​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 13 July 2022

சித்தன் அருள் - 1161 - அன்புடன் அகத்தியர் - அகத்தியரும் சிறு குழந்தையும்!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே

சமீபத்தில் ஐந்து வயதே ஆன ஒரு பெண் குழந்தை குரு அகத்தியரின் மீது மிகுந்த ஈடுபாடும் பக்தியும் கொண்ட குழந்தை.

அந்தக் குழந்தைக்கு குருநாதர் அகத்தியர் பெருமானிடம் பேச வேண்டும் சில தன்னுடைய கேள்விகளை தெரிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டே இருந்தது. அந்தக் குழந்தையின் விருப்பத்தையும் பக்தியும் அறிந்த அகத்தியர் பக்தையான சகோதரி ஒருவர் திரு ஜானகிராமன் ஐயாவை தொடர்பு கொண்டு அந்த குழந்தையின் விருப்பத்தைச் சொல்லி குருநாதரிடம் வாக்கு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்...

அதன்படியே திரு ஜானகிராமன் ஐயாவும் குருநாதர் அகத்திய பெருமானிடம் அந்த குழந்தையை தொலைபேசியின் வாயிலாக குருவிடம் குழந்தையை உரையாடச் செய்தார்.

அந்தப் பிஞ்சு குழந்தையும் குருநாதர் அகத்தியரும் ஜீவநாடியின் மூலமாக அந்த குழந்தையின் எண்ணங்களுக்கு ஏற்ப குருநாதர் தந்த பதிலும் இந்த உலகத்திற்கு பொதுவாக சொன்ன விஷயங்களும் இந்த தொகுப்பில் காணலாம்.

குழந்தை குருநாதரிடம்... 

என் பெயர் ஹர்ஷினி.... எனக்கு அகத்தியரிடம் ஆசீர்வாதம் வேண்டும்.

அடுத்து ஐ ஏ எஸ் அதிகாரியை விட உயர்ந்த அதிகாரியாக வேண்டும். அப்படி அதிகாரியாகி நான் ஒரு சட்டம் இயற்ற வேண்டும்!!! யாரும் அசைவ உணவு சாப்பிடக்கூடாது என்று நான் சொல்ல வேண்டும். ஏன்னா அதுவும் ஒரு உயிரினம் தானே அதை கொன்று தின்பது பாவம் தானே...... அவற்றைக் கொன்று தின்றால் அவையெல்லாம் அகத்தியரிடம் சென்று முறையிடும் என்னைக் கொன்று தின்று விட்டார்கள் என்று!!!

அடுத்து நான் அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும்

ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் வரக்கூடாது

ஏழைகளுக்கெல்லாம் உதவி செய்து அவர்களையும் பணக்காரனாக மாற்ற வேண்டும்.

ஏழைகள் ரொம்ப கஷ்டப்படுறாங்க...

ஏன் என்னுடைய ஆச்சி கூட ஏழை தான் கஷ்டப்படுறாங்க..... அதனால ஏழை பணக்காரங்க வித்தியாசத்தை நான் மாற்ற வேண்டும்.

அகத்தியரை நேரில் காண வேண்டும் அவரிடம் பேச வேண்டும். நான் அவரை போட்டோவில் மட்டுமே பார்த்திருக்கின்றேன் ஆனால் அவர் அது போல இருக்க மாட்டார் இளவரசர் போல இருப்பார் என்று கூறியிருந்தார் அதனால் எனக்கு மிகவும் ஆவலாக இருக்கின்றது.

எனக்காக ஒன்றும் வேண்டாம் வாழ்க்கையில் பெரிய ஆளாகி ஏழைகளுக்கு எல்லாம் உதவ வேண்டும் அது மட்டும் போதும் எனக்கு!!!

பணம் என்னிடம் அதிகம் சேர்ந்து விட்டால் பேராசை வரும் அதனால் எனக்கு எதுவும் வேண்டாம் உதவும் குணம் எனக்கு வேண்டும்

என மழலை மொழியில் பக்தியோடு அந்த குழந்தை கேட்ட கேள்விகளுக்கு குருநாதர் அகத்திய பெருமான் அன்புடன் தந்த பதில்கள்.

1. எனக்கு ஆசீர்வாதம் வேண்டும்!!!!

ஆதி முதல்வனை மனதில் எண்ணி உரைக்கின்றேன்.

குழந்தாய்!!!! இதையென்று... ஆனாலும் இது போன்ற குழந்தைகள் தான் இந்நாட்டிற்கு தேவை!!! அதனால் இப்பொழுது இருந்தே இதை எல்லாம் சிந்திப்பவர்களை யாங்கள் சித்தர்கள் நிச்சயம் விட்டுவிட மாட்டோம். இன்னும் உயர்த்துவோம்.

