​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 7 July 2022

சித்தன் அருள் - 1157 - அன்புடன் அகத்தியர் - காகபுசுண்டர் சித்தரின் திருவண்ணாமலை வாக்கு!



29/5/2022 அன்று காகபுஜண்டர் மகரிஷி உரைத்த பொது வாக்கு
வாக்குரைத்த ஸ்தலம் : திருவண்ணாமலை 

நமச்சிவாயனை பணிந்து வாக்குகளாக பரப்புகின்றேன். புசுண்டனவன்...

எதையென்று கூற மக்கள் நிச்சயம் பின்னோக்கி செல்கிறார்கள் என்பேன்!! அவை மட்டும் இல்லாமல் பக்திகளும் பொய்யானவையாக போய்க் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு!!! இருக்க ஈசன் எவ்வாறு?? நல்லது செய்வான்???

அவை மட்டுமில்லாமல் அழிந்து கொண்டே போய்க் கொண்டிருக்கின்றது காலங்கள்!!! ஆனாலும் உண்மையான பக்தர்களை நிச்சயம் ஈசனே மீட்டெடுப்பான்..தன்!! எதையென்று!!! 

ஆனாலும் கங்கையை  முடி மேல் பின்  சூழ்ந்துள்ளான்(சுற்றி சூடியுள்ளான்) அவை மட்டும் இல்லாமல் அதை கழட்டி எறிந்தால்???????.....

ஆனால் அதற்காகத்தான் அதை நிறுத்திக் கொண்டு!!!!! ஆனாலும் கலியுகத்தில் பக்தர்களை காப்பதற்கே அவந்தன் நிச்சயமாய் சடைமுடி கடை முடியை பிடித்துக் கொள்பவருக்கு ஒரு வருத்தமும் இல்லை!! இல்லை என்பேன்.

ஏனென்றால் மனிதன் நிச்சயம் பணத்திற்காகவே ஓடுகின்றான் ஓடி!!ஓடி !!..

ஓடுகின்றான்!!! தேடுகின்றான்!!! ஆனால் உண்மை நிலையை புரியாதவாறு தவித்து தவித்து அவற்றையெல்லாம் இழந்து மீண்டும் இறைவனிடத்தில் சரணாகதி அடைந்து விடுகின்றான்.

இதனால் முதலிலே அடைந்து விட்டால் துன்பங்கள் இல்லை. குற்றங்கள் இல்லை சந்தோஷமான வாழ்க்கையை மேற்கொள்ளலாம். ஆனாலும் மனிதனின் நிலைமையை எவ்வாறு திணிக்கப்படுகின்றது என்பதை கூட தெரியவில்லை.

தெரியவில்லை வெவ்வேறு வகையான நோய்களும் மனிதனை ஆட்கொள்ளும். ஆட்கொள்ளும் என்பேன் வரும் காலங்களில்.

அதனால் நீங்கள் அதை காத்துக் கொள்ளுங்கள் முதலில்.....

அதைக் காத்துக் கொள்ள பக்திகள் நிச்சயம் அவசியமாகின்றது. பக்திகள் நிச்சயம் அவசியமாகின்றது என்று சொல்வேன்.

இதனால் பக்தியில் என்று நுழைந்தால் நிச்சயம் யாங்கள் எதை என்று.. அப்படியே மனிதனுக்கு நல்விதமாக செய்வோம்.

ஆனாலும் சித்தர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் மனிதர்களை!!!

நல்லோர்கள் யாராவது இருக்கின்றார்களா என்று!!!

நிச்சயம் பல வாக்குகளிலும் இதை யான் செப்பிவிட்டேன்!!

அன்றிலிருந்தே தேடிக் கொண்டே தான் இருக்கின்றோம்.....

ஆனால் மனிதனின் ஆசைகள் தீராத ஆசைகள் பணத்தின் மீது ....பக்திகள் ஆனால் இறைவனை மட்டும் வைத்து வணங்குகின்றான் ஆனால் பார்த்தால் பணத்திற்காகவே இறைவனை வைத்திருக்கின்றான் இதனை  யாங்கள் பலமுறையும் சொல்லி விட்டோம்.

