வரும் கலியுகத்தில்.

ஆனால் இவையெல்லாம் வரும்பொழுது கலி முற்றியது என்றே வைத்துக் கொள்ளலாம்.

இன்னும் மனிதன் வாழ வேண்டும் வாழ வேண்டும் என்பதற்கிணங்க வாக்குகளை கேட்டுக் கொண்டே இருக்கின்றான்.

ஆனால் பின் வாழ்ந்துடுவோமா என்ன!!? வாழ்ந்துடுவோமா என்ன!!? என்பதை கூட இறைவனே பின் நிச்சயம் பின் யூகிப்பான்!!!

யூகிப்பான்!! அவை மட்டும் இல்லாமல் இன்னும் இன்னும் ஏராளம் நடக்கப் போகின்றது இவ்வுலகத்தில்!!!

தாய் தந்தையரை நிச்சயம் பிள்ளைகள் மதிக்கப் போவதில்லை.... இதனால் இறை பலன்களை முதலிலேயே கூட்டிக் கொள்ளுங்கள் நிச்சயம்.

ஆனாலும் இதையென்று கூற ஒழுக்கங்கள் சீர்கெடும் இவ்வுலகத்தில். நிச்சயம் இவையென்று... ஆனாலும் இதனையும் நிமித்தம் நிமித்தம் ஆனாலும் பின் மனிதக் கருவில் கூட பின் ஐந்தறிவுள்ள ஜீவராசிகள் பிறக்கும் கலியுகத்தில்.

இப்படிப்பட்ட மாறுதல்கள் தான் ஏற்படும் உறுதியாகச் சொல்கின்றேன்.

அதனால் பக்தியில் நுழையுங்கள்! பக்தியை பின்பற்றுங்கள்! இறைவன் நிச்சயம் பாதுகாப்பான் அழகாக!!!

அவை விட்டுவிட்டு எதை எதையோ எண்ணி ஆனாலும் தரித்திர மனிதனுக்கு இன்னும் வாழ்கின்றோம்!! வாழ்கின்றோம்!! என்று ஆசைகளுடனே!!!!!

பல பல வழிகளிலும் பலபல பரிகாரங்கள்!!!

இவையெல்லாம் என்ன செய்யும்????????

ஆனாலும் இதையென்று ஆனால் மனிதன் மனிதனையே அடித்துக் கொள்வான்... இது நடந்து கொண்டுதான் இருக்கின்றது.

ஆனாலும் இதையென்று சூரியனும் பின் சிறிது லேசாகவே மறைவான்!! மறைவான் என்பதற்காக இல்லை. சிறிது தாமதமாகவே வருவான். சந்திரனும் தாமதமாகவே வருவான்.

ஆனாலும் இவற்றையெல்லாம் உணர்கின்ற மனிதா!!!!! 

உணர்ந்திருக்கவில்லை நியாயத்தை!!! நீதியை !!தர்மத்தை!! தர்மம் என்பதை கூட தெரியாமல் போய்க் கொண்டிருக்கின்றது இவ்வுலகத்தில்.

எவை??  எதனை?? நிமித்தம் காட்டி செய்ய வேண்டும் என்பதைக் கூட அதனால் தான் சித்தர்கள் யாங்கள் பல வாக்குகளையும் மனிதர்களுக்கு செப்பிக் கொண்டே இருக்கின்றோம்.

இதனைப் பயன்படுத்தினால் நன்று!!!

வாழவும் கற்றுக் கொள்ளலாம்!!! கலியுகத்தில் இறைவனை நாட!! நாட... கர்மாக்கள் ஆனாலும் எதை நிமித்தம் நிச்சயம் இறைவனே வழி விடுவான்.

அதனை விட்டுவிட்டு இன்னும் பரிகாரங்கள் ஆனாலும் தன் நிலைமையை என்ன நினைத்து எதை செய்தாலும் மனிதனுக்கு தோல்விகள் தான்.

ஆனாலும் நிச்சயமாய் பின் இறைவன் பலங்களை கூட்டி கொள்ளுங்கள்.... நிச்சயமாய் வாழ்வீர்கள் கலியுகத்தில்.

