​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday 27 June 2022

சித்தன் அருள் - 1154 - அன்புடன் அகத்தியர் - திருப்பனந்தாள் குமாரசாமி மட ஆலயம் கேதாரேஷ்வரர் . கேதார்காட்.கங்கை கரை. காசி!









14/6/2022  வைகாசி பௌர்ணமி அன்று பார்வதி தேவி அம்பாள் உரைத்த பொதுவாக்கு

வாக்குரைத்த ஸ்தலம் : திருப்பனந்தாள் குமாரசாமி மட ஆலயம் கேதாரேஷ்வரர் . கேதார்காட்.கங்கை கரை. காசி. 

என் உள்ளமெல்லாம் பரவி நிற்கும் என் அன்பானவனை நேசித்து வணங்கி உமையவள் பரப்புகின்றேன் வாக்குகளாக!!!!!!!! 

மனிதர்களே திருந்துங்கள்!!!

இல்லாவிடினும் இன்னும் மேற்சொன்னவாறு இன்னும் இன்னும் சித்தர்களின் வாக்குகள் ஏராளம்.... ஏராளம் வந்தபடியே!!!!
வந்தபடியே எதையேனும் நிச்சயமாய் செய்வதினால் மனிதனின் நிலைமை மாறுபடும்....

ஆனாலும் சித்தர்களின் பேச்சுக்கும் கூட  இவ்தேசத்தில் நிச்சயம் இடமில்லை... ஆனாலும் சில மனிதர்களே!!! ஆனாலும் பின் சித்தர்கள் பேச்சுக்களை கேட்கின்றனர்.

ஆனாலும் இவர்கள் நிச்சயம் மாமனிதர்களாக வாழ்வார்கள்.

மாமனிதர்கள் எவர்கள்?? என்பார்கள்!!! எப்படி மாமனிதர்கள் ஆவார்கள்??
மாமனிதர்கள் தர்மத்தை நிலைநாட்டுவதாலும் நேர்மை தவறாது இறைவன் பக்தியை செலுத்துவதாலும் .... இதனையும் உணர்ந்து உணர்ந்து என் மணாளனின் ஆசி பெற்று பெற்று சிறப்புக்கள் மாமனிதர்களாக உயர்வு வரும் காலங்களில் உண்டு.

இதனால் எத்தனை எத்தனை மனிதர்கள் சித்தர்களின் பேச்சைக்கேட்டு நடக்கின்றனர்??? என்பதில் சந்தேகமே!!!!

ஐயமே இல்லை!!! ஐயமே இல்லை என்பதினால் நிச்சயம் என் மணாளன் மனிதர்களுக்கு எப்படி செய்வான் இரங்கி????

ஆனாலும் கருணை படைத்தவன் என் மணாளன் நிச்சயம் ஐயோ!!!! என்று வந்துவிட்டால் மனமிரங்குவான் ... என் மணாளன் கொடுத்து கொடுத்து நிச்சயம் நிச்சயம் ஐயோ பாவம் ஐயோ பாவம்!!! என்று என் மணாளன் கொடுத்தால் இவ்வுலகத்தில் ஈடு இணை இல்லை எதையும்.

ஆனால் மனிதரிடத்தில் என் அன்பானவன் அன்பை மட்டுமே கேட்கின்றான். அதை நிச்சயம் கொடுத்தால் போதும்!!!

என் பிள்ளை அகத்தியனும் வலம் வந்து கொண்டே இருக்கின்றான்.... மனிதர்கள் எவரும் நல்படியாக !!நல்படியாக சிந்தனையில் இருப்பார்களா?!!! இருப்பார்களா?!!! நல்லெண்ணங்கள்!! நற்பண்புகள்!! என்றெல்லாம்!!!!

ஆனால் மனிதனோ என் பிள்ளையை வைத்து சம்பாதித்து சம்பாதித்து பல கர்மவினைகளை ஏற்படுத்தி தானே ஏற்படுத்தி கடைசியில் என் பிள்ளையை அகத்தியனை...யான் அகத்தியனை வணங்கினேனே !!என்று குறை கூறுவார்கள் இவ்வுலகத்தில்.

அப்படி குறை கூறியோர் அப்படி என் பிள்ளையை குறை கூறுபவர்கள் வாயை யான் நிச்சயம் அடைப்பேன். வாயை அடைப்பேன்.

ஆனாலும் எதை நிமித்தம் காட்டி இவ்வுலகத்தில் பிறந்தாய்??? எதுவும் உன்னை பாதுகாக்காது மனிதா!!! 

மனிதா!!!! நிச்சயம் சொல்கின்றேன்... ஆனால் பாதுகாக்காததை தேடித்தேடி ஓடி !!ஓடி!! உழைத்து உழைத்து கடைசியில் அதுதான் பாதுகாக்குமென்றால் நிச்சயம் இறைவனை ஏன் நீங்கள் வணங்க வேண்டும்???

இறைவன் ஏதோ!!! மாய பொருள் என்றே நினைக்கின்றார்கள் மனிதர்கள்.

ஆனால் அது பொய்!!! 