திருந்துங்கள்!!!

பணம் !!பணம்!! என்று கூட எங்கே செல்கின்றீர்கள்??

ஆனால் பணமதிப்பு இறை மதிப்பை விட குறைவு தான் என்பேன்.

இதனால் நன்மைகள் செய்ய இறைவனை காத்திருக்க காத்திருக்க துடிக்காதீர்கள்!!! துடித்துப் போய் நிற்காதீர்கள்!! நிற்காதீர்கள் வரும் காலங்களில்.

பக்தியை செலுத்த செலுத்த வேறொன்றும் இல்லை இவ்வுலகத்தில் வாழ்வதற்கு!!!

ஈசனே!!!! ஈசனையே சரணாகதி  அடைந்து விடுங்கள்!!!.

நிச்சயமாய் தன் பிள்ளையை போல் காத்துக் கொள்வான் !!!

ஈசன் கருணை மிக்கவன்!!!

கருணை மிக்கவன் ஆனாலும் எதற்காக சோதனைகள் கொடுக்கின்றானென்றால்?? தன்!!! பக்குவப்படுவதற்காகவே!!!

அதனால் வரும் காலங்களில் நிச்சயம் சோதனைகள் கொடுத்தாலும் மனிதன் என்னவென்று சொல்வான் தெரியுமா????

இறைவன் இல்லை!! இறைவன் இல்லை!! இறைவன் இருந்தால் எந்தனுக்கு ஏன்? நல்லதை செய்யவில்லை???? தீயவர்களே வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று இறைவனை ஏளனம் பேசுவார்கள் வரும் காலங்களில்.

இதனையும் நிச்சயம் தடுப்போம்!!!

தீயவர்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றீர்களே!!! உங்களுக்கு தீயவர்கள் என்று தெரியுமா என்ன???

என்ன ?இதனைப்பற்றி ........

ஆனால் ஒருவர் மீது குறை சொல்வதே அவை தன் பாவத்தை உருவாக்கும் சொல்லிவிட்டேன்.

இதனால் தம் தம் எப்படி இருக்கின்றோம் என்று கூட முதலில் நீ உணர பின்பு அவர்களைப் பற்றி சிந்திப்போம்!!!

நீயே பொய் !!..மனிதா!! பின் பொய்யானவற்றை மீண்டும் பொய் என்று குறிப்பிடுவது தவறில்லையா????

அதனால்தான் உலகத்தில் தவறுகள் இன்னும் நடந்து கொண்டே தான் இருக்கும்!! ஒழுக்கம் இல்லாமல் வாழ்க்கையும் நடந்து கொண்டே தான் இருக்கும்!

மனிதா திருந்திக் கொள்!!

யாங்கள் பல யுகங்களாக வாழ்ந்து வாழ்ந்து மனிதனை பல வழிகளிலும் பின் பக்திக்கு ஏற்பாடு செய்தோம்.

ஆனால் கலியுகத்தில் ஏற்பாடு செய்ய முடியவில்லையே??? 

அதனால் நிச்சயம் அழிவுகள் தான் நிச்சயம்.

அதனால்தான் யாங்கள் இவ்வளவு தூரம் மனிதர்களுக்கு வந்து இறங்கி...  இரங்கி!!! சொல்கின்றோம்...

ஆனாலும் மனிதனும் எதை என்று ஏற்றுக் கொள்வதற்கான தகுதிகள் மனிதனிடத்தில் இல்லை.

ஆனால் உண்மையுள்ள ஞானிகள் நிச்சயம் மனிதர்களை மாற்றுவார்கள்.

ஆனாலும் யான் அகத்தியனுக்கு திருத்தலம் கட்டுகின்றேன்!!! முருகனுக்கு திருத்தலம் கட்டுகின்றேன்!!! ஈசனுக்கு திருத்தலம் கட்டுகின்றேன்!!! தேவிகளுக்கு திருத்தலம் கட்டுகின்றேன்!!! என்றெல்லாம் பொய் சொல்லி பணத்தை பிடுங்கி பின் ஆனால் அவன் வீடாக எண்ணிக் கொண்டு மீண்டும் மீண்டும் பணத்தை சம்பாதிக்கின்றான். பணத்தோடு கர்மத்தையும் சம்பாதித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை கூட அவன் உணரவே இல்லை!! உணரவே இல்லை!! இதையென்று மறுப்பதற்கு ஒன்றுமில்லை.