ஆனாலும் உயர் பெரியோர்கள் இப்பொழுதும் கூட இன்னும் பல மனிதர்கள்.... தர்மத்தை தெரியாமலே செய்து கொண்டு நல் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள்.

ஆனால் இனிமேலும் நிச்சயமாய் பின் பக்திமானே பக்தனுக்கு பின் எதிராவான்.

ஏன்??? மனிதன் இறைவனுக்கே எதிராக வருவான்!! இக்கலியுகத்தில் இதுதான் நடக்கப் போகின்றது.

இறைவன் இல்லை என்று சொல்லிவிடுவான்.

ஏனென்றால் இறைவனை நம்பி நம்பி ஏதும் நடக்கவில்லை என்ற நிலைமைக்கு வந்து விடுவான்.

ஆனால் இறைவன் நிலைமையை ஆனாலும் யூகித்து கொண்டே இருக்கின்றான்.... பின் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான்!! என்பதைக் கூட அறியாத முட்டாளே!!!!

இதை நன்கு உணர்ந்து கொண்டால் இறைவன் நிச்சயம் காப்பாற்றுவான் காப்பாற்றுவான் என்று இருந்தால் நிச்சயம் ஓர் நாள் காப்பாற்றுவான் அது வெகு நாளில் இல்லை.

இதனையே இன்னும் இன்னும் எதை எதை என்று உணர்வதற்குள் காலங்கள் சென்று விடுகின்றது என்பதையெல்லாம் யான்  சொல்லிக் கொண்டே இருக்கின்றேன்.

அதனால் சில சில திருத்தலங்களும் நல்முறையாகவே பின் இயங்கி வருகின்றது!!!

அதிலும் ஓர் ஆலயம் இப்புண்ணிய பூமியே!!!!(திருமலை திருப்பதி) 

இங்கே அழகாகவே பின் நாராயணனே தோன்றி!!! இதையென்று கொடுக்க தயாராகிக்கொண்டே இருக்கின்றான்.

நாராயணனின் வேலையை பார்த்தால்!!! இரவும் பகலமாக வேலை செய்து கொண்டிருக்கின்றான் இங்கு!!!!

ஆனால் மனிதா நீ தூங்குகின்றாய்.... சிறிது நேரமே சிறிது நேரமே வேலை செய்கின்றாய்!!

அப்படி என்றால் உந்தனுக்கு எப்படி புகழ் எப்படி சேரும்???????

பின் பணபலன்கள் தேவை என்கின்றாயே?? எப்படி??

சோம்பேறி மனிதா!!!

பெருமாளை பார்த்து தெரிந்து கொள்!!!!

அவந்தன் எவ்வளவு? ஓய்வு இல்லாமல் உழைக்கின்றான்!!!! என்பதை கூட.....   
அதனால்தான் அவன் பெரும் செல்வந்தனாக!!!!  இங்கே இருக்கின்றான்!!!

மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்!!!!

பின் உயரமாக ஆக வேண்டுமென்றால் நிச்சயம் உழைக்க வேண்டும்!!!!
உழைத்துத்தான் ஆக வேண்டும்!!!! உழைத்து!!! உழைத்து!!!!

ஆனால் இறைவனிடத்தில் சென்றுவிட்டால் அனைத்தும் வரும் என்பது கூட மனிதனின் முட்டாள் எண்ணங்களே என்பேன்... என்பதைக் கூட அறியாமல் அதனால் நிச்சயம் நீங்கள் முயற்சிகள் செய்து கொண்டே இருந்தால் நிச்சயம் இறைவன் பின் கையைப் பிடித்து இழுத்துச் செல்வான்!!!

இன்னும் ஏராளம்!! ஏராளம்!!! செந்தூரிலே (திருச்செந்தூர்) பின் நன்கு முருகனும் உறங்குவதும் இல்லை!!!

பழனி தன்னிலே உறங்குவதும் இல்லை!!! மனிதனைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றான்!!

இதனால் தான்  பின் மனிதர்கள் பின் எவ்வாறு என்பதையும் கூட புகழின் உச்சியில் பின் முருகனும் இருக்கின்றான்!!!!