இன்னும் ஏனைய சித்தர்கள் இன்னும் பல சித்தர்கள் நிச்சயம் இவ்வுலகத்தை மாற்றுவார்கள்.... இதில் ஐயமே இல்லை!!! 
ஐயமே இல்லை!! 

என்றென்றும் யானும் என் மணாளன் கோபத்தோடு.... ஆனால் கோபம் தான் அதிகமே தவிர.... அன்பானவன்,!!! பண்பானவன்,!!! கருணையுள்ளவன்,!!! அடக்கமானவன் .!!!...பார்த்து கொண்டே தான் இருப்பான்..... ஆனால் கோபம் வந்து விட்டால்.... ஆனாலும் யானே பக்கத்தில் அமர்ந்து... மணாளனே!!! அன்பானவனே என்றெல்லாம் அழைத்து அழைத்து பின் மக்களை காக்க வேண்டும்... மனிதர்களின் நிலைமை சரியில்லாமல்... மனிதனின் நிலைமைகள் என்னவென்றே தெரியாமல்
கலியுகத்தில் போய்க்கொண்டு இருக்கின்றது.... இதனால் யான் என்னவென்று சொல்வது???!!!! 

ஆனால் நிச்சயம் வரும் வரும் காலங்களில் சித்தர்கள் என்ன? செப்புகின்றார்களோ அதைக் கேட்டால் நிச்சயம் தாழ்வு வராது!!!

ஆனாலும் அதற்கும் கூட என் மணாளனின் அருள் நிச்சயம் தேவைப்படுகின்றது அதனால் தான் பின் தன்னை வணங்கும் பக்தர்களுக்கு தன் அருள் இருந்தால்தான் தன்னையே நாடி வரும் தன்னையே நாடி வரும் என்பதற்கு.....

இல்லை. !!!
இல்லை!!! இன்னும் இன்னும் பல வில்லங்கங்கள்....வில்லங்கமாக மாறி விடுமோ?! என்பதில் ஐயமில்லை.
ஐயம் இல்லாமல் வாழ்ந்து வந்தால் ஒன்றும் இல்லை.

 ஒன்றுமில்லை!! மனிதா உன் கையில்!!!! 
அதை நீ உணர்ந்திட.  அனைத்தும் தேடிவரும் மனிதா!!!

உணர்ந்து கொள்!!! உணர்ந்ததை இல்லையென்றால் இல்லை என்று போய்விடுமா??
போய்விடும் என்ற மறு பேச்சுக்கு இடமில்லை!!

இடமில்லை!!.. வந்தால் உண்டு இடம்!!

இடம் என்று கூறுவது எதற்கு?? மாமனிதனே

மாமனிதர்களுக்கு யான் உரைக்கின்றேன் நன்றி உள்ளது எது??

நன்றி உள்ளது..... உன்னைப்படைத்தானே. இறைவன் அழகாக!!.....

அழகாக படைத்து அனைத்தையும் இலவசமாக கொடுத்தானே!!!! 
கொடுத்தானே நீரையும் கொடுத்தானே!!! இடத்தையும் கொடுத்தானே!! இன்னும் பலப்பல..... காற்றையும் அழகாக கொடுத்தானே!!!
கொடுத்தானே நல் உள்ளத்தை!!!!

இதை யார் ??நன்றாக இறைவனிடத்தில் அனைத்தும் நன்றாக கொடுத்திருக்கின்றாயே!! இறைவா!!!!   நன்றி என்று கூறுபவனுக்கே!!! என் மணாளன் இன்னும் மிச்சமாக செய்வான்.

ஆனால் அதையும் செய்துவிட்டு குழந்தையாக பிறந்து மீண்டும் கடைசியில் குழந்தைகளாகவே இறக்கின்றனர்.....

நடுவில் என்னதான் பக்தி???

பக்தி!!!!..... மனிதா நடைமேடையில் ஒன்றினை பார்!!!!
நடைமேடை என்பது கூட நடப்பதா?? நான்கு காலில் நடக்கின்றாய் முதலில்!!
மீண்டும் நான்கு கால்களிலே கடைசியிலும் நடக்கின்றாய்!!! 
ஆனால் இதில் என்ன வித்தியாசம்?? உள்ளது?? 

கடைசியில் ஒன்றும் தெரியாமல்!!! முதலிலும் ஒன்றும் தெரியாமல்!! பின் வீணாக போகின்ற மனிதா!!....

சற்று பக்திகள் காட்டு!!!

நன்றி உள்ளவனாக இரு!!!

எதற்கு நன்றியுள்ளவனாக இரு?? மனிதன் மனிதர் இடத்திலேயே நன்றியுள்ளவனாக இல்லையே!!! இதனால் தான் இவ்வுலகம் அழிந்து அழிந்து போகும் நிலையில் உள்ளது!!!

இதனால் இன்னும் சீற்றங்கள் பலப்பல!!!

எண்ணற்ற சித்தர்கள் மனிதர்களை ஏன் இன்னும் இன்னும்....... ஆனாலும் மனிதர்கள் எதனையென்று இறைவனை தொழுது தொழுது இப்படி ஆகிவிட்டோம் என்ற நிலைமையும் கலியுகத்தில் வரும்!!!