ஈசன் இல்லை என்று நினைத்துக் கொண்டிருக்கின்றான் ஆனால் .....இவ் மலையின்(திருவண்ணாமலை) மீது அழகாக ஆடிக் கொண்டிருக்கின்றான்.

நலமாக நலமாக தேடி தேடி சென்று எதனையெல்லாம் மனிதன்.........

நிச்சயமாய்..... ஆனால் எவற்றையும் எதிர்பார்க்காமல் வணங்குகின்றானே அவன் தான் உயர்ந்த மனிதன்!!

அவந்தனுக்கு தான் இனிமேலும் அனைத்தும் கிடைக்கும்.!!

எதிர்பார்த்து எதிர்பார்த்து இறைவனை வணங்கினால் ஒன்றும் கிட்டாது!!!!

ஒன்றும் கிட்டாது மனக்குழப்பம் தான் கிட்டும்!!

அதனால் எதையும் இறைவனிடத்தில் எதிர்பாராமல் எதிர்பார்த்தும் வணங்கக்கூடாது சொல்லிவிட்டேன்.

அன்பை மட்டும் செலுத்தினால் போதும்!!

ஆனாலும் பல மனிதர்கள் வருவார்களப்பா வந்து வந்து எதையெதையோ சொல்லி சொல்லி புறம் கூறுவார்கள்!!

சொல்கின்றேன் ஒன்றை ஆனாலும் வரும் வாக்குகள் எல்லாம் மாற்றி விட்டார்கள் மனிதர்கள் புத்தகத்தை!!

ஆனாலும் உண்டு உண்டு எண்ணங்கள் மேன்மை மேன்மைகள் உண்டு நிச்சயம் யாங்களே வரும் காலங்களில் சில மனிதர்களை உருவாக்குவோம் உருவாக்குவோம் நிச்சயம்.

ஆனாலும் நமச்சிவாயனும் உருவாக்கிக் கொண்டே வருவான் நல்லோர்களை!!!

நிச்சயம் அவ் நல்லோர்கள் நிச்சயம் தீயவர்களை அழித்தும் விடுவார்கள் அழித்தும் விடுவார்கள் என்பதை சொல்லிவிட்டேன்.

கலியுகத்தில் உண்மைக்கு புறம்பாகவே அனைத்தும் நடக்கும். அனைத்தையும் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றீர்கள் மனிதர்களே!!

ஆனாலும் திருந்துவதுண்டா நீங்கள்???

இல்லை!!!! 

ஆனாலும் எதை என்று கூற யான் தான் பெரியவன் தான்  தான் தன்னிடத்தில் தான் பணங்கள் அதிகம்......இவையன்றி கூட ஒன்றும் நடக்கப் போவதில்லை. அனைத்தும் அழிவிற்கான காரணங்கள்.

ஆனாலும் மனிதனே இதை உணர்வதே இல்லை.

ஆனாலும் இன்னொரு விஷயத்தையும் சொல்கின்றேன் சித்தர்களின் ஆசிகள் பெறுவதற்கு நிச்சயமாய் ஒரு உயிரை கொன்று விடக் கூடாது. கொன்றுவிடக் கூடாது !!!

அவை மட்டும் இல்லாமல் ஈசன் நாமத்தை உச்சரிப்பதற்கும் நிச்சயம் நல் மாற்றங்கள் உண்டு!!

உண்டு அதனால் தன் எண்ணம் போலவே வாழ்ந்திடுவாய்!! என்பது கூட நிச்சயம் பெரியவர்கள் வாக்கு...

ஆனாலும் இல்லையப்பா!! இல்லை என்பதற்கு கூட பல ஜீவராசிகளுக்கும் தன் குழந்தைகள் உண்டு!! தன் சொந்த பந்தங்கள் உண்டு!! ஆனாலும் அதை ஏன் மனிதா நீ உணர்வதே இல்லை???