அண்ணாமலையில் கூட வலம்(கிரிவலம்) வந்து கொண்டே இருக்கின்றார்கள்!!! ஏனைய சித்தர்களும்!! ஞானியர்களும்!! ரிஷிகளும்!!......... ஆனாலும் தூங்குவானா?? என்ன?? ஈசனும் கூட......!!!!

எதிர்த்து நில்லுங்கள் இதனால் தான் ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது புலர்ச்சி ரூபமாக.......

இதனால்தான் இறைவன் மிக உயரத்திலே இருக்கின்றான்!!!!

பின் மனிதர்கள் தாழ்ந்த நிலையில் இருக்கின்றனர்!!

ஆனாலும் நீ உயர்ந்த நிலைக்கு செல்ல வேண்டுமானால் நிச்சயம் அயராது இரவு பகலுமாக உழைக்க வேண்டும் அப்படி உழைத்தால் தான் இறைவனும் கையைப் பிடித்து இவந்தன் இப்படி உழைத்து இருக்கின்றானே என்று கூட நிச்சயமாய் பின் உயரே தூக்கி விடுவான்.

ஆனாலும் ஓர் அழகான கிராமத்தில் ஒரு சோம்பேறி இருந்தான் இவந்தனக்கு அனைத்தும் வந்து கொண்டே இருந்தது. அன்னை தந்தையரை மதிக்காமல் கூட...... பின் உணவு வந்து கொண்டே இருந்தது அனைத்தும் வந்து கொண்டே இருந்தது.

ஆனால் ஓர் சிறுவயதில் இருக்கும் மனிதன் கூட அனுதினமும் அவ்வழியில் சென்று கொண்டு இறைவனை பிரார்த்தித்துக் கொண்டிருந்தான்.

இறைவா! இறைவா!! என்று கூட......

அனுதினமும் அவந்தனுக்கு வேலைகள் இறைவனை வணங்குவது தியானங்கள் செய்வது.

ஆனாலும் இச் சோம்பேறிக்கு  இவ்விஷயம் தெரிய வந்தது....

அவனைப் பார்த்து கேலியும் செய்தான்.... எப்படி என்று கூட...

மனிதனே இதை என்று அனுதினமும் நீ இறைவனிடத்திற்கே சென்று வழிபட்டு கொண்டிருக்கின்றாய்!!

இறைவன் என்ன உந்தனுக்கு கொடுத்தான்???

அவை மட்டும் இல்லாமல் அவன் நாமமே ஜெபித்துக் கொண்டிருக்கின்றாயே உந்தனுக்கு கஷ்டங்கள் தான் வந்து கொண்டிருக்கிறது என்று.

ஆனாலும் பின் அமைதியாக வழியிலேயே அவந்தன்.... அப்பொழுது கூட இறைவனை விட்டதில்லை சென்று கொண்டே இருந்தான்.

ஆனால் அச்சோம்பேறிக்கு அனைத்தும் கிட்டிக் கொண்டே இருந்தது.. பின் எதை வேண்டுமானாலும்....

ஆனால் பின் அவ் நல் மனிதன் பின் அவ்வழியாக வரும்பொழுது மீண்டும் சோம்பேறி...... இப்படி இறைவனுக்காக இரவும் பகலுமாக இப்படி திரிந்து கொண்டிருக்கின்றாயே!!!! வயதுதான் ஆகிக்கொண்டே போய்க் கொண்டே இருக்கின்றதே தவிர உந்தனுக்கு என்ன?? தான் கொடுத்தான்?? இறைவன்!!!

அதனால் இறைவனை வணங்காதே!!!! 

வணங்காதே!!! பின் யான் என்ன!!!!! இறைவனை வணங்குகின்றேனா என்று பார்!!! எந்தனுக்கு அனைத்தும் கிடைக்கின்றது அழகாக பின் வீடு இருக்கின்றது அழகாக வண்டி வாகனங்கள் இருக்கின்றது அனைத்தும் சொந்த பந்தங்கள் ஏராளமாக இருக்கின்றார்கள்... பின் விதவிதமாக உணவுகள்!!! ஆனாலும் அதையெல்லாம் நீ உனக்கு கொடுத்து வைக்கவில்லையே!!!! பைத்தியனே!! என்று... திட்டி தீர்த்தான்.