2.ஐ ஏ எஸ் அதிகாரியை விட பெரியாளாக வேண்டும் 

அம்மையே இவையன்றி கூற இப்பொழுதே நீ பெரியவள் தான் என்பேன்!! அம்மையே!!! இச்சிறு வயதிலேயே இப்படி எல்லாம் பேசுகின்றாயே நீ நிச்சயம் பெரியவள் என்பேன் இப்பொழுதே!!! 

3. எல்லோருக்கும் உதவி செய்ய வேண்டும்

அம்மையே இதையன்றி கூற ஆனாலும் நிச்சயமாய் குழந்தாய் நீ செய்வாய் என்பேன். ஈசனுடைய அனுக்கிரகங்களும் நிச்சயமாய் பின் கந்தனின் அனுக்கிரகங்களும் இருக்க நிச்சயம் நீ செய்வாய்!! செய்வாய்!! என்பேன்.

3. இந்த ஊரில் யாரும் அசைவ உணவு உண்ணக்கூடாது என்று சட்டம் போடுவேன்

ஆனாலும் இதற்கும் நிச்சயமாய் எதை என்று கூறாத குழந்தாய் !!!உனக்குத் தெரிந்த அற்புதமான பலன்கள் ஆனாலும் உந்தனுக்கு தெரிந்த எதை என்றும் கூறாத அளவுகள் உந்தனுக்கு இருக்கின்ற புத்திகள் இன்னும் பெரியவருக்கு இல்லையே பாப்பா!!!!! எதையென்று ஆனாலும் நிச்சயம் புத்திகள் எதை என்று கூறாமலே அதற்குள்ளே ஈசன் வந்து நிச்சயம் பல பேர்களை அழிப்பான் என்பது உறுதி.

4. ஏழைகள் அனைவரும் பணக்காரராக மாற வேண்டும்

குழந்தாய் இதை என்று கூற நிச்சயம் பின் இறைவன் கருணையால் நிச்சயம் பின் சில கர்மத்தை பின் அனுபவித்தாலும் நிச்சயம் இறைவன் பின் ஈசன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் நல்லோர்களை நிச்சயமாய் உயர்த்தி வைப்பான் என்பது உண்மையே!!!

4. அகத்தியரை நேரில் பார்க்க வேண்டும் எல்லா தெய்வங்களிடமும்  பேச வேண்டும்.... அவர்களிடம் என்னுடைய கோரிக்கை எல்லாம் கூறுவேன்!!!

இதை மறுப்பதற்கு இல்லை குழந்தாய்!!! இன்னும் ஏராளமான ஆசிகள் !!! ஆசிகள் நிச்சயம் உன் பெற்றோருக்கும் இருக்க!! நிச்சயம் அவர்தம் பெற்றோருக்கும் இருக்க !!முன் செய்த புண்ணியங்கள்!!! அதனால் நீயும் பிறந்துள்ளாய்!!!

அதனால் நீயும் நிச்சயமாய் உயர்ந்து கொண்டே போவாய்!!! நிச்சயம் பல அறிவுகள் பல பல வழிகளிலும் முதல் வகுப்பை இன்னும் ஏராளமான பரிசுகளையும் நீ பெறுவாய். இதனால் எந்தன் துணையும் கடைநாள் வரை இருக்கும் !!!கவலைகள் இல்லை குழந்தாய்.

6. என்னுடைய பிறந்தநாளுக்கு குருநாதர் வருவாரா?? எனக்கு என்னுடைய பிறந்தநாளை அகத்தியரோடு கொண்டாட வேண்டும். அவருக்கும் நான் கேக் தர வேண்டும்

நல்விதமாய் உண்டு உண்டு உன்னை யான் பார்த்தும் விட்டேன். ஆசிர்வாதமும் கொடுத்தும் விட்டேன் குழந்தாய் இன்னும் நிச்சயம் பல வரங்கள் நிச்சயம் கொடுப்பேன் யான்.

7. தாய் தந்தையர் நன்றாக இருக்க வேண்டும் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் யாரும் பேராசைப்படக்கூடாது

நலமாக!!! நலமாக!!! பின் ஈசனின் கிருபையால் உன் தாய் தந்தையரும் ஏராளமான புண்ணியங்கள் முன் ஜென்மத்திலே செய்தனர். அதனால் அவர்களுக்கு நிச்சயமாய் பணம் இன்னும் ஏராளமாக புழங்கும் என்பேன். அதனால் நீயும் ஒரு பெரிய செல்வந்தன் வீட்டுப்பிள்ளை தாயே!!!

நல்லாசிகள்!! நல்லாசிகள்!!!

குழந்தைக்கான நல்லாசிகளை தந்து விட்டு பொதுவான  கேள்விகளுக்கு வாக்குகளை குருநாதர் கூறினார் அதன் தொகுப்பு...

குருவே சுவடிகளின் ரகசியத்தை பற்றி கூறியிருந்தீர்கள் இன்னும் விளக்கமாக எங்களுக்கு விளக்கித் தந்து நல்முறையாக வழிகாட்டி தாருங்கள்!!