அதனால்தான் நிச்சயம் என் மணாளனை கீழ் நோக்கி அழைத்து விடக்கூடாது என்பதை கூட நன்றாக எண்ணி நல்லோர்களுக்கு சித்தர்கள் இனியும் வழிகாட்டுவார்கள்.

நிச்சயமாய் புண்ணியங்கள் தேவை!!!! வாழ்வதற்கு!!! 
அப்புண்ணியத்தை எப்படி சேர்த்துக்கொள்வது என்பதையும் கூட பல முறைகளில் என் பிள்ளை அகத்தியன் நன்றாகவே உணர்த்திக் கொண்டுவந்து கொண்டிருக்கின்றான்.

"""அகத்தியனுக்கு ஈடு அகத்தியன் மட்டுமே!!!!!

அகத்தியன்!!! இதை உணர்வதற்கு ஆனால் என் மணாளனை.....!!!!

அப்பா!!!  அப்பா!!!! இப்படியெல்லாம் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே!!! 

ஏதாவது செய்!!!!

அம்மையே!!! அம்மையே!!! 

என்றெல்லாம்  வந்து!! வந்து!! என்னிடத்திலும் என் மணாளனிடத்திலும்.... அகத்தியன் வந்து கேட்பான்!!

ஆனாலும் என் மணாளனோ!! 

சற்றுப் பொறுத்திரு அகத்தியா!!!!

மனிதனின் நிலைமைகள் சரியில்லையப்பா!!! 

சரியில்லையப்பா!!!! மனிதன் எப்படியெல்லாம் வாழ்ந்து வருகின்றான்!!

என்னிடத்தில் இருந்து பார்!!!

ஒருவன் பணத்திற்காக!!
ஒருவன் தன் சுகத்திற்காக!!
ஒருவன் சொத்துக்காக!!!

ஆனால் கடைசியில் அவன் எங்கு மிச்சம்??

ஆனால் எங்கு போய் சேர்கின்றான் என்பதை?......

ஆனாலும் பல பல உண்மைகள் பல பல உண்மைகளை தெரிவித்து விட்டான் என் மணாளனே!!! 

அகத்தியா!!! மனிதர்களை நீ காக்க போகின்றாயா??!!!

ஆனாலும் மனிதரிடத்திலே சிறிது எச்சரிக்கை!!! தேவை.

பணம் பொருள் சம்பாதிப்பதற்கே அகத்தியனை வைத்துக்கொள்வான் வரும் காலங்களில்.
வரும் காலங்களில் என்று உணர்ந்து.

என் மணாளனிடம் யானும் சொன்னேன்!!!

ஆமாம் மணாளனே!!!! 

நீங்கள் சொல்வது எதையென்று கூற..

அகத்தியனுக்கு யாங்கள் ஆலயம் கட்டுகின்றோம்!!
அகத்தியன் அருளால் அன்னதானம் செய்கின்றோம்!!!
அகத்தியன் அருளால் என்னென்னவோ செய்கின்றோம் என்றெல்லாம் பொய் சொல்லி பொய் சொல்லி அகத்தியனை பொய் சொல்லி ஏமாற்றி பிழைப்பு நடத்துகின்ற மனிதா!!!! 

உன் நிலைமைகள் என்ன ஆகப்போகின்றது?? என்பதை நீ அறிந்தாயா?????

அறிந்தாயா?? மனிதா!!! 
நீ மட்டும் என்ன ஆகப் போகின்றாய் என்பதைக்கூட...
உன் பிள்ளைகளையும் நீ யோசித்தாயா?!! 

ஆனால் கடைசியில் அனைத்தும் மனிதா நீ செய்வது!!! பழியை சித்தர்களின் மீது போடுவதா????????????

இனிமேல் இதையாவது எதையாவது சித்தர்கள் மேல் பழி போட்டால் நிச்சயம் சிறிது காலத்திலேயே அவந்தனுக்கு அழிவுகள் நிச்சயம்.யான் நிச்சயம்......

சித்தர்கள் அனைத்தும் உணர்ந்தவர்கள் மனிதர்களுக்காக போராடுபவர்கள்!!!

ஆனால் எதையும் தாக்காமல் பல மலைகளில் இருந்தே பல பள்ளத்தாக்குகளில் இருந்தே.... எப்படியெல்லாம் மனிதர்களை காப்பது?? என்றெல்லாம் தவம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.
மனித இனத்திற்காக!!! 

ஆனால் மனித ஜென்மங்களோ!!! மனித பேய்களே!!!!  மனித பேய்களே!! 

சித்தர்கள் எல்லோரும் எவையென்று கூற அமைதியாக காட்டுக்கு சென்று விட்டார்கள் என்றெல்லாம் பொய் மனிதனிடத்தில்.

ஆனால் சித்தர்கள் எதற்காக?? காட்டுக்கு சென்றார்கள்... என்றெல்லாம் மனிதா !!!உங்களுக்காகவே!!!!
மனிதன் நலமடைய வேண்டும் என்பதை கூட..

சித்தர்கள் வேறா?? இறைவன்கள் வேறா?? 
ரிஷிகள் வேறா?? 
முனிவர்கள் வேறா?? 

வேறு!! வேறு !! எவை?? வேறு?? வேறு?? 