ஆனாலும் அவ் நல்மனிதன் இல்லையப்பா!!!!!

""" இறைவன் தான் மெய்!!!!!

ஆனாலும் ஏற்றுக் கொள்ளவில்லை அச்சோம்பேறி.... பின் இறைவன் மெய் என்றால் காண்பி!!!!!.....என்று கூற.. 

ஆனாலும் மௌனத்தை சாதித்தான் அவ் நல் மனிதன்.

திரும்பவும் திருத்தலங்களுக்கு அலைந்து கொண்டே இருந்தான்.....

இறைவனைப் பார்த்து இறைவா!!!!

உன்னையே நம்பிக் கொண்டிருக்கின்றேனே!!!

பின் எவையென்று எதனையும் நீ தரவில்லையே!!!!

என்பதற்கிணங்க என் மனது கலங்கவில்லை!!!

ஆனாலும் என்னை பின் போகும் வழியிலும் வரும் வழியிலும் ஒருவன் எதை என்று நினைக்காத அளவிற்கு கூட திட்டி தீர்த்துக் கொண்டே இருக்கின்றான் எதையென்று அறிய!!!!

ஆனால் திரும்பவும் செல்வதற்கே அவ்வழியில் அவந்தனுக்கு அவமானமாக இருந்தது.

இருந்தும் பின் ஆனாலும் அவ் சோம்பேறியானவன் பல மனிதர்களை அழைத்து மீண்டும் பின் அவ்வழியாகத்தான் அவ் இறை பக்தி உள்ள நல் மனிதன் சென்று கொண்டிருந்தான்.

இதனால் பின் அனைவரும் கேலி செய்தனர் அவ் நல் மனிதனைப் பார்த்து!!

பின் இவ்வாறா!!!! இவ்வாறா!!!! 

நீயும் இறைவனை தேடி தேடி செல்கின்றாய்!!! உந்தனுக்கு ஏதும் நடக்கவில்லை.

யாங்கள் எங்களை பார் அனைத்தும் இருக்கின்றன என்று சந்தோஷப்பட்டனர்.

ஆனாலும் அவன் மனம் நொந்தது!!! ஆனாலும் பின் ஓரிரு மாதங்கள் சென்று விட்டது....

பின் பலத்த மழை!!! பலத்த மழை வந்துவிட்டது!!!

எவையென்று கூட உற்றார் வீடுகள் பல வழிகளிலும் நீர் பெருக்கெடுத்து ஓடியது. அனைத்தும் அழிந்து அழிந்து கொண்டே போயிற்று!!!! 

ஆனால் அனைவரும் அப்பொழுது..... இறைவா!!! இறைவா !!!என்று நினைத்து நினைத்து ஆனால் இறைவன் என்ன!!! வருவானா? என்ன??

ஆனால் பின் அவ் பக்தன் நன்றாகவே சிறு ஓலை குடிசையில் இருந்தாலும் அங்கு தண்ணீர் ஒன்றும் செய்யவில்லை அங்கு வெள்ளம் புகவில்லை... செல்லவில்லை எதை என்று கூற....

அப்பொழுது பின் எதையென்று அறிந்த அனைவரும் பின் அழிவின் பாதையை நோக்குகின்றது என்பதற்கிணங்க பின் அனைவரும் அவனிடம் சென்று முறையிட்டு.....

மன்னித்து விடுங்கள் பக்தா!! மனிதா!! இதையென்று!!! கூட!!! 

ஆனாலும் ஆச்சரியம் அனைத்தும் அழிந்துவிட்டது வீடுகள்!!!

ஆனாலும் யாங்கள் எப்படியோ எங்களை காப்பாற்றிக் கொண்டோம் அனைத்தும் சென்று விட்டது பின் உடம்பும் உயிரும் மட்டும்தான் இருக்கின்றது... அதனால் காப்பாற்றுங்கள்!! காப்பாற்றுங்கள்!! என்று கூட.