அப்பனே இதையன்றி கூற யானும் பல நபர்களை பார்த்து இருக்கின்றேன் அப்பனே!!! ஆனாலும் எங்கு சென்றாலும் விடிவெள்ளி கிடைப்பதில்லை.

ஏனென்றால் தன் தனக்காகவே தன் எதையன்றி கூற இனத்தை பெருக்குவதற்காகவே தான் நன்றாக இருக்க வேண்டும் தன்னை பற்றி எதையன்றி கூற....தம் தனக்கு ஏதும் நடக்கவில்லையே என்றெல்லாம் போய்க்கொண்டு இருந்தால்..... ஒன்றும் நடக்கப் போவதில்லை.

ஆனாலும் சில சில மனிதர்கள் மாய வித்தைகள் இன்னும் ஏராளம் ஆனாலும் அவ் மாய வித்தைகளை வைத்துக்கொண்டு அது அவர்களையே அழித்து விடுகின்றது. அதனால் உண்மை நிலையை தெரிந்து கொண்டனர் பலர்.

ஆனாலும் அப்பனே பின் யான் சொல்வதற்கு ஒன்றுமில்லை யான் அங்கு செல் இங்கு செல் என்றெல்லாம் தடுப்பதும் இல்லை அவரவர் விதியை நிச்சயம் பின் பட்டால் தான் தெரிவார்கள் என்பேன்.
அவனவன் விதியை அவரவர் அனுபவித்து தீர்ந்தால் தான் இறைவனை நெருங்க முடியும் என்பேன்.

அவர்கள் எல்லாம் நினைத்துக் கொள்கின்றார்கள் யான் மந்திரம் சொன்னால் இன்னும் ஏராளமான பணங்கள் வர வேண்டும் என்று.
இறைவன் மீது பக்தி கொண்டால் நன்மைகளாக முடியும் பின் பணத்தின் மீது பக்தி கொண்டால் நிச்சயம் பணங்களும் வராது  எதையென்று கூற சில கஷ்டங்களும் வந்து கொண்டே இருக்கும்.

நாடி நாடி நாடி என்று மாந்திரீகத்தின் வழியாக நாடுபவர்களுக்கு இங்கு சென்றால் இது நடக்குமா?? அங்கு சென்றால் அது நடக்குமா??? என்றெல்லாம்!!! அலைந்து திரிந்து.....

ஆனாலும் இவர்கள் நிலைமைகளை பார்த்து சரியான இடத்திற்கு வந்து விட்டார்கள் இவர்களிடத்தில் எதையாவது சொல்லி பணத்தை பிடுங்கி கொள்ளலாம் என்று தான் நினைப்பார்கள்.

மனித முட்டாள்கள் அதனால் தான் சித்தர்கள் மனிதர்களை முட்டாள்கள் என்றே சொல்கின்றார்கள். அனைவரையும் எதனால் என்பதை கூட மனிதனின் முட்டாள் குணத்தை பார்த்துக் கொண்டு பின் அவனும் தெளிவடைந்து விட்டு இவந்தனை உபயோகித்துக் கொண்டால் பணங்கள் வரும் வரும் என்று பின் நினைத்து அவந்தனையும் மயக்கி தன்னிடத்தில் வைத்துக் கொள்கின்றான் மனிதன் இதுதான் நடந்துகொண்டிருக்கின்றதே தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை.

அவந்தனும் ஒரு பரிகாரத்தைச் சொல்லி அனுப்புவான் இதை செய் !!அதை செய்!!! என்றெல்லாம் ஆனால் யான் சொல்கின்றேன் நிச்சயம் என்னுடைய அருள் இல்லாமல் ஒன்றும் நடக்கப் போவதில்லை. என்னுடைய அருள் இருந்தால் தான் மற்ற சித்தர்களும் வந்து செப்புவார்களே தவிர.... அதனால் யான் பெருமையோடு சொல்வேன்....எதையென்று ஆனாலும்.... அனைவருமே என்னிடம் கேட்பார்கள் இவர்களுக்கு வாக்கு தெரிவிக்கிறார்களா என்று அதனால் யான் சொன்னால்தான் உண்டு என்பேன்.

ஆனாலும் இதனையும் மீறி பின் பல பேர் வாக்குகள் செப்புவதில்லை இதனால் ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு பின் பொய் கூறி அச் சித்தன் சொல்கின்றான்  !! இச்சித்தன் சொல்கின்றான்!!! என்றெல்லாம் பொய் கூறி ஆனால் அதைத்தான் நம்புவார்கள் அப்பனே இப்புவியுலகத்தில்... ஆனால் நல்லதை நம்புபவர்கள் குறைவே!!!!