நீதான் வேறு மனிதா!.... 

என்னவென்று சிந்தித்துக் கொள்!!!

இன்னும் கலியுகத்தில் மனிதா!!! நீ நிலையானதாகவே இருக்கின்றாயா என்று நீ நினைக்கின்றாயா மனிதா சிறிது யோசித்துக் கொள்!!!!
யோசித்துக் கொள்!!!

ஆனாலும் வாக்குகள் கேட்கவில்லையென்றால் பரிதாபத்திற்குரியது தான் மனிதனின் நிலைமைகள்.

பல நோய்கள் மனிதனை ஆட்கொள்ளும் வரும் காலங்களில்!!!

இன்னும் சொல்லப்போனால் பல பல பல ரூபங்களில் வரும் வியாதிகள் இயற்கை சீற்றங்களால் அழிந்து போகும் பல பல இன்னும் வரப்போகின்றது.....

மழை தன்னில்!!! 
தண்ணீரில் இன்னும் மிதந்து  கொண்டிருக்கும் மனிதா!!! புயல் சீற்றங்கள்
ஆங்காங்கே பூகம்பங்கள் இவையெல்லாம் நிச்சயம் ரத்த வெள்ளமாக போகின்றது!!!.....

இவற்றையெல்லாம் உணர்ந்து கூட இன்னும் சித்தர்களின் பேச்சை ஆனாலும்.... பிச்சை கேட்கும் மனிதா!!! முதலில் என் மணாளனிடம்... எதனைப் பிச்சை கேட்கின்றாய்?? என்பதைக்கூட....

பின் இவ் ஆன்மா ஐயோ!!!!!  யான் மனிதனாக பிறக்க மாட்டேன்!! பிறக்க மாட்டேன்!! என்றெல்லாம் கூறிகின்றது என் மணாளனிடமே!!!! 

இதையும் பிரம்மன் சற்று நோக்கினான்!!!

ஆனால் பிறந்தவுடன் ஐயோ !!ஐயோ!! என்றெல்லாம் பின் குழந்தைக்கு....விதமாக குழந்தை ஆனாலும் வளர வளர யான் தான் மனிதன் யான்தான் மனிதன் என்று கூட...

ஆனால் மனசாட்சி என்று ஒன்று இருக்கின்றதே...!! அது சொல்கின்றதே!! ஆனால் அதையும்  மீறி செய்கின்றாயே!!!! மனிதா!!

உன் மனசாட்சியை தொட்டு சொல்!!!

நீ உண்மையான பக்தியை காட்டுகின்றாயா??? தொட்டுச் சொல்!!!

உண்மையானவனாக இருக்கின்றாயா???

எதற்காக என் மணாளனை வணங்குகின்றாய்??? 

யோசித்துக் கொள்!!

அனைத்தும் இழந்தால்தான் என் மணாளனை தேடி வருகின்றாய்... இதுதான் சத்தியம்.

ஆனாலும் உண்மையான மந்திரங்கள் எவை? எவை? சொல்லுங்கள் மனிதர்களே!!!
பேய் மனிதர்களே!!!

மந்திரத்தால் அனைத்தும் நடந்து விடுமா என்ன???

ஆனால் நிச்சயம் நடக்காது!!!

தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்!!
தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்!!
நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்!! பல உயிர்களுக்கு தானங்கள் செய்ய வேண்டும்!!
தன்னைப் போல் பிறரை என்னும் குணம் வேண்டும்.

அவ் குணத்திலே தான் இறைவன் வருவான்!!

இதையும் சொல்லிக்கொண்டு சொல்லிக்கொண்டு வருகின்றார்கள் சித்தர்கள். 

பல உயிர்களை பேணிக்காக்க வேண்டும்.

இன்னும் அப்படி எல்லாம் செய்தால் தான் நீ மனிதன்!!

அப்படி இல்லை என்றால் நீ மனிதனே இல்லை!!!

பேய்!!!  பேய்!!  பேய்!! 

எதற்கு எவை பேய்கள் வருகின்றது என்று கூறினான் ஒருவன்!!! ஒருவன் மனதை எப்படி எல்லாம் வசியம் செய்கின்றான் என்று எண்ணினான் ஒருவன்!! ஆனாலும் உன் மனது தான் அனைத்திற்கும் காரணம்!!

ஆனால் அதை இழந்து விட்டாய்!! அனைத்தும் இழந்து விட்டாய்!!

அதனால் உன் மனம் குழம்பி!! குழம்பி!!.....

மனிதா!!! என்றாவது நீ உன்னைப்பற்றி யோசித்திருக்கின்றாயா என்ன?? நிச்சயம் இல்லை!

அப்படி யோசித்தால் நீ மாமனிதன்!!! தன்னைத் தானே யார் உணர்ந்தானோ அவன் மாமனிதன்!!!

மற்றவர் பேச்சை கேட்டு கேட்டு வாழ்கின்றானோ அவன் கீழான மனிதன்!!!
கீழுக்கும் கீழ்!!!
அப்பொழுது நீ எங்கே இருக்கின்றாய் பார்!!!
மற்றவர்கள் சொல்லி நீ நடக்கின்றாயே மற்றவர்கள் என்பதைக்கூட மனிதர்களைத்தான் யான் இங்கே சொல்கின்றேன்.
மனிதனை சொல்லி குற்றமில்லை!!! மனிதன் மனிதன் பேய் மனிதன் என்றும் கூட!!!