ஆனால் அவ்பக்தனும் நல்முறையாக இறைவனிடத்தில் முறையிட்டான்....பின் 

இறைவா!!!! இவர்களுக்கெல்லாம் புத்திகள் புகுத்தி விட்டாய்.. ஏதாவது செய் என்று கூற. 

அதனால் நிச்சயம் இதை என்று கூற அதனால் மறுநாளே பின் ஈசன் வந்தான்....ஓர் அரசன் வடிவில் வந்து பின் எதை என்று கூற அடியோடு அழித்து பின் ஏதோ இருப்பிடத்திற்காக பல குடிசைகளை வடிவமைத்து தந்து உண்ண!!! அன்ன ஆகாரங்கள்!!! பல வகைகளை செய்தான்.

அப்பொழுதுதான் அனைவரும் இறைவனைப் பற்றி தெரிந்து கொண்டார்கள்!!!. சொல்லிவிட்டேன் இப்பொழுது கதையிலிருந்து என்ன புரிகின்றது??? என்றால் நிச்சயம் இறைவனை மதிக்காவிடில் இப்படித்தான் இறைவன் செய்வான் சொல்லிவிட்டேன் நிச்சயமாக!!!

அதனால் திருந்திக் கொள்ளுங்கள்!!!

பொய்யான பக்திகள் வேண்டாம்!!!

பின் மனதில் இறைவன் இல்லை இல்லை என்று சொல்வது....ஆனால்....

இதையென்று கூற பின் ஏதாவது கொடுத்தால் இறைவன் இருக்கின்றான் ஏதும் கொடுக்கவில்லை என்றால் இறைவன் இல்லை இதுதான் நடந்து கொண்டிருக்கின்றது கலியுகத்தில்...

கலியின் காலத்தில் இன்னும் மனதை மாற்றுவான்.... மனதை பக்குவப்படுத்தாமல் பல தீய செயல்களிலும் மனிதன் இறங்குவான். இறங்குவான் இன்னும்...

பல நோய்களும் தொற்றிக் கொண்டே தான் வருகின்றது.. மனிதனுக்கு!!

தீராத வியாதிகள் வரும்!!!

இவற்றையெல்லாம் எதனிலிருந்து பாதுகாக்க வேண்டுமென்றால்.... நிச்சயம் நேர்மை!! நீதி!! தர்மம்!! இவற்றை செய்தால்தான் நிச்சயம் நிச்சயம் காத்துக் கொள்வீர்கள்.

இவையன்றி கூட பின் நல்விதமாகவே ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக இருங்கள் பக்தனாக!! உண்மை பக்தனாக!!!

பின் ஒவ்வொரு மனிதனும் சொல்வான் யான்  நல்லவனாக இருக்கின்றேன்...யான் எதற்கும் தீங்கு செய்வதில்லை!! ஏன் என்னை இப்படி சோதிக்கின்றாயே?? என்று இறைவனிடம் கேட்டவரும் உண்டு.

ஆனால் இறைவனோ... பின் நீ நல்லவனா?? என்று கூட....

நல்லவனாக இருந்தால் இறைவன் ஏன் செய்ய மாட்டான்?!

செய்ய மாட்டான் என்பதற்கு இணங்க உறுதியாக பின் நிச்சயம் நீ நல்லவனாக இருந்தால் நிச்சயம் இறைவன் செய்வான்!! கெட்டவனுக்கும் செய்வான் ஆனாலும் பின் கெட்டவனுக்கு அதி விரைவில் அனைத்தும் இழக்கும் நிலைமை... ஏனென்றால் பின் கெட்டவனுக்கு ஓர் உரிமையை கொடுக்கின்றான்!! இதிலாவது திருந்திக்கொள் என்று கூட...

ஆனால் திருந்தாமல் அவனே கூட படுகுழியில் விழுகின்றான்.

ஆனால் நல்லவனுக்கும் எதை என்று கூறாமலே இறைவன் கொடுத்துக்கொண்டு தான் வருகின்றான்!!!

இவை உணர!!!!.........

 அதனால் இன்னும் பல மனிதர்கள் பின் ஈசனிடத்தில் 

ஈசா!!!!!! நீ இருப்பது உண்மையா???  உண்மையா??? எந்தனுக்கு இவ்வளவு கஷ்டங்கள் யான் என்ன தவறு செய்தேன் என்று கூட......