குருவே நல்லோர்களுக்கு சித்தர்களின் உண்மையான வாக்குகள் கிடைக்க வேண்டும் நீங்கள் வழிகாட்டி அருள் புரிய வேண்டும்

அப்பனே ஆனாலும் நிச்சயம் எதையென்று கூற ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே

என்னை நம்பி வந்து விட்டால் அப்பனே நிச்சயம் அவர்களுக்கு அப்பனே ஏதாவது தவறான வழியில் சென்றாலும் நிச்சயம் யான் மீட்டெடுத்து நல்லது தான் செய்வேன் ஏனென்றால் அப்பனே அப்படிப்பட்ட பாசமிகுந்தவன் யான் சொல்லிவிட்டேன்.

அவை மட்டும் இல்லாமல் பல கர்மாக்கள் எதன் மூலம் வருகின்றது என்றால் அப்பனே பல பல மனிதர்கள் அப்பனே எதை என்பதை உணராமலே யான் சொல்லிவிட்டேன் முன்பே அப்பனே...

மாந்திரீகத்தால் அப்பனே எதை என்று கூற... அவர்களிடத்தில் நாடி நாடி சென்றால் அப்பனே... கர்மாக்கள் சேரும். அது அவர்களுக்கே தெரியாது அப்பனே.

இதனால் சுவடிகளும் பொய்யாகவே போய்க் கொண்டிருக்கின்றது அப்பனே!!!

வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு அப்பனே சரிமுறையாய் அப்பனே... இப்படி செய் அப்படி செய் அங்கெல்லாம் சென்றால் நடக்கும் என்பதெல்லாம் அப்பனே

இதனால்தான் அப்பனே சுவடிகள் பொய்த்து போய்க் கொண்டிருக்கின்றது!!!

அதனால்தான் யாங்கள் வந்தோம் அப்பனே!!!!

நிச்சயமாய் ஏனென்றால் அப்பனே இப்படியே சுவடிகள் சுவடிகள் என்று கூட அப்பனே சொல்லிக் கொண்டு அதை பின்பற்றி சித்தன் சொல்கின்றான் இன்னும் பல ஞானிமார்கள் சொல்லுகின்றார்கள் முருகன் சொல்கின்றான் என்றெல்லாம் அப்பனே தேவதைகளை வைத்து வசியம் செய்து அப்பனே செப்பி வருகின்றார்கள் அப்பனே!!!

அதனால் எங்கெல்லாம் எதை என்று கூற அப்பனே அதற்கு அடிமையாகி விட்டால் அப்பனே உங்களால் வாழவும் முடியாது என்பேன் அப்பனே. அதனையே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும். இதனால் சில கர்மங்களும் தானாகவே வந்துவிடும் அப்பனே.

அதனால்தான் அப்பனே பின் யான் வரும் காலங்களில் இதைத்தான் சொல்லப் போகின்றேன்.

யாராரிடம் அப்பனே உண்மையான நாடிகள் இருக்கின்றது என்பதைப் பார்த்தால் அப்பனே இவையெல்லாம் மனிதன் எப்படி எல்லாம் பின்பற்றுகின்றான் என்பதைக் கூட பின் அவன் எல்லாம் எப்படி எல்லாம் வாழ்ந்திட்டான் என்பதையெல்லாம் வரும் காலங்களில் நிச்சயம் யான் உரைப்பேன். 
பொய்யை  யான் நிச்சயம் பொய்யாக்குவேன் அப்பனே சொல்லிவிட்டேன்.

ஏனென்றால் சித்தர்கள் எதை என்று கூறும் அளவிற்கு கூட சித்தர்களை ஏமாற்றி ஏமாற்றி கடைசியில் பார்த்தால் அகத்தியன் இல்லை என்று சொல்லிவிடுவான்... முருகன் இல்லை என்று சொல்லிவிடுவான் ஈசன் இல்லை என்று சொல்லிவிடுவான் அப்பனே இதுதான் கலியுகத்தின் கட்டாயம்.

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!! திருடர்களப்பா சொல்லிவிட்டேன்.

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் பொய்கள் பின் பொய்கள் பேசிப் பேசி அதைச் செய்தால் இது நடக்கும் இன்னும் இன்னும் இரு மாதங்கள் பொறுத்துக் கொள்!!! உந்தனுக்கு யானே சொல்கின்றேன் அத்திருத்தலத்திற்கு செல் அப்பனே இவையெல்லாம் எவை என்று கூற ஆனாலும் அப்பனே!!!

அவைதன் அப்பனே வசிய எதை என்று கூற பின் மாந்திரீகத்தை வைத்துக்கொண்டு பின் வசிய தேவதைகளை வைத்துக்கொண்டு அப்பனே சொல்கின்றார்கள் அப்பனே.

அப்படி அவர்களிடத்தில் போக போக அப்பனே பின் வந்து கொண்டே இருக்குமப்பா குற்றங்கள்!!! ஏராளம் ஏராளம் என்பேன் அப்பனே.