உந்தனுக்கு உன் சொந்த பந்தங்களுக்கு ஏதாவது ஆகிவிட்டால் ஓடோடி சென்று அழுது புலம்புகின்றாயே!!!

அதையும் வாயில்லா ஜீவராசிகள் எவரிடம் செப்பும்??????????

ஆனாலும் அவ் ஜீவராசிகளும் நிச்சயம் ஈசனிடம் முறையிட்டுக் கொண்டே தான் இருக்கின்றது!!!

அதனால் நிச்சயம் சுவை!!.... எதை என்று அருகாமையில் இருக்கும் நிச்சயம் ஜீவராசிகளை உண்பவர்களுக்கு இறைவன் தரிசனம் நிச்சயம் கிட்டாது!!
கிட்டாது!!

பின் அவற்றை உண்ணுபவர்கள் அவனும் மிருகம் தான் மிருகம் போலே மிருகம் தான் என்று தான் சொல்வேன்!

அவந்தனுக்கு நல் புத்திகளே கிடையாது.

ஆனாலும் நிச்சயமாய் அவந்தனுக்கு தண்டனைகள் உண்டு.. சொல்லிவிட்டேன்.

யாங்களே தண்டிப்போம்!!!

அப்பப்பா!!!!!!!! பிறவிகள் பல கடந்து  வந்து விட்டேன். பிறவிகளை மட்டுமல்லாமல் எதை என்று இவ்வுலகத்தை பின் படைப்பதற்கு முன்பே நான் பிறந்து விட்டேன்.

ஆனால் மனிதனை பார்த்தால் நல்லவன் என்று ஆனால் இதையன்று.... இப்போதைய நிலைமைகளை பார்த்தால் பொய்யானவனே என்பேன்.

இதற்கு முன்னே பல மனிதர்கள் தெய்வபக்தியுடன் பல வழிகளிலும் சரியாகவே பயன்படுத்தி வந்தார்கள் ஒழுக்கமாக!! ஒழுக்க சீலர்களாக!!! நேர்மையாக தனவான்களாக!!! தர்மவான்களாக!!!

ஆனாலும் இப்பொழுது இருக்கின்றார்களே மனிதர்கள் அப்பப்பா பொய்யான மனிதர்களப்பா!!! 

பொய் சொல்லியே திரிவார்களப்பா!!!

திருடர்களப்பா!!!

பொய் என்ற பக்தி காட்டி பசப்புவார்களப்பா!!!

நம்பி விடாதீர்கள்!!!

எதையென்று இன்னும் யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன்.

அகத்தியனுக்கு திருத்தலம் அமைக்கின்றேன் என்று என்று பல மனிதர்கள் இடத்தில் இருந்தும் பொருள்கள் ஈட்டி ஈட்டி........ ஆனாலும் அதை அகத்தியன் நிச்சயம் ஏற்பதில்லை.

எங்களுக்கு எதை என்று ஆனாலும்...... ஒன்றை ஒன்றே!!!!!!!........ அன்பு!!! 

அன்பு தான் என்று சொல்லிவிட்டேன்.

ஆனால் நீங்கள் வரும் காலங்களில் திருத்தலம் அமைத்தாலும் .... அத் திருத்தலம் எளிதாக போய்விடும் சொல்லிவிட்டேன்.

இதையென்று மனிதா!!!! எதற்காக திருத்தலத்தை அமைக்கின்றாய் என்று கூட உந்தனுக்கு தெரிகின்றதா??? 

உன்னால் என்ன செய்ய முடியும் சொல் பார்ப்போம்!!!

நீயே பொய்யானவன் பொய்யானவற்றை பற்றி பரப்புகின்றாய் ஆனாலும் பொய்யை நம்பி மனிதன் மீண்டும் பொய்யானவைகளையே செய்து செய்து கர்மத்தை ஏற்று ஏற்று கடைசியில் மடிந்து மடிந்து மடிந்து மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து எடுத்து கஷ்டங்கள் பட்டு பட்டு வருகின்றான்!!!

இது தேவையா ???மனிதா!!!

முட்டாள் மனிதனே இது தேவையா? எண்ணிக் கொள்!!!