ஆனால் ஈசனோ நகைக்கின்றான்!!!!!! 

நீ என்ன தவறு செய்தாய் என்பது எந்தனுக்கு மட்டுமே புரியும்... உன் மனசாட்சிக்கு மட்டுமே புரியும் என்று கூட.

அதனால் திருந்திக்கொள்ளுங்கள் !!!

எதனால் கஷ்டங்கள் வருகின்றது?? என்றால் ??

நீங்கள் சிறிது யோசித்துக் கொள்ளுங்கள் போதுமானது... என்ன தவறு?? செய்துள்ளீர்கள் என்று கூட..

பின் யாராவது நிச்சயம் இனிமேலும் எதை என்று கூற மனசாட்சியை தொட்டு யான் நல்லவன் என்று சொல்லுங்கள் பார்ப்போம்!!

யான் பதிலடி கொடுக்கின்றேன்!!!

எப்படி என்று கூட.... நீ எப்படி எல்லாம் வாழ்ந்து வந்தாய் என்று கூட.....

நிச்சயம் வரும் காலங்களில் சித்தர்களை ஏமாற்றவும் முடியாது!!! ஏமாற்றி பிழைக்க முடியவும் முடியாது சொல்லிவிட்டேன்.

யாங்கள் நிச்சயம் தண்டிப்போம்... சொல்லிவிட்டேன்!! சொல்லிவிட்டேன்!!

சொல்லிக்கொண்டே தான் வருகின்றோம் எதற்காக என்று கூட.....

சித்தன் எதை கேட்டான்???????

அன்பை மட்டும் தான் கேட்டான்!!!!!!!!

இறைவன் எதை கேட்டான்????

அன்பை மட்டும் தான் கேட்டான்!!!!

ஞானிகள் எதை கேட்டனர்????

அன்பை மட்டும் தான் கேட்டனர்!!!!

ஆனால் மனிதர்களே!!!!!

எதை எதையோ பின்  கேட்கின்றீர்களே!!!!

இறைவனுக்காக.... இது நியாயமா????

யானும் பின் பின் பின்னாக மனிதனுக்கு வாக்குகள் உரைப்பதில்லை என்ற எண்ணத்திற்கே வந்து விட்டேன்.....

ஆனால் பின் உயர்ந்த கருணை உள்ளம் கொண்ட அகத்தியனே..!!!

இவ்வாறு மனிதர்கள் ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது......நாம் ஏன் பின்.... வரக்கூடாது?? என்று கூட வந்துவிட்டேன் (இப்புவியுலகில்)...

ஆனால் என்னுடைய பெயர்களைச் சொல்லியே பரிகாரங்களாம்!!!!!!!!!!!!

இன்னும் எவையென்று கூற.... யான் என்ன!!?? பின் பரிகாரங்கள் மனிதர்களுக்கு  சொல்வதற்கு  யான்!! என்ன!!! முட்டாளா!!! என்ன??????????

எதையென்று கூற அதனால் பொதுவாகவே சொல்கின்றேன்!!!

ஒழுக்கமாக எவன் ஒருவன் அதிகாலையிலே துயிலெழுந்து இறைவனை நாடுகின்றானோ அவந்தனை யாராலும் ஒன்றும் செய்ய இயலாது!!!

ஆனால் நிச்சயம் இவை செய்யுங்கள் முதலில்!!!

அதிகாலையிலே எழுந்து இறைவனை பிரார்த்தித்து ஏதாவது அன்பை பரிமாறிட்டு பின் ஏதாவது  உயிரினத்திற்காவது உணவு கொடுத்து வந்தால் நிச்சயம் நீ வாழ்வாய் என்பேன்!!!

அதை விட்டுவிட்டு........

பின்... பின் சூரியன் பின் பின் வருவதற்கு முன்பே பின் எவை என்று நிமித்தம் நிமித்தம் காட்டி எவன் ஒருவன் சூரியனை பின்(சூர்யோதய தரிசனம்) வரவழைக்கின்றானோ அவன் தான் உயர்ந்த மனிதன் ஆவான்!!!!