அதனால் பின் அவர்களிடத்தில் செல்பவர்களுக்கும் கர்மாக்கள் இவையெல்லாம் பின் தானாகவே வந்து நிற்கும் என்பேன் அப்பனே.

அதனால் அப்பனே ஒன்றும் நடக்காது.... இன்னும் தீங்குகள் தான் அப்பனே இல்லத்தில் கூட பிரச்சினைகள் தான்  சண்டைகள் தான்..... இவையெல்லாம் மாந்திரீகத்தால் அப்பனே.

அதனால்தான் அப்பனே சொல்லி விடுகின்றேன் அப்பனே

உண்மைகள் உண்டு!! உண்டு !!ஏராளம்!! என்பேன் .அப்பனே

எதை எதை பின்பற்றுவது என்று தெரியாமல் அப்பனே மனிதன் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றான் .அப்பனே அதனால் தான் அப்பனே சொல்கின்றேன்.

இதையென்று நன்கறிய யான் அருகிலேயே இருக்கின்றேன் என்று எண்ணிக் கொள்ளுங்கள்... யான் அனைத்தும் செய்து கொடுப்பேன்..... பல பல சித்தர்களும் வந்து வாக்குரைப்பார்கள் அப்பனே எதை எதை என்று கூறாத அளவிற்கு கூட....

ஆனாலும் மனிதர்களுக்கு தெரிவதில்லை அப்பனே.... இதுதான் தவறு என்பது கூட......

ஆனாலும் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் சுவடிகளை படிப்பவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை கூட.....

ஆனால் இப்படி இருப்பதில்லை அப்பனே சில உயிர்களைக் கொன்றும் பலியிட்டும்... பின் நல்விதமாக யான் எதை என்று கூற அனைத்தும் சொல்வான்....

அது பலிக்குமா??? அப்பனே!!!

நீங்களே சொல்லுங்கள்!!!

அவை மட்டும் இல்லாமல் அப்பனே போதைப் பொருள்கள் உட்கொண்டு மறைவாகவே திரும்பவும் சுவடிகள் படிக்கின்றார்கள் அப்பனே.

அக்கர்மாக்கள் யாரிடம் சேர்கின்றது??? அப்பனே

இவையெல்லாம் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

வரும் வரும் காலங்களில் உங்களுக்கெல்லாம் தெரியப்படுத்துவேன்.

அது மட்டும் இல்லாமல் அப்பனே இதை என்று கூற இவ்வளவு பணங்கள் கொடுத்தால் இதையெல்லாம் செய்கின்றேன்!!!! இப்படி எல்லாம்......

இறைவன் என்ன உங்களிடம் பணங்கள் கேட்டானா?? என்ன!!!

இறைவனுக்கு பல ஆசிரமங்கள் கேட்டானா ???என்ன.!!

இறைவன் பல திருத்தலங்களை உருவாக்கித் தா!! என்று கேட்டானா ??என்ன!!!

அப்பனே பொய்களைப்பா!!! பொய்!!!

இவ்வுலகமே பொய்!!!

இன்னும் முட்டாளாகவே இருக்காதீர்கள் அப்பனே

என்றால் இவ்வுலகம் அதிவிரைவில் யாரை எப்படி எல்லாம் ஏமாற்றலாம் என்று கூட அப்பனே......

ஆனாலும் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே இப்படி சுவடி சுவடி என்று நீங்கள் எங்கு சென்றாலும் உங்களிடத்தில் பணம் இருக்கின்றது என்று இன்னும் பிடுங்கிக் கொள்வார்களப்பா!!! உங்களிடத்தில் உள்ள லட்சுமி தேவியும் சென்று விடுவாள் அப்பனே சொல்லிவிட்டேன்.

இனிமேல் சொல்லிவிட்டேன் யான் அப்பனே யான் ஆணித்தரமாக சொல்வேன் அப்பனே யாருக்காவது எதை என்று கூற சுவடிக்காக பின் எந்தனுக்கு இவ்வளவு பணங்கள் வேண்டும் என்று கேட்டால் நீங்கள் கொடுத்தால் அப்பனே இன்னும் உங்களிடத்தில் இருந்து பணங்கள் போய்க் கொண்டே தான் இருக்கும் சொல்லி விட்டேன். லட்சுமி தேவியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள்.

இப்படித்தான் மனிதர்கள் அழித்துக் கொண்டிருக்கின்றார்கள் எதை என்று கூற மாந்திரீகத்தில் அவர்கள் சொன்னதையெல்லாம்.. கேட்டு இங்கு செல் அங்கு செல் என்றெல்லாம் ஆனால் அவை உண்மையானவர்கள் செப்புவதில்லை அப்பனே.

வசிய தேவதைகளை வைத்து சொல்கின்றார்கள் அப்பனே அப்படி இருக்க கர்மாக்கள் தான் சேரும்.