மனிதன் யார்?? என்றால் இவ்வாறு செய்!! அவ்வாறு செய்!! இவ்வாறெல்லாம் செய்தால் அவ்வாறெல்லாம் நடக்கும்!!
மனிதன்.

ஆனால் அதை கேட்கின்றானே அவன்தான் பேய் மனிதன்!!!

ஏனென்றால் மனிதன் சரியாக ஏமாற்றுகின்றான்..
அதை பேய் மனிதன் சரியாக ஏமாறுகின்றான்!!

ஏமாற்றி கடைசியில் தன்னை சுற்றியுள்ள சொந்த பந்தங்களையும் பேய்களாக மாற்றி கடைசியில் உன் உடம்பு எங்கே செல்கின்றது என்று பார்த்தால்?? ஒன்றுக்கும் உதவாக்கரையாகவே செல்கின்றது!!!!

இவ்வாறு மனிதா!!! 
நினைத்துப் பார்!!!
எதற்காக வந்தாய்?? என்று கூட....

மனிதா!! வந்தாய்... பின் ஐயையோ!!! பிறவிகளே வேண்டாம் என்று கூட... என் மணாளனிடத்திலும் கேட்டாய்.... ஆனால் பின் எடு!!(பிறவியை) யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று.. பல நபர்களிடம் சொல்லி அனுப்பினான்.

ஆனால் எடுத்து விட்டாய்!! ஆனால் இங்கே சுகங்கள் கேட்கின்றதா?? உங்களுக்கு!!....

எதை??!  ஆனால் நீயே சுகங்களுக்காக அனைத்தும் தேடிவிட்டு மனிதா!!!

அச் சுகங்களுக்கே உன்னை திரும்பவும் மாயவலையில் துன்பத்தில் ஆழ்த்தி விடுகின்றது!!

இதனால் திரும்பவும் இறைவனிடத்தில் கஷ்டம் என்று சொன்னால்.... மனிதா அனைத்தும் நீயேதான் ஏற்படுத்திக்கொள்வது!!!

இறைவன் மீது தவறில்லை நிச்சயமாய்!!!

இறைவன் ஏற்படுத்தினால் நிச்சயம் இறைவன் சந்தோஷமாகத்தான் கொடுப்பான்!!! அதனால் தான் பெரியோர்கள்...

 இளமையில் கல்!!!! இளமையில் கல்!!!

என்றெல்லாம் சொல்கின்றார்கள்!!
ஆனால் தற்போது இளமையில் கல் என்றால் எதை எதையோ??? கற்கின்றான்....!!! எதையெதையோ கற்று!! கற்று !!மாய வலையில் விழுந்து திரும்பவும் திரும்பவும் திரும்பவும் இறைவனை நோக்கி வந்தால்..... இறைவன் என்ன செய்வான்???

அமைதியாகத்தான் பொறுத்திருப்பான்.

அதனால் நிச்சயமாய் இன்னும் சித்தர்கள் வருவார்கள் ஏராளமாக வருவார்கள்!!! வாக்கினை பலவழிகளிலும் எடுத்துச் சொல்வார்கள் நல்லோர்களுக்கு.... நல்லோர்களுக்கு எடுத்துச்சென்று....என் மணாளனின் அருள் பெற்றவர்கள் இதனை பரப்புவார்கள் நிச்சயம். 

இதனால் பல மனிதர்கள் திருந்துவார்கள்!!!!

உண்மையானவராக ஆவார்கள்!!!!

இவ்வுலகம் செழித்தோங்கும்!!! செழித்தோங்கும்!!!

நல்லவர்களை இனிமேலும் என் மணாளன் தேர்ந்தெடுப்பான்!!!

ஆனாலும் என் மணாளனோ!!! இப்படிப்பட்ட உலகத்தை படைத்தோமா என்று எண்ணி வருந்தி கொண்டிருக்கின்றான்!!!

அதனால் மீண்டும் மீண்டும் நீங்கள் குற்றங்கள் செய்தால் மீண்டும் மீண்டும் அழிவுக்கு சமம்!!

மனிதா!!! அழிவின் உச்சகட்டம் மனிதனே!! உச்சகட்டம் ஆனால்?.....

தர்மத்தை செய்!!!
தர்மத்தை கடை பிடித்தால் 
மந்திரம் வேண்டாம்!!! தந்திரம் வேண்டாம்!!

அனைத்தும் நடக்கும்!!!

அதைமீறி..... ஆனால் ஒன்றைச் சொல்கின்றேன்!! என் ஈசன் அனுமதியில்லாமல் மந்திரம் ஜெபித்தாலும் ஒன்றும் ஆகாது!!! திருத்தலங்களுக்கு சென்றாலும் ஒன்றும் ஆகாது!!!
ஆகப்போவதுமில்லை!!!

அதனால் என் மணாளனை நன்றியோடு!! உரிமையோடு!! தான தர்மத்தோடு அழையுங்கள்!!