மற்றவர்களுக்கு நிச்சயம் கஷ்டங்கள் தான் ஏற்படும் என்பேன்.

சூரியனும் அதிகாலையில் வந்து பார்ப்பான். யாராவது பின் எழுந்து நிற்கின்றார்களா என்று கூட....

பின் அவ் சூரியன் வருவதற்கு முன்பே எழுந்து நின்றால் சூரியனின் ஆசிகள் பரிபூரணமாக கிட்டி நிச்சயம் உயர்வான இடத்திற்கு செல்வான்.

அதேபோலத்தான் சந்திரனும் பார்த்துக் கொண்டே இருப்பான்.

பின் இரவு நேரத்தில் எவரொருவர் அதிகமாக கண் விழித்து பின் உழைக்கின்றானோ... இறைவனை தியானித்து தியானங்கள் செய்கின்றானோ அவந்தனுக்கு சந்திரனும் நிச்சயம் கொடுப்பான்.

இன்னும் பல சூட்சமங்கள் அடங்கியுள்ளதப்பா!!!!!! அடங்கி உள்ளது மனித பிறவிகளே!! !

ஆனால் மனிதன் திருந்துவதாகவே இல்லையே!!!! எதையெதையின் மீதோ மனதை வைத்து.... யான் அதுவாக வேண்டும் இவையாக வேண்டும்... யான் மருத்துவனாக வேண்டும்.... இதையன்றி கூற யான் ஞானியாக வேண்டும்....... என்பதையெல்லாம் நீ நினைத்தால் ஆகுமா??? என்ன!!!!

நிச்சயம் ஆகாது!!!!

சித்தர்கள் யாங்கள் நினைத்தால் தான் உண்டு.... அதையும் தெரிந்து கொள்ள வேண்டும்..

இதற்குப் பல பரிகாரங்கள் பல பல உபதேசங்கள் இவையெல்லாம் ஒன்றுக்கும் உதவாது!!!!

எவை??  பின் வாயில் சரியாக உப்பை வைத்துக் கொண்டால் என்ன ஆகும்?? என்பதை கூட தெரியும்.

இதனைத் தான் சொல்கின்றேன்!!!

அதனால் தியானங்கள் செய்யுங்கள்!!! யான்  சொல்வதை பின் இவை என்று கூற ஆனாலும் சொல்கின்றேன்.

யாங்கள் உரைப்பது நிச்சயம்... நல்லோர்க்குத்தான்!!!  பின்.... கர்மம் இல்லாதவன் தான் ஓதவும் முடியும்.... சொல்லிவிட்டேன்!!!

பின் கர்மம் இருந்தால் நிச்சயம் எங்கள் வாக்குகளை கேட்கவும் முடியாது!! ஓதுதல் பின் மிகச் சிறப்பாக எதை என்று கூற உணர்ந்து கொள்ளவும் முடியாது!!!

இதுதான் கர்மா!!!

கர்மா பூமியில் பிறந்து விட்டு சித்தர்களை நாடி!!!  நாடி!!!!......

சித்தர்கள் எதற்காக வந்தார்கள்??? இதனையுமென்று கூற மனிதர்களை காக்கவே வந்தார்கள்.

இதையன்றி கூற இப்படி பொய்யான மனிதர்கள் இப்படி பொய்யானவை தேடி தேடி அலைந்து மாண்டு மாண்டு மீண்டும் மீண்டும் பிறப்புகள் எடுத்து தவிக்கின்றானே என்பதற்கிணங்க....

யாங்கள் மனிதனை பிறவி கடலில் இருந்து நீக்குவதற்காகவே நிச்சயம் சித்தர்களும் ஞானியர்களும் ரிஷிகளும்!!!!

ஆனாலும் மனிதனோ யான் கர்மத்தில் தான் விழுவேன்!!!! பிறவி தான் எடுப்பேன் கஷ்டங்கள் தான் படுவேன் என்று கூட போய் திரிந்து கொண்டிருக்கின்றான்....

பைத்தியக்கார மனிதா!!!!
பைத்தியக்கார மனிதா!!!!

திருந்திக்கொள்!!! 