எதை என்று கூற அப்பனே இன்னும் இன்னும் ஏராளம் அப்பனே உங்களுக்கு வரும் காலங்களில் யானே காண்பிக்கின்றேன்.... எப்படி எல்லாம் மாந்திரீகத்தால் செப்பி எதையெல்லாம் செப்பி எப்படி எல்லாம் செப்புகின்றார்கள் என்பதை கூட நான் உங்களுக்கு உணர்த்துவேன் அப்பனே.

ஏனென்றால் உண்மை நிலைகள் நிச்சயம் தெரிய வேண்டும் அப்பனே.

அப்பனே எதை என்று கூறாத அளவிற்கு கூட பொய்களப்பா பொய்கள்... பல் மடங்கு பொய்கள்..

அப்பனே ஒருவனால் என்ன கூற முடியும்???

இவ்வுலகத்தில் விதியின் பாதையை கணித்துக் கூறுவது சித்தர்கள் மட்டுமே!!

மற்றவர்களால் கூற முடியாது!!!

அப்பனே யான் சொல்கின்றேன் ஒன்றை... எதை என்று கூறாத அளவிற்கும்.... பின் பிரம்மன் தலைவிதியை எவ்வாறு எழுதி வைத்திருக்கின்றான்.. என்று கூறச் சொல்!!!! ஒரு சுவடியில்!!!!!!!

அப்பனே யாராலும் கூற முடியாது என்பேன் அப்பனே.

ஆனால் யான் கூறுவேன் உன் விதியை என்னவென்று கூட!!!!

அப்பனே மற்றவையெல்லாம் எப்படி செப்புவார்கள் தெரியுமா??

அப்பனே மூன்று மாதங்கள் பொறுத்துக் கொள் இன்னும் ஐந்து மாதங்கள் பொறுத்துக் கொள் அது மட்டுமில்லாமல் இத்திருத்தலத்திற்கு சென்று வா என்றெல்லாம் அப்பனே.

ஆனாலும் அப்பனே பின் வசிய தேவதைகளால் இவைகள் சொல்லும் பொழுது... அங்கு செல்கின்ற பொழுது அங்கு இறைவன் அப்பனே செவி சாய்ப்பதில்லை..... இறைவன் ஒன்றும் செய்ய மாட்டான்.

இவந்தன் இப்படி செய்கின்றான் என்று கூட கண்டுகொள்ளவே மாட்டான் சொல்லி விட்டேன் அப்பனே .

சுவடிகள் சுவடிகள்  என்று அப்பனே சென்று பணத்தை கொடுத்து அப்பனே சரியான வழியில் அவர்கள் பணத்தை செலவு செய்வதில்லை அப்பனே பல தீய வழிகளில் செலவு செய்கின்றார்கள் அப்பனே அவ் கர்மாவும் உங்களை அடித்து விடும் அப்பனே.

என்னை வணங்குபவர்களுக்கு என் எப்பொழுதும் நிச்சயம் நன்மையே தான் செய்வேன்  என்று கூட பல வாக்குகளிலும் சொல்லிவிட்டேன் அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் உண்மை பொருளைக் கூட....

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் சுவடிகளை படிப்பவர்களும் எதை எதையோ செய்து கொண்டிருக்கின்றார்கள்... பொய் சொல்கின்றார்கள் அப்பனே பொறாமை படுகின்றார்கள் அப்பனே அப்பனே அதுமட்டுமில்லாமல் உள்ளத்தில் ஒன்று வெளியில் ஒன்று... அப்பனே யான் எப்படி எதையெல்லாம் கூறுவது என்று கூட.... எவை என்று கூற அப்படிச் சொன்னாலும் பின் கர்மங்கள் உங்களுக்கு எவை என்று கூறாமல்..... அதனால்தான் அப்பனே எவை என்று அறியாமல்...

நிச்சயமாய் யான் வழிகாட்டுவேன் அப்பனே...

மனிதர்கள் போகின்ற போக்கை பார்த்தால் அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன்.... நல்லதை நம்புபவர்கள் குறைவே!!!! 

ஆனாலும் பல மனிதர்கள் இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

யான் அருகிலே இருக்கும் பொழுது பின் அகத்தியன் இல்லை என்றே சொல்கின்றார்கள்.

ஆனாலும் இதற்கெல்லாம் என்ன வித்தியாசம்?? ஆனால் வாய் தான் பேசுகின்றது அகத்தியன் இருக்கின்றான் இறைவன் இருக்கின்றான் என்று கூட. 

ஆனால் உள் உணர்வோடு இல்லை அப்பனே.

இதனால்தான் சொல்லிவிட்டேன் உண்மையைச் சொல்கின்றேன் என்னிடத்தில் வருபவர்கள் நிச்சயம் அன்பு கொண்டால் மட்டுமே நிச்சயம் வாக்குகள் உண்டு.