 நிச்சயமாய் வருவான்!!!

ஆனாலும் இதில் ஓர் ஓர் இல்லத்திற்கும்... என் மணாளன் சென்று கொண்டுதான் இருக்கின்றான்...

ஏனென்றால் விதியின் பாதை அவ்வளவு!!!.....

மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றான்!! இன்னும்
ஏராளம் !!ஏராளம்!!

மனிதனே இன்னும் எவை என்று கூறுவதற்கு இடங்கள் இல்லை!!! அதனால் என் மணாளனின் சக்திகள்... பலப்பல திருத்தலங்களில் நீண்டு இருக்கின்றது!!! அங்கெல்லாம் நிச்சயம் வரும் காலங்களில் சித்தர்கள் உரைப்பார்கள்!! நிச்சயம் நிச்சயம் சென்று பின் பாவ வினைகளை கழியுங்கள்!!!!!

கழித்து!! கழித்து!!! மீண்டும் மீண்டும் பிறவியை வேண்டாம் என்பதே கருத்தாகவும் தோன்றுகின்றது !!!

ஏனென்றால் மனிதா... பிறவி எடுத்து எடுத்து எப்படி எல்லாம் இப்பொழுது கஷ்டபடுகின்றாயோ.... அவையெல்லாம் தேவையா????? யோசித்துக் கொள்!!!

உன்னை அறி!!! முதலில்!! 

இதனைத்தான் யாங்கள் அனைவருமே சொல்லிக் கொண்டிருக்கின்றோம்!! இன்னும் .!!!!

வருவான்!! மாணிக்கவாசகப் பெருமானும்... நிச்சயமாய் தோன்றுவான் என்பதில் தோன்றி கொண்டே இருக்கின்றான் என்பதில் ஐயமில்லை!!!!

மாணிக்கவாசகப் பெருமானே!!!! என் ஈசனிடத்திலே வந்து....
நிச்சயம் ஈசா!!!!! எந்தனுக்கு பிறவிகள் வேண்டும்!! வேண்டும்!!!
இதை இப்பொழுது கேட்கவில்லை!!! முன்பிருந்தே கேட்டுக் கொண்டிருக்கின்றான்!! 

நிச்சயம் திருவாசகத்தை பல வழிகளிலும் யான் எடுத்து செல்ல வேண்டும் இவ்வுலகத்தில் இருக்கும் வரை நிச்சயம் பிறவி கொடு!!! மனிதனை மாற்றுவதற்கு!!! என்றெல்லாம்.....

சரி!!! அப்படியே ஆகட்டும் என்றெல்லாம் மாணிக்கவாசகப் பெருமானுக்கு என் ஈசன் பரிபூரணமாக அருளி விட்டான்!!!

அதனால் மாணிக்கவாசகப் பெருமானோ!!! நல்லோர்கள் மனதில் நுழைந்து இன்னும் திருவாசகத்தை எழுப்பச் செய்வான்!!! 

திருவாசகத்தை நிச்சயமாய்  எவனொருவன் எவனொருவன் பின்பற்றுகின்றானோ!!! அவந்தனுக்கு கஷ்டங்கள் நிச்சயம்... வராது!!!!

என் இறைவன் ஈசன் அவந்தனை சுலபமாக தன்னிடத்தில் ஈர்த்துக் கொள்வான்..... ஒன்றும் செய்ய இயலாது!! 

இன்னும்!! இன்னும்!! என் மகன் ""அகத்தியனை பார்த்தால்..!!! பெருமையாக இருக்கின்றது!!!

பெருமையாக இருக்கின்றது என் மகன் அகத்தியனை பற்றி பேசுவதற்கு!!!!!

ஏனென்றால் எவ்வளவு மனிதன் கஷ்டங்கள் பட்டு பட்டு பின் பொய்யே கூறினாலும் திருடனே ஆனாலும் அகத்தியன் வந்து மனிதர்களுக்கு உரைத்துக் கொண்டுதான் இருக்கிறான்!!!

பின் ஆனாலும் என் ஈசன்!! 
ஏன் இதையன்றி கூற பிரம்மாவும் கேட்டு விட்டான்!!

அகத்தியனை பார்த்து!!! அகத்தியா!!! யான் கஷ்டங்களை மனிதனுக்கு அளித்து அளித்து அனுப்புகின்றேனே!!!!  ஆனால் நீயோ  கருணை உள்ளத்தோடு மீண்டும் மீண்டும் வந்து வந்து எந்தனிடத்தில்... மனிதர்களுக்காக மாற்றிவிடு!! மாற்றிவிடு!!(விதியை) என்றெல்லாம் கெஞ்சுகின்றாயே!! அகத்தியா!!! இது சரிதானா!!!??
மனிதன் மாய வலையில் விழுந்து விட்டான்!!
கஷ்டங்களை பட்டு விட்டு மீண்டு வரட்டும் என்று கூட...

ஆனால் அகத்தியன் அதற்கு!!!!!
திருடனோ!!!!!!!!!!!!!
பொய் சொல்லுபவனோ!!!!!!!
ஏமாற்றுபவனோ!!!!!!!! 
அவந்தனுக்கும்... நல்லது செய்வோம்!!!!! 
அவன் திருந்தினால் ஒரு வாய்ப்பும் அவந்தனுக்கு கொடுப்போம்...என்று கூட... 