அனைவருக்கும் இதை யான் பல வாக்குகளிலும் செப்பிக்கொண்டே வந்து கொண்டிருக்கின்றேன்.

அனைவருக்கும் அழகாக இறைவன் அறிவுகள் கொடுத்திருக்கின்றான். ஆனால் அதை பயன்படுத்தவே தெரியவில்லையே!!!

மனிதா ஆறறிவுகள் இறைவன் கொடுத்திருக்கின்றானே!!! அவ் ஆறறிவுகளை நீ பயன்படுத்தினால் நீ தான் உண்மையான மனிதன்.

ஆனால் அவ் ஆறறிவுகளை பயன்படுத்துவதில்லையே மனிதா!!????

அப்படி பயன்படுத்தினால் உயர்ந்தவனாக ஆகுவாய்!!!

இன்னும் ஏழாம்!!!! 
இன்னும் எட்டாம்!!! 
இன்னும் நவ!!!!! (ஒன்பது) 
இன்னும் பத்தாம்!!!! 
......... ஆனாலும் யாங்கள் எப்படியாவது.... இவற்றிற்கெல்லாம் இவ்வறிவுகளுக்கெல்லாம் கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணுகின்றோம்.

ஆனாலும்  நீ இன்னும் ஆறாவது அறிவிற்கே வரவும் முடியவில்லையே மனிதா!!!!!! 

எப்படி மனிதா!??  நீ நிச்சயமாய் நன்றாக வாழ்வாய் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றாய்????

மனிதா!!!! இதையென்று ஆறாவது அறிவிற்கு வந்து விட்டாலே கிரகங்கள் ஒன்றும் செய்ய இயலாது என்பேன்...

ஆனால் ஐந்து அறிவுக்கு உள்ளே இருந்தால் நிச்சயம் கிரகங்கள் கட்டுப்பாட்டில் நீ!!!!....

இப்பொழுது புரிகின்றதா!!??

புரிந்து கொள்ளுங்கள் ஆறாவது அறிவிற்கு வாருங்கள் மனிதர்களே!!!!

கிரகங்களும் நல்வழியாக்கும் ஆக்கும்!!!

பொய்களப்பா திருடர்களப்பா திருடர்கள் கோடி கோடி திருடர்களப்பா!!!

இவ்வாறு இருக்க இறைவன் எவ்வாறு அனைத்தும் செய்வான்????

ஆனாலும் இறைவனையே திட்டுவதுண்டு.....

யான் என்ன செய்தேன்!!! என்ன செய்தேன் இறைவா!! இவ்வளவு சோதனைகள் என்று!!

ஆனாலும் நீ எவ்வாறு மற்றவர்களுக்கு நல்லதை செய்தாய் என்று நீ எண்ணிப் பார்த்து கொண்டிருக்கின்றாய்.

ஆனாலும் இறைவன் என்ன உந்தனுக்கு செய்ய வேலையாளா???????

ஆனாலும் இதனால்தான் இவை எதை என்று கூட ஒன்றை மட்டும் யான் தீர்க்கமாக சொல்கின்றேன்!!!

மற்றவருக்காக நீ எதைச் செய்கின்றாயோ!!!! அதை இறைவன் நிச்சயமாய் உந்தனுக்கே திருப்பித் தருவான்!!!!

அதனால் நீ மற்றவர்களுக்காக செய்!!!

அதை சேர்த்துக்கொண்டே இரு!!!!

புண்ணியம் பெருக்கிக்கொண்டே இரு!!!

இதற்கு இரண்டு மடங்காக இறைவன் நிச்சயம் கொடுப்பான்!!!!

இதுதான் தன்மை!!!

ஆனாலும் விதியில் உள்ளவை யாராலும் மாற்ற முடியாது!!!

அழகாக மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும் என்று..... ஆனாலும் கலியுகத்தில் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் விதியினை மாற்றுவோம் !!மாற்றுவோம்!!

ஆனால் அதற்குத் தகுந்தவாறு மனிதா நீ மாறிக்கொள்!! மாறிக்கொள்!!

நிச்சயம் உன் விதியை மாற்றி அனைத்தும் யாங்களே செய்வோம்!!!