அதை மீறி எதை எடுத்தாலும் யானே அவர்களை திசை மாற்றி அமைத்து விடுவேன் ஏனென்றால்  எதை என்று கூற... அவர்களாவது பிழைக்கட்டுமே என்றெல்லாம் உணர்ந்தாலும் எதை என்று கூறாமலே இன்னும் ஏராளம் ஏராளம் இதுபோல் சிக்கிக் கொண்டவர்களை சீரழித்தவர்கள் ஏராளம் ஏராளம் அப்பனே.

இப்படி கும்பல்கள் ஏராளம் என்பேன். இங்கு சென்றால் இது நடக்கும் அங்கு சென்றால் அது நடக்கும் என்றெல்லாம்.....

இப்படி எல்லாம் சென்று சில மந்திரங்களை எப்படி சித்திகொள்வது என்றெல்லாம்.... 

பின் யான் இவ் மந்திரத்தை சொல்ல வேண்டும் இம் மந்திரத்தைச் சொன்னால் அனைத்தும் வரவேண்டும் என்றெல்லாம் மனிதர்கள் மனதில் பின் மாயக்கணக்கை போட்டு வாழ்ந்து வருகின்றார்கள்.

ஆனால் இவையெல்லாம் எப்படி நடக்கும்?? அப்பனே!!!

நிச்சயம் பின் பிரம்மா எழுதி வைத்திருப்பதை நிச்சயம் சொல்கின்றேன் யாராலும் மாற்ற முடியாது. அவரவர் பாதையை நிச்சயம் அனுபவித்து தான் தீர்க்க வேண்டும்.

ஆனால் என் வழியில் வந்தவர்களை யான் நிச்சயம் காப்பாற்றுவேன்.

வேடதாரிகள் நிச்சயம் என்னிடத்தில் சிக்கிக் கொள்வார்கள் ஒரு நாள்  யான் அவர்களை விட்டு தள்ளி விடுவேன் இதுதானப்பா நடந்து கொண்டிருக்கின்றது.

அகத்தியன் அகத்தியன் என்றெல்லாம் பொய் சொல்லி திரிந்து யான்தான் அகத்தியன் பக்தன் என்றெல்லாம் புறம் கூறி அப்பனே சென்றிருக்கும் பொழுது யானே ஒரு ஒரு பாதையில் அவர்களை மாட்டி விட்டு விடுவேன் அப்பனே.

இதுதான் எதை என்று கூற அதனால் உண்மையான பக்தியும் உயர்ந்த நம்பிக்கையும் கொண்டிருந்தால் மட்டுமே...

கேட்டாயா!!!!  அக்குழந்தை ஒன்று கூறியது..பின் இதையென்று.... ஆனாலும் என் நோக்கம் ஓர் வித்துவான் எதை என்று கூறாமலே உயர்வான இடத்திற்கு செல்ல வேண்டும் என்று கூட...

ஆனால் அக்குழந்தை இப்படியே நினைத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் உயர்வான இடத்திற்கு செல்வது சத்தியமே...

இது போன்று தான் நிச்சயம் எதை என்று கூற ஆனாலும் என்னையும் இதே போல பின் அகத்தியன் அகத்தியன் என்று கூட ஒரே பிடியாக ஓரேப்பிடியாக பிடித்துக்கொண்டு பின் யார் எதைச் சொன்னாலும் ஒரே பிடியாக பிடித்துக் கொண்டு இருந்தால் என் கண்கள் கலங்கிவிடும்!!!!

இதனால் இவ்வளவு பாசமா என்று கூட!!!!

அதனால் அப்பனே யான் எதை என்று கூற சொல்கின்றேன் ஒரு கருத்தை!!!!

யானும் பல வழியில் சென்று கொண்டிருந்தேன் அகத்தியா அகத்தியா என்று அழைத்துக் கொண்டிருக்கின்றானே என்று கூட....

ஆனால் அங்கு சென்றால்தான் தெரிகின்றது அவன் பொய் பித்தலாட்டக்காரன் என்று கூட....

ஆனாலும் அப்பனே இப்படித்தான் பல மனிதர்கள் திரிந்து கொண்டிருக்கின்றார்கள்....

அகத்தியன் கொடுப்பான் கொடுப்பான் என்றெல்லாம்!!!

நிச்சயம் அப்பனே யான் சோதித்து தான் கொடுப்பேன் என்பேன் அப்பனே.

ஏனென்றால் அப்பனே யான் பல தெய்வங்களையும் பார்த்து இருக்கின்றேன்.

திடீரென்று பாசம் வைத்து விட்டால் பின் அனைத்தும் கொடுத்து விடுவார்கள்.

ஆனால் கடைசியிலே பின் இறைவன் தலையின் மீதே பின் காலை வைத்து விடுவார்கள்... அதனால்தான் அப்பனே என்னிடத்தில் வருபவர்களை சிறிது சோதனைகள் கொடுத்துத்தான்......