கருணை!!! கருணையின் கருணை அகத்தியன்!!!!!!

இதனால்தான் பிரம்மனும் அகத்தியன் கேட்டால்... ஐயோ!!!!  பாவம்......என்று கொடுத்து விடுகின்றான் விதியையும் மாற்றி விடுகின்றான்!!!!

அதனால் மனிதர்களே!!!!

நிச்சயம் அகத்தியன் பல மனிதர்களுக்கு விதியை மாற்றிக் கொண்டு தான் இருக்கின்றான்!!!!
மனிதர்களுக்காக போராடிக் கொண்டு தான் இருக்கின்றான்!!!!

ஆனால் மனிதனோ!!! அகத்தியனை வைத்து பிழைப்பு நடத்துகின்றானே.... அதுதான் பெரும் குற்றம்!!!!

ஆனால் இவையெல்லாம் இப்பொழுது தெரியாது என்பேன்!!!!

என்பேன்!!! எதை?? வரும் வரும் காலங்களில் போகப்போக தெரியும் என்பேன்!!!

ஆனாலும் என் மகன் அகத்தியன்!!! என் பிள்ளையை யாராவது சீண்டினால் யான் விட்டுவிடுவேனா!!!! என்ன??

நிச்சயம் இதை எதை? என்று இன்னும் மந்திரத்தால் ஆவது!! அவை! இவை! என்றெல்லாம்...... நிச்சயம் சித்தர்கள் பல புத்தகத்தில் பல பல வழிகளில் எழுதி வைத்துள்ளனர்.

ஆனால் நிச்சயம் சித்தர்கள் அருள் இல்லாமல் ஏதும் பலிக்காது சொல்லிவிட்டேன்!!!

அதனால் வெறும் வாயை தான் நீங்கள் மென்றாக(மெல்ல வேண்டும்) வேண்டும்!!!! உண்மையே மனிதா!!! தெரிந்து கொள்!!!

பின்.... நடக்க வேண்டுமா!!!?? அதற்கு மந்திரம் தெரியுமா? உந்தனுக்கு!!

பறக்க வேண்டுமா!??? அதற்கு மந்திரம் தெரியுமா?? உந்தனுக்கு!!

இறைவனை உன்னிடத்தில் வரவழைக்க முடியுமா???
அதற்கு மந்திரம் தெரியுமா?? உந்தனுக்கு????

உலகத்தை தன் கையில் வைத்துக்கொள்ள மந்திரங்கள் தெரியுமா?? மனிதா!!

ஏன்????!!!!!!! ஒரு புழு பூச்சியை கூட உன்னால் பிழைக்க வைக்க முடியாது!!!!!

அப்படிப்பட்ட மனிதா!!!! நீ பேய் மனிதன்!!!!

பேய் என்றால் என்னவென்று கூட யான் சொல்லியும்..... இனியும் சொல்லவில்லை மனிதனுக்கு புத்திமதிகள்.

மனிதன் என்றால் ஒன்றுமில்லை!!!

இதனால் பொய் சொல்லி ஏமாற்றுவதில் வல்லவனுக்கோ!! வல்லவன் மனிதன்!!!

ஆனால் அவன் வல்லமையெல்லாம் வல்லவனுக்கு வல்லவனெல்லாம் இறைவனிடத்தில் செல்லுபடியாகாது!

நிச்சயம் வருத்தங்கள் தான்!!

காகபுசுண்டன் ஒரு வாக்கில் இன்னும் மனிதர்களை..... சரி!! திருத்துவோம் என்றே வந்தான்!!!!! ஆனால் புசுண்ட முனியின் வாக்குகளையும் கேட்பதற்கு..........

மனிதர்களே!!! பொய் மனிதர்களே என்று அவந்தனும் வெறுத்து விட்டான்!!!  

நிச்சயமாய் கஷ்டங்கள் வரப்போகின்றது என்பதைகூட... புசுண்டமுனியும் நிச்சயம்  எதையென்று கூற... பல.. பலப்பல வழிகளிலும் பல பல வழிகளிலும் இன்னும் மர்மமாகவே திரிகின்றான்!!

நிச்சயம் மனிதருக்கு!!!....

ஈசா!!!  யான் கோபத்துடனே வந்திருக்கின்றேன்!!! மனிதனுக்கு  யான் நிச்சயம் கஷ்டங்கள் இட்டே தீருவேன். மனிதன் திருந்தப்போவதே இல்லை!!!

அதனால் காகபுஜண்ட முனிவன்!!! கஷ்டங்களை தான் அள்ளித் தருவான் சொல்லிவிட்டேன்!!! சொல்லி விட்டேன்!!

ஏமாற்றுக்காரர்களே!! திருந்திக்கொள்ளுங்கள்!!!

ஏன்!?? இறைவனை வைத்து இப்படியெல்லாம் செல்கின்றீர்கள்?????

அனைத்தும் ஒருவனே!! அனைத்தும் ஒருவனே!! என்று இருங்கள்!!!

சண்டைகள் இன்னும்!!!........