ஏன் இந்த நிலைமை???

அதனால்தான் ஒவ்வொரு சித்தனும் மனிதனுக்கு சரி என்று ஒவ்வொரு உத்தரவுகளும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்.

அதனையும் விட்டுவிட்டு இதையும் ஓதாமல்.... எந்தனுக்கு.... வாக்குகள் வேண்டும்!!! வாக்குகள் வேண்டும்!!!!...... என்று சொன்னால்.....????

நீ முதலில் என்னசெய்தாய்???

எவ் தர்மத்தை செய்தாய்??

எவர் நலனை தன் நலனாக நினைத்துப் பாடுபட்டாய்??? எவருக்காக பாடுபட்டாய்? பின் பிறர் நலனை விரும்பினாயா என்ன ???

மனித முட்டாளே!!!

உங்களுக்கு என்ன!!!!! வாக்குகள் சொல்ல யாங்கள் என்ன...???? வேலைக்காரர்களா!!! என்ன???

நீ தர்மம் செய் முதலில்!!!!

யாங்களே வருவோம்.. உங்கள் இல்லத்திற்கு தேடி!!!!!

அதை விட்டுவிட்டு எதையும் செய்யாமலே பின் சித்தர்கள் வந்து உரைப்பார்களா?!! என்று!!!

எதையென்று கூற ஆனால் இதையும் உணர்ந்து கொள்ளுங்கள்!!!!

மற்றவருக்காக எதைச் செய்துள்ளீர்கள் என்று நினைத்துக் கொள்ளுங்கள் இதை பல வாக்குகளிலும் செப்பி விட்டேன்.....

நீங்கள் ஏதாவது செய்திருந்தால் தான்.... அப்புண்ணியத்தின் வழியாக யாங்கள் வருவோம்!!!!

இதுதான் உண்மை!!!!

எதையென்று கூற அதை விட்டுவிட்டு யாங்கள் வாழ வேண்டும்... எங்கள் பிள்ளைகள் வாழ வேண்டும் என்று தரித்திர மனிதா நினைத்து விடாதே!!!!

நிச்சயம் கஷ்டங்கள் தான் தோன்றும்!!!

எதையென்று கூற நீங்களும் பல வாக்குகளை பல சுவடிகளிலும் படித்துக்கொண்டு தான் பின் பல மனிதர்களும் சென்று கொண்டு தான் இருக்கின்றீர்கள்.....

என்ன ஆனது????  கடைசியில்???? 

பைத்தியக்காரனாகத்தான் ஆகி கொண்டிருக்கின்றாய்!!!

அதனால் முதலில் நீ என்ன நினைக்கிறாய்!!! மற்றவர்களுக்காக செய்.!!

யாங்கள் நிச்சயம் உன் இல்லத்திற்கே வந்து அனைத்தும் கொடுப்போம்!!!உன் விதியை கூட மாற்றி அமைப்போம்!!!!

இதையன்றி கூற இதை நிச்சயம் மனிதர்களே வரும் காலங்களில் திருந்திக் கொள்ளுங்கள்.

நிச்சயம் யாங்கள் ஒரு ராஜ்ஜியத்தை நிச்சயம் உருவாக்குவோம் நிச்சயம் உருவாக்குவோம்.

இவையென்று விட்டுவிட மாட்டோம்!!!!

அடுத்த வாக்கிலும் இன்னும் பலமான வாக்குகள் காத்துக் கொண்டிருக்கின்றது பின் உரைக்கின்றேன் நலமாகவே!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..............தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமஹ.
    ஐயா, இந்த வாக்குப் பக்கத்தில், குருநாதர் அளித்த வாழ்க்கை அனுபவ பதிவைப் பகிர்வது ஆச்சார்யமாக உள்ளது. குருநாதர் அருள் அனைவர் உள்ளத்தையும் நிரப்பட்டும்.

    http://fireprem.blogspot.com/2022/06/blog-post.html?m=1

    இறைவனிடம் இறைவனையே கேள் !!!

    ReplyDelete
  2. முதலில் எனது வினாக்களுக்கு பதில் கூறுங்கள் மற்றவை பிறகு பார்க்கலாம்

    ReplyDelete