ஆனாலும் இதன் உள்ளே பல நபர்கள் எதை என்று கூற அகத்தியனை வணங்கினேனே அகத்தியன் ஒன்றும் செய்யவில்லையே என்று கூட போய்விட்டார்கள்.

ஆனாலும் யான் போனால் போகட்டும் என்று!!!

எந்தனுக்கு நல் உள்ளங்கள் தான் தேவைப்படுகின்றது அப்பனே.

அதனால்தான் எதிர்நோக்கி சில கஷ்டத்தையும் கொடுத்து அதன் மூலம் அனுபவங்களையும் கொடுத்து கொடுத்து நல் விதமாக ஆக்கி அனைத்தும் கொடுக்க நினைக்கின்றேன்.

ஆனாலும் அதற்கு தகுதியான மனிதர்கள் இல்லை அப்பனே இவ்வுலகத்தில்....

அதனால்தான் அப்பனே யான் எதனையும் கொடுப்பதில்லை... இப்பொழுது தெரிந்து கொண்டீர்களா நீங்கள்.

அதனால் அப்பனே ஒரு உயர்ந்த இடத்திற்கு நாட்டம் கொண்டால் எவ்வாறெல்லாம் முயற்சிகள் செய்ய வேண்டும் என்று எண்ணி முயற்சிகள் செய்தால் தான் இறைவனும் சிறிதளவு கொடுப்பான்.

அதனால்தான் அப்பனே என்னை நிச்சயம் அன்புடன் வணங்குபவர்களுக்கு அப்பனே யான் கட்டி அணைத்துக் கொள்வேன் அப்பனே.

யான் கருணை உள்ளவனே உங்களிடத்தில் தெரிவித்து கொள்கின்றேன் அப்பனே.

இதனால் ஏமாந்தும் விட்டேன் அப்பனே பல.

பூலோகத்தில் வந்து திரிந்து கொண்டு தான் இருக்கின்றேன் அப்பனே.

அகத்தியா அகத்தியா என்றெல்லாம் சொல்லி பொய் கூறி அப்பனே பின் எதையெல்லாம் செய்கின்றார்கள் என்பதை எல்லாம் கூட.....

அவர்களுக்கும் யான் கஷ்டத்தை அள்ளித் தந்து கொண்டு தான் இருக்கின்றேன் அப்பனே.

ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே இறைவனை வணங்க விடிலும் விட்டு விட்டாலும்...சரி...... நன்றாக இருப்பார்கள்.

ஆனாலும் அப்பனே இறைவனை வைத்து பொய் சொல்லி எதை என்று கூற பக்தி போல் காட்டி பின் போலியாக இருந்தால் பின் நிச்சயம் அவர்களுக்கு அழிவு தான் என்பது நிச்சயம். இப்பொழுது தெரிவித்து விடுகின்றேன்.

இதை உணர இன்னும் மாற்றங்கள் உண்டு அப்பனே!!!!

இன்னும் சொல்கின்றேன் அப்பனே!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

3 comments:

  1. ஓம்சிவசிவஓம் ஓம் அகத்தியர் திருவடிகளே சரணம் சரணம் சரணம்

    ReplyDelete
  2. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  3. எம்பெருமானே- அகத்தியம் பெருமானின் திருத்தாள் போற்றி போற்றி...
    பூலோகத்தில் திரிந்து கொண்டுதான் இருக்கின்றேன் என்று கூறியிருந்தீர்கள்- அப்பொழுது எந்த ஆலயத்தில் நிரந்தரமாய் வாசம் செய்து தங்குகின்றீர்கள். உங்கள் பார்க்க ஆவல். மேலும் என் பெயரை கூறி பலமனிதர்கள் ஏமாற்றி சம்பாதிக்றார்கள் என்று கூறியுள்ளீர்கள். அப்படிப்பட்ட மனிதர்களிடம் நேரிலோ அல்லது யார்மூலமோ அல்லது சொப்பனத்திலோ அல்லது அவர்கள் செய்யும் தியானத்திலோ நீ இப்படி சம்பாதிக்காதே அது நல்லதல்ல என்று அவர்களிம் ஏதுவது ஒருவழியில் நீங்களே ஒரு நொடியில் திருத்தி நல்வழிப்படுத்தி அருளலாமே அய்யா. அதைவிட்டு அவனுக்கு தண்டனையை வாரி வழங்கினால் அவன் என்ன செய்வான் பெருமானே. இந்த கலியுகத்தில் நீங்கள் நடமாடும் கடவுள். நீங்கள்தான் அவர்களை நல்முறையில் திருத்தவேண்டும். பின் அவனே நல்முறையில் வாழக்கற்றுக்கொள்வான். தர்மம் வளரும் - தானம் சிறக்கும் - ஆன்மீகம் தழையும். அடியவன் மனதில் பட்டதை தங்களிடம் பகிர்ந்தேன் எம்பெருமானே. தவறுகள் இருப்பின் பொருத்தருள்க - மன்னித்து அருள்க.

    ReplyDelete