யான்... எதை?? என் இறைவன் பெரியவன் !!!உன் இறைவன் பெரியவன்!!! என்றெல்லாம் சண்டைகள் வரும்..... அவையெல்லாம் ஏன்? மனிதா!!! இவையெல்லாம்??? பிழைப்பா???? !! 

அழகாக பிழைப்பை கொடுத்து இருக்கின்றானே இறைவன்!!!

அதை வைத்து பிழைத்துக்கொள்ள தெரியாதா??? 

இறைவனை வைத்துத்தான் பிழைப்பை நடத்த முடியுமா?? வேண்டுமா???? 

நிச்சயம் அழிவுகள் வரும்!!

ஆனாலும் நீங்கள் நல்லவையே.... என்று நினைத்து இப்படியே(மத சண்டைகள்)  செய்து கொண்டிருந்தால் அதை நிச்சயம் சித்தர்கள் தடுப்பார்கள்!!!!
தடுப்பார்கள்!!!

இன்னும் ஏராளமான வாக்குகள் காத்துக் கொண்டே இருக்கின்றன!!!

மாற்றுவார்கள் சித்தர்கள் இன்னும் சில மனிதர்களுக்கு அவை செப்பி.... இவையென்று போதாமலே..... நடந்து வந்தாலே வாழ்க்கையில் வெற்றி கிடைத்து!!! நல் விதமாகவே மாறும்!!!

மீண்டும் வாக்குகள் என் மணாளனோடு செப்புகின்றேன்!!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............தொடரும்!

6 comments:

  1. தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
    தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
    தன்னையே அற்சிக்கத் தானிருந் தானே.
    பொழிப்புரை :
    ஒருவன் பொருள் இயல்புகளை உள்ளவாறு அறியப் புகும்பொழுது தன்னுடைய இயல்பை முதற்கண் உள்ளவாறு அறிவானாயின், அதன்பின்பு அவனது அறிவு பொய்யறிவாகிக் கெடாது; தானும் எந்தக் கேட்டினையும் எய்தான். ஆகவே, மனிதன் முதலில் தன்னுடைய இயல்பை அறிய முயலாமல், பிற பொருள்களின் இயல்பை அறிய முற்படுவதால், அறிவுகெட்டு அலைகின்றான். அதனால், ஒருவன் முதலில் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்றுவிடுவானாயின், அவன் தன்னையே பிறர் வழிபடும் அளவிற்கு உயர்ந்து நிற்பான்.
    குறிப்புரை :
    இங்கு, அறிபவனையே ``தான்`` என்றார், `ஆன்மா` என்னும் வழக்குப் பற்றி `அகம்` என்னும் தமிழ்ச் சொல்லாலும் குறிப்பது உண்டு. முதற்கண் தன்னை அறிதல் அனுமானத்தானும், பின்னர் அனுபவத்தானும் என்க. `தானே` என்றது, `பிறர் கெடுக்க வேண்டாது` என்றபடி. அறிவை அறிதல் - அறிவைப் பெறுதல். வழிபடுதல் சிவமாய தன்மை பற்றியாதலின், `சிவமாகி இருப்பன்` என்றபடி.
    இதனால், `மெய்யறிவில் தன்னை அறிதல் முதற்படி` என்பது கூறப்பட்டது. ``தம்மை உணர்ந்து, தமை உடைய தன்னுணர்வார்`` எனவும், ``தம்மை உணரார் உணரார்`` எனவும் மெய்கண்ட தேவரும் அருளிச்செய்தார்.l
    -திருமூலர்-
    ஓம் அகத்தீசாய நமஹ

    ReplyDelete
  2. நலம் எண்ணி! நலம் உரைத்து!! நலம் செய்ய!!! நலமே விளையும்!!!! ஓம் ஶ்ரீ லோபாமுத்ரா சமேத ஓம் ஶ்ரீ அகத்தியாய நமோ நம ஶ்ரீ.

    ReplyDelete

  3. தர்மத்தை கடைபிடிக்க வேண்டும்!!
    தர்மத்தை நிலைநாட்ட வேண்டும்!!
    நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்!! பல உயிர்களுக்கு தானங்கள் செய்ய வேண்டும்!!
    தன்னைப் போல் பிறரை என்னும் குணம் வேண்டும்.
    பல உயிர்களை பேணிக்காக்க வேண்டும்

    ReplyDelete
  4. அம்மா அம்மா அம்மா

    ReplyDelete
  5. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் அன்னை லோபமுத்திரா தாய் துணை 🙏🙏🙏

    ReplyDelete
  6. திருமூலர்:-

    தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
    தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
    தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
    தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே


    மனிதன் ஞானத்தவம் செய்து தன்னையே தான் அறிவதற்கு ஒரு கேடுமில்லை. முயற்சி எடுக்காது தன்னைத் தானறியாமல் மாண்டு போகிறான். தன்னையே தான் காணக்கூடிய ஞான மார்க்கத்தை அறிந்த பின், தன்னை அருளோடு இயக்குவிக்கும் ஜீவஜீ னை அர்ச்சிக்கும் நிலையில் சூக்கும சரீரம் விளங்கும் என்பது இதன் பொருள்.


    ReplyDelete