அதை விட்டுவிட்டு பொய் சொல்லி ஏமாற்றாதீர்கள்!!!

நிச்சயம் பழிவாங்கும் அப்பொய்கள்.அப்பொய்யே உன் பற்களையும் அழித்துவிடும்!! உன் நாக்கையும் அழித்துவிடும்!! கடைசியில் உள் நுழைந்து பின் அனைத்து உறுப்புகளையும் கெடுத்து விடும்!!! சொல்லிவிட்டேன்.

அதனால் வியாதிகள் வந்து கடைசியில் மாண்டு விடாதே!! மனிதா!!!

அவை மட்டும் இல்லாமல் மாண்டு விட்டாலும் சரி ஆனாலும் அடுத்த பிறவிக்கு போகின்றாயே அது தான் கஷ்டமப்பா!!!!

வேண்டாம் மனிதனே திருந்திக்கொள்!!!

அறுசுவை உண்டுகொள் போதுமானது இறைவனை வணங்கிக் கொள் இறைவா இறைவா!!! என்று பக்தியை நாடிக் கொள்!!!.... ஆனாலும் சொல்கின்றேன் யாங்கள்தான் பெரியவர்கள் யாங்கள் தான் பெரியவர்கள் என்று கூட இறைவன் எதை என்று ஆனாலும் இறைவன் தான் பெரியவன் என்று கூட யாராவது சொல்கிறீர்களா என்றால்??????

இல்லை!!!

ஏனென்றால் இறைவன் மறைமுகமாக இருக்கின்றானே!!! இறைவன் என்ன கண்டுகொள்ளப் போகின்றானா ?? என்ன??? என்று கூட மனிதனின் லீலைகள். வரும் காலங்களில் நடப்பதுண்டு.

அதனால் துன்பத்திற்கு எதை என்று கூற சொல்லி கொண்டே வருகின்றோம்.

துன்பம் எதனால் வருகின்றது?? என்பதை சிந்தித்தால் மனிதா!!! அதற்கெல்லாம் நீயே தான் காரணம்.

நீயே தான் காரணம் காரணம் என்பதை அறிவதில்லை.

அதனால் ஈசனின் பொற்க்கரங்களை யான் எதை என்று கூற....இவ் ஈசன் எதையன்றி கூற... யான் உலகத்தை படைப்பதற்கு முன்பே பிறந்து விட்டேன்.

ஆனால் ஈசனோ எவை எவை என்று கூட அதற்கு முன்னே பல யுகங்கள் கடந்து வந்து தான் கொண்டிருக்கின்றான்... அதனால் ஈசனைப் பற்றி எப்படி யான் உரைப்பது???

மகேஸ்வரா!!!!!!!!!!!!!!!!!!!!!

உன் லீலைகள்!!!!!!

ஆனாலும் கருணை மிக்கவன் என்பதை கூட எந்தனுக்கு நன்றாகவே தெரியும்.

ஓடோடி வருவான் தன் பக்தனுக்காக!!!!

ஆனாலும் தன் பக்தனுக்காக.... சிறு சிறு சோதனைகள் நடந்தாலும் ஈசனே இல்லை என்று கூட ஆனாலும் பல மனிதர்கள் ஈசனை வணங்கினால் கஷ்டம் வரும் கஷ்டங்கள் வரும் என்பதையெல்லாம் நினைத்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

நிச்சயம் வராது என்பேன்!!!

எதனால்? கஷ்டங்கள் வருகின்றதென்றால்!!? உன்னுடைய போக்கு!!!

பக்குவப்படுத்துவான் முதலில் ஈசன்!!!

ஏனென்றால் தன் பிள்ளைக்கு அனைத்தும் தெரிய வரட்டும்!!! என்று கூட தன் தகப்பன் நினைப்பான்!! அதுபோல தான் ஈசன்.

ஈசன் கருணை உள்ளவன்!!! இவ் பார்வதி தேவியும் கருணை மிக்கவள்!!!!

சித்தர்கள் எதையென்று....... ஆனாலும் வரும் காலங்களில் அனைத்தும் சொல்லிக் கொடுப்போம் மனிதர்களுக்கு!!!

ஆனாலும் அதை தவறாக பயன்படுத்திக் கொண்டிருப்பான்.... இதனால்தான் நிச்சயம் பல நூல்களில் இருக்கும் ரகசியத்தையும் மனிதனுக்கு யாங்கள் உரைப்பதே இல்லை!!!!

அவ்வாறு உரைத்தாலும் அதை நிச்சயம் ஈடுபாடாகாது!! சொல்லிவிட்டேன்.

ஏனென்றால் மந்திரங்கள் தேவை!!

குரு அருள் தேவை!!!

அவ் குருவருள் இல்லாமல் நீ எப்புத்தகத்தை படித்தாலும்!!! எவ்வாறு செய்தாலும்....... ஒன்றும் நடக்காது!!!!!

ஒப்பில்லாமல் வாழ்க்கை!!! புரிந்து கொள்!!!!

இதையன்றி ஆனாலும் உண்டு !உண்டு! திறன்கள்!!! இன்னும் பல பல வழிகளில்.

இதனால் பல திருத்தலங்களுக்குச் சென்று நல்வழிப்படுத்தி தியானங்கள் செய்யுங்கள் போதுமானது.

இறைவன் உந்தனுக்கு என்ன கொடுக்க வேண்டுமோ?!! அவைதனை நிச்சயமாய் கொடுப்பான்!!!

கொடுப்பான் எதை என்று ஆனாலும் மனிதர்கள்!!!  எவை...... வருவார்களப்பா!!! கோடி!! கோடி!! பின் இறைவனை தரிசிக்க!!!!

ஏனென்றால் வரும் காலங்களில் கஷ்டங்கள் மிகுந்து காணப்படும் சொல்லிவிட்டேன்!!!

அதனால் ஓடோடி வருவார்களப்பா.!!

ஆசிகளும் பெற்றுக் கொள்ளுங்கள் அப்பனே!!

மாய உலகம் அழியும் பாதையிலே செல்கின்றது வரும் வரும் காலங்களில்!!! என்னவென்று கூற???

யான் இப்பொழுது செப்பிவிட்டாலும் மனிதர்கள் பயப்படக் கூடும் என்பேன்.

அதனால் ஏதும் செப்பவில்லை!!! அழிவின் பாதையை மனிதர்களே உணர்வார்கள்! அப்பனே.... திருந்திக்கொள்ளுங்கள். பொய் செப்பாதீர்கள்!!! 

அப்பனே!! சித்தர்களை வைத்து ஏமாற்றாதீர்கள்!! ஏமாற்றாதீர்கள்!!

அப்பனே திரும்பவும் சொல்கின்றேன் அடி விழுந்தால் பலமாக விழும் சொல்லிவிட்டேன்!!!


ஈசன் ஈசனிடத்திலே(திருவண்ணாமலையிலே)

இன்னும் பல சித்தர்கள் வந்து வாக்குகள் மனிதர்களுக்கு சரியாக செப்புவார்கள்.

மீண்டும் ஒரு வாக்கில் விரிவான பலன்களை சொல்கின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

2 comments:

  1. கண்ணுதலான் தன் கருணைக் கண் காட்ட வந்து எய்தி - நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் தனது அருட்கண் காட்ட அதனால் அவன் திரு முன்பு வந்து அடைந்து, எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்சி - நினைத்தற்குக் கூடாத அழகு வாய்ந்த அவனது திருவடியை வணங்கிய பின், சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால் - சிவபெருமானாகிய அவன் என் மனத்தில் நிலை பெற்றிருந்ததனால், அவன் அருளாலே அவன் தாள் வணங்கி - அவனுடைய திருவருளாலே அவனுடைய திருவடியை வணங்கி, சிந்தை மகிழ - மனம் மகிழும்படியும், முந்தை வினை முழுதும் ஓய - முன்னைய வினை முழுமையும் கெடவும், சிவபுராணந்தன்னை - சிவனது அநாதி முறைமையான பழமையை, யான் உரைப்பன் - யான் சொல்லுவேன்

    ReplyDelete
  2. I need to talk you it's very important please give ur contact detail

    ReplyDelete